Sunday, January 27, 2013

விஸ்வரூபம் -ஒரு சர்ச்சைக்குரிய விமர்சனம் ( ஃபேஸ்புக்கில் படித்தது)



இது ரொம்ப நீண்ட பதிவு அதனால் பொறுமையாக படிக்கவும்.. 

கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை (திரையரங்கில்!) பார்த்து முடித்து சில மணிநேரம் தான் ஆகிறது.. சூடு ஆறும் முன்பே எனது ஆய்வு இங்கே.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. 

பெரிய சினிமா ரசிகன் இல்லை என்றாலும் இவ்வளவு பிரச்னையை கிளப்பிய இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கவே சென்றேன்.. (இதே காரணத்திற்காகத்தான் இத்தனை சர்ச்சைகளை கமலும் கிளப்பினார் என்று கருதுகிறேன்.. இது கமலின் முதல் மற்றும் ஒரே வெற்றி!!)

முதலில் படத்தின் நல்ல விடயங்கள் சில.. ஆரம்ப காட்சிகளில் பெண்மை ததும்ப வரும் கமலின் அருமையான நடிப்பிற்கு நானும் என்னை மறந்து கூட்டத்துடன் கைதட்டி மகிழ்ந்தேன்.. முதல் பாடலில் கமலின் நடனம் கூட்டத்தை ஈர்க்கவே செய்தது.. கமலின் சுயரூபம் விளங்கியதும் அப்பாவி மனைவியின் அதிர்ச்சிகள் நிறைய சிரிப்பொலிகளை ஒரு பக்கம் எழுப்பினாலும் உள்ளாடை(Bra) பற்றிய காமெடி எல்லாம் சுமாரான ரசனை.. 

சண்டை முடிந்து வரும் கமல் முடியை சுத்தமாக வெட்டி கிராப் வைத்துக்கொண்டு இறங்கி வரும்போது மனைவி பிரமிக்கிறாள்.. தியேட்டரில் யாரும் பெருசா react பண்ணுன மாதிரி தெரியல. மற்றபடி பெரிதாய் ரசிக்கும்படியோ பிரமிக்கும்படியோ படத்தில் எதுவும் இல்லை.. 

இதில் ஹாலிவுட்டுக்கு இணையாக படம் எடுத்துவிட்டதாக கமல் நம்புவது அவர் மேல் பரிதாபத்தையே உண்டாக்குகிறது..

வழக்கமான கமல் படங்களை போல இதிலும் எங்கெங்கும் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராமண வாடை.. பேச்சு, பெயர்கள், கலாசாரம் என்று சகலத்திலும் பிராமண நெடி. ஹிந்தி மட்டும் இந்தியாவின் மொழியல்ல என்று கூச்சல் போடுகிறோம். (இத்தனைக்கும் நிறைய மக்கள் பேசுகிறார்கள்/புரிந்துகொள்கிறார்கள்) ஆனால் கடுகளவு சிறுபாண்மையான பிராமணர் மட்டும் தான் தமிழ்நாட்டில் வாழ்பவர் என்கிற பாணியில் தான் கமல் படங்கள் எப்போதும் இருக்கும். அது ஊர் அறிந்த ரகசியம் தானே.. அதை விட்டு விடலாம். 

தமிழகத்தின் ஒரு அறுதி சிறுபான்மையான பிராமணர்களை தவிர வேற யாரை கொண்டும் படம் எடுக்க தெரியாத கமல் என்னத்த உலக நாயகன்? தசாவதாரத்தில் தலித் என்று சொல்லிக்கொண்டு பார்க்க சகிக்காத ஒரு வேடம் பூண்டு வந்த கமலால் சராசரி தமிழனை அழகாகவோ, கேமரா முன்னாள் நிற்க தகுதி உள்ளவனாகவோ பார்க்க முடியாதுதான். ஆனால் குறைந்தபட்சம் தன் பிராமண பிரிவுக்குள்ளாவது ஒரு பரந்த சிந்தனை இருந்திருக்கலாம் ஆனால் அதுக்குள்ளேயும் அய்யங்காருக்கு அவர்களுக்கு படம் முழுக்க பெருமாள் பஜனை தான்.

முதலில் இது ஹாலிவுட் தர படமா என்ற கேள்வியே தேவையற்றது.. தமிழன் கலை படைப்புகளில் என்றைக்கும் பின் தங்கியவன் இல்லை.. வெள்ளைக்காரனை வெற்றிகரமாக காப்பியடித்து பெருமைப்படுவது பைத்தியக்காரத்தனம்.. மேலும் ஹாலிவுட் படங்களின் உன்னதம், வெற்றி அவர்கள் பறக்கவிடும் விமானங்களிலும், வெடிக்கவிடும் கட்டிடங்களிலும் இல்லை.. கதை சொல்லும் நேர்த்தியில் உள்ளது.. 

உலக சினிமாவின் தலைசிறந்த படங்களாக பல தலைமுறைகளை தாண்டியும் நின்று நிலைக்கும் Shawshank Redemption, Godfather, Pulp Fiction, Fight club, 12 Angry Men, Psycho, The Pianist போன்ற படங்கள் கோடிகளை வாரி இறைத்து எடுக்கப்பட்டவை அல்ல.. அன்றியும் Inception, Dark Knight, Matrix போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்துவது திரைக்கதையின் சுவாரசியமே.. 

தமிழ் சினிமாவை உலகம் வியக்கும்படி செய்வது விஸ்வரூபம் போன்ற படங்கள் அல்ல. அந்த நாள், வீடு, மௌன ராகம், முந்தானை முடிச்சு, சிகப்பு ரோஜாக்கள், அழகி, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் தான்.. பிரம்மாண்டம் என்றாலும் சந்திரலேகாவின் உச்சகட்ட நடனக்காட்சியும், அவ்வையார் படத்தில் யானைகள் கோட்டையை இடிக்கும் காட்சியும் பெரிய தொழில் நுட்பங்கள் இல்லாமல் போனாலும் இன்றைக்கும் ரசிக்க வைப்பது அதில் வாரி இறைத்த காசு அல்ல.. அதற்கான தேவையை உண்டாக்கும் திரைக்கதை தான். 

இந்த படத்தை பார்க்கையில் பழையகால Manual vending Machine ஒன்றில் என் அறிவுஜீவி நண்பன் காபித்தூள், பால், சர்க்கரை ஆகிய பொத்தான்களை வேக வேகமாக அழுத்திவிட்டு குவளை(Cup) பொத்தானை அழுத்த மறந்தது தான் நினைவுக்கு வருகிறது..

சரி அப்படியும் பிரம்மாண்ட சண்டை காட்சிகளிலாவது சிறந்து விளங்குகிறதா என்றால் இல்லை. சராசரி தமிழ்ப்படங்களை விட நிறைய உலங்கு ஊர்திகளை (Helicopters) பறக்க விட்டுள்ளார்.. அவ்வளவே.. தமிழ் மொழியிலே மட்டுமே வெளியிடப்படும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கமலின் படம் கொஞ்சம் high-tech ஆகத்தான் தோன்றும். விஜய், அஜீத் படங்களை விட சாதுர்யமாகதான் இருக்கும். ஆனால் Saving Private Ryan, Troy போன்ற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுக்கொல்வது ரொம்ப அதிகம். 

திரைக்கதையிலும் பெரிய சாமர்த்தியம் இல்லை.. பார்த்து பார்த்து புளித்த போன ஹாலிவுட் முறைகள்.. குறிப்பாக நம்மவர்களை ஈர்க்க போவது ஒரு காட்சி.. தொழுகை செய்வதாக சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் அத்துணை பேரையும் துவம்சம் செய்யும் காட்சி.. அதிலும் குறிப்பாக நொடி நேரத்தில் செய்த அசகாய சண்டையை Slow Motion ல் விளக்குவது.. ஆனால் இது Sherlock Holmes (2009) படத்தில் வரும் குத்துசண்டை காட்சியின் அப்பட்டமான காப்பி.. மேலும் அது தேவைப்படும் அளவுக்கு இது ஒன்றும் ஜாக்கிசான், ப்ரூஸ்லீயின் அதிவேக சண்டை இல்லை.. 

ஆங்கிலப்படங்கள் பார்க்காத நம்மூர் மக்களை ஏமாற்றுவதில் கமலஹாசனுக்கு ஒரு கள்ளப்பெருமை இருக்கலாம், அதில் ஹாலிவுட் படங்களையும் ரசிப்பவர்கள் பாராட்ட எதுவும் இல்லை.. 

மற்றபடி மொத்தப் படமும் freezerல் வைத்து பல நூற்றாண்டுகளாக அறைக்கப்படும் அதே ஊசிப்போன மாவு தான். பின்னணி இசையிலும் பல இடங்கள் Dark Knight உட்பட எனக்கு பிடித்த பல படங்களில் இருந்து சுட்டவையே.. (தழுவல் என்று வேண்டுமானால் நாசூக்காக சொல்லாம்.) 

ஆனால் பாடல்கள் காப்பி அடித்தது போல இல்லை.. தனித்தன்மையுடனே இருக்கின்றன அனைத்து பாடல்களும். 

இத்தகைய அமெரிக்க ராணுவ வீர சாகச மொக்கை படங்களை அந்த கதையுடன் நேரடி தொடர்பு உள்ள அமெரிக்கர்கள் கூட இப்போதெல்லாம் அவ்வளவாக ரசிப்பதில்லை.. அதையே தமிழ்மொழியில் எடுத்து கமல் பெருமைப்படுவது நகைப்புக்குரியது. 

மேலைநாடுகள் பழசு (Outdated technologies) என்று தூக்கி எரியும் போர் தலவாடங்களை வாங்கி குவித்து அதை வருடம் இரண்டு முறை ஊர்வலம் விட்டு பெருமைப்படும் இந்திய ராணுவம் போல..

விஸ்வரூபம் ஒரு புஸ்வானம் என்பது ஒரு பக்கம் இருக்க. இந்த படத்திற்கு வந்த தடையும் அதன் தாக்கமும் பற்றி யோசிக்கிறேன். 

ஒரு பெண்ணின் தலையை அறுத்து கொல்லும் தீவிரவாதிகளை மௌனமாக ஏற்றுக்கொண்டுவிட்டு, இப்போது ஒரு சினிமாவுக்காக கொதித்தெழுந்து வீரவசனம் பேசும் எந்த இஸ்லாமிய அமைப்பின் கோரிக்கையையும் நாம் பெரிதுபடுத்தக்கூடாது. இத்தகைய அமைப்புகள் தாங்களே இஸ்லாமியர்களின் பிரதிநிதி என்று காட்டவே முயற்சி செய்கின்றன அன்றியும் அதில் நேர்மை இல்லை.

ஆனால் இவர்கள் படத்தை எதிர்ப்பதால் உடனே நாம் மாறாக ஆதரிக்கலாகாது. இந்த படத்தை எதிர்ப்பதற்கு நமக்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டு. கமல்ஹாசன் என்ற கலைஞனுக்கு வக்காலத்து வாங்கிய பலரும் (நான் உட்பட) இது கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே பார்த்தனர் வேறு எதுவும் காரணம் இல்லை. ஆனால் இந்த படம் கலை வடிவமும் அல்ல, கமல் நேர்மையான கலைஞனும் அல்ல. இதை படம் பார்த்த பின்பு அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன். 

நல்ல கலைஞனுக்கும் அவனது படைப்புக்கும் மூன்று முக்கியமான குணங்கள் உண்டு. ஒன்று தன் கலை வடிவத்தில் உண்மையை மட்டுமே பரப்பே வேண்டும் என்ற பிடிவாதமான நேர்மை.. இரண்டாவது தன் கலை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற சமூக அக்கறை.. இன்னொன்று அந்த கலையை புதுமையாக மெருகூட்டும் ஆர்வம். Creative Instinct என்றும் சொல்லலாம். இதில் எதுவுமே கமலுக்கு இல்லை.

மூன்றாவது விடயத்தை முதலில் பார்ப்போம்.. முழுக்க முழுக்க பல படங்களில் இருந்து சுட்ட காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை.. இது எதேச்சையாக நடந்தது அல்ல.. Creativity is all about hiding your sources என்று Einstein சொன்ன தத்துவத்தையே இங்கு கமல் மெய்ப்பித்திருக்கிறார். பிறமொழி படங்களை பார்க்காத பெரும்பான்மை தமிழ் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கலாம்.. பிறமொழி படங்கள் குறிப்பாக ஆங்கில படங்கள் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் மட்டுமே மிஞ்சும். எனவே இது creativity என்ற பட்டியலில் எக்காலத்திலும் சேராது. 

கூச்சமே படாமல் காப்பியடித்து Xerox machine என்று பெயரெடுத்த இசையமைப்பாளர் தேவா ஏனோ நினைவுக்கு வருகிறார். இதுமாதிரி படங்களில் கோடிகளை போட்டு கோடிகளை அள்ள துடிக்கும் கமலின் செயல் ஒரு வியாபாரியின் சிந்தனையே அன்றி ஒரு நல்ல கலைஞனின் சிந்தனை அல்ல. 

உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி உட்பட பல நல்ல திரைப்படங்கள் சிக்கலில் தவிக்கும் போது இமயமலை சாமியார்களுக்கு பேன் பார்க்க போய்விடும் ரசினிகாந்து இந்த படத்துக்கு வக்காலத்து வாங்குவது சக வியாபாரி என்ற பாசமே அன்றி இவர்கள் யாரும் கருத்து சுதந்திர போராளிகள் இல்லை.

அடுத்து இரண்டாவது விடயம். சமூக அக்கறை. தீமை பயக்கும் மெய்யை விட, நன்மை பயக்கும் பொய்யே நல்லது என்று நாம் ஏற்றுக்கொள்ளும்போது, தீமையை மட்டுமே விளைக்கும் நிரூபிக்கப்படாத உண்மைகளை பரப்புவது எதற்காக? 

தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும் என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி.

மூன்று விடயங்களில்.. முதல் விடயமே நம்மை மிகவும் கவலை கொள்ள செய்யும். அது நேர்மையின்மை. கதை சொல்பவர்கள் கொஞ்சமேனும் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு திரித்து சுய-நியாயம் ஏற்று கூறுவது இயல்புதான். ஆனால் அது அளவை மிஞ்சும்போது ஆபத்தாகி அந்த கலையின் ஜீவனையே கொன்றுவிடும். 

இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும், அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள். அப்படி இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே நியாயப்படுத்தும் நிலைப்பாடு கமல்ஹாசன் உடுத்திய நடுநிலை வேடத்தின் நிர்வாணம். 

அதற்காக தலிபான்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் வாதத்தையும் ஓரளவேனும் விளக்குவது தான் ஒரு நியாயமான கலைஞனின் கடமை (அல்லது இந்த வியாபாரியின் தொழில்தர்மம்). கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம். 

அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது என்று காட்டுகிறார். இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு இல்லை. 

ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை.. 

தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை திட்டமிட்டே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயல்நாட்டு போர்களை வியந்தோதும் படங்களுக்கே ஆஸ்கார் விருதுகள் குவியும் என்பதனை இப்போது தான் கமல் புரிந்து கொண்டார் போலும். 

வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி, வியட்நாமிகளை நாகரீகமற்ற மனிததன்மையற்ற கொடூரர்களாக சித்தரித்த The Deer Hunter படம் பெற்ற 5 ஆஸ்கார் விருதுகளும், ரசாயுன ஆயுதம் இருப்பதாக கதை கட்டி ஈராக் என்ற நாட்டின் தலைவனை கொன்று, அதன் பொருளாதார அடித்தளத்தை சீர்குலைத்த அமெரிக்க படைகளின் அத்துமீறல்களை மெய்சிலிர்க்க பாராட்டிய Hurt Locker படம் பெற்ற 6 ஆஸ்கார் விருதுகளும் உதாரணங்கள். 

இந்தியாவை பிச்சைக்கார நாடு, கொலைகார அயோக்கிய நாடு (இது முற்றிலும் உண்மை என்பது வேறு கதை என்று காண்பித்ததை தவிர வேறு எதையும் கிழிக்காத Slumdog Millionaire பெற்ற விருதுகளும் இதே வகைதான். ஒருவேளை கமலின் நீண்டகால ஆஸ்கார் கனவு இதனால் நனவாகலாம். ஆனால் அவரின் ஆஸ்கார் கனவை எண்ணி சிறு வயது முதல் பெருமைபட்ட எனக்கு இத்தனை அசிங்கங்களையும் ஒரு சேர கண்ட பின் கமலின் கனவை கேட்டால் வயிற்றை குமட்டி வாந்தியே வந்துவிடும் போலிருக்கிறது.

ஆஸ்கார் கனவு என்பது ஆகச்சிறிய செயல்திட்டம். ஆனால் வேறொரு விஷயம் உதைக்கிறது. திரைக்கு முன்னரே DTH ல் வெளியிடுவதால் ஒன்று லாபம் அதிகம் வரலாம். அல்லது தொலைகாட்சியில் பார்த்துவிட்டதால் திரையரங்கு வசூல் குறைந்து போகலாம். குறையும் என்பதே பரவலான நம்பிக்கை என்கிற ரீதியில் ஏற்றுக்கொண்டால், கமல்ஹாசன் புதுமையை புகுத்தவே DTHல் ஒளிபரப்ப முயன்றார் என்று நம்புவது சிறிது கடினமாய் இருக்கிறது. 

ஆனால் DTH ல் வெளியிடுவதன் மூலம் லாபம் குறைந்தாலும், கோடிக்கணக்கான மக்களை அவரின் அமெரிக்க ஆதரவு பரப்புரை எளிதில் சென்று சேர்ந்துவிடும் என்பது திண்ணம். இவ்வகையில் தொலைக்காட்சி மூலம் மக்களை அடைந்து “முஸ்லீம் எல்லாம் பெரும்பாலும் தீவிரவாதிதான்” என்று பாமர மக்களை சொல்ல வைப்பது தமிழ்நாட்டில் ரொம்ப எளிது. இதில் கமலுக்கு என்னதான் லாபம்?

ஒரு வழக்கமான சந்தேக பிராணி இப்படி தான் யோசிப்பான் : “அமெரிக்கா என்கிற பெரியண்ணன் உலகில் பல்வேறு இடங்களில் தனக்கான பரப்புரையை பல வகையிலும் செய்து வருகிறார். இந்தியாவில் அவர்களின் முதல் முயற்சியாகக்கூட இது ஏன் இருக்கக்கூடாது? தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு? கமலின் இந்த பிரச்சாரம் வெறும் கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது? மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க கைகூலிங்குறான். ஆனால் கைல இருந்து 80 கோடிய போட்டு கிட்டத்தட்ட அமெரிக்க ராணுவம் மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு படத்தை, கமல் ஏன் எடுக்கணும்னு தோணுது!”

மற்றபடி தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத, நேர்மை இல்லாத, ரசனை இல்லாத, Creativity இல்லாத படம் என்றாலும் வெளிவரும் முன்னரே தடை செய்வது நல்ல முன்னுதாரணமாக இருக்காது. பல நல்ல படைப்பாளிகளின் குரல்வளை நெரிக்கப்பட இதுவே ஒரு தொடக்கப் புள்ளியாகிவிடும். There seems to be no genuine artistic experimentations or social motivations behind this movie. 

ஆனாலும் நல்ல படமா இல்லையா என்று தீர்மானிக்கும் பொறுப்பு பொது மக்களுக்கே விடப்பட வேண்டும். அதனால் இந்த படம் வெளியாக வேண்டும். தமிழ் மக்கள் அதை பார்த்து கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கமல்ஹாசன் உட்பட இந்த படத்தின் மூளையாக செயல்பட்ட அத்துணை பேரையும் மக்கள் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும். ஒருவேளை இது வெளிவந்து சீந்துவார் இல்லாமல் போனால் அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. 

அநேகமாக தடை நீக்கப்பட்டு வெளியிடப்படும். உடனடியாக தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ள இயக்கங்கள், அமைப்புகள் இந்த படத்தை பொது மக்கள் புறக்கணிக்கும்படி பரப்புரை செய்ய வேண்டும். இத்தகைய படத்தினால் விளையக்கூடிய தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும். 

பொருளாதார ரீதியாக வெற்றியடைய விடாமல் வீழ்த்த வேண்டும் அதுவே உருவாக்கியவர்களுக்கு நல்ல பாடமாக அமையும் வெளிவந்த உடனே இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா முடிவு கட்டப்பட்டு அவர்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்து ஆட வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த படம் அத்தகைய ஒரு துயர வரலாற்றுக்கான அச்சாரமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

மற்றபடி கமல் என்கிற கலைஞனின் மீது நடந்ததாக கூறப்படும் ஒடுக்குமுறை பற்றிய எனது கருத்து இதுதான். கடுமையாக உழைத்தே தன்னை நிலைநிறுத்திக்கொண்ட போதும் கமலுக்கு அறிமுகம்தொட்டே மிக பலம் வாய்ந்த சினிமா பின்புலம் இருந்து உதவியது. அதனால் பல தோல்விகளுக்கு பிறகும் அவரால் தொடர முடிந்தது. இன்று பல கோடிகளை போட்டு பிரம்மாண்ட “உலக சினிமா” பண்ணும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. என்னை பொருத்தவரை இதில் பெருமை என்று பெரிதாய் எதுவும் இல்லை. 

கோடி ரூபாய்க்கு வாங்கிய BMW காரில் போகிறவனை ஒரு நல்ல Driver சுமாரான இண்டிகா கொடுத்தாலும் தட்டி எரிஞ்சிட்டு போயிடுவான். விஸ்வரூபத்தை இந்த கோணத்தில் தான் "நான் யுத்தம்" செய் போன்ற படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். 

என்ன செய்ய வாய்ப்புகள் கிடைக்காமலேயே பல திறமைசாளிகளின் வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது. கமல் போன்றவர்களுக்கு காலமும் சூழ்நிலையும் பல நூறு வாய்ப்புகளை வழங்குகிறது. 

80 கோடி அல்ல 8 கோடியிலேயே உலக சினிமா எடுக்கும் திறமை வாய்ந்த கலைஞர்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர் அவர்களை பற்றியும் கொஞ்சம் கவலைப்படுவோம்.



இணையத்தில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?'' - விஜய் பேட்டி

http://www.southgossips.net/wp-content/uploads/2009/10/vijay-family-in-vikranth-marriage8.jpg
-
"பாலா, அமீர் படங்களில் நடிக்க ஆசை!"

விஜய் விறுவிறு
எம்.குணா
படம் : வி.செந்தில்குமார்
தேங்க்ஸ்ங்ணா... சினிமாவுல நான் பாட்டுக்கு ஓடிட்டே இருக்கேன். அப்போ நடிக்கிற படங் களைப் பத்தி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிட்டு இருக் கும். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 20 வருஷமாயிருச்சுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னப்போ, 'அட’னு சின்ன ஆச்சர்யமா இருந்துச்சு. சிறந்த நடிகனுக்கான விகடன் விருது அந்த ஆச்சர்யத்தைப் பெரிய சந்தோஷமாக்கிருச்சு!''- நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் விஜய். 'துப்பாக்கி’யின் 100 கோடி வர்த்தகம், அடுத்த படத்துக்கான எதிர் பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது.


''அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்றேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனோட வாழ்க்கை. 'Life of an actor gets tough and tougher' சொல்வாங்க.
 ஒரு நடிகன் தன் இமேஜை, இடத்தைத் தக்கவெச்சுக்க, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் அனுபவிச்சே தீரணும். இருபது, முப்பது வருஷமா ஒரு நடிகனைத் தலைமேல தூக்கி வெச்சுக் கொண்டாடுற ரசிகர்கள் திடீர்னு அவனை வெறுக்க ஆரம்பிச்சா, அதுக்கு முழுக் காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் இப்போ மனசுல ஓட்டிப் பார்த்துக்கிட்டே இருக்கேன்.''   
'' 'துப்பாக்கி’ 100 கோடி பிசினஸ் பண்ணும்னு எதிர்பார்த்தீங்களா?'' 


''இந்தியாவில் இந்தி பேசுற மக்கள் வாழும் மாநிலங்கள்தான் அதிகம். அதனால், இந்திப் படங்களான 'கஜினி’, 'தபாங்’ எல்லாம் 200 கோடியைத் தாண்டுறது சாதாரணம். ஆனா, தமிழ்ப் படமான 'துப்பாக்கி’ 100 கோடி வசூலிச்சது பெரிய விஷயம்தான். சினிமா பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந் துட்டே இருக்கு. அவங்க ரசனையும் வேற பிளாட்ஃபார்முக்கு மாறிடுச்சு. அதனால இனி ரசிகர்களின் ரசனைக்கு ஏத்த மாதிரி படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு. அப்படி அவங்களை ரசிக்கவெச்சா, 100 கோடி என்ன... 200 கோடியைக்கூட அள்ளிக் கொடுப்பாங்க.''


''இப்போதைய ஹீரோக்களில் யாரை உங்களுக்குப் பிடிச்சிருக்கு?''


''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல மிரட்டுறாங்க. என்னைப் பொறுத்தவரை எல்லாருமே பெஸ்ட்தான்!''


''சரி... அப்போ, இப்போ சினிமாவில் உங்களுக்குப் போட்டி யார்?''


''வேற யாரு... விஜய்தான்!''


''உங்களைப் பத்தி இணையத்தில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?''


''ஜாலியான கமென்ட்ஸை எல்லாரையும் போல நானும் ரொம்பவே ரசிக்கிறேன். கடுமையான விமர்சனங்களில் இருக்கும் நியாயத்தை மட்டும் கவனிச்சு, என் அடுத்தடுத்த படங்களில் திருத்திக்கிறேன். பொதுவா, எல்லா ஹீரோக்களைப் பத்தியும்தான் சோஷியல் நெட்வொர்க்களில் கமென்ட் பண்றாங்க. ஆனா, தனிப்பட்ட பெர்சனல் தாக்குதலா,  அவங்க மனசைப் புண்படுத்துறது மட்டுமே நோக்கமா இருக்கும் விமர்சனங்கள்தான் நிறைய இருக்கு. அப்படியான விமர்சனங்களை நான் கண்டுக்கவே மாட்டேன்.''


''எந்தக் கேள்விக்கும் பளிச்னு பதில் சொல்லாம பெரும்பாலும் மௌனமாவே இருப்பது ஏன்?''


''தாய்மொழி தமிழ் மாதிரி, என்னோட இயல்பு மௌனம். எனக்குத் தெரிஞ்சு நிறையப் பேர் வார்த்தையைவிட்டு வாழ்க்கையைத் தொலைச்சு இருக்காங்க. வார்த்தை தடுக்கினால் வாழ்க்கை தடுக்கிடும்கிற உண்மை உணர்ந்தவன் நான். அதான் மௌனமா இருக் கேன்!''


''யார் இயக்கத்தில் நடிக்க ஆசை?''


''இதுவரை நான் நடிச்ச படங்கள் எதுவுமே பெரிய திட்டமிடல்கள் இல்லாமத்தான் நடந்துச்சு. ஆனா, இனி ஒவ்வொரு படத்தையும் அழகா, அம்சமா டிசைன் பண்ணணும்னு  நினைச்சிருக்கேன். பாலா, அமீர்... இவங்க ரெண்டு பேரோட ஒவ்வொரு படத்தையும் பார்த்து அசந்துபோயிருக்கேன். அவங்க படங்களில் நடிக்க ஆசையா இருக்கு.  சீக்கிரமே நடிப்பேன்.''


''குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு?''


''சஞ்சய் இப்பதான் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே நெடுநெடுனு வளர்ந்து செவன்த் படிக்கிறார். பொண்ணு ஷாஷா, செகண்ட் ஸ்டாண்டர்டு. ஷூட்டிங் இல்லாதப்போ ரெண்டு பேரையும் ஸ்கூல்ல டிராப் பண்ணுவேன். எனக்கு பிரேக் கிடைக்கிறப்ப, எங்கேயாவது பிக்னிக் போகலாம்னு கேட்டா, பசங்க லீவு போட மாட்டேங்கிறாங்க. நான் எல்லாம் ஸ்கூலுக்குப் போக அவ்வளவு அடம்பிடிச்சு அழுவேன். ஆனா, சஞ்சய்... ஷாஷா ரெண்டு பேரும் குஷியாக் குதிச்சு ஆடிட்டு ஸ்கூலுக்குக் கிளம்புறாங்க. நான் வீட்ல இருந்தா, 'இன்னிக்கு ஒருநாள் லீவு போடுங்கப்பா... அப்பா உங்களை வெளியே அழைச்சுட்டுப் போறேன்’னு கேட்டா, 'செல்ல அப்பால்ல... ப்ளீஸ்... ப்ளீஸ்... ஸ்கூல் போயிட்டு வந்திடுறேன். அப்புறம் வெளில போகலாம்’னு நம்மளை மயக்கிட்டு ஓடிர்றாங்க. கடைசில நான்தான் வீட்ல வெட்டியா உக்காந்திருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன். செம பசங்க. வாழ்க்கையை ரொம்ப அர்த்தம்உள்ளதா ஆக்கிட்டாங்க!''


''காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் மீது ஆசிட் வீச்சு, மாணவி பலாத்காரம்னு நிறையச் செய்திகள் வருகின்றன. நீங்கள் நடிக்கும் படங்கள் மூலம், உங்கள் 'மக்கள் இயக்கம்’ மூலமா இளைஞர்களிடையே இந்த விவகாரம் தொடர்பா விழிப்பு உணர்ச்சி உண்டாக்கலாமே?''


''இளைஞர்களுக்கு என்னோட ஒரே வேண்டு கோள்... நம்ம வீட்டுப் பொண்ணுக்கு அப்படி ஒண்ணு நடந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தாலே, உங்க மனநிலை நிச்சயம் மாறும். சில நிமிஷ சபலத்தால் உங்க வாழ்க்கையைப் பாதிக்கவிடாதீங்க... உங்களுக்குக்கூடப் பிரச்னை இல்லை... நீங்க பாட்டுக்கு ஜெயில்ல மூணு வேளை சாப்பிட்டு, பொழுதைப் போக்கிருவீங்க. 




ஆனா, அப்புறம் உங்க அம்மா, அப்பாவைக் கொலைகாரனைப் பெத்தவங்கன்னும், அக்கா, தங்கச்சியைக் கொலைகாரன்கூடப் பொறந்த வங்கன்னும் சுத்தி நிக்கிறவங்க அவமானப் படுத்துவாங்க. அதை யோசிச்சுப் பாருங்க... குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், முதுமை மாதிரி இளமைப் பருவமும் நம்ம வாழ்க்கையில் ஒரு அத்தியாயம்தான். அதை மத்தவங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காம அனுபவிங்க.  நாட்டுக்கும் வீட்டுக்கும் நாம செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் எவ்வளவோ இருக்கு... அதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க!''


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6KMstq-jg8QYayHk6MsUaI3dGcuhvDsTlAAS-6KWlqju7b1tKdKMJsmspUHLxt982VP0AKW8G4z0qnnsMtjMRKaWtqo98ASZ1G27yBv_h7JtszzyNQrzd7S52AXUz93VhxQ28-QlhC7w/s1600/Vijay_Sangeetha_Family_05.jpg

விஸ்வரூபம் ரிலீஸ் அன்னைக்கு கமல் ஏன் “லாஸ்” ஏஞ்சல்ஸ் போனாரு?



1. அத்தான், நான் எங்க  அம்மா வீட்டுக்கு போகும்போதெல்லாம் உங்களுக்கு அமாவாசையா?



 ச்சே, ச்சே , மச்சினி ஆசை



---------------------


2. மடி கணினி என பேர் இருக்குன்னு யூஸ் பண்றப்ப எல்லாம் மடிலயே வெச்சிருந்தா என்ன ஆகும்? 



 உன் மடில ஒரு ஃபிகர் கூட மடியாது ,உன்னால முடியாது



--------------------------


3. விஸ்வரூபம் ரிலீஸ் அன்னைக்கு கமல் ஏன் “லாஸ்” ஏஞ்சல்ஸ் போனாரு? செண்ட்டிமெண்ட்டலா சரி இல்லையே?



உன் கண்ணுக்கு லாஸ் , அவர் கண்ணுக்கு ஏஞ்சல்ஸ்



------------------------



4.  அன்புள்ளங்களே! உங்க காதலர் உங்க கை விரல்களுக்கு மருதாணி வெச்சு விட்டா  20 கி மீ தள்ளி நின்னு பேசுங்க ,அதுதான் பாதுகாப்பு 




-----------------------


5. என் ஃபோன்ல சத்தம் கேட்கும்போதெல்லாம் உங்க கிட்டே இருந்து SMS வந்திருக்கான்னு பார்ப்பேன்.



வாவ்! உனக்கு படிக்கத்தெரியுமா?



----------------------------



6.  மேடம், பேட்டி எடுக்கும்போது எதுக்கு கிளாமரா ரம்பா மாதிரி போஸ் காட்டறீங்க? 




துளசி - படம் ரிலீஸ் ஆகும் வரை முகத்தை வெளில காட்டிடாதேன்னாரு



----------------------------



7. 40 தொகுதிகளிலும் அதிமுகவைத் தோற்கடிப்போம்: விஜயகாந்த் # அவங்க கூடவே கூட்டணி வெச்சா? 




----------------------


8. ஜட்ஜ் ஜொள் ஜக்கு -  சென்சார் அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை, எனவே ஆல் கில்மா படங்களையும் நான் ஒரு வாட்டி பார்க்கனும்




------------------------



9. டாக்டர்,, என் பேரு குழலி, எனக்கு கூந்தல் மட்டும் 6 அடி இருக்கு, இப்போ நான் என்ன செய்ய? 



 ஃபுல் லாங்க் குழலின்னு பேர் வெச்சுக்கம்மா


----------------------------


10. என் கணவர் கமல் ரசிகர், நான் விஜய் ரசிகை . 



பிரச்சனையே இல்லை அவர் பேசறது உங்களுக்குப்புரியாது , நீங்க பேசறது யாருக்கும் புரியாது



-------------------------


11. ஜெ - என்ன விஷயம்? 



கமல் - பேசுனபடி தமிழ்நாடு டூ ஆந்திரா, கேரளா பஸ் ஃபேர் வருமானத்துல 50 % குடுத்துடுங்க



-------------------------------


12. ஒபாமா - என்னய்யா மார்க்கெட்டிங்க் பண்றீங்க? 



கமல் படம்  இங்கே கலக்கிட்டு இருக்கு, எப்டி மார்க்கெட்டிங்க் பண்றதுன்னு அவர்ட்டேகத்துக்குங்க


---------------------------


13. தேங்காபர்பி பிடிக்கும்னு சொல்ற காதலியை நம்பு, கடலை பர்பி பிடிக்கும்னு சொல்ற காதலியை நம்பாதே - கடலை ராணியின் காதலனின் டைரியிலிருந்து




-----------------------------



14. டாக்டர், டெயிலி என் கூந்தல்  4 இஞ்ச் வளருது,வெட்டி வெட்டி குறைச்சுக்கறேன்.



 அடப்போம்மா, கவுரி சவுரி செண்ட்டர் போம்மா.நல்ல வருமானம்



---------------------



15. யுவர் ஆனர் எதுக்காக சாட்சிக்கு சரக்கு வாங்கிக்குடுக்கச்சொல்றீங்க?  



குடிச்சவன் பொய் பேசமாட்டான்



------------------------



16. அதிமுகவை அழிக்க கருனாநிதியாலோ,விஜயகாந்தாலோ முடியாது-ஓபிஎஸ்# ஹி ஹி அது உண்மைதான் - சசிகலா




---------------------------


17. கமல் - டாக்டர் ராம்தாசே ஆதரவு தெரிவிச்சுட்டார், அப்புறம் என்ன? 





ஜெ - அதான் நானும் யோசிக்கறேன்



--------------------------------





18. ஜட்ஜ் - ஆர்டர் ஆர்டர் ஆர்டர்



. கமல் - அய்யா, இது கோர்ட் இல்லிங்க , சத்தம் போடாம அமைதியான படம் பார்க்கனும்னா என் பேசும் படம் பாருங்க



----------------------------


19. ஜட்ஜ் - படம் பார்த்துட்டேன், சில டவுட்ஸ் இருக்கு, பூஜா குமாரையும் ,ஆண்ட்ரியாவையும் நேர்ல பார்க்கனும், ஹி ஹி








-------------------------




20. டியர், என் முகம் பார்த்து பேச மாட்டீங்களா?


 ம்க்கும் , பெரிய நமீதா நீ!






------------------------




21. டியர், நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியாப் படலை.



 என்னது? படலையா? இப்போ?






-------------------------




22. 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும்...



 கமல் - நீங்க ஜட்ஜா? டாக்டரா?






--------------------------




23. நீ உதா”சீன”ப்படுத்திவிட்டு சென்றதும் நான் சைனீஷ் ஆகி விட்டேன்






--------------------




24. அன்பே! பூதக் கண்ணாடியில் பார்த்தும் கூட நீ ரொம்ப சின்னப்பொண்ணாவே இருக்கே, எப்போ வளரப்போறே? # நீ எப்போ எப்போ








------------------------




25. கடல் எதனின் ரீ மேக் அல்லது உல்டா?
1. லைஃப் ஆஃப் பை
2. அலைகள் ஓய்வதில்லை
3. படகோட்டி
4. மீனவ நண்பன்






-------------------




26. கொலை செய்யப்பட்டவர் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதா?



இல்லை யுவர் ஆனர் அதுவரை இதை பாருங்க body of evidence, மடோனா படம்








=-------------------------------




27. கமல் ஒரு மீசை வைக்காத பாரதியார் - பாரதி ராஜா # அப்போ ரஜினி விக் வைக்காத  வள்ளுவரா? சும்மா அடிச்சு விடக்கூடாது








------------------------




28. என் திருமணத்திற்கு 3 வருடம் காத்திருங்க - சமந்தா #  திருமண முகூர்த்தத்தை விடுங்க , மேல மேல , வேற வேற ( கோபிநாத் குரலில் )








---------------------------






29. டியர், நீங்க சீர்திருத்தவாதியா?




ஆமா, உங்கப்பா 30 பவுன் போடறேன்னாரு, 40 பவுன் வேணும்னு சீர் திருத்திட்டேன் ஹி ஹி






---------------------------




30. மேடம், நீங்க ஏன் கமலுக்கு ஆதரவு தர்லை?


கவுதமி - தம்பி, வரலாறு தெரியாம உளறிட்டு இருக்கக்கூடாது 






---------------------------------

Saturday, January 26, 2013

விஸ்வரூபத்தின் ஒரிஜினல் ஹாலிவுட் படம்

கமல் இன் விஸ்வரூபம் தமிழகம் தவிர அனைத்து இடங்களிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிட்டு இருக்கு . ட்விட்டர் நண்பர்   சொன்ன தகவல் இது . ஹாலிவுட் படத்தின் 60 % காப்பியாம். அவர் 2 படங்களையும் பார்த்துட்டாராம்.

Traitor (2008)


1. Samir Horn is a former soldier, a devout Muslim, and U.S. citizen in the Middle East selling bomb detonators to Islamic radicals. He joins their cause as both the FBI and a rogue CIA agent track him. Horn escapes a Yemeni prison, goes underground in France where he proves his abilities, and is sent to the United States to choreograph a simultaneous and multiple terror attack. Will the intelligence agencies talk to each other, and can Horn be stopped

Directed by Jeffrey Nachmanoff
Produced by Don Cheadle David Hoberman
Todd Lieberman
Jeff Silver
Ashok Amritraj
Arlene Gibbs
Kay Lieberman
Steve Martin
Richard Schlesinger
Screenplay by Jeffrey Nachmanoff
Story by Steve Martin
Starring Don Cheadle Guy Pearce
Music by Mark Kilian
Cinematography J. Michael Muro
Editing by Billy Fox
Studio Overture Films Mandeville Films Hyde Park Entertainment
Crescendo Productions
Distributed by Overture Films (US) Paramount Pictures (Australia/Netherlands/France)
Release date(s) August 27, 2008
Running time 114 minutes
Country United States
Language English Arabic
Budget $22 million
Box office $27,640,957 [1]
 



2. Samir Horn (Don Cheadle) is an Arabic-speaking Sudanese-American and devout Muslim. His Sudanese Druze father was killed by a car bomb when he was a child. As an adult, Horn is first seen operating as an arms dealer. While negotiating a deal with Omar (Saïd Taghmaoui) in Yemen he is arrested and thrown into a Yemeni jail. Later, Samir and Omar become friends and when Omar's people arrange an escape, he takes Samir with them.



Joining the Islamic Brotherhood, Samir uses the skills he learned as a Special Forces Engineer Sergeant with the U.S. Army Special Forces to bomb the U.S. consulate in Nice, France. The group then devises a plot to place suicide bombers on 50 buses in the U.S. during Thanksgiving. Meanwhile, in London, the Islamic Brotherhood finds out Fareed is being targeted by the FBI and he escapes by a source in the FBI headquarters. It is revealed that Samir is working under deep cover for an intelligence contractor, Carter (Jeff Daniels), with the United States government against terrorism. The FBI agents pursuing him don't know this, and Carter is killed by Omar.


 



Meanwhile, FBI Special Agent Roy Clayton (Pearce) pursues Samir through numerous countries, resulting in their final confrontation in Halifax, Nova Scotia, Canada. While on board a cargo ship to Marseille, France, Samir learns the identity of Nathir and kills Nathir, Fareed, and when Omar is about to kill him, he tells that he switched the bombers' emails and he placed them all on the same bus so all of them died without victims. Canadian police, with the FBI, breaks in and kills Omar and injures Samir.



Later, under an El bridge in Chicago, Samir tells Agent Clayton he feels guilty for killing innocent people. Samir tells Clayton that the Qur'an says that to kill an innocent person is to kill all mankind. Clayton responds by noting that the Qur'an also says that by saving an innocent person, he has saved all mankind, and tells Samir he is a hero.


 



 3.

Traitor (Jeffrey Nachmanoff, 2008)


Struggling against itself and its own genre limitations, Traitor ends up ensnared in its own contradictions. It’s a confounding film, at once seeming to want to appeal to the viewer as both fresh and familiar. Traitor adheres to the formulas and sequences of well-established genres including the prisoner sequence, spy and action movie clichés, even the revenge storyline…
 
 
 
 but implanted in a politically current plot about a potential suicide bomber and attack on U.S. soil. That should have been relevant and hot topic enough to forego the usual by-the-numbers trappings, but there’s so much retread in the script, so much that’s been done before, that it leaves little hope for star Don Cheadle (himself a refreshing choice as an action star) to save it.
 
 
 
 Cheadle does his best Bourne imitation, quite convincingly coming across as the smartest man in the room, and even wills some of these set pieces into working far and away better than they should. But the film is submarined by its own unwillingness to take untraveled paths. Every action sequence has been done before, and better. Every relationship seems like repeats. In the end, it’s just all so uniquely… conventional.

THANX-ALL NET WORKS, ALL CINEMA BLOGS

 ிஸ்கி - நான் 2 பங்கையும் பார்க்கை, பார்க்காமே அு பத்ி எப்பி பேசாம்?னு கேட்கங்குக்கு , கைக்கூடார்த்ில்லை, அு பற்றி நாமிவிப்பு இல்லையா?  

விகடனின் தர வரிசை சரியா?பொங்கல் ரிலீஸ் படங்கள் - விகடன் விமர்சனங்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF_9gCy_7WOUEGSJB_cGQvc0G-YUxECqdQZ3vj3sqfNYdX-fEC3jc4VxlmDTVzGu6D0C3fHpXtJmXw4sV6jFdgffggj7HBVApBQKTy6J5M6gXXyOiaDWtitsBaeDKVZdv6SVE1htgmfYw/s1600/Vishal,+Trisha%27s+Samar+Tamil+Movie+New+Wallpapers,+Latest+HQ+Posters+-+www.TodaysWorld.in+(4).jpg
விமர்சனம் : சமர்

விகடன் விமர்சனக் குழு
வில்லன் யாரென்று தெரியாமல் ஆடும் கண்ணாமூச்சியே... சமர்!  

 'ப்ரேக்-அப்’ ஆன காதலி சுனைனா வைச் சந்திக்க பாங்காக் செல்கிறார் விஷால். ஆனால், அங்கு அவரை வரச் சொன்ன சுனைனா வரவில்லை. திடீரென விஷாலைக் கொல்ல ஒரு கும்பல் முயற்சிக்கிறது. இன்னொரு கும்பல் அவரைக் காப்பாற்றுகிறது. அவரைத் தொழிலதிபர் எனக் கொண்டாடு கிறார்கள். போலீஸ் மரியாதை, ஆடம்பர கார், நட்சத்திர ஹோட்டல் சூட் என வசதிவாய்ப்பு தேடி வருகிறது. சில நாட்களிலேயே அது பறி போகிறது. 'தனக்கு ஏன் இப்படி நடக்கிறது?’ என்று புரியாமல் தவிக்கும் விஷால், தன்னைச் சுற்றிக் கட்டப்பட்ட சதிவலையை அறுப்பதே மீதிக் கதை! 
'டபுள் ஹீரோ கதையா... விஷாலுக்கு ஞாபக மறதியா... ஆள் மாறாட்டக் கதையா... அண்டர்ப்ளே கதையா?’ என்றெல்லாம் யோசிக்கவைத்து, இறுதியில் சஸ்பென்ஸ் கலைத்த விதத்தில் 'அட’ போடவைக்கிறார் இயக்குநர் திரு. கொஞ்ச காலமாக ஃபார்மில் இல்லாத விஷாலுக்கு இது முக்கியமான படம்.



 ஆனாலும், ஸ்க்ரீனில் விஷா லிடம் அந்த உற்சாகம் இல்லையே. சண்டைக் காட்சிகளில் செம ஆக்ரோஷம் காட்டும் விஷால், ரொமான்ஸ் காட்சிகளிலும், என்ன நடக் கிறது என்று புரியாமல் பதறும் காட்சிகளிலும் பரிதவிக்கிறார்.


திடீர் அறிமுகத்தில் விஷாலோடு காதல்கொள்ளும் பெண்ணாக த்ரிஷா. பாடல் காட்சிகளில் அழகாகவும், காதல் காட்சிகளில் அழுத்தமாகவும் இருக்கிறார். சுனைனா... சும்மாச் சுக்கும்ணா!



சிறிது நேரமே வந்தாலும் வில்லன்கள் ஜே.டி.சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவருமே மிரட்டி இருக்கிறார்கள். தாங்கள் சாவோமா, மாட்டோமா என்று விழப்போகும் விமானத்தில் வில்லன்கள் பெட் கட்டி விளையாடுவது ஒரு டெரர் சாம்பிள். ஆனால், எதற்கெடுத்தாலும் அவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பது லேசான அலுப்பு.  



விஷால், சுனைனாவின் பிறந்த நாள் பரிசாகக் காட்டுக் குள் கிடைத்த மலர்களை வைத்துப் பூங்கொத்து தயாரிக்கும் காட்சி கவிதை.


 'நீ எல்லாத்துக்கும் கணக்குவெச்சிருக்கே. நான் காதலை கணக்கே இல்லாம வெச்சிருக்கேன்’, 

கேம்ல பூ விழுமா? தலை விழுமா?னு கேட்டுட்டு இருக்கக் கூடாது... விழவைக்கணும்’, 


 'பயமுறுத்துனீங்க... பயந்தேன். துரத்துனீங்க... ஓடுனேன். சுத்த விட்டீங்க... நின்னேன். அதனால ஜெயிச்சேன்!’-

 எஸ்.ராமகிருஷ்ணன், திருவின் வசனங்கள் ஆங் காங்கே ரசிக்கவைக்கின்றன.



யுவன்ஷங்கர் ராஜாவின் இசையைவிட அதிக மாக ஈர்க்கிறது தரண்குமாரின் பின்னணி இசை. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு பாங்காக் அதிரடியையும், த்ரிஷாவின் அழகியலையும் அள்ளிக் கொடுக்கிறது.


தன்னை டீலில் விட்ட, அவ்வளவு பெரிய வில்லன் கும்பலை எதிர்க்க விஷால் எவ்வளவு தூரம் மெனக்கெட வேண்டும்? ஆனால், போகிற போக்கில் த்ரிஷாவைச் சாலையில் நிற்கவைத்துக் காய் நகர்த்துவது... போங்க பாஸ் போங்கு!


டெரர் கதையில் 'மிரட்டல் டான்’ என்று ஸ்ரீமனைக் காட்டி ஆங் காங்கே கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். வில்லன் அண்ட் கோவில் உறுப் பினராக இருக்கும் ஜெயப் பிரகாஷ், சம்பத், ஸ்ரீமன் திருந்துவது எதற்கு என்றே தெரியவில்லையே?


லாஜிக் பார்க்காவிட்டால், பார்க்க சுவாரஸ்மான த்ரில்லர் விளையாட்டு இந்த சமர்!


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0DIpRyX5E5n1HMtG445elK9KEY7FK5mrUOqZazlgoRvb0WnqcWi8TsBW81OGOF6rY7-8SJdgnkXPITRGl3BCD323KeVNqz1srocrHW2iWFcfMMGu7ndf1Fv1g6hF9R7PLX9fF_MD30g/s1600/Kanna+Laddu+Thinna+Aasaiya+Audio+Release+Posters+Cinema65+(6).jpg





விமர்சனம் : கண்ணா லட்டு தின்ன ஆசையா

விகடன் விமர்சனக் குழு
திர்வீட்டு அழகியை மூன்று வெட்டி ஆபீஸர்கள் கரெக்ட் பண்ண முயல, ஃபிகர் யாருக்கு என்பதே கதை. 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதையா அல்லது சந்தானத்தின் 'மனதில் உதித்த கதை’யா என்பது... பஞ்சாயத் துக்கு உட்பட்டது.


 'காமெடியே துணை’ என்று முடிவெடுத்த பிறகு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தரை இறங்கி தகர அடி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன்.


'கல்யாணம் டு காரியம்’ வரை கான்ட்ராக்ட் எடுத்துச்செய்யும் 'கேக்கே’ சந்தானம், காதல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாகச் சொல்லி நண்பர்களுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துச் சாய்ப்பது, 'பர்பி கீழே கிடக்குது’ என்று பவர் ஸ்டாரின் குடும்பக் கௌரவத்துக்கு ஜிஞ்சர் கொடுப்பது என வழியெங்கும் ரகளை. 'நான் காமெடியன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீயோ காமெடியன்னு தெரியாமலே பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கியே!’ என்று ரீலுக்கு ரீல் பவருக்கு பல்பு கொடுத்தும் பட்டாசு கிளப்புகிறார். 


கண் கூசும் கலர்களில் டி-ஷர்ட், த்ரீ-ஃபோர்த், குண்டக்க மண்டக்க ஹேர்ஸ்டைல் எனப் படம் முழுக்கக் காமெடிக் கூத்து கட்டுகிறார் பவர் ஸ்டார். நடிப்பு, டான்ஸ் என எதுவுமே பவருக்கு வரவில்லை. ஆனால், காமெடி பாடிலாங்குவேஜ் முழுக்க ஜாலிலோ ஜிம்கானா. நடன வகுப்பில் ரசிகர்களைக் கூட்டி அலப்பறை செய்வதும், பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் அடித்து மிரட்டுவதுமாக தன்னைத்தானே கிண்டல் அடித்துக்கொண்டு, நம்மையும் சிரிக்கவைப்பது பவரின் 'பவர்’. (அட... பவர் நடிப்புக்காக தியேட்டரில் நிஜமாகவே 'ஓடுகிறது’ இந்தப் படம்.) உள்ளூர் விளம்பர மாடலாக சேது ஓ.கே.



இந்தி வாத்தியாருக்குப் பதில் சங்கீதச் சக்ரவர்த்தி, டிரில் மாஸ்டருக்குப் பதில் பரத குரு, ரேஷன் அரிசிக்குப் பதிலாக பிரியாணி எனப் புதிய பாத்திரத்தில் பரிமாறப்பட்டு இருந்தாலும், 'இ.போ.நா.வா’-வில் இருந்த இனிப்பும் இன்னொசன்ஸும் இந்த லட்டில் இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒரிஜினலைக் கிண்டலடிக்கும் லொள்ளு சபா தொனி பிரதிபலித்ததையும் தவிர்த்து இருக்கலாம்.



படத்துக்கு ஒரு முடிவு வேண்டுமே? சிம்புவை வம்பாக உள்ளே இழுத்திருக்கிறார்கள்.


ஜெராக்ஸ் பிரதிதான். ரைமிங் டைமிங் டயலாக் காமெடிதான். இருந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது காமெடிச் சரக்கு பக்காவாக வொர்க் அவுட் ஆவது இந்த லட்டுவின் ஹிட்டு!


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSkimcGdyM87ycDl3kItNxigqFi9t1ENeVMS51nfb5Iys5h0H6qA4FPm4n5M4rrucbARCDruqRzAmsDPdZQUlAEEvpgGfJBv17VM7VKjbgiH1TZyV8e_Cb-3Uu0UFSeForbTFcok0ryQM/s1600/Alex+Pandian+Latest+Movie+stills+(1).jpg





விமர்சனம் : அலெக்ஸ் பாண்டியன்

விகடன் விமர்சனக் குழு
நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவரின் மகளை அலேக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர்’ கார் கதை. அதில் மசாலா பெயின்ட் அடித்து, குத்துப் பாடல்களைப் போட்டு, கிளாமர் ரூட்டில் கியர் போட்டால்... அதுதான் 'அலெக்ஸ் பாண்டியன்’.



 அமெரிக்காவின் மோசடியான மருந்து கம்பெனி தமிழகத்தில் மருந்து விற்க அனுமதி கேட்கிறது. நேர்மையான முதல்வர் விசு மறுக்கிறார். அவரைச் சம்மதிக்கவைக்க, அவரது மகள் அனுஷ்காவை  கார்த்தி மூலம் கடத்துகிறது  



வில்லன் குரூப். காதலில் விழும் கார்த்தி அனுஷ்காவைக் காப்பதே கதை.   ஹாலிவுட் காப்பி கதையில், ஏற்கெனவே தமிழ் சினிமாவில் நாம் பார்த்த காட்சிகளைப் புகுத்தி இது அந்தப் படமா, இந்தப் படமா என்று குழம்பவைத்த வகையில் வெற்றிபெற்றிருக் கிறார் இயக்குநர் சுராஜ். மற்றபடி எதுவுமே லேது.


எதிரிகளைப் பந்தாடும்போது கார்த்தியின் முறைப்புக் கண்களும், விறைப்பு உடம்பும் செம. மத்தபடி காமெடி (என்று நினைத்து)  டயலாக்குகள், பாடி லாங்குவேஜ் அத்தனையும் உஷ்ஷ்ஷப்பா... என்ன ஆசையோ, 'வேட்டைக் காரன்’ எம்.ஜி.ஆர், 'டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியன்’ ரஜினியை இமிட்டேட் செய் கிறார்.


டைட்டில் போடும்போது வருகிற அனுஷ்கா, நடுவில் காணாமல் போய், இன்டர்வெல்லின்போதுதான் மீண்டும் தலைகாட்டுகிறார். என்ன ஆச்சு? அழகான அனுஷ்கா இதில் கொஞ்சம் டயர்டாகவும், கொஞ்சம் முதிர்ச்சியாகவும் தெரிகிறாரே?


கதைக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கிளாமர் காட்டிவிட்டு பை பை சொல்கிறார். ஆரம்பத்தில் மூன்று தங்கைகளைக் காப்பாற்ற சந்தானம் படும்பாடு சிரிப்ஸ் என்றால், அதுவே முன்பாதி முழுக்க இழுப்பது செம கடுப்ஸ். சந்தானத்துக்கு டபுள் மீனிங் டயலாக் பேச சொல்லித் தர வேண்டுமா? இதில் மூன்று தங்கச்சி ப்ளஸ் 'ஏ’டாகூட விளையாட்டுக்கள்.


தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே லாஜிக்கைக் கிழித்துவிட வேண்டும்போல. அமெரிக்காவில் இருந்து கிளம்பிவந்து, தன் மகளையே கடத்தும் வில்லனை ஒரு மாநில முதல்வர் என்னவெல்லாம் செய்ய முடியும்? வில்லனின் போனுக்காகக் காத்திருக்கிறார் முதல்வர். தன்னைக் கடத்திய கார்த்தியை, அவர் தண்ணீர்கொடுத்தது, தலையைத் தடவிக் கொடுத்தது போன்ற அல்பக் காரணங்களுக்காக அனுஷ்கா லவ்ஸ் பண்ணுவதெல்லாம்... 'மாயன்’ எஃபெக்ட். ஒரு ஆம்னி வேனை வைத்துக்கொண்டு படா ஸ்கார்பியோக்களை கார்த்தி பறக்கவிடுவது எல்லாம்... இட்ஸ் எ மோட்டார் மிராக்கிள்.


ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காட்சிகளே அடி பின்னி எடுப்பதால், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் ஒட்டாத பாடல்களும், சரவணனின் கிறுகிறு சுற்றல் கேமராவும் பெரிய தவறாகத் தெரியவில்லை.
இயக்குநருக்கு ஒரு வேண்டுகோள்... ஆந்திரா டைப் காரசாரப் படங்களை ஆந்திராவில் எடுங்கள். தமிழ்நாடு பாவம் பாஸ்!



 http://www.cinemalead.com/photo-galleries/anushka-stills/wmarks/anushka-stills02.jpg



மக்கள் கருத்து 


1. என்னுடைய நண்பன் ஒருவன் டிக்கெட் எடுத்து விட்டேன் என்று சொன்னதால் அலெக்ஸ் பாண்டியன் போய் பார்த்தேன். பேராசையின் மொத்த உருவம் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்கும் . தெலுங்கில் ஒரு 80 கோடி தமிழில் ஒரு 50 கோடி , கல்லா கட்டிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
படம் பார்க்கும் யாராவது லாஜிக்கோ கதையோ கேட்டால் செருப்பால் அடிப்பது என்று முடிவு எடுத்து விட்டு படம் எடுத்து இருக்கிறார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டில் வந்த மிக மோசமான தமிழ்ப்படம் என்று இந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தை தைரியமாக சொல்லலாம். எல்லா காமெடியும் டபுள் மீனிங் காமெடி, காதில் ஒரு வரி கூட நிக்காத பாடல்கள், கதை என்ற வஸ்து மருந்துக்குக்கூட இல்லை, பார்த்துப் பார்த்துப் புளித்துப்போன காட்சிகள், அதைவிட புளித்துப் போன சண்டை காட்சிகள்……………………..சுருக்கமாகச் சொன்னால்……………………………………………

இந்த மாதிரி ஒரு மகனும் இப்படி சில உறவினர்களும் வாய்த்திருப்பதற்கு சிவகுமார் எத்தனை தடவை கம்ப ராமாயணம் படித்தாலும் பாவம் போகாது.



2. தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே லாஜிக்கைக் கிழித்துவிட வேண்டும்போல. அமெரிக்காவில் இருந்து கிளம்பிவந்து, தன் மகளையே கடத்தும் வில்லனை ஒரு மாநில முதல்வர் என்னவெல்லாம் செய்ய முடியும்? வில்லனின் போனுக்காகக் காத்திருக்கிறார் முதல்வர். தன்னைக் கடத்திய கார்த்தியை, அவர் தண்ணீர்கொடுத்தது, தலையைத் தடவிக் கொடுத்தது போன்ற அல்பக் காரணங்களுக்காக அனுஷ்கா லவ்ஸ் பண்ணுவதெல்லாம்... 'மாயன்’ எஃபெக்ட். ஒரு ஆம்னி வேனை வைத்துக்கொண்டு படா ஸ்கார்பியோக்களை கார்த்தி பறக்கவிடுவது எல்லாம்... இட்ஸ் எ மோட்டார் மிராக்கிள்.




3. அலெக்ஸ் பாண்டியனுக்கு, மதுரை டாக்டர் பி. சரவணனின் அகிலன் எவ்வளவோ தேவலாம். ஏன் கார்த்திக்கு இவ்வளோ கொலவெறின்னு தெரியலை. அதுலவும் இது முழுக்க ஆந்திரா பக்கமே எடுத்த படம் போலிருக்கு (மொட்டை போடும் காட்சியில் வரும் கோவிலில் காணப்படும் போர்டுகளைப் பாருங்கள்). சந்தானம் வழக்கம் போல இதில் சாக்கடையைக் கழுவிக் கழுவி ஊத்தியிருக்கிறார். க.ல.தி.ஆ.ல கூட இரட்டை அர்த்தம் இல்லை. இதில் ஏன் இவ்வளவு? ஓ, ஒரு வேளை சொந்தப் படம்ன்றதால அடக்கி வாசிச்சிட்டாரோ?



4. படமா இது?!காமெடியா இது?!பெண்கள் கேவலப்படுத்தப் படுகின்றனர்;அசிங்க வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.லட்டு தின்ன ஆசையா கூட ஒரு விதத்தில் பரவாயில்லை...மனோபாலாவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!



நன்றி - விகடன் 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPPh8A3WloGporEBJThMjLiZ9VggSYHprh9ITvLfKTGzQ12ox2QdpBu2owdD0WEGUMiRuXGT9lVSo28vshEmImhboQARcLRiFTRVmfGBwElFyE55J4inJ9ebLyHfoglbuVgQMUrXhmGO0/s1600/tamil_hot_actress_trisha_sexy_in_saree_navel_showing_image.jpg

திருப்பூரில் பதிவர் திருவிழா , புத்தக வெளியீட்டு விழா @ 27 1 2013


மக்களே! திருப்பூர்ல நாளை  27 1 2013  ஒரு பதிவர் சந்திப்பு இருக்கு. சமூக ஆர்வலரும் ,சமுதாயப்பொறுப்பும் , அக்கறையும் மிக்க, நான் மிக மதிக்கும் ஒரு பதிவர் திருப்பூர் ஜோதிஜி அவர்களின் புத்தக வெளியீட்டு விழா நடக்க இருக்கு , கொங்குமண்டல்ம் மற்றும் சாத்தியம் உள்ளவர்கள் அனைவரும் வருக. 


 விழா டீட்டெயில்ஸ் டைப் அடிக்க டைம் இல்லை, சோ ஆல்ரெடி பலர் போட்ட பதிவை காபி பேஸ்ட்டிங்க் 


டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா - முதல் தகவல் அறிக்கை

வணக்கம் நண்பர்களே
இந்த தகவலை என் தொடர்பில் இருக்கும், எனக்குத் தெரிந்த, என் மின் அஞ்சல் முகவரியில் இருந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன். இப்போதுள்ள வேலைப்பளூவின் காரணமாக முக்கியமான பலருக்கும் இந்த தகவல் சென்றடையாமல் இருக்கக்கூடும் என்பதற்காக இங்கே எழுதி வைக்கின்றேன். 
இந்த மாதம் முழுக்க இது தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கே இடம் பெறும்.  
திருப்பூருக்குள் இருக்கும் பலரையும் தெரியும். சிலரின் மின் அஞ்சல் முகவரி தெரியாமல் இருக்கும். திருப்பூரில் உள்ள அரசு துறை, அதிகாரத்துறை, உளவுத்துறை, மாசுகட்டுப்பாட்டுத்துறை, சாயப்பட்டறை முதலாளிகள், ஏற்றுமதி நிறுவனங்கள், முதலாளிகள், பணியாளர்கள் என்று சகலரும் என் தளத்தை படித்துக் கொண்டு இருப்பதால் இப்படி ஒரு விழா திருப்பூரில் நடக்கப் போகின்றது என்பதற்காக இங்கே எழுதி வைக்கின்றேன். இந்த விழாவிற்கான அழைப்பிதழ் தயாராகிக் கொண்டு இருப்பதால் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியமானவர்களாக இருப்பதால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் எழுதி வைக்க வேண்டுகின்றேன்.  அப்படி வெளியே காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அவசியம் ஞாயிற்றுக் கிழமை அன்று அரங்கத்திற்கு வரும் படி அன்போடு அழைக்கின்றேன்.
பலரிடமிருந்து வாழ்த்துரைகள் வந்து சேர்ந்தது. சிலரின் மின் அஞ்சலில் உள்ள ஸ்பேர்ம் பகுதிக்கு போய் இருக்க வாய்ப்பு இருப்பதால் ஒரு வேளை நமக்கு அனுப்பினாரா என்று சோதிக்க விரும்புவர்கள் மட்டும் உங்கள் மின் அஞ்சலில் உள்ள ஸ்பேர்ம் பகுதியை சோதித்துப் பார்க்கவும். தொடர்ச்சியான மின் அஞ்சல் பறிமாற்றம் இல்லாத மின் அஞ்சல் முகவரி  என் அனுபவத்தில் ஸ்பேர்ம் பகுதிக்குத் தான் சென்று விடுகின்றது. அழைத்துச் சொன்னதும் சோதிக்க வேண்டியதாக உள்ளது. இது உங்கள் புரிதலுக்காக மட்டுமே.
உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

வணக்கம். 
27 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்பிரபல எழுத்தாளர்கள்வலைபதிவர்கள்,தொழில் அதிபர்கள்சுற்றுப்புறச் சூழல் சார்ந்து செயல்படும் சமூக அக்கறை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் டாலர் நகரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் தங்களை அன்போடு அழைக்கின்றோம்.
இந்த நூல் ஸ்விஸ் ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4 தமிழ்மீடியா குழுமத்தின் ஒரு அங்கமான 4 தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) மூலம் வெளிவருகின்றது.
திருப்பூரில் உள்ள தமிழ்வழிக்கல்வியை சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமளிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ் இணையம்திரட்டிகள் பற்றிய முழுமையான விபரங்கள்வலைபதிவுகளின் வளர்ச்சிமாற்று ஊடகம் குறித்த எண்ணங்கள்,திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை வலைபதிவுகளைப் பற்றிய அறிமுகத்தோடுஅவர்களின் தளம் குறித்த விபரங்களை விழா சிறப்பு மலராக வெளிவர உள்ளது.
அருகில் உள்ள கோவை மற்றும் இதனைச் சார்ந்த மற்ற பகுதிகளின் நண்பர்களின் வேண்டுகோள்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருப்பூரில் உள்ள பிரபல தொழிலதிபர் சமூக சேவகர், அமெரிக்கா பெட்னா சங்கத்தில் இருக்கும் கேபிகே செல்வா அவர்களின் அறக்கட்டளை மூலம் இந்த விழா நடத்தப்படுகின்றது.இவர் இங்குள்ள பல்வேறு சங்கத்தின் பொறுப்பாளர். கல்விக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டு வருபவர்.

விழாவுக்காக தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் தமிழ்ச்செடிசேர்தளம்தொழிற்களம்கனவு இதழ் பத்திரிக்கை போன்றவர்கள் மூலம் இந்த விழா நடக்க இருக்கின்றது. இந்த விழாவில் வேறு சில நிறுவனங்களும் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.
முழுமையான விபரங்கள்அழைப்பிதழ் அடுத்த கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கடிதம் தங்களின் நினைவுக்காக,தங்களின் திட்டமிடுதலுக்காக உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஆதரவுக்காக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது. விழா குறித்த விபரங்கள் நண்பர்களின் தளத்தில், தமிழ்செடி, சேர்தளம், தொழிற்களம், தேவியர் இல்லம் தளத்தில் வெளியிடப்படும்.
நட்புடன்
ஜோதிஜி

டாலர் நகரம் விழாவுக்கு வந்தவர் வருகை தரப் போகின்றவர்கள் - தகவல்கள்

4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திறக்காக சிலரை பேட்டி கண்டது. அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகின்றேன்.
இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வருகின்ற ஞாயிறு (27.1.2013) டாலர் நகரம் விழாவில் உரையாற்றுகின்றார்.
திருப்பூர் வருகின்ற நண்பர்கள் கவனத்திற்கு.
தங்கும் வசதி திருப்பூரில் உள்ள எஸ் எஸ் ஹோட்டல் என்ற தங்குமிடம் நண்பர்களுக்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு காலையில் வந்து சேர முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் மற்றும் இந்த விழாவில் தங்கள் மேலான ஒத்துழைப்பை உழைப்பை தேவியர் இல்லத்திற்காக பல வகையிலும் தந்து உதவிக் கொண்டிருப்பவர்களை கீழ் கண்ட அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும். 
தங்களுக்கு தேவையான உதவிகளை, வழிகாட்டுதலை,அழைத்து வருதல் போன்றவற்றில் உதவி புரிவார்கள்.
சேர்தளம் தலைவர்.
வெயிலான் ரமேஷ் 98 94 03 59 17 
தமிழ்ச்செடி அங்கத்தினர்கள்
வீடு சுரேஷ் குமார் 98 439 41  916
இரவு வானம் சுரேஷ்  860 86 910  55
வாகன போக்குவரத்து ஒருங்கிணைப்பு மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகள் செய்தவர் செய்து கொண்டிருப்பவர்
நிகழ்காலத்தில் சிவா 97 900 36 233
எனது உடன்பிறப்பு போல கடந்த நான்கு ஆண்டுகளாக என் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவியர் இல்லத்தின் மேல் அக்கறை கொண்டு சென்னையில் இருந்து திருப்பூர் வந்து இந்த விழாவுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்
ராஜராஜன்  99 411 43 821
புத்தகம் தொடர்பாக உங்கள் வீடு தேடி வர தொடர்புக்கு, மற்றும் மொத்த புத்தகத்தையும் வாங்கி சந்தைப்படுத்துதல் என்ற மகத்தான் உதவியை செய்து கொண்டிருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தின் பங்குதாரர் தன்னுடைய பெயரை எந்த இடத்திலும் போடக்கூடாது என்று கட்டளையோடு தேவியர் இல்லத்தின் மேல் அதிக அக்கறை கொண்டிருப்பவர். அவரின் பணியாளர் அலைபேசி எண்
திரு. மகேஷ் அலைபேசி எண் 97 89 311 666
இங்கே குறிப்பிட்ட எந்த அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளும் போது விழாவில் கலந்து கொள்ள, உங்கள் வருகையை உறுதிப்படுத்தும் போது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கின்றார்கள்.
27 1 2013 காலை 9.30  மணிக்கு விழா தொடங்குகின்றது.  
காலை 9  மணிக்கு அரங்கத்தில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். 
தாய்த்தமிழ் பள்ளி குழந்தைகளின் அற்புத பாடல் நிகழ்ச்சிகளை நீங்கள் அவசியே கண்டு களிக்க வேண்டும்.  தமிழ் இலக்கியம் சார்ந்த, மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், மற்றும் தந்தை பெரியார் பெருமையை பறைசாற்றும் பாடல்கள் என் நீங்கள் இது வரையிலும் கேட்டிராத பல அற்புத பாடல்களை தங்களது அசாத்தியமான திறமைகளால் உங்களை மகிழ்விப்பார்கள்.
என்னுடைய புத்தக அறிமுகம், வெளியீடு அறிமுகம் என்பதை விட பல நண்பர்களை இதன் சந்திக்க வாய்ப்பு என்பதாக கருதியுள்ளேன். 
இது தவிர வலைபதிவர்களை மேடையில் பேச வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.  
தாய்த்தமிழ் பள்ளி, ஞானாலயா வை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். தமிழ் இணையம் மற்றும் திரட்டிகள் குறித்த அறிமுகத்தை திருப்பூரில் உள்ள பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
விழா மலர் மூன்று பகுதியாக கொண்டு வந்துள்ளோம். 
குறிப்பாக தமிழ்மணம் உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் அவர்களின் உழைப்பை இந்த உலகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்ச்செடி அமைப்பாளர்களில் ஒருவரான திரு வீடு சுரேஷ்குமார் பிடிஎஃப் கோப்பாக தனது அற்புத வடிவமைப்பு திறமையின்  மூலம் உருவாக்கியுள்ளார். 
விழா அன்று அந்த கோப்பு இணையத்தில் வெளியிடப்படும்.  
எளிமையான அந்த விழா மலர் விழா அரங்கத்தில் வெளியிடப்படும். 
25.1.2013 அன்று புத்தக கண்காட்சியில் பின்னல் அறக்கட்டளை மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையம் என்ற இரண்டு கடையில் டாலர் நகரம்  புத்தகத்தை கொண்டு போய் நண்பர்கள் கொடுத்தார்கள். 
திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் குறித்த ஒரு ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளார்கள். 
மாதிரி டாலர் நகரம் புத்தகங்களை பின்னல் மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையத்திற்கு நண்பர்கள்  கொண்டு போய்ச் சேர்ந்த அந்த நிமிடத்தில் காத்திருந்த ஒருவர் உடனடியாக வாங்கிக் கொண்டு சென்றதை நண்பர்கள் அழைத்துச் சொன்ன போது என்னை விட என் தம்பிமார்கள் அதிக மகிழ்ச்சியில் அழைத்துச் சொன்னார்கள். .  
நாலைந்து பேர்கள் டாலர் நகரம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்றதை பார்த்த போது தான் எனக்கே உங்கள் புத்தகம் கடைகளுக்கு வந்து விட்டது என்று தெரிந்தது என்று வெயிலான் ரமேஷ் அழைத்துச் சொன்னார்.
உள்ளுரில் பத்திரிக்கையுடன் கொடுக்கப்பட்ட சுவரொட்டி விளம்பரங்கள் மூலம் முன்பதிவு செய்ய என்ற தகவலை என் மேல் அக்கறை டெக் மீடியா (கணினி துறை) நண்பர் விஜய் மற்றும் விகேஆர் பிரிண்ட்டிங்,  செண்பகம் மக்கள் சந்தை, சாப்ளின் வாட்ச் ஹவுஸ், ப்ரகாஷ் நியூஸ் ஏஜென்ஸி போன்றவர்கள் தங்களின் மகத்தான் உதவிகள் மூலம் விளம்பரம் என்பதையும், நேரிடையான சந்தைப்படுத்துதல் என்ற புதிய சாதனையை உருவாக்கி காட்டியுள்ளனர்.
நிச்சயம் இந்த புத்தகம் திருப்பூர் முழுக்க சென்று சேரும் என்று நம்புகின்றேன். 
வெட்டிக்காடு ரவி பெங்களூரில் இருந்து திருப்பூர் வந்து சேர்ந்து தற்போது எஸ் எஸ்  ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றார். இவர் இந்த விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வாரமாக அவரது தினசரி கடமைகளில் ஒன்றாக அழைத்து பேசி உதவிகள் பல செய்து தன் பங்களிப்பை செய்து உள்ளார். 
முகம் தெரியாமல் பழகி இதயத்தால் இணைவது தான் இணைப்பது தான் இந்த தமிழ் இணையம். 
எழுத்தாளர் சிந்தனையாளர், பத்திரிக்கையாளர் என் ஆசான் திரு. ஞாநி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு எஸ் எஸ் ஹோட்டல் வந்து சேர்கின்றார்.
திரு. அப்துல்லா, திரு. ஜோசப் பால்ராஜ் (சிங்கப்பூர்) இருவரும் இன்று மாலை திருப்பூரில் இருக்கின்றார்கள்.
மீதியுள்ள விபரங்கள் இன்று அடுத்த வெளியிடப்படும் அடுத்த பதிவில் வெளியிடுகின்றேன்.
வாருங்கள் நண்பர்களே.


நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில், சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும், குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,

விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல், பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939


திருப்பூர் பழைய் பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/aYfP1

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/vsvuI
திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து அரங்கை வந்தடைய - http://goo.gl/maps/gwN4m




நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233
நன்றி - அண்ணன் ஜோதிஜி