Showing posts with label Vathikuchi. Show all posts
Showing posts with label Vathikuchi. Show all posts

Sunday, March 24, 2013

வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்

ஹீரோ ஷேர் ஆட்டோ டிரைவர் . ரெகுலர் கஸ்டமாரான அதாவது அப்படி இவராப்பார்த்து வலியனாப்போய் ஆக்கிக்கிட்ட ஹீரோயினோட  ஒன் சைடு லவ். இது ஒரு டிராக் . இவரை 3 வெவ்வேற ஆட்கள் வேறு வேறு காரணத்துக்காக துரத்தறாங்க , சும்மா இல்லை , அவரை கொலை செய்ய . அந்த அளவுக்கு அவர் என்ன செஞ்சார்?  என்பதை நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே மெத்தேடில் முடிஞ்ச வரை சுவராஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்


 இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தம்பி  திலீபன் தான் ஹீரோ , ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா  ஹைட்டா இருந்தாலும் முக பாவனைகள் , காதல் , ஆக்ரோஷம் சோகம் சுத்தமா வர்லை , ஸ்டண்ட் மாஸ்டர் தயவில் நல்லா ஃபைட் போடறார்.  மற்ற படி தம்பி  நீ இன்னும் கத்துக்கனும் . 


 ஹீரோயின்  நம்ம அஞ்சலி. அங்காடித்தெரு அஞ்சலிக்கும்  , வத்திக்குச்சி அஞ்சலிக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் , இன்னும் 2 வருஷம் போனா நமீதாவைத்தோற்கடிக்கும் 10 வித்தியாசம் ஆகி விட வாய்ப்பு இருக்கு, கபர் தார் (அ தெரு அஞ்சலி =  32 ,  வ கு  அஞ்சலி = 36 ,  இன்னும் 2 வருஷத்துல = 42). என்னதான் இருந்தாலும் அஞ்சலிக்கு கன்னம் 2ம் உப்பி இருக்கே அடடா என்ன அழகு ( கன்னம் மட்டும் தான்யா ) அவர் ஹீரோவை லவ்வினாலும் அதை வெளிக்காட்டாமல் பம்முவது , மிரட்டுவது , குழைவது என பிரமாதப்படுத்துகிறார். லவ்வர் உள்ளவங்க எல்லாம் அஞ்சலி மாதிரி லவ்வர் இல்லையே எனவும், லவ்வர் இல்லாதவங்க அஞ்சலியே லவ்வரா வேணும் என நினைக்க வைப்பது அஞ்சலிக்குக்கிடைத்த வெற்றி ( ஆனா நான் அப்டி ஏதும் நினைக்கலை ) ( ஹீரோயினுக்கு மட்டும் எதுக்கு இத்தனை பெரிய பத்தி? )


 நண்டு ஜெகனுக்கு வில்லத்தனம் மிக்க கதாப்பாத்திரம் . மனதோடு ஒட்டாத கதாப்பாத்திரம் என்றாலும்  அவரளவில் நல்லா நடிச்சிருக்கார்.

 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.  ஹீரோ - ஹீரோயின்க்கு இடையேயான காதல் எபிசோடு செம சுவராஸ்யம் , எங்கேயும் எப்போதும் படத்துக்குப்பின் இதில் தான் லவ் செம டெவலப்மெண்ட்


2.  அஞ்சலி இங்க்லீஷ்க்கு டியூஷன் போவதும் சக மாணவிகளுடன் அடிக்கும் லூட்டியும் 


3. ஹீரோ புது முகம் என்பதால் அதை பேலன்ஸ் பண்ண ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கரெக்ட் பண்ணிய அதாவது திரைக்கதையை கரெக்ட் பண்ணிய இயக்குநரின் லாவகம்


4. ஃபில்டர் வாட்டர் கேன் மாதிரி சரக்கு இருக்கும் வாட்டர் கேன் செம அப்ளாஸ் அள்ளுது தியேட்டரில் 


5.  வில்லனாக வரும் நண்டு வஞ்சகச்சிரிப்பும் அப்போது வரும் பி ஜி எம்மும் 


6. ஒரு சீனில் அஞ்சலி கல்யாணக்கோலத்தில் வரும்போது ஜரிகை வைத்த கல்யாணிக்காட்டன் சேலையில் அசத்தலாக வருகிறார். காணக்கண் கோடி வேண்டும்




 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சரண்யா இட்லிப்பாத்திரத்தில் மூடியை எடுக்க அவர் கர்ச்சீப்பை யூஸ் பண்றார். கரித்துணி என்னாச்சு ? ஷூட்டிங்க் ஸ்பாட்டில் அவசரத்துக்கு அதுதான் கிடைச்சுதா? 


2. ஹீரோ யூஸ் பண்ணும் ஷேர் ஆட்டோ சில சமயம் க்ளோசப்பில் சாதா ஆட்டோவாகவும், லாங்க் ஷாட்டில் மட்டும் ஷேர் ஆட்டோவாகவும் இருக்கு, ஒய் திஸ் குழப்பம் ? 


3.  ஷட்டரை ஆள் மீது இறக்கி ஏற்றி  இறக்கி கொலை செய்யும் கொடூரக்காட்சி  எதுக்கு? எப்படி சென்சார் ல விட்டாங்க? 



4. பப்ளிக் ப்ளேஸ் ல 4 பேர் பார்த்துட்டு இருக்கும்போது ஒருத்தன் செல் ஃபோன்ல கொலை திட்டம் பற்ரி பக்காவா பிளான் அவௌட் பண்ணுவது எப்படி? 


5.என்னதான் அஞ்சலி மனம் கவரும்படி காதல் சல்லாபம் ,  ரொமான்ஸ் பண்ணாலும் அவர் கிட்டே ஒரு ஆம்பளைத்தனம் தெரியுதே , நளினம் குறையுதே, ஏன்?  குரல் காரணமா?


6. நண்டு ஜெகன் & நண்பன் 2 பேரும் ஷூ போட்டு பீச் மணல் ல ஓடறாங்க, அவங்களைக்கொலை பண்ணத்துரத்தும் ஆள் வெறும் கால் ல லாங்க் ஷாட்ல ஓடறாரு , கிட்டே நெருங்கியதும் அவர் கால் ல செப்பல் இருக்கு . மறுபடியும் லாங்க் ஷாட்ல  காட்டும்போது செப்பல் நோ


7.  ஹீரோ உயிரோட இருந்தா ஆள் கடத்தலுக்கு இடைஞ்சலா இருப்பான் என்பதால் ஹீரோவைக்கொலை செய்ய பிளான் போடுவது ஓவர். அதே மாதிரி ஹீரோவை வீட்டில் அடைச்சு வைப்பதும் 2 நாள் வெளியிலேயே வர முடியாது என வசனம் பேசியும்  போக்கு காட்டும் வில்லன் அப்போ ஆள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாமே? அப்போ ஏன் ஹீரோவை கொலை பண்ண துடிக்கனும்?


8.  நோக்கியா பேசிக் மாடல் பேட்டரி 3 நாள் தாங்கும். ஆனா ஹீரோவை ரூமில் அடைச்ச முதல் நாள் இரவே பேட்டரி டவுன் ஆகிடுதே எப்டி?



9.  பெரிய ரவுடி மாதிரி காட்டப்படும் ஆள் சாதா போலீசைக்கண்டு ஏன் பயந்து நடுங்கனும்?


10. மார்க்கெட்டிங்க் எக்சிக்யூட்டிவ்வா ஒர்க் பண்ணும் 3 பேரும் என்னமோ கை தேர்ந்த கிரிமினல்ஸ் போல் பிளான் பண்ணுவது எப்படி? முன் பின் பழக்கம் இல்லை, இதுதான் முதல் குற்றம் என வசனம் வேறு





 மனம் கவர்ந்த வசனங்கள்


1. இன்சூரன்ஸ் ஏஜென்ட் ,சேல்ஸ் ரெப் 2ம் நாய்ப்பொழப்பு


2. தம் ,தண்ணி அடிக்கற மாதிரி அடுத்தவங்களுக்கு உதவி பண்றதும் ஒரு போதை தான்.அதுல வீழ்ந்துட்டா மீளவே முடியாது


3. முகம் தெரியாத நபருக்கு நாம செய்யும் உதவி,முகம் தெரியாத நபரிடம் இருந்து நமக்குக்கிடைக்கும் உதவி 2ம் அற்புதமான விஷயம


4.  வண்டலூர் ஜூவுக்கு போகலாம் வா

“நான் எதுக்கு உன் கூட வரணும்” 

நாம லவ்வர்ஸ் இல்லை அதான். 


“அலோ.. ரோட்டுக்கு நாலு பேர் என்னை லவ் பண்றேன்னு சொல்றாங்க.. அதுக்காக எல்லாரையும் நான் லவ் பண்ண முடியுமா? நீ வேணா என்னை லவ் பண்ணிக்க,  ஆனா நான் பண்ணலை


5.   அவங்க வீட்ல எல்லாரும் கவர்மெண்ட் ஜாப்டா, எப்படி நீ லவ் பண்ணலாம்?  ஒருத்தர் ஈ பி ஆபீஸ்ல வாட்ச் மேன் , இன்னொருத்தர் வார்டு பாய் ஜி ஹெச்ல 



6 நீங்க படிச்சவங்க தான், ஆனா படிச்சவங்க கல்ச்சர் தெரியல. 


7. சண்டைல அடிக்கறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அடி வாங்குவதும் , தாங்குவதும் 


8. எப்பவுமே நமக்கு ஏதாவது நடந்தா அது கஷ்டம் , மத்தவங்களுக்கு நடந்தா அது வேடிக்கை

9.  பிசிக்கலா செஞ்சா தப்பு , அதுவே மெண்ட்டலா யோசிச்சு செஞ்சா அது திறமை


10. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும்  கண்டு பிடிக்க முடியாத  க்ரைம் கேஸ் நிறைய இருக்கும் 


11. நான் உன்னை லவ் பண்றேன்


 சரி, பண்ணிக்கோ


வாட்?


 


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43 ( இதை படம் பார்த்த  17 3 2013 நைட் ட்விட்டர்ல போட்டுட்டேன் ,ஆன விகடன் மார்க் - 42 )


ரேட்டிங் -  3 /5


சி.பி கமெண்ட் - அஞ்சலி ரசிகர்கள் எல்லாரும் பார்க்கலாம், மாமூல் கமர்ஷியல் மசாலாப்படம் , போர் அடிக்காம போகுது .