Saturday, May 25, 2013

பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே; பொருத்தமான ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே

வாழ்க்கைத் தொடர் - 2

காதோடு நான் பேசுவேன்...

எல் ஆர் ஈஸ்வரி

.எம்.சி..வில் நடந்த பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுவிட்டு, நானும், என் தங்கையும் வீடு திரும்பிய போது இரவு எட்டரை மணிக்கு மேலாகிவிட்டது. ‘ஏன் லேட்?’ என்று கேட்டு, கோபத்தின் உச்சத்தில் அம்மா என்னை பயங்கரமாக அடித்துவிட, நான் களைத்துப் போய் தூங்கி விட்டேன். மறுநாள் வழக்கம் போல பள்ளிக்கூடம் சென்று விட்டேன். பாட்டுப் போட்டியைப் பற்றி மூச்சே விடவில்லை.
ஒரு வாரம் கழித்து ஒரு நாள் ஸ்கூலில் பிரேயர் முடியும் சமயத்தில், ‘ராஜேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பு’ (அப்போ அதற்கு ஃபோர்த் ஃபார்ம் என்று பெயர்) என்று என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். என்னை எதற்காகக் கூப்பிடுகிறார்கள்? என்று புரியாமலேயே நான் போனேன்.
.எம்.சி.. வில் நடந்த பாட்டுப் போட்டியில், எனக்கு மெரிட் சர்டிஃபிகேட் கிடைத்திருப்பதாக அறிவித்தவுடன் எல்லோரும் கைதட்டினார்கள். நான் அந்த சர்டிஃபிகேட்டைக் கையில் வாங்கியபோது, நான் பாடியது எனக்கு நினைவுக்கு வரவில்லை; அம்மா கொடுத்த அடிதான் நினைவுக்கு வந்தது. அன்று மாலை வீட்டுக்கு வந்த பிறகு, அம்மாவிடம் எனக்குக் கொடுக்கப்பட்ட சர்டிஃபிகேட்டை நீட்டினேன். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, ‘இது என்ன?’ என்று கேட்டபோது, அப்போதுதான் நான் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டது, அதில் நன்றாகப் பாடி மெரிட் சர்டிஃபிகேட் வாங்கினது, லேட்டா வீட்டுக்கு வந்து அடி வாங்கியது எல்லாவற்றையும் சொன்னேன்.
நான் சொல்லி முடித்ததும், என் அம்மா என்னை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ‘உண்மை என்னன்னு தெரியாம, அன்னிக்கு உன்னை அப்படி அடிச்சுட்டேனே!’ என்று வருந்தி, என் தலையை ஆறுதலோடு தடவிக்கொடுத்தார். இன்றைக்கு என் கடந்த கால வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கிறபோது, அந்த சம்பவம் என் இசைப் பயணத்தில் ஒரு துவக்கப்புள்ளி என்று தான் சொல்ல வேண்டும்.
இதற்கிடையில், பார்ப்பதற்கு சுட்டிப் பெண்ணாக இருந்த என் தங்கை அஞ்சலியை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பினார் என் அம்மா. ஒரு பக்கம் தானும் கோரஸ் பாடல்கள் பாடிக் கொண்டே, இன்னொரு பக்கம் அஞ்சலியை நடிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் எதிர்பார்த்த மாதிரி வெற்றி கிடைக்கவில்லை. வீட்டில் எப்போதும் ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் என்னையும் சினிமாவில் கோரஸ் பாட வைக்க விரும்பினார் என் அம்மா. எனவே, ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போகிறபோது, அவ்வப்போது, என்னையும் கூட அழைத்துக் கொண்டு போக ஆரம்பித்தார்.

மனோகராபடத்தில் ஜிக்கி அம்மா பாடியஇந்த நாளிதே.. இதயம் பாடுதே!’ என்ற பாட்டு இடம்பெற்றது. அந்தப் பாட்டுக்கு கோரஸ் பாடுவதற்கு அம்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னையும் கூட அழைத்துக் கொண்டு போயிருந்தார். அதிர்ஷ்ட தேவதையின் கருணைப் பார்வை என் மேலே பட்டது.
இந்த நாளிதேபாடலில் கோரஸ் பாடுவதற்குத் தேவையான எண்ணிக்கையில் பாடகிகள் கிடைக்கவில்லை. அப்போது என் அம்மா, ‘இவள் என்னுடைய பொண்ணு ராஜேஸ்வரி. நல்லா பாடுவா. இவளுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்என்று படத்தின் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராம ஐயரிடம் கேட்க, அவர் என்னைக் கூப்பிட்டு, ஒரு பாட்டுப் பாடச் சொன்னார்கள். நான் கணீரென்று, ஒரு இந்திப் பாட்டைப் பாடிக்காட்டினேன். ‘இன்னும் கொஞ்சம் சத்தமா பாடும்மாஎன்றதும் சத்தமாகப் பாடிக்காட்டினேன். அவருக்கு என் குரல் பிடித்துப் போக, கோரஸ் பாடுவதற்கு சான்ஸ் கிடைத்தது.
அங்கே இருந்த மேனேஜர், ‘இந்த சிறுமியின் வாய்ஸ் நல்லா இருக்கேஎன்று சொன்னதோடு எம்.எஸ். விஸ்வநாதனிடம் சிபாரிசு செய்தார். எம்.எஸ்.வி. ‘சொர்க்கவாசல்படத்தில்ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து சொல்வீரேபாட்டில் கோரஸ் பாடுகிற வாய்ப்பை எனக்குக் கொடுத்தார்.
நானும் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்த படியே, அவ்வப்போது சினிமாவிலும் கோரஸ் பாடிக்கொண்டிருந்தேன். பத்தாம் கிளாசில் படித்துக் கொண்டிருந்தபோது, இசையமைப்பாளர் ஜி.ராமநாத ஐயர் இசையமைப்பில் ஒரு கோரஸ் பாடுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
நான் கோரஸ் பாடி முடித்தவுடன், ராமநாத ஐயர் என்னைச் சுட்டிக்காட்டி, ‘இந்தப் பொண்ணுக்கு குரல் ரொம்ப அபாரமாய் இருக்கு. ஒரு காலத்துல இவள் சினிமாவுல ஓஹோன்னு வருவா!’ என்று சொல்லி, என்னை ஆசிர்வதித்தார். அதைக் கேட்ட என் அம்மா ரொம்ப எமோஷனலாகிவிட்டார். அடுத்து அந்த இசை மேதை என் அம்மாவிடம் என்ன கேட்டார் தெரியுமா?
நிர்மலா! கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசையா?" அவர் சொன்னதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. என் அம்மாவும் பதில் ஏதும் சொல்லாமல் என் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அவரே தொடர்ந்து, ஸ்கூலிலும் படிக்கணும்; சினிமாவிலும் பாடணும் என்றால் அது சாத்தியப்படாது. இரண்டில் ஒன்றை முடிவு செய். இவள் குரலுக்கு, பாட்டைத் தேர்ந்தெடுத்தால் பேரும், புகழும் நிச்சயம் கிடைக்கும்" என்றார்.
அன்று வீட்டுக்கு வந்ததும் ஜி.ராமநாத ஐயர் சொன்னதைப் பற்றியே அம்மா யோசித்துக் கொண்டிருந்தார். என்னிடம்உனக்கு படிக்க ஆசையா? பாட ஆசையா?’ என்று கேட்டபோது, இதுதான் என்று தீர்மானித்து பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை. ‘நீ எது சொன்னாலும் கேட்கறேன் அம்மாஎன்று சொல்லி அம்மாவைக் கட்டிக் கொண்டேன். சிறிது நேரம் கண்மூடி ஆண்டவரைப் பிரார்த்தித்து விட்டு, கண் திறந்த அம்மா சொன்னார்: ராஜேஸ்வரி! நீ படிக்கப் போவதைவிட, பாடப் போனால், குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும் கண்ணு!

அம்மாவின் முடிவை முழு மனசோடு நான் ஏற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு நான் பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.
அம்மாவோடு ஸ்டூடியோவுக்கு ரெகுலாராகப் போகத் தொடங்கினேன். ஒரு நாள் கே.வி. மகா தேவனின் இசையில் கோரஸ் பாடியதை அடுத்து அவர், என் குரலைப் பற்றி டைரக்டர் .பி. நாகராஜனிடம் பாராட்டிச் சொல்ல, ‘அப்படியென்றால், நாம் எடுக்கிற லோ பட்ஜெட் படத்தில் இந்தப் பெண்ணுக்கு ஒரு சோலோ பாடல் தரலாமே!’ என்று .பி.என். சொன்னார்.
அந்தப் படம்தான்நல்ல இடத்து சம்மந்தம்‘ (1958) நான்கு பேர் தனித்தனியாகப் பாடுகிறபுதுப் பெண்ணே... புதுப்பெண்ணே நிமிர்ந்துப் பாரு! உன் பிறந்த இடத்தை மறந்திடாம நினைச்சுப் பாரு!’ என்ற பாட்டுதான் அது. அந்தப் பாட்டை மற்ற மூன்று பேர்களோடு சேர்ந்து நானும் பாடினேன். கோல்டன் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்தப் பாட்டைக் கேட்ட டைரக்டர் .பி.என்., மியூசிக் டைரக்டர் கே.வி.எம்., இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்பட்டு, அதே படத்தில் இன்னொரு பாட்டையும் பாடுகிற வாய்ப்பை எனக்குக் கொடுத்தார்கள். ‘பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே; பொருத்தமான ஜோடி போகுது குபுகுபு வண்டியிலேஎன்ற டூயட் பாட்டு அது.
முதல் படத்திலேயே பம்பர் பிரைஸ் அடிச்சா மாதிரி எனக்கும், என் அம்மாவுக்கும் அளவில்லாத சந்தோஷம். அப்போது .பி. நாகராஜன் சார் இந்தப் பொண்ணுக்கு குரல் ரொம்ப நல்லா இருக்கு; ரொம்ப பிரகாசமான எதிர்காலமும் இருக்கு; ஆனா இந்தப் பொண்ணோட பெயரை மாத்தியே ஆகணும்" என்றார்...
சென்னை, தி.நகரில் வித்யோதயா பள்ளி அருகே உள்ளது எல்.ஆர்.ஈஸ் வரியின் இல்லம்.
பழைய காலத்துவீடு! மாடி பெல்லை அழுத்தினால் அவரே யாரு?" என்று கேட்டபடி இறங்கி வருகிறார். வரவேற்பு அறையின் சுவர் முழுக்க குடும்பப் படங்கள், பரிசு வாங்கும் விழா காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விருதுகளும் கேடயங்களும் மர அலமாரியில் நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. டீ-பாய் மீது கிறிஸ்துவ ஸ்தோத்திரப் புத்தகம், பைபிள் முதலியன சீராக வைக்கப்பட்டுள்ளன. தானே சமையல் அறைக்குப் போய்பீச் பழ ட்ரிங்கைக் கலந்து கொண்டு வந்து உபசரித்தார். பழகும் விதத்திலும் எல்.ஆர்.ஈஸ்வரி இனிமை தான்... அவரது குரலைப் போலவே!
(கல கலப்போம்...)

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் -ரூ.30 ஆயிரம் கோடி மோசடி?

ரூ.30 ஆயிரம் கோடி மோசடி: சாரதா நிதி நிறுவனத்திற்கு முதலீட்டு ஆலோசனை கூறியது நளினி சிதம்பரம்? 


கொல்கத்தா: 'நிருபேந்திர நாராயண சென் மகனாகிய நான்...' என்று துவங்கும் ஒரு கடிதம் - கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எழுதப்பட்டுள்ளது.


'சுதிப்தோ சென்' என்ற சர்ச்சைக்குரிய மனிதர் எழுதியதாகக் கூறப்படும் இந்தக் கடிதம், 'அரசியல்வாதிகளாலும், அவர்களைச் சார்ந்த சில பிரபலங்களாலும் நான் பயங்கரமாக மிரட்டப்பட்டேன். அதனால் அடுக்கடுக்காக பல மோசடிகளில் இறங்கினேன். மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் டுபாகூர் பிசினஸ்களை ஆரம்பித்தேன். மக்களின் பணத்தை இந்த டுபாகூர் கம்பெனிகளின் பெயரால் திரட்டினோம். தற்போது என்னை மட்டுமே சட்டம் குறி வைக்கும் நிலையில்... எந்த நேரமும் நான் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளதால், இந்தக் கடிதத்தையே எனது மனப்பூர்வமான வாக்குமூலமாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்...' என்று போகிறது.


கொல்கத்தா பத்திரிகை ஒன்று மேற்கோள் காட்டும் இந்தக் கடிதத்தில், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி-க்கள், வேறு கட்சிப் பிரபலங்கள் ஆகியோரோடு சேர்த்து, தமிழகத்தைச் சேர்ந்த டெல்லி பிரபலம் ஒருவரின் குடும்பப் பெண்மணி ஒருவர் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

தன்னை நிர்வாகத் தலைவராக வைத்துக்கொண்டு, பல்வேறு மோசடி நிறுவனங்களின் பெயரில் மக்களிடமிருந்து பல கோடி ரூபாய்களை அரசியல்வாதிகள் திரட்டியதாகவும்... சாரதா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, சாரதா குரூப் சிட்பண்ட் என்ற நிறுவனங்கள் தவிர, சகட்டுமேனிக்கு 160 கம்பெனிகள் வரை இப்படி தன் பெயரால் துவங்கியதாகவும் கூறும் இந்த சுதிப்தோ சென், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடப் பார்க்க... இந்த சுதிப்தோ சென் மற்றும் இருவரை மடக்கிப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உள்ளே தள்ளி உள்ளனர்.

முப்பதாயிரம் கோடி ரூபாய் எப்படி மக்களை ஏமாற்றி முழுங்கப்பட்டது என்பதைப் பற்றி மேற்கு வங்களாத்தில் இபபோது பரபரப்பான விவாதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க... இந்த பலே கில்லாடி ஆசாமி எழுதியாகக் கூறப்படும் கடிதத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் புள்ளிகள் இதில் எப்படி எல்லாம் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அடுக்கப்பட்டு உள்ள விவரங்கள், அகில இந்திய அளவில் பெரும் புயலைக் கிளபபும் என்று கூறப்படுகிறது. முதலில் இந்த விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பிய காங்கிரஸ் பிரமுகர்கள், சுதிப்தோ சென்னுக்குப் பின்னால் சில காங்கிரஸ்காரர்களும் இருந்தனர் என்று பரவும் தகவலால் வெலவெலத்துப் போய் இருககிறார்கள்.

இதுவரை இந்தியாவில் (உலகிலேயே) இல்லாத 'புதுமை'யாக - 'இவரிடம் ஏமாந்த மக்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்கும் வகையில், முதல் கட்டமாக 500 கோடி மூலதனத்தில் மேற்கு வங்காள அரசே ஒரு நிதியத்தைத தொடங்கும்' என்று அறிவித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜி. இதில் ஒரு பகுதி பணத்தைத் திரட்டுவதற்காக சிகரெட்டின் வரியை உயர்த்தப் போவதாகவும் கூறி இருக்கிறார்.                        அந்த கடிதம்...
                                                                                                                               

''தனியார் ஒருவர் ஏமாற்றிய பணத்துக்கு அரசாங்கம் ஏன் இத்தனை வேகமாக 'வக்காலத்து' வாங்கி வரவேண்டும்? நாளை அரசியல்வாதிகளும் தனியாரும் சேர்ந்து நடத்தும் ஒவ்வொரு மோசடிக்கும் இப்படி அரசுகள் நஷ்ட ஈடு தர முன்வருவதற்கு இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?'' என்ற கேள்விகளும் தற்போது எழத் துவங்கி உள்ளன.

மல்ட்டி மார்க்கெட்டிங் தொடங்கி இன்னும் என்னவெல்லாம் டுபாகூர் பிசினஸ்கள் உண்டோ அத்தனையையும் சில அரசியல்வாதிகள் தன்னைச் செய்யத் தூண்டியதாகவும்... அதற்கு சில புரோக்கர்களும், பத்திரிகையாளர்களும்கூட துணையாக இருந்ததாகவும் சுதிப்தோ சென் எழுதியாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில் உள்ளது. 'வாயில் கை வைத்தால் கடிக்கக்கூட தெரியாத பச்சைக் குழந்தை நான்' என்ற ரீதியிலேயே அந்த மிக நீண்ட கடிதம் அமைந்திருந்தாலும்... அதில் வரிக்கு வரி இடம்பெற்றிருக்கும் விவகாரங்கள் அரசியல் உலகைக் கலக்கக்கூடியதாக அமைந்துள்ளன.

இதற்கிடையே சாரதா நிதி நிறுவனத்தை, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசில் அமைச்சராக இருந்த மடாங் சிங் குடும்ப நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு நளினி சிதம்பரம் ஆலோசனை கூறியதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, டெல்லி ஆங்கில சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சாரதா நிதி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சுதிப்தா சென் சிபிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது நிதி நிறுவனத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புள்ளிகள் ஆரம்பத்தில் ஏராளமான தொல்லைகள் கொடுத்துவந்ததாகவும், இதனைத் தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு மாநில மற்றும் மத்திய அரசிலிருந்து எவ்வித பிரச்னைகளும் வராமல் பார்த்துக்கொள்வதாக கூறி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தம்மிடமிருந்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அவர்களுக்கு சொந்தமான ஊடகங்களில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதற்கு பதிலடியாகத்தான், அந்த கடிதத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் குறித்தும் சுதிப்தோ சென் குறிப்பிட்டுள்ள விஷயங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசில் அமைச்சராக இருந்த மடாங் சிங் மற்றும் அவரது மனைவி மனோரஞ்சனாவுக்கு சொந்தமான குடும்ப நிறுவனத்தின் வழக்கறிஞராக நளினி சிதம்பரம் செயல்பட்டதாகவும், இவர்களுக்கு சொந்தமான வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள தொலைக்காட்சி சேனலை வாங்குமாறு, மத்திய அரசில் செல்வாக்கு மிக்கவர் மற்றும் முன்னணி வழக்கறிஞர் என்ற வகையில் சாரதா நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான தமக்கு ஆலோசனையும், அறிவுரையும் கூறியதாகவும், இது குறித்த இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக முன்னின்று செயல்பட்டது நளினி சிதம்பரம்தான் என்றும், இது தொடர்பாக மத்திய அரசின் கம்பெனி சட்ட வாரியத்தில் நடைபெற்ற வழக்கில், மனோரஞ்சனா சார்பில் வழக்கறிஞராக ஆஜரானது நளினி சிதம்பரம்தான் என்றும் சுதிப்தா சென், சிபிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நான் திண்ணையில் படுத்திருப்பதால்

1. தினமும் ( உங்க ) சம்சாரத்தின் முகத்தில் விழிக்கவும். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் எதிர் கொள்ளும் துணிவு வரும்



--------------------


2. நான் திண்ணையில் படுத்திருப்பதால் வீட்டில் சண்டை என யாரும் என்ன வேண்டாம் , புழுக்கம்



----------------------


3. உன்னைப்பார்க்கனும்போல இருக்குன்னு சொல்லி எப்போ பாரு என்னையே வரச்சொல்றியே? நீ வர மாட்டியா?


------------------------


4. டியர், என் கூட பேசிட்டு இருக்கும்போது ஏன் செல் ஃபோனை ஆஃப் பண்றீங்க? 



 வேற எவளாவது கால் பண்ணினா நெம்பரை நோட் பண்ணிடுவியே? 


----------------------


5. டியர், நான் சொன்னா நீ கேப்பியா.. மாட்டியா? 



எனக்கு என்ன காது டமாரமா? கேப்பேன், ஆனா அதன் படி நடக்க மாட்டேன் 



-----------------------


6. கீப் கொயட் = சின்ன வீடு ரொம்ப அமைதியான டைப் # சபாஷ் துபாஷ்



-------------------

7. கேட் கீப்பர்க்கு வாக்கப்பட்டா அவர் கூடவே கீப் இருக்கும்னு சந்தேகப்படத்தேவை இல்லை


--------------------------


8. இன்னும் கொஞ்ச(ம்) நேரம் பேசிட்டு இரு என்றேன். எதுக்கு? என்றாய்! என் விண்ணப்பத்திலேயே பதில் இருக்கு என்றேன்


----------------------


9. நேட்டிவிட்டியே இல்லாத நைட்டிவிட்டி நீ!


---------------------------


10. எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்பதால் எனக்கும் சேர்த்து நீயே என்னிடம் பேசி விடு



---------------------------


11. என் மெயில் பாஸ்வோர்டு உனக்கு எப்படித்தெரியும்? என வியந்தாய். என் பெயரைத்தவிர நீ எதைத்தேர்ந்தெடுக்கப்போகிறாய்?



------------------------


12. சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு? - புல்லட் புரூஃப் ஜாக்கெட்



---------------------------

13. ஜெ வை பிரதமராக்க மடிப்பிச்சை கேட்கிறேன் - நாஞ்சில் சம்பத் # கார்மேகமே.ஒரு கார் போதுமே



-------------------------


13. உன் உள்ளங்கையில் ஓடும் எல்லா ரேகைகளுமே எனக்கு அதிர்ஷ்ட ரேகைகளே


--------------------------------


14. நீ என்னுடன் பேசும்போது நெர்வசா இருக்கு.மத்தவங்க கிட்டே நீ பேசும்போது எனக்கு பொசசிவ்னெசா இருக்கு



--------------------------


15. காதலிக்கு எப்படியும் நீச்சல் அடிக்கத்தெரியாது என்பது காதலனுக்கு கிடைக்கும் வரம் .கத்துக்குடுத்துடலாம்


----------------------


16. பெண் மேனேஜரை நீ மேரேஜ் செய்தால் உனக்கு வீட்டிலும் ஆபீசிலும் அடிமை வாழ்வுதான்



------------------------


17. உனக்குப்பிடித்தது சாக்லேட் என்றபோதே நான் உஷா ர் ஆகி இருக்க வேண்டும்.டூ லேட்.நீ எல்லாத்துலயும் லேட்


-------------------


18,. அணைக்கிற கை தான் அடிக்கும் # சம்சாரம்



-------------------------


19. உன்னுடனான முதல் சந்திப்பில் என் காது டமாரம் ஆகி விட்டதோ என பயந்தேன்.பின் தான் நீ பபிள்கம் பிரியை என தெரிய வந்து தெளிந்தேன்



-----------------------


20. உன் புன்னகை ஒன்றே போதும்.மத்த நகை எல்லாம் கழட்டிக்கொடுத்தா செலவுக்கு யூஸ் ஆகும்


-------------------------------------

Friday, May 24, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

குருப்பெயர்ச்சி பலன்கள்
‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
ஜோதிடம்
விஜய வருடம், வைகாசி மாதம் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை (28.05.2013) கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில், ஏழாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் கோழி துயில் கொள்ளும் நேரத்திலும், உத்தராயணப் புண்ய கால வசந்த ருதுவில் இரவு மணி 9.15-க்கு பிரகஸ்பதி எனும் குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.06.2014 வரை இங்கு அமர்ந்து ஆட்சி புரிவார்.
மேஷம்: கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு தன

வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும்,

அந்தஸ்தையும் கொடுத்து வந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பார். இந்த ஓராண்டு காலத்தில் திட்டமிடாமல் எதையும் செய்ய வேண்டாம். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி திடீர் செலவுகளும் அதிகரிக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும்.    
இந்த குரு மாற்றம் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் சகிப்புத் தன்மையால் உங்களை வளர்ச்சியடைய வைப்பதாக அமையும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு வியாழக்கிழமை தோறும் சென்று வாருங்கள்.

ரிஷபம்: கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் அமர்ந்து கொண்டு ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மதியைக் குலைத்து, பல வகையிலும் உங்களை அலைக்கழித்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கனிவாக நடந்து கொள்வார். குருபகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால், பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீட்டு உபயோக சாதனங்களை புதிதாக வாங்குவீர்கள். குருபகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால், திடீர் பயணங்கள் செய்ய நேரிடலாம். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பத்தாவது வீட்டையும் குருபகவான் பார்ப்பதால், மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் ஏற்பட்ட வேலைச்சுமை, வீண் பழி, அவமானங்கள் விலகும். மேலதிகாரிகள் உங்கள் திறமையை மதிப்பார்கள்.
இந்த குரு மாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுப்பதுடன் அதிரடி யோகத்தையும் அள்ளித் தரும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் சித்தர் பீடத்துக்கு சென்று நெய் விளக்கேற்றி தியானம் செய்யுங்கள்.

மிதுனம்:  இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளையும், அலைச்சலையும் தந்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக தொடர இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடலாம். ஜென்ம குருவாக இருப்பதால், உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பணத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்லுங்கள். குருபகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குருபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால், பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். குரு உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வேலைச் சுமை அதிகமாக இருக்கும். என்றாலும், மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பளம் உயரும்.  
இந்த குரு மாற்றம் உங்கள் வேலைச்சுமையை அதிகமாக்கினாலும், சிக்கனத்தால் கொஞ்சம் முன்னேற்றத்தை தருவதாக அமையும்.
பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபடுங்கள்.

கடகம்: இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளைத் தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் நுழைவது ஒரு வகையில் நல்லதுதான். உங்களின் பாதக ஸ்தானமான 11-ம் வீட்டை விட்டு குரு விலகுவதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். குருபகவான் உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதேசமயம், புது சலுகைகளும் கிடைக்கும்.    
இந்த குரு பெயர்ச்சி உங்களை மாற்றுப் பாதையில் சென்று முன்னேற்ற வைக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

சிம்மம்: இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மன உளைச்சல், டென்ஷன், அவமானங்களை ஏற்படுத்திய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் அமர்வதால், இனி உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால்,  தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், அனுபவப்பூர்வமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். தைரியம் கூடும். குரு, ஐந்தாம் வீட்டை பார்ப்பதால், பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பூர்விக சொத்து கைக்கு வரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தை, புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இனி நிம்மதி உண்டு. எதிர்பார்த்தபடி சம்பளம் உயர்வும், சலுகைகளும் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம், குடத்தில் இருந்த உங்களை குன்றின் மேல் ஒளிர வைக்கும்.
பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தின் நந்தவனத்தை சீரமையுங்கள்.

கன்னி: கடந்த ஓராண்டு காலமாக 9-ம் வீட்டில் அமர்ந்திருந்து, ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் புகழ், கௌரவத்தையும் உயர்த்திய குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் 10-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் கொஞ்சம் கவனமாக செயல்படப்பாருங்கள். உங்கள் ராசிநாதனான புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் குரு அமர்வதால், எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். எடுத்த வேலைகளை முடிக்க அலைச்சல்பட வேண்டி வரும். சின்னச் சின்ன கவலைகள் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படலாம். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை கட்டும் முயற்சி பலிதமாகும். குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டை பார்ப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வேலையாட்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உத்யோகத்தில் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். மூத்த அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.
இந்த குரு மாற்றம், 'சகிப்புத் தன்மை இருந்தால் சாதிக்கலாம்’ என்பதை உங்களுக்கு உணர வைக்கும்.
பரிகாரம்: பைரவரை தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள்.

துலாம்: இதுவரை 8-ல் மறைந்து செலவுகளை இரட்டிப்பாக்கி, குடும்பத்தில் சலசலப்புகளை ஏற்படுத்திய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், இனி எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவு உண்டு. ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். புது சொத்து,  தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்களெல்லாம் வலிய வந்து பேசுவார்கள். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால், வருமானம் உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அயல்நாட்டில் இருக்கும் தோழிகளால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். சிலர் அலுவலகம் தொடர்பாக அயல்நாடு சென்று வருவீர்கள்.  
இந்த குரு மாற்றம், உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றித் தரும்.
பரிகாரம்:  நந்திகேஸ்வரரை பிரதோஷ நாளில் வணங்குங்கள்.

விருச்சிகம்: இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் திறமைக்கு பரிசு, பாராட்டை தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 8-ம் வீட்டில் மறைவதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். முக்கிய விஷயங்களில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தினருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதால், அவ்வப்போது நல்லது நடக்கும். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால், சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குரு உங்கள் 12-ம் வீட்டையும் பார்ப்பதால், நீண்ட நாட்களாக போக நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குரு 8-ல் மறைவதால், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் புது சலுகைகளும், பதவிகளும் வரும்.
இந்த குரு மாற்றம் சலிப்பையும், அலைச்சலையும் தந்தாலும்...  தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை முன்னேற வைக்கும்.
பரிகாரம்:  ஸ்ரீஹயக்ரீவரை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

தனுசு: ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து உங்களைப் பகடைக் காயாக உருட்டிய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்க்க இருப்பதால், சோர்வு நீங்கி, உற்சாகமாக செயல்படுவீர்கள். பல மாதங்களாக அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். சிலர் புது வீட்டுக்கு மாறுவீர்கள். பிள்ளைகள் உங்களின் உள்ளார்ந்த அன்பை புரிந்து கொள்வார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால்... அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களின் பலவீனங்களைத் திருத்திக் கொள்வீர்கள். குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். புதிதாக வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் நவீன விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு இனி முக்கியத்துவம் கிடைக்கும். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வை இப்போது எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள்.  
இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு முழு பலத்தை தருவதாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

மகரம்: இதுவரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் புது முயற்சிகளில் வெற்றியைத் தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 6-ம் வீட்டில் மறைவதால், சின்னச் சின்ன பிரச்னைகள் எழும். சகட குருவாக இருப்பதால், குடும்பத்தில் சில சமயங்களில் காரசாரமான விவாதம் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மகனுக்கு, மகளுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். உறவினர்களுடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். குருபகவான் உங்களின் தன ஸ்தானத்தை பார்ப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 10-ம் வீட்டை குரு பார்ப்பதால், புது வேலை அமைய வாய்ப்பு உண்டு. 12-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தோழிகள் உங்கள் நிலையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை  இருக்கும். என்றாலும் மதிப்பு, மரியாதையும் குறையாது. சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடி பெறுவீர்கள். பதவி உயர்வு தாமதமாக வரும்.
இந்த குரு மாற்றம் உங்களுக்கு பணப்பற்றாக்குறையை தந்தாலும், திட்டமிடுதலால் நெருக்கடியிலிருந்து விடுபட வைக்கும்.  
பரிகாரம்:  ஸ்ரீவராஹி அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்குங்கள்.

கும்பம்: இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலா விதத்திலும் பிரச்னைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால், விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், அமைதியும் வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தூக்கமின்மை, உடல் உபாதை நீங்கும். குரு பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், தோற்றப் பொலிவு கூடும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். பதினோராவது வீட்டை குரு பார்ப்பதால், வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் புது வீட்டுக்கு மாறுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கும். சிலருக்கு சொந்த இடத்துக்கே கடையை மாற்றும் யோகம் உண்டாகும். உத்யோகத்தில், சம்பளம் உயரும். சக ஊழியர்களால் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.  
இந்த குரு மாற்றம் உங்களை வசதி, வாய்ப்புகளால் நிமிர வைக்கும்.
பரிகாரம்: நவக்கிரகத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

மீனம்: இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து முடிவுகள் எடுப்பதில் குழப்பத்தையும், தடுமாற்றத்தையும், மனதில் அச்சத்தையும் தந்து கொண்டிருந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்காமல் ஓயமாட்டீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். என்றாலும், உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான், 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால், திருமணம், கிரகப் பிரவேசத்தை போன்றவற்றை போராடி முடிக்க வேண்டி வரும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு வீடு மாறுவது, ஊர் மாறுவது போன்ற சூழ்நிலை உருவாகும். நெருங்கிய தோழிகள், உறவினர்களாக இருந்தாலும், அவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்யோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால், இடமாற்றம் சாதகமாக அமையும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும்.
இந்த குரு மாற்றம் உங்களை பலவிதங்களில் பந்தாடினாலும், இறுதியில் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீபிரத்யங்கரா தேவியை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள்.


நன்றி - அவள் விகடன்

ஒல்லி கில்லி பெல்லி ஆக 30 வகை ஸ்லிம் ரெசிபி ( சமையல் குறிப்புகள் )


30 வகை ஸ்லிம் ரெசிபி
இளைக்கலாம்... அசத்தலாம்...

ஊசி போல உடம்பிருந்தா தேவை இல்ல பார்மஸி’ - இது பிரபலமான பாடல் வரி மட்டுமல்ல... உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஸ்டேட்மென்ட்டும் கூட! அதேசமயம் 'இளைக்கிறேன் பேர்வழி’ என்று பட்டினி கிடந்தால், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பிறகு என்னதான் செய்வது? ''இதற்கு நான் வழி சொல்கிறேன் வாருங்கள்'' என்று அக்கறையுடன் அழைப்புவிடுக்கும் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன், இங்கே 30 வகை 'ஸ்லிம் ரெசிபி’களை வழங்குகிறார். ''உடல் இளைக்க உதவும், சத்துமிக்க காய்கறி, மளிகைப் பொருட்களைக் கொண்டு இந்த உணவு வகைகளை செய்துள்ளேன். வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு, இந்த உணவுகளை முடிந்த அளவு பயன்படுத்தினால், மூன்று மாதங்களில் உடல் எடை கணிசமாக குறையும். கூடவே, கொஞ்சம் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம்'' என்கிறார் மாலதி.

அவல் உப்புமா
தேவையானவை: அவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

ஓட்ஸ் கட்லெட்
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வெங்காயம், உருளைக்கிழங்கு (சின்னது) - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி, கேரட் (துருவியது), குடமிளகாய் (நறுக்கியது) - தலா அரை கப், பிரவுன் பிரெட் ஸ்லைஸ் - 2, தனியாத்துள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் பொடி செய்யவும். பிரெட்டையும் பொடி செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். அது வதங்கியதும் பொடியாக நறுக்கிய  உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து மூடி வைத்து, பிறகு மேலும் வதக்கவும். காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து... ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, தட்டி தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

  தினை அரிசி உப்புமா
தேவையானவை: தினை அரிசி - ஒரு கப், வெங்காயம், கேரட், குடமிளகாய் (சின்னது) - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 வாழைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை: நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், கடைந்த தயிர் - 2 கப், பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம், தனியா - தலா அரை டீஸ்பூன், வெந்த கடலைப்பருப்பு - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.  
செய்முறை:  வாழைத்தண்டை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். பச்சை மிளகாய், தனியா, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த வாழைத் தண்டுடன் சேர்க்கவும். இதனுடன் தயிர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், வெந்த பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து, இது நுரைத்து பொங்கி வரும்போது எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

 ஓட்ஸ்  சம்பா ரவை இட்லி
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், சம்பா கோதுமை ரவை - அரை கப், தயிர் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 10, 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, இந்தக் கலவையை இட்லிகளாக செய்து பரிமாறவும்.

 வெந்தயத் தட்டு பச்சடி
தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், வெந்தயம் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும், வெந்தயத்தையும் சிவக்க வறுக்கவும். கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயையும் வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பும் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடைந்த தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் பொடியை கலந்து... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுக்கு மிகவும் நல்லது.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

 அவரைக்காய் கூட்டு
தேவையானவை: அவரைக்காய் (நறுக்கியது) - ஒரு கப், பாசிப் பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு (பொடி செய்ய) - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உளுத்தம் பருப்பு (தாளிக்க) - கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: அவரைக்காய், பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் உளுத்தம்பருப்பு,   மிளகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுத்து இறக்கி, சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வேக வைத்த காயுடன் இந்தப் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக எண்ணெயில் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

 தானிய அடை
தேவையானவை: காராமணி - ஒரு கப், பச்சைப் பயறு - ஒரு கப், கொண்டைக்கடலை - ஒரு கப், சிவப்பரிசி - ஒரு கப், சோள ரவை (மளிகைக் கடையில் கிடைக்கும்) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெள்ளை வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லா தானியங்களையும் முதல் நாளே காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் அரைப்பதற்கு முன் சோள ரவையை கால் மணிநேரம் ஊற வைத்து சேர்த்து அரைக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, சிறிது நேரம் மூடி வைத்து, சுட்டடெடுக்கவும். ஒரு அடைக்கு கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டால் போதும்.

 கொள்ளு சுண்டல்
தேவையானவை:  கொள்ளு - ஒரு கப், காராமணி, பச்சைப் பயறு - தலா அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பொடி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, காராமணி, பச்சைப் பயறு ஆகியவற்றை ஒன்றாக முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... வேக வைத்த கொள்ளு கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பொடியைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: பயறு வகைகள் வேக வைத்த நீரை, ரசம் செய்யும்போது சேர்க்கலாம்.

 புரூக்கோலி சப்பாத்தி
தேவையானவை:  புரூக்கோலி - ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், தனியாத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புரூக்கோலியை கழுவி பொடியாக நறுக்கவும். கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு இதை லேசாக வதக்கவும். இதனுடன் கோதுமை மாவு, தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, தாவாவில் போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.  
குறிப்பு: குழந்தை பெற்ற பெண்கள், ஒரு மாதத்துக்கு புரூக்கோலியை சாப்பிடக்கூடாது.

 வெள்ளை பூசணி பொரியல்
தேவையானவை: வெள்ளை பூசணி (நறுக்கியது) - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூசணிக்காயை சேர்க்கவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும் (சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும்). காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை பிழிந்து போடவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
வெள்ளை பூசணி வாயுத்தொல்லையை தணிக்கும்.

 முள்ளங்கி ராய்தா
தேவையானவை: துருவிய முள்ளங்கி - ஒரு கப், கடைந்த தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு). பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் (காரல் நல்லது. அப்படியே கூட தயிருடன் சேர்த்து, உப்பு போடலாம்). கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்.

 ராகி  பசலைக்கீரை மாசாலா
தேவையானவை:  கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - தலா ஒரு கப், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பவுடர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து, உப்பு போட்டு கிளறி, பால் விட்டு கலக்கவும். இதை ஆவியில் வேக வைத்து... ஆறியதும் சிறு துண்டுகளாக செய்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் கேழ்வரகு மாவு துண்டுகளை சேர்த்து... கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு கிளறி, கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பவுடரை தூவி இறக்கவும்.

 கோவைக்காய் கறி
தேவையானவை: நறுக்கிய கோவைக்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை நன்றாக கழுவி நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, கோவைக்காயை சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்றாக கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்து மூடி வைத்து, சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்கவும்.
கோவைக்காய் இரும்புச் சத்து கொண்டது.

 புடலங்காய் கடுகு பச்சடி
தேவையானவை: பொடியாக நறுக்கிய புடலங்காய் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது), தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: நறுக்கிய புடலங்காயை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். அரை டீஸ்பூன் கடுகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து... வெந்த காய் ஆறியதும் அதனுடன் கலக்கவும். பிறகு, கடைந்த தயிர் சேர்த்து... எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

கம்பு ரொட்டி
தேவையானவை:கம்பு மாவு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கம்பு மாவில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து வைக்கவும். வாழையிலையில் மெல்லியதாக இந்த மாவை தட்டி தவாவில் போடவும். சிறிதளவு எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். பிறகு, திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைத்து செய்யவும்).

 அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை:அகத்திக்கீரை (நறுக்கியது) - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - அரை டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் கீரையை போடவும். பிறகு மஞ்சள்தூள், பாசிப்பருப்பு சேர்த்து நீர் தெளித்து மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 5 நிமிடம் கழித்து மறுபடியும் நீர் தெளித்து வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
அகத்திக்கீரை வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. உடம்பில் உள்ள கெட்ட நீரை எடுக்கும்.

 சம்பா ரவை கிச்சடி
தேவையானவை: சம்பா கோதுமை ரவை - ஒரு கப், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, குடமிளகாய் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சம்பா கோதுமை ரவையை கடாயில் சிவக்க வறுக்கவும். வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... வெங்காயத்தை போட்டு வதக்கவும், பிறகு கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணியை போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்துக் கலந்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 சாமை அரிசி உப்புமா
தேவையானவை:சாமை அரிசி - ஒரு கப், வெள்ளை வெங்காயம், கேரட் - தலா ஒன்று, நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும். கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 காராமணி கிரேவி
தேவையானவை: காராமணி - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), பூண்டு - 2 பல், பட்டை - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை முதல் நாள் ஊற வைக்கவும் (மாலையில் செய்வதானால் காலையில் ஊற வைக்கவும்). ஊறிய காராமணியை குக்கரில் வேக வைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பட்டை சேர்க்கவும். வெங்காயம் வதக்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும். ஆறியதும் இதை விழுதாக அரைத்து, காராமணியுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். உப்பு, கொத்தமல்லி சேர்த்து... 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

 வெஜிடபிள் சாலட்
தேவையானவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கலர் கோஸ், வெள்ளை கோஸ், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் - தலா ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன் (வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, வெந்தயப்பொடி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் முளைகட்டிய பயறு சேர்க்கலாம்.
வாரத்துக்கு 4 நாட்கள் இதை சாப்பிட்டால்... உடல் நலம் மேம்படும்.

 கம்பு தோசை
தேவையானவை: கம்பு - 3 கப், சிவப்பரிசி, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், அவல் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கம்பு, சிவப்பரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும். 5 மணி நேரம் ஊற வேண்டும். முதலில் கம்பை போட்டு அரைக்கவும். கம்பு ஓரளவு அரைபட்டதும் அரிசி, உளுத்தம்பருப்பு - வெந்தயம், அவலை களைந்து போட்டு நைஸாக அரைக்கவும்.  பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை விட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

 முருங்கைக்கீரை சூப்
தேவையானவை:ஆய்ந்து, சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பூண்டு - ஒரு பல், மிளகு - கால் டீஸ்பூன், தனியா, சீரகம் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  வெங்காயம், தக்காளியை நறுக்கவும். மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ளவும். கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வந்தால், முருங்கைக்கீரை நிவாரணம் அளிக்கும்.

 துளசி ரசம்
தேவையானவை: துளசி இலை - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைக்கவும். புளியை நன்றாக கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களை அரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் துளசியை அரைத்து அதனுடன் சேர்த்து, நுரைத்ததும் இறக்கி... எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
துளசி, ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

 வெந்தயக் கறி
தேவையானவை:வெந்தயம் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்  - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், சக்கரை - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  வெந்தயத்தை முதல் நாள் ஊற வைக்கவும், மறுநாள் காலையில் எடுத்து நீரை நன்றாக வடித்து, 'ஹாட் பேக்’கில் போட்டு மூடி வைக்கவும். அதற்கு அடுத்த நாள் நன்றாக முளைவிட்டிருக்கும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... முளைகட்டிய வெந்தயத்தை சேர்க்கவும். கொஞ்சம் நீர் தெளித்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும்

 அவல் பிஸிபேளாபாத்
தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், நறுக்கிய  பூசணிக்காய் - அரை கப்,  கேரட் - ஒன்று, குடமிளகாய் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி, சௌசௌ - தலா அரை கப், வெங்காயம் - ஒன்று, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை களைந்து 10 நிமிடம் வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை  எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து பொடி செய்யவும். பாசிபருப்பை மஞ்சள்தூள், காய்களுடன் வேக வைக்கவும் (குடமிளகாய், வெங்காயம் தவிர). அதனுடன் புளிக் கரைசல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அரைத்து வைத்த பொடியை சேர்த்து... வெங்காயம், குடமிளகாயை வதக்கி போட்டு, அவலை பிழிந்து சேர்க்கவும். எல்லாம் சேர்ந்தாற்போல் வந்தததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

 தனியா பொடி
தேவையானவை:தனியா - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தனியாவை வாசனை வரும் வரை வறுக்கவும். காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். அந்த சூட்டில் புளியை பிய்த்துப் போடவும். பெருங்காயத்தை பொரித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு நைஸாக பொடி செய்து வைக்கவும்.
இதை புளி இல்லாமலும் செய்யலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். நீர் மோரில் ஒரு டீஸ்பூன் போட்டு குடிக்கலாம். இது உடலில் உள்ள கெட்ட நீரை எடுக்கும். பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். குமட்டலை போக்கும்.

 கொள்ளு  ஃப்ளாக்ஸ் சீட் பொடி
தேவையானவை: ஃப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், கொள்ளு - அரை கப்.
செய்முறை: கொள்ளுவை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் ஃப்ளாக்ஸ் சீட் சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும். வாரம் 3 நாளைக்கு ஏதாவது ஒரு காயில் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். கொள்ளு - ஃபிளாக்ஸ் சீட் பொடி சேர்த்தால் காய் சுவையாக இருக்கும்.
ப்ளாக்ஸ் சீட் கொழுப்பு சத்தைக் குறைக்கும்.

சுரைக்காய் பொரியல்
தேவையானவை: நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப்,  மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பொடி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... சுரைக்காயை சேர்க்கவும். மஞ்சள்தூள் தூவி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தேவையென்றால் கொஞ்சம் நீர் தெளிக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10 நிமிடம் கழித்து காயை நன்றாக கிளறி, ஃப்ளாக்ஸ் சீட் பொடி தூவி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடத் துக்குப் பிறகு இறக்கவும்.

 வரகு புளியோதரை
தேவையானவை: வரகு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வரகை அரை மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாயை பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து... புளிக் கரைசலை விடவும். இதனுடன் உப்பு, தனியா - மிளகாய் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடவும். வேக வைத்த கடைசியில் வரகை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி
ஸ்பைஸி பப்பட் ரோல்
தேவையானவை: ஆச்சி அப்பளம் - 12 (அல்லது தேவைக்கேற்ப), எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
ஸ்டஃப்பிங் செய்ய தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் -  தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி     மஞ்சள்தூள், ஆச்சி கரம் மசாலாத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு  - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை (வெங்காயம் தவிர) குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு மசிக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுது, ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, காய்கறி விழுதைப் போட்டு, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து ஆறவிடவும். எலுமிச்சைச் சாறு சேர்க்கவும் இந்தக் கலவை ஆறியதும் சிலிண்டர்கள் மாதிரி உருட்டி வைக்கவும் (கலவை தளர இருந்தால், பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்).
வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). தட்டில் நீர் விட்டு, ஆச்சி அப்பளங்களை ஒவ்வொன்றாக அதில் நனைத்து, உடனே எடுத்து, நீரை மட்டும் ஒற்றி எடுத்தால் நமுத்த மாதிரி ஆகும். அப்பளத்தின் நடுவில்  சிலிண்டர் வடிவ காய்கறி உருண்டையை வைத்து ரோல் செய்தால் அப்பளம் ஒட்டிக்கொள்ளும். அல்லது கையால் நன்கு ஒட்டிவிடவும். எண்ணெய் காய்ந்ததும், ரோல்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  


இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி கெட்சப்  மிகவும் ஏற்றது
- ராஜி கணேசன், சென்னை-40


நன்றி - அவள் விகடன்
படம்: ஆ.முத்துக்குமார்

Thursday, May 23, 2013

இளைய தளபதி அரசியலுக்கு அச்சாரம் போடறாரா?

1. இனி பாய் ப்ரண்டு நோ:-ஆண்டரியா அதிரடி # மேடம், நான் இந்து தான் , ஓக்கேவா ? என் நெம்பர் 98427 13441



-------------------------


2. அம்மாவிடம் துடப்பக்கட்டையால் அடி வாங்கியிருக்கிறேன்! கங்கணா ரனாவத்! # ஒரு கட்டையே துடப்பக்கட்டையால் அடி வாங்கி இருக்குதே ,அடடே!



---------------------


3.  சிறையில் கஷ்டப்பட்டேன் - ராமதாஸ் பேட்டி # மாமியார் வீடுன்னா கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும் தலைவா



------------------------


4. தமிழ்நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது-அன்புமணி #அப்புறம் எப்டிங்ணா நீங்க ஜாமீன்ல வெளில வந்தீங்க?்


------------------


5.  நாம கலந்துக்கலைன்னா ட்வீட்டப் சொதப்பல் தான் என டி எம் மிக்கொண்ட இரு பிரபல பெண் ட்வீட்டர்கள் அதிர்ச்சி # சும்மா



----------------------

6. ஆண்கள் யாரும் எனக்கு டி எம் ம வேணாம் என வேண்டா விரும்பா கேட்டுக்கொள்கிறேன் - ஓப்பன் பண்ணி பண்ணி ஏமாந்த சுப்பன்




---------------------


7. தலைவாவில் நல்ல கதையம்சம் உள்ளது-விஜய் பேட்டி # நல்ல கதை.அம்சம்.்



---------------------------

8. ஆற்றில் வசிக்கும் ஆமை தான் ஆற்றாமையா?




-------------------------

9. கலைஞர் பெருந்தன்மையானவர் - கேப்டன்! #ஊழல் பங்கை கறாராகக்கேட்டுப்பெறும் தன்மையானவர்?



-----------------------


10. பாராளுமன்றத் தேர்தலில் என் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்! - விஜயகாந்த் # நாங்க் ஏங்க அதைப்பார்க்கனும்?




---------------



11.  கட்டிடத்தொழிலாளியாக  அடித்தளம் படத்தில் நடித்தபோது
"என் இடுப்பில் குடமே நிக்கலை! -ஆருஷி #  விடுங்க சேலை நின்தே பெரிய விஷயம்


-----------------------------


12. இலவச திருமணத்துக்கும், எதிர்கால அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை- விஜய் # இதன் மூலம் அண்ணன் சொல்ல வருவது அரசியலில் விரைவில் குதிப்பார்?




-----------------------------


13. விஜய் -ன் பிறந்த நாளான ஜூன் 22 இல் தலைவா ரிலீஸ் # கூட்டுத்தொகை 4 வருது.4 பேர் 4 விதமா பேசுவாங்களோ?




----------------------


14. ஜூன் -ல் விஜய் -ன் தலைவா , சூர்யாவின் சிங்கம் 2 , தனுஷ்-ன் ராஞ்சனா ( தமிழில் அம்பிகாவதி) ரிலீஸ் # அம்பிகாவதி மட்டும் பாடாவதி ஆகிடும்




------------------------


15. சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ 2 கோடி  # நீங்களும் வென்றாச்சு 2 கோடி ,அடுத்த விஜய் ஆக வாழ்த்துகள்



----------------------


16. நண்பன் ஆசைக்காட்டியதால் சூதாட்டத்தில் ஈடுபட்டேன்: ஸ்ரீசாந்த் # ஜெயில் கொடுப்பான் தோழன் ?




---------------------


17. விக்கல் வரும்போது உன்னை நினைக்க மாட்டேன்.தண்ணீர் குடிக்கனும்னு தான் நினைப்பேன்





----------------------------




18. பணி நேரத்தில் அலை பேசியில் நீ அழைக்கும்போது முகத்தில் கண்டிப்பையும் ,குரலில் குழைவு ,காதல் இரண்டையும் கலக்க வேண்டிய கட்டாயம் எனக்கு




-----------------------


19. நீ பூ கட்டும் அழகை ரசித்த பின் பூச்சரத்தை தொடவே மனசு வராது



------------------------


20,. இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை என மறுக்கிறாய்! பழக்கி விடுகிறேன் என்றாலும் வெட்கப்படுகிறாய்.டியூப் லைட் அழகி நீ !