6/3/2026 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது 10/4/2026 முதல் நெட் பிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகும் முன்பே ஈடிவி வின் என்ற ஓடிடியில் டைரக்ட் ஆக ரிலீஸ் ஆனது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் நேர்மையான அரசு அலுவலர்.ஊர்ப்பஞ்சாயத்து போர்டு மெம்பர்.எவ்வளவு பெரிய மிரட்டல் வந்தாலும் நீதி,நேர்மை என ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் வாழ்பவர்.
நாயகனின் மனைவி அவருக்கு நேர் எதிரானவர்.பக்கத்து வீட்டில் ஒரு மணி பிளாண்ட் ( செல்வச்செடி) கிடைத்தாலும் அவர்களுக்குத்தெரியாமல் ஆட்டையைப்போட்டு விடுபவர்.வீட்டில் மனைவி வைத்தது தான் சட்டம்.
இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.சரியான குறும்புக்காரன்.ரீல்ஸ் பைத்தியம்.அடிக்கடி மொபைல் போன் எடுத்து எதையாவது ரெக்கார்டு செய்து ரீல்ஸ்.போடும் சுட்டிப்பையன்.அடங்காமாரி.
வில்லன் அந்த ஊரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு சப் இன்ஸ்பெக்டர்.பிறன் மனை நோக்காவிடில் நமக்கில்லை பேராண்மை என்று வாழ்பவன்.அதாவது அடுத்தவர் சம்சாரத்துக்குக்குறி வைத்து வீழ்த்துபவர்.பெண் சபலிஸ்ட்.
ஒரு நாள் நடு ரோட்டில் எல்லோரும் பார்க்கும்போது நாயகனுக்கும் ,வில்லனுக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.அது கை கலப்பில் போய் முடியும் முன் உடன் இருக்கும் போலீசார் வில்லனைத்தடுத்து விடுகின்றனர்.ஊருக்குள் அவனுக்கு நல்ல பெயர் இருக்கிறது,அவனுடன் மோதினால் ஊரார் அவனுக்கு சப்போர்ட் செய்வார்கள் என்று வில்லனுக்கு கேட் போட்டு விடுகிறார்கள்.
வில்லன் அப்போது முதல் நாயகன் மீது ஒரு கண் வைத்திருக்கிறான்.சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் அவனை மட்டம் தட்டி விடலாம்,பழி வாங்கி விடலாம் என நினைக்கிறான்.
எதேச்சையாக நாயகனின் மனைவியைப்பார்த்து விடுகிறான்.வீட்டுக்குள் வந்து பேச்சுக்கொடுக்கிறான்.அப்போது நாயகனின் மகன் வில்லனின் துப்பாக்கியை விளையாடக்கேட்கிறான்.விளையாட்டு
நாயகனுக்கு விஷயம் தெரிய வந்ததும் இந்த கொலைப்பழியில் இருந்து மகனைக்காப்பாற்ற முயல்கிறான்.டெட் பாடியை டிஸ்போஸ் செய்ய பிளான் போடுகிறான்.
மேலே நான் சொன்னது படத்தின் முதல் 15 நிமிடக்கதை தான்.மீதி இரண்டு மணி நேரம் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையான சம்பவங்கள் மூலம் சொல்லி இருக்கிறார்கள்.
நாயகன் ஆக சிவாஜி நடித்திருக்கிறார்.தெலுங்கில் நீண்ட இடைவெளிக்குப்பின் இவருக்கு ஒரு வெற்றிப்படம்.நடிப்பு கன கச்சிதம்.
நாயகி ஆக லயா குடும்பப்பாங்கான பாத்திரத்தில் மிளிர்கிறார்.பேராசை கொண்டவராக இவர் நடந்து கொள்வது காமெடி.
இவர்களது மகன் ஆக வரும் சிறுவன் சுட்டித்தனமாக நடித்துக்கை தட்டல் வாங்குகிறான்.
இவர்கள் போக ரோகன் ,அலி,தன்ராஜ் ,இளவரசன் போன்றோர் அவரவர் கதாப்பாத்திரங்களைத்திறம் பட ஏற்று நடித்திருக்கிறார்கள்.
ரஞ்சின் ராஜின் இசை கச்சிதம்.ஒரு க்ரைம் காமெடி டிராமாவுக்கு பின்னணி இசை எந்த அளவு களை கட்ட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு ரித்விக் ரெட்டி.கிராமிய அழகைக்கண் முன் நிறுத்துகிறார்.
எடிட்டிங் டி பாலுமனோஜ்.பரபரப்பான காட்சிகளை கச்சிதமாக ட்ரிம் செய்து இருக்கிறார்.
கதை,திரைக்கதை ,இயக்கம் சுதீர் ஸ்ரீ ராம்
சபாஷ் டைரக்டர்
1 டெட் பாடியுடன் வீட்டில் தனியாக இருக்கப்பயமாய் இருக்கிறது என பேச்சுத்துணைக்கு ஊரையே கூட்டி வைத்து வீட்டில் அலப்பறை செய்யும் நாயகி செய்யும் காமெடி
2 டெட் பாடியை மறைக்க நாயகன் எடுக்கும் முயற்சிகள் போதாது என மினிஸ்டர் வேனில் மறைந்திருக்கும் பணம் பற்றிய ரகசியம் எக்ஸ்ட்ரா காமெடி.
3 திரிஷ்யம் ஸ்டைலில் ஒரு பிணத்தை மறைக்க நினைக்கும் குடும்பம் என்பது தான் ஒன் லைன் என்றாலும் சீரியஸ் ஆக இல்லாமல் டார்க் காமெடி ஜர்னரில் சொன்ன விதம் கச்சிதம்
4 க்ளைமேக்சில் தெரிய வரும் ட்விஸ்ட்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு பொறுப்பான போலீஸ் ஆபீசர் லோடட் கன்னை ஒரு பொடிப்பையனிடம் அசால்ட் ஆகக்கொடுப்பாரா?அட்லீஸ்ட் புல்லட்சை ரிமூவ் பண்ணிட்டுக்கூடத்தரவில்லை
2 மகன் சிறுவன்.மைனர் பையன் ஆக்சிடெண்ட்டல் டெத் உருவாக்கியதற்குப்பெரிய தண்டனை இருக்காது.எதற்காக நாயகன் தான் கொலை செய்ததாகப்பொய் சொல்ல வேண்டும்?
3 என்னதான் காமெடிக்கு என்றாலும் மகன் அந்த டெட்பாடியுடன் அதன் அருகே படுத்துத்தூங்குகிறான் என சொல்வது ஓவர்
4 ஒரு மினிஸ்டர் சாதாரண கிளர்க்கிடம் அப்படித்தான் கெஞ்சுவாரா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ .குடும்பத்துடன் பார்க்கலாம்.
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நம்ப முடியாத திரைக்கதை என்றாலும் டார்க் காமெடி க்ரைம் திரில்லர் மூவி ரசிகர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5 /5