Monday, April 09, 2012

ரகளை ( RAGALAI ) - தமனாவின் தெலுங்குப்பட விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid4cMeEzeaSslCr0aPwNnHKVhSHwIl0P-dZJUrLvuHQ_9QXV0gAzrZfTmrRqB8KIGnvcwzJ0YT6wn7k8iK-Wlg1uRmg8lacNUwoDSF1CPHj10Li7MHP8nQ45Vs5oP5QsET1cQMpyiGsZE/s400/Ragalai+Movie+Posters+Mycineworld+Com+(4).jpg 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோட சீமந்தப்புத்திரன் ராம் சரண் தான் ஹீரோ. இஞ்சி மஞ்சள் இடுப்பழகி, லூஸ் தனமான முக சேஷ்டை அழகி தமனா தான் ஹீரோயின். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி தான் புரொடியூசர்.. போட்ட முதலீடு 40 கோடியாம். ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .. வழக்கமா தமிழ்ல கதை கேட்டு ஷூட்டிங்க் போறவரு இதுல மறந்துட்டார் போல.

ஹீரோ ஒரு பெட் பைத்தியம். உடனே நித்யானந்தா மாதிரி எந்நேரமும் பெட்லயே கிடப்பாரா?ன்னு கேட்காதீங்க.. பந்தயம் எனும் பெட் கட்டற பைத்தியம்.  அவர் கிட்டே அஜ்மல் ஒரு பெட் கட்டறார்.. ஊருக்கே தாதா வில்லன். அவன் பொண்ணு  தமனாவை ஐ லவ் யூ சொல்ல வைக்கனும்.. அதுவும் 30 நாட்களில்... இதுதான் கண்டிஷன். பந்தயத்தொகை ரூ  20 லட்சம்.. 

 இதெல்லாம் ஒரு பந்தயமா?ன்னு யாரும் கேட்றக்கூடாது என்பதற்காகவும், தாய்க்குலம் உச்சு கொட்ட வைக்கவும் ஹீரோ அப்பா திடீர்னு சீரியஸ் ஆகி ஹாஸ்பிடல் செலவு வந்துடுது. பந்தயத்துல ஜெயிச்சா பொண்ணு , பணம் 2ம் கிடைக்கும். 

முதல் டைம் ஹீரோ ஹீரோயினுக்கு லவ் லெட்டர் தந்துட்டு அப்பா என்ன?ன்னு கேட்டதும் இது ரியாலிட்டி டி வி ஷோன்னு சொல்லி சமாளிக்கறார் .. அந்த கேனை அப்பனும் அதை நம்பிடறான்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZPuKLwrc7o9ttyZeETBq-i-dSZQqFqdrdgTHUkhbAwOg3rdiKSQe0PWLFxcwyLKAqy4R7r2AnEYRcxG3oVg5tWDzN_-kaVvFUNbqWZpUjl-Eo1ByN3NetIH1cypPGAPldnM70IxoZHo/s1600/tammah-Ragalai-Movie-Stills-4.jpg


2வது டைம் தமனா வீட்டுக்கே சாரி பங்களாவுக்கே போய் அங்கே இருக்கற அடியாளுங்க 346 பேரை அடிச்சுட்டு  லவ் லெட்டர் தர்றாரு.. 

 3 வது டைம் தமனாவையே தூக்கிட்டு போய் ஒரு ஃபுல் டே தனிமைல வெச்சிருந்து ஐ லவ் யூ சொல்றாரு.. தமனா லவ்க்கு ஓக்கே சொல்லுது.. 

 இடைவேளை வரப்போகுது. எந்த திருப்பமும் இல்லைன்னா எப்படி? இது எல்லாமே தமனாவின் டிராமா தான்.. ஏன்னா தமனாவின் அப்பா உண்மையில் தமனாவுக்கு அப்பாவே இல்லை.. கார்டியன். தமனாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அவரோட 18 வது வயசுல ஆட்டையை போட அவர் போட்ட பிளானுக்கு எதிர் பிளான் தான் இது.. 

 ஹீரோ வேற யாரும் இல்லை.. சின்ன வயசுல தமனாவின் லவ்வர் தான்.. 

இடைவேளைக்குப்பிறகு ஒரே ஃபிளாஸ் பேக் மயம்.. அடி தடி மயம் தான். ஆந்திராக்காரங்க  அநியாயத்துக்கு இ வா வா இருக்காங்க.. என்ன குப்பை படம் குடுத்தாலும் அதை ஹிட் ஆக்கிடறாங்க. அவ்வ்வ்

 சிம்பு நடிச்ச சிலம்பாட்டம், சரவணா இந்த 2 படத்தையும் மிக்ஸ் பண்ணூனா ரகளை ரெடி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இதுக்கு 40 கோடியா? அய்யோ அம்மா.


 ஹீரோ ராம் சரண் ஆள் நல்லா தான் இருக்கார். அவர் பண்ற அலப்பரைகள் தான் தாங்க முடியல.. ஓடற ரயில்ல இன்னொரு ரயில்ல ஜம்ப் பண்றதெல்லாம் ஓவரோ ஓவர். ரயில் 190 கி மீ வேகத்துல வர்றப்போ அவர் ஜீப்ல 160 கிமீ வேகத்துல எதிர்த்திசைல வந்து சடார்னு கடைசி டைம்ல விலகறதெல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான். 


தமனா எப்பவும் போல லெமனா வர்றார். அவ்ரோட புறமுதுகு ஃபுல்லா காட்டறார்.. ராஜ வம்சம் போல்..... அப்புரம் எப்பவும் போல லோ ஹிப் , லோ கட் எல்லாம் உண்டு.  பாடல் காட்சிகளில் அவர் காட்டும் ஹிப் மூவ்மெண்ட்கலை எல்லாம் சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ.. ? நோ கேள்வி எஞ்சாய்.. 

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/ragalai-01/wmarks/ragalai-0102.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. மனசுல இருக்கறதை சாதிக்கறதுக்குப்பேருதான் தில்லு.



2. அந்தப்பசங்க வேலைக்கு கூப்பிடறாங்களே. ஏன் போகலை?

 அவங்க எல்லா “ மேட்டர்ஸ்”க்கும் கூப்பிடறாங்க.. போகவா?


3.  நீ  என்னை லவ் பண்ணுனா அது மரோ சரித்ரா, இல்லைன்னா ரத்த சரித்ரா.. 


4. ஜெயிக்கறதுல இருக்கற கிக் வேற எதுலயும் இல்லை.. தோக்கடிக்கறதுல உள்ள த்ரில்லே தனிதான்.. 

5. மாஸ்டர்.. யூ ஏஜ் பார்.... நீ லேட் பார்.. 


6. ஆண்டவனால சாதிக்க முடியாததை அரசியல் வாதி சாதிச்சுடறான்

7.  அவன் வந்து உன்னை அடிக்கற வரை நீ என்ன புடுங்கிட்டு இருந்தே?

 காமெடி ஆக்டர் பிரம்மானந்தம் - ஃபேஸ் டூ ஃபேஸ் சொல்றேனேன்னு சங்கடப்படாதீங்க.. உங்க மகளை அவன் கடத்திட்டுப்போனப்ப  நீங்க என்ன புடுங்கிட்டு இருந்தீங்களோ அதே தான் நானும் புடுங்கிட்டு இருந்தேன்

8. ஹீரோவின் கேவலமான பஞ்ச் டயலாக் - நீ கத்துனா கூச்சல்.. நான் கத்துனா அது மின்னல்.. 

9.  பஞ்சப்பரதேசிக்கு பர்கர் கிடைச்சாக்கூட ஃபிகர் கிடைக்க மாட்டேங்குதே?

10. என்னது? முட்டை சாப்பிட மாட்டீங்களா? 

 ஆமா.. ஆனா முட்டையோட அம்மாவை சாப்பிடுவேன் ஹி ஹி 

11.. பீஸ் ஃபிரெஸ்ஸா?

 ரெஃப்ரஸ் பண்ணிப்பாரு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim7ulWJFxOadJcXgdyYEpg4CEKlUoR4Utra5W8lBqA5TJSe0TxEtrmJ-xkuIy6GwI5li2GaxVrIY3d5QxDrA9H3IwkcsMqPpSSObEbToMl-OSCQFRRw81wA7YXM3IlxDhfjYXoqIutVfg/s1600/Indian+Actress+Tamanna+Bhatia+Very+Hot+%2528162%2529.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. டி வி ரியாலிட்டி ஷோ என சமாளிச்சு ஹீரோ வில்லனுக்கு சர்ஃப் எக்சல் சோப் பவுடர் பாக்கெட் தரும் இடம்.. செம அப்ளாஸ் வாங்கும் சீன்.. 

2. இந்த டப்பா கதையை ஆர் பி சவுத்ரியிடம் சொல்லி ஓக்கே வாங்கியது

3.  தமனாவை முடிஞ்சவரை திறமை  “ காட்ட “ வைத்தது

4.  டில்லக்கு டில்லக்கு டில்லா, உன்னை பார்க்கும், வெள்ளைப்பூவே, ரகளை ரகளை யூத் ரகளை என 4 பாட்டு சுமார் ரகம்.. படமாக்கப்பட்ட விதமும் ஓக்கே 



http://wallpaperpassion.com/upload/4119/tamana-hot-sexy-wallpaper.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்

 1. பல சீன்கள் சரவணா, சிலம்பாட்டம் ல சுட்டு இருக்கீங்களே? யாரும் கண்டு பிடிக்கலையா?

2. ரகளை ரகளை யூத் ரகளை பாட்டும்.. ஹீரோவுக்கான பில்டப் மியூசிக் தீமும் அப்படியே 100% சிலம்பாட்ட சுடல்./.. 

3.  ஹீரோ அடிக்கடி கூலிங்க் கிளாஸை கழட்டி ஆடியன்ஸை நோக்கி வீசிட்டே இருக்காரே ஏன்? அவருக்கு பிடிக்கலைன்னா போடாமயே விட்டிருக்கலாமே? ஸ்டைலு? அவ்வ்வ்

4.  ஓப்பனிங்க் சீன்ல அவ்வளவ் பெரிய பணக்காரப்பையன் யாகம் நடக்கும் இடத்துல இருந்து வீட்டுக்கு ஏன் நடந்து பொறான்? அதுவும் வெறும் கால்ல?

5. பாம் வெடிச்சு கார் எல்லாம் கரி ஆகுது.. பில்டிங்க் எல்லாம் பீஸ் பீஸ் ஆகுது. ஆனா அந்த ஒன்றரை அணா தாயத்து கயிறு அப்படியே இருக்கே.. அது எப்படி?

6. ஹீரோ கூடவே ஹீரோயின் 4 நாள் பகல், இரவு எல்லாம் சுத்தறா.. அப்ப எல்லாம் தாயத்தை  பார்க்காம வில்லன் ஹெலி காப்டர்ல வந்து கடத்தறப்பத்தான் பார்க்கறா.. ஏன்? 

7. வில்லன் ஹீரோ கிட்டே அவனோட ஃபிலாஸ் பேக்கை ஏன் சொல்லி டைம் வேஸ்ட் பண்றான்?


http://s4.postimage.org/d3zfu7gv6/Tamanna_Hot_Pictures_Badrinath_6.jpg


எதிர் பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 

எதிர் பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - தமனாவின் ஜொள்ளர்கள் மட்டும் பார்க்கவும்.. வேற யாரும் பட டிரெயிலர் கூட பார்த்துடாதீங்க

 இந்த கேவலமான குப்பையை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்


http://www.bollywoodcollections.com/contents/member/hotdesibabes/photos/MidThumbs/07f1123e--10x25vhcgou1zdttjk.jpg

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 5


பண்ணிக்குட்டி ராமசாமி:
1. உங்க பாசுக்கு (ஆபீஸ்) நீங்க பண்ணிட்டு இருக்கறது தெரியுமா? தெரிஞ்சா என்ன செய்வீங்க?

ஹி ஹி யோவ் ராஸ்கல் ராம்சாமி.. நான் என்ன கொள்ளை கொலையா பண்றேன்.. ரவுசு..?!கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போறதுதானே?ஃபீல்டு ஒர்க்கர்ஸ் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்?ஆனாலும் தெரிஞ்சா சங்குதான் ஹி ஹி ஆஃபீஸ் மேனேஜர் ஃபோன் நெம்பர் கேட்ட்ராதேயும் அடுத்த கேள்வியா.. ஹி ஹி 





2. உங்க ஸ்கூல் டைம் கேர்ள்பிரண்டை [அதான் முன்னாள் (இப்பவும் முன்னாள்தானே?) காதலி] இப்போ திடீர்னு பார்க்கும் போது, ஏன்டா சிபி இன்னும் நீ திருந்தலியான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?


ஹி ஹி ஹி ஹி அப்டீம்பேன்.....(இதான் சாக்குன்னு டேய்!!! ம் ம் )  


3. பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்கும் போது பார்க்கக் கூடாத ஆளை எதிரும் புதிருமா சந்திச்சு வழிஞ்ச அனுபவம் இருக்கா? அப்போ எப்படி சமாளிச்சீங்க?

10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. அவர் பால்கனில நான் பெஞ்ச்ல... என்னை பார்த்துட்டார்னு தான் நினைக்கறேன் ஹி ஹி சமாளீக்க தெரியலை.. 


4. நீங்க இப்படி வாராவாரம் வெள்ளிக்கெழமைன்னா பிட்டுப்படம் பார்க்கறது வீட்ல தெரியுமா?


ஹி ஹி ஹி தெரியாது.. (யோவ்,.. நானும் பொறுமையா பதில் சொல்லிட்டே இருக்கேன், எகனை மொகனை கேள்வியா கேட்டா எப்படி?)


5. திடீர்னு நமீதாவை சந்திக்க நேர்ந்தால் என்ன பேசுவீங்க?

எதுக்கு பேசனும்? ஹி ஹி (அதாவது நடிகைங்க கூட எல்லாம் பேச்சு எதுக்கு? ந்னு அர்த்தம்)


6. நீங்க கிழி கிழின்னு விமர்சனத்துல கிழிச்ச படத்தோட டைரக்டரை சந்திக்க நேர்ந்தால் உங்கள் ரியாக்சன்?

சித்து + 2 பட விமர்சனத்துல கே பாக்யராஜ் சாரை நக்கல் அடிச்சிருந்தேன்.. 18 வருஷமா அவர் பத்திரிக்கைல ஜோக் எழுதிட்டு இப்படி கவுத்துட்டானே என உதவி ஆசிரியரிடம் வருத்தப்பட்டதா எனக்கு தகவல் வந்தது.. ஆனா நேரடியா என் கிட்டே எதுவும் கேட்கல.. 


7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது.  இருக்கும்..


8. என்னைப் போன்றவர்கள் உங்களை கலாய்க்கும் போது சமய்ங்களில் ஓவராகவும் போய்விடுகின்றது. எப்பொழுதாவது வருத்தப்படும்படி நேர்ந்ததுண்டா?

ஹா ஹா குட் கேள்வி.. நான் செம ஜாலி டைப்.. எதையும் ஜாலியா எடுத்துக்குவேன்.. இருந்தாலும் சில சமயங்களில் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. 

9. நெல்லை பதிவர் சந்திப்புக்கப்புறம் ஏன் திருந்திட்டீங்க.. இல்ல இல்ல திருந்திட்டேன்னு சொல்றீங்க? இதுக்கு முன்னாடி யாருமே இதுவரை உங்களை திருந்தச் சொல்லலியா?

யோவ்.. விளையாடறீங்களா/ மொத்தம் 37 பேரு.. ஹாலை சாத்திட்டாங்க.. மாத்தி மாத்தி.. 4 மணி நேரம்.. திணறத்த்திணற.. ஹி ஹி அந்த எஃபக்ட் கொஞ்ச நாளாவது இருக்காதா?


10. பதிவு எழுதி அதுனால அடிவாங்கி இருக்கீங்களா? இல்ல வேற தொந்தரவுகள் ஏதாவது வந்திருக்கா?

கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... சரிங்க.. நான் ஆஃபீஸ்ல இருக்கேன்,.. மாலைல வந்து எடுத்துடறேன்னேன்.. ஆனா அவங்க 10 அடியாளுங்களை வீட்டுக்கு அனுப்பி அதை எரேஸ் பண்னாத்தான் போவோம்னாங்க.. அப்புறம் வேற வழி இல்லாம நெட் செண்ட்டர் போய் அந்த ஜோக்கை எரேஸ் பண்ணேன்.. 

11. திரைத்துறையில் நுழைவதற்கு முயற்சி செஞ்சிருக்கீங்களா? இல்ல இனிமே செய்வீங்களா? என்ன பண்ண போறீங்க?

சினிமாத்துறை லட்சியம்.. சின்னத்திரை நிச்சயம்./.... நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்க ஆசை.. ஆனா அதுல கலந்துக்க 10 படம் எடுக்கனும்.. ஒரு படம் எடுக்க 30,000 செலவு ஆகும், மொத்தம் 3 லட்சம் ஆகும்.. அதுக்கு ஸ்பான்சர் கிடைக்காது கைக்காசு தான் போடனும்.. அதான் திங்க்கிங்க்.. அது போக.. ஏற்கனவே காமெடி ஸ்கிரிப்ட் 3 புது இயக்குநர்களுக்கு எழுதிக்கொடுத்து இருக்கேன்.. ஏமாந்தும் இருக்கேன்.. லெட் சீ.. நாளைய தினம் நமக்காக விடியும் என்று ஏங்கிக்கிடப்பதுதானே படைப்பாளனின் கடமை?



நாற்று - நிரூபன்: 

சிபி அவர்களிடம் இரு வேறுபட்ட கேள்விகளை முன் வைக்கலாம் என நினைக்கிறேன். 



1. நாடறிந்த, சிறந்த ஒரு நகைச்சுவைப் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகள் வாயிலாக இந்தியாவில் மட்டு மன்றி, ஈழத்தின் தமிழக சஞ்சிகை வாசிப்பு வட்ட்டாரத்திற்கும் அறிமுகமான நீங்கள், அப் பத்திரிக்கைத் துறையினை விட்டு, வலைப் பதிவிற்குள் நுழைந்தமைக்கான காரணம் என்ன? ஏன் வலைப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் கருக் கொண்டது? இதனைப் பகிர முடியுமா?


       அடுத்த கட்டம் என்ற ஒரு சுவராஸ்யம் தான்.. இதற்கு அடுத்த கட்டம் என்று ஒன்று இருந்தே தீரும்.. காலத்தின் கைகளில் அந்த மாற்றம் நடந்தே தீரும்.. 





2. முது பெரும் நகைச்சுவைப் படைப்பாளி என்ற அடிப்படையிலும், உங்களின் அனுபவத்தினை அடிப்படையாக வைத்தும் நான் உங்களிடன் எழுப்பும் வினா,
வலைப் பதிவினூடாக ஆக்க இலக்கியங்கள் அல்லது படைப்பிலக்கியங்களின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் எப்படி இருக்கும்? தமிழக இலக்கிய சஞ்சிகைகளுக்கு நிகரான வளர்ச்சியினை இவ் வலைப் பதிவுகளும் எட்டக் கூடிய அல்லது பரந்து பட்ட அளவில் வாசகர்களிடம் சென்று சேரக் கூடிய வழி முறைகள் உருவாகுவது எதிர்காலத்தில் சாத்தியமாகுமா?


     இப்போதே அதன் தாக்கம் அதிகமே.. ஃபிஷர்மேன் ட்வீட் ஏற்படுத்திய தாக்கம் பிரமாதம்.. முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதன் ரிசல்ட் தெரிய 7 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது நெட்டில் வரும் விமர்சனங்களால் படம் ரிலீஸ் ஆகி 4 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிரது. பட தயாரிப்பாளர்கள் இணைய எழுத்தாளர்கலை மதிக்கிறார்கள்..
இணைய வாசகர்கள் இப்போது சராசரியாக 10000 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.. இது பல மடங்கு உயரும்,உயரனும்.. 


ஜோஸ்பின் பாபா:

நண்பா, உங்கள் நகைச்சுவை உணர்வின் பின் புலன் என்ன?

   ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சோக சம்பவங்கள் இருக்கும். சிலர் அந்த சோகங்களை மனசுக்குள் வைத்துப்பூட்டிக்கொண்டு மறுகுகிறார்கள்.. சிலர் அதை மறக்க நகைச்சுவை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.. தானும் சிரிக்க மற்ரவர்களை சிரிக்க வைப்பது ஒரு கலை.. அந்த கலையை நான் 12 வது படிக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து விட்டேன்..

சார்லி சாப்ளின் கவிதை ஒன்று நினைவு வருது..
"நான் மழையில் நனைய விரும்ப காரணம்
என் கண்ணீர் யாருக்கும் தெரியாமலே போகட்டும் என்று தான்"
நான் நகைச்சுவை மழையில் நனைவதும் மற்றவர்களை நனைய வைப்பதற்கும் அதுவே காரணம். 



மதிசுதா 

1.வணக்கம் சீபி நேரே கேட்பதற்கு மன்னிக்கவும். 
போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தில் தலைக்கனம் இல்லாத ஒரு மனிதனாக வலம் வரகிறீர்கள். இப்படியான நிலையில் தங்களைச் சுற்றி போடப்பட்ட சதிவலை தங்களை எந்தளவு பாதித்தது ?



ஹா ஹா நேரே கேட்காமல் சைட்ல நின்னா கேக்க முடியும் ( SIDE   NOT SIGHT) 
ஹெட் வெயிட் எனக்கு இல்லாததற்குக் காரணம் நிஜமாகவே என் வீடு சுடுகாட்டின் அருகே தினம் தினம் பிணங்கள் போகும் பாதையில் வீடு அமையப் பெற்ற ஒருவன் வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை எளிதில் புரிந்து கொள்வான். 

அதுவும் இல்லாம நான் ஹேர் கட் மாதம் ஒரு முறை பண்ணிக்குவேன் சோ நோ சான்ஸ் டூ தலைக்கனம். சதி வலைன்னு சொல்ல முடியாது ஆற்றாமை, பொறாமை காரணமாக எழுந்த எதிர்ப்புகள்னு சொல்லலாம். அவற்றை பொறுமை, சகிப்புத்தன்மை என்ற 2 ஆயுதங்கள் மூலம் சமாளீத்தேன். 


2.தங்கள் கருத்துப்படி ஒரு பதிவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ?


     மனிதனாக இருக்க வேண்டும். தன்னால் யாருக்கும் கெடுதல் வரக்கூடாது. ஏதாவது செய்தால் அது மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி இருக்கனும்.நமக்குள்ள அடிச்சுக்க கூடாது. சிரிக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் சிரிக்க வைக்கலாம், சிந்திக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் விழிப்புணர்வு பதிவுகள் போடலாம்


சூ. மஞ்சு - யாழ் கணினி நூலகம்

1. உங்களை பதிவுலகத்திற்கு வர தூண்டியது எது? அதாவது என்ன நோக்கத்திற்காக காலடி வைத்தீர்கள்? 

 அப்படி  ஒரு நோக்கம் எல்லாம் ஒண்ணூம் இல்லை. நல்ல நேரம் சதீஷ் தான் என்னை இங்கே இட்டாந்தார்.. ஏதாவது திட்டனும்னா அவரை திட்டுங்க ஹி ஹி





   ஆனந்த விகடன் இல் ட்விட்டர் அக்கவுண்ட்டில் போடும் ட்வீட்கள் வலை பாயுதே என வர ஆரம்பித்தது.. பலத்த வரவேற்பை பெற்றது.. அதிலும் புகுந்து பார்த்துடலாம்னு நினைச்சேன். அதே போல் கேபிள் சங்கரின் பிளாக் பற்றிய விமர்சனம் விகடனில் வந்தது.. நாமும் அது போல் வர வைக்கனும் என்ற எண்ணம் மனதில் பிறந்தது..


2. அந்த நோக்கத்தை அடையும் திசையில் உங்கள் பயணம் தொடர்கிறதா? 


ம் .. அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் காலம் தான் நல்ல பதில் சொல்லும், கூடவே வாசகர்களும் நண்பர்களூம் தான் சொல்ல வேண்டும்.



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4, 5 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 - இதன் 4 ஆம் பாகம் படிக்காதவங்க  http://www.adrasaka.com/2012/04/4.html

ஆல் in all அழகு ராணி -அடல்ட்ஸ் ஒன்லி embroiding.y y y?

1.உண்மையான அன்பின் ஒரு பக்குவம் இல்லாத வெளிப்பாடு பொசசிவ்னெஸ் ,உண்மையான அன்பின் ஒரு  பக்குவமான வெளிப்பாடு கோபம்


-----------------------------------

2. கடற்கரையோரங்களில் மட்டும் ஏன் இத்தனை சர்ச்சுகள் புதிதாக கட்டப்படுகின்றன?

ஏன்னா பாவம் செஞ்சுட்டு கையோட மன்னிப்பு கேட்க வசதியா இருக்குமே?

--------------------------------

3. நீ என் எதிரில் நிற்கையில்  உன்னை பார்க்க என் கண்களை திறக்க வேண்டி இருக்கிறது, நீ என்னை விட்டு நீங்கிச்செல்கையில் உன்னைக்காண என் கண்களை மூட வேண்டி இருக்கிறது

-------------------------------

4. பெண்பால் ஈர்க்கப்படும் பண்பால், ஆண் பால் வார்க்கப்படும் அன்பால்

----------------------------------

5. டியர், பீச்சுக்குப்போய் கடலை போடலாமா?

லூசாய்யா நீ? மணல்ல எப்படி விளையும்? செம்மண் நிலம் வேணும் # அக்ரிகல்ச்சர் ஜிகிடி

-

---------------------------------

6 . நீங்க எனக்கு லவ் லெட்டர் குடுத்த விஷயம் என் வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு..

அய்யய்யோ உன் தங்கைக்குமா?

---------------------------------------

7.  பூமி சூரியனை சுற்றி வருது - இதுல இருந்து ஒரு நீதி சொல்..

டீச்சர், என்னதான் பூமி சூரியனை சுற்றி வந்தாலும் அதால சூரியனை பிக்கப் பண்ண முடியாது

--------------------------------------

8.  வசதியான பெரிய இடத்து ஸ்கூல்ல படிக்கனும்னா  ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுமா?

முதல்ல ஏதாவது ஒரு ஸ்கூலுக்கு போகனும், கிளம்பு

-----------------------------------

9. டியர், இன்னைக்கு ஜாக்கெட்ல ஏ அப்டினு எம்பிராய்டரி பண்ணி இருக்கே? ஆல் இன் ஆல் அழகு ராணீன்னு அர்த்தமா?

ம்ஹூம்,இன்னைகு லோ கட், லோ ஹிப்ல ஆஃபீஸ் போறேன், அடல்ட்ஸ் ஒன்லின்னு அர்த்தம்..

---------------------------------------

10. டேய், ரொமாண்டிக்கா பேசறது எப்படி?ன்னே உனக்கு தெரில .

இவ்ளவ் தானே, எப்படி பேசனும்னு எழுதி கொடு, கலக்கிடறேன் #  மக்கப் பண்ணும் ஜேக்கப்

--------------------------------

11. காயத்ரி ("G"AYATHRI)  , கவுரி( "G" OWRI)-ன்னு 2 பொண்ணுங்களை ஏமாற்றி தலைவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம் ..

அடப்பாவமே இதுதான் 2G ஊழலா? அவ்வ்

------------------------------------

12. கிங்க்காங்க் படம் கற்றுக்கொடுத்த நீதி - மனுஷனா இருந்தாலும், குரங்கா இருந்தாலும் பெண்ணை நம்புனா சாவு தான் # SMS

--------------------------------

13. டீச்சர், எப்பவாவது நாய் உங்க கிட்டே தாங்க்ஸ் சொல்லி இருக்கா?

இல்லை./.

அப்புறம் எதை வெச்சு நாய் நன்றி உள்ள பிராணின்னு சொன்னிங்க?

--------------------------------------

14. இந்த கலியுகத்துல நல்லவங்களை ஃபாரீன்ல தேடுனா கிடைக்க மாட்டாங்க.. ஏன்னா நான் தான் ஈரோட்டையே இன்னும் தாண்டாம இருக்கேனே? ஹி ஹி

-----------------------------------

15. பொறுமையில் எருமையாய் இரு, உன் வாழ்வு அருமையாய் இருக்கும் - சம்சாரம் எவ்ளவ் அடிச்சாலும் அசராமல் அசட்டு சிரிப்பு சிரிப்போர் சங்கம் ஹி ஹி

--------------------

16. அத்தான், நீங்க ஏன் சரக்கு அடிச்சா மப்பு தெளியற வரை வீட்டுக்கு வர்றதில்லை?

ஆ? அஸ்கு புஸ்கு.நான் ஏதாவது என் ஃபிளாஸ்பேக் உளறுவேன்,ஏன் வம்பு

--------------------------------

17. தனது கணவர் குடிப்பது தவறு இல்லை என்று சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது

-----------------------------------

18.சாமியார் என்ற ஆண்பாலுக்கு, பெண்பால் என்ன?  சாமியார் மேடம் அல்லது சாமியாரினி

-------------------------------------

19. நமது உள்மன விகாரங்கள் நம் படைப்பில் வெளிப்படும் என்றால் நாளை நாம் தெருவில் நடக்கையில் நம் முகம் விகாரமாக மற்றவர் கண்களில் தெரியக்கூடும்

------------------------------------

20. மேடம், உங்க கணவர் நீங்க ட்வீட்டறதை கண்டுக்க மாட்டாரா?


அவருக்கு டைப்ரைட்டருக்கும், கம்ப்யூட்டருக்குமே வித்தியாசம் தெரியாது, ஐ ஜாலி

------------------------------

Sunday, April 08, 2012

கோச்சடையான் பிரமோஷன் வீடியோவுக்கு இப்போ என்ன அவசரம்? ஐஸ்வர்யா தனுஷ் ஆவேசம்




'சுமைதாங்கியே சுமையானதே... எந்தன் நிம்மதி போனதே... மனம் வாடுதே...’ - 'அண்ணாமலையில் மனம் வெதும்பி ரஜினி பாடும் இந்தப் பாட்டுதான் தற்போது ரஜினியின் நிஜ மனநிலையும் என்கிறார்கள், ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள். ஆனால், நம்பத்தான் முடியவில்லை. ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா அஸ்வின் இருவருக்கும் இடையில் கடும் பனிப்போராம்!
 காதல் மோதல், கடன் சிக்கல் என மகள்களைச் சுற்றிப் படர்ந்த சிக்கல் முடிச்சுக்களை லாகவமாக அவிழ்த்த ரஜினியால், தன்னை முதலீடாகவைத்து அவர்கள் சினிமாவில் நடத்தும் யுத்தத்தைத்தான் பொறுக்க முடியவில்லை என்கிறார்கள். 'அப்படி எல்லாம் இருக்காதுங்க... பெரிய இடத்துல சின்ன பிரச்னைன்னாலும் ஊதிப் பெருசாக்கக் கூடாது!’ என்று நாம் சமாதானம் சொன்னால், சில வருடங்களுக்கு முன் பிருந்தே தொடர் சங்கிலிச் சம்பவங்களைப் பட்டியலிடுகிறார்கள்!

''ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் முடிந்து திருமண ஏற்பாடுகள் நடந்த சமயம் ரஜினி 'சந்திரமுகிபடப்பிடிப்பில் இருந்தார். அப்போது ரஜினி குரு ஸ்தானத்தில்வைத்து மதிக்கும் அந்த சினிமாவுலகப் பிதாமகர் ரஜினியைச் சந்தித்தார். அப்போது அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, 'எதுக்கு இப்படி ஒரு ஸ்டார் ஆனோம்னு தினமும் நினைச்சு நினைச்சுக் கஷ்டப்படுறேன். பேசாம பழைய மாதிரி கண்டக்டரா இருந்தா, ரொம்ப நிம்மதியா சந்தோ ஷமா இருந்திருப்பேன்என்று கண் கலங் கினார் ரஜினி. அவரைச் சமாதானப்படுத் தவே முடியவில்லை அவரால்!

சௌந்தர்யா ஆக்கர் ஸ்டுடியோஸ் ஆரம்பிச்சு, அனிமேஷன் வேலைகள் பண்ணிட்டு இருந்தாங்க. நிறுவனத்துக்குப் பெரிய பிராண்ட் இமேஜ் உண்டாக்குறதுக்காகத் தன் அப்பா ரஜினியை வெச்சே 'சுல்தான் தி வாரியர்பட வேலைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, தயாரிப்பாளர், தியேட்டர்காரங்க, ரசிகர்கள்னு எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி படம் பண்ணணும்னு நினைக்கிறவர் ரஜினி. தன் வழக்க மான பாணியில் இருந்து வெளிய வந்து படம் பண்றதுக்கு ரொம்பவே யோசிப்பார். அதனாலேயே பரிசோதனை முயற்சியா ஆரம்பிச்ச 'சுல்தான் தி வாரியர்அனிமேஷன் படத்தில் நடிக்க அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் இல்லை.


 ஆனாலும், சௌந்தர்யாவுக்காகச் சம்மதிச்சார். ஆனா, என்னென்னவோ நடந்து கடன், வட்டி, கோர்ட், கேஸ்னு ஆச்சு. அந்தப் படம் பாதி யிலேயே நின்னுடுச்சு.
தொடர்ந்து 'கோவாபட விவகாரத்திலும் லதாம்மா, சௌந்தர்யா ரெண்டு பேர் மீதும் பிடிவாரன்ட் போடுற அளவுக்கு விஷயம் போனப்ப, ரஜினி நொறுங்கிப் போயிட்டார். 'அனிமேஷனும் வேணாம்... சினிமா தயாரிப் பும் வேணாம். பேசாம கல்யாணத்தைப் பண்ணிட்டு செட்டிலாயிடுனு சொல்லித்தான் சௌந்தர்யாவுக்கு நல்லபடியாக் கல்யாணத்தை முடிச்சுவெச்சார் ரஜினி.

இதுக்கு நடுவில் ஐஸ்வர்யா, செல்வராகவன்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டராகி, அடுத்தடுத்த வருஷத்தில் தனியா ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளைப் பண்ணிட்டு இருந் தாங்க. அப்போதான் 'ராணாபட வேலைகள் தொடங்குச்சு. பட விளம்பரத்தில் தயாரிப் பாளர்னு சௌந்தர்யா பேர் இடம் பிடிச்சது. ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் இல்லை. மறுபடி ஏதேதோ பிரச்னைகள்.


 'ராணாபட பூஜையை தனுஷ் புறக்கணிச்சுட்டார்னு சொல்வாங்க. அப்போ யாருமே எதிர் பார்க்காம ரஜினிக்கே உடல்நிலை மோசமாகி, சிங்கப்பூர் வரை போய் சிகிச்சை எடுத்துட்டு வந்தார். மருத்துவமனை, ஓய்வுனு இருந்த ரஜினி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்திருக்கார்.
இதுக்கு இடையிலேயே ஐஸ்வர்யா '3’ படக் கதையை அப்பாகிட்ட சொல்லி, இயக்குநராவதற்கு அனுமதி வாங்கினாங்க. படத்தை தனுஷே சொந்தமா தயாரிச்சு நடிக்கிறார்னு தகவல் வந்தது. நடுநடுவுல 'என்னை ரஜினியின் மாப்பிள்ளையாகப் பார்க்காதீர் கள்னு தனுஷ் பேச ஆரம்பிச்சார்.
தனுஷ§க்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே குழப்பம் எனப் பேச்சு வந்தது. ஆனாலும் '3’ பட வேலைகள் பரபரப்பாக நடந்தன. 'ஒய் திஸ் கொல வெறிபாட்டு உலக மகா ஹிட் அடித்தது.
இது எல்லாமும் சேர்ந்து சௌந்தர்யாவின் மனசுல மறுபடியும் இயக்குநர் ஆசையை விதைச்சது. 'அப்பா நானும் என்னை நிருபிக்கணும். அதுக்கு நீங்கதான் எனக்கு உதவணும்னு வேண்டிக் கேட்டு ரஜினியின் சம்மதம் வாங்கினார் சௌந்தர்யா. 'சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான்னு விளம்பரம் வந்தது. தேங்கித் தேங்கி நின்ன வேலைகள் விறுவிறுன்னு வேகம் பிடிச்சு, சட்டுனு வெளிநாட்டுக்குப் படப்பிடிப்புக்குப் பறந்தது 'கோச்சடையான்யூனிட்.
அதே சமயம் '3’ படம் வெளியானது. சேனல் சேனலா '3’ பட புரொமோஷனுக்காக தனுஷ§ம் ஐஸ்வர்யாவும் பேசிக்கிட்டு இருக்க, திடீர்னு 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்வீடியோ வெளியாகி பரபரப்பாச்சு. பொதுவா, தனது எந்தப் படம்பற்றியும் ரிலீஸுக்கு முன்னாடி ஒரு வார்த்தைகூடப் பேசாத

ரஜினி, 'கோச்சடையான்படம்பற்றிப் பேசினார். லண்டன்ல 'கோச்சடையான்பிரஸ்மீட்டும் நடந்தது. '3’-ல் இருந்து விலகி மீடியாவின் கவனம் 'கோச்சடை யான்மேல் மையம்கொண்டது. '3’ பட சிறப்பு நிகழ்ச்சிகளை நிறுத்தி 'கோச்சடையான் ஸ்பெஷல்னு எல்லா சேனல்களும் அலற ஆரம்பித்தன.  
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த ஐஸ்வர்யா, 'கோச்சடையான் புரொமோஷனுக்கு இப்போ என்னப்பா அவசரம்? '3’ படம்பத்தி நல்ல செய்திகள் கிளம்புறதுக்கு முன்னாடி நீங்களே அது திசை திரும்பக் காரணமா இருக்கலாமா?’னு போன்ல ரஜினிகிட்ட மனம் திறந்து அழுதிருக்காங்க. அப்புறம் ரஜினி, ஐஸ்வர்யா, சௌந்தர்யா மூணு பேருக்கும் இடையில என்ன நடந்துச்சுனு தெரியலை. ரஜினி உடனடியா லண்டன் ஷூட்டிங்கை முடிச்சுக்கிட்டு சென்னை திரும்பிட்டார். 'நானும் உங்களைப் போல ரஜினி சார் ரசிகன். நான் அவருடைய வாரிசாக முடியாதுனு சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் தனுஷ் சொல்றதுலகூட அர்த்தம் இருக்கு.
எந்தப் பிரச்னையையும் சட்டுனு சமாளிச்சு வந்திருவார் ரஜினி. இதுல இருந்தும் அப்படியே மீண்டு வருவார் சூப்பர் ஸ்டார்!'' என்று முடித்தார்கள் அவர்கள்!
ஆனந்த விகடனில் வந்த மேட்டர் இது