Showing posts with label மகிழ்ச்சி. Show all posts
Showing posts with label மகிழ்ச்சி. Show all posts

Saturday, September 25, 2010

என்னாது இது,சின்னப்பிள்ளத்தனமா..?

பசங்க படத்துக்கு விருது கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.இந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி ஞாபகம் வருகிறது.சின்னக்குழந்தைகளின் சந்தோஷங்களை துல்லியமாக பதிவு செய்த வகையில் பிரமாதமான படைப்பு அது.க்ளைமாக்சில் ஏந்திரி அஞ்சலி ஏந்திரி என்ற வசனம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பெறத்துடிப்பதும்,கோயில் கோயிலாக அலைவதும் நடக்கும் அதே நேரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்கள் மழலை இன்பத்தை பெறுகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

லைப்ரரியில் நான் படித்த சில மேட்டர்களை உங்களுடன் பகிர்கிறேன்.



1.குழந்தையின் சிரிப்பில் பூலோகம் அழகு பெறுகிறது.

2.குழந்தைகள் இல்லையென்றால், உலகம் துன்பம் நிறைந்ததாகும்.
 வயோதிகர்கள் இல்லையென்றால், உலகம் மனித இயல்பற்றதாகும்.

3.குழந்தைகளைத் திருத்த நல்ல வழி - அவர்களைப் பாராட்டுவதுதான்.

4.குழந்தையைக் கொஞ்சும்போது தெய்வத்திடம் பேசுவதுபோல இருக்கிறது.

5.குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள கை நோகிறது.
 அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது.

6.இயற்கை அளிக்கும் எல்லாவற்றிலும் குழந்தையைப் பார்க்கிலும் சிறந்த இன்பம் வேறில்லை.

7.குழந்தைகளை ஆர்வமுடன் அணையுங்கள்; இதய நோய் குறையும்.

8.குழந்தையைக் கொஞ்ச நேரமின்றிச் சம்பாதிப்பவன் இறைவனின் அருகில் போக முடியாது.

9.நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளைவிட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத்தான் உங்களுடைய குழந்தைகள் விரும்புகின்றன.

10.பல குழந்தைகள் பல கவலைகள். ஒரு குழந்தையும் இல்லாவிட்டால் ஒரு இன்பமும் இல்லை