Showing posts with label வெள்ளி வியப்பு. Show all posts
Showing posts with label வெள்ளி வியப்பு. Show all posts

Monday, November 23, 2015

உத்தரப்பிரதேசத் தின் விளையாட்டுத்துறை அமைச்சரின் கள்ளக்காதல் கொலை வழக்கு - பட்டுக்கோட்டை பிரபாகர்


கோரக்பூரில் ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவன் அவன். பள்ளி நாட்களிலேயே அவனுக்குப் படிப்பைவிட பேட்மிண்டன் விளையாட்டில்தான் அதிக கவனம் சென்றது.

அவனுடைய மூத்த அண்ணன்கள் அனைவரையும் அழைத்துப் பேசினாள் அந்தத் தாய்.

“இவனுக்கு எதில் ஆர்வமோ அதில் இவன் முன்னேறவும், பெரிய சாதனைகள் செய்யவும் நீங்கள் அனைவரும் கடைசி வரை உதவ வேண்டும்'' என்றாள். சகோதரர்கள் அனைவரும் உற்சாகமாக ஒப்புக்கொண்டு அதை சபதமாகவே ஏற்றார்கள்.

அந்தச் சிறுவனை பேட்மிண்டன் பயிற்சி பெற சிறந்த கோச்களிடம் சேர்த்துவிட்டார்கள். அவனும் முழு ஈடுபாட்டுடன் விளையாட்டைக் கற்றான்.

சிறுவர்களுக்கான அத்தனை போட்டிகளிலும் வென்று பதக்கங்கள், கோப்பைகளாக வீட்டை அலங்கரித்தான். 14-வது வயதில் அகில இந்தியப் போட்டியில் வென்று தேசிய ஜூனியர் சாம்பியன் ஆனான்.

அந்தச் செய்தியை ரேடியோவில் கேட்ட அவனது குடும்பம் ஆனந்தக் கண்ணீர்விட்டது. தேசிய ஜூனியர் சாம் பியன் பட்டம் கொடுத்த உற்சாகத்தில் இன்னும் தீவிரமாக பயிற்சிகளில் இறங் கிய அவன், 18-வது வயதில் சீனியர்களுக்கான போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய சாம்பியன் ஆனபோது உலகமே அவனை வியந்தது.

1980-ம் ஆண்டு அவன் செய்த அந்தச் சாதனையை அடுத்த எட்டு வருடங்களுக்கு அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை. 1980 முதல் 1987 வரை வரிசையாக எட்டு வருடங்கள் இந்திய தேசிய பேட்மிண்டன் சாம்பியன் அவன்தான். இப்படி வரிசையாக எட்டு முறை எந்த நாட்டிலும் எந்த வீரனும் தேசிய சாம்பியனாக திகழ்ந்து சாதித்ததில்லை.

1988-ம் ஆண்டு. சக பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான அமிதா குல்கர்ணியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான். அந்த ஆண்டு நடந்த தேசிய சாம்பியனுக்கான விளையாட் டுப் போட்டியில் முதல்முறையாக சறுக்கலைச் சந்தித்து, தோற்றுப் போனான்.

வெற்றிபெறாத திருமணம் காரணமாக மிகுந்த மனஉளைச்சலில் அவன் இருந்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று ஸ்போர்ட்ஸ் பத்திரிகைகள் எழுதின. இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கான மிக உயர்ந்த விருதான அர்ஜூனா விருதைப் பெற்ற அந்த வீரன் அழகான பெண் குழந்தைக்குத் தந்தையானான். அகன்க்ஷா என்று பெயர் சூட்டினான்.
லக்னோ நகரில் வசித்த அவன் பிறந்து இரண்டே மாதமாகியிருந்த தன் செல்லக் குழந்தையைக் கொஞ்சி விட்டு, பாபு ஸ்டேடியத்துக்கு வழக்கம் போல பயிற்சிக்குச் சென்றான். பயிற்சி முடித்துவிட்டு ஸ்டேடியத்துக்கு வெளியே வந்த அவன் சுடப்பட்டான். அந்த இடத்திலேயே உயிரை விட்ட அவனுக்கு அப்போது வயது 26.


நமது நாட்டின் பேட்மிண்டன் நட்சத்திர வீரர் பிரகாஷ் படுகோனே போல மிகப் பிரமாதமாக சர்வதேச அளவில் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு இளம் வீரனின் வாழ்வை சில புல்லட்கள் முடித்து வைத்தன.


அந்த வீரனின் பெயர் சையது மோடி. ரயில்வேயில் அவன் பணியாற்றியதால் ரயில்வே நிர்வாகம் சையது மோடியின் நினைவாக சையது மோடி ரயில்வே ஸ்டேடியம் கட்டியது. சையது மோடி கிராண்ட் ப்ரிக்ஸ் என்று அவனுடைய பெயரில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசளித்து வருகிறது பேட்மிண்டன் அசோசியேஷன்.


என்ன நடந்தது?

இந்தியாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் எதற்காக சுடப்பட்டான்? இந்தக் கொலை நடந்து முடிந்து 27 வருடங்கள் ஆன நிலையிலும் சரியான காரணம் வெளிவரவில்லை. ஆனால் வழக்கின் விவரங்களை உன்னிப்பாக கவனித்தால் காரணம் மிகத் தெளிவாகப் புரியும்.

ஸ்டேடியத்துக்கு வெளியே சையது மோடி வந்தபோது ஒரு பைக் வேகமாக வந்ததாகவும், அதில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்தவன் துப்பாக்கியால் சுட்டதாகவும் கண்ணால் பார்த்த சாட்சி ஒருவன் தெளிவாகச் சொன்னான். ஆனாலும் இந்த வழக்கின் விசாரணை நத்தை வேகத்தில் நகர்ந்ததாலும், பத்திரிகைகள் காவல் துறையைக் கண்டித்து குரல் கொடுத்ததாலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகே விசாரணை துரிதப்படுத்தப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் உத்தரப்பிரதேசத் தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜா சஞ்சய்சிங். அவர் சையது மோடி மற்றும் அவரின் மனைவியான அமிதா மோடிக்கு அவர்களின் திருமணத்துக்கு முன்பே அறிமுகமாகி நன்கு பழகிக் கொண்டிருந்த நண்பர். சையது மோடிக்கும் அமிதா மோடிக்கும் திருமணம் செய்து வைத்ததே சஞ்சய்சிங் தான்.

கைது செய்யப்பட்ட ஏழு பேர்களில் இருவர் அமைச்சர் சஞ்சய் சிங் மற்றும் சையது மோடியின் மனைவி அமிதா மோடி. திருமணத்துக்கு முன்பிருந்தே அமிதா மோடிக்கும் சஞ்சய் சிங்குக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாகவும்; இது தொடர்பாக சையது மோடிக்கும், அமிதா மோடிக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகவும்; கூலிப்படை வைத்து இந்தக் கொலையை இவர்கள் இருவரும் திட்டமிட்டு நடத்தியிருக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டியது அரசுத் தரப்பு.

தங்கள் தரப்பின் ஆதாரங்களாக அவர்கள் சமர்ப்பித்தவற்றில் முக்கியமானவை சையது மோடி மனம் வெறுத்துப் போய் தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகத் தன் தாயாருக்கு எழுதிய கடிதம், மற்றும் அமிதா மோடியின் பழைய டைரி. அந்த டைரியில் உள்ள பதிவுகளில் இருந்து அவருக்கும் சஞ்சய் சிங்கிற்கும் இருந்த காதலை உணர முடியும்.


இந்த வழக்கில் சஞ்சய் சிங்கும் அமிதா மோடியும் தங்கள் மீதான குற்றச்சாட்டைஅடியோடு மறுத்தார்கள். அவர்கள் சார்பாக வாதாடியவர்கள் பிரபலமான வக்கீல் ராம்ஜெத்மலானி யும், அவரின் மகள் ராணியும். டைரியில் உள்ள பதிவுகள் ஒரு பெண்ணின் மன சஞ்சலத்தைக் காட்டுவதாகும். ஒரு பெண்ணுக்கு இப்படியான உணர்வுகள் ஏற்படுவது சகஜமே. ஆனால் அமிதா சையது மோடியை அதிகம் விரும்பியதால்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டு உண்மையாக வாழ்ந்து வந்தார் என்று அவர்கள் வாதிட்டார்கள்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங், அமிதா மோடி இருவருக்கும் இந்தக் கொலை வழக்கிலோ சதியிலோ எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது நீதி மன்றம். மீதி ஐந்து பேர்களில் இரண்டு பேர் பெயிலில் வெளிவந்த போது மர்மமான முறைகளில் சுட்டுக் கொல் லப்பட்டார்கள். அந்த வழக்குகளில் இன்றுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. மீதி மூன்று பேரில் ஒருவருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தது கோர்ட். மிச்சம் இரண்டு பேரில் ஒருவன் பைக்கை ஓட்டி வந்தவன். இன்னொருவன் சுட்டவன். பைக்கை ஓட்டி வந்தவனும் விடுதலை செய்யப்பட்டான். சுட்டவனுக்கு மட்டும் ஆயுள் தண்டனை தரப்பட்டது. உயர்நீதி மன்றம் தன் தீர்ப்பில் கடைசி வரை சுட்டதற்கான சரியான காரணத்தை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை என்றே குறிப் பிட்டது.

இப்போது சில தகவல்கள்: 1. ஏற்கெனவே திருமணமான சஞ்சய் சிங் அமிதா மோடியை பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 2. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் பாரதீய ஜனதா கட்சிக்கு மாறினார்.
அரசியல் செல்வாக்கும், திறமையான வக்கீலும் இருந்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியே சையது மோடியின் மரணம்!
- வழக்குகள் தொடரும்


thanks the hindu

Monday, November 16, 2015

சதி, சதியைத் தவிர வேறில்லை!


அவன் பெயர் கரண்குமார் காக்ரே. வயது 28. மும்பையில் முக்கிய மான பகுதியில் வாழ்ந்துவந்த அவனுக்கு இசையை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பது ஆசை.


அவள் பெயர் சிம்ரன் சூட். மாடல் அழகி. சினிமாவில் சின்ன வேடங்களில் நடித்து வந்தாள். கவர்ச்சியான பெண் ணான அவள், அவன் வசித்த அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்தாள்.


சிம்ரன் சூட் கரண்குமாருக்கு அறிமுக மானாள். இருவரும் பேசிப் பழகத் தொடங்கினார்கள். சிம்ரன் சூட் தன்னுடன் தங்கியிருந்த சகோதரன் விஜய் பாலண்டேயையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். விஜய் பாலண்டே, தான் ஒரு பிரபல அரசியல் புள்ளியின் ஏராளமான சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு பினாமி என்றான்.


கரண்குமார் கிரிக்கெட் சூதாட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்வதையும், விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை வாங்கியதையும் கவனித்த இவர்கள், கரண்குமாருக்கு சொந்தமான அபார்ட்மெண்ட்டையும், அவனுடைய காரையும் அபகரிக்கத் திட்டமிட்டார்கள்.


முதல் கட்டமாக, கரண்குமாருக்கு போதை மாத்திரை சாப்பிடும் பழக் கத்தை ஏற்படுத்தினாள் சிம்ரன் சூட். தனக்குத் தெரிந்த ஒரு பிரபல புள்ளி யிடம் இருந்து கரண்குமாரின் திரைப் படத் திட்டத்துக்காக சில கோடி பணத் தைப் பெற்றுத் தருவதாக வாக்களித்து நம்ப வைத்தான் விஜய் பாலண்டே. அதை நம்பிய கரண்குமார் அவன் கேட்ட கடன் தொகையைக் கொடுத் தான். அந்தத் தொகையை விஜய் திருப் பித் தரவில்லை. அது தொடர்பாக இரு வருக்கும் சின்ன சண்டைகள் வந்தது. மேலும் சிம்ரன் சூட்டுடன் அளவுக்கு மீறி கரண்குமார் உரிமையுடன் பழகியதும் விஜய்க்குப் பிடிக்கவில்லை.


கரண்குமாரை முழு நேரமும் போதைக்கு அடிமையாக்கி, அவனை மிரட்டி பத்திரங்களில் கையெழுத்து வாங்கி சொத்துக்களை பெயர் மாற்றிக் கொள்வதாகத் திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஒரு நாள், கரண்குமாரின் அபார்ட்மெண்ட்டில் விஜய் பாலண்டேக்கும் கரண்குமாருக் கும் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சத்துக் குப் போனது. விஜய் வெறித்தனமாக கரண்குமாரைக் கத்தியால் குத்தினான். அவன் உயிர் போனது.


இரவு வரைக் காத்திருந்த விஜய், கரண்குமாரின் உடலைப் பல துண்டுகளாக வெட்டினான். பெரிய பிளாஸ்ட்டிக் பைகளில் போட்டான். அவற்றை கரண் குமாரின் பி.எம். டபிள்யூ காரிலேயே ஏற்றிக்கொண்டுப் போய், ஊருக்கு வெளியில் நெடுஞ்சாலையில் நெடுந் தூரம் சென்று, ஓரிடத்தில் பைகளை வீசிவிட்டு காரில் புனே நகருக்குச் சென்றான். அங்கே ஒரு நண்பரின் வீட்டில் காரை நிறுத்திவிட்டு, வெளிநாடு செல்வதாகவும் திரும்பி வந்ததும் எடுத்துக் கொள்வதாகவும் சொன்னான். மீண்டும் மும்பைக்குத் திரும்பிவிட்டான்.


கரண்குமாரிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லாததால் சந்தேகப்பட்ட நண்பரின் குடும்பத்தினர் போலீஸை அணுகினார்கள். சிம்ரன் சூட்டை விசா ரித்தால் கரண்குமார் எங்கே சென்றிருக் கிறான் என்பது தெரியும் என்று குடும்பத்தினர் நம்பினார்கள்.


காவல்துறை சிம்ரன் சூட்டை அழைத்து விசாரித்தது. அவள் கரண் குமாரைத் தனக்குத் தெரியுமே ஒழிய மற்றபடி நெருக்கமான பழக்கமெல்லாம் கிடையாது என்றும், அவனைப் பற்றி எந்தத் தகவலும் தனக்குத தெரியாது என்றும் மறுத்தாள். அவளின் வார்த்தை களை அப்படியே நம்பியது போலீஸ்.


போலீஸ் நெடுஞ்சாலையில் கைப் பற்றிய அடையாளம் தெரியாதப் பிணத்தை தனி வழக்காகவும், கரண் குமார் காணாமல் போன வழக்கை தனி வழக்காகவும் விசாரித்துக் கொண்டேயிருந்தது.


விஜய் பாலண்டே தன் அடுத்த வலையில் சிக்க, எந்த மீன் சரியாக இருக்கும் என்று தேடத் தொடங் கினான். அந்தேரியில் மூன்று அபார்ட் மெண்ட்களைச் சொந்தமாக வைத் திருந்த அனுஜ்குமார் டிக்கு அவன் கண்ணில்பட்டான். அனுஜ்குமாரின் தந்தை அருண்குமார் டிக்கு டெல்லியில் வர்த்தகம் செய்துகொண்டிருந்தார். அனுஜ்குமாருக்கு சினிமாவில் நடிகராகும் ஆசை இருந்தது.


வழக்கம்போல சிம்ரன் சூட் மூலம் அனுஜ்குமாரைத் தொடர்புகொண்டான் விஜய் பாலண்டே. பிறகு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண் டான். நம்பும்படி பேசுவதில் வித்தகனான அவன், அனுஜ் குமாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபராக தன்னை மாற்றிக் கொண்டான். அவனுடைய மூன்று ஃபிளாட்டுகளில் ஒன்றில் இவனே வாடகைக்குக் குடி வந்தான். அடுத்து, தனது நிழலுலக நண்பர்களான தனஞ்ஜெய் ஷிண்டே மற்றும் மனோஜ் ஷாஜ்கோஷ் இருவரையும் மற்றொரு ஃபிளாட்டில் வாடகைக்குக் குடி வைத்தான்.


அந்த ஃபிளாட்டுகளின் மதிப்பு ரூ.50 கோடி. டெல்லியில் இருக்கும் அருண்குமார் டிக்குவுக்கு தன் மகனின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை. அவனை டெல்லிக்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பாக தந்தை, மகன் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டிருந்தன.


அருண்குமார் டிக்கு டெல்லியில் இருந்து மும்பை வந்து தங்கினார். மற்ற இரண்டு ஃபிளாட்டுகளில் தன் மகன் குடியமர்த்தியிருக்கும் நபர் களின்மேல் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக காலி செய்யச் சொல்லி வற்புறுத்தினார். பிரச்சினைகள் செய்தார். இதனால், விஜய் பாலண்டேயின் இரண்டு நண்பர்களும் அந்த ஃபிளாட்டைக் காலி செய்ய வேண்டியதாயிற்று.


அருண்குமார் டிக்கு உயிரோடு இருக்கும்வரை அந்த ஃபிளாட்டுகளை அடைய விட மாட்டார் என்று புரிந்தது. தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் வகுத்தான் விஜய்.


குறிப்பிட்ட தினத்தில் அனுஜ் குமாரை விஜய் ஒரு முக்கியமான நபரைச் சந்திக்கலாம் என்று சொல்லி கோவாவுக்கு அழைத்துச் சென்றான். அன்று தனியாக இருந்த அருண்குமார் டிக்குவை விஜய் பாலண்டேயின் இரண்டு நண்பர்களும் மடக்கினார்கள். பாத்ரூமில் வைத்து வெட்டினார்கள்.
அவர்கள் செய்த முட்டாள்தனம் அருண்குமாரின் வாயைப் பொத்தாமல் விட்டதுதான். அருண்குமார் போட்ட அலறல் சத்தத்தில் மொத்த அபார்ட் மெண்ட்டும் விழித்துக்கொண்டது. விபரீதம் நடந்திருப்பதைப் புரிந்து, கதவை உடைக்க முடியாததால் வெளிப்புறம் பூட்டினார்கள். போலீ ஸுக்குச் சொன்னார்கள்.


போலீஸ் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது, அருண்குமார் டிக்கு இறந்து கிடந்தார். அந்த இரண்டு கொலைக்காரர்களும் ஜன்னல் வழியாகத் தப்பித்துச் சென்றது தெரிந்தது. அவசர அவசரமாக அவர்கள் சென்றதால் ஏராளமான தடயங்களை விட்டுச் சென்றிருந்தார்கள். மிகச் சுலபமாக இருவரையும் மடக்கிப் பிடித்தது போலீஸ். இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவன் என்று விஜய் பாலண்டேயைக் கை காட்டி னார்கள். விஜய் ஏற்கெனவே செய்த கரண்குமார் கொலையைப் பற்றியும் போட்டுக் கொடுத்தார்கள்.


விஜய் பாலண்டேயும் சிம்ரன் சூட்டும் கைது செய்யப்பட்டார்கள். சின்ன கிராமத்தில் இருந்து சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவுடன் மும்பை வந்த விஜய் பாலண்டே ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து, ஓர் உணவுவிடுதியில் வேலை பார்த்து, ஒரு பிரபலமான ரவுடிக் கும் பலில் சேர்ந்து, சிலமுறை சிறைக்கும் சென்று திரும்பியவன் என்பதெல்லாம் பிறகு கிடைத்த இதர தகவல்கள்.


விஜய் பாலண்டேயைச் சிறை மாற்றும்போது அவன் தப்பிச் சென்றான். வெளிநாடு சென்று காஸ்மெடிக் சர்ஜரி செய்துகொண்டு, தன் முகத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் மும்பைக்கு வந்தான். அவன் மும்பை திரும்பியதுமே போலீஸ் அவனை மடக்கிப் பிடித்துவிட்டது. இப்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


விசாரணையில் தெரியவந்த மிக அதிர்ச்சியான உண்மை என்னவென் றால், சிம்ரன் சூட்… விஜய் பாலண்டேயின் சகோதரி அல்ல என்பதும், அவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொண்ட கணவனும் மனைவியும் என்பதும் தான்!

thanks the hindu