Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Friday, December 31, 2010

2010 -ன் டாப் 10 பதிவர்கள் (புதிய தலைமுறை)

08070.jpg (321×357)
இந்த ஆண்டில் பதிவுலகில் யார் யார் எல்லாம் என் மனதைக்கவர்ந்தார்கள் என்ற தனிப்பட்ட லிஸ்ட் இது.ஏற்கனவே டாப்பில் இருக்கும் பதிவர்கள் மன்னிக்க.

1. பன்னிக்குட்டி ராம்சாமி - பொதுவாக நகைச்சுவையாக எழுதுபவர்கள் எல்லோர் மனதையும் கவர்கிறார்கள்.அந்த வகையில் தான் எழுதும் பதிவுகளில் மட்டுமல்லாமல் கமெண்ட்களில் கூட காமெடியை அள்ளித்தெளித்து கலக்கும் இவர்தான் என்னைப்பொறுத்தவரை நெம்பர் ஒன்.வலைச்சரம் ஆசிரியராகப்பொறுப்பேற்றதும் இவரது பன்முகத்திறமை வெளிப்பட்டது,தனது வாசிப்புத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தி புதிய பதிவர்களை அட்டகாசமாய் அறிமுகப்படுத்தி ஏகோபித்த ஆதரவைப்பெற்றார்,கமெண்ட்ஸ் வாங்குவதில் நாமெல்லாம் 10 ,   20 என்று தாளம் போடும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் பெற்று அதிலும் சாதனை புரிந்தார்.டயலாக் டெலிவரியில் கவுண்டமணியின் அவதாரமாக அனைவர் மனதிலும் நின்றவர்.தமிழ்மணம் டாப் 20 லிஸ்ட் வர ஆரம்பித்த பிறகு அதுவரை வாரம் ஒரு பதிவு போடும் பழக்கம் உள்ள பலரும் தினசரி  ஒரு பதிவு போட்ட போதும் தனது வழக்கப்படி வாரம் 3 பதிவு  என தொடர்பவர்.இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..


2. கே ஆர் பி செந்தில் - குமுதத்தில் வரும் பயோடேட்டா போல் இவரும் பயோடேட்டாவில் கலக்குபவர்.சமூக விழிப்புணர்வு கட்டுரையிலும் சரி ,கவிதையிலும்  சரி இவரது டச் உண்டு.அலாஸ்கா ரேங்க்கில் செம ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.எல்லோரிட்மும் நட்பு பாராட்டும் நல்ல மனிதர்.

3. சேட்டைக்காரன் - யார் மனதையும் புண்படுத்தாமல் காமெடி பண்ணுவது ரொம்ப கஷ்டம்,அந்த கஷ்டமான வேலையை ஈசியாக செய்து வருபவர்.பெரும் பாலும் குடிகாரர்களை மையமாக வைத்து நக்கலாக பதிவு போடுபவர்,அரசியல் நையாண்டியில் தேசியப்பார்வையும் உண்டு.எழுத்தில் ஆபாசம் துளி கூட கலக்காமல் கண்ணியமாக எழுதுபவர்.இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு.

4. பட்டாபட்டி - சென்னை பஷையில் இவரது திட்டுக்களைக்கேட்கவே ஒரு கூட்டம் உண்டு.இவரது பதிவுகள் செம காமெடி.குறிப்பாக காங்கிரஸை போட்டு தாக்குவார்.யாரைப்பற்றியும் ,எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்.தனது மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை கலக்கலாக எழுதுபவர்.

5.வந்தேமாதரம் சசி - பதிவுலகில் டெக்னிக்கலான மேட்டர்ஸை பதிவு போட்டே புகழ் பெற்றவர்.அலாஸ்கா ரேங்க்கில் முன்னணியில் இருப்பவர்.சினிமா விமர்சனம்,ஜனரஞ்சக பதிவுகள் போட்டு முன்னேறும் பதிவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர்.பதிவர்களுக்கு டெக்னிக்கலான சந்தேகம் எது வந்தாலும் தீர்த்து வைப்பவர்.

6. ம தி சுதா -  இலங்கைப்பதிவர்.இவரது பல கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. அவ்வப்போது ஜனரஞ்சகமாகவும் எழுதுவார்.டாஸ்போர்டு ஓப்பன் பண்ணி எப்போதும் ஆன்லைனில் இருப்பார்.சுடு சோறு எனக்கே வார்த்தை பிரபலம்.

7.கோமாளி செல்வா - மொக்கைப்பதிவுகள் போட்டே சக்கையாக முன்னேறுபவர்.வட எனக்கே வாசகம் பிரபலம்.வடைவங்கி என இவருக்கு இவரே பட்டம் குடுத்துக்கிட்டார் (யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக்கூடாதாம்).இவரது வயது ரொம்பக்குறைவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் கலக்கல்.

8.மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.

9 . சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் பதிவர்.இவர் வாங்கி வந்த வரம் அப்படி.ஆஃபீஸ் டைம்லயே அனைத்து பதிவுகளையும் டைப் செய்து,கமெண்ட்டும் போடும் ஒரே பதிவர்.மற்றவர்களை கலாய்ப்பதில் மன்னர்.யார் எந்த பதிவு போட்டாலும் அதில் போய் இந்த ஜோக் ஏற்கனவே 4 வருஷத்துகு முன்பே நான் எழுதிட்டேன் என காமெடி பண்ணுவார்.இவர் பணி புரியும் ஆஃபீஸ் இன்னும் இழுத்து மூடாமல் இருப்பது ஆச்சரியம்.

10 - நல்ல நேரம் சதீஷ் - டைட்டில் வைப்பதில் மன்னன்.எனக்கு பதிவுலக குரு.அரசியல் நையாண்டி,சட்டயர் காமெடி எழுத்துக்கள் இவரது பலம்.இவரது அலாஸ்கா ரேங்க் முன்னேற்றம் அபார வேகம்.சூப்பர் ஹிட் போஸ்ட் போட்டால் சர்வ சாதாரணமாக 3000 ஹிட்ஸ் அடிப்பவர்.ரஜினி ரசிகர் ,ஜோதிடர்

டிஸ்கி - 2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்

Monday, December 27, 2010

ஈரோடு - போராடு - ஹாட்ரிக் வெற்றியோடு

sonia-agarwal-wallpaper.jpg (564×834)
தொடர்ந்து மூன்று வாரங்களாக நெம்பர் ஒன் இடத்தில் என்னை வைத்த தமிழ்மணம் நிர்வாகம்,நண்பர்கள்,பதிவர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.தமிழ்மணம் டாப் 20 பட்டியல் அறிவுப்பு வந்த பிறகு வினவு,உண்மைத்தமிழன் ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து 2 முறை நெம்பர் ஒன் பிளேஸ் அடைந்துள்ளார்கள்.

எனவே 3வது வெற்றி பெற நான் போன வாரம் கடும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது.23 12 2010 அன்று ஹிட்ஸ் ரேட்டை வைத்து பார்க்கையில் டெரர் கும்மி,ராம்சாமி,கே ஆர் பி செந்தில்,ரமேஷ் ஆகியோர் முதல் 4 இடங்க்ளில் இருந்தனர்.நான் 7 வது இடத்தில் இருந்தேன்.சரியான நேரம் பார்த்து என் லேப்டாப்பில் தமிழ்மணம் ஃபாண்ட் வேலை செய்யவில்லை.சரக்கும் கைவசம் இல்லை.எனவே 2 மீள் பதிவுகள் போட்டு சமாளித்தேன்.

ராம்சாமியின் சிம்ரனோமேனியா சூப்பர்ஹிட் ஆகி கலக்கிக்கொண்டிருந்தது.அதே போல் டெரர் கும்மியின் பதிவுலக அப்பெண்கள்காவலன் பதிவு பிரம்மாண்ட வெற்றி அடைந்து பதிவுலகை கலக்கியது.இனி வரும் வாரங்களில் டெரர் கும்மி எல்லாருக்கும் டஃப் ஃபைட் குடுப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்..

வைகை டாப் 10க்குள் வந்துவிடுவார் என்று நான் வியாழன் அன்றே கணித்து அவரிடம் அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்தேன்.அவர் நம்பவில்லை.பார்ப்போம் என்றார்.அவரது காமெடி எழுத்துக்கள் வரும் காலங்களில்  இன்னும் பேசப்படும்.

பதிவுலகின் மும்மூர்த்திகள் என அழைக்கபடும் உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர் ஆகியோர் வைத்திருக்கும் ஹிட்ஸ் ரேட் அபாரமானது.ஆவ்ரேஜ் ஹிட்ஸ் தின்மும் 1700 சர்வசாதாரணமாக வும் அதிக பட்சம் 3000க்கும் குறையாமலும் உள்ளதை கவனிக்கிறேன்.அதையும் மீறி அவர்களை விட 3 மடங்கு ஹிட்ஸ் குறைவாகவும்,மொக்கைப்பதிவு போட்டும் எப்படி காலத்தினை  ஓட்டுகிறேன் என்பதை கணக்குபோட்டால் ஒரு உண்மை விளங்குகிறது.தமிழ்மணம் வழியாக வரும் ஹிட்ஸ் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.

இயக்குநர் கே பாக்கியராஜ் அவர்கள் அவரது வாசகர் நிகரன் என்பவரிடம் அவரை தொடர்பு கொள்ளச்சொல்லி தனது செல்ஃபோன் எண்ணை தந்திருக்கிறார்.மிக்க மகிழ்ச்சி.ஆனால் நான் ஏற்கனவே அவர் இயக்கிய சித்து பிளஸ் டூ படத்தின் விமர்சனத்தை
நெகட்டிவ்வாக எழுதி விட்டதால் தொடர்பு கொள்ள சங்கடப்பட்டு அவருக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினேன்.இதுவரை பதில் இல்லை.

நேற்று ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.ஏற்கனவே நான் சொன்னபடி பணீயின் காரணமாக செல்ல முடியவில்லை.வால்பையன்,கோவை டாக்டர் கந்தசாமி
உட்பட பலர் என்னை சந்திக்க ஆவலாய் இருந்ததை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.எனக்கும் அதே ஆவல்தான் .அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்.

கோபி நாகராஜசோழன் ,திருப்பூர் கார்த்தி,சேலம் வெங்கட்,கோவை அருண் நால்வரையும் சந்திக்க நான் ஆவலாய் இருந்தேன்.ஆனால் அவர்களால் வர இயலவில்லை

மாலை 6 மணிக்கு ஈரோடு பிருந்தாவன் பார்க்கில் நான்,நல்லநேரம் சதீஷ்,கோமாளி செல்வா,நண்டு நொரண்டு,சித்தோடு 007 சதீஷ் போன்றோர் சந்தித்தோம்.சங்கவியை தொடர்பு கொண்டபோது கிளம்பி விட்டதாக சொன்னார்.ஜாக்கிசேகரை ஃபோனில் அழைத்தோம்.அவர் ஃபோனை அட்டெண்ட் பண்ணலை.
 ஃபோட்டோவில்

இடம் இருந்து வலமாக  கோமாளி செல்வா, 007 சதிஷ்,நல்ல நேரம் சதீஷ்,நான் ,நண்டு நொரண்டு

சங்கவி பிறகு ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினார்,நான் வந்து சந்தித்தால் தனியாக மீட்டிங்க் போடறாங்க என சொல்லி விடுவார்கள் எனவே அதை தவிர்த்தேன்  என்றார். அவர்து முன் ஜாக்கிரதை உணர்வுக்கு ஒரு சபாஷ்.

ஈரோட்டில் போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.என் பிளாக்கை கவனிக்கவே எனக்கு தினமும் 1 மணீநேரம்தான் கிடைக்கிறது.எனவே யாரும் அப்படி நினைக்கத்தேவை இல்லை.
தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம்.ஆரோக்கியமான போட்டியில் வெற்றி தோல்விகளை பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.

டிஸ்கி 1 - லீவ் நாட்களில் நெட் பக்கம் வராதவர்களுக்கு


தென்மேற்குபருவக்காற்று - மண்மணம் மணக்கும் காதல் கதை-

சினிமா விமர்சனம்


டிஸ்கி 2 - 

அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்ச


டிஸ்கி 3 - 

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா விமர்சனம்