Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Thursday, April 11, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்(விகடன் விமர்சனக் குழு)

கில்மா கிளாமர், பிலோ தி பெல்ட் ஹ்யூமர்... இரண்டும் கலந்து 'டீன் மூவி’யாக ஹிட்டான இந்தி 'டெல்லி பெல்லி’யை தமிழ் 'சேட்டை’ ஆக்கியிருக்கிறார்கள்.

வில்லன் கடத்தும் வைரம் இடம் மாறிக் கைமாறுவதால் உண்டாகும் குழப்ப மேளாதான் படம். படத்தின் கிளாமருக்கு ஹன்சிகா - அஞ்சலி... ஹ்யூமருக்கு சந்தானம் இருக்கும் தைரியத்தில் கொஞ்சம் அசந்துவிட்டார்போல இயக்குநர் கண்ணன். ஆனால், இருதரப்புமே அவரைக் கை விட்டுவிட்டது.

துடிப்பும் வெடிப்பும் நிரம்பிய பரபர பத்திரிகையாளனாக இருக்க வேண்டிய ஆர்யா, 'இது யார்யா?’ என்று கேட்கவைக்கிறார். டிஸ்கொதே ஹால் பவுன்ஸர் போல ஆர்ம்ஸ் காட்டிக்கொண்டு, உர்ர்ர்என்று முறைத்துக்கொண்டே இருக்கிறார். அட... ரொமான்ஸின்போதும் அதே முறைப்புதானா?  
படத்தின் எனர்ஜி மீட்டர் சந்தானம்தான். 

ஆனால், 'கக்கா காமெடி’ சமயம் அவரே அந்த ஃபியூஸைப் பிடுங்கிவிடுகிறார். 'பாதாள சாக்கடைக்கு ஜன்னல், கதவு வெச்சா மாதிரி ஒரு வீடு’, 'நக்மாவை கரெக்ட் பண்ண ரஜினி வைரத்தைத் திருப்பிக் கொடுப்பார்’ போன்ற மிகச் சில ஒன் லைனர்களில் கலகலக்கவைக்கிறது சந்தானத்தின் காமெடி வசனம். 

ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார் பிரேம்ஜி. பர்தா அணிந்துகொண்டு முகத்தைக் காட்டாமல் தண்ணீர் குடிப்பது ஒரு கிச்சு கிச்சு சாம்பிள். ஹன்சிகா... வழக்கம்போல பப்ளி பப்பாளி. எந்த ஸ்கோப்பும் இல்லாமல் அஞ்சலி. அவரும் அலட்டிக்கொள்ளவே இல்லை!


புரட்சி ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்படும் ஆர்யா, அத்தனை கோக்குமாக்குத் தில்லாலங்கடிகளில் ஈடு படுகிறாராம். ஹன்சிகா அப்பா மேல் இருக்கும் கோபம் காரணமாக, ஹன்சிகாவுடனான காதலையே விட்டுக்கொடுக்கிறாராம் ஆர்யா. 

ஒரு சந்திப்பு, சில பார்வைகளிலேயே ஆர்யாவை அஞ்சலி காதலிக்கத் துவங்கிவிடுகிறாராம்... என்னப்பா நடக்குது நாட்ல?  
தமிழ்ப் படம் என்பதால் தவிர்க்காமல் இடம் பிடித்திருக்கும் பாடல்கள், டெட் ஸ்லோ திரைக்கதையை இன்னும் பின்னால் இழுக்கிறது. அதிலும் வில்லனின் சீரியஸ் விசாரணையின்போது வரும் 'அகலாதே’ ட்ரீம் சாங்.... சேட்டைல்ல உங்களுக்கு!

நியூலைன் சினிமாவாக இளசுகளை ஈர்த்த ஒரிஜினலின் 'சேட்டை’களை நீக்கிய பிறகு, ஜெய்சங்கர் காலத்து 'வைரக் கடத்தல்’ கதைக்கு இத்தனை பில்ட்அப்பா?

அட போங்கப்பா!

நன்றி - ஆனந்த விகடன்

Saturday, April 06, 2013

அழகன் அழகி - சினிமா விமர்சனம் ( மாற்றான் தோட்டத்து மல்லிகை )

 
தினமலர் விமர்சனம்


"ஒரு கல்லூரியின் கதை", "மாத்தியோசி" என இரண்டு படங்களை இயக்கி பந்தா ஓ... சாரி நந்தா பெரியசாமி, மாத்தி யோசிக்காமல் எடுத்திருக்கும் மற்றும் ஒரு படம் தான் "அழகன் அழகி!"

உங்கள் கையெழுத்தை ஆட்டோகிராப்பாக மாற்றுங்கள் எனும் தாரக மந்திரத்துடன் ஊரில் ஆடு மாடு மேய்ப்பவரில் தொடங்கி அனைத்து தரப்பினரையும் ஆக்டர் (அதாங்க நடிகர்....) ஆக்கிவிடும் உத்தேசத்தில் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி இருப்பார் போலும் நந்தா பெரியசாமி! ஒரு திருட்டுப்பய கூட்டம், ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரில் ஊர் ஊராக போய் இளம் திறமை சாலிகளை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று பண்ணும் கலாட்டா தான் "அழகன் அழகி" கதை மொத்தமும்!

புதுமுகம் ஜாக், ஆருஷி, குண்டு ஆர்த்தி, ரவி மரியா, ஏ.வெங்கடேஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது, வருகிறது, போகிறது! நடிப்பது தான் கம்மி. ஹீ...ஹீ!!
 


கண்ணனின் இசையில் ஏழு பாடல்கள். (அதில் ஒன்றுக்கு கஸ்தூரியின் ஆட்டம் சூப்பர்ப்!) பாடல்கள் தான் படத்தின் ஆறுதல்! இந்தப்படத்தின் படக்காட்சிகளுக்கு சிகரெட் பிடிக்க போகிறவர்கள், பாடல் காட்சிகளுக்கு சீட்டில் கட்டிப் போட்ட மாதிரி அமர்ந்திருக்கின்றனர் என்றால் பாருங்களேன்...! கண்ணனின் இசை மாதிரியே, பிரபு தயாளின் ஒளிப்பதிவும் ப்ளஸ்!

அழகன் அழகி படத்தின் இண்டர்வெல்லிலேயே முதலில் இப்படத்தின் இயக்குனரது கையெழுத்து ஆட்டோகிராப் ஆகட்டும், அப்புறம் நம்ம கையெழுத்து, தலையெழுத்தை பார்க்கலாம்... என எஸ் ஆகும் கூட்டம் எக்கச்சக்கம்!

அதையும் மீறி படம் பார்க்கும் ரசிகர்கள் "அழகன் அழகி" - "அவதி அவதி" என புலம்புவது உங்களுக்கும் கேட்டிருக்குமே...?!

‌மொத்தத்தில், "அழகன் அழகி" - "அவஸ்தை அவதி!!"
thanx - dinamalar
 

Friday, April 05, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு பத்திரிக்கைல பணி ஆற்றுபவர். அவருக்கு எங்கிருந்தோ ஒரு கோடீஸ்வரக்காதலி வலியனா வந்து மாட்டுது. ( நமக்கு டொக்கு ஃபிகர் கூட மாட்றதில்லை) அந்த உத்தமக்காதலி அடிக்கடி ஹீரோவைத்தள்ளிட்டுப்போய் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா?ன்னு பூடகமா கேட்குது ( இதை விட ஓப்பனா யாரும் கேட்கவே முடியாது ) ஹீரோ கேரக்டர் கேனக்கிறுக்கு கேரக்டர் போல . அதெல்லாம் முடியாதுங்கறார். இது ஒரு டிராக்ல ஓடுது.

ஹீரோவை அதே லைன்ல அதாவது பிரஸ் ரிப்போர்ட்டர் ஃபிகர் தானா ஒன் சைடா லவ் பண்ணுது . அவரோட 2 சைடும் நல்லா இருந்தும் ஹீரோ கண்டுக்கலை. அவ்ளவ் உத்தமனா? அடேங்கப்பா . கேரக்டரை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம். எம் ஜி ஆர் கூட இவ்ளவ் கண்ணியம் காத்ததில்லை , அப்பப்ப ஹீரோயினைத்தடவிட்டு கடைசில தங்கச்சி மறந்துடும்பாரு  .

மேலே சொன்ன 2 லவ்வும் அப்பப்ப ஊறுகாய் மாதிரி , மெயின் கதை என்னான்னா ஒரு கடத்தல் கும்பல் வைரக்கற்கள் கொண்ட ஒரு பொம்மையைக்கை மாத்துது, அது தவறுதலா ஹீரோயின் கிட்டே மாட்டி ஹீரோ கிட்டே போய் அவரோட 2 நண்பர்கள் கிட்டே போய் ... என்ன தலை சுத்துதா? திரைக்கதையும் அப்டித்தான்... 






ஆர்யா தான் ஹீரோ. நிஜ வாழ்வில் நயன் தாராவும் த்ரிஷாவும் இவருக்காக அடிச்சுக்கிட்டதா காத்து வாக்கில் ஒரு செய்தி உண்டு . கதைல அதை அப்டியே நாசூக்கா சொல்லி இருக்காங்க.. புக் பண்ணூம்போதே இது ஒரு மொக்கைக்காமெடி ஃபிலிம் , ஆல்ரெடி ஹிந்தில ஹிட் ஆன  படத்தின் ரீ மேக் தான், நீங்க சும்மா வந்துட்டுப்போனா போதும்னு சொல்லி இருப்பாங்க போல , மனுஷர் அதிகமா அலட்டிக்கலை . வந்தவரை ஓக்கே 



ஹீரோயின் நெம்பர் ஒன் ஹன்சிகா .கொழுக் மொழுக் கன்னம் ( கன்னம் மட்டுமா ... ) ஹீரோவுக்கே படத்துல வேலை இல்லாதப்போ இவருக்கு மட்டும் என்ன கவர்மெண்ட் ஜாப்பா இருக்கப்போகுது , ஒரு டூயட் , 3 கட்டிப்பிடி சீன் அவ்ளவ் தான் .இவர் அப்பப்ப குஷ்பூ மாதிரி மேனரிசம் காட்டுவது , சிரிப்பது  எல்லாம் ஓவர் , ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சுந்தர் சி வந்து டொக் டொக் -னு கதவை தட்டப்போறார் , கபர்தார் 


 ஹீரோயின் நெம்பர் 2 அஞ்சலி , இவர் கழுத்துக்குக்கீழே நமிதாவுக்கு சவால் விடும் அளவு வளர்ச்சி அடைவது கூடத்தேவலை, கழுத்துக்கு மேலே குறிப்பா கன்னங்கள் 2 ம் கேப்டன் கன்னத்துக்கே சவால் விடும்படி பீர் சாப்பிட்டு வீங்கிப்போய் கிடக்கு , பார்க்க சகிக்கலை . அஞ்சலி ரசிகர்கள் மன்னிக்க 


ஹன்சிகா , அஞ்சலி 2 பேர்ல யார் அதிக திறமையைக்காட்டி இருக்காங்கன்னு பார்த்தா சந்தேகமே இல்லாம ஹன்சிகாதான் . குறிப்பா அவர் பீச் ல குளிச்சுட்டு கும்மாளம் இடும்போது  ஆஹா! பிரமாதமா திறமை காட்டி இருக்கார். இதுக்கு ஏதாவது அவார்டு உண்டா ? தெரில 



 சந்தானம் படத்தின் முதுகெலும்பு . இவரோட பிளஸ் பாயிண்ட்டே அப்பப்ப டைமிங்கா கவுண்ட்டர் டயலாக் அடிப்பதுதான். அவரையும் வயித்தால போற பேஷண்ட் ஆக்கி வடிவேல் ரேஞ்சுக்கு இறக்கி விட்டுட்டா எப்டி? இயக்குநர் அங்கே தான் சந்தானத்தின் கேரக்டரைசேஷன் ல சறுக்கிட்டார்,. அதையும் மீறி சந்தானம் 6 இடத்துல கவுண்ட்டர் டயலாக் அடிச்சு  அது போக 19 மொக்கை ஜோக்ஸ் வழங்கி இருக்கார். 



பிரேம் ஜி.. சப்போர்ட்டிங்க் காமெடி . சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க , இவர் வரும் காட்சிகள் மகா எரிச்சல் . அவருக்கு தனி டூயட் வேற , க்ளோசப் ல அவர் வாயை ஏன் அப்டி காட்றாங்கன்னு தெரியல.. அவர் ஆளும் தலையும் .. முடியல (நடிகர்  செந்தில் கேரக்டர் மாதிரி ட்ரை பண்றாரோ? )

 நாசர் தான் வில்லன் . அங்கங்கே கிச்சு கிச்சு 


இசை தமன் . 2 பாட்டு தேறுது , பின்னணி இசை சுமார் . ஒளிப்பதிவும் சராசரி 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இந்தப்படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் வாங்குனது. சென்சாரே அப்டி கொடுத்தாக்கூட இவங்க ஏ தான் வேணும்னு கேட்டு வாங்கி இருக்கனும், அப்டி இருக்கு பல காட்சிகள்



2. ஹன்சிகா , அஞ்சலி என 2 முன்னணி ஹீரோயின்சை புக் பண்ணி  முடிஞ்சவரை அவங்க திறமையை வெளிக்கொணர பாடுபட்டது 



3. சி செண்ட்டர் ரசிகர்களை சிரிக்க வைக்கும் மொக்கைக்காமெடி டயலாக்ஸ் 


4. ஹீரோயின் ஹன்சிகா குட்டைப்பாவாடை அல்லது மிடி மாதிரி ஏதோ ஒரு கர்ச்சீப்பை அணிந்து வரும் காட்சிகளில் எல்லாம் கேமராமேன் கவுரவம் பார்க்காமல் தரையோடு தரையாக படுத்து ஜூம் செய்தது , குறிப்பா அந்த பீச் காட்சி.. 





இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோயின் கோடீஸ்வரி. அவர் ம் என சொன்னா 100 கோடி கூட கிடைக்கும், ஆனா லூஸ் வில்லன் அவளைக்கடத்தி வெச்சுட்டு கேவலம்  1 3/4 கோடிக்காக வைரத்தை பேசிட்டு இருக்காரு . 


2. ஹீரோ ஹீரோயினை தடவறாரு , கிஸ் பண்றாரு மேட்டர் தவிர எல்லாமே பண்றாரு, ஆனா “ எனக்கு இவ செட் ஆக மாட்டா. சரி வராது என டயலாக் பேசி லவ்வையே கேவலப்படுத்தறாரு


3. ஆர்யா , அஞ்சலி 2 பேரும் வரும்போது சம்பந்தமே இல்லாம ஹன்சிகா முன்னால  “ ஆமா , நான் அவளை கிஸ் பண்ணேன்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காரே? ஆர்யா, உங்களைக்கேட்டாங்களா முருகேசா? 


4. எம் ஜி ஆர் , சிவாஜி காலத்துல ஆள் மாறாட்ட,ம் நடந்தது ,  வைரம் ஆள் மாறி டெலிவரின்னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருந்துச்சு , டெக்னாலஜி வளர்ந்த இந்தக்காலத்துல யார் கிட்டே வைரம் தரனும்னு ஒரு ஃபோட்டோக்கூடவா இருக்காது . கன்ஃபர்மேஷன் ஃபோன்ல பண்ணிக்க மாட்டாங்களா? 



5. ஆர்யா , ஹன்சிகா கூட கில்மா பண்ண பிள்ளையார் சுழி போடும்போது ( பிள்ளையார் மன்னிக்க ) அஞ்சலி கிட்டே இருந்து ஃபோன். அவர் சக ஊழியை மட்டுமே , அர்ஜெண்ட் மேட்டர் வா அப்டினு சொன்னதும் இவர் ஏன் கிளம்பனும்? 5 நிமிஷம் தானே ஆகும் ,மேட்டரை முடிச்சுட்டு போய் இருக்கலாம். அந்த சீன்ல ஹன்சிகா சீறுவார்னு பார்த்தா கண்டுக்கவே இல்லை 


6. எதுக்கு அவசரமா வரச்சொன்னேன்னு கேட்டதுக்கு அஞ்சலி கூலா ஜஸ்ட் சரக்கு அடிக்க  அப்டிங்கறார். முடியல 


7. காதலி தன்னை விட வசதின்னு த்தெரிஞ்சு தானே ஹீரோ லவ்வறாரு . சரி வராதுன்னு சொல்றவர் ஹீரோயின் கொடுத்த காரை மட்டும் ஒனத்தியா வாங்கிக்கிட்டது எப்டி? 


8. நெம்பர் டூ போறது யதார்த்தம் தான், எல்லாரும் டெயிலி போறதுதான் , அதுக்காக காமெடிங்கற பேர்ல இப்டி இறங்கி வரனுமா? நாளைக்கே சரி வேணாம், அடுத்த வாரமே இந்தப்படத்தை டி வி ல போடறப்போ சாப்டுட்டே யாராவது படம் பார்த்தா குமட்டாதா? 



9. சந்தானம் கேரக்டர் நாய் நக்ஸ் ( நக்கி ) அப்டினு வெச்சது நாய் நக்ஸ் நக்கீரன் என்ற வலைப்பூ ஓனர் மனசுல வெச்சுத்தான். டைட்டில் கர்டுல அவருக்கு நன்றியே போடலையே? பத்திரிக்கைப்பேட்டில மட்டும் அதை ஒத்துக்கிட்டவர் டைட்டில்ல் ஏன் அங்கீகாரம் தர்லை ?


10. இந்தப்படத்தின் பின்னணி இசை பல இடங்களில் நாடக் எஃபக்ட் . 


11. எக்சாம் ஹால் ல ஃபோன் பேசலாமா? 






மனம் கவர்ந்த வசனங்கள்

1. மல்லிகா அபார்ட்மென்ட்ல பிராத்தல் நடக்குது சார்.


நாடு எங்கேய்யா போய்ட்டு இருக்கு? 


அங்கே தான் போய்ட்டு இருக்கு



2. வீட்டுக்குள்ளே குப்பைத்தொட்டி வெச்சுப்பார்த்திருக்கேன், ஆனா  ஒரு வீடே குப்பைத்தொட்டி ஆகி இப்போதான் பார்க்கறேன் 



3. பாதாளச்சாக்கடைக்கு கதவு , ஜன்னல் வெச்சது மாதிரி ஒரு வீடு ./


4. ட்ரிங்க் ட்ரிங்க் 


 என்ன சத்தம் அது? 


 10 நிமிஷத்துக்கு முன்னே நீ காலிங்க் பெல் அடிச்சியே , அதுதான் , கொஞ்சம் லேட் பிக்கப் , ஹி ஹி 



5. வெங்கட் எனும் பேரை வெங்க்கின்னு கூப்பிடறதில்லை? அது மாதிரி நாய் நக்ஸ்ங்கற பேரை சுருக்கி நக்கி ஆக்கிட்டேன், எப்டி? 



6. டியர் , உங்களுக்காக புது சர்ட் வாங்கி வெச்சிருக்கேன் 


 எப்டியும் கழட்டத்தானே போறோம்? எதுக்கு இது? ( சுத்தம் ) 


7. டேய் , கிசு கிசு எழுதுற எனக்கே கூச்சமா இருக்கு, என்னடா பண்றே அவளை ?


8.  டேய் , உன் ஆளுக்கு தங்கச்சி இருக்கான்னு கேட்டு சொல்லுடா, கரெக்ட் பண்ணிடலாம் 


 ஒரிஜினல் இருக்கும்போது ஜெராக்ஸ்க்கு ஏன் ஆசைப்படறே? அவளையே எடுத்துக்கோ ( உலகத்துல எந்த உண்மைக்காதலனும் இப்டி உளற மாட்டான் )  


 என்னமோ காபித்தூள் எடுத்துக்கோங்கற மாதிரி அசால்ட்டா சொல்றானே? 



9. ஹாய் , மரத்தடி மாலாவா? 


 ஆமா, அன்னைக்கு ஷூட் எடுத்தீங்களே? வரவே  இல்லை?

 தொப்புளைக்காட்டி போஸ் குடுனு சொன்னேன்


 ஏண்டா , சமையல் குறிப்புக்கு எதுக்கு தொப்புளைக்காட்டனும்?

 இப்பவெல்லாம் யார்டா புக் படிக்கறாங்க ? சும்மா பார்க்கறதுக்குத்தானே? ( டைம் பாஸ் விகடனை நக்கலிங்க்? )


10.  ஒண்ணும் இல்லை, இங்க்லீஷ் பேப்பர் கிலோ 8 ரூபாய்க்கு விக்குதுங்கற திமிர்ல பேசறாங்க


11.  என்ன தமிழ் பேசறா? அவளை எல்லாம் தமிழ் கற்பழிப்பு வழக்குல உள்ளே போடனும் 



12. மாமி, என்னாதிது? வாழைப்பழத்தை ஆபரேஷன்  பண்ணிட்டு இருக்கேள்? ( டபுள் மீனிங்க் ) 



13.  தம்பி! என்ன பண்றேள்?

 சாப்டுண்டு இருக்கேன்

 அதான், சாப்பாட்டுக்கு என்ன பண்றேள்னு கேட்டேன்



14.  பக் வீட் ஆண்ட்டி - அவர் என்ன செஞ்சாலும் சூப்பரா இருக்கும் சேட்டா சேட்டாதான் 


இப்டியே போனா அங்கிளுக்கு டாட்டாதான் 




15. ஒட்டுத்துணில தெச்ச தலகாணி மாதிரி  உனக்கு ஒரு உடம்பு .அப்டி இருந்தும் ஜிம் பாடி மாதிரி எதுக்கு பில்டப்?



16.  மனோ பாலா - பரதம் கறது ஒரு கலை. அவங்க என்னதான் குச்சி வெச்சுக்குத்துனாலும் நீங்க நாட்டியத்துல கவனமா இருக்கனும் ( டபுள் மீனிங்க் )


17.  உன் கிட்டே 2 முக்கியமான விஷயம் பேசனும் 

 நானும் காலைல இருந்து  2 விஷயமாத்தான் போய்ட்டு இருக்கேன் 



18.  ஒரு பட்டாம்பூச்சியை ஒரு கரப்பான் பூச்சி  எப்டி கட்டிப்பிடிக்குது பாருங்க 


19.  டேய் , உனக்குக்கிடைச்சா எனக்கு கிடைச்ச மாதிரி டா


 என்னாது ?

சந்தோஷம் தான் . காதலின்னு பயந்துட்டியா?


20. முக்கியமான ஒரு வேலையை பாதிலயே விட்டுட்டு வந்திருக்கேன் ஹி ஹி 



21. ஒர்க்கிங்க் டைம்ல நான் தண்ணி அடிக்கறதில்லைங்க 


இப்போ நாம ஒர்க் பண்றோம்னு யார் சொன்னது? ரிலாக்ஸ் மேன் 



22.  நாசர் அடியாளிடம் - ஏண்டா , கல்யாண வீட்டுக்கா வந்திருக்கோம்? உக்காந்து சாப்டுட்டு இருக்கே? 



23.  என்னங்க ? போஸ்ட்ல என்ன? 


 முருகர் விபூதி தபால் ல வந்திருக்கு 


 அதை எடுத்துட்டு  ஏன் பாத்ரூம் போறீங்க ?

 குளிச்சுட்டு பூசிக்கத்தான் 


 நீங்க தான் ஆல்ரெடி குளிச்சுட்டீங்க்ளே? 


 சோப் போட மறந்துட்டேன் 


24.  லவ்ங்கறது கனவு மாதிரி, மேரேஜ்ங்கறது அலாரம் மாதிரி, அலாரம் அடிச்சதும்  கனவை கலைச்சிடனும்


25. என்னதான் டேஸ்ட்டா இருந்தாலும் பபிள்கம்மை ஒரு கட்டத்துல துப்பித்தான் ஆகனும், அது மாதிரி தான் பழைய லவ்வும் 



26. மனசுக்குப்பிடிச்சவங்க கிட்டே லவ்வைப்பிரப்போஸ் பண்றதை  விடப்பெரிய வேலை இந்த உலகத்துல எதுவும்  இல்லை # சேட்டை


27. இதை ஏன் என் கிட்டே முன்னாலயே சொல்லலை?

 நீங்க கேட்கவே இல்லையே?



28.  அது ஏன் சார் உங்க மண்டையை டேபிள் ஃபேன் மாதிரி ஸ்லோவா திருப்பறீங்க? 



29/ இவர் யாரு? பார்க்க பயங்கரமா இருக்காரே? 


 மூஞ்சி கழுவின பிறகு பாருங்க. இன்னும் பயங்கரமா இருப்பான் 


30. நீ நல்ல வழி ல   செலவு பண்ணு , இல்லை நாகர் கோயில் வழில செலவு பண்ணு  அதைப்பத்தி எனக்குக்கவலை இல்லை 


31. தப்பு பண்றவங்க எல்லாம் நம்ம பேப்பரைப்பார்த்து பயப்படனும்


 அப்போ நாம தான் முதல்ல பயப்படனும் 



32. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு , நம்ம தமிழ்க்கலாச்சாரம் ஒத்துக்காது 


 ஹன்சிகா - இச் .. இப்போ?

 ஐ டோண்ட் நோ தமிழ் யா 



33.  நான் என்ன பிராண்ட் ஜட்டி போடனும்கறதைக்கூட உங்கப்பா தான் முடிவு பண்ணுவாரா? 



34. இந்த மாதிரி சோகக்கதைக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்

 சரி வேற ஒரு காமெடிக்கதை இருக்கு, சொல்லவா? 



35. முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி , உங்க வீட்ல நெம்பர் டூ போய்ட்டேன் சாரி 


 36 ஓடி வந்த வேகத்துக்கு களைப்பாற 2 பேரும் ஜூஸ் குடிக்கறிங்க போல ஓ இதான் முத்தமா? 


37 . திடீர்னு கண்ணாடில உன் ஃபேஸ்க்குப்பதிலா வேற ஒரு ஃபேஸ் இருந்தா உனக்கு எப்டி இருக்கும் ? 

 அடடே, அழகா இருக்கே அப்டினு 





எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 



 குமுதம் ரேங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் 2 / 5 


சி பி கமெண்ட் - ரொம்ப மொக்கை கிடையாது. டைம் பாஸ் ஆகும். எவனாவது இளிச்சவாயன் ஓ சி ல கூட்டிட்டுப்போனா பார்க்கலாம், சொந்தக்காசை செலவு பண்ணிப்போற அளவு படம் ஒர்த் இல்லை .


 

Thursday, April 04, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


கதையை நம்பாமல் காமெடியை மட்டுமே நம்பும் சமீப காலத் தமிழ் சினிமா டிரெண்டின் இந்த வார கோட்டா 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’!


வேலைவெட்டி இல்லாத விமலுக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் அரசியல்வாதி ஆக ஆசை. அப்பாக்களே பிரிக்க முடியாத இருவரின் நட்பை, காதல் பிரிக்கிறது. அரசியலிலும் காதலிலும் ஜெயிக்க மீண்டும் கைகோக்கும் நண்பர்கள், இரண்டிலும் ஜெயித்தார்களா என்பது... சற்றே நீளமான காமெடிக் கதை!  


'பசங்க’, 'மெரினா’ படங்களின் இயக்குநர் என்ற எதிர்பார்ப்பைப் படத்தின் ஐந்தாவது நிமிடத்தில் வரும் 'ஒரு பொறம்போக்கு’ பாடலே அடித்துக் காலி செய்துவிடுகிறது. கதை, திரைக்கதைக்கெல்லாம் கொஞ்சமும் அலட் டிக்கொள்ளவில்லை இயக்குநர் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன், விமல், பரோட்டா சூரி மூவரின் ஸ்டாண்ட்-அப், ரைமிங் டைமிங் காமெடி படத்தைக் காப்பாற்றிவிடும் என்று நம்பியிருக்கிறார்.


குறும்பு பாடி- லாங்குவேஜ், கேலி வசன உச்சரிப்பு, அடிக்கடி மிமிக்ரி என 'பட்டை’ முருகனாகப் பட்டை கிளப்புகிறார் சிவகார்த்திகேயன். 'உங்க அப்பா வர்ற நேரம் வந்திருச்சா... அப்போ நான் கிளம்புற நேரம் வந்திருச்சு’, 'கடத்திட்டுப் போய் அடிச்சா பரவாயில்லை... தலையிலேயே கொட்டுனாங்க’ என்று காதலுக்காக மிரளும் இடமெல்லாம் லகலகக்கவைக்கிறார். பிந்து மாதவியிடம் அடி வாங்கும் அம்மாஞ்சி கைப்புள்ளயாக விமல்.



'வெட்டி ஆபீஸர்’களைக் காதலிக்கும் இலக்கணம் மீறாத ஹீரோயின்கள் பிந்து மாதவி, ரெஜினா. திருத்தமான அழகுடன் ஹீரோக்களைத் திருத்த முயற்சிக்கிறார்கள்.


தண்டச்சோறு மருமகனாக சூரி. வில்லன்களிடம் அடிவாங்கும்போது, 'என் பொண்டாட்டியை விடவா நீங்க அடிச்சிரப்போறீங்க?’ என்று கெத்து காட்டுவதும், 'சீரியஸாப் பேசிட்டு இருக்கும்போது நீ மட்டும் குடிக்காதே... நல்லா இல்லை’ என்று நண்பனை வாருவதுமாக இரண்டு ஹீரோக்களுக்கும் ஈடு கொடுத்துக் கலகலக்கிறார்.  

கதைக் களத்தை மீறாமல் திருச்சியின் இயல்பை இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறது விஜயின் கேமரா. யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'கொஞ்சும் கிளி...’, 'பொறம்போக்கு...’ பாடல்கள் 'கேட்கலாம்’ ரகம்.



இரண்டரை மணி நேரப் படத்தில் கடைசி 15 நிமிடத்தில் கருத்து சொல்லும் படலம். அப்பாக்களின் வலியை டெல்லி கணேஷ் பிரமாதமாகச் சொன்னாலும், அதற்கு முந்தைய காட்சி வரை அவரை காமெடி பீஸாகக் கலாய்த்திருப்பதால், நெகிழவைக்காமல் நெளியவைக்கின்றன அந்த அறிவுரைகள்!


காமெடிக் கேடி கிச்சுகிச்சுக் கில்லாடியை முன்னிலைப்படுத்தியதில், 'இயக்குநர்’ பாண்டிராஜைத்தான் இதில் காணவில்லை!


thanx- விகடன் விமர்சனக் குழு

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


சென்னையின் நான்கு முனை சந்திப்பு ஒன்றில் நடக்கும் விபத்து, யார் யாருடைய வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது என்பதே... 'சென்னையில் ஒரு நாள்!’

சென்னையில் மூளைச் சாவு அடைந்த ஹிதேந்திரனின் இதயம் சில நிமிடங்களில் தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேருக்கு அசுர வேகத்தில் கொண்டுசெல்லப்பட்டு, சிறுமி அபிராமிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.


 அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு மலையாளத்தில் வெளியான 'டிராஃபிக்’ படத்தின் தமிழ் ரீமேக், 'சென்னையில் ஒரு நாள்’. பதற்றத்தில் கார் ஓட்டும் அக்ஷரா, முதல் நாள் வேலை உற்சாக சச்சின், துரோகத்தால் பொருமும் பிரசன்னா, பணியிடை நீக்கத்துக்குப் பிறகு மீண்டும் வேலையில் சேரும் சேரன், மகளைப் பார்க்க மருத்துவமனை விரையும் நடிகர் பிரகாஷ்ராஜ், கெடுபிடி கமிஷனர் சரத்குமார் என எக்கச்சக்கப் பாத்திரங்களைக் கச்சிதமாகத் திரைக்கதைக்குள் பின்னிய வகையில் இயக்குநர் ஷஹீத் அசத்துகிறார்.  

சச்சின் (அறிமுகம்) - பார்வதி, பிரசன்னா - இனியா என ஜூனியர் ஜோடிகளுக்கு சின்ன ரோல்தான். ஆனாலும் அசரடிக் கிறார்கள். சீனியர் ஜோடிகள் பிரகாஷ்ராஜ் - ராதிகா, ஜெயப்பிரகாஷ் - லட்சுமி ராமகிருஷ்ணன், சேரன் - மல்லிகா... பாத்திரங்களுக்கு மிகவும் பாந்தமாகப் பொருந்துகிறார்கள்


.

ஒரு பேட்டியில், 'எனக்கு எல்லாமே என் குடும்பம்தான்!’ என்று பந்தா செய்யும் 'ஷைனிங் ஸ்டார்’ பிரகாஷ்ராஜிடம், 'உங்க மகளுக்குப் பிடிச்ச டீச்சர் யார்?’ என்று கேட்கப்பட, 'கட்’ சொல்லி 'டச்-அப்’ என்று நேரம் வாங்கி, மகளிடம் டீச்சர் பெயர் கேட்டுப் பிறகு சமாளிக்கும் இடத்தில்... பிரகாஷ்ராஜ் செம செம. மருத்துவமனையில் இருந்து வந்த அலைபேசி அழைப்பிலேயே செய்தி உணர்ந்து, லஷ்மி ராமகிருஷ்ணனும் ஜெயப்பிரகாஷ§ம் கலங்குமிடம்... கலக்கம்! அதிகம் பேசாமல், முதுகு காட்டி விம்மி அழாமல் ஸ்கோர் செய்கிறார் சேரன்.


'ஒவ்வொரு நாளும் நமக்காக என்ன ஆச்சர்யங்கள் வெச்சிருக்குனு நமக்குத் தெரியாது’, 'என்னால முடியுமா... முடியாதான்னு தெரியாத ஒரு வேலை!’, 'படத்தோட பப்ளிசிட்டிக்கு என் பேர் இருக்கே... போதாதா?’ என எளிமையாக வசீகரிக்கும் அஜயன் பாலாவின் வசனம் படத்தின் பெரும் பலம். சந்துபொந்துகளுக்குள் வளைந்து நெளிந்து சென்று டென்ஷன் கிளப்பும் ஷஹநாத் ஜலாலின் ஒளிப்பதிவு விறுவிறு.


'பருவநிலை சரியில்லை’ என்று ஹெலிகாப்டரில் பயணிக்க முடியாது என்கிறார்கள். ஆனால், மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே வெயில் வெளுத்துக்கட்டுகிறதே? அதைவிடச் சிறந்த பருவநிலை வேண்டுமா என்ன? அத்தனை நவீன வசதிகள் நிரம்பிய கட்டுப்பாட்டு அறையெல்லாம் வைத்திருப்பவர்கள், சேரன் பயணிக்கும் காரில் சிம்பிளாக ஒரு ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தியிருக்க மாட்டார்களா என்ன?



திகுதிகு திரைக்கதையில் ஜிந்தா காலனி, சூர்யா ரசிகர்கள் எல்லாம் செட்டப் டிராமா!


இருந்தாலும், 'உடல் உறுப்புத் தானம்’ என்ற நல்ல விஷயத்தை சுவாரஸ்யமாகச் சொன்னதற்காக, இந்த ஒரு நாளைக் கொண்டாடலாம்!  

thanx - vikatan

Thursday, March 28, 2013

மாந்திரீகன் - சினிமா விமர்சனம்

                                             
                                                 காலை 10.30 க்கு படம் னு அவசர அவசர மா போனா... அங்க 10.40 ஆகியும் ஆப்ரேட்டர் வரல... எத்தன மணிக்கு படம் னு விசாரிச்சா... தம்பி இது வரைக்கும் அஞ்சு பேர் தா இருக்காங்க.. 10.50 வரைக்கும் பாத்துட்டு 10 பேர் வந்தா தான் படம் னு சொன்னாங்க. எப்டியோ..காலேஜ் லீவு ங்கறதால.. பக்கத்து காலேஜ் பசங்க ஒரு அஞ்சு பேர் அப்டி இப்டி னு ஒரு 15 பேர் வந்துட்டாங்க. உடனே தியேட்டர் ல குஷி ஆகி ஒரு வழியா படம் போட்டாங்க.


                                                    2012 ல ரிலீஸ் ஆன ஜெயராம் நடிச்ச மலையாளப் பட டப்பிங் னு ரீல் போட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது.சரி படத்தோட கதைக்கு வருவோம்... பொண்ணுங்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தன் துணையை தேர்ந்தெடுக்கற உரிமை அந்த ஊர் ஜமீன் குடும்பத்துக்கு இல்ல..பெரியவங்களா பாத்து வைக்குற ஒரு பேயையோ இல்ல வில்லனையோ தான் கட்டிக்கிட்டு மாறடிக்கனும். அந்த ஊர் ஜமீன் பையனுக்கும் அதே ஊர் சாதாரண குடும்பத்த சேர்ந்த பொண்ணுக்கும் லவ் ஆகிடுது.



 எப்படியும் நம்மள சேர விடமாட்டங்கன்னு ஓடிப் போக முடிவு பண்றாங்க (உண்மையான காதலாம்......)  இது அந்த பையனோட மூணு அண்ணன்களுக்குத் தெரிஞ்சு அந்த பொண்ணு குடும்பத்த வெட்டி கொன்னுட்டு, பொண்ண .. அதாவது தாமிரபரணி படித்தில் நடித்த பானுவ.. உயிரோட கொளுத்தறாங்க... செத்தா ஒன்னா சாவோம் னு அந்த பையனும் பானுவோட சேர்ந்து ஒண்ணா எரிஞ்சு போயிடறான்.அதுல பானுவோட ஆவி மட்டும் துர் ஆத்மாவா வெறியோட பழி வாங்க அலையுது. கடைசில அது பழி வாங்குச்சா இல்லையா? ஆடியன்ஸ் இந்த படத்துக்கு வந்து எப்பிடி பலி ஆனாங்க என்பதை எந்த அளவுக்கு மொக்கையா சொல்ல முடியுமோ அந்த அளவு மொக்கயா சொல்லி இருக்கற படம் தான்  மாந்திரீகன்.

                                                       நமக்கு நல்லா தெரிஞ்ச  ஜெயராம் தான் பட ஹீரோ.தன் அப்பா மாந்திரீகன் என்பதால் அவர் அடக்கிய பேய்யை உங்களால்தான்  அடக்க முடியும் என மந்திரம் தந்திரம் தெரியாத ஜெயராமை பேயை அடக்க கூட்டி வந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகளை முழுமையாக ரசிக்க முடியாவிட்டாலும் ஜெயராம் காட்டும் எக்ஸ்பிரசன்கள் அற்புதம். அவர் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் மொக்கையைத்தான் தாங்க முடியவில்லை.



முதன் முறையாக பேயைப் பார்த்து பயப்படும் போதும், தன் காதலிக்காக மனமுருகுவதும் அவர் நடிப்பு அருமை. முகத்தில் ஆங்காங்கே தென்படும் அப்பவித்தனம் அவரது ப்ளஸ்.

                                      அடுத்து பாரட்டப்படவேண்டியவர்கள் ஹீரோயின்கள்  தாமிரபரணி பானு மற்றும் பூனம் பஜ்வா (கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர்).பேயாக வரும் பானு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஏனோ வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. முகம் நிறைய பவுடரும் மைய்யும் பூசீட்டா அதுக்கு பேர் பேயாம் (அப்படி பாத்தா ஊர்ல இருக்கற பாதி பொண்ணுங்க பேய்தான்....) . ப்ளாஷ் பேக்கில் வந்த வரை அவரது நடிப்பு ஓக்கே... பேயாக வரும்போது முகத்தை வடிவேலு போல் வாய், மூஞ்சியை கண்ட படி கோணித்து.... பயம் காட்டுவதற்கு பதில் சிரிப்பு காட்டுகிறார்.

                                             

                                                   பானு,  ஜெயராமின் காதலியான பூனம் பஜ்வா வின் உள்ளே புகுந்த பின் பூனம் பஜ்வா காட்டும் முக பாவனைகள் மிக அருமை. ஏன் முக பாவனைகளே தேவை இல்லை... அவரது கண்களே போதும்.. குட் .. நல்ல முயற்சி..அவரது அப்பாவித்தனம் கலந்த எக்ஸ்பிரஸன்கள் படத்திற்கு வலிமை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரியாஸ்கான் வந்த வரை ஓக்கே.. மற்ற கதாப்பாத்திரங்கள் ஏதும் மனதில் ஒட்டவில்லை.


 


மண்ணை கவ்விய ... ச் சீ... மனம் கவர்ந்த வசனங்கள்:

1. பேய் கிட்ட இருந்து என்னய காப்பாத்திக்கதான் நான் உங்க கிட்ட            வந்தேன்

    அதுக்கு ஏண்டா பேய் மாதிரி கத்தற?


2. ஏய்... மாந்திரீகா..... என்ன பாத்து ஏண்டா ஒடற? உன் சக்தி அவ்ளோதானா?
      
       நா உன்ன பாத்து ஓடல... உன்ன இந்த இடத்துக்கு ப்ளான் பண்ணி வர வெச்சேன்...

3. பேய் பேசும் கேவலமான ப்ஞ்ச் : 
           
               நாங்க யாரையும் கொல்ல மாட்டோம்....ஆனா வெறி வந்தா ஒருத்தர கூட உயிரோட விடமாட்டோம்... (இங்க ஆல்ரெடி எல்லார்க்கும் வெறி வந்துருச்சு)

4.ஆஆஆஆ..........ஊஊ........ஏஏஏய்ய்.... விட்ரு.... உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.(பானு 6 முறை)

5.உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.ஆஆஆஆ..........ஊஊ....... ஏஏஏய்ய்.... விட்ரு.... வேண்டாம்.... ஏஏஈஇ (பூனம் பஜ்வா 5 முறை)


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் :

1. இரண்ட ஹீரோயின்களை புக் பண்ணியது... அதிலும் தாமிரபரணி தாம்பூலம் பானு மற்றும் பூக்காடு  பூனம் பஜ்வாவை புக் செய்தது.

2. ஹீரோவாக ஜெயராமை புக் பண்ணியது.( சம்பளம் தர்லைன்னாலும் கண்டுக்க மாட்டாராம் )

3. பேய் படமாக இருந்தாலும் படத்திற்கு U சான்றிதழ் பெற்று மகளிர் அணியை கவர செய்த யுக்தி .

4. ஆரம்பத்தில் வரும் கொலையை காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

5.தமிழ் படம் போன்றும், ஹைபட்ஜெட் படம் போன்ற போஸ்டர் டிசைன்.

6. பானுவின் ப்ளாஷ்பேக் காட்சியை 3 நிமிடத்தில் முடித்தது. 

7. மந்திரம் தெரியாத ஜெயராம் பேய் ஓட்டுவதாக சமாளிக்கும் காட்சிகள்.


8.முதல் கொலை கண்ணாடி முன் பேய் கழுத்தை அறுக்கும் போது வில்லனும் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சி மிரர்ஸ் படத்தில் இருந்து சுடப்பட்டாலும்... அது வெளியில் தெரியாதவாறு சமாளித்தது.

இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. பல மந்திரங்கள் தெரிந்தவர்களே அடக்க முடியாத துர்மாத்வாவை ஒன்றும் தெரியாத ஜெயராம் பிஸ்கட் சாப்பிடுவ்து போல அடக்குகிறார்.

2. படத்தில் மூன்று வில்லன்கள்... அதாவது அண்ணண்கள்.... இருவர் முதல் காட்சியிலேயே காலி.. மூன்றாமவரையும் அப்பொழுதே போட்டிருந்தால் படம் அப்பவே முடிஞ்சிருக்குமே....

3. வில்லனைத் தவிர படம் பூரா யாரையாவது ஆவி பானு கொன்று கொண்டே இருக்கிறார்.  இதுல லாஜிக் வசனம் “எனக்கு கிடைக்காத காதல் வாழ்க்கை யாருக்கும் கிடைக்க கூடாது” னு.... படு கேவலமா இருக்கு

4.ஜெய்ராம் தன் காதலுக்காக தன் உயிரை பணயம் வைக்கிறார்... ஓக்கே.. அதுக்காக 50 நொடில எல்லா ஓலைச்சுவடியயும் படிச்சு கத்துகிட்டு அடக்கறதுலாம் ஓவர். ( எந்திரன் ரஜினிக்கே 2 நிமிஷம் ஆகும் )

5.க்ளைமேக்ஸ்தான் செம காமெடி.. ஹீரொ ஆத்மாவோட பறந்து பறந்து சண்ட போடுறார்... அத கத்தியால குத்தி இரத்தம் வர வைக்கறார்... ஆத்மாவ தொட முடியுமா? அதுக்கு உருவம் இருக்கா?

6. இசை , ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு  சுமார் ரகம். கிராப்பிக்ஸ் மகா மட்டம்.

படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு... இவ்ளோ நாள் ஓடுனதே பெரிய ஆச்சர்யம்.. அத நான் பொய் பாத்தது அத விட ஆச்சர்யம்... வெள்ளிக்கிழமை வரை ஓடுமாம்... ஏன்னா சென்னையில் ஒரு நாள் ரிலீஸ் அங்கதான் ஆகுதாம்... பெருந்துறை முருகன் தியேட்டரில் படம் பார்த்தேன்

 




டிஸ்கி - மேலே உள்ள விமர்சனத்தை உங்களுக்கு வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக் .  எடிட்டிங்க் , டைரக்சன் மேற்பார்வை மட்டும் நான் - சி பி. அட்ரா சக்க தி மு க கட்சி மாதிரி , குடும்ப உறுப்பினர்கள் யார் வேணும்னாலும்  ஆக்ரமிப்பாங்க , தமிழர்கள் அதை சகிச்சிக்கனும் ஹி ஹி , மார்ச் மாச ஒர்க் லோடு , நல்ல படங்களுக்குப்போகவே நேரம் இல்லை , குப்பைப்படத்துக்கு எங்கே போக ?


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 36 ( டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம் )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்



ரேட்டிங்க் - 2 /5

 


Monday, March 25, 2013

கந்தா - சினிமா விமர்சனம்

 
 
தினமலர் விமர்சனம்

  • நடிகர் : கரன்
  • நடிகை : மித்ரா
  • இயக்குனர் :பாபு.கே.விஸ்வநாத்

பத்திரிகையாளரும், ஆயிரம் சிறு கதைகளுக்கு மேல் எழுதிய இளம் எழுத்தாளரும், இயக்குனர் சரணின் உதவியாளருமான திருவாரூர் பாபு, பாபு கே.விஸ்வநாத் எனும் பெயரில் தமிழ் சினிமா இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் "கந்தா".

கதைப்படி, தஞ்சாவூரை சேர்ந்த படித்த இளைஞரான கரண், சில வருடங்கள் மலேசியாவிற்கு வேலைக்கு போய் கைநிறைய காசு பணத்துடன் ஊர் திரும்புகிறார். கரண் எதிர்பார்த்து திரும்பிய தஞ்சை காணாமல் போயிருக்கிறது. காரணம் தாதாயிசம்! 
 
 
 
 
 இத‌ில் கடுப்பாகும் கரணை அவ்வப்போது அவரது பால்ய காலத்து நண்பர்கள் பக்குவமாக பேசி கட்டுப்படுத்தி வர, ஒருநாள் தனக்கு கல்வியையும், வாழ்க்கையையும் வகையாக அமைத்துக் கொடுத்த வரது வாத்தியாரைத் தேடி புறப்படுகிறார் கரண். அப்பொழுது அவர் கண் எதிரேயே வரது வாத்தியாரை அடிக்கத் துரத்துகிறது ரவுடிக்கும்பல்! 
 
 
பொறுத்தது போதும் என பொங்கி எழும் கரண், அந்த கும்பலை நையப்புடைத்து அனுப்புகிறார். அவர்கள் தஞ்சையை கலக்கும் வில்லன் போஸின் ஆட்கள்! அப்புறம் விடுமா வில்லன் கோஷ்டி...?! கரணை விடாமல் துரத்துகிறது. போலீஸ்க்கு போகும் கரணுக்கு தாதா போஸ், தன் குருநாதர் வரது வாத்தியாரின் வாரிசு என்பது தெரிய வருகிறது. படிக்க வசதி இன்றி வாடிய தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய வரது சாரின் வாரிசு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என தஞ்சையை நஞ்சாக்குவது கரணுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை!
 
 
 
 வரது சார் விரும்பும் வகையில் போஸை திருத்த முற்படுகிறார். போஸ் திருந்தினாரா? கரண் வருந்தினாரா..? எனும் வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையுடன் கரண்-மித்ரா ஜோடியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி கந்தா படம் தந்திருக்கிறார் பாபு கே.விஸ்வநாத்!

கரண், கந்தா எனும் பாத்திரத்தில் மலேசியா ரிட்டர்னாக பந்தாவாக அறிமுகமாகிறார். வில்லன்களுடன் வித்தியாசமாக மோதுகிறார். நாயகி மித்ராவுடன் விறுவிப்பாக ஆடுகிறார், என்றெல்லாம் சொல்வதற்கு ஆசை தான். ஆனால் எல்லாமே ஏற்கனவே எங்கோ பார்த்த சாயலிலேயே இருப்பது பலவீனம். ஆனாலும் அவரது வாத்தியார் - ராஜேஷின் எண்ட்ரிக்குப்பின் படத்திற்கு புதிய பலமும், புத்தம் புதிய களமும் கிடைக்கிறது! வரது வாத்தியாரின் வாரிசுதான் தஞ்சையை கலக்கும் தாதா போஸ் என்பது ட்விஸ்ட்!


கதாநாயகி மித்ரா தேய்த்து வைத்த வெள்ளி குத்துவிளக்காக வருகிறார், போகிறார். அம்மணிக்கு நடிப்பு எனும் ஜொலிப்பு மட்டும் கம்மியாக இருக்கிறது பாவம்! அவருடன் வரும் குண்டு ஆர்த்தி கடிக்கிறார். ஆர்த்தியை விட காமெடி என்ற பெயரில் அதிகம் கடிக்கின்றனர் விவேகமில்லாத நடிகரும், செல்முருகனும்! அதேநேரம் கரணின் நண்பராக வரும் சத்யனை இந்தப்படத்தில் சகித்துக் கொள்ள முடிவது ஆறுதல்!

போலீஸ் அதிகாரி ரியாஸ்கான், அரசியல்வாதி காதல் தண்டபாணி உள்ளிட்டோர் கந்தாவுக்கு பலம்! அதேநேரம் இந்தப்படத்திலும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரான ரியாஸ்கான், தன் மகனுக்கு வரதராஜன் என தன் பள்ளி ஆசிரியரின் (கரண் மாதிரி ரியாஸ்க்கும் ராஜேஷ் தான் ஆசிரியர்) பெயரை சூட்டியிருப்பது டிராமாவாகத் தெரிவதும் மாதிரியே, க்ளைமாக்ஸில் வில்லனுக்கு சுதந்திரதினமன்று காந்தி வேஷம் கட்டி போலீஸிடமிருந்து அவரை காப்பாற்ற போராடும் கரணின் சாதுர்யமும் புதுமை என்றாலும் நாடகத்தன்மையாக இருப்பது கந்தாவின் பலவீனம்!

ஆக மொத்தத்தில், சக்தி ஆர்.செல்வாவின் இனிய இசை, சிவக்குமாரின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் பாபு கே.விஸ்வநாத்தின் எழுத்து - இயக்கத்தில், "கந்தா" பாதி "பந்தா!" மீதி...?!!
 
 
 

Wednesday, March 20, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரோ , இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ இதுவரை சொல்லத்துணியாத  கதைக்களம் , பிரம்மாண்டத்தின் பிரதி பிம்பம் ஷங்கரோ, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் மணிரத்னமோ இனிமேலும் சொல்லி விட முடியாத விளிம்பு நிலை மனிதர்களின் துயரக்கதையை  ஏ , பி சி என எல்லா நிலை மக்களையும் மனம் கனக்கும் வகையில் சொல்லி விட பாலாவைத்தவிர தமிழ் சினிமாவில் யாரால் சொல்லி விட முடியும்?  வெல்டன் பாலா .தமிழ் சினிமாவின்  முக்கியமான படைப்பு இது .

இழவு சேதியை வீடு வீடாக தண்டோரா கொட்டி சொல்லும் ஒட்டுபொறுக்கி என்னும் கேரக்டர் ஹீரோவுக்கு.1936 -ல் நடந்த தேயிலைத்தொழிலாளர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாய் வேலை செய்த கொடூரத்தை எந்த ஒப்பனையோ, சமரசமோ செய்யாமல் ரத்தமும் , சதையுமாய் அழுகையுடன் மனதை கனக்கச்செய்யும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா இது. 


அதர்வா தான் ஹீரோ. முரளி உயிருடன் இருந்திருந்தால் ஆனந்தக்கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா எத்தனையோ படங்கள் நடிச்சும் அவரால செய்ய முடியாத , செய்ய வாய்ப்புக்கிடைக்காத கேரக்டர் தன் மகனுக்கு கிடைச்சிருக்கே? மூன்றாவது படமே முத்தான கேரக்டர்.கெட்டப்பில் எந்த உறுத்தலும் இன்றி அச்சு அசலாகப்பொருந்தி விடுகிறார். கூனிக்குறுகுவது , அடிமைத்தனத்தை பாடி லேங்குவேஜ்ஜில் காட்டுவது  என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஹீரோயின் வேதிகா. பாதிகா ஜோதிகா , மீதிகா ஸ்ரீவித்யா.அவர் காட்டும் செயற்கையான சுட்டித்தனங்கள் கதைச்சூழலுக்குள் பொருந்தாமல் தனித்து நிற்குது.ஓவர் ஆக்டிங்க். அவர் மேல் குறை சொல்லிப்பயன் இல்லை. இயக்குநரின் கவனக்குறைவு. மற்றபடி இந்த கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பது கண்கூடு .


2வது ஹீரோயின்  தன்சிகா பாத்திரப்படைப்பில் , அமைதியான ஒரிஜினாலிட்டி நடிப்பில் மனம் கவர்கிறார்.சர்வசாதாரணமாக வேதிகாவை நடிப்பில் ஓவர் டேக் செய்கிறார்.

 படத்தில் ஹீரோவின் பாட்டியாக வரும் நபர் அனைவர் மனதையும் கவர்கிறார், கூன் போட்டபடியே அவர் வேதிகாவின் அம்மாவிடம் மல்லுக்கட்டும் காட்சியில் அரங்கில் கை தட்டல் ஒலிகள்


கங்காணி கேரக்டர் , டாக்டர், அவர்  ஃபாரீன் மனைவி , வெள்ளைக்காரத்துரை , தன்ஷிகாவின் குழந்தை என நடிப்பில் முத்திரை படைத்தவர்கள் நீளும் பட்டியல்கள்


 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர்ட் டைரக்‌ஷன் அபார உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது . குடிசைகள்  அமைப்பு , சாப்பிடும் இலை,  உட்பட நுணுக்கமான கவனிப்பில் கலை இயக்குநர் வித்தகம் செய்திருக்கிறார்



2. ஆடை வடிவமைப்பு  கனகச்சிதம் ( தேசிய விருது கிடைச்சுருக்கு). அந்தக்கால மனிதர்களின் மாறுபட்ட மேனரிசங்கள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே



3. ஓப்பனிங்க் காட்சியில் அந்த ஏரியாவையே சுற்றிக்காட்டி விடும் லாவகம்  அபாரம் ஒளிப்பதிவு கலக்கல் . கிட்டத்தட்ட பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி தான் படம் பூரா .கச்சிதமான கலரிங். ஒரு பீரியட் ஃபிலிமுக்குத்தேவையான , முக்கியமான 3 சப்போர்ட்டிங்க் 1. ஆர்ட் டைரக்ஷன்  , 2 . ஒளிப்பதிவு  3 ஆடை வடிவமைப்பு . 3ம் பாராட்டு பெறும் விதத்தில்


4. வேதிகா அதர்வாவுக்கு  ஊட்டி விடும் காட்சியும் , அப்போது அதர்வாவின் ரி ஆக்சனும் அப்ளாஸ் வாங்கும் காட்சிகள்


5. கொத்தடிமைகளாய் இருக்கும் மக்கள்  விலங்குகளைப்போல் ஏரியில் கூட்டம் கூட்டமாய் தரையில் முழங்காலிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி , ஹீரோ தப்பிப்போகும் போது பிடி பட்டு கால் நரம்பை கட் பண்ணும் காட்சி மனதில் வலி தங்கும் இடங்கள்


6. ஓ செங்காத்தே பாடல் வரிகள்  அற்புதம். பஞ்சாயத்து முன் சத்தியம் பண்ண விடாமல் சூடத்தை பாட்டியே அணைக்கும் காட்சி கல கலப்பான ஒரே இடம்


7. டாக்டரும் , அவர் மனைவியும் ஆடிப்பாடும் தெம்மாங்குப்பாட்டின் பி ஜி எம்


8. புதை குழில வந்து சிக்கிட்டியே அங்கம்மா என ஹீரோ கதறும் கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி






இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவின் பட்டப்பெயரான ஒட்டுப்பொறுக்கி என்பதை ஹீரோயின் உட்பட பலரும் கிண்டல் செய்யும் காட்சிகள்  தேவை இல்லாதது . அனுதாபத்தை வலிய வர வைப்பதற்கான  உத்தி , கிட்டத்தட்ட கலைஞரின் உண்ணாவிரத நாடகம் போல்


2. தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் தான் கதையின் மையம் . அது தொடங்கும்போதே இடை வேளை வந்துடுது . அது வரை வழக்கமான ஹீரோ , ஹீரோயின் ஊடல் , காதல் , சில்மிஷங்கள் , கில்மா என சராசரிப்படமாகத்தான் போகுது . தேவையே இல்லை . பாலா படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது சராசரிக்காட்சிகள் அல்ல..


3.அங்காடித்தெரு வின் ஓல்டெஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம் அப்டிங்கற எண்ணம் மக்கள் மனதில் தோன்றாமல் இருக்கு இந்தப்படத்தை முன்பே எடுத்திருக்கனும், ஏன்னா இதன் மூல நாவல் ஏற்கனவே எழுதி ரெடியா இருந்தது


4.  இயல்பாகவே பணிவாகவும், அடிமையாகவும் , கூனிக்குறுகி நடந்து கொள்ளும் ஹீரோ ஒரு காட்சியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகப்படுத்திருக்காரே?


5. இது ஒரு சோகப்படம், மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப்பதிவு. இதில் தேவையே இல்லாமல் தன்ஷிகா - அதர்வா  ஜோடி கேப் ல கிடா வெட்டுவாங்களா? என்ற தேவையற்ற கில்மா எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் காட்சிகள் எதற்கு?


6. கதையில் 48 நாட்களுக்குப்பிறகு என டைட்டில் போட்ட பிறகு ஹீரோ மட்டும் தாடி , தலை முடி வளர்ந்து காட்சி அளிக்கிறார், அனைத்துத்துணை நடிகர்களும் சம்மர் கட்டிங்க் கெட்டப்பில் இருப்பது எப்படி?



7. டாக்டர் , அவரோட ஃபாரீன் சம்சாரம் கொண்டாட்டப்பாட்டு தேவையற்ற திணிப்பு . பிதா மகன் படத்தில் சிம்ரன் பாட்டு வரவேற்பு பெற்றதால் அதே மாதிரி ஒரு பாட்டு இணைச்சுட்டீங்க போல .அந்தப்பாட்டில் ஃபாரீன் லேடி ;லோக்கல் லோகநாயகி போல் செம குத்தாட்ட ஸ்டெப் போடுவது எப்படி? 


8.வில்லன் வெள்ளைத்துரை தான் ஆசைப்பட்ட மேரேஜ் ஆன பெண்ணைப்பார்த்து “ கன்னிப்பெண்ணா?”னு கேட்கறார். டெயிலி டீ குடிக்கற மாதிரி பல களம் கண்ட  கயவாளிப்பையலுக்கு மேரேஜ் ஆன பொண்ணுக்கும் ,  கை படாத ரோஜாவுக்கும் ( ஆர் கே செல்வமணி மன்னிச்சு )  வித்தியாசம் தெரியாதா?


9.  அவ மேரேஜ் ஆனவ் அப்டினு தெரிஞ்சதும் கங்காணி கிட்டே “ அவ புருஷன் கூட சேராம பார்த்துக்க “ என்கிறார். அதை எப்படி பார்த்துக்க முடியும்? அதுக்கு புருஷனை விரட்டிடலாமே?



10. மேரேஜ் நடக்கும்போது ஒரு இழவு விழுவதும் அந்த சேதி ஹீரோவுக்குத்தெரிந்தால் ஊரைக்கூட்டி விடுவார் என்பதும் சுவராஸ்யம், ஆனால் காட்சிப்படுத்துதலில் அலட்சியம், நம்பும்படி இல்லை


11. கல்யாண வீட்டில் சாப்பாடு பொன்னி அரிசி மாதிரி பளிச் என்ப இருப்பது எப்படி? ( அந்தக்காலத்துல அந்த ஜனங்க அப்டியா சாப்பிட்டிருப்பாங்க? )



12. தேயிலைத்தொழிலாளர்களை பார்க்கவே பாவமா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காங்க . அவங்களைப்பார்த்தா அழுகை தான் வரும், காமம் வராது . வில்லன் காமப்பார்வை பார்க்கறான், ஒரு வாதத்துக்கு அதை ஏத்துக்கிட்டாக்கூட  டாக்டரின் ஃபாரீன் மனைவி செம கிளு கிளுவா   70 கிலோ கேரட் மாதிரி தள தளன்னு இருக்கா, அவளைக்கண்டுக்கவே இல்லையே? இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ஃபிகர் விஷயத்துல செல்லாதே...



13. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்? , இசை ஞானியை விட்டுட்டு ஜி வி பிரகாசை புக் பண்ணியதில் அவர் சொதப்பிட்டார்.


14. வேதிகா ஹீரோவுக்கு லெட்டர் போடறார், க்ளைமாக்சில் ஏன் இங்கே வந்து மாட்டுனே என புலம்பும் ஹீரோ அதை ஏன் கடிதம் எழுதி முன் கூட்டியே வார்ன் பண்ணி இருக்கக்கூடாது , இங்கே வராதே அப்டின்னு ..



மனம் கவர்ந்த நாஞ்சில் நாடன் -ன் வசனங்கள்


1. பொறந்த இடத்துலயே சாகனும்னு நினைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது தாண்டா தலை எழுத்து


2. துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் என்னைக்கும் துணை இருக்கும்



3. உள்ளூரில் காக்கா குருவி பசி ஆறுது.மனுஷக்கூட்டம் சம்பாதனைக்காக ஊர் விட்டு ஊர் மாறுதே # பரதேசி பாடல் வரி



4. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குமா சாமி?


கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு நெம்பர் 2 போறது கூட கஷ்டம் தான்

5. கண்ணாலம் ஆகாமயே அங்கம்மா கர்ப்பம் ஆகிட்டா


இவனுக்கு இடுப்புல கயிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?



6. டேய் , உனக்கு பெரியப்பா 1 தான் , பெரியம்மா எத்தனை?


 தெரியலையே? என்னைக்கேட்டா? நீயே சொல்லு

 எனக்கும் தெரியாது , எனக்கு 10 விரலும் பத்தாது ........



7/ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கற மாதிரி கனா கண்டீரோ?


8. சாமி , பொண்டாட்டியைக்கூட்டிட்டு வரலாமா?

 உன் பொண்டாட்டிதானே?



9. ஜனங்க பேசக்கூட பயந்து சாகறாங்க


10. ஊருக்குப்போய் பன்னி மேய்ச்சாலும் மேய்ப்பேனே தவிர  திரும்பவும் இங்கே வர மாட்டேன்


 



சி பி கமெண்ட் - பாலா மாதிரியான கலைப்பூர்வமான அபூர்வப்படைப்பாளிகள் வ்ணிக ரீதியிலும் வெற்றி அடையும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரதேசி -மனதை கனக்க வைக்கும் படம்-தமிழ் சினிமாவின் மைல் கல் - விகடன் மார்க் மே பி 52 ( பாலா ரசிகர்கள் 55 வரும் எனவும் பொது ரசிகர்கள் 48 டூ 50 வரும் எனவும் சொல்றாங்க . படத்தை நான் விழுப்புரம் முருகா தியேட்டர்ல 17 3 2013 சண்டே நைட் பார்த்தேன். மார்ச் இயர் எண்டிங்க் ஒர்க் என்பதால் லேட்

Friday, March 08, 2013

ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

 

எல்லா தமிழ் சினிமாக்களையும் கலாய்க்கும் எஸ் வி சேகரின் சினிமா சினிமா , ஷக்தி சிதம்பரத்தின் மகாநடிகன் , சி எஸ் அமுதனின் தமிழ்ப்படம் பாணியில் இன்னொரு படம் . முதல் பாதி ஹாலிவுட் படமான ஹேங்க் ஓவர் , பின் பாதியில் இன்று போய் நாளை வா  & கண்ணா லட்டு தின்ன ஆசையா?  அக்மார்க் உல்டா என கலந்து கட்டி மொக்கை போட்டிருக்கிறார்கள் .. உஷ் அப்பா முடியல


நண்பர்கள் 3 பேரு , திருப்தி இல்லாத மேரேஜ் லைஃப்ல இருந்து விடுபட  ஐடியா பண்றாங்க . இவங்க 3 பேருக்கும்  ஏன் மனைவி செட் ஆகலை அப்டினு தனித்தனி டிராக்ல சின்ன சின்ன கதை .அது முடிஞ்சதும் டான்ஸ் பார்ட்டில ஒரு ஃபிகரை பார்க்கறாங்க. அதுதான் ஹீரோயின் . அதை கரெக்ட் பண்ண 3 பேரும் படாத பாடு படறாங்க. யார் செட் பண்ணாங்க என்பதுதான் கதை . இதுல ஒரு ட்விஸ்ட் வேற இருக்கு க்ளைமாக்ஸ் ல . தில் இருக்கறவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க.. இந்த  கூத்துல பெரிய கூத்து என்னன்னா 2 வது பாகம் வேற வருதாம் .


ஹீரோ வினய்  என்பதே டைட்டில் ல தான் தெரியுது . எப்படி இருந்த ஆளு இப்படி ஆகிட்டாரே?  அய்யோ பாவம் , சத்யன் , பிரேம் ஜிக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட இவருக்கு இல்லை . இவர் அஜித்தை , ரஜினியை , விஜய் யை கலாய்ப்பதெல்லாம் ஓவர் . யார் யார் என்ன செஞ்சா நல்லாருக்கும்னு தெரிய வேணாமா?  ( அவர் கலாய்ச்ச ஆர்டர் படி பேர் போட்டிருக்கேன், இதுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க )


ஓப்பனிங்க் ஷாட்டில் ஒரு பாடலுக்கு வரும் பவர் ஸ்டார்க்கு அமோக வரவேற்பு , ஆனா பெருசா ஏதும் கவரலை . பவர் ஸ்டார் உஷார். இப்படி சில்க் ஸ்மிதா மாதிரி ஆடிட்டு இருந்தா உங்க பவர் போயிடும் . 




படத்துலயே எல்லார் மனமும் கவர்ந்தவர் சத்யன் தான். நல்ல காமெடி சென்ஸ். டயலாக் டெலிவரி , நடிப்பு எல்லாம் பக்கா 


பிரேம் ஜியை க்ளோசப் ல அடிக்கடி காட்டுவது ஏன்? அவர் வாய் என்ன சிம்ரனின் இடுப்பா? கேமராவைக்கொண்டு போய் கொண்டுபோய் அவர் வாய் கிட்டேயே வைக்கறாங்க >. முடியல 


 ஹீரோயின் லட்சுமி ராய். டைட்டில் ல அழகு தேவதைனு போடறாங்க. என்ன நிர்ப்பந்தமோ .. பில்லா நயன் தாரா கெட்டப்பில் க்ளைமாக்ஸ் சில் நல்லா பண்ணி இருக்கார் , ஜாக்கிங்க் போற சீன்ல நல்லா திறமையை காட்டி இருக்கார்.. (  ஜாக்கிங்க் போறதுல என்ன திறமை?னு கேட்கும் சின்னப்பசங்க எல்லாம் ஜவ் மிட்டாய் சாப்பிடவும் ). நீச்சல் டிரஸ் ல  10 நிமிஷம் வர்றார் , அதோட அவர் போர்ஷன் ஓவர் . 


 வினய்க்கு மனைவியாக வரும் அந்த குண்டு பொண்ணு ஆர்த்தி மாதிரி ஒரு ரவுண்ட் வர சான்ஸ் இருக்கு , அவரே 19 ரவுண்ட் நம்மை விட குண்டா தான் இருக்கார் . 


 கவுரத்தோற்றத்தில் (!!!!!!!!!) டான்ஸ் பார்ட்டி புகழ் சோனா . 1ம் சொல்றதுக்கில்லை.. அப்புறம் மந்த்ராஆஆ




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர் டிசைனில் , விளம்பரங்களில் பவர் ஸ்டாரை போட்டு மார்க்கெட் பண்ணினது , அவர் ஒரு பாட்டுக்குத்தான் வர்றார் என்பது தெரியாத வண்ணம் பார்த்துக்கிட்டது 



2.  படத்தின் ஹீரோயின் லட்சுமிராய்  படம் போட்டு 97 வது நிமிடம் தான்  அதாவது இடைவேளை முடிஞ்சு 6 நிமிஷம் கழிச்சுத்தான் எண்ட்ரியே ஆகறார் என்பது தெரியாத படி ஃபுல் அண்ட் ஃபுல் அவர் தான் எல்லாம் என்பது மாதிரி பிரமோட் பண்ணது 



3. ஹீரோ வினய் என்பதே தெரியாத படி இருட்டடிப்பு பண்ணி பிரேம் ஜி , சத்யன் இவங்களை பூஸ்ட் அப் பண்ணது 



4.  பிரேம் ஜி - சோனா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் கடலோரக்கவிதைகளை நையாண்டி செஞ்ச விதம்  ( அடி ஆத்தாடி ) 


5. சத்யன் தன் ஜோடியுடன் பாடும் உயிரின் உயிரே ( காக்க காக்க) பாடல் காட்சி


6, மனைவியைப்பிரிந்த வாலிபர்கள் சங்கம்  ஆரம்பிச்சு பாடும் கானாப்பாட்டான  வா மச்சி வா குத்தாட்டப்பாட்டு ஆக்கியது ( பாடல் இல் இருந்த கிக் படமக்கத்தில் இல்லை ) 


7 . மனோபாலாவின் சம்சாரத்தை  வேறொரு நபர்  கிஸ்  அடிப்பதும் , அதை மன்னிக்கும் மனோபாலாவை ஒபாமா சந்திக்க விரும்பும் காமெடி டிராக்கும் ஆஹா! 


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கலாய்த்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரே பார்த்தாலோ படிச்சாலோ அவங்களே ரசிக்கும் அளவு இருக்கனும். எல்லை மீறினால் ரொம்ப த்தப்பு . ரஜினி, கமல் , அஜித் , விஜய் 4 பேரையும் கலாய்ச்சு இருக்கீங்க , இதுல அவங்களோ, அவங்க ரசிகர்களோ பார்த்தா கடுப்பாகும்படி தான் காட்சிகள் இருக்கு .



2. ஹீரோ பேரு டேவிட் பில்லா , அவர் தடுமாறி கீழே விழும் காட்சியில் “ நீ நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு சொன்னே, இப்போ கீழே விழுந்து கிடக்கே  “ இந்த டயலாக் எதுக்கு? அஜித் ஒரு நாளும் தன்னை நெம்பர் ஒன் அப்டினு சொன்னதே இல்லையே?  தனிப்பட்ட முறைல உங்களுக்கு ஏதாவது அஜித் கூடப்பகையா? 


3. சத்யன் ஒரு காட்சியில் துப்பாக்கி விஜய் ஸ்டைலில்  “ ஐ ஆம் வெயிட்டிங்க் “ அப்டின்னதும் ஃபிகர் “ போடா லூசு “ அப்டிங்குது. இது ரொம்ப ஓவர் 


4. யார் அவன் கோச்சடையான்? மண்டை மேல கொண்டை வெச்சுக்கிட்டு  என்ற டயலாக்கும் அத்து மீறலே , தியேட்டர்ல யாரும் சிரிக்கவே இல்லை பாஸ் 


5 . லொள்ளு சபா உட்பட எல்லாரும் பிரிச்சு மேஞ்ச நாயகன் வேலு நாயக்கர் கேரக்டர் உல்டா செம போர்..


6. மகளிர் தினம் அன்னைக்கு படம் ரிலீஸ் பண்ணிட்டு படம் பூரா பெண்களை மட்டம் தட்டிட்டே இருக்கீங்க.. டயலாக்ஸ் எல்லாம் நேரடி டபுள் மீனிங்க் ..  ஏஏஏ சர்ட்டிஃபிகேட் குடுத்ததில் தப்பே இல்லை 



7, கே எஸ் ரவிக்குமார் போலீசாக செய்யும் அலப்பறை செம மொக்கை 



8. க்ளைமேக்ஸ் வந்ததும் டகால்னு 3 பேரும் திருந்துவது எப்படி? 


9. படத்தின் கடைசி அரைமணி நேரம் சத்திய சோதனை , மகா இழுவை 

10 . ஒவ்வொரு தமிழ் சினிமாவையும் கலாய்க்கும்போது நல்லாவே தெரியுது என்ன படத்தை ஓட்டறீங்கனு, போதாததுக்கு அந்தந்தப்பட ஃபேமஸ் பி ஜி எம் மை வேற ஓட விடறீங்க , போதாததுக்கு படத்தோட டைட்டிலையும் கேரக்டரே சொல்லனுமா? படு செயற்கை  



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நாம 10 ரூபா கடனா கேட்டா தராத பசங்க பொண்ணுங்க கேட்டா மட்டும் 1000 ரூபா அயர்ன் பண்ணித்தருவானுங்க



2. நான் தல யையே பார்த்தவ.என் கிட்டேயே மங்காத்தாவா ? 


- நான் தல ,தளபதி 2 பேரையும் பார்த்தவ 




3. எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வெச்சவனைத்தான்  லவ் பண்ணுவாங்கன்னா என்னை மாதிரி சிங்கிள் பேக் எல்லாம் எங்கே போக ? 



4.  ஏய், டூ வட் ஐ ஸே.. 

 என்னது? வாட்டர்  சப்ளை வேணுமா?



5. ட்ரெட் மில்லுல என்னை இப்படி நடக்க விட்டதுக்கு ரோட்ல என்னை விட்டிருந்தா இந்நேரம் நான் கோயம்பத்தூருக்கே போய் இருப்பேன் 


6. ஹாய் மிஸ்.. என்ன இவங்க கை கொடுக்க மாட்டாங்களா?

 அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ்

 ஆடு மேய்க்கறாங்களா? 


 அய்யோ, யாரையும் டச் பண்றது பிடிக்காதுன்னு அர்த்தம் 


 குட் ஹேபிட், ஆனா பேடு மேனர்ஸ் 



7.  இவ என் ஃபிரண்ட் சவுந்தர்யா 


 ரஜினியை கேட்டதா சொல்லுங்க 



8.  நாம 2 பேரும் பாம்பே ஓடிப்போலாம் 


 அங்கே வேணாம் , குஜராத் போலாம்// 


 இல்லை , பாம்பே படத்துல தான் அர்விந்த் சாமி மணீஷா கூட ஓடிப்போய் ரெட்டை குழந்தை பெத்துக்கிட்ட்டாரு  , அதே செண்ட்டிமெண்ட் ல நாமும் ட்ரை 



9.  தண்ணி குடு 

 இல்லை 


 இப்போதான் ஒரு 30 லிட்டர் கேனை உருட்டிட்டுப்போனே? ( அது ஒரு குஜிலி)



10.  டேய், இது எத்தனை நாளா நடக்குது? 


 இப்போத்தான் அரை மணி நேரமா 





11.  நான் உயிரோடு இருக்கும் வரை தப்பு பண்ண விட மாட்டேன் 


 ஓ, எப்போ சாவீங்க ?


12.  எதுல வேணாலும் விளையாடுங்க, ஆனா என் லவ் ல மட்டும் விளையாடாதிங்க


 அப்போ உன் லவ்வர் கூட விளையாடலாமா?  ( எந்த ஃபிரண்ட்ஸ் ஆவது இப்படி கேட்பாங்களா? )


13.  இந்த நாய்க்கு பூஜை, அர்ச்சனை செய்யனுமா? சரி நட்சத்திரம் என்ன?

 மிருக சீசரம் , கவுரவ கோத்திரம் 

 கூட இருந்து பிரசவம் பார்த்த மாதிரியே சொல்றானே



14.  என்ன பேசறீங்க? 

 தமிழ் தான் 


15.  ஏய்.. புரிஞ்சுக்க 


 முதல்ல புரியற மாதிரி பேசு


16.  புலி பசிச்சாலும் புரோட்டா தின்னாது 


17.  முழு புரோட்டாவா இருந்த நம்ம வாழ்வு மேரேஜ் ஆனதுல இருந்து கொத்து புரோட்டாவா ஆகிடுச்சு 


18.  நான் அஞ்சாவது படிக்கும்போது அஞ்சலை டீச்சரை லவ் பண்ணேன், பத்தாவது படிக்கும்போது பத்மா டீச்சரை , பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பரிமளா டீச்சரை லவ் பண்ணேன் 




19.  அடடா, என்ன அழகு அழகு , உக்கார வெச்சு ஒரு மாசம் வேடிக்கை பார்க்கலாம் போல 


20 . எங்கே அவளைக்காணோம்? மைதா மாவு மாதிரி இருந்தாளே, தண்ணீருல கரைஞ்சுட்டாளா?





21.  மிஸ் , 17 சி பஸ் எங்கே நிக்கும்? 

 சாலி கிராமம் போய்க்கேட்டா சொல்வாங்க, இது பெங்களூர் 



22. அய்யோ , மேடம், ரொம்ப ஏறி ஏறி இறங்காதீங்க  ( அவுட் ஆகிடப்போகுது ) சென்சார் கட் வசனம் மியூட் ( டபுள் மீனிங்க் _)




23./ ஓமக்குச்சி கூட என்னைப்பார்க்க வர மாட்டான், ஒபாமா எதுக்கு வர்றாரு?


24.  அந்தக்கொரில்லா நீ எது சொன்னாலும் கேட்குமா? முட்டி போடுமா? 


 குட்டியே போடும்  ( அதாவது வாரிசு ) 



25. உன் மாமியார்  கராத்தாவுல பிளாக் பெல்ட்னு சொல்லவே இல்லை?


இதை பிரஸ் மீட் வெச்சா சொல்லிட்டு இருக்க முடியும்?


26. குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த மாமியார்களே இப்டித்தான்





எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி. பி கமெண்ட் - எல்லாரும் பார்க்க முடியாது . பி , சி செண்ட்டர் ஆண் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தவங்க ஓரளவு ரசிக்கலாம் , டி வி ல பார்க்க ஏற்ற படம் . தியேட்டருக்குப்போனா 9 ல குரு  ஏழரை சனி - ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

 ரேட்டிங்க் -   2.25  / 5