Showing posts with label அமலாபால். Show all posts
Showing posts with label அமலாபால். Show all posts

Wednesday, February 22, 2012

காதல் ரசம் சொட்டும், காதல் சாம்பார் கொட்டும் வசனங்கள் இன் காதலில் சொதப்புவது எப்படி?

1.  நான் உன்னை சின்ன வயசுல பார்த்தேன், நீ அப்போ ஷப்பினெஸா இருந்தே.

இப்போ?

 ஹி ஹி . ஷப்பினெஸ் தான் அழகு... 


-------------------------------------

2. பாசத்துல,அன்புல பெண்கள் மாதிரி தீவிரம் காட்றது யாருமே இல்லை.. 

---------------------------------

3.  ஃபுல் வீடும் எங்கம்மா கண்ட்ரோல்ல தான்.. எங்கப்பா உட்பட.. 

----------------------

4.  என் லைஃப்ல சேலஞ்சிங்க்கா எதுவுமே இல்லை. அதனால தான் ஃபிகர் மேட்டர்லயாவது சேலஞ்சிங்கா ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்தேன்..

------------------------------

5. மாப்ளே, உனக்கும், உன் ஆளுக்கும் ஃபைட்னு கேள்விப்பட்டேனே..?

ஆமா, அதுக்கென்ன இப்போ?

அவ நெம்பர் வேணும் ஹி ஹி 


-----------------------------------

6.  திரும்ப திரும்ப மனசை ஹர்ட் பண்ணி அப்புறம் சாரி கேட்கறே.. சும்மா சாரி கேட்டா மட்டும் மனசை புண் படுத்துனது சரி ஆகிடுமா?

--------------------------------------

7.  ஏன் என்னை விட்டு விலகறே?

நீ என்னை சந்தோஷமா வெச்சுக்குவேங்கற நம்பிகை எனக்கு போயிடுச்சு.. சாரி.

---------------------------------------------

8.  பொண்ணுங்க பெயிண்ட்டிங்க் மாதிரி.. மோனலிஸா ஓவியத்தை  ரூம்ல எங்கே நின்னு பார்த்தாலும் நம்மளையே பார்க்கற மாதிரி தெரியும். அது மாதிரிதான் பொண்ணுங்க யாரை பார்த்தாலும் நம்மளை பார்க்கறதா நாமளே நினைச்சுக்கறோம்.. 

--------------------------------------------------

9.  ஏன் பொண்ணுங்களை பற்றி நெகடிவ்வாவே பேசறே.?

 பாசிட்டிவ்வா பேசற அளவு எதுவுமே அவங்க சொல்லலை, நடந்துக்கலை.. 

-------------------------------

10.  இப்போவெல்லாம் பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை பிடிக்கவே மாட்டேங்குது..அவங்க மனசை கவர்றவனுங்க எல்லாம் பொறுக்கிங்க, ரவுடிங்க, திருடனுங்க,மொள்ளமாரிங்க தான்

--------------------------------


http://www.tamilyouthcafe.com/wp-content/uploads/2012/02/Amala-Paul-hot-Bezawada-movie.jpg

11.  காதல்ல முதல் முயற்சி பெரும்பாலான ஆட்களுக்கு சொதப்பல்லதான் முடியுது.. 

-----------------------------------


12. ‘இந்தக்காலத்தில எவன் உண்மையா லவ் பண்ணுறான். அப்பிடி எவனாச்சும் பண்ணினா அவன் பைத்தியமா தான் இருக்கணும்’

--------------------------------------

 13.  ஏதோ கேக்கனும்னு சொல்லிட்டு இருந்தே.. என் நெம்பர் சொன்ன பிறகு அந்த மேட்டரை மறந்துட்டியா?

 ஹி ஹி நான் பிட்டை போட்டதே உன் கிட்டே நெம்பர் வாங்கத்தான் ஹி ஹி

 அடப்பாவி

---------------------------------------------

14.  டாடி.. - டேய்.. உன் ஃபேஸ் புக் குக்கு ரெக்குவஸ்ட் அனுப்பி இருக்கேன், அக்செப்ட் பண்ணு.. 

 அய்யோ டாடி.. அங்கே யார் உங்களை போகச்சொன்னது?


-------------------------------------------------

15.  இந்த வீட்ல யார் ஆம்பளை? நீயா? நானா? 

பொண்டாட்டியை யார் சந்தோஷமா வெச்சிருக்காங்களோ அவன் தான் ஆம்பள.. 

-----------------------------------------------------

16. சாரி.. டியர்.. ஐ லவ் யூ சோ மச். 

 இதை சொல்றதுக்கு இவ்வளவு லேட்டாடா?

----------------------------

17. இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கே? 

 ஹி ஹி சிறுத்தை மான் வேட்டைக்கு போறதுக்கு முன்னால பதுங்குமே அது மாதிரி லவ்வை சொல்றதுக்கு முன்னே பம்பிட்டு இருக்கேன் ஹி ஹி 

----------------------------------

18.  அவ எங்கெடா போறா.?

 நம்ம காலேஜ் லைபரரிக்கு.. அதான் ஃபாலோ பண்ணிட்டு போறேன்.. 

 அட!!! நம்ம காலேஜ்ல லைப்ரரி எல்லாம் இருக்கா?

-----------------------------

19.  நான் ஆல்ரெடி எல்லா புக்ஸும் எடுத்து படிச்சுட்டேன் மேடம்.. இந்தாங்க நீங்க படிங்க, எடுத்துட்டு போங்க.. உங்க லைப்ரரி கார்டு கொண்டு வர்லைன்னா என்ன? என்னுதுல இருந்து எடுத்துட்டு போங்க.. 

 இதுல ஒரு சைன் பண்ணுங்க.. 

 எதுக்கு?

 லைப்ரரில முதல் முதலா புக் எடுக்கறப்ப சைன் பண்னனும்.. 

--------------------------------------

20.  அவ என்னை அண்ணான்னு கூப்பிட்டாடா..

அடப்பாவி. தங்கச்சியையா லவ் பண்றே? ராஸ்கல்..

--------------------------------



21.  பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்ற அளவு பசங்களால காட்டமுடியாது.. 

-----------------------

22.  அம்மா, அப்பாவையும் இந்த ஃபங்க்‌ஷனுக்கு கூப்பிடலாம்மா..

எதுக்கு?

ஃபேமிலி ஃபங்கஷனுக்கு ஃபேமிலி மெம்பரை கூப்பிடறது தப்பில்லையே? அவரும் நம்ம ஃபேமில ஒருத்தர் தானே?

-----------------------------------------


23. என்னண்ணே. கிளம்பறீங்களா? உன் ஆள் வந்ததாலா?

ச்சே ச்சே. கிளம்பல,.. சேர்ல நல்லா உக்காந்தேன் ஹி ஹி 

-----------------------------

24. நீ மட்டும் எபப்டி கரெக்ட் பண்ணுனே அவளை?

 லவ்ங்கறது மின்னல் மாதிரிடா மாப்ளை. டகார்னு மின்னும்போதே அதை பார்த்துடனும். 

----------------------------------

.25.  கேர்ள் - எனக்கு 5 பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. 

 என்னமோ நாய்க்குட்டி வெச்சிருக்கற மாதிரி சொல்றீங்க? 

-----------------------------------

26.  அவன் ஏன் சிரிக்கறான்? நம்மளை பார்த்தா?

 ச்சே ச்சே அவன் காமெடி டிராமா ஒண்ணு இங்கிலீஷ்ல பார்த்தான், அதுல வந்த ஜோக்ஸ் இப்போதான் புரிஞ்சுதாம் ஹி ஹி 

--------------------------------------

27.  வெரிகுட். எப்பவும் இதே மாதிரி ஃபிரண்ட்ஸாவே இருக்கனும்

 ஓக்கே அங்கிள்

 பை த வே , நானும், ஆண்ட்டியும் கூட காலேஜ் படிக்கறப்ப ஃபிரண்ட்ஸா தான் முதல்ல இருந்தோம் ஹி ஹி 

----------------------------------------

28.  அவ போனா போறா விடறா மச்சான், அடுத்த ஃபிகரை கரெக்ட் பண்ணு.. 

 டேய்.. முதல் காதல்ல எப்படி சொதப்புனேன்னே தெரியல. கண்டு பிடிக்க முடியல.. அதுக்குள்ள அடுத்த காதலா?

--------------------------------------------

29/.  YOU CANT CONTINUE YOUR LIFE WITH OUT ME... 

 YOU HAVE NO LIFE

-------------------------------------

30.  இவ லைஃப்ல எனக்குத்தெரியாம இன்னும் எத்தனை பசங்க இருக்காங்களோ?

-----------------------------


http://2.bp.blogspot.com/-U0QmM7dvTCY/TykoBPjyM0I/AAAAAAAAg6w/VnjJInXHYtU/s1600/gnanamuthu+com.png

31.  உங்க பாட்டி ஃபேஸ்புக்ல இருக்காங்களா? அதுவும் தமனா ஃபோட்டோவை டி பி யா வெச்சுட்டு.? என்னால நம்பவே முடியல/... 

 என்னது? தமனவா? போன வாரம் த்ரிஷா ஃபோட்டோவை வெச்சிருந்தாங்க? 

---------------------------------

32.  வயசான பாட்டிக்கு எதுக்கு தமனா ஃபோட்டோ டி பி?

 இந்தக்காலத்து பொண்ணுங்க மட்டும் யோக்கியமா? மொக்கை ஃபிகருங்க எல்லாம் அழகழகான நடிகைங்க ஃபோட்டோவை டி பில வெச்சு ஏமாத்துதுங்க


-------------------------------

. 33.  பொண்ணுங்க எதையும் மனசுல வெச்சுக்க மாட்டாங்க, பசங்க யோசிச்சு கேட்கலாமா? வேணாமா?ன்னு நினைச்சுட்டு இருக்கறப்பவே பொண்ணுங்க கேட்டு முடிச்சுடுவாங்க.


----------------------------------------------

34.  அம்மா, விஷயம் சின்ன பிரச்சனையா இருக்கறப்பவே அவர் கிட்டே நீ பேசித்தீர்த்திருக்கலாம்.. 

 ஆனா அவர் பேசவே மாட்டாரே?

--------------------------------------

35.  டியர்.. என் கிட்டே எதையும் இனிமே மறைக்க மாட்டேன், ஓப்பனா உண்மையை சொல்லிடுவேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணுங்க/..

ஓக்கே பிராமிஸ்..

 நான் போட்டிருக்கற இந்த புது டிரஸ் எப்படி இருக்கு?

 கேவலமா.. 

 பளார்.. 

--------------------------------

36.  நாங்க மனசுல என்ன நினைக்கறோம்னு உங்களுக்கு எப்படி தெரியும்?


 அது தெரியாம தாண்டி பசங்க எல்லாம் அலைஞ்சுட்டு இருக்கோம்.. ?

------------------------------------

37.  உங்களுக்குள்ளே எப்படி பிரிவு வந்தது>?

 சிம்ப்பிள், நான் பையன் மாதிரி நடந்துக்கிட்டேன், அவ பொண்ணு மாதிரி நடந்துக்கிட்டா.. 

------------------------------------

38.  இவ எல்லார் கிட்டேயும் ஈசியா, ஃபிரண்ட்லியா பழகுவா மச்சி. வேணூம்னா இவளோட முன்னாள் ஆள் இவன் கிட்டே கேட்டுப்பாரேன் ஹி ஹி 

---------------------------------

39.  நீ அவலை பார்க்க ட்ரை பண்னலையா? 

ச்சே ச்சே அவ எனக்கு அக்கா மாதிரி.. 

 அப்போ  அவ அழகா இல்லையா? ஹி ஹி 

---------------------------

40. அவளைப்[பற்றி பேசுனாலே இவனுக்கு கோபம் வருதே ஏன்?

மோசம் பண்ணிட்டேன்.. பிரேக் அப்.... 

-------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirkvv4cVqCb8EF-CvNRWI7XpIuc-KrP9PtCeRC9-OjTxMuDP1B6uqCvItSwFvtzY2LnMUgRd08Xb2naiCDsY-sKjQ5Q_mElUheZ1IQVbHNhdlqGZMKNfhrIimBIPzapAlghyphenhyphen2vjl0kIYw/s1600/imagesccvcv.jpg

41.  பீச் எல்லாம் எப்படி இருந்தது?

 ம். பீச் மதிரி.. நானே கடுப்புல இருக்கேன் ., 

----------------------------------

42.  நாம தேடிப்பிடிச்சு லவ் பண்றதே பெருசு.. மறுபடியும் ரிஜக்ட் பண்னா எப்படி?


-----------------------------------

43. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது


---------------------------------------

44. மறக்கனும்னு முடிவு செஞ்சாத்தானே உன்னை மறக்க , நான் அப்படி மறக்கனும்னு நினைக்கவே இல்லையே?

----------------------------------------

45. லவ் பண்றது ஏன் இவ்ளவ் கஷ்டமா இருக்கு?

தெரில, காதல்ல சொதப்பறதுதான் ட்ரெயினிங்க் போல. :(

---------------------------

46. ஒரு பொண்ணு கேள்வி கேட்கும்போது உண்மையை தான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. அவங்க என்ன பதில் எதிர்பார்க்குறாங்களோ அதை சொன்னாலே போதும்

------------------------------------------

47. ஆம்பளைங்களால அரை மணி நேரம் எதைப்பற்றியும் யோசிக்காம சும்மா இருக்க முடியும், ஆனா பொண்ணுங்களால எதைப்பற்றியும் யோசிக்காம  ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது 


----------------------------------------

Saturday, February 18, 2012

காதலில் சொதப்புவது எப்படி? - ஈகோ கோ கோ - சினிமா விமர்சனம்

http://www.filmics.com/tamil/images/stories/news/2012/February/17-02-12/Kadhalil-Sodhapuvathu-Eppadi-Movie-Review.jpg 

ஏராளமான திறமைகளை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு , தங்கள் தன்மானத்தை அடகு வைத்து, இளமையை தொலைத்து கனவுத்தொழிற்சாலை என்று வர்ணிக்கப்படும் கோடம்பாக்கத்தில் குடி இருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாய் எட்டு நிமிட குறும்படத்தையே விசிட்டிங்க் கார்டாக வைத்து  இரண்டரை மணி நேர படம் எடுக்கும் வாய்ப்பை தேடி வந்த சீதனமாய் பெற்று, பெயரை தக்க வைத்திருக்கும் நாளைய இயக்குநர் புகழ்  பாலாஜி மோகன்-க்கு ஒரு பூங்கொத்துடன் இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன்.

கதை ரொம்ப சிம்ப்பிள் அண்ட் நீட்.. எம் ஜி ஆர் அன்பே வா படத்திலும், எஸ் ஜே சூர்யா குஷி படத்திலும் சொன்னதுதான்.. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்கள் அவர்கள் அன்பை குறைத்து விடாது, இறுதியில் சேர்த்து விடும்.. இந்த ஒன்லைன் கதையை 8 நிமிட குறும்படத்தில் எந்த அளவு சுவராஸ்யமாய் சொன்னாரோ அதே அளவு  சுவராஸ்யத்துடன் திரையிலும் சொல்லி இருக்கிறார்.. 

சித்தார்த்தின் காதலி அமலா பால் ஃபேமிலில அப்பா சுரேஷ் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கார்.. டைவர்ஸ் வரை போகுது.. அந்த கேசை டீல் பண்றது சித்தார்த்தின் அப்பா.. சின்ன சின்ன விஷயத்துக்காக அடிச்சுக்கற, பிரிஞ்சுக்கற சித்தார்த் - அமலா பால் காதல் ஜோடி, அது போக அவங்க நண்பர்களில் 3 காதல் ஜோடி எப்படி ஊடல் தாண்டி கூடல் வரை சுபமா சேர்றாங்க என்பது தான் கல கல காதல் திரைக்கதை.. 

தமிழ் சினிமா பயன் படுத்த தவறிய நல்ல நடிகர்களில் ஒருவர் சித்தார்த் என்பது இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது. மவுன ராகம் கார்த்திக்கிடம் பார்த்த அதே துள்ளல், இளமை என ஆள் செம கலாய்க்கும் நடிப்பு.. ஆனால் அவர் சுற்றுலா கைடு போல் ஆடியன்சை பார்த்து கதை சொல்வது, அவ்வப்போது கதை மாந்தர்களிடமிருந்து ஒரு ஸ்டெப் விலகி கேமராவைப்பார்த்து கமெண்ட் சொல்வது அந்நியம் ஆக்குகிறது.. குறும்படத்தில் சக்ஸஸ் ஆன இந்த டெக்னிக் திரைபப்டத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை.. 

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=19422&option=com_joomgallery&Itemid=77

அமலா பால் மெழுகு பொம்மை போல் வர்றார்.. நல்ல கெமிஸ்ட்ரி.. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.. படத்தில் வரும் 78 சீன்களில்  ஒரு சீனில் கூட துப்பட்டா போடாமல் வருவதற்கு நன்றி தெரிவிப்பதா? வாழ்த்து சொல்வதா? ( 2 சீன்ல மட்டும் போனா போகுதுன்னு துப்பட்டா இருக்கு  கழுத்து ஒண்ட.. ஹி ஹி )

குறும்படத்தில் சித்தார்த்தின் நண்பர்களாக வந்த அதே ஆட்கள் தான் இதிலும்.. மனிதர்கள் கலக்கி எடுத்துட்டாங்க.. அந்த தாடிக்காரரின் நடிப்பு செம செம.. குண்டு பப்ளிமாசாக வரும் நண்பர் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாய் ஹீரோ ஹீரோயின்  இருவர்க்கு இடையே பஞ்சாயத்து பேசும்போது மேலும் சண்டையை இழுத்து விடும் சீன் தியேட்ட்டரே அல்லோலகல்லோலப்படும் அதகளம் ஆரவாரம்.. வாட் எ ஒண்டர் ஃபுல் பர்ஃபார்மென்ஸ்.. பை டைரக்டர்.. 

 அமலா பாலின் அப்பாவாக வரும் சுரேஷ்  பாந்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்..கோயிலில் அவர் தன் மனைவியை பல வருட பிரிவுக்குப்பின் அணைக்கும் காட்சியில் சத்யா பட பாட்டு - வளையோசை  கல கல -- கலக்கல்

ஹீரோ - ஹீரோயின் இருவர் பெற்றோரையும் மிகச்சிறப்பாக கதைக்குள் கொண்டு வந்த விதம் வெல்டன்.. 

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கன கச்சிதம்.. யூத் ஃபுல்.. 

http://img1.dinamalar.com/cini/ShootingImages/12000259159.jpg

இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்

1.   அண்ணா என்று தன்னை அழைத்த பெண்ணை கடைசி வரை விடாமல் துரத்தி லவ் பண்ண வைத்த காதல் எப்பிசோடு இளமை.. 

2.  என் ஆளுக்கு ஃபோன் பண்ணப்ப  ஒரு பெண்ணோட இருமல் சத்தம் கேட்டுது, வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருக்கும் போல என ஒரு பெண் சொல்லும்போது அவள் அருகில் இருக்கும் பெண் இருமவது.... டைரக்‌ஷன் டச்.. 

3.  பாண்டிச்சேரியில் நடக்கும் கேர்ல்ஸ் கச்சேரி நீட்.. அந்த குழுவில் இடம் பெற்ற 3 ஃபிகர்களும் இளமை, இனிமை.. 

4. ஹீரோயினின் ஸ்கூல் ஃபிரண்ட் மலையாளியுடன் பேசுவதை பார்த்து ஹீரோ  சந்தேகப்படும் சீன்  ஓக்கே 

5. தன் மனைவிக்கு காதல் கடிதத்தை தன் மகள் மூலம் கொடுக்கும் சுரேஷின் நடிப்பு துள்ளல், அதை படித்து அவர் மனைவி காட்டும் ரீ ஆக்‌ஷன் டாப்.. 

6. ஒவ்வொரு ஊடல் முடிந்த பின்னும் ஹீரோ ஹீரோயினிடம் ஐ லவ் யூ சொல்லும்போது “இதுக்கு இத்தனை நாள் ஆச்சா? என ஹீரோயின் கண் கலங்கி கேட்கும் இடம்.. 

7.  டேய் விழுங்கடா க்ளாஸ்க்கு போய், விழுந்தேன் நான் 2 பாடல்களும் இதம் , இசையில் பாடல் வரிகளில்.. 



இயக்குநர் கவனிக்கத்தவறிய  லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. நியூ இயரா இருந்தாலும் சரி, பிறந்த நாளாக இருந்தாலும் சரி காதலர்கள் கண் விழித்து முதல் ஆளாக வாழ்த்து பரிமாறுவதுதான் 1990-ல் இருந்து 2011 வரை நடைமுறையில் இருக்கும் யூத் ட்ரெண்ட்.. ஆனால் அமலா பால் தன் ஆள் சித்தார்த்தின் பிறந்த நாளை காலை 8 மணிக்கு செல்லில் அலாரம் வைத்திருப்பது எப்படி? ( படத்தில் மிக முக்கிய திருப்பமே அன்று ஹீரோயின் வாழ்த்து சொல்லாமல் போவதில் தான் ஸ்டார்ட் ஆகுது)

2. ஒரு சீனில் ஹீரோ பாட்டி வீட்டுக்கு குடும்பத்தோட போறார், செல்லை வீட்டில் மறந்து வெச்சுட்டு போயிடறார்.. அன்று மாலை முழுவதும் காதலியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பரிதவிக்கிறார்.. அமலா பால்க்க்கு செம கோபம்,,. இந்த சீனில் லாஜிக் இடிக்குதே.. ஹீரோவோட அம்மா, அப்பா, அல்லது அங்கே பாட்டி வீட்டில் உள்ள யாராவது சொந்தக்காரர் ஃபோன் வாங்கியோ, அட்லீஸ்ட் ஒன் ருப்பி காயின் பூத்திலோ காதலிக்கு ஃபோன் பண்ணி “ இந்த மாதிரி ஃபோனை வெச்சுட்டு  வந்துட்டேன் “ என சொல்லி இருக்க முடியாதா?

3. ஒரு சீன்ல ஹீரோவோட அப்பா டேய் ஃபேஸ் புக்ல ரிக்குவஸ்ட் கொடுத்திருக்கேன், அப்புறம் ஆன் லைன் வந்தா அக்செப்ட் பண்ணிடு என்கிறார்.. அடுத்த செகண்டே “ என்னடா, உன் ஃபேஸ் புக்ல ஒரு பொண்ணோட படம் யாரு? என்கிறார்.. எப்படி அதற்குள் ஃபோட்டோ தெரிந்திருக்கும்?

4.  ஹீரோ - ஹீரோயின் தங்கள் காதலை வெளிப்படுத்தும் முன் சந்திக்கும் 4 காட்சிகளில் இருவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே வண்ண ஆடை அணிவது எப்படி?

5. படத்தின் பின்னணி இசையில் அந்தக்கால டாம் & ஜெர்ரி கார்ட்டூன் இசை போல் வருவது படத்தின் சீரியஸ் தன்மையை பாதிக்கிறது.. 

6. காலேஜ் செமினாரில் ஆன்சர் பேப்பர் கொடுக்கும் சீனில் 12 ம் வகுப்பு கணக்கு பாடம் இருக்கு.. மார்ஜின் இல்லாமல்..

7. பொதுவா காதலர்கள் பலர் முன் சண்டை போட்டுக்குவாங்க, ஆனா மன்னிப்பு கேட்பது,ஊடல் முடிந்து சந்தோஷமாக கட்டிப்பிடிப்பது இதை எல்லாம் படத்துல ஹீரோ ஹீரொயின் பப்ளிக்கா பலரது முன்னிலையில் செய்ய்றாங்க.. அதுவும் க்ளைமாக்ஸில் இருவரும் சேரும்போது டோட்டல் காலேஜே கூடி கிளாப்ஸ் பண்ணுவது ,வேடிக்கை பார்ப்பது ஏதோ டிராமா பார்ப்பது போல் உள்ளது.. 

இந்தப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? ஒருவனுக்கு ஒருத்தி என ஒரே ஒரு உள்ளத்தை ஆயுள் முழுக்க காதலிக்க நினைக்கும் உண்மையான காதலர்கள், சின்ன சின்ன பிரச்சனைகளால் ஊடல் கொண்டிருக்கும் தம்பதிகள், கணவனை பிரிந்து வாழும் மனைவிகள், மனைவியை பிரிந்து வழும் கணவர்கள்,காதலிக்க நினைப்பவர்கள் என எல்லாரும் பார்க்கலாம்..

 யாரெல்லாம் பார்க்கக்கூடாது? பஞ்ச் டயலாக், ஓப்பனிங்க் ஃபைட் வேணும் என்ற மசாலா பட ரசிகர்கள்,ஹீரோ ஒரு அடி அடித்தால் 56 பேர் ஆஸ்பிடலில் போய் படுக்கனும்னு நினைக்கற ஓவர் பில்டப் ஒலக சாமிகள் தவிர்க்க வேண்டிய படம்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - லவ்வர்ஸ் ஸ்பெஷல் ஃபிலிம்.. 

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

இந்தப்படத்தில் வரும் கலக்கலான காதல் பொங்கும் வசனங்கள் ( 50 )அடுத்து வரும் புதன் கிழமை பதிவில்

Friday, February 17, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - சைக்கோ லவ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.filmics.com/tamil/images/stories/news/October_2011/07.10.11/muk.jpg
சில கதைகளை நேரடியா சொன்னா ரொம்ப சாதாரணமான கதையா தோணும்.. ஆனா சாதா கதையையே சுவராஸ்யமா சொல்ற வித்தை வெகு சிலருக்கே கை வருது.. இந்தப்படத்தோட டைரக்டரும் டேலண்ட்டான ஆள் தான்.. ஆல்ரெடி குடைக்குள் மழை படத்துல ஆர் பார்த்திபன் சொன்ன கதையையே கொஞ்சம் பாலீஷ் பண்ணி புது கதை மாதிரி சொல்லி இருக்கார்.. 

செல்வராகவன் பாணில சொன்னா மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே, ராஜேஷ் குமார் பாஷைல சொன்னா 3 வெவ்வேற தளம் அமைச்சு மூன்றையும் ஒன்றாக இணைக்கும் கோட்டு வரிசை கதை தான் திரைக்கதை உத்தி..

அதர்வா சென்னைல கம்ப்யூட்டர் செக்‌ஷன்ல வேலை பார்க்கறார்..அந்த கம்பெனில அம்லா பால் எம் டி.. அதர்வா  படம் போட்ட முதல் ரீல்லயே அந்நியன் டைப்ல ஒரு கொலை பண்றார்.. 

பெங்களூர்ல அடிக்கடி ஃபோன் போட்டு பேசறார்.. அங்கே ஒரு அமலா பால்.. அவங்க பேரு சாரு.. அடிக்கடி ஃபோன்ல சாரு சாருன்னு உருகறார்.. சென்னைல இருக்கற அமலா பால் பேரு லதா.. அவருக்கு டவுட்.. அந்த சாரு யாரு?





http://www.tamilnewsa2z.com/uploaded_files/news_images/132937593751.jpg

கடைசில பார்த்தா பெங்களூர்ல அப்டி ஒரு கேரக்டரே கிடையாது.. இவரா கற்பனை பண்ணிக்கறார்.. ஃபிளாஷ் பேக்.. அவங்கம்மா ரொம்ப அன்பா மகனை வளர்த்தறாங்க.. சின்ன வயசுல இருந்தே அதர்வா ஒட்டுண்ணியா அதாவது அம்மா கோண்டா , 24 மணி நேரமும் அம்மா பிள்ளையா வளர்றார்.. பெரிய பையன் ஆனதும் வேலைக்காக கிராமத்துல அம்மாவை விட்டு சென்னைக்கு போறார்.. 

அங்கே அமலா பால் மீட் பண்றார்.. அமலா பால் அமெரிக்கா ரிட்ட்டர்ன்... அவங்க கல்ச்சர் வேற.. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கட்டிப்பிடிச்சு , அணைச்சு ( டேய் 2 ம் 1 தான்) அன்பை , மரியாதையை வெளிப்படுத்துவாங்க.. அதை லவ்னு தப்பா நினைக்கறார்.. ஆனா அமலா பால் அவரை லவ் பண்னலை.. அவருக்கு வில்லன் கூட நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு.. 

இப்போ ஒரு பார்ட்டி நடக்கறப்ப வில்லன் கோஷ்டில 3 பேரு அமலா பால் கையை  பிடிச்சு இழுத்துடறாங்க.. அதர்வா ஓவர் எமோஷன் ஆகி அந்த ஆட்களை போட்டுத்தள்ளிடறார்.. 

இந்த சைக்கோத்தனமான காதலனை அமலா பால் எப்படி சமாளிக்கறாங்க.. என்ன ஐடியா பண்றாங்க.. அப்டிங்கறதுதான் கதை.. ( யாருக்காவது கதை புரிஞ்சுதா? ஹி ஹி )

அதர்வாக்கு இது 2 வது படம்.. பாணா காத்தாடில அசால்ட்டா லவ்வர் பாயா வந்துட்டுப்போனவர்க்கு அழுத்தமான வேடம்.. சிட்டி பாய்க்கான ரிச், ஸ்டைல் எல்லாம் ஓக்கே.. நடன ஸ்டெப்களில் அடடே.. சண்டைக்காட்சிகளில் சுறு சுறுப்பு.. அப்பா முரளியை விட செம  பர்சனாலிடி தான்.. நல்ல எதிர் காலம் உண்டு.. 

அம்லா பால்.. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, கிளாமர் இந்த 3 மட்டும் வெச்சுக்கிட்டு குப்பை கொட்ட முடியாது பாப்பா.. ஹி ஹி கொஞ்சம் நடிக்கனும்.. ட்ரை த ட்ரை.. தேவதை டிரஸ் காஸ்ட்யூம்ல ( டிரஸ்னா  என்ன?காஸ்ட்யூம்னா என்ன? 2ம் 1 தான் ) வர்ற சீன்ல லோ கட் சீன் ஹி ஹி தியேட்டர்ல செம கிளாப்ஸ்.. 

படத்துல சந்தானம் வர்ற 4 சீன்கள் செம கல கல .. இறுக்கமான திரைக்கதையில் அவர் ஒரு ரிலாக்ஸ்..  ஆடை வடிவமைப்பு தீபாலி நார் செம கலக்கு கல்க்கிட்டாங்க.. பாடல்கள் அனைத்தும் தாமரை.. படம் ரிலீஸ் ஆகும் முன்பே 3 செம ஹிட்.. ஆனா படத்துல அது வேக தடைக்கல்

பொதுவா சைக்கோ த்ரில்லர் லவ் ஸ்டோரில பாடல்களை தவிர்க்கனும்.. ( ஆனா ஆடியோ மார்க்கெட் வேணுமே..)ஜி வி பிரகாஷ் இசை ஓக்கே.. 3 பாடல்கள் ஹிட்.. பின்னணி இசை சூப்பர்னு சொல்ற அளவு இல்லை.. ஆல்டைம் ஃபேவரைட் இன் பேக் கிரவுண்ட் மியூசிக் ஈஸ் இளையராஜா தான்.. 

http://tamil.oneindia.in/img/2011/09/06-amala-paul300.jpg

படத்தில் இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அமலா பாலின் காலை எடுத்து ( தனியா பிச்சுன்னு நினைக்காதீங்க )கிதார் மாதிரி வாசிக்கும் இடத்தில் அப்ளாஸ்... அது போக பல இடங்களில் ஹீரோ ஹீரோயின் பாடி கெமிஸ்ட்ரி  , நெருக்கம்.. எல்லாம் ஓக்கே.. ( மனசு குளிர்ந்து சொல்றேன் நல்லா இருங்கடே..  ஹி ஹி ) 

2. சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் , ஒளிப்பதிவு ,லொக்கேஷ்ன்கள் எல்லாம் பாராட்டும் விதத்தில்./. அதே போல் திரைக்கதை.. இதை நேரடியாக , சாதா கதையாக சொல்லி இருந்தால் சப்பென்று போய் இருக்கும்.. 

3.  மழை பொழியும் மாலையில், மர நிழலின் சாரலில், அவள் நினைவின் ... பாடலில் தாமரையின் வரிகள், இசை இரண்டும் நம்மை தாலாட்டும் விதம்.. செம.. ஓ சுநந்தா சுகந்தானா? பாட்டு, அன்பே உன் ( பாப்சாங்க்),யார் அவள் யாரோ..? கண்கள் நீயே.. காதல் நீயே..  ( அம்மா செண்ட்டிமெண்ட் பாட்டு) சொக்குப்பொடி போட்ட ( க்ளைமாக்ஸ் ஸ்பீடு பாட்டு) என  எல்லா பாடல்களும் கேட்கும் விதத்தில், ரசிக்கும் விதத்தில் அமைத்தது.. 




http://2.bp.blogspot.com/-kdvlTOwGWxs/ToXFavZSx9I/AAAAAAAAOPE/dBuEtFCIHNY/s400/05mptb_lead_GPA36SS_747090e.jpg

இயக்குநர் செய்த சில தவறுகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. ராங்க் கால் ராணி கம் பொய்யான சாரு அதர்வா ஃபோன்ல பேசறப்ப  சாரு மாதிரியே பேசி சமாளிக்கறார் ஓக்கே, அமலா பால் , டாக்டர் 2 பேரும்  அதர்வா கூட பேசிட்டு இருக்கறப்ப பொய்யான சாரு கிட்டே இருந்து வந்த ஃபோனை உண்மையான சாரு அமலா பால் அட்டெண்ட் பண்றப்ப அந்த பொண்ணு ஏன் உண்மையை சொல்லலை? ( ஏன்னா அப்பவே சொல்லி இருந்தா இவங்க பொழப்பைக்கெடுத்துட்டு பெங்களூர் அலைஞ்சிருக்கத்தேவை இல்லை)

2. அதர்வாவோட அம்மா தான் தனிமைல  இருக்கறதாலயும்,அழகா  இருக்கறதாலயும்தான் ஆம்பளைங்க சிலர் தன்னை அடைய அப்ரோச் ( எவ்லவ் டீசண்ட்டான வார்த்தை) பண்றாங்கன்னு  யோசிச்சு ஒரு முடிவு எடுக்கறார்.. அது இன்னான்னா அவர் மொட்டை அடிச்சுக்கறார்.. அடங்கொய்யால நம்மாளுங்க  ரேப் பண்னனும்னு முடிவு எடுத்துட்டா ரஜினியே வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.. மொட்டை அடிச்சுட்டா மட்டும் ரேப் பண்ண வராம சும்மா இருந்துடுவாங்களா? ( அந்த ஊர் ஆளுங்க எல்லாம் பக்கிப்பசங்க போல. மொட்டை அடிச்ச பெண்ணை ஏறெடுத்து,  பார்க்க மாட்டாங்களாம்.. அவ்வ்வ்வ் 

3.  அதர்வா வேலைக்காக சென்னை வர்றார் ஓக்கே.. அம்மா அவரை பிரிஞ்சு ஏக்கத்துல நோய் வாய்ப்படறார்// எதுக்கு அவர் அங்கே தனியா கஷ்டப்படனும்?அன் மேரீடுதானே அதர்வா? லட்சக்கணக்குல சம்பளம் வாங்கறவர்.. அம்மாவை கூடவே கூட்டிட்டு வந்து வெச்சுக்கலாமே.. இதை ஏன் கேட்கறேன்னா கதையே அம்மா பாசத்தால, அந்த அன்புக்காகத்தான் , ஒரு தேடலுக்காகத்தான் அமலா பாலை சைக்கோத்தனமா லவ் பண்றதா வருது..

4. அமலா பால்க்கு அதர்வா மேல உண்மையான லவ் கடைசி வரை வர்லை.. அதர்வா தான் லவ்வறாரு.. இந்த மைனசை சரி பண்றதுக்காக அமலா பாலை நிச்சயம் செஞ்ச ஆள் ஒரு ஹோமோ என கடைசில லாஸ்ட் ரீல்ல காட்டி, அவனோட சகாக்கள் ஆல்ரெடி 3 கொலைகள் செஞ்சதாவும், இப்போ அமலா பாலை கொன்னுட்டா ரூட் க்ளியர் எனவும் சொல்லி ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்கு ஆசைப்பட்டு கதையோட மைய கருல ஒரு மைனஸ் கொண்டாந்துட்டீங்களே.. அமலா பால்க்கு அதர்வா மேல லவ் வர , அல்லது வந்த மாதிரி காட்டி இருக்கலாமே.. ஏன்னா ஒரு லவ் ஸ்டோரி ஓட 2 பேர் அட்டாச்மெண்ட் முக்கியம். அம்லா பால் லவ் ஏதோ ஒப்புக்குச்சப்பாணி மாதிரி இருக்கு.. 

http://www.gulte.com/content/2012/02/news/Amala-Paul-Hot-Photos-from-Tamil-Movie---Pics-1156.jpg

யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? காதல்ல தோல்வி அடைஞ்சவங்க,ஃபிகர் வேற எவனையோ உஷார் பண்ணுனாக்கூட தன்னைத்தான் லவ்வுதுன்னு  பேக்கு மாதிரி நினைக்கறவங்க,காதல் தெய்வீகமானதுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கறவங்க, சைக்கோ த்ரில்லர் ஸ்டோரியை ரசிக்கறவங்க, அமலா பால் கிளாமரையாவது பார்ப்போம்னு ஏக்கப்படற என்னை மாதிரி சின்னப்பசங்க , காலேஜ் ஸ்டூடன்ஸ், லவ்வர்ஸ் இவங்க எல்லாம் பார்க்கலாம்.. ஹி ஹி 

ட்ரெய்லர்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்துன அளவு படம் சூப்பரும் இல்லை. மோசமும் இல்லை, ஓக்கே ரகம்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன்  மார்க் - 41

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - யூத்துங்க பார்க்கலாம் ஹி ஹி 

ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


http://www.screen4screen.com/album%20main%20page/muk%20working%20stills/mywebalbum/iwebalbumfiles/46cb55eebaa44afe86f3b53a1bf3f0d2.jpg

Friday, July 15, 2011

தெய்வத்திருமகள் - கொஞ்சி மகிழ ,நெஞ்சம் நெகிழ - சினிமா விமர்சனம்

-- http://mimg.sulekha.com/tamil/deiva-thirumagan/wallpaper/800-600/deiva-thirumagan-download-wallpapers-048.jpgஇந்த உலகில் உள்ள மனிதர்களில் நல்லவனோ,கெட்டவனோ,இரண்டும் கலந்த சராசரியோ  ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்.ஆனால் அது எல்லா நேரங்களிலும் வெளிப்பட்டுவிடாது.தன் மீது அன்பு கொண்ட உள்ளம் அருகில் இருந்தாலோ,தான் மிக அன்பு வைத்த இதயம் பக்கத்தில் இருந்தாலோதான் வெளிப்படும்.ஆனால் இந்தப்படம் பார்க்கும்போது யாரும் அருகில் இல்லாமலேயே உங்கள் குழந்தைத்தனம் கண்ணீராக உங்கள் விழி வழியே வெளிப்படும்...

மனநலம் குன்றிய தந்தை ஒரு குழந்தையை வளர்த்த முடியுமா?தாய் இல்லா அந்த குழந்தையை அவன் பராமரிக்க சட்டத்தில் இடம் இருக்கா? இது தான் படத்தின் மையக்கரு.. (I AM SAM பட தழுவல்)

சிப்பிக்குள் முத்து கமல் நடிப்பைப்பார்த்து பிரமித்தவர்கள் எல்லாருமே  சொன்ன ஒரு கருத்து இது போல் ஒருவர் நடிக்க இனி பிறக்க வேண்டும் என்பதே.. விக்ரம் ஏற்கனவே பிறந்து விட்டதை அறியாமல்.... 

பாடிலேங்குவேஜ்ஜிலும் சரி, ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸனிலும் சரி விக்ரம் தன் அடுத்த தளத்துக்கு போய் விட்டார் என்று தாராளமாக சொல்லலாம்.. காசி ,,அந்நியன் படத்தை விட இந்தப்படத்தில் அவருக்கு ஹெவி ஒர்க். மனிதர் சும்மா பிரிச்சு மேஞ்சுட்டார்...

வக்கீலாக வரும் அனுஷ்கா விதி படத்தில் வரும் சுஜாதா அளவு கம்பீரம் காட்ட முடியாததற்குக்காரணம் அவர் முகத்தில் தொட்டுத்தெறிக்கும் இளமை +அழகு.. முடிஞ்ச வரை சமாளிக்கிறார்..

விக்ரமின் குழந்தைக்கு சித்தியாக வரும் அமலாபால் பண்பட்ட நடிப்பு.. ஓப்பனிங்க்கில் அவர் தான் தான் பள்ளியின் கரெஸ்பாண்டண்ட் என்பதை மறைத்து குழந்தையிடம் பழகுவதிலும்,பின் கண்ணீர் விடுவதிலும் ஈசியாக டேக் ஆஃப் ஆகிறது அவர் நடிப்பு.

அந்தக்குழந்தை..... பொதுவாக சினிமாவில் வரும் குழந்தை நட்சத்திரங்கள் ஓவர் புத்திசாலித்தனத்துடன், வரம்பு மீறிப்பேசும் இயல்பு கொண்டதாக படைக்கப்படும். (உதா - பேபி ஷாலினி )ஆனால் இந்த பேபி கனகச்சித நடிப்பு.. பல காட்சிகளீல் விக்ரம்க்கு இணையான துடிப்பு.. வெல்டன் பேபி..

ஒளிப்பதிவும் ,இசையும் இந்த மாதிரி சாஃப்ட் ஸ்டோரிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இயக்குநர் மிகச்சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.. 

ரொம்ப சோகமாக தாக்கக்கூடாது என்பதற்க்காக சந்தானம், எம் எஸ் பாஸ்கர்.. லைட்டா காமெடி....


http://mimg.sulekha.com/tamil/deiva-thirumagan/stills/deiva-thirumagan-images-099.jpg
படத்தில் வசனகர்த்தா  நினைவில் நின்ற இடங்கள்


1. வக்கீல் சார். ஒரு கொலைக்கேஸ்... 

சந்தானம் - எத்தனை கொலை செஞ்சே நீ?


ஒரே ஒரு கொலைதான். எனக்காக வாதாடி தோத்துப்போன என் வக்கீலை.. 

சந்தானம் - அய்யோ ,சாரி. ஐ ஆம் நாட் எ லாயர்.. டீக்கடை நாயர்.


2.  சந்தானம் - ஹலோ,அனுவா. ஒரு கேஸ் சிக்கிடுச்சு. கம் குயிக்... 

நான் கோர்ட்ல இருக்கேனே?

வாதாடிட்டா இருக்கே? வாதாடறவன் வாயைத்தானே பார்த்துட்டு இருக்கே?

3. சந்தானம் - சென்னைலயே ஸ்வெட்டர் போட்டுட்டு சுத்தறான்னா இவன் எவ்வளவு பெரிய பணக்காரனா இருப்பான். ஏஸிலயே வளர்ந்தவன் போல..


4. சந்தானம் - இது ரொம்ப அவசரமான கேஸ்.. இன்று மத்தியானத்துக்குள்ள டைவர்ஸ் வேணூம்.

5. சந்தானம் - ஹூம், ஒழுங்கா படிக்காததனால கண்ட பொண்ணுங்களூக்கெல்லாம் ஜூனியரா வேலை பார்க்கவேண்டி இருக்கு. 

6. சந்தானம் -இது கோர்ட்டா? இல்லை,மெண்ட்டல் ஹாஸ்பிடலா?ஒரே லூஸா சுத்திட்டு இருக்குதுங்களே?


7. குழந்தை அழுதுட்டு இருக்கே. நீ என்ன பண்ணீட்டு இருக்கே?

ம் ம் .. என்ன பண்னனும்?

3 மணி நேரத்துக்கு ஒருக்கா பால் தரணும்.. 

8.  அய்.. பாப்பா. இனிமே இதை யார் பாப்பா? ( பார்த்துக்குவா?-MAINTAIN)

9.ஒவ்வொரு சாக்லேட் பேக்லயும் ஒரு கிலோவுக்கு 50 கிராம் குறையுது எப்படி?

ம் . ம் அது வந்து ஊட்டி வெய்யில்லுக்கு உருகி இருக்கும். 

10. அண்ணே.. சம்பவம் நடக்கறப்ப்ப சம்பந்தப்பட்ட 2 பேருல யாரோ ஒருத்தருக்கு விபரம் தெரிஞ்சா போதாது.?

11. என்னது? உன் குழந்தை உன்னை அப்பான்னு சொல்லுதா?இப்போ என்ன அமிதாப்பச்சன்னா சொல்லிச்சு..?எந்தக்குழந்தையும் புதுசில அம்மா,அத்தைன்னு தான் சொல்லும். 

12. அப்பா. அம்மா எங்கே?

சாமிக்கிட்டே..

ஏன்?சாமிக்கு அம்மா இல்லையா?

நல்லவங்களை சாமி தன் கூடவே வெச்சுக்கும்.

அப்போ நாம நல்லவங்க இல்லையாப்பா?

13. அப்பா./ யானை ஏன்பா பெரிசா இருக்கு?

நிறைய தீனி சாப்பிடுதே?

சூரியன் ஏன் ரொம்ப தொலைவில இருக்கு?

அது ரொம்ப ஹைட்டான இடத்துல இருக்கே?

14. நீ படிச்சுப்பெரிய பொண்னா ஆனா டாக்டர் ஆகனும். 

நான் ஏன் டாக்டர் ஆகனும்?

டாக்டர் ஆனாத்தான் அப்பாவை நல்லபடியா பார்த்துக்க முடியும். 

ஏன்? டாக்டர் ஆகலைன்னா அப்பாவை பார்த்துக்க முடியாதா?

15. கரஸ்பாண்டண்ட்னா என்ன?

ம். பெரிய மிஸ்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBk8WNhGKLwsFy3uQO3ncYJzR1azm3N5e4aMMuS9JWaxJlu6_i4FgbHpOaeJlA-zywIV7UNiGrsD9_VLdXiqG_8XIGIez8oPfkI_iiE_0TpNQ4ktftvImYfDeAo0c9l-cQ_OgxeTqaGnfz/s640/Amala+Paul.jpg

16. ரம்யா மிஸ் சின்ன டைனோசர். கரஸ்பாண்டண்ட் பெரிய டைனோசர்


17. அப்பா. நீயும் அம்மா மாதிரியே என்னை விட்டுட்டுப்போயிடுவியாப்பா?


18. அப்பா. இனிமே என்னைக்காணோம்னா அந்த நிலா கிட்டே சொல்லிடு.. அந்த நிலா என் கிட்டே சொல்லிடும். 

19. அப்பா. உனக்கு கதை சொல்லத்தெரியுமா?

நிறைய தெரியும். ஆனா நாளைக்கு சொல்றேன். ஹி ஹி

20.சந்தானம் - இந்தக்காலத்துல பொண்ணூங்க எல்லாம் எங்கேடா அறிவைப்பார்க்கறாங்க? இவனை மாதிரி ஒருத்தன் சிக்குனாப்போதும்னு தானே பார்க்கறாங்க. 

21. நிலா எப்போ வரும்?( விக்ரம் குழந்தையின் பெயர் நிலா)

சந்தானம் - ம் அமாவசைக்கு அடுத்த நாள்

22. எங்கே என் சம்சாரத்தை காணோம்?

யோவ்.. இப்போத்தானே 2 பேரும் போனாங்க? அதுக்குள்ள வர முடியுமா?

23.மன நல வளர்ச்சி குறைஞ்சவங்க கிட்டே குழந்தை வளரலாம்னு எந்த சட்டமும் இல்ல. 

24. மணி என்ன? நிலா எப்போ வருவா?

சந்தானம் - சொன்னா மட்டும் புரிஞ்சிடப்போகுதா?நிலாவுல கால் வெச்ச நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் கூட இத்தனை தடவை நிலா பேரை சொல்லி இருக்க மாட்டான். 

25. சந்தானம் -ஏய். அனு. கோர்ட்ல நீ அடுக்கடுக்கா சொன்ன பொய்யைப்பார்த்து எனக்கே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.

26. அனுவை விட்டு என்னால இப்போதைக்கு வர முடியாது. 

ஏன்? அவ கிட்டே அவ்வளவு அட்டாச்மெண்ட்டா?
இல்லை. 5 மாச சம்பள பாக்கி.. 

27. சந்தானம் - இவரு பெரிய மியூசிக் டைரக்டரு. கையை ஆட்டாம பேச மாட்டாரு. 

28. வக்கீல் கிட்டேயும் ,டாக்டர் கிட்டேயும்  பொய் சொல்லக்கூடாது,ஆனா வக்கீலும் டாக்டரும் தாராளமா பொய் சொல்லலாம்.


29. அட.. 2 தடவை கேட்டதுக்கே இவ்வளவு டென்ஷனா?

2000 தடவை அவன் நிலான்னு சொன்னதை கேட்டுட்டோம்.. 


30. மன வளர்ச்சி குன்றியவங்க கூட பழகறவங்க எல்லாரும் மன வளர்ச்சி குன்றியவங்கன்னு சொல்லிட முடியுமா யுவர் ஆனர்?

31. அமலா பால் - என் அக்காதான் எனக்கு அம்மாவா இருந்தாங்க.. சோ அவ குழந்தைக்கு நான் அம்மாவா இருக்க ஆசைப்படறேன்.. நீ என் கூட கடைசி வரை இருப்பியோ இல்லையோ தெரில. ஆனா நான் அவ குழந்தை கூட கடைசி வரை இருக்கனும்னு ஆசைப்படறேன்

32. நீ அவரை சீரியஸா எடுத்துக்காதே.. அவர் வராத மழைக்கு வானிலை அறிக்கை சொல்லிட்டு இருப்பாரு..

33. நல்லவங்களூக்கு நிறைய சோதனை வரும்,ஆனா ஜெயிச்சுடுவாங்க.. 

34. அப்பா எங்கே?

அவருக்கு உடம்பு சரி இல்லை.. 

பொய்.. 

இப்போ எதுக்கு அப்பாவை கேட்கறே? ஏன்? நாங்க இல்லை?

ஏன்? நீ உங்கப்பா கூட இருக்கறப்ப நான் என் அப்பா கூட இருக்கக்கூடாதா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7fXa6aut_X2cyzwzUkcf4CVzsuzloEsi5g0R4WKW2r6opIkWRL08ySHx-NQKgDF2ILjoHLyWpQ0nMGwLiF15EQQa2woT27pVjSRZ5VRM6SLZoYdibeuc0vnB8ofjGgl6hWq3m-mlbna0/s1600/amala_paul+%25284%2529.jpg
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கதையின் போக்கு உணர்ந்து அப்பா மகள் பாசத்துக்கு மட்டும் ஏற்றாற்போல திரைக்கதை அமைத்தது. தேவை அற்ற காமெடி,ஃபைட்,  தவிர்த்தது

2. அமலாபால், அனுஷ்கா,பேபி,விக்ரம் 4 பேரிடமும் மேக்சிமம் நடிப்பை வாங்கியது..

3. விக்ரம்-அனுஷ்கா பாடல் காட்சியில் மழையில் இருவரும் சென்றாலும் இருவர் மட்டும் நனையாத மாதிரி (காதலில் நனைபவர்களூக்கு எதுவும் தெரியாது என்ற கற்பனை) காட்டியது..

4. ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஆகி இருக்கக்கூடிய கதையை ஜாக்கிரதையாக கையாண்டு ஜனரஞ்சகப்படம் ஆக்கியது.

5. ஒளீப்பதிவு,இசை,எடிட்டிங்க் அனைத்தும் கன கச்சிதமாய் கவனித்துக்கொண்டது..

http://www.filmics.com/tamil/images/stories/news/July_2011/14.07.11/Deiva-Thirumagal-Review.png

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஓப்பனிங்க் ஷாட்டில் விக்ரம் பிக்பாக்கெட்டிடம் பணத்தைப்பறி கொடுப்பதும் தப்பும் திருடன் காலில் அடிப்பட்டதும் விக்ரம் அவனுக்கு கை குடுப்பதும் நந்தலாலாவை நினைவு படுத்துகிறதே?

2. மனநலம் குன்றிய ஒருவன் அப்பப்ப டைமிங்க் ஜோக் அடிக்க முடியுமா?உதாரணமா அடிக்கடி பாஸ்கர் மேலே சொல்லு என்றதும் விக்ரம் அப்போ என்ன பேசுனாரோ அதை ரிப்பீட்டாய் வானம் பார்த்து சொல்லிட்டு மேலே சொல்லிட்டேன் என்பது..

3. கைக்குழந்தையை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாண்டால் கொல்லாத்து விழுந்துடும்னு சொல்வாங்களே? அதை இயக்குநர் கவனத்தில் கொள்ளவில்லையா?அடிக்கடி குழந்தையை அப்படி தூக்கிப்போட்டு விளையாடறாங்களே?

4. கேமிரா கோணமும் சரி.. விக்ரம்-இன் பாடி லேங்குவேஜ்ஜும் சரி பல இடங்களீல் சிப்பிக்குள் முத்து கமல் நினைவுபடுத்துதே? தவிர்த்திருக்கலாமே?

5. க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் ஜட்ஜாக நடித்தவர் செயற்கை நடிப்பு.. வேறு ஆளை போட்டிருக்கலாம்.. 

6. இடைவேளைக்குப்பிறகு வரும் அந்த ஹோட்டல் காமெடி காட்சிகள் நீளம்.. எடிட் செய்து இருக்கலாம்.. கதையின் போக்கை மாற்றி விடும் அபாயம்.. 


 தமிழ்ப்பட உலகில் நல்ல படங்களின் ரசிகர்களூக்கு இது ஒரு முக்கியமான படம்.. குழந்தைப்பாசம் உள்ளவர்கள் அனைவரும் காணவேண்டிய படம்.. குடும்பத்துடன் பார்க்கலாம்..

http://www.newsonweb.com/newsimages/July2011/586b86bd-e6c6-498f-b0a9-9423a77d85a11.jpg

ஏ செண்ட்டர்களீல் 50 நாட்கள், பி  செண்ட்டர்களீல் 30 நாட்கள், சி செண்ட்டர்களீல் 15 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

சி.பி கமெண்ட் - கிளாசிக் மூவி

 ஈரோட்டில் தேவி அபிராமி,சண்டிகா,கிருஷ்ணா,ராயல் -ல் படம் ஓடுது.. நான்

சண்டிகாவில் படம் பார்த்தேன்..

Friday, May 06, 2011

வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நினைக்கிற அப்பாவியா நீங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinv5qTd8sZl9I1dbWTJWRjk0HO7rDlWYmDa99qj7gnk-FZnt_z8wJXeNX2QSMoWDA5nyz1K_t-XxXLQF-Jmwbnn2IMZAsA0JvyzjsI2sbjfAtnzJwOgTqVk_wLoAYC-enNHhNJJ_JkGO6u/s1600/mynaa-heroine-amala-paul-hot+%25282%2529.jpg

1.மேனேஜர் மனைவியிடம் குட்”மார்”னிங்க் மேடம் என்றேன். ரசித்து சிரித்தார்.. பய புள்ள ரொம்ப பணிவுன்னு நினைச்சிருப்பாரோ?#மிஸ்கால்குலேஷன் மிஸஸ்

--------------------------------
2.கிரவுண்டில் வாக்கிங்க் போறப்ப ஆண்ட்டி க்ளாக்வைஸ் திசையில் நடப்பது ஃபிகர்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவே அதில் பிரதானம் # சைட்டாலஜி

 -----------------------------------

3. தன்னிடம் சரியாக முகம் கொடுத்துப்பேசாத பெண்ணை சரியான ராங்கிக்காரி என பட்டம் சூட்டி ம்கிழ்வது ஆணின் பலஹீனம்#ஜெண்ட்ஸாலஜி

-------------------------

4. கம்பெனியின் முன்னேற்றத்திற்குப்பாடுபடுவது பற்றி மேனேஜர்-ன் 2 மணி நேர லெக்சர் மீட்டிங்கில் உபயோகமான இரண்டே விஷயம் பிஸ்கெட்டும் பூஸ்ட்டும்

---------------------

5. உயரமாக இருப்பதன் பலனை பஸ்ஸில் ஸ்டேண்டிங்கில் கூட்ட நெரிசலில் உணர்ந்தேன் # தாங்க்ஸ் டூ லோ கட் கேர்ள்ஸ்

-------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq0koZSmChTX7uI1ZWKo39VNSqg7Ty1p6zwqNKQUpXfLNpKTjujq53-RIbhmFo4VfFcozbIGviII1JvVJpjvuAJ0DqR8xm66H-G1o9XVDk4oOwLVsGIZkqysWdCPiIX3161V_fZofIz2s/s1600/tamil-actress-amala-paui-in-red-saree-photos-123actressphotosgallery.com_8a.jpg
6. பஸ்ஸில் போகும்போது எதிர் வரும் ஸ்டாப்பிங்கில் நிற்கும் ஃபிகர்களைப்பார்க்கும் போது இறங்கி அடுத்த பஸ்ஸில் போலாமா என்று நினைக்க வைக்கிறது#பஸ்ஸாலஜி

------------------------------

7.நீங்க தான் என் முத கேர்ள் ஃபிரண்ட் நான் கொஞ்சம் ரிசர்வ் டைப் எனும் ஒரே பொய்யை எல்லா பெண்களிடமும் ஆண்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

-------------------

8. கலக்கலான ஃபிகர்கள் சுற்றிலும் நின்றாலும் கண்டிப்புடன் ,கடுப்புடன் முகத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை வெறுக்கிறது#ஆஃபீஸாலஜி

-----------------------

9.பஸ்ஸில் ஏறும் ஆண்களை பின்னால் போ என்று துரத்தும் கண்டக்டருக்கு பொறாமையாகக்கூட இருக்கலாம்# பஸ்ஸாலஜி
http://photos.svkn.net/wp-content/blogs.dir/2/files/indian-hot-college-girls/hot-tamil-indian-college-girls-in-pub-13.jpg
---------------------

10. வெள்ளை நிறம் சமாதானத்துக்கானது மட்டும் அல்ல என்று தெரிவது மழையில் நனைந்து செல்லும் பெண்ணைப்பார்க்கையில் தெரியுது#சைட்டாலஜி

-----------------------  

டிஸ்கி -ஒரு  மணி நேரத்துக்கு முந்தைய பதிவு

கேரளா ஃபிகர்களும்,ஒரு கேனத்தனமான கால்குலேஷனும்  

Monday, April 25, 2011

விகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சனம்

http://i.indiaglitz.com/tamil/news/vikatakavi220411_1.jpg
ஆடிமாசம் குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு ஆகாது என்ற நெகடிவ் வசனத்தோடும்,அதே கருத்து உள்ள பாட்டோடும் படம் தொடங்குது.. பத்தாம்பசலித்தனமான இயக்குநரோ என கவலைப்பட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன்.. ..

படத்தோட ஓப்பனிங்க்ல ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி சிறார்கள் செய்யும் சில்மிஷங்களை காமெடி கலாட்டாவாக 40 நிமிடங்கள் காட்டும்போதே நினைச்சேன்.. அண்ணன் கிட்டே சரக்கு கம்மி போலன்னு.. மெயின் கதைக்கு வந்ததும் படம் பிரேக் அடிச்ச தேர் மாதிரி டக்குன்னு நிக்குது.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அதுல சின்ன வயசுல இருந்தே ஒண்ணா படிச்ச 2 பொண்ணுங்க, 3 பசங்க அதுல ஒரு பையனும் ,பொண்ணும் லவ் பண்ணறாங்க.. ( வேற என்ன பண்ணுவாங்கன்னு நாம எதிர்பார்க்கமுடியும்?)பொண்ணோட அப்பா வில்லன்.. நரி மாதிரி திட்டம் போட்டு காதலர்களை பிரிக்க நினைக்கறான்.. எப்படி காதலர்கள் ஒண்ணு சேர்றாங்க என்பதுதான் படம். 

 25 வருஷங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டிய படம். அமலா பால் இந்தப்படத்தில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார்.. ஆனால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு அதற்குப்பிறகு புக் ஆன சிந்து சமவெளி, மைனா என 2 படம் வந்த பிறகு இப்போ லேட்டா வந்த படம் இது...

http://kollyworld.com/images/stories/news/102009/Vikatakavi_movie.jpg



இங்கிலீஷ் டீச்சருக்கும்,தமிழ் வாத்தியாருக்கும் லவ் ஏற்படுவதையும் அதை மாணவர்கள் கிண்டல் அடிப்பதையும் செம காமெடியாக எடுத்திருக்கிறார்கள் என்றால்.. அடி ஆத்தாடி நீ போகும் பாதை.. பாட்டைப்போட்டு டைமிங்க் அடித்தது தூள்.. 

குட்மார்னிங்க்  என்று மட்டும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி டீச்சர் மாணவியை தூதாக அனுப்பி வாத்தியாரிடம் குடுப்பது நம்பவே முடியலை.. அவர் என்ன சீமைலயா இருக்கார்? அடிக்கடி 2 பேரும் சந்தித்துக்கொண்டு தானே இருக்காங்க.(.# மொக்கைப்படத்திலும் லாஜிக் பார்ப்ப்மில்ல?)

படத்தில் தென்பட்ட நல்ல வசனங்கள்


1.  அப்பா - டேய்.. போய் புக்கை எடுத்துப்படி.... 

 மகன் - ஹூம்.. ஆடு மாடு மேய்க்கிறவன் எல்லாம் நமக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. 

2. இந்த ரன்னிங்க் ரேஸ்ல நானும் கலந்துக்கறேன்.. 

 தம்பி நீ செம சோம்பேறி ஆச்சே..இது ஜாக்கிங்க் போட்டி இல்ல தம்பி.. ரன்னிங்க் போட்டி.
http://icdn1.indiaglitz.com/malayalam/news/amala171210_1.jpg
-- 
3.  அப்பா - டேய்.. எங்கேடா போய்ட்டு வர்றே..?

மகன் - வம்பை விலை குடுத்து வாங்கறே,. ம் ம் 

4. கட்டப்பஞ்சாயத்துல என்ன இம்புட்டுக்கூட்டம்?

என் பொண்டாட்டி கேஸ் நடக்குதே... ( அவன் பொண்டாட்டி ஒரு கேஸ்.. கேஸ் நடத்தும் கேஸ் ஹி ஹி )

5. இப்போது நேரம் நெருங்கி விட்டதால் நமது மாண்பு மிகு கலெக்டர் அவர்கள்..... ( டமால்.. வெடி.. )

நிஜமாவே கலெக்டருக்கு நேரம் நெருங்கிடுச்சு..

6.இப்போ என்ன நடந்ததுன்னு டைனோசர் மாதிரி கத்தி ஊரைக்கூட்டறே..?

7. இன்னைக்கு என்ன நாள்?

சனிக்கிழமை..

 அட.. ஞாபகம் வெச்சுக்கரெக்ட்டா சொல்லீட்டியே.. செம மூளை தான்..

8. டியர்.. ஏதாவது பேசுங்க..

ஐ லவ் யூ... 

 வெறும் காத்து தாங்க வருது.. 

9. எனக்கு லவ் மூடு வந்துடுச்சு.. இம்மீடியட்டா என்னை லவ் பண்ணு .. 

 அய்யோ என்னை வீட்ல வைவாங்க.. 

http://1.bp.blogspot.com/-PcS2SljOfq0/TavojdzdPuI/AAAAAAAABFM/8tKW4RQoq_w/s1600/kungumam_75.jpg


படத்தில் ரசனையான காட்சிகள்

1. செம காமெடியான ஆனால் ஏகப்பட்ட குறும்புகள் செய்து ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் 5 பேரையும் விரட்ட அநாதை விடுதிக்கு நிதி திரட்டி குடுக்கும் சீன்...

2. கேஸ் சிலிண்டரை குக்கர் என நினைத்து விறகு அடுப்பில் அதை வைக்கும் மாணவியின் அப்பாவித்தனம்... சத்துணவு  ஆயா டமால் ஆவது... ( அந்த அளவுக்கு மடச்சியா இருப்பாங்களா? யாராவது என எண்ண வைத்தாலும் சீனில் தெறிக்குது காமெடி)

3. பொண்ணுங்க 4 பேரு நடந்து வரும்போது பசங்க கூட்டம்ல ஒருத்தன் ஒரு பேனாவைப்போட்டு யார் இந்தப்பேனாவை எடுக்கறாங்களோ அவ தான் என் ஆள் என உதார் விட ஸ்கூல் கக்கூஸ் காரம்மா அதை எடுப்பது .. 

4. ஏதோ ஒண்ணு சொல்ல நினைச்சேன்  பாடல் காட்சியில் திராட்சைத்தோட்டத்தை அழகு ரசனை பொங்க காட்டியதும்.. அந்தப்பாடலில் அமலா பாலின் அழகு முக பாவனைகளும்.. 

5. அமலாபாலின் மாமா அவரை காதலிக்க சொல்லும்போது உப்பு மூட்டை தூக்கத்தெரியுமா? என விளையாட்டாக கேட்கையில் அமலாபாலை உப்பு மூட்டையாக தூக்காமல் மளிகைக்கடையில் உப்பு மூட்டை தூக்கி பயிற்சி எடுப்பது..  ( அம்புட்டு அப்பாவியா அவரு.. சின்னத்தம்பி பிரபு தோத்தார் போ)


இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

1. சொத்துக்காக ஆசைப்பட்டு அக்கா கணவரையே போட்டுத்தள்ளும் வில்லன் அடுத்த சீனே சாமான்யன் போஸ்ட்டில் இருந்து ஜமீன் தாரர் ஆவது எப்படி?

2. தன் அப்பாவின் கபட நாடகம் புரியாமல்  ஹீரோயின் காதலனை வெறுப்பது ஓக்கே.. ஆனால் எனக்கு உங்களை விட அப்பா தான் முக்கியம் என பஞ்ச டயலாக் பேசி கொல்வது எதற்காக? 

3. அமலாபாலும், ஹீரோவும் ஒரு பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் ( அடச்சே வெறும் பேச்சுத்தானா? )அப்போ ஹீரோ ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் இருக்கிறார்.. அப்போ ஃபிரண்ட்ஸ் வர்றாங்க.. கூப்பிட்டதும் அவர் பாறையை விட்டு இறங்கி வர்றார்,, இப்போ அவருக்கு அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி தாடி..???? ( கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்)

படத்தில் ஒரே ஒரு ஆறுதலான அம்சம் அமலாபால் 18 3/4 வயசுல இருந்தப்ப எடுத்த படம்.. அவரது அபார இளமை கொள்ளை அழகு.. 

பாடல்கள் சுமார்.. எல்லா டெக்னிக்கல் அம்சங்கள் ரொம்ப சுமார்.. திரைக்கதை ஜவ்வு.. படம் எல்லா செண்ட்டர்களிலும் ஒரு வாரம் தான் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன்  மார்க் - 35

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

 ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - அமலாபாலின் கன்னிப்படம் என்றால் முதல் படம் என அர்த்தம்.. ஹி ஹி .