Thursday, November 22, 2012

மணிரத்னத்தை மறைமுகமாகத்தாக்கிய கே.பாலசந்தர் பேட்டி

யாரும் போகாத பாதையில் போனேன்! - கே.பாலசந்தர்

எண்பதாண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்த்திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்திருப்பவர் இயக்குநர் கே.பாலசந்தர். செறிவான கதை, நுட்பமான வசனம், சம்பவப் பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு, துணிச்சலான முடிவுகள் இவையே இவரது முத்திரைகள். திரையுலக அனுபவத்தில் பொன்விழாவை நெருங்கிக்கொண்டிருக்கும் அவரை நாம் சந்தித்தபோது..






.எம்.ஜி.ஆர் நடித்த "தெய்வத்தாய்' படத்தின் வசனகர்த்தாவாக தொடங்கிய உங்கள் திரைப்பயணம் இப்போது நாற்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இப்பயணம் திருப்தியளிக்கிறதா?







மகிழ்ச்சியளிக்கிறது. நான் எதை எப்படி செய்யவேண்டுமென்று நினைத்தேனோ அதை அப்படியே செய்திருக்கிறேன். மற்றவர்கள் செய்வதை நாம் செய்யக்கூடாது என்று நினைத்தேன். "ரோட் லெஸ் டிராவல்ட்' என்று ஆங்கில்த்தில் கூறுவார்கள். அதுபோல அதிகமாக யாரும் பயணிக்காத பாதையில் பயணிக்க நினைத்தேன். அப்படித்தான் பயணித்திருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம், ரசிகர்களுடைய ஆதரவுதான். நான் வித்தியாசமாக செய்த எல்லா விஷயங்களையும் ஆதரித்தார்கள்.






 அதனால்தான் தொடர்ந்து என்னால் புதுமையான பல விஷயங்களைச் செய்ய முடிந்தது. அது மட்டுமல்ல, என்னுடைய படங்களின் தயாரிப்பாளர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரமும் ஒரு காரணம். அரசாங்கம் எனது படங்களை பாராட்டி விருதுகள் கொடுத்து ஊக்குவித்ததும் நான் தொடர்ந்து வித்தியாசமான படங்களை எடுப்பதற்குக் காரணமாக அமைந்தது. அதுவும் சினிமா துறைக்கு இந்திய அரசாங்கம் தரக்கூடிய மிகப்பெரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது எனக்குக் கிடைத்தது நான் நிச்சயமாக எதிர்பார்க்காத ஒன்று. எனக்கு எல்லாமே மகிழ்ச்சிதான். 







ஆரம்பகால படங்களில் அதிக பாடல்கள், பின்பு செறிவான கதைகள், அடுத்து அலங்கார வசனங்கள், பின்பு நடைமுறை வசனங்கள் இப்போது வசனம்கூட குறைந்துவிட்டது. இந்தச் சூழலில் ஒரு ரைட்டருக்கு சினிமாவில் இடம் இருக்கிறதா? இருக்குமா?







யெஸ். இப்பொழுதெல்லாம் யதார்த்தமாக எடுக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு நாம் எப்பவும் என்ன பேசுவோமோ அதையே டயலாக் என்று வைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. கலை என்பது எதையுமே அழகுபடுத்தும் விஷயம்தானே? வசனம் என்பது சினிமாவில் முக்கியமான விஷயம். இளங்கோவன், கலைஞர் இவர்களுடைய வசனமெல்லாம் ரொம்பவும் பேசப்பட்டது. வசனங்களுக்காகவே ஓடின படங்களெல்லாம் இருக்கிறது. செயற்கையான நாடகத்தனமான வசனங்கள் வேண்டாம் என்று சொல்வது சரி. ஆனால் வசனம் என்ற ஒன்று வேண்டாம், நினைத்தபடி பேசிக்கொள்ளலாம் என்பது சரியல்ல






. சில காட்சிகளுக்கு வசனம் தேவையில்லாமல்கூட இருக்கலாம். விஷுவலாக காட்சியை விளக்கக்கூடிய இடத்தில் வசனத்திற்கு வேலையில்லை. அது வேறு விஷயம். அப்படி எடுத்தால் வெல் அண்ட் குட். ஆனால் வசனம் என்று வந்துவிட்டால் அது வசனமாகத்தான் இருக்கவேண்டும். கலோக்கியல் என்கிற பெயரில் கண்டபடி பேசிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.யதார்த்தத்தை வேறு விஷயங்களில் இவர்கள் காட்டலாம். பாட்டுப்பாட ஆரம்பித்ததும் ஹீரோவும் ஹீரோயினும் ஸ்வீடனுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் போய் ஆடிப்பாடுவதை மாற்றி யதார்த்தமாக இங்கேயே பாடலாம். ஹீரோ சண்டை போட ஆரம்பித்ததுமே மேலே பறந்து அங்கேயே நின்று நான்கு பேரை உதைத்துவிட்டு பின் கீழே இறங்குவதை மாற்றி யதார்த்தமாக சண்டை போடலாம். யதார்த்தம் என்பது எல்லா விஷயத்திலும் வரவேண்டும்.






 மிகையான தொழில்நுட்பம் படைப்புத்திறனை அமுக்கிவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?






ஆமாம். அமுக்கித்தான் விடுகிறது. ஒரு நடிகரை லண்டனுக்கு கூட்டிக்கொண்டுபோய் அரை நாள் நடிக்க வைத்து அனுப்பிவிட்டால் போதும், நாம் விரும்புகிறபடி அவருடைய காட்சிகளை அமைத்துக்கொள்ளலாம் என்கிற அளவுக்குப் போய்விட்டால் படைப்புத்திறனுக்கு அங்கே என்ன வேலையிருக்கிறது? படைப்புத்திறன் ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நடிகருக்குத்தான் அந்தப் படத்திலும் அந்த பாத்திரத்திலும் என்ன ஈடுபாடு இருக்கும்?







இது ஒரு உலகமயமாதல் காலம். இன்றைய தேதியில் "தண்ணீர் தண்ணீர்' படம் போன்ற வட்டார வழக்கு வசனங்களும் "முத்துக்குளிக்க வாரிகளா...?‘ போன்ற பாடல்களும் ரசிக்கப்படுமா? வட்டார வழக்கு படங்களுக்கு எதிர்காலம் உண்டா?






நிச்சயம் உண்டு. நிச்சயம் ரசிக்கப்படும். தமிழ்ப்படங்களுக்கு இப்போது உலகம் முழுக்கவும் மார்கெட் இருக்கிறது. உலகம் முழுவதும் பார்க்கப்படுவதும் உண்மைதான். ஏ.ஆர்.ரஹ்மான், கமல், மணிரத்னம் இவர்களை எல்லா நாட்டினரும் அறிந்துள்ளனர். ஜப்பானில் ரஜினிக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருப்பதாக பேப்பரில் படிக்கிறோம். ஸோ, இவர்களுடைய தமிழ்ப்படத்தை பார்க்கிறவர்கள் தமிழ் வாழ்க்கையை, தமிழ் கலாசாரத்தைப் பார்க்க விரும்புவார்கள். திருநெல்வேலி பாஷை ஜப்பானில் புரியாது என்று சொல்வது சரியல்ல. ஏனென்றால், அதைப் புரியவைக்க சப்-டைட்டில் என்று ஒன்று இருக்கிறது. அப்படிப் பார்த்தால் திருநெல்வேலி பாஷை தஞ்சாவூர் மக்களுக்கே புரியாதே..






. அவர்கள் ரசிக்காமல் இல்லையே... நன்றாக இருக்கும் எதையும் நிச்சயம் யாரும் ரசிப்பார்கள். என்னுடைய "அனுபவி ராஜா அனுபவி' ஹிந்தியில் ரீமேக் ஆனபோது, தமிழில் நாகேஷ் நடித்த பாத்திரத்தில் மகமூத் நடித்தார். அவர் "முத்துக்குளிக்க வாரீகளா..?‘ பாட்டின் முதல் நான்கு வரிகள் அப்படியே தமிழில் இருக்கட்டும் என்று சொன்னார். 


சங்கர் - ஜெய்கிஷன் இசையமைத்திருந்தார்கள். பல்லவி முழுக்க தமிழில் இருக்க, சரணம் மட்டும் ஹிந்தியில் இருந்தது. அவர்கள் புரியவில்லை என்று சொல்லவில்லையே? நன்றாக இருக்கும் எதையும் எப்பவும் ரசிப்பார்கள். ஐம்பது வருடமாக ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. நாம் ரசிக்காமலா விட்டுவிட்டோம்?






உங்களுடைய படங்களில் மட்டும்தான் பாட்டு என்பது வெறும் பாட்டாக இல்லாமல் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற ஒரு விஷயமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து இதை எப்படி படமாக்குவது என்று உங்களைத் திணற வைத்த பாடல் ஏதாவது இருக்கிறதா?






பொதுவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் நான் ஒரு பாடல் காட்சியில் என்னென்ன சம்பவங்கள் நடக்க வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்துவிடுவேன். அதற்கு ஏற்றாற்போல் பாடலையும் இசையையும் வாங்கிவிடுவேன். ஆனால் எனக்குப் சவாலாக அமைந்தது என்று இரண்டு பாடல்களைச் சொல்லலாம்.


 முதலாவது "பட்டணப்பிரவேசம்' படத்தில் வரும் "வான் நிலா நிலா...' என்கிற பாட்டு, பாடலும் இசையும் போட்டி போட்டு சிறப்பாக அமைந்திருந்தன. இரண்டாவது, "சிந்து பைரவி' படத்தில் வரும் "மோகம் எனும் தீயை...' பாட்டு. இதிலும் பாடல், இசை, குரல் எல்லாமே அருமையாக அமைந்திருக்கும். இந்தப் பாட்டைப் படமாக்க பல இடங்களைத் தேடி, கடைசியில் விசாகப்பட்டிணத்தில் கடல் நடுவே இருந்த பாறையில் சிவகுமாரை உட்கார்ந்து பாடவைத்து படமாக்கினேன்







.உங்கள் படங்களில் நீங்களே பெருமைப்படுகிற படம் எது? "இந்தப் படத்தை நாம் எடுத்திருக்க வேண்டாமே..' என்று நினைக்கிற படம் எது?







பெருமைப்படுகிற படம் என்று கேட்டால் நான் "புன்னகை' படத்தைத்தான் சொல்வேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்பே காந்தியத்தைப் பற்றி பேசிய படம் அது. நான் மதிக்கும் பலபேர் இன்றும் என்னைப் பார்த்ததும் முதலில் பேசுவது "புன்னகை' படத்தைப் பற்றித்தான். ஸோ, அந்தப் படத்தைப் பெருமையாக சொல்லலாம்.எடுத்திருக்க வேண்டாம் என்று நினைக்கிற படம் அப்படியென்று எதைச் சொல்ல முடியும்? என்னுடைய ஒவ்வொரு படத்தையும் நான் விரும்பித்தான் எடுத்தேன்





. சில படங்களை ரசிகர்கள் விரும்பவில்லை. அவ்வளவுதான். ஆனால், ஒரே ஒரு படத்தை மட்டும் என்னுடைய நண்பர்களும் ரசிகர்களும் "இது உங்கள் படம்போல் இல்லை', உங்களிடமிருந்து இப்படியொரு படத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்றெல்லாம் சொன்னார்கள். அந்தப் படம், "எங்க ஊர் கண்ணகி'. அந்தப் படம் வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.அது வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதனாலேயே அதை நான் எடுத்திருக்க வேண்டாமே என்று இப்போது கூறுவது நியாயமாகாது. அந்தப் படம் பெரிய வெற்றியடைந்திருந்தாலும் அதைப் பெருமையான படம் என்றும் கூறமாட்டேன். அது வெற்றி பெறாததால் எடுத்திருக்ககூடாத படம் என்றும் கூறமாட்டேன். அதுவும் என் படம்தான்.







 "எ பிலிம் பை கே.பாலசந்தர்' எப்போது திரையில் பார்க்கலாம்?





யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.



நன்றி -  சினிமா எக்ஸிரஸ்

"தீனா' , "துப்பாக்கி' ஒப்பிட்டா? - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி

கால்ஷீட்டுக்காக கதை எழுத மாட்டேன்! - ஏ.ஆர்.முருகதாஸ்

இப்போது பேசலாம், அப்போது பேசலாம் என தாமதித்துக் கொண்டே இருந்தது இயக்குநர் முருகதாஸூடனான உரையாடல். எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடன் பேசியதிலிருந்து..
.கமர்ஷியல் படங்கள்தான் எப்போதும் விஜய் பாணி. உங்களுக்கும் விஜய்க்கும் செட் ஆகுமா? எப்படி நடந்தது இந்த மேஜிக்?
 அதுதான் சினிமா. விஜய்யுடன் நான் சேர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியம். அவருடன் சேர எனக்கு பெரிய திட்டம் எதுவும் இல்லை. ஒரு கதையை பிடிப்போம். இது எந்த ஹீரோவுக்கு செட்டாகும் என பார்ப்போம். அப்படித்தான் என் எல்லா சினிமாக்களும். சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து விஜய் எனக்கு பழக்கம். நான் உதவி இயக்குநராக இருக்கும் போதே ""ஒரு சினிமா பண்ணலாம் கதை ரெடி பண்ணுங்க''ன்னு சொல்லியிருக்கிறார் விஜய். நானும் கதை தயார் செய்வேன்.
 ஆனால் அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகள் எங்களை சேர விடவில்லை. நான் ஒரு படத்தை தொடங்கியிருக்கும் போது, அவர் இன்னொரு படத்தை முடிக்கும் தருவாயில் இருப்பார். நான் தயார் நிலையில் இருந்தால் அவர், ""இந்த ஒரு படத்தை முடித்து விட்டு வந்துடுறேன்'' என்பார். இப்படியே காலம் கடந்து விட்டது. எஸ்.ஏ.சி.சார்தான் எங்களை இணைத்தார். ""விஜய்க்கு ஒரு படம் பண்ணனும். எப்போதுமே தயாராக இருக்கோம்'' என்றார். நானும் "ஏழாம் அறிவு' முடித்து விட்டு உடனடியாக விஜய் படத்துக்கான ஒன் லைனை பிடித்து விட்டேன். அதுதான் இந்த "துப்பாக்கி'.





படத்தில் விஜய் ஒரு இலங்கை அகதி, ராணுவ வீரன், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்னும் என்னென்மோ செய்திகள் உலவுகிறதே இதில் எது உண்மை?



இதற்கு பட்டென பதில் சொல்லி விட முடியாது. ஏனென்றால் அதில்தான் கதை இருக்கிறது. நீங்கள் நினைக்கிறது எல்லாமே இதில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். விஜய் ரசிகர்களுக்காக ஒரு படம் செய்திருக்கிறேன். அவர்களுக்கு நிச்சயம் சந்தோஷம் காத்திருக்கிறது. விஜய் ஸ்டைலை விட்டு நிச்சயம் கதை விலகிப் போகாது. ப்ளஸ் கொஞ்சம் கமர்ஷியலையும் சேர்த்திருக்கிறோம். ஹீரோ, ஹீரோயின் இருவருமே மும்பையில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள்.



எல்லாமே கலந்து கிடக்கும் மும்பையின் சுவராஸ்யமான முகம்தான் கதை. தமிழ் சினிமா பார்க்காத புதிய தொனியில் கதை இருக்கும், ஜெகதீஷ் என்ற இளைஞனுக்கு ஏற்படும் பிரச்னைகள். அதற்கு அவன் எடுக்கும் முடிவுகள் என கதையில் பரபரப்பு கூட்டியிருக்கிறோம். முதல் பாதி, அடுத்த பாதி இரண்டுமே பரபரக்கும். இந்த கதை ஏதேச்சையாகத்தான் முடிவானது. முதலில் ஒன் லைன்தான் சொன்னேன். ஷூட்டிங் கிளம்புவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் விஜய்யிடம் கதை சொன்னேன். "துப்பாக்கி' என்ற பெயருக்கேற்ற பரபரப்பு கூட்டியிருக்கிறேன்.



ஹிந்தி உலகில் உங்களுக்கு பெரிய பெயர் இருக்கிறது. பாலிவுட் ஸ்டார்கள் எல்லாம் உங்கள் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள். அதை பயன்படுத்தலாமே. ஏன் மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு?



எனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்கிறேன். நீங்கள் சொல்லுவதை போல் நான் ஹிந்தியில் மட்டுமே படம் இயக்கி கொண்டிருக்க முடியாது. தமிழ் சினிமாதான் என் அடையாளம். அந்த அடையாளத்தை என்றைக்கும் நான் இழக்க மாட்டேன். ஹிந்தி "கஜினி' சமயம் எனக்கு நிறைய கூச்சம். ""இவர்தான் டைரக்டரா''ன்னு கேட்டவர்கள் நிறைய பேர். படம் பார்த்தவர்கள் ""இவரா இந்தப் படத்தை எடுத்தார்''ன்னு ஆச்சரியமாக கேட்டார்கள். அப்போதே அப்படியென்றால், "தீனா' எடுக்கும் போது நான் எப்படி இருந்திருப்பேன்.



 "கஜினி' எல்லா மொழிகளுக்கும் செட் ஆகிற கதை. அது மாதிரி கதைகள் கிடைத்தால் நிச்சயம் அங்கு இருப்பேன். கால்ஷீட் தர காத்திருக்கிறார்கள் என்பதற்காக எந்த கதையையும் கொண்டு போய் திணிக்க முடியாது. மும்பையில் வாழும் ஒரு தமிழ் இளைஞனின் கதைதான் "துப்பாக்கி'. அதை தமிழில் எடுத்தால்தான் நன்றாக இருக்கும். சில மாற்றங்களோடு "துப்பாக்கி' ஹிந்திக்கும் ரீமேக் ஆக போகிறது. அக்ஷய்குமார் ""எப்போ வேண்டுமானாலும் வாங்க''ன்னு கால்ஷீட் வைத்து காத்திருக்கிறார். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. நான் எங்கே இயங்க வேண்டும் என்பதை கதைகள்தான் தீர்மாணிக்க வேண்டும்.



அஜித், சூர்யா, விஜய் மூன்று பேரையும் வைத்து இயக்கியிருக்கிறீர்கள். மூன்று பேரும் எப்படி?



எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அஜித். யாருக்கும் பெரிய நம்பிக்கை இல்லாதபோது, ""கதை சொல்லு பார்க்கலாம்'' என்று கைப்பிடித்து அழைத்து வந்தவர். அவர் மீது எப்போதுமே எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. பவர் ஃபுல்லா அவருக்கு கதை தயார் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இயல்பா, உண்மையா இருக்கும் அவருக்கு கதையும் அவரைப் போலவே அமைய வேண்டும். பார்க்கலாம். சூர்யா இல்லையென்றால் ஏழாம் அறிவை என்னால் செய்திருக்கவே முடியாது.



 சினிமாவுக்கான புரிதல் அவருக்கு நிறையவே இருக்கிறது. இன்னும் என்ன வேண்டும் என கேட்கிற தைரியம் உள்ள ஹீரோ அவர். விஜய்யை அவ்வப்போது பார்ப்பேன். ஓரிரு வார்த்தைகள் பேசுவார். இவர் இப்படித்தான் என நானும் நினைத்து விடுவேன். நெருங்கி பழகி பார்த்தால் அவ்வளவு விஷயம் பேசுகிறார். நான் என்றைக்கும் ஆச்சரியமாக பார்க்கும் ஹீரோ அவர். மும்பை வாசம் அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ""ஹிந்திக்கு வாங்க''ன்னு சொல்லியிருக்கிறேன். தமிழை தவிர்த்து எங்கும் படம் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை அவர் மாற்றினால், சீக்கிரமே ஹிந்திக்கும் அழைத்துப் போய் விடுவேன்.



 "ரமணா'வுக்கு பின்புதான் விஜயகாந்த் அரசியல் பேசினார். அதே ரமணா தெலுங்கில் வந்த பின்தான் சிரஞ்சீவி அரசியலுக்குள் வந்தார். ஆனால் விஜய் எப்போதே அரசியல் வட்டத்துக்குள் வந்து விட்டார். என்ன நடக்கும் என்ற கணிப்பு இருக்கிறதா?




ஹீரோக்களின் அரசியல் ஆசைகளுக்கு படம் எடுப்பது என் வேலை இல்லை. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். கதைக்கு எது தேவையோ அதை மட்டுமேதான் கொடுப்பேன். ஹீரோக்களிடமும் அதற்கேற்ற உழைப்பை மட்டும்தான் கேட்பேன். "ரமணா'வுக்குப் பின் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும், "ரமணா' தெலுங்கு ரீமேக்குக்கு பின் சீரஞ்சீவி அரசியலுக்கு வந்ததும் நானே எதிர்பார்க்காத ஒன்று.



"தீனா' முருகதாஸýக்கும் "துப்பாக்கி' முருகதாஸýக்கும் என்ன வித்தியாசம்?



கொஞ்சம் நிதானம், பக்குவம் கூடியிருக்கிறது. ஆனால் கள்ளக்குறிச்சி முருகதாஸீன் பேஸிக் கேரக்டர் இன்னும் மாறவில்லை. எதற்காகவும், எப்போதும் நான் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்பட்டதே இல்லை. "தீனா' தொடங்கி ஹிந்தியிலும் படம் இயக்கி, இப்போது "துப்பாக்கி' ஏழாவது படம். ஆனாலும் என் பலம், பலவீனம் இரண்டையும் தெரிந்து கொள்ளும் ஆசையே இன்னும் வரவில்லை. இவர் நல்லவர் என நினைத்து முகம் காட்டினால், மறுநாளே மறைத்து வைத்திருக்கும் கத்தியின் மூலம் தாக்க வருகிறார். நல்லது, கெட்டதை பிரித்து பார்க்க கொஞ்சம் பழக்கம் வந்திருக்கிறது. வெற்றி கிடைத்தால் கொண்டாடுகிற அளவுக்கு, தோல்வி கிடைத்தால் நான் துவண்டு விடுவேன். அதனால் என்னை தோல்வி தொட்டு விடக் கூடாது என்ற பயம் இருக்கிறது.
 நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்

சித்தி படம், அவர்கள் படம் கம்போசிங்க் அனுபவங்கள் -எம்.எஸ்.விஸ்வநாதன்

மீட்டருக்கு மேட்டர்!

‘‘மேடையில் மெட்டமைத்தேன்!’’

எம்.எஸ்.விஸ்வநாதன்

ஒரு முறை சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில் கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட ஃபிலிமாலயா சினிமா பத்திரிகை ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான ரசிகர்கள் விழா மண்டபத்தில் திரண்டு இருந்தார்கள். இயக்குனர் கே. பாலசந்தர் உள்ளிட்ட பல இயக்குனர்களும், எஸ்.பி.பால சுப்ரமணியம், பி.சுசிலா, எஸ். ஜானகி போன்ற முன்னணி பாடகர், பாடகிகளும் கலந்து கொண்டார்கள். விழாவுக்கு முன்பு என்னுடைய இசைக் கச்சேரி.
கச்சேரி தொடங்குவதற்கு முன்பு, இயக்குனர் பாலசந்தர் வித்தியாசமாக ஒரு காரியம் செய்தார். மைக் முன் வந்து, ‘விஸ்வநாதனும், கண்ணதாசனும் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள். ஒரு பாடலை கவிஞரிடம் எழுத, அதற்கு எம்.எஸ்.வி.யிடம் இசையமைத்து வாங்க நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். முடியவில்லை. அவர்கள் சேர்ந்து இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இப்போது படத்தில் இடம் பெறுகிற பாடலுக்கான சிச்சுவேஷனை விளக்குகிறேன். அதற்கேற்ப விஸ்வநாதன் மெட்டு அமைக்க, கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிக் கொடுப்பார். அந்தப் பாடலையும், இந்த மேடையில் எம்.எஸ்.வி. பாடுவார்என்று ஒரு முன்னுரை கொடுத்தார்.
எனக்கும், கவிஞருக்கும் இன்ப அதிர்ச்சி. காரணம் பாலசந்தர் இப்படி ஒரு ஐடியாவோடு, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது. ‘இப்படி ஒரு அறிவிப்பைச் செய்து, நான் அவர்களுக்கு வேலை கொடுக்கப் போகிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. என் படத்துக்குப் பாடல் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவே நான் இப்படி ஒரு அறிவிப்பை இங்கே செய்திருக்கிறேன். சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் இருவரும் சேர்ந்து பாடலை எனக்குத் தருவார்கள் என நம்புகிறேன்என்று அவர் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார்.

பாலசந்தரது சுயநலத்தில் ஒரு பொது நலமும் இருந்தது. அது என்ன? அரங்கத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களுக்கு எப்படி ஒரு இசையமைப்பாளரும், கவிஞரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, ஒரு டைரக்டருக்குத் தேவையான பாடலை உருவாக்குகிறார்கள் என்பதை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைக்கிறதில்லையா? ரசிகர்கள் ஒரு புதிய நேரடியான அனுபவத்துக்குத் தயாரானார்கள் என்பதற்கு அடுத்த சில நிமிடங்கள் விடாமல் ஒலித்த ரசிகர்களது கைதட்டலே சாட்சி.
நான் என் ஹார்மோனியத்தின் முன்னால் அமர்ந்து தயாரானேன். பாலசந்தர் சொன்ன சிச்சுவேஷனுக்குரிய பாடல் வரிகளை யோசிக்கத் தொடங்கினார் கவிஞர். டியூன், வேறு டியூன், இன்னொரு டியூன் என்று நான் மாற்றி, மாற்றிப் போட்டுக் காட்டினேன். கவிஞரும் டியூனுக்கு ஏற்ப வார்த்தைகளைத் தேடித்தேடிப் போட்டு எழுதினார். ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு மேடையில் நடந்ததை ரசித்தார்கள். இப்படியாக நூற்றுக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் ஒரு திரைப்படப் பாடல் உருவானது அதற்கு முன்பும் இல்லை; அதன் பிறகும் நடந்ததில்லை. பிறகு அந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்குச் சொல்லிக் கொடுக்க, அவர் மேடையில் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார். ரசிகர்கள் அதனைக் கைதட்டி, ரசித்துப் பாராட்டினார்கள்.
மறுநாள் அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது. அது எந்தப் பாடல் தெரியுமா?
கமல்ஹாசன், ரஜினிகாந்த், சுஜாதா ஆகியோர் நடித்தஅவர்கள்படத்தில் இடம்பெற்ற
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்?
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ
- என்ற பாட்டுதான்!

இந்தப் பாட்டு உருவானபோது, இன்னும் சில மாதங்கள் கழித்து இது குறித்து ஒரு சர்ச்சை கிளம்பப் போகிறது என்று நானோ, கவிஞரோ துளியும் எதிர்பார்க்கவில்லை. அதாவது, இந்தச் சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகி இருக்கும். புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அதன் ஓர் அங்கமாகநேருக்கு நேர்நடைபெற்றது. மாணவர்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். நானும் அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டே வந்தேன். திடீரென்று ஒரு மாணவர், ‘சார்! அன்னிக்கு யுனிவர்சிடி சென்டினரி ஹாலில் என்னமா ஆக்ட் பண்ணினீங்க! பிரமாதம் போங்க!’ என்றார். சட்டென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன தம்பி சொல்லறீங்க?’
மூணு மாசத்துக்கு முன்னால, யுனிவர்சிடி சென்டினரி ஹாலில் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவுல பாலசந்தர் சார் பாட்டுக்கு சிச்சுவேஷன் சொல்லறாராம்! நீங்க உடனே டியூன் போடறீங்களாம்! அதுக்கு கண்ணதாசன் ஆன் தி ஸ்பாட் பாட்டு எழுதறாராம்! அதை மேடையில எஸ்.பி.பி.பாடறாராம்! முன்னாலயே எல்லாத்தையும் ப்ளான் பண்ணிட்டு வந்து, என்னமா ஆக்ட் பண்ணினீங்க சார் எல்லாரும்!’

அப்புறம்தான் எனக்கு விஷயம் புரிந்தது. உண்மையாகவே ஆன் தி ஸ்பாட் நடந்த ஒரு விஷயத்தை இப்படியும் ஒரு செட் அப் என்று ஒரு சிலர் நினைக்கக்கூடும் என்று என் மண்டைக்கு உறைத்தது. அன்று உண்மையாகவே அது ஆன் தி ஸ்பாட் நடந்ததுதான் என்பதை நான் விளக்கிச் சொல்லியும் அந்த மாணவர் நம்பத் தயாராக இல்லை.
அடுத்து இன்னொரு குண்டை வீசினார். ‘இப்போ என்கிட்டேகூட ஒரு பாட்டு ரெடியா இருக்கு. எங்கே இதுக்கு டியூன் போட்டுக் காட்டுங்க பார்க்கலாம்.’
அந்த மாணவரிடமிருந்து அந்தப் பாடலை வாங்கிப் பார்த்தேன். பாடல் மாதிரியே இல்லாமல், ஏதோ வசனம் போல இருந்தது. அதையே காரணமாகச் சொல்லி, டியூன் போட மறுத்தால், அவர் சொன்ன செட்-அப் குற்றச்சாட்டு உண்மை தானோ என்ற சந்தேகம் எல்லா மாணவர்களுக்குமே வந்து விடுமே! உடனே என் அசிஸ்டன்ட் ஒருவரை அனுப்பி, என் காரிலிருந்த ஹார்மோனியத்தை எடுத்துக் கொண்டுவரச் சொன்னேன். அதில் அந்த மாணவரதுபாடல்வரிகளுக்கு டியூன் போட்டுக் காட்டினேன். மாணவர்களின் கைதட்டல் ஓய்வதற்கு வெகு நேரமானது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம்சித்தி’. ஜெமினிகணேசன், பத்மினி, முத்துராமன், எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்த படம். அதில் ஒரு தாய் தன் பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது பாடும் பாடல். ‘அந்தக் குழந்தை இப்போது எழுந்து விடக் கூடாது; நிம்மதியாகத் தூங்கட்டும்; தூக்கம் கலைந்து கண் விழித்துக் கொண்டுவிட்டால், அப்புறம் குழந்தையால் தூங்க முடியாதுஎன்று சிச்சுவேஷனைச் சொன்னார்.
நான் கவிஞரிடம், ‘நீங்க பாட்டை எழுதிக்குடுங்க! அதுக்கு நான் டியூன் போடறேன்என்று சொல்லிவிட்டு, கவிஞரின் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தை என்ன என்று ஆர்வத்தோடு காத்திருந்தேன்.
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே!’
அடடா! என்ன வார்த்தைகள்! அப்படியே கவிஞரைக் கட்டி அணைத்துக் கொண்டேன்."

விஸ்வநாதனின் அப்பா சுப்ரமணியன், பொள்ளாச்சி அருகில் ஆனைமலையில் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வந்தார். சாதாரண வருமானம். சராசரி குடும்பம். ஒரு பிரச்னை காரணமாக, சுப்ரமணியன் பொதுப் பணித்துறை வேலையிலிருந்து விலகினார். அப்போது, விஸ்வநாதனின் தாய்வழி தாத்தா, திருச்சியில் ஜெயில் வார்டர். அவர் உதவியால், திருச்சி ஜெயிலில் சுப்ரமணியனுக்கும் வார்டர் வேலை கிடைத்தது. எனவே குடும்பம் திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. திருச்சியில் சுப்ரமணியனுக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது விஸ்நாதனுக்கு வயது நான்கு. அப்பா மரணத்தால் நிலை குலைந்த விஸ்வநாதன் குடும்பத்தில் அடுத்த 15 நாட்களுக்குள்ளே இன்னொரு சோகம் நடந்தது. விஸ்வநாதனின் தங்கை வேசம்மா, திடீரென்று இறந்து போனாள். விஸ்வநாதனின் இழப்பைப் புரிந்து கொள்ளாத ஊரார், ‘அப்பனையும், தங்கச்சியையும் அடுத்தடுத்து முழுங்கிவிட்டு நிற்கிற துக்கிரிப் பயல்என்று தூற்றினார்கள்.
- ராணி மைந்தன்