Showing posts with label சந்தானம். Show all posts
Showing posts with label சந்தானம். Show all posts

Tuesday, January 08, 2013

கண்ணா! ஜெயிலில் களி தின்ன ஆசையா? கே பாக்யராஜ் கேள்வி, போலீசில் புகார்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/25/Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg/220px-Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg 
நடிகர் சந்தானம், இயக்குனர் ராம.நாராயணனுடன் இணைந்து தயாரிக்கும் படம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா". இதில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கே.பாக்யராஜின் "இன்று போய் நாளை வா" படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கே.பாக்யராஜ் சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:



1981ம் வருடம் என்னால் உருவாக்கப்பட்ட மூலக்கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நான் நடித்து இயக்கிய படம் "இன்று போய் நாளை வா". மூன்று ஹீரோக்கள் ஒரு பெண்ணை காதலிக்க போட்டியிடும் கதை அம்சம் கொண்ட அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் நெகட்டிவ் உரிமை, திரையீடு உரிமையும் வேறு சிலரிடம் இருந்தாலும் இதன் கதை உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது. 




அதை நான் தமிழில் ரீமேக் செய்ய யாருக்கும் விற்கவில்லை. ஆனால் 99 வருட திரையீடு உரிமை பெற்றுள்ள ஓ.கே.பிலிம்ஸ் பி.வி.மணி கதை உரிமை தன்னிடம் உள்ளதாக கூறி தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமிக்கு அதனை விற்றுள்ளார். இதனை புஷ்பா கந்தசாமி என்னிடம் சொன்னபோது நான் இந்தக் கதையை என் மகனை வைத்து மீண்டும் தயாரிக்கப்போகிறேன். அதனால் கதை உரிமையாக யாருக்கும் தர மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் அவர் கதை உரிமை என்னிடம் இருப்பது தெரிந்தும் ஓகே பிலிம்ஸ் மணியிடமிருந்து வாங்கி அதனை ராம.நாராயணனுக்கு விற்றுள்ளார். ராமநாராயணன் தற்போது எனது கதையை நடிகர் சந்தானத்தை வைத்து "கன்னா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தை எடுத்து வருகிறார். 


http://gallery.oneindia.in/ph-big/2012/12/kanna-laddu-thinna-aasaiya_135521984215.jpg




கதை உரிமை என்னிடம் உள்ளது தெரிந்தும், ராமநாயராணன், புஷ்பாகந்தசாமி ஆகியோர் கூட்டு சதி செய்து எனது கதையை படம் எடுத்து வருகிறார்கள். கன்னா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை. இன்று போய் நாளை வா கதைதான் என்று படத்தின் ஹீரோ சந்தானமும், இன்னொரு  நடிகரும் பேட்டியில் கூறி உள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 



கதை என்னுடையது இல்லை என்றால் படத்தை போட்டுக் காட்ட சொன்னேன். அதையும் செய்யாமல் அவசர அவசரமாக திரையிட முயற்சித்து வருகிறார்கள். என் மகனின் எதிர்காலத்திற்காக நான் வைத்திருந்த கதையை இவர்கள் படம் எடுத்துவிட்டதால் எனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவர்கள் மீது 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கு தொடங்க உள்ளேன். எனவே போலி ஆவணங்கள் மூலம் எனது கதையை வைத்து எடுக்கப்பட்ட படத்தை நிறுத்தி வைத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.


 நன்றி - தினமலர் 


http://www.cinespot.net/gallery/d/978058-1/Kanna+Laddu+Thinna+Aasaiya+Movie+Photos+_9_.jpg

Monday, August 06, 2012

சந்தானத்தின் கவுண்ட்டர் பஞ்ச் காமெடி வசனங்கள் @ மிரட்டல்

http://newindianexpress.com/incoming/article582880.ece/ALTERNATES/w460/Mirattal-P-E.jpg


1. டேய், நாயே,  நீயே ஜெயில்ல இருந்துதானே வந்திருக்கே? என்னமோ ஜெர்மன்ல இருந்து வந்தா மாதிரி ஃபிலிம் காட்றே?


---------------


2.  ஹீரோ - ஐ ஆம் பப்லு


 நீ என்ன பராக் ஒபாமாவா?



----------------


3. சட்டையை கழட்டு.. ..

 --------

ஏய்.. நீ பொம்பளை.. உன்னை சொல்லலை.. நல்ல வேளை.. 




--------------------


4.  என்னடா சிரிப்பு.. ? 


 அண்ணா, கொட்டாவி விட்டேனுங்க./.



---------------


5. சாகடிக்கறவனுக்கு சாகற தைரியம் வேணும்னு சொல்லித்தரலை?




------------------


6. நீ ஏன் ரிசைன் பண்ணாம வந்துட்டே?

 இது என்ன கவர்மெண்ட் வேலையா? ரிசைன் பண்ண?



---------------------


7. அந்த தாதா அவரோட தங்கச்சிக்கு ஒருத்தன் விபூதி வெச்சு விட்டான்னு அவன் விரலையே வெட்டிட்டாராம்.. 


அய்யயோ.. அப்போ குங்குமம் வெச்சு விட்டா குடும்பத்தோட கொளுத்திடுவாரா?



----------------------


8. ஏன் எல்லாரும் அந்த கிழவன் கைல கிஸ் பண்றாங்க?

 நீ வேணா அவர் லிப்ல கிஸ் பண்ணீக்கோ, யார் வேணாம்னா?



------------------


9. இவன் ஆள் அசைய முடியாது, பேச முடியாது எல்லாம் ஓக்கே, சலங்கை ஒலி கமல் மாதிரி அபினயத்துல போட்டுக்குடுத்துட்டா?



-------------------


10. முன்னால எல்லாம் ஆள் செத்தா தந்தி அனுப்புவாங்க, ஆனா இப்போ.. 


 செத்தவனே போய் தகவல் சொல்லிடறானா?



------------------------



http://gallery.tamilkey.com/wp-content/themes/transcript_new/timthumb.php?src=http://gallery.tamilkey.com/wp-content/uploads/2012/07/Mirattal-Tamil-Movie-Latest-Stills-9.jpg&q=90&w=629&zc=1


11. இந்த மிஷின் ஈசியா ஒரே டைம்ல லட்ச ரூபாயை எண்ணும்.. 


 கள்ள நோட்டை கண்டு பிடிக்குமா?

 அது என்ன சி பிசி ஐடி ஆபீசரா?



-------------------------------


12.  இந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்க, வடை சுட்டுப்போட்டாக்கூட காக்கா வராது. 

 ஏன்?

 அப்டி காக்கா வந்தா அதை சுட்டு இவனுங்க சாப்டுறுவாங்களே?


----------------------


13.  சார், உங்களுக்கு என்ன வேணும்?


 3 பொண்ணுங்க, ஒரு ஆண்ட்டி./. \




------------------------


14. நம்ம கடை பேரை எதுக்கு பலூன்ல எழுதி மேலே பறக்க விட்டிருக்கே?


 பின்னே? பாறாங்கல்ல எழுதியா பறக்க விட முடியும்?



-----------------


15. இவன் பலூன் மேட்டரை வெச்சு பல்சர் பைக்கே வாங்கிடுவான் போல இருக்கே?



-----------------------


16. எனக்கு வரப்போற மனைவி கேத்ரீனா கைஃப் மாதிரி இருக்கனும்.. 


 என்னது? கேத்ரீனா கைஃப்பா? 

 பின்னே? பி வி சி பைப்பா?



--------------------------


17. கட்டுனா கைஃப் மாதிரி பொண்ணைத்தான் கட்டனும், நமக்குன்னு ஒயிஃப் வந்து மாட்டி இருக்கு பாரு நைஃப் ( KNIFE) மாதிரி



-------------------------


18. நீ தாதாவோட தங்கச்சியை பார்க்கறது அவனுக்கு தெரிஞ்சுது அவன் உன் தலையை வெட்டிடுவான்


 நிஜமாவா? 

 பின்னே பொய்யாவா? அவன் அவளோட தங்கச்சியோட உன்னைப்பார்த்தா எதை வெட்டுவான்னு சொல்லவே முடியாது



-------------------------


19.  ஆஹா, வாட் எ பாடி?

 ஏன்? இதுக்கு முன்னால பொம்பளை பாடியை ( பிரா) பார்த்ததே இல்லையா?



-------------------


20. அவ ஃபிஃப்டி கே ஜி தாஜ்மகால் மாதிரியே இருக்கா. 

 அவ அண்ணனை நீ பார்க்கலையே? திருமலை நாயக்கர் மகால் மாதிரியே இருப்பாங்க.. 



------------


http://img.bharatmovies.com/4204/mirattal-1.jpg


21. நான் மட்டும் உன் கூட சினிமாவுக்கு வர்ற மேட்டர் தெரிஞ்சுது? அவ்ளவ் தான் ஆ,மா, இவ்லவ் சீரியஸா நான் புலம்பிட்டு இருக்கேன், நீ என்ன பண்றே? 

 பார்த்தா தெரியலை? பாப்கார்ன் சாப்பிடறேன்



---------------


22. பின்னால உக்காந்திருக்கறவன் என்னை பார்த்து கேஸ் அப்டிங்கறான்.. கேஸ்னா என்ன அர்த்தம்?

 ஹி ஹி பிராஸ்டிடியூட்னு.. 


-----------------


23. வெறும் 1500 ரூபா தான் கைல இருக்கு.. 

 நான் வேணா என் பொண்டாட்டி கொலுசை அடமானம் வெச்சு  பணம் கொண்டாரவா?

 தொலைச்சுடுவேன்\


 இருக்கறதே 1500 ரூபா தான், அதையும் தொலைச்சுட்டா அப்புறம் செலவுக்கு என்ன செய்வே?



-----------------------



24.  ஆமா, நீ என்ன லவ்வர் கூடவா பேசறே? இப்படி குசுகுசுன்னு ஏன் பேசறே?



--------------------


25. அட, செம ஐடியாவா இருக்கே? எல்லா இங்கலீஷ் டி விடியையும் சுட்டுட்டியா?



-------------------


26.  என் தங்கச்சி பத்தி உனக்குத்தெரியாது


 எல்லாம் ஐ நோ. பாசமலர் 50%, தங்கைக்கோர் கீதம் 50 %




-----------------------


27. .........................


 கரெக்ட் சார்


 நான் எதுவும் சொல்லவே இல்லையே?


 நீங்க எது சொன்னாலும் கரெக்ட் தான் சார்.. 


-----------------------


28.  எங்கே இங்க்லீஷ்ல பேசு பார்ப்போம் 

 ஹலோ./. 




-------------------------


29.பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை  பார்த்ததும் பிடிக்கும்.


------------------------------


30. வாப்பா, உக்காரு

 பரவாயில்ல



அப்போ நான் நின்னுக்கிடவா?


அவ்வ்வ்வ்வ்




------------------
http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/07/Deeksha-Seth.jpg


31. உங்கப்பா குடிப்பாரா? 

 ஆஃப்  சைஸ் பாட்டில் அளவுக்கு இருந்துட்டு  ஃபுல் சைஸ் அளவுக்கு குடிப்பாரு. 




-------------------------


32.  தீபி.. 

 என் சாவுக்கு ஊதப்போறே பீ பீ



-----------------------


33.  சும்மா சீன் போடாம ஏதாவது  ஐடியா குடு



 ஐடியா வராததால தான் சீன் போடறேன்



-----------------


34. வில்லன் -  என் கொள்கை ஒண்ணே ஒண்ணுதான்.. சாவடி! முடியலைன்னா சாவு



---------------------


35.  உங்களுக்கு பி பி இருக்கு.. 


உன் கூட சேர்ந்ததால வந்துடுச்சு



------------------


36. உன் நடு விரலை பிடிச்சு கெஞ்சிக்கேட்டுக்கறேன்.. என்னை விட்டுடு


-----------------------


37. உன் கிட்டேதான் ஃபோன் இருக்கே? ஏன் அதுல இருந்து பண்ணலை?


 எனக்கு ஃபேமிலியும் இருக்கே? வில்லன் கண்டு பிடிச்சா என்னை மேஞ்சுடுவானே?




-----------------------


38.  ஆமா, நீ இப்போ ஃபேஸ் வாஷ் பண்ணுனியா?

 ம்ஹூம், பயத்துல வேர்த்திருக்கு



------------------------


39. சாந்தி முகூர்த்தத்துக்குத்தானே பூ பழம் , ஊது பத்தி எல்லாம் கொண்டு போவாங்க.?


 ஹூம் , பாடைக்கும் அதே தான்



--------------------


40.  உன் பேரு ஜேம்ஸ் கேமரூனா? ஏன் அந்த பேரு வெச்சாங்க?


 என் மம்மி  ஜுராசிக் பார்க் படம் பார்க்கறப்போ நான் பொறந்தேனாம்.


 அநேகமா ஏதாவது டிஸ்கவரி சேனல் பார்க்கறப்போ  பொறந்திருப்பேனு நினைக்கிறேன்



------------------------------


http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-cute-stills-in-churidar/mirattal_actress_sharmila_mandre_cute_in_churidar_stills_9826.jpg


41. காட்டிக்கொடுக்கறதுலயும் , கூட்டிக்கொடுக்கறதுலயும் நான் எக்ஸ்பர்ட்..


நாட்டுக்கு ரொம்ப தேவையான ஆள் தான் நீ


-----------------


42. நான் ஆல்ரெடி மேரீடு, என்ன விட்டுடு


ரெண்டாந்தடவை பண்ணி இருந்தா?

 நீ வந்து மொய் வைக்கப்போறியா?




---------------------------------


43. யார், இந்த பொண்ணு, செக் பண்ணாத சிலிண்டர் மாதிரி இருக்கு?



----------------


44. குழந்தை பொய் சொல்லாதுன்னு சொல்வாங்க, அந்தப்பொய்யே குழந்தையா பிறந்திருக்கே?



-------------------


45. இதென்ன? பிளாக் மார்க்கா?


 இல்லை, லக் மார்க்


------------------------------


46.  மாப்ளை நல்லா ஜோக் அடிக்கறார் இல்லை?

 ஓஹோ, சிரிச்சே ஆகனுமா?



----------------------

47. அது எப்படி ஒருத்தனை கெடுக்கனும்னா கேரியர்ல  சோறு கட்டிட்டு கிளம்பிடறீங்க?


-------------------

 48.  எல்லாரும் எஞ்சாய் பண்ணுங்க, என் தங்கச்சிக்கு வருஷம் ஒரு நாள் தானே பிறந்த நாள் வருது?

 மத்தவங்களுக்கு மட்டும் மாசாமாசம் வருதா?



-----------------------


49. அவன் ஒரு துரு பிடிச்ச பொடி டப்பா போல..

 ஓஹோ போற வர்றப்ப எல்லாம் தும்மிட்டே போவானா?



-------------------


50. வாங்க வாங்க.. எ;ல்லாரும் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தானே?

 உங்களுக்கு எப்டி தெரியும்? நீங்களும் அதே குட்டைல ஊறிட்டு இருந்தீங்களா?



---------------------------


http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-cute-stills-in-churidar/mirattal_actress_sharmila_mandre_cute_in_churidar_stills_1321.jpg


51. என்ன மோந்து பார்க்கறே? ராவா குடிக்கலாமா?ன்னு பிளானிங்கா?
.


நோ நோ ஒரிஜினல் சரக்கா?ன்னு செக்கிங்க்




------------------------


52. டம்மி பீஸ் இவன், 2 ரவுண்ட் தாண்ட மாட்டான்னு சொன்னாங்க. இப்படி அடிக்கறானே?


 என் கண்ட்ரோல்க்கு இண்ட்டர்வல் விட்டிருக்கேன்


--------------------------


53. உஷ்!! சத்தம் போடாம குடிங்க... 


டேய், நான் என்ன ஃபர்ஸ்ட் நைட்லயா குடிக்கறேன்?  -


---------------------

54.  யார்றா இவன்? கருணைக்கிழங்குக்கு தாடி வெச்சவனாட்டம்?



--------------


55. அவனை காமெடி பண்ண சொன்னீங்களா?


 ம்ஹூம்

 டான்ஸ் ஆடச்சொன்னீங்களா?

 ம்ஹூம், சகிக்காது



----------------------------


56.  அண்ணனுக்கு ஆப்பு ரெடியா? சாரி, சூப்பு ரெடியா?



-----------------


57. இந்த கரித்துண்டை அமெரிக்கா எடுத்துட்டு போ.. அங்கே போனதும், தமிழ் நாட்ல எல்லா பொண்ணுங்களுக்கும் மாப்ளை இருக்காங்க , சோ நோ படி  கம் டூ இந்தியான்னு எழுதி வைக்கறே.



----------------------------------



டிஸ்கி - மிரட்டல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

Thursday, August 02, 2012

மிரட்டல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvoG87S93G-4-RJhKwIa0IlAsb6AKsCmxb4dFJbSWJDAkrkXQApptGRBu6OZDpZtcpzy8q9l-vcQj4VusNhbUPFTdxyDgrCAQpO5q9AuuJHkeqsJoNGhfuaMiC4Oe6MaTrnKK3Hhk2H6JM/s640/Mirattal+Movie+First+Look+Posters+Wallpapers.jpg 

 ஒரே ஒரு ஊர்ல 2 கேவலமான தாதாங்க.. கஜினி வில்லன் ஒரு தாதா, கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சிப்போராட்டம் பிரபு.இன்னொரு தாதா .. வில்லனோட பையனை இவரு க்ளோஸ் பண்ணிடறாரு.. பழிக்குப்பழியா அப்பவே வில்லன் பிரபுவை போட்டிருந்தா மேட்டர் ஓவர்..  ஆனா படம் 2 ரீல் தானே வரும்? 14 ரீல் கொண்டார்றது எப்படி?


 அதனால அந்த வில்லன் சொல்றாரு.. பிரபு சீக்கிரமா சாகக்கூடாது.. அனுராதா அனுராதாவா சாரி அணு அணுவா துடிச்சு சாகனும்.. பிரபு தங்கையை கொலை பண்ணனும்னு சொல்றாரு.. 


 பிரபுவோட தங்கச்சி சிவனேன்னு லண்டன்ல படிச்சுட்டு இருக்கு,.. மண்டைல மசாலா இல்லாத கேனயன் கூட சொல்வான்.. பாப்பா அங்கே இருந்தாத்தான் பாதுகாப்புன்னு.. ஆனா அண்ணன் பிரபு லண்டன்ல இருந்தா பாதுகாப்புஇல்லை, நம்ம கூடவே இருக்கட்டும்னு இங்கே கூட்டிட்டு வந்துடறாரு.. 


  பிரபு கிட்டே அடியாளா  நம்ம ஹீரோ வினய் சேர்றாரு.. சின்னத்தம்பில குஷ்பூவை பிரபு கூட்டிட்டு போய் ஊரெல்லாம் சுத்திக்காட்டுன மாதிரி இவரும் அங்கே இங்கே கூட்டிட்டு போறாரு.. 2 பேருக்கும் லவ் ஆகிடுது.. அலை பாயுதே ஸ்டைல்ல மேரேஜும் பண்ணிக்கறாங்க.. ஆனா பிரபுக்கு அது தெரியாது.. 


ஒரே பங்களாவுக்குள்ளேயே மீதி கதை எப்படி நகருது? அந்த வில்லன் என்ன தான் செஞ்சான்? சந்தானம் மொக்கை எப்படி எல்லாம் போடறாரு.. இதான் மிச்ச மீதிக்கதை.. 



http://masscinema.in/wp-content/gallery/mirattal-movie-stills/mirattal-movie-stills-7.jpg

 படத்தோட முதல் ஹீரொ அஸ் யூசுவல் சந்தானம் தான்.. இவர் பேரே ஸாரி.. அதனால சாரி.. சொல்றதுக்கு ஏதும் இல்லை.. படத்துல மொத்தம் மொக்கை ஜோக்ஸ் 64 வருது.. 48 இவர் சொல்றாரு.. 13 இடத்துல தான்  ஆடியன்ஸ் சிரிக்கறாங்க.. மீதி ஜோக்குக்கு எல்லாம் இதெல்லாம் ஒரு ஜோக்கா அப்டினு நினைச்சு சிரிக்கறாங்க.. படம் பூரா பம்மிக்கிட்டே இருக்கும் சந்தானம் ஒரு சீனில் சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் சீன் கலக்கல் ரகம் .. 


ஒரிஜினல் ஹீரோ வினய்.. அண்ணன் முதல்ல நல்ல பல் டாக்டர்ட்ட போய் பல்லை க்ளீன் பண்ணனும்.. எல்லா பல்லும் காரை.. பான் பராக் பாலுன்னு நினைப்பு.. அதுல க்ளோசப் ஷாட் வேற உவ்வே,, இவர் வசனம் பேசும் ஸ்டைலை மாத்திக்கிட்டா நல்லாருக்கும்.. உன்னாலே உன்னாலே படத்துல இருந்த துள்ளல் இதுல மைனஸ்.. 


 ஹீரோயின் யாரோ ஷ்ர்மிளாவாம்.. மொக்கை ஃபிகர்.. இந்தபடத்தை முதல் ஷோ பார்த்த தமிழ்நாடு பூரா இருக்கும்  மூணு லட்சத்து இருபத்து மூவாயிரத்து நானூற்றி முப்பத்தி ஆறு  (3,23,436 )  ஆடியன்ஸ் கிட்டே கருத்து கேட்டாலும் சிங்கிள் மேனுக்கு கூட இது பிடிக்காத  பார்ட்டி.. படு மொக்கை பர்சனாலிட்டி.. இந்த லட்சணத்துல  இவர் லோ ஹிப் ல  வேற வந்து கடுப்பை ஏத்துறார்.. அதுல தொப்புள்ல தொங்கட்டான் வேற.. 


கேப்டன் பிரபாகரன்ல பட்டாசை கிளப்புன மன்சூர் அலிகான் இதுல டம்மி பீசா காமெடியனா கேவலப்படுத்தி இருக்காங்க.. தங்க பாலு, ஓ பி எஸ், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு  இருக்கு இவர் நடிப்பு.. 

ஆர் பாண்டிய ராஜன் 3 ஜோக் சொல்றார்.. ஒரே ஒரு காமெடி பண்றார்.. அவ்ளவ் தான்.. ஹீரோவுக்கு அப்பா.. 

 ஜெயா டி வி பாஸ்கி ( ஆனந்த விகடன் ஜோக் ரைட்டர்)  7 சீன்ல வர்றார்.. சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை.. 


கஞ்சா கறுப்பு காமெடிங்கற பேர்ல எப்பவும் போல் மொக்கை போடறார்.. 

http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-stills-in-mirattal/mirattal_heroine_sharmila_mandre_new_photos_stills_2277.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர்ல, டி வி விளம்பரத்துல எல்லாம் ஓக்கே ஓக்கே லெவல்க்கு இந்த படத்தோட ,மார்க்கெட்டிங்கை ஏத்தி விட்டது.. 



2. சந்தானம் காமெடியை நம்பி படத்தோட திரைக்கதையை அவரை சுத்தி நகர்ற மாதிரி அமைச்சது.. 


3. லண்டன் லொக்கேஷன் செலக்‌ஷன், ஒளிப்பதிவு..


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. கோடிக்கணக்குல சம்பாதிக்கும் தாதா வின் தங்கை ஒரு சினிமா தியேட்டர்ல தனியா போய் டிக்கெட் எடுக்க தெரியாதா? ஹீரோ கிட்டே போய் இந்த தியேட்டர்ல டிக்கெட் எடுத்துக்கொடு.. ரொம்ப ரேர்.. டிக்கெட் கிடைக்கறதுன்னு கெஞ்சுது.. ஓனருக்கு கிடைக்காத டிக்கெட் அவங்க கிட்டே வேலை செய்யறவனுக்கு கிடைக்குமா? 100 ரூப்பா டிக்கட்டுக்கு 200 ரூபாவை அள்ளி விட்டா டிக்கெட் தேடி வருது.. அது கூட அந்த டிக்கெட்டுக்கு தெரியாதா?



2. சாதாரண ஒரு தாதாவோட தங்கயை கொலை பண்ண  என்னமோ கவர்னர், ஜனாதிபதியை கொலை பண்ணப்போறது மாதிரி அந்த வில்லனின் கூலிப்படை ஆள்  டெல்ஸ்கோப் கன், ரைபிளோட சுத்துவதும் ஆதவன் படத்துல சூர்யா பண்ற மாதிரி சேஷ்டைகள் எல்லாம் செஞ்சு ஒண்ணும் பலிக்காம போவதும் நம்பவே முடியலை.. 


3.  லண்டன்ல இருக்கும் தங்கயை இங்கே வர வெச்சு , பின் அமெரிக்கால இருக்கற மாப்ளையையும் இங்கே வர வெச்சு 2 பேரையும் லண்டன் அனுப்ப திட்டம் போடும் லூஸ் பிரபு ஸ்ட்ரைட்டா லண்டன்ல இருந்து அமெரிக்கா அனுப்பி இருந்தா வேலை முடிஞ்சுதே?


4. கூலி ஆள் ரூம்ல யார் கிட்டேயோ ஃபோன்ல பேசறதை பார்த்த ரூம் மேட் “ யார் கிட்டே ஃபோன்ல பேசறெ?ன்ன்னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான்.. அதுக்குப்போய் அவனை கொலை பண்றதெல்லாம் ஓவர்/./ அவனுக்கு குடுத்த வேலை பிரபு தங்கையை கொலை பண்ண சொல்லி.. அதை விட்டுட்டு எவனை எவனையோ கொன்னுட்டு இருக்கான்..?


5.  ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயின் பைக்ல வந்து அநாமத்தா பைக்கை நடு ரோட்ல விட்டுட்டு லாரி பிடிச்சு போறாரு.. அவங்களை துரத்திட்டு வரும் கூலி ஆள் அவர் பைக் ரிப்பேர் ஆகி அதை விட்டுட்டு  லாரியை துரத்தி ஓடறார்.. ஹீரோ விட்டுட்டுப்போன பைக் சாவியோட அநாமத்தா அப்படியே நிக்குது.. அந்த கபோதிக்கு அது கூடவா தெரியாது? பைக்ல துரத்தாம  ஓடியே துரத்த ட்ரை  பண்றாரே, மனசுக்குள்ளே விஜய்னு நினப்பா?


6. வில்லன் குரூப் ஹீரோயினை அடைச்சு வெச்சுடுது.. செல் ஃபோன்  இருக்கா?ன்னு செக் பண்ண மாட்டாங்களா?  அதான் போகட்டும்.. ஒவ்வொரு ஏரியாவா மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணி  ஏரியா வை கண்டு பிடிக்கற ஐடியா இப்போ தான் தடையறத்தாக்க படத்துலயே வந்துச்சே


 http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/mirattal-02/wmarks/mirattal-0217.jpg




சி.பி கமெண்ட் - ஃபேமிலியோட பார்க்கற மாதிரி டீசண்ட்டா தான் படம் இருக்கு, ஆனா ஓவர் மொக்கை.. சிரிக்கலாம், ஆனா சிந்திக்கக்கூடாது..  சந்தானத்தின் மொக்கை காமெடி மெலோ டிராமாவுக்காக பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்..


எதிர்பார்க்கப்படும் ஆனந்த .விகடன் மார்க் - 40


  எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்



டைம்ஸ் ஆஃப் இண்டியா - 2  / 5


டெக்கான் கிரானிக்கல் - 5 / 10



 ஈரோடு அபிராமியில் ப்டம் பார்த்தேன்.



 டிஸ்கி - 1 டிஸ்கி - மதுபானக்கடை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 

 

 

 

 






சந்தனத்தின் மொக்கை காமெடி வசனங்கள் தனிப்பதிவாய் விரைவில்



http://masscinema.in/wp-content/gallery/mirattal-movie-stills/mirattal-movie-stills-36.jpg


Saturday, June 23, 2012

சந்தானம் கலக்கிய சகுனி காமெடி டிராக் வசனங்கள்

http://tamilmaxs.in/wp-content/gallery/saguni-movie-gallery-and-wallpapers/saguni_-movie_-gallery_-and_-wallpapers-3.jpg

1.  எங்கே போகனும்?

 ஒவ்வொரு ஒயின்ஷாப் ஒயின்ஷாப்பா போ.. 

 ஹூம், காலைலயேவா?



2. முதல்ல  ஒரு ஆஃப் சொல்லு.. 


 எனக்கு அந்த  பழக்கமே இல்லையே?


 ஹலோ, நான் ஆஃப் சொல்லச்சொன்னது எனக்கு... 



3. அண்ணே,, கோவிச்சுக்காதீங்க.. இதுவரை 2000 லிட்டர் சாராயம் குடிச்சிருப்பீங்க.. எப்போதான் என் வேலையை முடிச்சுத்தருவீங்க..?


4. கமல் சார்.. உங்க தம்பிங்க யாரு?

 ம்.. சாருஹாசன், சந்திர ஹாசன்


5. என்னடா.. ஹீரோ வந்து இவ்ளவ் நேரம் ஆகியும் லவ் போர்ஷன் ஓப்பன் ஆகலையேன்னு பார்த்தேன்..


6.. ஆமா, உனக்குதான் தெலுங்கே தெரியாதே.. எப்படி அவ சொன்னதுக்கு அர்த்தம் தெரிஞ்சது?


 அதுக்கு லேங்குவேஜ் தெரியனும்னு அவசியம் இல்லை, பாடி லேங்குவேஜ் சொல்லிடுமே?


7. மேடம், நீங்க கூட அடுத்தவன் ஒயிஃப் தான்.. விசாரணைங்கற பேர்ல இவ்ளவ் பக்கமா நிக்கறீங்க.. நான் ஏதாவது தப்பு செஞ்சேனா?


8. எங்க ஆச்சி எப்படி மீன் குழம்பு வைப்பாங்க தெரியுமா?

 கதைக்குள்ள கதையா? உஷ் அப்பா.. முடியல...... 


9. கடைசில அவ என்ன சொன்னா தெரியுமா? “ எல்லா பொண்ணுங்களுக்கும் உன்னை பிடிக்கும்.. அப்டினு,,,

 இது அவங்களா சொன்னதா? நீயா சும்மா பிட்டு சேர்த்துக்கிட்டியா?என் கிட்டேயே பில்டப்பா?


10.  ராஜேஷ்குமார் நாவல்ல கூட 2 வது பக்கத்துலயே ஹீரோயின் அறிமுகப்படுத்திடுவாரு.. நீ ஏண்டா இன்னும் டிலே பண்ணிட்டு இருக்கே?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguXUn6fC-3XVfS2PxqOZqDdrxdthe_62t0H3g98PmGTDA2A_sWtyh4HIB9EwB6i7odxIxRLx5gjvpGkLyMesllXoKy728nSKNt_jdQyK7-26q5-4w8kgDCHsSom9PuuM5Og91zjQ1H4DTC/s1600/Anushka_Hot_Saree_05.jpg


11. சின்னப்பையனா இருக்க சொல்ல,  சொல்லப்பட்ட கதைல தேவதை 3 கோடாலியை தனித்தனியா கொடுத்தப்போ வேணாம்னு சொன்ன விறகு வெட்டி மாதிரி அனுஷ்கா,  ஆண்ட்ரியா அப்டினு எல்லா ஃபிகர்சையும் மிஸ் பண்ணிட்டே போறியே.. எனி மெகா பிளான்..?


12.  டேய்.. அய்யய்யோ உன் ஆள் யார்னு சீக்கிரம் சொல்லித்தொலைடா.. என் ஆளா இருந்துடப்போகுது.. அதோ அதுவா?

 ச்சே ச்சே. அதை எல்லாம் மனுஷன் பார்ப்பானா?

 டேய்.. அது என் ஆளு.. 


13.கடசில  நீ சொன்ன பொண்ணு உன் சொந்த அத்தை பொண்ணுதானா?அதுக்கா இந்த பில்டப் கொடுத்தே.. 


14. லவ் பண்ற எல்லாரும் தாஜ்மகாலையே கிஃப்டா தர்றீங்களே.. ஒரு வள்ளுவர் கோட்டம், வண்டலூர் ஜூ இப்படி வித்தியாசமா ஏதாவது தரலாமே?


15. நல்ல வேளை.. உன் மாமியாருக்கு தாஜ்மகால் பொம்மை கொடுத்தே.. அல்வாவும் ,மல்லிகைப்பூவும் தர்லை.. 

 தந்திருந்தா?


 மாமியார் மாசம் ஆகி இருப்பாங்க .. போடாங்..... 



16. .கார் ஓட்டப்போறீயா? உன் ஆளை ஓட்டப்போறியா?



17. என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டதுக்கு அவ எதுவும் சொல்லலை.. சொல்லி இருந்தா ஆத்துல மீன் பிடிச்சிருப்பேன்.. 

 ம் சொல்லி இருந்தா மீனையாடா பிடிச்சிருப்பே..?


18.. அட போப்பா.. உனக்கு ஆண்ட்ரியா, அனுஷ்கா அப்டி ஏதேதோ பொண்ணுங்க செட் ஆகுது. ஆனா சொந்த அத்தை பொண்ணு செட் ஆக மாட்டெங்குதே?


இந்த அத்தை பொண்ணுங்களே இப்படித்தான் மச்சான் அதுப்பு காட்டுவாளுங்க ( அதுப்பு = அல்டாப்பு )


19. அவளுங்க எல்லாம் பசிக்கு சாப்பிடற ஆள்ங்க இல்லை, பந்தாவுக்கு சாப்பிடறவங்க.. நாம தான் இன்னும் பழசை எல்லாம் மறக்காம சாப்பிட்டுட்டு இருக்கோம்.. அவங்க பர்கர், பீட்சா அப்டினு அசத்திட்டு இருக்காங்க.. 


20.  அறிவு இருக்கறவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். ஆல் அறியாத வயசு.. நம்புப்பா..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmdidLJxx6_WcVIXMBAprin-Qx8qxNF2K7QbtR-Ji59MGYynCagvob8ZEvEzH7tnZcte7IJLrfdQbsETfzO-oiE8JQ-VHc__gWLEW9M-1hIxDec8we4_e_xNw5hDs4QmUDNMahuM-SAik/s1600/andriya+%252812%2529.jpg



21. பீச்சில் - குடைக்குள்ளே குடித்தனம் நடத்திட்டு இருக்கற அண்ணே.. டைம் சொல்லுங்க.. 


 என்ன இவ்ளவ் லேட் பண்றாரு.. ஜஸ்ட் டைம் தானே கேட்டோம்?

 அட இருப்பா.. அவர் முதல்ல தன் கை எங்கே இருக்குன்னு தேடி எடுக்கனும் இல்லை.. அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி?



22.  அது ஏன் எல்லாரும் யூரின் போக கரண்ட் கம்பத்துக்கு வந்துடறீங்க.. ?

பல்லவர் காலத்துல இருந்தே அது பழக்கம் ஆகிடுச்சு.. 

 சோழர் காலத்துல அது இல்லையே? ( ஆயிரத்தில் ஒருவன் )


23.  டேய்,.. அங்கே என்ன எழுதி  வெச்சிருக்கு?

 பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு எழுதி  வெச்சிருக்கு சார்.இது கூட படிக்கத்தெரியலயே.. போலீஸா எப்படி காலம் தள்ளறீங்க?. 

டேய்..  அப்புறம் என்ன இதுக்கோசரம் யூரின் போனிங்க.?


 பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு தானே  எழுதி  வெச்சிருக்கு ? நாங்க  தான் கவுரவமான ஆள்ங்க ஆச்சே?



24. அட.. நீயும், நானும் இங்கே ஒண்ணா ஒண்ணுக்குப்போனதால ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆகிட்டோமா?


25. டேய்.. ஒண்ணு சொல்றேன்.. உலகத்துலயே மூத்திரக்கேஸ்ல முன் ஜாமீன் கேட்டது நீ ஒருத்தன் தாண்டா..


26. கெட்ட நேரம் வந்தா ராஜா கூட தெருவுக்கு வந்தே தான் ஆகனும் ( என் காதுக்கு ஆ ராசாவுக்கு-ன்னு கேட்குது)


27. சேஞ்ச் இல்லை சேஞ்ச் இல்லைன்னு நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டே இருந்தேனே?

\
 டேய்.. உதை வாங்குவே.. சேஞ்ச் இல்லைங்கறது வேற, காசு இல்லைங்கறது வேற.. இரண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது.. 



28.  பிரச்சாரத்தை கோயில்ல இருந்து ஆரம்பின்னு சொன்னாங்க.. பசியைப்போக்கற இடம்தானே கோயில்.. அதுதான் இங்கே வந்தேன்.. 


29. உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே?

 இருக்காது சார்... நான் ஆட்டோ ஸ்டேண்ட்ல தான் எப்பவும் இருப்பேன்... அங்கே வேணா பார்த்திருப்பீங்க..


என்னது? ஆட்டோ ஸ்டேண்ட்டா?

 பின்னே கொசுவர்த்தி  ஸ்டேண்ட்டா? எதுக்கு இவ்ளவ் ஜெர்க்?


30. கட்சில தன்னைத்தவிர யாரும் சம்பாதிக்கக்கூடாதுன்னு நினைக்கற தலைவர்கள்ல நீங்களும் ஒருத்தர் தலைவரே..


ரொம்ப ஓவரா பேசறே.. வாக்கிங்க் போக முடியாது பார்த்துக்கோ..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDltRsPcyyALY-XPDSPN5eiFQkX9oSfUOgBk-0NV6yy99DRxVVmLVDLc3-ZY0bGoZ9h4-5JsG1-NVWYUYWnc-E6cEUZBySctzDw9u7jnsFHtWGiQsmsV03EeqYUWtQGEMcXplWMECd_Ota/s1600/Actress+Roja+hot+in+silk+saree+latest+stills+%252812%2529.jpg


31. ரமணிட்ட நான் வேணா வந்து பேசிப்பார்க்கவா?


அவர் என்ன பேச ஆள் இல்லாம உக்காந்து இருக்காரா?


32. அக்கா.. உங்க ஃபேஸ் பவர் ஃபுல் ஃபேஸ்க்கா.. 

 அவன் பாட்டுக்கு நம்மளை போட்டுக்குடுத்துட்டே இருக்கான்..  என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?


33. விரலை வெட்டுனாத்தாண்டா நீ அடங்குவே,, 

 என்னமோ பர்த் டே கேக்கை வெட்டற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீயே.. 


34. உன் பிரச்சனையே டிப்பர் லாரி அளவு இருக்கு.. நீ ஏன் ஊர்ப்பிரச்சனைக்கெல்லாம் போறே. ? போய் பொழப்பை பாரு.. 



35. பிரச்சனையை அவுக்கறதுல ஒரு சுவராஸ்யம்னா அவிழ்க்க முடியா முடிச்சை போடறதுல தனிசுவராஸ்யம்.. 


36. அடப்பாவிகளா? இப்படி அநியாயம் பண்றதுக்குப்பேருதான் பாலிடிக்ஸா? அதான் எங்க தலைவர் ரஜினி அரசியலுக்கு வர பயப்படறாரா?


37.  யார்யா இந்த பிச்சைக்காரன்?


 யோவ்.. அவர் சாமியார்யா


38. மனசு சரி இல்லைன்னா எல்லாரும் டாஸ்மாக் , அல்லது சாமியார் இருக்கற ஆசிரமம் தேடிப்போவாங்க.. என் கிட்டே  காசு இல்லை, அதனால இங்கே வந்தேன்.. 


39.  என்ன சாமி நீங்க.. நீங்க சொல்றது சரியா போய் ரீச் ஆகலையே?உங்க உபதேசத்தை இந்த கூட்டத்துல எத்த்னை பேரு கேட்பாங்க?

 100ல 2 பேர் கேட்டாக்கூட போதுமே?

 அதுதான் தப்பு .. நீங்க 100 பேருக்கு சொன்னா  அது 1000 பேருக்கு போய் சேரனும்.. அதுதான் மார்க்கெட்டிங்க்.. 


40. அம்மா.. எனக்கு டிரைவர் வேலை வேணும்,.. டிரைவர் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்.. 

 இதுக்கு முன்னால எங்கே கார் ஓட்டிட்டு இருந்தே?


 ரோட்ல..

 என்னது?


http://gallery.southdreamz.com/cache/actress/pranitha/exclusive-masala-stills/indian-glamour-actress-praneetha-hot-spicy-stills-13_720_southdreamz.jpg

  41.. உனக்கு வாய் ஜாஸ்தி மாதிரி தெரியுதே?

 என்னை மாதிரி ஆளை வெச்சாத்தான் உங்க பொண்ணுக்கு சேஃப்டி.. இல்லைன்னா வர்றவன் உங்க பொண்ணை ஓட்டிட்டு போயிடுவான்.. நான் காரை மட்டும் தான் ஓட்டுவேன்





42. சாமியாரை யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு சொன்னியே அந்த ஐட்யா உனக்கு எப்படி வந்துச்சு?


 இந்த பொண்ணுங்க எல்லாம் நாம போய் போய் பேசறப்போ கண்டுக்கவே மாட்டாளுக.. அப்போதான் எனக்கு இந்த ஐடியா உதயம் ஆச்சு.. 


43.. சாமி.. நான் சொல்றதை கேளுங்க.. ஒரு நாளுக்கு யாராவது ஒருத்தர் கூட மட்டும் பேசுங்க..  அப்போ எல்லாரும் நீங்க என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருப்பாங்க


44. அரசியல் ஒரு வியாபாரம் தான்..கோடி கோடியா நாங்க இங்கே கொட்டித்தான் இந்த இடத்துக்கு  வந்திருக்கோம்.. போட்ட காசை எடுக்க வேணாமா?


45.  இந்த சி எம் ப்ளெஸ்க்கு நான் ரிப்பன் கட் பண்ணி வர்லை.. பல தலைகளை கட் பண்ணி வந்திருக்கேன்.. 


46.  அறிவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?


47.  ஹாய்.. மச்சி.. என்ன ? ஜாலியா டீ சாப்பிடறே போல.. 

 அடேய்.. டீ சாப்பிடறதுல என்னடா ஜாலி.. ?


48.  நான் கண் அசைச்சா என்ன அர்த்தம்? காலை அசைச்சா என்ன அர்த்தம்? இன்னும் எதை எதை அசைச்சா என்ன அர்த்தம்னு டியூஷன் சொல்லித்தர்றேன்


49.  குடிக்கறதுக்கு உனக்கு ஒரு காரணம் வேணும்.. அவ்ளவ் தானே?


50. ஜெயில்ல இருக்கற என்னை ஜாமீன்ல எடுக்கவா வந்தே?

 பின்னே? ஜாக்கெட் பிட் எடுக்கவா வருவாங்க?



http://www.chitramala.in/photogallery/d/555740-1/praneetha-hot-stills.jpg


51. அய்யய்யோ.. தலைவர் ஜெயிலுக்குள்ளே வரப்போறாரா?

 பார்த்தியா? எப்படி ஃபீல் ஆகறான்னு..

 பொறு .. என்ன சொல்றான்கறதை கவனி.. 

 அவர் வெளியே இருந்தா எந்த தொந்தரவும் இல்லை.. உள்ளே வந்தா கண்டதை எழுதி படி படின்னு உயிரை வாங்குவார்.. 


52.  மத்தவங்க எப்படியோ அரசியல்ல இருக்கறவங்க ஆல் கரண்ட் மேட்டர் அத்துபடியா இருக்கனும்.. நீ என்னடான்னா கம்ப்யூட்டர் தெரியாது. அது தெரியாதுன்னு கதை சொல்லிட்டு இருக்கே.. 



53.கட்சியோட  மேல்மட்டக்குழுவே இவ்லவ் கேவலமா இருக்கே? கீழ்மட்டக்குழு எப்படி இருக்குமோ?


54. இந்த தேர்தல்ல பணமும், பிணமும் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்.. 



55. நீங்க ஒருத்தருக்கு குழி பறிச்சா  உங்க பின்னால ஒருத்தன் உங்களுக்கு குழி பறிச்சுட்டு இருப்பான்கறதை மறந்துடாதீங்க..


56. மக்களை முட்டாள்னு தயவு செஞ்சு நினைக்காதிங்க.  நீங்க தான் முட்டாள் ஆவீங்க.. அவங்களூக்கு யாரை எப்போ எங்கே உக்கார வைக்கனும்னு நல்லாத்தெரியும்.. 


57.. என்னய்யா சிரிப்பு இது? கைக்குழந்தை கக்கா போன மாதிரி?



 58. என் குடும்பத்தை தப்பா பேசுனாக்கூட பொறுத்துக்குவேன், ஆனா குடிகாரங்களைத்தப்பா பேசுனா மன்னிக்கவே மாட்டேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkU6OKI8G9h9qqNufSoOjicslPvSfeDYJxvpu-znDE9j61l825m7mL_EcuDAmyoXjBsRcFJka_LG82vGoIZ_hhnxWrbNaawvNPDDjy2CTewXIrQRTPntCoKxb3YwiK35pY2Rbf1PB9yVA/s640/1.jpga



டிஸ்கி - சகுனி திரை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/06/blog-post_477.html
 

Thursday, June 07, 2012

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதாபோல ஏன் முயற்சிக்கலை?-சந்தானம் பேட்டி @ விகடன்

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg 

1''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 

 
 ''ஏங்க... அவர் என்ன கொத்தவால் சாவடி மார்க்கெட்டா... இல்லை நான்என்ன கோயம்பேடு மார்க்கெட்டா? யாராலயும் யார் மார்க்கெட்டும் போகாதுங்க. சினிமா வுல யாரும் யாரையும் தீர்மானிக்க முடியாது. இப்ப நான் ஹிட்டடிச்சா அதுக்கு யாரெல் லாம், எதெல்லாம் காரணமோ... அதுவேதான் நான் சொதப்பினதுக்கு ஒரு வகையில கார ணமா இருக்கும். புல்லரம்பாக்கம் பிரதர், ஆமா... அவருக்கு எங்கே மார்க்கெட் போச்சு? அவர் இப்பவும் ஸ்க்ரீன்ல வந்தா... ஆடியன்ஸ் அலறுவாங்களே!''



2. ''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


'' 'ஓகே... ஓகே’ படத்துல ஊர்  உலகமே கேட்கிற மாதிரி சொல்லிட்டேனே... 'எந்த ஒயின்ஷாப்லயும் உங்க பிராண்ட் சில்லுனு கிடைக்குறதில்லை’னு. அதே பிராண்ட்தான் தோணி!''



3. ''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு. ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட்ஸ் சொல்லுங்களேன்?'

'
''ஹன்சிகா, தமன்னா எல்லாருமே செம க்யூட். அவங்க ஸ்பாட்ல என்ன வார்த்தை சொன்னாலும் நான் அதைரிப்பீட் அடிச் சுட்டே இருப்பேன். இப்படியே கலாய்ச்சுட்டே இருக்கும்போது கோபம் வந்து கண்டபடி திட்டுவாங்க. அதுல இருந்து நாலு வார்த்தை யைப் பிடிச்சு, படத்துல அந்த வார்த்தையை வெச்சு அவங்களையே கலாய்ப்போம். எப்படி நம்ம தொழில் ரகசியம்?


அவங்களுக்கு டயலாக் வருதோ இல்லையோ, ஆனா ஃபேஸ் எக்ஸ்பிரஷன் பயங்கரமா இருக்கும். 'அவர் வீட்ல இல்லை. வெளியே போயிருக்கார்’. இதுதான் டயலாக். ஆனா, 'அங்கே வீடே இல்லை. பல வருஷமா அங்க ஆள் நடமாட்டமே இல்லை’ங்கிற அளவுக்கு அதுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பாங்க. நாம புரிஞ்சு நடிக்கிறதைவிட, அவங்க புரியாம நடிக்கிறதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அதுதான் எல்லாருக்கும் ப்ளஸ் பாயின்ட்!''



3. ''இன்னமும் சின்னத் திரை நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?'

'
''பெருசு, சிறுசுங்கிறது எல்லாம் ஸ்க்ரீன் அளவுல மட்டும்தான். மத்தபடி ஃப்ரெண்ட்ஷிப் எப்பவும் டபுள் எக்செல் சைஸ்தான். 'லொள்ளு சபா டீம்’ எப்பவும் என்கூடத்தான் இருப்பாங்க. இருக்காங்க! சுவாமிநாதன், மனோகர்னு லொள்ளு சபா டீம்ல பலரும் என்கூட சினிமால நடிச்சுட்டுத்தான் இருக்காங்க. அடிக்கடி சந்திச்சு மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்குவோம். ஜீவா இப்ப 'மாப்பிள்ளை விநாயகர்’ங்கிற படத்துல ஹீரோ. அதுல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித் தா மச்சான்னு கேட்டான். அதுல நடிக்கிறேன். பாலாஜி அண்ணன், மாறன் அண்ணன்னு எங்க டீம் எல்லாருமே அடிக்கடி சந்திச்சுப்போம். பார்ட்டி, ஃபங்ஷன்னு வெளியே போனா, இவங்களோட போய் மொத்தமா கலாய்ச்சுக் கழுவிக் கழுவி ஊத்திட்டு வந்துருவேன்!''  




4  ''உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?''   


''ரெண்டுமே என் வாய்தான்!

சில நேரம் டைமிங்காப் பேசி ஸ்கோர் பண்ணிடுவேன். சில நேரம் ஓவராப் பேசி கோட்டை விட்டுருவேன். ஒரு டைரக்டர் நம்மகிட்ட வந்து, 'புதுமுகங்களை வெச்சுப் படம் பண்றோம். நீங்க நடிச்சா பப்ளிசிட்டிக்கு உதவியா இருக்கும்’னு என் கேரக்டர்பத்திச் சொன்னார். 'நல்ல விஷயமா இருக்கே... பண்ணிக் கொடுக்கலாம்’னு சம்மதிச்சேன்.

 சம்பளம் பேச தயாரிப்பாளர் வந்தார். லோ பட்ஜெட் படம், புதுமுகங்கள் எல்லாத்தையும் மனசுல வெச்சுக்கிட்டு என் வழக்கமான சம்பளத்தைவிட ரொம்பக் குறைச்சு சொன் னேன். அவர் அதுக்கே டென்ஷனாகி, 'என்ன சார் இவ்வளவு சம்பளம் கேட்கிறீங்க? சின்னப் படம் சார் இது’னு கொதிக்க ஆரம்பிச்சுட்டார். 'சின்னப் படம்னா எவ்ளோ... அரை மணி நேரம்தான் எடுக்குறீங்களா?’னு கலாய்ச்சுவிட்டுட்டேன். அவர் டென்ஷன் ஆகிக் கிளம்பிட்டார். இப்படித்தான் நம்ம வாய் எல்லாத்துக்கும் கவுன்டர் அடிக்கும்!''




5. ''உண்மையைச் சொல்லுங்க சந்தானம்... உங்களுக்குப் பிடிச்ச தேன்ன்ன் அடை, ஜாங்கிரி, ஜிலேபி... யாரு?'' 


''பேர் மட்டும் சொல்ல மாட்டேன் பரவாயில்லையா?


இப்படி நான் சொல்லிட்டா, இதுதான் நீங்க என்கிட்ட கேட்ட முதல் கேள்வியா இருக்கும். ஆனா, நான் கொடுக்கிற கடை சிப் பதிலா இருக்கும். அதோட என் வீட்டுல என்னை ஃபினிஷ் பண்ணிரு வாங்க!''



6. ''காதல்ல பல்பு வாங்கிய அனுபவம்?''   


''பாலிடெக்னிக் படிக்கும்போது ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதி, சாக் லேட் பின் பண்ணிக் கொடுத்தேன். அவ சாக்லேட்டை மட்டும் பிரிச்சுச் சாப்பிட்டுட்டு லெட்டரைத் திரும்பக் கொடுத்துட்டுப் போய்ட்டா. சரியான தீனிப் பண்டாரமா இருப்பா போலனு நெக்ஸ்ட் டைம் வெறும் லெட்டர் மட்டும் கொடுத்தேன். அதைப் படிச்சுட்டு இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுத்துட்டுப் போய்ட்டா.

 ரொம்ப அவமானமாயிருச்சு. முக்கா முக்கா மூணாவது டைமா தைரி யத்தை வரவெச்சு நேரடியாவே போய்சொல் லிட்டேன். என்னைப் பார்த்தா அவளுக்கு ரொம்பக் கேவலாமத் தோணியிருக்கணும் போல. பகபகனு சிரிச்சுட்டுப் போய்ட்டா. அப்படியே அவளை மறந்துட்டு, அடுத்த பொண்ணு மேல கான்சன்ட்ரேஷன் பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''



7. ''சந்தானம்... சிறு குறிப்பு வரைக?'' 


''சந்தானம் ஜாலியான பையன். எல் லாரையும் கலாய்ப்பேன். ரொம்ப சென்டி மென்ட் பார்ப்பேன். இருந்தாலும் நடுவில் எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போக முடியுமோ, அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போவேன். எவ்வளவு விட்டுக்கொடுத்தாலும் பிரச்னை தீரலை... ஒண்ணுமே பண்ண முடியாத சூழ்நிலைன்னா, வேற வழியே இல்லாம திரும்பவும் விட்டுக்கொடுத்திருவேன்.
நான் ஆறாவது படிச்சுட்டு இருக்கும்போது 'வாழ்க வளமுடன்’கிற அமைப்புல அப்பா என்னைச் சேர்த்துவிட்டுட்டார்.


 அதுல இருந்தே ஆன்மிக ஈடுபாடு அதிகமாயிருச்சு. கோயி லுக்கு ரொம்பப் போக மாட்டேன். ஆனா, சிவனைத் தினம் கும்பிடுவேன். இலவச இணைப்புகள்ல வர்ற ஆன்மிகப் புத்தகங் களை நீங்கள்லாம் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டீங்க. ஆனா, அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். ரமண மகரிஷி, புத்தர், வள்ளலார், பாபாஜினு பெரிய கலெக்ஷனே வெச்சிருக்கேன். ஆன்மிகப் புத்தகங்கள்ல படிக்கிறதையே நான் வேற மாதிரி படத்துல பயன்படுத்தியிருக்கேன்.


'ஆன்மாங்கிற பால், உடலுங்கிறது தண்ணீர். ஜீவாத்மாவோடு, இந்த பரமாத்மா எப்போ ஒண்ணுசேருதோ, அப்போ இந்த உடலை தண்ணீரைப் போலப் பிரிச்சு எடுக் கணும்’னு சொல்வாங்க. அதைத்தான் 'ஓகே ஓகே’ படத்துல குவார்ட்டர், தண்ணீர் பாக் கெட், யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ்வெச்சு, 'இது மீரா... இது நீ... இது நானு’ன்னு சொல் லிக் காமெடி பண்ணினேன்.


ஓவர் ஆலா... சந்தானம் ரொம்ப நல்லவன்ங்க!''



8. ''இயக்குநராகும் எண்ணம் இருக்கி றதா? அப்படி இயக்கினால் யார் உங்கள் ஹீரோ?'' 


''அப்படி ஒரு ஆசை இருக்குங்க. கால் ஷீட் கமிட்மென்ட் எல்லாம் முடிச்சிட்டு அதைப் பத்தி யோசிக்கணும். அப்போ யாருக்கு என் கதை பிடிக்குதோ, யார் கால்ஷீட் கொடுக்குறாங்களோ, அவங்களைவெச்சுப் படம் பண்ணுவேன். வெறுமனே சிரிச்சுட்டு மட்டும் போகாம, படம் முடிஞ்சதும் யோசிக்கிற மாதிரி காமெடி - சென்டிமென்ட் கலந்த ஒரு கதை வெச்சிருக்கேன். நான் படிச்ச ஆன்மிக விஷயங்களை காமெடி கோட்டிங்ல சொல்லுவேன்.

 நாமெல்லாம் வெளிநாட்டை ஆச்சர்யமாப் பார்க்கிறோம். ஆனா, நம்ம நாட்டுலயே எல்லா விஷயங்களும் இருக்குது. அங்கெல்லாம் 'எப்படி இருக்கீங்க?’னு கேட்டா, 'ஐ யம் ஃபைன்’னு சொல்வாங்க. அவங்க உடம்பையும் மனசையும் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. ஆனா, இங்கேதான் சோகமா இருந்தா 'மனசு சரியில்லை’னு சொல்லுவோம். டல்லா இருந்தா, 'உடம்புசரி இல்லை’னு சொல்லுவோம். இந்த மாதிரி யான தத்துவங்கள்லாம் நம்ம நாட்டுல மட்டும்தான் உண்டு. இப்படி நம்ம நாட்டுப் பெருமைகளை ஹைலைட் பண்ணி கதை சொல்லணும்!''



9. ''அதென்ன... நீங்கள் சொல்வதைக் கேட்கும், உங்களுக்கு செட் ஆகும்இயக்கு நர்களிடம் மட்டும்தான் நடிப்பேன் என்று ஏதேனும் பாலிசி வைத்திருக்கிறீர்களா?'' 


''டைரக்டர்-ஆர்ட்டிஸ்ட்டுங்கிற காம்பி னேஷன், சரக்கும் சோடாவும் மாதிரி. மிக்ஸிங் கரெக்டா இருக்கணும். இல்லாட்டி, வேற மாதிரி ஹேங் ஓவராகிடும். எனக்கு யாரெல்லாம் மிக்ஸிங் சரியா இருக்காங் களோ, அவங்களோட சேர்ந்து நிறைய படம் பண்றேன். அப்புறம் பெரிய இயக்குநர்கள் படங்கள்லயும் நடிச்சிட்டுதான் இருக்கேன். ஷங்கர் சார் படம் 'எந்திரன்’ பண்ணினேன். இப்ப அவர் விக்ரம் சாரை வெச்சுப் பண்ற  படத்துலயும் பண்றேன். கௌதம் மேனன் சாரின் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடிக்கிறேன். நீங்க சொல்றதுலாம் இவங்க படங்கள்ல செட் ஆகாது


 .
10. ''சமூக விஷயங்களையும் நகைச்சுவையில் கலந்து தந்த என்.எஸ்.கிருஷ்ணன்,  எம்.ஆர்.ராதாபோல நீங்க ஏன் முயற்சிக்கலை?'' 


 ''அதுதான் அவங்க பண்ணிட்டாங்களே நண்பா! நாம ஏதாவது புதுசா பண்ணுவோம்னுதான் வேற மாதிரி ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்!''




11. ''லொள்ளு சபாவுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?''   


''ரெண்டுமே லொள்ளுதான். என் சினிமா காமெடிகளை சேனல்ல பார்த்து ரசிக்கிறாங்கன்னா, லொள்ளு சபா காமெடிகளை இன்னமும் யூ-டியூப்ல பார்த்து ரசிக்கிறாங்க. மத்தபடி ரெண்டுக்கும் வேற பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனா, சினிமாங்கிறது எவர் க்ரீன். எதிர்கால ஜெனரேஷன் பார்த்து ரசிக்கிறது. 'டேய் என்னடா இது... அந்தக் காலத்துல சந்தானம் இவ்வளவு மொக்க போட்ருக்கான்’னு எதிர்காலத்துல யாரும் சொல்லிடக்கூடாதுங்கிறதால சினிமாவுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்றேன்!''



டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


Saturday, June 02, 2012

லேடீஸை அதிகம் கலாய்ப்பது ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்ப எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடி காலாகாலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?'' 


''அட! என்னங்க குரு... இப்படி கோக்குமாக்கா மாட்டிவிடுறீங்க? வெல்... இதுக்கு நான் என்ன சொல்ல? ஆங்... எனக்கு அப்புறம் வரப்போற காமெடியன்கள் பின்னிப் பெடலெடுத்தா, நம்ம காமெடி மொக்க தட்டிரும். வர்ற பார்ட்டிங்க கொஞ்சம் மொக்கையா இருந்தாங்கன்னா, நம்மளது அப்படியே தூக்கலா நிக்கும்... கிரேட் எஸ்கேப். அதனால, அடுத்த ஜெனரேஷனைப் பொறுத்துதான் நம்ம காமெடி ஜெனரேட்டரோட லைஃப் இருக்கு. அதனால, அதுவரைக்கும் வொர்ரி பண்ணிக்காம, இந்தத் தலை முறையைச் சிரிக்கவெச்சுட்டுப் போயிருவோமே.''




2. ''இப்போதைக்கு காமெடியில் உச்சக்கட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?'' 


 ''எனக்குத் தெரிஞ்சு வடிவேலு, விவேக் ரெண்டு பேருமே உச்சக்கட்ட கலைஞர்கள்தாங்ணா.''



3.  ''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?'' 


''அக்காவா, தங்கச்சியானு தெரியலை...  கோபத்துல எதுனா சாபம் கீபம் விட்ராதீங்க. அப்புறம் அடுத்த பிறவியில் கழுதையா பொறந்திரப்போறேன். 'சில சமயம்’னு சொல்றதைவிட, 'சில பெண்களை’ கமென்ட் அடிக்கிறேன்னு சொல்லலாம். படத்துல ஹீரோயின், அம்மானு நிறைய கேரக்டர்கள் இருப்பாங்க. அவங்க எல்லாரையும் மரியாதையாத்தான் பேசுவேன். கூட நடிக்கிற சில கேரக்டர்களை மட்டும்தான்  கலாய்ப்பேன்.


 அதை அந்த இடத்துல செஞ்சே ஆகணும். இல்லைன்னா, அது சாமி குத்தம் ஆகி, ஏவி.எம். ஸ்டுடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திருவாரு. அதையும் இயக்குநர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிறதாலதான் செய்றேனே தவிர, தனிப்பட்ட விருப்பம்லாம் கிடையாது. பெண்களை என் கண்களைப் போல மதிக்கிறவன்ங்க நான்!''



4. ''உங்கள் திரை வாழ்க்கைக்கு உதவியவர்களில் மறக்க முடியாதவர் யார்... ஏன்?'' 


''முதல்ல என் அம்மா. எனக்கு புத்தி தெரியாத வயசுலயே சின்னக் குழந்தையா இருக்கும்போது, டான்ஸ் எல்லாம் ஆடுவேன்னு சொல்வாங்க. ஏதாவது வேணும்னு அடம்பிடிச்சு அழுதிருப்பேன். அதை டான்ஸுனு நினைச்சுட்டாங்கனு நினைக்கிறேன். என்னை ஸ்கூல் ஆண்டு விழா டான்ஸ்ல சேர்த்துக்கணும்னு ரொம்ப கஷ்டப் பட்டு மிஸ்கிட்டல்லாம் சொன்னாங்க.


 அப்ப சூர்யானு ஒரு மிஸ்தான் எனக்கு ஸ்கூல்ல டான்ஸ் ஆட வாய்ப்பு தந்தாங்க. எப்படி ஆடணும்னு சொல்லியும் தந்தாங்க. டிராமா எழுதிக்கொடுத்து நடிக்கவெச்சாங்க. அடுத்து, சின்னத்திரைக்கு அதாவது, விஜய் டி.வி-யில் வாய்ப்பு வாங்கித் தந்த பாலாஜி, ராம்பாலா. என் டி.வி. ஷோக்களைப் பார்த்துட்டு, பெரிய திரைக்கு என்னை அழைச்சுட்டு வந்த சிம்பு. இவங்க எல்லாருமே என் வாழ்க்கையில முக்கியமானவங்க, மறக்க முடியாதவங்க.''



5. ''லொள்ளு சபா ஷூட்டிங் காமெடி ஏதாவது சொல்லுங்களேன்?'' 


''லொள்ளு சபாவுல எடுத்ததைவிட, நீங்க பார்த்ததைவிட, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த காமெடி அள்ளும். ஒரு தடவை மனோகருக்கு என்னை எதிர்த்துப் பேசுற மாதிரி ஒரு டயலாக். 'உன்னை எப்படி எல்லாம் உயிருக்குயிரா நான் வளர்த்தேன். எல்லாத்தையும் மறந்து என்னைத் தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டியே... ஏன்?’ இவ்ளோதான் டயலாக். எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும், அரை நாள் ரிகர்சல் பார்த்தும் அந்த டயலாக்கை அவர் பேசவே இல்லை. 'சரஸ்வதி சூலத்தை எடுத்து நாக்குல குத்தி னாக்கூட இவரால பேச முடியாது. 


அவருக்கு அவ்வளவு எல்லாம் வேணாம். டயலாக்கைக் கம்மி பண்ணுங்கப்பா’னு சொல்லிட்டார் டைரக்டர். 'உன்னை எப்படி எல்லாம் வளர்த் தேன், இருந்தாலும் தூக்கிப்போட்டுட்டீயே, ஏன்?’னு வசனத்தைக் குறைச்ச£ங்க. ஹூம்... அதுவும் வரலை. 'என்னை மதிக்காமத் தூக்கிப்போட்டுட்டீயே... ஏன்?’னு அதையும் கம்மி பண்ணினாங்க.


 முன்னாடியை விட ரொம்பத் திணற ஆரம்பிச்சுட்டார் மனுஷன். எல்லாரும் கொலவெறி ஆயிட் டோம். 'சரி விடு, வெறும் 'ஏன்?’னு மட்டும் கேக்கச் சொல்லு’னு சொல்லிட்டு டைரக்டர், 'ஆக்ஷன்’ சொன்னார். நான் திரும்பி நின்ன தும், 'ஏன்?’னு கேக்குறதுக்குப் பதிலா... 'எதுக்கு?’ன்னார் மனோகர். டைரக்டர் சேரைத் தூக்கி அடிச்சுட்டார். அவங்கவங்க கையில எதையெதை வெச்சிருந்தாங்களோ, அதாலயே அவரை அடிக்க வந்துட்டாங்க.


 'யோவ்... காலையில இருந்து ஏன்... ஏன்னு ஆயிரத் தெட்டு வாட்டி சொல்லியாச்சு. கடைசியில 'எதுக்கு?’னு கேக்குறியே... உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாய்யா?’னு நாள் முழுக்கப் பரேடு. இந்த மாதிரி நிறைய இருக்கு. அடுத்தடுத்த எபிசோடுல பார்ப் போம்.''



6. ''உங்கள் குரல் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டா... மைனஸ் பாயின்ட்டா?'' 


''கண்டிப்பா ப்ளஸ் பாயின்ட்தாங்க. வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்னு அப்போ சொல்வாங்க. ஆனா, இப்போலாம் வாய்ல ஆம்ப்ளிஃபயர் வெச்சு முக்குக்கு முக்கு லவுட் ஸ்பீக்கர் கட்டிக் கதறுனாத்தான், அந்தப் புள்ளைக்குக் குடிக்கத் தண்ணிகூடக் கிடைக்கும். அப்படி இருக்கு இப்போ டிரெண்ட். 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ல 'ஹாய் டியூட்’னு என் ஒரு போன் வாய்ஸுக்கே தியேட்டர்ல கிளாப்ஸ் அள்ளுச்சே தலைவா! 'வாய்ஸுக்கு கிளாப்ஸ் வர்றதை இப்பதான் பாக்குறோம்’னாங்க. அந்த அளவுக்கு என் வாய்ஸ் ரீச் ஆகியிருந்தா, அது ப்ளஸ்தானே சரவணன்?''




7. '' 'நண்பன்’ படத்தின் மூணு ஹீரோவில் ஒருத்தரா உங்களை நடிக்கக் கூப்பிட்டு இருந்தா, யாரோட ரோல் உங்க சாய்ஸ்?'' 


''ஜீவா கேரக்டர்! அந்தப் படத்தை இந்தியில பார்த்தப்பவும் சரி, இப்ப தமிழ்ல பார்த்தப்பவும் சரி, அந்த கேரக்டர்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சென்டிமென்ட் ப்ளஸ் காமெடி ரெண்டுமே கலகல காக்டெய்லா இருக்கும் அந்த கேரக்டர்!''




8.''உங்களுக்குப் பிடித்த தமிழ் காமெடி நடிகர்கள் யார் யார்?'' 


 ''நல்ல காமெடி சென்ஸ் உள்ள காமெடி நடிகர்கள் மத்த லாங்குவேஜைவிட தமிழ்லதான் அதிகம். அதனால, இவங்க யாரையும் ஸ்கிப் பண்ண முடியாது. பட், என்னையும் மதிச்சு நீங்க இந்தக் கேள்வி கேட்டுட்டீங்க... தங்கவேல் சார், கவுண்டமணி சார் காமெடி ரொம்பப் பிடிக்கும். அவங்க டயலாக் டெலிவரி, டைமிங் சென்ஸ் எல்லாம்... மக்கா சான்ஸே இல்ல! அதுலயும் 'கல்யாணப் பரிசு’ படத்துல தங்கவேலு சாரோட ஒவ்வொரு சேட்டையும் எக்ஸ்பிரஷனும்... எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறித் துரத்தினாக்கூட அவர்கிட்ட நெருங்க முடியாது!''




9.''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார்?''



''பிடிச்ச ஹீரோ... ரஜினி சார். பிடிச்ச ஹீரோயின்... சிம்ரன்.''



10. ''உங்கள் முன்னோடிகள்?'' 


''என் உறவினர்கள்தான். தெருவுல இருக்குற சித்தப்பா, பெரியப்பா, அண்ணன்னு என் முன்னோர்கள்தான் என் முன்னோடிகள். இவங்ககிட்ட இருந்துதான் நிறைய புதுப்புது வா£த்தைகள், கேரக்டர்களைப் பிடிச்சுருக்கேன் நான். 'அப்பாடக்கர்’னு சொன்னது என் மாமா ஒருத்தர்தான். ஒருமுறை ஒரு நாய் அவரைப் பார்த்து குறைச்சப்ப, அந்த நாயைப் பார்த்து அவர் கேட்டதுதான், 'நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா’ங்கிறது. இந்த மாதிரி புதுப்புது விஷயங்கள் எல்லாம் அவங்கள்ட்ட இருந்துதான் எடுப்பேன்.


 'என்னை என்ன அகாதுகானு நினைச்சியா?’னு நான் பேசினதுக்கூட அப்படித்தான். 'எப்பப் பார்த்தாலும் சித்தப்பாவைக் கூப்பிட்டு சபையில அசிங்கப்படுத்துறதையே வேலையா வெச்சிருக்கீங்களே, என்னை என்ன அகாதுகானு நினைச்சிங்களாடா?’னு ஒருவாட்டி மாமா சொன்னதை ஞாபகம் வெச்சு டயலாக் ஆக்கினேன். 'நம்ம தம்பியைப் பேட்டி எடுக்க வர்றாங்க. ரோடெல்லாம் ஒரே குப்பையா இருக்கே’னு மப்பு ஏத்திக்கிட்டு ரோட்டையே கூட்டினார் இன்னொரு சித்தப்பா. இவங்கள்லாம்தான் என் முன்னோர்கள்; முன்னோடிகள்.''


- அடுத்த வாரம் 


''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 


' ''அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 


''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ பஜனைக் கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங்களா?'' 


டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html

சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html
 



Thursday, May 31, 2012

லொள்ளு சபா - எந்திரன் பார்ட் 2 - ? சந்தானம் பேட்டி @ விகடன்

http://i.ytimg.com/vi/a5HXKnP52rA/0.jpg 


1. 'மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 


 
''கண்டிப்பா 'எந்திரன்’தான். அந்தப் படம் பார்த்த உடனே இதை வெச்சு எப்படி எல்லாம் லொள்ளு பண்ணலாம்னு சும்மா ஜாலியாப் பேசினோம். ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கிற கதை. அதனால நிறைய புதுப் புது ஐடியாஸ் கிடைச்சது. அப்படி ஒரு ஷோ பண்ணா, கண்டிப்பா எந்திரன் 2.0தான் எங்க சாய்ஸ்!''



2. ''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''நேற்று... இன்று... நாளைனு போட்டு 'காமெடியன்கள்’னு மட்டும் போடுங்க. அதுதான் ரொம்ப சரி!


சினிமாவுல வடிவேலு, சந்தானம், அப்படி இப்படினு பேர் மட்டும்தான் மாறும். ஆனா, காமெடியன்கள் வந்துட்டேதான் இருப்பாங்க. நாளைக்கு யார்னு நீங்கதான் முடிவு பண்ணணும். என்கிட்ட கேட்டா, எனக்கு மட்டும் என்ன ஆன்ஸர் பேப்பர் லீக் ஆகியிருக்குமா என்ன?''



3. ''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?'' 



''வேண்டாங்க... பெருசா சாதிச்ச சார்லி சாப்ளின் பட்டம் வெச்சுக்கிட்டாரா என்ன, லாரல்-ஹார்டி பட்டம் வெச்சுக்கிட்டாங்களா? மிஸ்டர் பீனுக்கு என்ன பட்டம் இருக்கு? சாதிச்ச யாருமே பட்டம் வெச்சுக்கலையே. அதனால, எனக்கும் பட்டம் வெச்சுக்கணும்னு ஆசை இல்லை. அப்போ நீ சாதிச்சுட்டியானு கோக்குமாக்காக் கேள்வி கேட்கக் கூடாது. அப்படிலாம் படத்துலதான் எங்களை நாங்களே டபாய்ச்சுக்குவோம்!''




4. '' 'இம்சை அரசன் 23ம் புலிகேசி’ இரண்டாம் பாகத்தில் நீங்கதான் ஹீரோவாமே... உண்மையா?'' 


''இதுவரைக்கும் எதுவும் உறுதி ஆகலை. பேசிட்டு இருக்கோம். எல்லாம் கூடி வந்தா பார்க்கலாம்!''  




5. ''குவார்ட்டர் இல்லாமல் உங்களால் சிரிக்கவைக்கவே முடியாதா?'' 


''எனக்கும் ஆசைதாங்க. ஆனா, 'குவார்ட்டர்’னு ஒரு டயலாக்கை ஆரம் பிச்சாதான் எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆடியன்ஸ் முகத்துல ஒரு சந்தோஷமும் மலர்ச்சியும் அந்த வார்த்தையைக் கேட்ட தும்தான் வருது. அட... காமெடி சீன் பிடிக்க டிஸ்கஸ் பண்றப்போ, அதைச் சொன்னாதான் கூட உட்கார்ந்திருக்குறவங்க முகத்துல ஒரு உற்சாகம் பொங்குது. அதனால 'புலி வால் பிடிச்ச கதையா, குவார்ட்டரை விட முடியலை. ஞாபகப்படுத்திட்டீங்க. அதனால, ஒரு குவார்ட்டர் காமெடி சொல்றேன்...


என் ஆபீஸ்ல ஒரு குவார்ட்டர் பார்ட்டி இருக்கார். அன்னைக்கு ஒரு பெரிய ட்ரீட். அவரையும் சாயங்காலம் ட்ரீட்டுக்குக் கூப் பிட்டு இருந்தோம். பார்ட்டிக்குப் போறதுக்கு முன்னாடி வார்ம்-அப் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கார். பவர்கட்டான நேரத்துல ஒரு கட்டிங்கைத் தேத்தி, ஃபிரிஜ்ல இருந்து தடவித் தடவி வாட்டர் பாக்கெட் எடுத்து மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு சத்தம் இல்லாம செட்டில் ஆகிட்டார்.


கரன்ட் வந்த பின்னாடி ஒரு நண்பர் வந்தார். அவருக்கு டீ போட்டுக் கொடுக்க ஃப்ரிஜ்ல பால் பாக்கெட் தேடுறோம். காணோம். அப்பத்தான் தெரிஞ்சது... 'வாட்டர் பாக்கெட்’னு நினைச்சு நம்ம தோஸ்த் பால் பாக்கெட்டை வெட்டி கட்டிங்ல மிக்ஸ் பண்ணியிருக்கார்னு. அவரை செம கலாய் கலாய்ச்சிட்டோம். நாங்க பார்ட்டி முடிஞ்சு வர்ற வரை அந்த கட்டிங் பார்ட்டி டாய்லெட்டைவிட்டு வெளியவே வரலை. சீதபேதி, வாந்தி பேதினு ஊர்ல இருக்குற அத்தனை பேதி யும் வந்து ஒரு காட்டு காட்டிருச்சு!''



6. ''தற்போதைய காமெடியன்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்?'' 


''இப்போ உள்ள காமெடியன்களில் எல்லாருமே எனக்கு நண்பேன்டாதான். யாரையும் குறிப்பா சொல்ல முடியாது. ஹாலிவுட் காமெடியன்களில் என் ஆல்டைம் ஃபேவரைட் மிஸ்டர் பீன்தான். சமீபத்தில் அவர் நடிச்ச ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரோட எக்ஸ்பிரஷன்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே அட்டகாச அட்ராக்ஷனா இருக்கும்!''

http://123tamilgallery.com/images/2010/09/telugu-actor-santanam-02.jpg



7. ''ஸ்கூல் நாடகங்களில் நடிச்ச காமெடி அனுபவம் சொல்லுங்களேன்?'' 


''நைன்த் படிக்கும்போது ஒரு நாடகம் போட்டோம். பூலோகத்துல இருந்து கிளம்பிப் போய் எமலோகத்துல இருக்குறவங்களை மாடர்னா மாத்துறதுதான் கான்செப்ட். எமன் வேஷம் போட்டவன் வேட்டி மாதிரி கட்டி, தலையில கிரீடம்லாம் வெச்சிருந்தான். அவன் உட்காரும்போது நான் சேரை இழுக்கணும். அவன் லேசா தடுமாறணும். அதை நான் ராங் டைமிங்ல பண்ணி சேரை முழுக்க இழுத்துட்டேன். அவன் விழுந்துட்டான்.


 தலைகுப்புற விழுந்த வேகத்துல, அவன் வேட்டி கிரீடத்துல சிக்கி, அவன் போட்டிருந்த ஓட்டை ஜட்டி அப்படியே எக்ஸ்போஸ் ஆகிருச்சு. நான் அவனுக்கு உதவி பண்றதா நினைச்சு, வேட்டியைக் கிரீடத்துல இருந்து பிடிச்சு உருவுறேன். மொத்த வேட்டியும் கையோட வந்திருச்சு. 'ஓட்டை ஜட்டி எமன்’னு எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவன் கிரீடத்தைத் தூக்கிப் போட்டுட்டு ஸ்டேஜ்லயே என்கூட மல்லுக்கட்ட ஆரம்பிச்சிட்டான். 'நான் என்ன பண்றது?’னு சமாளிச்சுப் பார்த்தேன். ஹூம்ம்... கோபம் குறையாமப் பல வருஷம் என்கூடப் பேசாமயே இருந்தான்!''



8. ''காமெடி நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?''   


''காமெடி நடிகர்கள் ஓட்டுப் போடலாம்தானே! அப்போ அவங்களுக்கும் அரசியலுக்கு வரத் தகுதி இருக்குதானே பிரதர்?! மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைச்சா, அவர் காமெடியனா இருந்தா என்ன... வில்லனா இருந்தா என்ன? ஆக்ச்சுவலி சினிமாவில் இருக்கும்போதே காமெடியன்ஸ் மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க!''



9. ''இந்தக் கேள்விக்கு மழுப்பாம, மறைக்காம பதில் சொல்லுங்க... நீங்க ஹீரோவா நடிக்கிற படத்துக்கு யாரை ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணுவீங்க?'' 


''சும்மாவே என்கூட நடிக்கிற எல்லா ஹீரோயின்களும்... 'வாங்க ஹீரோ சார்’னு கூப்பிட்டுக் கலாய்ப்பாங்க. இதுல நீங்க வேறயா? ஆனா, இதுவரை அவங்களே யாரும் 'நீங்க ஹீரோவா பண்ணப்போறீங்களா’னு கேட்டது இல்லை. அதனால, அவங்க யாரும் என் சாய்ஸ் இல்லை. என் ஆசைனு கேட்டா, கேத்ரீனா கைஃப்தான். ஆனா, அவங்க சம்மதமும் அதுல முக்கியம் இல்லையா? கேட்டுச் சொல்லுங்களேன்!''



10. ''விகடன் மேடையில் கராத்தே உடையில் உங்க போட்டோ பார்த்தேன். எத்தனை பெல்ட் வாங்கியிருக்கீங்க? எந்தக் கடையில் வாங்கு னீங்க?'' 


''நீங்க வாங்கின கடைக்குப் பக்கத்துக் கடையில வாங்கினேன்  நம்புங்க பிரதர்... கராத்தேல பிரவுன் பெல்ட் வரை வாங்கியிருக்கேன். இப்பவும் கராத்தே ஸ்டெப்லாம் ஞாபகம் இருக்கு. ரியல் லைஃப்ல ஒருத்தனைத் தூக்கிப் போட்டுலாம் மிதிச்சிருக்கேன். ஆனா, அப்போ கராத்தே கை கொடுக்கலைங்க. நாம பொறுமையா அந்த ஸ்டெப் போட்டுத் தாக்கறதுக்குள்ள நம்மளை அடிச்சுட்டுப் போயிருவாங்க.


 பழக்கதோஷத்துல நாம 'ஹோஸ்’னு குனிஞ்சு மரியாதை பண்ணும்போது, அவனுங்க பொக்குனு குத்திருவானுங்க. தெருச் சண்டை வேற விஷயம். இப்போ ரீசன்ட்டாகூட ஒருத்தன் குடிச்சிட்டு ரோட்டுல ஒரு பொண்ணைப் போட்டு அடிச்சுட்டு இருந்தான். வண்டியை நிறுத்தி சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கலை. நானும் ஃப்ரெண்டும் சேர்ந்து நாலு அப்பு அப்புனோம். அப்புறம்தான் அடங்குனான்.


 அப்பப்போ பசங்ககூட ஜாலியா ரெஸ்லிங் விளையாடுவேன். யார் முதுகு முதல்ல கீழ படுதோ அவங்க அவுட். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பார்ட்டிங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விளையாடினப்ப, விரல்ல லேசா எலும்பு முறிஞ்சிருச்சு. ஆனா, நிச்சயம் கராத்தே கத்துக்கிறது நம்ம தன்னம்பிக்கையைத் தாராளமா வளர்க்கும். உடல் வலுவைக் கூட்டுற விஷயம். அதுக்காகவே அதைக் கத்துக்கலாம்!''



11. ''உங்களுக்குப் பெண் ரசிகைகள் அதிகமா... ஆண் ரசிகர்கள் அதிகமா?''


''இப்போ சென்சஸ் எடுத்துட்டு இருக்காங்களே.... அவங்ககிட்ட சொல்லி அப்படியே இந்தக் கேள்விக்கும் பதில் வாங்கிருவோமா? என்ன பாஸ் இது விளையாடிக்கிட்டு இருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேருமே சமமாத்தான் இருக்காங்க. ஆனா, பசங்க பரவாயில்லை. தியேட்டர்ல விசிலடிச்சோ, கலாய்ச்சோ விட்ருவாங்க. நம்ம நம்பருக்கு ஒரு தடவை கூப்பிட்டு அதை நாம எடுக்கலைன்னா, கோபப்பட்டுவிட்ருவாங்க.


 ஆனா, சில பெண் ரசிகைகள் கால் பண்ணுவாங்க. எடுக்கலைன்னா, 'என்ன சார், கால் அட்டெண்ட் பண்ண மாட்டீங்களா?’னு ஒரு மெசேஜ் வரும். அதுக்கு ரிப்ளை பண்ண மாட்டேன். கொஞ்ச நேரத்துல 'நீ என்ன அவ்ளோ பிஸியா?’னு கோச்சுப்பாங்க. அப்புறம் 'போடா வெண்ணெ’னு ரொம்பக் கோபமா அனுப்புவாங்க. நான் எதுக்கும் ரிப்ளை பண்ண மாட்டேன். எல்லா ரசிகர்கள்கிட்டவும் பேசணும்னு ஆசைதான். ஆனா, எவ்ளோ பேர்கிட்ட பேச முடியும்?''


- அடுத்த வாரம் 


http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/592235_156557197698928_2040420322_n.jpg


''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 


''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு... ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட் சொல்லுங்களேன்? 


டிஸ்கி - 1
- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html