Monday, November 19, 2012

பாட்டாளி மக்கள் கட்சி - சுய சரிதை - டாக்டர் ராம்தாஸ்

பாட்டாளி சொந்தங்களே!

மருத்துவர் . ராமதாஸ்

முதலில் நான் ஒரு விவசாயி, இரண்டாவதாக நான் ஒரு மருத்துவர், மூன்றாவதாக ஒரு சமூகப் போராளி, நான்காவதாக எந்த பதவிக்கும் போக விரும்பாத ஒரு அரசியல்வாதி" என்று தொடர்ந்து பதிலளித்து வருபவர் மருத்துவர் . ராமதாஸ்.
சென்னையில் இருந்துகொண்டு அரசியல் செய்துவரும் தலைவர்களுக்கு மத்தியில், கிராமத்திலேயே இருந்துகொண்டு தாம் பிறந்த மண்ணை நேசித்து, மண்ணின் வாசனையோடு மரம், செடி, கொடிகளை உருவாக்கி அவற்றோடு வாழ்ந்து கொண்டே ஒரு கட்சியின் தலைவராக வலம் வருபவர்.
நல்ல படிப்பாளி; சமூகப் போராளி; சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்து உருவான இவர், தம் வாழ்க்கை அனுபவங்களை நம் வாசகர் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார்.
- ஆசிரியர்
நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது உறவினர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி நுழைவுக் கட்டணம் கட்டி கல்லூரியில் சேர்ந்தேன். அதன்பிறகு எனது உறவினர்களும் அவ்வப்போது உதவி செய்துவந்தார்கள். இரண்டாண்டுகள் எப்படியோ மருத்துவப் படிப்புச் செலவைச் சமாளித்து விட்டேன். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது என் படிப்பைத் தொடர முடியுமா என்ற அச்சத்தில் தவித்துக்கொண்டிருந்தேன். கல்லூரிக் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக, அறிவிப்புப் பலகையில் என் பெயரைக் குறிப்பிட்டு குறித்த தேதிக்குள் கட்ட வேண்டுமென்று எழுதிப் போட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் படிப்பைத் தொடர முடியுமா என்று தத்தளித்துக் கொண்டிருந்த நான், ஒருநாள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நண்பரைக் காண ரயிலேறி விட்டேன். அவரைச் சந்தித்து என்னுடைய மனக்குமுறலையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். நானும் அவருடைய அறையில் இரண்டு நாள் தங்கினேன். இரண்டாவது நாள் என்னை விடுதி அறையில் இருக்கச் சொல்லிவிட்டு, கல்லூரிக்குச் சென்று விட்டார்.
நான் அப்பொழுது வெளியில் சென்று வரலாம் என்று மனம் போன திசையில் போய்க் கொண்டிருந்தபோது, காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது மிகவும் மனக்குழப்பத்தில் இருந்த நான், அந்த வெள்ளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட முடிவெடுத்து விட்டேன். அப்பொழுது என் மனக்கண் முன்னால் என்னை ஆளாக்கிய என்னுடைய தாயும் தந்தையும் வந்ததால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினேன்.
இதை என்னுடைய நண்பரிடம் சொல்லியபோது என் மனச்சுமை குறைந்ததாக உணர்ந்தேன். இதை என்னுடைய மைத்துனர், இராமச்சந்திரனுக்கு தந்தி மூலம் நண்பர் தெரிவித்துவிட்டார். என்னுடைய மைத்துனர், பணத்தோடு தஞ்சைக்கு வந்து என்னை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்று என் படிப்பு தொடர வழிவகை செய்தார். உண்மையில் சொல்லப்போனால் நான் சென்னைக்கு படிக்கவந்தபோது தமிழாசிரியராக வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன்.
ஆனால், மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை பின்னால் சொல்கிறேன். அதற்கு முன் என் கிராமமான கீழ்சிவிறிக்கு உங்களை அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள கீழ்சிவிறி. அங்கு 25.7.1939 அன்று சஞ்சீவிராய கவுண்டருக்கும் நவநீதம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தேன். எனக்கு இரண்டு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டார்கள்.

கீழ்சிவிறி ஓர் அழகிய சிற்றூர். வெளி உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத, எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்த ஊர். வெளியூர்களுக்கு பண்டிகை, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும் என்றாலும் கட்டை (மாட்டு) வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள திண்டிவனத்துக்குப் போக வேண்டும் என்றாலும் எல்லோரும் நடந்துதான் போக வேண்டும். சார்பதிவாளர் அலுவலகம் அங்கே இருந்ததாலே தேவை ஏற்படும் போது அதற்காக மட்டுமே நகரத்துக்குச் செல்வார்கள். பிரசவத்துக்கோ, வைத்தியத்துக்கோ என் ஊர் மக்கள் அங்குச் சென்றதாக எனக்கு நினைவில்லை.
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும். எல்லா வகை தானியங்களும் விளைந்த ஊர் அது. அந்த ஊர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை கூழ் ஊற்றி மாரியம்மனுக்குத் திருவிழா செய்வார்கள். 18 நாள் பாரதம் சொல்லி திரௌபதியம்மன் கோயிலுக்கு 10 நாள் கூத்து நடத்தி இறுதியில் தீமிதி திருவிழா நடைபெறும். கூத்து பார்க்க ஒரு பாயைத் தூக்கிக் கொண்டு இடம்பிடிக்கச் செல்வேன். கட்டியங்காரன் வந்ததும் நீட்டிப் படுத்து விடுவேன். சில சமயம் அப்படியே தூங்கிப் போய், மறுநாள் காலை சூரியன் முகத்தில் பட்டதும் எழுந்திருப்பேன்.
ஊரிலுள்ள காமன்கோயில் மிகப் பிரசித்தமான கோயில். காமன் பண்டிகையைக் கூத்து நடத்தி விமரிசையாகக் கொண் டாடுவார்கள். என்னுடைய தந்தையாரும் மன்மதன் வேஷம் போட்டு மன்மதனாகப் பல ஆண்டுகள் நடித்து வந்தார்.

எனது கிராமத்தில் ஒரு ரெட்டியார் வீடும், இரண்டு நாயுடு வீடும், பிற்காலத்தில் ஒரு பிராமணர் வீடும், கூடை பின்னி விற்கின்ற வேட்டைக்காரர்கள் சிலர் வீடும், ஒரு குயவர் வீடும், நாவிதர் வீடும், ஒரு தச்சர், ஒரு கருமார் வீடும், இரண்டு பர்லாங்கு தொலைவில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஆதி திராவிடர் காலனியும் தனித்தனியாக இருந்து வந்தன. இங்கு வன்னியர்கள் 100க்கு 90 சதவிகிதம் பேர் வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட எல்லோருமே உறவினர்கள் என்றுகூடச் சொல்லலாம். பல்வேறு சமூகங்கள் வாழ்ந்து வந்தாலும் அவரவர்கள் தங்கள் சமூகக் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து நடந்து கொண்டதால் கிராமத்தில் நல்லிணக்கம் இருந்தது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் நல்ல பண்பு இருந்தது.
என்னுடைய தாத்தாக்கள் இருவரும் பெரிய வாத்தியார் எனவும், சின்ன வாத்தியார் எனவும் ஊர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டனர். அவர்கள் எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் ஊரைச் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கும் நடுநிலை தவறாமல் பஞ்சாயத்து சொல்லுவார்கள்."

தொடரும் 

 நன்றி - கல்கி 

கண்ணதாசனுடன் எனக்கு ஏற்பட்ட தகறாரு -எம்.எஸ்.விஸ்வநாதன்

மீட்டருக்கு மேட்டர்!

எம்.எஸ்.விஸ்வநாதன்

திரையுலகில் எனக்கு எத்தனையோ நண்பர்கள் உண்டு என்றாலும், கவிஞர் கண்ணதாசனுக்கு என் மனத்தில் ஒரு தனி இடமுண்டு. காரணம், நாங்கள் இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தோம் என்பதுதான். கண்ணதாசன்நான் பேச நினைப்பதெல்லாம், நீ பேச வேண்டும்என்று எழுதினாரே, அந்த வரிகள் திரையில் சினிமா நட்சத்திரங்கள் பாடியவையாக இருக்கலாம்


ஆனால் நிஜ வாழ்க்கையில் எங்கள் இரண்டு பேருக்கும் மிகவும் பொருத்தமானவை அவை. எங்கள் இரண்டு பேருடைய அலைவரிசையும் ஒத்துப் போனதுதான் எங்கள் ஆழமான நட்புக்கு அஸ்திவாரம். இவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்த நாங்கள் முதல் முறை சந்தித்துக் கொண்டபோது, எங்களுக்கிடையில் சண்டைதான் வந்தது என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள்.


அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது 1946ஆம் வருஷம். கோயம்புத்தூரில் ஜூபிடர் பிக்சர்ஸ் பட நிறுவனம்கன்னியின் காதலிஎன்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் ஜூபிடர் பிக்சர்சில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த ஆபீஸ் பாய். எனக்கு சின்ன வயசில் இருந்தே இசையில் ஆர்வம் உண்டு.


 ஜூபிடரில் ஒரு மியூசிக் ஹால் இருக்கும். அங்கே தான் ஜூபிடர் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் இசையமைப்பு, பாடல் கம்போசிங் வேலைகள் நடக்கும். நானாகவே ஜூபிடரின் மியூசிக் ஹாலில் பணியாற்றும் எல்லா இசையமைப்பாளர் களுக்கும் சின்னச் சின்ன வேலைகள் செய்து, அவர்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளை ஆனேன். அப்போது எனக்கு பதினெட்டு வயசு."


இசை ஆர்வம் மிகுந்த விஸ்வநாதனுக்கு ஒரு சுவாரசியமான வேலை கொடுக்கப்பட்டது. ஜூபிடரில் தயாராகும் படங்களின் இசையமைப்பாளர்கள் மெட்டுப் போட்டவுடன், அதை விஸ்வநாதனிடம் கொடுத்து விடுவார்கள். கூடவே, அந்த மெட்டுக்கு எந்தக் கவிஞர் பாட்டு எழுதித் தரப்போகிறார் என்றும் சொல்லிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட கவிஞரிடம், மெட்டைக் கொடுத்து, அதற்கேற்ற பாடலை எழுதி வாங்கிக் கொண்டு வர வேண்டிய வேலைதான் அது. ‘கன்னியின் காதலிபட வேலை நடந்துகொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் ராம்நாத்.


அப்போதுதான் ஒரு நாள் தும்பைப் பூ வெள்ளையில் வேட்டி சட்டை அணிந்து, நெற்றியில் பளிச்சென்று விபூதி பூசி, நடுவில் குங்குமப் பொட்டோடு ஒருவர்என் பெயர் முத்தையா. எனக்கு செட்டிநாடுஎன்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்தான் பின்னாளில் என் அன்பு நண்பராக விளங்கிய கண்ணதாசன். அந்த அறிமுகத்துக்குப் பிறகு, நானும் கண்ணதாசனும் சந்தித்துப் பேச உடனே வாய்ப்பு அமையவில்லை. காரணம் என்னிடம் மெட்டைக் கொடுத்து, கண்ணதாசனிடம் பாட்டு எழுதி வாங்கிக்கொண்டு வரும்படி எனக்கு ஜூபிடரில் சொல்லவில்லை.


ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், கன்னியின் காதலி படத்துக்கு கண்ணதாசன்கலங்காதிரு மனமே" என்று ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருந்தார். அந்தப் பாட்டுக்கு இசையமைப்பாளர் சுப்பராமன் இசையமைத்தும் முடித்து விட்டார். சில நாட்கள் கழித்து, சுப்பராமன் போட்ட மெட்டுக்கு ஏற்ப கண்ணதாசன் ஒரு பாட்டு எழுத வேண்டி இருந்தது. மெட்டை என்னிடம் கொடுத்தார்கள்


அதை எடுத்துக்கொண்டு கண்ணதாசனிடம் போனேன். மெட்டை பல தடவை வாசித்துக் காட்டியும், கண்ணதாசனுக்கு மெட்டுக்கு ஏற்ப பாடலை எழுத முடியவில்லை. இப்படியே மூன்று நாட்கள் கடந்து போயின. நான்காவது நாள் ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்தார் கண்ணதாசன். அதில்காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதேஎன்று ஒரு வரி வந்தது. மெட்டுக்கு, கண்ணதாசனின் வரிகள் பொருத்தமாக இருந்தாலும், களி, கூத்து போன்ற வார்த்தைகளை நான் ரசிக்கவில்லை.


 பட்டென்று கவிஞரிடம், ‘கவிஞரே! மெட்டுக்கு, வார்த்தை சரியாக இருந்தாலும், களி கொண்டு கூத்தாடுதே என்ற வார்த்தைகள் சரியாக இல்லை; மாற்றி விடுங்கள்; அது என்ன களி, கூத்து?’ என்று சொல்லி விட்டேன். கண்ணதாசன், என்னிடமிருந்து இதுபோன்ற ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. என்னை முறைத்துப் பார்த்தார். அந்தப் பார்வையே சொல்லிவிட்டது, ‘நான் எழுதினது சரிதான்! அதை மாற்றி எழுதித் தரமாட்டேன்!’ இப்படி முறைப்பில் முடிந்தது கவிஞரோடு என்னுடைய முதல் சந்திப்பு.

கொஞ்ச நேரம் ஆகி இருக்கும், அங்கே வந்தார் ஜூபிடரின் ஆஸ்தான பாடலாசிரியரான உடுமலை நாராயண கவி. என்னைப் பார்த்து, ‘என்னடா! பல்லவி எழுதிக் கொடுத்திட்டானா? சொந்தத்துக்கா? சந்தத்துக்கா?’ என்று கேட்டார் உடுமலை.
சந்தத்துக்குத்தான்என்றேன் நான்.
எங்கே பல்லவியைப் படி பார்க்கலாம்!’ என்று அவர் கேட்கவும், நான் கண்ணதாசன் எழுதின பல்லவியைப் படித்துக் காட்டினேன். ‘காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதேஎன்ற வரியை நான் படித்ததும், சட்டென்று முகம் சுளித்தார். ‘என்னடா களி, கூத்துன்னு? இந்த வார்த்தைகளெல்லாம் இவனுக்கு ஒத்துவராதே? சரி! வேற மாத்தி எழுதிக் கொடுத்திடு!’ என்று கண்ணதாசனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்திலிருந்து போய் விட்டார்.

கண்ணதாசன் மனசுக்குள்ளே, ‘இந்தப் பையன் சொன்ன வார்த்தைகளையே, மூத்த கவிஞரும் சொல்கிறாரே! இவனிடமும் ஏதோ விஷயம் இருக்குஎன்று நினைத்துக் கொண்டிருப்பார். ஆனால் வெளியில் சொல்லவில்லை.


நேரம் ஆகிக்கொண்டிருந்ததே தவிர கவிஞர் வார்த்தை மாற்றி எழுதித்தந்த பாடில்லை. ரொம்ப நேரம் கழித்து உடுமலை நாராயண கவி மறுபடியும் அங்கே வந்தார்.

என்னடா! மாத்தி எழுதிக் கொடுத்துட்டானா?’

இன்னும் சரியா ஏதும் அமையலை.’

ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘சரி! இப்படி மாத்திக்கோ! ‘காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு மாத்திப் போட்டுப்பார். என்ன சரியா?’ என்று அவரே வார்த்தைகளை மாற்றிக் கொடுத்தார்.

ரொம்ப நல்லா இருக்குஎன்றேன்.

என்னைப் பார்த்துடே மடையா! ‘காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதேங்கறதுதான் நல்ல கவிதை; அருமையான தமிழ்!’ என்று சொல்லிவிட்டு, கண்ணதாசனின் பக்கம் திரும்பி,‘இந்த மடையனுக்கு இதெல்லாம் தெரியாது. இவனைப் போல இருக்கிற எத்தனையோ மடையன்களுக்குப் புரியற மாதிரி வரணும்னு கேட்கறான்என்று சொன்னார் உடுமலை நாராயண கவி. ஒரு வழியாக மெட்டுக்குள் சரியான வார்த்தைகள் ஏறி அமர்ந்துகொண்டன.


இப்படித்தான் சண்டையில் தொடங்கியது எங்கள் நட்பு.

நாளடைவில் எங்கள் நட்பு நெருக்கமானது. நாங்கள் இருவருமே உரிமை எடுத்துக் கொண்டு பழகினோம். நான் அவரை, ‘கவிஞரே!’ என்று அன்போடு அழைப்பேன். அவர், ‘என்னடா விசு!’ என்று உரிமையோடு குறிப்பிடுவார்.

நான் என் இசையை மீட்டர் என்றும், கவிஞரது பாடலை மேட்டர் என்றும் சொல்லுவேன். ஆக, நான் போட்ட மெட்டுக்கு கண்ணதாசன் பாட்டு எழுதினால் அதை நான் மீட்டருக்கு மேட்டர் என்றும், அவர் எழுதிய பாட்டுக்கு நான் இசை அமைத்தால் அதை மேட்டருக்கு, மீட்டர் என்றும் தமாஷாகச் சொல்வதுண்டு. அப்படி, நாங்கள் இருவருமாகச் சேர்ந்து போட்ட மீட்டரும், மேட்டரும் இன்றும் சினிமா ரசிகர்கள் உள்ளத்தில் நீங்காத இடத்தை நிரந்தரமாகப் பிடித்துள்ளன. அப்படிப்பட்ட சில மறக்கமுடியாத அனுபவங்களைத்தான் இந்தத் தொடரில் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்."

எம்.எஸ்.வி....
கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சாதாரணமான கிராமம்தான் இலப் புள்ளி. கேரள வழக்கப்படி, ஒவ்வொரு வீட்டுக்கும், அவர்களுடைய பரம்பரை அடையாளமாக ஒரு பெயர் இருக்கும். அதன்படி இலப்புள்ளியில் வசித்த ஒரு குடும்பத்துக்குரிய பரம்பரை பெயர் மனையங்கத் வீடு. அந்தப் பரம்பரையில் வந்த சுப்ரமணியனுக்கும், அவரது மனைவி நாணிக்குட்டி என்று அழைக்கப்பட்ட நாராயணி குட்டி அம்மாளுக்கும் 1928ஆம் வருடம் ஜூன் 24ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்குப் பெயர் விஸ்வநாதன். ஆக, குடும்பப் பெயர், அப்பா பெயர் இரண்டையும் இணைந்த மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்தான் நம் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன். ஒரு விசேஷம் என்னவென்றால், இவரது தாய் வழியிலும் சரி, தந்தை வழியிலும் சரி இசைத்துறையோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள் யாருமே இல்லை.

தொடரும் 

 நன்றி - கல்கி