Monday, April 28, 2025

THUDARUM -தொடரும் (2025) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 



25/4/2025  முதல் திரை  அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  வெளியான  முதல் 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 90  கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது , விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும் ரசிகர்களின் பலத்த கரகோஷத்தேயும்  பெற்றிருக்கும்  இந்தப்படம்   மோகன் லாலுக்கு இன்னும் ஒரு த்ரிஷ்யம் என சொல்லப்படுகிறது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  கார் டிரைவர் கம் கார் ஓனர் .ஒரு மனைவி  ஒரு டீன் ஏஜ்  மகன் , டீன் ஏஜ் மகள்  என அழகிய குடும்பம் இவருடையது .இவர் ஒரு காலத்தில்  சினிமாவில்  ஸ்டண்ட்  மாஸ்டருக்கு உதவியாளராகப்பணி புரிந்தவர் . இவரது குரு  இவருக்குப்பரிசாக ஒரு அம்பாசிடர் கார் தந்தார் ., அதைத்   தன உயிராக மதித்துப்பாதுகாத்து வருகிறார் 


 நாயகனின் மகன்  தன நண்பர்களுடன்  சேர்ந்து  நாயகனின் காரை  அவருக்குத்தெரியாமல்  எடுத்து  ஒரு சின்ன விபத்து  செய்து  காரை டேமேஜ்  ஆக்கி விடுகிறான் .இதனால் டென்சன்  ஆன நாயகன் மகனை அறைந்து   விடுகிறார் .மகன் கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வரவில்லை 


நாயகனின் காரில் கஞ்சா  கடத்தப்பட்டதாக ஒரு கேஸ் பைல் செய்து போலீஸ்  ஸ்டேசனில் காரை  வைத்திருக்கிறார்கள் .அந்தக்காரை மீட்க நாயகன் போலீஸ்  ஸ்டேசனுக்குப்போகிறான் .அங்கே  சப் இன்ஸ்பெக்டருடன்  மோதல் ஆகி விடுகிறது .  காரை  நாயகன்  எடுத்துச்செல்லவே கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு  அந்த  சப் இன்ஸ்பெக்ர்   செயல்படுகிறார் 


நாயகன் அதே போலீஸ்  ஸ்டேசன் இன்ஸ்பெக்டரிடம்   முறையிடுகிறான் . அவர்  காரை   ரிலீஸ்  செய்ய அனுமதி அளிக்கிறார் . ஆனால்  அந்த ஸ்டேசன்  கான்ஸடபிள்  உறவினரின் திருமணத்துக்கு  செல்ல வேண்டி இருக்கிறது . குடித்திருப்பதால் எங்களால் ட்ரைவ் செய்ய முடியாது , எனவே எங்களை கல்யாண மண்டபம் வரை டிராப் செய்ய வேண்டும் என டீல்  பேசுகிறார் . வேறு    வழி இல்லாமல் நாயகன் ஒத்துக் கொள்கிறான் 


அந்தப்பயணத்தில்  ஒரு உண்மை வெளிப்படுகிறது . நாயகனின் காரின் டிக்கியில்  ஆல்ரெடி ஒரு பிணத்தை  போலீசே வைத்திருக்கிறார்கள் .அதை  டிஸ்போஸ்  செய்யத்தான்  நாயகனின் உதவியை நாடி இருக்கிறார்கள்.


போலீஸ்   செய்த  அந்தக்கொலையை   நாயகனே  செய்ததாக கேஸ்  ஜோடிக்கப்பார்க்கிறார்கள் . நாயகன்  அதை எப்படி முறியடித்தார் என்பது மீதி திரைக்கதை  


நாயகன்   ஆக மோகன் லால்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .பாத்ரூமில்  அழும்  சீனில் கலங்க வைக்கிறார் .அவரது மனைவி ஆக இது நம்ம ஆளு ஷோபனா  அதிக   வாய்ப்பில்லை . வந்தவரை   ஓக்கே  . க்ளைமாக்சில்  வில்லனிடம்  அடி வாங்கும்போது ஒரு பார்வை வீசுகிறாரரே ?கிளாசிக் . 


மெயின் வில்லன் ஆக பிரகாஷ்  வர்மா   கலக்கி இருக்கிறார் .இவரது கேரக்ட்டர்  டிசைன் கமலின்  சத்யா  பட வில்லன் கிட்டியை நினைவு படுத்துகிறது , சிரித்துக்கொண்டே கழுத்தை அறுக்கும் கேரக்ட்டர்

இன்னொரு வில்லன்  ஆக பினு  பாப்பு  கச்சிதம் 


பாரதிராஜா , இளவரசு  போன்ற தமிழ்  ,முகங்களும் உண்டு . ஆனால் ஒரு சீன்  தான் 

ஷாஜி குமாரின்  ஒளிப்பதிவு   பிரமாதம் . கேரளா  இயற்கை அழகைக் கண்  முன் நிறுத்துகிறது  . ஏரியல் ஷாட்டில்   கவனம் ஈர்க்கிறது . பூகம்பம்  வரும் சீனையும்  , மழை பொழியும் தருணங்களையும் அழகியல் ரீதியாக  பதிவு  செய்த விதம் அருமை , ஜேக்ஸ்  பிஜாயின் இசை கனகச்சிதம் . த்ரில்லிங்க்கான  இடத்தில் , ஆக்சன் சீக்வன்ஸ் வரும் இடத்தில் என பல தருணங்களில்  பிஜிஎம்   செம .. நிசாத்  யூஸுப் ,  ஷபீக்  ஆகிய இருவரும்தான் எடிட்டிங்க் . கச்சிதம் . இரு ட்விஸ்ட்களை புகுத்திய இடம் அருமை .ஆனால்  படத்தின் நீளம்   அதிகம் .166 நிமிட ங்கள்


 கே ஆர்   சுனில் தான்   கதை .நிஜத்தில் நடந்த  ஒரு என்கவுண்ட் டர்   மேட்டரிலிருந்து  இன்ஸ்பையர் ஆகி  இந்தக்கதையை எழுதினாராம் . கே ஆர்   சுனில்  உடன் இணைந்து   திரைக்கதை   அமைத்து தனியாக இயக்கி இருப்பவர் தருண் மூர்த்தி 


சபாஷ்  டைரக்டர்

1   வில்லன்களுடன் நாயகன் காரில்  பயணிக்கும் அந்த  சம்பவம் செம த்ரில்லிங்க் . யூகிக்க முடியாத திருப்பமும் அருமை 


2   நான்   லீனியர்  கட்டில்  கதை   சொன்ன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   யானைகள்   கூட் டமாக   நம் எதிரே வந்தால் ஆபத்து இல்லை .ஒற்றை யானையிடம் தான் நாம் மாட் டிக்கொள்ளக்கூடாது 


2   புலியை    நீ  நேரில்  பார்த்திருக்கிறாயா? 


 இல்லை , சபரி மலை ஐயப்பன் கூட புலி இருப்பதைக்காலண்டரில் வேணா பார்த்திருக்கிறேன் 


3  என்னங்க ?நானும்  மாஸ்டரோட  இழவுக்கு   வர்றேன் 


 வேணாம்  , அவரோட சிரித்த முகத்தை மட்டும் தான் நீ இதுவரை பார்த்திருக்கே .அப்டியே இருக்கட்டும் உன் நினைவுகள் 


4  காரில்   500   கிராம் கஞ்சா தான் கிடைச்சது .சட் டப்படி  800  கிராமுக்கு மேலே  கஞ்சா   சிக்கினாத்தான் காரை சீஸ் பண்ணலாம் 


5   தேவை   இல்லாத   காரியத்தில் தலை இட்டா தேவை   இல்லாத    தலை வலி தான் வரும் 

6     இது நான்     உருவாக்கிய  கதை , என் கதைக்கு நான் தான் ஹீரோ 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   இரண்டே  முக்கால்மணி   நேரக்கதையில் முதல் 40 நிமிடங்கள்  மெயின் கதைக்குள் செல்லவில்லை .பாத்திர அறிமுகங்கள்  இழுவை 


2   முதல்  பாதியில் இருந்த த்ரில்லிங்க்   பின் பாதியில்   இல்லை .காரணம்  முதல் பாதி க்ரைம் த்ரில்லர் . பின் பாதி ரிவெஞ்ச்   த்ரில்லர் 


3  த்ரிஷ்யம்  படத்தை நினைவு படுத்தும் போலீஸ் ஸ் டேசன்  சீன்ஸ்  , குடும்பம்  சம்பந்தப்பட் ட   சீன்கள் 


4  போலீஸ் ஸ் டேசனில்  நாயகன் தன மகனின் பைக் நிற்பதைப்பார்த்து  இது என் மகன் பைக் மாதிரி தெரியுதே என சந்தேகமாக சொல்கிறார் . நெம்பர் பிளேட்டைப்பார்க்க மாட் டாரா? 



5   சொந்த   மகனின் மணிபர்ஸை  ஒரு அப்பா  அடையாளம்  கண்டு கொள்ள  மாட் டாரா? 


6    வில்லன்கள்  இருவரும் போலீஸ் ஆபீஸர்ஸ் ... .  பிணத்தை  சாக்கு  மூட்டை யிலிருந்து   வெளியே     எடுக்காமல்   புதைப்பது  ஆபத்து   என்பதை அறிய   மாட் டார்களா?

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   வன்முறைக்காட் சிகள் அதிகம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி க்ரைம் த்ரில்லர் . பின் பாதி ரிவெஞ்ச்   த்ரில்லர் . த்ரிஷ்யம்      லெவல்     எல்லாம்  இல்லை  ரேட்டிங்க்    3/ 5 


Thudarum
Theatrical release poster
Directed byTharun Moorthy
Screenplay by
Story byK. R. Sunil
Produced byM. Renjith
Starring
CinematographyShaji Kumar
Edited by
Music byJakes Bejoy
Production
company
Rejaputhra Visual Media
Distributed by
Release date
  • 25 April 2025[1]
Running time
166 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office70 crore[2]

0 comments: