Wednesday, March 27, 2013

ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ சோதனை -புலனாய்வு - துலங்கும் மர்மங்கள் - ஜூ வி


கார் மட்டும்தான் காரணமா?

ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ...

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாவது விதி, அடிக்கடி நிரூபிக்கப்படுவது அரசியலில்தான். தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த புதன்கிழமை, 'சோனியாவின் பேச்சு திருப்தி அளிக்கவில்லை. காங்கிரஸுடன் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை’ என்றார். இதை​யடுத்து, தி.மு.க. அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களைக் சமர்ப்பித்த 24 மணி நேரத்துக்குள் ஸ்டாலின் வீட்டுக்குள் நுழைந்தது சி.பி.ஐ. 

கருணாநிதியின் குடும்​பத்துக்கு வெளிநாட்டுக் கார்களால் எப்போ​துமே வில்லங்கம்தான். கடந்த 2010-ம் ஆண்டு மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், பல கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை அன்பளிப்பாகப் பெற்றார் என்ற சர்ச்சையில் சிக்கினார். மீண்டும், 2011-ம் ஆண்டு மஸராட்டி வகை காரை சபரீசனும் உதயநிதி ஸ்டாலினும் முறைகேடான வழியில் இறக்குமதிசெய்து பயன்படுத்துவதாக ஒரு பிரச்னை கிளம்பியது. இப்போதும் வெளிநாட்டு கார் விவகாரத்தை வைத்தே சி.பி.ஐ-யும் ஸ்டாலினின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது.

இதன் உண்மையான விவரங்களை அறிய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 'இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கார்கள் சுற்றுகின்றன. முறைகேடான வழியில் இறக்குமதி செய்யப்பட்டு அவை இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி அந்தக் கார்களைப் பறிமுதல்செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதையடுத்து, வரி இழப்பைத் தடுக்கும் பொருட்டு இதுபோன்ற கார்களைப் பயன்படுத்துபவர்கள் யார்? அவர்கள் யார் மூலம் இவற்றை வாங்கினர் என்று விசாரிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆறு மாத காலமாக இந்தியாவில் உள்ள முக்கியத் தலைநகரங்கள் அனைத்திலும் இந்த வேலை நடைபெற்றது.


தமிழகத்தில் நாங்கள் நடத்திய சோதனையில், இதுபோல் 30-க்கும் மேற்பட்ட கார்கள் இறக்கு​மதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. அதில் பல கார்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உறவினர்கள், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி வந்தனர். கருணாநிதி தன்னுடைய பயணத்துக்கு 'லம்போகினி’, 'ஆஸ்டன் மார்ட்டின்’, 'பென்ஸ்’ ஆகிய கார்களைப் பயன்படுத்துகிறார். மு.க.ஸ்டாலின் 'ரேஞ்ச் ரோவர்’ என்ற ஸ்போர்ட்ஸ் மாடல் காரைப் பயன்படுத்தி வருகிறார். அவருடைய மருமகன் சபரீசன் 'பிஎம்டபிள்யூ மற்றும்  மஸராட்டி கார்களை பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது

. எல்லாவற்றையும்விட விலை உயர்ந்தது, மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் ஹம்மர் கார். இதனால்தான் அவர்கள் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டுக்குச் சென்றுள்ளனர். இந்த சோதனை இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடைபெறுகிறது'' என்றவர்,


''வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி​செய்து பயன்படுத்தும்போது, அதற்கு இரண்டு வகையில் வரி விதிக்கப்​படுகிறது. புதிய கார்களை வாங்கிப் பயன்படுத்தினால் அதற்கு ஒரு வரியும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்​களை வாங்குவதற்கு ஒரு வகை வரியும் விதிக்கப்படுகிறது. ஆனால், இங்குள்​ளவர்கள் புதிய கார்களின் ஆவணங்களைத் திருத்திவிட்டு, பழைய கார்கள் என்று வரி ஏய்ப்பு செய்வார்கள்.


 தமிழகத்தில் இப்படிப் போலியாக ஆவணங்களைத் திருத்தி, கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற காரியங்களுக்கு உடந்தையாக இருந்த ஒருவர், முன்பு விமானநிலையத்தில் மக்கள் தொடர்பாளராக இருந்தவர். அதன்பிறகு, வருவாய் புலனாய்வுத் துறை மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். அமலாக்கத் துறை ஆணையராக இருந்த இன்னொருவரின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும். இந்தச் சோதனையை அடுத்து, மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்யப்படும். வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்'' என்றனர்.

ஆனால், ரெய்டு நடத்திய சி.பி.ஐ., ஸ்டாலின் குடும்பத்தினருக்கு உள்ள தொழில் தொடர்புகள், சொத்துக்கள் பற்றிய பல முக்கிய ஆவணங்களையும் அள்ளிச்சென்றதாகச் சொல்கிறார்கள்.  

சி.பி.ஐ. ரெய்டு நடந்தபோது, காலையில் நடைப்பயிற்சிக்காக முன்னாள் மேயர் மா.சுப்பிர​மணியனுடன் ஸ்டாலின் வெளியில் சென்றிருந்தார். தகவல் தெரிந்த தி.மு.க. தொண்டர்கள் ஸ்டாலினின் வீட்டுக்கு முன் திரண்டனர். அவர்கள் வெளியில் இருந்தபடியே 'சி.பி.ஐ. நாயே வெளியே போ’ என்றும் 'காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை ஒழிக’ என்றும் கோஷங்களை எழுப்பினர்.


அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஸ்டாலினைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து, 'இதைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கிறீர்களா?’ என்றனர்.

''அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே. அப்புறம் என்ன? இது பழிவாங்கும் நடவடிக்கை​தான்'' என்றார் கோபத்துடன்.

தகவல் அறிந்து துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்தனர். ரெய்டு, அதிகாலையில் நடந்ததால், அனைவரையும் உடற்பயிற்சி ஆடைகளில் பார்க்க முடிந்தது. செல்வியும் உடற்பயிற்சி ஆடையிலேயே வந்திருந்தார். இரண்டரை மணி நேர ரெய்டை முடித்துக் கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் வெளியே வந்தபோது, ஏற்கெனவே கொதித்துப்போய் இருந்த தி.மு.க. தொண்டர்கள் கோஷம் எழுப்பியதுடன் அதிகாரிகளின் கார்களையும் தாக்கினர். மிகவும் ரகசியமாக வந்திருந்ததால், போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

சோதனை நடந்துகொண்டிருந்தபோதே, சி.பி.ஐ-யின் இந்தச் செயல்பாடுகளைக் கண்டித்து பி.ஜே.பி-யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை விட்டன. ஆச்சரியமளிக்கும் வகையில் ப.சிதம்பரமும் சி.பி.ஐ-யின் இந்தச் செயல்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று பேட்டி கொடுத்தார்.

சிறிது நேரத்தில், சி.பி.ஐ. தன் பங்குக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் ''33 கார்​களைப் பற்றி புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மூத்த வருவாய் புலனாய்வு அதிகாரி ஒருவர் மீதும் இறக்குமதியாளர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

காரில் ஆரம்பித்திருக்கிறார்கள். விளைவு, வேகமாகத்​தான் இருக்கும்.

ஜோ.ஸ்டாலின்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

thanx - vikatan 

 readers views

1. ஒழுங்காக வரியை கட்டி எடுத்தால், வருமான வழிமுறையை காட்டனும்... இப்ப மாட்டி கொண்டு, அடுத்தவன் மீது பழியை போட்டு தப்பித்து கொள்வார்கள்.... இந்த போலி பகட்டெல்லாம் ரொம்ப காலம் நிற்காதுங்க....

2. பழிவாங்கு நடவடிக்கையாகவே இருக்கட்டும். வரி ஏய்ப்பு செய்து வெளினாடு கார்களை வாங்குவது தவறுதானே. அதுவுமில்லாம் வெளினாட்டு கார்கள் வாங்கும் அளவுக்கு என்ன சம்பாத்தியம் ஸ்டாலினுக்கு? ஜெ வின் புடவை, செருப்புக்கு குதியாய் குதித்தவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

உங்ககிட்ட தான் கார் கம்பெனியையே வாங்கு அளவுக்கு பணம் இருக்கே,அப்புறம் எதுக்கு இந்த மோசடி வேலை?

3. ஒழுங்காகப் படித்துப் பட்டமும் பெற்று , சுயமாகத் தொழில் செய்தும் தன் வாழ்நாளில் ஒரு சராசரி இந்தியன் சட்டத்திற்கும் உட்பட்டு வரிகளை முறையாகச் செலுத்திய பின் ஒரு வீடோ அல்லது இரண்டு வீடுகளோ கூடவே ஒன்றிரண்டு கார்களோ தான் வாங்க முடியும் ! ஆனால் இந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த குஞ்சு குளுவான்கள் கூட தலைக்கு ஆயிரம் கோடிச் சொத்து, பங்களா , விலைஉயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் , வருடத்தில் 45 அல்லது 60 நாள் வெளினாட்டு உல்லாசப் பயணங்கள் , சின்னத் தலைவலிக்குக் கூட லண்டனில் சிகித்சை , பத்து லக்ஷம் சதுர அடிக்குக் குறையாமல் அம்பா கிம்பா போன்ற லம்பா மால்கள் , ஹோட்டல்கள் , உட்கார்ந்தது தின்றழித்தால் ஒரு நூறு தலை முறைக்கும் சொத்துக்கள் ! அப்பப்பா ! இந்தத் திருட்டுக் கும்பலைக் கண்டிக்கத் தவறினால் கூட பரவாயில்லை ! ஆனால் இவர்கள் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு சுய மரியாதையையும் விட்டு விட்டு இன்னமும் அலையும் கழகக் கண்மணிகளை நினைத்தால் தான் தமிழ் நாட்டின் தலைவிதியை நினைத்துக் கவலையாக இருக்கிறது !

4. இன்னுமா இவங்களை நம்புறீங்க சும்மா இருங்க இப்பவே கண்ணை கட்டுது இனிதான் இருக்கு செம காமெடி திராவிட இனமே இனிமே உனக்கு நல்ல நேரம்தான்



Tuesday, March 26, 2013

அமீர் vs சென்சார் போர்டு - குற்றம் நடந்தது என்ன?

திருந்துங்கள் அமீர்... அப்புறம் திருத்தலாம்!

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் இயக்குநர் அமீர் தணிக்கைத் துறை மீது பாய்ந்ததுதான்."திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சென்சார் போர்டு தற்போது அறிவிக்கப்பட்டாத மாபியா கும்பல் போல செயல்பட்டு வருகிறது. "யு' சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால், அதற்குத் தனியாக கட்டணம், "யு/ஏ' அல்லது "யு'சான்றிதழ் வழங்கவேண்டுமென்றால் அதற்கு தனியாக கட்டணம் என தரம் பிரித்து பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது.ஆதிபகவன்' படத்துக்கு "ஏ' சான்றுக்கு பதில் "யு/ஏ' அல்லது "யு' சான்று தர என்னிடம் பணம் கேட்டு தரகர்களை அனுப்பினார்கள்.


நான் பணம் தரத் தயாராக இல்லை. அதனால் இழுத்தடித்து என் படத்துக்கு "ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். தணிக்கை துறையில் உள்ளவர்கள், ஆட்சேபணைக்குரிய காட்சி என தரம் பிரிப்பது பணத்தின் அடிப்படையில்தான். இப்படத்தை தணிக்கை செய்வதற்காக நான் கடந்த மாதம் 5ஆம் தேதியே சென்சார் போர்டிடம் படத்தைக் கொடுத்துவிட்டேன். அவர்கள் 12ஆம் தேதிதான் படத்தைப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, அப்போதே 40 காட்சிகளை வெட்டவேண்டும், சில இடங்களில் வசனங்களை நீக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

ஏன் என்று கேட்டதற்கு கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. பாடல் காட்சியில் மதுபாட்டில்கள் இருக்கின்றன. எனவே இதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். "ஏ' சான்றுதான் கொடுப்போம் என்றார்கள். ஆனால், காட்சிகளை வெட்டிவிட்டு, வசன உச்சரிப்பை நீக்கிய பிறகும் ஏன் "ஏ' சான்றிதழ் கொடுக்கிறீர்கள் என்று கேட்டால், காட்சிகளை நீக்கினாலும், வசனங்களை நீக்கினாலும் "ஏ' சான்றுதான் கொடுப்போம் என்று சொன்னார்கள். மும்பையில் தணிக்கை செய்திருந்தால், படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டியது இருந்திருக்காது.

 மேலும், வசனங்களை நீக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. ஆனால், இங்கே இப்பொழுது சூழ்நிலை சரியில்லை. எனவே, காட்சிகளை நீக்கினாலும், வசனங்களை நீக்கினாலும், "ஏ' சான்றுதான் கொடுக்கமுடியும் என்றனர். இப்போதுதான் "விஸ்வரூபம்' படம் பிரச்னையிலிருந்து மீண்டு வெளியாகியிருக்கிறது. அதனால், இந்த பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன். மலேசியாவிலும் இப்படத்தைத் தடுக்க சென்சார் முயற்சி செய்தது. இப்படத்தை திட்டமிட்டு தடுக்க, சென்சார் போர்ட்டுக்கு ஏன் இத்தனை அக்கறை என்று புரியவில்லை. சென்சார் போர்டு திட்டமிட்டு செய்கிறதா? இதற்குப் பின்னால் ஏதாவது மர்மம் இருக்கிறதா?


நான் இயக்குநர் சங்கத்தின் செயலாளராக இருந்திருக்கிறேன். தற்போது சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். அப்படியிருந்தும் இந்த பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல், விட்டுவிட்டேன். படம் வெளியாகி பல நாள்கள் ஆகிவிட்டது. தமிழ்நாடு முழுவதும் எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். இதில் "ஏ' சான்று தரும் அளவுக்கு என்ன இருக்கிறது? முத்தக்காட்சி இருக்கிறதா? ஆடை அவிழ்ப்பு காட்சி இருக்கிறதா? கட்டிப்பிடித்து உருளுவதுபோல் காட்சி இருக்கிறதா? யாராவது யாரையாவது கற்பழிக்கிறார்களா?


ஒன்றுமே இல்லையே...பணம் கொடுத்து சான்று வாங்க வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. இப்படிப் பணம் கொடுத்து சான்று வாங்கினால், யாரும் படமெடுக்க முடியாது. சென்சார் போர்டு இதற்கு விளக்கம் அளித்தே தீரவேண்டும். நான் சொன்ன கருத்துக்கு மறுப்பிருந்தால் தணிக்கை வாரியம் என்மீது நேரடியாக வழக்கு தொடுக்கட்டும்' இதுதான் இயக்குநர் அமீர் சென்சார் போர்ட் பற்றி பேசிய பேச்சு. இதனைத் தொடர்ந்து, மத்திய தணிக்கை குழு உறுப்பினர்களை இயக்குநர் அமீர் மிரட்டுவதாகவும், அவதூராக பேசி வருவதாகவும் மத்திய தணிக்கை குழு உறுப்பினர் அமிர்தராஜா போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


 அமிர்தராஜா கூறுவது, கடந்த 5ம் தேதி, "ஆதிபகவன்' திரைப்படத்தை அமீர் தணிக்கை செய்வதற்கு சமர்ப்பித்தாகவும், தணிக்கை செய்தபோது அதில் அதிகமாக ஆபாச காட்சிகள் இருந்ததால் படத்துக்கு "ஏ' சான்றிதழ் வழங்க முடிவெடுத்ததாகவும், அமீர் அதற்கு "அந்த காட்சிகள் இருந்தால்தான் எனது திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் என்றும், "யு' சான்றிதழ் தர உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நான் தரத் தயார்' என்றும் பேசினாராம். அவரைக் கண்டித்து உறுப்பினர்கள் பணம் வாங்க மறுத்து படத்துக்கு "ஏ' சான்றிதழ் வழங்கினார்களாம்


.அதன் பின்னர்தான், இயக்குநர் அமீர் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களை கேவலமாக திட்டியும் மிரட்டியும் வந்தாராம். தற்போது திரைப்பட தணிக்கை குழு ஒரு மாஃபியா கும்பல் போல் செயல்படுகிறது என்பது போன்ற தவறான செய்தியை அறிக்கையாக தெரிவித்துள்ளார்.இதனால் மத்திய தணிக்கை குழுவின் நற்பெயரையும் புகழையும் களங்கப்படுத்தி என்னை போன்ற மத்திய தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு தீராத மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியதோடு, அவரிடமிருந்து எங்களுக்கு மிரட்டலும் வந்துள்ளதால் தகுந்த நடவடிக்கையும், எங்களுக்குப் பாதுகாப்பும் அளிக்க வேண்டும்' என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார் அமிர்தராஜா.இவை இருதரப்பிலும் நடந்த சம்பவங்கள்.


 இனி விஷயத்துக்கு வருவோம்.உலக அளவில் படம் எடுத்தவர்களை விடுங்கள், இந்திய அளவில் "செம்மீன்' படம் எடுத்த இயக்குநரோ, "பதேர் பாஞ்சாலி' எடுத்த இயக்குநரோகூட "தணிக்கை துறை எங்களை வஞ்சித்துவிட்டது' என்று குற்றச்சாட்டு சொன்னதில்லை. வெட்டு, குத்து, கொலை, ரத்தம், கூட்டுக் கற்பழிப்பு இவற்றோடு, போக்கிரிகளை நாயகனாக்கி உலவ விட்ட இயக்குநர் அமீர்தான் இப்படி பேட்டியளிக்கிறார்.


இவருடைய "பருத்திவீரன்' இறுதிக் காட்சிகளை வீட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாது. கேட்டால் உலகப்படம் உங்களுக்குப் புரியாது என்பார். மனிதர்களைக் கெட்டவர்களாகவும், காட்டு மிராண்டிகளாகவும் காட்டிய "பருத்திவீரன்' படமும் சரி, கெட்ட மனிதர்களை நாயகர்களாக்கிய "ஆதி பகவன்' படமும் சரி உலகப்படம் ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட படங்களை எடுத்த ஒருவர், தணிக்கை துறையைக் குற்றச்சாட்டுக்குள்ளாக்குவதும், மாபிஃயா கும்பல் என்று கூறுவதும் எந்த விதத்தில் நியாயம்?தணிக்கைத் துறை சரியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அதைத் திருத்துவது இவர் வேலையா என்ன? "ஆம் நான் திரைத்துறையில் இருக்கிறேன். நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.


அதனால் குற்றம் சாட்டுகிறேன். இதிலென்ன தவறு?' என்று இயக்குநர் அமீர் கேட்கலாம். நியாயம்தான். ஆனால் அதற்கு ஒரு வழிமுறையில்லையா?இப்படி வரைமுறையற்றுப் பேசும் இயக்குநர் என்ன.. "புர்ச்சி' படமா எடுத்துவிட்டார்? இந்திய பிரஜையாக இருந்து, அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, திரைப்பட இயக்குநராக இருக்கும் அமீர், இந்திய தணிக்கை துறையைப் பற்றிப் பேசும் போது கொஞ்சமாவது நாகரிகம் காத்திருக்கவேண்டாமா? மாஃபியா கும்பல்களைப் பற்றியே படம் எடுப்பதால், அமீருக்கு பார்க்கிற எல்லோரும் மாஃபியாவாக தெரிகிறார்கள் போலும்? தன்னை மிகப் பெரிய பொறுப்பில் இருப்பதாகக் கூறும் அமீர், வார்த்தையிலும் அதை வடித்தெடுக்க வேண்டாமா?


 மகாபாரதத்தில் ஒரு இடம் வரும். துரியோதனன் கெட்டவன் என்பதால், அவனுக்கு பார்த்தெல்லாம் கெட்டதாகத் தெரிந்தததாம். தர்மன் நல்லவன் என்பதால், அவனுக்கு பார்த்ததெல்லாம் நல்லதாகத் தெரிந்ததாம். "ஆதி பகவன்' படத்தில் சும்மா, சும்மா வெட்டிச் சாய்க்கிறார்கள். சராசரி படம் போல பெண்கள் போதைப் பொருளாக காட்சிப்படுத்தப்படுகிறார்கள். மொள்ளமாறிகளையும் முடிச்சவுக்கிகளையும் நாயகனாக்கியுள்ளார்.


இந்தப் படத்துக்கு "ஏ' கொடுத்தால் என்ன? "ஓ' கொடுத்தால் என்ன?இதில், "ஆதி பகவன் சராசரி படம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன், இங்கு படைப்பாளிகளுக்கும் பார்வையாளனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. படைப்பாளிகளுக்கும் விமர்சர்களுக்கும் தான் பிரச்னை. ரசிகர்கள் தியேட்டரில் படத்தை ரசித்துப் பார்க்கிறார்கள். ஆனால் விமர்சகர்கள் தவறாகப் பேசுகிறார்கள்' என்று வேறு ஒரு குற்றச்சாட்டையும் கூறியுள்ளார் அமீர். அதுசரி, விமர்சகர்கள் என்ன அமீர் வீட்டு பணியாளர்களா என்ன? அமீர் சொல்படி இனி விமர்சகர்கள் எல்லா படத்தையும் நல்லவிதமாக சொல்லிவிடவேண்டியதுதான். விமர்சகர்களையும் கண்மண் தெரியாமல் ரசிக்கும் ரசிகர்களாக்கிவிட்டால் விட்டால் குப்பை, கூளங்களைக்கூட நாளைக்கு நாயகர்களாக நடிக்க வைக்கலாம் பாருங்கள்?


அமீர் அவர்களே.. நீங்கள் ஒரு சினிமாகாரர். சினிமாவில் தப்புத்தப்பாக அரசியலைக் காட்சிப்படுத்துவதைப் போல, நிஜத்திலும் செய்யாதீர்கள். நீங்கள் தணிக்கைத் துறை பற்றிப் பேசுங்கள்... ஆனால் ஆரோக்யமாக! ஏற்கெனவே இங்கு நடக்கும் அரசியலால் நீங்கள் சார்ந்திருக்கும் சினிமா உலகமே தறிகெட்டுக்கிடக்கிறது. அந்த தறிகெட்டுப்போன உலகத்திலிருந்து நீங்கள் அரசியலுக்குச் செல்ல விரும்புகிறீர்களா? கண்டிப்பாக செல்லுங்கள்....அதற்கு முன் உங்கள் சினிமாவைச் சரிபடுத்துங்கள். அதற்கு முதலில் உங்களைச் சரிபடுத்திக்கொள்ளுங்கள்!
THANX - CINEMA EXPRESS

விஜய வருடம் - 12 ராசிபலன்கள்- பரிகாரம் PART 2 , PART 1

விஜய வருடம் - ராசிபலன்கள் PART 2


னதில் உதித்ததை மறைக்காமல் பேசுபவர் நீங்கள். உங்களது ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனியும் ராகுவும் முகாமிட்டிருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறக்கிறது. முடங்கிக் கிடந்த நீங்கள் விஸ்வரூபம் எடுப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வந்துசேரும். பிரபலமாவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

புறநகரில் வீடு-மனை வாங்கும் யோகம் உண்டாகும். நல்லவர்- கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள். வெளிநாடு- வெளி மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். தள்ளி நின்ற உறவுகள் தேடி வருவர். கடன்கள் அடைபடும் அளவுக்கு பணவரவு உண்டு. இளைய சகோதரர்கள் உதவுவர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.  

உங்களது 10-வது ராசியில் விஜய வருடம் பிறப்பதால், உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 27.5.13 வரை குரு 10-ஆம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். ஆபரணங்களை இரவல் தருவதோ, வாங்குவதோ வேண்டாம். வீண்பழி வந்து சேரும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களை திணிக்க வேண்டாம்.

28.5.13 முதல் வருடம் முடியும் வரை, குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள், இனி பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். மகளின் கல்யாணம் சிறப்பாக நடந்தேறும். வீண் பழி, வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். வீடு மராமத்து பணிகள் பூர்த்தியாகும். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் பதவிகள் தேடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.


ஐப்பசி மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் பாவ கிரகங் களுடன் சேர்ந்து பலவீனமடைவதால் விபத்து, ஏமாற்றம், மனஇறுக்கம், உடல் நலக்குறைவு வந்துபோகும். வருடம் முழுக்க கேது ராசிக்கு 9-ஆம் வீட்டிலேயே தொடர்வதால் செலவு அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்தில் சிக்கல்கள் எழலாம். தந்தையுடன் கருத்து மோதல், அவருக்கு கால் வலி வந்து செல்லும்.


வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளால் லாபம் பெருகும். சந்தை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். கார்த்திகை, தை, மாசி மாதங்களில் கடையை நவீனமாக்குவீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயம் உண்டு. புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர்.    


உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பளம், பதவி உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.  


கன்னிப்பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். திருமண முயற்சி கூடி வரும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பள்ளி மாற வேண்டியது இருக்கும்.  கலைஞர்கள் புது வாய்ப்புகளால் அதிகம் சம்பாதிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மேலிடம் கூர்ந்து கவனிக்கும். தொகுதியில் புகழ் கூடும்.


மொத்தத்தில் இந்த விஜய வருடம், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், திடீர் யோகங்களையும் வாரி வழங்குவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுவது விசேஷம். சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீபானக நரசிம்மரை வழிபட, சகலமும் நலமாகும்.


ன்னிக்கும் மனப்பக்குவம் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் விஜய வருடம் பிறக்கிறது. சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். செலவுகள் துரத்தினாலும் வருமானமும் உண்டு. வீடு வாங்கும் கனவு நனவாகும். குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று, அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள்.

27.5.13 வரை சுக - சப்தமாதிபதியான குரு 9-ஆம் வீட்டில் நிற்பதால், அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு குறையும். தாம்பத்தியம் இனிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊரில் மரியாதை கூடும்.

28.5.13 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டுக்கு வருவதால், அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கை சரிபார்த்து விட்டு, காசோலை வழங்கவும். மனைவியின் குற்றம் குறைகளைக் குத்திக்காட்ட வேண்டாம். தாயாருக்கு கை- கால் வலி, சிறு சிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வி.ஐ.பி-களைப் பகைக்க வேண்டாம்.

முக்கிய கிரகங்கள் 8-ஆம் வீட்டில் மறைந்திருக்கும்போது விஜய வருடம் பிறப்பதால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வந்துபோகும். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற நேரிடும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், பேசி சுமுகமாக முடிக்கப்பாருங்கள். 

 இந்த ஆண்டு முழுவதும் சனி 2-ல் அமர்ந்து, ஏழரைச்சனியின் ஒரு பகுதியான பாதச் சனியாக இருப்பதால், குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிருங்கள். பிள்ளைகளை அன்பால் திருத்துங்கள். கர்ப்பிணிகள் கவனமாக செயல்பட வேண்டும். கண், காது வலி வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகவும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

விஜய வருடம் முழுக்க ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் இருப்பதால், பேச்சில் கடுமை வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவில் தொலைதூர பயணமாக தனியே வாகனத்தில் செல்ல வேண்டாம்.


வியாபாரத்தில், அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும். தீர விசாரிக்காமல் முதலீடு செய்ய வேண்டாம். வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர் விலகுவார். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.


உத்தியோகத்தில், 28.5.13 முதல் குரு 10-ஆம் வீட்டில் அமர்வதால் வேலை அதிகரிக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. உங்களின் உரிமையையும், சலுகையையும் தக்கவைக்க வழக்குத் தொடுக்க வேண்டி வரும். கார்த்திகை, மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.  


கன்னிப்பெண்களுக்கு கனவுத் தொல்லை உண்டு. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, பெற்றோரை கலந்து ஆலோசியுங்கள். புதிய நட்பு மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால், சாதிக்கலாம். கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். அரசியல்வாதிகள், வீண் பேச்சைத் தவிர்க்கவும். ஜெயிக்கும் அணியில் இடம்பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம், அலைச்சல் தந்தாலும், அனுபவத்தின் மூலம் வளர்ச்சியைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி நாட்களில், அருகிலிருக்கும் சிவாலயத்துக்குச் சென்று ஸ்ரீபைரவ மூர்த்திக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டு வாருங்கள். வினைகள் யாவும் தீரும்.


னித நேயம் மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், விஜய வருடம் பிறக்கிறது. எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் உதவியுடன் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.


விஜய வருடம் உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் பிறப்பதால், எளிதாக முடிய வேண்டிய விஷயங்களும் போராட்டத் துக்கு பிறகே முடிவடையும். செலவுகள் தொடரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் முக்கிய கிரகங்கள் அமர்ந்திருக்கும்போது விஜய வருடம் பிறப்பதால், உங்களின் பலம்-பலவீனம் அறிந்து செயல்படுங்கள்.  மனைவியுடன் பனிப்போர் வந்து செல்லும். அரசு காரியங்கள் தாமதமாகும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் எழும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.


27.5.13 வரை உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் குரு இருப்பதால், வீண் கவலையும், நம்பிக்கையின்மையும், அலைச்சலும் வந்து போகும். மறைமுக எதிரிகள் முளைப்பர். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களது நட்பை இழக்க நேரிடும். 28.5.13 முதல் உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடிவரும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் அமையும்.



21.5.13 முதல் 6.7.13 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்பு, ஏமாற்றங்கள் வந்து நீங்கும். விஜய வருடம் முழுக்க, உங்களின் பிரபல யோகாதிபதியான சனி ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சிலர், புது மனை புகுவீர்கள். எனினும் ஜென்மச் சனியாக தொடர்வதால், உடல் நலம் பாதிக்கும். உணவில் கவனம் தேவை. வழக்கை நினைத்து கவலை கொள்வீர்கள். சொத்துப் பிரச்னையைப் பேசித் தீர்க்கப் பாருங்கள். விஜய வருடம் முடியும் வரையிலும் உங்கள் ராசிக்கு உள்ளேயே ராகுவும், 7-ஆம் வீட்டில் கேதுவும் இருப்பதால் முன்கோபம், சஞ்சலம், ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். இரும்பு, நார், சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள காய்- கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தம்பதிக்குள் ஈகோ பிரச்னைகள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.


வியாபாரத்தில் ஆடி, ஆவணி மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். மார்கழி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் அயல்நாட்டு தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பு உண்டு. கொடுக்கல் - வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.


உத்தியோகத்தில் 7.7.13 முதல் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.


கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட கல்யாணம் இனி கூடிவரும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு தேடி வரும். அரசியல்வாதிகள், கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம், ஆனி மாதம் வரை கொஞ்சம் கஷ்டங்களைத் தந்தாலும், அதன் பிறகு உங்களின் அந்தஸ்தை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: சிவவழிபாடு சிந்தை மகிழ்விக்கும். பிரதோஷ காலங்களில், வில்வம் சார்த்தி விரிசடைக் கடவுளை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் முன்னேற வழி பிறக்கும்.


காரியத்தில் கண்ணானவர் நீங்கள். இந்த விஜய வருடம் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மதிப்பு உயரும். எதிர்பாராத பண வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.


உங்கள் ராசிநாதன் செவ்வாயும், உங்களின் ஜீவனாதிபதி சூரியனும் வலுவாக 6-ல் நிற்கும்போது, விஜய வருடம் பிறப்பதால், அமைதியாக சாதிப்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வருடம் பிறக்கும்போது சுக்கிரனும் உங்கள் ராசிக்கு 6-ல் மறைந்து கிடப்பதால் வாகன விபத்துகள், பணப் பற்றாக்குறை, இருமல், கழுத்து வலி, மாதவிடாய்க் கோளாறு வந்துபோகும். மனைவிவழி உறவினருடன் மனக்கசப்பு வரும். ஆனால், உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் விஜய வருடம் பிறப்பதால் குடும்ப ஒற்றுமை பாதிக்காது 27.5.13 வரை உங்களின் தன-பூர்வ புண்ணியாதிபதியான குரு 7-வது வீட்டிலேயே தொடர்வதால், அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது, இருவருக்கும் இடையே எழும் சிறு சிறு பிரச்னைகளை பெரிதுபடுத்த வேண்டாம். சிலருக்கு மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை உங்களுடைய ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள்.

 

28.5.13 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 8-ல் சென்று குரு மறைவதால் வீண் அலைச்சல், கவலைகள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக நடத்துகொள்ளுங்கள். கர்ப்பிணிகள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும்.
விஜய வருடம் முழுக்க சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதாலும், ராகு 12-ல் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்துபோகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். இளைய சகோதரர்கள் உங்களை தவறாகப் புரிந்துகொள்வர். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

விஜய வருடம் முழுக்க கேது 6-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், வி.ஐ.பி-களுக்கு நெருக்கமாவீர்கள். ஏமாற்றுக் காரர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  

வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். சித்திரை, வைகாசியில் சிலர் புதிய துறையில் கால் பதிப்பார்கள். மார்கழி, தை மாதங்களில் புது கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டு. பங்குதாரர்களிடம் கனிவு தேவை. புரோக்கரேஜ், சினிமா, சிமெண்ட், பெட்ரோ- கெமிக்கல், மருந்து மற்றும் மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.


உத்தியோகத்தில், உங்கள் மீது விமர்சனங்களும் அவதூறுகளும் எழும். புதிய அதிகாரிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். எனினும் சித்திரை, வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் அதிரடி முன்னேற்றம் உண்டு. பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும்.

கன்னிப் பெண்களே, பெற்றோரின் கனவை நனவாக்க முயற்சியுங்கள். மாணவர்கள் கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கலைத் துறையினர், விமர்சனங்கள் எழுந்தாலும் திறமையால் சாதிப்பர். அரசியல்வாதிகளே, உங்களின் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம்; கவனம் தேவை. போராட்டங்களுக்கான தலைமை பொறுப்பு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த விஜய வருடம் தொலைநோக்கு சிந்தனையால் உங்களை வெற்றிபெற வைக்கும்.

பரிகாரம்: சரபேஸ்வரர் வழிபாடு சங்கடங்களை அகற்றும்.  தினமும் சிவபுராணம் படியுங்கள். மனக்குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவீர்கள்.


குதி அறிந்து பழகுபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகுவும் சனியும் பலம்பெற்று அமர்ந்திருக்கும்போது, விஜய வருடம் பிறக்கிறது. செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பெரிய பதவிகள் தேடி வரும். வீட்டுப் பணி முழுமை பெறும். சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசு விஷயங்களும் நல்லவிதத்தில் முடிவடையும். கடன் தீரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.


புகழ், கௌரவம் வளரும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் நிற்கும்போது விஜய வருடம் பிறப்பதால், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துபோகும். அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகவும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.  


7.5.13 வரை குரு 6-ஆம் வீட்டிலேயே மறைந்திருப்பதால், குடும்பத்தாரை அனுசரித்துப் போகவும். எவரையும் எவரிடமும் பரிந்துரைக்க வேண்டாம். வெளியூர் செல்லும்போது கேஸ் சிலிண்டர், மின்சார சாதனங்களை ஒருமுறை சரிபார்த்த பிறகு வெளியே புறப்படுங்கள். தங்க நகைகளை இரவல் தருவதோ வாங்குவதோ வேண்டாம். ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.


28.5.13 முதல் வருடம் முடியும் வரை, உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குரு 7-ஆம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் கூடிவரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். புறநகரில் மனை வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். அவர் வழி சொத்துக்களைப் பெறுவதில் தடைகள் நீங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.


19.8.13 முதல் 10.10.13 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் பலவீனம் அடைவதால், இந்த காலகட்டத்தில் பிள்ளைகளால் அலைச்சல், பண விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்து நீங்கும். விஜய வருடம் முழுக்க கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிலேயே நீடிப்பதால், மன இறுக்கம் வந்து நீங்கும். மகள் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். மகனின் படிப்பு, உத்தியோகத்துக் காக சிலரது சிபாரிசை நாடுவீர்கள். கர்ப்பிணிகள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம்; படிகளில் ஏறும்போது கவனம் தேவை. பூர்வீகச் சொத்து பாகப் பிரிவினையில் மனக் கசப்பு வந்து நீங்கும்.


வியாபாரம் தழைக்கும். வைகாசி, ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தால், உங்கள் நிறுவனம் புகழ் பெறும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெகுலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.


கன்னிப் பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். மாணவர்களின் பொது அறிவுத் திறன் வளரும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடர்வீர்கள்.


அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை மேலிடம் ஏற்கும். மாநில அளவில் பெரிய பதவியும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வருமானம் உயர வழி பிறக்கும். மூத்த கலைஞர்கள் சிலரிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.


மொத்தத்தில் இந்த விஜய வருடம் உங்கள் நீண்டகால கனவுகளை நனவாக்குவதுடன், உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: ஞாயிறுதோறும் சூரிய ஸ்தோத்திரங்களைச் சொல்லி தியானியுங்கள். சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள், நினைத்தது யாவும் தடையின்றி நடந்தேறும்.


னசாட்சிக்கு மதிப்பு தருபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது, விஜய வருடம் பிறக்கிறது. வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வருமானம் உயரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து, அதற்கேற்ப செயல்படத் துவங்குவீர்கள்.

27.5.13 வரை உங்களின் சேவகாதிபதியும்- விரயாதிபதி யுமான குரு 5-ஆம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதிப்பீர்கள். மகனின் அலட்சியப் போக்கு நீங்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

 வாகன வசதி பெருகும். 28.5.13 முதல் விஜய  வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைகிறார். அதுமுதல் செலவுகள், அலைச்சல், எதிர்ப்புகள் வந்து நீங்கும். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள், தகுந்த ஆதாரம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசு வரிகளை தாமதமின்றி செலுத்துங்கள். சிலர், உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை இழக்க நேரிடும்.      


விஜய வருடம் முழுக்க உங்கள் ராசிநாதன் சனி 10-ஆம் வீட்டில் உச்சம் பெற்று தொடர்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். எனினும் வேலைச்சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்து போகும். மேலதிகாரி உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும்.


விஜய வருடம் முழுக்க ராகு 10-ஆம் வீட்டிலும், கேது ராசிக்கு 5-ஆம் வீட்டிலும் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம், தடுமாற்றம் வந்து செல்லும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய நேரிடலாம். பூர்வீகச் சொத்தை பெறுவதில் பிரச்னைகள் எழலாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள்.


புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 30.11.13 முதல் விஜய வருடம் முடியும் வரை, உங்கள் ராசிக்கு 9-ல் செவ்வாய் தொடர்வதால், இந்த காலகட்டத்தில் சேமிப்புகள் கரையும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். தந்தையின் உடல் நிலை பாதிக்கும். சகோதரர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.


வியாபாரத்தில், நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.  வைகாசி மாதத்தின் முற்பகுதி வரை பற்று-வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். ஆனி மாதம் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். புது முதலீடுகள் குறித்து நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசிப்பீர்கள். ஏற்றமதி - இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுவத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும்.


உத்தியோகத்தில், நீங்கள் பொறுப்பாக நடந்தாலும், மேலதிகாரி குறை கூறிக்கொண்டிருப்பார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியது வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் படித்துப் பாருங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.


கன்னிப்பெண்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவர். வெளி மாநிலத்தில் வேலை அமையும். மாணவர்களுக்கு, விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். கலைத் துறையினர் பிரபலம் ஆவார்கள். அரசியல்வாதிகள், தலைமையுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். கௌரவப் பதவி உண்டு.


மொத்தத்தில் இந்த விஜய வருடம் பிரச்னைகளை தந்தாலும், பெரிய மனிதர்களின் நட்பால் உங்களை சாதிக்கவைக்கும்.


பரிகாரம்: அனுதினமும் அனந்தனை வழிபடுங்கள்; ஆனந்தம் பெருகும். ஸ்ரீரங்கத்துக்குச் சென்று திருவரங்கனை வழிபட்டு வாருங்கள். இல்லத்தில் சுபிட்சம் பெருகும்.


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து வாழ்பவர் நீங்கள். முக்கிய கிரகங்கள் 3-ஆம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறக்கிறது. உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். நினைத்த காரியங்கள் பலிதமாகும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

உங்களின் ரசனைக்கு ஏற்ப வீடு-வாகனம் அமையும். அரசு காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக முடியும். வழக்குகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வேலைக்கான முயற்சியில் இருந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும்.


27.5.13 வரை குரு ராசிக்கு 4-ஆம் வீட்டில் தொடர்வதால் வேலை அதிகரிக்கும். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்துபோகும். தாய்வழி சொத்துப் பிரச்னைகளைப் பேசி தீர்க்கப் பாருங்கள். வாகனத்தில் பயணிக்கும்போது அதீத கவனம் தேவை.  


28.5.13 முதல் வருடம் முடியும் வரை, 5-ஆம் வீட்டுக்கு குரு செல்வதால், உங்களது எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். அடுத்தடுத்து தொடரும் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம், மகனின் உத்தியோகம் நல்லவிதமாக அமையும். ஆடை- ஆபரணம் சேரும்.


விஜய வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்று, 9-ஆம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று, அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள்.


விஜய வருடம் முழுக்க ராகுவும் 9-ல் நீடிப்பதால், சேமிக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது, கடந்த கால இழப்புகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். வழக்குகளில், வழக்கறிஞரை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.

விஜய வருடம் முழுவதும், கேது 3-ல் தொடர்வதால், உங்களின் மனோபலம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மகான்களின் ஆசி கிட்டும். பழைய நண்பர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, வலிய வந்து உறவாடுவார்கள்.


30.11.13 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் 8-ல் தொடர்வதால், இந்த காலகட்டத்தில் நெருப்பு, மின் சாதனங்களைக் கையாளும்போது மிக கவனமுடன் செயல்படுங்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் வந்து சேரலாம். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்க்கவும்.

வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்து போட்டி யாளர்களைத் திணறவைப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆடி ஆகிய மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; லாபம் கூடும். ஆவணி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் புதிய பங்குதாரர்கள் அமைய வாய்ப்பு உண்டு. வி.ஐ.பி-களும் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆவார்கள். வாகன உதிரி பாகங்கள், ஷேர் மற்றும் ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.


உத்தியோகத்தில், இதுவரை நீங்கள் சந்தித்த அவமானங்கள் யாவும் நீங்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் சில முக்கியமான பொறுப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சம்பளம் உயரும்.


கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பார்கள். அரசியல்வாதிகள், வீண் சச்சரவுகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். கோஷ்டிப் பூசலிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். பெரிய பதவி கிடைக்கும். கன்னிப் பெண்கள், விடுபட்ட பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறுவார்கள். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் தனித் திறமைகளை வளர்த்துக்கொள்வர்.


மொத்தத்தில் இந்த விஜய வருடம், சிறு சிறு பிரச்னைகளைத் தந்தாலும், நீங்கள் தொட்டதை எல்லாம் துலங்க வைப்பதாக அமையும்.


 பரிகாரம்: தினமும் பாசுரங்கள் படித்து, பெருமாளை பூஜிப்பது சிறப்பு. திருச்சிக்கு அருகில் குணசீலத்தில் அருளும் பெருமாளுக்கு துளசி சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். நினைத்தது நடக்கும்.


யோசித்து செயல்படுபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் விஜய வருடம் பிறக்கிறது. எதிலும் போராடி வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். வீட்டு ப்ளான் அப்ரூவல் ஆகும். சுபநிகழ்ச்சிகளால் குடும்பம் களைகட்டும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.


27.5.13 வரை உங்கள் ராசிநாதன் குரு 3-ல் மறைந்திருப்பதால் சில காரியங்கள் இழுபறியாகும். 28.5.13 முதல் விஜய வருடம் முடியும் வரை, குரு உங்கள் ராசிக்கு 4-ல் அமர்வதால் வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்னைகள் எழுமோ என்று அஞ்சுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சொத்து வாங்கும்போது வில்லங்கம் சரிபார்க்கவும்.


விஜய வருடம் முழுக்க உங்கள் ராசிக்கு 2-ல் கேது தொடர்கிறார். ராகு 8-ல் நீடிக்கிறார். எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு வந்துசெல்லும். கறார் பேச்சால் பிறரது மனதைப் புண்படுத்துவீர்கள். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். கண் பரிசோதனை அவசியம். பல்- காது வலியும் வந்துபோகும். பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்தாரை அனுசரித்து செல்லவும். வாகன லைசன்ஸ், இன்சூரன்ஸை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பித்துக்கொள்ளுங்கள். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும்.  


விஜய வருடம் முழுக்க அஷ்டமத்துச் சனி தொடர்வதால், ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்துபோகும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும்.  மனைவி வழி உறவினருடன் கருத்துவேறுபாடுகள் வரக்கூடும். வழக்கில் இழுபறி நீடிக்கும். நீங்கள் நம்பிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பு உண்டு. அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. உப்பு, வாயு பதார்த்தங்களைத் தவிர்க்கவும். சொத்து வாங்கும்போது அவசரம் வேண்டாம். பணம், நகை களவு போக வாய்ப்ப்பு உண்டு. கூடாப் பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவும்.


வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் லாபம் கூடும். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. பங்குதாரர்களுடன் சச்சரவு வரக்கூடும். புது ஏஜென்ஸியை யோசித்து எடுங்கள். அவ்வப்போது சந்தை நிலவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கி, கடையை நவீனமாக்குவீர்கள். ஆவணி, மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று- வரவு உயரும்.  


உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். எந்த வேலையை முதலில் பார்ப்பது என்ற டென்ஷன் எழும். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அலுவலக ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவர் நிர்பந்தித்தாலும் நேர்வழியில் இருந்து தடம்புரள வேண்டாம். வைகாசி, ஆவணி, மார்கழி, தை மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகள் வரும். புது வேலையும் அமையும்.  

கன்னிப்பெண்கள் ஆசை வார்த்தைகளை நம்பவேண்டாம். தடைப்பட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். திருமணம் சற்று தாமதமாகி முடியும். மாணவர்கள் படிப்பில் அதீத கவனம் செலுத்த வேண்டும். பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அரசியல்வாதிகள் வீண் செலவுகள், விமர்சனத்தைத் தவிர்க்கவும். கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.  


மொத்தத்தில் இந்த விஜய வருடம், தைரியத்தைத் தந்து, பல வகையிலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

 பரிகாரம்: அனுதினமும் அபிராமி அந்தாதி பாடி, அம்பாளை துதியுங்கள். அருகில் இருக்கும் ஆலயங்களில், அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள். நல்லதே நடக்கும்.


 
விஜய என்பதற்கு வெற்றி, பயணம் என்று பல பொருள் உண்டு. நம் வாழ்க்கைப் பயணத்தில் அதிமுக்கியமான பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக இந்த விஜய வருடம் அமைய, இறையருளை வேண்டுவோம். அதற்கு உறுதுணை செய்யும் சில தெய்வ ஸ்லோகங்கள் உங்களுக்காக...
அதிகாலை எழுந்ததும் சொல்லவேண்டிய ஸ்லோகம்:


கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலிநாஸனம்
கார்க்கோடகன் என்ற நாகராஜனையும், தமயந்தியையும், நள சக்ரவர்த்தியையும், ராஜ ரிஷியான ரிதுபர்ண மகாராஜனையும் போற்றும் இந்த ஸ்லோகத்தை, தினமும் அதிகாலை எழுந்ததும் சொல்லி வர மனக்கவலைகள் நீங்கும். ஆரோக்கியமும் சந்தோஷமும் பெருகும்.


உணவருந்தும்போது சொல்லவேண்டிய ஸ்லோகம்:

அன்னம் த்ருஷ்ட்வா ப்ரணம்யாதௌ
ப்ராஞ்சலி: கதயேத்தத:
அஸ்மாகம் நித்யமஸ்த்வேதத்
இதி பக்த்யாத வந்தயேத
உண்ணத் துவங்கும்போது அன்னத்தைக் கண்டதும், முதலில் அஞ்சலி செய்து தலை வணங்கி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தித்து, 'எங்களுக்கு நித்யம் இந்த அன்னம் இருக்கட்டும்’ என்று தலைவணங்க வேண்டும்.

கருட மந்திரம்:



குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹந நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம
கருத்து: விஷ்ணுவை சுமக்கும் கருடாழ்வாரே, குங்குமம் போன்று சிவந்த நிறம் கொண்டவரும், தும்பைப்பூ போன்றும், சந்திரன் போன்றும் வெண்நிறம் பெற்றவருமான உமக்கு நமஸ்காரம். எப்போதும் எனக்கு க்ஷேமத்தைச் செய்வீர்.
வானில் கருடனைத் தரிசிக்கும்போது இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வணங்க, சத்ரு பயம் நீங்கும்; சகல நலன்களும் உண்டாகும்.
எம பயம் நீக்கும் ஸ்லோகம்:


அதிபீஷண சுடுபாஷண யம கிங்கரபடலீ
க்ருததாடன பரிபீடன மரணாகம ஸமயே
உமயாஸஹ மம சேதஸி யம ஸாஸன நிவஸன்
சிவஸங்கர சிவஸங்கர ஹர மே ஹர துரிதம்
கருத்து: எமதருமனை அடக்கிய இறைவா! மிகுந்த பயம் கொடுப்பவர்களும், கொடூர சொற்களை உடையவர்களுமான எமதூதர்கள் துன்புறுத்தும் நேரத்தில், சிவ சிவ சங்கரா... நீங்கள் அம்பாளுடன் சேர்ந்து எங்கள் மனத்தில் குடியிருந்து, எங்களது கஷ்டத்தைப் போக்க வேண்டும்!

நவக்கிரக ஸ்தோத்திரம்

ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர:
சந்த்ரோ யஸோ நிர்மலம்
பூதிம் பூமிஸுத: ஸுதாம்ஸுதனய:
ப்ரஜ்ஞாம் குருர்கௌரவம்
கான்ய: கோமளவாக்விலாஸமதுலம்
மந்தோ முதம் ஸர்வதா
ராஹுர் பாஹுபலம் விரோதஸமனம்
கேது: குலஸ்யோன்னதிம்
கருத்து: ஆரோக்கியத்தை சூரியனும், சுத்தமான கீர்த்தியை சந்திரனும், ஐஸ்வர்யத்தை அங்காரகனும், நல்ல புத்தியை புதனும், நல்ல மதிப்பை குருபகவானும், பேசும் திறனை சுக்கிரனும், சந்தோஷத்தை சனி பகவானும், புஜ பலம் மற்றும் சத்ரு நிக்ரஹத்தை ராகுவும், குல அபிவிருத்தியை கேதுவும் அருள வேண்டும்.


நவக்கிரகங்களின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை ஒன்பது முறை படித்து நவக்கிரக மூர்த்திகளை வழிபட, ஜாதகத்தில் உள்ள கிரகதோஷ பாதிப்புகள் குறையும். அதேபோன்று குறிப்பிட்ட கிரகங்களால் கிடைக்க வேண்டிய நன்மைகளும் பரிபூரணமாகக் கிடைத்து, நம் வாழ்வு செழிப்படையும்.


DISKI - PART 1 -

புதிய தமிழ் வருடமான விஜய வருடம் - ராசிபலன்கள்

http://www.adrasaka.com/2013/03/blog-post_6658.html

THANX - VIKATAN 

கோயம்பத்தூர் -ஊர் ஜாதகம்

மெட்ரோ, மோனோ ரயில் வேண்டும் ! 
பானுமதி அருணாசலம், படங்கள்: தி.விஜய். 
யற்கை வளங்களும், தொழில்வளங்களும் ஒருசேர அமைந்திருக்கும் செழிப்பான ஊர் கோயம்புத்தூர். கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கோயம்புத்தூர் கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், அன்னூர், சூளூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய எட்டு தாலுகாக்களைக் கொண்டுள்ளது. நொய்யல் ஆறு ஓடும் இம்மாவட்டத்தில் இருக்கும் தொழிற்சாலைகள் ஏராளம்.

 
தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் அளவுக்கு டெக்ஸ்டைஸ் துறையில் முன்னணியில் இருக்கும் நகரம். ஊர் ஜாதகம் பகுதிக்காகத் தமிழகத்தின் இரண்டாம் பெரிய நகரமான கோவையைச் சுற்றி பெரிதாக ஒரு ரவுண்டு வந்தோம்.


முதலில் நாம் சந்தித்தது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கோயம்புத்தூர் தலைவர் பாலசுந்தரத்தை.


''தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தொழில் நகரமாகவும், இந்தியாவில் வளர்ந்து வரும் நகரத்தில் எட்டாவது இடத்தையும் கோயம்புத்தூர் பெற்றுள்ளது. பஞ்சாலை,

பஞ்சாலை இயந்திரங்கள், வார்ப்பு ஆலைகள், பம்ப் மோட்டார்கள், கல்வித் துறை என பல முகங்களைக்கொண்டு விளங்குகிறது. ஆறு பல்கலைக்கழகங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்கல்லூரிகள், நூறு கலைக் கல்லூரிகள், விவசாயம், சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என கல்வித் துறையில் அனைத்து அம்சங்களும்கொண்ட நகரமாகவும் திகழ்கிறது.
கோயம்புத்தூரிலிருந்து 4,000 கோடி ரூபாய் வரியும், 25,000 கோடி ரூபாய்க்கு அந்நிய செலாவணியும் நடக்கிறது. இவ்வளவு பெரிய வருவாய் ஈட்டித்தரும் மாவட்டத்தில் அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் கிடையாது. தொழில் செய்யும் ஆர்வம் இங்கிருப்பவர்களுக்கும், இங்கு வருபவர்களுக்கும் அதிகமாக இருக்கிறது.


மாதம் சுமார் 6,000 இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பதிவாகின்றன. ஆனால், அதற்கு தகுந்த சாலை வசதிகள் இங்கு கிடையாது. கோயம்புத்தூருக்கு புறவழிச்சாலை, ரிங்க் ரோடு போன்ற நகர வளர்ச்சிக்குத் திட்டமிட்ட சாலைகள் வேண்டும். சென்னையைப் போன்று மெட்ரோ, மோனோ ரயில் வசதிகள் கொண்டு வந்தால் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டும். கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு ரயில் பாதைகள் இருக்கிறது. இதனை பயன்படுத்தி இந்த ரயில் திட்டங்களைக் கொண்டுவரலாம்.


தொழில் விஷயமாக வெளிநாட்டினர் இங்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். அதனால் இங்கிருந்து டெல்லி, மும்பை, சென்னை, துபாய்க்கு விமானப் போக்குவரத்து அதிகளவில் இயக்க வேண்டும். ஐ.சி.எஃப்., பி.ஹெச்.இ.எல். போன்ற பெரிய அரசு தொழிற்சாலைகள் இங்கு வந்தால் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மிகப் பெரிய நகரமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை'' என்றார்.


அடுத்து நாம் சந்தித்தது, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் அமைப்பின் துணைத் தலைவர் ஜேம்ஸை.


''இயற்கை வளங்கள்கொண்ட இந்த மாவட்டத்தில் இயற்கையாகவே பஞ்சு உற்பத்தி அதிகமாக இருந்ததால் அதனைக்கொண்டு பஞ்சு ஆலைகள் துவங்கப்பட்டு, பல்வேறு பஞ்சாலைகள் வந்தன. கிரைண்டர் தயாரிப்பின் பிறப்பிடம் எனச் சொல்வதில் எங்கள் ஊர் மக்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் உபகரணங்கள் உற்பத்தி செய்யும் இடமாகத் திகழ்கிறது. சுமார் 50,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு இருக்கிறது. ராணுவத்திற்கு தேவையான உதிரிபாகங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது. குண்டூசி முதல் விமானம் வரை அனைத்திற்கும் தேவையான உபகரணங்கள் கிடைக்கும் இடமாகத் திகழ்கிறது.


எனினும், கடந்த நான்கு ஆண்டுகளாக மின்வெட்டு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் குறுந் தொழில்கள் காணாமல் போய்விட்டன. தொழில்கள் வளர்ச்சி அடைய மின்சாரம் மிகத் தேவை. இந்த மண்ணின் மைந்தர்களின் சொந்த உழைப்பு மட்டுமே இந்நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


ரயில்வே துறைக்குத் தேவையான அனைத்து உதிரிபாகங்களையும் செய்யும் இடமாகத் திகழும் கோயம்புத்தூரில் ரயில்வே தொழிற்சாலையைக் கொண்டு வராமல் பாலக்காட்டில் 1,300 கோடி ரூபாய் மதிப்பில் கொண்டுவந்துள்ளனர். அதே தொழிற்சாலையை இங்கு கொண்டுவந்திருந்தால், வேலை வாய்ப்பு இன்னும் அதிகரித்திருக்கும்.


என்ன ஆர்டர் கொடுத்தாலும் எல்லாத் துறைகளிலும் 20 சதவிகித ஆர்டர்களை சிறு மற்றும் குறுந் தொழிலாளர்களிடமிருந்து வாங்க வேண்டும் என மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு முழுவதுமாக நடைமுறையில் இல்லை. இந்த உத்தரவை முழுவதுமாக அமல்படுத்தினாலே கோவையில் உள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து மார்க்கெட்டிங் மூலம் ஆர்டர்களைப் பெறுகின்றனர். அதுபோல சிறு, குறு நிறுவனங்களால் செய்ய முடியவில்லை.


மத்திய, மாநில அரசுகள் புதிய தொழில்முனைவோருக்கு பல திட்டங்களைக் கொண்டுவருகின்றன. ஆனால், ஏற்கெனவே தொழில் செய்பவர் களுக்கு எந்தவிதத் திட்டங்களும் செய்து தருவதில்லை. சிறு, குறுந் தொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் குறைந்த விலையில் தரவேண்டும். தொழில் நகரமான கோயம்புத்தூரில் இன்னும் பல வளர்ச்சிகள் கொண்டுவரவேண்டியது அரசின் கைகளில் இருக்கிறது'' என்றார்.


சுமார் 700-க்கும் மேற்பட்ட காட்டன் மில்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் என எப்போதும் பிஸியாக இருக்கும் கோயம்புத்தூர் பற்றி கல்வியாளரும், ரூட்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் இயக்குநருமான கவிதாசன் இப்படி சொன்னார்.


''தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் கோவை இப்போது கல்வி நிலையங்களின் ஹப்பாக மாறி வருகிறது. சுமார் 150 முதல் 200 கல்லூரிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. சென்னைக்கு அடுத்து வெளியூர்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து வேலை செய்பவர்கள் ஏராளம். இங்கு தொழிற்பேட்டை என்றால் சிட்கோ ஒன்று மட்டும் தான் உள்ளது. 


இந்நகரில் இருக்கும் தொழில்களுக்குத் தகுந்த உள்கட்டமைப்பு வசதி இல்லை. கோயம்புத்தூர் முதல் பெங்களூரு வரை, கோவை முதல் மும்பை வரை விமானம் மற்றும் ரயில் வசதிகள் தேவை. மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர், பாலக்காடு என கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து வந்து வேலை பார்த்துச் செல்கின்றனர். இதனால் இந்தப் பகுதிகளை இணைத்து மின்சார ரயில் இயக்கினால் வேலைக்கு வந்து செல்பவர்களுக்கு மிக வசதியாக இருக்கும்'' என்றார்.


கோயம்புத்தூரின் அடையாளங் களில் ஒன்றாக மாறிவிட்ட கொடிசியா கட்டடம் மிகவும் பிரமாண்டமாகவும், பல தொழில் சம்பந்தப்பட்ட கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடைபெறும் இடமாகவும் திகழ்கிறது. வேறு எங்கும் இல்லாதளவுக்கு சிறு தொழில்களின் அமைப்பு இவ்வளவு பெரிய கட்டடத்தைக் கொண்டது இங்கு மட்டும்தான் இருக்கும். இந்த அமைப்பின் (கொடிசியா) தலைவர் ராமச்சந்திரனுடன் பேசினோம்.


''பம்புகள், மோட்டார், பிளாஸ்டிக், வெட் கிரைண்டர், ஸ்பின்னிங் மில்ஸ் என பல தொழில்கள் கொண்ட நகரம். இத்தொழில்கள் இருக்கும் இந்த ஊரில் இப்போது இருக்கும் முக்கிய பிரச்னை வேலையாட்கள் கிடைக்காததுதான். அதனால் கிராமப்புறங்களிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து தொழிற்துறைக்குத் தகுந்த பயிற்சிகளைக் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தவேண்டும். 

அதற்கு மத்திய, மாநில அரசுகள் திறன் மேம்பாட்டுக்கான திட்டங்களைக் கொண்டுவந்து பயிற்சி அளிக்கவேண்டும். இப்போது எங்களுக்குத் தேவையான வேலையாட்களை வடமாநில நபர்களைக்கொண்டு சரிகட்டிக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் சில நேரங்களில் நீண்ட விடுமுறை எடுத்துச் சென்றுவிடுகின்றனர். இவர்களை நம்பி தொழில் செய்ய முடியவில்லை.


ஆறு மாதங்களுக்கு முன்பு வரை மின்சாரப் பிரச்னை மிக அதிகமாக பன்னிரண்டு மணிநேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது இந்த நிலை மாறி ஐந்து மணி நேரமாகக் குறைந்துவிட்டது. சூரிய மின்சக்தி பயன்படுத்த வாட் வரி அதிகமாக இருக்கிறது. இந்த வாட் வரியைத் தடை செய்தால் இங்கிருக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்துவார்கள்.


மேலும், தொழில்புரிவோருக்கு தற்போது மாநில அரசு முதலீட்டு மானியமாக 15 சதவிகிதம் மட்டுமே கொடுக்கிறது. இதனை 25 சத விகிதமாக அதிகப்படுத்தினால் புதிய தொழில்முனைவோர் அதிகளவில் வருவார்கள். பருத்தியின் விலை ஒரு நிலையில் இருப்பதில்லை. நாங்கள் ஆர்டர் வாங்கும்போது ஒரு விலையும், வேலை முடித்து தரும்போது ஒரு விலையும் இருப்பதால் அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்து பருத்தி விலையை சீரான முறையில் கொண்டுவர வேண்டும்'' என்றார்.


கோயம்புத்தூரில் இருக்கும் இன்னும் பல தொழில்கள் பற்றியும், விவசாயம் போன்ற துறைகளில் இருக்கும் பிரச்னைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.


(தொடரும்)

thanx - vikatan

Monday, March 25, 2013

கந்தா - சினிமா விமர்சனம்

 
 
தினமலர் விமர்சனம்

  • நடிகர் : கரன்
  • நடிகை : மித்ரா
  • இயக்குனர் :பாபு.கே.விஸ்வநாத்

பத்திரிகையாளரும், ஆயிரம் சிறு கதைகளுக்கு மேல் எழுதிய இளம் எழுத்தாளரும், இயக்குனர் சரணின் உதவியாளருமான திருவாரூர் பாபு, பாபு கே.விஸ்வநாத் எனும் பெயரில் தமிழ் சினிமா இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் "கந்தா".

கதைப்படி, தஞ்சாவூரை சேர்ந்த படித்த இளைஞரான கரண், சில வருடங்கள் மலேசியாவிற்கு வேலைக்கு போய் கைநிறைய காசு பணத்துடன் ஊர் திரும்புகிறார். கரண் எதிர்பார்த்து திரும்பிய தஞ்சை காணாமல் போயிருக்கிறது. காரணம் தாதாயிசம்! 
 
 
 
 
 இத‌ில் கடுப்பாகும் கரணை அவ்வப்போது அவரது பால்ய காலத்து நண்பர்கள் பக்குவமாக பேசி கட்டுப்படுத்தி வர, ஒருநாள் தனக்கு கல்வியையும், வாழ்க்கையையும் வகையாக அமைத்துக் கொடுத்த வரது வாத்தியாரைத் தேடி புறப்படுகிறார் கரண். அப்பொழுது அவர் கண் எதிரேயே வரது வாத்தியாரை அடிக்கத் துரத்துகிறது ரவுடிக்கும்பல்! 
 
 
பொறுத்தது போதும் என பொங்கி எழும் கரண், அந்த கும்பலை நையப்புடைத்து அனுப்புகிறார். அவர்கள் தஞ்சையை கலக்கும் வில்லன் போஸின் ஆட்கள்! அப்புறம் விடுமா வில்லன் கோஷ்டி...?! கரணை விடாமல் துரத்துகிறது. போலீஸ்க்கு போகும் கரணுக்கு தாதா போஸ், தன் குருநாதர் வரது வாத்தியாரின் வாரிசு என்பது தெரிய வருகிறது. படிக்க வசதி இன்றி வாடிய தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய வரது சாரின் வாரிசு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என தஞ்சையை நஞ்சாக்குவது கரணுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை!
 
 
 
 வரது சார் விரும்பும் வகையில் போஸை திருத்த முற்படுகிறார். போஸ் திருந்தினாரா? கரண் வருந்தினாரா..? எனும் வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையுடன் கரண்-மித்ரா ஜோடியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி கந்தா படம் தந்திருக்கிறார் பாபு கே.விஸ்வநாத்!

கரண், கந்தா எனும் பாத்திரத்தில் மலேசியா ரிட்டர்னாக பந்தாவாக அறிமுகமாகிறார். வில்லன்களுடன் வித்தியாசமாக மோதுகிறார். நாயகி மித்ராவுடன் விறுவிப்பாக ஆடுகிறார், என்றெல்லாம் சொல்வதற்கு ஆசை தான். ஆனால் எல்லாமே ஏற்கனவே எங்கோ பார்த்த சாயலிலேயே இருப்பது பலவீனம். ஆனாலும் அவரது வாத்தியார் - ராஜேஷின் எண்ட்ரிக்குப்பின் படத்திற்கு புதிய பலமும், புத்தம் புதிய களமும் கிடைக்கிறது! வரது வாத்தியாரின் வாரிசுதான் தஞ்சையை கலக்கும் தாதா போஸ் என்பது ட்விஸ்ட்!


கதாநாயகி மித்ரா தேய்த்து வைத்த வெள்ளி குத்துவிளக்காக வருகிறார், போகிறார். அம்மணிக்கு நடிப்பு எனும் ஜொலிப்பு மட்டும் கம்மியாக இருக்கிறது பாவம்! அவருடன் வரும் குண்டு ஆர்த்தி கடிக்கிறார். ஆர்த்தியை விட காமெடி என்ற பெயரில் அதிகம் கடிக்கின்றனர் விவேகமில்லாத நடிகரும், செல்முருகனும்! அதேநேரம் கரணின் நண்பராக வரும் சத்யனை இந்தப்படத்தில் சகித்துக் கொள்ள முடிவது ஆறுதல்!

போலீஸ் அதிகாரி ரியாஸ்கான், அரசியல்வாதி காதல் தண்டபாணி உள்ளிட்டோர் கந்தாவுக்கு பலம்! அதேநேரம் இந்தப்படத்திலும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரான ரியாஸ்கான், தன் மகனுக்கு வரதராஜன் என தன் பள்ளி ஆசிரியரின் (கரண் மாதிரி ரியாஸ்க்கும் ராஜேஷ் தான் ஆசிரியர்) பெயரை சூட்டியிருப்பது டிராமாவாகத் தெரிவதும் மாதிரியே, க்ளைமாக்ஸில் வில்லனுக்கு சுதந்திரதினமன்று காந்தி வேஷம் கட்டி போலீஸிடமிருந்து அவரை காப்பாற்ற போராடும் கரணின் சாதுர்யமும் புதுமை என்றாலும் நாடகத்தன்மையாக இருப்பது கந்தாவின் பலவீனம்!

ஆக மொத்தத்தில், சக்தி ஆர்.செல்வாவின் இனிய இசை, சிவக்குமாரின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் பாபு கே.விஸ்வநாத்தின் எழுத்து - இயக்கத்தில், "கந்தா" பாதி "பந்தா!" மீதி...?!!