Showing posts with label திருச்சி மெகா ட்விட்டப் - ட்விட்டர்கள் மாநாடு - விமர்சனம். Show all posts
Showing posts with label திருச்சி மெகா ட்விட்டப் - ட்விட்டர்கள் மாநாடு - விமர்சனம். Show all posts

Monday, May 18, 2015

திருச்சி மெகா ட்விட்டப் - ட்விட்டர்கள் மாநாடு - விமர்சனம்

முதன் முதலா  ட்விட்டர்கள் மாநாடு  சென்னையில் 2012 மே மாதம் நடந்தப்போ  அதுக்கு பயங்கர எதிர்பார்ப்பு.ஆரவாரமான  கைதட்டல்கள் உடன் ஒரு ரஜினி பட  FDFS  பார்ப்பது போல் ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்கா போச்சு.இதுக்கு முக்கியக்காரணம்  ட்வீட்டர்கள்  யார்   யார் வருவாங்க ? அவங்க  எப்படி  இருப்பாங்க ? என்னும்  எதிர்பார்ப்புதான்.


2 வது  ட்விட்டர்கள் மாநாடு   கோவையில்  என்றதும் சென்னையை  விட  அதீத  எதிர்பார்ப்புடன் நிகழ்ந்தது. காரணம்  அங்கே  பிரபல  ட்வீட்டர்கள் 4  பேர்  இருப்பதால் .நால்வரில்  ஒருவரும்  வராததால் கொஞ்சம்  சுணக்கமாத்தான்  நிகழ்ந்தது .

 3வது  ட்விட்டர்கள் மாநாடு  மதுரையில்  நிகழ்ந்தபோது  பணியின் காரணமா  நான்  வெளியூரில்  இருந்ததால்  போக  முடியலை. அதை  வெச்சு  சிலர் கட்டுக்கதை  கட்டி  விட்டாங்க. யாரும்  அழைக்காததால்தான்  வரலை அப்டினு  ஒரு  டாக்  உலவுச்சு. பத்திரிக்கையே வைக்காம  கல்யாண மண்டபத்துக்கு  நாம  போற விஷயம்  அவங்களுக்குத்தெரியாதில்ல ? இன்னொரு  புரளி. மதுரையைச்சேர்ந்த  பிரபல  ட்வீட்டருடன்  சண்டை  என்பதால்தான்  வர்லை  என்பதும்.  அதுவும்  தப்பு .


ஆண்கள் மட்டும் ரசிக்கவும் RT ": எல்லா இடத்திலும் இந்த படம் தான் ஓடிட்டு இருக்கு போல... "

"
 Embedded image permalink
 

4  வது  ட்விட்டர்கள் மாநாடு  திருச்சியில்  என்றதும் மிக்க  மகிழ்ச்சி  எல்லோருக்கும் . ஏன்னா  நாயோன்  இருப்பது  திருச்சியில், தோட்டா  இருப்பது  கரூரில் . எப்படியும்  இருவரும்  வந்துடுவாங்க  என  எல்லோரும்  ஐடியா  பண்ணாங்க . பொதுவா  டி பி  ல  சொந்த  முகம்  காட்டாதவங்களைப்பார்க்காத்தான்  எல்லாரும்  ஆர்வமா  இருப்பாங்க  இது  சைக்காலஜி ( இந்த  ஜி  முதல்லியே  தெரிஞ்சிருந்தா  நான் டி பி ல  தள பதி  ஃபோட்டோ  வெச்சிருந்திருப்பேன்


கரூர் மினி  ட்வீட்டப்  நடந்தப்போ நாட்டி  நாரதர்   எனக்குப்பழக்கம்  ஆனார் .சண்டே  அன்னைக்கு  காலைல 7  மணிக்கு  அவர்  எப்போ திருச்சி  கிளம்புவார்?னு  வாட்சப்பில்  கேட்டா  அவர்   ஒரு  குண்டை  தூக்கிப்போட்டார் . சனிக்கிழமை  மதியமே  போய்ச்சேர்ந்துட்டாராம் . உங்களுக்குத்தான்  சரக்கு  அடிக்கற  பழக்கமே  இல்லையே  அங்கே  போய்   தங்கி  என்ன  பண்ணப்போறீங்க?>ன்னு  கேட்டா   ஏதோ  ஃபிரண்ட்  கடை 50%  தள்ளுபடில சர்ட்  அயிட்டம்ஸ்   பேண்ட்  அயிட்டம்ஸ்  பர்ச்சேஸ்  பண்ணனும், பரிசல்  கூட  போகனும் அப்டின்னார் . அவங்க 2 பேரும் என்னென்ன  அயிட்டம்ஸ்  பார்த்தாங்க , செலக்ட்  பண்ணாங்க  என்பது  இந்த  பதிவுக்கு  அநாவசியம் என் பதால் ஸ்கிப் ஆவோம்




மேக்கப்மேன், சாதா மேன், கேட் மேன்

ரயில், பஸ், கப்பல் போல
அடுத்து  நம்ம  பூனையார் . அவரும்   சனிக்கிழமையே  போய்ட்டாராம். இவரு  என்ன  பண்ணாரு? ட்வீட்டப்பில்  யாருக்கும்  தெரியாத  ஒரு ரகசியம்  சொல்லப்போறேன்னு  டி எல்லில்  ஒரு  ட்வீட்  போட்டாரு . உடனே டி எம் ல  போய் 16  பொண்ணுங்க  என்ன  ரகசியம்?னு  கேட்டாங்க  ( தமிழன்  இப்டி  ரகசியம்னு சொல்றதே  இப்படி  யாராவது  கேட்கனும்னு  தான் ) அவரும் கேட்ட  16  பேர்ல  13  பேர்கிட்டே  இந்த  மாதிரி  பொன் குழந்தை  என்ற  பெயரில்  எழுதுவது  என்  ஒயிஃப்  தான் , இந்த  ரகசியத்தை  யார் கிட்டேயும்   சொல்லிடாதீங்க அப்டினு  சத்தியம்  வாங்கிக்கிட்டாரு .


 பொதுவாவே பொண்ணுங்க  எல்லாம் புத்திசாலிகள்  என்பதால்;  அவங்க  என்ன பண்ணாங்க? அவங்க  ஃபாலோயர்ஸ் 3000 பேருக்கும் ”இந்த  ரகசியத்தை  யார் கிட்டேயும்   சொல்லிடாதீங்க ”அப்டினு  சத்தியம்  வாங்கிக்கிட்டு  ரகசியத்தை  சொல்லிட்டாங்க  13 * 3000 = 39,000  பேருக்கும் இந்த  ரகசியம்  தெரிஞ்சிருச்சு


பூனையார் , ரயில்  கணேசன்  இருவரும்   ஃபோனில்  பேசி  கரூரில்  நம்மாளுங்க   சண்டே  மதியம்  12 க்கு கிளம்பறாங்க .  நீங்க  வந்து  ஜாயின்  பண்ணிக்குங்க-ன்னாங்க . அவங்க  2  பேரும் இருந்திருந்தா  போய் இருப்பேன் . சரி  நானே  தனியா  வந்துடறேன்னேன்.

 காலை  10 20 க்கு  பாலக்காடு பேசஞ்சர்ல   திருச்சி  போயாச்சு . இந்த  சமயத்தில்   மதுரை  ஆந்தைக்கண்ணன்  ,  திருச்சி  பிரகாஷ்  இருவரையும்  நினைவு கூறனும் . இவங்க  எப்போ  கிளம்பறீங்க? -னு  முன் தினமே கேட்டுட்டு இருந்தாங்க .

ஏட்டிக்குப்போட்டியா கூலிங்க் கிளாஸ், வன்மையாக கண்டிக்கறென் அண்ணே


 திருச்சி 2  மணிக்கு  போயாச்சு . பிரகாஷ்க்கு   ஃபோன்  அடிச்சேன் . அவர்  ஒரு அஜித்  ரசிகர் .  ஸ்டைலா  பைக் ல  வந்து  பிக்கப் பண்ணிட்டு  ஹோட்டல்க்கு கூட்டிட்டுப்போனார் .


 ஹோட்டல்  ரிசப்ஷன்ல   பூனையாரும்  ரயிலாரும்  மற்றும்  8 பேரும்  இருந்தாங்க.  பூனையார்  டிரஸ்சிங்க்  பற்றி  இங்கே  ஒரு பத்தி  சொல்லியே ஆகனும் . ட்வீட்டப்க்காகவே   ஃபாரீன்ல  இருந்து வரவைச்ச  12,000  ரூபா  மதிப்புள்ள  சர்ட்  போட்டிருந்தார் . நான்  கேட்டேன்  ‘ ஏய்யா, பொண்ணுங்க தான்  இந்த  ட்வீட்டப்க்கு  வர்லையே, எதுக்கு  இந்த  காஸ்ட்லி  டிரஸ்?


 அதே  போல்   ரயில்  கணேசன்  பியூட்டி  பார்லர்  எல்லாம்  போய்   மேக்கப்  போட்டுட்டு  கலர்  ஃபுல்லா  வந்திருந்தார் . என்னாய்யா  மேட்டர்னா
2 பேரும்  ஒருமித்த  குரல்ல  “  ஆன்  லைன்ல  ட்வீட்டப்பை உலகம்  முழுவதும்  இருந்து  பார்ப்பாங்க  என்பதுதான்  அவங்க  மேக்கப்க்கு காரணமாம்,. இந்த  மேட்டர்  நமக்குத்தோணாம  போச்சேன்னு   நினைச்சுட்டு   ஹோட்டல்ல  போய்  சாப்பிட்டுட்டு  நிகழ்ச்சி  நடக்கும்  ஹாலுக்குப்போனோம் .


கருப்பையா  கேமராவுடன்  ரிசப்ஷன்ல  இருந்தார் . தமிழ்  ட்வீட்டர்கள்லயே  ட்விட்டர்  மூலம்  காதலி  தேடிக்கிட்ட  முதல்  ட்வீட்டர்  எனும்  பெருமையைப்பெற்றவர் . இதை  அவரே  ட்வீட்டப்பில்  சொன்னார் . அதே  போல்  வேதாளம்  அர்ஜூன்  கூட  கேமராவும்  கையுமா  ரவுண்டிங்க்லயே பிசியா இருந்தார்.

திருச்சியில்  தங்கி  இருக்கும்  சூனா பானா  ( வடிவேல்  டி பி  கட்டை  மீசை ) தான்  நிகழ்ச்சிக்கு  பொறுப்பு .  ஆள்  செம  பர்சனாலிட்டி . சேட்டு  வீட்டு  ஆள் போல்  இருந்தார் .  நான்  எதிர்பார்க்காத  திருப்பம் . இந்த  மாதிரி  பர்சனாலிட்டி வெச்சுக்கிட்டு  எதுக்கு    வடிவேல்  டிபினு  தெரியலை .


 எக்ஸ்பர்ட்  சத்யா , பரிசல்காரன்  சூனாபானா  மூவரும்  தான்  புரோகிராம்  கோ ஆர்டினேட்டர்ஸ் , மிகச்சிறப்பா  நிகழ்ச்சியை  நடத்துனாங்க


நிகழ்ச்சியில்  முதல்  கட்டமா  அறிமுகப்படலம் . அதாவது  எல்லார்  கிட்டயும்  மைக்  தரப்படும். அவங்க  தன் ஐடி  என்ன?  என்ன  பேரு  இதை  சொல்லனும் .  ஏன்னா  பெரும்பாலும்  எல்லாரும்  நடிகர்  டிபி  அல்லது   வேற  எதுனா  டிபில தானே  இருக்காங்க . யார்  யார்னு  யார்க்கும் அடையாளம்  தெரியாதே?


இதுக்கு  முன்  நிகழ்ந்த  3  ட்வீட்டப்பை விட  திருச்சிக்குத்தான்  கூட்டம்  அதிகம்  . 136  பேர்  வந்திருந்தாங்க .


அறிமுகப்படலத்தில்  அதிகம்  கை  தட்டல்  வாங்கியது  ராதா இல்லாத  படம்  சாதா .  நிறைய  பேரு   துளசி , கார்த்திகா  வோட அம்மா  ராதானு  நினைச்ட்டாங்க . இவர்  அந்தக்கால  எம் ஆர்  ராதா  ரசிகர் . அது  பற்றி  சொன்னார் .

 ரயில்  கணேசன்   ரயில்  ரிசர்வேசன்  சம்பந்தமா  15  நிமிசம்  பேசினார்


பள்ளிபாளையம்  சேட்டு சொட்டை  எல்லாம்  இல்ல . 27  வயசு தான்  இருக்கும் .பருத்தி  வீரன்  கார்த்தி  போல்  பாடி லேங்குவேஜில்  அசால்ட்டா  உலவிட்டு  இருந்தாரு


நீங்கள்  கேட்க  விரும்பும் கேள்வி  நிகழ்ச்சில  சேட்டுவிடம்  கேட்கப்பட்ட  கேள்வி


சார்.  நான்  2  அக்கவுண்ட்  வெச்சிருக்கேன் . 1  என் சொந்தப்பேரில் , இன்னொண்ணு  பெண்  பெயரில்  ஃபேக்  ஐடி . என்  அக்கவுண்ட்டை நீங்க  ஃபாலோவே  பண்ணலை , ஆனா  என் ஃபேக் ஐடி யை  ஃபாலோ பண்ணி  டெய்லி டி எம் ல்;அ  காலை  வணக்கம்  கையை  \ வணக்கம்  எல்லாம்  போட்டுட்டு    இருக்கீங்க?   ஏன்?னு  கேட்டாரு.


 அதுக்கு  சேட்டு  எப்படியோ  சிரிச்சு  மழுப்பி  சமாளிச்ட்டாரு . பொண்ணூங்க கிட்டே தான்  பேச  முடியும். அப்டின்னாரு


 இந்த  இடத்தில்  சேட்டு  பற்றி  1  சொல்லிக்கறேன் . டைம் லைன்ல  எந்தப்பெண்  ஐ டி  வந்தாலும் அவர்  ஃபார்மேட்டா  வெச்சிருக்கும்  வாக்கியம்  தான்  மென் சன்ல வரும் / ஐ லவ்யூ . உங்களை  எனக்கு  ரொம்ப  பிடிச்சிருக்கு  அப்டினு  பப்ளிக்காவே  சொல்வார் . பலர்  டி எம் ல  பம்முவாங்க . இவர்  ஸ்ட்ரைட்  ஃபார்வார்டு  , டைரக்டாவே  பேசுவார்


பூனையாரிடம்  கேட்கப்பட்ட  2  கேள்விகளூக்கும்

 சாரி  அது  பர்சனல் அப்டினு  சொல்லிட்டார் . அது  என்ன  கேள்வி  என்பது சஸ்பென்ஸ்.

 நாட்டாமை யிடம்


 உங்களுக்கு  நாட்டாமை  எனும் பட்டம்  எப்படி  வந்தது ?


  நான்  ஒரு சமயம்  ஒரு  பஞ்சாயத்துப்பண்ணேன் . அதில்  இருந்து  நாட்டாமைன்னு  கூப்பிட ஆரம்பிச்ட்டாங்க





என்னிடம்  சில  கேள்விகள்  கேட்கப்பட்டது. அதுக்கான  என்  பதில்கள்


1  சினிமா  விமர்சனம்  பண்ற  உங்களை    யாராவது  விமர்சனம்  பண்ணா  அதை  எப்படி  எடுத்துக்குவீங்க?

எல்லாருக்கும்  எதையும்  யாரையும்  விமர்சனம்  பண்ண  உரிமை  இருக்கு .  அதை   யாரும்  கேள்வி  கேட்க  முடியாது . நான்  சினிமா விமர்சனம்  பண்ணும்போது சில  இயக்குநர்கள்  ஃபோன்  போட்டு “ உனக்கு  சினிமா பற்றி  என்ன  தெரியும்? நீ  எடுக்க  முடியுமா?  அடுத்தவனை  குறை  சொல்லத்தானே தெரியும் ?

  அதுக்கு  என்  பதில்  கோடிக்கணக்கில்  பணம்  முதலீடு  பண்ணி  நீங்க  எடுக்கும்  படத்தைப்பத்தி  நாங்க  ஏதாவது  குறை  சொன்னா  வசூல்  பாதிக்கும்  , விமர்சனம்  பண்ணாதீங்க  அப்டிங்கறீங்க . உங்களுக்கு  எப்படி உங்க  கோடிக்கணக்கான  பணம்  முகியமோ  அதே  போல்  மக்களின்  ஒவ்வொரு  50  ரூபாயும்  எனக்கு  முக்கியம் . ஒரு  டப்பா படத்தை   250  ரூபா  கொடுத்து  பார்க்க  அவங்களை  நான்  விட மாட்டேன் . மசாலா  படத்துக்கு  ரேங்க்  எப்பவும்  கம்மியா தான்  கொடுப்பேன் .  குறைந்த  பட்ஜெட்டில்  எடுக்கப்படும்  நல்ல  திரைக்கதைக்கே  முன்னுரிமை


2  உங்க  படைப்புகள்  அதாவது  ட்வீட்ஸ்  சுமாராதான் இருக்குன்னு  சொன்னா  ஏத்துக்குவிங்களா?

 நிச்சயம்  ஏத்துக்குவேன்  . நிறைய  பேரு நான்  ட்வீட்\ போட்டது,ம்  உடனே  மென்சன்  போட்டு  இது  மொக்கை அப்டினு  சொல்றாங்க .நான் என்னவோ  இதுக்கு  முன்னால  உலக இலக்கியம்  படைச்ச  மாதிரியும் இப்போ  தான்  புதுசா  மொக்கை  போடற  மாதிரியும்  ஏன் பதறனும் ? என் எல்லா  ட்வீட்சும்  மொக்கையாத்தான்  இருக்கும்.

 காரணம்  என்  ட்வீடஸில்  90%  என்  சொந்தப்படைப்பே  அல்ல .  டைம் லைனில்  போடும்  ட்வீட்சுக்கு  எதிர்க்கீசாகவோ  அல்லது  அதில்  இருந்து  ஒரு வரி  உருவி பட்டி  டிங்கரிங்க்  பார்த்ததாகவோ  தான்  இருக்கும்  ( அதாவது  விஜய்  படம்  மாதிரி) . நான்  ஃபாலோ  பண்ற்  எல்லாரையும்  ஃபாலோ  பண்ணுபவர்களுக்குத்தான்  அது  புரியும் . இல்லைன்னா  நான்  போடும்  பல  ட்வீட்கள்  எல்லோருக்கும்  புரியாது


3   உங்க  சினிமா விமர்சனத்தில்  ஜேம்ஸ்  கேமரூனுக்கெல்லாம் கேள்வி  கேட்கறீங்க?  ராமாயணம்  படம்  பார்த்துட்டு  வால்மீகியிடம்  சில  கேள்விகள்  எல்லாம்  கேட்கறீங்க ?  எதுக்கு? அவர்  தான்  உயிரோடவே  இல்லையே?


படம்  பார்க்கும்போது  ஆடியன்ஸ்  மனசில் என்ன  கேள்விகள்  எழுமோ  என்ன சந்தேகங்கள்  தோணுமோ  அதை  நான்  கேள்வியா  கேட்கறேன்.  ஜேம்ஸ்  கேமரூனுக்கு  , கிறிஸ்டோபர்  நோலனுக்கு  தமிழ்  தெரியாதுன்னு  எனக்கும்  தெரியும்
 அவங்க  வந்து  பதில்  சொல்வாங்க  அப்டினு  எதிர்பார்ப்பும்  இல்லை

அதே  போல்  தான்  ராமாயணம்  படம்  பார்க்கும்போது  எனக்கு  தோணும்  சந்தேகங்களை  உங்களோட  பகிர்ந்துக்கறேன்  அவ்வளவு  தான் .  இதுக்கு  வால்மீகி  வந்து  பதில்  சொல்லனும்னு  அவசியம் . இல்லை


4   வெப்சைட்  மூலமா  எவ்வளவு  வருமானம்  வருது?  எப்படி  அது  சாத்தியம்  ஆகும் ?




வெப்சைட்  மூலமா  எவ்வளவு  வருமானம் கறதை  ஓப்பனா  சொல்ல  முடியாது (  ஏன்னா  சொன்னா  கேவலமா  இருக்கும், இதுக்குத்தான்  இஃந்த   பில்டப்பா?ன் நு ) நீங்கள்  ரெகுலரா  பதிவு  போடுங்க , உங்க  வெப்சைட்க்கு  ஆடியன்ஸ்  வரவு  தொடர்ந்து  இருந்தா  நமக்கு  விளம்பரம்  போட  வாய்ப்பு  கிடைக்கும்


5   நீங்க  ஏன்  பெரும்பாலான  கேள்விகளூக்கு  வெறும்  ஸ்மைலி  அல்லது ஆ  மட்டும்  பதிலா  போடறீங்க?



 டெய்லி  300  மென்சன்  வருது . எல்லாருக்கும்   பதில்  போட்டா  நான் ஆஃபீஸ்  வேலை  பார்க்கனும் ,   தனி  ட்வீட்ஸ்  போடனும்  , இதெல்லாம்  போக  பொண்ணுங்க  கிட்டே  டி எம்மில்  கடலை  போடனும்  (  இது  சும்மா  ஜோக்குக்குச்சொன்னது ) எல்லாருக்கும்  பதிலும்  போட்ட  மாதிரி  இருக்கனும் , அதே  சமயம்  யார் மனதும்  புண்படவும்  கூடாது , அதுக்குத்தான்  அந்த  ஆ!


அறிமுகப்படலம்  முடிந்ததும்  ட்விட்டர்களீன்   தனித்திறன்  மிமிக்ரி  ,நடந்தது.


கார்க்கி (  தொட்டால்  தொடரும்  வசனகர்த்தா ) , மதுரை  பிரசன்னா , பட்டாசு ( டி பி யில்  கட்டை  மீசை  வெச்சிருப்பாரே , ஆனா நிஜத்தில் அண்ணனுக்கு  மீசையே  இல்லை  டார்லிங்  பாஷைல  சொல்லனும்னா  பச்சை  மண்ணுய்யா  இவரு )  இவங்க  3  பேரும்  காமெடி  புரோகிராம்  பண்ணாங்க . அதாவது  முதல்ல  ஒரு  டயலாக்  ஒலிபரப்பாகும். அதுக்கு  இவங்க  ஆக்சன் கொடுக்கனும் . இதில்  கார்க்கியே  ஜெயிச்சார்

கரடி  கேப்டன்  போல் ஆஜானுபாகமா  இருந்தார்  (  காதில்  வாழைப்பூ  வெச்ச   கவுண்டமணி  டிபி )  இவர்  ஒரு பாட்டு  பாடுனார்
 Embedded image permalink

ஆந்தைக்கண்ணன் , க்ரேசி  கோபால்  இருவரும்  மிமிக்ரி  செஞ்சு  நிகழ்ச்சியை  காமெடியா  கொண்டு  போனாங்க

 கோபியைச்சேர்ந்த   செல்வா  எனும்  செல்வு  பற்றி  ஒரு  பத்தி  சொல்லனும்  . இவர்  ஒரு  காலத்தில்  செம  ஃபேமஸ் . செல்வு  எஃபக்ட்  எனும்  டேக்கில்  பலரும்  ட்வீட்ஸ்  போடும்  அளவுக்கு  இவர்  ட்வீட்ஸ்  பிரபலம் . இப்போ  பணீ  நிமித்தம்  அதிகம்  ட்வீட்ட  முடியலை  . இவர்  எழுதிய  எலி  எனும்  நாவல்  திருப்பூரில்  வெளியிடப்பட்டது  சாரு  நிவேதிதாவால்  . அந்த  புக்  ட்வீட்டப் வந்த  அனைவருக்கும்  இலவசமாக  வழங்கபட்டது . உபயம்  - கேசவன்


 பெங்களூரில்  இருந்து  வந்த  ஒருவர்  உங்க  ட்வீட்செல்லாம்  எங்க  ஆஃபீச்ல் விரும்பிப்படிபாங்க  . குறிப்பா யாரோ  எழுதுன  “ ஸ்கேல்  இல்லாம  கோடு  போடுவதும்  பொண்ணுங்களை  சமா\தானப்படுத்துவதும்  1 ,  எங்கோ  இழுத்துட்டுப்போய்டும்  எனும்  ட்வீட்டை  காட்டியே  ஆஃபீஸ்ல  ஒருவர்  ஒரு  ஃபிகரை  ஓரம்  கட்டிட்டார் ஃஅப்டின்னார்  ( ஓர்ம் கட்டிட்டார் = ஓரமா  கூட்டிட்டுப்போய்  கட்டிப்பிடிச்ட்டார்?) உடனே  சேட்டு   உங்க  ஆஃபீஸ்  பொண்ணுங்க  நெம்பர்  குடுங்கன்னு  கேட்டுட்டு  இருந்தார்.


மிகச்சிறப்பாக தூய  தமிழில்  நாகை  ஹனீபா  குரலில்  கரகாட்டக்காரன் சண்முக சுந்தரம்  போல்  ஒரு  ட்வீட்டர்  அட்டகாசமாப்பேசி  கலக்கினார்


ட்விட்டரால்  என்ன  பயன்? என  பேசும்போது  பரிசல்

திருப்பூர்ல  எங்க கம்பெனில  வேலை  செய்யும் வாய்  பேச  முடியாத  காது  கேட்காத  ஒரு  பெண்  ஈரோட்டுக்கு தவறுதலாக  பஸ்  ஏறி  சென்று விட்ட  தகவல்  கிடைத்ததும்  உடனே  ட்வீடர்  வந்து  நம்மாளுங்க  யாரவது  ட்விட்டர்ல  இருக்கீங்களா?னு  கேட்டு  விபரத்தை  சொல்லி  சரியான சமயத்தில்  அந்தப்பெண்ணை  மீட்டோம்  என்றார்

புதிய  தலைமுறை  டி வி ல வந்து  கவரேஜ்  பண்ணாங்க . தினமலர்  நிருபர்  வந்திருந்தார் .

சரி.கழட்டல : கண்ணாடியை கழட்டிட்டா ஆள் அடையாளம் தெரியல "
கார்க்கி  தான்  ஒரு  பட  வசனகர்த்தா  என்ற  பந்தா  இல்லாமல்  அனைவரிடமும்  எளிமையாகப்பழகினார்


ராஜன்  15  நிமிசம்  மட்டும்  இருந்துட்டுப்போய்ட்டார் . அவர்  வரும்போது  அவையில்  பலத்த கரகோஷம்


பிரபலங்கள்  மென்சன்  போட்டா  பதில்  போடுவதில்லை? ஏன்? என்ற  கேள்வி  பொதுவாக  பலராலும் கேட்கபட்டது



 அதுக்கு  என்னோட பதில்  அங்கே  சொல்லலை . இப்போ இங்கே சொல்றேன்

ஒரு  பிரபலத்தை  அவங்க  போக்கிலேயே  விட்ருங்க . அவங்க  பதில்  போடலைன்னு  தெரிஞ்சா ஏன் அவங்க  கிட்டே  போகனும் ., நமக்கு  யார்  பதில்  தர்றாங்களோ  அவங்க  கிட்டே  பேசுனாப்போதும்


பிறகு  எல்லொரும்  க்ரூப்   ஃபோட்டோ  எடுத்துக்கிட்டாங்க .

பிறகு  பிரமாதமான  இரவு  விருந்து  சைவம்  தனி  அசைவம்  தனி  நிகழ்ந்தது


 அந்த  டைம்ல  திருச்சி  பெண்  ட்வீட்டர்  ரியல்  ரேணு  தன்  தம்பி,  குழந்தையுடன்  வந்திருந்தார் .


நிகழ்ச்சியை  மிகச்சிறப்பாக  நடத்திய  பரிசல் , சூனாபானா , எக்ஸ்பர்ட்  சத்யா  மூவருக்கும்  வாழ்த்தும்  நன்றியும்


 அடுத்த  ட்வீட்டப்  திருப்பூரா? பாண்டிச்சேரியா?  என  விவாதம்  நிகழ்ந்தது . அதில்  வாக்கு  எண்ணிக்கைப்படி  திருப்பூரே  ஜெயித்தது .

 இந்த  நிகழ்வில்  கலந்து  கொள்ள  முடியாதவர்கள்  , அடுத்த  திருப்பூர்  ட்வீட்டப்பில்  கலந்து  கொள்ளுங்கள்



பணிச்சுமையின்  காரணமாக  லேட் . படங்கள்  , மற்றும்  விடுபட்ட  நிகழ்வுகள்  யாரேனும்  சுட்டிக்காட்டினால்  இரவு அப்டேட்டப்படும்




கார்க்கி =உங்கள் நமதுதிண்ணை ரைட்டர் இதழை முந்திவிட்டது என நினைக்கிறீர்களா னு கேட்டார்.


andhai kannan= மக்கள் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக
அடையலாம்

a



 Embedded image permalinka


திருச்சியில் இருக்கும் திரிபுர சுந்தரிகள் ஆரத்தியுடன் காத்திருக்கவும்.ஈரோட்டில் 10 20 க்கு புறப்படும் பாலக்காடு -திருச்சி பேசஞ்சர்


தமிழ் ட்வீட்டப் @ திருச்சி வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்தது.மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த பரிசல்,சத்யா,சூனாபானா 3 பேருக்கும் வாழ்த்து

பெண் ட்வீட்டர்கள் யாரும் வராததால் பள்ளி பாளையம் சேட்டு அதிர்ச்சி


சென்னை ,கோவை ,மதுரை ,திருச்சி என 4,இடங்களில் நிகழ்ந்த ட்வீட்டப்பில் திருச்சியில் தான் அதிக கூட்டம்.திருச்சி ராக்ஸ்



ட்வீட்டப்பில் சிலர் நான் அவர்களை ஃபாலோ பண்ண வில்லை என சொன்னார்கள், மென்ஷன் இட்டால் ஃபாலோ செய்யப்படும்-மொய்க்கு மொய் வைக்கும் தமிழன்