Saturday, November 02, 2019

ரம்யா பாண்டியன் போட்டோக்களை தடை செய்யனும்?!!

1  மன்னா! மகாராணியைப்புகழ்ந்து பரிசு பெற வந்துள்ளேன்

புலவரே!அதெல்லாம் பழசு ,யுக அழகி ,மொட்டை மாடி போட்டோசூட் பேரழகி ரம்யா பாண்டியன் பற்றி பாடும்

==============


2  மன்னா! இந்த சமஸ்தானத்தின் கவர்னர் ஆக எனக்கு ஆசை ,என்ன வழி?

பக்கத்து சமஸ்தானம் போய் "இங்கே தாமரை நிச்சயம் மலரும்"னு டெய்லி சொல்லு,உன்னை கவர்னர் ஆக்கிடுவாங்க

===============


3  மன்னா!பதுங்கு குழியில் படுத்து தூங்காதீர்கள் என்றால் கேட்கிறீர்களா?

ஏன்?என்ன ஆச்சு?

ப"தூங்கு"குழினுபோர்டு வெச்டடாங்க பாருங்க

=================

4   தளபதி!என் வாளுக்கு வேலை வந்து விட்டது

பாவம் ,உங்களுக்குத்தான் எந்த வேலையும் கிடைக்க மாட்டேங்குது


=================


5  அமைச்சரே!மாதம் மும்மாரி பொழிகிறதா?

அது தெரில,ஆனா மாரி1  மாரி 2  ரிலீஸ் ஆகிடுச்சு மாரி3 வந்துடுச்சுன்னா  மும்மாரி  ஆகிடும்

====================


6  சாகோ போலாம்னு இருக்கேன்

வாழற வயசு,ஏன் சாக போறே?

=================


7  தலைவரே! நம்ம கட்சி மாநாடு க்கு கூட்டம்வருமா?

மெகா மாநாடு னுபேரு மாத்துங்க ,அட்லீஸ்ட் சிம்பு ரசிகர்களாவது வரட்டும்

-------------------- 


8 தலைவரே!உலகம் பூரா கொண்டாடும் ரம்யா பாண்டியன் போட்டோக்களை தடை செய்யனும்னு போராடறீங்களே?ஏன்?பிகர் ஷோக்காத்தானே கீது?

"ரம்"யா பாண்டியன் பேர்லயே மது இருக்கே?

=================


9   மன்னா!போர் வரும்போது பாத்துக்கலாம்னுசொன்னீங்களே!வந்துடுச்சு

சரிபோர் வந்துடுச்சு,போரை பார்ப்போம்

அப்ப போரிட வர்லையா?

அய்யோ,போர் வரும்போது போரை பாத்துக்கலாம்னுதான் சொன்னேன் போரிடறேன்னு சொல்லலையே?

=====================

 10     கவர்னர் ஆகனும்னு தலைவருக்கு ரொம்ப  ஆசை ,எதுனா குறுக்கு வழி இருக்கா?

தமிழகத்தில் தாமரை மலர்நதே தீரும்னு  டெய்லி    100 ^தடவை இம்ப்போசிசன் எழுதுங்க


=================


11மன்னா!போர் "நடக்கும் "சூழல் நிலவுது

அப்போ நாம "ஓட வேண்டிய நேரம்  


=========

12   மன்னா!அரண்மனை யில் உள்ள கஜானாக்களை இணைக்கப்போறீங்களா?ஏன்?

பொருளாதார தேக்கநிலையை சரிப்படுத்தத்தான்

========

13  மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே?
;
ஏன் மன்னா?உங்களுக்கு கண்ணு தெரியாதா?

=======

14  மன்னா!பல்லக்குத்தூக்கிகளுக்கு பல மாத சம்பள பாக்கி

அப்போ பல்லக்கு தூக்கிகளை தனியாருக்கு ஏலம் விட்ருவோமா?

=======

15   மன்னா!நீங்க போர்க்களத்துக்கு வந்து மாமாங்கம் ஆகுது

அப்டியா?ஒரு தடவை தோத்துட்டா அந்தஇடத்துக்கு மறுபடி நான் போக மாட்டேன்

==================

0 comments: