Sunday, November 27, 2011

புரட்டாசித்தலைவி ( ஜோக்ஸ்) - ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டா டா

1.DR, எனக்கு மனசே சரி இல்லை..

. ஏன்? 

சிநேகா, ஜெனிலியா, 9 தாரா அப்டினு வரிசையா எல்லாருக்கும் மேரேஜ் ஆகப்போகுது..

--------------------------------------

2.தலைவரே, ஜட்ஜ் உங்க கிட்டே கேட்ட 1780 கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்ல முடிஞ்சது?

  எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் - தெரியாது

-----------------------------------

3. கும்மாச்சி - என் ஆளு டெயிலி காலேஜ்க்கு பஸ்ல தான் போவா..

ஓ! வசதியான இடம் போல # டபுள் மடங்கு பஸ் சார்ஜ்

--------------------------------------

4. ஆத்தா உன் ஆட்சியிலே !அலங்கோல காட்சியடா.!. ஏற்றி வெச்சோம் ஒளி விளக்கு, விலை உயர்வை நீ விலக்கு

---------------------------------

5. எந்த பொண்ணுக்கு மேரேஜ்னாலும் எனக்கு மனசு சரி இல்லாம போயிடும் #விதி விலக்கு என் பொண்ணு

-----------------------------------




6. என் உறவுகளுக்கும் அவர் உறவுகளுக்கும் தனித்தனி கணக்கை , பிணக்கை வைத்திருக்கிறார் என் மனைவி

------------------------------------

7. தனிமையில் ஒரு முகமும், அவங்க வீட்டு விருந்தினரின் முன் ஒரு முகமும்,நம் முன் ஒரு முகமும் எப்போதும் வைத்திருகின்றனர் பெண்கள்

---------------------------------------

8. டேமேஜர் - ஆஃபீஸ் டைம்ல ஆஃபீஸ் ஃபோன்ல உங்க பர்சனல் கடலையை அவாய்டு பண்ணிக்குங்க

கவிதைக்காதலன் மணி -ok மேனேஜர் சார்.. இனி நம்ம ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் கூட மட்டும் TALK

-------------------------------------------

9. மங்குனி அமைச்சர் - லவ்வர்ஸ்ங்க விடிய விடிய அப்டி என்னதாண்டா பேசுவீங்க?

பனித்துளிசங்கர் - நாங்க எங்கே பேசறோம்? ம் ம் ஓ.. ஆமா .. ரைட்டு ..அப்புறம்? இதுதான் மொத்த டயலாக்கே

--------------------------------------------

10. கோவை பாவை - ஏன் தமிழ்ல பேச மாட்டீங்களா?

தமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்ல பேசுனா எந்த ஃபிகரும் மதிக்க மாட்டேங்குது மேடம்,இதுக்காகவே இங்கிலீஷ் டியூஷன் போய் படிச்சேன்

-----------------------------------------




11. சேட்டைக்காரன் -பெண்கள் மலையாளம் பேசும்போதுதான் அழகு, தெலுகு பேசும்போது அப்படியே தலைகீழ்!

தோட்டா ஆல்தோட்ட பூபதி - பேச்சை கவனிச்சாத்தானே அந்த பிரச்சனை?

---------------------------------

12. தவறு என்று தெரிந்தே செய்யப்படும் தவறுகளுக்கு என்ன பெயர் சொல்வது?

ஜெயலலிதா என்றே சொல்லலாம்!

-----------------------------

13. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.

--------------------------------------

14. சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு @ கோழி கூவுது ரீ மிக்ஸ் சாங்க்

--------------------------------------

15.  சி.பி - அண்ணே.. டீ இன்னும் வர்லை..

ராம்சாமி - டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

-------------------------------------------


funny
16. தலைவர் ஏன் பயந்த முகத்தோட இருக்கார்?

வித்யா பாலன் நடிச்ச சில்க் ஸ்மிதா சுயசரிதை - த டர்ட்டி பிக்சர் படம் அவரோட சுய சரிதையா இருக்குமோன்னு சந்தேகப்படறாராம்

----------------------------------------

17. சிங்கப்பூர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்க?

பர்ச்சேஸ் மாலா - ம்ஹூம், சாரி, வெறும் கையைத்தான் வீசிட்டு வந்தேன்,

இல்லையே கைல வளையல், பிரேஸ்லெட் இருக்கே?

-------------------------------------------

18. மேடம், நேத்து மீட்டிங்க்ல டேமேஜர் என்ன பேசினார்?

பெங்களூர் ஸ்வீட் சுதா- எனக்கென்ன தெரியும்? நான் என் ஹஸ்பெண்டோட எஸ் எம் எஸ் கடலை-ல பிஸியா இருந்தேன் # யாருக்கோ

--------------------------------------

19. சிங்கப்பூர்  சாந்தி! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

சூப்பர்வைஸர் வேலை பார்க்கறேன்.

எந்த ஆஃபீஸ்ல?

என் வீட்ல தான், கணவர் சமையல் பண்றார், அதை சூப்பர்வைசிங்க்

-------------------------------------

20. விக்கி உலகம் - கோபம் வந்தா என் மனைவி பளார்னு அறைஞ்சிடறா ..

லேப் டாப் மனோ - உன் பாடு தேவலை.. என் மனைவிக்கு கராத்தாவே தெரியும்

---------------------------------
Beautiful Roses
funny


டிஸ்கி - நேத்து நைட் 8 மணிக்கு விக்கி தக்காளிக்கு ஃபோன் போட்டேன், அண்ணி தான் போனை எடுத்தாங்க.. தக்காளி அண்ணன் மட்டை ஆகிக்கிடக்காராம்.. தூக்கத்துலயே அவன் பண்றது சரி இல்ல.. இவன் ரொம்ப மோசம் ... என்னைத்தவிர எல்லாரும் கெட்டவங்க, அப்டினு ஒரே புலம்பலாம்./அவனுக்காக வைக்கப்பட்ட தலைப்புதான் இது.. ஸ்டார்ட் மியூசிக்..  ஒய் திஸ் கொலை வெறி  கொலை வெறி  டா டா

Saturday, November 26, 2011

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFszLvClt3XPJfVwQ1jYdRuHFvi8PkThI8sh2BR7jy8wP0jYWJElstJnmfTpN9q-Fom-YyNbrKLxXKNlMM4-j_zJnQdDPajWiOZVTPmFXxusakJrCusK9yh8RiEITySIa8XGckxv9863g/s1600/mayakkam-enna+ARV1.jpg"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்-ஐ வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபத்பாய்  தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.


ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை ‌கவனித்துள்ளார்.

படத்தின் பெரும்பகுதி சூட்டிங் கேரளா, சென்னை, கோவை தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து முடிந்துள்ளது

http://tamil.oneindia.in/img/2011/09/20-selvaragavan-gitanjali300.jpg


1.உங்க படம் எப்பவும் ஃபர்ஸ்ட் ஆஃப் நல்லாருக்கு, செகண்ட் ஆஃப் சொதப்பிடுதே? ஏன்? 

ஃபர்ஸ்ட் ஆஃப் அடிச்சு முடிச்சதும் மட்டை ஆகிடறேன்,அதான்

-------------------------------------

2. ஆர்வக்கோளாறுல மயக்கம் என்ன படம் பார்க்க நினைக்கறவங்களுக்கு ஒரு வார்த்தை.. அது ஏதோ கலாச்சாரக்கோளாறுள்ள படமாம், BE CAREFULL


------------------------------------
3. தனுஷ் - எனக்கு எந்த மாதிரி கேரக்டர் தரனும்னு எங்கண்ணனுக்கு நல்லா தெரியும்.# அட போப்பா , அண்ணன் ஆப்பு வெச்சது கூடத்தெரியாம ...


------------------------------------
4. மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே -னு ட்விட்டர்ல சொன்னீங்களே? சார்.. படம் பார்த்தவங்க எல்லாம் கில்ட்டி ஃபீலிங்க்ஸோட போறாங்களே?அவ்வ்வ்வ்

-------------------------------
5. மயக்கம் என்ன? படம் அட்டர் ஃபிளாப் - இன்னொரு நடு நிசி நாய்கள் என பிரிவ்யூவில் படம் பார்த்த நண்பர் சொன்னார் அட தேவுடா.யூ டூ செல்வராகவன்?


----------------------------------------
http://2.bp.blogspot.com/-IA6HyiOfuaA/TqZXvjqzsiI/AAAAAAAARI8/sfnaNp7Aufo/s1600/Mayakkam-Enna-Stills-004.jpg
6. தமிழ்க்கலாச்சாரம்னு ஒண்ணு இருக்கு, என்னதான் மாடர்னா படம் எடுக்கறோம்னு சால்ஜாப்பு சொன்னாலும் வரம்புமீறும் படங்கள் அடிவாங்குவது உறுதி

------------------------------------
7. செல்வராகவன் - மயக்கம் என்ன படத்துல முதல் முறையா காமெடி ட்ரை பண்ணி இருக்கேன் # காமநெடியைன்னு சரியா சொல்லுங்க சார்

-------------------------------------
8. மிஸ்டர் செல்வராகவன், ஒன் பை டூ அப்டினு டீக்கடைல சொல்லலாம், பெட்ரூம்ல சொல்லலாமா?ஷேர் பண்ணிக்க இதென்ன ஷேர் ஆட்டோவா?

--------------------------------------------
9. படம் படு மொக்கையாம். ஒரே ஃபிகரை 3 ஃபிரண்ட்ஸ் வெச்சுக்கறாங்களாம் , கண்றாவிப்படம்

---------------------------------------
10. படத்துல பல லேயர்ங்க இருக்கறதா டைரக்டர் ட்விட்டர்ல சொன்னாரே? ஒரு லேயர் கூடவா நல்லாலை? 

பல லாயர்ங்க தான் கேஸ் போடப்போறாங்களாம் அவ்வ்வ்

---------------------------------------------

http://img1.dinamalar.com/cini/ShootingImages/13252927546.jpg

11. 50 ரூபா டிக்கெட் 25 ரூபா, 25 ரூபா டிக்கெட் 10 ரூபா வாங்க சார்  புதுப்படம்  வந்தா கேண்டீன்ல மிக்சர் வேற ஒரு பாக்கெட் ஃபிரீ # மயக்கம் என்ன

-------------------------------

12. என் படம் அடுத்த தலைமுறைக்கானது.

அடடா.. சார், அப்போ ஏன் இப்போ ரிலீஸ் பண்ணுனீங்க? 20 வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணி இருக்கலாமே?

---------------------------------

13. என் படம் பிரமாதமா ஓடும் பாருங்க..

தியேட்டரை விட்டுத்தானே?

-----------------------------------

14. 1.12.2011 வியாழன் அன்று வெளி வர இருக்கும் எம் சசிகுமார்-ன் போராளி வெளியாகப்போகும் பெரும்பாலான தியேட்டர்கள் மயக்கம் என்ன ஓடும் தியேட்டர்ஸ்தான்.. அப்போ ஏற்கனவே ரிசல்ட் அவுட்டா?  படம் அவுட்னு

--------------------------------------

15. நாந்தான் டைரக்டர், தம்பி தான் ஹீரோ, என் சம்சாரம் தான் புரொடியூசர்...

அடங்கொன்னியா. குடும்பப்படம்னு சொன்னதுக்கு இதானா அர்த்தம்?

-------------------------------------------

16. உங்க படம் செம கிக்கான படம்னு எப்படி சொல்றீங்க?

படத்துல வர்ற எல்லா கேரக்டரும் எப்பவும் சரக்கு அடிச்சுட்டே இருப்பாங்களே?பார்க்கலை?

------------------------------------

17. சார்.. படம் நல்லாருக்கு, கொஞ்சம் மெதுவா போகுது, அவ்வளவுதான்.

. நல்லா தூக்கம் வருதுன்னு சொல்றீங்களா?

------------------------------------

18.சார்,உங்க படம் பியூட்டி ஃபுல்.....

ரொம்ப தாங்க்ஸ்..

அதாவது THE BEAUTIFULL MIND  ஹாலிவுட் படம் மாதிரியே இருக்கு  # மயக்கம் என்ன?

-----------------------------------------------

டிஸ்கி -

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

 

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

http://www.musictub.com/Picture/Tamil_MusicTamil_Movie_SongsPaalai_(2011)cover.jpg

விஜய்-ன் காவலன் ரிலீஸின் போதே சன் பிக்சர்ஸாரின் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது.. அதாவது தமிழ்நாட்டின் பெரிய , செண்ட்டரான திரை அரங்குகளை ஆக்ரமித்து விடுகிறார்கள் . என்பதே அது.. இதனால் லோ பட்ஜெட் படங்களை திரை இட தியேட்டர்கள் கிடைப்பதில்லை.. தங்கள் கை வசம் மாஸ் மீடியா இருப்பதால் பெரும்பாலான படங்களை இவர்கள் வாங்கி நல்லா மார்க்கெட் பண்ணி தேத்தி விடுகிறார்கள்.. இதனால் வெளீயாகும் படங்கள் சன் பிக்சர்ஸாரின் தயாரிப்பாகவோ ,அல்லது அவர்கள் வாங்கும் படமாகவோ இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி..

கலைஞர் ஆட்சியில் அது ஓக்கே, இப்போ ஆட்சி மாறிய பின்னரும் அது தொடர்வது ஏன்?ஏன் ஜெ வால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை?என்பதே நம் மனதில் எழும் கேள்விகள்.. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் பாலை இயக்குநர் காட்டமாக ஒரு கடிதம் மீடியாக்களில் வெளீயிட்டும் , ஃபேஸ் புக்கில் அதை பகிர்ந்தும் வந்திருக்கிறார்.. அந்த கடிதம்

 http://tamil.oneindia.in/img/2011/05/05-shammu-palai300.jpg

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

பாலைஎன்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

பாலைபடத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாதுவாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்என்பது.

பாலைகுழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாதுஇப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் இந்தப் படத்தை நான் இயக்கவில்லையேஎன ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் செங்கோட்டை திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


------------------------------------------------------------




-------------------------------------------------------------




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3q1ONHvokhIe9TCdTEXGWNMyerF4YC-XiJGHhzjp2uK0vU_Mq0vjX1HKaYjCxC-bQQIFoPfebRzhtxhSqZXwKSRtPa8wTqHStzIYQ8iyRNnaEJ3aWQmo1HuZjdaY2TK95m6OuzQEVdEA5/s1600/paalai_movie_stills.jpg
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------


 
2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

 ‘
இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்

 இயக்குநர் வெ.சேகர்

 ‘
இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்

 உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

 ‘
வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்

 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

 ‘
ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட

 ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம்
, ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

 குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலைபடத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

 
இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

 
சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


சன் தொலைக்காட்சி 
சமீப காலமாக பல வரலாற்றுத் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் காட்டுகிறது பாலை.

குமுதம்
பாலை திரைப்பட இயக்குநர் செந்தமிழன் பேசுவதைக் கேட்கும் போது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்ற நம்பிக்கை பிற்கிறது.

The Hindhu
Extensive reasearch on Sangam period literature, of life and time around 2,300 years ago, enabled director M.Senthamizhan to write Paalai



http://reviews.in.88db.com/images/paalai-movie/paalai-movie-stills-pics-photos-gallery-7.JPG


டிஸ்கி -  எனவே நல்ல சினிமா ரசிகர்கள் , ஆரோக்யமான திரைப்படம் வரவேண்டும் , திறமைசாலிகளை ஊக்குவிக்கவேண்டும் என நினைக்கும் நல்ல உள்ளங்கள் பாலை படம் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நண்பர்களூக்கும் பகிரலாம் ஈரோட்டில் இந்தப்படம் ரிலீஸ் ஆகவில்லை.....கொங்கு மண்டலத்தில் திருப்பூரில் மட்டும் 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.. மெத்தப்படித்தவர்கள் மிக்க  கோவையில் கூட இந்தப்படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம் தர வைக்கும் ஆச்சரியம்

டிஸ்கி பார்ட் 2 -

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா

 

Friday, November 25, 2011

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்


http://viswaksena.com/wp-content/uploads/2011/10/mayakkam_enna.jpg 

புது வசந்தம் விக்ரமன் கிட்டே குடுத்துருந்தா 4 நிமிஷ பாட்டிலேயே முடிச்சிருக்கற சாதாரண கதைதான்.. நம்ம செல்வராகவன் தன்னோட திறமையை முடிஞ்சவரை  அந்த சாதா கதையை ஸ்பெஷல் சாதாவா சொல்ல முயற்சி பண்ணி இருக்கார்..

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர்.. அவரோட கனவே பெஸ்ட் ஃபோட்டோ கிராஃபர் ஆகனும்கறதுதான்.. ஆனா பாருங்க அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் இல்ல.. திறமை இருந்தும்  அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலை.. அவரோட திறமையை யூஸ் பண்ணி வேறொரு ஆள் ஜெயிக்கறாரு.. அப்புறம் கஷ்டப்பட்டு முட்டி மோதி ஜெயிச்சு பெஸ்ட் ஃபோட்டோகிராஃபர் அவார்டு இண்ட்டர்நேஷனல் லெவல்ல வாங்கிடறாரு.. அவ்ளவ் தான் கதை..

தல நடிச்ச முகவரி கதையை திருப்பி சுட்ட தோசை மாதிரி இருக்கேன்னு யாரும் நினைச்சுடக்கூடாதே.. அதனால சில ஜிம்மிக்ஸ் வேலையை எல்லாம் டைரக்டர் காட்றாரு.. அதாவது ஹீரோவுக்கு ஜோடி யார் தெரியுமா? போடா லூசு.. ஹீரோயின் தானே-னு அல்ப சொல்பமா கேட்றாதீங்க.. ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஃபிகரை பொண்ணு பார்க்கறாரு.. டேட்டிங்க் போலாம்னு கூப்பிடறாரு... என்னமோ தெருக்கடைசில இருக்கற பொட்டிக்கடைக்குபோலாம் வான்னு கூப்பிடற மாதிரி.... கூப்பிட்டதும்  ஹீரோயின் பயங்கர அப்பாவி போல கூடவே வந்துடுது.. 

அவன் பாப்பாவை ( அதாங்க ஹீரோயின் ) கட்டிப்பிடிக்கறான்.. அங்கே இங்கே தடவறான் ( எங்கே எங்கே-னு எல்லாம் இண்டீசண்ட்டா கேட்கக்கூடாது).. ஆனா பாப்பா அவன் கையை லைட்டா தட்டி விடறதோட சரி..  ஏன் பளார்னு அறைய வேண்டியது தானே.. ?ன்னு டைரக்டர்க்கு ஃபோன் பண்ணி கேட்டா அவர் சொல்றாரு - தம்பி.. இது அடுத்த தலை முறைக்கான கதை..  அவ்வ்வ்

அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே அவரோட ஆளை இண்ட்ரடியூஸ் பண்றார்.. கொல்லி மலை சேனைக்கிழங்கு மாதிரி இருக்கற ஹீரோயின் , நோய்ப்பூச்சி தாக்குன கரும்பு சல்லை மாதிரி இருக்கற ஹீரோவைப்பார்த்ததும் என்னமோ காணாததை கண்டது போல் பம்முது..  பாவம் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. 


http://tamil.oneindia.in/img/2011/11/15-mayakkam-enna1-300.jpg

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் லவ் ஆகிடுச்சுன்னு அந்த நண்பர்க்கு தெரிஞ்சுடுது.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையா  அவங்க 2 பேரும் கட்டிப்பிடிச்சிட்டிருக்கறதை அந்த நண்பன் பார்த்துடறார்.. இப்போதான் இடைவேளை.. ( சஸ்பென்ஸாம் அடங்கொய்யால)

போய்த்தொலையுது சனியன்னு 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வெச்சுடறாரு.. அந்த தியாக நண்பர்.. இனி கதையை எப்படி நகர்த்த? இங்கே தான் டைரக்டர் தன்னோட டேலண்ட்டை காட்றார்.. ஹீரோ மாடில இருந்து கீழே விழுந்து தலைல அடிபட்டு லைட்டா சைக்கோ ஆகிடறார்.. கொஞ்சம் மெண்டல் மாதிரி..


அவர் ஹீரோயினை கொடுமைப்படுத்த , டைரக்டர் நம்மை கொடுமைப்படுத்த உஷ் அப்பா போதும்டா சாமி.. எப்படியோ எல்லாம் சரி ஆகி க்ளைமாக்ஸ் எல்லாம் சுபம் ஹி ஹி ஹி

தனுஷ்க்கு வழக்கம் போல நல்ல வாய்ப்பு.. நடிக்க.. அண்ணன் படம் என்பதால் சிரத்தையோட நடிக்கறார்.. டான்ஸ் காட்சிகளில் மனுஷன் செம கலக்கு கலக்கறார்.. 

ஹீரோயின் ரிச்சா கங்கா பாத்பாய்.. 60 மார்க் தரலாம்.. கொஞ்சம் மீனா கொஞ்சம் சங்கவி.....சாயல்  நடிப்பு பாப்பாவுக்கு சுமாராதான் வருது.. அழுற சீன்ல எல்லாம் பார்க்க சகிக்கல.. ஒரு நல்ல நடிகை என்பவர் அழும் காட்சியில் கூட ரசிகர் மனம் கவர வேண்டும்னு கே பாலச்சந்தர் சார் சொல்லி இருக்கார்..

படத்துக்கு முதுகெலும்பே ஒளிப்பதிவும் இசையும் தான்.. படம் பூரா கேமரா விளையாடுது.. 3 பாட்டு செம ஹிட்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG6Hiy2au6p78vzbFfJTukkghVhjuLXYVzOkfHnoS2S4vM5P2ik3rxjJ18azkJhUfliJmD0aZph1JF2lenzxSUClQzT1_2vL5snAvNIQ_9bYC-8njgTlVJFI50CYPYPRxjLgAbLWsW7Y4/s1600/0.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. என்னடா பார்க்கறே.. கொஞ்ச நாள் டேட்டிங்க் பண்ணி பார்க்கலாம்னு தோணுச்சு , அதான் கூட்டிட்டு வந்துட்டேன் , தப்பா?

2.  ஹீரோயின் - ஏதாவது திட்டறதுன்னா திட்டு.. டோண்ட் சைலண்ட்..

ஓ..... திருட்டு மூதேவி..... 

3.  என் ஆள் எப்படிடா?

டேய்.. பிரியாணி எங்கே வாங்குனே..?  பழசு போல.. டேஸ்ட்டே இல்லையே? ( டபுள் மீனிங்க்ல அட்டாக் பண்றாராம் ஹய்யோ அய்யோ)

4.  நீ ஒரு முண்டக்கலப்பை

வாட்?

சரி.. இங்கிலீஷ் தெரிஞ்ச முண்டக்கலப்பை ( தூள் படத்துல ஜோதிகா முண்டக்கண்ணி)

5.  டேய்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்டா.. என் ஆள் எப்படிடா?

உன் அளவுக்கு கொஞ்சம் கம்மிதான்..

6. என் லட்சியமே நல்ல ஃபோட்டோகிராஃபர் ஆகறதுதான்.. 


ஓஹோ.. கலயாண மண்டபடத்துலயா?

ஏய்.. நீ என்ன பெரிய இவளாடி? கவர்மெண்ட் கக்கூஸ்லயா ஒர்க் பண்றே? ( ஏ க்ளாஸ் ரசிகர்களூக்காக  எழுதப்பட்ட வசனமாம் ஹி ஹி )

7.  அவங்கம்மாவை எனக்குத்தெரியும்.. ஹி ஹி அவ யார் தெரியுமா??

8.  ஏய்.. ஹிந்திப்படம் ஓடுதே அதுல வர்ற வசனம் என்ன அர்த்தம்? முஜே கோயி ஃபிரண்ட் நஹி ஹை.. (எனக்கு யாரும் ஃபிரண்ட்ஸ் இல்லை)

நீ எக்கேடோ கெட்டுப்போன்னு அர்த்தம்..

9.  என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? 6 லேங்குவேஜ் ஐ நோ.. யூ நோ?

மத்தது எதுவும் உனக்கு வந்திருக்காது.. 

10.  தப்பான இண்ட்ரஸ்ட்டை  தேர்ந்தெடுத்தா ஃபியூச்சர் ரொம்ப சிரமம்



http://www.tamilnewscinema.com/wp-content/uploads/2011/09/richa.jpg

11. தம்பி.. இந்த ஃபோட்டோ 1 எனக்கு ஒரு காப்பி குடுப்பா.. என் மனைவி அழகா இருந்து நான் பார்த்ததே இல்ல.. ( அவனவன் சம்சாரம் அவனவனுக்கு அழகா தெரியாதுய்யா)

12.  வாழ்க்கைல நாம எஞ்சாய் பண்ற வேலையை செய்யனும்.. இல்லைன்னா செத்துடனும்.. 

13.  டேய்// உங்க ஹனிமூன்க்கு நான் எதுக்குடா?

யாமினிக்கு நீ வந்தா ஓக்கேவாம்.. 

14.  எங்கேடா உன் கேர்ள் ஃபிரண்ட்?

உள்ளே பாத்ரூம்ல குளிச்சிட்டு இருக்கா.. 

கதவு திறந்து இருக்கு?

அவளுக்கு பல்லின்னா பயம்.. 

15.. யாமினி.. உங்க ஆள் வெளீல போய் இருக்காரு....

தெரியும்.. பல்லி வந்தா கூப்பிடறேன்...

16.  ஆமா.. நீங்க பாட்டுக்கு பாத்ரூம் கதவை திறந்து வெச்சுட்டு குளீக்கறீங்களே..?நானா இருக்காங்காட்டி ஆச்சு.. வேற யாராவது இருந்தா?

ம்க்கும்.. நீ பார்ப்பேன்னு நினைச்சேன்..

17.  இப்போ எதுக்கு டி என்னை திரும்பி பார்க்கறே..?

18.  ஆமா.. அவன் உன் கூடவே சுத்தறான்..?

ஆனா நான் அவன் கூட சுத்தலையே? ( விளங்கிடுச்சு)

19.  கிரியேட்டிவிட்டி என்பது கடவுளா  குடுக்கற வரம்.. நக்குனாக்கூட உனக்கு அது கிடைக்காது  ( படத்தில் பார்க்கும்போது விரசம் இல்லை)

20.  உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா? நீ செய்யற வேலையை ரசிச்சு பண்றே.. நான் கூட என் வேலைல தப்பு செஞ்சிருக்கேன்.. ஆனா அப்போ எல்லாம் எந்த வருத்தமும் பட்டதில்லை.. ஆனா உன் வேலைல ஒரு தப்பு நடந்தா நீ வருத்தப்படறே. 


http://www.lohan.in/blog/gallery/2011/04/Actress-Richa-Gangopadhyay-in-Bridal-Makeup-001.jpg

21.  கண்டக்டர்.. இந்த பஸ் கடைசியா எங்கே போகுது?

மைசூர்..

அப்போ மைசூர்க்கு ஒரு டிக்கெட்.. 

22. உன்னை லவ் பண்றதா சொல்லிட்டு என்னை லவ் பண்றா... நாளையே என்னை லவ் பண்றதா சொல்லிட்டு வேற யாரையாவது லவ் பண்ணமாட்டா-னு என்ன நிச்சயம்?

23.  என் நிலைமை எவ்ளவ் கேவலமா போச்சு பார்த்தியா?

ஆமாடா.. மச்சான் ரொம்ப கேவலமாத்தான் போச்சு.. 

24.  என் கேர்ள் ஃபிரண்டை கரெக்ட் பண்ணிட்டு.. இவன் எல்லாம் ஒரு ஃபிரண்ட்..?

25. எங்கப்பனைப்பாரு.. கொஞ்சமாவது வருத்தம் இருக்கா?

26..  நீ ஆம்பளை இல்லையா? அதான்.. வீக்னெஸ்... சீக்கிரம் ஒரு மேரேஜ் பண்ணீக்க. உன் பொண்டாட்டியை நீ தான் தேடிக்கனும்.. அடுத்தவன் பொண்டாட்டியை அல்ல.. 

27.  யோவ்.. எதுக்குய்யா போலீஸ் கம்ப்ளெயிண்ட்டு? என் புருஷன் தான் மெண்டல்தான் ஆனா நல்லவன்.. என்ன கேட்டாரு? ஃபோட்டோவுக்கு போஸ் தானே கேட்டாரு? முடிஞ்சா குடு.. இல்லைன்னா மூடிட்டு போ.. ரொம்ப ஓவரா துள்ளுனே என்னை செக்ஸ் டார்ச்சர் பண்றேன்னு பொய் புகார் குடுத்துடுவேன் 

படம் இடைவேளை வரை ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்புடன் நகர்கிறது.. அப்புறம் 2 பேருக்கும் மேரேஜ் ஆன பிறகு திரைக்கதையை எப்படி கொண்டு போறதுன்னு டைரக்டருக்கு மகா குழப்பம்.. 



http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-red-dress.jpg

இயக்குநருக்கு பாராட்டு தருவிக்கும் இடங்கள்

1. வசனம் தான் படத்துக்கு முதல் பிளஸ்.. ஷார்ப்பான வசனங்கள்.. தேவையான இடங்களீல் நறுக் சுருக். ஆனால்.. எல்லாம் முதல் பாதியில்தான்

2. ஓட ஓட பாட்டுக்கான ஒளீப்பதிவு செம.. சுத்துது சுத்துது பூமி பாட்டுக்கான லீட், நடன அமைப்பு, கேரளா ஃபிகர்களின் ஆடை வடிவமைப்பு அனைத்தும் டாப்.. 

3. யூத்களுக்கான பல மேட்டர்கள் ஆங்காங்கே தெளித்து அப்ளாஸ் அள்ளுகிறது உதவி இயக்குநர் டீம்

4. சிக்கலான திரைக்கதையிலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் வைக்கும் வாய்ப்பு இருந்தும் கண்ணியமாக காட்சிகளை அமைத்த விதம்

5. ஓட ஓட தூரம் குறையில பாட்டு அருமையான  ஒளிப்பதிவு  உத்தி..  கிராஃபிக்ஸ் கலக்கல் தியேட்டரில் அப்ளாஸ் அடங்கவே 2 நிமிடம் ஆகுது//



http://lh4.ggpht.com/_62XV5GGJjBs/S65hTx56ifI/AAAAAAAAHh0/_qMShB1MJFg/actress.richa-gangopadhyay.richa-gangopadhyay-hot-in-black-010.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் , சில ஆலோசனைகள், சந்தேகங்கள்

1. ஹீரோ ஃபோட்டோகிராஃபியில் செம டேலண்ட்.. அவர் ஒரே ஒரு ஆளிடம் மட்டுமே தன் ஃபோட்டோக்களை காட்டி ஏமாந்துடறார். உலகத்துல வேற ஆட்களே இல்லையா? ஏன் மனசு ஒடிஞ்சு போறார்? அவரோட திறமைகள் ஏன் அனைத்து இண்டர்வியூவிலும் மறுக்கப்படுது?

2. இந்தக்கதைல ஹீரோயின் நண்பனின் டாவு என காட்டி இருக்கவே தேவை இல்லையே? எதுக்கு ? சும்மா ஒரு பரபரப்பை கிளப்பவா?

3.  ஏ கிளாஸ் ஆடியன்சின் இயக்குநர் என  உங்களை எல்லோரும் கொண்டாடுறாங்க.. ஏன் சில இடங்களில் வசனம் ரொம்ப லோ கிளாஸா இருக்கு?

4. ஹீரோவின் ஃபோட்டோவை ஒருவர் மிஸ் யூஸ் பண்ணீ தன் படைப்பு என சொல்லி அவார்டு வாங்கறார்.. டெவலப் பண்ணுன ஸ்டூடியோ சாட்சியை வெச்சு தன்னோட சரக்கு என்பதை அவர் தாராளமா நிரூபிக்கலாமே?

5. இந்த ஃபோட்டோக்கள் எல்லாம் வேஸ்ட்-னு அவர் தூக்கி எரிஞ்சதும் ஹீரோ அவைகளை ஏன் கலெக்ட் பண்ணாம வந்துடறார்..?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierB34Lc5grJUXvIKG9XR-qn4V-cS3y0h622MpYgGiTnxB22IunZ73-WNkfTHSauh512Aq05wgiHrMKMsH6nciKDyIukqfrp3ypaNWaygLxsQkRpF_hs-cgBwVmPqlBvtI8KJyqqfT0Qmp/s1600/richa_gangopadhyay_mirapakaya_hot_stills_06.JPG


6. அந்த ஃபோட்டோவை மிஸ் யூஸ் பண்ணனும்னு வில்லன் நினைச்சா தம்பி குடுத்துட்டுப்போ, பார்த்து சொல்றேன்னுதானே சொல்வாங்க?

7. ஹீரோயின் டேட்டிங்க் பண்ண வந்த ஆள் கூட உரசல் புரசலா இருக்காரே, அதுதான் நவ நாகரிகமா?அப்படி இருந்துக்கிட்டே ஹீரோவை வேற லவ் பண்றாரு? அவ்வ்வ்வ்

8. ஹீரோ பாத்ரூம் போறாரு.. 6 ஃபிரண்ட்சும் ஹால்ல இருக்காங்க.. ஹீரோயினை கட்டிக்கப்போறவரும் அங்கே இருக்கார்.. அப்புறம் என்ன தைரியத்துல ஹீரோயின் உள்ளே போய் ஹீரோவை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கறார்?

9. இந்தக்காலத்துல ஃபிரண்ட்ஸ் மேரேஜ் லைஃப் வேற , பேச்சிலர் லைஃப் வேறன்னு வாழ்றாங்க.. ஆனா உங்க படத்துல மட்டும் அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே ஹீரோயினை தாரை வார்க்காத குறையா கிட்டத்தட்ட கூட்டிக்குடுக்கறாரே? ஏன்?

10. உங்க படங்கள்ல வலுக்கட்டாயமா ஹீரோவை சைக்கோவா காட்றது ஏன்?

11. பருத்தி வீரன் க்ளைமாக்ஸ் பார்த்துட்டு அதே மாதிரி பிளட் ப்ளீடிங்க் டூ ஹீரோயின் காட்னது ஏன்?படத்துக்கு அது அவசியமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih0zg333eqrIOxx3ZC-su4F77rxy_pYdWhohhP4LSxoEXeq2Ow-BAWIETwTkaMgdxnhqOMw4inJCf-jhXstxgFIAwONDkxWhLmCQR4cmape0UzZStMmtaUT_lIkwaGQR09qbELI6By8kty/s1600/Richa_Gangopadhyay_Hot_12.jpg


சி.பி கமெண்ட் - இடைவேளை வரை டைரக்டர் டச்.. அதுக்குப்பிறகு ம்ச் ப்ச்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

ஈரோடு ஆனூர்- ல் பார்த்தேன்

படம் எல்லா செண்ட்டர்லயும் 10 நாட்கள் கண்டிப்பா ஓடிடும்.. .

மனிதர் குல மாணீக் பாட்ஷா!!! ( ஜோக்ஸ்)


1.தலைவர் ஏன் கோபமா இருக்காரு?

மனிதர் குல மாணிக்கமே-ன்னு வர்ணிக்காம ஒரு ஆள் மனிதர் குல மாணிக் பாட்ஷாவே அப்டினு வர்ணிச்சுட்டாராம்

--------------------------------------------

2. கறுப்பா இருக்கற நான் சிவப்பா இருக்கற பொண்ணை ரசிக்கறது ஓக்கே, சிவப்பா இருக்கற பசங்களும் ஏம்ப்பா சிவப்பா இருக்கற பொண்ணையே ரசிக்கறீங்க? #Y Y

-----------------------------------------

3. அத்தான், நான் இப்போ சண்டை போடற மூடுல இருக்கேன், நீங்க ஃபிரீயா இருக்கீங்களா?

 ராம்சாமி - சாரி டியர்.. இப்போதான் சரக்கடிச்சென் செம டைட், குட் நைட்


-----------------------------------------------

4. ஐ ஹேட் யூ ( I HATE YOU) என்றாள்.. ஒண்ணும் பிரச்சனை இல்லை , ஐ ஹேடு யூ ( I HAD YOU )  என்றேன் # காதல் ஜாலம் @ வார்த்தை ஜாலம்

----------------------------------------

5.  சி.பி - டியர், உன் உதடு மட்டும் எப்படி இவ்வளவு ரத்தச்சிவப்பா இருக்கு?

டேய், லூஸு.. சிவப்புக்கலர்ல லிப்ஸ்டிக் போட்டா அப்டித்தான் இருக்கும்

-----------------------------------




6. நீ தான் கைப்புள்ள அப்டிங்கறதை நான் எப்டி நம்பறது?

விக்கி தக்காளி - என் கூட எந்த ஃபிகர் பழகுனாலும் கைல ஒரு புள்ளயை குடுத்துடுவேன்

-------------------------------------

7. லேப் டாப் மனோ - மாமா, உங்க பொண்ணுக்கு சீரா என்ன தருவீங்க?

மாப்ள.. உங்களுக்குப்பொண்ணு தர்றதே பெரிசு.. இதுல சீர் செனத்தி வேற வேணுமா?

---------------------------------------

8.தலைவரோட பையன் ஜொள்ளு பார்ட்டி போல..

ஏன்?

மகளிர் அணிக்கு தலைவர் ஆகிடவா?ன்னு கேட்கறாராம்.

-----------------------------------------

9. இன்னும் 10 வருடங்கள் மட்டும் தான் அரசியலில் நான் இருப்பேன்னு  தலைவர் சொல்லிட்டாரே?

ம்க்கும், ஆல்ரெடி அவருக்கு 98 வயசாகுது...

---------------------------------------------

10.  தமிழ்வாசி பிரகாஷ் - என் காதலிக்கு சிரிச்ச முகம்..

 அடடே.. ம் ம் ..

ஃபேஸ் பிக் அட்ரஸ் கேட்டாக்கூட [email protected] -னு அட்ரஸ் சொல்றாளே?

----------------------------------


 



11. அவர் எடக்கு மடக்கு ஏகாம்பரம்னு எப்டி சொல்றே?


காக்காவுக்கு சோறு வைக்கறப்ப காகா-னு கத்தறோம், ஆனா பூனைக்கு பால் வைக்கறப்ப ஏன் மியாவ் ம்யாவ்-னு  கத்தறதில்லை?னு கேட்கறாரே?

---------------------------------------------------

12. எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மன்னர்  நோக்கு வர்மம் கற்றும் பயன் இல்லை..

அப்போ அவர் ஒரு பேக்கு வர்மர்-னு சொல்லு

--------------------------------------

13. சதீஷ்.. தள்ளி உக்காருங்க.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்கும்..

ம்க்கும்.. பயந்து நடுங்க நான் ஒண்ணும் நெருப்பு இல்ல.. பருப்பு..

-------------------------------------

14.   பர்ச்சேஸ் மாலா ,சிங்கப்பூர் - காய வைக்கறதுல என் புருஷன் கில்லாடி..

அட.. உன்னையா?

ம்ஹூம்.. என் டிரஸ்ஸை... துவைச்சு காய வைச்சுடுவார்..

-----------------------------------------

15. நிரூபன் -  லவ் பண்றப்ப என் ஆளு கவரி மான் மாதிரி இருந்தா.....

அடாடா.. இப்போ..?

கவரிங்க்  மான் மாதிரி ஆகிட்டா.. அவங்கப்பன் போட்ட 30 பவுனும் போலி..

-------------------------------------------





16. டியர்.. 24 மணி நேரமும் எனக்கு உன் நினைப்புத்தான்..

 கருண் -நீ என்ன மெடிக்கல் ஷாப்பா?

-------------------------------------------------

17.  கவிதை வீதி   சவுந்தர் - மிஸ்.. நீங்க அசைவம், நான் சைவம்.. சரி வருமா?

டேய்.. லூஸு... நாம லவ் தானே பண்ணப்போறோம்? ஹோட்டலா கட்டப்போறோம்?

---------------------------------------------------------

18.  சிங்கப்பூர் சாந்தி - அத்தான்... இதோ என் கிஃப்ட்.. வீடிடோ அட்டாச்டு திசை காட்டும் கருவி..

புரியலையே.. எதுக்கு?

நீங்க எங்கே போனாலும் இது காட்டி குடுத்துடும்..

----------------------------------------------

19. சின்ன வயசுல இருந்தே நான் எறும்பு புற்று, பாம்பு புற்று பக்கம் போக மாட்டேன்..

ஏன்?

புற்று நோய் வந்துட்டா?

--------------------------------------------

20. மேடம், நீங்க எழுதற கவிதைகளை உங்க வீட்டுக்காரர் படிப்பாரா?

 சோனா - நோ நோ.. மாசம் ஆனா வாடகை மட்டும் வாங்குவார்.. ஹவுஸ் ஓனர். அவர் ஏன் படிக்கனும்?

---------------------------------------

20.  உணவு உலகம் ஆஃபீசர் - மேரேஜ் ஆகி 8 வருஷம் ஆகுது.. என் மனைவிக்கு ஒரே ஒரு டைம் தான் கோபம் வந்திருக்கு..

அடடே..

அந்த ஒரு டைம் வந்த கோபமே இன்னும் தீரலை..

-----------------------------------