Friday, April 14, 2023

சிரித்து வாழவேண்டும் (1974)-தமிழ் - சினிமா விமர்சனம்

 


சலீம்  ஜாவேத்  எழுதிய  ஹிந்தி  நாவலான  ஜஞ்சீர்  அதே  பெயரில்  ஹிந்தியில்  சினிமாவாக  எடுக்கப்பட்டது . அங்கே  ஹிட்  ஆனதால்  அதை  தமிழில்  ரீமேக்  செய்ய  முடிவெடுத்தார்கள் இதயம்  பேசுகிறது  மணியன் , வி  லட்சுமணன்  ஆகியோர்  திரைக்கதை  எழுத எஸ் எஸ்  பாலன் ( பாலசுப்ரமணியன்)  எழுதிய  ஒரிஜினல் ஸ்கிரிப்ட்   தமிழுக்கு  ஏற்றபடி  எழுதப்பட்டது . விமர்சன  ரீதியாக சுமார்  ரகம்  என  சொல்லப்பட்டாலும் பல  தியேட்டர்களில்  100  நாட்களுக்கு  மேல்  ஓடியது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  ஃபிளாஸ்பேக். வில்லன்  போலி  மருந்து  தயாரிப்பவன், அவனது  அடியாள்  போலீஸ்  காவலில்  வைத்து  விசாரிக்கபட்டும்  தன்  ஓனரைக்காட்டிக்கொடுக்கவில்லை . சரியான  சாட்சி  இல்லாததால்  விடுவிக்கப்படும்  அடியாள்  தன்  வீட்டுக்கு  வந்து  தன்  மனைவி  மகனுடன்  இருக்கும்போது  வில்லன்  தன்  அடியாளையும் ,  அவன்  மனைவியையும்  சுட்டு  கொலை  செய்து  விடுகிறான், அப்போது  மகனான  சிறுவன் பீரோவுக்குள்  ஒளிந்து  இருந்து  பார்த்து  விடுகிறான்.


 20  வருடங்களுக்குப்பின்  அந்த  சிறுவன்  போலீஸ்  ஆஃபீசராக வருகிறார்., அவர்  தான்  ஹீரோ, தன்   அம்மா, அப்பாவைக்கொலை  செய்தவனை  எப்படிக்கண்டு  பிடித்து  பழி  வாங்குகிறார்  என்பதே  மீதிக்கதை 


ஹீரோவாக  எம் ஜி ஆர் , இரு  வேடங்கள் . போலீஸ்  ஆக  வரும்  ஹீரோ  கடைசி  வரை  எதையும்  சாதிக்கவில்லை , ஹீரோயின் உடன்  டூயட்  பாடியதைத்தவிர ,ஆனால்  ஸ்டைலிஷாக  படம்  முழுக்க  வருகிறார். அவர்  மஃப்டியில்  பல  காட்சிகளில்  கழுத்தில்  மப்ளர்  மாதிரி  ஒன்றை  டை  மாதிரி  கட்டிக்கொண்டு  வந்த  காட்சிகள்  அந்நாளில்  கொண்டாடப்பட்டது . இதே  ஸ்டைலை  கே  பாக்யராஜ்  நான்  சிகப்பு  மனிதன்  படத்தில்  ஃபாலோ  பண்ணி  இருப்பார் 


இரண்டாவது  வேடம்  வலியத்திணிக்கப்பட்டது , படத்தை  மேலும்  இழுக்க  உருவாக்கப்பட்ட  ஒரு  கேரக்டர். இருவரும்  ஒரே  தோற்றம்  என்றாலும்  இருவருக்கும்  ரத்த  சொந்தம்  எதுவும்  இல்லை. இருவருக்கும்  எந்த  தொடர்பும்  இல்லை , இருவரும்  நண்பர்கள்  போல்  காட்டி  விடுகிறார்கள் 


ஹீரோயினாக  லதா. ஏதோ  ஒரு  டம்மி  கேசில்  சாட்சியாக  வரும் இவர்  ஹீரோ வீட்டில்  தங்கிக்கொள்வது  எல்லாம்  ஓவரோ  ஓவர் .அனாதை  என்று  சொல்லிக்கொண்டு  ஹீரோ  வீட்டில்  தங்கிக்கொள்ளும்  நாயகி  வரும்  காட்சிகள் எல்லாம்  கிளாமரோ  கிளாமர் ‘’


வில்லனாக  நம்பியார்.  ரசிக்க  வைக்கும்  வில்லத்தனம் . ஆர்  எஸ்  மனோகர்   அடியாள்  வேடத்தில்  கச்சிதம் ., ஐசரி வேலன்  அதிக  வாய்ப்பில்லை , தேங்காய்  சீனிவாசன்  ஹீரோ  புகழ்  பாடுவதற்காக  சின்ன  ரோல் 


எம் எஸ்  விஸ்வநாதன்  இசையில்  ஐந்து  பாடல்கள்  செம  ஹிட்டுப்பாட்டு 


மெயின்  கதை இரு வரிதான் , ஆனால்  திரைக்கதையில் எங்கெங்கோ  போய்  என்னன்னமோ கதை  சொல்லி  காதில்  பூ  சுற்றுகிறார்கள் 


சபாஷ்  டைரக்டர் (எஸ் எஸ்  பாலன்  எனும்  பாலசுப்ரமணியன் )  


1 ஒரிஜினல்  வெர்சனில்  அமிதாப்  பச்சன்  போலீஸ்  ஆஃபீசர்  கேரக்டரிலும்  அப்துல்  கேரக்டரில்  வேறு  ஒரு  ஹீரோவும்  நடித்திருந்தனர். ஆனால்  தமிழில்  ரீமேக்கும்போது ஹீரோ   டூயல்  ரோல் ஆக  மாற்றிய  சாமார்த்தியம் 


2   பெற்றோரைக்கொன்றவர்களைப்பழி  வாங்கும்  அரதப்பழசான  கதையை   ஜனரஞ்சகமாக  சொன்ன  விதம்


3   காமெடியன்  ரோலை  ஹீரோ  துதி  பாடும்  ரோல் ஆக்கிய  சாமார்த்தியம் . வாலியின்  உதவியுடன்  பொன்மனச்செம்மல்  எனும்  பட்டத்தை  சாமார்த்தியமாக  படத்தின்  பாடலில்  நுழைத்த  விதம்




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஒன்றே  சொல்வான்  நன்றே  செய்வான்  மேரா  நாம்  அப்துல்  ரஹ்மான்  ( ஹீரோ  ஓப்பனிங்  சாங்க்) 


2  நீ  என்னை  விட்டுப்போகாதே  , இந்தக்கன்னி  மனம்  தாங்காதே  ( வில்லன்  கேங்கில்  கிளப்  டான்ஸ்  சாங் )


3  கொஞ்ச  நேரம் என்னை  மறந்தேன்  (  ட்ரீம் சாங்  டூயட் )


4   பொன்மனச்செம்மலைப்புண்படச்செய்தது  யாரோ? ( சோகம்:}


5  உலகம்  என்னும் நாடக  மேடையில்  நான்  ஒரு  நடிகன் ( வில்லன்  ஸ்பாட்டில்  ஹீரோ மாறுவேடம்) 


  ரசித்த  வசனங்கள் 


1  இவன்  ஏன்  இப்படிப்பேசிட்டுப்போறான் ? சூடா  ஒரு  டம்ளர்  ஞானப்பால்  குடிச்சிருப்பானோ ? 


2   சரக்கு  அடிக்க  ஆண் , பெண் பேதம் இல்லை, ஆனந்தம்  எல்லோருக்கும்  சொந்தம் 


3  பத்தினிகள்  ஆண்களிலும்  உண்டு . ராமு  அதில்  ஒருவன் 


4   இரண்டு  அறிவாளிகள்  ஒரே  இடத்தில்  இருந்தா  அங்கே  வேலை  நடக்காது , விவாதம்  தான்  நடக்கும்., அதனால  அவரை  நான்  கொன்னுட்டேன் 

 சபாஷ்  மிஸ்!  குடியும்  குடித்தனுமுமா  வாழ்றீங்க  


5  மனுசன்  தூங்கலாம், மனசாட்சி  தூங்கக்கூடாது


6  பாஸ், சாரி  அந்தப்பொண்ணு  இப்படி  ஏமாற்றுவாள்னு  நான்  எதிர்பார்க்கவே  இல்லை 


 ஏமாற்றுபவள்  விரைவில் எதிர்பாருங்கள்  நான்  ஏமாற்றப்போகிறேன்னு  போஸ்டர்  ஒட்டி  அறிவிச்சுட்டா  ஏமாற்றுவா? 


7   எதுவரை  படிச்சிருக்கே?


 எழுத்துக்கூட்டி  படிப்பேன் , பொள்ளாச்சினு  இருந்தா  பிள்ளைத்தாய்ச்சினு  படிப்பேன்


8   ஒரு  கசப்பான  அனுபவம்  1000  புத்தகங்கள்  படித்ததற்கு  சமம் 


9 ஒருவன்  மனம்  புண்பட்டா  அவன்  பண்பட்டான்னு  அர்த்தம் 


10  நிமிர்ந்து  நின்று  எதிர்க்க  முடியலைனு  தெரிஞ்சதும்  வளையப்பார்க்கறியா? அதிகமா  வளையற  வில்லும், அதிகமா வளையும் மனிதனும்  ஆபத்துக்கு  அறிகுறிகள் 


11  நீதிக்காகப்போராடுபவன்  தனியா  இருந்தாலும்  அவனுக்கு  1000  பேர்  பலம்  வந்து விடும் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனின்  அடியாள்  தன்னை  போலீஸில்  காட்டிக்கொடுத்துடுவானோ  என  பயந்த  வில்லன்  அவனை  மட்டும்  போட்டுத்தள்ளாமல்  அடியாளின்  மனைவியையும்  போட்டுத்தள்ளுவது  ஏன்? 


2  பல  வருடங்களாக  தன்னிடம்  வேலை  பார்க்கும்  அடியாளுக்கு  குழந்தை  இருப்பது  வில்லனுக்குத்தெரியாதா? குழந்தையை  மட்டும்  கொல்லாமல்  விடுவது  ஏன் ? 


3   ஹீரோ  சின்ன  வயசில்  தூங்கும்போது  ஷூ  ஷாக்சுடன் தான்  தூங்கறாரு

4   வில்லனான  நம்பியார்  நம்ம  கடத்தல்  லாரி  மாட்டுன  ஏரியா  எது? அங்கே  இன்ஸ்பெக்டர்  யாரு?னு  விசாரிக்கறப்ப  அடியாள்  ஹீரோ  பேரு  சொல்றான். யாரோ  புது  இன்ஸ்பெக்டர்  போல, செலவுக்கு  பணம்  கொடுக்கனும்னு  ஒரு  லேடி  கிட்டே  சொல்றார்  வில்லன், அடுத்த  சீன்ல  ஹீரோ  எம் ஜி ஆர்  கிட்டே  உங்களைப்பற்றி  அடிக்கடி  பேப்பர்ல  போட்டிருக்காங்க , கேள்விப்பட்டிருக்கேன், உங்களைப்பார்க்கனும்னு  நினைச்சேன்கறார். ஏன்  இந்த  முரண்பாடு ?

5    அப்துல்  எனும்  ஆளிடம்  ஹீரோ இனிமே  கிளப்  நடத்த  வேண்டாம்  என்கிறார்.அவரு,ம்  ஓக்கே  சொல்ல  அடுத்த  சீனில்  நான்  சொன்ன  ஒரே  ஒரு  வார்த்தைக்காக  உங்க  சொத்து  எல்லாத்தையும்  இழந்துட்டீங்களே? என்கிறார். எப்படி? 20 வருசமா  கிளப்  நடத்துனவர்  பேங்க்கில்  பணம்  வைத்திருக்க  மாட்டாரா?


6  ஒற்றைக்கண்  அடியாள்  லாரி  ஓட்டிட்டு  ஹை  வேல  வர்றான். டிரைவிங்க்  லைசென்ஸ்  எப்படிக்கொடுத்தாங்க ? 


7  கடத்தல்  லாரியை  ஹீரோ  துரத்தும்போது  ஒரு  அடியாள் லாரியின்  பின் பக்கம்  நின்று  கொண்டு  ஏதோதோ  வீசி  ஜீப்  வருவதை  தடுக்க முயல்கிறார். ஹீரோ  போலீஸ்  , கைல  துப்பாக்கி  இருக்கு,  சும்மா  சுடற  மாதிரி  பாவ்லா  காட்னாலே  அவன்  பயந்திருப்பானே?


8 லாரி  ஏற்படுத்துன  விபத்தை  நேரில்  பார்த்த  சாட்சியான  நாயகியை  ஹீரோ  பார்க்க  விரும்புவதா  சொல்ல  போலீஸ்  நாயகியை  அழைச்சுட்டு  போலீஸ்  ஸ்டேஷன்  தானே  வரனும்? ஏன்  ஹாஸ்பிடல்  கூட்டிட்டு  வர்றாங்க ? 


9  குற்றவாளியை  அடையாளம்  காட்ட  போலீஸ்  ஸ்டேசன்  வரும்  நாயகி  அவர்  பாட்டுக்கு  சாட்சி  சொல்ல  தானா  வர்றாரு, அதுக்குள்ளே  அவசரப்பட்டு  ஹீரோ  ஹீரோயின்  ,கையைப்பிடிச்சு  இழுத்து  சொல்லு  சொல்லு  யார்? அப்டிங்கறார்? இதுக்கே  ஹீரோவை  அரெஸ்ட்  பண்ணனும்.


10  ஹீரோயின்  லதா  தன்னை  யாரோ  மிரட்டுவதாக  சொல்லி  ஹீரோ  வீட்டுக்கு  வந்து  அங்கேயே  தங்கறார். ஹீரோ  நல்லவரா  இருந்தா  சட்டப்படி  அவரை  லேடி  கான்ஸ்டபிள்  வீட்டுக்கு  அனுப்பி  பாதுகாத்து  இருக்கனுமே? 


11  ஹீரோயின்  லதா  ஹீரோ  வீட்டில்  வெறும்  தரையில்  படுத்துத்தூங்குகிறார். .ஹீரோ  அவருக்கு  தலையணையும், போர்த்திக்கொள்ள  பெட்ஷீட்டும்  தர்றார். பாய்  தந்திருக்கலாமே?மொசைக்  தரைல  எப்படித்தூங்குவார் ? 


12  ஹீரோ  தன்  வீட்டில்  ஹீரோயின்  தங்கினால்  பிரச்சனை  என  நண்பர்  அப்துல்  வீட்டில்  தங்க  வைக்கிறார்.அப்பப்ப  அப்துல் வீட்டுக்கு  வந்து  லதாவுடன்  ரொமான்ஸ்  பண்றார். அப்படி  பயந்து  பயந்து  ரொமான்ஸ்  பண்றதுக்குப்பதிலா  தன்  வீட்டுக்கே  கூட்டிட்டுப்போய்  இருக்கலாமே?


13  பல  வருடங்களுக்கும்  முன்  ஹீரோ  தந்து  உதவிய  200  ரூபாயை  தேங்காய்  சீனிவாசன்  ஒரு  கவர்ல  போட்டுத்தர ஹீரோ  அதை  வாங்கிக்கொள்கிறார். அப்போது  லஞ்ச  ஒழிப்புத்துறை  வந்து  சோதனை இடும்போது  அந்தக்கவரில் 2000  ரூபாய் ( 20 நூறு ரூபாய் நோட்டு)  இருக்கிறது. ஒரு  போலீஸ்க்கு  கவர்  வெயிட்டை  வைத்து  எவ்வளவு  ரூபாய்  இருக்கும்  என  கணிக்க  முடியாதா?அல்லது


14   போலீஸ்  ஆஃபீசரான  ஹீரோ  கிட்டே  சேவிங்ஸ்  இருக்காதா? கோர்ட்  விதித்த  5000  ரூபாய்  அபராதம்  கட்ட  அவரால  முடியலை. பிளாட்ஃபார்ம்வாசியான  நாயகி  தன்  சேமிப்பில்  இருந்து  பணம்  தர்றார் 


15   ஓடும்  ரயிலில்  ஒரு  முக்கிய  சாட்சியை  யாராவது  கதவு  அருகே  நிற்க  வைத்துக்கூட்டிச்செல்வார்களா? வில்லனின்  ஆட்கள்  தள்ளி  விடுவார்கள்  என  தெரியாதா?


16  ஓடும்  ரயிலில்  தள்ளி  விடப்பட்ட  சாட்சி  அந்த  ரயில்  வந்த  தண்டவாளம்  மேலே  விழுந்து  கிடப்பது  எப்படி ? அதற்கு  அருகே  தானே  விழ  முடியும் ? 


17  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகும்  ஹீரோ  நேரா  தன்  வீட்டுக்குக்கூடப்போகாம  நேரா  வில்லன்  இருக்கும்  ஹோட்டலுக்கு  வர்றாரே? அவருக்கு  எப்படி  கரெக்டா  அந்த  லொக்கேஷன்  தெரியும்> அவர்தான்  இத்தனை நாளா  ஜெயிலில்  இருந்தாரே?


18 ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆன  ஹீரோ  நேரா  வில்லன்  இடத்துக்கு  வந்ததும்  ஏதோ  பெருசா  செய்யப்போறார்னு  பார்த்தா  அவர்  வில்லன்  கிட்டே  நான்  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகிட்டேன், அதை  சொல்லிட்டுப்போகத்தான்  வந்தேன்கறார். இதை  ஃபோன் பண்ணியே  சொல்லி  இருக்கலாமே? 


19   ஹீரோ  பொய்யான  குற்றச்சாட்டில்  அதாவது  2000  ரூபாய்  லஞ்சம்  வாங்கிய  குற்றத்தில்  கைதாகி  3  மாத  ஜெயில்  தண்டனை  பெற்று  வெளீயே  வருகிறார். ஆக்சுவலா  அவர்  சஸ்பெண்ட்தானே  ஆகி  இருக்கிறார், வில்லன் என்னடான்னா  உன்  வேலையே  போச்சு , இனி  என்ன  பண்ணுவே? என்  கிட்டே  வேலைக்கு  சேர்ந்துக்க  என்கிறாரே? 


20   காலைல 11  மணிக்கு  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆன  ஹீரோ  நேரா  வில்லன்  இருக்கும்  ஹோட்டல்  போய்  வெட்டிக்கதை  பேசிட்டு  மீண்டும்  வெளில  வரும்போது  உத்தேசமா  மணி  மதியம் 2   அப்டினு  வெச்சுக்கிட்டாக்கூட  அவர்  அடுத்த  ஷாட்டிலேயே  மிட்  நைட்ல  நடு  ரோட்ல  நடந்து  போய்க்கிட்டு  இக்ருக்காரு, வில்லனின்  ஆட்கள்  அவரைக்கொலை  செய்ய  முயுற்சிக்கறாங்க .,  வீட்டுக்குக்கூட  போகாத  ஹீரோ  அந்நேரத்துல  எதுக்கு  அங்கே  போனாரு ?


21  இந்த  எம்  ஜி ஆர் இங்கே  வில்லனின்  அடியாட்களிடம்  மாட்டிக்கொண்ட  போது  அந்த  எம் ஜி ஆர்  கெட்ட  கனவு  கண்டதா   எழுந்து  கரெக்டா  இந்த  எம் ஜி ஆர்  இருக்கும்  ஸ்பாட்டுக்கு  எப்படி  வந்தார்> அவர்  கூகுள்  லொக்கேஷன்  அனுப்பினாரா? 


22  ஹீரோவைக்கொல்லச்சொல்லி  வில்லன்  சொன்னதால் 10  பேரு  சேர்ந்து  ஹீரோவை  அடிச்சு  தண்டவாளம்  மேல  போட்டுட்டுப்போறாங்க , கொல்லனும்னு  நினைச்சா  அருகே  இருக்கும்  பாறாங்கல்லைத்தூக்கி  தலைல  ஒரு  போடு  போட்டா  ஆள்  க்ளோஸ் , அதை  விட்டுட்டு  ரயில்  வரட்டும்னு  வெயிட்டிங்  எதுக்கு ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - நாயகி  லதா  வரும்  காட்சிகள் 90% கிளிவேஜ்  காட்சிகள்  தான்.



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர் ரசிகர்கள் மட்டுமே  பார்க்க  முடியும்,இது  எப்படி  ஹிந்தியில்  ஹிட்  ஆனது ? தமிழில்  அதைவிடப்பெரிய  ஹிட்  ஆனது  என்பது  மில்லியன்  டாலர்   கொஸ்டின் . ரேட்டிங்  2.25 / 5 




சிரித்து வாழ வேண்டும்
சிரித்து வாழ வேண்டும்.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்எஸ்.எஸ்.பாலன்
மூலம் திரைக்கதைஎஸ்.எஸ்.பாலன்
அடிப்படையில்சலீம்-ஜாவேத்
எழுதிய ஜன்ஜீர்
உற்பத்திஎஸ்.மணியன்
வித்வான் வி.லட்சுமணன்
நடிக்கிறார்கள்எம்.ஜி.ராமச்சந்திரன்
லதா
எம்.என்.நம்பியார்
ஒளிப்பதிவுஏ. ஷம்முகம்
திருத்தியவர்எம். உமாநாத்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
உதயம் புரொடக்ஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 30 நவம்பர் 1974
நேரம் இயங்கும்
146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, April 13, 2023

இதய வீணை (1972) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)


திமுக வில்  இருந்து  வெளியே  வந்து  அதிமுக  எனும்  புதிய  கட்சியை  ஆரம்பித்த  பிறகு  எம் ஜி ஆர்  நடிப்பில்  வெளி  வந்த  முதல் படம்  இது  என்பதால்  ஏகப்பட்ட  எதிர்பார்ப்புடன்  ரிலீஸ்  ஆகி  100 நாட்கள்  வெற்றிகரமாக  ஓடிய  படம்  இது . ஆனந்த விகடன்  வார  இதழில்  இதயம்  பேசுகிறது  மணியன்  எழுதிய  தொடர்கதையின்  திரைக்கதை  வடிவம் இது . தொடர்கதையின்  டைட்டிலும், படத்தின்  டைட்டிலும் ஒன்றே!மணீயனின்  சொந்தப்படம்  இது

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்னவயசுல  சேர்க்கை  சரி  இல்லாம  ஒரு  ரவுடிப்பையன் கூட  சேர்ந்து     கெட்ட  பழக்கம்  எல்லாம்  பழகறான், அதனால  அப்பா  கண்டிக்கிறார். அப்பா  கண்டிக்காம  இருக்கனும்னா  இதை  அவர்  குடிக்கும்  பாலில்  கலந்து  கொடு  என  அந்த  வில்லங்கச்சிறுவன்  சொல்ல  நாயகன்  அதன்படி  செய்ய  முற்பட  அப்பாவுக்கு  அது  விஷம்  என  தெரிந்து  நாயகன்  சிறுவனாக  இருக்கும்போதே  வீட்டை விட்டு  துரத்தி  விடுகிறார்.


இப்போ  ஃபிளாஸ்பேக்  முடிந்து  நாயகன்  இண்ட்ரோ , ஒரு  கல்லூரி   டூர்  விழாவில்  உணவு  அருந்தும்போது  ஒரு  பெண்  மட்டும்   நாயகன்  குடும்ப  வழக்கப்படி  பிரார்த்தனை  செய்வதைக்கண்ட  நாயகன்  அது  தன்  தங்கை  என  அறிந்து  கொள்கிறான். தன்  குடும்பத்தைக்காண  காஷ்மீரில்  இருந்து  தமிழகம்  வருகிறான்


தான்  யார்  என்று  காட்டிக்கொள்ளாமல்  தன்  பெற்றோரை  நாயகன்  சந்திக்கிறான்.   தன்  தங்கையின்  காதலனுடன்  தங்கைக்கு  திருமணம்  நிகழ  உதவுகிறான். இதற்குப்பின்  நாயகன்  தன்  குடும்பத்துடன்  எப்படி  மீண்டும்  சேர்ந்தார்    என்பதுதான்  கதை 


நாயகனாக  எம் ஜி ஆர்.  வழக்கமாக  எம் ஜி ஆர்  படங்களில்  அம்மா  செண்ட்டிமெண்ட்  அல்லது  தங்கை  செண்ட்டிமெண்ட்  நிச்சயம்  இருக்கும், இதில்  தங்கை செண்ட்டிமெண்ட். அப்பாவுடனான  செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்  கவனம்  ஈர்க்கிறார்.சொந்த  அண்ணனான  எம்  ஜி  சக்ரபாணியே  அப்பா  ரோலில்  வருவதால்  முகத்தோற்றம், சாயல்  ஒற்றுமை எல்லாமாகச் சேர்ந்து  கதைக்கு  வலு  சேர்க்கிறது 


நாயகியாக  மஞ்சுளா. டூயட்  பாட  மட்டும்  அல்லாமல்  படம்  முழுக்க  ரவுண்ட்சிலேயே  இருக்கிறார்


நாயகனின்  தங்கையாக  லட்சுமி . நடிக்க  நல்ல  வாய்ப்பு  உள்ள  கேரக்டர்.   இவரது காதல்  கணவராக  சிவக்குமார் , கிட்டத்தட்ட  சைடு  வில்லன்  ரோல்  ,இவருக்கான  விக் தான்  சகிக்க வில்லை 


அண்ணன் - தங்கை  என  தெரியாமல்  அவர்களைத்தொடர்பு படுத்தி  சந்தேகப்படும்  கேரக்டர்  என்பதால்  வெறுப்பை  சம்பாதிக்கும்  ரோல் 


தேங்காய்  சீனிவாசன்  காமெடிக்கு..  ஆனால்  படம்  பூரா  வாத்தியாரே  வாத்தியாரே  என  நாயகனை  அழைக்கும் எடுபுடியாகத்தான்  வருகிறாரே  தவிர  காமெடியைக்காணவில்லை 


வில்லனாக  நம்பியார் . நாயகன்  போல்  உடை  அணிந்து  கொள்ளை  அடித்து  பழியை  அவர்  மேல்  போடும்  கேரக்டர் .  அந்த  காட்சிகள்  எல்லாம்  இப்போது  பார்க்க  சிரிப்புதான்  வருகிறது 


பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட்டு  சங்கர்  கணேஷ்  தான்  இசை . படத்தின்  க்ளை மாக்ஸ்  ஃபைட்  சீனில் மாறுபட்ட  இசை வேண்டும்  என  30  வீணைகளை  இசைக்க  வைத்து  பி ஜி எம்  ஆக  பயன்படுத்தினார்களாம் 




சபாஷ்  டைரக்டர் ( கிருஷ்ணன்  பஞ்சு )


1  அம்மா  கேரக்டர்  இருந்தும்  ஒரு  சீனில்  கூட  ஹீரோ  அம்மா  என  அழைத்து  பாசம்  காட்டாத  ஒரே  எம் ஜி ஆர்  படம்  இதுதான் 


2    ஹீரோ  பில்டப்  காட்சிகள்  ஹீரோ  துதி  பாடும்  காட்சிகளை  தாராளமாக  ஆங்காங்கே   வைத்தது 

3   ஹீரோ  எவ்ளோ  ஏழ்மையான  சூழ்நிலையில்  இருந்த  போதும்  ஏழையாக  இருக்கும்போதும்  டாட்டா , பிர்லா  போல  டிரஸ்  போட  வைத்தது 


4   படத்தின்  நாயகி  மஞ்சுளா ,  நாயகனின்  தங்கை  லட்சுமி  என  இரு  பெண்  கேரக்டர்களும்  வரும்  பெரும்பாலான  காட்சிகள்  இருவருமே ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட்  தான் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  காஷ்மீர் , பியூட்டிஃபுல்  காஷ்மீர்  ( ஹீரோ  ஓப்பனிங்  சாங் )


2  பொன்னந்தி  மாலைப்பொழுது  பொங்கட்டும்  இன்ப  நினைவு ( ட்ரீம்  சாங் - 

  டூயட்) 


3  திருநிறைச்செல்வி  மங்கையர்க்கரசி  திருமணம்  கொண்டாள்  இனிதாக  (  தங்கை  மேரேஜ்  வாழ்த்துப்பாடல்) 


4  ஆனந்தம் , இன்று  ஆரம்பம், மெல்லச்சிரித்தால்  என்ன , இதழ்  விரித்தால்  என்ன? 


5  ஒரு  வாலும்  இல்லை  நாலு  காலும்  இல்லை  (  அரசியல் அவல சுட்டிக்காட்டல் பாட்டு ) 


6   நீராடும்  அழகெல்லாம்   நீ  மட்டும்  பார்க்கலாம், நீர்  தொட்ட  மேனியை நீ  தொட்டுப்பார்க்கவா?   (கிளாமர்  சாங் )

  ரசித்த  வசனங்கள் 


1  உலகத்துலயே  பெரிய  தியாகி  அம்மாதான்,  ஏன்  எனில்  குழந்தைக்கு  அப்பாவின் பெயரில்  உள்ள  எழுத்துதான்  இனிஷியல் ஆக   வைக்கப்படுகிறது. அதுக்கு  அம்மா  நான்  பத்து  மாசம்  சுமந்தேனே  என  மறுப்பு  தெரிவிக்காமல்  அனுமதி  அளிக்கிறாளே? அதுவே  தியாகம்  தானே?


2  ஒரு  ஆண்  தவறு  செஞ்சா  அது  வீட்டை  விட்டு  வெளில  எங்கயும்  போகாது , ஆனா  ஒரு  பெண்  தவறு  செஞ்சா அது  வெளில  இருந்து  வீட்டுக்குத்தான்  முதல்ல  போகும் 


3  உடையை  வெச்சு  யாரையும்  எடை  போடாதீங்க . கமண்டலத்துக்கு  உள்ளேயும்  கருநாகம்  இருக்கும், விபூதிக்குள்ளேயும் விஷம்  கலந்திருக்கும் 


ஆமா, பொய்   ஊரெல்லாம்  சுத்தி  வரும்போது  உண்மை  கால்  உடைஞ்சு  வீட்டோடு  இருக்கும் 


4  பொண்ணையும் , பூவையும்  ஒண்ணா  ஏன்  பார்க்கறோம்னா  இரண்டையும்  சுலபமா  பறிச்சுடலாம்


5  ஒரு  ஆண்  எப்போது  சமையல்  செய்யக்கத்துக்கறானோ  அப்பவே  அவனுக்கு  கல்யாணம்  செய்ய  தகுதி வந்துடுச்சுனு  அர்த்தம் 


6  ஒருத்தன்  நல்லா  இருக்கறதுக்கும், கெட்டுப்போறதுக்கும்  அவன்  பக்கத்துல  இருக்கறவங்க  தான்  காரணம் 


7  ஏழையா  இல்லாதவங்க  யார்  தெரியுமா? இதுவரை  இந்த  உலகத்துல  பிறக்காதவங்க  தான்


8  நாம  ஒரு  மணி  நேரம்  சிரிக்கனும்னா  மத்தவங்க  23  மணி  நேரம்  அழுதாலும்  நாம  கவலைப்படக்கூடாது  ( வில்லன் ) 


9  மனுசங்க  உடுத்தும்  உடைக்கும், அவங்க  நடத்தைக்கும்  சம்பந்தம் இல்லை 


10  நீங்க  மலைக்கள்ளன்  ஆக  காட்டுக்குள்  சுத்த  வேண்டிய  அவசியம்  இல்லை . எங்க  வீட்டுப்பிள்ளையா  நாட்டுக்கு  வந்துடுங்க 


11  அடேய் , அண்ணாமலை , பின்  விளைவுகளை  எண்ணாமலே  நீ எங்க  தலைவரை  எதிர்த்துட்டு  இருக்கே  ( ரஜினி  ரசிகர்கள்  பொறுத்திருக்கவும் ) 


12   அடியே  வசந்தா , உன்  கையை  அய்யா  வசம்  தா  ( வசனம்  டி ராஜேந்திரா?) 


13  இந்த  நேரத்திலும்  உங்களால  எப்படி  சிரிக்க  முடியுது ?


எந்த  நேரத்திலும்  என்னால  சிரிக்க  முடியும், ஆண்டவன்   எனக்கு  தந்திருக்கும்  வரப்பிரசாதம்  அது 


14  உன்னை  யார்  இங்கே  வரச்சொன்னது ?


 துப்பு  துலக்க  வந்திருக்கேன் 


 பாத்திரம்  கூட  ஒழுங்கா  துலக்க  மாட்டே  ( இதெல்லாம்  ஆணாதிக்க  வசனம்னு  அந்தக்கால  மாதர்  சங்கங்கள்  கூப்பாடு  போடலை போல ) 


15    சுந்தரம்,  என்னை  மன்னிச்சிடு , உன்னை  தப்பா  நினைச்சுட்டேன்


 நீங்க  மட்டுமா எல்லாருமே  ஆரம்பத்துல  என்னை  தப்பாதான்  நினைக்கறாங்க  (  அரசியல்  உள்  குத்து  வசனம் )


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ரெண்டு  பொண்ணுங்களை  ரெண்டு  ரவுடிகள்  தூக்கிட்டுப்போய்  பாலியல்  பலாத்காரம்  பண்ண  முயலும்போது  நம்ம  ஹீரோ  டக்னு  அங்கே  வந்து  காப்பாத்தறார், அவங்க  கூட  ஃபைட்  போட்டுட்டு  இருக்கார் . பொண்ணுங்க  ரெண்டு  பேரும்  அந்த  இடத்தைக்காலி  பண்ண  வேண்டியதுதானே?  ஃபைட்டை  வேடிக்கை  பார்த்துட்டு  அங்கேயே  நிக்கறாங்க . அந்த  ரவுடிகளில்  ஒருத்தன்  மீண்டும்  ரேப்  பண்ண  வர்றான்.இப்படியே  10  நிமிஷம்  அந்த  சீன்  ஜவ்வா  இழுக்குது


2  பாலில்  மயில்  துத்தம்  கலந்தா  பால்  கலர்  மாறும். நீலக்கலரில்  இருக்கும். டவுட்  வராதா? 


3  ஹீரோ  கோட்  ஷூட்  பூட்  எல்லாம்  போட்டுட்டு பெரிய  தொழில்  அதிபருக்கே  லோன்  கொடுக்கும்  செல்வந்தர்  மாதிரி  இருக்காரு . வண்டி  ஓட்டத்தெரியும், டிரைவர்  வேலை  கிடைக்குமா?னு  கேட்கறாரு 


4  அப்பாவான  எம் ஜி  சக்ரபாணி  பல  வருடங்களுக்குப்பின்  தன்  மகனை ( எம் ஜி ஆர்)  சந்திக்கிறார்.ஆனால்  அவர்தான்  மகன்  என  தெரியாது . ஆனால் இருவரும்  ஒரே  முகச்சாயலில்  இருக்கிறார்கள். டவுட்  வராதா? 


5   சிவகுமார்  லட்சுமியைக்கூட்டிட்டு  சினிமா  தியேட்டருக்கு  வர்றார். பால்கனில  அவங்களைத்தவிர  வேற  யாருமே  இல்லை . எல்லா  டிக்கெட்டையும்  அவரே  எடுத்துக்கிட்டாரா? கரெக்டா  இடை  வேளை  விடும்போது  எம்  ஜி ஆர்  அங்கே  வர்றார். படம்  போட்டு  15  நிமிடங்கள்  கழித்து  ஒரு  பெல்  அடிப்பாங்க . அதுக்குப்பின்  யாரும்  தியேட்டருக்குள்  வர  முடியாது அந்தக்காலத்தில்  எல்லாம். நம்மாளு  மட்டும்  எப்படி  உள்ளே  வந்தாரு ?


6  பஸ்  டிரைவரான  ஹீரோ  திடீர்னு  வேலையை  ரிசைன்  பண்றேன்னு  பஸ்  சாவியை  ஒப்படைச்ட்டு  கிளம்பறார். பஸ்சை  செட்ல  கொண்டு  போய்  விட  மாட்டாரா? இப்படித்தான்  நடு  ரோட்ல  அம்போனு  விட்டுட்டுப்போறதா? 


7  ஹீரோ  வெங்காயம்  அரிந்ததால்  கண்களில்  கண்ணீர்  வர  இருக்கிறார். அப்போது  ஹீரோயின்  எண்ட்ரி  ஆகி  ஹீரோ  கண்களை  முந்தானையில்  துடைத்து  ஊதுகிறார். தூசு  விழுந்தாத்தானே  ஊதுவாங்க ? வெங்காயம்  அரிஞ்சதுக்குக்கூடவா  ஊதுவாங்க ? 


8   ஹீரோ  சின்னப்பையனா  இருக்கும்போது  அவரோட  அப்பாவுக்கு  விஷம்  கொடுக்கச்சொன்ன  பையனை  பெரியவன்  ஆனதும்  தேங்காய்  சீனிவாசனா  சந்திக்கிறார். அப்பவே  அவரை  அப்பாவிடம்  கூட்டிட்டுப்போய் நடந்த  சம்பவத்தை  சொல்லி  இருந்தா  அப்பவே  படம்  முடிஞ்சு இருக்குமே? ஏன்  சொல்லலை? ரெண்டரை  மணி  நேரம்  ஓடும்  படம்  ஒரு  மணி  நேரத்தில்  முடிஞ்சிடும்னா? 


9  டிரைவரான  ஹீரோவை  சிக்க  வைக்க  வில்லன்  பிரேக்  பிடிக்காத  லாரியை  திடீர்  என  வழிமறித்து  தந்து  நீ  இந்த  வண்டியை  எடுத்துட்டுப்போனுன் சிக்க  வைக்கப்பார்க்கும்போது  ஹீரோ  வண்டில  பிரேக்  பிடிக்குதா?னு  செக்  பண்ண  மாட்டாரா? வண்டியை  ஓட்டி  10  நிமிசம்  கழிச்சுத்தான்  பிரேக்கையே  பிடிச்சுப்பார்க்கறார். ஒரு  நல்ல  டிரைவர்  வண்டியை  ஸ்டார்ட்  பண்ணும்போது  பிரேக்  கண்டிசனை  செக்  பண்ண  வேண்டாமா?


10  ஹீரோவை  போலீஸ்  துரத்துது.  தப்பிக்க  ஓடும்  அவர்  எதேச்சையா  ஒரு  பங்களாவுக்குள்  நுழைகிறார், இதுவரை  ஓக்கே , ஆனா  லட்சுமியின்  பாத்ரூம்க்குள்  அவர்  இருப்பதும்  கணவன்  வரும்போது  கள்ளக்காதலனோ  என  சந்தேகப்படுவதும்  நம்பவே  முடியாத  கதை . ஒளிய  வந்தவர்  புதர், தோட்டம்  என  ஒளிவாரா? பாத்ரூமுக்குள்  வருவாரா? 


11   வில்லன்  ஹீரோயினை  மானபங்கப்படுத்த  அதாங்க  ரேப்  பண்ண  ட்ரை  பண்ணிட்டு  இருக்கான், அப்போ  அங்கே  வந்த  ஹீரோ டக்னு  வில்லனைத்தடுக்காம  அங்கே  இருக்கும்  வில்லனின்  கோட்  ஷீட்  எல்லாம்  டிரசை  மாத்திப்போட்டுட்டு  மாறுவேஷம்  போட்டுட்டு  வந்து  அப்புறமா  வில்லனைத்தடுக்கறார். அதுக்குள்ளே  பாதி  ரேப் பிராசஸே  முடிச்சிருப்பானே  வில்லன் ? 


12   ஹீரோ  மாறு  வேஷம்கற  பேர்ல  துக்ளியூண்டு  தாடியை  ஒட்ட  வெச்சுட்டு  வர்றார். ஹீரோயின்  மனசாட்சியே  இல்லாம  நீ யாரு? என  அடையாளம்  தெரியாம  திகைக்கிறார்


13   ஹீரோவே  பூவாவுக்கு  வழி  இல்லாம  காட்டுக்குள்  தலை  மறைவு  வாழ்க்கை  நடத்திட்டு  போலீசுக்கு  பயந்து  வாழ்ந்துட்டு  இருக்கார் , இந்த லட்சணத்துல தங்கையான  லட்சுமியின்  அட்டுக்குழந்தையை  தூக்கிட்டு  காட்டுக்கு  வந்துடறார்.எப்படி  தாய்ப்பால்  கொடுக்க? யார்  அதை  பார்த்துக்கறது ? எதுக்கு  இந்த  வேண்டாத  வேலை ? 


14  வில்லனான  நம்பியார்  காட்டுக்கு  ஹீரோவை  சந்திக்கப்போறார். போறது  ஃபைட்  போட  ஆனா  என்னமோ  பிராஜெக்ட்  மேனேஜர்  இண்ட்டர்வுயூக்குப்போற  ஐ டி  ஊழியர்  மாதிரி  டை  கட்டி  டக்  இன்  சர்ட்  போட்டுட்டு  அந்த  கெட்டப்ல  அடி  வாங்கிட்டு  வர்றார்,,,


15  மெயின்  கதையான  அம்மா, அப்பாவை  நாயகன்  எப்படி  சமாதானபபடுத்தி சேர்கிறார்  என்ற  விஷயத்தை  விட்டுட்டு  25  கிமீ  விலகி  தங்கை  செண்ட்டிமெண்ட். தங்கை  குழந்தை ,  தங்கயின்  கணவன்  சந்தேகபுத்தி  என சுற்றி  வளைத்து  திரைக்கதை  எங்கெங்கோ  சுத்தி  அலையுது 


16  வில்லனான  நம்பியார்  நகரத்தில்  இருக்கும்போது  நாயகி மஞ்சுளாவை அ டைய  அடிக்கடி  முயற்சி  பண்றார். அட்டெம்ப்ட்  ரேப்  எல்லாம்  ட்ரை  பண்றார். ஆனா  காட்டுக்குள்  நாயகி  வில்லனிடம்  சிக்கும்போது  லூஸ்  மாதிரி  நாயகியை  கட்டிப்போட்டுட்டு  போயிடறார். அப்போ  ரேப் பண்ணி  இருக்கலாமே? 

17  நாயகன்  ஜெயிலுக்குள்  இருக்கும்போது  சில்க்  சட்டை  ரேமாண்ட்  பேண்ட் எல்லாம்   போட்டுட்டு  இருக்கார். என்னதான்  நாயகன்  எம் ஜி ஆர்னாலும் இப்படியா?  கைதின்னா  வெள்ளை  டிராயர்  வெள்ளை  சட்டைதானே? 


18   திருமணம்  ஆன  லட்சுமி  பாத்ரூம்ல  குளிக்கும்போது  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  நீராடும்  அழகெல்லாம்   நீ  மட்டும்  பார்க்கலாம், நீர்  தொட்ட  மேனியை நீ  தொட்டுப்பார்க்கவா?   அப்படினு  ஒரு  கிளாமர்  பாட்டுக்கு  டான்ஸ்  ஆடறார். அப்போ  கழுத்தில்  தாலி  இல்லை , ஆனா 6  பவுன்  நெக்லஸ்  மட்டும் போட்டிருக்காரு , ஒரு  வேளை  அந்தக்காலத்துல  தாலியைக்கழட்டினாலும்  நெக்லசைக்கழட்டாம  குளிப்பாங்களோ ? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - படம்  யூ  தான், ஆனா  லட்சுமிக்கு  ஜம்பு  பட  ஸ்டைலில்  ஒரு  குளியல்  காட்சிப்பாட்டல்  இருக்கு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   அந்தக்காலத்தில்  ஃபேமிலி   செண்ட்டிமெண்ட்ஸ்க்காக  ஓடிய  படம்  இந்தக்காலத்தில்  மஞ்சுளா , லட்சுமி  கிளாமருக்காகவும் , செம  ஹிட்  பாட்டுக்காகவும்  பார்க்கலாம். ரேட்டிங்  2.5 / 5 





இதய வீணை
இதய வீணை.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்கிருஷ்ணன்–பஞ்சு
எழுதியவர்கே. சொர்ணம்
உற்பத்திஎஸ்.மணியன்
வித்வான் வி.லட்சுமணன்
நடிக்கிறார்கள்எம்.ஜி.ராமச்சந்திரன்
லட்சுமி
மஞ்சுளா
ஒளிப்பதிவுஏ.சண்முகம்
திருத்தியவர்எம். உமாநாத்
இசைசங்கர்-கணேஷ்
தயாரிப்பு
நிறுவனம்
உதயம் புரொடக்ஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 20 அக்டோபர் 1972 [1]
நேரம் இயங்கும்
146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Wednesday, April 12, 2023

KILL BOKSOON (2023 ) - (சவுத் கொரியன் மூவி ) சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் மசாலா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


73 வது  பெர்லின் இண்ட்டர்நேஷனல் ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  திரையிடப்பட்டு  பலரது  பாராட்டுதல்களைப்பெற்ற  படம்,  ஜான் விக்  போல்  இதுவும்  ஆக்சன்  காட்சிகள்  நிறைந்த  ஒரு மசாலாப்படம் தான். 2022  ஜனவரியில்  ஷூட்டிங்  தொடங்கிய இந்தப்படம்  நாயகி  உடல்  நிலை  சரி  இல்லாமல்  போனதால்  நான்கு  மாதங்கள்  ஷூட்டிங்  நிறுத்தி  வைத்து  பின்  அவர்  உடல்  நலம்  தேறியதும்  எடுக்கப்பட்டது 2023  ஃபிப்ரவரி  மாதம்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  மார்ச் 31  2023  முதல்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  வாடகைக்கொலையாளி. அதாவது  அவர்  பணி  புரியும்  ஒரு நிறுவனத்தில்  இந்த  ஆளைப்போட்டுத்தள்ளிட்டு  வா  என  ஆணை  கிடைத்தால்  நடந்தது  ஒரு  விபத்து  என்பது  போல  மிகப்பிரமாதமாக  திட்டமிட்டு  அந்தக்கொலையை  நிகழ்த்தி விடுவார் . அவர்  பணி புரியும்    நிறுவனத்தின்  முதலாளி தான்  நாயகிக்கு  பயிற்சி  அளித்தவர்.  நாயகிக்கும்  ஓனருக்கும்  பரஸ்பர  புரிதலும்  மரியாதையும்  உண்டு.


 தனக்கு  வித்தை  கற்றுக்கொடுத்த  குரு  என  நாயகி  ஓனரையும்,  வித்தை  தெரிஞ்ச  வேலைக்காரர்ப்பா  என  குருவுக்கு   நாயகி  மீது  தனிப்பிரியமும்  உண்டு 


நாயகி  அந்த  நிறுவனத்தில்  பணியாற்றி  முடிவதற்கான  ஒப்பந்தம்  காலாவதி  ஆகப்போகிறது , அவர்  ரிட்டையர்  ஆகப்போகிறார் என்னும்  நிலை  வரும்போது  ஓனர்  ஒரு  கடைசி அசைன்மெண்ட்  தருகிறார். நாயகியால்  அதை  ஏற்று  நிறைவேற்ற  முடியாத  இக்கட்டான  சூழல். குருவை  எதிர்த்து  அவர்  சர்வைவல்  செய்ய  முடிந்ததா? குரு  வில்லனாக  மாறியதும்  நாயகிக்கு  நிகழ்ந்த  தரமான  சம்பவங்கள்  என்னென்ன  ? என்பது  மீதி  திரைக்கதை 


 இப்போது  மேலே  சொன்னது  படத்தின்  மெயின்  கதை , இது  போக  இரு  கிளைக்கதைகளும்  உண்டு , 


 நாயகிக்கு  டீன்  ஏஜ்  வயதில்  ஸ்கூலில்  படிக்கும்  மகள் உண்டு .அவள்  நடவடிக்கை  சரி  இல்லை ,  தம்  அடிக்கிறாள் ,  சேர்க்கை  சரி  இல்லை . மகளுக்கு  தன்  தாய்  ஒரு  வாடகைக்கொலையாளி  என்ற  விஷயம்  தெரியாது , அம்மா  ஏதோ மர்மமான  பணியில்  ஈடுபடுகிறார்  என்பது  மட்டும் தெரியும் . நாயகி  ஒரு  சிங்கிள்  மதர் . அதனால்  தன்  பணிகளுக்கு  இடையே  மகளையும்  கண்காணிக்க  வேண்டிய  இக்கட்டான  சூழல் 


 நாயகியின்  மகள்  படிக்கும்  பள்ளியில்  சக  மாணவன்  ஒருவன்  ஒரு  அந்தரங்கமான  புகைப்படத்தை  தான் ரிலீஸ்  செய்யாமல்  இருக்க  தன்னுடன்  உல்லாசமாக  இருக்கவேண்டும்  என  கண்டிஷன்  போடுகிறான் . இதனால்  கோபம்  கொண்ட  மகள்  அவனை கொலை  செய்து  விடுவதாக  மிரட்டுகிறாள் , இந்த  பஞ்சாயத்து  ஸ்கூல்  நிர்வாகம்  மூலம்  நாயகியிடம்  வருகிறது 


நாயகியின்  குருவான  வில்லனுக்கு  ஒரு  தங்கை  உண்டு , அவளும்  இதே  வாடகைக்கொலையாளி தான் , அவளுக்குஜ்  நாயகியைப்பிடிக்காது 


இந்தப்பிரச்சனைகளை  எல்லாம்  நாயகி  எப்படி  சமாளிக்கிறார்  என்பதே  மீதி  கதை 


நாயகியாக ஜியோன் டோ இயோன்  கலக்கலான  ஆக்சன்  ஹீரோயின். இவர்  ஓப்பனிங்  சீனில்  போடும்  சண்டைக்காட்சி  தியேட்டரில்  விசில்  பறந்திருக்கும் . தமிழ்  சினிமா  போல  அப்பப்ப  செண்ட்டிமெண்ட்  காட்சிகளும்  உண்டு, ஆக்சன், செண்ட்டிமெண்ட்  இரண்டிலும்  அதகளம்  செய்திருக்கிறார்  நாயகி 


நாயகியின்  மகளாக  பாப்  கட்டிங்  உடன்  அப்பாவியாக  வரும்  டீன்  ஏஜ்  மாணவி கவனம்  ஈர்க்கிறார். தாயைப்போல  பிள்ளை  நூலைப்போல  சேலை  என்பது  போல  பள்ளியில்  படிக்கும்  சக  மாணவனையே  அவர்  கொலை  மிரட்டல்  விடுக்கும்  காட்சி  எல்லாம்  மாஸ்  சீன் , கூஸ்பம்ப்  காட்சி 


நாயகியின்  குருவாக  பிறகு  வில்லனாக  வருபவர்  தன்  கேரக்டர்  உணர்ந்து  நடித்திருக்கிறார். 


படத்தின்  இசை  ஜீவனுடன்  கதையை  நம்முள்  கடத்துகிறது . பின்னணி  இசை  ஒரு  ஆக்சன்  மசாலாப்படத்துக்கு  எவ்வளவு  முக்கியம்  என்பதை  உணர்த்துகிறது 


பளிங்குக்கண்ணாடி  வழியாக  காட்சிகளை  பார்ப்பது  போல  தெளிவான  ஒளிப்பதிவு  படத்துக்கு  கூடுதல்  பலம் 


தமிழ்ப்படங்கள்  போல  ரெண்டேகால்  மணி  நேரம்  ஓடும்  அளவுக்கு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர். ஆனாலும்  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்கவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  நடுரோட்டில்  ஓப்பனிங்  சீனில்  படுத்திருக்கும்  ஆளை  நாயகி  ஃபைட்  போட்டு  ஜெயிக்கும்  ஓப்பனிங்  சீன்  கலக்கல்  ரகம் 


2  நாயகி  எதிரியுடன்  ஃபைட்  போடும்  முன்  எந்த  மாதிரி  தாக்கினால்  என்ன  நிகழும்  என  கற்பனை  செய்து  பார்ப்பதும்  அதை  விஷூவலாக  நமக்குக்காட்டுவதும்  அருமையான  ஐடியா.  சிலருக்கு  இந்த  சீன் குழப்பத்தைக்கூட  ஏற்படுத்தலாம் 


3  வில்லனான  குரு  நாயகியை  யாரிடமும்  விட்டுக்கொடுக்காமல்  இருப்பது  நாயகி , குரு  இருவர்  மீதும்  ஒரு  மரியாதையை ஏற்படுத்துகிறது 


4  நாயகி  , மகள்  இருவருக்கும்  இடையேயான  பாண்டிங் செம  டச்சிங் 


5   கம்பெனி  மீட்டிங்கில்  கத்தியுடன்  வந்து  மிரட்டும்  ஆளை  வில்லன்  போட்டுத்தள்ளும்  கொடூரமான  ஆனால்  மெய்  சிலிர்க்க  வைக்கும்  காட்சியும்  உண்டு


  ரசித்த  வசனங்கள் 


1  வெற்றில  பல  வகை  இருக்கலாம், ஆனா  தற்செயலான  வெற்றினு  ஒண்ணு  கிடையவே  கிடையாது 


2  ஒரு  ஆளை போட்டுத்தள்ளுவதால்  உங்களுக்கு   சகிப்புத்தன்மையும்  , அமைதியும்  கிடைக்கிறது 


3  கொலை  பண்றது  இப்போ  உலகளாவிய  வியாபாரம்  ஆகிடுச்சு , நமக்கு  ஒரு  மரியாதையும்  கிடைக்குது 


4 கொலை  செய்வதில்  பெண்கள்  பேர்  போனவங்க  இல்லை , அதனால தான்  அப்படிப்பட்ட  பெண்களை  எனக்குப்பிடிக்குது 


5   எதிரியை  வீழ்த்தனும்னா  முதல்ல  அவன்  பலவீனத்தை  தெரிஞ்சுக்கனும்


6  பணம்  சம்பாதிப்பதும்  ஒரு  கலைதான்  அது  எல்லாருக்கும்  கை  கூடி  வராது


7  என்  பையன்  தப்பு  பண்ணிட்டான்னு  நான்  அவனை  தண்டிப்பதற்கும்  வெளி ஆள்  அவனை  தண்டிப்பதற்கும்  வித்தியாசம்  இருக்கு 


8  பொதுவாகவே  பெண்களுக்கு  குழந்தை  பிறந்துட்டா  அவங்க  வேலைக்குப்போறதை  நிறுத்திடுவாங்க 


9   பிரச்சனைக்குத்தீர்வு  காண  எளிய  வழி பிரச்சனையை  விட்டு  வெளில  வர்றதுதான்


10  விதிகளை  மீறுபவனாக  நான்  இருக்க  வாய்ப்பே  இல்லை , ஏன்னா  நான்  தான்  அந்த  விதியே!


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   சக  மாணவனை  கொலை  மிரட்டல்  விடுத்தாள்  என  புகார்  வரும்போது  முழு  உண்மையையும்  சொன்னால்தான்  பிரச்சனை , மேலோட்டமாக  அவன்  மேல்  என்ன  தவறு  என  நாயகியின்  மகள்  ஸ்கூல்  ஹெச்  எம்  இடம்  சொல்லி  இருக்கலாமே?


2  ஒரு  குடும்பத்தில்  அம்மா, அப்பா, மகள்  என  இருந்தால்  மகளுக்கு  தனி  அறை  ஓக்கே  , ஆனால்  அம்மா, மகள்  மட்டும்  வசிக்கும்  பங்களாவில்  எதுக்கு  அம்மா, மகள்  இருவருக்கும்  தனித்தனி  பெட்ரூம் ? என்னதான்  பிரைவசிக்காக  என  சால்ஜாப்  சொல்லிக்கொண்டாலும்   டீன்  ஏஜ்  பெண்ணை  தனி  அறையில்  விடுவது  சரியா?


3   நாயகி 24  மணி  நேரத்தில்  முக்கால்வாசி  நேரம்  வெளியே  ரவுண்ட்சில்  தான்  இருக்கிறாள் , பணிப்பெண், சமையல்  உதவி  என  யாரும்  இல்லை , ஆனால்  மகளுக்கு  வேளா  வேளைக்கு  வித விதமான  உணவு  ரெடி   பண்ணி  விடுகிறார்  எப்படி ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்=   ஒரே  ஒரு  காட்சியில்  10  நொடிகளுக்கு  ஒரு  அடல்ட்  கண்ட்டெட்ண்ட்  இருக்கிறது ,அதை  ஸ்கிப்  பண்ணி  விட்டால்  எல்லோரும்  பார்க்கும்  தரத்தில் தான்  உள்ளது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  த்ரில்லர் படங்கள்  , க்ரைம்  ஆக்சன்  படங்கள்  விரும்பிப்பார்ப்பவர்களுக்கு  உகந்த  படம், ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  அருமை , ரேட்டிங்  2.75 / 5 



Kill Boksoon
Kill Boksoon.jpg
Promotional poster
Hangul
길복순
Revised RomanizationGilbogsun
McCune–ReischauerKilboksun
Directed byByun Sung-hyun
Screenplay byByun Sung-hyun
Produced byYi Jin-hee
Starring
CinematographyCho Hyung-rae
Edited byKim Sang-bum
Music by
  • Lee Jin-hee
  • Kim Hong-jip
Production
company
See At Film[1]
Distributed byNetflix
Release dates
  • February 18, 2023 (Berlinale)
  • March 31, 2023 (South Korea)
Running time
137 minutes[2]
CountrySouth Korea
LanguageKorean

Tuesday, April 11, 2023

THE WONDER (2022) ஆங்கிலம் -சினிமா விமர்சனம் (சைக்கலாஜிக்கல் ட்ராமா த்ரில்லர் ) @ நெட்ஃபிளிக்ஸ்


  2016 ஆம் ஆண்டு எம்மா டோனோக்ஸ்  எழுதிய  த  வொண்டர்  என்ற  நாவலின்  திரை  வடிவம்  தான்  இந்தப்படம். ஏகப்பட்ட  விருதுகளுக்குப்பரிந்துரைக்கப்பட்ட  இந்தப்படம்  நேஷனல்  போர்ட் ஆஃப்  ரிவ்யூ  வின்  டாப் 10  இண்டிப்பெண்டட்ன்  ஃபிலிம்களில்  ஒன்றாகவும்  சிறந்த  நடிகைக்கான  விருதையும் , சிறந்த  இசைக்கான  விருதையும்  வென்ற  படம். 1862ஆம்  ஆண்டு  கதைக்களம்  நிகழ்வதால்  அந்தக்காலத்தில்  தெய்வீக  நம்பிக்கை , மூட  நம்பிக்கை  இவற்றை  எல்லாம்  தாண்டி  எப்படி  அறிவியல் , மருத்துவக்கொள்கைகள்  போராடி  ஜெயிக்க  வேண்டி  இருந்தது  என்பதை  படம்  உணர்வுப்பூர்வமாக  சொல்கிறது  . 2022ஆம் ஆண்டு  செப்டம்பர்  2 ம்  தேதி  உலகெங்கும்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  2022 ஆம்  ஆண்டு நவம்பர் 16ல்  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  நர்ஸ் . ஒரு  கிராமத்தில்  ஒரு  11  வயது  ஆன  சிறுமியைக்கண்காணிக்கும்  பொறுப்பு  அவருக்கு  அளிக்கப்படுகிறது . நீண்ட  தொலைவு  பிரயாணம்  செய்து  குறிப்பிட்ட  இடத்துக்கு நாயகி  வந்து  சேர்கிறார்.  தனது  11 வது  வயது  பிறந்த  நாளில்  இருந்து  அந்த  சிறுமி  எதுவும்  சாப்பிடுவதில்லை , ஆனால்  சாப்பிடாவிட்டாலும்  அவரது  உடல்  நலனில்  எந்த  பாதிப்பும்  இல்லை ., இந்த  செய்தி  ஊர்  உலகம்  எல்லாம்  பரவி  அவர்   ஒரு  அதிசயமாகப்பார்க்கப்பட்டு  தினசரி  பலர்  வந்து  அவரைக்கண்டு  செல்கின்றனர் 


நம்ம  ஊர்ல  எல்லாம்  நாட்டாமை  இருப்பது  போல  அந்த  ஊரில்  ஊர்ப்பெரிய  மனிதர்கள்  அடங்கிய  ஒரு கமிட்டி  இருக்கிறது , அந்த  கமிட்டி  நாயகியிடம்  சொல்வது  என்ன வெனில்   இரு  வாரங்கள்  நர்ஸ்  ஆகிய  நீங்களும் , இன்னொரு  நபரும் ( கன்யாஸ்த்ரீ)  அந்த  சிறுமியைக்கண்காணிக்க  வேண்டும் . அவள்  நிஜமாகவே  சாப்பிடாமல்தான்  இருக்கிறாளா? அல்லது  ரகசியமாக  ஏதாவது  சாப்பிடுகிறாளா?? என்பதை  செக்  பண்ண  வேண்டும், அதே  சமயம்  அவளது  உடல் நலனையும்  பார்த்துக்கொள்ளவேண்டும். 


நாயகி  பலரையும்  விசாரித்து  சில  உண்மைகளைக்கண்டு  பிடிக்கிறாள் . சிறுமியை  செக்  செய்ததில் அவருக்கு  ஒரு  ஆச்சரிய  உண்மை  தெரிகிறது . 4  மாதங்கள்  சாப்பிடாமல்  இருந்ததால்  சிறுமிக்கு  எந்த  வித  உடல்  நலக்குறைவோ , பலவீனமோ  ஏற்படவில்லை , இதற்கு  சாத்தியமே  இல்லை , ஏதோ  மர்மம்  இருக்கிறது  இந்த  விஷயத்தில்    என  நினைக்கிறார்


அந்த  சிறுமியின்  பெற்றோர்  உட்பட  ஊர்  மக்கள்  யாருக்கும்  அந்த  சிறுமியின்  உடல்  நலனில்  அக்கறை  இல்லை , அவர்கள்  எண்ணமெல்லாம்  சாப்பிடாமலேயே  உயிர்  வாழ  முடியும்  என  அறிந்தால்  நாமும்  அதை  ஃபாலோ  பண்ணலாமே> என  அந்த  சிறுமியை  ஒல்ரு ஆராய்ச்சிப்பொருளாகத்தான்  பார்க்கின்றனர் 


 இதற்குப்பின்  நாயகி  அனைத்து  மர்மங்களையும்  கண்டு  பிடித்து  அந்த  சிறுமியைக்காப்பாற்றுவது  எப்படி  என்பது  தான்  மீதி  திரைக்கதை 


நாயகி  நர்ஸ்  ஆக  ஃப்ளாரன்ஸ் பஃப்  பிரமாதமான  நடிப்பு ,. சிறந்த  நடிகைக்கான  விருது  வாங்கிய  படம்  வேற . இவரது  காஸ்ட்யூம்ஸ்  எல்லாம்  கண்ணுக்கு  நிறைவு , அந்தக்காலகட்டத்தில்  நிகழும்  கதை  என்பதால்  முழுக்கை  சட்டை , கழுத்து  வரை  கவர்  பண்ணும்  ஜாக்கெட்  என  மிக  கண்ணியமான  ஆடை  வடிவமைப்பு  பெரிய  பிளஸ்


சிறுமியாக  கிலா  லார்டு  மிரட்டலான  நடிப்பு . பெஸ்ட்  சப்போர்ட்டிங்  ஆக்ட்ரஸ்க்கான  விருதை  நூல்  இழையில்  தவற  விட்டு  விட்டார், ஆனாலும்,  அற்புதமான  பங்களிப்பு ,  தனது  9 வது  வயதில்  நிகழ்ந்த  ஒரு ரகசியத்தைக்கூறும்  இடத்தில் அவரது  முக  பாவனைகள்  அபாரம்


படத்தின்  பெரிய  பலமே  பிரமாதமான  ஒளிப்பதிவும் , திகில்  ஊட்டும்  மர்மமான  பின்னணி  இசையும்  தான்,  மிக  உயிர்ர்புடன்  படத்தை  தாங்கி  நிற்கின்றன, ஆர்ட்  டைரக்சனும்  அருமை 


 ஏ சர்ட்டிஃபிகேட்  படம்  என்றாலும்  குடும்பத்துடன்  காணத்தக்க  ஒரு  கண்ணியமான  படம்  தான் , இது  ஸ்லோபர்ன்  சைக்கலாஜிக்கல்  டிராமா  ஃபிலிம்  என்பதால்  மிக  மெதுவாகத்தான்  காட்சிகள்  நகரும்

நெட்  ஃபிளிக்சில்ல்  காணக்கிடைக்கிறது. ரேட்டிங்  2.75 / 5 





  ரசித்த  வசனங்கள் 


1  எல்லோருக்குள்ளேயும்  சில  கதைகள்  இருக்கின்றன, அந்தக்கதைகள்தான்  அவர்களைப்பற்றி  நம்மைப்பேச  வைக்கின்றன


2  எங்க  ஊர்ல  எல்லாம்  குழந்தைகள்  சாப்பிட  அடம்  பிடிச்சா  அவங்களை  வலுக்கட்டாயமா  சாப்பிட  வெச்சுடுவோம், உங்களை  மாதிரி  நாலுமாசம்  வேடிக்கை  பார்த்துட்டு  இருக்க  மாட்டோம்








The Wonder
The Wonder (film).jpg
Official release poster
Directed bySebastián Lelio
Screenplay by
Based onThe Wonder
by Emma Donoghue
Produced by
Starring
Narrated byNiamh Algar
CinematographyAri Wegner
Edited byKristina Hetherington
Music byMatthew Herbert
Production
companies
Distributed byNetflix[1]
Release dates
  • September 2, 2022 (Telluride)
  • November 2, 2022 (United Kingdom and United States)
  • November 16, 2022 (Netflix)
Running time
103 minutes[2]
Countries
  • Ireland
  • United Kingdom
  • United States
LanguageEnglish