Showing posts with label ட்விட்டர்ஸ். Show all posts
Showing posts with label ட்விட்டர்ஸ். Show all posts

Saturday, February 25, 2012

சென்னை - பெண் ட்வீட்டர்கள் சந்திப்பு - இன்னா பேசுனாங்கோ? ஜாலி கலாட்டா கற்பனை

pic.twitter.com/WfS1xPRa 
வர வர பொண்ணுங்களோட ஆதிக்கம் அதிகம் ஆகிடுச்சு.. ஆண்கள் எல்லாம் சமையலை முடிச்சுட்டு ஆஃபீஸ் போன பின்பு இவங்க சும்மா  இருக்காம காலண்டர்ல, பஞ்சாங்க புக்ல இருக்கற தத்துவங்களை எல்லாம் ட்வீட்ங்கற பேர்ல தத்துவமா போட்டு கொலையா கொல்லறாங்க.. அப்புறம் ஆண்கள் ட்வீட் அப் , பதிவர் சந்திப்பு நடத்தறதை பார்த்து இவங்களுக்கும் ஆசை வந்துடுச்சு.. இப்போ சென்னைல பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ட்வீட் அப்.. அங்கே என்னத்தை பேசிக்கிழிச்சிருப்பாங்கன்னு இப்போ பார்க்கலாம்.. சும்மா ஜாலிக்கு ./. யாராவது சண்டைக்கு வந்தா உடனே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுவோம்.. நாங்க எல்லாம் வீரபிரதாபன் பரம்பரை ஹி ஹி

மொதல்ல மாதர் குல மாணிக்கம்  பாட்டிகள் சங்கத்தலைவி மெடிக்கல் ஷாப் மேனகா  மெரீனா பீச் வந்து சேர்ந்தாங்க..

அடுத்ததா ஆண்ட்டியோ அம்பிருந்தா வம்பிருந்தா  சொம்பிருந்தா வர்றாங்க 

- ஹாய் , ஆண்ட்டி.. இந்த சேலை சூப்பரா இருக்குக்கா.. எங்கே எடுத்தீங்க?

 ஜவுளிக்கடைல கடைக்காரன் பார்க்காதப்ப எடுத்தேன் ஹி ஹி 

அக்கா, உங்க கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல இருக்காராமே? ரொம்ப கஷ்டமான வேலையா?

 இல்ல, அங்கே ஈசியாத்தான் வேலை செய்வாரு.. இங்கே வீட்டுக்கு வந்ததும் தான் அவருக்கு ஏகப்பட வேலை, சமையல் வேலை, பசங்களூக்கு படிப்பு சொல்லித்தர்றது.. இப்படி

 அப்புறம் நீங்க என்ன தான் செய்வீங்க? 

 விளையாடறியா? காலைல 7 மணிக்கு சிஸ்டம் ஆன் பண்ணி உக்காந்தா நைட் 1 மணி வரை நான் ட்விட்டர்ல தானே இருக்கேன்? உனக்கு தெரியாதா?  டைம் லைனை நல்லா பாரு.. அப்பப்ப சாப்பிட, டீ குடிக்க மட்டும்  10 நிமிஷம் பிரேக்  எடுத்துக்குவேன்  ...

அடுத்து சாவி தராதே பூட்டை விடாதே  வர்றாங்க  - உஷ். அப்பா.. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டேன் ,.. ஐ ஜாலி 

நீங்க எப்போ ஆஃபீஸ் போய் இருக்கீங்க? இப்போ புதுசா கட் அடிச்சதா சொல்றீங்க?

 அப்படி எல்லாம் சொல்லாதே, மாசாமாசம் ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்க போய்த்தானே ஆகனும்?

இளிச்சவாய் டேமேஜர் உங்க ளை மாதிரி எல்லாருக்கும் சிக்கறதே இல்லையே?

 அப்போ கன் ஃபைட் காஞ்சனா  வாட்டர் கேன்ல சிறுவாணித்தண்ணியோட வர்றாங்க..

  ( ஓப்பனிங்க் சாங்க்... சிறுவாணித்தண்ணி குடிச்சு நான் ஃபைட் மாஸ்டரா பொறந்து வளர்ந்தவ... )

 டேமேஜர் பற்றி தப்பா பேசாதீங்க.. ஏன்னா மீ ஆல்சோ எ டேமேஜர்..

ஓகே , காந்தி சிலைக்கு போலாமா ? அப்போ தான் “அமைதி”யா பேச முடியும்./. 

 சாரி.. எனக்கு ஆம்பளைங்கன்னாலே அலர்ஜி.. கண்ணகி சிலைக்கு போயிடலாம்.. 

ஓக்கே.. அக்கா, ஆம்பளைங்களை திட்டறதுக்கு என்ன பண்னலாம்?

இப்போ நான் அதைத்தானே டெயிலி பண்ணிட்டு இருக்கேன்?

இன்னும் கேவலமா திட்ட ?

ஃபேக் ஐ டி ஓப்பன் பண்ணிக்க வேண்டியதுதான்.. பசங்கள்ல சிலர் எப்படி பொண்ணுங்க ஐ டில வர்றாங்களோ அந்த மாதிரி.. 

 அப்போ வள் வள் பொண்ணு ,சைதை பண்ணு எல்லாம் யாரு?

 யாருக்குத்தெரியும்? இப்போ அதுவா முக்கியம்.. நாட்டுக்கு உபயோகமான சில விஷயங்களை இப்போ டிஸ்கஸ்  பண்ண்ப்போறோம்././

 அது இருக்கட்டும்.. உங்க கூந்தல் இவ்லவ் கரு கருன்னு இருக்கே..  மீரா ஷாம்பூ போட்டு குளிப்பீங்களா? சிகைக்காய் அல்லது அரப்பு போட்டு குளிப்பீங்களா? 

 2ம் இல்லை பிளாக் மேஹந்தி போடுவேன். டை அடிச்சா அலர்ஜி ஆகிடுது.. அதனால.. நீங்க?

 நான் சவுரி வெச்சுக்குவேன்.. 

ஏய் கீரைக்காரம்மா... எவ்ளவ் கீரை?

 ஏய்.. என்னை அடையாளம் தெரியலை?

 சொன்னாத்தானே தெரியும்?

 நான் தான் யூ மலையாளச்சி

 அட விடிகாலைல 3.30 மணிக்கே ட்வீட்ஸ் போடுவீங்கள்ளே? அது நீங்க தானா?

 யா யா .. 

 நீங்க ஏன் நெற்றில  பொட்டில்லாம இருக்கீங்க?

 நல்லா பாரம்மா, சந்தனக்கலர்ல பொட்டு வெச்சிருக்கேன்.. உற்றுப்பார்த்தாத்தான் தெரியும்.. ஏன்னா மீ ஆல்சோ சந்தனக்கலர் ஹி ஹி 

அக்கா சுண்டல் வேணுமா?  

 வேணாம், போம்மா.. 

 அய்யோ அக்கா என்னைத்தெரியல ? நான் தான்க்கா திருச்சி மலைக்கோட்டைல அன்னதானம் ஸ்பான்சர்..... 

 ஸ்பான்சர் பண்ணுவீங்களா?

 ச்சே ச்சே டெயிலி லஞ்ச்க்கு அன்னதானம் அங்கே தான் ஸ்பான்சர் ஹி ஹி  என் பேரு டூப்ளிகேட் மானு.. 

எங்கே ஸ்கூட்டி காணோம்?

 கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதிங்கக்கா.. அந்த டப்பா ஸ்கூட்டி எங்க வீட்ல இருந்து ஆஃபீஸ் போகவே 6 டைம் நின்னுடும்,, எவனாவது இளிச்சவாயன் சிக்குனான்னா அவனை தள்ளிட சொல்லி ஸ்டார்ட் பண்ணுவேன், அதுல எப்படி சென்னை வரை வர முடியும்?

http://p.twimg.com/AmgCh91CIAELodm.jpg
a

இடமிருந்து வலமாக மங்கை எனும் சந்தியா சாரு அவர்களின் தவப்புதல்வர்கள் 2 பேர்.. 3 வதாக இருப்பவர் ராஜ குமாரி சோனியா பெற்றெடுத்த ராஜகுமாரன்

இந்தியா சாரு  வர்லையா?

 அட உனக்கு மேட்டரே தெரியாதா? மேனகா, சாரு 2ம் ஒரே ஆள் தான்.. 

 ஓஹோ , எப்படி அடையாளம் கண்டு பிடிக்க? 

 அடிக்கடி கர்ர்ர் புர்ர்ர்-னு ரிப்ளை குடுத்தா, இளைய தலைவலியை பாராட்டி போடற ட்வீட்சை ஆர் டி செஞ்சா அது மேனகா ...  ஒன்றரை லைன்ல சோக தத்துவமா போட்டா  அது  இந்தியா சாரு..

 ஓஹோ, காதல் கவிதை எல்லாம் பின்றீங்களே, அது எப்படி?

 1980 ல நான் +2 படிச்சப்ப ரிலீஸ் ஆன இளையாராஜா இசை அமைச்ச பட பாடல்களை எல்லாம் டைரில எழுதி வெச்சிருக்கேன். இந்த கடன் கார  பசங்களுக்கு முதல் நாலு லைன்ஸ் தான் தெரியும்.. நான் நடுவால இருந்து 2 லைன் எடுத்து விடுவேன் ஹய்யோ அய்யோ 

ஓஹோ,, அக்கா ஏன் சுத்தி முத்தியும் பார்க்கறீங்க?

சுத்தி பாருங்கடி நம்மளை படம் புடிச்சு டிவிட்டரில போட்டிட போறாங்க.இன்னைக்குனு  பார்த்து நான் சவுரி முடி வைச்சிட்டு வரல

எனக்கு ஒரு டவுட்

 கேளு

அப்பளம் எப்பிடி பொரிக்கிறது ..?

 ரைஸ் குக்கர் எதுக்குடி இருக்கு அதுல போடுடி

என்ன ஒரு அநியாயம்,போயும் போயும் இந்த செல்வம் இப்படி மாறுவான்னு நான் கனால கூட நினைச்சு பாக்கல 

 அது யாரு? உன் பாய் ஃபிரண்டா?

 ச்சே, ச்சே, சீரியல்ல வர்ற கேரக்டர்டி. 

ஓ.. சரி நாம என்ன மாதிரி ட்வீட் போடலாம்?

நம்மள என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் நம்ம தத்துவம் போடுறத நிறுத்தவே கூடாதுடி 

 அதெல்லாம் காலண்டர்ல வந்ததுன்னு கண்டு பிடிக்க மாட்டாங்களா? 

 அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.. நான் ரெகுலரா தத்துவம் தான் போடறேன், அதுக்கே ஆர் டி பறக்குது 


ஓ.. ஹேய் உனக்கு பத்மினி புடிக்குமா இல்ல சரோஜாதேவியா?

 அஞ்சலி தேவி, வைஜய்ந்தி மாலா வை எல்லாம் விட்டுடே.. சரி நாம இப்போ பேசுன மேட்டர் வேளில தெரிய வேணாம்

 ஏன்>

 இதை வெச்சு நம்ம வயசை கண்டு பிடிச்சுடுவானுங்க.. நாம எப்பவும் போல 20 + அப்டினு மெயிண்ட்டெயின் பண்ணுவோம்.. 

ஒரிஜினல் போட்டோவ DPயா யாரும் வச்சுறாதீங்க, அப்புறம் ஒரு பய பாலோவ் பண்ணமாட்டான் 

 அக்கா , ந நி கீ அப்டின்னா என்ன? 

 நடு நிசிக்கீச்சு

 அப்டின்னா?

 ஏ ஜோக்ஸை பசங்க நைட் 12 மணில இருந்து 2 மணி வரை போடுவாங்க.. நாம அப்போ அவங்களுக்குத்தெரியாம வேடிக்கை மட்டும் பார்க்கனும்.. 

ஓஹோ ,இப்போ எல்லாம் விகடன் வலை பாயுதே, குங்குமம் வலைப்பேச்சு, குமுதம் ரிப்போர்ட்டட் ஆன் லைன் ஆப்பு, மல்லிகை மகள் வலைப்பேச்சு இதுல எல்லாம் பெண்களாகிய நாம் தான் வர்றோம்? இதுல இருந்து என்ன தெரியுது?

 பசங்களுக்கு ஆஃபீஸ் வேலை, வீட்டு வேலைன்னு ஏகப்பட்ட டென்ஷன்.. நமக்கு ஒரு கவலையும் இல்லை.. பொழப்பே இங்கே தான் ஓடுது.. அதான் காரணம்.. 

சரி லஞ்ச் சாப்பிடப்போலாமா?

 வேணாம்க்கா..  வீட்ல புருஷன் ஆசையா ஆக்கி வெச்சிருக்கார் , வேஸ்ட்டா போயிடும்.. 

 சரி, நாலைக்கு டைம் லைன்ல பசங்க என்ன பேசுனீங்கன்னு கேட்டா சமையல், கோலம்,  சவுரி, மேக்கப் மேட்டர் பேசுனோம்னு சொல்லிட வேணாம்.. 

 ஏன்?

 நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்கில்ல?அது டேமேஜ் ஆகிடும்.. ஹி ஹி 

http://upload.wikimedia.org/wikipedia/commons/d/df/Young_girls_in_bunad.jpg

டிஸ்கி -1 முதலில் உள்ள பெண் ட்வீட்டர்கள் படத்தை எடுத்து உதவி செய்தது  மை மாப்ஸ் கோவை ஷேக் .. மேலும் பல ஐடியாக்களை டைம் லைனில்  தந்து உதவிய அனைத்து ஆண் சிங்கங்கள்க்கும் நன்னீஸ்  ஹி ஹி

 டிஸ்கி 2 - பெண் ட்வீட்டார்ஸ் சந்திப்பு முதல் முறை நடந்த போதே ரெடி செய்யப்பட்ட பதிவு இது.. இப்போ கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டிருக்கேன்

 டிஸ்கி 3 - முன்நாள் உலக அழகியும் இந்திய சினிமாவில் பிரபல்யமானவருமான ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பேரு அபிலாஷா..



Saturday, January 28, 2012

பரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமாளி செல்வா

கோமாளி செல்வா வைப்பற்றி அறிமுகம் தேவை இல்லை, இருந்தாலும் ஃபார்மாலிட்டி என ஒண்ணிருக்கே? கோபி யில் இருக்கும்  பதிவர் கம் ட்வீட்டர்.. செம மொக்கை ட்வீட்டர்.. ஆனந்த விகடன் ல பல ட்வீட்கள் வந்திருக்கு.. சவால் சிறுகதை போட்டியில் நல்ல , கவனிக்கத்தக்க கதை எழுதி இருக்கார்.. அவரிடம் ட்வீட்டர்ஸ் கேட்ட கேள்விகளும் , அவரது காமெடி பதில்களும்..

1. நீங்க சுமாரா எத்தனை மணிநேரம் இப்டியெல்லாம் ட்விட்டறதுக்கு சிந்திப்பீங்க?  (பரிசல்)


செல்வா -   ஒரு நாளைக்கு 48 மணி நேரங்களை மட்டும் இதற்காக செலவிடுகிறேன்!


சி.பி - ஓப்பனிங்க்லயே கடி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



2. ட்விட்டர்ல செல்வாவுக்குன்னு தனியா புது அகராதி உருவாகிக்கொண்டு வருவதாக பலரும் பயப்படுகிறார்களே அது உண்மையா?


செல்வா - நான் இன்னும் அகராதியே எழுதல. அப்படி எழுதும் எண்ணமும் எனக்கு இல்லைங்கிறதால பயத்த பயமாவே விட்டுடலாம்!


சி.பி - அட , அகராதி பிடிச்ச பயலே... (டிக்ஸனரி லைக்கிங் பெர்சன்?)


3. எத்தனை பேர் திட்டினாலும் தொடர்ந்து எழுதி, இப்ப அதை ஒரு பாணியாவே மாத்தீட்டீங்க.. உங்க வெற்றியின் ரகசியம் என்ன?

செல்வா -யார் திட்டினாலும் அத கண்டுக்காம இருக்கிறதால எல்லோரும் பரிதாபப்பட்டு இந்த வழிக்கு வந்திட்டாங்கனு நினைக்கிறேன்! 

 சி.பி - அண்ணன் காட்டிய வழி???


4. தாங்கள் உருவாக்கிய வடை,இதால என்னாகும்?போன்ற சொற்றொடர்கள் இணையத்தில் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்தீர்களா?  ( நாகராஜ சோழன் எம் ஏ)


  செல்வா -நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை! ஆனால் மகிழ்ச்சி :)) 


சி.பி. ஓஹோ.. பதிவுலகத்துல ஆளாளுக்கு வடை வடைங்கறாங்களே? அதுக்கு நீ தான் காரணம? அடங்கோ.. வடை வாங்கி வங்கின்னு பேரு வேறா.


5. தூங்கும் நேரம் நீங்க என்ன பண்ணுவீங்க? (( நாகராஜ சோழன் எம் ஏ)


செல்வா -தூங்கும் நேரத்தில் கனவுகாணச் சென்றுவிடுவேன். கனவு இல்லாத நாட்களில் மட்டும் தூங்குவேன்! 


சி.பி - அய்யய்யோ, குழப்ப ஆரம்பிச்சுட்டானே. ட்விட்டர்ல ட்ரீம் பாய் இவனாத்தான் இருக்கும்.. 


6. உங்க மேரேஜப்ப உங்க ட்விட்டை புக்கா போட்டு பொண்ணுகிட்ட காட்டி பயமுறுத்தப்போறதா செய்தி வருதே? எப்படி சமாளிப்பீங்க?


செல்வா -அதுக்காகத்தான் பொண்ணுப் பாக்கப்போகும்போதே ஒரு தாயத்து எடுத்துட்டுப் போலாம்னு இருக்கேன்! 


சி.பி - உலகத்துலயே பொண்ணுக்கு  தாலி கட்டறதுக்கு முன்னால தாயத்து கட்னது நீதான்னு நினைக்கறேன்..


7. உங்களை மாதிரியே ன்னு ட்விட்டறவங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க? 


செல்வா -உண்மையில் என்னைவிட ரொம்ப நல்லா யோசிக்கிறாங்க! அவ்ளோ அருமையா என்னால சிந்திக்க முடியுமானு சந்தேகமா இருக்கு! அவர்களுக்கு நன்றிகள் 

சி.பி. இவர் மொக்கை போடுவது பத்தாமல் இருப்பவர்களையும் மொக்கை போட வைக்கிறாரே.....ஐய்ய்யோ!!


8. ரேடியோ “ஜாக்கி” ஆகறதுதான் உங்க லட்சியம் கனவு ஆசை எல்லாமே.. உங்களுக்கு ஜாக்கிங்கற உலகப் பிரபலதை தெரியுமா?


செல்வா -ஜாக்கி சான் பத்தித் தெரியும்! ஜாக்கினு ஒருத்தர் தனியா இருக்கிறாரான்னு தெரியலைணா!

சி.பி. - ஜாக்கிசேகர் அண்ணனையே கிண்டல் பண்ற அளவுக்கு அவ்வளவுபெரிய அப்பாடக்கரா நீங்க..?...


9.பிறரை கவருவதற்காக இப்படி ட்விட்டுகிறீர்களா இல்லை உங்கள் இயல்பே இப்படித்தானா?(ஜீவன்)


செல்வா -உண்மையில் எனது இயல்பே இதுதான்! அது பிறரைக் கவர்வது எனக்கு மகிழ்ச்சியே :)) 

சி.பி.- நீங்கள் கோபியில் வேலை செய்யும் அலுவலகத்தில் பல பெண்களை கவரந்தது இந்த இயல்பினால்தானா?? நடக்கட்டும்.....நடக்கட்டும்.



10. உங்க பயோல எப்ப என் கனவு நிறைவேறும்னிருக்கீங்க. ஆனா நீங்க தூங்கறதே இல்லையாமே.. அப்பறம் எப்படி கனவு?


செல்வா -நான் கனவுகாண தூங்கச் செல்வது இல்லை. நான் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்லிப் பார்த்துக்கொள்வேன்.கண்ணை மூடிட்டா எதுவும் தெரியாதே ?

சி.பி-- பெரிய அப்துல்கலாம் பேரன்......ட்ரீமை வரச்சொல்வது ஓகே...ட்ரீம் கேர்ள்ளையும் வரச்சொல்லிடுவீங்களோ?? சொன்னா நாங்களும் வருவோமில்ல??

11. பல இயக்குனர்கள் தங்கள் படத்துல வில்லன்கள் யூஸ் பண்ண உங்க ட்விட்களை கேட்டு, நீங்க தரமாட்டேன்னு சொன்னதா சொல்றாங்களே?


செல்வா -வில்லன்கள் எனது ட்விட்டுகளைப் பேசினால் ஒருவேளை காமெடியன்களாகத் தோற்றமளிப்பார்கள் என்பதால் பொதுநலன் கருதி அவ்வாறு கூறிவிட்டேன்!

சி.பி.- வில்லனுக்கே வில்லனய்யா நீர்!!

12. யாராவது 'போய்ட்டு வா'னு உங்க பேரைச்சொல்லி கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பீர்களா செல்வா ( SE, செந்தில்)


செல்வா -வீட்டுக்குப் போயிட்டு வந்து பார்ப்பேன்! ஆனா அவுங்க அங்க இருக்கமாட்டாங்க :((

சி.பி.- வீட்டுக்கு போவது ஓகே......அது உங்க வீடா ? சின்ன வீடா??



Tuesday, December 06, 2011

பிரபல பத்திரிக்கைகளின் கவனத்திற்கு.. இது நியாயமா?

வலைத்தளங்களில் ட்விட்டரின் சேவை, பங்களிப்பு மகத்தானது,,அப்பப்ப நடக்கும் உலக நடப்புகளை ட்விட்டரில் உடனுக்குடன் அறிய முடிகிறது .17.7. 2010 -ல் நான் வலைத்தளம் தொடங்கி விட்டாலும்  ஆனந்த விகடனில் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்ஸ் அப்டேட் பார்த்து 1.2.2011 -ல் தான் ட்விட்டர் உலகத்திற்கே வந்தேன். 

ஆனால் வாசகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்ற வலை பாயுதே ட்வீட்ஸ்க்கு சன்மானம் இல்லை.. இது ஏன்? வாரா வாரம் 8 லட்சம் புத்தகம் விற்கும் ஆனந்த விகடன் ட்வீட்ஸ் போட 2 பக்கங்கள் ஒதுக்குகிறது. அதில் மினிமம் 20 ட்வீட்ஸ் வருகிறது.. அதில் ஒரு ட்வீட்டுக்கு ரூ 100 பரிசு கொடுத்தால் என்ன? எழுதுபவர்களுக்கு உற்சாகமாக இருக்குமே?

அதே போல் படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்புவதில்லை.. ட்வீட் போடுபவர்களின் பயோ செக் பண்ணி பார்த்தால் அவர்கள் வலை தள முகவரி அல்லது ஃபோன் நெம்பர், அல்லது மெயில் ஐ டி இருக்கும்.. அதன் மூலம் முகவரி விசாரித்து  சன்மானமும் , காம்ப்ளிமெண்ட்ரியும் அனுப்பலாமே?

அதே போல் குமுதம் ரிப்போர்ட்டரில் ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் 2 வாரங்களாக ட்வீட்ஸ் போடுகிறார்கள்.. அதை தொகுப்பவர் குமுதத்தில் பணியாற்றும்  வந்தியத்தேவன் என்பவர்..  இவர்களும் சன்மானம், புத்தகப்பரிசு அனுப்ப பரிசீலனை செய்ய வேண்டும்.. 

தின மலர் பேப்பரில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முழுப்பக்கமும்  ஃபேஸ் புக், ட்விடர் கமெண்ட்ஸ்க்கு ஒதுக்குகின்றனர்... அவர்கள் பேப்பரை அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை.. சன்மானமாவது அனுப்ப வேண்டும்..தினமலரில் ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு தருவதால் ட்வீட்க்கு ரூ 250 தாராளமாக தரலாம்.

மல்லிகை மகள்  எனும் பெண்கள் மாத இதழை நண்பர்  திரு ம கா சிவஞானம் நடத்துகிறார்.. அவர் வலைப்பூவும் வைத்துள்ளார்...  அவர் தன் பத்திரிக்கையில் வரும் ஜோக்கிற்கு ரூ 50 பரிசு தருகிறார்.. அவர் அந்த இதழில் ட்விட்ஸ் க்கு ஒரு பக்கம் ஒதுக்குகிறார்.. அந்த புக் சேல்ஸ் குறைவு என்பதால் அவர்கள்  புக் மட்டுமாவது அனுப்பலாம்.. 

புதிய தலை முறை புக் ஆசிரியர் மாலனின் மேற்பார்வையில் நடை பெறுகிறது..ஆரம்பத்தில் 3 வாரங்கள் ட்வீட்ஸ் போட்டாங்க.. இப்போ போடறதில்லை .. ஏன்னு தெரியலை. 


இந்தியா டு டே புக்கில் ஒரே ஒரு இதழில் ட்வீட்ஸ் போட்டாங்க.. அப்புறம் போடறதில்லை.. 


பாக்யா வார இதழில் நெட்டில் இருந்து சுட்டவை என்ற டைட்டிலில் இரு வாரங்களாக ஜோக் போடறாங்க..

நிற்க.. மாறி வரும் உலகில் ட்விட்டரின் பங்களிப்பை இணைய  இணைப்பு இல்லாத மக்களிடம் கூட அதை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளின் பணி மகத்தானது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.. ஆனால் அதே சமயத்தில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானமும், பத்திரிக்கைகளை அதாவது படைப்பு வந்த புக்கை படைப்பாளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. 

அப்புறம்.. ட்விட்டர்களில் ரெகுலராக சிலரது ட்வீட்ஸ்களே மீண்டும் மீண்டும் வருகிறது.. புது முகங்களுக்கு வாய்ப்பு அதிகம் வருவதில்லை.. இதை தவிர்க்க பத்திரிக்கைகள் பிரசுரம் ஆகும் ட்வீட்ஸ்களில் பாதி பிரபல ட்வீட்டர்ஸ்.. மீதி பாதி புது முகங்களுக்கு என ஒதுக்கலாம்.. ட்விட்டரில் இருக்கும் பிரபல ட்வீட்டர்களும் அதாவது தங்களிடம் அதிக ஃபாலோயர்ஸ் உள்ள ட்வீட்டர்களும் புதுமுக ட்வீட்டர்ஸ்க்கு RT செய்து அவர்களுக்கு உதவலாம்.. 

ஆல்ரெடி பலர் பலரது ட்வீட்களை ரீ ட்வீட் செய்து கொண்டு தான் இருக்காங்க.. அதை எல்லோரும் செய்ய முற்பட வேண்டும்.. 

இப்போது நான் சொன்னது எல்லாம் சுட்டிக்காட்டலே, சொல்லிக்காட்டல் அல்ல.. எனவே பத்திரிக்கைகள் இக்கட்டுரையின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பதிவில் கமெண்ட் போடும் ட்வீட்டர் நண்பர்கள் , பதிவர்கள் தங்கள் ஆதங்கத்தை, கருத்தை த்தெரிவிக்கலாம்..