Showing posts with label KIDNAPPED:ELEZABETH SMART( 2026)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label KIDNAPPED:ELEZABETH SMART( 2026)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம். Show all posts

Saturday, February 14, 2026

KIDNAPPED:ELEZABETH SMART( 2026)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம் (க்ரைம் டிராமா டாக்குமெண்ட் ரி)@நெட் பிளிக்ஸ்,

           

            இது உண்மையில் அமெரிக்காவில் நடந்த சம்பவம்.2002ம் ஆண்டு 14 வயது சிறுமி அமெரிக்காவில்  கடத்தப்படுகிறாள்.200 நாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்படுகிறாள்.உயிருடன் அவளை மீட்ட போலீஸ் கொடுக்கும் ஷாக்கிங் ரிப்போர்ட்டும் ,அந்த சிறுமியின் தன்னிலை விளக்கமும் தான் படத்தின் ஹை லைட்.இது குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த படம்.       


21/1/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி யில் ரிலீஸ் ஆன இந்தப்படம் தமிழ் டப்பிங் கில் இல்லை.


ஸ்பாய்லர்  அலெர்ட்


5/6/2002  அன்று அமெரிக்காவில் உட்டாஹ் மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில். அம்மா,அப்பா,தங்கை உடன் வசிக்கும் 14 வயது எலிசெபத் ஸ்மார்ட் என்னும் சிறுமி  கத்தி முனையில் கடத்தப்படுகிறாள்.


அப்போது 9 வயது தங்கை உடன் இருந்திருக்கிறாள்.கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய மர்மமனிதன் எலிசெபத் தை மட்டும் கடத்திச்சென்று விட்டான்.

போலீசில் புகார் அளிக்கப்படுகிறது.போலீஸ் மொத்தக்குடும்பத்தையும் விசாரிக்கிறது.குடும்பத்தை சேர்ந்த அல்லது குடும்பத்துக்கு அறிமுகம் ஆன நபர் தான் அவளைக்கடத்தி இருக்க வேண்டும் என போலீஸ் நினைக்கிறது.


காரணம்  கடத்தல் நடந்தபோது மர்ம மனிதனைப்பார்த்த ஒரே சாட்சி ஆன எலிசெபத்தின் தங்கை அளித்த வாக்குமூலத்தின்படி அந்த மர்மனிதனின் குரல் ஏற்கனவே பரிச்சயப்பட்ட குரல் ஆகவும் ,மென்மையான குரல் ஆகவும் இருந்ததாகச்சொன்னதுதான்.


போலீஸ் கடும் விசாரணையில் அவர்கள் வீட்டில் முன்பு கார்பெண்டர் ஆஜப்பணி புரிந்த ஆள் கைது செய்யப்படுகிறான்.விசாரணையில் அவன் தனக்கு எதுவும் தெரியாது என சொல்லி விடுகிறான்.கடத்தப்பட்ட எலிசபத்தின் தங்கை அந்த கார்ப்பெண்டரைப்பார்த்து  இவன் அல்ல என்று கூறி விடுகிறாள்.


ஆனால் போலீஸ் நம்பவில்லை.சிறுமி என்பதாலும் ,தூக்கக்கலக்கத்தில் இருந்ததாலும் அவள் குழம்பி இருக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர்.

ஆனால் போலீஸ் விசாரணையில் இருந்த அவன் நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே இறந்து விடுகிறான்.

எலிசபத் கடத்தப்பட்டு 180 நாட்களுக்குப்பின் ஒரு டிடெக்ட்டிவ் சந்தேகத்துக்கு இடமான நிலையில் மூவரை சந்திக்கிறார்.அவர்களில் ஒரு ஆண் ,மற்ற இருவரும் பெண்கள்.பெண்கள் இருவரும் பர்தா அணிந்து முகத்தை மறைத்து இருக்கிறார்கள்.

ஒரு பெண் 30 வயது மதிக்கத்தக்கவராகவும்,இன்னொருத்தி சிறுமி ஆகவும் இருப்பதால் முகத்திரையை அகற்றி முகம் காட்ட சொல்கிறார்.

ஆனால் அந்தப்பெண் மறுக்கிறார்.எங்கள் மத வழக்கப்படி  திருமணம் செய்யப்போகும் மணமகன்,அம்மா,அப்பா மூவர் மட்டுமே அந்தப்பெண்ணின் முகத்தைப்பார்க்க முடியும் என்று சமாளித்து விடுகிறார்.


ஆனால் அந்த சிறுமிதான் கடத்தப்பட்ட எலிசபெத்.20 நாட்களுக்க்ய்ப்பின் அதாவது எலிசபத் கடத்தப்பட்டு 200 நாட்களுக்குப்பின் போலீஸ் அவளைக்கண்டு பிடித்து விடுகிறது.


மீண்டு வந்த அவள் மீடியாவுக்குக்கொடுக்கும் பேட்டி தான் மீதிப்படம்

இதில் நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை.சம்பந்தப்பட்டவர்கள் தான் இருக்கிறார்கள்.


வழக்கில் சில சுவராஸ்யத்தகவல்கள்

1 எட்டு வருடங்கள் இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது.2010 ம் ஆண்டு தீர்ப்பு வந்தது

2 சிறுமியைக்கடத்திய நபருக்கு ஜாமீனில் ,பரோலில் வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

3 குற்றவாளிக்கு உதவி புரிந்த அவனது மனைவிக்கு 15 வருட சிறை தண்டனை  விதிக்கப்பட்டது.2018 ல் ரிலீஸ் ஆகி விட்டார்

4 கோர்ட்டில்  கேஸ் நடந்தபோது குத்றவாகி மன நிலை சரியில்லாதவன் போல் நடித்தான்.இதே போல் எட்டு சிறுமிகளை கடத்தி மணம் முடிக்க வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை.நேரடியாக ஆண்டவன் தான் என்னை செய்ய வைத்தார் என்றெல்லாம் வாதாடினான்.ஆனால் ஜட்ஜ் அவனை நம்பவில்லை

5 பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் தைரியமாக மீடியாவில் பேட்டி கொடுத்தார்.சராசரிப்பெண் போல் இனி வாழ விரும்புவதாக சொன்னது  ஹை லைட்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பரபரப்பு ,விறுவிறுப்பு பொன்ற கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் எதுவும் கிடையாது.டாக்குமெண்ட் ரி பார்த்து பழக்கமானவர்கள் மட்டும் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5 /5