Saturday, February 20, 2016

NEERJA ( 2016) -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)


உண்மை சம்பவத்தை படமாக்குவதில் சவாலும் இருக்கு, சந்தோஷமும் இருக்கு. சரித்திரத்தைப் பதிவு பண்றோம்கற  ஜாக்கிரதைத்தனத்தோட நம்ம கிரியேட்டிவிட்டியையும் காட்டனும்.1985 செப்டம்பர் 5 ம் தேதி நடந்த ஒரு உண்மைச்சம்பவம் , ஹைஜாக் பற்றிய படம் தான் இது.


நீர்ஜா ஒரு ஏர் ஹோஸ்டல். விமான  தலைமை பணிப்பெண். அவருக்கு 2 சகோதரர்கள் , ஒரு அம்மா, ஒரு காதலர் இவங்க கூட இவர் வாழ்க்கை ச்ந்தோசமா போய்க்கிட்டு இருக்கு

சம்பவம் நடக்கற அன்னைக்கு அந்த சம்பவம் நடக்கப்போகுதுன்னு  தெரியாம நீர்ஜா ட்யூட்டிக்குப்போகுது. மும்பையில்  இருந்து கராச்சி வழியா அமெரிக்கா போகும் விமானம் அது

4 பயங்கர வாதிகள் அந்த  விமானத்தில்  புகுந்துக்கறாங்க. விமானப்பயணிகளை மிரட்றாங்க. நீர்ஜா டக்னு விமானிகளுக்கு தகவல் கொடுத்து  அவங்களை தப்பிக்க வெச்சுடுது. ஏன்னா  விமானி இருந்தாத்தானே  விமானத்தைக்கடத்த முடியும்?

பதவி இருந்தாத்தானே கண்ட மேனிக்கு மீடியா க்கு பேட்டி குடுப்பே?ன்னு இன்னோவா  பார்ட்டி யை  ஜெ துரத்தி விட்டா மாதிரி  நீர்ஜா  புத்திசாலித்தனமா  இப்டி ஒருன் காரியம் பண்ணிடுது

தொடர்ந்து  அவங்க  மிரட்டலும், நீர்ஜாவின் சினிமாத்தனம் இல்லாத  சாகசமும் தான்  திரைக்கதை.

300 க்கும் மேற்பட்ட பயணிகளை  அவர் எப்படி காப்பாற்றினார்  என்பதே கதைக்கரு


ஹீரோயினா சோனம் கபூர். இது அவருக்கு வாழ் நாள் சாதனைப்படம். நல்லா நடிக்க ட்ரை பண்ணி  இருக்கு, ஆனா பல இடங்கள்ல ஓவர் ஆக்டிங், இயக்குநர் சமாளிப்பால்  தாங்குது


 ஹீரோயின் அம்மாவா ஷபனா ஆஸ்மி,பிரமாதமான ஆக்டிங்,க்ளைமாக்சில் அவர் நா தழு தழுக்க  நிதானமாக  உரை ஆற்றும் காட்சி அபாரம். சிறந்த  நடிகை விருது , சிறந்த  துணை நடிகை விருது   என  2 விருதுகள்  நிச்சயம்


வில்லன்களாக வரும் அந்த  4 பேரில்  தாடிக்காரர் மட்டும்  குட் ( 4 பேருமே  தாடிக்காரங்க தானே? எப்டி  அடையாளம்  கண்டு பிடிக்க? )

ஒளிப்பதிவு  , எடிட்டிங்க்  கனக்ச்சிதம்  , பின்னணி  இசை  அருமை. திரைக்கதை  இயக்கம்  புதுமுகம்  என்பதை  நம்ப முடியவில்லை


இந்த சமபவம் சம்பந்தப்பட்ட ஆட்களிடம்  திரைக்கதை  விவாதம் நிகழ்த்தி, பல சம்பவங்களை  கோர்த்து அழகிய கதம்பமா தந்த மெனக்கெடலுக்கு  ஒரு சபாஷ்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

வாழ்க்கை என்பது நீண்ட ஆயுளால் சிறப்படைவதில்லை.மகிழ்ச்சியான தருணங்களினால் சிறப்படைகிறது

2  ஏர் ஹோஸ்டல் ஜாப் பை விட முடியாதா?

சாரி மம்மி.ஐ லவ் மை ஜாப்

பசங்களுக்கு வீரம் இருக்கனும்னு சொல்லித்தந்து வளர்த்தறாங்க.ஆனா பெண்களுக்கும் வீரம் ,போராட்ட குணம் தேவை..சொல்லிக்கொடுத்து வளர்த்தனும்

4  உன் கை ஏன் நடுங்குது?,தீவிரவாதின்னா பயத்தை ஏற்படுத்தனும்.பயப்படக்கூடாது

ஒவ்வொரு சாதாரண பெண்ணுக்குள்ளும் ஒரு அசாதாரண சக்தி இருக்கும், என் பொண்ணு கிட்டேயும் அது இருந்தது  


சுய மரியாதை, தன்னம்பிக்கை இரண்டையும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதேன்னு என் பொண்ணுக்கு கத்துக்கொடுத்து இருக்கேன்  


உயிரோட எத்தனை வருசம் வாழ்ந்தீங்க?என்பதை  விட  எத்தனை உயிரை வாழ்நாளில் காப்பாற்றி இருக்கீங்க? என்பதைத்தான் சரித்திரம் பதிவுசெய்யும்  


8  நீ  எப்போதெல்லாம் என்னை மிஸ் பண்றதா நினைக்கறியோ அப்போதெல்லாம் இந்த ஃபோட்டோவை வந்து பார்த்துக்கோ  





 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

பல வருடங்களுக்கு முன் விக்ரம் பட டைட்டில் சாங்கில் கமல் பயன் படுத்திய டான்ஸ்.ஸ்டெப் பை இப்போ பயன்படுத்தறாங்க.அது தான் கமல்

2  யாருக்கும் தராம நீயே சாப்பிடனும் என்பதே ஒவ்வொரு அம்மாவின் டிபன் பாக்ஸ் கட்டளையாக இருக்கும், இந்தப்படத்தில் அம்மா பாசம், மகள் ரிஃப்ளக்‌ஷன் கன கச்சிதம்



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஹீரோயின் இக்கட்டான  சூழலில் மாட்டும்போது எல்லாம்  அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் அவர் நினைவில்  வருவது போல்  திரைக்கதை  அமைத்தது நல்ல உத்தி. இது போல்  கே எஸ்  ரவிக்குமார்  புரியாத புதிர்  த்ரில்லர்  மூவியில்   ட்ரை பண்ணி  இருப்பார். படத்தில்  ஒவ்வொரு ஷாட்டின் முடிவும்  அடுத்த  ஷாட்டின் தொடக்கமாக இருக்கும்


2   ஹை ஜாக்  நிகழ்வு  ஆடியன்சின் மனதில் ஒரு நெருக்கடியைக்கொடுக்கும்  விதத்தில்  இயல்பாக  கையாளப்பட்டது

3  எந்த விதமான  சினிமாத்தன ஆக்சனோ, சூப்பர்  ஹீரோ சாகசமோ  படத்தில் இல்லாதது  பிளஸ்


4  வாய்ப்பு  இருந்தும்  டூயட் ,  மொக்கை பாடல்  காட்சிகளை தவிர்த்தது




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 பொதுவா  ஹைஜாக்கர்ஸ்  பைலட் ரூமைத்தான்  முதல்ல சிறை பிடிப்பாங்க. இவங்க  கோட்டை விட்டது  எப்படி?


2  ஒரு அமெரிக்கரை  முதல்ல  கொலை செய்து  பயமுறுத்தலாம்  என்பது  தீவிரவாதிகளின்  பிளான். அதுக்கு  சும்மா  ஒரு கிளான்ஸ்  பார்த்தாலே  யார் அமெரிக்கர்  என  தெரியுமே? அல்லது   உங்கள்ல  அமெரிக்கன்ஸ்  யார்? யார்?  என  கேட்டா  போதும். அவங்களுக்கு  கொலை ஆகப்போறோம்னு  தெரியாதில்ல. சொல்லிடுவாங்க. அல்லது  பயணிகள்  லிஸ்ட்  வாங்குனா  பேரை  படிச்சா  தெரிஞ்சுக்கலாம். எதுக்காக  வேலை  மெனக்கெட்டு  பாஸ்போர்ட்  எல்லாத்தை யும் கலெக்ட்  பண்ணனும்?


3  ஹீரோயின்  பாஸ்போர்ட்  கலெக்ட்  பண்ணும்போது  அமெரிக்கன்ஸ் உடையதை மட்டும் கவர் ல போடாம  மறைச்சிடுது.  டோட்டல் கவுண்ட்டிங்க் ல இது காட்டிக்குடுத்திடாதா?


4  பயணிகள்  300 க்கும் மேல, அதில் 60% ஆண்கள். தீவிரவாதிகள் 4 பேர் தான். ஆண்கள்  10 பேர்  சேர்ந்தாலே உயிரைப்பணயம்  வெச்சு எதிர்த்தா  4 பேரையும்  முடிச்சிருக்கலாமே? ஒரு டைமில்  துப்பாக்கியால் எத்தனை  பேரை  சுட முடியும்?ஆனா  யாருமே அதுக்கு முயற்சியே  செய்யலையே?அத்தனை  பேருமா பயந்தாங்கொள்ளிகளா  இருப்பாங்க?







சி  பி  கமெண்ட் =NEERJA (HINDI)-விமான கடத்தல் கதை.சினிமாத்தனம் இல்லாத சினிமா.1986 உண்மை சம்பவம்.ஏ சென்ட்டர் பிலிம்.ரேட்டிங் =3.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 44



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = நன்று



 ரேட்டிங்=3.25 / 5


    Image result for neerja 
    Image result for neerja 
    Image result for neerja 
    Image result for neerja
    Image result for neerja
    Image result for neerja
    Image result for neerja
    Neerja Bhanot
    Flight attendant
    Neerja Bhanot AC was a purser for Pan Am, based in Mumbai, India, who was shot while saving passengers from terrorists on board the hijacked Pan Am Flight 73 on 5 September 1986. Wikipedia 
    BornSeptember 7, 1963, Chandigarh
    DiedSeptember 5, 1986, Karachi, Pakistan

தெறி பஞ்ச் டயலாக்ஸ்

தெறி படத்தின் டீசரில் வரும் பஞ்ச் டயலாக்கை வைத்து அந்தப்படம் மெகா ஹிட் ஆகுமா? ஆகாதா? என்பதை நான் கணித்துக்கூறுகிறேன் # ஐ ஆம் வெய்ட்டிங்



===============



ஏ ஆர் முருகதாஸ் -ன் மாஸ் கலெக்சன்  ஃபிலிம் மேக்கிங் கை முந்த தற்போது அட்லீயை விட்டால் ஆளில்லை என கணிக்கிறேன் # தெறி




=============




அன்யூனிஃபார்ம்ல இருக்கும்போது நீ என்ன  சொன்னாலும் கேட்டுக்கறேன்,

நான் யூனிஃபார்ம் போட்டுட்டா யார் எது சொன்னாலும் கேட்டுக்க மாட்டேன் # கற்பனை


===============


சட்டையைக்கழட்டுனா சிலர் சல்மான் கான் னு நினைச்சுக்கறாங்க.



மத்தவங்களை விடு.காக்கிச்சட்டையை போட்டுட்டா நான் ஜாக்கி சான் #,தெறி பஞ்ச் ( கற்பனை)

=============

5 காமெடி பண்ண நான் அரிகிரி அசெம்ப்ளி.இல்ல.
வெறி தெறி அசெம்ப்ளி # தெறி பஞ்ச் ( கற்பனை)


=================


6 நம்ம சங்கத்து ஆளுங்க எல்லாம் பேட்டரி ,ஸ்பேர் பேட்டரி,சார்ஜர் ,பிளக் பாய்ண்ட் உள்ள இடம் அருகே நடுநிசி 12 க்குவந்திடுங்க ;-))

===========


7 அய்யா யூனிபார்ம் போட்டாலே தனி கெத்து தான்.
ஸ்டேஷன் வந்தாலே லாக்கப் டெத் தான்.#,தெறி பஞ்ச் (கற்பனை)


============

8 ஹீரோ டூ வில்லன் = நான் லாக் இன் ஆகறதுக்குள்ளே லாக் அவுட் ஆகிட்டேன்னா அவுட் ஆகாம தப்பிப்பே! # தெறி பஞ்ச் ( கற்பனை)


============

9 தெறி டீசர் பக்கா!

அடங்கொக்காமக்கா!

அட்லீ & டீம் வாழ்த்துகள்



==========

10 ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்
இளைய தளபதி தான் அடுத்த சூப்பர் ஸ்டார்? # குறியீடு @ தெறி


===========

11 போக்கிரி ,துப்பாக்கி யை விட தெறியில் ஆக்சன் காட்சிகள் தெறிக்குது. லெட் வெயிட்


============

12 இதுவரை வந்த விஜய் பட டீசர்களில் ஹீரோயினைக்காட்டாத , முழுக்க முழுக்க ஹீரோவை முன் நிறுத்தியது தெறி தான் என நினைக்கிறேன் ( கத்தி, தலைவா ஆல்சோ)


===========



13 தெறி பட டீசருக்குப்பின் ஜேம்ஸ் பாண்ட் படமான லைசன்ஸ்டு டூ கில் போஸ்டர் ல கூட ட்விங்க்KILL ட்விங்க்KILL லிட்டில் ஸ்டார்னு போடறாங்களாம்


==========


14 பொண்ணுங்க கிட்டே பேசும்போது நெட் தமிழன் “உங்கள மாதிரி புத்திசாலித்தனம் எனக்கு இல்ல”னு சொல்றான் பார்த்தீங்களா? அதுதான் அவன் புத்திசாலித்தனம்

============

15 மிஸ்! நாம 2 பேரும் எப்போ ஃபிரண்ட்ஸ் ஆகலாம்?

 இப்போ மட்டும் எதிரியா? சரி . ஃபிரண்ட் ஆகி என்ன பண்ணுவே?

 டி எம் அனுப்புவேன்


=================


16  குடிகாரர்கள், சிகரெட் உபயோகிப்பாளர்கள்  இறந்தால் கவலைப்படாதீர்! அவர்கள் சமூகவிரோதிகள்,அழிந்தால் சுகாதாரத்துக்கு சுற்றுப்புறசூழலுக்கு நல்லதே


=============


17 தூய்மையான காற்றை சிகரெட் புகையால் மாசுபடுத்தும் ஆட்களுக்கு கடும் தண்டனை , அபராதம் விதித்தால் பொது இடத்தில் சிகரெட் புகைப்பது குறையும்



==============


18 ஒரு நல்ல தலைவன் என்றும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள மாட்டான், ஆனால் மற்றவருக்கு முன்னோடியாய் இருப்பான்


=============


19 மற்றவர் சாதனையை நீ முறியடித்தால் அது ரெகார்டு பிரேக்,இது வரை யாரும் செய்யாத சாதனையை நீ நிகழ்த்தினால் அது ரெக்கார்டு. நீ இரண்டையும் செய்!


==============


20  கடல் பக்கம் போய்  சூரிய வணக்கம் வைன்னா நெட் தமிழன் பெட்ல படுத்துட்டே கடல் கன்னிக்கு வணக்கம் வைக்கறான்


====================

Friday, February 19, 2016

சேதுபதி - சினிமா விமர்சனம்

வில்லனோட பொண்ணு ஒரு போலீஸ் ஆஃபீசரைக் கல்யாணம் பண்ணி இருக்கு. 2 பேருக்கும் ஒத்து வர்லை. டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டா குழந்தையைப்பார்க்க முடியாதோன்னு புருசன் தயங்கறான். சரி சமாதானமா வாழ லாம்னு பார்க்கும்போது  ஒரு சின்ன தகராறில் பொண்டாட்டியை கை நீட்டி அடிச்சுடறான். கை நீட்டாம அடிக்க முடியாதில்ல?


 அதுக்கு என்னமோ அந்த சம்சாரம்  ஓவரா துள்ளுது. கோபத்துல  தாதாவான தன் அப்பா கிட்டே  என் புருசன் செத்தாலும் பரவாயில்லை, என் கிட்டே இருந்து அவனைப்பிரிச்சுடுங்க அப்டிங்குது.


பெரிய தாதா, ரவுடி , அரசியல்வாதி ( எல்லாம் 1 தானே? ) யான வில்லன் ஸ்கெட்ச் போட்டு போலீஸ் ஆஃபீசரான மாப்ளையை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடறார், அதுல  ஒரு சின்ன ஆள் மாறாட்டத்துல  வேற ஒரு போலீஸ் ஆஃபீசரை உயிரை வாங்கிடுது,


இப்போதான் ஹீரோ எண்ட்ரி. இந்த கேசை துப்பு துலக்கறார்


 இந்த கேசிலிருந்து அவரை விலக்க வைக்க  வில்லனால் ஒரு சதித்திட்டம் தீட்டப்படுது. ஸ்கூல் ஸ்டூடண்ட்டை சுட்டுட்டதா  போலீஸ் ஸ்டேசன்லயே அவர் மேல  கேஸ் போட்டுடறாங்க.


இந்த சதியில்  இருந்து  ஹீரோ  எப்படி  மீண்டு வர்றார் என்பதே  விறுவிறுப்ப்பான திரைக்கதை


ஹீரோவா வித்தியாசமான நடிப்பின் நாயகன்  விஜய்  சேதுபதி. கலக்கி எடுத்து விட்டார்   நடிப்பில், அவரது  போலீஸ்  கம்பீரம் இது தாண்டா போலீஸ்  டாக்டர்  ராஜ சேகருடைய நடிப்பை நினைவுபடுத்துது


ஹீரோயினா  ரம்யா நம்பீசன் . இருவரும்  லூட்டிகள், சுட்டிகளுக்கு தெரியாமல்  செய்யும்  ரொமான்சுகள்  செம  கிளு கிளு



போலீஸ் ஸ்டேஷனில்  சப் இன்ஸ்பெக்டராக   வருபவர் கவனிக்க  வைக்க்கிறார்

வில்லன் நடிப்பு கன கச்சிதம்


காட்சிகள் இடைவேளை வரை ரெக்கை கட்டிப்பறக்குது

 திரைக்கதை , எடிட்டிங்  கன கச்சிதம்


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

சார்.ஒயிப் மிஸ்சிங்.நடத்தையில் சந்தேகம்னு கேஸ் எழுதவா?

யோவ்.மிஸ்சிங் னு மட்டும் எழுது.போதும் #,சே


2 ஏ பொண்டாட்டி, என் கண்ணைப்பார்த்துப்பேசு, கோபமா இருக்கும்போது என்  கண்ணைப்பார்க்க மாட்டியா?

ம்ஹூம், பார்த்தா கண் அடிப்பீங்க!  # சே

3 இந்த போலீஸ்காரரை   வேலை நிறுத்தம்  செய்யனும்

 தலைவரே! வேலை நீக்கம் அது. சுத்தம். # சே








 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


சேதுபதியா?அந்தாள்.ஒரு சைக்கோ ஆச்சே? செம ஓப்பனிங் சீன் டூ வி சே


2 போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் ல ஹீரோ மீசை முறுக்கற மேனரிசம் தவறாம வந்திடுது.லேடி போலீஸ் னா ஜடையை திருகிக்குவாங்களா?




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  போலீஸ்  சப்ஜெக்ட் படங்களில்  பஞ்ச் டயலாக், ஓப்பனிங்  சீன் எல்லாம் எதுவும் வைக்காமல் யதார்த்தமாக எடுத்ததற்கு ஒரு சபாஷ்


2  ஹீரோ வீடியோ செட்டிங்கில் சம்சாரத்துடன்  செய்யும் லூட்டுகள், குழந்தைகளுடன் அடிக்கும் லூட்டிகள்  எல்லாம் பக்கா


3  போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அந்த மாணவன்  கொலை ட்விஸ்ட்  செம , இடைவேளை ட்விஸ்ட்டாய் கன கச்சிதம்

4 ஹீரோ  ஹீரோயின் இடையே ஃபைட் வரும்போது அப்போது குழந்தை வந்ததும்  சமாளிக்கும் காட்சியும் , வீட்டுக்கு வரச்சொல்லி அழைக்கும் அம்மாவிடம் புருசனை விட்டுக்கொடுக்காம பேசும் ஹீரோயின் டயலாக்கும் கலக்கல்



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு சொந்த  துப்பாக்கியில்  லாக்கர் ரிலீசில் இருக்கா? இல்லையா? என தெரியாதா?

2    எப்போதும் ஷார்ப்பாக  இருக்கும் ஹீரோவை உடன் பணி புரியும் சக போலீஸ் ஆட்களே  ஏமாற்றுவது எப்படி?

3  ஹீரோவை உசுப்பேற்றி  அவர் ரவுடியை அடிப்பதை வீடியோ எடுக்கும் வரை ஹீரோ  ஏன்  வேடிக்கை பார்க்கிறார்?

4  விசாரணை கமிசனில் அந்த லேடி ஆஃபீசர்  ஓவரா சவுண்ட் உடுதே, ஒரு ஹைய ர் ஆஃபீசர் அப்படியா  இருப்பார்?







சி  பி  கமெண்ட் -சேதுபதி - முன் பாதி  செம விறுவிறுப்பு, பின் பாதி சராசரி, விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு ஹிட்,க்ரைம் த்ரில்லர் - விகடன் =43, ரேட்டிங் = 3 /5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே







 ரேட்டிங் = 3 /5

மிருதன் - சினிமா விமர்சனம்


தனி ஒருவன் கொடுத்த பிரம்மாண்ட வெற்றி ஜெயம் ரவியின் மார்க்கெட்டை உச்சத்துக்குக்கொண்டு போனது. 1000 தியேட்டர்களில்  முதல்  முறையாக அவர் படம் ரிலீஸ் ஆகி இருக்கு


பேய்ப்படங்கள் தமிழ் சினிமாவில் நிச்சய வெற்றி . கிட்டத்தட்ட  பேய்ப்படம் போன்றதொரு கேட்டகிரியில்  இதுவும் வெற்றிப்படமாகவே அமையும் என யூகிக்கிறேன்

 ஹீரோ  ஒரு  டிராஃபிக்  இன்ஸ்பெக்டர். அவருக்கு  ஒரு தங்கை. முன்னாள் காதலி. காதலி ஒரு  டாக்டர்.


ஊர்ல  ஒரு குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலால் மனிதர்கள் பாதிக்கப்படறாங்க. அதுக்கு மாற்று மருந்து  இன்னும் கண்டுபிடிக்கலை. பாதிக்கப்பட்டவங்க சாதா மனிதனைக்கடித்தா  அவருக்கும்  வைரஸ் பரவும் .


கதைக்களம்  ஊட்டி. ஊட்டி பூரா பிளாக் பண்ணி நிலைமையைக்கட்டுக்குள் கொண்டு வர நினைக்குது  போலீஸ்

ஊட்டிக்கு உள்ளே வாகனங்கள் வர தடை வெளியேவும் போக முடியாது.


இப்படிப்பட்ட பர பரப்பான  சூழலில்  காதலி யும் டாக்டர் குழுவும் சட்டத்தை  மீறி  ஊட்டியை விட்டு வெளியே  கோவை போய் தான்  அந்த மருந்து கண்டுபிடிக்கும் பணி பூர்த்தி ஆக்க முடியும். நாயகன் அதுக்கு உதவறார் .

 என்ன ஆச்சு? என்பதே  மிச்ச மீதிக்கதை


 ஹீரோவா  ஜெயம் ரவி,ஓப்பனிங் சீன்ல  நியாயமான சராசரி  போலீஸ் ஆஃபீசரா அவர் வரும் காட்சிகள்  இதம். ஆனாலும் நிமிர்ந்து நில் , தனி ஒருவன் தந்த இமேஜை அவர் மெயிண்ட்டெயின் பண்ண வேண்டி இருக்கு

பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு  எல்லாவற்றிலும் நல்ல  முன்னேற்றம். பொதுவாவே வெற்றி ஒரு மனிதனை மேலும் உற்சாகப்படுத்தும் அடுத்த  வெற்றிக்கு அது தயாராக்கும், வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும், இது  ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் ஹிட். தனி ஒருவன் , பூலோகம் , மிருதன்






ஹீரோயினா லட்சுமிமேனன். இவருக்கு ஒரு ராசி உண்டு. இவர் நடிச்ச எந்தப்படமும் இது வரை ஃபிளாப் ஆனதில்லை. ராசியான நடிகைன்னு பேர் வாங்கிட்டார். இதுல கன்னம் உப்பலா இருக்கு. பீர் காரணமா?  போஷாக்கான சாப்பாடு  காரணமா? தெரியல .

இந்தப்படத்தில்  தனி வில்லன் என யாரும் இல்லை. சம்பளம்  மிச்சம். கண்ணுக்குத்தட்டுப்பட்ட எல்லாரும்  வில்லன் தான்.  காயம் ஆன எல்லாரையும் ஹீரோ ஷூட் பண்ணிட்டே  இருக்கனும் ம் அம்புட்டுதான் வேலை


பின்னணி  இசை  நல்லாருக்கு, ஒளிப்பதிவு  கன கச்சிதம்.  மேக்கப்மேன் க்கு ஏகப்பட்ட வேலை. எல்லார்க்கும்  கோர மேக்கப்  போடனும்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

டிராபிக் இன்ஸ் பெக்டருக்கும் ,சாதா இன்ஸ்பெக்டருக்கும் சம்பளம் 1,தான்.ஆனா டிராபிக் ல ரிஸ்க் கம்மி # மி


2 பொண்ணுங்க போற வண்டியை என்னைக்கும் டிராபிக் போலீஸ் கண்டுக்காது # மி

3 இந்த பனிக்கரடியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

நான் தாங்க மேரேஜ் புரோக்கர்


குடிச்ட்டு வண்டி ஓட்றியா?

ஜஸ்ட் பீர் தான்
பீர் ல பாலா கலந்திருக்கு?

5 ஏம்ப்பா, அவளைக்காப்பாத்துனே  சரி, ஆனா அவளைக்கட்டிப்பிடிக்காமயே அதை செஞ்சிருக்கலாமே? # மி


லேசா பசிச்சுது, அதான் லேஸ் சாப்ட்டுட்டு இருக்கேன்

 நல்லவேளை, சோம்பின்னு நினைச்சு லேசா சுட்டிருப்பேன் # மி




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  ஆதி+ ரஜினி = ஜெயம் ரவி.

எப்டி?புரியலையே?
மிருகம் + மனிதன் = மிருதன்


2 11.15 AM தான் ஷோ டைம் னு தெளிவா தியேட்டர்ல ,டிக்கெட்ல எழுதி வெச்சாலும் படத்தைப்போட்றா என கூச்சல் இடுவதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதிப்ரியம்


3 ரசிகர்களின்.ஆரவாரக்கூச்சல் கை தட்டலுடன் ஓப்பனிங் சீனே செம த்ரில் #,மி



4 என் முன்னாள் காதலி. உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி # குட் சாங் @,மி




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   சோம்பிகள் பற்றிய முதல் தமிழ்ப்படம் என்ற முத்திரையைத்தக்க வைக்கும் அளவு  நல்ல படம் தந்தது

2 அரசியல்வாதியாக வரும் நாயகியின் அப்பா கேர்க்டர் பண்ணும் அலப்பரைகள் காமெடி. குறிப்பா சோம்பிகள் கூட்டமாக வெறி கொண்டு வரும் காட்சியில்  என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என பஞ்ச்  கொடுப்பது



3  ஹீரோவின் நண்பர் காலைக்கடித்ததா  சோம்பி என டெஸ்ட் செய்யும்போது சப்போஸ் கால்ல காயம் இருந்தா என்னை சுட்டுடாதே மாப்ளை என அவர் நாயகரிடம் கெஞ்சும் காட்சி டச்சிங் சீன்


4  நாயகி நாயகன் காதல்  காட்சிகள், டூயட் , பிரிவுக்கான சரியான காரணம் கதைக்கு அவசியம் இல்லை  என முடிவெடுத்து  ட்ரிம் பண்ணி க்ரிஸ்ப் ஆக  கொண்டு போகும்  திரைக்கதை உத்தி

5  இந்நாள் புதுக்காதலர்  நாயகியை காப்பாற்ற வராத போது உயிரைப்பணயம் வைத்துக்காப்பாற்ற வந்த முதல் காதலரின் உண்மைக்காதலைப்புஎஇந்து கொள்ளும்  தருணம்



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  வேனில் இருப்பவர்களுக்கு கடி காயம் இருக்கா? என சுய பரிசோதனை செய்யச்சொல்றாங்க. எல்லாரும் செஞ்சுட்டு இல்லைங்க்றாங்க. காயம் இருந்தா  சுட்டுக்கொன்னுடுவாங்க என தெரிஞ்சும் யாராவது உண்மையை ஒத்துக்குவாங்களா? கலைஞர் டி வி 200 கோடி ஊழலை கலைஞரே ஒத்துக்கிட்டாலும் இது நடக்காதே? ஹீரோ அல்லது ஹீரோயின் ஒவ்வொருவரா செக் பண்ணி இருக்கனும், அதானே  முறை?


2  ஹீரோயின் தங்கையை கை பிடித்துக்கூட்டி வரும் ஆள் ஒரு சோம்பி. டக்னு கடிக்காம அவ கையைப்பிடிச்சு  இழுத்துட்டுப்போவது  ஹீரோ காப்பாத்த தரும் கால அவகாசம் தானே?

3  சோம்பிகளுக்கு  தண்ணீர் என்றால் அலர்ஜி என்ற உண்மை  தெரிந்த பிறகும் தண்ணீரை ஒரு ஆயுதமாக   உபயோகிக்க  போலீஸ் ஏன் ட்ரை பண்ணவே இல்லை? பின் பாதியில் ஒரு சீனில் மட்டும்  ஃபையர் சர்வீஸ் லாரியை யூசிங்

4  பாதிக்கப்பட்ட  எல்லோரும் கடி பட்ட அடுத்த நொடியே சோம்பியாக மாறும்போது  ஹீரோவின் தங்கைக்கு மட்டும் 90% பாதிப்பு  ஏற்படுவதும்  ஏதோ நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் நம்பும்படி இல்லை.





சி  பி  கமெண்ட் -ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் ஹிட். விறு விறுப்பான ஆக்சன் த்ரில்லர் - ஆல் செண்ட்டர் ஹிட் - விகடன் மார்க் -42 , ரேட்டிங் - 3/5 



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங் = 3/5 


திருவனந்தபுரம் அஜந்தா வில்  படம் பார்த்தேன்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (19/02/2016 ) 9 படங்கள் முன்னோட்ட பார்வை

1 மிருதன்
2 சேதுபதி
3 நவரச திலகம்

தமிழ்

4 NEERJA
5 TERE BIN LADEN DEAD OR ALIVE
7LOVESHHUDA

ஹிந்தி

8 OUT OF RANGE
9 AKASHAVANI

மலையாளம்

1 மிருதன்

கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில் ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் வெளியானது. அவருடைய முந்தைய எல்லாப்படங்களையும் விடக் கூடுதலான வரவேற்பு மற்றும் வசூலைப் பெற்று, அப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுத்தந்தது அந்தப்படம். அந்தப்படத்தின் வெற்றி காரணமாகவே சில ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த பூலோகம் படம் வெளியானது.
அந்தப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று ஜெயம்ரவிக்குப் பலம் சேர்த்தது. அதைத் தொடர்ந்து இந்தவாரம் ஜெயம்ரவி நடித்திருக்கும் மிருதன் படம் வெளியாகவிருக்கிறது. தனிஒருவன் படத்துக்குப் பிறகு அவர் நடித்தபடம் இது. தமிழ்த்திரையுலகில் இதுவரை வராத புத்தம்புதிய கதைக்களத்துடன் இந்தப்படம் தயாராகியிருக்கிறது. ஸோம்பிக்கள் பற்றிய படங்கள் ஹாலிவுட்டில் நிறைய உண்டு. தமிழில் இதுதான் முதல்படம்.
மனிதன் பாதி மிருகம் பாதி கொண்ட மனிதர்கள்தாம் ஸோம்பிக்கள் என்று சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வகை வைரஸ் தாக்குதல் காரணமாக இப்படி மாறுகிறார்கள் என்பது அறிவியல்காரணம். அதனால்தான் இந்தப்படத்துக்கு மிருகம் என்கிற சொல்லிலிருந்து முதலிரண்டு எழுத்துகளையும் மனிதன் என்கிற சொல்லிலிருந்து கடைசி இரண்டு எழுத்துகளையும் எடுத்து மிருதன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 


இந்தப்படத்தை நாய்கள்ஜாக்கிரதை என்கிற வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சக்திசௌந்தர்ராஜன் இயக்கியிருக்கிறார். இவரும் முந்தைய வெற்றி தந்த உற்சாகத்தில் அதைத் தக்கவைத்தே ஆகவேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார். இந்தப்படபத்தில் லட்சுமிமேனன் முதன்முறை ஜெயம்ரவியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அவர் இதுவரை நடித்த எல்லாப்படங்களுமே வெற்றி என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர். இதனால் இந்தப்படமும் வெற்றியடையும் என்கிற நம்பிக்கை திரையுலகில் இருக்கிறது. 



புதிய கதைக்களம், ஒரேநாளில் நடக்கிற கதை என்பதால் மிக வேகமான விறுவிறுப்பான திரைக்கதை, வெற்றிகளில் இருக்கும் இயக்குநர், நாயகன் மற்றும் நாயகி ஆகியோரின் கூட்டணி ஆகிய எல்லா அம்சங்களும் இந்தப்படத்தில் இருப்பதால் இந்தப்படமும் தனிஒருவன் வெற்றியைத் தக்கவைக்கும் படமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.


தமிழ் சினிமா பொறுத்தவரை எப்போதும் ரஜினி, கமல், விஜய், அஜித்படங்களுக்கு தான் பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். இதற்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகிய நடிகர்கள் உள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டு கொடுத்த ஹிட்ஸால் ஜெட் வேகத்தில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்துவிட்டார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் நாளை மிருதன் படம் திரைக்கு வரவுள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி வகை படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகாகவே உள்ளது. படமும் ஆங்கிலப்பட பாணியில் 2 மணி நேரத்திற்கு குறைவான ரன்னிங் டைம் தான்.
இப்படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்கில் உலகம் முழுவதும் நாளை ரிலிஸாகவுள்ளது. மிருதன் படக்குழுவினர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

2 சேதுபதி

விஜய் சேதுபதி முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிப்பது, ஹீரோயின் ரம்யா நம்பீசன், பண்ணையாரும் பத்மினியும் இயக்குநர் அருண்குமார் என்று எக்கசக்க எதிர்பார்புகளுடன் நாளை 'சேதுபதி' திரைப்படம் வெளியாகிறது.


விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான நானும் ரவுடிதான் படத்தில் ரவுடியாக நடித்திருந்தார். படத்தைத் தூக்கி நிறுத்தியது நயன்தாரா என்றாலும், காமெடி ரவுடியாக விஜய் சேதுபதியும் கவர்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில் தனது பீட்சா ஹிட் ஹீரோயின் ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடித்திருக்கும் சேதுபதி திரைப்படம் நாளை வெளியாகிறது. போலீசாக விஜய் சேதுபதி ஜெயிப்பாரா என்ற கேள்விக்கான விடை நம்மிடம் இல்லை என்றாலும் என்னென்ன காரணங்களுக்காக சேதுபதியை பார்க்கலாம் என்று பார்த்து விடுவோம்.





சூது கவ்வும் தாஸ், சுமார் மூஞ்சி குமார், நானும் ரவுடிதான் பாண்டி என்று எல்லா வேடங்களுக்கும் பொருந்திப் போகும் விஜய் சேதுபதி கண்டிப்பாக சேதுபதி வேடத்திலும் அசத்தியிருப்பார்.


போலீஸ் படமென்பதால் ஏற்றிய உடம்புடன் ஆக்ஷன் காட்சிகளில் விஜய் சேதுபதி மிரட்டி எடுத்திருப்பதாக கூறுகின்றனர். படத்தின் புரோமோ காட்சிகளிலும் அது நன்றாக தெரிகிறது. விஜய் சேதுபதியை ஆக்ஷன் ஹீரோவாக பார்க்க ஆசைப்படுபவர்கள் தாராளமாக சேதுபதியை பார்க்கலாம்

 பீட்சாவில் கலக்கிய விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். 2 குழந்தைகளுடன் இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுகிறது.
இவரின் படங்களில் கதைக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமென்பதால் பஞ்ச் வசனங்கள் மற்றும் ஹீரோக்களின் என்ட்ரி பாடல் ஆகியவை கண்டிப்பாக இருக்காது. இந்தக் காரணங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தாலும் ரவுடி போல போலீஸ் வேடத்திலும் விஜய் சேதுபதி ஜொலிப்பாரா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
3 நவரச திலகம்

பர்மா' படத்தைத் தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சந்திரன் ராவுடன் இணைந்து தயாரித்துள்ள படம் "நவரச திலகம்'. மா.கா.பா.ஆனந்த் நாயகனாகவும், ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன், லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' பேஹான்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் காம்ரன் கூறியதாவது, ""ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய சாதனை படைத்து, உலக அளவில் புகழ்பெற வேண்டும் என்பதுதான் நாயகன் மூர்த்தியின் ஒரே ஆசை. "ஓஹோன்னு வாழ்க்கை' - இதுதான் அவனது தாரக மந்திரம். அரை குறையாகத் தெரிந்த தொழில் நுணுக்கத்தை வைத்து, எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு அப்பா சேர்த்த சொத்தை எல்லாம் காலி செய்து கொண்டிருக்கும் அதிபுத்திசாலி. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் மா.கா.பா.ஆனந்த் தூள் கிளப்பி இருக்கிறார். அவருக்கு ஆலோசனை வழங்குபவராக கருணாகரன்... போதுமே... இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது... நூறு சதவீதம் நகைச்சுவைக்கு கேரண்டியான படம்''.

4 NEERJA


பாலிவுட் ஹீரோக்களைப் போலவே ஹீரோயின்களும் இப்போது வாழ்க்கை வரலாறு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சோனம் கபூரும் அப்படியொரு படத்தில்தான் இப்போது நடித்துவருகிறார்.

பான் அம் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டபோது, பயணிகளைக் காப்பாற்ற முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டவர் விமானப் பணிப்பெண் நீரஜா பனோட். இறப்புக்குப் பின் அவருக்கு இந்திய அரசின் ‘அசோக சக்கர’ விருது வழங்கப்பட்டது.


‘நீரஜா பனோட்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தில்தான் சோனம் கபூர் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராம் மாதவாணி இந்தப் படத்தை இயக்குகிறார்.


“இந்தப் படம் நாட்டின் இளம் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். அவர்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டியதை இந்தப் படம் அறிவுறுத்தும்” என்று சொல்கிறார் சோனம் கபூர்.

பாலிவுட் நாயகி சோனம் கபூரின் அடுத்த படமாக உருவாகி வரும் நீரஜா திரைப்படத்தின் ஆராய்ச்சிக்காக மட்டும் ரூ. 3 கோடி செலவாகியுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. நீரஜா பானட் எனும் விமான பணிப்பெண் 1986ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாளன்று தான் பணி செய்த விமானம் சில விமான கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அப்போது, தனது உயிரை துச்சமென நினைத்து பயணிகளை காப்பாற்ற முயன்று தன் உயிரையும் தியாகம் செய்த 23 வயது பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றை நீரஜா என்ற தலைப்பில் படமாக உருவாக்கி வருகின்றனர்.



இந்த படத்தில் உண்மைத் தன்மை மேலோங்க 15 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்குச் சென்று, அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அவர்கள் உறவினர்களிடம் உண்மைத் தகவலைத் திரட்டி படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளனராம். அதற்காகத்தான் இந்த ரூ. 3 கோடி செலவு ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


5 TERE BIN LADEN DEAD OR ALIVE

A common man who happens to look like Osama Bin Laden is noticed by a man from the American Government and plans to film the capture of Bin Laden. A film director (Manish Paul) helps making the Bin Laden film but their film making is encountered to many problems including the man playing Bin Laden being a complete lunatic. Will the government of the United States be able to show the world how they really caught the man himself?
\\\\\



BHK [email protected] is a 2016 Indian Hindi-language comedy film directed by Rakesh Chaturvedi Om and produced by Dhiraj Rokad, with Rokad, Ashok Tripathi, and Rakesh Chaturvedi Om.The film is released on 5 february 2016




7 LOVESHHUDA


    After a man drinks too much and wakes up next to a strange girl, he finds himself falling for her.
    Initial releaseFebruary 19, 2016


8 OUT OF RANGE


Out of Range is a 2016 Indian Malayalam-language comedy drama film directed by Johnson V. Devassy. The film stars Vishnu Unnikrishnan, Askar Ali, Sumith Samudra, and Ajayaghosh. It is produced by Suresh Kumar T. under the banner of Malavika Cine Creations. Anish Babu Abbas does the cinematography while Rakesh Kesavan and Lonely Doggy score the music. The screenplay is written by Devassy along with Shafeek Mohammed and Fahad Shan


a




Akaash and Vani are in love. Soon after college, Akaash leaves for London and Vani's parents force her to marry Ravi, who ill-treats her. Will Vani get a second chance and will she return to Akaash?




நன்றி- மாலைமலர் , தினமணி ,தினமலர். விகடன் , http://tamil.filmibeat.com/news/vijay-sethupathi-s-sethupathi-released-tommorrow-038917.html#slide43842