Tuesday, April 30, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8


ஆண்டனி ராஜ்
  படங்கள்: ஏ.சிதம்பரம்  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான சட்ட போராட்டம் என்பது நீண்ட வரலாறு கொண்டது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அதில் 2010 செப்டம்பர் 28-ல் நல்ல தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி திலிப்பி தர்மாராவ், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தார்.  அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்ற ஆலை நிர்வாகம், உயர் நீதிமன்ர தீர்ப்புக்கு எதிராக இடைக்கால தடையை பெற்று விட்டது. அதனால் தற்போது வரையிலும் ஆலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வுக் குழுக்கள் அல்லது கண்காணிப்பு குழுக்கள் ஆலையின் தரத்தை பரிசோதனை செய்து அறிக்கைகள் கொடுக்கும் நிகழ்வுகள் வாடிக்கையாக நடந்து வருகின்றன். ஆனால் அந்த அறிக்கைகளும்  பெரும்பாலும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமானதாக இருப்பதுதான் வேதனைக்கு உரியது. சில அறிக்கைகள் ஆலை நிர்வாகத்துக்கு ஆலோசனைகளை வழங்கினாலும் அவையும் நிறைவேற்றப்படுவது இல்லை என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.

உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழு

தமிழகத்தில் உள்ள ஆலைகள் பலவும் விதிமுறைகளை மீறி செயல்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக திகழ்வதாக எழுந்த புகாரை விசாரித்து அறிக்கை தருமாறு உச்சநீதிமன்றம் ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்தது. டாக்டர் தியாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் 5 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவுடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் உஷா சுப்பிரமணியன் இடம் பெற்று இருந்தார். 


தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் மூவரும், தமிழக அரசின் சார்பில் மூவரும் குழுவில் இடம் பெற்று இருந்தனர். மக்கள் சார்பில் கடலோர மக்கள்கூட்டமைப்பின் அமைப்பாளரான புஷ்பராயன் உள்ளிட்ட சிலர் அந்த குழுவிடம் மனு கொடுத்து ஆலையில் அத்துமீறல்களை தெரிவித்தனர்.

2004 செப்டம்பர் 20 முதல் 22 வரையிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்த அந்த குழுவானது, 21-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. ஆலைக்குள் நச்சுக் கலந்த கழிவுப் பொருட்கள் குவித்து வைக்கபப்ட்டு இருந்ததை அக்குழு நேரில் பார்வையிட்டது. காற்றில் அளவுக்கு அதிகமாக சல்ஃபர் கலந்த புகை பரவுவதையும் கவனமாக குறித்துக் கொண்டனர்.

ஆலை நிர்வாகம் மூன்றுமுறை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரித்து இருந்த போதிலும் அதற்கான அனுமதி முறைப்படி பெறப்படவில்லை. ஆலை செயல்பட தொடங்கிய நிலையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் முன்தேதியிட்டு அனுமதிகடிதங்களை கொடுத்ததற்கான ஆவணங்களை பார்த்துது அக்குழுவினரே அதிர்ந்தனர். ஆலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திரவ கழிவுகளையும் திடக் கழிவுகளையும் கையாள தேவையான எந்திரங்கள் இல்லாதது பற்றியும் இக்குழு கவலை தெரிவித்தது.

 
ஆலையை உடனடியாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது. அப்போது அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்யப்பட்டது உறுதியானாலோ அல்லது கழிவுகளை கையாள்வதில் மெத்தனம் காட்டப்பட்டாலோ காசு மாசுபடுவதை தடுக்கும் சட்டம் (1981), நீரை மாசுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (1974), ஆபத்தை விளைவிக்கும் கழிவுப்பொருட்களுக்கான சட்டம் (2003) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து ஆலையின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும்.


 ஆலையின் எந்திரங்கள், உற்பத்தி அளவு ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து அதன் அறிக்கையை 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டாலும் ஆலை நிர்வாகம் எதையும் பின்பற்றுவது கிடையாது என பொருமுகிறார்கள், உள்ளூர் மக்கள்.

ம.தி.மு.க-வின் பங்களிப்பு

உயர்நீதி மன்றம் இந்த ஆலையை மூட உத்தரவிட்டு அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்து இடைக்கால ஆணை பெற்று இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு நெருங்கி விட்டதாகவே போராடும் மக்கள் கருதுகிறார்கள். இருப்பினும் இதுவரையிலும் நடந்த சட்ட போராங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்துக்காக தேசிய தூய சுற்றுச்சூழல் அறக்கட்டளை வழக்கு தொடர்ந்த பின்னர் அதில், ம.தி.மு.க பொது செயளாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யூவை சேர்த கனகராஜ், தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ் ஆகியவையும் தங்களை இணைத்துக் கொண்டு சட்ட போராட்டம் நடத்தின. தொடக்கத்தில் அனைத்து கட்சிகளும் பாரபரட்சம் இல்லாமல் ஸ்டெர்லைட் எதிர்ப்பை கடைபிடித்த போதிலும், பின்னர் பல் கட்சிகள் பின் வாங்கிக் கொண்டன.

ம.தி.மு.க சார்பில் 1996 மார்ச் 5-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்த வாரத்தில் கடையடைப்பு போராட்டமும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும் ம.தி.மு.க சார்பில் நடத்தப்பட்டது. ஏப்ரல் முதல்நாளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி நடந்தது. டிசம்பர் மாதத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு உணர்வை அதிகாரிகளுக்கு புரிய வைத்தனர்.

1997 மார்ச் 24-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கட்சியினர் மட்டும் அல்லாமல் உள்ளூரை சேர்ந்த பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டதால் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினார்கள். ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்ய வழி தெரியாமல் போலீஸார் விழி பிதுங்கினார்கள். 


பின்னர் ஒருவழியாக அனைவரையும் வாகனத்தில் ஏற்றி கல்யாண மண்டபங்களில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ம.தி.மு.க-வினர் நடைப்பயணமாக சென்று ஆலையின் தீமையை விளக்கி சொன்னார்கள். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நெருப்பு மாவட்ட முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது.

ஆலையில் நடந்த விபத்துக்கு விடுதலைப்புலிகள் மீது பழி போட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் குறித்த தகவல்களை நாளை பார்க்கலாம்.


thanx -vikatan

ிஸ்கி 1 -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html
ிஸ்கி 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

பார்வதி ஓமணக்குட்டன் கூட வன்னியர் தானா? டாக்டர் ராம் தாஸ் மகிழ்ச்சி

1. 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் - ஜெ # வாக்கிய அமைப்பே தப்பு.1 கிலோ அரிசி 1 ரூபா தானே ஏன் 20 ரூபா?னு தானைத்தலைவர் கேட்பாரு


------------------------


2. உடன் பிறப்பே! கழக ஆட்சியிலே எந்த இணைய தளமும் முடக்கப்பட்டதில்லை.உணர்ந்திடுவீர்.( ஒரு ஆணின் இஷ்டம் இன்னொரு ஆணுக்கே தெரியும் )


------------------------


3. 90 சதவீத படத்தை கேமராமேன் இல்லாமலேயே எடுத்த அம்பிகா # ஹீரோயின் 3 ஷா தானே ? ஹி ஹி மியாவ்.



-------------------


4. ஏழைகளுக்கு மலிவு விலையில் மது கொடுக்கவிருக்கிறது உத்திரபிரதேச அரசு..! # ஏழை பரம ஏழை ஆகிடுவான்


---------------------

5. சித்தார்த்துடன் கை கோர்க்கும் 'பிட்சா' கார்த்திக் சுப்புராஜ்! # அவரு ஸ்ருதி கூட கை கோர்த்த லவ்வே புட்டுக்கிச்சு



---------------------


6. அம்மாவுக்கு நாங்கவிசுவாசமானநாய்கள் அமைச்சர் இடப்பாடி பழநிச்சாமி # கவுதம் சார் நடுநிசிநாய்கள் 2 எடுக்கறாராம்.நடிக்கறீங்ளா?்


----------------------


7. அஜித்துடன் நடிக்க ஆசை - ஸ்ரீதேவி # நல்லா யோசிச்சு சொல்லுங்க.நடக்க ஆசையா? நடிக்க ஆசையா ?


------------------------

8.  எம்.எல்.ஏ.,வை அ.தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்க தயார்: விஜயகாந்த் அறிவிப்பு # பேக்கரி உனக்கு , அடுப்புக்கரி எனக்கு ஹி ஹி



----------------------


9.  சிவ பெருமானும், பார்வதியும் வன்னியர்களே -காடுவெட்டி குரு # அட ஈஸ்வரா. GOD வெட்டி குருவா இவரு


--------------------


10. இந்தி பேசும் தனுஷை பிடிச்சிருக்கு: ஐஸ்வர்யா # அவருக்கும் ஹிந்தி பேசும் நடிகையைப்பிடிச்சுடப்போகுது


---------------------


11. விலங்குகளை கொல்ல கொய்யாவில் வெடிகுண்டு: சிக்கி கொண்ட விவசாயி # அடங்கொய்யா ல


---------------------


12. தே.மு.தி.க.வை அழிக்க அ.தி.மு.க முயற்சி: கருணாநிதி # அறிவாலயம் கோடம்பாக்கம் போகப்பார்க்குதே அடடே


-----------------------


13. ஜெ வை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை -கனிமொழி # ஏம்மா? அப்பா கூட சண்டையா?அவரு டெய்லி முரசொலி ல எதிர்த்துட்டுத்தானே இருக்காரு?


----------------------


14. பிரதமராகும் எண்ணம் இல்லை கட்சி பணியாற்றவே விரும்புகிறேன் - ப.சி #அண்ணா நீங்க ஆத்துனது போதும்.VRS வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்ணா



-------------------------


15. மோடி பூஜ்ஜியம் என்றால் ராகுல் காந்தி மிக பெரிய பூஜ்ஜியம்: பாஜக. # பார்த்து.சைபர் க்ரைம் கேஸ்ல உள்ளே தள்ளிடப்போறாங்க



-------------------------


16.  நடிகைகள் என் பெயரையும் பச்சை குத்த மாட்டார்களா! -மன்சூர் அலிகான் # மன்சூர் ( mansure) SURE MAN.சிம்புக்கு ஒருகாலம் வந்தா வம்புக்கு ஒரு ரோ




------------------------------


17.  மனைவி தேவயானியை மேடம் என்று அழைக்கும் ராஜகுமாரன் # நாங்களும் அப்டித்தான்.ஆனா அதை விளம்பரப்படுத்திக்கறதில்லை



--------------------------


18. விஜயகாந்த்தை நேரில் சந்தித்தது தேர்தல் கூட்டணிக்காக அல்ல- திருமாவளவன்# நயன் தாராவை நான் சந்தித்து பழைய காதலை புதுப்பிக்க அல்ல - சிம்பு



--------------------------


19. வன்னியர் பேச்சை விட்டு வந்தால் ராம்தாஸ்க்கு WON NEAR



-----------------------


20. ஆதாய கொலைகள் தமிழகத்தில் குறைந்துள்ளன. - ஜெ. # கழக ஆட்சி மலர்ந்ததும் அக்குறை சரி செய்யப்படும மு க்




--------------------------------


21. கே.ஏ.செங்கோட்டையனிடம் ஜெ செல்போனில் திடீர் பேச்சு:# உங்க பேரை மாத்துங்க முதல்ல.டில்லி ல இருக்கற பீலிங்கு



------------------------


22. விஜயகாந்த்துடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு. #,கன்னம் இப்டி வீங்கி இருக்கே பீரா? உங்க கண் இப்டி சிவந்து இருக்கே ? விடிய விடிய சரக்கா?


-------------------------


23. நாங்கள் நெருப்பில் பிறந்தவர்கள் - கா.வெ.குரு. # பொறக்கும்போதே கெட்ட சகுனம்.ஹாஸ்பிடல் ல தீ விபத்து



----------------------


24. ஜெ ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்:- ஸ்டாலின் # உங்கப்பா ஆட்சிக்கு வந்தா உங்க குடும்பத்துக்குள்ளே கலவரம் தான் தினசரி நிலவரம்



-------------------------


25. நல்ல வேளை பார்வதி ஓமணக்குட்டன் கூட வன்னியர் தான்னு யாரும் சொல்லலை ;-)

Monday, April 29, 2013

நான் ராஜாவாகப் போகிறேன் - சினிமா விமர்சனம்



பி டி உஷாவைத்தெரிஞ்ச அளவுக்கு நம்ம ஆளுங்க நிறைய பேருக்கு பி டி கத்திரிக்கா பற்றித்தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா இயற்கையான விவசாயத்துக்கு இது எதிரானது , ஃபாரீன்காரன் கண்டு பிடிச்சது . இத்தனை வருஷமா நாம நல்லா இருந்தது அவனுக்குப்பிடிக்கல போல. இந்தியா அவங்க கிட்டே எதிர்காலத்துல கை ஏந்தி நிக்கனும் என்பதே அவங்க லட்சியம் .அதுக்காக  ஃபாரீன்காரன் ஒருத்தன் இங்கே இருக்கும் எட்டப்பன் கிட்டே கூட்டு வெச்சு விவசாய பூமியை அழிக்கப்பார்க்கிறான். 


அந்த மேட்டர் எப்டியோ சமூக ஆர்வலர்க்கு தெரிஞ்சு ( நம்ம நம்மாழ்வார் மாதிரி ) பிரச்சனை பண்றாரு .  அவரை வில்லன் குரூப் போட்டுத்தள்ளிடுது . சமூக சேவகியான ஹீரோயின் அவர் சாவில் மர்மம் இருக்கு , உண்மை வெளில வரனும்னு போராடுறாங்க , உள்ளே போன ஆ ராசா , அழகிரி எல்லாம் டக் டக்னு வெளில வந்துடறாங்க , ஆனா இந்த உண்மை மட்டும் எப்பவும் வெளீல வரவே வராது . வில்லன் க்ரூப்புக்கும் , ஹீரோயின் , ஹீரோவுக்கும் இடையே நடக்கும் தர்ம யுத்தமே படம் 


 இப்போ நான் சொன்ன மாதிரி நேரா கதை சொல்லி இருந்தா இந்த  சினிமா தப்பிச்சிருக்கும் , நம்ம ஆளுங்க திரைக்கதைல ட்விஸ்ட் வைக்கனும் , ஹீரோ பில்டப் தரனும் , குத்தாட்டம் வைக்கனும் இத்தனை கண்டிஷன் எல்லாம் இருப்பதால் படம் நீஈஈஈஈளமாப்போய்டுச்சு . கொஞ்சம் சுத்தி வளைச்சு கதை சொல்றாங்க


எது எப்படியோ போகட்டும். 3 விஷயத்துக்காக படம் பார்க்கலாம் . முதல் ல திருமதி தமிழ் மூலம் நம்ம எல்லாருக்கும் பேதி போக வெச்ச திருக்குறள் இடை அழகி  (!!!) தேவயானியின் தம்பி நகுல் க்கு இது ரொம்ப முக்கியமான படம் . டபுள் ஆக்‌ஷன் , முடிஞ்ச வரை முயற்சி பண்ணி இருக்கார். ஆனா அவர் கமல் ரேஞ்சுக்கு எல்லாம் ட்ரை பண்ணி அலப்பறை பண்றது ஓவர் . பாடி வெயிட்டை குறைச்சிருக்காரு, குட் 


அடுத்து 2 ஹீரோயின்ஸ் . எப்படியும் 3 பேரா ஆகிடும்


 


முதல் ஹீரோயின் சாந்தினி .( கே பாக்யராஜ் அறிமுகம் ) )இந்தப்பொண்ணுக்கு அபாரமா நடிப்பு வருது . கண் ரொம்பப்பெருசா இருக்கு . மூக்கும் தான் . ஆனா மத்ததெல்லாம் சின்னது , ஐ மீன் லிப்ஸ் , கன்னம் இதெல்லாம் . 5 லட்சம் ரூபா சம்பளம் வாங்கிட்டு 50 லட்சம் ரூபாக்கு நடிக்குது . ஜோதிகாவுக்கு தங்கச்சி போல . அவர் அடிக்கடி கண்களால் ஆச்சரியம் காட்டுவது ஓவர் டோஸ் . ஆனாலும் ரசிக்கலாம் , நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை ரசிக்காம விட்டோம். ( இந்தப்பொண்ணுக்கு கூலிங்க் கிளாஸ் போட்டு கட்டுப்படுத்தனும் )இவரது ஆடை அலங்கார அறிவு பிரம்மிக்க வைக்குது . துப்பட்டா கொஞ்சம் கூட விலகாம கண்ணியம் காட்டுறார் . குட். (அவர் கண்ணியத்தில் இடி விழ )


2 வது ஹீரோயின்  அவனி மோடி ( குஜராத் சி எம் மோடிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , குட்டையை யாரும் குழப்ப வேணாம் ) . இவர் தான் படத்துல மெயின் ஹீரோயின். இவரைத்தான் முதல்ல காட்டறாங்க .  ஏன்னா இவருதான் காட்டு காட்டுன்னு காட்டுவார்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு . இவரது கண்ணே செம கிக் தான் .ஆனா இந்த பிரம்மா ஒரு கதவை மூடுனா இன்னொரு கதவை பெப்பரெப்பேன்னு திறந்துடுவாரு . இவருக்கு வாய் ரயில்வே தண்டவாளம் மாதிரி நீஈஈஈளமா இருக்கு . ( ராஸ்கல், நடிப்பை விமர்சிக்காம பர்சனலா விமர்சிக்கறே, பெண்கள் சங்கம் வருது ஓடிடு )

 




 அவனி மோடிக்கு ஒரு தலையா ஹீரோவைக்காதலிக்கும் பாத்திரம். பிரமாதமா பண்ணி இருக்கார் . ஹீரோ ஏன் இவரை லவ் பண்ணலை என பெஞ்ச் ரசிகனே கேள்வி கேட்கும் அளவுக்கு ரொமான்ஸ்ல நடிப்பு பாப்பாவுக்கு அள்ளுது ( அந்த பெஞ்ச் ரசிகன் நான் தான் ஹி ஹி ) . இந்த 2 ஹீரோயின்ஸுமே தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கறேன்


மணிவண்ணன் உட்பட பலரும் நல்லாவே நடிச்சிருக்காங்க .


 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. மசாலாக்கதைன்னு அசால்ட்டா யாரும் சொல்லிடக்கூடாதுன்னு சாமார்த்தியமா  ஈழப்பிரச்சனை , மரபணு மாற்ற விவசாயிகள் பிரச்சனை என பிரமாதமாக கவனத்தை திசை திருப்பியது


2. ஹீரோ ஹீரோயினை அடிக்கடி சதிக்க ராம்ஜெத்மலானியை சந்திக்க வைக்கிறேன் என பீலா விட்டு ஹோட்டல், காபி பார் என ஜாலி டூர் அடிப்பது அங்கங்கே குட்டி குட்டி சுவராஸ்யங்கள்


3. படத்தில் ஹீரோ டபுள் ஆக்‌ஷன் என நம்பும்படி டைட்டிலில்  காட்சி அமைப்புல் கிம்மிக்ஸ்  வைத்தது


4. இரு ஹீரோயின்களுக்கும் சரி சமமாக காட்சிகள் வைத்தது . நடிப்பைக்காட்ட ஒரு ஃபிகர் , இடுப்பு மடிப்பை காட்ட இன்னொரு ஃபிகர் என தரம் பிரித்து உலாவ விட்டது


5. ஜி வி பிரகாஷ் குமார் இன் இசையில் கலாய்ப்போம்   பாட்டு இளமைத்துள்ளல் .உன்னைக்காணும்போது டூயட் சாங்க் அழகு


6. ஹீரோயின் டிரஸ் பண்ணிட்டு இருக்கும்போது டக்னு ஹீரோ உள்ளே வரும் 5 செகண்ட் சீனை என்னமோ படத்தோட மெயின் ட்விஸ்ட் மாதிரி பில்டப் கொடுத்து போஸ்டர் ஒட்டுனது 




இயக்குநரிடம் சில கேள்விகள்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  படத்துல சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் பண்ண  ஓப்பனிங்க்ல அந்த டபுள் ஆக்‌ஷன் பில்டப் ஓக்கே , ஆனா எதுக்கு தேவை இல்லாம கதைக்குள் கதை , ஃபிளாஸ்பேக் உள்ளே ஃபிளாஸ்பேக் .. சாதாரணமா கதை சொல்லலாமே?


2. வசனம் படத்துக்கு பெரிய மைனஸ். ஏன்னா அண்ணன் வெற்றி மாறன் தான் டயலாக் ரைட்டர் . அவர்  ஆல்ரெடி பல படங்கள்ல  வந்ததையே ரிப்பீட்ட் ஆக்கி இருக்காரு . ( அவரு படத்துக்கு நல்ல வசனம் வேணும் போல )


3. சமூக ஆர்வலரும் , மிகவும் கஷ்ட நிலையில் உள்ள பெற்றோர் உள்ளவருமான ஹீரோயின் தண்ணி அடிக்கும் கண்ட பசங்க கலந்துக்கும் நைட் பார்ட்டியில் தயக்கம் இல்லாமல் வருவது எப்படி?


4. ஹீரோவுக்கு அடிக்கடி தூங்கும் வியாதி இருப்பது எடுபட வில்லை . அது சீரியசாக ஏதோ சொல்ல வரும் கதையில் காமெடி ஆகி விடுகிறது


5. ஹீரோயின் முதன் முதலா லவ்வை சொல்ல பூ , கிரீட்டிங்க் கார்டுடன் வரும்போது இன்னொரு ஹீரோயின் அதை தடுக்காட்டிட்டு ( தட்டி விட்டுட்டு ) ஓடுது , ஹீரோ வாயைப்பொளந்துட்டு அந்த ஃபிகரை பார்க்கறார் , அப்பவே உஷார் ஆகி லவ்வை சொல்லி இருக்க வேணாமா? எதுக்கு பம்மிட்டே தியாகி ஆகறார்? அவருக்கு என்ன தலை எழுத்தா? பொண்ணுங்க இதில் எல்லாம் விபரமா இருப்பாங்களே?


6. மிலிட்ரி கேம்ப்க்குள் அத்து மீறி நுழைஞ்சா அப்பவே துரத்தி விட்டுடுவாங்க , இப்படி உள்ளே கூட்டிட்டுப்போய்  ரூம் எல்லாம் சுத்தி காட்டிட்டு தண்டனை கொடுக்க மாட்டாங்க


7. ஹீரோ முகத்துல தன்னை முதன் முதலாக காதலித்த பெண் தனக்காக விட்டுத்தர்றாளே என்ற நன்றி உணர்வோ , அவளுக்கு ஏதும் செய்யலையே என்ற குற்ற உணர்ச்சியோ கொஞ்சம் கூட இல்லையே?


8.  கமல் படங்களில் வருவது போல நெம்பர் ஒன் போவதை வைத்து காட்சிகள் , காமெடி கூத்துகள் தேவை இல்லாதது


9. மரபணு விதைகள் பற்றிய காட்சிகள் டாக்குமெண்ட்ரி பார்ப்பது போல் இருக்கு , இன்னும் ஜனரஞ்சகமாய்ச்சொல்லலாம் . மணிவண்னனின் கம்பீரக்குரல் எங்கே? கம்மிப்போய் எப்டியோ இருக்கு? உடம்பு சரி இல்லைன்னா டப்பிங்க் ஆள் போட்டிருக்கலாம்


10 . ஹீரோயின் குளிச்சுட்டு வந்து டிரஸ் சேஞ்ச் பண்றா. அப்போ ஹீரோ டக்னு ரூமுக்கு வந்துடறான். தாழ்ப்பாள் போடாதது ஹீரோயின் குற்றம் , அவ ஏன் ஹீரோ மேல குத்தம் சொல்றா?



 மனம் கவர்ந்த அண்ணன் வெற்றி மாறன் வசனங்கள்



1. பழகிப்பார்த்தாத்தான் அந்தப்பொண்ணைப்பற்றித்தெரியும்னே , இப்போ அவளைப்பார்த்தாலே தெரியுதுங்கறே, எப்படி?


2. டேய் , ரூம் சாவியை வாங்கிட்டு  2 பேரும் எங்கேடா போறீங்க?


 ம், பக்கத்து வீட்டு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணப்போறோம்



3.  ஒரு நல்ல தலைவன் வந்தாத்தான் எல்லாமே மாறும்


4. இந்தியா எய்ட்ஸ்ல 4 வது இடம் . இது எவ்ளவ் பெரிய தலைக்குனிவு



5. மிஸ். டோண்ட் ஒர்ரி . உங்களை யாரும் இங்கே கலாய்க்க மாட்டாங்க , நாம 2 பேரும் சேர்ந்து எல்லாரையும் கலாய்ப்போம்



 


6. பேருல ஜா வரனும்னு ஜோசியர் சொல்லிட்டார் , ஜானகி ராமன் ஓக்கேவா?


முருகன்னு வெச்சிருக்கலாம், ஏன்னா உங்க பேரு  வள்ளி ஆச்சே?



7. உங்க ஊர்ல ஜாலியா டி வி பார்த்தே பொழுது போக்கிடலாம் போல?


 நல்ல வேலைக்குப்போனாத்தான் முதல்ல ஜாலியா இருக்க முடியும்



8.ஃபாரீன்காரன் கண்டுபிடிப்பு விதையால நமக்கு 5 மடங்கு விளைச்சல் கம்மி . மண் எல்லாம் செத்துப்போச்சு . இதன் மூலம் 2000 கோடி ரூபா அவங்களுக்கு லாபம்



9 . எந்த திட்டம் போடுவதா இருந்தாலும் அரசாங்கம் தொலைநோக்கோட போடனும்


10. மிஸ்!டெல் அபவுட் யூ.



எனக்கு ஒரு அப்பா , ஒரு அம்மா



. வாட் எ சர்ப்பரைஸ்!! எனக்கும் ஒரே ஒரு அம்மா, ஒரு அப்பா தான்

 

 ஒரே ஒரு குத்தாட்டத்துக்கு வரும் ஜெரீனா கான்

11. இன்னைக்கு சரின்னு படறது 10 வருஷம் கழிச்சு மக்களுக்கு தப்புன்னு படலாம்


12. ஜெனட்டிகலி மாடிஃபைடு சீட்ஸ் இதைத்தான் மரபணு மாற்ற விதைகள்னு சொல்றோம் ( நன்றி - மேஜர் சுந்தர் ராஜன் )



13.  வெளிநாட்டுக்கம்பெனிகளின் வளர்ச்சி எப்பவும் உள்நாட்டு விவசாயிகளுக்கு வீழ்ச்சி தான்


14.  சிகரெட் குடிப்பது , சரக்கு அடிப்பது தப்புன்னு சொல்றே.. ஒத்துக்கறேன், முதல்ல நீ விற்பதை நிறுத்து . வித்துட்டே ஏன் வாங்காதேன்னு கூப்பாடு போடறே


15.  குடிகாரன் எப்பவும் உண்மையைத்தான் பேசுவான்

 



 எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க் - 40


 குமுதம் ரேங்க் - சுமார்


 ரேட்டிங்க் - 2.5 / 5



சி பி கமெண்ட் - படம் மாமூல் மசாலா கதை தான் , கொஞ்சம் சமூக அக்கறையும் இருக்கு . டி வி ல போட்டா பார்த்துக்கலாம் . ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

 



இந்த சீன் படத்துல இல்லை. அட்ரா சக்க வின் கவுரத்தை காப்பாற்ற அவரின் ஃபேஸ் புக்கில் சுட்டது ஹி ஹி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6


ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்கிற 'நீரி' (National Environmental Engineering Research Institute ) அமைப்பின் முதல் அறிக்கையை தொடர்ந்து மூடப்பட்ட ஆலை, மறுஆய்வு நடத்த வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவுடன் மீண்டும் இயங்க தொடங்கியது. முதல் அறிக்கையில் காட்டமான கருத்துக்களை பதிவு செய்திருந்த 'நீரி' குழுவின் அறிக்கை, அடுத்த இரண்டு மாதத்தில் மாறிவிட்டது.

 


முதல் அறிக்கையில், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி பெற்றதில் முறைகேடு, ஆலையில் இருந்து அபாயகரமான கழிவுகள் வெளியேற்றப்படுகிறது, அனுமதி பெற்றதையும் மீறி அதிக உற்பத்தி நடக்கிறது, தண்ணீர் மாசுபட்டு விட்டது, நிலத்தடி நீர் பாழடைந்து விட்டது...' என்று காட்டமாக பதிவு செய்திருந்த அறிக்கை, இர்ண்டாவது ஆய்வின் போது முற்றிலுமாக மாறிப்போய் இருந்தது. இது வேதாந்தா நிறுவனத்துக்கு உற்சாகத்தையும், உள்ளூர் மக்களுக்கு வேதனையையும் ஏற்படுத்தியது.



அழுது புலம்பிய மக்கள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து மீண்டும் ஆய்வு செய்த குழுவினர், சுற்றிலும் உள்ள மக்களை சந்தித்து பேசினார்கள். ஆலை நிர்வாகமே சில இடங்களில் மக்களை ஏற்பாடு செய்து ஆலைக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்க வகை செய்திருந்தது. ஆனால் அதிகாரிகளை சந்தித்த மக்கள் கொந்தளிப்புடன் பேசினார்கள். குறிப்பாக மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள அடிபம்புகளில் குடிநீர் மஞ்சள் நிறத்திற்கு மாறி விட்டதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார்கள். இதனால் தெற்கு வீரபாண்டியாபுரம், மீளவிட்டான், சில்வர்புரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீரும், கிணற்று நீரும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

ஆலைக்கு அருகில் உள்ள கிராங்களில் வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை சொன்னார்கள். குழந்தைகளுக்கு எலும்பு மூட்டுக்களில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படுவதை தெரிவித்தார்கள். தண்ணீரில் அளவுக்கு அதிகமாக ஃபுளூரைடு கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு பற்களில் பிரச்னை ஏற்படுவதாகவும், வாயில் அரிப்பு ஏற்பட்டு பற்கள் தானாக விழுந்து விடும் ஆபத்து இருப்பதை மருத்துவர்கள் எச்சரித்தையும் குழுவினரிடம் சொல்லி குமுறினார்கள்.


ஆலையை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாள், அந்த பகுதியில் கனமழை பெய்தது. அந்த சூழலை ஆலை நிர்வாகம் சாதகமாக்கிக் கொண்டு ஆலைக்குள் இருந்த கழிவு நீர் அனைத்தையும் மழை தண்ணீருடன் சேர்த்து வெளியே திறந்து விட்டதாக புகார் எழுந்தது. அந்த தண்ணீரை குடித்த கால்நடைகள் செய்து விழுந்ததாக கிராம மக்கள் பதைபதைப்புடன் எடுத்துக் கூறினார்கள். இந்த ஆலை தங்கள் உயிருக்கு உலை வைக்க வந்த எமன் என்று அழுகையோடு பெண்கள் தெரிவித்தனர்.

ஆலையை சுற்றிப் பார்த்ததோடு, மக்களின் கருத்தையும் பதிவு செய்து கொண்ட 'நீரி' குழுவானது, 1999 பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், 'ஸ்டெர்லைட் ஆலையில் பழுதாகி போயிருந்த கழிவுகளை சுத்தப்படுத்தும் இயந்திரம் சரி செய்யப்பட்டு விட்டது. அதனால் தற்போது ஆலையின் கழிவு நீரில் ஆர்சானிக், செலினியம், குரோமியம், காரியம் போன்றவை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்து இருக்கும் அளவை விடவும் குறைவாகவே இருக்கிறது' என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எரிச்சல்

ஸ்டெர்லைட் நிறுவனத்தை பொறுத்தவரை, இது போன்ற குழுக்களின் ஆய்வை எத்தனையோ முறை சந்தித்து இருக்கிறது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை குழுக்கள், உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழு, மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு என பல குழுக்களையும் சமாளித்து ஆலையை முழுவீச்சில் இயங்க செய்யும் தந்திரம் வேதாந்தா நிறுவனத்துக்கு தெரிந்து இருந்தது. அதனால் தான் ஆலை நிர்வாகம் விரும்பியபடியே அறிக்கை வந்திருக்குமோ என சந்தேகிக்கிறார்கள், தூத்துக்குடி மக்கள்.

ஆலையை சுற்றிலும் நடந்து சென்று பார்த்தாலே தெரியும் அளவுக்கு மலை போன்று கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. ஃபுளூரைடு கலந்த கழிவுகள் ஒரு பக்கம் தேங்கி நிற்கிறது. காரிய கழிவுகளும், அலுமினிய கழிவுகளும் ஒரு பக்கம் மலையாக குவிந்து உள்ளது. ஆனாலும், இதை எல்லாம் மறைத்து விட்டு 'நீரி' அறிக்கை வெளியானது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை எரிச்சல் அடைய வைத்தது.

'ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் அத்தனை சீரழிவுக்கும் காரணம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தான். பெரிய தொழிற்சாலைகள் செய்யும் விதிமுறை மீறல்களை கண்டு கொள்ளாமல் ஆலையை பாதுகாக்கும் செயலில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டது. தொழிற்சாலைகளுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையில் துளி அளவுக்கு கூட மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது' என சுற்றுச்சூழல் ஆர்வலரும் கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளருமான புஷ்பராயன் அந்த சமயத்திலேயே காட்டமாக கருத்து தெரிவித்து இருந்தார்.
நலிவடைந்த வாழ்வாதாரம்
ஆலையில் 1500 பேர் பணியாற்றிய போதிலும் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஆலையின் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயமும், மீன்வளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு விட்டது. துறைமுகம் சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதியிலும் பல்வேறு மோசடிகளை நடந்து இருப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக அதன் அலுவலர்கள் கைது செய்யப்பட்டதே, அந்த நிறுவனத்தின் தவறான நடவடிக்கைக்கு சாட்சி என்கிறார்கள், ஆலையின் எதிர்ப்பாளர்கள்.



தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பலகோடி ரூபாய் மின்சார கட்டணம் பாக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் எழுந்து உள்ளது. ஆனால், மக்களையும், அரசையும் ஏமாற்ற நலத்திட்டங்கள் என்ற பெயரில் பணத்தை செலவு செய்து மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப முயற்சி நடப்பதாவும் எதிர்ப்பு குழுவினர் புகார் தெரிவிக்கிறார்கள். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 'பை ப்ராடக்ட்' மூலம் தங்கம், பிளாட்டினம் உள்ளிட்டவை கிடைப்பதாகவும் அவற்றை அரசுக்கு அறிவிக்காமலே வெளிநாட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.



இந்நிலையில் சென்னை விமான நிலையத்தின் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்த 60 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் பிடிபட்ட கதையை நாளை பார்க்கலாம்..




ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 7

- ஆண்டனி ராஜ்

படங்கள்:
ஏ.சிதம்பரம்  

டெர்லைட் ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘பை ப்ராடக்ட்’ என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம், தங்கம், பிளாட்டினம், வெள்ளி, பல்லேடியம் என விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொள்ள லாபம் சம்பாதிக்கும் இந்த நிறுவனம், இது குறித்து முழுமையான தக்வல்களை அரசுக்கு தெர்விக்காமல் வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் எழுந்தது.

2010 ஆகஸ்ட் மாதத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்த மத்திய கலால் துறை அதிகாரிகள், இந்த நிறுவனம் 750 கோடி ரூபாய் வரி ஏயப்பு செய்திருப்பதை கண்டுபிடித்தனர் இதற்காக நிறுவனத்தின் துணைத் தலைவரான வரதராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடக்கோரி மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரை பிணையில் விடுவித்த நீதிமன்றம், நெல்லையில் உள்ள மத்திய கலால் துறையில் 200 கோடி ரூபாய் பிணைத்தொகையாக கட்ட வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.

கடத்தப்பட்ட விலை உயர்ந்த உலோகங்கள்


ஸ்டெர்லை நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்த விவகாரம் தூத்துக்குடி மக்களால் பரபரப்பாக பேசப்பட்டது. அது அடங்குவதற்கு முன்பாக அடுத்த சில நாட்களிலேயே விலை உயர்ந்த பொருட்களை அனுமதி பெறாமல் கடத்தி சென்றதாக அதே கலாத்துறையினரிடம் சிக்கிக் கொண்டது, ஆலை நிர்வாகம். இந்த கடத்தல் விவகாரம் தூத்துக்குடி நகரத்தில் அபோது ஹாட் டாபிக் ஆக பேசப்பட்டது.

அதாவது, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்துக்கு அருகில் வாகன சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது ஆலையில் இருந்து வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக 36 பெட்டிகள் இருந்து உள்ளது. ஆலையின் கழிவை கட்டிகளாக்கி அதனை சென்னை விமான நிலையம் வழியாக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருப்பதாக அதனை எடுத்து சென்றவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்பி அதில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியை பிரித்து எடுக்க இருப்பதாகவும், அதற்கான ஆவணங்களையும் காட்டி உள்ளனர்.


அந்த கழிவுகளில் இருந்து 1080 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி கிடைக்கும் என்றும் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கழிவுகள் அடங்கிய அந்த கட்டிகளை சோதனைக் கூடத்துக்கு அனுப்பினர். அங்கு ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வந்திருக்கிறது, அதனை பார்த்து கலால் துறை அதிகாரிகள் மலைத்து விட்டார்களாம். காரணம், அந்த கழிவுகளில் தங்கம், வெள்ளி மட்டும் அல்லாமல் விலை உயர்ந்த உலோகங்களான பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் ஆகியவையும் இருந்து உள்ளது.


ஆனால் அது பற்றி தெரிவிக்காமல் அரசுக்கு வரி கட்டாமலே பல வருடங்களாக இது போன்ற முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்து இருக்கிறது. இதனால் 60 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கழிவுகளை பறிமுதல் செய்த கலால் துறையினர் இதற்காக ஆலை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

2500 பேருக்கு புற்றுநோய்

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும், சுற்று சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவது பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் அறிக்கை வெளியானபோது, தொழில் நகரமான தூத்துக்குடி நாட்டிலேயே மிக மோசமான நகரம் என குறிப்பிடபப்ட்டு இருந்தது. மக்கள் வசிப்பதற்கு ஆபத்தான நகரம் என்கிற தகவலும் உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மாசு மிகுந்த தொழிற்சாலைகளால் தூத்துக்குடி மாநகர மக்கள் புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி வருவது தெரிய வந்து இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக நிரூபணமாகியுள்ளது.

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவின் அமைப்பாளரான நயினார் குலசேகரன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து பல அரிய தகவல்களை பெற்று இருக்கிறார்.

அதில், புற்றுநோயாளிகள் தொடர்பான கேள்விக்கான பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 2 ஆயிரத்து 552 பேர் புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்று இருக்கிறார்கள். வருடந்தோறும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் தகவலும் தெரிய வந்து உள்ளது. புற்றுநோயாளிகள் பெருகுவதற்கு தூத்துக்குடியை சுற்றிலும் பெருகிவரும் மாசு நிறைந்த தொழிற்சாலைகளே காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய,மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தெரிவித்த ஆலோசனைகள், பரிந்துரைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. அத்துடன் 2004 ல் உச்ச நீதிமன்றம் சார்பில் அமைக்கபப்ட்ட கண்காணிப்புக் குழு பல்வேறு பரிந்துரைகளை செய்து இருந்தது. அவையும் செயல்படுத்தப்படவே இல்லை. அரசும் ஆலை நிர்வாகத்தை கண்காணிக்கவில்லை. இதுவே நோயாளிகளின் நகரமாக தூத்துக்குடிமாறுவதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையில, உயர் நீதிமன்றம் ஆலையை மூட உத்தரவிட்டது குறித்த தகவல்கள்
ன்றி = விகன்
ிஸ்கி 1 -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html
ிஸ்கி 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html


ஸ்"கிண்' ஸ்பெசலிஸ்ட் லேடி டாக்டர்


1. முற்பகல் செய்யின் பிற்பகல் (தூக்கம்) விளையும்



-----------------------


2. ஏழையின் உண்ணா விரதம் பட்டினி எனவும் ,அரசியல்வாதியின் டயட் உண்ணாவிரதம் எனவும் புரிந்து கொள்ளப்படும் நாடு இது


-----------------------


3. கை விட்ட காதலியின் திருமணத்துக்குப்போன காதலனின் பந்தி சாப்பாடுதான் அவன் வாழ்வில் ஜீரணமே ஆகாத சாப்பாடாக இருக்கும்


-------------------------


4. சோகத்தில் பெரிய சோகம் ஆறுதல் சொல்லக்கூட அருகில் அன்புள்ள ஆள் இல்லாமல் போவதே



----------------------------


5. இன்று பூமி தினமாம்.பிகர் பூமிகா மாதிரி இருந்தாலும் வேதிகா மாதிரி இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக்கோ



------------------------


SHATH Photography..!!
Like us on : http://www.facebook.com/PrashathPhotography



6. என்னா ஒரு வில்லத்தனம் னு பசங்க கிட்டே கிண்டல் பண்ற மாதிரி பொண்ணுங்க கிட்டே என்னா ஒரு வில்லித் தனம் னு சொல்லிட முடியாது




---------------------


7. கோடம்பாக்கத்தில் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கறவங்க லிஸ்ட் 1 ஜினி 2 குஷ்பூ 3 வடிவேலு



--------------------------



8. லேடி - குளிச்சுட்டு FRESH ஆகிட்டு வரேன். @ எ பிலிம் # மேரேஜ் தான் ஆகிடுச்சே.எப்டி FRESH ஆவாங்க?



--------------------------


9. ரஜினி - சஞ்சய் தத்தை மன்னிச்சு விட்ருங்கனு நான் சொன்னது தப்புத்தான்.என்னை மன்னிச்சு விட்ருங்க # விரைவில்




------------------------------


10. அமாவாசை வந்துடுச்சா ? # ரஜினி ,குஷ்பூ ,சுச்வாமி உளறல்கள்


---------------------





அறிவோம் ஆயிரம்!
விஷம் தீண்டியவரை புளியமர நிழல் பட்டால் காப்பாற்ற முடியாது என்பது ஏன்?

நம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் நோய்வாய்ப்பட்டவர்கள் புளியினை உணவுடன் சேர்க்ககூடாது என்று கூறப்படுவது ஏனெனில் புளிப்பு சுவை மருந்தின் வீரியத்தினை குறைக்கும் தன்மையுடையது,எலுமிச்சைப்பழமும் அவ்வாறே.இதன் அடிப்படையில்தான் பாம்பு மற்றும் தேள் போன்ற ஜந்துக்களால் சீண்டப்பட்டவர்கள் புளிய மர நிழலில் நின்றால் அம்மரத்தின் தன்மைகள் அதன் நிழலில் உள்ளவர்கள் உடம்பில் பிராணன் வழியே ரத்தத்தில் கலந்து உடலில் விசம் மிக வேகமாக பரவ ஏதுவாகும்.எனவே இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் புளியமர நிழலில் ஒதுங்குவதை தவிர்த்தல் நன்று.
Photo: அறிவோம் ஆயிரம்!
விஷம் தீண்டியவரை புளியமர நிழல் பட்டால் காப்பாற்ற முடியாது என்பது ஏன்?

நம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் நோய்வாய்ப்பட்டவர்கள் புளியினை உணவுடன் சேர்க்ககூடாது என்று கூறப்படுவது ஏனெனில் புளிப்பு சுவை மருந்தின் வீரியத்தினை குறைக்கும் தன்மையுடையது,எலுமிச்சைப்பழமும் அவ்வாறே.இதன் அடிப்படையில்தான் பாம்பு மற்றும் தேள் போன்ற ஜந்துக்களால் சீண்டப்பட்டவர்கள் புளிய மர நிழலில் நின்றால் அம்மரத்தின் தன்மைகள் அதன் நிழலில் உள்ளவர்கள் உடம்பில் பிராணன் வழியே ரத்தத்தில் கலந்து உடலில் விசம் மிக வேகமாக பரவ ஏதுவாகும்.எனவே இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் புளியமர நிழலில் ஒதுங்குவதை தவிர்த்தல் நன்று.

11. கில்மாப்படத்துல பாத்ரூம் கதவை தாழ் போட்டு குளிக்கும் பெண் டர்க்கி டவல் கட்டி இருப்பது ஏன் ?



-------------------------------


12. ரஜினி - பொது வாழ்வில் ,கருத்து சொல்வதில் என் வழி எப்பவும் கேனத்தனமான வழி



-----------------------


13. சஞ்சய்தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் - ரஜினி்# ்
.நடிப்போட நிறுத்திக்குங்க.கருத்து கந்தசாமி ஆகி பேரை ரிப்பேர் ஆக்கிக்க வேணாம்



------------------------


14. இறகு, சிறகு என்ன வித்தியாசம்?


பறவையிடம் இருக்கும் வரை சிறகு.உதிர்ந்து விட்டால் இறகு


-----------------------


15. லவ் பண்றப்ப பிகர் மஞ்சள் நிலா மாதிரி தெரியும்.மேரேஜ் பண்ணிட்டா மஞ்ச மாக்கி மாதிரி தெரியும்




------------------------


16. விருச்சிக ராசி ல பொண்ணு கட்டுனா தேள் மாதிரி கொட்டிடுமோ?



----------------------------


17. காங்கிரஸ்க்கு நல்ல மாற்று பி ஜே பி ன்னு இத்தனை நாளா கேனத்தனமா நம்பி இருந்தோம் ;-(



------------------------


18. ஆபத்தான கடல் வாழ் உயிரினம் - சுறா .ஆபத்துக்குள்ளாகும் கடல் வாழ் உயிரினம் - தமிழ் நாட்டு மீனவர்கள்




-----------------------------


19. rational writings. = எழுதுவதை குறைச்சுக்கறது # சபாஷ் துபாஷ்




----------------------------


20. இந்திய அரசியலின் போக்கையே மாற்றி அமைத்த ஒரு புரட்சிப்போராட்டத்தை நாம் வாழும் காலத்திலேயே கண்கூடப்பார்த்த திருப்தி




------------------------------

எங்களை எப்படியெல்லாம் கலாய்க்கிறிங்க??முதலில் புத்தகத்தை வாங்க முடியுமா?
Photo: எங்களை எப்படியெல்லாம் கலாய்க்கிறிங்க??முதலில் புத்தகத்தை வாங்க முடியுமா?

21. தோல் டாக்டர் ஒரு லேடியா இருந்து அவங்க கிண் ணுனு உடம்பை வெச்சிருந்தா அவங்க தான் ஸ்"கிண்' ஸ்பெசலிஸ்ட் டாக்டர்



------------------------------


22. என் மடியில் கனமில்லை.ஏன்னா என் ஆளு மடி கணினியை ஆட்டையைப்போட்டுட்டா




-----------------------------------


23. சிரிச்ச முகத்தோடயும் ,கை நிறைய பணத்தோடயும் இருந்து பாருங்க.உம்முனு இருக்கிறவங்களும் உங்களுக்கு உம்மா குடுப்பாங்க# எ கீ



-----------------------------



24. மரியாதை தர்றேன் கற போர்வைல என்னை அண்ணா ,சித்தப்பு என்று யார் அழைத்தாலும் அன்பாலோ # இது ஒரு சீரியஸ் ட்வீட்




-------------------------



25. சிட்டு குருவி ,
இன்று உலகமே உன்னை கொண்டாடும் நாள் .உன் நினைவாக சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுவார்கள் தமிழர்கள்



------------------------------


Photo: உள்ளே பாம்பு ,தவளை ,உடும்பு இருக்குமா இருக்காதா?அந்த பயமே இல்லை !



டி வி டுடே

Sunday, April 28, 2013

நான் ராஜாவாகப்போகிறேன் - சினிமா விமர்சனம் ( மாற்றான் தோட்டத்து மல்லிகை )

"பாய்ஸ்" நகுல், "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் ஸோலோ ஹீரோ ஆனார்! அதைத்தொடர்ந்து வெளிவந்த "மாசிலாமணி", "கந்தகோட்டை" உள்ளிட்ட படங்களில் சோர்ந்து விழுந்த அவரை, எழுப்பி நிற்க வைக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படம் என்றால் மிகையல்ல!

இமாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லை பகுதியில் தன் தாய் சீதாவுடன், மாமா வாசு விக்ரமின் ஆதரவில் வாழும் ஜீவா எனும் நகுல், சதா சர்வகாலமும் தூங்கி வழியும் கேரக்டர். ஒருநாள் சிறுவர்களுடன் விளையாட்டுத்தனமாக மிலிட்டரி கேம்பிற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பதற்காக சின்ன தண்டனை பெறும் அவரை பார்க்கும் ஜவான் ஒருவர், சென்னையில் தன்னுடன் படித்த ராஜா மாதிரியே ஜீவாவும் இருப்பதாக சொல்லி கிக்பாக்ஸிங் புலியான ராஜாவின் வீடியோவையும் ஜீவாவிற்கு போட்டு காட்டுகிறார்.



 அந்த வீடியோவைப்பார்த்தது முதல் தன் மாதிரியே இருக்கும் ராஜாவை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஜீவாவிற்குள் துளிர்விடுகிறது. அம்மா, மாமா ஆகியோர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ரயிலேறுகிறார் ஜீவா அலைஸ் நகுல்!

 



அப்புறம் ? அப்புறமென்ன...?! வழியில் போபாலில் ராஜாவை ஒரு தலையாக காதலித்து தோற்ற அவரது தோழி ரீகா எனும் அவனி மோடியையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, ஜீவா எனும் நகுல் தான் ராஜா என்பதும் தெரிய வருகிறது.


அவரது காதலி சாந்தினி என்ன ஆனார்? ராஜா - ஜீவாவாகக் காரணம்  யார் யார்...? அவர்‌களை ஜீவா அலைஸ் ராஜா எனும் நகுல் எவ்வாறு பழிதீர்த்தார்? காதலி சாந்தினியை கரம் பிடித்தாரா...? இல்லையா...? என்பது நான் ராஜாவாகப்போகிறேன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!


‌ஒரே நகுல், ஜீவா - ராஜா என இருவேறு பரிமாணங்களில் வெகுளி பாத்திரத்திலும், வெகுண்டெழும் பாத்திரத்திலும் கிடைத்த கேப்பில் எல்லாம் நடித்து "நான் ராஜாவாகப்போகிறேன்" படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதிலும் கிக்பாக்ஸிங் நகுல் செம கிளாஸூங்கோ!

 



சாந்தினி, அவனி மோடி என இரண்டு நாயகியர். இருவரில் சாந்தினி ஹோம்லி, பேமிலி என்றால், அவனி மோடி கிளாமர் ப்ளேவர்... வாவ்., நடிப்பிலும் என்னமாய் மிரட்டுகிறார்கள் அம்மணிகள். சாந்தினி, அவனி மோடி மாதிரியே முஸ்லிம் பெண் தோழியாக வரும் ஜானகியும் நடிப்பில் நம்மை வருகிறார்.

நகுலின் முஸ்லிம் நண்பராக வரும் நிஷாந்த், அடியாள் கூட்ட தலைவராக வரும் "தூங்காநகரம்" இயக்குநர் கெளரவ், சீதா, ஆர்த்தி, கஸ்தூரி, வனிதா விஜயகுமார், செந்தி, ஒருபாடலுக்கு ஆடும் ஸெரீன் கான், நகுலின் அப்பாவாக வரும் மாஜி ஹீரோ சுரேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி, கிரேன், மனோகர், "மூணாறு ரமேஷ் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


 இவர்கள் எல்லோரையும் காட்டிலும் சிறப்பு தோற்றத்தில் பி.டி.கத்திரிக்காய் உள்ளிட்ட விஞ்ஞானத்தின் விநோதங்களையும், அதன் தீமைகளையும் பேசும் மணிவண்ணனின் சிறப்பு தோற்றமும், அவரது அநியாய மரணம் மற்றும் வில்லாதி வில்லனாக வரும் ஏ.வெங்கடேஷின் கெட்ட-அப்பும் பிரமாதம், பிரமாண்டம்!

 



ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, வெற்றிமாறனின் வசனம், ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஜோ‌தி பிரகாஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், புதியவர் பிருத்விராஜ் குமாரின் எழுத்து இயக்கத்திற்கு வலு சேர்த்துள்ளன.

வழக்கமான தமிழ் சினிமா மாதிரியே இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி எனும் பெயரில் படம் பிடித்து காட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒருசில் சின்ன சின்ன போராட்டங்கள் மூலம், இலங்கை தமிழர் விவகாரத்தையும், பி.டி.கத்திரிக்காய், வேலி கருவேல் மரங்களின் விஞ்ஞான விபரீதத்தையும் இந்தப்படம் அளவிற்கு எந்தப்படமும் அழகாக அறிவுறுத்தியதில்லை... எனும் காரணங்களுக்காகவே "நான் ராஜாவாகப்போகிறேன்" சோடை போகவில்லை! நல்விலை போகும் எனலாம்

மொத்தத்தில், "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படத்திற்கு தமிழ் ரசிக மந்திரிகள் ஆதரவு நிச்சயம்! நிதர்சனம் எனலாம்!!


நன்றி - தினமலர்

சாந்தினிக்கு கண்ணு பெருசு , மத்ததெல்லாம் சின்னது , அவனி மோடிக்கு கண்ணு ரொம்ப சின்னது ,  மத்ததெல்லாம் பெருசு , இதுதான் வாழ்க்கை 

 
 சாந்தினி , அவனி மோடி

விஜயகாந்த் - திருமாவளவன் - திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பா.ம.க.வினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.

இந்த வன்முறைக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், மரக்காணம் வன்முறை தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்ததோடு, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே, நேற்று திடீரென கட்சியின் செயற்குழுவை கூட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை இன்று பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது பண்ருட்டி ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன் பொருளாளர் முகம்மது யூசுப், மற்றும் வன்னிஅரசு
ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பில், மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் ஒரு அமைதி சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ற்காக எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்தை சந்தி்த்ததாக  கூறினார்.

படப் பிரச்னை தொடர்பாக ஏற்கனவே ராமதாசுக்கும், விஜயகாந்த்தும் மோதல் ஏற்பட்டது. இதனால் பா.ம.க.வுக்கு எதிராக விஜயகாந்த் செயல்பட்டு வந்தார். இதுவரை அக்கட்சியுடன் மோதல் போக்கைத்தான் விஜயகாந்த் கடைபிடித்து வருகிறார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக அடிபட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் அண்மையில், எதிர்பாராத விதமாக கருணாநிதி- விஜயகாந்த் சந்திப்பு நடந்தது. கருணாநிதியும், விஜயகாந்துக்கும், தே.மு.தி.க.வுக்கும் ஆதரவாகவே பேசி வருகிறார்.


ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொல் திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்கதான் முடியும். இதனால் தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ,  மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் சந்தித்துக் கொண்டதாக கூறப்பட்டாலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி - விகடன்