Saturday, August 10, 2013

தலைவா - விஜய் பர பரப்பு அறிக்கை , கலைஞர் கடிதம் , ஜெ தரப்பு வாதம்

தலைவா பிரச்னை - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

Thalaivaa issue : Vijay request to fans
தலைவா படம் விரைவில் வெளியாகும், அதுவரை ரசிகர்கள் பொறுமையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தலைவா படம் வெளியாகதாதல் அவரது ரசிகர்கள் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கோவையில் அவரது ரசிகர் ஒருவர் தற்கொலையே செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, நான் நடித்த தலைவா படம் ஆகஸ்ட் 9ம் தேதி ‌திரையிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த தேதியில் படம் வெளிவர முடியவில்லை.

என் மீது பாசமும், அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஏமாற்றத்தினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதவாக நான் அறிந்தேன். இது நமக்கு நல்லதல்ல, தலைவா படம் விரைவில் திரைக்கு வரும். அதுவரை ரசிகர்கள் பொறுமையுடனும், கண்ணியத்தோடும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் கூறியுள்ளார்



தலைவா படத்திற்கு வரிவிலக்கு கிடையாது - தமிழக அரசு!!
5

No tax relaxation for Thalaivaa says TN govt
 விஜய் நடித்துள்ள தலைவா படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு தர முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் தலைவா. இப்படம் நேற்று வெளியாக வேண்டியது. ஆனால் சில பல பிரச்னைகளால் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தலைவா படத்திற்கு யு சான்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசிடம் படக்குழுவினர் கேட்டிருந்தனர்.

அதன்படி படத்தை பார்த்த 7பேர் கொண்ட தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு குழுவினர், படத்திற்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர். படத்தில்  சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும், யு சான்று பெற்றாலும், ஆங்கில கலப்பு வசனங்கள் நிறைய இருக்கிறது என்றும்,  பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும், சமுதாயத்தை திசை திருப்பும் வண்ணத்தில் விஜய்யின் வசனங்கள் இருப்பதாலும் தலைவா படம் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்றும் தேவேந்திர பூபதி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ உள்ளிட்ட 7பேர் கொண்ட உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறி அதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே படம் ரிலீஸாவதில் சிக்கல் உள்ள நிலையில், படத்திற்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறியிருப்பது ‘தலைவா’வுக்கு மேலும் ஒரு ‘தலைவலி’யை ஏற்படுத்தியுள்ளது.


விஸ்வரூபத்திற்கு வந்த அதே நிலை தலைவாவுக்கு - கருணாநிதி அறிக்கை
4

Karunanidhi statement on Thalaivaa Issue
 விஜய்யின் தலைவா படம் ரிலீஸாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  தலைவா படம் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

இந்த நிலையில் அந்த படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசை தாக்குவதை போல இருப்பதாகக் கூறி, அந்தப்படம் வெளிவரும் தியேட்டர்களுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும், யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜய் முதல்– அமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடை நாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. மேலும், தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும் வரி விலக்கு கூட, இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் இந்த நிலைதான் வந்தது. தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் தொடருமேயானால், அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால், ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலைதான் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 
நன்றி  - தினமலர்


தலைவா - தமிழக அரசின் வணிக வரித் துறை விளக்கம்

A





A


A

சமுதாயத்தை திசைதிருப்பும் வண்ணம் சட்டத்தை கையில் எடுக்கும் கதாநாயகன்'' - தலைவா படத்துக்கு வரிவிலக்கு ஏன் இல்லை? தமிழக அரசின் வணிக வரித் துறை விளக்கம்.A




விஜய்யின் தலைவா பிற மாநிலங்கள் - வெளிநாடுகளில் ரிலீஸானது - தமிழகத்தில் 22ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு!

Thalaivaa released in other states and Foreign country - Tamilnadu may be 22 release
நடிகர் விஜய் நடித்த, "தலைவா படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. "படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், "தலைவா படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை.ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில், நேற்று படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று காலை தியேட்டர்களுக்கு வந்த விஜய் ரசிகர்கள், ஏமாற்றமடைந்தனர்.

போலீஸ் காரணமில்லை: டி.ஜி.பி., தகவல்

டி.ஜி.பி., ராமானுஜம் வெளியிட்ட அறிக்கை:"தலைவா என்ற படம் வெளியாவதை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, தமிழக காவல்துறை தள்ளி வைத்துள்ளதாக ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன; இச்செய்தியில் உண்மையில்லை. பட வெளியீட்டை தள்ளி வைக்குமாறு, தமிழக காவல்துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை. இத்திரைப்படம் வெளியிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிலும், காவல்துறைக்கு பங்கில்லை. படம் வெளியிடப்படுவது பற்றிய முடிவுகள் திரைப்படத் துறையை சார்ந்தது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

22ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு

இந்நிலையில், படம் வெளியீடு குறித்து, நேற்று இரவு வரை, தயாரிப்பாளர் நேரடியாக ஏதும் பதில் கூறவில்லை. படத்தை, வரும் 15ம் தேதி வெளியிட, மாற்று ஏற்பாடு நடந்ததாகவும், அன்று சுதந்திர தினம் என்பதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு முழுவதுமாக கிடைக்காது என்பதால், வரும், 22ம் தேதி, படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியானது.

ரசிகர்கள் கலாட்டா!

"தலைவா படம் நேற்று வெளியிடப்படும் என, நினைத்த விஜய் ரசிகர்கள், தியேட்டர்களுக்கு நேற்று காலை வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தியேட்டர் உரிமையாளர்கள், "படம் இன்று வெளியாகாது என, ரசிகர்களை திரும்ப அனுப்பினர். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள விஜய் ரசிகர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களுக்குச் சென்று பார்த்தனர்.புதுக்கோட்டையில், சாலை மறியலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்கள், 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில், 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள், இடைப்பாடி - சேலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆத்தூரில், விஜய் ரசிகர்கள் மறியலில் ஈடுபட முயன்றதோடு, தியேட்டர்களை முற்றுகையிட்டனர். அதனால், தியேட்டர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வேலூர், திருவண்ணாமலையில், விஜய் ரசிகர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், அவர்களை கலைத்து அனுப்பினர்.

அலைக்கழிக்கப்பட்ட ரசிகர்கள்

மதுரையில் நேற்று இரண்டு தியேட்டர்களில் தலைவா படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு ரசிகர்க‌ளும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களி‌லே‌யே படம் வெளிவரவில்லை அதனால் ரசிகர்களை வெளியேறும்படி ‌அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதேசமயம், தங்களை இப்படி அலைக்கழிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டபோது வெளிமாநிலங்களில் சென்று படம் பார்க்க தொடங்கினர் ரசிர்கள். அதேப்போல் தலைவா படமும் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதில் தாமதமாகி வருவதால் விஜய்யின் ரசிகர்கள் வெளிமாநிலங்களில் சென்று படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அதிகளவு ரசிகர்கள் சென்று படம் பார்க்க தொடங்கியுள்ளனர்
 
 
 
.THANX-DINAMALAR
 
 
DISKI -

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/08/chennai-express.html 

 

தலைவா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/blog-post_5337.html

 

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

 

தாத்தாவின் ஆஸ்தியை  எப்படி பேரன் உதயநிதி ஸ்டாலின் சினிமா  எடுக்கறேன்கற பேர்ல கரைச்சுட்டிருக்காரோ  அப்படி   ஹீரோ தன் தாத்தாவின்  அஸ்தியை கரைக்க ரயில்ல  ராமேஸ்வரம்  போறார்.ரயிலில் வந்த மயிலை  சந்திக்கறார்.மயிலுக்கு  என்ன பிரச்சனைன்னா இயக்குநர் சேரன்  பொண்ணு மாதிரி  அது  யாரையும்  லவ்வலை, ஆனா வீட்ல  பார்த்து வெச்ச மாப்ளை பிடிக்கலை, அதுனால   வீட்டை விட்டு ஓடி வர திட்டம் போட்டிருக்கு .


ஹீரோவை யார்னே தெரியலைன்னாலும்  அவர் தான் தன் காதலர்னு  சும்மா அடிச்சு விட்ருது. ஆல்ரெடி பார்த்து வெச்ச மாப்ளையை  அடிச்சு  வீழ்த்துனாத்தான்   பொண்ணு  ஹீரோவுக்கு .!  ஹீரோ  ஹீரோயினைக்கூட்டிட்டு   எஸ் ஆகறார். வழிப்பயணத்துல  ஹீரோயின் கூட  சினேகா  ஆகிடுது , அடச்சே , சினேகம் ஆகிடுது. லவ் வந்துடுது . ( நாமும் எத்தனையோ பயணம்  கடந்து வந்துட்டோம்  ஒரு லவ்வும் வந்து தொலைய மாட்டேங்குது ;-))


அவங்க  2 பேர் லவ் என்ன ஆச்சு? என்பதே  கதை 


 ரொம்ப சாதாரணமான , நமக்கு மிகவும் பரிச்சயமான இந்தக்கதையை   ரொம்ப சுவராஸ்யமான திரைக்கதை  , சம்பவங்கள் மூலம்  விறு விறுப்பாக்கொண்டு போறாங்க 




ஹீரோ ஷாருக்கான்  நம்ம ஊர் மவுன ராகம் கார்த்திக் மாதிரி, என்ன ஒரு இளமைத்துள்ளல் , நடிப்பு , பாடி லேங்குவேஜ் , எல்லாம் அபாரம் . இந்த வயசுலயும்  பாஜிகர்  படத்துல பார்த்த அதே சுறுசுறுப்பு ,இளமை . வெல்டன் . 

இவர் பேசும்   தமிழ் , ஆங்கில , ஹிந்தி வசனங்கள்  செம காமெடி கலாட்டா , கிரேசி மோகன் பாணியில் அமைந்த   வார்த்தை ஜால காமெடி  பெரிய பிளஸ்.



ஹீரோயின் தீபிகா அந்த புதருக்குப்பின்னால போகக்கூடாது, படுக்கக்கூடாது சாரி  தீபிகா படுகோனே . தேக்கு மரம் மாதிரி வழுவழு என்ற  வாளிப்பான  உடம்புடன் , பாக்கு மரம் மாதிரி ஓங்கி வளர்ந்த உடம்புக்காரி  ( நீ இதுக்கு முன்னால பாக்கு மரத்தையோ , தேக்கு மரத்தையோ நேர்லபார்த்திருக்கியா? சும்மா அள்ளி விடாதடா? ) இவர்  முதுகில்  எதுவும் அணிவதில்லை  என்ற வைராக்கியத்துடன்  ஆளான நாள் முதலா  சத்தியம் செஞ்சு  கொடுத்தவர் மாதிரி ஓப்பனாகவருகிறார்.




 இவர் லோ ஹிப் சேலை மிகமிக அபாயகரமான  ஷேர் மார்க்கெட் , பண ரூபாய் மதிப்பு போல  கீஈஈஈழே இறங்கி வரும்  வாகு அய்யய்யோ !.தொப்புளுக்கு கீழே  2 இஞ்ச் சேலையை இறக்கி கட்டும்மான்னு டைரக்டர் சொன்னா  6 இஞ்ச் இறக்கி கட்டும் இறக்க  சுபாவம் உள்ள   கிளாமர் ராணி . இவர் போட்டு வரும்  வளையம் உள்ள மூக்குத்தி இவர் முக அழகுக்கு பொருந்தவில்லை என யாராவது அவரிடம் போய் சொன்னால் தேவலை ( அல்லது ஃபோன் நெம்பர் கொடுத்தா நான் மெசேஜ்ல சொல்லிக்கறேன் ) 


அடிக்கடி இவர் லோ கட் ஜாக்கெட்டில் துள்ளிக்குதிப்பது  முயல் கதையை நினைவுபடுத்துது . ஹீரோவை விட  அரை அடி  உயரம் என்பதால்  ஹீரோவுடனானக்ளோசப் காட்சிகளில் எல்லாம்  குனிஞ்சு  நடிக்க வேண்டிய  கட்டாயம் , நமக்கு தாயம் 



ஹீரோயின் அப்பாவாக சத்யராஜ் . கம்பீரமான தோற்றம் , ஆனால் அதிக வாய்ப்பு இல்லை.  கிராமத்து தாதா  தோற்றம் கனகச்சிதம். மேஜர் சுந்தர்ராஜனுக்கு அண்ணன் . ஒரே வசனத்தை தமிழில் , ஆங்கிலத்தில் , ஹிந்தியில் என  3 டைம் சொல்றார். ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறுபதம் இதோ -  டேக் ஹெர் , இவளை எடுத்துக்கோ , தேரி மேரி 


படம் முழுக்க தமிழ்  வசனங்கள்  வந்து போகுது , மும்பைல சப் டைட்டில் போட்டுத்தான்  படத்தை ஓட்டனும்  போல





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  




1. ஓப்பனிங்க் சீனில்  ஹீரோயினுக்கு ஓடும்  ரயிலில் இருந்து கை கொடுத்து  ஏத்தி விடும்(ரயில்ல தான்) ஹீரோ  வில்லன்கள்  என தெரியாம   4 பேரையும்  அதே போல்ம்  கை கொடுத்து  ரயிலில் ஏற்றுவது  செம காமெடி சீன் , தியேட்டரில் செம அப்ளாஸ் 


2. அந்த    ரயில்  ஒரு பாலத்தில்  நிற்கும்போது   ஹெலிகாப்டர்ஷாட்டில்  இரு புறமும் ஓடும் ஆற்றை காட்டுவ்து அபார,மான லொக்கேஷன்  செலக்‌ஷன் ,ஒளிப்பதிவு  பிரமாதம்  ( மகாராஸ்ட்ராவில் உள்ள  டூர் ஸ்பாட்டான  லோனாவாலாவாம் - நாமெல்லாம் பேங்க்ல லோன் வாங்கிட்டுதான் அங்கே போக முடியும் )  ஹாலிவுட் படத்துக்கு இணையான காட்சி அது 



3. திருமணமான மாப்பிள்ளைகள் மணப்பெண்ணை  தூக்கிக்கொண்டு   300 படிக்கற்கள்  உள்ள   மலைக்கோயிலில்  தூக்கிச்செல்ல வேண்டும்  என்ற நிபந்தனைப்படி  ஹீரோ ஹீரோயினை  தூக்கிச்செல்லும் செண்ட்டிமெண்ட் சீன்  ( இந்த  சீனில் நான் அனிரூத்  ஆண்ட்ரியாவை  தூக்கிச்செல்வது போல் கற்பனை பண்ணிப்பார்த்துக்கிட்டேன் ) 


4.   கூட  இருக்கும் வில்லனின் அடியாட்களுக்கு தமிழ்மட்டுமே தெரியும் என்பதால்   ஹீரோ - ஹீரோயின் இருவரும் பாட்டு மூலமாகவே  சங்கேதமாக தகவல் பரிமாறிக்கொள்வது   சுவராஸ்யம் . ஹிந்தியில்   சூப்பர் ஹிட் பாட்டுக்களை   அதே மெட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்பாடுவது  பாலிவுட்டில்  அமோக வரவேற்பு பெறும் 


5.  ப்ரியாமணியுடனான  குத்தாட்டம் கலக்கல் டான்ஸ் ,  அந்த மெட்டு , டான்ஸ்  கொரியோகிராபி  கிழி கிழி  ( நன்றி  - கலா சலா  சல சலா ).க்ளைமாக்ஸில்   வரும்  லுங்கி டான்ஸ்  செம ஆட்டம் .


யு  நெக் ஹிஹி


 இயக்குநரிடம்  சில  கேள்விகள்:



1. கில்லி படத்தில் விஜய்  த்ரிஷாவின் கழுத்தில்  அரிவாளை வெச்சு மிரட்டி வில்லன்களிடம்   இருந்து  தப்பிப்பதும்  , பிரகாஷ் ராஜை  ஜீப்புடன் ஓட விட்டு சேத்தில் தள்ளி  விடுவதும் மிக புகழ் பெற்ற காட்சி , அதை அச்சு அசல் அப்படியே காப்பி அடிச்சது ஏன்? இத்தனைக்கும் இது ஆல்ரெடி  தெலுங்கில் வந்தசீன் தான் . ஒரே சீனை  எத்தனை பேர்தான்   சுடுவீங்க ? ( ஒக்கடு தெலுங்கு ஒரிஜினல் )
2. முத்து படத்தில்   லவ் லெட்டர்  கை மாறி ஆளாளுக்கு தப்பா ஆளைஅர்த்தம் பண்ணிக்கிட்டு நைட்  தோட்டம்  வந்து  அலை மோதும்  காமெடி அப்படியே   சுட்டிருக்கீங்க  .. முடியல(   மீட்   @ ஸ்டோர் ரூம்) 



3. ஹீரோயினுக்கு  ஃபேஸ் எக்ஸ்பிரசன்ஸ் சுத்தமா வர்லை . அதனாலதானோ என்னவோ  கேமரா எப்பவும் அவர் முகத்தைத்தவிர   மத்த  எல்லா இடங்கள்லயும்  சுத்திட்டே இருக்கு  


4. ஷாருக்கான் படத்துல   ரஜினி வரனும்னு கட்டாயமா? என்ன?  ரஜினி இந்தப்படத்துல நடிக்கறார், ஒரு கெஸ்ட்  ரோல்ல வர்றார்னு ஆசை காட்டி  சும்மா ஒரேஒருபாட்டுக்கு   அவர்  ஃபோட்டோவ மட்டும் மாட்டி ஹீரோ ஷாரூக் ஆடுவது   ஆர்க்கெஸ்ட்ரா  ட்ரூப் மாதிரி இருக்கு , படு செயற்கை  , இதெல்லாம்   அறிமுக   ஹீரோ படத்துக்கு  ஓக்கே , ஷாரூக் மாதிரி  சூப்பர் ஸ்டார்கள் இன்னொரு சூப்பர்ஸ்டாரை   அண்டிப்பிழைக்கனுமா?


5.   இளையதளபதி விஜய்& புரட்சித்தளபதி   விஷால் 2 பேரும்   சம்ப்ந்தம் இல்லாம ஏதாவது பஞ்ச்  டயலாக் அப்பப்ப பேசுவாங்க , அந்த மாதிரி இதுல ஹீரோ எதுக்காக  ஒரு டயலாக்கை அடிக்கடி  ரிப்பீட்டிங்க்? - டோண்ட் அண்டரெஸ்டிமேட் த  பவர்  ஆஃப் எ  காமன் மேன்  = பொது ஜனத்தின்சக்தியை   குறைச்சுஎடை போடவேணாம் 




6. அலெக்ஸ் பாண்டியன் அட்டர் ஃபிளாப் ஆக முக்கியக்காரணமே   ஹீரோ   80 கிமீ வேகத்தில்  ஜீப்ல போய்க்கிட்டே எதிரே 120 கிமீ வேகத்தில் வரும்  ஜீப்  டயரை அரிவாளால் வெட்டி தள்ளும் சீன் தான் .. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத   அந்தசீனைஏன் காப்பி அடிக்கனும் ? 



7.  கிங்க்காங்கின் மொக்கை காமெடி  சீன்,இலங்கைக்கு டீசல்   கடத்தும்  சீன்  தேவை  இல்லாதது 


8.  படத்தின் முன்  பாதி   செம ஸ்பீடா போகுது , பின் பாதி   டெட் ஸ்லோ . இழு இழு என இழுத்திருக்கவேண்டாம் , எடிட்டிங்க்ல இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்


9 . தனுஷ் இன் உத்தம புத்திரனில் இருந்து சில காட்சிகளை  உருவியது எதுக்கு ?  என் லிங்கு சாமியின்  ரன் பட க்ளை மாக்ஸ் காட்சியைசுட்டது ஏன்? 



10 . ஹீரோவின் பெயர் ராகுல் என வைத்தது  யாருக்கு  குல்லா போட?




மனம் கவர்ந்த வசனங்கள்



1.  ஹீரோயின்  -அந்த ஃபோன்  அவருது
வில்லன்கள் -அடடா ,முதல்லியே  சொல்லி  இருந்தா  அவரையும்  தூக்கிப்போட்டிருப்போமே? 


2.  ஹீரோயின்  -எங்கப்பா  ஒரு  பெரிய   தலை 

 ஓஹோ , டீச்சரா? ஐ மீன்  வாத்தியாரா?


 ஹய்யோ , அவர் ஒரு டான்  ( தாதா) 



3. சத்யராஜ்  - என்னம்மா   கண்ணு... தமிழ்  தெரியாதா? 



4. ஐ ஆம்  இன்ஸ்பெக்டர் 


விச் பார்ட்?


ஹோல் பாடிக்கும்

 யோவ் , எந்த  ஏரியாவுக்குன்னு கேட்டேன்




5. உயிரோட வந்த நீ உயிரோட இங்கே இருந்து  போக மாட்டே  


 

6. ஆல் ஈஸ்   வெல்

 என்னது,? ஆயில் ஈஸ் வெல்லா? 



 7  , என்னங்க ? வண்டி  ரிப்பேரா? ஏன் கார்ல புகை வருது?

 ம், கார் தம் அடிக்குது 



8.  கேரளா  லாரி  டிரைவர் -எந்தா ஜோலி? 


 ஐ ஆம் நாட் ஏஞ்சனா ஜூலி 



9.  நான்  ரொம்ப நல்லவன் , ஒரு மகளோட மாப்பிள்ளைக்கு  இதைவிட முக்கியமான  தகுதி என்ன வேணும் ?


 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  41



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் =   3.25  / 5


சி பி கமெண்ட்    - ஷாரூக்  ரசிகர்கள் , தீபிகா (குப்புற) படுகோனே ரசிகர்கள்  பார்க்கலாம் . ஜாலி டைம்பாஸ், பெண்களும் பார்க்கலாம் . ஈரோடு வி எஸ் பில படம் பார்த்தேன் 




டிஸ்கி- தலைவா- விமர்சனம் -http://www.adrasaka.com/2013/08/blog-post_5337.html 

















 ஒயிட் அண்ட்  பிளாக் கில்  கலர்



Friday, August 09, 2013

தலைவா - சினிமா விமர்சனம் ( ஒரு பாசிட்டிவ் , ஒரு நெகடிவ் விமர்சனம் )

 
தலைவா திரைப்படத்திற்கு Brit Tamil ஆசிரியர் குழுவின் புள்ளிகள் - 65/100

விஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது 'தலைவா'.அரசியல் கதைகளம் கொண்ட படம்,படத்தில் விஜய் சி.எம் ஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன அதனால் தான் ஆளும் தரப்பிலிருந்து ஏகப்பட்ட குடைச்சல்கள் என்று அரசல் புரசலாக பேசப்பட்டன.தமிழகத்தில் இப்படி என்றால்,இலங்கையில் விஜய்,கமல்,ரஜனி படங்களை திரையிடவிடமாட்டோம் என்று கொழும்பில் சிங்கள அமைப்பொன்றின் எச்சரிக்கையால் வி.ஐ.பி ஷோக்கள் ரத்து செய்யப்பட்டன.
இறுதி தருணம் வரையில் படம் வெளியாகுமா என்கின்ற டென்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் பரவிப்போயிருந்தது.2.8மில்லியன் ஹிட்ஸ் அடித்திருந்த தலைவா ட்ரெய்லர்லேயே படம் எப்படிப்பட்டது என்பது ஓரளவுக்கு புரிந்திருந்தது.சரி இயக்குனர் விஜய் புதிதாக ஏதாவது செய்திருப்பார் என்கின்ற நம்பிக்கை ஒருபக்கம் இருந்தது.

ஆரம்பமே சரபரன்னு பாம்பாயில் 1988இல் கலவரம் ஒன்னு காட்டுறாங்க.ஏற்கனவே இருந்த டான் மாதிரியான தலைவர் ஒருவரை போட்டுத்தள்ளிவிட்டார்கள் என்று கதை ஆரம்பித்து மீண்டும் பாம்பாயில் வந்து முடிகிறது கதை.சத்யராஜ் மகனாக வரும் விஜய்யை சிறுவயது முதலே தன்னை விட்டு தள்ளி தூரத்தில் வளர்த்துவருகிறார் 'அண்ணா'என்றழைக்கப்படும் சத்தியராஜ்.
காரணம் தன்னுடைய பிரச்சனைக்குள் மனைவியை இழந்தது போல மகனையும் இழக்கக்கூடாது என்பதனால் தான் பிசினெஸ் செய்கிறேன் என்று கூறி வளர்த்துவருகிறார்.அப்படியாக அவுஸ்திரேலியாவில் டான்சராக இருந்துகொண்டு வாட்டர் சப்ளை பிசினெஸும் பார்த்து வரும் விஜய் பாம்பாய் வந்து சத்தியராஜின் இடத்தை எப்படி அடைகிறார் என்பது தான் கதை.அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த கதை தான்.ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் இயக்குனர் விஜய் தனித்து தெரிகிறார்.

பம்பாய் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு 'பாட்ஷா'வும் நாயகனும் கட்டாயம் ஞாபகம் வந்து தொலைக்கும்.ஆனால் துணிந்து அந்த கதைக்களத்தை தெரிவுசெய்து தன்னால் சுவாரசியமாக படத்தை கொடுக்க முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார்.

முதல் பாதி தான் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.காரணம் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் எவ்வளவு முயன்றாலும் வேறுபடுத்தி கொடுப்பது மிக கடினம் தான்.முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.மிக மிக அழகான காட்சிகள்.ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் அவுஸ்திரேலிய அழகை கண்முன் நிறுத்திவிடுகிறார்.சந்தானத்தின் காமெடி,அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!நிச்சயமாக விஜய்யினதும் அமலாபாலினதும் வேறுபட்ட நடிப்பை தலைவாவில் காணக்கூடியதாக இருக்கும்.  

அங்காங்கே வைக்கப்பட்ட ட்விஸ்ட்டுகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன.திரைக்கதையை நம்பி இயக்குனர் விஜய் களமிறங்கியிருக்கிறார்.ஆரம்ப காட்சிகளில் வரும் சத்தியராஜ் செம அழகாக தெரிகிறார்.கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளின் சத்தியராஜை காணமுடிந்தது.கருந்தாடி வைத்து கருப்பு தலைமுடியுடன் சண்டையிடுவார் பாருங்கள் அப்படி அபாரமாக இருக்கும்!

இது நம்ம அமலாபாலா என்று கேட்கின்ற மாதிரி அழகை மெருகேற்றி வந்திருக்கிறார்.இன்னொரு சுற்று ஆடுவதற்கு தயாராகிவிட்டது போல் தெரிகிறது.சந்தானம் விஜய்யை இமிட்டேட் செய்து கலாய்ப்பதையே தொழிலாக செய்திருக்கிறார் படத்தில்.பெரிய ஹீரோக்கள் காமெடியங்களால் கலாய்க்கப்படுவதை விரும்புவதில்லை.ஆனால் விஜய் இடம்கொடுத்திருக்கிறார் என்று சந்தானம் ஒருபேட்டியில் கூறியிருந்தார்.அது படத்தில் உண்மை என்று தெரிகிறது.அந்தளவு ஓட்டியிருக்கிறார்.சாம் அண்டர்சன் கூட இடையே வந்து கலகலப்பாக்கி செல்கிறார்.  

பாடல்களில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும்,'தலைவா'பாடலும்,'யார் இந்த சாலையோரம்','தமிழ் பசங்க'பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன.தமிழ் ஹீரோக்களில் நடனத்தில் தான் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய்.முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்!ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.

படத்தின் குறைகள் என்றால்,படத்தின் நீளம்.மூன்று மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் ஏதாவது சில சந்தர்ப்பங்களில் நீளத்தை உணரவைத்துவிடும்.கதையை விளக்குவதில் மெதுவான காட்சிகள் சற்றே போர்.

இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன்,நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ். இரண்டாம் பாதியை ஹரியிடம் கொடுத்திருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.

இடைவேளை வரை எந்த ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம்.இடைவேளைக்கு பின்பதாக விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் ஏ.எல்.விஜய் தன்னால் முடிந்ததை இரண்டாம்பாதியில் செய்திருக்கிறார்.தமிழக அரசுக்கு இந்த படத்தால் என்ன பிரச்சனை என்று இன்னமும் தான் புரியவில்லை.விஜய் ரசிகர்களுக்கு படம் விருந்து..!

மொத்தத்தில்,பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது.விஜய்க்கு இன்னொரு ஹிட்டு நிச்சயம்.அது எத்தகைய வெற்றி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இதற்கு முதல் படமான துப்பாக்கி ப்ளக்பஸ்டர் ஹிட் என்பதால் அதனுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.
இவரது ட்வீட்ஸ்
1.  12h
'தலைவா'.அரசியல் படத்தில் விஜய் CMஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன



2. தலைவா: முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.



3. தலைவா: சந்தானத்தின் காமெடி,அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!



4. பாடல்களில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும்,'தலைவா'பாடலும்,'யார் இந்த சாலையோரம்','தமிழ் பசங்க'பாடல்களும் நன்று



5. நடனத்தில் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய். முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்


6. தலைவா: ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.



7. தலைவா: குறைகள் என்றால், படத்தின் நீளம் 3மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் சில சந்தர்ப்பங்களில் உணரமுடிகிறது



8. தலைவா: இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன்,நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ்



9. தலைவா: முதல் பாதி ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம் பின் பாதி விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன



10. தலைவா: மொத்தத்தில், பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது. விஜய்க்கு இன்னொரு ஹிட்டு நிச்சயம்.


நன்றி - பிரிட் தமிழ் ,http://brit-tamil.co.uk/news.php?id=2059,


டிஸ்கி - ஈரோடு , திருப்பூர் , கோவை உட்பட கொங்கு மண்டலம் முழுக்க தலைவா படம்  ரிலீஸ் இன்னைக்கு இல்லை  



ஒரு நெகடிவ் விமர்சனம் 


தலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)


சிங்கையின் மிகப்பெரிய திரையரங்கம். 1500 பேருக்கு மேல் கொள்ளளவு கொண்டது. நான்கு நாட்களுக்கு ஹவுஸ் புல். நிறைய எதிர்பார்ப்புகளுடன் அரங்கமே நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்கு ஒரே விசில்,ஆர்பாட்டம்,சப்தம் என வசனங்களே காதில் விழாத அளவுக்கு ரசிகர்களின் கொண்டாட்டம். பதினைந்தாவது நிமிடத்தில் வருகிறார் இளைய தளபதி விஜய். அடுத்த ஐந்து நிமிடங்களில் அரங்கத்தில் 'பின்ட்ராப்' சைலண்ட். பிறகு மெல்ல மெல்ல சப்தங்கள் கூடி ஒரு கட்டத்தில் 'டேய் படத்தை போடுங்கடா' என்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் பொறுமையை மொத்தமாக சோதித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

படத்திற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல்,திரையிட மாட்டோம் என வாண்டேடாக வண்டியில் ஏறும்போதே தெரியும். படம் மொக்கை என்று..ஆனால் இப்படி ஒரு மரண மொக்கையை எதிர்பார்க்கவில்லை.இன்னும் ஒரு வார காலத்திற்கு இணையத்தில் அடித்துத் துவைத்துத் தொங்கவிடப் போகும் தலைவா-விற்கு முதலில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

இயக்குனர் விஜயிடம் எஸ்.ஏ.சி இப்படி சொல்லியிருப்பார். நாயகனையும் பாட்சாவையும் கலந்து கட்டி விஜய்க்கு ஏற்றவாறு எடுங்கள் என்று. மனுஷன் சாதாரணமாவே அட்ட காப்பி அடிக்கிறவரு.இப்படி சொன்னா கேக்கவா வேணும். நாயகன்ல ஒரு சீன்,பாட்சாவில ஒரு சீன்,திரும்பவும் நாயகனில் ஒரு சீன்..பாட்சாவில ஒரு சீன்...என அப்படியே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார். சரி எல்லோரும் கதையையும் காட்சியையும் தான் காப்பி அடிப்பாங்க.இந்த ஆளு லொகேசனையும் காப்பி அடிச்சிருக்கான்யா.. நாயகனில் வரும் அதே தாராவி, அதே ஆலமரம் ,மேடை என எல்லாம் அப்படியே....

வேலுநாயக்கர் கேரக்டர்தான் விஜயின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு. பெயர் மட்டும் மாறியிருக்கிறது 'அண்ணா' என்று.

மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் கட்டம் கட்டப்பட்டு சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார்( சரண்யா கேரக்டராம்). சினம் கொண்ட சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.தம் மகனான ஐந்து வயது விஸ்வா(விஜய்)வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து,தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்ட்ரேலியா அனுப்பி விடுகிறார்.

பிறகு வேலுநாயக்க....ச்சே.. 'அண்ணா'வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவில் விஜய் தண்ணி பிசினெஸ்(குடிக்கிற தண்ணிதான்) செய்கிறார். 'தமிழ் நாட்டுக்கு தண்ணி கொண்டுவர முடியவில்லை...ஆனால் நீ ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி கொண்டு வந்துட்டியே' என்கிற பன்ச் டயலாக் வேற இருக்கிறது. அங்கு அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் பிடிவாதம் பிடிக்க,சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். ஏன்னா இருவரும் சிபிஐயாம்.  

கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேக்க தோணுமே...முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை போட்டுத்தள்ளினார் அல்லவா...அவரோட மகன்தான்.அப்புறமென்ன அப்பா விட்டுவிட்டுப் போன அந்த அற்புத பணியை மகன் விஜய் தொடர்ந்து செய்ய, கடைசியில் அப்பாவைக் கொன்ன அந்த வில்லனை கொல்கிறார்.

அம்புட்டுதேன் கதை. ரஜினியை பாட்சா பாய்..பாட்சா பாய் என்று அழைத்தது போல இதில் விஜயை விஸ்வா பாய் என்கிறார்கள். எங்கிருந்து பாய் வந்தது என்பதுதான் தெரியவில்லை.தலைவா என்று டைட்டில் இருப்பதால் ஏதோ விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இந்தப்படம் இருக்கும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏன்னா இதில் தமிழ்நாட்டை துளி அளவு கூட காண்பிக்கவில்லை.முற்பகுதி ஆஸ்ட்ரேலியா ..பிற்பகுதி முழுவதும் மும்பை.

முதல் பாதி செம ஜவ்வு... சந்தானம் காமெடியும் செம போர். இப்படியே போனால் விவேக் மாதிரி ஓரங்கட்டப் படுவார். இண்டர்வலுக்கு முன்பு படம் லேசாக சூடுபிடித்தது போல் இருந்தாலும் பிறகு தலை குப்புற படுத்து விடுகிறது. அது என்னப்பா சீரியசான காட்சிகளில் எல்லாம் எல்லோரும் முகத்தைப் பார்த்து பேசாமல் மோட்டு வளையை பாத்து பேசுறாங்க.. ஒருவேளை ஓலகத்தரத்தில் முயற்சி பண்ணி இருக்காங்களோ..

விஜயின் அட்டர்பிளாப் படங்களில் கூட அவரின் அறிமுக காட்சி அற்புதமாக இருக்கும். படத்தின் முதல் சொதப்பலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அறிமுகப் பாடலும் வெறுப்பேற்றுகிறது.துப்பாக்கி என்கிற முழு நீள ஆக்சன் படத்திற்கு அடுத்தாக வரும் இதில் இடைவேளை வரை ஒரு பைட் சீன் கூட இல்லை. ஜோடி நம்பர் ஒன்னில் ஆடிய சில்லரைப் பசங்களை வைத்துக்கொண்டு 'தமிழ் பசங்க' என்கிற டான்ஸ் குருப்பை நடத்துகிறார் விஜய். அடடே.. அப்போ டான்ஸில் பின்னி எடுத்திருப்பார் என கேக்க தோணுமே... அந்தக் கொடுமையை தியேட்டரில் பாருங்க..சுறா தோத்துடும். அதிலும் புன்னகை மன்னன் கமல் ரேவதி மாதிரி விஜய் அமலாபால் ஒரு BGM க்கு ஆடுவாங்க பாருங்க... கண்கொள்ளா காட்சி.

அமலாபாலிடம் முகத்தைத் தவிர காட்டுவதற்கு வேறொன்றும் இல்லையென நினைத்திருப்பார் போல இயக்குனர். நல்லவேளை இருக்கிற வெறுப்பில் அப்படி எந்த விபரீத முயற்சியும் இயக்குனர் எடுக்காதது பாராட்டுக்குரியது.

 

படத்தில் மற்றொரு மைனஸ் இசை.ஒரு பாட்டு கூட ரசிக்கும்படி இல்லை.மும்பையில் நடக்கும் கலவரத்தின் போது இந்தியன் படத்தில் வரும் பின்னணி இசை ஒலிக்கிறது.இதில் விஜய் பாடும் ஒரு பாடலில் G.V.பிரகாஷ் அவருடன் ஒரு சீன் ஆடுகிறார்(இது வேறயா..)

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று தனியாக எதுவும் கிடையாது.ஏன்னா லாஜிக்கே இல்லாத படத்தில் எங்கே போயி லாஜிக் மிஸ்டேக்கை தேடுறது. படத்தில் வில்லன்கள் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான வீடியோ டேப் யார் கையிலும் கிடைக்காமல் ஒருவனால் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது.அது பிக்பாக்கெட்டுதான் அடிக்கப் பட்டிருக்கும் என்பதை வில்லனும் விஜயும் ஒரு சேர கணிப்பது எட்டாவது அதிசயம்.அந்த பிக்பாக்கெட் காரனைத் தேடி விஜயும் வில்லனும் ஒரே நேரத்தில் செல்கிறார்கள். ஒரே நேரத்தில் போன் பண்ணுகிறார்கள். மைக்ரோ செகன்ட் வித்தியாத்தில் விஜயின் போனை எடுத்துவிடுகிறார் அந்த பிக்பாக்கெட் ஆசாமி. அடுத்த முனையில் வில்லன் டயல் செய்து கொண்டே இருக்கிறான். அதைத் தெரிந்து கொண்ட விஜய் போனை கட் செய்தால் வில்லனின் போனை அட்டென்ட் பண்ணி விடுவானோ என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நமக்கு டென்சன் ஏத்துராங்கலாமாம்.. டேய் பக்கிகளா அவன்கிட்ட,இந்த போனை கட் பண்ண உடனையே ஒருத்தன் போன் பண்ணுவான் அத எடுக்காதனு சொல்லிட்டா பிரச்சனை முடிந்தது.காதுல பூ வைக்கிறதுக்கு பதிலா புய்ப்பமே வைப்பீங்க போல..

படத்தில் ஒரே ஆறுதல் 'ரைசிங் ஸ்டார்' சாம் ஆண்டர்சன். மனுஷன் ஒரு நிமிஷம் வந்தாலும் தியேட்டரை அதிரவைக்கிறார். அதிலும் ராசாத்தி பாடலுக்கு ஷோல்டரை குலுக்கி ஒரு மூவ்மென்ட் போடுவார் பாருங்க... சோர்ந்து உட்காந்தவங்க எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வச்சிட்டாரய்யா..

இந்தப்படம் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏதாவது போட்டி வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ணுகிறபோது அவர் ரசிகர்களை குஷிப்படுத்த எந்த மாதிரியான காட்சியமைப்பு வைக்க வேண்டும் என்பதில் மெகா கோட்டை விட்டிருருக்கிறார் இயக்குனர். 

கண்டிப்பாக இந்தப்படத்தை ஒரு தடவையாவது பாருங்கள். இவ்வளவு நாள் கழுவி ஊத்திய ஆதி, சுறா, வில்லு வேட்டைக்காரன் எல்லாம் காவியமாக தெரியும்..

தலைவா... மூணு மணிநேரம் கதறக் கதற.....முடியில.

நன்றி - http://manathiluruthivendumm.blogspot.com/2013/08/blog-post_9.html 




diski -

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/chennai-express.html 


ஐந்து ஐந்து ஐந்து - 555 -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/555.html 

 

தமிழ் நாட்டில் தலைவா இன்னைக்கு ரிலீஸா?

 

 

நடிகர் விஜய் நடித்த தலைவா படம் இன்று வெளியாகுமா? நேற்று இரவு வரை முடிவு ஏற்படவில்லை

Will Thalaivas film release today?
 சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா படத்தை வெளியிடுவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, தியேட்டர்களில் இன்று, "ரிலீஸ் ஆகுமா என்ற நிலை உருவாகி உள்ளது.

நடிகர் விஜய் - அமலா பால் நடித்துள்ள, "தலைவா படம், இன்று (9ம் தேதி) வெளியாக இருந்தது. தமிழகத்தில், 500 தியேட்டர்; உலக அளவில், 2,000 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும், 35 தியேட்டர்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 35 தியேட்டர்களிலும் படம் வெளியிட திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, "ஐநாக்ஸ் தியேட்டர் உட்பட, முக்கியமான, ஒன்பது தியேட்டர்களுக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கும், "வெடிகுண்டு வைக்கப்படும் என, மிரட்டல் கடிதம் வந்தது; போன் மூலம் மிரட்டல்களும் வந்தன. இதனால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இத்துடன், படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளது  எனவும் தகவல் வெளியானது.
 உடன் நடிகர் விஜய், "படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் ஏதும் இல்லை; முழுக்க, முழுக்க ஜனரஞ்சக காட்சிகள் மட்டுமே படத்தில் இடம் பெற்றுள்ளது என, விளக்கமளித்தார்."படத்தின் கதை, எங்கள் குடும்ப கதை எனக்கூறி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வரும், 14ம் தேதிக்குள் படத்தின் கதை குறித்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் பதில் அளிக்க வேண்டும் என, கோர்ட்  உத்தரவிட்டது.படத்திற்கு பல பிரச்னைகள் ஏற்பட்டதால், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட தயங்கினர்; வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது.

அதில் வியாபார ரீதியான பிரச்னை குறித்து பேசப்பட்டது. பிரச்னைகளை தீர்க்க தயாரிப்பாளரும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரகேசரனும் முயன்றனர். ஆனால்,  உடன்பாடு ஏற்படவில்லை.படத்திற்கு, சென்சார் அமைப்பு, "யு சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டிருந்தாலும், "கேளிக்கை வரி விலக்கு இன்னும் அளிக்கவில்லை என, தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். "வரி சலுகை கிடைக்காவிட்டால் படத்தை திரையிட மாட்டோம் என, சிலர் கூறினர்.இந்த சூழ்நிலையில், கேளிக்கை வரி விலக்கு வழங்கும் குழு, நேற்று மாலை, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, "ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில், படத்தை பார்த்தனர். எனினும், கேளிக்கை வரி விலக்கு உண்டா என்பது  இன்று தான் தெரியும்.

"தலைவா படத்திற்கு நேற்று முன்தினம் முதல், டிக்கெட் முன்பதிவு துவக்கம் என, விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால், சென்னை தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், டிக்கெட் வழங்கப்படவில்லை. "நாளை வாருங்கள் பார்க்கலாம் என, தியேட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேவி தியேட்டர் வாசலில், "தலைவா படத்தின் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, விளம்பர பலகை  வைக்கப்பட்டிருந்தது. சத்யம் தியேட்டர் வாசலில் அறிவிப்பு பலகை இல்லை. மாலை வரை ரசிகர்கள் காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினர்."தலைவா படம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில், இன்று வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
 ஆனால், நேற்று இரவு, 8:00 மணி வரை, வினியோகஸ்தர்கள் ஒப்புதல்  தெரிவிக்கவில்லை. அதேபோல், வெளிநாடுகளில் வெளியீடு உண்டா? என்பதிலும், தெளிவான விளக்கம் தரப்படவில்லை.படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய சிலர், "இன்று பிரச்னை சரியாகிவிடும். உடனே படம் வெளியிடப்படும். அல்லது வெளியிடும் தேதி மாறும் என்றனர்.

 ஜெயலலிதாவை சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுப்பு : முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகர் விஜய்க்கு கொடநாட்டில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.கொடநாட்டில் தங்கி, அரசு மற்றும் அரசியல் பணிகளை கவனித்து வரும், முதல்வர் ஜெ.,வை சந்திக்க, நேற்று காலை, 9:00 மணியளவில், நடிகர் விஜய், "தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் சிலர் வந்தனர்.கெரடாமட்டம் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தி, கொடநாடு செல்ல அனுமதிக்கவில்லை.
 15 நிமிடங்களுக்கு பிறகு, கொடநாடு ஊராட்சி அலுவலகம் அருகே இருந்த போலீசாரிடம், "நாங்கள் முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என, விஜய், கோரிக்கை விடுத்தார்.இதன் பிறகு, முதல்வர் ஜெ.,யின் நேர்முக உதவியாளரை சந்திக்க, அனுமதி கொடுக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட் அலுவலகம் சென்ற நடிகர் விஜய், முதல்வரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பினார்.விஜய் கொடுத்த மனுவில், "தலைவா திரைப்படம் வெளியிடுவதற்காக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது."முதல்வர் ஜெ., வரும், 12ம் தேதி சென்னை வரும்போது, உங்கள் பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்துங்கள்; நீங்கள் கூறிய தகவல்களை நாங்கள் சொல்லி விடுகிறோம் என, விஜயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

"தலைவா படத்திற்கு அரசு தரப்பிலும் நெருக்கடி?"நடிகர் விஜய் நடித்த, "தலைவா படம், இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று சில மாவட்ட கலெக்டர்கள், நகரில் அரசியல் கட்சி பேனர்கள் தவிர, மற்ற பேனர்களை அகற்றும்படி, வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், "அரசியல் கட்சி பேனர் தவிர, பொது இடங்களில் உள்ள, மற்ற பேனர்களை அகற்ற வேண்டும். அகற்றுவதற்கு முன்பும், அகற்றிய பின்னரும், அந்த இடத்தை புகைப்படம் எடுக்க வேண்டும். கட்டட உரிமையாளர் அனுமதி பெற்று, கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள, பேனர்களை அகற்ற வேண்டாம் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
."தலைவா படத்தில், அரசை விமர்சித்து, சில வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, படத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக, பேனர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக பேனர்களை அகற்றும்படி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எதற்காக என்பது எங்களுக்கு தெரியாது என்றனர்.

thanx - dinamalar
 படம் பார்த்த ஃபாரீன் ட்விட்டர்ஸ்  போட்ட ட்வீட்ஸ்



  1. RT : சந்தானம் ஒன் லைனர் ஒகே! பட் சாம் ஆண்டர்சன்லாம் வர்றாப்ல....ம்ம்ம் காமெடி வறட்சி
  2. RT : Factory is our proffession. Dance is our passion. Vijay punch dialogue
  3. RT : Amala paul and suresh do not fit into police officers role at all. That's one wrong decision by director and vijay
  4. RT : Climax twist as ponvannan into villans friend is unwanted idea. Appreciate vijay just for his body fitness
  5. RT : At the age 39 or 40 vijay looks like 24 to 26 year old guy

Thursday, August 08, 2013

தலைவா - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம்

 

Plot Outline : A fun loving man, gets tangled to do the leadership role due to bizzare of events. The flashback enrolls, where Vijay will be seen standing across Arabian Sea and follows the flashback where he leads a dance group in Australia ,comes to Mumbai & made to take down the leadership role and faces hurdles from anti-social elements while Vijay is being seen as the saviour for people in Mumbai.



 'Thalaivaa' is a mix of worst plot, screenplay and worst leadership part. The film hardly have positives like Songs, dance numbers & cinematography. Thanks to Nirav Shah for the excellent cinematography that does not make the audience tired. Performance wise, Vijay did a neat job in the first half, entertains the audience by his dance moves, but failed to do the leadership (bold role) in a neat manner. As a lead actor, he could have taken down the movie in his shoulder all the way. 


Lead Actress Amala Paul also does not have much importance. Santhanam's one-liners are catchy, made audience to applause in certain sequences. But when the lead actors disappoint , it is impossible to expect him to carry down the movie. Apart from him, Sathyaraj did the neat job. He is much fit in the leadership part than Vijay. The songs are catchy and well choreographed. The songs are a major relief for the audience. 



In BGM part , G.V. Prakash had repeated the style of A.R. Rahman in several parts. Now coming to A.L. Vijay, the director had come out with a wafer- thin plot. He made a neat and fair first half where he delights the audience with a major twist in the interval block. But his screenplay fails big in the second half, where it is just a run-of-mill plot. Overall : 'Thalaivaa' ‪#‎Fails‬ a big time 


Rating : 2.25/5.



தலைவா - விஜய் VS ஜெ - மோதல் -நடந்தது என்ன?

தலைவா படத்துக்கு  சிலர்  வெடிகுண்டு  மிரட்டல்  விடுத்ததை அடுத்து   சென்னை தியேட்டர்  ஓனர்கள் படத்தை   திரையிட தயங்கினர் . போலீஸ்  பாதுகாப்பு  கேட்கப்பட்டது.  அரசு தரப்பில்   முடியாது என கை  விரிக்கப்பட்டது .


 ஆனால் பின்னணியில்  வேறு  காரணங்கள் சொல்லப்படுகின்றன 



1. தலைவா   வில்  விஜய் சி  எம் ஆவது போல் காட்சி இருக்காம் 


2.  அரசாங்கத்துக்கு எதிரான   சில காட்சிகள்  ,வசனங்கள் இருக்காம் 


3. இந்த   விஷயம் சி எம் செல் வரை  போய் இருக்கிறது . அரசு  தரப்பில்   4 பேர்  படம் பார்த்து  முடிவு சொல்வதுஎன   முடிவுசெய்யப்பட்டது


 படம்  பார்த்தவர்கள்   என்ன   சொன்னார்கள் என தெரியவில்லை .  கொட நாடு சென்ற  விஜய்க்கு ஜெ வை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை 


 எனவே திட்டமிட்டபடி  9 8 2013  படம்  ரிலீஸ்  ஆவது  சிரமம் தான் . 


 இதற்குள் விகடன்   குரூப்   பட ரிலீஸ் தேதியே  12  8 13 அன்றுதான் தெரியும்  என சொல்லிவிட்டது 


 விஸ்வரூபம்  போல் தான் . தலைவா தமிழகம் தவிர  மற்ற  மாநிலங்களீல்  ரிலீஸ் .  அதிகாரப்பூரவ தகவல் இன்று  இரவு  10 மணிக்கு தெரியும்



தலைவா படத்திற்கு தடை கோரி புதிய வழக்கு - நாயகன் வரதராஜ முதலியார் பையன் வழக்கு

தலைவா படத்திற்கு தடை விதிக்கும்படி ராமசாமி என்பவரின் மகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.அப்படத்தில் வரும் 'வரதராஜ முதலியார்' என்ற கதாபாத்திரம் தன் தந்தையின் புகழை கெடுக்கும் வகையில் உள்ளதாக கர்ணன் என்பவர் குற்றம்சாற்றியுள்ளார்

இது வரை கிடைத்துள்ள தகவல்கள் படி விஜய் நடிக்கும் தலைவா படம் ரிலீஸ் ஆக மேலிட கிளியரன்ஸ் கிடைக்கவில்லை, எனவே நாளை தலைவா படம் ரிலீஸ் ஆவது சந்தேகமே.



  -படத்தில் விஜய் பேசும் அரசியல் வசனங்கள் தான் படத்தை முடக்கி போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.



1. முதல்ல உங்க அம்மாவை பாருடா, அப்புறமா மத்த அம்மாவ பாக்கலாம்”,



2. எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க, எனக்கு ஒட்டு போடுங்க, நான் நல்லது செய்யறேன்”

the conjuring - சினிமா விமர்சனம்


ஹாலிவுட்டில் ஹாரர் பட்டியலில் வருகின்ற சமீபத்திய திரைப்படங்கள் யாவும் முகம் சுளிக்க வைக்கும் கோரக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளைக் கொண்டுதான் திகழ்கின்றது. விஎஃப்க்ஸிர்க்கும், மேக்கப்பிற்கும் முக்கியத்துவம் தரும் அளவிற்கு கதைக்கோ, கதை மாந்தர்களுக்கோ அளிக்கப்படுவதில்லை.  சமீபத்தில் வெளியாகிய ‘ஈவில் டெட்(2013)’, ‘ஹேட்செட்-3’, ‘டெக்ஸ் செயின்’, ‘சா,’ ‘மாஸெகர்’ இதற்கொரு சாம்பிள்.

திரைக்கதையை ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’.  இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது. 


உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததாக எடுக்கப்பட்டுள்ள ‘தி கான்ஜுரிங்’ திரைப்படமோ ‘எக்ஸார்ஸிஸம்’, ‘இன்சீடியஸ்’, ‘போல்டர் கீஸ்ட்’ முதலிய படங்களின் உட்டாலக்கடியாகத் தான் திகழ்கின்றது.  என்ன ஒரு வித்தியாசம் முந்தைய படங்களில் நிகழ் காலத்தில் உரைக்கப்பட்ட கதை இப்படத்தில் பீரியாடிக் நிகழ்வாக சித்தரிக்கப்பட்டுள்ளது.



புதிதாக ஒரு பெரிய வீட்டிற்குள் குடியேறும் மிடில் ஏஜ் தம்பதியினர் அவர்களின் ஐந்து மகள்கள்.  வீட்டிற்குள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இவர்களை ஸ்தம்பிக்கச் செய்கிறது.  பாதாள அறை, மரக் கப்போர்டின் பின் ஒளிந்திருக்கும் பாதை, இப்படி வீட்டைச் சுற்றி பல மர்மங்கள். வீட்டிலிருக்கும் நாய் இறக்கிறது.  அடுத்தடுத்து வீட்டிலுள்ள அனைவரும் பல திக் திக் அனுபவங்களை சந்திக்கின்றனர்.  கண்டிப்பாக வீட்டில் அமானுஷ்ய சக்தி ஒளிந்திருப்பதை வீட்டார்கள் உணர, ஹாரர் ஹன்டர், லாரைன் மற்றும் எட்வாரன் தம்பதியினரின் துணையை நாடுகின்றனர்.

வீட்டிற்கு வந்து ஆய்வு செய்யும் இத்தம்பதியினர், வீட்டிலுள்ள மனிதர்கள் மீது அமானுஷ்ய சக்திகளின் தடம் பதிந்துள்ளதாகவும் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறினாலும் அது இவர்களை விடாது என அதிர்ச்சி அடைய வைக்க, மேலும் இதற்கு ஒரே விடை எக்ஸார்ஸிஸம் தான் ஆனால், இதன் முடிவுகள் விபரீதமாக அமையும் என எச்சரிக்கின்றனர். கடைசியில் பேயை விரட்டினார்களா, குடும்பம் தப்பித்ததா என்பது மீதம்.

மனித நடமாட்டம் குறைந்து காணப்படுகின்ற ஒரு கிராமம். அங்கே ஒரு நதி. அதன் அருகே பெரிய ஆலமரம், சுற்றி நிசப்தம். இந்த சூழலில் அமைந்திருக்கும் ஒரு பூத் பங்களா.  போதாக்குறைக்கு 1970ல் நடக்கும் கதையென்பதால் விஞ்ஞான ரீதியில் பெரிய தொலைத் தொடர்பும் அமையப் பெற முடியாத ஒரு சூழல். கதைக்கேற்ற கதைக்களத்தை அமைத்ததிலேயே ‘ஜேம்ஸ் வான்’ முதல் வெற்றி பெறுகிறார்.



பேய் வரும் காட்சியை விட, அதற்கு கொடுக்கப்படுகின்ற பில்டப் காட்சிகள் தான் திகிலாக அமைந்துள்ளது.  முகமெங்கும் வெள்ளை நிற பெயின்ட் அடித்து வருகின்ற பேயைப் பார்க்கும் போது சிரிப்பு எழுகின்றது.

படத்தில் அமையப் பெற்றிருந்த கலர் டோனே படத்திற்கு பெரிய பலம்.  யாவரும் நலம் திரைப்படத்தில் காணப்பட்ட ஒரு விதமான டார்க் வைட் டோனில் படம் முழுவதும் அமைந்துள்ள விதம், தேவையற்ற ஆப்ஜெட்களின் மீது மனதை சிதறடிக்காமல் கதையோடு தங்க வைக்கிறது. ‘ஜேம்ஸ் வான்’ இயக்கிய அனைத்து பேய் படங்களிலும் இதைப் போன்ற நிழற்படம் அமைந்திருக்கும்.

படத்தில் வரும் பல காட்சிகள் ஜேம்ஸ் வான் முன்பு இயக்கிய ‘இன்சீடியஸ்’ திரைப்படத்தின் கூடுதல் பிம்பமாக விளங்குகிறது.  வீட்டிற்குள் பேய் இருப்பதை உணர்ந்து நாய் குரைப்பது, ஆங்காங்கே கதவு டப் டப் என்று அடித்துக் கொள்வது, தொலைக் காட்சி தானாக இயங்குவது இதைப் போன்று பழக்கப்பட்ட சில க்ளீச்சே காட்சிகள் அமைந்திருந்தாலும், படமாக்கிய விதத்திலும், கதாபாத்திரங்களின் நடிப்பிலும் ‘தி கான்ஜுரிங்’ வேறுபட்டு நிற்கிறது.

மொத்தத்தில் தேவையற்ற ரத்த கோரங்களோ, ஆபாசமோ திணிக்கப்படாமல் ரசிகர்களை சீட்டின் நுணியில் அமர வைத்து அலற வைக்கும் ப்யூர் ஹாரர். வெகு நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பேய் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றது.


thanx - dinamalar


இக்கரைக்கு அக்கரை டார்க் பச் சை - தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க்-9


 
1. VIBHU‏@GOVINDARAJEN அதிக சம்பளம் என்று வெளிநாடு செல்பவர்களை விட,கௌரவத்திற்காக வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அதிகமாகிவிட்டனர். #tsy20130807
 
 
 
2. இளந்தென்றல்‏@Elanthenral #tsy20130807  வெளிநாட்டு  சம்பள பணம் கையில்   வற்றிய   தாய்ப்பாலின் ஈரத்தை  தன் பிள்ளையின்  அனல் வியர்வையில்  உணர்கிறாள் அம்மா!
 
 
 
3. ஆட்டோக்காரன்‏@anna_tuty கைநிறைய வெளிநாட்டில் சம்பாதித்த சம்பளப்பணத்தில்அடகுக்கடையில் நகையனைத்தும் மீட்டுவிட்டேன்..இளமைதான் மீட்கமுடியாமல் முங்கிவிட்டது #tsy20130807
 
 
 
4. புகழ் ‏@MEKALAPUGAZH வெளிநாட்டு சம்பளம்   வெளியே ஆடம்பரம்   உள்ளே கொப்பளம்    #tsy20130807
 
 
 
5. Sushima Shekar‏@amas32 வெளிநாட்டுச் சம்பளம் ஆனால் நம் நாட்டில் வேலை, அது தான் சொர்க்கம்! :-) #tsy20130807
 
 
 
6. Sathya‏@Power_Velu வெளிநாட்டு சம்பளம் பெற அடகு வைக்கப்படுவது தாய்,மனைவியின் நகைகள் மட்டுமல்ல, அவர்களது கண்ணீரும் தான்#tsy20130807
 
 
 
7. N.ரஜினிராமச்சந்திரன்‏@rajinirams வெளிநாடு-நல்ல சம்பளம் என்று சிலர் தங்களின் சில கனவுகளை நனவாக்கி கொண்டாலும் அவர்களின் நினைவு நம் மண்ணில் தான் #tsy20130807
 
 
 
8. புகழ் ‏@MEKALAPUGAZH ஒரு வெளிநாட்டு சம்பளம்   மூன்று தங்கைகளின் தாலி    #tsy20130807
 
 
 
9. LKG‏@chinnapiyan அன்று வெளிநாட்டு படிப்பு உள்நாட்டில் அதிகம் சம்பளம். இன்று உள்நாட்டில் படிப்பு வெளிநாட்டில் அதிக சம்பளம்  #tsy20130807
 
 
 
10 ஆட்டோக்காரன்‏@anna_tuty அப்பன் என்று ஐந்துவயது குழந்தையிடம் சுயஅறிமுகம் செய்து கொள்கையில், கையிலிருந்த வெளிநாட்டு சம்பளப்பணம் அருவெறுப்பு... #tsy20130807
 
 
 
11. Mr.manithaN‏@Am_mathan தாய்நாட்டிலிருந்து செல்லும் வரனுக்கான வரதட்சணை 'வெளிநாட்டுச் சம்பளம்' #tsy20130807
 
 
 
12. புகழ் ‏@MEKALAPUGAZH வெளிநாட்டு சம்பளம் - புதிய பலா!  வெளியே சுளை  உள்ளே முள்    #tsy20130807
 
 
 
13. நீதி அரசன்‏@FrancisPichaiah காற்றுள்ள போதே தூற்றிக்கொள் வெளிநாட்டு சம்பளம் வரும் போதே சேமித்துக்கொள் #tsy20130807
 
 
 
14. புகழ் ‏@MEKALAPUGAZH 'சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்' - வெளிநாட்டு சம்பளம்      #tsy20130807
 
 
 
15. jothi parimala‏@jothishna வெளிநாடு,சம்பளம் கேட்க இனிமை ஆனால் அங்கு தனித்து வாழும் மக்களின் வாழ்க்கை கொடுமை#tsy20130807