Saturday, October 20, 2012

ராசிபுரம் - குணா - அபிராமி அபிராமி -திருமண விழாக்கொண்டாட்டங்கள்

 வீட்டுக்கு பக்கத்துல ஒரு பர்லாங்க் தூரத்துல இருக்கற சலூன்க்கோ, டீக்கடைக்கோ பேப்பர் படிக்கனும்னாக்கூட  கார்லயே போகும்  மதுரை டாக்டர் ரியாஸ்  நம்ம குணா மேரேஜ்க்கு கார்ல வராம  பஸ்ல வந்ததே இந்த நிகழ்ச்சியின் முதல் அதிர்ச்சி.( அதுல ஒரு ரகசியம், அது பின்னால ) வந்தவர் எனக்கு எஸ் எம் எஸ் ல சொன்ன தகவல் படி நைட் குணா மேரேஜ் முடிச்சுட்டு அதிகாலை  2 மணிக்கு ஈரோடு ரயில் ஏறி  மதுரை போய் பறவை மேரேஜ்க்கு போயிடலாம்னு பிளான் சொன்னாரு. நானும் ஓக்கேன்னேன். 


 அவரு ராசிபுரம்  6 மணிக்கு போய்ட்டாரு. நான்  6.30 மணிக்குத்தான் கிளம்பினேன். 8.30 மணிக்கு ராசிபுரம் போனேன். நல்ல வேளை ரியாஸ்  பழைய பஸ் ஸ்டேண்ட்ல இறங்கிக்குங்க. அங்கே இருந்து வாக்கபிள் டிஸ்டேன்ஸ் தான் அப்டின்னார்.


மண்டப வாசல்லயே  மாப்ளை குணா நின்று வரவேற்றார். நல்ல வேளை. ஏன்னா எனக்கு அவர் குடும்பத்துல யாரையும் தெரியாது. தம்பி .. நீ மாப்ளை வீட்டு சொந்தமா? பொண்ணு வீட்டு சொந்தமா?ன்னு யாராவது கேட்டா உளறி இருப்பேன்.மண்டபத்துல ரியாஸ்,கவிதை கருப்பு , புத்தக டிராகன் சாரி புத்தகப்புழு வினோத், உட்பட பெரிய கேங்கே நின்னுட்டு இருந்தாங்க. குணா ஏதும் பேச விடாம பந்தில போய் உக்காந்து சாப்பிட சொன்னார்.


 பின்னாலயே 12 பேரும் வந்தாங்க. யாரும் சாப்பிடலை. ஆல்ரெடி சாப்டாச்சாம். என்னமோ கரகாட்டக்காரியை வேடிக்கை பார்க்கற மாதிரி பார்த்தா எப்படி ஃபுல்லா சாப்பிட முடியும்? அதனால 20 நிமிஷத்துல டின்னரை முடிச்சுட்டு ஹோட்டல் போனோம். 


 கல்யாண் ரெசிடென்சி. பாருங்க மேட்சுக்கு மேட்ச் . கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு  கல்யாண் ரெசிடென்சியே.. காது குத்துக்கு வந்தா திருப்பதி தேவஸ்தானத்துல தங்க வெச்சிருப்பார் போல.. அங்கே  போனா  மொத்தம் 16 ரூம் . ஒவ்வொரு ரூம்லயும் தலா 2 பேர். ஆக மொத்தம்  32 பேர். பார்த்தீங்களா? பி எஸ் ஸி மேத்ஸ் என்பதால் சரியா கணக்கு போட்டுட்டேன். 


 எல்லாம் குய்யோ முறையோன்னு கத்திக்கிட்டு இருந்தாங்க.. ஒரே ஜாலி தான் , கலாட்டாதான் , கொண்டாட்டம் தான். வந்தவங்க முக்காவாசிப்பேரு சரக்கு அடிச்சுட்டு இருந்தாங்க . யார் யார் பேரு எல்லாம் போட்டா பிரச்சனை வரும். எதுக்கு வம்பு? 

திருச்சியில் இருந்து வந்த சின்னப்பையன் எனும் கப்பல் கேப்டன் ( நிஜமான மிலிட்ரி) , ஹாரி கவுதம்  இன்னும் சாப்பிடலைன்னு சொன்னதால மறுபடி மண்டபம் போனோம் நம்ம வில்லன் கார்ல . திரும்பி வந்து ரூம்ல படுக்கும்போது மணி 11.30 ஆகிடுச்சு.


மிஸஸ் ரியாஸ் ஃபோன்ல பேசுனாங்க. பக்கத்துலயே ரியாஸ் இருந்தார்.அவங்க கிட்டே மேரேஜ்க்கு வர்றியா? இல்லையான்னே கேட்காம இவர் வந்திருக்கார் போல.. தனியாதான் வந்திருக்காரா?ன்னு ஒரு தடவைக்கு  2 தடவை கேட்டுக்கிட்டார். ரியாஸ் பக்கத்துலயே நின்னுட்டு இருந்ததால “ ஆமாங்க மேடம்”னு சுருக்கமா சொல்லி ஃபோனை வெச்சுட்டேன்.  அவர் கிளம்பிட்டாரு.

 அண்ணே ஒரு விளம்பரம் நைட் 12 மணிக்கு செம  மப்புல வந்து ரூம் கதவை தட்டி ஒரே ராவடி.. 1 மணிக்கு தூங்குனோம். 4 மணிக்கு எந்திரிச்சு  குளிச்சு ரெடி ஆகி 4.30 மணிக்கு மண்டபம போயாச்சு./. நானும் சின்னபையன் அண்ணனும். 


 அங்கே போனதும் செம காமெடி.. மண்டபத்துல டோட்டலாவே 24 பேர் தான் இருந்தாங்க . என்னை விட அண்ணன் தான் ஜெர்க் ஆகி குணா கிட்டே என்னப்பா? முகூர்த்தம் கரெக்ட் டைம் தானா?ன்னு கேட்க அவர் அசால்ட்டா லேட் ஆகிடும்னு நினைக்கறேன்னார்.

 அப்பவே கறுப்புக்கு ஃபோனை போட்டு 6 மணிக்கு வந்தா போதும். எப்படியும் மேரேஜ் 7 மணிக்குத்தான்னு தகவல் சொல்லியாச்சு.இந்த இடத்துல கருப்பு பற்றி சொல்லியே ஆகனும். மனுஷன் நைட் பூரா தூங்கவே இல்லை. வந்தவங்களை கவனிக்கறது, தங்க வைக்கறதுன்னு செம பிசி. மற்ற டைமுலும் தூங்காம கவிதை ட்விட்ஸா போட்டு கொலையா கொல்வார்னாலும் இன்னைக்கு அவர் குணாவுக்காக  விழிச்சிருந்தது ஹாட்ஸ் ஆஃப் ( நோ நோ அந்த ஆஃப் அல்ல) 



மண விழாவில் மனம் கவர்ந்தவை



1. பொண்ணு வீட்டில் சீர் செய்யும்போது  10 ரூபாய் நோட்டு மாலை 6 தனித்தனி மாலை ஒவ்வொன்றிலும் 101 நோட்டுகள். அதை சொந்தக்காரங்க அவர் கழுத்தில் போடும் நிகழ்ச்சி வித்தியாசமாக இருந்தது. பொதுவா வட நாட்டில் சேட்டுகள் குடும்பத்தில் தான் இந்த சாங்கியம் இருக்கும். 



2. மண்டபம் பெரிய  அளவில் இருந்தது. பந்தி மாறும்போது இட நெருக்கடியே வர்லை.. ரொம்ப தளவுசா ( தாரளமா , சுலபமா ) இருந்தது. அனைவரையும் நன்றாக உபசரித்தாங்க



3. பொதுவா  முஹூர்த்தப்பட்டுப்புடவை ரத்தச்சிவப்பு , அல்லது  பச்சை நிறம் தான் எடுபடும். ஃபோட்டோக்கள் , வீடியோவுக்கும்  கலர் ஃபுல்லாக இருக்கும்.


4. இந்த மாதிரி கல்யாண டைம்ல எப்பவும் அசடு வழியும் பசங்க கூட மாப்ளை முறுக்கு எனும் கெத்தை நல்லா காட்டுவாங்க..  மனதளவில் எப்படியோ, வெளியே  குணா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கறது மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டார். நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க என்ற எச்சரிக்கைத்தன்மை அவர் முகத்துல தெரிஞ்சது. 



5. மணப்பெண்ணுக்கு தோழியே இல்லை. இது குணாவின் திட்ட மிட்ட சதியா? என்பது குறித்து விசாரணை நடந்துட்டு இருக்கு 


6. மாப்ளை வீட்டு சார்பா மொய் எழுத மாப்ளையின் தம்பி நோட்டுடன் அமர்ந்தார். அவர் பல சிக்கலான சூழலையும் லாவகமாக கையாண்டு பொறுமையாக அனைவர் மொய்யையும் வசூலிச்சார். 


7. கோயில்ல  ஆல்ரெடி  6 ஜோடி மேரேஜ்க்கு வந்ததால் ஏகப்பட்ட கூட்டம்.. உள்ளே போகவே முடியலை.. ஆக மொத்தம் அன்னைக்கு மட்டும் 7 ஜோடிக்கு மேரேஜ்

8. வீடியோகிராஃபர், ஃபோட்டோகிராஃபர் எல்லாரும் செம கடுப்பாகிட்டாங்க. ஏன்னா நம்மாளுங்க 22 பேர் ஆஜர், எல்லாரும் செல் ஃபோன்ல ஃபோட்டோ பிடிக்க குறுக்க நின்னா? என்ன பண்ணுவாங்க. பாவம்



9. ரிசப்ஷன்க்கு வந்து மாப்ளை, பொண்ணு வந்து நின்னதும் மாப்ளைத்தோழனாக இருந்த அண்ணே ! ஒரு விளம்பரம் மேடையில் தரப்பட்ட மொய்ப்பணத்தை வாங்கும்போதே மாப்ளையின் அப்பா ஓடி வந்து யார் யார் எவ்வளவு பணம் என்பதை குறித்து வைக்கச்சொன்னார். அவ்வளவு ரஷ்லயும் அவர் ஞாபகமா அதை சொன்னது குட். ஏன்னா யூத்ங்க விளையாட்டா குறிக்காம பணத்தை. மட்டும் பத்திரமா வெச்சு யூஸ் இல்லை. யார் யார் மொய் வெச்சாங்கன்னு தெரிஞ்சாத்தான் பதில் மொய் மறுபடியும் வைக்க முடியும்..


10. மத்தளக்காரர்கள், நாதஸ்வரம் ஊதுபவர்கள்  மற்றும் பாண்டு வாத்திய கோஷ்டி நன்றாக பணி ஆற்றினாலும் பல முறை யாராவது கூப்பிட்ட பின் தான் வந்தாங்க.. அவங்களுக்கு ஒரு டீம் லீடர் இல்லை.. பெண் அழைப்பு , பெண் சீர் செய்யும்போதெல்லாம் அவங்க வரவே இல்லை. வாத்தியங்கள் மட்டும் தான் இருக்கு. ஆட்களை காணோம்.. பொதுவா கல்யாண விசேசங்களில் எப்படி பந்தி பரிமாறும் இடங்களில் ஒரு சூப்பர் வைசர் போடறமோ அதே போல் வாத்தியகோஷ்டிக்கும் ஒரு சூப்பர் வைசர் இருப்பது நலம்..


 நானும் , திருச்சி மிலிட்ரியும் காலை 10 மணிக்கு கிளம்பிட்டோம்.வாழ்க மண மக்கள்












வந்தாரை வரவேற்கும் வாசப்படி .குணாவின் நேசப்படி
Embedded image permalinkaa
மண்டப வாசலில் விநாயகர் தான் ரிசப்ஷன் டியூட்டி.யோவ் குணா.கவுத்திட்டியே ;-)))
Embedded image permalinka

கல்யாணமேடை ஆர்ட் டைரக்ஷ்ன் அழகியல்
Embedded image permalink
லட்சுமியை எப்படிவிசிறி ஆக்கி இருக்காங்க பாருங்க.ஒருவேளை குணா லட்சுமி விசிறியோ?
Embedded image permalinka
குணா சல்மான் கான் போல் போஸ் தர முயற்சி.அவர் நெற்றியில் இருப்பது பட்டயம்
Embedded image permalinka
குணா கல்யாண சீர்
Embedded image permalink
பொண்ணு வீடு ஏடிஎம்கே போல.முகூர்த்தப்பட்டுப்புடவை பச்சை கலர்
)முஹூர்த்தப்புடவைக்கு பெஸ்ட் சாய்ஸ் ரத்த சிவப்பு ,பச்சை 2ம் தான்்
மணப்பெண்ணுக்கு மணமாலையுடன் பண மாலை சீர் இப்போ தான் முதல் முறையா பார்க்கறேன்



 துப்பாக்கி டைட்டில் தீர்ப்பு போல் குணா மேரேஜ் முஹூர்த்தம் 4,30 டூ 6 இல் இருந்து 7,30 டூ 9 என தள்ளி வைக்கப்பட்டது.
மாப்ளே குணாஆஆஆ
அன்னலட்சுமி 11 தட்டு சீர்

பெண் அழைப்பு pic.twitter.com/CkDXL5gn -
தாலியை வேடிக்கை பார்க்கும்

சாமி கும்பிடறாங்க்ளாம்
 அ



மப்ளை ஸாரி மாப்ளை

 அ


மணப்பெண்ணுக்கு தோழியாய் ஆல்ரெடி மேரேஜ் ஆன பெண்ணை நிற்க வைத்த குணாவின் நுண்ணரசியல் கண்டு வியக்கேன்

senthil + senthil + senthil
Embedded image permalink
அண்ணே ஒரு விளம்பரம் என்னய்யா பண்றே ?'-))
  , pic.twitter.com/F3y5kVgN ( இடமிருந்து வலமாக)
Embedded image permalink

நவராத்திரி கொலு @ ராசிபுரம் ஈஸ்வரன் கோவில்



3 பேரும் கோயில் வாசலில்

கொலு 2
Embedded image permalink
 அ

அங்காளம்மன்
Embedded image permalink

டாக்டர் ரியாஸ் மதுரை ( நர்ஸ் வர்லை)
கில்லாடி கிட்டு,குணா . ,கில்மா ரியாஸ் ,புத்தகப்புழு,ராம் ,
  அ










3 முடிச்சு போட்டு முந்தானை முடிச்சில் குணா
Embedded image permalink

மாலை மாற்றும் படலம்
Embedded image permalink
ஷங்கரா சிவ சங்கரா
Embedded image permalink
கல்யாண ஜோடி
Embedded image permalink
அன்புத்தம்பிகளுடன் அவங்களை விட யூத் தம்பி
Embedded image permalink
  அ
 aஅ




 a




 கட்டதுரை யின்

குணா கல்யாணம் ஒரு கலாட்டா டேக்!


மணப்பெண்ணின் தோழிகளை ப்ரசன்னாவிடமிருந்து காப்பாற்ற தனிப்படை அமைப்பு! #GunaMarriage

பரிசல் லாப்டாப்புடன் வருவதாக தகவல் - ரேண்குண்டர்கள் குஷி #GunaMarriage

மணப்பெண்ணின் தோழியாக சிண்டெக்ஸ் சோனியா, இளம்பெண்கள் எதிர்ப்பு #GunaMarriage

கருப்புவின் கவிஜ அபாயம் எதிரொலி, ராசிபுரத்தில் பதட்டம் #GunaMarriage

குணா கல்யாண எதிரொலி, 65ரூ குவார்ட்டர் அனைத்தும் விற்று தீர்ந்தது #GunaMarriage

வெள்ளி சொம்பு கேட்டு மாப்பிள்ளை பிடிவாதம், உனக்கு வெங்கல சொம்பே அதிகம் என மாமனார் எச்சரிக்கை #GunaMarriage

மொய் எழுதும் கும்பலில் மோசடி மன்னன் ப்ரசன்னா - கவனமாக இருக்க ராசிபுரம் நகராட்சி அறிவுறுத்தல்!#GunaMarriage #JOK

ராஜனை பார்க்க கட்டுங்கடாத இளம்பெண்கள் கூட்டம், வாகனங்கள் 4கிமீ லேயே தடுப்பு #GunaMarriage #JOK

புதுலாப்டாப் வாங்க பரிசல் நிவாரணம் உதவி கேட்க திட்டம், தெறிச்சு ஓட ரேணிகுண்டர்கள் திட்டம் #GunaMarriage #JOK

மொய் வைத்தவர்களுக்கு மட்டுமே சாப்பாடு டோக்கன், புது மாப்பிள்ளை குணா திட்டவட்ட அறிவிப்பு #GunaMarriage #JOK

பெண் அழைப்பு: மாப்பிள்ளையை க்ளோஸப்பில் பார்த்த மணப்பெண் மயக்கம் போட்டு விழுந்தார்.! #GunaMarriage #JOK

காறி துப்பி கொண்டே இருப்பதால் கில்லிக்கு ராசிபுரம் நகராட்சி கல்யானத்துக்கு அனுமதி மறுப்பு! #GunaMarriage #JOK

ட்யுப்ளிகேட் சரக்கடிக்க ப்ரசன்னா மறுப்பு. ‘வெளிபோடா ரேஸ்க்கல்’ என ரேண்குண்டர்கள் கொந்தளிப்பு #GunaMarriage #JOK

செருப்பு போடும் இடத்தில் 4 கண்காணிப்பு கேமிராக்கள், ரேணிகுண்டர்கள் ஏமாற்றம் #GunaMarriage #JOK

கூட்டம் கட்டுங்கடததால் அளவு சாப்பாடாக குறைப்பு, ரேணிகுண்டர்கள் அதிர்ச்சி #GunaMarriage #JOK

மாப்பிள்ளைக்கு திடீர் கைநடுக்கம், சேலம் சித்த வைத்தியர் அவசரமாக ராசிபுரம் வந்தார்! #GunaMarriage #JOK

மாப்பிள்ளைக்கு அரை மயக்கம், நைட்டு அடிச்ச ஒரிஜினல் சரக்கு ஒத்துகொள்ளவில்லை என புலம்பல் #GunaMarriage #JOK

ரேணிகுண்டர்கள் வரவால், டம்ளர் டபராக்களை எண்ணிவைக்க திருமண மண்டப நிர்வாகம் உத்தரவு! #GunaMarriage #JOK

மாப்பிள்ளையின் மச்சினியை பார்க்க ரேணிகுண்டர்கள் தள்ளூமுள்ளு, மண்டப கதவு தற்காலிகமாக மூட பட்டது!#GunaMarriage #JOK

மண்பத்துக்குள் எதற்க்கு மாப்பிள்ளை ஹெல்மெட்டுடன் இருக்கிறார் என பெண் வீட்டார் கேள்வி, அது ஹெல்மெட் இல்லை என விளக்கம்! #GunaMarriage #JOK
 

குணா கலாட்டாகல்யாண டேக் பார்ட்-2

மணமகனின் கையைகுலுக்கி நைஸாக மோதிரத்தை ஆட்டைய போட்ட சென்னியார் மாயம்!#JOK

பரிசல் லிஃப்ட் கேட்டு வந்த காய்கறி லாரி ப்ரெக்டவுன். லேட்டாகும் என தகவல்! #JOK

75 காலி பியர் பாட்டிகள்களுடன் ரேணிகுண்டர்கள் பழைய இரும்பு கடை தேடி அலைபாய்கின்றனர் #JOK

இரண்டு அப்பளம் கேட்டு ரேணிகுண்டர்கள் கல்வரம், மத்திய பாதுகாப்பு படை வரவழைப்பு.! #JOK

ராசிபுரத்தில் ஒரே நாளில் பல லட்ச ரூபாய்க்கு மது விற்பனை,அனைத்து ட்யுபிளீகேட் சரக்குகளும் விற்று தீர்ந்தது!#JOK

பெண்கள் கூட்டத்தில் நைஸாக சென்று அமர்ந்த ராஜன், பின்னி பெடல் எடுத்தனர்! #JOK

வீட்டுக்கு சாப்பாடு பார்சல் கட்டிய ப்ரசன்னா, கல்யாணத்துக்கு வந்தவர்கள் காறி துப்பினர்.!#JOK

மண்டபத்தில் பல்பு திருடிய ரேணிகுண்டர்கள், தலைவர் பரிசலை காட்டி கொடுக்க மறுப்பு! #JOK

மொய் எழுதுபவரை கடத்த முயற்சி, ரேணிகுண்டர்களுக்கு தர்ம அடி.! #JOK

பக்கத்து இலையிலிருந்து வடை திருடிய பிரசன்னா, கையும் களவுமாக பிடிப்பட்டார்! #JOK

மணப்பெண்ணின் தோழிகளை பார்க்க மணமகன் பேரார்வம், மணமகளின் ஹேர்பின்னால் நறுக்கென்று குத்தபட்டார்! #JOK

ரேணீகுண்டர்கள் மாறு வேடத்தில் மூன்று முறை சாப்பிட்டனர், கண்காணிப்பு கேமிராவில் பதிவு!#JOK

ரேணிகுண்டர்களின் பார்வை சரியில்லை, மாப்பிள்ளையின் மாமியார் குபீர் புகார்.! #JOK

மண்டபத்திலேயே பதிவு எழுத ஆரம்பித்த சென்னியார், கடமையுணர்ச்சி கண்டு மக்கள் வியப்பு! #JOK

சமையலறையில் புகுந்து முந்திரி பருப்பு திருட பரிசல்காரன் முயற்சி, முறத்தாலேயே முதுகில் சாத்தி விரட்டியடிப்பு! JOK

எனக்கு எப்போ கல்யாணம், எனக்கு எப்போ கல்யாணம் என்று கருப்பு தாலியோடு தலைதெறிக்க ஓடினார், பொதுமக்கள் பரிதாபம்!#JOk

மண்டபத்தில் ஒரு குத்துவிளக்கை காணவில்லை, ரேணிகுண்டர்கள் வெளியேறாமல் கதவடைப்பு! #JOK

மணமகள் தோழியிடம் ஃபோன் நம்பர் கேட்ட பிரசன்னா, உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டார்! #JOK

மண்டபத்தில் சைபர் கிரைம் நடமாடுவதாக தகவல், ராஜன் தலைமறைவு! #JOK

- கட்டம் சரியில்லா கட்டதொர!

Friday, October 19, 2012

பீட்சா - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு பீட்சா ஷாப்ல டெலிவரி மேன்.அவனுக்கு ஒரு லிவ்விங்க் டுகெதர் லைஃப் பார்ட்னர்.மேரேஜ் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறா. ஆனா லைஃப்ல செட்டில் ஆன பின்னாடி பண்ணிக்கலாம்னு சொல்லி மேட்டர் எல்லாம் முடிச்சு கரு தங்கிடுது.ரொம்ப வற்புறுத்துன பின் மேரேஜ்க்கு ஓக்கே சொல்றான்.

 பீட்சா கடை ஓனர் வீட்டுக்கு ஒரு டைம் இவன் போனப்போ அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் , அது பேய் பிடிச்ச மாதிரி  இருப்பதும் ( மே பி மன நலம் குன்றி ) தெரிய வருது.இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு ஓனர் சொல்றார்.

 அடுத்த நாளே அவன் வாழ்க்கைல ஒரு திருப்பம். பீட்சா டெலிவரி பண்ண வந்த இடத்துல ஒரு வீட்ல மாட்டிக்கறான்.வீட்ல இருந்த ஒரே ஒரு லேடி கொலை செய்யப்பட்டு இருக்கா. உடனே ஹீரோ வெளில வர பார்க்கறான். முடில . லாக்டு. கொலை செய்யப்பட்ட லேடியோட கணவர் வீட்டுக்கு  வெளில வாசல்ல நின்னு கால் பண்றான். ஹீரோ எடுத்து பேசறார்.கணவர் ஹீரோவை நம்பலை.ஹீரோ தான் அவளை கொலை பண்ணி இருக்கனும்கறார்.


 அடுத்த திருப்பம். அந்த ஆளும் செத்து கிடக்கறான்.. அந்த வழியா ரோந்து போன  போலீஸ் 2 பேரு வர்றாங்க. இந்த வீட்ல ஒரு வாரமா போலீஸ் சீல் வெச்சிருக்கு. 4 கொலை நடந்த இடம் ஆச்சேங்கறாங்க..  ஹீரோ மேல சந்தேகப்பட்டு விசாரிக்கறாங்க . அவங்க கிட்டே இருந்து தப்பி வந்துடறான் ஹீரோ. அந்த 2 போலீஸும் அந்த பங்களாவுலயே மாட்டிக்கறாங்க.. 


http://tamil.cinesnacks.net/photos/actress/Ramya-Nambeesan/ramya-nambeesan-hot-093.jpg


அடுத்த திருப்பம்.ஹீரோயினை காணோம்.ஹீரோ தான் கொலை பண்ணிட்டாரா? அல்லது குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி அப்படி ஒரு கேரக்டரே இல்லையோ என சந்தேகப்பட வைக்குது ஹீரோவின்  நடவடிக்கைகள்.ஏன்னா ஹீரோவைத்தவிர வேற யாரும் ஹீரோயினை பார்த்ததில்லை . ஹீரோவோட ஃபிரண்ட்சோ, ஓனரோ பார்த்ததில்லை.

 என்ன தான் நடந்துச்சு என்பதை அட்டகாசமான திரைக்கதை உத்தி மூலம் சொல்லி இருக்காரு இயக்குநர்.இந்தப்படத்துல  யூகிக்க முடியாத பட்டாசான ட்விஸ்ட்ஸ் 2 இருக்கு. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்.

ஹீரோவா நடிச்சவர்  விஜய்சேதுபதி ஆல்ரெடி தென் மேற்குப்பருவக்காற்று படத்துல நடிச்ச ஹீரோதான். பயம், திகில் , கோபம், இயலாமை என நவ ரசங்களையும் காட்ட வாய்ப்பு. நல்ல நடிப்பு. சபாஷ்.. 


ஹீரோயின் ரம்யா நம்பீசன்.இவரைப்பற்றி வர்ணிக்க டைம் இல்லை.ஏன்னா இது ரொமான்ஸ் படம் இல்லை.. க்ரைம் த்ரில்லர் படம்.இவரை வர்ணிச்சுட்டு இருந்தா இயக்குநரை பாராட்ட டைம் இல்லாம போயிடும்.. ஆனாலும் இவரது டைட் டிரஸ் பார்க்கற ஆடியன்சை லூஸ் ஆக்கும் அளவு கிண்ணுனு இருக்கு.. 

மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்துல வந்த காபி ஷாப் பேரர் இதுலயும் வர்றார். இவர் ஆல்ரெடி பல குறும்படங்கள்ல நடிச்சவர். இவர் நடிப்பும் நல்லாருக்கு. குறிப்பா பீட்சா கடை ஓனர்  பொண்ணு ஹீரோவை பேய் மாதிரி ஒரு லுக் விடும்போது பேய் நம்பிக்கையே  இல்லாதவர்கள் கூட முதுகுத்தண்டு சிலிர்க்கும் அளவுக்கு அவர் பார்வை.. அபாரம் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigvKXGtlp-g5kpcieAeSff2KE4OnrUtr903r2VNkUeN5Qy8oP7B7nasT4aHehEG1Rf_l7W-XwAR1Y2iZX8ZwyMAIvaaKy6-jLLuW72Rz1QgvoKbGVfS58RIPwVZGInni4TrFU_tykD3M0/s1600/ramya_nambeesan_stills05.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சினி ஃபீல்டில் அதிக அனுபவம் உள்ள பெரிய பெரிய ஜாம்பவான்களே தட்டுத்தடுமாறி கரை சேரும் கோடம்பாக்கத்தில் அசால்ட்டாக டைவ் அடிச்சு கரை தொட்டு இருக்கார். முதல்ல அவருக்கு ஒரு பூச்செண்டு. அபாரமான திரைக்கதை. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சபாஷ் ரகம்.கார்த்திக் சுப்புராஜ்க்கு தயாரிப்பாளர் ஒரு கார் வாங்கித்தருவது உறுதி 





2. படத்தில் ஒரு 37 நிமிடங்கள் வெறும் டார்ச் லைட் வெளிச்சம் மட்டுமே உபயோகித்து ஹீரோ இருட்டு வீட்டில் உலவும், பரிதவிக்கும் இடங்கள் பட்டாசு பட்டாசு. சபாஷ் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். அது போக ஹீரோயினை அழகாகக்காட்டுவது, பேய்ப்படங்களுக்கான டெம்போவை ஏற்றுவது ,எல்லா விதத்திலும் சபாஷ் 



3. ஒரு திகில் படத்துக்கு பின்னணி இசை எந்த அளவு முக்கியம் என்பதை ஆல்ரெடி இளையராஜா நூறாவது நாள் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.அதை வழி மொழிந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை மிரட்டுது.


4. எடிட்டிங்க் பக்கா.படம் ரெண்டே கால் மணி நேரம் ஓடுவதில் முதல் 17 நிமிடங்கள் மட்டும் தான் 40 கி மீ வேகம். பின் எல்லாம் 90 கி மீ வேகம்.. எடிட்டிங்க் முக்கிய பங்கு 




http://www.southdreamz.com/wp-content/uploads/2010/11/ramya_nambeesan_hot_stills_photos_04.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ் உண்டு.சிலருக்கு பணம்.சிலருக்கு பொண்ணுங்க.அந்த வீக்னெசை நாம யூஸ் பண்ணிக்கனும்



2. டைமுக்கு கிடைக்காத எதுவுமே வேஸ்ட் தான்


3. எவ்ளவோ ஜாக்கிரதையா இருந்தும் எங்கேயோ தப்பு நடந்துடுச்சு.அதுக்காக கலைக்கவெல்லாம் முடியாது.



 ஓஹோ,அப்போ காண்டம் கம்பெனி மேல கேஸ் போட்றலாமா? 


4. அமானுஷ்யமான விஷயங்களை நேர்ல பார்ப்பதை விட அடுத்தவங்க வாயால கதையா கேட்கும்போதுதான் த்ரில் அதிகம் 


5. ஒவ்வொருவர் அவநம்பிக்கையும் நம்பிக்கையா மாறும் MOMENT அவங்க வாழ்க்கைல வரும் 


6. டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறுபவர்கள்ல முக்காவாசிப்பேர் பணக்காரங்கதான்

7. நான் எதுலயாச்சும் கேர்லெஸ்ஸா இருந்ததை நீ பார்த்திருக்கியா..?

நான் பிரெக்னெட்டா இருக்கேன்..

http://atozforfun.com/wp-content/uploads/2012/09/pizz-movie.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஹீரோயின் ஹீரோ 2 பேரும் லிவ்விங்க் டுகெதரா  ஒரே வீட்ல 4 வருஷங்களா இருக்காங்க. மேட்டர் முடிஞ்சுடுது, குழந்தை கரு உருவானதும்  ஹீரோயின் ஹீரோவை மேரேஜ்க்கு கம்ப்பெல் பண்றா. அப்போ ஹீரோ நாம 2 பேர் சம்பாதிக்கறது நமக்கே சரியா இருக்கு. இதுல கல்யாணம் குழந்தை எல்லாம் எதுக்கு? அப்டிங்கறார். அப்போ உடனே ஹீரோயின் என்ன கேட்கனும்? ஏய்யா. மேட்டருக்கு மட்டும் நான் வேணுமா? இனி பெட் ரூம் பக்கம் வந்துடாதேன்னு அடி மடில கை வைக்க வேணாம்? அதை விட்டுட்டு இனிமே உன் பேண்ட் சர்ட்டை துவைக்க மாட்டேன்னு மிரட்டுது. இதுதான் ஒரு பொண்ணோட மிரட்டல் பாணியா?



2. அதுக்குப்பின் ஹீரோ ஒத்துக்கறார். ஆனா ஊரறிய வேணாம் . இப்போதைக்கு இந்த வீட்ல நம்ம 2 பேருக்கு மட்டும் தெரியற மாதிரி பண்ணிக்குவோம்னு ஒரே ஒரு மோதிரத்தை  மோதிர விரல்ல மாட்டி விடறான். உடனே அந்த பேக்கு ஹீரோயின் கெக்கேக்கே பிக்கேக்கேக்கேன்னு சிரிக்குது. பதிவுத்திருமணம் பண்ண என்ன செலவு ஆகிடும்? அட்லீஸ்ட் சாட்சிகள் 2 பேராவது இருக்க வேணாமா? இப்படி வீட்டுக்குள்ளேயே மேரேஜ் பண்ணிக்கவா அத்தனை ஆர்ப்பாட்டங்கள் ?



3. பீட்சா கடை ஓனர் ஒரு கவரை குடுத்து தன் வீட்ல அதை குடுத்துட்டு வான்னு சொல்றார். ஹீரோ அங்கே போனதும் பேய் பிடிச்ச குழந்தையை பார்த்துடறார். உடனே ஓனர் தன் வேலையாள்னு பார்க்காம அவன் கிட்டே பம்மறார். இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு. நான் ஓனரா இருந்திருந்தா வேலையாளை வீட்டுக்கே அனுப்பி இருக்க மாட்டேன். அல்லது மனைவிக்கு ஃபோன் பண்ணி இப்போ  நம்ம வேலையாள் வர்றான். நீ கேட்டுக்கு வெளில நின்னு கவரை வாங்கிக்க. உள்ளே வந்தா  நம்ம பொண்ணு மேட்டர் அவனுக்கு தெரிஞ்சுடும்னு சொல்லி எச்சரிச்சிருப்பேன்.


4. ஹீரோவோட ஃபோன்ல செல் அவுட் கோயிங்க் போகலை, அதனால கால் பண்ண முடியலைன்னு ஓனர் கிட்டே சொல்றார். அந்த லேடியோட ஃபோன் இருக்கு. செல் ஃபோன் இருக்கு. அதுல இருந்து ஏன் கூப்பிடலை?ன்னு ஓனர் கேட்கவே இல்லையே? 


5. பீட்சா கடை ஓனர்  பேய் ஓட்டுபவர் அல்லது மந்திரவாதியை நம்பறார், ஆலோசனை கேட்கறார் , ஓக்கே  ஆனா மன நல நிபுணரை ஏன்  கலந்து ஆலோசிக்கலை. ? ஏன்னா ஒரு பெண் குழந்தையோட அப்பா தன் குழந்தை குணம் ஆகனும்னா  சாத்தியமான எல்லா  வழிகளையும் முயற்சி பண்ணி பார்ப்பார், உதாரணமா கடவுள் நம்பிக்கை பேய் நம்பிக்கை இல்லதவங்க கூட தன் பெண் குழந்தைக்கு ஒரு ஆபத்துன்னா தாயத்தா? சரி கட்டித்தான் பார்ப்பமேன்னு நினைப்பான். அதே போல மன நல சிகிச்சை பற்றியும் சிந்திச்சிருக்கனும்..


6. இந்தக்காலத்துல  ஆளாளுக்கு டபுள் சிம் ( டூயல் சிம் ) ஃபோன் வெச்சிருக்காங்க. அல்லது 2 செல் ஃபோன் வெச்சிருக்காங்க.. அப்படி இருக்கும்போது 2 கோடி ரூபா அபேஸ் பண்ணும் மேட்டரில் ஒருவர் தன் செல் ஃபோனை கழட்டி சிம்மை மாற்றி பேசிட்டு மீண்டும் பழைய சிம்மை பொருத்துவதும் அந்த இடைப்பட்ட கால அளவில் யாராவது கூப்பிட்டா தன்  சதி தெரியும் என பயப்படுவதும்  ஏத்துக்கவே முடியலை.. அட்லீஸ்ட் ஒரு பேசிக் மாடல் ஃபோன் கூடவா எக்ஸ்ட்ரா வெச்சுக்க மாட்டான்? 


7. பீட்சா கடைல 3 பேர் வேலை செய்யறாங்க. ஒண்ணா சரக்கு அடிக்கறாங்க.ஆனா ஹீரோ மனைவியை யாருமே பார்த்ததில்லை என்பதும், பீட்சா கடை ஓனரும் பார்த்ததில்லை என்பதும் நம்ப முடியலை. இப்போவெல்லாம் கடை ஓனர்ங்க ஃபுல் டீட்டெயில்ஸ் தெரியாம வேலையே தர மாட்டாங்க.. 3 வருசமா ஒர்க் பண்ற  ஆளை பற்றிய விபரம் தெரிஞ்சுக்காமயா இருப்பார்? 


8. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் தான். ஆனா அது ஹாலிவுட் திகில் படங்களுக்கு சரி..  இந்த க்ரைம் படத்துக்கு அந்த ஆவி ட்விஸ்ட் தேவை இல்லை,. இதை ஒரு பகுத்தறிவுப்படமாவே முடிச்சிருக்கலாம்


9. அந்த பங்களாவுல கரண்ட் போனதும் மெழுகுவர்த்தி பத்த வைக்கறாங்க. இந்தக்காலத்துல ஏழைங்க கூட  எமர்ஜென்சி  லைட் வெச்சிருக்காங்க. மிடில் கிளாஸ் ஃபேமிலி கூட யூ பி எஸ் யூசிங்க் .. ஹீரோ அந்த கதையை சொல்லும்போது யாரும் இது பற்றி பேசலையே? 


http://www.mysixer.com/wp-content/uploads/2012/07/Pizza-Teaser.jpg




எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 



சி.பி கமெண்ட் - வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் -அபாரமான திரைக்கதை உத்தி,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் ,சபாஷ் படம், புதுமையான கதையை விரும்பும் அனைத்துத்தரப்பும் பார்க்கலாம் ஹீரோ பின்னால் ஓடாமல் திரைக்கதை அமைக்கத்தெரிந்தால் ஒரு சாதா படமும் சூப்பர் ஹிட் ஆகும்  என்பதற்கு இது ஒரு உதாரணம்



டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்களில் சஸ்பென்ஸை உடைக்கும் சில வசனங்களை போடலை. படம் பார்த்துட்டு பின்  மீண்டும் இந்த வசனங்களில் ஒரு பார்வை ஓட்டுனா இயக்குநர்  எப்படி இந்த வசனத்துலேயே ட்விஸ்ட் இருக்குன்னு சொல்லாம சொல்றார் என்பது புரியும்..  ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்

 இப்படத்தின் இயக்குநர் பேட்டி படிக்க 

http://www.adrasaka.com/2012/10/blog-post_2147.html


டிஸ்கி - ராசிபுரம் நண்பர் ஒருவர் ( ட்விட்டர் ) ஃபோன் பண்ணி சொன்ன லாஜிக் மிஸ்டேக் - ஹீரோ  பீட்சாவை எந்த கடைக்கு டெலிவரி பண்ணனும் என்று கொடுக்கப்பட்ட அட்ரஸ்க்கு போகாமல் ஏன் அந்த பேய் வீட்டுக்கு ராங்க் எண்ட்ரி கொடுத்தார்? என பீட்சா கடை ஓனர் கேட்கவே இல்லையே? அது ஏன்?  ( நிஜமாலுமே இது சூப்பரான கேள்வி, எனக்கு தோணலை.. சி பி.. நீ இன்னும் வளரனும்)