Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Tuesday, May 01, 2012

கிளாமர் இல்லாம பொது வாழ்க்கையில் இருக்க முடியாது -ஐ பி எல் அழகி அர்ச்சனா விஜயா! பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ5Hfvj7zMeLVT7U-8uUh5hOn4CXqL9HB9hyd545JG7g-64Yp_vgChFFeN_ZOyBYDbT9wP60IxNm7uoYgJtW6KvoWt1o6ijqDaPmNTMgLYg4IjGersXC3rby6Zt_JkSzSt-Gg0NdaCqq2O/s400/Archana_Vijaya_Hot.jpg 

சிக்ஸர்கள், சியர் கேர்ள்ஸ், ஒரு பந்து நான்கு ரன்கள் பதற்றம்... இவை போக... இந்த ஐ.பி.எல். பக்கம் கவனம் ஈர்க்கும் கவர்ச்சி ராக்கெட்... அர்ச்சனா விஜயா!
 அழகுப் பெண்ணின் கிரிக்கெட் கமென்ட்ரிக்கு அவ்வளவு மவுசு. ட்விட்டர், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியாக்களில் ஹிட்ஸை அள்ளும் அர்ச்சனா விஜயா விடம் பேசினேன்

1. ''பேர்ல தமிழ் சாயல் இருக்கு. ஆனா, உங்க நடவடிக்கை எல்லாம் ஹாலிவுட் ரேஞ்ச்ல இருக்கே... நீங்க தமிழ்ப் பெண்ணா?''


சி.பி - ஹாலிவுட் ரேஞ்ச்னா எப்படி? ஏஞ்சலீனா ஜூலி மாதிரியா?

''ஹாஹா... எங்கே போனாலும் இதேதான் கேக்குறாங்க. ரொம்ப ஸாரி... நான் தமிழ்ப் பொண்ணு இல்லை. ராஜஸ்தான் என் பூர்வீகம். ஆனா, பிறந்தது, வளர்ந்தது,படிச்சது எல்லாமே கொல்கத்தா. இந்தப் பேர் எனக்குத் தென் இந்தியாவில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொடுத்திருக்கு. அதனால வட இந்தியா, தென் இந்தியானு என்னைக் குறுகிய வட்டத்தில் அடைச்சுடாதீங்க.''


சி.பி - இளைஞர்களை அழகால கொலையா கொல்றதால கொல்கத்தவா? ஓக்கே. உங்களை எப்படி ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடைக்க முடியும்? ஹி ஹி ஹி 

2. ''எப்படிக் கிடைச்சது ஐ.பி.எல். காம்பியரிங் வாய்ப்பு?''

''கொல்கத்தாவில் படிச்சிட்டு இருந்தப்ப, சேனல் 'வி’ நடத்துன 'மிஸ் கிளாமரஸ்’ ரியாலிட்டி ஷோவில் ஜெயிச்சேன். தொடர்ந்து மாடலிங், விளம்பர வாய்ப்புகள். இந்தியாவில் நான் கேட் வாக் பண்ணாத ஃபேஷன் ஷோவே கிடையாது.


 அப்புறம் நியோ ஸ்போர்ட்ஸ் சேனல்ல கிரிக்கெட் வீரர்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்படி அப்படியே ஐ.பி.எல். கிரவுண்டுக்குள் இறங்கிட்டேன். உலகப் புகழ்பெற்ற 'நினி’ பத்திரிகை 'ஐ.பி.எல்-ன் சிறந்த கண்டுபிடிப்பு அர்ச்சனா விஜயா’னு புகழ்ந்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1PNgSxLUoDLYCWLLMO5ceRuhyHy_6cZmTKrZkmNcoJO7Y4Ld4uL181VhwogjxJuNa_4zRETouyDzsU_sYGgr6Wo8HX38lrXSQKOP3VUFi2sBLToC-bh4d5DPxpCaQMbV2agCccLonpg/s640/archana_vijaya_ipl_host_anchor_vj_hot_latest_photos_1.jpg
3. 3.''கிரிக்கெட் வீரர்களோட நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருப்பீங்க. ஏதாவது ஸ்கூப் சொல்லுங்க?''

''சச்சின் செம சீரியஸ் பார்ட்டினு நினைப்பீங்கள்ல... ஆனா, சார் செமஜாலி. என்னை முதல் தடவை பார்த்ததும் அவர் என்கிட்ட என்ன கேட்டார் தெரியுமா? 'எப்படி இவ்ளோ ஸ்லிம் அண்ட் ஸ்லீக்கா இருக்கீங்க?’ - அவர்கிட்ட இருந்து இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கலை.


என்ன பதில் சொல்றதுனு தெரியாமத் தடு மாறிட்டேன். எப்பப் பேசினாலும் ஏதாச் சும் கலாய்ச்சுக் காமெடி பண்ணிட்டே இருப்பார் சச்சின். டோனி எப்பவும் அன் லிமிடெட் சேட்டை பார்ட்டி. நான் பேட்டி எடுக்கிற மாதிரியே நடிச்சுக் காட்டிக் கிண்டலடிச்சுட்டே இருப்பார்.


ஒரு தடவை டெல்லியில் இருந்தப்ப, தீபாவளி கொண்டாட நண்பர்களோட பட்டாசுகள் வாங்கிட்டு நான் தங்கியிருந்த இடத்துக்கே வந்துட்டார். யுவராஜ் சிங் என் பெர்சனல் ஃப்ரெண்ட். அவரோட எல்லா பிறந்த நாளுக்கும் அவர்கூட நான் இருப்பேன்.''



சி.பி - பொதுவா பசங்க கிட்டே பேசறப்ப  ஒரு முகமும், பொண்ணுங்க கிட்டே பேசறப்போ ஒரு முகமும் வெச்சிருப்பாங்க. அதுக்கு வி ஐ பிகளும் விதிவிலக்கல்ல..


4. ''ப்ளேயர்ஸ் உங்களுக்கு என்னல்லாம் கிஃப்ட்ஸ் கொடுத்திருக்காங்க?''

''அவங்க டி-ஷர்ட்டுகளைப் பரிசா கொடுத்திருக்காங்க. மத்தபடி நீங்க நினைக் கிற மாதிரி எதுவும் இல்லை.''


சி.பி - நாங்க நனைக்கற மாதிரி சாரி நினைக்கற மாதிரின்னா எது அது?


http://www.chitramala.in/photogallery/d/624815-1/Archana-Vijaya-Hot-Stills+_10_.jpg

5. ''சென்னையில் என்ன பிடிக்கும்?''

''முருகன் இட்லிக் கடை, மெரினா பீச். எப்போ சென்னை வந்தாலும் இது ரெண்டையும் மிஸ் பண்ண மாட்டேன்!''


6. ''கிரிக்கெட் கிரவுண்ட்ல இவ்வளவு கிளாமரா டிரெஸ் பண்றது அவசியமா?''


சி.பி - கிரிக்கட் பிடிக்காதவங்க ரசிக்கடுமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான். 

''அப்படி கிளாமரா டிரெஸ் பண்ணி, அதைப் பலர் ரசிக்கிறதாலதானே இப்போ நீங்க வந்து பேட்டி எடுக்குறீங்க. பொது வாழ்க்கையில் கிளாமர் இல்லாம இருக்க முடியாது பாஸ்!''



 சி.பி - பொது வாழ்க்கைல கிளாமர் இல்லாம இருக்க முடியாதா? நல்ல வேளை.... ஹி ஹி
''7. கிரிக்கெட்டர்ல செம ஹாட் யாரு?''

''விராட் கோஹ்லி.''

(அவர் இன்னும் டி-ஷர்ட் கொடுக்கலையா?)


http://www.southmoviemasala.com/wp-content/uploads/Archana-Vijaya-Hot-Images-2.jpga


நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.

ஐ.பி.எல். மவுசு குறைகிறதா?'' இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் பேட்டி

இது ஸ்ரீனிவாசனுக்குப் பொற்காலம்! ஒரு பக்கம், தென்னகத்தின் பெரும் சிமென்ட் நிறுவனமான அவருடைய 'இந்தியா சிமென்ட்ஸ்’ வடக்கிலும் கிளை பரப்பிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், அவருடைய 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி ஐ.பி.எல். போட்டிகளில் கோடிகளை வாரிக் குவிக்கிறது.


 இந்தியாவைத் தாண்டியும் கோலோச்சுகிறார் ஸ்ரீனிவாசன். சர்வதேச கிரிக்கெட் ஆணையமே அவர் சொல்படி ஆடுகிறது. புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் மிதக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருடன் ஒரு சந்திப்பு. 



 . 1.''இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிகளில் புரள்கிறது. ஆனால், இன்னமும் பெரும்பான்மை இந்திய இளைஞர்கள் டென்னிஸ் பந்துகளை வைத்துத்தான் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறார் கள். இந்த நிலையை மாற்ற என்ன செய்யப்போகிறீர் கள்?''

''வாரியத்துக்கு வரும் வருமானத்தில் 70 சத விகிதத்தை மாநிலச் சங்கங்களுக்கும் 26 சதவிகிதத்தை வீரர்களுக்குச் சம்பளமாகவும் கொடுத்துவிடுகிறோம். எஞ்சிய தொகையில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குகிறோம். இதுதான் கணக்கு.


 இப்போது தேனியில் தொடங்கப்பட்டு இருக்கும் கிரிக்கெட் அகாடமியைப் போல, நாடு முழுவதும் மாவட்டங்கள்தோறும் கிரிக்கெட் அகாடமிகளைத் தொடங்க இருக்கிறோம். விளையாடுவதற்குத் தேவையான பொருட்களை இலவசமாகத் தர இருக்கிறோம். சூழல் விரைவில் மாறும்!''

'2.'ஆண்டுக்கு 2,000 கோடி வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியத்துக்கு வருமான வரிவிலக்கு தேவைதானா?''

''தேவையா, இல்லையா என்பது இல்லை. இவ்வளவு காலம் வருமான வரிவிலக்கு இருந்தது. அது மேலும் தொடர வேண்டும் என்று நினைக்கிறோம்... அவ்வளவுதான். ஆனால், வருமான வரிவிலக்கு இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் இத்தனை ஊர்களில் இன்றைக்கு நீங்கள் கிரிக்கெட் மைதானங்களைப் பார்க்க முடியாது!''


3.''சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆதிக்கம் செலுத்துகிறதா?''


''சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் மீது காலங்காலமாக யார் ஆதிக்கம் செலுத்திவந்தார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். இன்றைக்கு கிரிக்கெட்டை ஆடும் மக்கள், பார்க்கும் ரசிகர்கள், கிரிக்கெட்டில் கொட்டும் பணம் எல்லாமே இந்தியாவில்தான் அதிகம். முன்புபோலன்றி, இப்போது நாம் நம்முடைய உரிமைகளைக் கேட்டுப் பெறுகிறோம். இது எப்படி ஆதிக்கம் ஆகும்?''

'4. 'அரசியல்வாதிகளாலும் தொழிலதிபர்களாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிர்வகிக்கப்படும் சூழல் எப்போது மாறும்?''

''கிரிக்கெட் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களால் அது நிர்வகிக்கப்பட வேண்டும். அவ்வளவுதானே? ஏன் தொழிலதிபர்களாலோ, அரசியல்வாதிகளாலோ நிர்வகிக்கப்படக் கூடாது என்று நினைக்கிறீர்கள்? உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் அப்பா காலத்தில் இருந்து 'இந்தியா சிமென்ட்ஸ்’ கிரிக்கெட்டை ஆதரித்துவருகிறது. வீரர்களுக்கு நிறுவனத்தில் வேலை அளித்துவருகிறது. அணிகளை நடத்திவருகிறது. ஒரு தொழிலதிபர், கிரிக்கெட் ரசிகராக இருக்கக் கூடாதா?''

5. ''கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் இருக்கும் நீங்களே, ஐ.பி.எல்-ல் ஓர் அணியைச் சொந்தமாக்கிக்கொண்டது தவறு இல்லையா?''

'' 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ ஒரு ஸ்ரீனிவாசனுக்கு மட்டும் சொந்தம் இல்லை. 'இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பங்குதாரர்களின் சொத்து அது. இந்தியா சிமென்ட்ஸுக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள தொடர்பு அரை நூற்றாண்டுக்கும் மேலானது. 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ தவிர, 12 அணிகள் எங்களுக்குச் சொந்த மாக இருக்கின்றன. அவை எல்லாம் தவறாகாத போது, இது மட்டும் எப்படித் தவறாகும்?''

6. ''ஒரு தமிழராக தமிழகத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் உரிய இடம் கிடைத்திருப்பதாகக் கருதுகிறீர்களா?''

''இல்லை. இன்னும் நிறையப் பேர் ஆட வேண்டும். ஆனால், அது வாரியம், தேர்வாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வீரர்களின் தகுதி சம்பந்தப்பட்டது. நீங்கள் நன்றாக விளையாடினால், உங்களுக்கான இடம் நிச்சயம்!''



'7.'ஐ.பி.எல். மவுசு குறைகிறதா?''

''ஒருபோதும் குறையாது. இடையில் லலித் மோடி செய்த தவறுகளால் ஐ.பி.எல். மீது ஒரு களங்கமான தோற்றம் உருவானது உண்மை. ஆனால், அதைக் கடந்து வந்தாயிற்று. இப்போது ஆட்டம் நடக்கும் மைதானங்களுக்குப் போய்ப் பாருங்கள். எங்கும் ஹவுஸ்ஃபுல்!''

'8. 'தேர்தலுக்காக ஐ.பி.எல். போட்டிகளை இந்திய அரசு தள்ளிவைக்கச் சொன்னபோது மறுத்துவிட்ட  வாரியம், இப்போது சஹாரா நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் விதிகளையே தளர்த்தும் அளவுக்கு அடிபணியக் காரணம் என்ன?''

''முதல் ஆண்டு ஐ.பி.எல். பெரும் வெற்றி பெற்று, மக்கள் இரண்டாவது சீஸனுக்காகக் காத்திருந்த காலகட்டம் அது. அப்போது போட்டிகளைத் தள்ளிவைத்து இருந்தால், மக்களும் ஏமாந்திருப்பார்கள்; எங்களை நம்பிப் பணம் கொடுத்த தொலைக்காட்சி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனால் மறுத்தோம். சஹாராவைப் பொறுத்த அளவில் அவர்களுடைய கோரிக்கை நியாயமானது. அதை ஏற்றதால் யாருக்கும் இழப்பு இல்லை. அதனால் ஏற்றோம்.''


9. ''ஒரு கிரிக்கெட் ரசிகராகச் சொல்லுங்கள்... க்ளாஸிக் கிரிக்கெட்டை 20-20 அழித்துக்கொண்டு இருக்கிறதுதானே?''

''முதன்முதலில் 20-20 ஆட்டத்தைப் பார்த்தபோது, எனக்கே அதை ஏற்றுக்கொள்வதில் நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால், அது இன்றைக்கு அடைந்திருக்கும் வளர்ச்சி, நிச்சயம் ஒரு கிரிக்கெட் புரட்சி. ஒரு புதிய பார்வையாளர் படையையே அது கொண்டுவந்து இருக்கிறது. முக்கியமாகப் பெண்களையும் சிறுவர்களையும். இனி கிரிக்கெட் என்றால்... அது டெஸ்ட், ஒன் டே, 20-20 மூன்றையுமே குறிக்கும். ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்றைக்குமே அழிந்துவிடாது. க்ளாஸிக் இஸ் க்ளாஸிக்!''


10. ''கிரிக்கெட்தான் இந்தியாவில் எல்லா விளையாட்டுகளையும் அழுத்துகிறது. பரிகாரமாக கிரிக்கெட் வாரியம் ஏன் பணம் இல்லாத ஏனைய விளையாட்டு அமைப்புகளுக்கு உதவக் கூடாது?''

''நிறைய உதவ நினைக்கிறோம். உதவிக்கொண்டும் இருக்கிறோம். இப்போதுகூட அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்புக்கு  12.5 கோடி ரூபாய் கொடுத்தோம்.''

11. ''தமிழகத்தில் சிமென்ட் உற்பத்தித் துறையை வளர்த்தெடுத்ததில் உங்களுக்குப் பெரிய பங்கு உண்டு. சுற்றுச்சூழல் சார்ந்து தமிழகம் இப்போது அதற்குப் பெரிய விலையைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இதை உணர்கிறீர்களா?''


''சிமென்ட் என்பது ஒரு நாட்டின் உள் கட்டமைப்பின் உயிர்நாடி. ஒரு சிமென்ட் தொழிற்சாலையை சுண்ணாம்புக் கல் கிடைக்கும் இடத்தில் மட்டும்தான் நிறுவ முடியும். இந்தியாவில் எட்டு மாநிலங்களில் - அங்கும் சில இடங்களில் மட்டும்தான் சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது. ஆனால், சிமென்ட் தேவையோ ஒட்டுமொத்த நாட்டுக்குமானது.


40 வருடங்களுக்கு முன் நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது இந்தியாவின் சிமென்ட் உற்பத்தி 1.9 கோடி டன். இன்றைக்கு தமிழகத்தின் உற்பத்தியே 3.5 கோடி டன். நாடும் வளர்ந்து இருக்கிறது. நாமும் வளர்ந்து இருக்கிறோம். ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னையில் இப்போது எல்லா சிமென்ட் ஆலைகளுமே கவனம் செலுத்திவருகிறோம். மாசற்ற தொழில்நுட்பம், மரம் வளர்ப்பு என்று நாங்களும் சூழலைப் பாதுகாக்க நிறைய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்.''

12. ''இந்தியாவில் சிமென்ட் விலை கூடிக்கொண்டேபோகிறது. ஆலை அதிபர்களின் சிண்டிகேட், குறிப்பாக உங்கள் தலைமையிலான லாபிதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுவதுபற்றி என்ன சொல்கிறீர் கள்?''

''அர்த்தமற்ற குற்றச்சாட்டு இது. சிமென்ட் ஆலைகளுக்கான நிலக்கரி விலையில் இருந்து எங்களுக்கான வரிகள் வரை எல்லாமே உயர்ந்து இருக்கின்றன. விலைவாசி உயர்வைப் பற்றி நீங்கள் எல்லாம் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். நாங்கள் பேசவில்லை.


 அவ்வளவுதான். எங்களுக்கு எதுவுமே குறைந்த விலையில் கிடைக்காதபோது, நாங்கள் மட்டும் எப்படிக் குறைந்த விலைக்கு சிமென்ட்டைக் கொடுக்க முடியும்?''


 மக்கள் கருத்து 

1.காரிகைத் தமிழ்மன்னவன்

 
1. முதலில் பிசி சிஅய் என்பது தனியார் அமைப்பா அல்லது பொதுநல அமைப்பா அல்லது அரசு அமைப்பா என்று தெளிவு செய்யுங்கள்

2. அரசு அமைப்பு என்றால் ஆர்.டி.அய்க்கு கீழ் கொண்டுவாருங்கள். சி.ஏ.ஜி. ஆடிட் செய்யுங்கள்

3. தனியார் அமைப்பு என்றால் அவர்களுடைய கிரிக்கெட் அணியை ஏன் இந்திய அணின்னு சொல்றீங்க?? அதைக் கலையுங்கள். கார்பரேட் ரேஞ்சுக்கு வரி போடுங்கள் ... வோடஃபோன் மாதிரி 1962 ல் இருந்து முன் தேதியிட்டு வரி வசூல் செய்யுங்கள்


4. பொது நல அமைப்பு என்றால் லாபம் கூடாது ,,,அதற்கேற்ற சட்ட வழிமுறைகளை நிர்பந்தியுங்கள் ....


எந்த வரைமுறைக்குள்ளும் வராத ஒரு வித்தியாச அனிமலாக இருக்கிறது !!!!
2.Cavith

 
கிரிக்கெட் ஒரு விளையாட்டல்ல, பணம் சம்பாதிக்க நடத்தும் கேளிக்கை என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
3. நடராஜன்
 
ஆண்டுக்கு 2,000 கோடி வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியத்துக்கு உச்ச பட்ச (40% அல்லது மேலாக) வரி விதிக்கலாம்

நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.