Showing posts with label PRINCIPLES. Show all posts
Showing posts with label PRINCIPLES. Show all posts

Saturday, January 01, 2011

புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

health-studies.jpg (400×314)
1. தினமும் அதிகாலை 5 மணிக்கு துயில் எழ வேண்டும்.

2. காலைக்கடன்களை முடித்த பிறகு வெறும் வயிற்றில் 4 டம்ளர் தண்ணீர் குடுக்க வேண்டும்.

3. அருகில் உள்ள மைதானத்தில் 4 கி மீ நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

4. நேரம் இருந்தால் யோகா,மூச்சுப்பயிற்சி (பிராண யாமம்) உடல்பயிற்சி செய்ய வேண்டும்.

5.குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். (சுடுநீரில் குளித்தால் சோம்பலும் ,தூக்கமும் வரும்)

6.காலை உணவை தவிர்க்கக்கூடாது.சிலர் பட்டினி இருந்தால் மெல்லிய தேகம் கிடைக்கும் என தவறாக நினைக்கிறார்கள்.

7.உணவு சாப்பிடும்போது பாதி வயிறு மட்டும் சாப்பிட்டு, கால் வயிற்றில் தண்ணீர் குடித்து கால் வயிற்றை காலியாக விட வேண்டும்.

8.அலுவலகத்தில் வேலை செய்யும்போது பர்சனல் செல் அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.

9.மதிய உணவில் மோர் சேர்த்துக்கொள்வது நல்லது.

10 இரவில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும்.
health.jpg (378×311)
11. இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது,தூக்கத்தை கெடுக்கும் காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

12. பெரியவர்களுக்கு 7 மணி நேரத்தூக்கமும் குழந்தைகளுக்கு 9 மணி நேரத்தூக்கமும் அவசியம்.

13. சைவ உணவே சிறந்தது. அசைவ உணவு மிருக உணர்வை,பொறாமை குணத்தை ,கோபத்தை அதிகமாக்கும் சக்தி படைத்தது. தவிர்க்க முடியவில்லை எனில் குறைக்க முற்சிக்கவும்.

14. குடும்பத்துடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.குறிப்பாக குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள்.

15. வாரம் ஒரு முறை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளியே செல்லவும்.அது நண்பர் வீடோ, பார்க்கோ,பீச்சோ எதுவாகவும் இருக்கலாம்.

16.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.

17. உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் .6 மாதத்திற்கு ஒரு முறை பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை அணூகவும்.முழு உடல் பரிசோதனையை 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்வது நல்லது.

18. பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து வாரம் குறைந்த பட்சம் ஒரு புக்காவது படிக்கவும்.

19.பட்டி மன்றம்,நகைச்சுவை அரங்கம் ,விழாக்கள்,ஊர் பண்டிகைகள் இவைகளில் கலந்து கொள்வது மனதை லேசாக்கும்.

20.பிறந்தநாள்கள் ,பார்ட்டிகள் இவற்றில் அநாதை ஆசிரமங்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வது நல்லது.

டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...