Showing posts with label கலைஞர் டி வி. Show all posts
Showing posts with label கலைஞர் டி வி. Show all posts

Monday, September 12, 2011

நாளைய இயக்குநர் - கே பாக்யராஜ் ஜட்ஜ்மெண்ட்டில் - விமர்சனம்

http://www.extramirchi.com/wp-content/uploads/2007/12/bhagyaraj.JPG

இத்தனை நாளா ஹாய் மதன், பிரதாப் போத்தன் இருவரது தீர்ப்புகளை பார்த்துட்டு கே பாக்யராஜ், சுந்தர் சி காம்பினேஷன் பார்க்க ரொம்பவே மாற்றங்கள். அனைத்தும் வரவேற்கத்தக்க மாற்றங்கள்...  இருவரும் அலட்டிக்கொள்வதே இல்லை.. போட்டியாளர்கள் அவர்களை விட 3 மடங்கு வயது குறைந்தவர்களாக இருந்தபோதும் சார் என மரியாதையாகவே அழைக்கிறார்கள். நிறைகளை முதலில் பாராட்டி விட்டு ,குறைகளை மயிலிறகில் வருடுவது போல் சொல்கிறார்கள். சபாஷ்..!!

கீர்த்திப்பாப்பா இன்னைக்கு பிளாக் கலர் நைட்டி மாதிரி ஒரு டிரஸ் போட்டு வந்தாங்க. எத்தனையோ பேரை அறிமுகப்படுத்துன கே பி யை ஜட்ஜா இவர் அறிமுகப்படுத்துறதா சொன்னது செம தமாஷ்.

நானும் ஒரு ஸ்டூடண்ட்டா இந்த புரோகிராம்ல நிறைய கத்துக்கனும்கற ஆர்வத்துல வந்திருக்கேன்னு கே பாக்யராஜ் சொன்னாரு. 

1. சீனிவாசன் - செல்வி. 

 ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட் ரெட் லைட் ஏரியா போறான். அந்த பொண்ணு படிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சு  அவளை டீச்சரா ஏத்துக்கறான். பல டைம் மீட் பண்ணி படிச்சு எக்சாம்ல  பாஸ் ஆகிடறான். நன்றி சொல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு வர்றப்ப போலீஸ் ரெய்டுல அவளை கூட்டிட்டு போகுது. ஒரு முழுமையான நிறைவைத்தராத படம்னாலும் வசனங்கள் செம ஷார்ப்.


மனம் தொட்ட வசனங்கள்

1.  வந்து. வந்து. எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம். 

இன்னைக்கு மட்டும் ஃபர்ஸ்ட்டா? இதுவரைக்குமே இதான் ஃபர்ஸ்ட்டா? ( சபாஷ் சிக்ஸர்)

2.  படிச்சிருக்கற நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தே?


ஏன்? நீ கூடத்தான் படிச்சிருக்கே? இங்கே வர்லையா? ( பளார் பளார்)



3. வேணாம், போகாதீங்க.. நீங்க போய்ட்டாலும் எப்படியும் இன்னொருத்தனை அனுப்பத்தான் போறாங்க.  ( நாயகன் வசனம் பை சரண்யா உல்டா?)

4. என்னை பார்க்க வந்த பலர் என்னை யூஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க, என்னை கோயிலுக்கு கூட்டிட்டு வந்த முத ஆள் நீங்க தான்./.

கே பி  கமெண்ட் - கத்தில நடக்கற மாதிரி கதை. பொதுவா இந்த மாதிரி கதையை யாரும் எடுக்க யோசிப்பாங்க, பசி படத்துல துரை, அவளும் பெண்தானே,அரங்கேற்றம்ல பாலச்சந்தர் சார் எடுத்தாங்க.. குறும்படம் எடுக்கற நீங்க இதை எடுக்க வந்தது துணிச்சல் தான்.

சுந்தர் சி -  கேமரா ஒர்க் நீட்.  ரீ ரெக்கார்டிங்க் எங்கெங்கே எவ்வளவு தேவையோ அதை மட்டும் யூஸ் பண்ணி இருக்கீங்க.. பல இடங்கள் சைலண்ட்.. சபாஷ்..

http://3.bp.blogspot.com/-48Mp_h8_8hU/ThbnvyiDz9I/AAAAAAAACho/wEk0fdKnGUc/s1600/monica-sun-tv-093-766789.jpg


2. பிரசாந்த் - நைஜீரியன் காதல்

காமெடியான கதை.. ஒரு 60 மார்க் ஃபிகர்.. நைஜீரியன் ஆளை ரோட்ல பார்க்குது..  பார்த்ததுமே லவ். அவனையே ஃபாலோ பண்ணுது.. ஃபிகரோட ஸ்கூட்டி அடிக்கடி ரிப்பேர் ஆகும்போது அண்ணன் தான் ஸ்டார்ட் பண்ணித்தர்றான்..  ( அதுக்காக  3 டைம் ஒரே மாதிரி ஸ்டார்ட் சீன் வெச்சது ஓவர்..)கடைசில பார்த்தா க்ளைமாக்ஸ்ல அவன் படு லோக்கலான தமிழ் பாஷை பேசறான்.. ஃபிகர் நொந்து நூடுல்ஸ் ஆகி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மனம் தொட்ட வசனங்கள்

1.  வண்டிக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள். லவ் ஸ்டார்ட் ஆகிடுத்து ..


2. என் ஹார்ட் பீட்  லவுடு ஸ்பீக்கர் போட்டது போல் ஏன் சத்தம் போடுது?

3. நைஜீரியன் காதல்னு நினைச்சேன், ஆனா கடைசில லோக்கல் நீலாங்கரை லவ் ஆகிடுச்சே?

கதை கொஞ்சம் சில்லித்தனமா எனக்கு தோணுச்சு,, காமெடின்னாலும் காதலை காமெடி பீஸ் ஆக்குவதை காதலர்கள் விரும்ப மாட்டார்கள்..


கே பி  கமெண்ட் - இது ஒரு எவர் க்ரீன் ஃபார்முலா. ஆனா ஒரு பொண்ணு இவ்ளவ் ஜொள்ளு விடுமா? டவுட்டு.  படம் ரொம்ப்ப சிம்ப்பிள் & நீட்..

சுந்தர் சி கமெண்ட் - ஓ ஹென்றி, சுஜாதா,புதுமைப்பித்தன் இவங்க எல்லாம் அவங்க சிறுகதைல கடைசில ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க.. அது மாதிரி ட்ரை பண்ணீ இருக்கீங்க.. படத்தோட க்ளைமாக்ஸ்ல நைஜீரியன் சாங்க் வெச்சது சூப்பர்.. நைஜீரியனா நடிச்ச அந்தாள் நடிப்பு செம..

http://www.faltooclub.com/Biography/Bigimage/kanika62011.jpg

3. நந்தா - உயிர்

ஒரு பழைய பைக், அதை வித்துடுங்கன்னு மனைவி சொல்றா.. கணவன் ஓக்கே சொல்லி மெக்கானிக் ஷாப்ல அதை காட்டி ரேட் கேக்கறான்.. 2 நாள் கழிச்சு வாங்கன்னு அவன் சொன்னதால பைக் ரிட்டர்ன் பேக் டூ த சேம் ஹவுஸ்..

அவங்க பாப்பா வீதில விளையாடப்போகுது.. அப்போ பஸ் ஒண்ணு வருது. பைக் வீட்டு வாசல்ல இருந்து  கிளம்பி பஸ்ஸூக்கு முன்னே விழுந்து பாப்பாவை காப்பாத்துது.. அதுக்கும் உயிர் இருக்குன்னு ஒரு ஃபீலிங்க் காட்றாங்க.. ( ஃபிலிம் காட்றாங்க? )

அப்புறம் அந்த பைக்கை சாமியா நினைச்சு கும்பிடறாங்க.

சத்தியமா நம்பவே முடியல..

கே பி  கமெண்ட் - பைக் ஸ்டேண்ட் லூஸா இருந்துச்சு.. தானா ரிலீஸ் ஆகி ரோட்டுக்கு வந்துடுச்சுன்னு காட்டி இருக்கலாம்.. இன்னும் நம்பகத்தன்மை வந்திருக்கும்.. பொல்லாதவன் படத்துல கூட இந்த மாதிரி ஒரு சீன் வருது,, தனுஷை துப்பாக்கிக்குண்டுல இருந்து பைக் காப்பாத்தும்./.

சுந்தர் சி கமெண்ட் - பழைய பைக் மாதிரி கதைல சொல்றாங்க. ஆனா அது புது பைக் மாதிரிதான் தெரியுது.. இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/namitha-latest-hot-photos/Namitha-latest-sexy-photo-45.jpg

4. நிகிலன். - புதிர். 

ஒரு குறும்படத்துல இவ்வளவு டேலண்ட்டை காட்ட முடியுமா? என திரைக்கதையில், மேக்கிங்க் ஸ்டைலில் கலக்கிய படம்.  ஒரு பைக் ஆக்சிடெண்ட்ல ஒரு பொண்ணுக்கு அடிபடுது.. அவ கிட்டே இருந்து ஒருத்தன் செல் ஃபோனை அடிச்சுக்கிட்டு ஓடறான். அவன் எப்படி போலீஸ்ல பிடிபடறான்.. அப்டிங்கறதை பல திருப்பங்களோட சொல்லி இருக்காங்க.

ஓப்பனிங்க் சீன்ல என்ன சீன் வருதோ அதுவே க்ளைமாக்ஸ்ல வேற கோணத்துல காட்டி இருப்பாங்க..

இந்த இயக்குநர்க்கு செம  எதிர்காலம் உண்டு.. கங்க்ராட்ஸ்.. இவரோட ஸ்கிரிப்டை யாராவது திருடுனாக்கூட இவரைத்தவிர யாராலும் அதை புரிஞ்சுக்க முடியாது.



கே பி  கமெண்ட் - ஆங்கிலத்துல இர்ரிவர்சிபிள்னு ஒரு படம் வந்தது.. அதே போல் ட்ரை பண்ணி இருக்கீங்க. ரொம்ப வித்தியாசம்.. கீப் இட் அப்.

சுந்தர் சி - பக்கா ஸ்க்ரீன்ப்ளே வெரி டிஃப்ரண்ட்.. நைஸ்..

 லிங்க் -
http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-39/
 

Monday, September 05, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - விமர்சனம்

போனவாரமே வந்திருக்கவேண்டியது..3 கதைகள்ல 2 கதை தான் பார்க்க முடிஞ்சது. ஒண்ணு பெண்டிங்க். இப்போதான் லிங்க் கிடைச்சது.. 9 கதைகள்ல 6 கதைகள் தலா 3 வீதம் கடந்த 2 வாரமா பார்த்தாச்சு.. இது கடைசி வாரம்..

1.  ரமேஷ் - பரிதி மாறன்

நாய்ங்களை வெச்சு கதைன்னதும் நான் கூட ராமநாராயணன் டைப் கதையோன்னு பயந்தேன்.. ஒரு கிராமம், அதுல 2 குழந்தைகள் கொண்ட ஒரு தம்பதி 2 நாய்க்குட்டிகளை வளர்க்கறாங்க.. தன் குழந்தை போலவே பாசமா வளர்க்கறாங்க.. பெரியவன், சின்னவன்ன்னு பேர் வெச்சு கூப்பிடறாங்க..

ஊர்ப்பெரிய மனிதர் உங்க கிட்டே தான் 2 நாய் இருக்கே? ஒண்ணை எனக்கு குடுங்கன்னு கேட்கறார்.. மறுத்துப்பேச முடியாத நிலையில் , தன் குடும்பத்தில் அனைவர் எதிர்ப்பையும் மீறி ஒரு நாயை தானம் செய்கிறார்... ஆனால் அது அடுத்த நாளே இவர்களிடம் ஓடி வந்துடுது.. பெரிய மனிதர் அதை பார்த்துட்டு சினிமா வில்லன் மாதிரி வசனம் எல்லாம் பேசாம ஓக்கே இனி உங்க கிட்டேயே வளரட்டும்கறார். 

ஊர்க்காவல் காக்கறப்ப அந்த நாய்களை ஒரு ஓநாய் கடிச்சுடுது ( இந்த சீனை ஆள வந்தான் ல மணீசாகொய்ராலா கார்ட்டூன் சீன் மாதிரி எடுத்து சமாளிஃபிகேஷன்.)


ஆனா நோய்வாய்ப்பட்டு  அதுல சின்ன நாய் இறந்துடுது..பெரிய நாய் சோகமா சின்ன நாய் புதைக்கப்பட்ட இடத்தையே சுத்தி சுத்தி வருது. ஊர் மக்கள் இப்போ பெரிய நாயையும் கொன்னுட சொல்றாங்க.. அதுக்கும் நோய் தொத்தி இருக்கு..

தன் கையால கொல்ல மனம் வராத குடும்ப தலைவன் காட்ல சில ஆளுங்க கிட்ட  அதை ஒப்படைச்சு கொன்னுடுங்க அப்டீங்கறான்.. அவங்க கிட்டே இருந்து நாய் தப்பிடுது..

வீட்டுக்கு வந்தா மனைவி கடுப்பா கேக்கறா.. நம்ம குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போயிருந்தா இப்படித்தான் பண்ணி இருப்பீங்களா? நாம் நாய் மாதிரியா அதை வளர்த்தோம்? குழந்தை மாதிரி தானே வளர்த்தோம்..?கறா..

அப்போ கரெக்டா நாய் அங்கே வந்துடுது.. ஒரு பார்வை பார்க்குது.. குற்ற உணர்ச்சியில் பொங்கி அவன் மன்னிப்பு கேட்கறான்.. ஆனா நாய் அதை ஏத்துக்கலை.. அவனை ஒரு எகத்தாளமா, சோகமா பார்த்துட்டு வேற பக்கம் கிளம்பிடுது..

பல நுட்பமான உணர்வுகளை படம் தூண்டி விட்டது.. நிதர்சனமா என்ன நடக்கும், மனித மனம் சுய நலமா சிந்திக்கும் என்பதை எல்லாம் பிரமாதமா சொல்லி இருக்காங்க.. பலே!!!!!!!!!!!!





2.  ராஜ்குமார் - கறை (ரை?)

நாட்டு நடப்பு வெச்சு அரசியல் நையாண்டி செஞ்சிருக்காரு இயக்குநர். படம் செம கல கல . தீப்பொறி ஆறுமுகத்தைத்தான் நக்கல் அடிச்சிருக்காருன்னு நினைக்கறேன்.


எல்க்‌ஷன் டைம்.. ஹீரோ ஒரு பேச்சாளன்.. ஒவ்வொரு எலக்‌ஷன்லயும் ஏதோ ஒரு கட்சி சார்பா பேசுவான் மேடைல.. யார் முதல்ல புக் பண்றாங்களோ அவங்க கட்சி சார்பா.. .. பணம் கை நீட்டி வாங்கிட்டா அவன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூச்சமே இல்லாம எதிர்க்கட்சியை பொளந்து கட்டுவான்..


அவனை ஒரு கட்சிக்காரர் அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிடறார்.. வீட்டுக்கு அட்வான்ஸோட வந்தா மனைவி எதிர்க்கட்சி ஆள்கிட்டே அட்வான்ஸ் வாங்கி இருக்கா..

வாங்குன அட்வான்ஸை திருப்பி கொடுக்க போனா அவர் ஏத்துக்கலை...

இப்போ என்னடா பண்றதுன்னு முழிக்கறப்ப ஒரு குட் நியூஸ். 2 கட்சியும் இணைஞ்சிடுது.. அப்பாடா.. நிம்மதி..

 டாக்டர் ராம்தாஸ், திருமா, குருமா மாதிரி பச்சோந்திகளுக்கெல்லாம் சரியான செருப்படி..  அதை ஆவேசமா சொல்லாம மைல்டான காமெடியா சொல்லி இருக்கார்.


மனம் கவர்ந்த வசனங்கள்

1. முக்கால் மீட்டர் துணியை பொணத்து மேல போர்த்திட்டு  300 ஓட்டை அநாசியமாய்  அள்ளிடலாம்னு பார்க்கறீங்களா? விடுவமா?

2.  அடேய்.. அவன் 10 வருஷமா எங்க கட்சில தான் இருந்தான்.

அதெல்லாம் கணக்கில்லை.. சாகறதுக்கு கடைசி ஒரு வருஷம் எங்க கட்சில தான் இருந்தான்... எங்களுக்குத்தான் அவன் (!!) சொந்தம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCd1WmKZRR05JwH5P0NHfWZE6qO8QnU9zlPWYSvC2Taz9BsUaALqhhVH6fRvWcGPX0KiMlDqGDNYxYPGhHA8l6a_5pHqoWYyJ9VBzdEvXmqz-DwNWb34Xhm44pT_9HtF3sNdH38zjDp-I/s1600/nadodi+mannan.jpg


3. அருண்குமார் - நாடோடி மன்னன் 

 50 வயதான ஒரு தம்பதியின் அந்நியோன்யமான அன்பு தான் கதை.. காதல் என்பதும் அன்பு என்பதும்  வயதான பின்னும் தொடரும்கற அழகான கருத்தை  ஒரு கவிதை போல சொல்லி இருக்காரு.. இயக்குநர்... தம்பதிகளின் நடிப்பு டாப் கிளாஸ்..

லோ க்ளாஸ் ஜோடி.. அவங்களுக்கிடையே மலரும் அன்பு ஹை க்ளாஸ்..  அவளோட பிறந்த நாள் அன்னைக்கு நாடோடி மன்னன் படம் போலாம்னு பிளான். ஆனா அவன் அன்னைக்குன்னு பார்த்து லேட்டா வர்றான். அதனால செகண்ட் ஷோ போறாங்க..

என்ன ஒரு டிரா பேக்... ஏதோ புரொஜக்டர் ஃபால்ட்டால அன்னைக்கு செகண்ட் ஷோ கேன்சல்னு சொல்லிடறாங்க.. உடனே கணவன் முகம் வாடிடுது.. மனைவியின் கல்யாண நாள் ஆசையை நிறைவேத்த முடியலையேன்னு சோகம். உடனே மனைவி சமாளிக்கறா.. இதுவா முக்கியம்..? உங்க கையால
பூ வாங்கிக்குடுங்க.. அது தான் செம கிக்  என்கிறாள்.. பூ வாங்கி வைத்து விடுகிறான்.


இப்போ ஸ்பீக்கர் ஒலிக்கிறது.. ஆபரேட்டிங்க் மிதின் சரி ஆகி விட்டது, படம் ஓடப்போகிறது என அறிவிப்பு வருகிறது.. இருவர் முகத்திலும் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே?

கடைசில கேமரா நாடோடி மன்னன் போஸ்டர்ல  வந்து நிக்க எம் ஜி ஆரின் புன்னகையோடு படம்  முடியுது..

http://awardakodukkaranga.files.wordpress.com/2009/09/nadodi_mannan.jpg

 முதல் படம்  ஜட்ஜ்ங்களை ரொம்பவே கவர்ந்தது..... அரசியல் நையாண்டி என்பதாலும் காமெடி எனக்குப்பிடிக்கும் என்பதாலும் 2வது படம் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தது.

ஆனால் 3 வது படம்  அனைத்துப்பெண்களையும், மென்மையான மனம் கொண்டவர்கள், அன்புக்கு ஏங்குபவர்கள், காதலர்கள், முன்னாள் காதல் தோல்வியாளர்கள் என பலரைக்கவரும் வாய்ப்புக்கள் உள்ள படம்.


டிஸ்கி - நமது நண்பர்  திருமலை கந்த சாமி அவர்கள் நாளைய இயக்குநர் குறும்படங்கள் காண லிங்க் கொடுத்து உதவினார், அவருக்கு நன்றிகள்....

  http://tamil.techsatish.net/file/naalaiya-5/

Thursday, August 18, 2011

கனிமொழி சவால் ‍‍ நான் ஸ்டேட்மெண்ட் கொடுத்தா எல்லாருக்கும் செட்டில்மெண்ட் தான்

நான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது!

கம்பிகளுக்குள் கர்ஜிக்கும் கனிமொழி


100-வது நாள் நெருங்குகிறது. 'குற்றச் சதிக்கு உடந்தை’ எனச் சொல்லி, கடந்த மே மாதம் 21-ம் தேதி ஸ்பெக்ட்ரம் வழக்கில் வளைக்கப்பட்ட கனிமொழிக்கு இன்று வரை பெயில் கிடைக்கவில்லை.

சி பி  - அப்பா கிட்டே இருந்து உயிலும் வரலை, கோர்ட்டிலிருந்து பெயிலும் தரலை.

தந்தையின் தவிப்பு, தாயின் போராட்டம், கணவரின் கையறு நிலை எனக் கம்பிகளுக்குப் பின்னால்  கனிமொழியின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த பாசப் போராட்டம் ஒருபுறம் என்றால், கட்சியில் அவருக்கான இடம் என்ன என்கிற போராட்டத்துக்கும் குறைவு இல்லை.


 சி.பி‍‍‍ ‍‍: கணவர்தான் கைவிட்டுட்டார்னா...., 


பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளைக்கூட தன்னைச் சுற்றி அனுமதிக்காத கனிமொழி, 15-க்கு 10 என்கிற சிறு அறைக்குள் இத்தனை நாட்களைக் கடந்ததே பெரிய ஆச்சர்யம். கனிமொழி அடைக்கப்பட்டு உள்ள 8-ம் எண் அறையில், ஏ.சி. வசதி இல்லை. மூன்று பக்கமும் சுவர், முகப்பில் கம்பி வலை என்பதால் எப்போதும் அந்த அறை புழுக்கமாக இருக்கும். ஒற்றைக் காற்றாடி... அதில் இருந்து காற்று வருகிறதோ இல்லையோ... கடுமையான சத்தம் வருகிறதாம். புத்தகம் படிப்பதற்கு அந்தச் சத்தம் மிகுந்த இடைஞ்சலாக இருப்பதால், காற்றாடியைப் பெரும்பாலான நேரங்களில் கனிமொழி பயன்படுத்துவது இல்லை.

 சி.பி‍: நாட்டுக்காக போராடுன தியாகி சிறையில் ரொம்ப சிரமப்படுறாங்க! உப்பை தின்னவன் தண்ணிக்குடிக்கனும், தப்பை செஞ்சவன் களி சாப்பிடனும்.







இரவு 11 மணிக்குத் தூங்கி, காலை 5.30 மணிக்கு எழுவது வழக்கம். சில நாட்களில் மட்டும் இரவு 1 மணி வரை வாசிப்பு, எழுத்து எனக் கழிகிறதாம். மிக முக்கிய ஆட்களுக்கு இதர கைதிகளால் பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க போலீஸார் நியமிக்கப்படுவது திகாரின் வழக்கம். கனிமொழிக்கு 24 மணி நேரமும் இந்த கண்காணிப்புத் தொடர்கிறது.

 சி.பி: கனிமொழிக்கு இருக்குற கண்கானிப்பு அவங்க பாதுப்புக்காக இருக்குற மாதிரி தெரியலை. ஜெயிலுக்குள்ள அவங்களுக்கு "வேண்டியப்பட்டவங்க" யாரையும் போய் பார்த்துடக் கூடாதுனுதான் போல இருக்கு.


பக்கத்து அறைகளில் இருக்கும் பெண் கைதிகளிடம் பேச, கனிமொழிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் சிக்கிய உளவு அதிகாரி மாதுரி குப்தா, கனிமொழிக்குப் பக்கத்து அறையில்தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். அதற்குப் பக்கத்து அறையில் டெல்லி கவுன்சிலரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா என்ற பெண்.


சி.பி ‍ - அடடா!! கொள்ளைக்கார குற்றவாளியை சுற்றி கொலைகாரக் குற்றவாளிகள்!!!! 

திகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கனிமொழியுடன் பேச அவ்வளவு ஆர்வம். கனிமொழியிடம் கோரிக்கை மனு கொடுத்து கண்ணைக் கசக்கி இருக்கிறார் ஒரு பெண். இதனாலேயே, அடிக்கடி இந்தப் பெண் கைதிகளோடு உரையாடுவதும், அவர்கள் மேற்கொள்ளும் சுய தொழில் பயிற்சிகளைச் செய்து  பார்ப்பதும் கனிமொழியின் பொழுதுபோக்கு!


சி.பி : அப்பாவுக்கும் ,பிள்ளைக்கும் இருக்கற தமிழ் ஆர்வம் புல்லரிக்க வைக்குதே?

ஜெயிலுக்கு வந்த புதிதில், மூன்று வேளையுமே வெளியே இருந்து வந்த உணவுகளையே சாப்பிட்ட கனிமொழி, இப்போது வெளி உணவுகளைப் பெரும்பா லும் தவிர்த்துவிடுகிறார். இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடும் வழக்கம்கொண்டவர் கனிமொழி. ஆனால், மாலை 6 மணிக்கே இரவு உணவை ஜெயிலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனாலேயே பல நாட்கள் இரவு உணவை கட் செய்துவிடுகிறார் கனிமொழி. ஆ.ராசாவின் மனைவி மூலமாக ஸ்பெஷல் சாப்பாடு எப்போதாவது வருகிறது. துணி மணிகள் சரத்தின் சகோதரி மூலமாக கனிக்குக் கிடைக்கிறது.


சி.பி ‍ : ஸ்பெஷல் மீல்ஸ் ஃப்ரம் ஸ்பெசல் பர்சன்

டெல்லியில் இப்போதுதான் மழை சீஸன் தொடங்குகிறது. அதனால், அந்த அறைக்குள் அநியாயப் புழுக்கம் நிலவுகிறதாம். ஆனால், அதிகாலையில் கடுமையாகக் குளிர் அடிக்கிறதாம். இந்த சூழல் மாற்றமும் கொசுக் கடியும் கனிமொழியைப் படுத்தி எடுப்பதாகச் சொல்கிறார்கள்.


சி.பி ‍: எத்தனையோ இலங்கைத்தமிழர்கள் வாழ்வு புழுக்கத்தில் இருக்க காரணமாக இருந்த குடும்பத்தில் இருந்தவர் இப்போது செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கிறார், இதுல வருத்தப்பட என்ன இருக்கு?  


கோர்ட் விசாரணை நடக்கும் நாட்களில்தான் கனிமொழியின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிகிறதாம். திகாரில் இருந்து பாட்டியாலா வரும் வழியில் டிராஃபிக் நெருக்கடி அதிகம் இருப்பதால், குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸார்தான் கனிமொழியை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களோடு மிகுந்த உற்சாகமாகப் பேசிச் சிரித்தபடி கோர்ட்டுக்கு வரும் கனிமொழி, அங்கே காத்திருக்கும் உறவினர்களைப் பார்த்ததும் உற்சாகமாகிறார். பல நாட்கள் டெல்லியிலேயேதங்கி இருந்த கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மாள், உடல் நலக் கோளாறால் சென்னைக்குத் திரும்பிவிட்டார். தி.மு.க- வின் மகளிர் அணி நிர்வாகிகளும் எம்.பி-க் களும்தான் அடிக்கடி கனிமொழியைச் சந்தித்து ஆறுதல் சொல்கிறார்கள். பாட்டியாலா கோர்ட் அறைகளில் முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருப்பதால், விசாரணை இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா என ஏக்கமோடு பார்ப்பார்களாம் கனி உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் புள்ளிகள்.

 சி.பி ‍: ஸ்பெக்ட்ரம் புள்ளிகளா? கரும் புள்ளிகளா?

ஆரம்பத்தில் கருணாநிதி தொடங்கி சகோதரி செல்வி வரையிலான அத்தனை சொந்தங்களும் டெல்லிக்கு வந்து கனிமொழியைச் சந்தித்தார்கள்; கட்டித் தழுவிக் கதறினார்கள். ஆனால், இப்போது மனைவி காந்தியுடன் டெல்லியிலேயே இருக்கும் அழகிரிகூட, கனிமொழியைக் காணச் செல்லவில்லை.


சி.பி ‍: யாரெல்லாம் கனிமொழியை சந்திக்கறாங்களோ, அவங்களை எல்லாம் நோட் பண்ணி வை, அவங்களையும் உள்ளெ தள்ளிடலாம்னு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்ததோ என்னவோ? 


'கட்சி நினைத்திருந்தால், நிச்சயம் என்னைக் காப்பாற்றி இருக்கலாம்’ என ஆரம்பத்தில் ஆதங்கப்பட்ட கனிமொழி, இப்போது தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அது குறித்துப் பேசுவதே இல்லை.


 சி.பி ‍: கட்சியையே காப்பாற்ற முடியாம கிடக்கு, இதுல கட்சி எப்படிம்மா உங்களை காப்பாற்றும்?நீச்சல் தெரியாதவன் முழுகிட்டு இருக்கறப்ப  அவன் அவனையே காப்பாத்த முடியாது, அவன் மற்றவர்களை காப்பாற்றுவான்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?


மாறாக, தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறார். தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி இழுபறி, அதிரடிக் கைதுகள்பற்றி எல்லாம் பேசி, 'அம்மையார் ஆட்சியில் இதெல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்’ எனச் சிரிக்கிறார்.

சி.பி ‍: தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறாரா? அதாவது நாட்டு மக்கள் எப்படி இருக்காங்கன்னு எல்லாம் கேட்டிருக்க மாட்டார்,, கோவை பொதுக்கொழுவுல என்ன முடிவாச்சு? ஸ்டாலின் , அழகிரி 2 பேர்ல யார் இப்போ லீடிங்க.. அப்டி விசாரிச்சிருப்பாரு.. நாம எந்தக்காலத்துல மக்களை நினைச்சு கவலைப்பட்டோம்?




''பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தபோதுதான் கனிமொழியைப் பார்த்தேன். ஆதங்கம், வேதனை, குற்றச்சாட்டு என அவரிடம் இருந்து சிறு வார்த்தைகூடப் புலம்பலாக வெளிப்படவில்லை. சில விஷயங்கள் குறித்துப் பேசியபோது, சத்தம்போட்டுச் சிரித்தார். 2ஜி விவகாரம் குறித்துக் கேட்டபோது, 'கலைஞர் டி.வி-க்காக 200 கோடி வாங்கப்பட்டதுபற்றி எனக்கு அறவே தெரியாது. அதுபற்றி எல்லாம் நான் சொன்னால், இப்போ யார் நம்புவாங்க? ஸ்பெக்ட்ரம்பற்றி நான் வாய் திறந்தால் நிச்சயம் யாராலும் தாங்க முடியாது.

 சி.பி ‍: ஆமா, ஏற்கனவே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி தொகையை கேட்டே பலரால் தாங்க முடியலை, இதுல இவர் வேற புதுசா எதையாவது உளறி பிரச்சனையை கொண்டாந்திட‌ப்போறாரு.. கண்டு பிடிச்சது கடுகளவு, கமுக்கமா அமுக்குனது கடல் அளவுன்னு.. சொல்லிடப்போறாரு..

ஆனால், அது மீடியாக்களுக்குத்தான் தீனியாக இருக்குமே தவிர, கட்சிக்கு நல்லதா இருக்காது’னு சொன்னார். இந்த அளவுக்குப் படுபக்குவமான பேச்சை கனியிடம் இருந்து நான் இது வரைக்கும் கேட்டது இல்லை!'' என்கிறார் சமீபத்தில் கனியைச் சந்தித்துத் திரும்பிய தமிழக அரசியல் புள்ளி.



சி.பி ‍: அடிங்கொய்யால.. இதுதான் பக்குவமான பேச்சா?பச்சோந்தித்தனமான பேச்சு..  


''ஸ்பெக்ட்ரம் வழக்கில் பலரை நோக்கியும் கை காட்டச் சொல்லி தி.மு.க-வைச் சேர்ந்த சிலரே கனிமொழியைத் தூண்டினார்கள். இது தெரிந்துதான் திடீரென இரண்டாவது முறையாக டெல்லி வந்து கனிமொழியைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். 'கட்சிக்கு எதிராக நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன்’ என ஸ்டாலினிடம் உறுதி சொன்னார் கனிமொழி.



சி.பி ‍: ச்சே.. அண்ணன் , தங்கை 2 பேரும் கூடி காட்டிக்கொடுக்கறதைப்பற்றித்தான் பேசுனாங்களா? அது சரி.. 

அந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் சாதாரணமானவை அல்ல. ராஜ்யசபா எம்.பி. என்கிற பதவியைத் தவிர, கட்சியில் கனிமொழிக்கு வேறு பதவி இல்லை. கனியின் இடம் இது தான் எனக் கட்சியில் சிறப்பு அங்கீகாரத்தை அவருக்கு ஸ்டாலினே வாங்கிக் கொடுப்பார் பாருங்கள். கனியோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்த செல்வி, இப்போது அடிக்கடி தங்கையின் நிலையை நினைத்து அடிக்கடி தழுதழுக்கிறார். இந்தத் தலைகீழ் மாற்றங் களைவைத்தே மகளுக்கான மகுடத்தை கருணாநிதி கச்சிதமாகச் சூட்டுவார்!'' என்கிறார்கள் தி.மு.க-வின் டெல்லி புள்ளிகள்.



சி.பி ‍: பெரிய பதவி இல்லாதப்பவே இவ்வளவு அமுக்குனவரு, பதவி கொடுத்துட்டா எவ்வள‌வு அமுக்குவாரு? 


சிறப்பு நீதிமன்றத்துக்குச் சமீபத்தில் அழைத்து வரப்பட்டார் கனிமொழி. அன்றைய தினம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய, நீதிபதியோடு அதிகாரபூர்வமற்ற முறையில் தனியாக மனம் திறந்து பேசுகிற சந்தர்ப்பம் கனிமொழிக்குக் கிடைத்தது. ''கலைஞர் டி.வி-க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அங்கே என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுபற்றி எல்லாம் எனக்குத் தெரியாது!'' எனச் சொன்னார் கனிமொழி. நீதிபதியின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் எத்தகைய விளைவை உண்டாக்கினவோ?!

 சி.பி ‍: நல்ல வேளை , கலைஞர் டி விக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னாரு, அந்த ஸ்டேட்மெண்ட்ல டி வி மட்டும் கட் ஆகி இருந்திருந்தா..!!!!!!!?????

கலைஞர் டி.வி. முடக்கம், இன்னும் சில கைதுகள் என்றெல்லாம் அரங்கேறிய பிறகே, கனிமொழி வெளியே வருவது சாத்தியம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.



கனிமொழி கைது செய்யப்படப்போவதாக மீடியாக்களில் பரபரப்பு கிளம்பிய வேளையில், அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சொன்ன விளக்கம்தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...


''நடக்காது என நினைத்த எல்லாமும் நடக்கிறது. நான் கைதாகப்போவதாகக் கிளம்பும் பரபரப்பும் அப்படியே அமையட்டும். ஆரம்பத்தில் அரசியல் ஆர்வமே இல்லாமல் இருந்த என்னைச் சுற்றி இன்றைக்கு இவ்வளவு பெரிய அரசியல் நடக்கிறது. இந்த விசித்திரத்தை நினைத்துச் சிரிப்பதா... அழுவதா?''



சி.பி ‍: நீங்க அழுங்க, மக்கள் உங்களைப்பார்த்து சிரிக்கட்டும்..  


தன் - vikatan

Thursday, August 11, 2011

நில மோசடி வழக்கில் மாட்டிய திமுக வி ஐ பிகள், ஜெ அதிரடி,கதிகலங்கி நிற்கும் சன் டி வி , கலைஞர் டிவி

நிலநடுக்கத்தில் 2,800 குற்றங்கள் : அ.தி.மு.க. ரிக்டர் ஆபரேஷன்!

ஜெயலலிதா திட்டமிட்டு உருவாக்கும் 'நிலநடுக்கத்தின்’ ரிக்டர் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இது தி.மு.க - வின் உள்கட்டமைப்பில், அளவுக்கு மீறிய அதிர்வுகளையும் சரிபண்ண முடியாத பிளவுகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

 சி.பி - ஈரோடு என் கே கே பி ராஜாவுக்குத்தான் மொத ஆப்பு.. அண்ணன் ஆடிப்போய்ட்டார் இல்ல?

ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் தவறுகளைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு அரசியல் பண்ண முடியாமல், தங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அரசியல் மட்டுமே செய்தாக வேண்டிய நெருக்கடியை இந்த நிலநடுக்கங்கள் தி.மு.க-வுக்கு உருவாக்கிவிட்டன!


சி.பி - அவனவன் ஃபாரீன் போய் செட்டில் ஆனா போதும், சொத்தே வேணாம், ஆளை விடுங்கடா சாமின்னு அலரிட்டு இருக்காங்களாம்.. 


முதல்வர் ஜெயலலிதா தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமலே தொடங்கினாரா எனத் தெரியவில்லை. தி.மு.க-வின் அஸ்திவாரத்தை ஆட்ட நிலப் பிரச்னைதான் சரியான வழிமுறை என்று கையில் எடுத்தார்.


சி.பி - செஸ்ல குதிரையை பயன்படுத்தி ஒரு மூவ் வைப்போம், ஆனா எதிர்பாராத விதமா அது ராஜாவுக்கும், ராணிக்கும் டபுள் செக் ஆகிடும், அது போல அம்மாவும், அய்யாவும் மாட்டாப்போறாங்க இதுல.. 

முதலாவது கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுக்குப் பின்னால், ''தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நில அபகரிப்புகள் தொடர் பான ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதே, அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பப் பெற்றுத் தருவேன்’ என்று நான் அறிவித்து இருந்தேன்.

சி.பி - ஆமாமா, அம்மாவுக்கு என்ன கோபம்னா நம்ம ஆட்சில நம்மால பண்ண முடியாத , நமக்குத்தோணாத பல ஆங்கிள்கள் இவங்களூக்குத்தோணி இருக்கே? அப்டின்னு ஒரு அங்கலாய்ப்பு , 

அந்த நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதுவரை 2,800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்து உள்ளன'' என்று அறிவித்தார் முதல்வர். கடந்த ஆட்சியில் புகார் கொடுக்காதவர்கள், புகார் கொடுக்கவிடாமல் தடுக்கப்பட்டவர்கள், புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைவிடப்பட்ட வர்கள், யாருக்கும் சொல்லாமல் உயிர் பயத்தால் மறைத்துக் கொண்டவர்கள் எனப் பலரும் தங்கள் மனுக்களுடன் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் முன்னால் நின்றார் கள். 'இதற்குத்தானடா காத்திருந்தோம்’ என்பது மாதிரி, மொத்தமாக கோழிகளை அமுக்க ஆரம்பித்தது ஆளும் அரசு!

சி.பி - 2800 புகார்ல பாதிக்குப்பாதி உண்மைன்னு வெச்சுக்கிட்டாக்கூட ... அடேங்கப்பா..!!!!!!!!!!!!



''நியாயமான வழக்குகளாக இருந்தால், அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களாக இருந்தால், வழக்குப் போடுவதில் தவறு இல்லை. இந்த நடவடிக்கைகளைக் கடந்த தி.மு.க. ஆட்சி என்று மட்டும் வைத்துக்கொள்ளாமல், அதற்கும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டவைக்கும் சேர்த்து வழக்குகள் போட வேண்டும்.

சி.பி - நமக்கு ஒரு கண் போனா பரவாயில்லை, எதிரிக்கு 2 கண் போகனும், இது தானே தமிழனின் பண்பாடு பலே பேஷ்.. சபாஷ்.. 

விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட சிறுதாவூர் நிலமும் இத்தகைய புகாருக்கு உள்ளானதுதான்'' என்று கருணாநிதி பதிலடி கொடுக்க, ''ஏற்கெனவே அன்றைய விலைக்கு நிலங்களை விற்றவர் கள், இன்று விலை கூடிவிட்டதற்காக அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு புகார் கொடுக்கிறார்கள். நான் ஒரு நிலத்தை டி.ஆர்.பாலுவிடம் 10 லட்சம் கொடுத்து வாங்குகிறேன். அதன் விலை கூடிய பிறகு, அதிக பணத்துக்கு பாலு ஆசைப்பட்டு, என் மீதே வழக்குப் போட்டால் ஏற்க முடியுமா?'' என்று மன்னார்குடி கூட்டத்தில் கேட்டார் ஸ்டாலின்.

சி.பி - ஏப்பா லபோ திபோன்னு அடிச்சுக்கறீங்க? உங்க மேல தப்பில்லைன்னா ஏன் கோபம் வருது..?


இவை அனைத்துக்கும் தமிழக அரசின் பதில் இரண்டே வரிகள்தான். 'பொதுமக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யார் மீதும் இட்டுக்கட்டி, எந்தப் பொய் வழக்கையும் போடவில்லை!’

சி.பி - அப்படித்தான் பொய்யா வழக்கு இருந்தா என்ன? இவங்க என்ன சத்திய சீலர்களா/ இவங்களும் பொய்யர்கள் தானே?   பொய்யர்கள் மேல் பொய் வழக்குப்போடா தப்பில்லை



மூன்று மாதங்களுக்கு முன்னால் விவசாயத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கைத்தறித் துறை அமைச்சராக இருந்து கருணா நிதியால் பதவியைவிட்டும் கட்சியை விட்டும் நீக்கப்பட்டு, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி.ராஜா ஆகிய இருவரும் கோவை சிறை யில் இருக்கிறார்கள்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனும் பாளை சிறையில் வைக்கப்பட்டார்கள். தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ- வுமான ஜெ.அன்பழகன் கோவை சிறையில் இருக்கிறார். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மு.க.அழகிரியின் வலதுகரமுமான 'பொட்டு’ சுரேஷ் பாளை சிறையிலும், மதுரை வேளாண் விற்பனைக் கிடங்கின் முன்னாள் தலைவரும் மு.க.அழகிரியின் இடதுகரமுமான 'அட்டாக்’ பாண்டி, திருச்சி சிறையிலும் இருக்கிறார் கள். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைதாகி விடுதலை பெற்ற எஸ்ஸார் கோபி மதுரை சிறையில் இருக்கிறார்.


சி,பி - ஆஹா, திமுகவில் தான் எத்தனை தியாகிகள்!!!!!!!!!!!!!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவரும் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பின ருமான வி.கே.குருசாமி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் 'பொட்டு’ சுரேஷ், 'அட்டாக்’ பாண்டி, வி.கே.குருசாமி, புரசை ரங்கநாதன் ஆகிய நால்வருடன் சேர்த்து பூண்டி கலைவாணன் மீதும் குண்டர்கள் தடுப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது. திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வலது கரமுமாகிய குடமுருட்டி சேகர், கஞ்சா வைத்துஇருந்ததாகக் கைது செய்யப்பட்டார்.

சி.பி - இந்த பன்னாடைங்க பேரைப்பார்த்து சினிமாரவுடிகளுக்குப்பேர் வைக்கிறாங்களா? அல்லது இவனுங்க சினிமா பார்த்து வெச்சுக்கறானுங்களா? 

ராமநாதபுரத்திலும் திருப்பூரிலும் தி.மு.க-வின் கீழ்மட்டப் பதவிகளில் இருந்த பலரும் நில அபகரிப்பு வழக்குகளில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் மீது புகார்கள் வரிசை கட்டி வரத் தொடங்கி உள்ளன.

சி.பி - எல்லா பரதேசிகளூம் மட்டம் தான், இதுல கீழ் மட்டம் என்ன? மேல் மட்டம் என்ன? 


செய்தித் துறையின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது வில்லிவாக்கத்தில் நில அபகரிப்புப் புகார், சென்னை மாநகரக் காவல் துறையில் பதிவாகி உள்ளது. திருச்சி யில் உள்ள காஞ்சனா ஹோட்டல் சொத்தைக் கைமாற்றி விடும் விவகாரத்தில் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் சம்பந்தப்பட்டதாக நாமக்கல்லைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் கொடுத்த புகார் இப்போதுதான் புகைய ஆரம்பித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் போட்டார் நேரு. '16-ம் தேதி வரைக்கும் அவரைக் கைது செய்யக் கூடாது’ என்று விசாரணை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

சி.பி - அண்ணன் 16 ஆம் தேதிக்குள்ள ஃபாரீன் போயிடுவாரு பாருங்க. 



வருவாய்த் துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி மீது காவல் துறை இயக்குநரிடம் அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜன், என்பவர் தந்திருக்கும் புகாரைப் படிக்கவே பயமாக இருக்கிறது. சொத்தை அபகரிக்க நடந்த மோதலில் பல திடுக்கிடும் திருப்பங்களும் மர்ம மரணங்களும்கொண்ட திகில் கதைபோல அது இருக்கிறது. உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தன்னுடைய கல்லூரியின் வளர்ச்சிக்காக மற்றொரு நிர்வாகத்தின் கல்லூரியை எப்படி முடக்கினார் என்பதும், தனது கல்லூரிக்கான இடத்தைக் கையகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளும் போலீஸ் விசாரணையில் உள்ளன.


அனைத்துக்கும் மேலாக, மதுரை உத்தங்குடியில் நாகர் ஆலயத்துக்குச் சொந்தமான இடம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி பேருக்குக் கைமாறியதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும், கருணாநிதியின் படங்களுக்கு ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் பங்களிப்பு எத்தகையது என்பதையும் போலீஸ் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. திருவொற்றியூர் பரணிகுமாரை மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் சாமியும் அவரது தம்பி சொக்கலிங்கமும் தாக்கியதாகப் புகார்.


''பொய் வழக்குகளை வேகவேகமாகப் போட்டு, கழக மாவீரர்களை சல்லடைக் கண்களால் துளைத்துவிடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. குண்டர் சட்டத்தை தி.மு.க-வினர் மீது பயன்படுத்துவதைப் பார்த்து, 'ஒரு பயங்கரமான ஆட்சியை நான் நடத்துகிறேன் பார்’ என்று காட்ட நினைக்கிறார்'' என்று கருணாநிதி திருவாரூரில் சொல்லி இருக்கிறார்.


கைதானவர்கள் குற்றவாளிகள்தானா என்பதை போலீஸ் நிரூபிக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கட்டும். ஆனால், புகார் கொடுத்தவர்கள் பலர் அப்பாவிகள்தான். மதுரை திருமலை நாயக்கர் கோயிலுக்கு அருகில் இருக்கும் வீட்டை யும் கடையையும் பறிகொடுத்த கல்பனா, ''நான் அட்டாக் பாண்டியோட சொந்தக்காரங்க. அவர் பேரைச் சொன்னா, ஊரே அதிரும்ல'' என்று சொல்லி, தன்னை மிரட்டியதாகச் சொல்கிறார். திருமங்கலம் பாப்பாவையும் அவரது கணவர் சிவனாண்டி யையும் பொட்டு சுரேஷ் தன் அலுவலகத்துக்கு வரச் சொல்லி மிரட்டியதாகச் சொல்கிறார்கள்.


சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள 23 குடும்பங்கள் நான்கு ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கின்றன. உத்தங்குடி நாகர் ஆலயத்தின் வி.வி.சுப்பிரமணியன் ஐயர் நில அபகரிப்பையும், அதனால் ஒருவர் காணாமல் போன கதையும் பரபரப்பு. காடுவெட்டிப் பாளையத்தில் பேப்பர் மில்லை கை மாற்றிவிடும் விவகாரத்தில் ஜெ.அன்பழகனின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். அவனியாபுரம் பாண்டியராஜின் மனைவி பாண்டீஸ்வரி தனது கணவரைக் கொன்று, அதை ஒரு விபத்தாகக் காட்டிவிட்டார்கள் என்று எஸ்ஸார் கோபி தரப்பு மீது கை நீட்டுகிறார். மிகமிக மேலோட்டமாகப் பார்த்தால், கஞ்சா வைத்து இருந்ததாகக் கைது செய்யப்பட்ட திருச்சி பிரமுகர் தவிர, அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களால் போடப்பட்ட வழக்குகளாகவே இருக்கின்றன.


இந்த நடவடிக்கைகளைப் பார்த்து நம்பிக்கைகொண்ட பலரும், புதிய புகார்களுடன் புறப்பட்டு உள்ளார்கள். போகிற போக்கைப் பார்த்தால், இந்த நில நடுக்கத்தில் இருந்து தி.மு.க. தப்பிப்பது பெரும்பாடாக இருக்கும். சிவில் வழக்குகளில் கிரிமினல் செக்ஷன்களும் சேரும்போது சிக்கிய தனி மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் வழக்குடன் மல்லுக்கட்டுவதாகவே முடிந்துபோகும். அத்தகைய சுழலில் தி.மு.க-வினர் சிக்கியது மட்டும் அல்ல... கட்சியையும் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார்கள்!

சி.பி - நல்ல வேளை ஆட்சி மாறுச்சு, இல்லைன்னா இந்த முறையும் செகண்ட் ரவுண்ட் நில மோசடியை ஆரம்பிச்சிருப்பாங்க.  இந்த மேட்டரைப்பற்றி சன் டிவி,அல்லது கலைஞர் டி விலயோ மூச் விட மாட்டேங்கறாங்க. ஏன்னா அந்த நிர்வாகிகள் மேலயும் வழக்கு இருக்கே?


 thanx - vikatan 

Wednesday, August 10, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - கலக்கல் கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர்  ஃபைனல்க்கு போறதுகு முன்னால அதனோட 3ஆம் பாக செலக்‌ஷனுக்கான விளம்பரம் பற்றி சின்னதா ஒரு விமர்சனம். கே பாக்யராஜ் ரெடி ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் அப்டினு சொல்லி  சில டயலாக் பேசறார்.. இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியரும், பல வெள்ளி விழாப்படங்களின் இயக்குநருமான அவர் இந்த 2 நிமிட விளம்பரப்படத்துல  சோபிக்க முடியலைங்கறதைப்பார்த்தா வருத்தமா இருக்கு, ரொம்ப செயற்கையான முக பாவனைகள்.

ஃபைனல் நிகழ்ச்சிக்கு பல வி ஐ பி கள் எல்லாம் வந்திருந்தாங்க. பாலு மகேந்திரா,பாண்டிராஜ் என பல வி ஐ பி களை பார்க்க முடிந்தது. இவங்க எல்லாம் அந்த நிகழ்ச்சியை பார்க்கறதால படைப்பாளிகளுக்கு இன்னும் படம் எடுக்க ஊக்குவிப்பா அமையும்.

ஹாய் மதன் வந்ததும் சொன்ன ஒரு பஞ்ச் நல்லா இருந்தது. இந்த ஃபைனல்ல யார் வின் பண்ணப்போறாங்கன்னு நிறையப்பேர் கேட்கறாங்க.ஏற்கனவே வின் பண்ணுனவங்க தான் இங்கே வந்திருக்காங்க என்று அவர் சொன்னதும் அனைவரும் ஒரு புத்துணர்ச்சியோடு கிளாப்ஸ்..


1. திருப்பூர் ராம் - சைனா டீ ( காமெடி சப்ஜெக்ட் )

ப்பனிங்க் ஷாட்டே டெர்மினேட்டர் டீக்கடைல ஆரம்பிக்குது. புது வகை டீத்தூள் விற்கும் ஆள் கடைக்கு வர்றான். பணம் எதுவும் வேணாம், ஒரு டீ போட்டு கஸ்டமருக்கு குடுங்கங்கறான்.அது போலவே செஞ்சா டீ குடுத்தவன் ஆள் அவுட். 

பதறிப்போன டீக்கடை ஓனர் டெட்பாடியை வண்டில வெச்சு எடுத்துட்டுப்பொறாரு.. ஒரு மறைவான இடத்துல அவரை டிஸ்போஸ் பண்ணிட்டு அவங்க ரிட்டர்ன் ஆகறப்ப போலீஸ் பார்த்துடுது. டீ குடிச்சு செத்துப்போனதா நம்பப்படும் ஆள் உண்மைல சாகலை. மயக்கம். கடன் தொல்லை தாங்காம விஷம் குடிச்சவர் அந்த டீயை குடிச்சதாலதான் பிழைச்சாரு.. 

இப்போ அந்த டீக்கு ஏக கிராக்கி. 

கேட்க ரொம்ப சாதாரண கதையா தெரியும் ,ஆனா விஷூவலா பார்க்கறப்ப செமயா இருந்தது. 

மனம் கவர்ந்த சில வசனங்கள்

1. நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது

யோவ் , குடுகுடுப்பை,வாத்தியத்துக்கே வக்கில்லாம தானே வாயால வாசிக்கறே.!!?
2. ஊர்ல இருக்கற எல்லாருமே எங்க கடைல தான் டீ குடிப்பாங்க./. 

அடேய், ஊர்ல மொத்தமே 32 பேர்தான். 

3. இந்த பஞ்சாயத்து என்னா சொல்லுதுன்னா போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்..

ஆமாமா.. நானும் அதை ஆமோதிக்கிறேன், போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்.. யோவ். ஒரு சந்தேகம். போஸ்ட் மார்ட்டம்னா என்ன?

4. விஷத்தை முறியடிக்கும் டீ இது .. விலை ரூ 50

இந்தாய்யா ரூ 500


இதுல நடிச்ச எல்லாருமே ஒரு கிராமத்து ஆளுங்க, நேட்டிவிட்டி இருந்தது.. பார்வையாளர்களிடையே நல்ல வர்வேற்பு பெற்ற இந்தப்படம் ஏனோ ஜட்ஜூங்களை அவ்வளவா கவரலை.. ஆனா அதை ஓப்பனா கமெண்ட்டி இருக்க தேவஃஇ இல்லை. ஏன்னா ஃபைனல் என்பதால் யார் வின்னர் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை மெயிண்டெயின் பண்ண வேணாமா?



2. . ரவிகுமார் - ஜீரோ கிமீ  ( ஃபேண்ட்டசி)

வேலை வெட்டி இல்லாத ஹீரோ எதேச்சையா திருப்பூர் டூ சென்னை போக ஒரு  மாயாஜால ரூட் கண்டுபிடிக்கறாரு..  அதாவது குறிப்பிட்ட இடத்துல ஆள் உள்ளே போனா அடுத்த செகண்ட் அவர் சென்னைல இருப்பார். உடனே அந்த இடத்தை விலைக்கு வாங்கறார்..

தனது பாரம்பரியம் மிக்க வீட்டை விக்கறார். ஜோசியர் தான் அந்த வீடு ராசி இல்லைன்னு ஐடியா குடுக்கறார். வீட்டை வித்து கிடைச்ச பணத்துல தான் இந்த மேஜிக் இடம் வாங்கறார். வாங்கி ட்ராவல் ஏஜென்சி நடத்தறார்.. செம காசு.. ரூ 500 டிக்கெட்.. திடீர்னு ஹைவெஸ் டிபார்ட்மெண்ட்ல வந்து அந்த இடத்தை அபகரிச்சுக்கறாங்க..

ஹீரோவோட வீட்டை விலைக்கு வாங்குன சேட்டு ராசி இல்லைன்னு ஓ சி ல அதை ரிட்டர்ன் பண்ணிடறாரு. இப்போ தன் வீட்டுக்கு போற ஹீரோ பரண்ல அமெரிக்கா போற மேஜிக் ரூட் கண்டு பிடிக்கறார்..

அப்பாவின் சொத்து விற்கக்கூடாதுங்கற மறைமுகமான நீதியோட ,அட, இப்படி நடந்தா எவ்வலவு நல்லாருக்கும் என பார்வையாளர்களை ஏங்க வைத்த ஒன் லைன் கற்பனை.  வெல்டன் ரவிக்குமார்.

இந்த படம் முதல் பரிசு வாங்கலைன்னாலும் நிச்சயம் 2 வது அல்லது 3 வது பரிசு வாங்குவது நிச்சயம்.. மொத்தம் 9 படம் . இந்த வாரம் 3 படம். இனி 6 படம் வர இருக்குது.




3. தீபக் - ஆசை 

ஒரு தூக்கு தண்டனைக்கைதியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்? என்பதுதான் படத்தோட ஒன்லைன்.. ஆனானப்பட்ட ஆட்டோ சங்கர் ஆகட்டும், வீரப்பன் ஆகட்டும் அவங்களோட கடைசி நிமிடங்களை பார்க்கும்போது நமக்கு இரக்கம் வரத்தான் செய்யுது. அது மனித மன இயல்பு..

சின்ன வயதில் 13 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் பண்ணுன கொடூரமான ஆள் கேஸ் நடந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகையில் தனது கடைசி ஆசையாக தனது மகளிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்ல சொல்கிறார்.

இதே போல் 8 தூக்கு தண்டனை களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் அசைன்மெண்ட் எடுத்துக்கொண்ட ஒருவர் அதை நிறைவேற்றுகிறார். இதான் கதை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சோத்துல உப்பே இல்லையே? சாகப்போறவனுக்கு சொரணை இருக்கக்கூடாதுன்னு போடாம விட்டுட்டீங்களா?

2. மனுஷனுக்கு தோணும் ஆசை தான் அவன் தப்பு பண்ணக்காரணம்.. ஆசைப்படாத மனுஷனே உலகத்துல கிடையாது..




இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. தூக்குதண்டனைக்கைதிகளின் கடைசி ஆசையை நிறைவேற்றும் கேரக்டர்ல நடிக்கறவர் “ என் பேரு அகிலன்” அப்டின்னு சொல்றப்ப தன் நெஞ்சுல கை வெச்சு சொல்றாரு.. இது 25 வருடங்களுக்கு முன்னால் நாடகங்களில் கையாளப்பட்ட பாணி..  அதுவும் 4 டைம் அதே மாதிரி சொல்றப்ப இயக்குநரின் அனுபவம் இன்மை தெரிகிறது..

2. தூக்கு தண்டனை கைதி தன் மக கிட்டே மன்னிப்பு கேட்கறதா சொன்னது தன்னால் கெடுக்கப்பட்ட பெண் மூலம் பிறந்த வாரிசா? அல்லது இது வேறா? என்பது  தெளிவா சொல்லப்படலை.. ஒரு வேளை தான் கெடுக்கப்பட்டதால் பிறந்த பொண்ணு கிட்டே மன்னிப்பு கேட்பதாக சொல்லி இருந்தால் கதையில் இன்னும் அழுத்தம் கூடி இருக்கும்..

இந்தப்படம் பார்க்க உருக்கமா இருந்தாலும் லாஜிக் மிஸ்டேக்ஸ், கதை கரு ஆகிய விஷயங்களில் சராசரி எனும் நிலை தான்..


Thursday, June 09, 2011

நாளைய இயக்குநர் - த்ரில் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு தொகுப்பாளினி  ஓரளவு சுமாரான நைட்டி போட்டுட்டு வந்தாங்க.. (நான் பார்த்ததிலேயே மிக மோசமான ஃபிகர் இவர் தான் ஹி ஹி )ஹாய் மதன் வந்ததும் ஒரு டிஸ்கஷன்.டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு மேக்கிங்க்ல தரம் குறைஞ்சிடுச்சா? என்பதே அந்த கேள்வி. கோட்ஜில்லா பட டிஸ்கஷன்ல சில குறைகள் இருந்தப்ப டைரக்டர் கிட்டே ஆளாளுக்கு எடிட்டிங்க்ல பார்த்துக்கலாம், டிஜிட்டல்ல பார்த்துக்கலாம் அப்டின்னு தட்டிக்கழிக்கறாங்களாம்..

ஜூராசிக் பார்க் படத்துல அந்த மாதிரி ஒரு பிராணி இல்லாதப்பவே இருக்கற மாதிரி ஒரு இமேஜினேஷன் மனசுக்குள்ள கொண்டு வந்து பயந்த மாதிரி நடிக்கனும்.அது கஷ்டம் என்றார்..

பென்ஹர் படத்துல ஒரு சீன்ல ரேஸ் கார் அவங்களையும் அறியாம இடம் பிடிச்சதையும் அதை ஒண்ணும் பண்ண முடியாம போனது பற்றியும் குறிப்பிட்டாங்க..

www.forwards4all.com
1. அருண்ராஜா காமராஜர் - THE DARK

வாய் பேச முடியாத பொண்ணு ,அவங்கம்மா மொத்தம் 2 கேரக்டர். அந்த பொண்ணுக்கு இருட்டுன்னா பயம்.. அது ஞாபகம் இல்லாம வெளில கிளம்பறப்ப அம்மா ஆல் லைட்ஸ் ஆஃப் பண்ணிட்டு போறாங்க.. உடனே அந்த பொண்ணு ஆ என அலறுது.. அப்பத்தான் அம்மாவுக்கு ஞாபகம் வருது.. உடனே ரிட்டர்ன் ஆகி அவளை சமாதானப்படுத்திட்டு அப்புறமா  வெளியே கிளம்பறாங்க.. 

அவங்க போனதும் மறுபடி கரண்ட் கட் ஆகுது.. ( கலைஞர் டி வி லயே இப்படி கரண்ட் கட் ஆகற சீன் வருதேன்னு யோசிச்சா அட,..  இப்போ நடக்கற ஆட்சி அம்மா ஆட்சின்னு நினைவு வருது.. )ஆனா இந்த டைம் அந்த பொண்ணு பயப்படலை.. விளக்கு ஏற்றி வெச்சு( ஒரு குத்து விளக்கே இன்னொரு குத்து விளக்கை ஏற்றுகிறதே அடடே ஆச்சரியக்குறி.. )ஏதோ ஒரு புக் படிக்கறாங்க.. 

அந்த புக் ஆதிகாலத்தில் மனிதன் எப்படி எதேச்சையாக நெருப்பை கண்டு பிடிக்கிறான் என்பது..

இருள் இவ்வுலகின் முடிவல்ல ஆரம்பம் என்ற பின் குரலோடு படம் முடியுது.. 

படம் ஏதோ சொல்ல வருது.. ஆனா இன் கம்ப்ளீட்.. இதை கே பி சார் ரொம்ப நாசூக்கா சொன்னாரு.. ஆதிகால நிகழ்வு, நிகழ்கால நிகழ்வு இரண்டுக்குமான லிங்க் ஈஸ் நாட் சோ குட் என்றார்..

ஹாய் மதன் பேசுனப்ப 2 டைம் சீன் சேஞ்சிங்க்க்காக இருட்டை காட்றீங்க.. அதுக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்? சாதா ரசிகன் குழம்ப சான்ஸ் உண்டு என்றார்.. என் பதில் நோ சான்ஸ் எனபதுதான்.. அதான் சீன் சேஞ்சுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் குடுக்கறாரே?

3வதா வந்த பிரதாப் சார் எடுத்த எடுப்புலயே அந்த ஊமைப்பொண்ணு அப்படின்னு ஆரம்பிச்சார்.. நான் கடுப்புல ரிமோட்ல சேனல் மாத்திட்டேன்.. ஸ்டேஜ் மேனரிசம் என்ற ஒன்றை பிரதாப் சார் கத்துக்கறது நல்லது.. பிசிக்கலி சேலஞ்சுடு,மவுனமொழிபேசுபவர்கள்,என எத்தனையோ கண்ணிய வார்த்தைகள் இருக்கறப்ப.. ஹூம்.. திருந்த மாட்டாங்கப்பா.. 


www.forwards4all.com
2. அருண்குமார் - நிழற்படம்

இந்தப்படத்துல என்னைக்கவர்ந்த முக்கிய அம்சம் ஹீரோயினின் டிரஸ்ஸிங்க்சென்ஸ்.. ஓப்பனிங்க் சீன்ல போட்டுட்டு வந்த டிரஸ்க்கு மேட்சா ஸ்டெட்,செப்பல் முதற்கொண்டு கலக்குனாங்க.. அப்புறம் 4 வதா போட்ட டிரஸ் சோபா கலர்ல ஆரஞ்ச் டிரஸ் போட்டுட்டு வந்து அசத்துனாங்க.. 

வீட்ல தனியா இருக்கற பொண்ணுக்கு வரிசையா க்ரீட்டிங்க் கார்டு வருது.. அதுல அவ காதலனுடன் இருந்த ஃபோட்டோஸ் இருக்கு. தொடர்ந்து பெட்ரூம்ல ஒரு கார்டு.. உடனே அவ காதலனுக்கு ஃபோன் பண்றா.. அவன் வர்றான்.. 2பேரும் டிஸ்கஸ் பண்றாங்க.. 

2 பேரும் ஒரு முடிவெடுத்து ஒரு ஆள் வீட்டுக்கு போறாங்க.. அங்கே அவன் தனியா இருக்கான்.. அவன் இவங்களை உபசரிக்க ஏதோ டீ காபி போட உள்லே போறப்ப இவங்க டேபிள், ஃபிரிட்ஜ் எல்லாம் செக் பண்றாங்க.. அவங்களுக்கு அனுப்புன அதே மாதிரி கார்டு அங்கேயும் இருக்கு.. 

அவன் தான் அந்த ஆள்னு தெரிஞ்சுக்கிட்டு ஓடி வந்துடறாங்க.. 

அப்போ நியூஸ்ல சொல்ராங்க.. சீரியல் கில்லர் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறான்... அவன் கொலைகளை செய்யும் முன் அவர்களுக்கு ஒரு ஃபோட்டோ அனுப்புகிறான்.... 

அவ்வளவுதான் படம் ..

கே பி சார் கமெண்ட் - படம் இன் கம்ப்ளீட்டா இருக்குன்னு சிலர் சொலலாம். அதே சமயம் அப்படி காட்டுனதுல தான் சஸ்பென்ஸ் நிக்குதுன்னும் சொல்லலாம்.. எனி வே இட் ஈஸ் எ குட் ஃபிலிம்னார்.. 

பிரதாப் சார் பேசறப்ப   THERE IS NO MOTIVATION.. WHAT IS THE FUNDAMENDELனு கடைசி வரை நீங்க சொல்லவே இல்லை அப்டீன்னார்.. 

ஹாய் மதன் சார்.. படம் ஓக்கே இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்னார்.. 

என் கருத்து என்னான்னா சஸ்பென்ஸ் படம்னா அவ்வளவு தான் சொல்லனும்.. இது இது இன்ன என படம் வரைந்து பாகங்களை குறிக்க முடியாது.. உள்ளங்கையை மூடி இருக்கும் வரை தான் சஸ்பென்ஸ்.. திறந்துட்டா ப்ச்.. சப்னு போயிடும்.. இது காதலிக்கு மட்டும் இல்லை.. சஸ்பென்ஸ் படத்துக்கும் பொருந்தும்.. 

இந்தப்படத்துக்கு பெஸ்ட் மியூசிக் அவார்டு கிடைச்சுது.. 

www.forwards4all.com








3. ரங்கநாதன் - தா காட்டு

திருநெல்வேலி,கன்யாகுமரி போன்ற தென் மாவட்டங்களில்  தண்ணி காட்டு என்ற சொலவடைக்கு தா காட்டு என்பார்களாம்..

போலீஸ் லாக்கப்ல ஒரு ஆளை அடிக்கறப்ப அவன் மேல் லோகத்துக்கு டிக்கெட் வாங்கிடறான்.உடனே போலீஸ் டிஸ்கஷன்.. சில நாட்களுக்கு முன்னால் டிராஃபிக் டைம்ல தன்னை எதிர்த்துப்பேசிய ஆளை இந்த கொலை கேஸ்ல மாட்டி வைக்க திட்டம் போடுது.. 

அவனை கண்டு பிடிச்சு அவன் காருக்குள்ள பிணத்தை வெச்சுட்டு வந்துடறாங்க..  அவன் காரை கண்காணீக்கறாங்க.. அவன் டெட்பாடியை மறைக்கறப்ப டகார்னு கையும் களவுமா பிடிச்சுடலாம்கறது அவங்க பிளான்.. 

ஆனா அவன் கலைஞர் மாதிரி எத்தனுக்கு எத்தன்.. அவங்க ஜீப்லயே பாடியை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறான்..

இந்த நம்ப முடியாத கதைக்கு சிறந்த படம் அவார்டு குடுக்கறாங்க.. அய்யோ ஹய்யோ..

www.forwards4all.com
இந்தப்படத்தை எடுத்த இயக்குநர், பாராட்டிய வி ஐ பி களுக்கு நான் முன் வைக்கும் கேள்விகள்

1. போலீஸ் லாக்கப்ல ஆள் இறந்துட்டா வழக்கமா தூக்குல தொங்க விடுவாங்க.. அல்லது என்கவுண்ட்டர்ல  போட்டுட்டதா சொல்லிடறது தான் உலக வழக்கம்.. இப்படி தேவை இல்லாம டெட் பாடியை தூக்கிட்டு ரோடு ரோடா போலீஸ் அலையுமா?

2. ஃபுல் மப்புல இருக்கும் போலீஸ் ஆஃபீசர் டிரங்க்கன் டிரைவிங்க்கை பற்றி கேள்வி கேட்பதாகவும், அதை டிரைவர் கேலி செய்வது போலும் சீன் அமைத்திருப்பது நம்ப முடியவில்லை.. 

3. போலீஸ் வேனுக்கு டெட் பாடி மாற்றும் நேரம் குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் ஆகும், ஆனால் போலீஸ் ஆஃபீசர் வாய் கொப்புளிப்பது 20 செகண்ட் மட்டுமே.. அந்த கேப்பில் அவர் எப்படி தன் பங்களாவிலிருந்து 2 மாடி இறங்கி வந்து இத்தனை வேலையையும் செய்திருக்க முடியும்?

4. டிராஃபிக் இன்ஸ்பெக்டரா? க்ரைம் இன்ஸ்பெக்டரா? கேரக்டர் வடிவமைப்பில் குழப்பம்..  டிராஃபிக் இன்ஸ்பெக்டரா இருந்தா அவர் எப்படி ஸ்டேஷன்ல லாக்கப்ல கைதியை அடிக்க முடியும்? க்ரைம் இன்ஸ்பெக்டரா இருந்தா அவர் எப்படி சிக்னல்ல நின்னு பைக்கை ,காரை நிறுத்தி டிரங்க்கன் டிரைவ் சோதனை போட முடியும்?



Wednesday, May 18, 2011

நாளைய இயக்குநர் - திகில் கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள்ல அந்த வாரம் என்ன டாப்பிக் கதைங்கறது சொல்லிடறாங்க. இது தெரியாம ஹாய் மதன் இந்த வாரம் என்ன டாபிக்னு தெரியுமா? என்று  சஸ்பென்ஸ் வைக்கும்போது சிரிப்பு தான் வருது. ஆனா அவரை சொல்லி தப்பில்லை.. நிர்வாகம் விளம்பர க்ளிப்பிங்க்ஸ் போடும்போது கவனமா இருக்கனும்.. 

அப்புறம் தொகுப்பாளினி போட்டுட்டு வர்ற டிரஸ் பற்றி எப்பவும் போல சொல்லியே ஆகனும். அஞ்சரைக்குள்ள வண்டி படத்துல ஹீரோயின் பாத்ரூம்ல இருந்து வெளில வர்றப்ப எப்படி இருப்பாரோ அப்படி இருக்கார். ஒரு மஞ்சள் கலர்  பெட்டிகோட் மட்டும் போட்டுக்கிட்டு பொண்ணு ஜாலியா வருது.. பார்க்கற நமக்கே கூச்சமா இருக்கே..... ஹி ஹி 

சரி.. சதையை பற்றி எதுக்கு நமக்கு கவலை ?கதைக்குள்ள போவோம்.



1. அருண் பிரகாஷ் - பிடாரன்

ஒரு பர்த்டே பார்ட்டிக்கு வீட்ல மேஜிக் மேன் வர வைக்கப்படறான்.அது கணவனுக்கு பிடிக்கலை. மனைவியை குறை சொல்றான்.( பொதுவா மனைவிங்க எது தன்னிச்சையா செஞ்சாலும் நாங்க குறை சொல்லுவோம் இல்ல.. ?)ஹால்ல மேஜிக்மேனை உட்கார வெச்சு உள்ளே கணவன் மனைவி 2 பேரும் அவனைப்பற்றி வாக்குவாதம் பண்ணிக்கறாங்க.. ( இப்போ எல்லாம் இது ஒரு டெக்னிக்காவே ஃபாலோ பண்றாங்க போல)

தன்னோட மேஜிக் கலையை அவமானப்படுத்தறது பிடிக்காம அவன் அவங்களுக்கு பாடம் கற்றுத்தர நினைக்கிறான். கண் கட்டு வித்தையால அவங்களை பயமுறுத்திட்டு , ஆனா எந்த கெடுதலும் பண்ணாம அவன் காசும் வாங்காம ரிட்டர்ன் போயிடறான்.இதான் கதை.

ஒரு படைப்பாளியின் கோபம், ஒரு கிரியேட்டிவ் திங்க்கர்க்கு சமூகம் கொடுக்கற மரியாதை ஆகியன  பற்றி நல்ல முறையில் அலசப்பட்ட கதை.

ஹாய் மதன் ஒரு குறை சொன்னாரு. மேஜிக் மேன் எப்பவும் சுறு சுறுப்பா இருப்பாங்க,, டாமினேஷன் பண்ணுவாங்க.. ஆனா இவர் ஏன் டல்லடிச்ச மாதிரி இருக்காரு?ன்னு கேட்டாரு.


ஆனா கதையோட சஸ்பென்ஸூக்கு அப்படி காட்றது தேவைதான். சைக்கோ மாதிரி காட்டி அப்புறம் சஸ்பென்ஸை உடைக்க படத்தோட டைரக்டர் முயற்சி பண்ணி இருக்கார். ஆனா இந்த படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும்னு சொல்ல முடியாது.. ஆனா வெல் டேக்கன் ஃபிலிம்னு சொல்லலாம்.

 ஒரு உபரி தகவல். இது எஸ் ராமகிருஷ்ணன் எழுதுன கதை

2. ராஜ்குமார் - பிழை

வித்தியாசமான சஸ்பென்ஸ் கதை. ஒரு அபார்ட்மெண்ட்ல நர்த்தகியா வாழும் ஒரு ஆண்.. அவன் பெண் வேஷத்தில் ரூம்ல இருக்கறதை வாட்ச் மேன் பார்த்துடறார்.அதை வெளில சொல்லாம இருக்க அப்பப்ப மிரட்டி பணம் வாங்கிக்கறார்.மிரட்டல் எல்லை மீறவே (அதாவது வாட்ச் மேன் ஹோமோ ட்ரை பண்றப்ப)கொலை பண்ணிடறான். இதான் கதை

ஆரம்பத்துல ரூம்ல இருக்கும் ஆண் ஏதோ ஒரு பெண்ணுடன் தகாத உறவு வெச்சிருப்பது போல் சஸ்பென்ஸ் காட்சி வெச்சது நல்லாருக்கு.கேமரா கோணங்கள் செம.. 


இயக்குநருக்கு சில கேள்விகள்

1. வாட்ச் மேன் டூப்ளிகேட் சாவி போடறப்ப சாவியை தன் ப்ளேஸ்க்கு எடுத்துட்டு  போய் அப்புறம் சோப்ல தடம் பதிச்சு மறுபடி சாவியை பழைய இடத்துல வெக்கற மாதிரி காட்டி இருக்கீங்க.ஆனா சோப்பை கையோட எடுத்துட்டு போய் அதுல தடம் படிச்சு சாவியை வைக்கறதுதான் ஈஸி & சேஃப்டி

2. நர்த்தகியா (திருநங்கை) வர்ற ஹீரோ ரூம்ல புடவை மாத்தறதை எப்படி ரூம் ஜன்னல் சாத்தாம இருப்பார். இந்த மாதிரி நேரத்துல ஜாக்கிரதை உணர்வு ஜாஸ்தியா வெலை செய்யுமே?

3.வாட்ச்மேன்  ஒரு ஹோமோ என்பதை இன்னும் தெளிவா காட்டி இருக்கலாம்.

ஹாய் மதன் ஐடியா ஓக்கே என பாராட்டிட்டு டைரக்டரோட ஐடியாவை சொன்னேன்,. வாட்ச் மேன் ஐடியாவை சொன்னேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க அப்படின்னு டைமிங்க் ஜோக் அடித்தார். ஹாய் மதனிடம் எல்லோரும் இந்த மாதிரி விட்களை எதிர்பார்க்கறாங்க. ஆனா அவர் ஏன் அடக்கி வாசிக்கிறார்னு தெரில.. ( பிரதாப் போத்தன் கூட சேர்ந்து கெட்டுட்டார் போல).

 பிரதாப் போத்தன் டைரக்டர் ராஜ்குமாரைபாராட்றப்ப நல்லா மெயிண்டெயின் (maintain)பண்ணுனீங்க என பாராட்டுவதற்குப்பதிலாக நல்லா மெண்டென் பண்றீங்க என்றார். ஸ்டைல் உச்சரிப்புன்னு நினைச்சுட்டார் போல.. ஹா ஹா
show details 21:35 (1 hour ago)

http://movies.vinkas.in/files/2011/05/poonam-bajwa-cute-stills-1.jpg


3. மணிவண்னன் - நியதி

பேங்க்கை கொள்ளை அடிக்கும் ஒரு கூட்டம் எதேச்சையா அவங்க தங்கி இருக்கற ஹோட்டல் பாம் வெச்சிருக்கறது தெரியாம பலி ஆகிடறாங்க.. சாதாரண ஒன்லைன் ஸ்டோரி தான். ஆனா மேக்கிங்க் நீட். 

நல்ல வசனம்

1. பணத்துக்காக விஷமா மாறும் ஒரே இனம் மனுஷன் தான்.

நல்ல காட்சி

பேங்க்கில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பேங்க்கிலேயே மற்றவர் முன் தீயால் எரிப்பதைப்போல் காட்டி பணத்தை சாமார்த்தியமாக அபேஸ் பண்ணுவது

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரத்தம் வர்ற மாதிரி காட்சில ஒரிஜினல் ரத்தம் யூஸ் பண்ணாட்டியும் பரவால்லை. சிவப்பு கலர் திரவமாவது யூஸ் பண்ணி இருக்கலாம். ஆனா ஆரஞ்ச் கலர் திரவம் ஏன் யூஸ் பண்ணி காட்சியின் டெப்த்தை (depth)குறைக்கனும்.?

(டாக்டர் ராஜசேகர் மன்னிக்க வேண்டுகிறேன் படத்துல ஒரிஜினல் ரத்தத்தை யூஸ் பண்ணினார்)

2. பேங்க் கொள்ளை நடக்கறப்ப பொதுவா ஆண்கள், பெண்கள் தனித்தனியா தனிமைப்படுத்தி மிரட்டுவாங்க.. இப்படி க்ரூப்பா ஒரே செட்டா போட்டு வைக்க மாட்டாங்க..

கே பாலச்சந்தர் இந்தப்படம் செம ஸ்க்ரீன்ப்ளே க்ளாரிட்டி எக்ஸ்ஸிக்யூஷன்மட்டும் கன்ஃபியூஷன்னு சொன்னார்


http://movies.vinkas.in/files/2011/05/poonam-bajwa-cute-stills-3.jpg

Wednesday, May 11, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் கதைகள் 3 - விமர்சனம்

P8050080.JPG
8.5.2011 எலக்‌ஷன் ரிசல்ட்க்கு முன் வரும் கடைசி நிகழ்ச்சி இது. கே பாலச்சந்தர் சாரின் பேட்டியை கட் பண்ணி கட் பண்ணி 3 கதைகளுக்கும் நடு நடுவே கொஞ்சம் கொஞ்சம் போட்டாங்க.. இது எப்படி இருந்துச்சுன்னா ஸ்கூல் அல்லது காலேஜ் ஃபங்க்‌ஷன்ல பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஆங்காங்கே கலை நிகழ்ச்சிக்கு நடுவே போடற மாதிரி.. வேற வழி.. நம்ம ஜனங்க டேஸ்ட் அப்படி.. ம் ம் .பேட்டில மதன் சார் தான் எல்லா கேள்வியையும் கேட்டாரு.. பிரதாப் போத்தன் எந்த கேள்வியும் கேட்கலை. ஆனா அவருக்கு 7 தடவை க்ளோசப் ஷாட்வேற.. அண்ணன் கமல் கெட்டப்ல இருந்தாரு..ஹி ஹி (அண்ணி மட்டும் ரசிச்சிருப்பாங்க ஹா ஹா )


தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் பற்றி சொல்லியே ஆகனும்.சமீபத்துல இவ்வளவு கேவலமான டிரஸ்ஸை நான் பார்க்கவே இல்ல.(அதான் இப்போ பார்த்துட்டியே ? அப்புறம் என்ன?)பொண்ணுங்க மாடர்ன் டிரஸ் போடறது தப்பே இல்லை.. ஆனா அது அட்ராக்ட்டிவ்வா இருக்கனும்.சரி.. விடுங்க.. இதுக்கு மேல ஏதாவது சொன்னா அது எங்க இஷ்டம்..நீ விமர்சனம் பண்ண வந்தது நிகழ்ச்சியையா? டிரஸ்ஸையா? அப்படிம்பாங்க.. ஏற்கனவே நமக்கு ஏழரை நடக்குது.. ( அது ஏன் நடக்குது..? சீக்கிரம் ஓடிட்டா தேவலை)


1. ராகேஷ் - 50 -50 ( ஃபிஃப்டி ஃபிஃப்டி)

பில்லா,ரன் லெவலுக்கு பில்டப் மற்றும் ஃபைட் சீனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் குறும்படம் என்ற அளவில் இது முக்கியமான படம்.எனக்கு தெரிந்து ஒரு ஷார்ட் ஃபிலிமில் இந்த அளவு பர்ஃபெக்ட் ஃபைட் சீன் வந்ததே இல்லை. அதே போல் ஹீரோ பில்டப்புக்கான ஹம்மிங்க் மியூசிக்,பில்டப் பேக்ட்ராப் எல்லாம் கலக்கல்.ஆனால் கதை தான் துக்ளியூண்டு.

ஒரு கேங்க்ஸ்டர்ஸ் குரூப்பில் பண பரிவர்த்தனையில் ஒரு கோல்மால் நடக்குது. ஹீரோ போய் அந்த பணத்தை வாங்கி வருகிறார். இதான் கதை.ஆனா எடுத்த விதம் பக்கா.. 

சாக்லேட் பேபி மாதிரி முகம் வைத்திருக்கும் ஹீரோவை நீ கொயந்தை பையண்டா என சீண்டி சீண்டியே அவனை தூண்டி விடுகிறார்கள். அவன் தனி ஆளாக கேங்க்ஸ்டர் முகாம் போய் ஃபைட் பண்ணி பணத்தை மீட்டு வருகிறான்.

இதற்கு டைட்டில் ஏன் 50 - 50 வைத்தார்கள் என தெரியவில்லை. நான் சாதா அல்ல ,இப்புடுச்சூடு கண்ணா,நான் பார்க்கத்தான் பப்பா அடிச்சா டாப்பா  மாதிரி டப்பிங்க் வாசனை  அடிக்கும் டைட்டில் வைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ,எடிட்டிங்க் போன்ற தொழில் நுட்பங்கள் ரசிக்க வைத்தது. இந்த படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்த  பிரபுக்கு பெஸ்ட் டெக்னீஷியனுக்கான பரிசு கிடைத்தது சந்தோஷம்.


2. அருண்குமார் - கையில் எடுக்க வேண்டுமா?

அண்ணன் மிஸ்கின்னின் தீவிர ரசிகர் போல . பெரும்பாலான ஷாட்ஸை எல்லாம் அவர் மாதிரியே கேமரா கோணங்கள் வைத்து எடுத்தாரு. கால்கள் மூலம் கதை செல்லும் திசை சொல்வது..

ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு தம்பதி, பக்கத்து வீட்ல ஒரு போலீஸ் ஆஃபீசர் பக்கத்து வீட்டு தம்பதி கல்யாண நாள் அன்று கணவன் வெளில போனதும் மனைவியை போலீஸ் ஆஃபீசர் பலாத்காரம் பண்ண அதை அந்த போலீஸ் ஆஃபீசரின் நடவடிக்கையை செல்ஃபோனில் படம் பிடித்த பெண்ணை அவர் மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் போட்டுத்தள்ள முயலும்போது இறந்த மனைவியின் கணவன் பழிக்குப்பழி வாங்குகிறான்.

இந்தப்படம் கிட்டத்தட்ட 30 நிமிஷப்படமா எடுத்தாத்தான் புரியும்.. டைரக்டர் ஏகப்பட்ட காசிகளை ஷூட் பண்ணிட்டு எடிட்டிங்க்ல தடுமாறி இருக்கறது நல்லாவே தெரியுது.இதுக்கு என்ன பண்ணனும்னா 8 நிமிஷப்படத்துக்கு உண்டான மாதிரி சிம்ப்பிளா சின்ன படமா எடுத்துக்கனும்.சும்மா கசாமுசான்னு அரை மணீ நேரப்படமா எடுத்துட்டு அதுக்குப்பிறகு 7 நிமிடப்படமா எடிட்டிங்க் பண்ணுனா எடுத்தப்ப இருந்த எஃப்ஃபக்ட் கிடைக்காது.

இந்தப்படத்துல ஒரு பாராட்டத்தக்க விஷயம் கணவன், மனைவி ஊடல் கொண்ட நிலையில் கணவ்ன் ஆஃபீஸில் செகரட்டரி ரூட் போடறப்ப கணவன் அவளை தவிர்ப்பது மாதிரி காட்னது... ஆண்களெல்லாம் காலரை தூக்கி விட்டுக்க ஒரு சான்ஸ்.கதை இந்த திசைல தான் போகுதுங்கறதை டைவர்ட் பண்ண அந்த சீனை இயக்குநர் வெச்சிருக்கனும். நல்ல உத்தி..

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்காக சட்டத்தை கையில் எடுக்க வேண்டுமா? என்பது தான் கதையின் தீம் என்றாலும் டைட்டில் எஸ் ஏ சந்திர சேகர் காலத்தில் எடுத்த பட தலைப்பு மாதிரி சுரஹ்ட்தே இல்லாமல் இருக்கு. இந்தப்படத்துக்கு பக்கத்து வீட்டு பரிமளா,ஃபிகரு இங்கே.. மர்டர் எங்கே? இப்படி டைட்டில் வெச்சிருக்கலாம்.. ( இதை சம்பந்தப்பட்ட டைரக்டர் படிச்சா இப்படி கேவலமா டைட்டில் வைக்கறதுக்கு தான் வெச்ச டைட்டிலே தேவலாம்னு நினைப்பாரோ/? ஹி ஹி )

இந்தப்படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் ஹீரோயின் அம்சமா இருந்தாங்க.. ( பார்த்தீங்களா? ஃபிகர் நல்லாருந்தா மரியாதை தானா வருது..# தமிழேண்டா)அதுவும் கல்யாண நாள் அன்னைக்கு அவரது மங்கள கெட்டப் செம..  (சரி சரி கர்ச்சீப் எடு).இந்தப்படத்துக்கு ஃபைட் சீன்ல பேக் டிராப்ல காயத்ரி மந்திரம் போட்டது நல்லாருந்ததுன்னு கே பி சார் கமெண்ட் பண்ணுனார்.

 


3. சரத் ஜோடி - புழுதி ஆட்டம்

டைட்டிலைப்பார்த்ததுமே இது வில்லேஜ் சப்ஜெக்ட்னு நினைச்சது சரி தான். செம நேட்டிவிட்டியோட எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு முதல் பரிசு கிடைச்ச துல ஆச்சரியம் இல்லை.பசங்க பட ஸ்டைலில் எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்,. கிரிக்கெட் விளையாடற டீம்ல ஒரு சண்டை. கிரிக்கெட் பேட்டை ஒரு குரூப் ல ஒரு பொடியன் எடுத்துட்டு ஓடிடறான்.அவனை துரத்திட்டு போய் 3 பசங்க மீட்கறப்ப அவங்க சைக்கிள் எதிரி குரூப் கிட்டே சிக்கிடுது.. ஆட்டம் தொடரும்னு சப் டைட்டிலோட படம் முடியுது.. 

 இதுல பாராட்ட வேண்டிய முக்கிய அம்சம் படப்பிடிப்பு நடந்த இடம். பக்கா சேரியை செலக்ட் பண்ணி கேமரா வை லாங்க் ஷாட்ல வெச்சு லெங்த்தி
.ஷாட்டா எடுத்து தள்ளின டைரக்டரை பாராட்றதா? ரொம்ப இயல்பா சேரிப்பசங்க மாதிரியே பாடி லேங்குவேஜ்,வசன உச்சரிப்புல கலக்குன சின்னபசங்களைப்பாராட்றதா?செம கலக்கல்.

எல்லா சின்னப்பசங்களையும் மேடை ஏற்றி கவுரவிச்சாங்க.. ஆனா செம கலக்கு கலக்குன அந்த குண்டு பையன் மிஸ்ஸிங்க்..

இந்தப்பட டைரக்டர் மேடைல பலராலும் பாராட்டப்பட்றப்ப அவர் காட்டிய நிதானம் ஆச்சரியப்பட வெச்சுது.. ரொம்ப சிம்பிளா ஸ்மைலிங்கோட அதை எதிர் கொண்டது அண்ணன் ரொம்ப பக்குவப்பட்டிருக்கார்னு தோணூச்சு.. வெல்டன்..

 டிஸ்கி - மேலே உள்ள ஸ்டில்ஸ்களுக்கும், குறும்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா ஒரு ரசனைக்காக....

Tuesday, April 26, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விமர்சனம்


இந்த வாரம் 24.4.2011 ஞாயிறு அன்று கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சி எப்பவும் போல கொண்டாட்டத்தோட தொடங்குச்சு,,ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேருமே இப்பவெல்லாம் நல்லா உற்சாகமா பேசறாங்க..  அப்பப்ப விட் அடிக்கறாங்க.. அது சூழ்நிலையின் இறுக்கத்தை தணித்து கலகலப்பாக்குது.. குட் சேஞ்ச்... 

1.அப்துல்லா,சிவா, டேனியல் - ரவிக்குமார்

ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ கார்ல போறப்ப அவரை வில்லன் போட்டுத்தள்ள பிளான் பண்றான். 2 பேருக்கும் என்ன பிரச்சனை? எல்லாம் பொம்பள சமாச்சாரம் தான்.. ( அதானே பார்த்தேன்)ஹீரோயினை வில்லன் லவ்வறான்.. ஆனா அவ ஹீரோவைத்தான் லவ்வறா.. ( அப்பத்தானே ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகும்?)ஹீரோ. வில்லன் 2 பேரும் கடத்தல் பிஸ்னெஸ் தான் பண்றாங்க.. (பின்னே சமூக சேவையா பண்ணப்போறாங்க)

ஹீரோ பணத்தை எடுத்துட்டு எஸ்கேப் ஆக திட்டம் போடறப்ப வில்லன் அவரை போட்டுத்தள்ள வழில வெயிட்டிங்க்..

ஹீரோ கார்ல போறப்ப ஒரு ஆள் வேகமா பின்னால துரத்திட்டே வர்றான்.. என்னமோ சொல்ல வர்றான்.. ஆனா ஹீரோவுக்கு பயம், வில்லன் தான் ஆள் அனுப்பி இருக்கான்னு நினச்சு காரை வேகமா ஓட்டி கரெக்ட்டா வில்லன் வெயிட் பண்ணிட்டு இருக்கற இடத்துல கொண்டு போய் சாத்தி அவனும் அவுட், வில்லனும் அவுட்.. ( ஹீரோ,வில்லன் 2 பேருக்கும்  சம்பளம் தர வேண்டியதில்லை.. டைரக்டருக்கு சவுகர்யம்..) 

அப்புறம் பார்த்தா துரத்திட்டு வந்தவன் ஹீரோவோட கார் டிக்கி ஓப்பன் ஆனதை எச்சரிக்க வந்தானாம்... அவன் ஆக்சிடெண்ட் ஆன காரை செத்துப்போன 2 பேரை பார்த்துட்டே ஹீரோ வெச்சிருக்கற லட்சக்கணக்கான பணத்தை லபக்கிடறான்.. அவ்வளவு தான் கதை..

லாஜிக் சொதப்பல்கள்

1. இந்தக்காலத்துல கார் பேனட் திறந்திருக்குன்னு பைக்ல போறவன் சொல்றதே அதிகம்.. அதுல 160 கி மீ வேகத்துல போற காரை துரத்திட்டு வந்து சொல்ல அவன் என்ன கேனயா?அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான். நிஜ வாழ்வுல.. 

2.ஹீரோவோட கார் வர்றதைப்பார்த்த பின்பு வில்லன் கல்லை எடுத்து ரோட்ல குறுக்கே போடறான்.. 4 கல்லை எடுத்து போடவே 2 நிமிஷம் ஆகுமே.. 160 கிமீ  வேகத்துல வர்ற கார் அந்த 20 மீட்டர் தூரத்தை 3 செகண்ட்ஸ்ல கடந்துடுமே..?முதல்லயே எடுத்துப்போட்டா என்ன?

மேஜிக் கலக்கல்கள்

1. படத்துல கார் ஆக்சிடெண்ட் ஆகற சீன் நல்ல சவுண்ட் எஃபக்ட்டோட  கிராஃபிக்ஸ்னு தெரியாத அளவு நீட்டா பண்ணி இருந்தாங்க.. எடிட்டிங்க்கும் பக்கா.. 

2. படத்துல யாருக்கும் வசனமே இல்லை.. எல்லாம் பேக் டிராப்ல கதை சொல்லும் உத்தி தான்.. நல்லா திங்க் பண்ணி எடுத்திருக்காங்க..


ஹாய் மதன் கமெண்ட் - இந்த படத்துல வர்ற கார் நல்லா பிடிச்சிருந்ததுன்னு சொன்னீங்களே.. பிரதாப் ஜி அந்த பிராண்ட் பிடிச்சதா? சீன் பிடிச்சதா?

 2. ஆட்டம் - ராஜேஷ் குமார்

ஜீன் கிளாட் வேண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட்,விஜய்-ன் பத்ரி படம் பார்த்த எஃபக்ட்ல இந்த படம் எடுத்திருப்பாங்க போல.. குத்துச்சண்டை தான் கதைக்களன் கூடவே தொட்டுக்க ஊறுகாயாய் காதல்.. 

ஹீரோ ஹீரோயினை லவ்வறாரு ஜிம்ல பார்த்து வந்த பழக்கத்துல... ஹீரோயின் அப்பா காதல் கல்யாணத்துல முடிய ஒரு கண்டிஷன் போடறாரு.. பாக்சிங்க் டோர்னெமெண்ட்ல அவரோட சிஷ்யன் ஜெயிக்கனும்.. அதுக்கு ஹீரோ தோக்கனும்.. அவரு அதை விட்டுக்குடுத்தா இவரு இதை விட்டுக்குடுப்பாராம்.. ( வடிவேலு மாதிரி கேவலமான அப்பா போல)

ஆனா ஹீரோ என்ன முடிவெடுக்கறாரு?( என்னத்தை பெரிசா எடுப்பாரு?)பாக்சிங்க்ல ஜெயிச்சுட்டு அதே மேடைல பொண்ணை தூக்கிட்டு போறாரு.. போறப்ப ஒரு பஞ்ச டயலாக் வேற.. “ அந்த விளையாட்ல ஜெயிச்சாச்சு.. இனி வாழ்க்கை ஆட்டம்..இதுலயும் ஜெயிப்போம் இல்ல?

அப்பா கண் முன்னாலயே பொண்ணை தூக்கிட்டு (நிஜமாவே ) போறாரு.. அந்த இங்கிதம் தெரியாத ஹீரோயினும் சிரிச்சுக்கிட்டே அவன் கூட போயிடறா ( நல்ல குடும்பத்துப்பொண்ணு போல.. )

லாஜிக் சொதப்பல்கள் 

1. ஆர்ட்டிஸ்ட்ஸ் செலக்‌ஷன் சரி இல்லை.. ஹீரோ வில்லன் 2 பேரும் பாக்சிங்க் சேம்ப்பியன் என்றால் விக்ரம் ,சரத்குமார் ரேஞ்சுக்கு இல்லைனாலும்  ஓரளவாவது பாடி வேணாமா? ராமராஜன் மாதிரி, அப்பாஸ் மாதிரி சோப்ளாங்கிகளை போட்டது தப்பு.. 

2. சர்வ தேச டோர்னமெண்ட் நடக்கையில் ஒரே ஆரவாரம், மக்கள் கூட்டம் காட்டனும்.. அட்லீஸ்ட் கிராஃபிக்ஸ்லயாவது.. ஆனா நிஜத்துல சும்மா ஏதோ சாவடில செட் போட்டு எடுத்து நம்மை சாவடிக்கறாங்க.. 

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )

1. ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ்மேன் லைஃப்லயும் மறக்க முடியாத கேம் ஒண்ணு உண்டு

2.. டியர்... ஏதாவது பேசேன்... 

 எனக்கு ஸ்போர்ட்ஸ்னா உயிர்.. பாக்சிங்க்ல ஏதாவது சாதிக்கனும்.. ப்ளா..ப்ளா
.....

 நீ ரொம்ப மொக்கை போடறே,, நானே சொல்லிடறேன்.. ஐ லவ் யூ

3.  யூ நோ வாட்..? யூ லுக்கிங்க் சோ ஸ்மார்ட்.. 
 3. ----------------------------- -திருப்பூர் ராம்

 நிகழ்ச்சித்தொகுப்பாளினி படத்தோட டைட்டில் என்ன?னு கேட்டதுக்கு ராம் அதை சஸ்பென்சா படத்தோட கடைசில சொல்றேன்னார்.. நான் கூட எதுக்கு இந்த பில்டப்பு என நினைச்சேன்.. ஆனா க்ளைமாக்ஸ்ல அவர் சொன்னது கரெக்ட் தான்னு தோணுச்சு.. 

ஒரு கடத்தல் குரூப்.. பணம் வேணும்னு கேட்டு ஒரு ஆண், ஒரு பெண் (அவங்க 2 பேருக்கும் இதுக்கு முன்னே அறிமுகம் இல்லை) 2 பேரையும் கடத்திட்டு வந்து அடைச்சு வெச்சிருக்காங்க.. அவங்க தான் ஹீரோ, அண்ட் ஹீரோயின்னு கெஸ் பண்ணாம இருந்தா நாம படம் பார்க்கவே லாயக்கில்லை.. 

இதுல ஹீரோ ஹீரோயின் ஒரு கட்டத்துல லவ்வறாங்க.. ஹீரோவை விடுவிக்க பணயத்தொகை வந்துடுது.. ஆனா ஹீரோயினை விடுவிக்க பணம் வர்லை.. பணம் இல்லைன்னு ஹீரோயினோட அப்பா கையை விரிச்சுடறாரு.
 ( தத்தி வில்லனுங்க.. கடன் இல்லாத தொழில் அதிபர் மகளை கடத்த மாட்டாங்க.. ?) இப்போ ஹீரோ ரன்னிங்க்ல கார்ல ஃபைட் போட்டு 3 வில்லன்களையும் போட்டு ஹீரோயினை காப்பாத்தறாரு.. அவ்வளவுதான். கதை.

 லாஜிக் சொதப்பல்கள் 

1. ஒரு பணக்கார வீட்டுப்பையன் திடீர்னு 3 பேரை ரிவால்வரால சுடுவது எப்படி?அவன் என்ன ஜேம்ஸ்பாண்டா?

2.கடத்தப்பட்ட அந்த பொண்ணும், பையனும் அதிகபட்சமா 8 மணி நேரம் அடைக்கப்பட்டிருக்காங்க.. அதுக்குள்ள லவ் வருமா? ( அதுக்குள்ள வர்லைன்னா வேற எதுக்குள்ள வரனும்னு எதிர்பார்க்கறே..?) 

3. கடத்தப்பட்டவங்களை எந்த மாங்கா மடையனா இருந்தாலும் ( நிஜமான மாங்கா மடையர்கள் மன்னிக்க) தனித்தனி ரூம்ல தான் அடைச்சு வைப்பான்.. எதுக்கு 2 பேரையும் ஒரே ரூம்ல அடைச்சு வைக்கனும்? ( அடேய் சி பி நீ தாண்டா மாங்கா மடையன்.. ஒரே ரூம்ல அடைச்சு வெச்சாத்தானே 2 பேரும் லவ்வர்ஸ் ஆக முடியும்?)

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )


1. எந்தப்பிரச்சனை வந்தாலும் தைரியமா இருக்கறதுதான் முதல் தேவைன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. ( உங்கப்பா மட்டும் இல்ல.. எல்லாரோட அப்பாவும் தான் சொல்வாங்க.. ஆனா அதை ஃபாலோ பண்ணனுமே..?)

2. மிஸ்.. உங்க பேரென்ன?

 உயிரோட இருந்து மறுபடி நாம சந்திக்கும் வாய்ப்பு வந்தா பேர் சொல்றேன்..




3. ம் ம் இப்போ உங்களை காப்பாத்திட்டேன்.. இப்பவாவது பேர் சொல்லுங்களேன்.. 

 தேன் மொழி..  ( இதுக்குத்தான் இந்த பில்டப்பா? நான் கூட சொப்பன சுந்தரின்னு நினைச்சேன்)


செமி ஃபைனலுக்கு 3 பேரும் செலக்ட் ஆகிட்டாங்க.. 3வதா வந்த ராம் படம் பிரைஸ் வாங்குச்சு.. ஹீரோ ,ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துனாங்காட்டி அது செலக்ட் ஆச்சாம்.. ஓக்கே.. 

 ஒரு முக்கியமான விஷயம்.. 3 குறும்படங்கள்லயும் ஹீரோயின்ஸ் அழகு ஃபிகர்கள் தான் .. லாங்க்‌ஷாட்ல பளிச்னு மின்ன்னல் மாதிரி காட்டிட்டதால ( அதாவது சரியா காட்டாததால) அவங்களை சரியா வர்ணிக்க முடில.. ( ஆமா.. இவரு பெரிய சாண்டில்யன். வர்ணிச்சுட்டுத்தான் மறு வேலை)

 அதனால நாளைய இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை ஹீரோயின்ஸ்க்கு க்ளோசப் ஷாட் வைங்க.. நீங்க மட்டும் ரசிச்சா போதுமா? ஹி ஹி 

Tuesday, March 15, 2011

நாளைய இயக்குநர் - மழலை +டிராஜடி கதைகள்

[0.jpg]
ஏற்கனவே பலமுறை சொன்ன மாதிரி கலைஞர் டி வி ல எனக்கு பிடிச்ச புரோகிராம் வாரா வாரம் ஞாயிறு காலை 10. 30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சிதான் என்றாலும் இத்தனை நாளா மனசுக்குள்ள புதைச்சு வெச்ச ஒரு ரகசியத்தை இப்போ ஓப்பன் பண்றேன்..(மனசுக்குள்ள நீரா ராடியான்னு நினப்பு)

தொகுப்பாளினியா வர்ற ஃபிகர் எனக்கு பிடிக்கலை.. ( பொண்ணு பார்க்கப்போன மாப்பிள்ளை மாதிரியே பேசறானே)பொதுவா பொண்ணுங்கன்னா உண்மையான குங்குமம் வெச்சுட்டு வந்தாத்தான் நல்லாருக்கும்.( அப்போ பொய்யான குங்குமம்னா என்ன? # ஸ்டிக்கர் பொட்டு) பாப்பா பிரச்சனை எதுக்குன்னு பெரும்பாலும் பொட்டே வைக்கறதில்லை..அது பெரிய மைனஸ்..அப்புறம் பாப்பா போட்டுட்டு வர்ற டிரஸ் கரகாட்டக்காரி மாதிரி நல்லாவே இல்லை.. இதை எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்.. ஆனா பாப்பா செயற்கையா சிரிக்குது பாருங்க.. அதை தாங்க முடியல...

இப்போ நீ விமர்சனம் பண்ண போறது பாப்பாவையா? குறும்படத்தையா?ன்னு சலிச்சுக்கறவங்களுக்கு...சென்னை  டி நகர் -ல் உள்ள டி சி மேனர் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணியாற்றும் ஒரு ஃபிகரை பற்றி குறிபிட விரும்புகிறேன்.. (ஃபிகர் சுட்டி பொருள் விளக்கு..)அந்த ஃபிகர் +2 தான் படிச்சிருக்குன்னாலும் ஏர்ஹோஸ்டல்ல ஒர்க் பண்ற மாதிரி செம நீட்டா இருக்கும்..அந்த ஹோட்டலுக்கே ஒரு கவுரவம் அந்த ஃபிகர்தான்.ஃபிகருக்கு சம்பளம் மாதம் ரூ 27,000.வேலை சும்மா சிரிக்கனும்.. அவ்வளவுதான்...இது பற்றி மேலும் விபரங்களை என்னைக்கவர்ந்த கேரளா ஃபிகர்கள் என்ற புதிய பதிவில் விளக்கமா பார்ப்போம்.. இப்போ....
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/06/Priyamani-new-gallery-8.jpg

1. ஆசை - அருண்குமார்

டைட்டில்லயே சைக்கிளை டிசைன் பண்ணி கலக்கலா லே அவுட் குடுத்ததைப்பார்த்ததும் படம் பின்னி எடுக்கும்னு நினைச்சேன்.. ம்ஹூம்.. சுமார்தான்.சின்ன பொண்ணு ஒண்ணு சைக்கிள் வாங்க ஆசைப்படுது..கொஞ்சம் கொஞ்சமா காசு உண்டியல்ல சேர்த்து எப்படியோ ஒரு குட்டி சைக்கிள் வாங்கிடுது.. ஆனா ஒரு வேன் வந்து அதை இடிச்சு ரிப்பேர் பண்ணிடுது..

டிராஜடியா முடிக்கனும்கறதுக்காக வேணும்னே பண்ணுன மாதிரி இருக்கு.. இதன் மூலமா டைரக்டர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல..மனதை தொடலை..ஆனா ஒளிப்பதிவு, கேமரா கோணங்கள் எல்லாம் ரொம்ப பிரமாதம்..

இயக்குநர் கவனிக்கத்தவறிய அம்சங்கள்

1. படத்தில் காட்டப்பட்ட அந்த சின்ன உண்டியலில் 200 ரூபா அளவுக்குத்தான் காசு போட முடியும்...இதை எப்படி உறுதியா சொல்றேன்னா மண்பாண்டம் செய்யும் குயவனாக இருக்கும் எங்க ஊர் நண்பன் சரவணன் என் கூட அமர்ந்துதான் பார்த்துட்டு இருந்தார்.. அவர் சொன்ன தகவல் தான் அது..300 ரூபா அதுல சேர்க்க முடியாது.

2. அதே போல் ஒரு ரூபாக்காசு, மற்றும் 2 ரூபாக்காசு மட்டுமே அந்த சிறிய உண்டியல் துவாரத்தில் போட முடியும். 5 ரூபாக்காசு போட சான்ஸே இல்லையாம்..( 2 ரூபாக்காசே ரொம்ப சிரமப்பட்டே போடமுடியுமாம்..).ஆனால் ஒரு சீனில் உண்டியலை உடைத்த பிறகு அதில் இருந்த காசுகளை எடுக்கும்போது 5 ரூபாக்காசு நிறைய இருக்கு.

3. வேகமாக வரும் வேன் அந்த சைக்கிளை இடித்து தள்ளும்போது சப்பழிந்து போகும், அல்லது தூக்கி அடிக்கும்.. படத்தில் காட்டுவது போல் ஒரு சக்கரம் மட்டும் தனியே கழண்டு போக வாய்ப்பே இல்லை..

நான் சொல்ற பாயிண்ட்ஸ் ஏதோ குறை சொல்லனும் என்ற நோக்கில் சொல்லப்படுவதல்ல.. அடுத்த முறை அவர்கள் கவனமாக படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்வது..
http://tamildigitalcinema.com/wp-content/gallery/bhuvaneswari-hot/bhuvaneswari-hot-1.jpg
2. தருணம் - மணிவண்ணன்

எதிர்பாராதவிதமா ஒரு ஆக்‌ஷன் கம் டெரரிஸ்ட் ரிலேட்டட் மூவி...கேமரா ஆங்கிள் கலக்கலா இருந்துச்சு.கோயிலுக்கு ஒரு தம்பதி சாமி கும்பிட வர்றாங்க.. ஒரு தீவிரவாதி கும்பல் கணவனை பிடிச்சு அவன் உடம்புக்குள்ள ஒரு வெடியை வெச்சு ஆபரேஷன் பண்ணி பப்ளிக் பிளேஸ்ல அவனை அனுப்பறாங்க.. பிணையக்கைதியா மனைவி...என்ன நடக்குது?ங்கறதை  நல்ல சஸ்பென்ஸா சொல்லி இருக்காங்க..

இது எழுத்தாளர் சுபா அவர்கள் எழுதிய ஒரு நாவலின் வடிவாக்கம் (சூப்பர் நாவல் 1998 நவம்பர் உயிர்பலி) என்றாலும் இயக்குநர் விட்டு விளாசி இருந்தார்..7 நிமிடத்தில் இந்த மாதிரி ஒரு திரில்லர் எடுப்பது ரொம்ப கஷ்டம் தான்..ஹாய் மதன் கூட இதை பாராட்டி THE  Bourne  IDENTITY  படம் போல் திரில்லர் வகையறா படம் எடுக்க வாழ்த்துக்கள் என்றார்.

மனம் கவர்ந்த வசனம்

மனைவி - உங்க பெயரை இனிஷியல் ஆக்க ஒரு சொந்தம் வரப்போகுது..

கணவன் - என் வாழ்க்கைலயே ரொம்ப சந்தோஷமா இருக்கற 2வது தருணம் இதுதான்

மனைவி - அப்போ முத தருணம்..?

கணவன் - நம்ம முதல் கல்யாண நாள்

இந்த மாதிரி ஒரு ஆக்‌ஷன் பேக் டிராப்ல லவ் டயலாக் ஒரு ரிலாக்‌ஷேஷனா இருக்கும். வெல்டன் டைரக்டர்.அதே போல் க்ளைமாக்சில் வெடி குண்டை வெடிக்க வைக்கும் ரிமோட் பட்டனை புறா தட்டி விடுவது செமயான சீன்.(டைரக்டர் மணி அகதா கிறிஸ்டி,சுஜாதா ரசிகர் போல)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYdmpT0_prjnmrdtEyBSPFra6ns0abOTpVcb4PzFtrgIGHTJ8NVQTMl-Qx8Z0WBjWvx1qws4EKb4Ol6dPeZJ6eeAxNIYm0T3W72RbSaPvi9Eg6tzrjXMrgn3_Th2zFpbEgUZuXL2mDdQxt/s1600/nishanti+in+transparent+saree+%25283%2529.jpg
3.  பசி - ஆர் .ரவிக்குமார்

ஒரு கிராமத்துக்கதை.. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கற சூழல்ல ஸ்கூல்ல போடற சத்துணவையாவது சாப்பிடலாம்னு ஏங்கற பையன் கதை.. ஸ்கூல்ல பாடம் நடத்தறப்பக்கூட அவனுக்கு சாப்பாட்டு ஞாபகம் தான்.அந்த அளவு அவனை பசி துரத்துது.. கடைசில அவன் சாப்பிடும்போது அந்த சாப்பாட்ல பல்லி விழுந்துட்டதா சொல்லி அதையும் பிடுங்கிடறாங்க..

இந்த கதைல முக்கியமா  அந்த சின்னப்பையனோட நடிப்பு நல்லாருந்தது.. ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னன்னா ஹாய் மதன் அந்த பையனை மேடைக்கு கூப்பிட்டு அவனை வாங்க போங்க என மரியாதை கொடுத்துப்பேசி ஊக்குவிச்சதுதான். வெல்டன் மதன் சார்..

இயக்குநர் ஒரு விஷயத்துல பாராட்டப்படவேண்டிய ஆள் தான். என்னான்னா ஸ்கூல்ல பாடம் நடத்தறப்ப கனிகள் பற்றி பாடம் வருது.. அப்போ எல்லா வகை கனிகளும் அந்த பையனோட நினைவலைகளில் சுற்றுவது மாதிரி ஒரு கிராஃபிக்ஸ் ஷாட் வெச்சது அழகு...அவர் பண்ணுன சின்ன மிஸ்டேக் ஏழை சிறுவனா நடிக்க  உண்மையாகவே ஏழையை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.. அந்த பையனோட முகத்துல செல்வக்களை தாண்டவமாடுது.. (FACE SHINING)

இதுக்கு ஹாய் மதனோட கமெண்ட் ,  “அரெஸ்ட்டிங்க் ஷாட் வைக்க முடியல.. பசி என்பது நிறைய பேர் எடுத்துக்கிட்ட தீம் என்பதால் உங்களால ஒரு வட்டத்தை விட்டு வெளில வர முடியல...புதுசா சொல்ல முடியாம தவிச்ச மாதிரி இருக்கு. உங்க கைகள் கட்டப்பட்டிருக்கு....”   100% கரெக்ட்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisdFbugtozFImXP2_GstPWidbmCr9M9hvZDxXnA9BR-x1b3DQhx-8QB9EpH3qfasrRBEYXRESdJwhIw1P-OxBS1S6PElMWwqEXfm4wziXp_eZnck3Z9Rt3ndI5-MfSKgznw0yCq0FSH-Eq/s1600/neelam-actress-stills-010.jpg
4. அஞ்சு ரூபா - எஸ் . வி . அருண்குமார்

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே அசத்த ஆரம்பிச்ச இந்தப்படம் முதல் பரிசு வாங்குனதுல எந்த ஆச்சரியமும் இல்ல. பலரின் ஏகோபித்த ஆதரவு இந்தப்படத்துக்கு கிடைச்சதுக்குக்காரணம் மென்மையான கதை சொல்லல் பாணியும், சிறுவனின் பண் பட்ட நடிப்பும்..

ஒரு சின்ன பையன் பலூன் வாங்க ஆசைப்படறான்.. அஞ்சு ரூபா.. அவனுக்கு கிடைக்கல.. அம்மா கிட்டே கேட்கறப்ப  செலவுக்கு டெயிலி தர்ற அம்பது பைசாவை சேர்த்து வெச்சு வாங்கிக்கோ அப்படிங்கறா...அவனும் சேர்த்து வைக்கிறான்..காசை எங்கேயோ தொலைச்சுடறான்.. அப்புறம் அம்மாவே வேற ஒரு அஞ்சு ரூபாவை குடுத்து இதுதான் தொலைஞ்சு போன காசுங்கறா..அந்த காசை ஒரு அவசரத்துக்கு அம்மா க்ரேட்டப்பக்கூட அவன் கொடுக்காம அழுது அடம் பிடிக்கறான்.. இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்து வெச்ச அஞ்சு ரூபாவை குடுத்து அவன் பலூன் வாங்கப்போனப்ப பலூன் விலை 6 ரூபா ஆகிடுது
கலைஞர் ஆட்சில விலைவாசி கடுமையா ஏறுதுன்னு சிம்பாலிக்கா சொன்ன காட்சி வெச்ச படத்துக்கு அனுமதி அளிச்சதும், அதுக்கு பரிசு குடுத்ததும் கலைஞர் டி வி நிர்வாக இயக்குநர் எந்த அளவு அசிரத்தையா இருக்கார் என்பதற்கான அத்தாட்சி..


சேர்த்து வெச்ச காசை வெச்சு பலூன் வாங்கி வர்றப்ப அது உடைஞ்சிடுது..அவன் அடுத்த அஞ்சு ரூபா சேமிப்புக்கு ரெடி ஆகிடறான்..கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சாதாரணமா தெரியற இந்த கதை படமா நம்ம கண் முன் விரியும்போது செமயா இருக்கு..

இயக்குநரை சபாஷ் போட வைத்த இடங்கள்

1. பள்ளிக்கூடத்துக்கு போகும் மகனை அம்மா, “ ஸ்கூலுக்கு சூதானமா (ஜாக்கிரதையா) போய்ட்டு வ ரனும் என்ன?’ என்ற டயலாக்கை 2 இடங்களில் வைத்து ஏதோ ஆக்சிடெண்ட் நடக்கப்போகிறதோ என டெம்போ ஏற்றி அப்படி எந்த சீனும் வைக்காதது..

2. ஏழை அம்மா விறகு அடுப்பில் ஊதுகுழலால் ஊதும் சத்தத்தை இயற்கையாக ஆன் த ஸ்பாட் ரெக்கார்டிங்க் செய்தது..

3. பலூன்காரனின் வசனங்கள் வெகு இயல்பாக அமைந்தது..

4. அம்மா, பையனின் அற்புதமான நடிப்பு

பெஸ்ட் ஆக்டிங்க் விருதை கடைசி 2 படத்தில் நடித்த 2 சிறுவர்களுக்கும் கொடுத்தது கை தட்டல் பெற வைத்த  முடிவு..

டிஸ்கி -1. குறும்பட ஸ்டில்கள் எதுவும் கிடைக்கலை.. என் மெயிலுக்கு அனுப்பி வைங்கன்னு சொன்னதை யாரும் மதிக்கலை..(வழக்கம் போலவே..)அதனால சில குறும்பு பட ஸ்டில்கள்.. ஹி ஹி

டிஸ்கி 2  - முதல் 2 ஸ்டில்களில் ஃபிகர்கள் 2ம் கலைஞருக்கு பிடித்த மஞ்சள் நிற டிரஸ் அணிந்து நிற்பதும், அடுத்த 2 ஸ்டில்களில் உள்ள ஃபிகர்கள் கலைஞர் டி வி யின் நிர்வாக இயக்குநர்க்கு பிடித்த நிறமான டார்க் ரோஸ், லைட் ரோஸ் நிறங்களில் டிரஸ் அணிந்து நிற்பதும் எதேச்சையானவை.. எந்த  உள்குத்தும் இல்லை.. ஹி ஹி