ஸ்பாய்லர் அலெர்ட்
உலகப்புகழ் பெற்ற கோகினூர் வைரம் ஒரு இடத்தில் இருக்கு.அதை ஆட்டையைப்போட ஒரு அரசியல்வாதி விரும்புகிறான்.அந்த வேலையை செய்ய உகந்த ஆள் நம்ம நாயகன் தான் என ஒரு போலீஸ் ஆபீசர் சிபாரிசு செய்யறார்
நாயகன் ஒரு டுபாக்கூர் பேர்வழி.வெளிநாடு கூட்டிட்டுப்போறேன் என ஏமாற்றிப்பணம் பறிப்பவர்.அவரிடம் இந்த வேலையை ஒப்படைத்ததும் அவர் வைரத்தைத்திருடி தானே வைத்துக்கொள்ளத்தீர்மானிக்கிறார்
போலீஸ் நாயகனைக்கைது செய்கிறது.பல மாதஙகள் கழித்து ரிலீஸ் ஆகும் நாயகன் தான் வைரத்தை ஒளித்து வைத்த இடத்துக்கு வந்தால் அங்கே ஒரு கோயில் கம் ஆசிரமம் உருவாகி இருக்கிறது
நாயகன் தானும் ஒரு சாமியார் போல் உள்ளே நுழைந்து அந்த ஆசிரமத்தில் செய்யும் கூத்துக்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக நட்டி என்கிற நடராஜ்.அசால்ட் ஆக நடித்திருக்கிறார்.
நித்யானந்தாவாக அவர் உருமாறிய பின் கலகலப்பு அதிகம் இல்லை.நடிகை ஜிஞ்ஜிதா ஆக ஸ்ரீ ரஞ்சனி.அதிக வேலை இல்லை.
நாயகனின் பி ஏ ஆக சிங்கம்புலி கலகலப்பு ஊட்டுகிறார்.
ஆசிரமத்தில் உலா வரும் இளம் ஜோடி ஆக முகேஷ் ரவி - ஷாலினி
பூனை சுல்தான் ஆக வரும் கோதண்டம்,அவரது பி ஏ ஆக வரும் சாம்ஸ் ,முருகானந்தம் ஆகியோர் நடிக்க அதிக சான்ஸ் இல்லை
கதை திரைக்கதை வசனன் தா முருகானந்தம்.
இயக்கம் அறிமுக இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி
சபாஷ் டைரக்டர்
1 நித்யானந்தா வை வைத்து ஒரு கதை பண்ணலாம் என்ற ஐடியா குட்.
2 சதுரங்க வேட்டை மாதிரி ஒரு படம் என சொல்லி நட்டியிடம் கால்ஷீட் வாங்கிய லாவகம்
3 தீபாவளி ரேசில் ஓட விட்ட தில்
ரசித்த வசனங்கள்
1 குயின் பர்ஸ் ல பென்குயின்?
2 அவன் ஒர்ஸ்ட்லயே பெஸ்ட்
3 நல்லா மூச்சை உள்ளே இழுத்து. வெளியே விடுங்க
அய்யோ,என்னால முடியல
உங்களால முடியும்.வயசு கம்மிதானே?
4 போலீஸ்காரர் சகவாசம் என்பது ஆசிட்ல ஆயில் பாத் எடுப்பது போல
5 சுதந்திரக்காத்து சுத்தமாவே இல்லையே?
6 பெரிய இடங்களில் டிரைவர்,சமையற்காரன் இவஙகளுக்குத்தான் மொத்த ரகசியமும் தெரியும்
7 என் ஆள் எனக்கு உசுரு ,ஆனா அவஙகப்பன் ஒரு பிசிறு
8 பெண்களைக்குறு குறு என்று பார்ப்பவர் தான் குருநாதர்
9 சூரியகாந்தி சூரியனுக்குக்கட்டளை இடலாமா?
10 வாழ்க்கைல பணம் இருந்தும் பொண்ணுங்க இல்லைன்னாலும் வேஸ்ட்டு ,பொண்ணுங்க இருந்து பணம் இல்லைன்னாலும் வேஸ்ட்டு
11 பூஜைக்கு கன்று மட்டும் இருந்தாப்போதுமே?எதுக்கு பசுவும் வந்திருக்கு?
குருவே! நான் வேணா பசுவை ஓட்டிட்டுப்போகட்டுமா?
12 இது என்ன பிக்பாசா? எதுக்கு இவ்ளோ சத்தம்?
13 யாழினி ரூம்க்கு நீ ஏன் வந்தே?
நீ ஏன் வந்தே?
நீ கத்தறதைக்கேட்டு வந்தேன்
நான் கத்தறதுக்காக வந்தேன்
14 சுவாமி ,உங்களைத்தான் நம்பி இருக்கேன்
நம்பிக்கை வீண் ஆகாது.மோர் தேன் ஆகாது
15 சுவாமி! அம்மாக்கிளியை மட்டும் என் கிட்டே விட்டுடுங்க.
உன் கிளி இன்னமும் உயிரோடவா இருக்கு?
அப்பப்ப பறக்கும்
16 விஷத்தைக்குடிச்சுட்டேன்
ஏன்?
வாழப்பிடிக்கலை
வாழை பிடிக்கலைன்னா என்ன? இங்கே எத்தனை வேற வகைப்பழங்கள் இருக்கு ?
17 மன்னா! 81 மனைவிகளை எப்படி சமாளிச்சீஙக?
ஆளுஙகளை வெச்சுத்தான்
18 என்னது? அவஙக ராணி இல்லையா?
ஆம்,ராஜாராணி
19 இருக்கும் வரை அமெரிக்க டாலர்.அதுக்கும் மேல முருகன்அலெர்ட்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 திரைக்கதையில் சரக்கு இல்லை
2 சுந்தர் சி படஙகளைப்பார்த்து இன்ஸ்பயர் ஆனது.
3 மொத்தமா 2 மணி நேரம் 12 நிமிடஙகள் ஓடும் படத்தில் 10 நிமிடஙகள் கூட சிரிப்பு இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட்டா ஆண்கள் மட்டும் பார்க்கலாம்.எதையும் தாங்கும் இதயம் அவஙகளுக்குத்தான் உண்டு.ரேட்டிங்க் 1.5 /5. விகடன் மார்க் யூகம் 30