Thursday, April 04, 2024

ANATOMY OF A FALL (2024) -ஃபிரஞ்ச் /தமிழ் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் டிராமா + கோர்ட் ரூம் டிராமா ) @ அமேசான் பிரைம்


சிறந்த  திரைக்கதைக்கான  ஆஸ்கார்  விருதை  வென்ற  படம்  இது .6  மில்லியன்  டாலர்  செலவில் எடுக்கப்பட்டு  35  மில்லியன்  டாலர்  பாக்ஸ்  ஆஃபீசில்  வசூல்  செய்த  படம் . 2023   மே  மாதம்  முதல்  2024  மார்ச்  மாதம்  வரை  பல  திரைப்பட  விழாக்களில்  கலந்து  கொண்டு  இதுவரை 47  விருதுகளை  வென்ற  படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின் கணவர்  ஒரு  ரைட்டர் . இருவரும்  காதல்  திருமணம்.அவர்  தான்  முதலில் ப்ரப்போஸ்  செய்தார்.    13  வயதில்  ஒரு  மகன்  இருக்கிறான். தன்  கணவனின்  எழுத்துத்  துறமையைப்பார்த்து  நாயகியும்  ஒரு  ரைட்டர்  ஆக  மாறுகிறார்.  வாழ்க்கை  நன்றாகப்போய்க்கொண்டு  இருக்கும்போது   மகனுக்கு  ஒரு  சாலை  விபத்து  நிகழ்கிறது . அதில்  அவனது பார்வை  பறிபோகிறது.


 இந்த  விபத்துக்குக்காரணம்  நாயகியின்  கணவர்  தான்  என்பதால்  அது  பற்றி  இருவருக்கும்  அடிக்கடி  வாக்குவாதம்  நடக்கிறது .மருத்துவச்செலவு  கூடிக்கொண்டே  போகிறது .இதனால்  எழுதுவதை  ஓரம்  கட்டி  விட்டு  வேலைக்கு  போய் சம்பாதிக்கும்  வழியைப்பாருங்கள்  என  நாயகி  சொல்லி  விடுகிறாள் 


இதனால்  நாயகியின் கணவன்  கோபம்  கொள்கிறான் . இதனால்  அடிகக்டி  இருவரும்  வாக்குவாதம்  செய்வது , சண்டை  போடுவது  என  இருக்கிறார்கள் 


ஒரு நாள்  மகன்  தன்  செல்ல  நாயுடன்  வாக்கிங்  போய்  விட்டு  வீடு  திரும்புபோது  தன்  அப்பா  கீழே  விழுந்து  அடிபட்டுக்கிடப்பதைக்கையால்  தடவி  உணர்ந்து  அம்மாவை   அழைக்கிறான்.  நாயகி  உடனே  மாடியில்  இருந்து  கீழே  வந்து  ஆம்புலன்சை  அழைக்கிறாள் 


 இது போலீஸ்  கேஸ்  ஆகிறது . நாயகியின்  கணவன்  தன்   மனைவியுடன்  அடிக்கடி  சண்டை போட்ட சம்பவங்களை  செல்  ஃபோனில்  எதற்காகவோ  ரெக்கார்டு  செய்து  வைத்திருக்கிறான். இதனால்  போலீசின்  சந்தேகம்  நாயகி  மீது  திரும்புகிறது நாயகியின்  கணவன்  மூன்றாவது  மாடியிலிருந்து  தவறி  விழுந்து  இறந்தானா?  நாயகி  கணவனை  அடித்து  கீழே  தள்ளிக்கொலை  செய்தாரா? என்பதை   கோர்ட்  ரூம்  டிராமா  வாக  மீதி  திரைக்கதை  சொல்கிறது 


நாயகியாக  ஜெர்மன்  நடிகை  சாண்ட்ரா  ஹல்லர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  அவர்  நல்லவரா? கெட்டவரா?சராசரி  பெண்ணா? என்பதை  கடைசி  வரை  சஸ்பென்ஸாகவே  நகர்த்திக்கொண்டு  போனது  அருமை 


தமிழ்ப்படம்  போல  152  நிமிடங்கள்  படம் ஓடுகிறது. கோர்ட்  சீன்  காட்சிகளி;ல் சினிமாத்தனம்  இல்லாமல்   யதார்த்தமாய்  இருந்தது  சிறப்பு 


ஒளிப்பதிவு  சைமன்  அருமையாக  பணி  ஆற்றி  இருக்கிறார். 


ஆர்தர்  ஹராரி  என்பவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  ஜஸ்டின்  டிரையட்



சபாஷ்  டைரக்டர்


1  லீகல்  டிராமா  வில்   பொதுவாக  கோர்ட்  சீன்கள்  ஓவர்  ஆக்டிங்  அல்லது  ஓவர்  எமோஷனலாக  வக்கீல்கள்  வாதாடுவது  போல  இருக்கும்,இது  அப்படி  எல்லாம்  இல்லாமல் யதார்த்தமாக  , லைவாக  இருந்தது 


2   க்ளைமாக்ஸ்  காட்சியில்  அந்த சிறுவன்   நாய்க்கு  ஆஸ்பிரின்  மருந்து  கொடுத்து  டெஸ்ட்  செய்து  அதை  கோர்ட்டில்  வாக்கு மூலமாக  அளிக்கும்  காட்சி 


3    குற்றம்  சாட்டப்பட்ட  நாயகி , சாட்சி  ஆன  மகன்  ஆகிய  இருவரும்  ஒரே  வீட்டில்    வசிக்கக்கூடாது  என  கோர்ட்டில்  ஒரு  பெண்ணை  அனுப்பி  கேஸ்  முடியும்  வரை  அம்மா =- மகன்   கேஸ்  சம்பந்தமாக  எதுவும்  பேசிக்கொள்ளக்கூடாது  என  கண்காணிக்க  ஆர்டர்  போடுவது 


4  நாயகி  தன்  கணவர்  எழுதிய  27  பக்க  கான்செப்ட்டை  வைத்து  அதை  எடுத்தாண்டு  ஒரு 400  பக்க  மெகா  ஹிட்  நாவலை  உருவாக்கியது  குறித்து  கோர்ட்டில்  எழும்  வாத  விவாதங்கள்  


5    ஓப்பனிங்  சீனில்  நாயகியைப்பேட்டி  எடுக்க  வந்த  லேடி  பிரஸ்  ரிப்போர்ட்டரை  வைத்து  அரசாங்க  வக்கீல்  கேசை  நாயகிக்கு  எதிராக  திருப்பும்  சாமார்த்தியம் 


6  சிபிஐ  டைரி குறிப்பு  படத்தில் ஒரு  பொம்மையை  கீழே  போட்டு  அது  விழும்  நிலை  கண்டு  அது  தற்கொலையா? கொலையா  ?என  கண்டு  பிடிக்க  முயல்வது  போல  மூன்றாவது  மாடியில்  இருந்து  ஒரு  டம்மி  பொம்மையை  வீசி   டெமோ  காட்டும்  காட்சி 


ரசித்த  வசனங்கள் 


1   ஒரு   எழுத்தாளர்  தன்னோட எல்லா எழுத்துக்களையும் நிஜ  வாழ்வில்  அனுபவித்ததைத்தான்  எழுதனும்னு  அவசியம்  இல்லை


2  சட்டம்  என்பது  யாருக்கும்  நண்பன்  அல்ல, யாராவது   நண்பன்  ஆகனும்னு  நினைச்சாலும்  அதுவும்  முடியாது


3  ஒருத்தரோட  கண்ணைப்பார்க்காம  அவரோட  இண்ட்டென்சன்  என்ன?னு  நாம  முடிவு  பண்ண  முடியாது 


4  ஒருத்தரோட  கோபம்  அவரோட  உடல்  வலிமையை  அதிகரிக்க  வாய்ப்பிருக்கு 


5  தற்கொலை  முயற்சியில்  ஒருவர்  வெற்றி பெற்றாலும்,தோல்வி  அடைந்தாலும்  அது தற்கொலை  முயற்சி  என்று  தான்  சொல்லப்படுகிறது . இது  ஒரு  வினோதம்


6  ஒரு  பேஷண்ட்  என்ன  சொன்னாலும்  அதை  உண்மைனு  ஒரு   சைக்கலாஜிக்கல்  டாக்டர்  நம்பனும்னு  அவசியம்  இல்லை 


7  நீங்க  நாய்  மாதிரி  அழகா  இருக்கீங்க  மேடம்


 ஒருத்தரை  ஏதோ  ஒரு  விலங்கா  பார்க்காதவரை  நம்ப  முடியாது . எல்லாரும்  அவங்களுக்கு[பிடிச்ச  நபரை  ஏதோ  ஒரு  விலங்கோட , பறவையோட  கம்ப்பேர்  பண்ணிக்குவாங்க 


8  நீ  யாரைப்பார்த்து  சிரிச்சதே  இல்லையே?


 அதனாலதானே  என்னை  நீங்க  லவ்  பண்ணுனீங்க? உங்க  ஃபிரண்ட்ஸைப்பார்த்து  சிரிச்சிருந்தா  அதை  ஏத்துக்க  முடியுமா  உங்களால?


9  ஒரு  எழுத்தாளரால அவரோட  எண்ணத்தை  அவர்  எழுதும்  கதைல  வர்ற  கேரக்டர்  மூலமாவும்  சொல்லலாமே?


  சொல்லலாம், ஆனால்  எல்லா  கேரக்டர்களுமவர்  எண்ணத்தைபிரதிபலிக்கும்னு  வாதம்  பண்ண  முடியாது 


10  பணம்  நமக்கு  எல்லா  சந்தோஷத்தையும்  கொடுத்துடாதுனு  யாரோ  சொல்லி  இருக்காங்க, ஆனா  தெருவில்  நின்னு  அழுவதை  விட  இந்த  காருக்குள்  இருந்து  அழுவது  எனக்கு  பிடிச்சிருக்கு 


11  எப்பவுமே  நாம  முடிவெடுக்க  எந்த  வித  எவிடென்சும்  இல்லாதப்ப  நம்ம  மனசுதான்  முடிவெடுக்கும் 


12  ஒரு  ரைட்டர்  தன்  புருசனை  கொலை  பண்ணிட்டாங்க  என்று  சொல்வதை  விட  ஒரு  டீச்சர்  தற்கொலை பண்ணிட்டாங்க  என்று  சொல்வதில்  சுவராஸ்யம்  கம்மியா  இருக்குனு மீடியாக்கள்  நினைக்கலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியை  இண்டர்வ்யூ  எடுக்க  வந்த  பெண்ணிடம்  நாயகி  பேசும்போது  மேலே   மாடியில் இருக்கும்  கணவன்  சத்தமாக  இசை  கேட்டுக்கொண்டு  இருந்ததால்  இன்னொரு  நாள்  இண்ட்டர்வ்யூ  வெச்சுக்கலாம்னு  கிளம்பறாங்க.  பெட்ரொமாக்ஸ்  லைட்டே  தான்  வேணுமா  என்பது  போல  வீட்டுக்குள்ளேயே தான்  கேள்விகள்  கேட்கனுமா?வீட்டுக்கு  வெளில  வாக்  போய்க்கிட்டே  பேசி  இருக்கலாமே? கோர்ட்டில்  குறுக்கு  விசாரணை   பண்ணும்போதும்  யாரும்  இந்த  பாய்ண்ட்டை  மென்சன்  பண்ணவில்லையே?  


2  நாயகியின்  கணவன் பல  சமயங்களில்  நாயகியோடு  தனிமையில்  நடக்கும்  விவாத  உரையாடல்களை  ரெக்கார்வு  பண்ணி  இருக்கிறார். இது  எதற்கு? என்பதை  கோர்ட்டில்  யாருமே  கேள்வி  எழுப்பவில்லை . அப்போ  முன் கூட்டியே  திட்டமிட்டுத்தானே  அவர்  அதை  செய்திருக்க  வேண்டும்  என்ற  பாயிண்ட்டை  நாயகியின்  வக்கீல்  முன்  வைக்கவில்லையே? 


3  பொதுவாக  மனிதனை  விட  விலங்குகளுக்கு  மோப்ப  சக்தி  அதிகம். அந்த  சிறூவனின்  நாய்  அவனது  அப்பா  எடுத்த  வாந்தியை  வாந்தியில்  இருந்த  மாத்திரை , மருந்தை  நாய்  சாப்பிட்டது  என  ஸ்டேட்மெண்ட்  கொடுக்கிறான். வசதியான  வீட்டில்  வளரும்  நாய்  , வேளா  வேளைக்கு  நல்ல  உணவு  கிடைக்கும்  நாய்  எதற்கு   தெரு நாய்  போல்  அப்படி  சாப்பிட்டது ?  அது  நம்ப  முடியலை 


4  க்ளைமாக்சில்  கேசுக்கு  முக்கியமான  தீர்ப்பை  லைவாக  கோர்ட்டில்  காட்டாமல்  குறிப்பால்  உணர்த்துவது  ஏன் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆஸ்கார்  அவார்டு  உட்பட  பல  விருதுகளை  வென்ற படம்  திரைப்பட  விழாக்களில்  மட்டுமே  காண  முடிகிற  படம்  ஓடிடி  யில்  காண்பது  அபூர்வம் .  ரேட்டிங்  3.25 / 5 


Anatomy of a Fall
Theatrical release poster
FrenchAnatomie d'une chute
Directed byJustine Triet
Written by
Produced by
Starring
CinematographySimon Beaufils
Edited byLaurent Sénéchal
Production
companies
  • Les Films Pelléas
  • Les Films de Pierre
Distributed byLe Pacte[1]
Release dates
Running time
152 minutes[4]
CountryFrance[5]
Languages
Budget€6.2 million[8]
(US$6.7 million)
Box officeUS$34.8 million[9]

Wednesday, April 03, 2024

ஆடு ஜீவிதம் (2024)- மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( சர்வைவல் டிராமா)

 


  2008ஆம்  ஆண்டு  மலையாளத்தில்  வெளி  வந்த  நாவலான  ஆடு  ஜீவிதம் அந்த  ஆண்டில்  அதிக  விற்பனை  ஆன  நாவலாக  பரபரப்பாகப்பேசப்பட்டது . உண்மை சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  எழுதப்பட்ட  நாவல்  அது 80 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  இதுவரை  50  கோடி  மட்டுமே  வசூல்  ஆகி  உள்ளது


 தமிழ்  சினிமாவில்  கேரக்டர்  அல்லது  கெட்டப்க்காக தங்கள்  உடலை  வருத்தி  உருமாற்றிய  வல்லமை  கொண்டவர்கள்  மூவர் . 1  சேது  விக்ரம்  2  வாரணம்  ஆயிரம்  சூர்யா  3  அபூர்வ  சகோதரர்கள் கமல் . அந்த  வரிசையில்  மலையாள  நடிகர்  பிருத்விராஜ்  சுகுமாறன்  படத்துகாக 92  கிலோ  எடையுடன் ஒரு  கெட்டப்  பின்  உடல்  இளைத்து  31  கிலோ  குறைத்து 61 கிலோ  எடையுடன் ஒரு கெட்டப்பில்  தோன்றி  ரசிகர்களிடையே  வரவேற்புப்  பெற்றார்


இந்தப்படத்துக்காக  முதலில்  இயக்குநர் அணுகியது  சூர்யாவைத்தான். ஆனால்  கால்ஷீட்  பிரச்சனை  காரணமாக  அவர்  நடிக்க  முடியாமல்  போனது. 2015ல்  இருந்தே  இதை  எடுக்க  மிகவும்  சிரமப்பட்ட  இயக்குநர் 2020ல்  கோவிட்  பிரச்சனையால்  ஃபாரீனில்  மாட்டிக்கொண்டு  பின்  மீண்டு  வந்து  படம்  இயக்கினார், விமர்சன  ரீதியாக  மீடியாக்கள்  பாராட்டைப்பெற்றாலும்  கமர்ஷியலாக  இது  பிரம்மாண்ட  வெற்றியைப்பெறவில்லை . சுருக்கமாகச்சொன்னால்  கமல்  படம்  மாதிரி  பேரு  கிடைச்சுது , ஆனா  சோறு  கிடைக்கலை  (  விதி விலக்கு -  விக்ரம், சகலகலாவல்லவன், அபூர்வசகோதர்கள்  ETC)


    ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் ஒரு  மிடில்  கிளாஸ்  வாழ்க்கை  வாழ்ந்து  வருபவன்.மனைவியுடன்  இல்வாழ்க்கை நடத்தி  வருபவன்  வெளிநாடு  போய்  வேலை  செய்து  அதிக  பொருள்  ஈட்டி  இங்கே  ஜாலியாக  செட்டில்  ஆகலாம்  என  நினைக்கிறான், இதனால்  தன்  சொந்த  வீட்டை  அடமானம்  வைத்து  ரூ 30,000   ஒரு  புரோக்கரிடம்  கட்டி  துபாய்  போகிறான்


 ஆனால்  அங்கே  அவனை  ரிசீவ்  பண்ண  உரிய  நபர்  வரவில்லை . இவராக ஒரு  துபாய்  ஷேக்கை  ஓனராக  நினைத்து   ஏமாறுகிறார். அந்த  ஷேக்  இவரையும், நண்பரையும்  ஒரு   பாலைவனத்துக்கு  அழைத்து  செல்கின்றார் . அங்கே  ஆடு  மேய்க்கும்  வேலை . ஏதோ  ஹெல்ப்பர்  வேலை    என  நினைத்து  வந்த  நாயகனுக்கு  இது  அதிர்ச்சி .அதனால்  அங்கே  இருந்து  எஸ்கேப்  ஆக  முயற்சி  செய்கிறார்  , முடியவில்லை 


 மிக  சிரமப்பட்டு  திட்டம்  போட்டு  அந்த  இடத்தை  விட்டு  நாயகன்  தப்பிக்கிறான். ஆனால்  பாலைவனத்தைக்கடப்பதற்குள்  பல  பிரச்சனைகளை , பாலைவனப்புயல் , பாம்பு , கழுகு , கானல்  நீர்  என  சந்தித்து  எப்படி  கரை  சேர்ந்தார்  என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  உயிரைக்கொடுத்து  நடித்திருப்பவர்  பிருத்விராஜ் . ஆள்  தோல்  நிறம் , எடை  எல்லாம்  மாறிப்போய்  பரிதாபமாகத்தோற்றம்  அளிக்கிறார். சிறப்பான  நடிப்பு 


நாயகி  ஆக  அமலா  பால், அதிக  வாய்ப்பில்லை , வந்தவரை  ஓக்கே 

படத்தில்  நடித்த  அனைத்து  துணைக்கதாபாத்திரங்களும்  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


ஏ  ஆர்  ரஹ்மான்  இசை  பெரிதாக  சோபிக்கவில்லை . கொஞ்ச  நேரம்  அமைதியாகத்தான்  இரேம்ப்பா  என  பிஜிஎம்  டார்ச்சரால்  சொல்ல வைக்கிறார். இளையாராஜாதான்  மவுனம்  ஒரு  மொழி  என  உணர்ந்தவர் , நமக்கு  உணர்த்தியவர். இண்டர் நேஷனல்  மார்க்கெட்டிங்க்கிற்காக  இவரை  புக்  பண்ணி  இருப்பார்கள்  போல 


கே  எஸ்  சுனில்  தான்  ஒளிப்பதிவு.முழுக்க  முழுக்க  பாலைவனத்தில்  லைவ்  லொக்கே ஷனில்  படம்  பிடித்திருக்கிறார்கள் ,சவாலான  பணி  தான்

ஏ  ஸ்ரீதர்  தான்  எடிட்டிங்.கிட்டத்தட்ட  3  மணி  நேரம்  படம்  ஓடுகிறது .எப்போதான்  முடிப்பீங்க  ?என  சலிப்பை  ஏற்படுத்துகிறது . சர்வைவல்  டிராமா  எனில்  2  மணி  நேரம் கிரிஸ்ப்பாக  இருக்க  வேண்டும் 


ஒரிஜினல்  நாவல்  ஆசிரியர்  பென் யாமின்.திரைக்கதை  , இயக்கம்  பிளெஸ்ஸி


சபாஷ்  டைரக்டர்


1 கமர்ஷியலாக  போகாத  மிக  ரிஸ்க்  ஆன  கதையைப்படம்  எடுக்க  தயாரிப்பாளரை   ஓக்கே  சொல்ல  வைத்த  சாமார்த்தியம் 


2  பாலைவனம் மாதிரி  செட்டிங்ஸ்  எல்லாம்  போடாமல்  நிஜ  பாலைவனத்துக்கே  போய்  படம்  பிடித்தது


  ரசித்த  வசனங்கள் 


தமிழ்  டப்பிங்கில்  இருந்தாலும்  70% வசனங்கள்  அரபு  மொழிதான் . சப்  டைட்டில்  பல  இடங்களில்  காணவில்லை, ஆனால்  குத்து  மதிப்பாகப்புரியும்படிதான்  காட்சிகள்  அமைக்கப்பட்டுள்ளன. வசனமே  புரியாமல்  ரசித்த  வசனம்  எப்படிப்போட? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  எனக்கு  ஹிந்தி  தெரியாது  போடா, இங்க்லீஷூம்  தெரியாது  போடா  க்ரூப்பைச்சேர்ந்தவன்  ஆக  நாயகன்  இருக்கிறான், ஆனால்  என்ன  தைரியத்தில்  துபாய்  போக  ஆசைப்பட்டான்  என்பதில்  விளக்கம் இல்லை.அங்கே  போய்  மொழி  புரியாமல்  எப்படி  சமாளிப்போம்  என்ற  அறிவு  வேண்டாமா? இதனால்  இந்த  கேரக்டர்  மேல்  பரிதாபம்  வருவதற்குப்பதில்  எரிச்சல்  வருகிறது


2   ஃபாரீன்  போகிறோம்  என்றால் அங்கே  யாரை  சந்திக்க  வேண்டும்?  கம்பெனி  பெயர்  என்ன?  புரோக்கர்  பேரு  என்ன ?  அங்கே  தெரிந்த  நபர்கள் வேறு  யாராவது  இருந்தால்  அவர்கள்  விபரம்,  ஃபோன்  நெம்பர்  எதுவுமே  தெரியாமல் என்  புருசனும்   கச்சேரிக்குப்போனான்  கதையாக  நாயகன்  போய்  மாட்டிக்கொள்வது  அபத்தம் 


3   போனது  போயாச்சு ,  வேலைக்கு  சேர்ந்த  முதல்  நாளிலேயே  எந்த  வேலையும்  செய்யாமல் நான்  ஊருக்குப்போறேன் என  அடம்  பிடிப்பது  நமக்கே  கடுப்பை  வரவைக்குது.அட்லீஸ்ட்  10  நாட்களாவது  வேலை  செய்வதாக  காட்டி  விட்டு  அடுத்த  நாள்  இந்தக்காட்சியை  வைத்திருக்கலாம் 


4   நாயகன்  தப்பிக்க  முடிவெடுத்த  பின்  50  ஆடுகள்  மீதும்  மிகுந்த  பாசம்  கொண்டவர்  போல  நான்  ஊருக்குப்போறேன்  எனப்புலம்புவது , பிரியா  விடை  பெறுவது  ஒட்டவில்லை 


5    நாயகன்  நாயகி  உடன்  சந்தோஷமாக  இருந்த  தருணங்கள்  படம்  ஆரம்பித்து  முதல்  அரை  மணி  நேரம்  ஒரே யடியாகக்காட்டி  இருக்க  வேண்டும்.அப்படி  இல்லாமல்  10  நிமிசம்  பாலைவனக்காட்சி , 10 நிமிசம்  ஃபிளாஸ்பேக்  காட்சி  என  இயக்குநர்  பேலன்ஸ்  செய்த  ஐடியா  ஒர்க் அவுட் ஆகவில்லை 


6 இடைவேளைக்குப்பின்  பாலைவனத்தில்  தப்பிக்கும்  காட்சி மிக  நீளம்.  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்க  வேண்டும், சீக்கிரம்  முடிங்கப்பா  என  புலம்ப  வைத்து  விட்டார்கள் 


7  நாயகனின்  சொந்த பந்தம்  யாரும்  அவரைத்தேடும்  முயற்சியில்  ஈடுபட மாட்டார்களா?  அட்லீஸ்ட்  தூதரகத்தில்  போய்  புகாராவாது  கொடுப்பது போல  காட்சி  வைத்திருக்க  வேண்டும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபாரீன்  மோகம்  கொண்டு  இருக்கும்  ஆண்கள் , ஃபாரீன்  மாப்ளையைத்தான்  கட்டிக்குவேன்  என  அடம்  பிடிக்கும்  பெண்கள்  பார்க்க  வேண்டிய  படம் . பொறுமை  மிக  மிக  அவசியம். ரேட்டிங்  2.25 / 5 



ஆடுஜீவிதம்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்கம்ப்ளெஸி
மூலம் திரைக்கதைப்ளெஸி
அடிப்படையில்
பென்யாமினின் ஆடுஜீவிதம் , நஜீப்பின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது
உற்பத்தி
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுசுனில் கே.எஸ்
திருத்தியவர்ஏ. ஸ்ரீகர் பிரசாத்
இசைஏஆர் ரஹ்மான்
உற்பத்தி
நிறுவனங்கள்
  • விஷுவல் ரொமான்ஸ் பட தயாரிப்பாளர்கள்
  • ஜெட் மீடியா தயாரிப்பு
  • அல்டா குளோபல் மீடியா
மூலம் விநியோகிக்கப்பட்டதுபிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் (மலையாளம்)
ரெட் ஜெயண்ட் மூவிஸ் (தமிழ்)
மைத்ரி மூவி மேக்கர்ஸ் (தெலுங்கு )
ஹோம்பலே பிலிம்ஸ் (கன்னடம்)
ஏஏ பிலிம்ஸ் (ஹிந்தி)
வெளிவரும் தேதி
  • 28 மார்ச் 2024
நேரம் இயங்கும்
173 நிமிடங்கள் [1]
நாடுகள்
  • இந்தியா
  • அமெரிக்கா
மொழி
  • மலையாளம்
பட்ஜெட் 80 கோடி [2]
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்மதிப்பிடப்பட்ட ₹50 கோடி [3]

Tuesday, April 02, 2024

ஜோஷ்வா-இமை போல் காக்க (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் த்ரில்லர் ) @அமேசான் பிரைம்

      


  இளைய  தளபதி  விஜய்  நடிக்க யோஹன்  அத்தியாயம்  1  படத்தின்  கதை  தான்  இது  என்று  சொல்லப்பட்டாலும்  இயக்குநர்  கவுதம்  இதை  மறுத்திருக்கிறார்.இப்படத்துக்கு  முதலில்  சூர்யாவைத்தான்  அணுகினார்கள்  என்றாலும்  சூர்யா  ஆல்ரெடி  தான்  நடித்த  காப்பான்  (2019)  படத்தின்  கதை  சாயல்  தெரிகிறது  என  மறுத்து  விட்டாராம்  .(  இது  ல  காமெடி என்னான்னா  1991  ல்  ரிலீஸ்  ஆன  ஏவி எம்மின்  மாநகரக்காவல் படத்தின்  பட்டி  டிங்கரிங்  கதை  தான்  காப்பான்  என்பது  சூர்யாவுக்குத்தெரியாமல்  போனதே ) 


  என்னை  அறிந்தால் (2015)  படத்தின்  வில்லன்  அருண்  விஜய் தான்  இக்கதையில் நடிப்பதாக  இருந்தது.பின்   அதுவும்  செட்  ஆகவில்லை . 2019 ஆம் ஆண்டு  பூஜை  போடப்பட்டு  தொடங்கப்பட்ட  படம்  கொரோனா  காரணமாக  இரண்டு  வருடங்கள்  தாமதம்  ஆகி  2022 ல்   படப்பிடிப்பு  நடந்து  இப்போதுதான்  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது . நடுநிசி  நாய்கள்  தான்    கவுதம்  கேரியரில்  டப்பாப்படம். விண்ணைத்தாண்டி வருவாயா  தான்  அவரது  ஹை  குவாலிட்டி  படம்  , இப்படம்  எந்த  ரேஞ்ச்  என்பதைப்பார்ப்போம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஃபாரீனில்  படித்து  வக்கீலாக  இருப்பவர் . நாயகன்  ஒரு  காண்ட்ராக்ட்  கில்லர் . அதாவது  வாடகைக்கொலையாளி . இருவரும்  எதேச்சையாக  சந்தித்து  திடீர்க்காதலில்  விழுகிறார்கள் .   நாயகன்  தன்னைப்பற்றிய  விபரம்  சொன்னதும்  நாயகி  பிரேக்கப்  செய்து  கொள்கிறார்


  ஃபாரீன்  போன  நாயகி அங்கே  ஒரு  பெரிய  கொலைக்கேசில் சாட்சி  ஆகி  விடுகிறார் .நாயகியைக்கொல்ல  பல  கொலைகாரக்கும்பல்கள்  ரெடி  ஆகின்றன.


 நாயகன்   காண்ட்ராக்ட்  கில்லர்  வேலையை  விட்டு  விட்டு  இப்போது  செக்யூரிட்டி  கார்டாகப்பணி  புரிகிறான். நாயகிக்கே  செக்யூரிட்டி  ஆக  வேலை  பார்க்கும்  வாய்ப்பு   நாயகனுக்குக்கிடைக்கிறது . நாயகன்  நாயகியைக்காப்பாறினானா?  காதலைப்புதுப்பித்தானா? என்பது  மீதி  திரைக்கதை 

நாயகன்  அக  வருண்.நல்ல  ஹைட் , ஜிம்  பாடி  ஆனால்  முகத்தில்  உணர்சிகள்  மிஸ்சிங். . விஜய்  சூர்யா  அருண்  விஜய்  ஆகியோர்  செய்ய  வேண்டிய  ரோலை  இவர்  செய்கிறாரே  என  ஆச்சரியப்படுவதா?அவங்க  எல்ல்லாம்  தப்பிச்சுட்டாங்க , இவர்  மாட்டிக்கிட்டாரே  என  பரிதாபப்படுவதா? 


 நாயகி  ஆக  ராஹெபி . பார்க்க  ஜிலேபி  மாதிரி  இருக்கிறார். ஆனால் நடிப்பு  பெரிதாக  மனம்  கவரவில்லை 


நாயகனின்  நண்பன்  ஆக  கிருஷ்ணா . நல்ல  வாய்ப்பு.ஆனால்  அவரது  கேரக்டர்  டிசைனில்  ஒரு  குழப்பம், ட்விஸ்ட்க்காக  சொதப்பி  வி,ட்டார்கள்  , ஆனால்  கிருஷ்ணா  நடிப்பு  குட் 


 மன்சூர்  அலிகான்  டான்  கேரக்டரில்  வருகிறார். வழக்கமாக  பரட்டைத்தலையில்  கேவலமான  கெட்டப்பில்  வரும்  இவர்  இதில்  டீசண்ட்  ஆக  வருவது  வியப்பு \


நாயகியின்  அப்பாவாக  கிட்டி , கமலின்  சத்யா  படத்தில்  இருந்த  கம்பீர  நடிப்பு  மிஸ்சிங்


திவ்யதர்ஷினி  ஒரு  முக்கிய  ரோலில்  வருகிறார். நாயகியை  விட  இவர்  அழகாக  இருக்கிறார். 


விசித்ரா,லிசி  ஆண்ட்டனி  சின்ன  ரோல்களில்  வருகிறார்கள் 


அந்தோணீயின்  எடிட்டிங்கில்  படம்  140  நிமிடங்கள்  ஓடுகின்றன. மெயின்  கதையில்  கிருஷ்ணாவின் ஃபிளாஸ்பேக்  கதை  சரியாக  ஃபிட்  ஆகவில்லை 


கார்த்திக்கின்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  கதையுடன்  ஒட்டாமல்  தனித்து  நிற்பது  பலவீனம் எஸ்  ஆர்  கதிர்  ஒளிப்பதிவு  குட் . நாயகியை க்ளோசப்  காட்சிகளில்  கூட  அழகாகக்காட்ட  முடியவில்லை 


திரைகக்தை  எழுதி  இயக்கி  இருப்பவர்  கவுதம்  வாசுதேவ்  மேனன் 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகனின்  சிகிச்சைக்காக  டாக்டர்  ஒரு  அசிஸ்டெண்ட்டை அழைத்து வர  நாயகன்  அந்த  அசிஸ்டெண்ட்டிடம்  டாக்டர்  பேரு  என்ன  எனக்கேட்டு  அவன்  விழித்ததும்  அவன்  வில்லனின்  கையாள் என்பதை  உணர்ந்து  ஆக்சன்  சீக்வன்ஸ்  ஆரம்பிக்கும்  காட்சி  செம 


2  மன்சூரின்  அடியாள்  கிருஷ்ணா  20  அடியாட்களுடன்  ஹோட்டலுக்கு  வர  நாயகன் - நாயகி  சேசிங்  சீன்  குட் 


3  நாயகன்  மற்றும்  மன்சூரின்  அடியாள்  கிருஷ்ணா   இருவருக்குமிடையேயான    ஃபிளாஷ்பேக்  ட்விஸ்ட்  குட்   


4  கிருஷ்ணா  வைத்து  சொல்லப்படும்  இரண்டாவது  ட்விஸ்ட்  குட் 


5  கிருஷ்ணாவின்  ஃபோனை  நாயகன்  காரில்  வேண்டுமென்றே  விட்டு  வர  அதை  வைத்து  வில்லி  சாந்தினி  அவர்களை  ட்ரேஸ்  அவுட்  செய்யும்  காட்சி 


6  நம்ப  முடியவில்லை என்றாலும்  எதிர்பார்க்காத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  நான்  உன்  ஜோஷ்வா , எங்கு  சென்றாலும்  கூட்டிச்செல்வாயா? 


2  ஜோசுவா , சிறு  பேராசை 


3  தப்பாசு  நேரம்... யார்  அந்தத்திருடன் 


4  அச்சத்தில்  மிச்சம்  கொள்வேனா? 


5  காக்க  காக்க  கண்  போல்  காக்க 


6  சிங்கிளா  சிங்கம்  வருது  , ஒதுங்கு  ஒதுங்குடா 


  ரசித்த  வசனங்கள் 


1  அதிகமாப்பேச  வேண்டாம், அமைதியா  இரு  என்பதைத்தான்  நாசூக்கா  கீப்  கொயட்னு  சொல்லி  இருக்காங்க 


2  பயமா  இருக்கா?


 நீ  வர்றேன்னு  தெரிஞ்ச பிறகு  இல்லை 


3  ஒரு  வாரம்  நீ  அசையக்கூட  கூடாதுனு  டாக்டர்  சொல்லிட்டார்


 அப்டியா? அப்போ  உன்னைக்கொலை  செய்ய  வர்றவங்க  கிட்டே  ஒரு  வாரம்  கழிச்சு  வரச்சொல்லிடலாமா? 


4  உன்  இங்க்லீஷ்  புரியல , ஆனா  உன்  ஆதங்கம்  புரியுது 


5  எப்பவுமே  நம்ம  கூட  இருக்கறவங்க  தான் ( நமக்கு  துரோகம்  செய்வாங்க )


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  தன்னைப்பற்றி  நாயகியிடம்  விவரிக்கும்போது  சொல்லும்  விஷயம்  பரிதாபத்தை ஏற்படுத்துவது  போல  இருந்தாலும்  சொன்ன  விதம் பிட்  பிட்டாக  சின்ன  வார்த்தையாக   ஸ்டைலாகப்பேசுவது  எரிச்சல்  மூட்டுவதாக  இருக்கிறது.அதில்கதாபாத்திரம்  தெரியவில்லை ,இயக்குநர்  டச்  தான்  அதீதமாய்த்தெரிகிறது 


2 நாயகி  எதுவும்  விளக்கம்  கேட்கலை .நாயகன்  தானா  முன் வந்து  கிறுக்கன்  மாதிரி  தான்  ஒரு  கொலைகாரன், பலரைக்கொன்றிருக்கிறேன்னு  சொல்லிட்டு  அதெல்லாம்  மறந்துடு , இனி  அப்டி  நடக்க  மாட்டேன்  என  சொல்வது   மடத்தனம் 

3  ஏர்போர்ட்  வாசலில் நாயகன்  2  நிமிடங்களில்  18  கொலை  பண்ணிட்டு  34  பேரை  அடித்து  வீழ்த்துகிறான், இது கின்னஸ்  ரெக்கார்டு. ஆனா  போலீஸ்  வர்லை.இது  லிம்கா   ரெக்கார்டு 


4 ஒரு  இடைவெளிக்குப்பின்  நாயகன் - நாயகி இருவரும்  சந்திக்கும்  சீனில்  உயிரோட்டமான  காட்சி  இல்லை . ஓவர்  அலட்டலாக  செயற்கையாக  இருவரும்  பேசிக்கொள்கிறார்கள், ஒட்டவே  இல்லை 


5 நாயகனுக்கு  வயிற்றில்  புல்லட்  பட்டிருக்கு . சீரியஸ்  கண்டிஷன். ஒண்னா  அவன்  ஹாஸ்பிடலுக்குப்போய்  ட்ரீட்மெண்ட்  எடுத்திருக்கனும், இல்லைன்னா  டாக்டரை  அவன்  இருக்கும்  இடத்துக்கு வர  வெச்சு  ட்ரீட்மெண்ட்  எடுத்திருக்கனும், ரெண்டும்  செய்யாம  பெரிய  பருப்பு  மாதிரி  நாயகியைக்கார்ல  கூட்டிட்டுபோய்  மயக்கம்  ஆகிறான், சும்மா  அனுதாபம்  சம்பாதிக்கவா?  பிராக்டிகலா யோசிக்க  மாட்டானா? 

6  உயிருக்கு  ஆபத்தான  நிலைல  நாயகன்  இருக்கும்போது நாயகி  அவனைக்காப்ப்பாற்ற  தானே  காரை  ஓட்டிட்டுப்போறா. அப்போ  வில்லன்கள்  துரத்தறாங்க .அப்போ  ஒண்ணா  அவ  காரை  வேகமா  ஓட்டி  தப்பிக்கனும்,அல்லது  வில்ல்ன்களைத்தாக்க  முயற்சி  பண்ணனும், ரெண்டும்  இல்லாம  நாயகனை  எந்திரு  அஞ்சலி  எந்திரு  அஞ்சலி  கணக்கா  எழுப்பிட்டு  இருக்கா , அவனே  சீரியசா  இருக்கான், எந்திரிச்சாலும்  ஃபைட்  போடவா  போறான்? 


7  நாயகனைத்தாக்க  ஒரு  கும்பல் வருது . நாயகனிடம்  துப்பாக்கி  இருக்கு . நாலு  பேரை  ஷூட்  பண்ணினா  மீதி ஆட்கள்  ஓடி  இருப்பாங்க .நாயகன்   ஃபைட்  சீக்வன்ஸ்  வரனும்  என  துப்பாக்கியை  நாயகி கைல  கொடுத்து  தேவைப்பட்டா  ஷூட்  பண்ணு  என  ஒரு  ரூமில்  நாயகியை  அடைத்து  விட்டு  இவன்  ஃபைட்  போட்டு  டைம்  வேஸ்ட்  பண்ணிட்டு  இருக்கான்.அதுக்குப்பதிலா  முடிஞ்ச  வரை  10  பேரை  ஷூட்  பண்ணிட்டா  மீதி  ஆட்களோட  ஃபைட் போட்டு இருக்கலாம் 


8  ஆறு  அடியாட்கள்  நாயகியைப்பிடிச்சு    எங்கேயோ  கூட்டிட்டுப்போறாங்க.  நாயகன்  இல்லை .அப்பவே  நாயகியைப்போட்டுத்தள்ளி  இருக்கலாம், எல்லார்  கைலயும் , கத்தி , கடப்பாறை  ஆயுதம்  எல்லாம்  இருக்கு , ஏன்  கொல்லலை ? 


9  மன்சூர்  அலிகான்  முன்  நாயகி  மாட்டிக்கிட்டா . டிரைவர்  சொல்றான். இளைக்கொன்னு  வீடியோஎடுத்துஅனுப்பினா  6  கோடி  ரூபா  பேமண்ட்  கிடைக்கும்கறான். டக்னு  கொல்லாம   அவரு  லூஸ்  மாதிரி  டயலாக் பேசிட்டு  இருக்காரு . ஹீரோ  வர்ற  வரை  டைம்  வேஸ்ட்  பண்ணனும்னு  ஆர்டர் போல 


10 நாயகன் - நாயகி  இருவரும்  பல  ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள் . சாப்பிடும்போது  எந்த  வித  செக்கிங்கும்  இல்லை .வில்லன்  க்ரூப்20 கோடி ரூபா  விலை  பேசி  அடியாட்களை  அனு[ப்பி கொல்லச்சொன்னதுக்குப்பதிலா  ஏதோ  ஒரு  ஹோட்டல் சர்வருக்கு  ஒரு   கோடி  ரூபா  குடுத்து  சாப்பாட்ல விஷம்  கலக்க  வெச்சு  ஈசியா  கொன்னிருக்கலாம், ஐடியா  இல்லாத  பசங்க 


11  ஹோட்டலில்    நடக்கும்    ஃபைட்  சீக்வன்சில்  வடச்சட்டில  ( வாணலி)  சுடுதண்ணீர்  இருக்கு , நாயகன்  அதை  வெறும்  கைகளால்  எடுத்து  அடியாட்கள்  மேல்  ஊற்ற  அவங்க  அலறுகிறார்கள் .இவர்  மேல் தெறிக்காதா?கொதிக்கும்  வாணலியை  வெறும்  கைகளால்  தூக்குகிறாரே?இவர்  என்ன  இரும்புக்கை  மாயாவியா?


12  கிருஷ்ணா  வசனமா  பேசும்போது  அவரு  தங்கையை ஒருத்தன்  கடல்ல  தூக்கிப்போட்டுட்டான்  கறாரு, ஆனா விஷூவலா  நமக்குக்காட்டும்போது  அது  ஆறு 


13  நாயகியிடம்  துப்பாக்கியைக்கொடுத்து  விட்டு  நாயகன்  கிருஷ்ணாவுடன்  போடும்  சோலோ  ஃபைட்  சினிமாத்தனம் 


14  க்ளைமாக்சில்  மெயின்  வில்லன்  சைடு  வில்லனிடம்  நாயகி  ஃபோட்டோவைக்காட்டி  இவளைத்தான்  கொல்லனும்கறான்.அவன்  அவனோட  அடியாளுங்க கிட்டே  அந்த  ஃபோனில்  இருக்கும்  ஃபோட்டோவைக்காட்டுகிறான், அதுக்குப்பதிலாக  எல்லார்  ஃபோன்  வாட்சப்க்கும்  அதை  ஃபார்வார்ட்  பண்ணி  இருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான் , ஆனால்  லிப்லாக்  சீன்  உண்டு . இப்பவெல்லாம்  லிப் லாக்  கூட  யூ  ஆகி  விட்டது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கவுதம்  ரசிகர்களுக்கு  மட்டும்  உவப்பான  படம் . பொது  ரசிகர்களுக்கு  அவ்வளவாகப்பிடிக்காது . ரேட்டிங்  2.25 / 5


Joshua: Imai Pol Kaakha
Poster
Directed byGautham Vasudev Menon
Written byGautham Vasudev Menon
Produced byIshari K. Ganesh
StarringVarun
Krishna
Raahei
CinematographyS. R. Kathir
Edited byAnthony
Music byKarthik
Production
company
Vels Film International
Release date
  • 1 March 2024
Running time
140 minutes
CountryIndia
LanguageTamil

Monday, April 01, 2024

கமெண்ட் போட்டி -குமுதம் பொக்கிஷம் ஓல்ட் ஈஸ் கோல்டு அட்டைப்பட கமெண்ட் ஸ்


 
அந்தக்காலத்துக்குமுதம்  அட்டைப்படத்துக்கு  இந்தக்கால  ட்ரெண்டுக்கு  ஏற்றாற்போல்  கமெண்ட்  இட்டால்  எப்படி  இருக்கும் ? ஒரு  ஜாலி  கற்பனை 

1  நாதா!  உங்கள் முகம்  அழகாய்  இருக்கிறது , ஆனால்  நெற்றியில்  இருக்கும்  நாமம்  ஏதோ  குறியீடாக  இருக்குமோ என்று  எனக்கு  பயமாய்  இருக்கிறது 

2  கண்ணே! உன்   கண்ணே  ஒரு  பின்  தான், எதற்காக  தனியாக  உன்  கையில் ஒரு  ஹேர்பின் ?

3   பஃபே  சிஸ்டமாக  இருந்தாலும்  உன்னை  உட்கார  வைத்து  சோறு  போடுவேன் 

4   ஆண்  வேடம்  இட்ட  பெண்  என்பதை  எப்படிக்கண்டுபிடித்தேனா? ஜூஜூபி  மேட்டர்  , வலது  கைல  வாட்ச்,கட்டி  இருக்கும்  ஸ்டைலைப்பார்த்தா  தெரியாதா?  துக்ளியூண்டு  வாட்ச் வேற 

5  அதென்ன? என்னை  விட  உனக்கு  தலை  முடி  அடர்த்தியா  இருக்கு?இரு  ஒவ்வொரு  முடியா எடுக்கறேன், முடி  காணிக்கை  இக்காரிகைக்கு.. 

6  மஞ்சள்  முகமே  வருக.. மஞ்சள்  தாவணி , மஞ்சில்  விரிஞ்ச  மஞ்சள்  பூ, என்னை  மஞ்ச(ள்)  மாக்கான்  ஆக்கி  விட்டாயே? 

7  நெக்லஸ்  நல்லாருக்கா?னு  கேட்டா  எப்படி  நான் பதில்  சொல்வேன்? பெண்களை  கழுத்துக்குக்கீழே  பார்ப்பது  கண்ணியக்குறைவு  ஆச்சே?பை  த  பை  உன்  பிளவுஸ்  ஃபிட்டிங்  செம  

8    லால்  சலாம்   என்று   நான்  சொன்னது  சினிமாவைக்குறிக்காது , உன்  சிவப்புக்கலர்  பாவாடையைக்குறிக்கும் 

9  உன்னைக்கண்டதும்  என்  தலை எழுத்தே  மாறப்போகுது. என்  அப்பா பேரை  இனிஷியலா  வெச்சிருந்தேன் இனி  உன்  பெயரை  இனிஷியலாய்  வைப்பேன்

10  எப்போதும்  பெண்கள்  மேலிடம்  தான்  MALE  இடம்

11  கல்தோசைதான்  பிடிக்கும், செஞ்சு  தான்னு  சொல்றது  ஓக்கே , ஆனா  நாமக்கல்  தோசை  தான்  வேணும்னா  எப்படி?

12  என்  பேரை  உங்கள்  நெஞ்சில்  பச்சை  குத்திக்கலையா?

அது  வம்பு , ஆள்  மாத்தும்போது  அதே  பேரா  தேடனும்

13   என்  முகத்துக்கு  அழகா  இருக்குன்னு  நாமம்  போட்டு  விட்டியா? உன்னைக்கட்டிக்கிட்டா  நாமம் தான்  என  குறியீடா  சொல்றியா?

14   கல்யாணத்துக்கு  முன்னும் பின்னும்  உன்  குடுமி  என்  கையில்  தான், ஒரு  முன்னோட்டம்  பார்த்துக்கறேன்

15  எப்படி  நான்  போட்டு  விட்ட  நாமம் ?

பட்டை யைக்கிளப்பிட்ட. நெற்றில  திருநீர்ப்பட்டை  தான்  இடுவது  என்  வழக்கம்

16   நீ  வடகலை , நான்  தென் கலை , என்  மீதான  உன்  அன்பு  தாங்கலை.எப்படி  என்  கவிதை ?


அய்யோ  சகிக்கலை 


======================




1  சிக்ஸ் பேக்  சிங்கமே! குங்குமம்  வைத்த  தங்கமே!இனி  நீதான்  என்  வாழ்வில் முக்கிய  அங்கமே!


2   பார்த்தும்  பார்க்காதது  மாதிரி  போறீங்களே?


அன்பே  திருப்பதி  லட்டு ! அதுதான்  ஆணின்  தெனாவெட்டு


3  அயோத்தி  ராமர் கோயிலுக்கு  அழைத்துப்போறேன்னு  வாக்கு  கொடுத்துட்டு  இப்படி  நடைப்பயணமாதான்  போகனும், வரதுன்னா  வா  என்று  சொல்வது  நியாயமா? 


4  அய்யய்யோ  டாப்லெஸ்  ஃபோட்டோ  போட்டிருக்காங்களே? சென்சார்ல  விடுவாங்களா? 


5  அனேகமா  இந்தாளு  கமல்  ரசிகராத்தான்  இருக்கனும், சிக்ஸ்பேக்  ஜிம்  பாடியை காட்டிட்டே நடக்கறாரே? 


6   யார்  வேண்டுமானாலும்  அர்ச்சகர்  ஆகலாம்னு  சட்டம்  வரும்போது  யார்  வேணும்னாலும்  அவரை  சைட்  அடிக்கலாம்னு  சொல்லக்கூடாதா? 


7 தோளில்  ஸ்டைலா  துண்டு  போட்டிருப்பதெல்லாம்  ஓக்கே  தான், ஆனா  கரும்புத்துண்டு  மாதிரி  ஒரு  ஃபிகர்  கிராஸ்  பண்ணுது , கண்டுக்காம  இருக்காரே? 


8  இவரு  என்ன  கழுத்துல  டூ இன்  ஒன்  மாதிரி  செயின்  போட்டிருக்காரு? வாக்மேன்/ஹியரிங்க் எய்ட்  இன்  கோல்டு ? 


9  அன்பு  நாயகனே!  நீதான்  என்  தக் லைஃப்


10  சஞ்சிகை  கொண்டாடும்  சிகை  அழகன், வஞ்சியர் கொண்டாடும்  நகை அ ழகன்


11   குடுமி  வெச்ச  மாப்பிள்ளை  தான்  வேணும்னியாமே? அது  ஏன் ?


அப்போதான்  பெண்களுக்கு  ரொம்ப  “சவுரி”யம்


12   நீ  பார்த்”துட்டு”ப்போனாலும் பார்க்காம  போனாலும்  உன்னைப்பார்த்”துட்டு”தான்  இருப்பேன்


புரியுது , உன்  கவனம்  பூரா  துட்டுல  தான்?


13  நான்  சிவப்பு  ரவிக்கை  அணிந்ததால்  மேட்சுக்கு  மேட்சா  காவி  வேட்டி கட்டினியா?

 அது  சரி . அப்போ  பச்சை  சேலைக்கு  மேட்சா  பச்சை  பச்சையா  பேசிடட்டுமா? 


14  இவர்  என்ன  கழுத்துல  தாலி  கட்டி  இருக்கிறார்? ரிசர்வ்டு  பார்ட்டியோ? 


15  மாப்பிள்ளைக்கு  ஏறு  நெற்றி, குடும்பத்துக்கு  ஆகாதும்பாங்களே?


ஏர் உழுபவன்  நெற்றி உலக  நன்மைக்காக  வியர்வை  சிந்துபவன்.நாங்க  உழலைன்னா  உங்க  வீட்டு  அடுப்புல    அரிசி  வேகாது

PREMALU (2024)பிரேமலு - மலையாளம் /தமிழ்- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

  


     வெறும்   3 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 10  நாட்களில்  115  கோடி  ரூபாய்  வசூலை  வாரிக்குவித்த  படம் இது. 9/2/24   முதல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்த  மலையாளப்படத்தின்  தெலுங்கு , தமிழ்  டப்பிங்  வெர்சன் 15/3/24  முதல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  சக்கை  போடு  போட்டுக்கொண்டிருக்கிறது .மலையாளப்படங்களில்  100 கோடி  வசூலைத்தொடும்  ஐந்தாவது  படம்  இது  ( புலி முருகன் லூசிபர் ,
2018  மஞ்சும்மேல்  பாய்ஸ் , பிரேமலு)


கதை  எல்லாம்  சாதாரண  கதை  தான். ஒரு  லட்சம்  படங்களில்  பார்த்த பணக்கார  வீட்டுப்பெண் - ஏழைப்பெண்  காதல்  கதை  தான், திரைக்கதை , நாயகன் - நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆன  விதம்  தான்  படத்தை இந்த  அளவு  ஹிட்  ஆக்கி  இருக்கிறது 


இந்தியில்  வெளியான  ச்சோட்டி சி  பாத்  (1976) .தமிழில்  வெளியான  யாரடி  நீ  மோகினி (2005)  , தீயா  வேலை  செய்யனும்  குமாரு ( 2013)  ஆகிய  மூன்று  பட  டிவிடிகளை  அட்லியிடம்  கொடுத்து  ஒரு படம்  பண்ணுங்க  என்றால்  அவர்  என்ன  செய்வாரோ  அதைத்தான்  இந்தப்பட  இயக்குநர்  செய்திருக்கிறார், ஃபகத்  ஃபாசிலின்  சொந்தப்படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஐ டி ல  ஒர்க்  பண்ணும்  பெண்.தன்னை  விட மெச்சூரிட்டி  உள்ள  , வாழ்க்கைல செட்டில் ஆன  ஒரு  ஆளைத்தான்  கல்யாணம்  பண்ணிக்கனும்னு  நினைக்கறா.இவள்  எல்லா  ஆண்களிட,மும் சகஜமாகப்பழகக்கூடிய  சோஷியல்  டைப் 

நாயகன்  ஒரு சரக்கு  பார்ட்டி . வெட்டாஃபீஸ் , எதிர்  காலம்  குறித்த  எந்த  விதமான  திட்டமிடலும்  இல்லாமல்  இருப்பவன். நாயகியை  விட    ஜூனியர்

வில்லன்  நாயகி  பணி  புரியும்  ஐ டி  கம்பெனியில்  டீம்  லீடர்.இவனுக்கும்  நாயகி  மீது  ஒரு  கண்  உண்டு . இவன்  ஒரு  டீ  டோட்டலர். எந்த கெட்ட  பழக்கங்களும்  இல்லாதவன்


முறைப்படி  பார்த்தா  நாயகி  வில்லனைத்தான்  லவ்  பண்ணி  கல்யாணம்  பண்ணிக்கனும், ஆனா  நிஜ  வாழ்க்கையிலும்  சரி , சினிமாக்களிலும்  சரி பெண்கள்  நல்லவனைக்காதலிப்பதில்லை .பொறுக்கி , குடிகாரன் , கஞ்சா  கேஸ்  இந்த  மாதிரி  ஆட்களைத்தான்  உருகி  உருகி  லவ்   பண்றாங்க 

இவர்கள்  மூவர்  வாழ்க்கையிலும்  நடக்கும்  சம்பவங்கள் தான்  முழு  திரைக்கதையும் 


நாயகன்  ஆக நஸ்லன் பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  தான்  ஒரு  குடிகாரன் , எதுக்கும் லாயக்கில்லாதவன்  என்ற  தாழ்வு  மனப்பானமை  அவரது  உடல்மொழியில்  கொண்டு  வருகிறார். நண்பனுடனான  உரையாடலில்  அனாயசமாக காமெடி  வசனங்களை  அள்ளித்தெளிக்கிறார்


நாயகி  ஆக  மமிதா  பைஜூ  கலக்கி  இருக்கிறார். சுட்டித்தனமான  நடிப்பு , உடல் மொழி  , கிளாமர் , நடிப்பு  என  எல்லா  ஏரியாக்களிலும்  சிக்சர்  அடிக்கிறார்


வில்லன்  ஆக  ஷ்யாம்  மோகன்  அருமையான  நடிப்பு.  ஜிம்  பாடி  ஃபிட்டிங் , பர்சனாலிட்டி , ஹைட்  எல்லாவற்றிலும்  நாயகனை  விட  ஒரு  படி  மேலே  இருந்தாலும்  நடவடிக்கைகளால்  நாயகி , ஆடியன்ஸ்  மனதில்  வெறுப்பை  வர  வைக்க  வேண்டும். பின்னி  இருக்கிறார்  நடிப்பில் 


ஆகாஷ் ஜோசஃப்  வர்கீஷின்  எடிட்டிங்கில்  படம் 156  நிமிடன்கள்  ஓடுகிறது  , ஒரு  சீன்  கூட  போர்  அடிக்கவில்லை 

விஷ்ணு  விஜய்  இசையில் பாடல்கள்  எல்லம்  ஆல்ரெடி  செம  ஹிட் . பின்னணி  இசையும்  நன்றாக  இருந்தது 


அஜ்மல்  சாபுவின்  ஓளிப்பதிவு  கண்ணுக்குக்குளுமை 


கிரண்  ஜோஷி  யுடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்   ஏ டி  கிரிஷ் . இது    இவருக்கு  முதல்  படம் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகி  பைனாகுலர்  மூலம்  நாயகன்  வீட்டை  நோட்டம்  இட  அது  அறியாத  நாயகன்  செய்யும்  அலப்பறைகள் தியேட்டரில்  கரகோஷம்  அடங்க  10  நிமிடங்கள்  ஆனது 


2   இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனன்  படங்களில்  வருவது  போல்  நாயகன்  - நாயகி  ரயில்  பயணம் ,  கார்  பயணம்  என  ரொமாண்டிக்  காட்சிகளை  மனசுக்கு  நெருக்கமாக  அமைத்த  விதம்  அருமை 


2  போர்  அடிக்கும்  காட்சிகளே  இல்லாமல்  நாயகன் - நாயகி  இணைவார்களா?என்ற   எதிர்பார்ப்பை படம்  நெடுக  ஏங்க  வைப்பதே    திரைக்கதையின்  வெற்றி 

  ரசித்த  வசனங்கள் 


1  அஞ்சலி , ஐ லவ்  யூ 


 தண்ணி  போட்டிருக்கியா?


 அய்யோ ,இல்லை 

 அப்புறம்  எப்படி  உனக்கு  இந்த  தைரியம்  வந்தது ? நாலு  வருசம்  முன்னே  ஒரு  டைம்  இதே  மாதிரி  சரக்கு  போட்டுட்டு  எனக்கு  ஃபோன்  பண்ணே  இல்ல? 


2  நாம  வேலை  செய்யறமோ , இல்லையோ  வேலை  செஞ்ச  மாதிரி  நடிச்சா  போதும், ஒரு லேப்  டாப்பைக்கைல  வெச்சுக்கிட்டு  இங்கேயும்  அங்கேயும்  நடந்தா  போதும், நாம  நல்லா  வேலை  செய்யறதா  நினைச்சுக்குவாங்க 


3  இந்த  மாதிரி  ஓவரா கண்டிஷன்  போடற  பொண்ணுங்களுக்கு  கடைசில  மொக்கைப்பையன்  தான்  கிடைப்பான் 


4 ஒரு  பொண்ணோட  கண்ணைப்பார்த்தாலே  அவ சிங்கிள்  தான்னு  தெரியுமா? அது  எப்படித்தெரியும்?


 அது  வந்து  வந்து  அது  அப்படித்தான்  .  தெரியும் 


5   ஜே  கே  ஜே  கே 


 அப்டின்னா?


ஜஸ்ட்  கிட்டிங் ( JUST  KIDDING) 


6   வாழைப்பழம்  ஏது ? திருடுனியா?


 இல்லை , சுட்டுட்டேன்


  நீ  என்ன  குரங்கா? 


7  உங்க  கண்ல  மண்னைத்தூவிட்டு  பொண்ணைத்தூக்கிட்டுப்போய்ட்டான் 


8  டேய்  , ரொம்ப  ஓவராபேசாத , அப்புறம்  உன்  சைலன்சர்ல   சூடான டீ  ஊத்திடுவேன். சைலண்ட்  ஆக்கிடுவேன்


9 இந்த  கம்பெனில  வேலை  செய்யற  பெண்களுக்கு  உபயோகமான  ஒரு  விஷயம்  செய்யனும்னு  ரொம்பநாளா  நினைச்சுட்டு  இருந்தேன்


 அது  நீ  ரிசைன்  பண்ணாதான்  நடக்கும் 


10  நானும்  என்  தோழியும்  பார்ட்டிக்கு  வ்ர்றதா  சொன்னமே  அதுல  ஒரு  பிரச்சனை


 அய்யய்யோ , என்ன?


 இன்னொரு  ஃபிரண்டும்  கூட  வர்றா


 அதனால  என்ன?


   ஜோடிங்களுக்குத்தானே  அனுமதி ?  இன்னொரு  ஆண்  வேணுமே?


ஒண்ணும்  பிரச்சனை   இல்லை , என்  ஃபிரண்டுக்கு  ரெண்டு  ஜோடினு  சொல்லி  சமாளிச்சுக்கலாம் 

11   நீ  பண்றதுக்குப்பேரு  ஸ்டாக்கிங்.STALKING -னா  என்ன?னு  தெரியுமா?


 தெரியும், நான்  கூட  நிறைய  பணம்  போட்டு  லாஸ்  ஆகிடுச்சு 


 அது  ஸ்டாக்  ,மார்க்கெட்.ஷேர் . நான்  சொல்றது  வேற. பொண்ணை கரெக்ட்  பண்ணப்பார்க்கறது 


12  நான்  க்ளப்க்குப்போனது  தெரிஞ்சு  என்  ஆள்  என்  கிட்டே  கோவிச்சுக்கிட்டாடா


 இதெல்லாம்  ஒரு  மேட்டரா? நீ  அவ  ஃபோன்  நெம்பர்  குடு , நான்  சமாதானப்படுத்தறேன்


 ம்ஹூம், நான்  தர  மாட்டேன், பேசிப்பேசி  நீ  அவளை கரெக்ட்  பண்ணிட்டா?


13   எல்லா  சப்ஜெக்ட்டும்  படிச்சோம், ஆனா  பொண்ணுங்களைக்கரெக்ட்  பண்றது  எப்படி? என்பதை  மட்டும்  படிக்கவே  இல்ல


14  பொண்ணுங்களுக்கு  ஃபிரண்டா  இருக்கற  ஃப்ரண்ட்ஷிப்  ஜோன்  எல்லாம்  டேஞ்சர் . கோமா  ஸ்டேஜ் ல  இருக்கற  மாதிரி 


15  என்  வுட்  பி  வர  பஸ்ல  இடம்  இருக்கா?


 யுவ்ர்  வுட்  பி  ஷுட் பி  கம் 


1உனக்கு  இதுக்கு  முன்னால  நிறைய  பேர்  ப்ரப்போஸ்  பண்ணி  இருக்காங்களா?


 யா. ஏன்  ப்ரப்போஸ்  செய்யாத  அளவு  நான்  மொக்கை  ஃபிகராவா  இருக்கேன் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  தங்கை  ஜாகிங்க் போய்ட்டு  வந்து 45  நிமிசத்துல   5  கிமீ  ஓடிட்ட்தா  சொல்றா.அவங்க  அம்மா  இப்போதான்  நான்கு  நாட்களாக  ஓட   ஆரம்பிச்சிருக்கா  என  சொல்றாங்க . நாயகனின்  தங்கை  உடல்  பருமனா  வேற  இருக்கு . அந்த  உடம்புக்கு  அந்த  ஸ்பீடு  நாலாவது  நாளா  வர  சான்சே  இல்லை .கின்னஸ்  ரெக்கார்டு


2  வில்லன்  நாயகியிடம்  ஈரோடு  மகேஷ்  மாதிரி  மொக்கையான  பழைய  ஜோக்குகளை  சொல்றான்,நாயகி  அதுக்கும்  சிரிக்குது .நாயகன்  மதுரை  முத்து  மாதிரி  பத்திரிக்கைகளில்  வந்த  ஜோக்சை  சொல்றான் , அதுக்கும்  கெக்கெக்கே  பிக்கெக்கே  என  சிரிக்குது.பத்திரிக்கை  வாசிக்கும்  பழக்கமே  இல்லை  போல 


3  நாயகியின்  தோழி  டான்ஸ்  ஆடிக்கொண்டிருக்கும்போது  அவள்  கண்  எதிரே  நாயகன்  நாயகியின்  தோழியிடம்  நாயகியுடனான  தன்  காதலைப்பற்றிச்சொல்லி  சொல்லசொல்கிறான்,  தோழி  மறுக்கிறா:ள்.இதை  எல்லாம்  தூரத்தில்  இருந்து  பார்க்கும்  நாயகி  தோழியிடம்  என்ன  பேசிக்கிட்டு  இருந்தீங்க  என  கேட்க  மாட்டாளா? 


4  நாயகனின்  நண்பன் , நாயகியின்  தோழி  இருவருக்கும்  ஒரு  சைடு  லவ்  டிராக்  செட்  செய்து  இருக்கலாம்.மிஸ்  ஆகி  விட்டது 


5  க்ளைமாக்ஸ்  சீனுக்கு  முந்தைய  காட்சியான  வில்லன்  கார்  சேசிங்  மகா செயற்கை . வேறு  மாதிரி  யோசித்து  இருக்கலாம்


6   நாயகி  மனமாற்றத்துக்கு  வலுவான  காரணம்  இல்லை .அதே  போல வில்லனை  ஒதுக்க நாயகியிடம்  நல்ல  ஏற்றுக்கொள்ளக்கூடிய  காரணம் இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   காதலர்கள்  பார்க்க;லாம்,  ஜனரஞ்சகமான  டைம்  பாஸ்  மூவி . ரேட்டிங்  3 / 5 


நன்றி  - அனிச்சம்  மின்னிதழ்  1/4/2024   இதழ்


Premalu
Theatrical release poster
Directed byGirish A. D.
Written byGirish A. D.
Kiran Josey
Produced by
Starring
CinematographyAjmal Sabu
Edited byAkash Joseph Varghese
Music byVishnu Vijay
Production
companies
Distributed byBhavana Release (Kerala)
Phars Film Co (Overseas)
Sri Venkateswara Creations
Annapurna Studios
Showing Business (Andhra Pradesh and Telangana)
Red Giant Movies (Tamil Nadu)
Release date
  • 9 February 2024
Running time
156 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹3 crore[1]
Box office₹115 crore[2]

Sunday, March 31, 2024

ART OF LOVE (2024 ) - ( ROMANTIK HIRSIZ)- துருக்கி - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா + ஹெய்ஸ்ட் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 நெட் ஃபிளிக்சில்  ரிலீஸ்   ஆன  மணி ஹெய்ஸ்ட்  வெப் சீரிசில்  நாயகி  போலீஸ்  ஆஃபீசர் , நாயகன்  திருடன்  அல்லது  கொள்ளைக்காரன் . இவரைப்பிடிக்க  அவர்  முயல்கையில்  இருவருக்கும்  காதல் . இந்த  ஃபார்முலா  பிரமாதமாக  ஒர்க்  அவுட்  ஆனதால்  அதே  ஃபார்முலாவில்  ரொமாண்டிக்  டிராமாவா? ஹெய்ஸ்ட் த்ரில்லரா?அல்லது இரண்டுமேவா?என  கணிக்க  இயலாத  ஒரு  கமர்ஷியல்  மசாலாப்படத்தை  எடுத்திருக்கிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  ஒரு  இண்ட்டர்போல்  போலீஸ்  அஃபீசர். ஒரு  ஆர்ட்   கேலரி . அங்கே  வைக்கப்பட்டிருக்கும்  விலை  மதிப்பு  மிக்க  ஓவியம்  ஒன்றை ஒரு  கொள்ளைக்காரன்  திருட  இருக்கிறான் என்ற  தகவல்  கிடைத்ததும்  அவனைப்பிடிக்க  நாயகி  அங்கே   விரைகிறார். திருடன்  திருடி  தப்பிக்க  முயல்கையில்  நாயகி  கன்  பாயிண்ட்டில்  திருடனைப்பார்க்கும்போது  அதிர்ச்சி  அடைகிறார். திருடன்  நாயகியின்  முன்னாள்  காதலன். 



நாயகி  அதிர்ச்சி  ஆகி  நின்ற  ஒரு  கணத்தில்  திருடன்  தப்பி  விடுகிறான்.  நாயகி  கூட  வேலை  செய்யும்  சக  ஆஃபீசர்  இந்தக்கேசில்  நீ  ஜாக்கிரதையாக  இருக்க  வேண்டும்.  திருடனைப்பிடிக்கிறேன்  என்    அவன்  வலையில்  நீ  விழுந்து  விடக்கூடாது  என்கிறான்

  


 நாயகி  அதைக்காதில்  போட்டுக்கொள்ளவில்லை . திருடன்  கண்ணில் படுவது  போல  ஒரு  இடத்தில்  உலா  போகிறார். திருடன்  அவரை  அடையாளம்  கண்டு  கொண்டு  அழைக்கிறார். இருவரும்  சந்திக்கிறார்கள் , பேசுகிறார்கள் . 


திருடன்  தான்  நாயகன் .இப்போது  நாயகன்  நாயகியிடம்  லவ்  பிரபோஸ்  செய்கிறான். நாயகி  அதற்கு  எஸ் , அல்லது  நோ  எதுவும்  சொல்லவில்லை , அவரது நோக்கம்  நாயகன்  திருடும்போது  கையும்  , களவுமாகப்பிடிக்க  வெண்டும்  என்பதே


 நாயகி  நினைத்தபடி  நாயகனைப்பிடிக்க  முடிந்ததா? அவரையும்  மீறிக் காதலில் விழுந்தாரா? நாயகனுக்கு  நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  என்பது  தெரியாதா?   இதற்குப்பின்  என்ன  நட்ந்தது  ? என்பது  தான்  மீதி  திரைக்கதை


 நாயகி  ஆக எஸ்ரா பிரமாதமாக  நடித்துள்ளார் . இவருக்கு  இந்திய  முகம் ,குறிப்பாக  ஒரு  ஹிந்தி  நடிகை  போலவே  முகச்சாயல்  உள்ளது .   ரொமாண்டிக்  சீனில்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகும்போதும்  சரி ,  ஆக்சன்  சீக்வன்சில் , சேசிங்  சீனில்  இறங்கி  அதிரடி  காட்டும்போதும்  சரி  அப்ளாஸ்  அள்ளுகிறார் 


 நாயகன்  ஆக  பெர்கின்  சோகுள்ளு  அதிக  ஆர்ப்பாட்டம்  செய்யாமல்  அமைதியாக  வந்து  அசத்தி  உள்ளார் .


நாயகியின்  கொலீக்  ஆக பத்துவான்  பர்லாக்  நடித்துள்ளார். லேசான  பொறாமை  கலந்த  ஈடுபாட்டு  உணர்வை  நன்கு  வெளிப்படுத்தி உள்ளார் 


இதன்  திரைக்கதை  ஆசிரியர்  பெலின் கரமேமேட்டேக்லு ஏற்கனவே   த  கிஃப்ட் (2020)  , லவ்  டேக்டிஸ் (2023)  ஆகிய  படங்களூக்கு  திரைக்கதை  எழுதியவர்  தான்.கமர்ஷியலாக  திரைக்கதை  அமைப்பதில் வல்லவர் 


மை  நேம்  ஈஸ் ஃபாரா  ( 2023)  , லவ்  டேக்டிஸ் 2  (2023)   ஆகிய  இரு  படங்களை  இயக்கிய ரெக்காய்  காரகோஸ்  சிறப்பாக  இப்படத்தை  இயக்கி  உள்ளார் 


100  நிமிடங்கள்  ஓடுமாறு  எடிட்டர்  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்


1    நாயகன்  எப்படி  அந்த  ஓவியத்தைத்திருடி  எடுத்துச்செல்லப்போகிறான்  என்ற  எதிர்பார்ப்பை  உருவாக்கி  அதை சரியாகக்காட்சிப்படுத்திய  விதம் 


2  இஸ்தான்ஃபுல்லில்  படமாக்கப்பட்ட  காட்சிகள் , கட்டிட  அமைப்புகள் , சேசிங்  காட்சிகள்  அனைத்தும்  அருமை 


3   வாய்ஸ்  கேட்டால்  மட்டுமே  ஓப்பன்  ஆகக்கூடிய  , முகத்தைக்காட்டினால் மட்டுமே  ஓப்பன்  ஆகக்கூடிய  லாக்கரை  நாயகன்  எப்படி  ஆர்ட்டிஃபிசியல்  இண்ட்டலிஜென்ஸ்  மூலமாக  அசால்ட்  ஆக  லாக்கரைத்திறக்கிறான்  என்பதைக்காட்சிப்படுத்திய  விதம் அசத்தல் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  நாயகி  எப்போதும்  நாயகன்  கூட  இருப்பதில்லை , அடிக்கடி  ஆஃபீஸ்  போகிறார். கொலீக்சை  சந்திக்கிறார். கோடீஸ்வரன்  ஆன  நாயகன்  இதை  எல்லாம்  மிகச்சுலபமாகக்கண்டு  பிடிப்பார்  என்பது  நாயகிக்குத்தெரியாதா? 


2  நாயகன் -  நாயகி  இருவரும்  கணவன்  மனைவி  போல  ஆகி  விடுகின்றனர் . ஆனால்  ஹோட்டலில்  தனித்தனி  ரூம் எடுத்துத்தங்குகிறார்கள் . நாயகியின்  ஐடி  தெரியாமல்  இருக்க  இந்த  ஏற்பாடு , சரி , ஆனால்  நாயகனுக்குத்தன்  மேல்  சந்தேகம்  வரும்  என்பது  நாயகியால்  யூகிக்க  முடியவில்லையே? 


3  ரகசிய  அறையின்  கதவைத்திறக்கும்போது  நாயகன் - நாயகி இருவரையும்  அந்தப்பக்கமாகத்திரும்பச்சொல்லி  கோட்  வோர்டு  போட்டு  கதவைத்திறக்கும்  வில்லன்  அவ்ளோ  சிரமப்பட்டு  எதற்காக  அவர்களுக்கு  அதைக்காட்ட  வேண்டும் ? அவன்  பாட்டுக்கு  சிவனேன்னு இருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+  காட்சிகள்  உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல்  ஓடும்  டைம்  பாஸ்  கேட்டகிரி  படம்  . ரேட்டிங்  2.5 / 5