Skip to content

Thursday, January 14, 2016

தாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்

ஒரு சிறந்த படைப்பாளியின் வீழ்ச்சி  எப்போது ஆரம்பிக்கிறது? தான் படைக்கும் எல்லாப்படைப்பும் உயர்ந்ததே என தன்னைத்தானே உயர்வாக எண்ணும்போதும் , தான் என்ன படைத்தாலும் மக்கள் அதைக்கொண்டாடுவார்கள் என உயர்வு நவிற்சியாய் எண்ணும்போதும்.

சேதுவில் சிகரம் தொட்டு  பிதா மகனில் தன்னை நிலை நிறுத்தி , நந்தா வில் உருக வைத்து  நான் கடவுள் படத்தில் கண் கலங்க வைத்த , பரதேசியில் பதை பதைக்க வைத்த இயக்குநர் பாலா வின் சறுக்கல் படம் இது

சன்யாசி கரகாட்டக்குழு வெச்சிருக்கார்  ஹீரோ. அவரோட குழுவில் கரகாட்டக்காரியா இருக்கும் சூறாவளி ( ஹீரோயின் பேரே சூறாவளிதான்) ஹீரோவை சின்சியரா லவ்வுது. ஹீரோவும் தான்.ஆனா அவர் வெளிப்படையா தன் அன்பைக்காட்டிகலை. பொதுவாவே ஆம்பளைங்களுக்கு அன்பை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியாது.ஆனா சுயநலம் அற்ற அன்புக்கு அடையாளமே ஆண்கள் தான்.


ஒரு கவர்மெண்ட் ஆஃபீசர் ஹீரோயினைப்பொண்ணுக்கேட்டு வர்றார். ஹீரோயின் அம்மாவும் ஹீரோ கிட்டே நைச்சியமாப்பேசி சம்மதம் வாங்கிடுது. ஆனா ஹீரோயின் சம்மதிக்கலை. வலுக்கட்டாயமா ஹீரோயினுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடறாங்க ,  முதல் இரவு அன்னைக்கு தான் மாப்ளை ஒரு போதை அடிமைன்னு தெரியுது.

இடைவேளை.அதுக்குப்பின் என்ன ஆகுது? என்பதே கதை



இசை ஞானி இளையராஜாவின் ராஜாங்கம் 1000 வது படம் என்னும் அடையாளத்துடன் களை கட்டுகிறது. ஆனால்  எல்லாம் விழலுக்கு இரைத்த நீர்

ஹீரோவா எம் சசிகுமார் . ஒரு பெரிய ஆறுதல் இதில் நண்பன், நட்பு , முதுகில் குத்திட்டான் டயலாக்ஸ் எதுவும் இல்லாததே.இந்தக்கதாபாத்திரத்துக்கு எம் சசிகுமாரை ஏன் பாலா தேர்ந்தெடுத்தார் என்பது  தெரியலை . ஒரு வேளை அவரும் படத்தில் ஒரு புரொடியூசர் என்பதாலோ என்னவோ?


ஹீரோயினா வரலட்சுமி. நளினம்னா என்னன்னே தெரியாத ,பெண்மையின் நாணம் 1 % கூட இல்லாத , தமிழர்களுக்கு சிறிதும் பிடிக்காத  ஆமபளைத்தனமான கேரக்ட்ர். கேரக்டர் செம பொருத்தம். இந்த கேரக்டருக்கு இவர் தான் பொருத்தமா இருப்பார்னு விஷால் தான் சிபாரிசு செஞ்சாராம். எண்ட ஈஸ்வரி

 ஆனால் வர லட்சுமியின் பங்களிப்பு பிரமாதம். படத்தில் முழு வீச்சும் அவரது நடிப்பை நம்பியே இருக்கிறது . கரகாட்டம் என்னமா ஆடறார்? ஹீரோவை  ஓங்கி உதைக்கும் காட்சியில் அப்படியே அப்பா சரத் குமார்  கேப்டன் பிரபாகரன் -ல்  மன்சூர் அலிகானை உதைப்பது போல் செம சீன்.பின் பாதியில்  சோக நடிப்பில் கலங்க வைக்கிறார்

 வெல்டன் வரு,


ஹீரோவின் அப்பா , ஹீரோயின் அம்மா  இருவர் நடிப்பும்  கன கச்சிதம்

இளையராஜாவின்  இசை  வழக்கம் போல் அற்புதம், பின்னணி இசை ஆங்காங்கே  கேப்பில் கெடா வெட்டுது.க்ளைமாக்சில் பிஜிஎம்மில் கலக்கல்


திரைக்கதை அமைக்கும்போது பாலா பல இடங்களில் சறுக்கி இருக்கிறார். லாஜிக்  அங்கங்கே உதைக்கிறது


 வசனகர்த்தாவாய் இயக்குநர் பேனாவில் பச்சை மை ஊற்றி புகுந்து விளையாடி இருப்பது பின்னடைவு . பெண்கள் தியேட்டரில் குடும்பத்தோடு பார்க்க முடியாது





மனதைக் கவர்ந்த  வசனங்கள்

மாமா.என் சைஸ்.என்ன?


ஏய்.எனக்கெப்டிதெரியும்?
ஏன்?எத்தனை டைம் உத்து உத்து பார்ப்பியே?# தா த (A)


2 த # ஏம்மா.என்ன சைஸ் ப்ரா வேணும்?


நீயே பார்த்து சொல்யா
கடைக்காரன் =,ம் ட்ரிபிள் எக்ஸ்
அப்டின்னா?
இருப்பதிலேயே பெரிய சைசு



3 கிளாஸிகலா நல்லா வாசிக்கறீங்க.ஜனரஞ்சகமா மாடர்னா வாசிக்க முடியுமா?
எப்டி?பிச்சைக்காரன் சாப்பாட்டுக்கலன் மாதிரி? #,தா த ( உள் குத்து )

4 வரலட்சுமி =,சரக்குக்கப்பல் னு சொல்றாங்க.சரக்கே இல்லையே?#,தா த


5 வரு =,நான் குத்தவெச்சு 15 வருசம் ஆகுது.இன்னும் கன்னி கழியாம இருக்கேன் .உன் பின்னாலயே சுத்திட்டு இருக்கேன் #,தா த


6 ஆட்டக்காரியோட ஆட்டத்தை யார் பார்க்கறா? ஆள் எப்படி இருக்கா?னுதானே பார்க்கறாக # தா த


ஆட்டக்காரின்னாலே அவுசாரிகதானா?அட போங்கப்பா # தா த

8 சரக்கு அடிக்கறவனுக்கு மருந்து மாத்திரை எல்லாம் சைடு டிஷ் மாதிரி #,தா த






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

தாரை தப்பட்டை 128 நிமிசம். சின்னப்படம்.ஆனா பெரிய படம். இசை ஞானி + பாலா


2 இளையராஜா இசை எனில் முதல் காட்சி யிலிருந்தே இசை யின் ஆட்சி தொடங்கி விடும் # தா த


3 ட்விட்டர் சன்யாசி ஹேன்டிலை உல்டா பண்ணி சன்னாசி தாரை தப்பட்டைக்குழு னு பேர் வெச்ட்டார் பாலா

4 ஓப்பனிங் சாங் செம குத்தாட்டம்

வரலட்சுமி அப்டியே ஆம்பள மாதிரியே டான்ஸ் கதகளி பண்ணுது # தா த

5 பாலாவின் படங்களிலேயே நளினம் இல்லாத நாசூக்கு இல்லாத ஒரு பெண் பாத்திரம் முதல் முறையாக.ஆல் க்ரெடிட் கோஸ் டூ வரலட்சுமி # தா த


எந்த ஆட்டக்காரன் தான் நல்லா வாழ்ந்திருக்கான்? இல்ல நிம்மதியா செத்திருக்கான் ? #,தா த


7 ஹீரோயின் ஹீரோவை எட்டி உதைப்பது போல் சீன் வைக்க இருவரால்தான் முடியும்

1 கே பாலச்சந்தர்
2 பாலா


8 கரகாட்டக்காரியா வரலட்சுமி ஆடும் தரை குத்தாட்டத்தையும் கேமரா ஆங்கிளையும் பார்த்தா சரத்தும் வருத்தப்படுவாரு.விஷாலும் விசனப்படுவாரு.# தா த

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 கரகாட்டக்காரன் படம் எந்த அளவு கமர்ஷியல் ஹிட் ஆச்சு என மக்களை மீண்டும் நினைக்க வைக்கும் அளவு  இதில் சொதப்பியதற்கு பாராட்டு


2  விபச்சாரப்பெண்கள் பற்றிய காட்சி அமைப்பில் இதான் சாக்குன்னு காட்சிகள் வைக்காமல் இருந்ததற்க்கு



இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  வெளிநாட்டு புரோகிராமுக்கு புக் செய்பவர்கள் அப் & டவுன் டிக்கெட்டை முதலிலேயே கையில் கொடுக்க மாட்டார்களா?  ஹீரோ அதைக்கூட கேட்டு வாங்க மாட்டாரா?


2  ஹீரோயினோட அம்மா மாப்ளையைப்பத்தி 10 பேர்ட்ட விசாரிச்சுதான் பொண்ணு   தர சம்மாதிச்சேன்னு ஒரு சீன்ல டயலாக் வருது. ஆனா மாப்ளை கவர்மெண்ட் ஆஃபீசர் இல்ல புரோக்கர்  அப்டினு ஏன் தெரியலை?


3   விபச்சாரக்கும்பல் பற்றிய காட்சி அமைப்புகள்  கொடூரம்  வக்ரம் .நான் கடவுள் படத்தில்  பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர் வில்லன் அதையே  டெவலப் பண்ணி லேடீஸ் புரோக்கர்  வில்லன். எப்டி உங்களால் மட்டும் இப்படி உயர்வாய் சிந்திக்க முடியுது?


4 ஹீரோ  தான் ஆசைப்பட்ட பெண்ணின் கணவன் எப்படிப்பட்டவன்? என விசாரிக்க மாட்டாரா? மேரேஜ்க்குப்பின் அவர் வாழ்க்கை எப்படி இருக்கு?ன்னு பார்க்க மாட்டாரா?

5   பிதா மகன் ல சிம்ரன் ஆடும் குத்தாட்டம் போல் ஒரு ஆல் சாங்க்ஸ் ரீமிக்ஸ் பாட்டு இதிலும் வருகிறது. ஆனா  ரஜினி , விஜய் , சூர்யா  என பல ஹீரோக்களை நக்கல் அடிப்பது போல் பாட்டு வருது. குறிப்பா  ரஜினியை ஓவர் நக்கல்.இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்குவாங்களோ? பொதுவா கலைப்பூர்வமான இயக்குநர்களுக்கு ஜன ரஞ்சகமான மாஸ் ஹீரோக்கள் மேல் ஒரு இனம் தெரியாத கோபம் இருக்கும், ஆனால் அதை இப்படி வக்ரமாய் வெளிப்படுத்தக்கூடாது

6  ஒரு பெரிய பணக்காரர்  குழந்தை வேண்டும் எனில்  நல்ல  ஹை குவாலிட்டி டாக்டரைப்பார்ப்பாரா? லேடீஸ் புரோக்கரிடம் போய் பேபிக்கு ரெடி  பண்ணனும்பாரா?

7  எதுக்கெடுத்தாலும் ரவுடித்தனம்  பண்ணும் நாயகி  கணவன் கொடூரன் என தெரிந்த பின்னும் பூனையாய் இருப்பது ஏன்? அதிலும் காதலனைக்கணவன் கொல்ல முயற்சிக்கும்போது கூட அழுதபடி கெஞ்சுவது ஏன்?




சி  பி  கமெண்ட்
தாரை தப்பட்டை - விபச்சாரக்கும்பல் பற்றிய கொடூரமான கதை, குடும்பப்பெண்கள் தியேட்டரில் பார்ப்பதைதவிர்க்க- விகடன் - 40 , ரேட்டிங் - 2.25 / 5


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - சுமார்



 ரேட்டிங்-2.25 / 5



திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டரில் படம் பார்த்தேன்

கதகளி -சினிமா விமர்சனம்


ஈரோட்ல  தம்பான்னு ஒரு ரவுடி இருந்தான். சென்னைல ஒரு அமைச்சரை வாக்கிங் போகும்போது போட்டுத்தள்ளிட்டாங்க. இந்த 2 சம்பவத்தையும் கோர்த்து  ஒரு ரவுடியை க்ரியேட் பண்ணி இருக்காங்க, அவன் தான் வில்லன்,

கடலூர் மீனவர்கள் , சென்னை மீனவர்கள் 2 க்ரூப்க்கும்  எல்லைத்தகறாரு நடக்குது. இதுல  ரவுடியிசம்  தலை தூக்குது. இது ஒரு ட்ராக் .


ஹீரோவோட அண்ணன்  வில்லன் தம்பா கிட்டே வேலை செஞ்சவன். தனியா தொழில் பண்ணலாம்னு வெளில வர்றார்.அது வில்லனுக்குப்பிடிக்கலை. இது ஒரு ட்ராக்


 குள்ள நரிக்கூட்டம் படத்துல  வர்ற மாதிரி  ஹீரோ  ஒரு  ராங்க் கால் மூலம் ஹீரோயினை கரெக்ட் பண்றாரு . அவங்க லவ் எபிசோடு 40  நிமிசம்  ஓடுது.


 அந்த  வில்லன் ரவுடி  யாராலோ கொலை செய்யப்படறார். பலர் மேல சந்தேகம். அந்த ரவுடியால பாதிக்கபட்டவங்க பலர் . அதுல  ஹீரோவும் ஒருவர். 

ஹீரோ க்கு 4 நாள் ல கல்யாணம்.  இப்போ இந்த கேஸ்  விஷயமா  போலீஸ்  சென்னைல  இருக்கும்  ஹீரோவை கடலூர் வரச்சொல்லுது. அந்த ரவுடியோட ஆளுங்க  ஹீரோவை போட்டுத்தள்ள துடிக்கறாங்க

 என்ன ஆச்சு?  யார் கொலைகாரன்? என்பதே மிச்ச மீதிக்கதை 



ஹீரோவா புரட்சித்தளபதி  விஷால் .திமிரு படத்தில் வந்தது போல் கண்ணாடி போட்ட கெட்டப். ஹேர் ஸ்டைலில் வித்யாசம் காட்டி  இருக்கார். படம் முழுக்க மறை முகமா நம்ம சித்தப்பா சரத் சார்க்கு பஞ்ச் கொடுக்கார். வரலட்சுமிக்கு ஹிண்ட்ஸ் கொடுக்கறார். 


ஹீரோயினா காத்ரீன் தர்சா. ஹோம்லி லுக்குன்னும்  சொல்லிட  முடியாது , கிளாமர் லுக்குன்னும்  சொல்லிட முடியாது, மீடியம்  ஃபிகர்னு வெச்சுக்கலாம்.

நடிப்புக்கு எல்லாம் அதிக வேலை இல்லை

 காமெடியனா கருணாஸ். ரொம்ப வயசாகிடுச்.  


பாடல் காட்சிகள்  நல்லா எடுத்திருக்காங்க. பாண்டிய நாடு படம் போலவே  திரைக்கதையில்  ஒரு டெம்போ மெயிண்ட்டெயின் பண்றாங்க . குட் .

 ஆனா ரவுடியிசம்  , ஹீரோ ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு வருவது இந்த ஒரே ஃபார்முலாவை  இன்னும் எத்தனை நாளைக்கு விஷால்  யூஸ் பண்ணுவாரோ? சலிப்பு 






மனதைக் கவர்ந்த  வசனங்கள்


ஹீரோ ஓப்பனிங் சீன் டயலாக் =,நான் ஊருக்குள்ளே வந்துட்டேன் "

பாண்டிராஜ் 10 மாசமா யோசிச்சு எழுதுன பஞ்ச்சாம்


2 நல்லது பண்ணனும்னு பண்றீங்களா? 4 பேருக்கு சொல்லனும்னு பன்றீங்களா? # க


3 உன்னைக்கண்டாலே எனக்குப்பிடிக்கலை.

25 வருசமா வளர்த்த எங்க அம்மா அப்பாவுக்கே என்னைப்பிடிக்காது.உங்களுக்கு எப்டி என்னைப்பிடிக்கும்?


# க # உலகத்துலயே சுலபமானது எது தெரியுமா?
லவ் பண்றது.

உலகத்துலயே கஷ்டமானது எது தெரியுமா?

லவ் பன்றது



5 வில்லன் .பஞ்ச் = எவ்ளவ் தான் ஊர்க்"குருவி" உயர உயரப்பறந்தாலும் அது பருந்தாகாது.இங்கே நான் தான் பருந்து # க . எதுனா உள்குத்தா?


6 பாடி கடலூர்.பாடி லேங்க்வேஜ் கலிபோர்னியாவா?டேய்.- ஹீரோயின் டூ ஹீரோ # க


7 அவன் எஸ் ஆனா நீ மிஸ் ஆகிடுவே @ க

8  உண்மைக்குப்பயப்படறவன் வேற ஒருத்தருக்கும் பயப்படமாட்டான் # கதகளி அப்ளாஸ் டயலாக்




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

கேரள கதகளி போஸ்டர்களில் விஷால் ,த ரியல் ஆக்சன் ஹீரோன்னு விளம்பரம்.அப்போ மத்தவங்க எல்லாம் டூப்ளிகெட்டா?


2 கதகளி 125 நிமிடம் தான்.சின்னப்படம்


3 ஓப்பனிங் லயே சுறா எபக்ட்.கடல் பிரதேசத்தைக்காட்றாங்க. அய்யய்யோ.ஹீரோ கடல் கண்ணன் போல் பீறிட்டு வந்துடுவாரோ?


4 ஹீரோயின் பேரு கேத்"ரின்" தெர்சா.தங்கச்சி பேரு கேத்"சர்f" சரசாவா?


5 ஹீரோ ஓப்பனிங் சாங் ல எல்லாமே என் கிட்டே இருக்கு ங்கறார்.சித்தப்பாக்கு மெசேஜ். வரலட்சுமிக்கு மசாஜ்

6 ஹீரோயின் பேரு மீனு குட்டியாம்.ஹீரோயின் அம்மா மீனம்மா வா?சொல்லவே இல்ல டீச்சரு # கதகளி







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 ஆக்சன் காட்சிகள்  அதகளம், ஸ்டண்ட்  மாஸ்டர்  கலக்கிட்டார். தேவை அற்ற சண்டைக்காட்சிகள் எதுவும் இல்லை. ஹீரோ கதகளி ஃபைட் போடும்போது பின்னணி  பிஜிஎம் பக்கா


2  வில்லன் ஆட்களை அடிச்சுத்துவைச்சு செல்ஃபி எடுத்து  வில்லன் ஃபேஸ்புக்கில் அப்டேட்டுவது  செம

3  போலீஸ் ஆஃபீசராக வருபவர்  பாடிலேங்குவேஜ் , நடிப்பு  எல்லாம்  கன கச்சிதம்.


இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  செல் பில்லில்  செல்போன் நெம்பர் ஓனர் அட்ரஸ் வராது. ஹீரோ ஹீரோயின் அட்ரஸ் கண்டுபிடிக்க  தகிடுதித்தம் பண்ணி  டீலர்ட்ட அட்ரசோட செல் பில் வாங்கறது நம்பும்படி இல்லை. அப்டி அட்ரஸ் தரனும்னா ஐ டி ப்ரூஃப் கேட்பாங்க

2  போலீஸ்க்கு யார் எவ்ள்வ் மாமூல் கொடுத்தாலும் அதை 4 பேர் முன்னால சொல்லிக்காட்டிட்டு இருக்க மாட்டாங்க. போலீஸ் அதுக்கு அனுமதிக்காது. இதுல வில்லன் அடியாள் ஸ்டேஷனுக்கே வந்து இன்ஸ்பெக்டர்ட்ட  கை நீட்டி  காசு வாங்கற இல்ல?னு கத்தறார். சாத்தியமே  இல்ல


3  ஹீரோவோட அண்ணன் 2 லட்சம் ரூபா அவசர உதவிக்குக்கேட்கறார். ஹீரோ எதுக்கு?ன்னு கேட்டப்போ மென்னு முழுங்கறார். ஏதோ சஸ்பென்ஸ் சின் அப்டினு நினைச்சா  புஸ். யாரோ ஒரு பொண்ணுக்கு ஆபரேசன்  செலவுக்குன்னு ஃபிளாஸ்பேக்ல  சொல்றார். இதை அப்பவே  சொல்லி இருக்கலாமே? வில்லன் தம்பாவைப்போட்டுத்தள்ள கூலிப்படைக்கு கூலி தரவோன்னு டவுட் வர வைக்கவா?  யாருக்கும் அப்டி ஒரு டவுட் வர்ல

4  ஹீரோயின்  ஹீரோவைத்தேடி  கடலூர் வருவது  போலீஸ் அவரைப்பிடித்து வைப்பது  எல்லாம் ட்ராமிடிக்


5  லேடி கான்ஸ்டபிள் இல்லாத  போலீஸ் ஸ்டேஷனில் ஹீரோயினை  இன்ஸ்பெக்டர் லாக்கப்பில் பிணையக்கைதியாய் வைப்பது எப்படி? சட்டப்படி அதுக்கு இடம் இல்லையே?








சி  பி  கமெண்ட்- கதகளி - மாமூல் ஆக்சன் மசாலா - ரவுடியிசம், சேசிங்க் ,பாண்டிய நாடு க்குக்கீழே,ஆம்பள க்கு மேலே- விகடன் மார்க் - 41 , ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே



 ரேட்டிங்
-  2.5 / 5


கேரளா திருவனந்தபுரம் அஜந்தாவில் படம் பார்த்தேன். 1200 பேர்  சீட் கெபாசிட்டி தியேட்டர்ல 280 பேர் இருந்தாங்க .

பொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை

1 ரஜினி முருகன்
2 கதகளி
3 தாரை தப்பட்டை
4 கெத்து
Monsoon Mangoes ( மலையாளம்)
6  PAAVADA ( மலையாளம்)
பொங்கல் வெளியீடாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 4 படங்கள் வெளியாக இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.


'கதகளி', 'கெத்து', 'தாரை தப்பட்டை' ஆகிய படங்கள் முதலில் தங்களது பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியது. இறுதியில் இக்கூட்டணியில் இணைந்தது 'ரஜினி முருகன்'.


4 படங்களுமே முக்கியமான படங்கள் என்றாலும், 'ரஜினி முருகன்' படம் வெளியீடுவது குறித்து பைனான்சியர்களிடம் திருப்பதி பிரதர்ஸ் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. 'கதகளி' மற்றும் 'கெத்து' ஆகிய படங்கள் முதலில் தங்களது திரையரங்க ஒப்பந்தத்தை தொடங்கின.



1050 திரையரங்குகளை 4 படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதால் முதலில் ஒப்பந்தத்தை தொடங்கிய 'கெத்து' மற்றும் 'கதகளி' ஆகிய படங்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். ஆனால், டிசம்பரில் திரையரங்குகள் வெளியீட்டுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை 'ரஜினி முருகன்' படக்குழு அப்படியே பொங்கல் வெளியீட்டுக்கு புதுப்பித்தது. இதனால், மீண்டும் திரையரங்க ஒப்பந்தத்தில் சிக்கல் நீடித்து வந்தது.



இறுதியாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஏரியாக்கள் தவிர, 'ரஜினி முருகன்' மற்ற இடங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த பொங்கல் திரையரங்க உரிமையாளர்களுக்கு உற்சாகப் பொங்கலாக அமைந்திருக்கிறது.


அனைத்து திரையரங்குகளிலுமே 2 படங்கள் வெளியாகிறது. காலை - மதியம் காட்சிகளில் ஒரு படமும், மாலை - இரவு காட்சிகளில் ஒரு படமும் திரையிட இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து மக்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் 4 படங்கள் வெளியாகி இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.



1 ரஜினி முருகன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'ரஜினி முருகன்' வெளியீடு தள்ளி வைப்புக்கான காரணம் ஈராஸ் நிறுவனம் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
'ரஜினி முருகன்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து படத்தை செப்டம்பர் 17ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், திருப்பதி பிரதர்ஸ் கடன் பிரச்சினைகள் காரணமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பிரச்சினை முடிவுற்று வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என பலரும் காத்திருக்கிறார்கள். செப்டம்பட் 17ம் தேதி படம் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விசாரித்த போது, "முதல் காரணம் ஈராஸ் நிறுவனம் தான். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அவர்களுக்கு பெரும் தொகை கொடுக்க வேண்டியதிருக்கிறது. பணம் கொடுத்த மற்றவர்களோ இப்படம் வெளியானால் தான் அந்நிறுவனத்துக்கு பணம் வரும் என்பதால் வெளியீட்டில் தலையிடவில்லை.
ஆனால், ஈராஸ் நிறுவனம் பணம் கொடுத்தால் மட்டுமே தங்களால் அனுமதி அளிக்க முடியும் என்று கூறிவிட்டது. லிங்குசாமியும் மும்பைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அந்நிறுவனமோ, வட்டியுடன் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே வெளியீடு என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அபிராமி ராமநாதன் மூலமாக ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கும் மறுத்துவிட்டது ஈராஸ் நிறுவனம். ஈராஸ் நிறுவனத்தின் கடனை அடைத்தால் மட்டுமே 'ரஜினி முருகன்' வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது" என்றார்கள்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 'உத்தம வில்லன்' வெளியீட்டின் போதும், ஈராஸ் நிறுவனத்தால் தான் தாமதமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்டோபர் 21ம் தேதி 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

ரஜினி முருகன் என்பது 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்சிவகார்த்திகேயன்கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரிராஜ்கிரண்,சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்




ரஜினி முருகன்
இயக்குனர்பொன் ராம்
தயாரிப்பாளர்என். சுபாஷ் சந்திரபோஸ்
லிங்குசாமி
கதைபொன் ராம்
நடிப்புசிவகார்த்திகேயன்
கீர்த்தி சுரேஷ்
இசையமைப்புடி. இமான்[1]
ஒளிப்பதிவுபாலசுப்ரமணியம்[1]
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
விநியோகம்ஈராஸ் இன்டர்நேசனல்[1]
வெளியீடுஜனவரி 14, 2016 [2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
2 கதகளி


விஷால், கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'கதகளி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை தற்போது படுமும்மரமாக நடத்தி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இன்னும் 1 வாரத்தில் மொத்த படமும் முடிந்துவிடும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் வழங்க முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்து வருகிறார்.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று விஷால் மற்றும் பாண்டிராஜ் இருவருமே கூட்டாக அறிவித்து இருக்கிறார்கள்.




விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கதகளி’. இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் விஷால் பேசும்போது, ‘எல்லோரும் என்னிடம் இந்த படத்துக்கு ஏன் ‘கதகளி’ என்று தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் கதகளி தலைப்பு தமிழ் தான் என்று தெரிந்த பின்னர்தான் படத்துக்கு கதகளி என்று பெயர் வைத்தோம். நான் முதன் முறையாக இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைந்து பணியாற்றி உள்ளேன்.
இது மிகவும் சிறப்பான கதை. என்னுடைய படங்களில் இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாமல் வருவது இது தான் முதல் முறை. படத்தில் இடம் பெரும் சண்டை காட்சிகள் அனைத்துக்கும் ஒரு காரணமும், லீடும் நிச்சயம் இருக்கும். படத்தில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும். அது தான் ‘கதகளி’. என்ன அழைப்பு என்பதை எல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
படத்துக்கு இசையமைப்பாளர் ஆதி மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தில் அவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மிகச்சிறப்பாக படத்தை படம் பிடித்துள்ளார். கேத்ரீன் தெரசா நடிப்பு நிச்சயம் பேசப்படும்.
என்னை பொறுத்தவரை பொங்கலுக்கு வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய படத்துக்காக இன்னும் அதிகமாக வேண்டி கொள்கிறேன்’ என்றார்.

3 தாரை தப்பட்டை


பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த விஷால்தான், தனது தோழி வரலட்சுமிக்கு தாரை தப்பட்டையில் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தார் என்ற வதந்தி உலவி வருகிறது. தாதரை தப்பட்டை பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை வரலட்சுமியிடம் கேட்டேவிட்டனர்.

 
 
விஷால் காரணமில்லை, சங்கீதா மேடம்தான் காரணம் என்றார் வரலட்சுமி. தாரை தப்பட்டை நடனம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் வரலட்சுமியிடம் பேசவிருப்பதாக பாலா சங்கீதாவிடம் சொல்ல, சங்கீதா அதனை வரலட்சுமியிடம் கூறியுள்ளார். அதன் பிறகே பாலா - வரலட்சுமி சந்திப்பு நடந்துள்ளது.
 
அதன் பிறகும் ஒரு மாத நடனப் பயிற்சிக்குப் பிறகே வரலட்சுமியை நடிக்க வைப்பது என முடிவு செய்தாராம் பாலா.


4 கெத்து


மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்திருக்கும் கெத்து படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இன்று இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்துக்கு எந்தவித எதிர்ப்புமின்றி யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
UDHAYANIDHI-620x300
இதனால் படக்குழு மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. இதுவரை உதயநிதி நடித்துள்ள அனைத்து படங்களுமே சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை நகைச்சுவை கலந்த காதல் படங்களில் மட்டுமே நடித்துவந்த உதயநிதி, இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
Monsoon Mangoes ( மலையாளம்)


Monsoon Mangoes is an upcoming Malayalam film written and directed by Abi Varghese.[1] The film stars an ensemble cast of Fahadh FaasilIswarya Menon,[2] Vinay Forrt, and Vijay Raaz, and is produced by Thampy Antony.
The film was originally intended to have the title Bourbon Street, which was later changed to Njan D P Pallikkal and finally to Monsoon Mangoes.

Monsoon Mangoes Poster-1.jpg
Theatrical release poster
Directed byAbi Varghese
Produced byThampy Antony
Written byAbi Varghese
Matt Grubb
Naveen Bhaskar
StarringFahadh Faasil
Iswarya Menon
Music byJakes Bejoy
CinematographyLukasz Pruchnik
Edited byDon Max
Production
company
Kayal Films
Distributed byCentral Pictures
CountryIndia
LanguageMalayalam
6  PAAVADA ( மலையாளம்)

மலையாள சினிமாவில் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல பாடகர் என்று நிரூபித்து வருபவர் ஜெயசூர்யா. இவர் இதுவரை அவரது படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
தற்போது இவர் பிருத்விராஜ் நடித்துவரும் Paavada படத்தில் ஒரு பாடல் பாட இருக்கிறார். அப்பாடலின் போது எடுத்த ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இத்தகவலை உறுதி செய்துள்ளார் ஜெயசூர்யா.
அதோடு அவர், பிருத்விராஜ் தான் என்னை இப்பாடல் பாட கூறினார் என்றார்.

நன்றி - விக்கிபீடியா தினமணி  மாலைமலர் ஆல் சினி வெப்சைட்ஸ்


ஸ்ரீகுமார்-ரஜினிமுருகன் -11.15 AM , ரிவ்யூ -2PM


அஜந்தா-கதகளி - 2.30pm , ரிவ்யூ -6 PM



பத்மநாபா-தாரைதப்பட்டை =6.15 pm , ரிவ்யூ


-10PM#14.1.16