Showing posts with label KOTHTHU (2022) ( மலையாளம்) - சினிமா விமர்சனம் (. Show all posts
Showing posts with label KOTHTHU (2022) ( மலையாளம்) - சினிமா விமர்சனம் (. Show all posts

Saturday, November 19, 2022

KOTHTHU (2022) ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  சைக்காலஜி  ஸ்டூடண்ட். அவரோட  அரேஞ்ஜ்டு மேரேஜ்  ரிசப்ஷன்  அன்னைக்கு  மணப்பெண்ணா  அவர்   இருக்க  உணவு  சப்ளை செய்யும்  கேட்டரிங்  இன்சார்ஜ்  யதார்த்தமா  வந்து  பேசறார். அப்போ  மாப்ளை  அங்கே  வந்து  சமையல்காரனுக்கு   இங்கே  என்ன  வேலை?னு  சொல்லி  விரட்டிடறார். 


  மாப்ளையும்  பொண்ணும்  சாப்பிடும்போது    சாப்பாட்ல  கெரசின் ( மண்ணெண்ணெய்)  வாசம்  வருதுனு  மாப்ளை  தகறாரு  ப்ண்றார்.ஆனா  மணப்பெண்ணுக்கோ , மற்றவர்களுக்கோ  அப்படி  வாசம்  வர்லை.  மாப்ளை  வேணும்னே  வம்பிழுக்கத்தான்  அப்ப்டி  நட்ந்துக்க்றார்னு  நாயகி  புரிஞ்சுக்கறா 


இப்படிப்பட்ட  சைக்கோ  கூட  நான்  வாழ  மாட்டேன்னு  நாயகி  பிரேக்கப்  பண்ணிடறா. மாப்ளை  தகறாரு  செஞ்சாலும்  வேற  வழி  இல்லாம  கம்முனு  போய்டறார். இதற்குப்பின்  அந்த  கேட்டரிங்  சர்வீஸ்  ஆளோடு  பழக்கம்  ஆகி  பின்  காதல்  ஆகி  கல்யாணம்  வரை  போகுது 


மேரேஜ்க்குப்பிறகு  நாயகன்  தன்  ஃபிளாஷ்பேக் கதையை  சொல்றார். அவருக்கு  அம்மா, அப்பா  , 3  சகோதரிகள் எல்லாரும்      நாயகன்  சிறுவனா  இருக்கும்போதே  ஒரு  அரசியல்  பழி வாங்கல்  நிகழ்ச்சில  கொலை  செய்யப்படறாங்க .    பார்ட்டி  லீடர்தான்  நாயகனை  வளர்க்கிறார்


பார்ட்டி  லீடர்  தளபதி  பட  மம்முட்டி  மாதிரின்னா  நம்ம  நாயகன்    ரஜினி  மாதிரி  அவர்  என்ன  சொன்னாலும்  கேட்பார் . ஒரு  அரசியல்  பழி வாங்கல்  நிகழ்ச்சியா  ஒரு  ஆளை  போட்டுத்தள்ளனும்னு  பார்ட்டி  லீடர்  சொல்லும்போது   சகாக்கள்  எதுக்கு  உயிர்ப்பலி ? கை  கால்  மட்டும்  எடுத்துட்டு  விட்டா  போதாதா?னு  கேட்கறாங்க . அவங்க  முன்  அதுக்கு  ஓக்கே  சொன்ன  லீடர்  நாயகனை  தனியா  கூப்பிட்டு  அவனைப்போட்டுடுனு  சொல்லிடறார்


 நாயகன்  மற்றும்  அவரது  கட்சிக்கூட்டாளிகள்  நான்கு  பேர்  போய்  தகறாரு  பண்ணி  அந்த  ஆளை  அடிக்கும்போது  நாயகன்  அந்தாளைக்கொலை  பண்ணிடறார்


கொலையை  நான்  தான்  செஞ்சேன்னு  போலீஸ்ல  ஒரு  ஆள்  மட்டும்  ஒத்துக்கிட்டு  அப்ரூவரா  ஆகிட்டா  பிரச்சனை  பெருசா  ஆகாதுனு  லீடர்  சொல்ல  நாயகனின்  நண்பன்  அந்தப்பழியை  ஏத்துக்கிட்டு  போலீஸ்ல  சரண்டர்  ஆகிறான்


 நாயகனின்  நண்பனின் அம்மா  தனியா  இருக்காங்க . அவங்க  வீட்டுக்கு  பாம்  வெச்சு  வீட்டை  தரை  மட்டம்  ஆக்கிடரறாங்க  எதிர்க்கட்சியினர் .


  பார்ட்டி  லீடர்  ஆலோசனைப்படி  நாயகனின்  வீட்டிலேயே  தங்க  சொல்றார். அந்த  அம்மாவும்  தங்கறாங்க 


  அப்ரூவர்  ஆன  நண்பன்  ஜாமீன் ல  ரிலீஸ்  ஆகி  வர்றான், அப்போ  பார்ட்டி  லீடர்  நீ நான்  சொல்லும்  இடத்துக்குப்போய்  தலைமறைவா  இரு  , நான்  சொல்லும்வரை  இந்தப்பக்கமே  வராத  என்கிறார்


 அதன்படி  நண்பனும்    தலைமறைவு  ஆகிறான் 


 நாயகி  கர்ப்பமா  இருக்கா , அவளுக்கு  ஒரு  பயம், நாயகனின்  தப்புக்காக  பழி  ஏத்துக்கிட்டு   ஜெயிலுக்குப்போய்  பின்  ரிலீஸ்  ஆகி  தலைமறைவா  இருக்கும்  நண்பனின்  அவல  நிலைக்கு  நாயகன்  தான்  காரணம்  என்பது  தெரிந்து   நண்பனின்  அம்மா   பழி  வாங்கிடுவாரோ  என  பயப்படுகிறார்


 இதுக்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  சுவராஸ்யங்களே  கதை 


நாயகனாக  அஷீஃப்  அலி. உயரே  படத்தில்  இவரை  ஆண்ட்டி  ஹீரோவாப்பார்த்து  இதில்  நாயகனாப்பார்க்க  சந்தோசமா  இருக்கு , நம்ம  ஊர்  நடிகர்  பிரசன்னா  சாயலில்  இருக்கிறார். நல்ல  நடிப்பு  வெளியே  வீராப்பாகப்பேசினாலும்  உள்ளுக்குள்  தன்  மனைவிக்கு  ஏதாவது  ஆகிடுமோ  என  பயப்படுவதை  உடல்  மொழியில்  காட்டும்  விதம் அருமை 


நாயகனின்  நண்பனாக ரோஷன்  மேத்யூ. அனுதாபத்தை அள்ளிக்கொள்ளும்  பாத்திரம். கப்பீலா  படத்தில்  மாறுபட்ட  ரோலில்  வந்தவர் , விக்ரம்  நடித்த  கோப்ரா  படத்தில்  வில்லனாக  வந்தவர்  இதில்  குணச்சித்திர  ரோல். 90களில்  நடிகர்  வாகை  சந்திர  சேகர்  இது  மாதிரி  பல  ரோல்களில்  நடித்து  ,முத்திரை பதித்தார் . அதே  போல்  இவருக்கும்  ஒரு  வாய்ப்பு 


நாயகியாக  நிகிலா விமல்  இந்த  மாப்ளை  வேண்டாம்  என  தீர்க்கமாக  சொல்வது , நாயகனுடன்  பழகும்போது  வெட்கப்புன்னகை , அவரது  பின்  புலம் , கொலை  விஷயம்  தெரிந்து  பயப்படுவது  , கோபப்ப்டுவது , வாக்குவாதம்  செய்வது  என  பல  இடங்களில்  ஸ்கோர்  பண்றார்\


பார்ட்டி  லீடராக  ரஞ்சித்  கனகச்சிதமான  ஒப்பனை  , நல்ல  நடிப்பு.. நாயகனின்  நண்பனின்  அம்மாவாக   ஸ்ரீ  ல்ட்சுமி  கண் கலங்க  வைக்கும் நடிப்பு . நாயகனுக்கு  டீ  தரும்போது  இது  வெறும்  டீ  தான் பா , விஷம்  இல்லை  என  பூடகமாக  சொல்லும்போது  அசத்தும்  நடிப்பு  


பிரசாந்த்  ரவீந்தரனின்  ஒளிப்பதிவு  கன  கச்சிதம்  ரதின்  ராத  கிருஷ்ணனின்  எடிட்டிங்  குழப்பம்  இல்லாமல்  நேர்த்தியாக  இருக்கிறது , பாடல்களுக்கான  இசையை  கைலாஷ்  மேனன் கச்சிதமாக  கவனிக்க  பின்னணி  இசையை ஜாக்ஸ்  பெஜோய்  செய்திருக்கிறார். 

சபாஷ்  டைரக்டர் ( சிபி மலையில்) 


1  வழக்கமாக  மலையாளப்படங்கள்  மிக  மெதுவாக  செல்லும்,  முதல்  அரைமணிநேரம்   கேரக்டர்கள்  அறிமுகமாக  இருக்கும், இதில்  முதல்  சீனிலேயே  கதைக்கு  வந்து  விடுகிறார்


2   வன்முறை  என்பது  கூரான  கத்தி அதை  யார்  கையில்  எடுத்தாலும் பாதிப்பு  அவருக்கும்தான்  என்ற  கதைக்கருவை  கச்சிதமாக  கையாண்ட  விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  இங்கே  இருக்கற  குழந்தைகள்  மற்ற  குழந்தைகளைப்போல்  சினிமாப்பாட்டு  கேட்டு  வளர்ந்தவை  அல்ல , இன் குலா  ஜிந்தாபாத்  முழக்கம்  கேட்டு  வளர்ந்தவை 


2  நீ  உள்ளே  போ ,  சிகரெட்  புகை  வயித்துல  வளர்ற  குழந்தைக்கு  நல்லதல்ல 

 ஓஹோ, அப்போ  உனக்கு  மட்டும்  அது  நல்லதாக்கும் ?


3  ஒரு  நியூஸ்  பேப்ப்ர்  படிச்சுக்கூட இதுவரை  உன்னை  நான்  பார்க்கலை,  ,  நீ  அரசியல்வாதியா? அரசியல்  பற்றி  உனக்கு  என்ன  தெரியும் ? 


4  பழி  வாங்கும்  உணர்வு , மாறாத  கோபம்  இதை  எல்லாம்  எவன்  ஒருவன் ஜெயிக்கிறானோ  அவன் வாழ்வில்  ஜெயிக்கிறான்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சைக்காலஜி  ஸ்டூடண்ட்டான  நாயகி  ஒரே  ஒரு  பார்வையில்  ஒரே  ஒரு  நிகழ்வில்  தனக்கு  அமைந்த  மாப்பிள்ளை  சைக்கோ  பார்ட்டி  என்பதை   அறிகிறாள் . பார்ட்டி  செகரெட்டரி  ஆளைப்பார்த்தாலே  டவுட்டா  இருக்கு  என  யூகிக்கிறாள், ஆனா  நாயகனை  கல்யாணம்  கட்டிக்க  முடிவு  எடுக்கறா, ஆனா  அவன் எப்பேர்ப்பட்ட ஆள்  என்பதை  கண்டுபிடிக்க  முடியலையே?


2  நம்ம  எதிரியின்  கட்சி  ஆஃபீஸ்   ரூட்  இது  , இந்த  சமயம்  பார்த்து  நான்  ஹெல்மெட்  போட்டுட்டு  வர்லையே?  முகம்  மறைச்சிருக்கலாம்னு  நாயகன்  நாயகியிடம்  வருத்தமா  சொல்கிறான், ஆனா  படம்  பூரா  பைக்  ஓட்டிட்டு  வர்ற  எந்த  சீனிலும்  ஹெல்மெட்டே  போடலை  

3  நாயகன்  அரசியல்  பழி  தீர்க்க  செய்த  கொலை,  கொலை  செய்யப்பட்ட  ஆளின்  மனைவி , மகன் , மகளைக்கண்டு  வருத்தப்படுவது  எல்லாம்  தளபதி  ரஜினி - பானுபிரியா  காம்போ  காட்சியை  நினைவுபடுத்துகிறது 


4   பார்ட்டி  லீடரின்  பேச்சுக்கு  மறு  பேச்சு  பேசாத  நாயகன்  அவரது  சொல்லை  மீறி  லீடருக்குத்தெரியாமல்  நண்பனை  தலைமறைவு  ஊரிலிருந்து  கிளம்பி  வீட்டுக்கு  வருமாறு  கூறுவது  நம்ப  முடியவில்லை . ஆபத்து  இருக்கிறது என  தெரிந்தும்  ஏன்  அந்த  ரிஸ்க்?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் =  ரொமாண்டிக்காக  ஆரம்பித்து  ஃபேமிலி  மெலோ டிராமா  மாதிரி  கொண்டு போய்  பொலிடிக்கல்  த்ரில்லராக  முடித்திருக்கிறார்கள் , கேரளாவில்  இது  ஹிட்  படம். தமிழ்  ரசிகர்களுக்கு  பழக்கமான  ஒரு  மசாலா  படம்   ரேட்டிங்  2.5 / 5 


otthu
Kothth.jpg
First look poster
Directed bySibi Malayil
Written byHemanth Kumar
Produced by
Starring
CinematographyPrasanth Raveendran
Edited byRathin Radhakrishnan
Music by
Production
company
Gold Coin Motion Picture Company
Release date
16 September 2022
Running time
155 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹ 4.5 crore