ஜூன் மாசம் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்னைக்கு திருநெல்வேலியில் பதிவர் சந்திப்பு நடந்தது.
ஜூன் 16 நைட் 10 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ல இடம் பிடிச்சாச்சு..ஈரோடு டூ நெல்லை ரயில் பயணத்தில் என்ன நடந்தது என்பதை ஜூன் 25 அன்று தனி பதிவா போட்டுக்கலாம்.. இப்போ பதிவர் சந்திப்புல என்ன நடந்ததுங்கறதை மட்டும் பார்ப்போம்..
நெல்லையில் காலை 5 மணிக்கு ரயில் ஸ்டேஷன் அடைகிறது.. வரவேற்க யாராவது வந்திருப்பாங்கன்னு பார்த்தா ஒரு பயலையும் காணோம்.. ( ஆமா இவரு பெரிய ஃபிகரு.. ரோசாப்பூ மாலையோட வந்து வரவேற்க.. )
இறங்குனதும் நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்க்கு ஃபோன் போட்டா அண்ணன் ஃபோனை எடுக்கவே இல்லை.. அடடா.. இது ரெகுலரா அண்ணன் பதிவு போடற டைம் ஆச்சே..
நடிகர் விக்ரம்,நடிகர் சம்பத் போல சாயலில் கலக்கலாக என் அருகே அமர்ந்திருப்பவர் பலா பட்டறை சங்கர்
சரி.. நாமே ஹோட்டல் பேரை வெச்சு விசாரிப்போம்னு விசாரிச்சுட்டு போனா ஹோட்டல் வாசல்ல லேப் டாப் மனோ படுத்திருக்கான்.. டேய் ராஸ்கோலு.. மப்புல இருக்கியா? எந்திரிலேய்.. என்றேன்..
செம சரக்கு போல.. அப்படியே வாசப்படில உருண்டுட்டு இருக்கட்டும்னு விட்டுட்டு ரிசப்ஷன்ல போய் விசாரிச்சேன்..
திருநெல்வேலி வாசிகள்க்கு ரசனை கம்மி போல.. (நெல்லைவாசிகள் மன்னிக்க) அவ்வளவு பிரமாதமான ஹோட்டல்ல ஒரு பக்கா ஃபிகரை ரிசப்ஷ்னிஸ்ட்டா போடாம ஒரு ஆம்பளையை அப்பாயிண்ட் பண்ணி இருந்தாங்க.என்னது? ஓப்பனிங்கே சரி இல்லையே?ன்னுட்டுயோசிச்சேன்..
சார்.. ரூம் இருக்கா?
ஓ ,இருக்கே.. மொத்தம் 237 ரூம் இருக்கு..
ஓக்கே ஒரு சிங்கிள் காட் ரூம் வேணும்..
அவசரப்படாதீங்க.. ரூம் இருக்கு,ஆனா எதுவும் காலியா இல்லை..
அடிங்கொய்யால.. நம்ம கிட்டேயேவா?ன்னு நினைச்சுட்டு பக்கத்துல உள்ள 6 ஹோட்டல்லயும் விசாரிச்சா எங்கேயும் ரூம் கிடைக்கல.. அது கூட பரவாயில்ல.. எல்லா ஹோட்டல்லயும் லேடி ரிசப்ஷனிஸ்ட் நஹி.. ஹூம்..
அப்புறம் எப்படியோ ஒரு ஹோட்டல்ல ரூம் கிடைச்சது.. ரூம்க்கு போய்ட்டு ராசலீலா ராஜேந்திரன் அண்னனுக்கு மெசேஜ் அனுப்பினேன் (மெசேஜ் அனுப்பினா நாலணா தான் )அண்ணன் ரிப்ளை எதுவும் அனுப்பலை.(அவருக்கு ஒரு ரூபாயாம் மெசேஜ் அனுப்ப)
பதிவுலக தாதா மாதிரி ,ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் மாதிரி ,ஹிந்தி வில்லன் மாதிரி தோற்றம் அளித்தாலும் பச்சப்புள்ளய்யா இந்த ஜெயந்த(வெறும்பய)
ஆனா 10 நிமிஷத்துல அண்ணன் ரூம்க்கு வந்துட்டாரு..
நான் தான் ரூம் வேணுமா?ன்னு முதல்லயே கேட்டப்ப வேணாம்னீங்க..
ஆமாண்ணே.. எதுக்கு உங்களுக்கு சிரமம்,நமக்கு கிடைக்காத ரூமா?ன்னு அசால்ட்டா இருந்துட்டேன்..
சரி.. குளிச்சுட்டு ஃபிரஸ் ஆகிட்டு வாங்க நான் ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன்..
அண்ணே,நான் ஆல்ரெடி ஃபிரஸ் பீஸ் தான்.. குளிச்சாத்தான் ஃபிரஸ்ஸா? அவ்வ்வ்வ்
சரி சரி.. வாங்க..நாம 2 பேரும் டிஃபன் சாப்பிடலாம்..
(ஆஹா.. காலைலயும் ஓசி சாப்பாடா.. டேய் சி பி நீ நிறய புண்ணியம் செஞ்சவண்டா.. )
அண்ணன் ஒரு ஆஃபீசர் இல்லையா?தன்னோட கெத்தை காமிச்சாரு.. டேய் தம்பி.. இதை எல்லாம் க்ளீன் பண்ணு என்ன இப்படி இருக்கு?
நான்,அழுகாச்சி காவியம் புகழ் கவிதாயினி கல்பனா,ஃபாரீன் புயல் சித்ரா,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்
போன ஜென்மத்துல அண்ணன் பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஆபரேட்டர் போல.. நல்ல படம் காமிச்சார்.. ஆனா ஒண்ணு அண்ணனுக்கு ஊர்ல செம செல்வாக்கு.. போலீஸ்காரங்க எல்லாம் அண்ணனுக்கு சல்யூட் வெச்சாங்க..
அவரோட ஆஃபீஸ்க்கு கூட்டிட்டு போனாரு.. ஆஃபீஸ்ல அண்ணனுக்கு செம சவுகர்யம்.. ஒரு பெரிய ஹால் 40 * 40 சைஸ்..ஒரே ஒரு சேர்... வெளில இருக்கறவங்க உள்ளே பார்க்க முடியாது.. உள்ளே இருக்கறவங்க வெளில பார்க்கலாம்.. ஹூம்.. அண்ணன் என்னென்னெ தில்லு முல்லு பண்றாரோ//.. ஆனா பதிவர் சந்திப்புக்கும் அண்ணனோட பர்சனல் லீலைகளுக்கும் சம்பந்தம் இல்லாததால மேட்டர்க்கு வரேன்.
இங்கே ஏன் வெயிட் பண்ணனும்? நேரா ஹோட்டல்க்கு போயிடலாம்..?
இருங்க.. இப்போ பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும்,கவுசல்யாவும் வருவாங்க.. அப்புறம் போலாம்
சொன்ன மாதிரியே பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும் வந்தாங்க.. சங்கர் அண்னன் ஹிந்தி ஹீரோ கணக்கா செம கலரா இருந்தாரு,,ஆனா பந்தா எல்லாம் பண்ணலை.. ( இனிமே நாமளும் வெட்டி பந்தா பண்ணுவதை குறைச்சுக்கனும்,, அஜித் மாதிரி இருக்கறவங்களே அடக்கி வாசிக்கறப்ப அட்டக்கறுப்பா இருக்கற நாம எப்படி இருக்கனும்? )
மணிஜி அண்னன் ஜாக்கிசேகரோட தோஸ்த்.. ஏற்கனவே எனக்கு அறிமுகம், நேரில் இப்போத்தான் பார்க்கறேன்..
அப்போ அண்ணனுக்கு ஃபோன் வந்தது.. பேசுனது கவுசல்யா மேடம்
சார்.. நான் நேரா ஹோட்டலுக்கே வந்துடறேன்.. ஆஃபீஸ்க்கு வர்லை..
ஏம்மா?
அங்கே வந்தேன் .. சி பி அங்கே இருக்கறதை பார்த்தேன்.. அவன் விவகாரம் பிடிச்ச ஆள் ஆச்சே.. பிளாக்லயே நடிகைங்க ஃபோட்டோ எல்லாம் போடுவான்.. எதுக்கு வம்பு..? புரொஃபைல்ல என் ஃபோட்டோ தெரியக்கூடாது.. என் எழுத்து மட்டும் தெரிஞ்சா போதும்னு நினைக்கறேன்.. இவன் பாட்டுக்கு செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து போட்டுட்டா?
சரி சரி.. ஓக்கே ஓக்கே
அப்புறம் அண்ணன் வந்து சமாளிச்சார்..
மேடம் டிராஃபிக்ல மாட்டிட்டாங்களாம்.. நேரா ஹோட்டல்க்கு வந்துடறதா சொன்னாங்க..
சரின்னு ஹோட்டல்க்கு போனோம்..
அங்கே போனதும் “ வாங்க வாங்க வணக்கம்னு ஒரு லேடி வாய்ஸ் கேட்டுது..
ஆஹா, நம்மையும் ஒரு லேடி மதிச்சுட்டாங்களேன்னு நானும் பதிலுக்கு வணக்கம் போட்டேன்..
அந்த மேடம் அண்ணன் கிட்டே ரகசியமா “ தம்பி யாரு?”ன்னு கேட்டாங்க..
ஹூம் ,யாருன்னு தெரியாமயே இந்த பில்டப்பா? ந்னு நினைச்சுட்டே அக்கா என் பேரு சி.பி அப்டின்னேன்.. அய்யய்யோ அப்டின்னாங்க..
என்ன கொடுமை சார்.. இது? ஆளாளுக்கு பார்த்து பயப்பட நான் என்ன செஞ்சேன்? ஏதோ 19 கில்மா பட விமர்சனம் பண்ணி இருக்கேன்.. ( எண்ணிக்கைல கரெக்ட்டா இருப்போம்ல..?)
கோமாளி செல்வா,லேப்டாப் மனோ,நான்(குற்றாலம்)
அவங்க அண்ணன் கிட்டே ஏதோ சொல்லி நைஸா என் செல் ஃபோனை பிடுங்கி வெச்சுக்கிட்டாங்க.. ( நான் ஃபோட்டோ எடுத்துடக்கூடாதாம்)
டாக்டர் கந்த சாமி கோவை ஆல்ரெடி அங்கே இருந்தார்.. அவர் கிட்டே அறிமுகம் நடந்தது..
இம்சை அரசன் பாபு ,வெறும்பய ஜெயந்த்,கோமாளி செல்வா,கல்பனா 4 பேரும் வந்தாங்க..
பாபு ஆள் காலேஜ் பிரின்ஸ் மாதிரி இருந்தாரு.. ஆள் நல்ல ஜாலியா பேசுனாரு.. ஜெயந்த் ஹிந்திப்பட வில்லன் மாதிரி இருந்தாரு.. தெரியாத்தனமா அவர் கிட்டே நான் கை குடுத்துட்டேன்.. குலுக்கறேன்கற பேர்ல கையை கசக்கி எடுத்துட்டாரு..
(அவரோட கோபத்துக்கு காரணம் அவர் எழுதுன ஜோதி தொடர் ல நான் “அப்புறம் ஜோதியை முடிச்சீங்களா? இல்லையா? அப்டின்னு கமெண்ட் போட்டிருந்தேன்.. அதான் , பழி வாங்கிட்டாரு..)
செல்வா ஏற்கனவே பார்த்து அறிமுகம் ஆனவர் தான்.. கைல ஸ்கிரிப்ட் வெச்சிருந்தார் ,காமெடி கதை போல.. மனப்பாடம் பண்ணிட்டு இருந்தார்..
கல்பனா தமிழ்ப்பொண்ணு கணக்கா ஒரு கும்பிடு போட்டாங்க,, நானும் கும்பிடு போட்டுட்டு சுய அறிமுகம் பண்ணுனேன்... (வேற யாரும் என்னை அறிமுகப்படுத்தலை..கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி நானே அறிமுகம் பண்ணிக்கிட்டேன்,வேற வழி?)
. என் பேரு.. சி.பி.. அட்ரா சக்க பிளாக் ஓனர்.. (பொல்லாத முதலாளிடா இவனுங்க.. )
அப்டியா.. சாரி.. நான் கேள்விபட்டதில்லை.. கண்ட கண்ட பிளாக் எல்லாம் நான் படிக்கறதில்லைன்னாங்க..
ஹி ஹி .. நீங்க ஓப்பனா பேசறீங்க.. வெரிகுட்.. ( நற நற.. )
வெட்டிப்பேச்சு சித்ரா வந்தாங்க.. என்னமோ சொல்லீட்டே வந்தாங்க.. எல்லாம் அமெரிக்கன் இங்கிலீசா இருந்ததால எனக்கு ஒண்ணும் புரியல.. (பட்லர் இங்கிலிஸே ஒழுங்கா புரியாது நமக்கு.. )
அப்போத்தான் நம்ம ஆஃபீசர்.. ஒரு வில்லங்கமான காரியத்தை பண்ணுனாரு..
ஒண்ணா நேரடியா என்னை அறிமுகப்படுத்தி இருக்கோனும்.. இல்ல சும்மா விட்டிருக்கனும்.. இவர் பில்டப் குடுக்கறேன்கற பேர்ல..
சித்ரா மேடம்.. இது (அக்ரிணை) யார்னு தெரியுதுங்களா?
எவனா இருந்தா எனக்கென்ன? ஹா ஹா ஹா
அப்டின்னாங்க..
ஹூம் நமக்கு நேரமே சரி இல்லையே என நினைக்கும்போதுதான் நிரூபன் ஃபோன் வந்தது..
தொடரும்...

