Showing posts with label ஜட்ஜ். Show all posts
Showing posts with label ஜட்ஜ். Show all posts

Wednesday, November 13, 2013

4 லேடி லாயர்சிடம் கில்மா சில்மிஷம் செய்த 58 வயசு பெருசு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்த ஒருவர், ஓட்டல் அறையில் தன்னை, மானபங்கம் செய்ததாக, பெண் வழக்கறிஞர், பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை, தலைமை நீதிபதி, சதாசிவம் அமைத்துள்ளார்.



கோல்கட்டாவில் உள்ள, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜுடீசியல் சயின்ஸ்' கல்வி நிலையத்தில், சட்டத்தில் பட்டப்படிப்பு இறுதித் தேர்வை முடித்த, பெண் அவர். டில்லியில் உள்ள, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம், பயிற்சி பெறுவதற்காக, கல்லூரி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆறு மாதங்கள் பயிற்சி பெற வேண்டியிருந்ததால், அவர், டில்லியிலேயே தங்கியிருந்தார். பயிற்சியை முடித்து, இப்போது, கோல்கட்டாவில் உள்ள, அரசுசாரா தொண்டு நிறுவனத்தில், சட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.



 அவருக்கு டில்லியில், சில மாதங்கள், சட்டப்பயிற்சி அளித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், பணியில் இருந்து, இப்போது ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில், தனக்கு பயிற்சி அளித்த, அந்த நீதிபதி, பயிற்சி காலங்களில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஓட்டல் அறை ஒன்றில், தன்னை மானபங்கம் செய்ததாகவும், அந்த வழக்கறிஞர், இப்போது குற்றம் சாட்டியுள்ளார்.


பயிற்சிக்காக சென்றபோது:


இது பற்றி, அந்த பெண் வழக்கறிஞர், தன், இணையதள பக்கத்தில் எழுதியுள்ளதாவது: கல்லூரி இறுதித் தேர்வுகளுக்குப் பின், டில்லியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம், பயிற்சி பெறுவதற்காக சென்றேன். பயிற்சி காலங்களில், அந்த நீதிபதி, என்னிடம், 'சில்மிஷத்தில்' ஈடுபட்டார். 



என் தாத்தாவின் வயதை ஒத்த அவர், என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது, எனக்கு மிகவும் மன வேதனை அளித்தது. எனினும், அந்த நேரத்தில் என்னால் இதை வெளியில் கூற முடியவில்லை. அவர் என்னை மானபங்கம் செய்ததில், காயங்கள் ஏற்படவில்லை; என்னை அவர் உடல் ரீதியாக துன்புறுத்தவும் இல்லை. எனினும், அவர் செய்த சில்மிஷங்களை, என்னால் மறக்க முடியாது. என்னைப் போன்று, மேலும், மூன்று பெண் வழக்கறிஞர்களிடம் அவர், தவறாக நடந்து கொண்டுள்ளார். 



எனினும், அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற மோசமான நிலை எனக்கு ஏற்படவில்லை. டில்லியில், மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாட்டு மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே வேளையில், நாட்டின் உயர் பதவிகளில் ஒன்றான, சுப்ரீம் கோர்ட் நீதிபதியே, என்னிடம் தவறாக நடந்து கொண்டது, எனக்கு மிகவும் வேதனை அளித்தது.



பிறருக்கு நடக்கக்கூடாது:


டில்லியில், யாருடைய துணையும் இல்லாமல், தனியாக இருந்தேன். என் படிப்பும் முடிவடையாத நேரம் என்பதால், எனக்கு நடந்த கொடுமைகளை, என்னால் அப்போது வெளியில் சொல்ல முடியவில்லை. இது போன்ற கொடுமைகள், மாணவிகளுக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்பதற்காகவே, எனக்கு நடந்த கொடுமைகளை இப்போது வெளிப்படுத்தியுள்ளேன். இவ்வாறு அந்த, பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார். 


இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சதாசிவம் நியமித்துள்ளார். ''இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்ற அடிப்படையில், இந்த குற்றச்சாட்டு என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய மூவர் குழு, இதுகுறித்து, இன்றே விசாரணையை துவக்கும்,'' என, நீதிபதி, சதாசிவம் தெரிவித்துள்ளார்.


நன்றி - தினமலர்


மக்கள் கருத்து 


1. அப்போது சொல்லாமல் இப்போது எதற்காக சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால், அப்போது உள்ள மனநிலையில் கண்டிப்பாக அந்தப்பெண்ணால் சொல்லமுடியாது. ஒன்று மட்டும் நிச்சயம்... சம்பவம் நடந்து இருக்க முடியாது என்று சொல்ல முடியாது. சரியான தருனத்திற்காக காத்திருந்து, இப்போது சொல்லியிருக்கலாம். உண்மையாக இருக்கும்பட்சத்தில், சரியான தீர்வு சொல்லப்பட்டால்தான் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என்பது மட்டுமல்ல.. நீதித்துறையில் இருப்பவர்களே தவறுகளுக்குக் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். 


டில்லி கல்லூரி மாணவி மிகச் சாதரனமானவர்களால் நடத்தப்பட்டது. இது மெத்தப்படித்த, மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டியவரால் (நிகழ்வு உண்மையாக இருக்கும்பட்சத்தில்) நடத்தப்பட்டதைப் பார்க்கும்போது, அவர்களுக்கும் இவருக்கும் ஒழுக்கம் என்ற அளவில் பெரிய வேறுபாடு இல்லை. நீதிமன்றத்தில் மாண்பு காக்கப்படவேண்டும். "ஊருக்குத்தான் உபதேசம், தனக்கில்லை" என்பது நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது. நல்லது நடக்கட்டும். 


2 நீதிபதியானாலும், வக்கீலானாலும் ஆணும் பெண்ணும் தனித்திருப்பதை தவிர்ப்பதே தவறுகளுக்கு இடம் கொடுப்பதை தடுக்கும். இது மாதிரியான தவறுகளில் ஆண்களை மட்டுமே பலியாடாக அடையாளம் காணப்படுவதால் பெண்களின் உடந்தை, அவர்களை பொறுப்பற்றவர்களாக்கி விடுகிறது. 


3 இதுக்குதான் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு போகக்கூடாதுங்கிறது 


4 அதுவும் முக்கியமா ஓட்டலுக்கு ... எதுக்கு ஓட்டலுக்கு போனிங்கன்னு கேட்ட சாப்பிடரத்துக்குன்னு சொல்லுவிங்க .. அடுக்கு உடிப்பி ஓட்டலுக்கு போகவேண்டியதுதானே ?? ஸ்டார் ஓட்டல்ல என்னவெல்லாம் நடக்க சத்தியம் உண்டோ ??? ஒன்னு எதற்கு துணிஞ்சி போயிருக்கனும் ... பசப்புவேளைஎல்லாம் வேண்டாம் ...... 


5 பெண்களை இழிவுபடுத்துவதாக நினைக்க வேண்டாம் ... ஒருசிலர் கற்பை விற்க துணிந்துவிட்டனர் என்பதே இம்மாதிரி சம்பவங்கள் ஏற்பட காரணமாக இருந்துவிடுகிறது ...... 


 6 இந்திய அரசியல் அமைப்பை காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.... கடுமையான சட்டங்கள் மூலம் நீதி துறையை தூய்மை படுத்தலாம் என்பதை விட நேர்மையான மனிதர்களை இந்த சுதந்திர ஜனநாயக தேசம் தயார் செய்ய தவறிவிட்டது என்பது தான் உண்மை. குறிகிய நோக்கம் உடையவர்கள் கையில் இந்த தேசம் சிக்கி தவிக்கிறது... மனிதர்களை மனிதர்களாக மதிக்க தெரியாத மதம் பிடித்தவர்கள் கையில் இந்த தேசம் அடிமை பட்டுக்கிடகிறது. சொன்னால் கோபம் வரும். சொல்லவில்லை என்றால் என் பாரதி கண்ட தேசம் அழிந்துவிடுமோ... மக்களை சோம்பேறி ஆக்கி மதுவுக்கு அடிமை படுத்தும் ஆட்சியின் அவலம் உலகில் எந்தொரு ஏழ்மையான தேசத்திலும் இல்லை...


 7  மானபங்கம் செய்தபோது குற்றச்சாட்டை எழுப்பாமல், இப்போது எழுப்புவது ஏன்? கேட்டது கிடைக்கவில்லை என்பதாலா? அல்லது வேறொரு காரணத்திற்காக நீதிபதியை பழிவாங்க நினைப்பதாலா? குற்றம் நடக்கின்ற போதே, சுட்டி காட்டாமல், பல மாதங்கள் கழித்து குற்றம் சாட்டுவதை ஏற்றுகொள்ள முடியாது. 


 ""சுரணை கெட்ட சமுதாயமே சோற்றுக்கு வழி இல்லாத போது விழிப்பதை விட இப்போதே விழிதுகொள்""... இந்த புகார் சுதந்திரத்துக்கு பிறகு கொடுக்கும் முதல் புகார், இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் வெளியே வராமல் அன்றாடம் நீதி துறையில் நடந்து கொண்டுதான் உள்ளது. சுதந்திரம் பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லிதானே சுதந்திரம் வாங்கினார்கள், இன்றைய இந்தியாவின் பாலாறும் தேனாறும் இவைகள் போன்ற புகார்களும் இலஞ்சகளும் ஊழல்களும் தானா? அன்னியர்கள் ஆண்ட போது கூட அரசாங்கமும், நீதி துறையும் நேர்மை தவறாமல் இருந்து என்பது தான் உண்மை... அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் இவர்களை யார் கொள்வார்கள்???