Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, June 12, 2012

நாளைய இயக்குநர் -விமர்சனம் (10.6.2012)



வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க..

நடுவர்களான இயக்குநர் விக்ரமன், சுந்தர் சி ரெண்டு பேர்ட்டயும் ஆர்த்தி ஒரு கேள்வி கேட்டாங்க..நம்ம நாட்டுல நடத்தற ஷூட்டிங்க், ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல நடத்தற ஷூட்டிங்க் எது ஈசி,  என்ன ரீஸன்?


ஃபாரீன்ல செலவு கம்மி.. 10 பேரை வெச்சு முடிச்சுடலாம்.. இங்கே யூனியன் அது இதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்.. 100 பேரை வெச்சு  எடுக்கனும், செலவு, சிரமம் எல்லாம் பல மடங்கு.. அப்புறம் நம்ம நாட்ல ஷூட் பண்ண பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. உதாரணமா மேட்டூர் டேம்ல ஒரு ஷூட்னா வன இலாகா, PWD,போலீஸ் இப்படி பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. ஃபாரீன்ல அப்படி இல்லை.. ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட்ல சொன்னா போதும்.. அவங்களே ஒரு ஆளை கூட அனுப்புவாங்க .. ஷூட்டிங்க்ல ஏதாவது பிரச்சனைன்னா அவங்களே உதவி செய்வாங்க, க்ளியர் பண்ணி விடுவாங்க 


அப்டின்னாரு சுந்தர் சி..அதே போல் விக்ரமன் சாரும் ஸ்விச்சர்லாந்தில் ரொம்ப ஈசியா தான் நடத்துன பட ஷூட்டிங்க் பற்றி சிலாகிச்சு பேசுனாரு..



1.இயக்குநர் பெயர் - மித்ரன்  , குறும்படத்தின் பெயர் - மனிதம் ( அறம் செய்ய விரும்பு )


ஒரு நாட்டுல ஒருத்தர் செய்யற தப்பால அந்த நாட்டுக்கே  கெட்ட பேர் வர்றது எப்படி? எதனால குறை சொல்றாங்க? அப்டிங்கற ஒன் லைன் தான் கதைக்கரு.. சமீபத்துல ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தான் கதைக்கான பேசிக்  KNOT

ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் ஒரு இந்திய மாணவன் செல் ஃபோன்ல அப்பா கிட்டே பேசிட்டு இருக்கான்.. அப்போ ஒருத்தன் வந்து அவனை கத்தியால குத்திட்டு போயிடறான்.. கொலை செஞ்சவனோட அம்மா வீட்ல அவனோட வித்தியாச நடவடிக்கைகளை நோட் பண்றாங்க.. இன்னொரு பக்கம் கொலை செய்யப்பட்ட பையனோட அப்பா கண்ணீர் விட்டுட்டு இருக்காரு..

 கலவரம், போராட்டம் நடக்குது.. நாடு முழுவதும் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் ஒரே ஒரு நாள் இந்திய உணவை சாப்பிட முடிவு செய்யறாங்க. ஒரு அஞ்சலி மாதிரி.. கொலையாளியின் அம்மாவே போலீஸ்ல அவனை பிடிச்சுக்கொடுத்துடறா.ங்க.

 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  கேவலம், ஒரே ஒரு செல் ஃபோனுக்காக ஒரு ஆளையே கொல்வாங்களா?

2. டேய் இந்தியா வர்றப்ப எனக்கு ஃபாரீன் சரக்கு வாங்கிட்டு வாடா..

அப்பா.. பையன் கிட்டே இப்படியா பேசுவாங்க?

புள்ளையையே எக்ஸ்போர்ட் பண்ணிட்டேன், சரக்கை இம்போர்ட் பண்ணக்கூடாதா?

3. குத்தறதையும் குத்திட்டு குருமா வேற சாப்பிடுவாங்களா?

4. என் பையன் எங்கே எல்லாம் போனானோ அங்கே எல்லாம் நானும் போய் பார்க்கனும்



சுந்தர் சி இந்தப்படத்தை ரொம்ப சிலாகிச்சு பாராட்டுனாலும் படம் ரொம்ப ஸ்லோவா போகுது,இன்னும் ஸ்பீடு பண்னனும்னாரு



2..இயக்குநர் பெயர் - கார்த்திகேயன் , குறும்படத்தின் பெயர் - புழுதிக்காடு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஒளிப்பதிவுல கலக்கி எடுத்துட்டாங்க .. அழகிய கிராமம்.. அங்கே பனை மரங்கள் உள்ள இடம்.. நிர்மலமான வானம், குருவி, ஓடை, பச்சைப்பசேல் வயல்கள், என ஷாட் பை ஷாட் பின்னி எடுத்தாங்க.. ஆனா கதை தான் ஒண்ணும் தேறலை..

 படத்துல வசனமே இல்லை.. 5  பிட் பாட்டுக்கள்.. ஓப்பனிங்க் ஷாங்க், ஒரு கொண்டாட்டப்பாட்டு, ஒரு ஒப்பாரிப்பாட்டு, ஒரு காதல் பாட்டு, நண்பர்களுடனான ஒரு தெம்மாங்குப்பாட்டு.. அவ்ளவ் தான் படம் முடிஞ்சுது.. இதுல என்ன சொல்ல வர்றாருன்னு தெரியலை..

 இதே கேள்வியை ஜட்ஜ்ங்க கேட்டப்ப “ ஹீரோவை அவன் காதலி மறந்துட்டு போயிடறா.. ஆனா ஹீரோவால அவளை மறக்க முடியலை.. அவ நினைவாவே காலம் எல்லாம் வாழறார்.. அதைத்தான் சொல்ல வந்தேன்னாரு.. ஆனா காட்சிகள்ல அந்த வலி பதிவு செய்யப்படலை.. 


பாடல் மூலமா கதை சொல்றது நல்ல விஷயம் தான் நாங்க எல்லாம் ஒரே பாட்டுல ஹீரோவை கோடீஸ்வரர் ஆக்கி இருக்கோம், ஆனா நீங்க சொன்ன கதைல எதுவும் தேறலை, பெட்டர்  லக் நெக்ஸ்ட் டைம் அப்டின்னாரு விக்ரமன்


3. இயக்குநர் பெயர் - நித்திலன் , குறும்படத்தின் பெயர் - சிரிப்பு வர்லைன்னா  பொறுப்பு நாங்க இல்லை

இதுல ஸ்பெஷல் விஷயம் என்னான்னா படத்தோட  ஹீரோ நம்ம ஊர்க்காரர் சாம் ஆண்டர்சன்.. 

ஒரு அப்பா தன் பையனை மன நல  மருத்துவரிடம் கூட்டிட்டு வர்றார்.. அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு.. விசாரிச்சா காதல் தோல்வி.. தன்னோட  3 காதல் தோல்விகள் பற்றி ஹீரோ புளி போடாமயே விளக்கறாரு.. அப்போ டாக்டர் சொல்றாரு.. என் கிட்டே  ஒரு மாத்திரை இருக்கு, அதை விழுங்கிட்டா நீ கடந்த காலத்துல பயணம் செஞ்சு நீ செஞ்ச தப்பை கரெக்ட் பண்ணலாம், உன் காதலியை கிஸ் பண்ணலாம், என்ன வேணா செய்யலாம்..

 அட்டகாசமான வாய்ப்பு.. ஆனா இந்த ஹீரோ என்ன பண்றாரு ? கடந்த காலத்துல போய் தன்னை  , தன் காதலை கேவலப்படுத்திய ஒரு காதலி கிட்டே 1000 ரூபா நோட்டுல ஐ லவ் யூ எழுதி கொடுக்கறாரு.. அந்த பொண்ணு கெக்கே கெக்கே பிக்கெக்கே  என சிரிச்சுட்டே வாங்கிக்குது.. உடனே பளார்னு ஒரு அறை விட்டுட்டு ரிட்டர்ன் வந்துடறாரு.. 

 ரெண்டாவது காதல்.. அதை எதிர்த்த தன் அப்பாவை அடிச்சுட்டு வர்றாரு.. க்ளினிக் வெளீல வெயிட் பண்ணிட்டு இருந்த அப்பா அழுதுட்டே வர்றாரு.. அங்கே அடிச்சா இங்கே வலிக்கும் - ரமணா டயலாக் போல .. 

 மூணாவது காதல் -ல ஒரு ட்விஸ்ட்.. அதாவது காதலியின் அண்ணன் இப்போ மாத்திரை கொடுத்த டாக்டர் தான். அவரையும் ஹீரோ அடிக்கறாரு.. டாக்டர் அய்யோ அய்யோன்னு கத்த படம் ஃபினிஷ்.. 


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  கடந்த காலத்துல பயணிக்கும் அரிய வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் பாசிட்டிவா திங்க்  பண்ணி  காதலியை கரெக்ட் பண்ண பாப்பாங்க. ஹீரோ 3 காதலிகளை கண்டுக்கவே இல்லை.. பழி வாங்கும் உணர்ச்சி தான் அவன் கிட்டே இருக்கு.. 


2. காமெடிக்குத்தான் என்றாலும் 3 ஃபிளாஸ்பேக்க்கிலும் அவர் அடி  போடுவது போர்..  ஒவ்வொரு காதலையும் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்.. 


3. நான் எடுக்க நினைச்ச கதையே வேற.. சாம் அண்டர்சன் கால்ஷீட் சொதப்பலால் வேற கதையை மாத்த வேண்டியதா போச்சுன்னு சமாளீஃபிகேஷன் கொடுத்ததை ஏத்துக்க முடியலை..


 சிறந்த படம் முதல் படமே.. அவார்டு வாங்குனதும் அதுவே..

Tuesday, June 05, 2012

நாளைய இயக்குநர் - ஃபேன்ட்டசி கதைகள் -(27.5.2012)-விமர்சனம்

மரசிற்பம் செய்யும் மாமனிதர்..........-k r vijayan.
Photo: மரசிற்பம் செய்யும் மாமனிதர்...........
1. இயக்குநர் பெயர் - பாக்யராஜ் கண்ணன் - குறும்படத்தின் பெயர் - வசூல்

இயக்குநர் தன் பேருக்குத்தகுந்த மாதிரி குறும்பான கதையைத்தான் செலக்ட் பண்ணி இருக்காரு..

ரஜினியின் அதிசயப்பிறவி,வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் படங்கள் மாதிரி இதுவும் ஒரு ஃபேண்டசி மேல் லோக கதை தான்.. அதாவது எம தர்ம மகாராஜா தன் சின்ன வீடான ரம்பை வீட்டுக்கு போறப்ப சாரி போன பின் அங்கேயே பாசக்கயிறை மறந்து வெச்சுட்டு வந்துடறாரு .. அதனால காலைல பூலோகத்துல ஒரு  உயிரை எடுக்க வேண்டிய சூழ்நிலைல அவரால உயிரை எடுக்க முடியலை.. அந்தாளோட சம்சாரம் அவரை எமலோகத்துக்கு கூட்டிட்டுப்போக ஒரு கண்டிஷன் போடறாங்க.. அதாவது அவங்க கணவர் பல பேருக்கு பணம் கடன் கொடுத்திருக்கார்.. அந்த கடன் பல லட்சங்கள் மதிப்பு பெறும்.. ஏதாவது ஒரு கடனை வசூல் பண்ணிக்கொடுத்துட்டு கூட்டிட்டுப்போங்கங்கறாங்க .. ( இவ தான்யா பொண்டாட்டி - டாக்டர் ராஜசேகர்க்கு அடுத்த பட டைட்டில் ரெடி )

எமனும், சித்திர குப்தனும் அங்கே இங்கே அலைஞ்சு பார்க்கறாங்க, வேலை ஆகலை..என்ன நடக்குதுங்கறதை காமெடியா சொல்லி இருக்காரு.. ஒரு 8 நிமிஷ படத்துக்கு அவர் உழைப்பு அதிகம் .. வெல்டன் சார்..

எமனா நடிச்சவர் நடிப்பு கலக்கல்னா அந்த சொர்ணாக்கா நடிப்பு செம.. வசனங்களில் நகைச்சுவை இழை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. கடனை எப்போ ரிட்டர்ன் பண்ணப்போறே?

எப்போ வேணும்னாலும்.. கைல காசு இருக்கறப்ப

2. மகனே!

யார்.. என் அப்பனே!

3. ஏத்துன போதையைக்கூட இறக்கிடலாம், ஆனா கொடுத்த கடனை திருப்பி வாங்கவே முடியாது

4. அவங்க ரம்பா மாதிரி என் கண்ணுக்கு தெரியறாங்க..

 என் கண்ணுக்கு என் வாகனம் எருமை மாதிரி தெரியறாங்க..

5. எனக்கு ஒரு சந்தேகம்..

 கேளு

 பவர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

6. இப்போ கணக்கு சரியா வருதா?

ம்ஹூம், கணக்கு சரியா வர்லை, காதல் தான் வருது



எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.
Photo: எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது  சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.




2. இயக்குநர் பெயர் - ஸ்ரீகணேஷ்  - குறும்படத்தின் பெயர் - பரிசு



ஒரு ஏழை.. குடிசை வீட்ல வசிக்கறாரு.. அவர் குடிகாரர்.. மனைவிதான் பொறுப்பா வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாத்துது.. அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை.. 10 வயசு.அந்தபெண்ணோட கனவுகள் பூ வளர்க்கனும்,கிதார் கத்துக்கனும், சைக்கிள் வாங்கனும்,,


 சைக்கிள் வாங்க காசு சேர்க்கறா.. அம்மா தீனி வாங்க குடுக்கற காசு, அக்கம் பக்கம் வீடுகளில் கடை கண்ணிக்குப்போய் அவங்க தர்ற டிப்ஸ் காசு எல்லாம் உண்டியல்ல சேர்த்து வைக்கிறா..


அப்போ டி வி ல ஒரு நியூஸ்... தானே புயல் நிவாரண நிதிக்காக அறைகூவல் விடுக்கறாங்க.. இவ தன் உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை கொண்டு போய் டி வி ஸ்டேஷன்ல கொடுக்கறா.. அவளைப்பற்றி டி வி நியூஸ்ல சொல்றாங்க.. அதைப்பார்த்த அவ பெற்றோர் உள்ளம் உருகறாங்க, அவ அப்பா இனி நான் குடிக்கலை.. 2 மாசம் குடிக்காம பணம் சேர்த்து வெச்சிருந்தா உனக்கு சைக்கிள் வாங்க காசு சேர்ந்திடும்னு சொல்றார்..


க்ளைமாக்ஸ்ல டி வி ல இருந்து அவ வீட்டுக்கு சைக்கிள் பரிசு வருது..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சைக்கிள் வாங்கி இருந்தாக்கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.. இப்போ தானே நிவாரண நிதிக்கு பணம் குடுத்தது மனசுக்கு நிறைவா இருக்கு

2. நீ ஏம்மா இந்த வீட்ல வந்து பிறந்தே?

3. ஃபோட்டோ எடுத்துக்கவா?

வேணாம் சார்.. நான் அழுத மாதிரி இருக்கேன், நல்லா வராது

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காசின் தேவை உள்ள ஏழைப்பெண் அடிப்படையில் கிறிஸ்டினாக இருந்தாலும் தான் கண்டெடுக்கும் 100 ரூபாய் பணத்தை இந்து உண்டியலில் போடுவது

2. அந்த 100 ரூபாய் இருந்தா குவாட்டர்க்கு ஆச்சு, என அப்பாவும், 4 கிலோ அரிசியாவது வாங்கி இருக்கலாம் என அம்மாவும் எதார்த்தமாக பேசுவதும், தன் பெண்ணின் நல்ல குணத்தை அவர்கள் புரியாதபடிக்கு இருப்பதும், பின் தாமதமாக அதை உணர்வதும்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அந்த சிறுமி டி வி ஸ்டேஷன்ல பணம் குடுத்துட்டு அப்பவே கிளம்பிடுது.. ஜஸ்ட் ஒரு ஃபோட்டோ  எடுக்கலாம்னு டி வி ஆஃபீசர் கேட்டப்பக்கூட வேனாம்னு சொல்லி கிளம்பிடுது.


டி வி செய்தில கூட அந்த சிறுமி பேர் சொல்லலை.. அப்படி இருக்கும்போது சைக்கிள் பரிசு தர அந்த ஆஃபீசர் கரெக்டா அந்த குடிசை வீட்டுக்கு வருவது எப்படி? எந்த விபரமும் அந்த சிறுமி சொல்லலையே?


2. அப்பா திருந்திடறாரு.. அப்போ அந்த சிறுமி தூங்கிட்டு இருக்கு.. அவளை எழுப்பி விட்டு அப்பா “ நான் திருந்திட்டேன்”னு சொல்றாரு.. மகள் மேல் பாசம் உள்ள எந்த அப்பா தூக்கத்தை கலைச்சு விட்டு தான் நல்லவன்னு சொல்வாரு.. காலைல சொல்லிக்கலாமே?

Photo


=

3. இயக்குநர் பெயர் - அஸ்வின்   - குறும்படத்தின் பெயர் - இன்பாக்ஸ்

இது செம ரொமாண்டிக் கதை.. எல்லாரும் நிமிர்ந்து உக்காருங்க..

ஹீரோயின் 75 மார்க்  ஃபிகரு.. செம கலரு.. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல என்னமோ வாங்குது,, ஒரு அழகான கேரி பேக் மாதிரி 1 தர்றாங்க.. அதே கடை, ஹீரோவும் ஏதோ வாங்கறாரு.. அவருக்கும் ஒரு கேரி பேக்..

அந்த கேரி பேக் மெயில் சேட் மாதிரி யூஸ் ஆகுது.. அதாவது ஒரு சீட்ல ஹீரோ தன் பேரை எழுதி உள்ளே போட்டா அது ஹீரோயின் பேக்ல போய் சேருது, ஹீரோயின் அதை படிச்சுப்பார்த்துட்டு அதே போல் ரிப்ளை பண்ணுது.. 2 பேரும் தங்களைப்பற்றி தகவல்களை பகிர்ந்துக்கறாங்க..

2 பேரும் அதை வெச்சு சீட்டு விலையாடறாங்க.. எப்படின்னா 13 கார்டு அந்த பாக்ஸ்ல போட்டா அவ பாக்ஸ்க்கு அது போயிடும்..திடீர்னு கேரி பேக் கிழிஞ்சுடுது.. ஹீரோ சோகம் ஆகறாரு.. ஹீரோயினும் தான்.. 2 பேரும் எதேச்சையா பார்க் வர்றாங்க.. ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க, சேர்ந்துடறாங்க ...

நம்ப முடியாத கதை தான்.. ஆனாலும் ரசனையா தான் எடுத்திருக்காங்க

1. படத்தில் நோ வசனம்.. எல்லாம் காட்சிகள் தான் மகேந்திரன் சார் படம் மாதிரி

2. படம் பார்க்கறவ்ர்களை ஏங்க வைத்து விடுகிறது அது போல் ஒரு கேரி பேக் கிடைக்காதா என..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஒரு சீன்ல ஹீரோயின் லேப்டாப்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கு.. டக்னு அதை க்ளோஸ் பண்ணிடுது.. சைன் அவுட் கொடுத்து ஆஃப் பண்ணி அப்புறமா லேப்டாப்பை மூடனும்கற பேசிக் நாலெட்ஜே கிடையாதா?

2. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் வெவ்வேற ஏரியா.. அதெப்பிடி கரெக்ட்டா ஒரே பார்க் வந்து ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க? இன்னும் நம்பகத்தன்மையோட  அந்த ட்விஸ்ட்டை யூஸ் பண்ணி இருக்கலாம்..

இந்தப்படத்துக்கு சிறந்த படம் விருது கிடைச்சுது..


Wednesday, May 02, 2012

நாளைய இயக்குநர் 29.4.2012 - விமர்சனம்

வாரா வாரம் சண்டே அன்னைக்கு காலைல 10.30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சில தான் கலைஞர் டி வி ல பெஸ்ட் புரோகிராம்னு சொல்லலாம்.. பார்க்காதவங்க ரெகுலரா பாருங்க.. 7 நிமிட குறும்படங்கள் 3 ஒளீபரப்பாகுது.. 

பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா கீர்த்தி இன்னைக்கு பச்சைக்கலர் பாவாடை ( மிடி பாட்டம்?) போட்டுட்டு வந்திருந்தாங்க.. அவங்க கழுத்துல காசு மணீ பாசி மாலையும் பச்சைக்கலர்ல.. நல்ல வேளை பச்சை பச்சையா பேசலை.. மேட்சுக்கு மேட்ச் மிஸ்.. 


அவங்க தலை வலது புறமா லேசா வீங்கி இருந்தது,.. என்னான்னு கேட்டா அது ஒரு வகை ஹேர் ஸ்டைலாம்.. சகிக்கலை.. அவர் போட்டுட்டு வந்த ஹை ஹீல்ஸ் ரொம்ப குறுகலா இருக்கு.. இதே மாதிரி அவர் ரெகுலரா சைஸ் பத்தாத செப்பலை போட்டுட்டு வந்தா கால் பணால் ஆகிடும்.. ( இப்போ விமர்சனம் ஷார்ட் ஃபிலிமுக்கா? கீர்த்திக்கா?)


1. குறும்பட இயக்குநர் பெயர் - கார்த்திக்  - குறும்படத்தின் பெயர் - தோஸ்த்


ஓப்பனிங்க்லயே இது ஒரு காமெடி படம்னு தெரிஞ்சுடுது,, ஒரு வீட்டுக்குள்ள திருடன் திருடப்போறான்.. அங்கே ஃபோட்டோல இருக்கற பெருசு ஆவியா இருந்து அவனை வழி நடத்துது.. அதாவது அந்த பெருசு உயிரோட இருந்தப்போ அந்த வீட்ல இருந்தவங்க யாரும் சரியா அவரை கவனிக்கலை போல.. அதனால எந்தெந்த பொருளை அவன் திருடனும்னு அந்த ஆவியே சொல்லித்தருது.. 

 எல்லாம் முடிஞ்சு கிளம்பறப்ப அந்த ஆவி அந்த திருடன் கிட்டே அவன் ஃபோன் நெம்பர் கேக்குது.. அப்பப்ப போர் அடிச்சா உன் கிட்டே பேசறேன்குது.. திருடனும் குடுக்கறான்.. 

 அடுத்த நாளே போலீஸ்ல மாட்டிக்கறான்.. அந்த வீட்டின் ஓனர் ஒரு ஆட்டோமேடிக் கேமரா வீடியோ செட் பண்ணி வெச்சிருக்கான்.. அந்த வீடியோவுல்  திருடன் பேசுன ஃபோன் நெம்பர் ரெக்கார்டு ஆகிடுது.. அதனால மாட்டிக்கறான்...

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உன் பேரென்ன?

 கண்ணன்

 அதான் திருட வந்திருக்கே.. 


2.  முதல்ல இந்த டி வியை எடுத்துட்டுப்போ.. இதுல வர்ற 15 சீரியலையும் என் மருமக பார்க்கறா.. கரண்ட் போனா மட்டும் தான் என் பையனுக்கு சமைச்சுப்போடறா..


3. டேய்.. வீட்ல ஒரு ஆவிடா.. 

 குடிச்சிருக்கியா? எப்போ சரக்கை அடிச்சாலும் ஏண்டா எனக்கு ஃபோன் பண்ணி என் உயிரை வாங்கறே?


இந்தப்படத்துல ஹீரோவா வந்தவர் முகச்சாயல்லயும் சரி பாடி லேங்குவேஜ்லயும் சரி பருத்தி வீரன் கார்த்தி போலவே இருந்தாரு.. செம நடிப்பு.. பெஸ்ட் ஆக்டர் விருது வாங்குனாரு.. ஆவியா வந்த பெரியவர் நடிப்பும் பாந்தம்.. 

 பொதுவா பேய்னாலே பேக்கிரவுண்ட்ல  அதிரடி திகில் இசையைத்தான் போடுவாங்க.. இதுல கர்னாடிக் மியூசிக் வித்தியாசமா இருந்தது.. 


2.  குறும்பட இயக்குநர் பெயர் -ராஜேஷ்குமார் - குறும்படத்தின் பெயர் -சாரதி

 ஒரு கால் டாக்ஸி டிரைவர்.. ஒரு லண்டன் வாழ் தம்பதிக்கு ஒரு நாள் கார் டிரைவரா வர்றாரு.. அவங்க போற பக்கம் எல்லாம் டிரைவரும் போறாரு.. டிரைவருக்கு குழந்தைன்னா ஆசை.. ஆனா அவருக்கு குழந்தை இல்லை.. அந்த தம்பதியோட பெண் குழந்தை அந்த டிரைவர்ட்ட ஒட்டுதலா இல்லை.. அந்த பாப்பாவுக்கு இந்தியாவையே பிடிக்கலை.. நரசிம்மராவ் மாதிரியே மூஞ்சியை வெச்சிருக்கு.. 
பெண் குழந்தைகளை கடத்தி வியாபாரம் பண்ற ஒரு கும்பல் அந்த பெண் குழந்தையை கடத்திடுது.. டிரைவர் கஷ்டப்பட்டு  அந்த கும்பலில் மாட்டின குழந்தைகளை மீட்டு அவங்க பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் கதை.. 


கால் டாக்சி டிரைவரா நடிச்சவர் ரொம்ப யதார்த்த நாயகனா சேரன் மாதிரி ( ஆனா குண்டு) நடிச்சிருந்தார்.. எதுக்கும் கோபத்தை காட்டாத பொறுமையான நடிப்பு.. லண்டன் தம்பதியின் குழந்தையா வந்த பாப்பாவை விட கும்பல்ல மாட்டிக்கிட்ட இன்னொரு பெண் குழந்தை ஃபேஸ் கட், துறு துறுப்பு எல்லாம் செம கலக்கல்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா கிட் நாப் கும்பல் கடத்துனதும் மயக்க மருந்து குடுத்துடுவாங்க.. ரிஸ்க் எதுக்குன்னு.. அதுவும் இல்லாம விழிச்சிருந்தா சத்தம் போடுவாங்க அல்லது தப்பிக்க வழி தேடுவாங்க ..

2. குழந்தைகளை கடத்தி வெச்சிருக்கற அதே ரூம்ல எந்த லூஸாவது ஹீரோவை அடைச்சி வைப்பானா?

3. டிரைவர் தன் மனைவியிடம்  செல் ஃபோனில் உரையாடும் காட்சி  தேவை இல்லாதது ( பிள்ளை இல்லாதவர் என்பதால் அவர் தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்ற சஸ்பென்சுக்காக என்றாலும் அது தேவை இல்லாத சீனே..)

 நடுவரா வந்த சுந்தர் சி,  வெற்றி மாறன் 2 பேருமே ஒரு குறை சொன்னாங்க.. அதாவது அந்தக்குழந்தை ஏன் டிரைவர் மேல வெறுப்பா இருக்கு.. கதைக்கு அது தேவையே இல்லைன்னு.. நான் என்ன சொல்றேன்னா நோ பிராப்ளம்.. அந்த குழந்தை வெறுப்பா இருந்தாக்கூட டிரைவர் அந்த குழந்தையை காப்பாத்தறார் என்பதுதான் கதைக்கரு.. 

 இந்த ஜட்ஜுங்க எல்லாம் ஸ்டேஜ்ல இயக்குநர்களை மடக்கிடறதா நினைச்சு சில கேள்விகளை கேட்க்றாங்க /. மேடை பயம் டென்ஷன் இதனால அந்த இயக்குநர்கள் அதுக்கு சரியா பதில் சொல்ல முடியறதில்லை.. இதனால ஜட்ஜூங்க ரொம்ப மிதப்பா நினைச்சுக்கறாங்க ..  

3.குறும்பட இயக்குநர் பெயர் -அருண் - குறும்படத்தின் பெயர் -கறுப்பு, மஞ்சள், சிவப்பு


வித்தியாசமான திகில் படம்.. பேசிக் இன்ஸ்டிங்க் - பாகம் 2 படத்தோட சாயல்ல..   காலேஜ் ஃபிரண்ட்ஸ் 3 பேரு அவங்க ரூமுக்குள்ள வர்றாங்க.. அதுல ஒரு பையன் இன்னொருத்தனை ( ரூம்ல இருக்கற 3 பேர் தவிர வேற ஒரு ஆள்) திட்டிட்டே இருக்கான்.. அவங்க பேச்சுல இருந்து நமக்கு தெரிய வர்ற விஷயம் என்னான்னா  வனை இவங்க 3 பேரும் நல்ல சக்கையா அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டாங்க.. வந்தவங்க அவன் பேக் ஒண்ணையும் எடுத்துட்டு வந்துட்டாங்க..
 

 அந்த பேக்ல ஒரு டைரி.. அது ரத்தத்தால எழுதப்பட்டிருக்கு.. அதை ஒருத்தன் படிக்கறான்.. என்ன ஆச்சரியம்னா  அதுல இவங்க அவனை அடிச்சதை, அடிச்சுப்போட்டுட்டு ரூமுக்கு வந்ததை எல்லாம் விவரமா அதுல எழுதி இருக்கு..  பயத்தோட, ஆர்வத்தோட படிக்கறப்ப ஒரு இடத்துல “ இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. 

 அதை படிச்சதும் டக்னு படிச்சவன் டைரியை அனிச்சையா தூக்கிப்போட்டுடறான்.. படிப்பு கட்,... அவன்  மண்டை பட்.. 

 மீதியை மீதி இருக்கற 2 பேரும் படிக்கறாங்க.. இப்போ நீங்க 2 பேரும் ஒருவரை ஒருவர் அடிச்சுக்கிட்டு சாவீங்கன்னு அதுல வருது.. உடனே 2 பேருக்கும் பயம்.. யார் யாரை போடப்போறாங்கன்னு.. ஆளுக்கொரு ஆயுதம் எடுக்கறாங்க.. ஆனா அதுல ஒருத்தன் சூசயிடு பண்ணிக்கறான்.. மீதி இருக்கறவன் ஒருத்தன்.. 

 இப்போ அவனும் சாகப்போறான்.. ஆனா மறுபடி எல்லாரும் பிழைச்சுக்குவீங்கன்னு வருது.. அதே போல் பிழைச்சுக்கறாங்க,..,ஆனா மறுபடி அதே போல் படிக்க ஆரம்பிக்கறாங்க..  ( செத்து செத்து விளையாடறாங்க)

 அதாவது பாதிக்கப்பட்ட அந்த ஆள் அவங்களை கொலை கொலை செஞ்சு தன் வெறியை தீர்த்துக்கறான் என்பதே கதை.. 

 ரொம்ப புதுமையா இருந்த  இந்தக்கதையை இரு இயக்குநர்களூம் பாராட்டாட்டிக்கூட பரவாயில்லை.. ஏகப்பட்ட வன்முறைன்னாங்க.. பேய்ப்படம்னா பின்னே கொஞ்சிட்டா இருக்க முடியும்?நகரம் படத்துல இல்லாத வன்முறையா? வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த பொல்லாதவன்ல கூட ஓவர் வன்முறை தான்.. 

 இதே கதை நாட் ல அமரர் சுஜாதா கூட ஒரு சிறுகதை எழுதி இருக்கார்.. டைட்டில் நினைவில்லை.. அதுல ஹீரோ ஹீரோயின் ஸ்விம்மிங்க் பூல்-ல நீச்சல் பழக்குவது போலவும் ஒருவர் சாவது போலவும்... மறுபடியும் முதல்ல இருந்து மாதிரியும் வரும்.. 

மாதவன் -ன்  யாவரும் நலம் படத்துல கூட டி வி ல வர்ற சீன் எல்லாம் நிஜத்துல நடக்கற மாதிரி காட்டி இருப்பாங்க.. 

 என்னைப்பொறுத்த வரை இது ஒரு நல்ல முயற்சி,.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. முதல் ஆள் அதே போல் சாகறான், ஓக்கே, ஆனா அதுக்குப்பிறகு 2 வதா படிக்கறவன் கூட அதே போல் பாதிலயே படிக்கறதை நிறுத்தறான்..,ஆனா அவன் மண்டை வெடிக்கலை.. அது ஏன்?

2. ரூமில் இருக்கும் 3 பசங்க ஸ்டேட்மெண்ட் படி அந்தப்பையனை நல்லா அடிச்சுப்போட்டதாத்தான் வருது , கொலை செய்யலை.. ஏன்னா அவனை இன்னொரு டைம் போய் நல்லா அடிக்கனும்னு ஒருத்தன் சொல்றான்.. அப்புறம் எப்படி அவன் செத்தான்?

3. அந்த பையனை அடிச்சுப்போட்டுட்டு அப்போதான் ரூமுக்கு வர்றாங்க.. அப்படியே அவன் செத்திருந்தாலும் 10 நிமிஷ கேப்ல பேயாகி உடனே டைரி எழுதி பழி வாங்கனுமா? 2 நாள் கழிச்சு அந்த சம்பவம் நடப்பது போல் காட்டி இருக்கலாம்.. 

 இந்தப்படத்துக்கு பெஸ்ட் கேமரா, எடிட்டிங்க்னு 2 அவார்டு கிடைச்சது.. வெல்டன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Friday, April 27, 2012

லீலை - சினிமா விமர்சனம்


http://4.bp.blogspot.com/_J3eCu6V1pog/S-wFz-u7ZPI/AAAAAAAACB0/ncysOZoO77Q/s1600/LeelaiT_457.jpg
ஹீரோ காலேஜ் லைஃப்ல ஜாலியா ஃபிகர்ங்க கூட கடலை போட்ட கடலை மன்னன் கந்த சாமி.. கட்டதுர மாதிரி அவர் சும்மா கடலை தான் போட்டாரே தவிர சாகுபடி ஏதும் செய்யலை.. அதுல ஃபோன் மூலமா அறிமுகம் ஆகி சண்டைல பிரிஞ்ச ஒரு ஃபிகர் தான் ஹீரோயின்.. ஆளை நேர்ல பார்க்காமயே பிரிஞ்சாச்சு.. 

 இப்போ ஹீரோ கம்ப்யூட்டர் எஞ்சினியர்.. அவரோட கேர்ள் ஃபிரண்ட்க்கு ஃபோன் போடறப்ப அந்த கேர்ள் ஃபிரண்ட் ஆஃபீஸ்ல வேலை செய்யற மலர்ங்கற ஃபிகர்தான் தன் முன்னாள் ஃபோன் மேட்னு கண்டு பிடிக்கறார்.. ஒன் சைடு லவ்.. கார்த்திக்ங்கற தன் உண்மை பேரை மறைச்சு சுந்தர்ங்கர பேர்ல அறிமுகம் ஆகி மலரை மயங்க வைக்கிறார்.. இப்போ அந்த மலர் சுந்தரை லவ்விங்க்.. 

 ஹீரோ கார்த்திக்கா  மலருக்கு அப்பப்ப ஃபோனை போட்டு வெறுப்பேத்துறார். அப்போதான் சுந்தரை அவர் விரும்புவார்னு.. அந்த லூஸ் ஹீரோயின் கார்த்திக், சுந்தர் 2ம் ஒரே ஆள் தான்கறது தெரியாம லவ்வுது.. 

இவங்க 2 பேருக்கும் பப்ளிக் ஃபிரண்ட் அதாவது பொதுவான ஃபிரண்ட் ஒருத்தி இருக்கா.. அவ ஹீரோட்ட சொல்லிடறா.. ஹீரோயின் கிட்டே உண்மையை சொல்லிடு இல்லீன்னா நானே சொல்லிடுவேன்னு.. இவ எதுக்கு இந்த சுப்ரமணியம் சாமி வேலை செய்யனும்னு ஹீரோ எரிச்சல் ஆகி அப்படி எல்லாம் உடனே சொல்ல முடியாது டைம்  வேணும்னு கேட்கறான்.. 

திடீர்னு ஹீரோ ஹீரோயின் கிட்டே நான் உன் கிட்டே ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.. ஆனா அது என்ன?னு கேட்காதே.. நாம பிரிஞ்சுடலாம்கறான் ..அதுக்குப்பிறகு என்ன ஆச்சு? 2பேரும் சேர்ந்தாங்களா? ஆடியன்ஸ் சோர்ந்தாங்களா? என்பதே மீதிக்கதை.. 




http://3.bp.blogspot.com/_GaVBOHRwetA/SOJUuReNxlI/AAAAAAAAVsE/0Zfll1T_AyU/s400/Leelai-Stills-007.jpg
 எங்கியோ கேள்விப்பட்ட கதை மாதிரி இருக்கா? எண்ட மூரி வீரெந்திர நாத் எழுதுன காதல் சதுரங்கம் தெலுங்கு நாவல் தான் இது.. ஆல்ரெடி குள்ள நரிக்கூட்டம்னு ஒரு படம் வந்ததே அந்தப்படமும் கிட்டத்தட்ட இந்தக்கதை தான்.அதுல ஹீரோ போலீஸ் ட்ரெயினர்.. இதுல கம்ப்யூட்டர் எஞ்சினியர். ஆனா லீலை படம் 4  வருடங்களுக்கு முன்பே ரெடி ஆன படம்.. ஏன் போணி ஆகலை.. ஏன் ரிலீஸ் ஆகாம இழுத்தடிச்சுதுன்னு யாருக்கும் தெரியலை.. கம்ப்பெனி சீக்ரெட்..

ஹீரோ பேரு ஷிவ் பண்டித்.. கொஞ்சம் மாதவன் கொஞ்சம் ஷாம் .. மீசை இல்லாத ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஈசியா வரத்தொடங்கிட்டாங்க.. லவ் சப்ஜெக்ட் ஸ்டோரில  ஹீரோக்கள் அதிகமா மெனக்கெட தேவை இல்லை என்பதால் சமாளீக்கிறார்.. காமெடி காட்சிகளீல் கொஞ்சம் பம்முகிறார்.. ஹீரோயின் உடன் பாடி கெமிஸ்ட்ரி குட்.. அதானே பார்த்தேன்.. அதுல மட்டும் கரெக்ட்டா இருப்பாங்களே//,


 ஹீரோயின் பேரு மனசி பரேக் கோகில்.. என்னமோ கன்னட பட டைட்டில் மாதிரி இருக்கு.. பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா.. லிப்ஸ்டிக் கொஞ்சமா போட்ட மாநிற பலா .. க்ளிப்போ, ரப்பர் பேண்டோ போட்டு கட்டி வைக்காத கர்லிங்க் ஹேர் அழகி .. 50 மார்க் ஃபிகர் .. தேறிடுவார்னு தோணுது.. பாடல் காட்சிகளீல் தடுமாற்றம்.. காதல்  காட்சிகளீல் கனகச்சிதம்.. 

 ஹீரோயின் ஃபிரண்டா வர்றவர் பேரு சுஹாசினி ராஜு.. த்ரிஷா அம்மா சாயல் முக ஜாடைல மற்றபடி யூத்தான்.. ஹீரோயினை விட 4 இஞ் உயரம்.. எனக்குத்தெரிஞ்சு ஹீரோயினை விட ஹீரோயின் தோழி இவ்ளவ் உயரம் இருந்து இப்போ தான் பார்க்கறேன்.. உயரத்துல தான் ஹீரோயினை இவர் முந்தறார்.. மற்றபடி எல்லாத்துலயும் ஹீரோயின் தான் முன்னிலை.. 

சந்தானம் காமெடிக்கு தனி டிராக் போட்டது தெரியாத மாதிரி பார்த்துக்கொண்டது சாமார்த்தியம்.. இதில் சந்தானம் சொந்த வசனம் பேச வாய்ப்பு அதிகம் இல்லை.. ஸ்க்ரிப்டில் என்ன இருக்கோ அதைத்தான் பேசறார். ஆனாலும் ரசிக்கலாம்.. 



http://static.sify.com/cms/image/jdwmSBaaggg.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்.


1. ஹீரோ சந்தானம் வீட்டுக்கு வந்து நான் ஒருத்திக்கிட்டே இருந்து தப்பிக்கத்தான் இங்கே வந்திருக்கேன்.. ஒளிஞ்சுக்கறேன் என சொல்லும்போது யார் இடம் இருந்து தப்பிக்க நினைத்தாரோ அதே ஆள் ஆல்ரெடி அங்கே இருக்கும் போது செம காமெடி சிச்சுவெஷன்.. அந்த காட்சியில் மூவர் நடிப்பும் ஓக்கே

2. அதே போல் ஹோட்டலில் ஹீரோ, ஹீரோயின், ஃபிரண்ட் மூவரும் சந்திக்கும் காட்சி ரசிக்க வைக்கும் காமெடி


3.  படத்தில் கவர்ச்சிக்கு வாய்ப்பிருந்தும் மிக கண்ணியமாக காதலை, ஹீரோயினை காட்டிய விதம் ( நற நற வட போச்சே.. )

4.  சில்லென்ற ஒரு கனவு,  பொன் மாலைப்பொழுதே, உன்னைப்பார்த்த பின்பே என 3 பாடல்கள் தேறுது.. எல்லாமே மெலோடி தான்... 

5. சந்தானம் காமெடி படத்துக்கு எந்த அளவு தேவையோ கதையோடு வர்ற மாதிரி கனக்ச்சிதமா தேவையான அளவு மட்டும் யூஸ் பண்ணிய விதம். 


6. பட போஸ்டர் டிசைனும், பேப்பர் விளம்பரங்களும் நீட்..

7. ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஹீரோயின் பொட்டு வெச்சு அழகா வர்றார். படம் பூராவே அப்படி வந்திருக்கலாம்

http://www.filmglitz.com/tamil/wp-content/gallery/leelai/leelai-movie-stills13_01.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. தமிழ் அகராதியில்  லீலை என்பதற்கு 1000 அர்த்தங்கள் இருந்தாலும்  தமிழனின் அகராதியில் லீலை என்பதற்கு ஒரே அர்த்தம் கில்மா தான்.. ஒரு நல்ல காதல் கதைக்கு ஏன் லீலை என்ற நெகடிவ் டைட்டில்?


2. ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணுன பிறகு அவன் ஃபேமிலி பேக் கிரவுண்ட், வீடு எது? அப்டி எதுவும்னே தெரியாம அல்லது தெரிஞ்சுக்க ஆர்வம் இல்லாமலா இருப்பாங்க?

3. ஹீரோ என்னமோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி ஃபீல் ஓவரா விடறார். தன்  பேரை மட்டும் மாத்தி சொல்றார்.. அவ்லவ் தானே.. ஒரு முழுப்படத்தையும் உட்கார்ந்து பார்க்க வைக்க அந்த ஒரே ஒரு KNOT பத்தலையே.. இதெல்லாம் ஜூஜுபி மேட்டர் ஆச்சே?

4. ஹீரோ ஹீரோயின்  எப்படியும் சேர்வாங்க அப்டிங்கறது உள்ளங்கை  நெல்லிக்கனி போல , அல்லக்கை தாமரைக்கனி போல தெரிஞ்சுடுதே எப்படி ஆடியன்ஸ்க்கு சுவராஸ்யம் வரும் திரைக்கதைல?


5. ஹீரோயினோட அப்பா உன் காதலனை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்னியே? என்னாச்சு? என ஃபிரண்ட்லியாக அப்பா கேட்கரப்ப அப்பா எனக்கும் அவருக்கும் சின்ன ஊடல்... இப்போ வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்னு ஏன் ஹீரோயின் சொல்லலை? பூசி மெழுகறா..  தேங்காய் உடைச்ச மாதிரி சொல்றதுக்கென்ன?


மனதில் நின்ற வசனங்கள்
http://reviews.in.88db.com/images/leelai/shiva-pandit-santhanam-leelai.jpg

1.  என்னை விட்டுட்டு போனது கூட எனக்கு பெரிசா தெரியலைடி.. போறப்ப உனக்கு  மோனாவே பெட்டர்னு சொல்லிட்டு போய்ட்டான்.. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை

2. கலையாத முடி, காட்டன் சுடி,கைல பேக் இண்டர்வியூக்கு வராம காபரே டான்ஸ் ஆடவா வந்திருப்பீங்க?

3.  என்னா ஆச்சு? வேலை கிடைச்சுதா? 

 பேடு லக் 

 அடடா.. 

 அதாவது கம்ப்பெனிக்கு பேடு லக்.. ஹா ஹா எனகு வேலை கிடைச்சுச்சு

4.  அடடா.. பில்டப் பண்ண விடமாட்டெங்கறாங்களே..

5. மேனேஜர் இருக்காரா? நான் அவரை இண்டர்வியூ பண்னனும்./. 

 வாட்?

 சாரி  ?  அவர் என்னை  இண்டர்வியூ பண்ணனும்

6. மிஸ்.. அடிக்கடி நாம் மீட் பண்ணப்போறோம்.. ஒவ்வொரு முறையும் ஹலோன்னு சொன்னா நல்லாருக்காது.. அதனால பேரு சொல்லுங்க ஹி ஹி 


7.  ஆல் த பெஸ்ட்.. 

 எனக்கு ஏன் சொல்றீங்க.. 

 சாரி எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்

8.  நான் ஒரு ரஃப்ஃபான சாஃப்ட் வேர் இஞ்சினியர்

9.  டேய்.. நிஜமாவே கருணை மலர் அழகா இருப்பாளா?

 தேன் கூடு மாதிரி தலையை வெச்சிருக்காளே, இவ மேல சத்தியமா சொல்றேன் அவ செம அழகுடா.. 

 10.  இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? 

 உண்மையை சொன்னா எப்படியும் நீ நம்ப மாட்டே.. சைட் அடிச்சுட்டு இருக்கறதா நினைச்சுக்கோ.

http://www.filmics.com/gallery/d/160094-1/Leelai-Movie-Stills-9.jpg

11.  நான் சொன்ன படி அவ அழகா இல்லைன்னா  இதோ இவளுக்கு மொட்டை  அடிச்சுடறேன்

12.  நீங்க கேட்கறதால இந்த சிடியை கொடுக்கறேன்.. ஆனா பொண்ணுங்கறதாலதான் கொடுத்ததா என்னை தப்பா நினைக்கக்கூடாது


13. ரொம்ப நல்லவனாவே இருக்கட்டும், ஆனா பேரைக்கூட கேட்காத தத்தியாவா இருப்பாங்க?

14.  அடுத்தவன் ஃபிகருக்கு ஏண்டா இப்படி அலையறீங்க?

15. கிஸ்னா வாய்ல தரனும் அவ வெச்சிருக்கறதுக்குப்பேரு வாயா? கோடாலி.. பல் பட்டு உதடு கிழிஞ்சிருச்சு..

16.  பார்ட்டி வெச்சே ஓக்கே யார் பாக்கெட்ல கையை வெச்சே?

17.  சார்.. கார் எடுக்கனும்

லோனா?.. ஏன் சார் பெட்ரோல்விக்கற விலைல கார் வாங்க ஆசை?

 நீங்க உங்க காரை எடுத்தா அதுக்குப்பின்னால நிக்க வெச்சிருக்கற என் சைக்கிளை நான் எடுத்துக்குவேன்

18.  இனிமே புரியாத மாதிரி எவனாவது மொட்டையா பேசுனா எவனுக்குமே கொ சாரி சட்டை இருக்காது..

19. அந்தக்கால பொண்ணுங்க புருஷன் பேரை சொல்லமாட்டாங்க, இந்தக்கால பொண்ணுங்க புருஷன் இருக்கறதையே சொல்றதில்லை.


20. நாங்க எல்லாம் பீச் காத்துலயே பீடி பத்தவைக்கறவங்க டா..


http://chennai365.com/wp-content/uploads/movies/Leelai/Leelai-Stills-1010010.jpg

21. உங்களை மாதிரி குடும்பத்து  குத்து விளக்கை ஏத்தத்தான் அவன் வெயிட்டிங்க் ஹி ஹி  ஐ மீன் உங்களுக்கு அவன் தான் ஏத்தவன்


22.  என்னது அந்தப்பொண்ணு சிலாய்க்கு மலாய்க்காவா? ( டிக்கெட்டா?)

 அப்புறம் ஏன் பாவாடை தாவணில வருது?

23.  ஏ டி எம் = ஏ டைம் மேட்டர்


24.   மிஸ் ,3 நைட், 2 பகல்..

 ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் - 2500 ரூபா ஆகும்..

 ஹலோ, ஹோட்டல்ல தங்க..


 ஓ சாரி.. நான் என் கூட தங்கறதுக்குனு நினைச்சுக்கிட்டேன் ஹி ஹி 


25. ஆளாளுக்கு டேக் ஓவர் பண்ண அது அம்பாசிடர் காரா? அத்தை பொண்ணா?



26. அங்கே சப்பி சப்பி சாப்பிடுதே அந்த சப்பிதாதான் உன் பப்பிதாவா?

27. அஸ் பர் ஆலமர பஞ்சாயத்து தீர்ப்பு அவனவன் அத்தை பொண்ணை அவனவனே தான் ஓட்டிட்டு போகனுமாம்

28.  ஏன்? ஹிந்தி ஃபிகரை லவ் பண்ணக்கூடாதா? ஹிந்திப்படத்தை டப் பண்ணா பார்க்கறீங்க? ஹிர்ந்தி ஆண்டியை ( சேட்டு பொண்ணை ) சைட் அடிக்கறீங்க.. லவ் பண்ணா ஒத்துக்கிட மாட்டீங்களே..

29.  என்ன மேடம் கண்டிஷன்? மேரேஜ்க்கு முன்னே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடனுமா? ஐ ஆம் ரெடி ஹி ஹி

30.  இப்படிக்கு ரோஸ்..

 அவனா நீ..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpKvX3MHqhU6hK20Q9j9BDKMbslWsnhLCnTOc5q1LVlaQCUF3SsTkhAYeBPIWPAwrx8-a92b61zfzBVotCiyw0O8D_Jg6WuXF388wgdVQ3v1tkrBlApSgDFFRauR9nC9Y-LTvgjTSjAuMq/s640/15177_17_leelai.jpg

31. .  தன் கண்ணுக்கு அழகா தெரியற பெண்ணை பசங்க காதலிக்க நினைப்பாங்க, அல்லது கை வைக்க நினைப்பாங்க . இந்த விஷயத்துல எல்லா பசங்களும் ஒண்ணுதான்
32.  மனசுக்குள்ள என்ன நினைக்கறானோ அதை வெளீல சொல்லாம பசங்களால இருக்கவே முடியாது

33.  நீ என் கிட்டே டீசன்சியா இருக்கே.. நல்ல ரிலேஷன்ஷிப் வெச்சிருக்கே.. ஆனா டிஸ்டென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றே.. அது ஏன்?

34.  பொண்ணுங்க லவ் பண்றாங்களா? இல்லையா?ங்கற மேட்டர் தெரியற வரை பசங்க ரிஸ்க் எடுக்க மாட்டாங்க 


35.  ஃபிகரு , கம்ப்யூட்டர் 2ம் ஒண்ணுதான்

1. இரண்டுக்கும் விரல் முக்கியம்

2. மடிச்சுதான் லேப்டாப்பை வெளில எடுத்துட்டு போக முடியும், ஃபிகரையும் மடிஞ்ச பின் தான் வெளில கூட்டிட்டு போக முடியும்.. 

3. அடிக்கடி 2ம் ஹேங்க் ஆகிடும்


36. கூகுள்ள என்ன தேடறே?

 எங்கே ஒரு பெக்குக்கு ஒரு ரூபா கம்மின்னு தேடறேன்

37.  சாரி.. நான் அங்கே வந்து தண்ணீ அடிக்க மாட்டேன்.. பேரு கெட்டுடும்.. 

 குடல், கெட்டாச்சு, பாடி கெட்டாச்சு ஈரல் கெட்டாச்சு ஏண்டா நாயே பேரு கெட்டா என்ன? கெடாட்டி என்ன?

38.  பிராப்ளம் இல்லாத லவ்வே இல்லை 

 39.  லவ்ல நாம விட்டுட்டு வர்றதை விட நம்மளை ஒருத்தர் விட்டுட்டு வர்றதுதான் ரொம்ப கொடுமையானது
40.  ரெண்டு பேருக்குள்ள ஒரு பிரச்சனைன்னா அதை 3 வதா ஒரு நபர் பேசித்தீர்ப்பது நல்லது

41. நீ எத்தனையோ  தப்பு பண்றே.. அதை நீ மன்னிச்சுடறே.. ஆனா அவன் ஒரு தப்பு பண்ணுனா  அதை தாங்கிக்க முடியலை, உன்னால மன்னிக்க முடியலை.



http://www.virupu.com/Leelai/photos/leelai-movie-first-look-photo-gallery-1.jpg

 இந்தப்படம் பி ,சி செண்ட்டர்களில் சுமாராத்தான் போகும், ஏ செண்டர்களீல் 30 நாட்கள் ஓடும்
 


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் -ஓக்கே


சி.பி கமெண்ட் - காதலர்கள், பெண்கள் பார்க்கலாம்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -
hotlinksin.com
சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. துவங்கிய வேகத்திலேயே ஏராளமான வாசகர்களை பெற்றுள்ளது. பதிவர்களே உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...

உங்கள் பதிவுகளை இங்கேயும் இணைக்கலாமே

மேலும் ஒரு திரட்டி உங்களுக்காக...

Wednesday, April 25, 2012

நாளைய இயக்குநர் 22.4.2012 - விமர்சனம்

கே பாக்யராஜ் நடுவரா  அல்லது ஜட்ஜா இருந்த டைம்ல அவர் டி எம் கே ல இருந்தாரு.. அவர் அம்மா கட்சிக்கு வரப்போறார்னு பேச்சு அடிப்பட்ட அடுத்த நாளே விக்ரமன் , வெற்றி மாறன் கூட்டணி.. இப்போ மறுபடி சுந்தர் சி உள்ளே வந்துட்டாரு.. சுந்தர் சி எப்பவும் சிரிச்ச முகம், வெற்றி மாறன் கடு கடு முகம்.. ஹூம்.. 


1. குறும்பட இயக்குநர் பெயர் - அஸ்வத்  - குறும்படத்தின் பெயர் - குழந்தையின் வயது 75

டைட்டிலை பார்த்ததுமே செண்ட்டிமெண்ட்ல பிழியப்போறாங்கனு நினைச்சேன்.. 100% சரி.. ஒரு அப்பா, பையன் நடுவில் உள்ள தவமாய் தவமிருந்த உறவு பற்றிய கதை.. படம் ஃபுல்லா 2 பேர் உரையாடல்லயே முடிஞ்சுடுது.. 

அப்பாவும், பையனும் லொட லொடனு பேசிட்டே இருக்காங்க.. அப்பா பேச்சு வாக்குல அது என்ன?னு கேட்கறார்.. பையன் சொல்றான் - அது அணில்ப்பா.. 
மறுபடி அதே கேள்வி.. மகன் அதே பதில். இந்த மாதிரி 4 டைம் ரிப்பீட் ஆனதும் பையன் கடுப்பாகி ஏன்பா திருப்பு திருப்பி கேட்கறீங்க?ங்கறார்.. அப்பா உடனே ஃபிளாஸ் பேக் சொல்றார்.. பழைய டைரி எடுத்து அதுல ஒரு பேஜ் படிக்க சொல்றார்.. அதுல பையன் 20 டைம் மாடு இருக்கறதை காட்டி அது என்னப்பா? என கேட்பதும், அப்பா அதற்கு சலிக்காமல் பதில் சொல்வதும் அதுல பதிவு பண்ணப்பட்டிருக்கு.. 

 மகன் அதை கேட்டு கண் கலங்கறான்.. அதாவது நம் பெற்றோர்கள் நாம குழந்தைகளா இருந்தப்போ காட்டுன அக்கறையை, பொறுமையை நாம் நம் பெற்றோர்களிடம் காட்டுவதில்லை என்ற கரு.. க்ளைமாக்ஸ்ல அந்த பையனின் மகள் அதே போல் லவ் பேர்ட்ஸ் கூண்டை காட்டி அது என்ன ? என 2 முறை கேட்க அவன் பொறுமையா  பறவை என்கிறான்..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அப்பா அந்த டைரியை எடுத்து டிசம்பர் 31 ஆம் பக்கம் எடுத்து படி என்கிறார்.. ஆனால் பையன் டைரியின் கடைசி பக்கம் பார்க்காமல் முதல் 25 வது பக்கம் பார்க்கிறான்

2. அப்பா 1985 ஆம் வருஷ டைரியை எடுன்னு சொன்னதும் பையன் உள்ளே போய் தேடி எடுக்காமல் ரெடியாக டக் என்று அவர் தலை மாட்டில் இருந்து எடுக்கிறான்

3.  அப்பாவின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் மகன் கேரக்டர் செயற்கையான நடிப்பு + சிரிப்பு. நாடகம் பார்ப்பது போல்.. இருக்கு

 இப்படி சில குறைகள் இருந்தாலும் இது ஒரு நல்ல படமே.. ஆனா ஜட்ஜ்ங்க  2 பேரும் இந்த படத்தை குறை தான் சொன்னாங்க..


2.குறும்பட இயக்குநர் பெயர் - ஸ்ரீ கணேஷ் - குறும்படத்தின் பெயர் - டைம் அவுட்.


அசோகமித்திரன் எழுதுன சிறுகதையான காலமும் 5 குழந்தைகளும் தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்.. எதைத்தொட்டாலும் துலங்காத ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவனைப்பற்றிய ஜாலியான நகைச்சுவைக்கதை.. 

கதையை சொல்றதுக்குப்பதிலா மனம் கவர்ந்த வசனங்கள் சொன்னாலே ஓரளவு கதை புரிஞ்சுடும்



1. ஆட்டோ.. அடையாறு போகனும்.. வர்றீயா?



 நான் மவுண்ட்ரோடு தான் போறேன்.. அங்கே வேணா வர்றியா?


2.  தலைவரே.. எப்படியாவது எனக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்துடுங்க.. 

 போலி எம் எல் ஏ - கவலையே படாதே. பணம் கொடுத்தாச்சு இல்ல? நீ தான் அடுத்த வி ஏ ஓ.. ஆமா ஏய்யா பி ஏ.. வி ஏ ஓ அப்படின்னா என்ன?


3. ஒரு 5 நிமிஷம் இந்த உலகம் சுத்தறதை நிறுத்திட்டு ரெஸ்ட் எடுத்தா என்ன?எப்போ பாரு பரப்பாவே இருக்கே..?ரெஸ்ட் எடுக்கவே மாட்டாங்களா?

4.  எங்கே ஓடறோம்? ஏன் ஓடறோம்? எவ்ளவ் தூரம் ஓடறோம்..? எதுவும் தெரியலை. திரும்பிப்பார்த்தா டோட்டல் வோர்ல்டும் ஓடிட்டே இருக்கு.. 


5. யோவ்.. ஆட்டோ சீக்கிரம் போய்யா. 

 இருங்க.. ஒரு சவ ஊர்வலம்..

 அடடா.. யோவ்.. ஒரு 5 நிமிஷம் லேட்டா செத்திருக்கக்கூடாதா?


6.  ஜோசியரே. என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

 10 வருஷம் நாய் படாத பாடு படுவீங்க.. 

 அதுக்குப்பிறகு என் நேரம் நல்லாருக்குமா?

 ம்ஹூம், அதுக்குப்பிறகு அது பழகிப்போயிடும்


படத்தோட ஹீரோ கடவுளையே ஒரு டைம் நேர்ல சந்திச்சும் அவனுக்கு அது யூஸ் இல்லாம போயிடுது அப்டிங்கற மாதிரி கொண்டு போனாங்க..

 இந்தப்படத்துக்கு இயக்குநர் எடுத்துக்கிட்ட முயற்சிகள், உழைப்பு பிரம்மிக்க வைத்தது.. 89 கட் ஷாட்ஸ்..  120 கேமிரா ஆங்கிள்ஸ்

உழைப்பு வீண்போகலை.. இந்த வாரத்துக்கான பெஸ்ட் ஃபிலிம், பெஸ்ட் ஆக்டிங்க், பெஸ்ட் கேமரா மேன் என 3 விருதும் ஒரே படமே வாங்குனது 10 மாதங்களூக்குப்பின் இதுவே முதல் முறை


3. குறும்பட இயக்குநர் பெயர் - ஷபி   குறும்படத்தின் பெயர் - இருட்டு


எனக்கு பேய், பிசாசுல நம்பிக்கை இல்லைன்னாலும் அந்த மாதிரி ஹாரர் ஃபிலிம்ஸை ரொம்ப ரசிப்பேன்.. த்ரில்லர் ஃபிலிம், ஹாரர் ஃபிலிம், காமெடி ஃபிலிம் இந்த 3 ம் தான் என் சாய்ஸ்.. ( கில்மா ஃபிலிம்? பப்ளிக் பப்ளிக்)

ஒரு கிராமம்.. அதுல ஆவி இருக்கறதா சொல்லப்படும்  வலையல் காரி வீட்டில் தங்குனா பரிசுன்னு ஒரு பந்தயம்.. 4 ஃபிரண்ட்ஸ் போய் தங்கறாங்க.. நைட் ஃபுல்லா எதுவும் ஆகலை.. விடிஞ்சதும்  அந்த 4 பேர்ல ஒருத்தன் ஒரு இடத்துல விழுந்து கிடக்கறான்.. அவனை விசாரிச்சா அவன் நைட்ல இருந்து அங்கே தான் மயங்கி இருக்கான்னு சொல்றான்.. அப்போ நைட் பூரா அவங்க கூட இருந்தது, பேசுனது எல்லாம் அந்த பெண் பேய் தான் அதுவும் அந்த நண்பன் ரூபத்துல.. உடனே பயந்து போய் அவனை அம்போன்னு அங்கேயே விட்டுட்டு ஓடிடறாங்க..


இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  பேய் தான் வெளில போயிடுச்சு././ இப்போ இவங்க பார்த்தது அவங்க நண்பனைத்தானே..? ஏன் பயந்து ஓடறாங்க?

2. நைட் பூரா நண்பர்களுடன் ஆண் வேடத்தில் இருந்த பெண் பேய் சாதிச்சது என்ன? ஒரு கொலை இல்லை, ஒரு ரேப் இல்லை.. சும்மா கடலை ஒன்லி??


3. இந்தக்கதையின் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? பேய்கள் யாரையும் கொல்லாதுன்னா?

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்தக்காலத்துலயும் பேய், பிசாசு எல்லாம் இருக்கா?

 ஏன்? சாவு நடந்துட்டுத்தானே இருக்கு?


2. செயினைக்காணோம்டா..

 இங்கே எங்கேயும் இருக்காதுடா.. நாம முதல்ல இங்கே இருந்து கிளம்பலாம்.. அங்கே போய் தேடிக்கலாம்..



Friday, March 23, 2012

ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி - சினிமா விமர்சனம்

http://123tamilforum.com/imgcache2/2012/03/MDSG461667M-1.jpgகவித்துவமான டைட்டில்,கல்லூரி கட்டிளங்காளைகளை,கட் அடிக்கும் கன்னிகளை சுண்டி இழுக்கும் போஸ்டர் டிசைன், சப் டைட்டிலாக “இந்தப்படம் பார்த்தாத்தான் நீங்க உங்க காதலியை நிம்மதியா கிஸ் பண்ன முடியும்” எனும் வசீகர வாசகம் இதெல்லாம் தியேட்டரில் ரொம்ப ஈசியாக கூட்டத்தை வர வழைக்கும் டெக்னிக் தான்.. ஆனா.........!!!!!!!

காதலில் சொதப்புவது எப்படி? படத்துல நாகரீகமா, கண்ணியமா சொன்ன அதே ஊடல், காதல் கொண்டாடல், அல்லாடல் மேட்டரை கொஞ்சம் இறங்கி வந்து தரை டிக்கெட் ரேஞ்சுக்கு லோக்கலா சொல்லி இருக்காங்க.. ஐ மீன் சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க.. 

எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோவும், ஹீரோயினும் ஒரு பஸ்ல பயணம் பண்றாங்க.. ஹீரோ ரொம்ப சுமாரான பையன்.. ஹீரோயின் 35 மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸ் வாங்கற ரொம்ப சுமார் ஃபிகர்.. பார்த்ததும் பத்திக்குச்சு.. 

2 பேரும் 4 ரீல் லவ் பண்ற நேரத்தை விட கில்மா பண்றதுக்குத்தான் பிளான் போடறாங்க.. ஹீரோயின் வீட்ல மேரேஜ்க்கு ரெடி பண்றாங்க.. வழக்கம் போல 2 பேரும் ஊரை விட்டு எஸ்.. லிவிங்க் டுகெதரா ஒரே வீட்ல வாழ்றாங்க...

2 பேருக்கும் ஏகப்பட்ட கருத்து மோதல்கள்.. சண்டைகள்.. அந்த லவ் ஜோடிங்க பிரபுதேவா - ரம்லத் மாதிரி சேர்ந்தாங்களா? அல்லது பிரபுதேவா -நயன் தாரா மாதிரி புட்டுக்கிட்டாங்களா? என்பது க்ளைமாக்ஸ்.. தில் இருக்கறவங்க கடைசி வரை உக்காந்து பாருங்க.. 


ஹீரோ ஓரளவு பரவாயில்லை.. சண்டைக்காட்சில அதாவது ஹீரோயின் கூட போடற ஃபைட் சீன்ல நல்லாவே வெறுப்பை காட்றாரு.. ஹீரோயின் எதையும் காட்டலைன்னாலும் ஐ மீன் எந்த உணர்ச்சியையும் காட்டலைன்னாலும் டைரக்டரோட சிச்சுவேஷன் சீன் செட்டிங்கால எஸ்கேப் ஆகிடறார்.. 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYFXKTMrB4NS3H_eYtaD51kemBdl2D4EN7aCKRn_uXDCbF6bHX5JKCIhBMtNndhWU_LvNbpgxM36TagZJqjvrXUxiEE3nmDBCKtxjploov4wubaxXnLgusLtlBbfWWz5LIsoshe5bY_LPW/s1600/aayiram-muthangaludan-thenmozhi-movie-pics13.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. க்ளைமாக்ஸ்-ன் கடைசி 15 நிமிடங்கள் நீட்டாக எடுத்தது

2. டாக்டர் ஷாலினியுடனான காதலர்களின் டிஸ்கஷனில் காதல் வாழ்க்கை தத்துவத்தை எடுத்து சொன்னது

3. கிஸ்சுக்கு ரேஷன் வைத்த ஹீரோயின்  பின் அவரே அதை மீற டி வியில் வரும் நியூஸ் வாசிக்கும் சீனில் ஒவ்வொரு சாதா நியூஸ்க்கும்  ஒரு கிஸ் வீதம் ஹீரோவுக்கு குடுப்பது

4. படத்தை இடைவேளை வரை இளமையாக கொண்டு போக முயற்சித்தது

5. உன் பேரென்ன தெரியாது, தீண்டாத தீண்டல் அவள் என்னை தீண்டச்சொன்னாளே,  பாலோடு தேன் சேர ( கில்மா பாட்டு) என 3 பாடல்களை கேட்கும் விதமாக எடுத்தது

http://www.tamilkey.com/wp-content/uploads/2012/02/Watch-Aayiram-Muthangaludan-Thenmozhi-Movie-Online-Official-Trailer.jpg

 இயக்குநரிடம் கோபமாக சில கேள்விகள்


1. காதலர்கள் லிவ்விங்க் டுகெதர் வாழ்வு வாழ்ந்து பின் மேரேஜ் பண்ணிக்கனும்கற உங்க எண்ணம் நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்து வராது.. 6 மாசம் ஜோடியா “ஒண்ணா” இருந்துட்டு அப்புரம் பிடிச்சா மேரேஜ் பண்ணிக்கலாம்னா ஊர்ல ஒரு பய மேரேஜே பண்ண மாட்டான்.. 6 மாசத்துக்கு ஒரு தடவை சிம்பு மாதிரி ஆளை மாத்திகிட்டே ரவுண்ட் அடிப்பான்./. 

2.  சுய எள்ளல் என்பது வடிவேல் மாதிரி காமெடியன்ஸ் பண்ணிக்கலாம்.. ஒரு சொதப்பலான திரைக்கதை வெச்சிருக்கற இயக்குநர் அங்கங்கே தன்னை சுய எள்ளல் பண்ணீக்கிட்டா இருக்கற கொஞ்ச நஞ்ச மதிப்பும் இல்லாம போயிடும்.. 

3. ஹீரோவும்,ஹீரோயினும் ராத்திரி 9 மணிக்கு அவங்க வீட்டுக்குள்ள ஃபைட்டிங்க்.. அப்போ எப்படி ஹீரோயினோட புராஜக்ட்  டேமேஜர் டக்னு உள்ளே வர்றார்? ஒரு காலிங்க் பெல் நோ? ஒரு ஹலோ நோ? திறந்த வீட்ல ராஜபக்சே மாதிரி வர்றாரே? எப்படி?

4. அப்புறம் ஆண்கள் குடிக்கக்கூடாது என்ற உங்க உயர்ந்த நோக்கத்தை பாராட்டறேன்.. ஆனா திருமணங்கள் தோல்விக்கு காரணம் ஆண்கள் குடிப்பதுதான் என்ற வாதத்தை நீங்கள் முன் வைத்த விதம் ரொம்ப தப்பு.. இந்தக்காலத்துல புருஷனுக்கு ஊத்திக்கொடுத்து தக்க வெச்சுக்கற தமிழச்சிங்க இருக்கற நாட்டுல ஹீரோ சரக்கு அடிச்சுட்டாங்கறதுக்காக ஹீரோயின் பிரியற மாதிரி காட்டறது செம தமாஷ்.. 

5. பொதுவா காதல் மனைவி பிரியற மாதிரி காட்டனும்னா  வேறொரு பெண்ணுடன் தொடர்பு,ஈகோ,சந்தேக புத்தி இப்படி ஏதாவது ஸ்ட்ராங்கான ரீசன் வைக்கனும்

6. ஹீரோவும், ஹீரோயினும் ஜாலியா கில்மா பண்ணிட்டாங்க அப்டிங்கற போதே படம் முடிஞ்சுடுதே. இனி அவங்க சேர்ந்தா என்ன? சேரலைன்னா என்ன? ( இதே மாதிரி சீனை செல்வராகவன் 7ஜி ரெயின் போ காலனி-ல க்ளைமாக்ஸ்ல வெச்சார்..நீங்க 7 வது ரீல்லயே வெச்சுட்டீங்க..)

http://www.thehindu.com/multimedia/dynamic/00943/06MP_AMTM_jpg_943217e.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஏய். வாடி.. காரைக்கால் பீச் ரோட்ல கில்மா டிவிடி இருக்காம்.. போய் அள்ளிக்கிட்டு வந்துடலாம்.. ( அரிய தகவல் ஹி ஹி )

2.  ஏண்டி.. பொண்ணுங்க பி எஃப் பார்க்கறது தப்பில்லை?

 இதுவரை பார்க்காம இருந்ததுதாண்டி தப்பு

3. நமக்கு கல்யாணம் ஆகி போனா 20 வருஷமா என்னத்தை வளர்த்தி வெச்சிருக்காங்கன்னு மாமனார் வீட்ல கிண்டல் பண்ணுவாங்க.. எதுவுமே தெரியாம இருந்திடக்கூடாது ( ஆஹா நல்ல கொள்கை உலகம் விளங்கிடும்)

4.  முத்தம் குடுக்கறதுல இவ்வளவு சுகம் இருக்கறது தெரியாம போச்சுடா.. தெரிஞ்சுருந்தா முதல்லியே நிறையா குடுத்திருப்பேன்

5.  சீர் வரிசை வாங்கி பொண்ணு கட்டுனது அந்தக்காலம்..  சீர் வரிசை குடுத்து பொண்ணு கட்டுறது இந்தக்காலம்..  

6. இந்த வருஷம் பிளஸ் டூ பாஸ் பண்ணலைன்னா இந்த ஊரை விட்டே  ம்ஹும் இந்த உலகத்தை விட்டே ஓடிப்போயிடலாம் ஓக்கே?

7.  என்னடா இந்த பொண்ணு இவ்ளவ் டேமேஜா இருக்கு?

 டேய்.. சொந்தக்கார்னா சீட் எல்லாம் ஃபிரெஷ்ஷா ஜம்னு இருக்கும்.. வாடகைக்கார்னா  கொஞ்சம் கிழிஞ்சுதான் இருக்கும்

8. பொண்ணுங்க வயசுக்கு வந்தா  ஊர் கூட்டி ஃபங்க்‌ஷன் வைக்கறாங்க.. ஆனா பசங்க வயசுக்கு வந்தா கமுக்கமா மறைக்கறாங்க  .. ஏன்னா ஊர் கண்ணு பட்டுடக்கூடாதுன்னு தான்

9.  ஏய்.. உனக்கு தெரியாதா? லவ்வர்ஸ் இனிமே லிப் டூ லிப் கிஸ் மட்டும் தான் அடிக்கனுமாம்.. கவர்மெண்ட் ஆர்டர் போட்டாச்சு


http://moviegalleri.net/wp-content/gallery/aayiram-muthangaludan-thenmozhi-movie-stills/aayiram_muthangaludan_thenmozhi_movie_stills_0237.jpg

10.  ஏண்டி.. இப்போ பக்கோடா, மிக்சர்ரா சாப்பிடப்போறே? இப்படி வாய திறக்கறே? கிஸ் மூடே போச்.. 

11.  முன் பின் அறிமுகமே இல்லாத 2 பேருக்கு பார்த்த உடனே லவ் வருதுன்னா அவங்க பரஸ்பரம் அதே சாயல்ல ஒருவரை ஆல்ரெடி பார்த்திருப்பாங்க.. பழகி இருப்பாங்க.. 

12.  ஒரு முக்கியமான கண்டிஷன்.. ஒரு வாய்க்கு சாரி  ஒரு நாலைக்கு ஒரு கிஸ் தான்

 சாரி.. என் வாய்க்கு அது பத்தாதுடி

13.  ஏண்டி பல் துலக்கலை?


 பல் துலக்காம காபி குடிச்சாத்தான் பொண்ணுங்க அழகா இருப்பாங்க..

14. இந்த எருமைக்கு ஓப்பனிங்க் சாங்கா? இதுக்கு நான் ரயில் தண்டவாளத்துல போய் தலையை குடுத்துக்கலாம்.. 


15. கிச்சன் ரூம்ல போய் ஏண்டி கதவை சாத்தறே?

 சமையல் அறைக்கதவை திறந்து வெச்சு  சமையல் செஞ்சா ஊர்க்கண்ணு பாடுடும்.. வாசம் போயிடும்

16. உன் ஆள் எப்படிப்பட்ட கேரக்டர்னு கண்டு பிடிக்க அவன் கிட்டே ஹோட்டல்ல்ல வாங்குன இட்லி பார்சலை குடு

 1.  காரச்சட்னி, கெட்டிச்சட்னி, சாம்பார்னு எல்லாத்தையும் தொட்டு ப்பொறுமையா சாப்பிட்டான்னா  அவ்ளவ் தான்.. அவன் கில்மா பண்றதுக்குள்ள விடிஞ்சுடும்

2. காரச்சட்னியை அதிகமா தொட்டு சாப்பிட்டான்னா அவன் ரொம்ப டேஞ்சர்.. நம்மை புரட்டி எடுத்துடுவான்

3. தொடறதை பற்றி அதிகம் கவலைப்படாம இட்லியை காலி பண்றவன் தான் பெஸ்ட்.. 


17. செம்பருத்திப்பூவில் மகரந்தச்சேர்க்கை எப்படி நடக்கிறது?

 ஹி ஹி நடந்தா கும்முன்னு கலர் சேஞ்ச் வரும்.. நடக்கலைன்னா டல் அடிச்சு இருக்கும்.. 

18. எந்தக்காதலும் தோக்கக்கூடாது....

19. காதலர்கள் 5 டி பற்றி தெரிஞ்சுக்கனும்

TRUST - ஒருவரை ஒருவர் நம்பனும்

TRUTH - உண்மையா நடந்துக்கனும்

TOLERANCE - சகிப்புத்தன்மை வளர்த்துக்கனும்

TASTE - ரசனை மாறினாலும் ரசிக்க கத்துக்கனும்

TALK - மனம் விட்டுப்பேசனும்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKhhOatOYKSPkWCkXuz62mWEEFnTxX3F2N650uf-HeHqqF2dPPB64wJcwdySTWLUMdihd8RS6zIMHwaqj52vGcWVCeHDLEut-DJlpGyvuQmIGUgoj3KxZmT-dcPigVVNUp6Muis81af5-t/s1600/Aayiram+Muthangaludan+Thenmozhi+Movie+Stills+%25289%2529.jpg


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - 1000 அனர்த்தங்களுடன் தலைவலி !!அவ்வ்வ்வ்வ்வ்வ்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

டிஸ்கி -1 தியேட்டர்ல மொத்தம் 233 காதல் ஜோடிங்க வந்திருந்தாங்க.. அடங்கொய்யால ஊர்ல இத்தனை லவ் ஜோடியா? அதுல பாதி ஃபிகருங்க ஜாதி மல்லிப்பூ  தலா 7 முழம் ... விளங்கிடும்யா நாடு ... இந்த எண்ணிக்கயை எப்படி கண்டு பிடிச்சேன்னா மொத்த சீட்டே 522 சீட்ஸ் தான் .. தனியா வந்தவங்களை முதல்ல் எண்ணி டோட்டல் நெம்பர்ல கழிச்சுக்கிட்டேன்

 டிஸ்கி 2 - எனக்கு முன் வரிசைல உக்காந்திருந்த ஒரு காதல் ஜோடி 4 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் உள்ள ஷால் ( குட்டி பெட்ஷீட்) 2 பேரும் போர்த்திக்கிட்டாங்க அடேய் அடேய்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்


http://media.apnaindia.com/entertainment/gossip/6201_6300/6282_b_8f473527573f7c7829d312562aa22dde.jpg

Monday, March 12, 2012

பத்திரமா பார்த்துக்குங்க - சினிமா விமர்சனம்

சில பல வருடங்களுக்கு முன்னால தல நடிச்ச காதல் மன்னன் படம் நினைவு இருக்கா? ஊர்ல 1008 பொண்ணுங்க வயசுக்கு வந்து ரெடியா இருந்தாலும் நம்மா ஆளுங்க ஆல்ரெடி நிச்சயம் ஆன பொண்ணையே குறி வெச்சு லவ் பண்ணுவாங்களே. அதே கதைதான்.. கொஞ்சம் ஆல்டர் பண்ணி இட்லியை உப்புமா ஆக்கி சமைச்சிருக்காங்க..


ரொம்ப நாளைக்குப்பிறகு கோடம்பாக்கத்துக்கு லட்சணமா, சுஹாசினி மணிரத்னம் விருப்பட்ட மாதிரி கலரா  ஹேண்ட்சம்மா ஒரு புதுமுக ஹீரோ வந்திருக்காரு.. இதை ஏன் ஸ்பெசிபிக்கா சொல்றேன்னா இந்த 10 வருஷமா புதுமுக ஹீரோன்னா தலை சீவாம, தாடியோட பார்த்து பார்த்து அலுத்துடுச்சு.. இவர் ஆள் டீசண்ட்டா இருக்கார்.. ஆனா அண்ணன் சிரிக்கும்போதுதான் ஸ்டாலின் மாதிரி உதடு ஒரு சைடுல லேசா இழுக்குது... மற்றபடி ஓக்கே.. ஆள் செம சுறு சுறுப்பு.. நல்ல எதிர்காலம் இருக்கு.. அண்ணன் பேரு சரண் குமார்

ஹீரோயின் கூட ஆள் லட்சணமா, கொழுக் மொழுக் கன்னத்தோட ஜைஜாண்டிக்காதான் இருக்காரு.. ( இந்த ஜைஜாண்டிக் என்பது அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்படாத  ஒரு ஆண் பால் வார்த்தை ஹி ஹி பாப்பா கிட்டே கொஞ்சம் பெண்மை , நளினம் மிஸ்சிங்க் )ஜிகிடி பேரு ஸ்மிதா ஸ்ரீ

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/Pathirama-Pathukkunga-3.jpg

சரி கதைக்கு வருவோம்.. வழக்கம் போல ஹீரோ ஹீரோயினை முத தாட்டி ( தாட்டின்னா தடவைனு அர்த்தம் ஹி ஹி )பார்க்கறப்ப மயங்காத குறையா வாயை பிளக்கறாரு.. பின்னாலயே நாய் மாதிரி சுத்தறாரு.. காணாததைக்கண்ட மாதிரி ஹீரோ ஹீரோயினையே அடிக்கடி உத்து பார்க்கறப்ப ஹீரோயினுக்கு புரியாமயா இருக்கும்?தன்னை கரெக்ட் பண்ணத்தான் அலையறான்னு? ஆனா பாப்பா அப்பாவி போல.. 

எனக்கு ஆல்ரெடி ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு இண்டர்வெல்க்கு 15 நிமிஷம் முன்னால பாப்பா சொல்லுது.. உடனே ஹீரோ நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை நம்ம இளைய தலைவலி விஜய் நடிச்ச ஷாஜகான்,யூத் படங்கள்ல வர்ற மாதிரி நம்ப வெச்சு கழுத்தை அறுத்து ஹீரோயின் கிட்டெ கெட்ட பேர் ஏற்படுத்தறார்.. 

இதுல என்ன செம காமெடின்னா அந்த பேக்கு மாப்ளை முன்னே பின்னே பழக்கம் இல்லாத ஹீரோ சொல்ற மாதிரி எல்லாம் கேட்டு ஹீரோயின் கிட்டே கெட்ட பேர் வாங்கிக்கறார்.. 

கடைசில அந்த மாப்ளையே ஹீரோ - ஹீரோயினை சேர்த்து வெச்சுடறார்.. இதுதான் கதை... 

 ஆனா பாருங்க டைரக்டர்க்கு திடீர்னு ஒரு டவுட்.. படம் யூத்ங்க மட்டும் பார்த்தா போதுமா? தாய்க்குலங்களை கவர வேணாமா? அதுக்காக அண்ணன் தேவி பாலா எழுதுன மாலைமதி நாவல் ஒண்ணை நைஸா சுட்டு அந்த கதையை ஹீரோவோட அம்மா அப்பா, ஹீரோயினோட அம்மா அப்பா இடைல புகுத்தி 2 பேரும் முறை பொண்ணு -முறை பையன் தான் அப்டின்னு ஒரு கிளைக்கதையை நைஸா சொருகறாரு..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/10.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1.  டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஹீரோ தனக்கு வராத ஒரு ஃபோனை வந்த மாதிரி காட்டி அதுல சொல்லாத ஒரு ஃபோன் நெம்பரை ஹீரோயின் கையை பிடிச்சு உள்ளங்கைல எழுதி டச் பண்றாரே அந்த ஐடியா நல்லாருக்கு.. ( நோட் பண்றா நோட் பண்றா)

2. ஒரு பாடல் காட்சில ஹீரோயின் குளத்துல ஏகப்பட்ட ரோஜாப்பூக்கள்க்கு இடையில் குளிக்கறாரே அந்த சீன் செம ( யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. அந்த சீன்ல ஹீரோயின் தலை மட்டும் தான் தெரியுது ஹி ஹி - இங்கே படத்துல தலையை தாண்டி தெரியுதேன்னு கேட்காதீங்க, அந்த சீன் படத்துல நஹி ) )

3. ஹீரோ ஹீரோயினை டார்ச்சர் பண்ண செல் ஃபோன், லேண்ட் லைன் ஃபோன் என மாறி மாறி  கலாய்ப்பதும், அதற்கு அவர் கொடுக்கும் விளக்கங்களும் நைஸ்

4. ஹீரோயினுக்கு வெள்ளை நிறம் பிடிக்காதுன்னு தெரிஞ்சதும் ஹீரோ ஹீரோயினுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளைக்கு எல்லாமே வெள்ளை நிறம் வர்ற மாதிரி ரெடி பண்ணி அனுப்புவது செம,.,. குறிப்பா மாப்ளையோட செல் ஃபோன் ரிங்க் டோன் கூட “ வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே.. “அந்த சீன்ல ஹீரோயின் கடுப்பாவதும், ஹீரோ துள்ளிக்குதிப்பதும், மாப்ளை பல்பு வாங்குவதும் ஆஹா..!!

5. ஹீரோ மற்றும் ஹீரோயின் செலக்‌ஷன்.. நீட்.. அவங்க பர்ஃபார்மென்ஸ் ஆல்சோ குட்.. 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/Pathirama-Pathukkunga-20.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.ஹீரோவுக்கு மாமாவா வர்ற இன்ஸ்பெக்டர் எதுக்காக வில்லன் இடத்துக்கு போய் அங்கே 2 ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடறார்? கண்ணியத்தையே குறைச்சுடுச்சே?

2. எந்த கேனையனாவது  தனக்கு நிச்சயம் ஆன பெண்ணை என்னமோ பஸ்ல முன் சீட்ல உக்காந்து இருக்கற புது ஃபிகர் காலை உரசுற மாதிரி ஹோட்டல்ல உரசி கெட்ட பேர் வாங்குவானா?

3. ஹீரோயின் எதுக்காக கேன்சல் ஆன கல்யாண மாப்ளை ஆஃபீஸ்க்கு சம்பந்தமே இல்லாம வர்றார்? அந்த சீன் டிராமா மாதிரி இருக்கு.. 

4. லவ்வர்ஸ்னா முதல்ல கோயில், பார்க், பீச், சினிமா தியேட்டர் இப்படித்தான் போவாங்க.. ஆனா ஹீரோயின் திடு திப்னு லவ்க்கு ஓக்கே சொன்ன அடுத்த செகண்டே ஹீரோவோட வீட்டுக்குப்போகலாம்குதே அது எபப்டி;? ( ரொம்ப பிராக்டிகல் பொண்ணு போல)

5.ஹீரோவும், ஹீரோயினும் டான்ஸ் ஆடறப்ப அவங்க பின்னால கலர் குண்டு போடற பழக்கம் எல்லாம் ரஜினி நடிச்ச ராஜா சின்ன ரோஜா- சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா - காலத்துலயே முடிஞ்சுடுச்சு,.. எதுக்கு பழசை எல்லாம் மறுபடி கிளரிங்க்?

6. படத்துல நம்ப முடியாத முக்கியமான விஷயம் ஹீரோவோட ஃபிரண்டோட தங்கச்சிக்கு ஹீரோவோட இன்னொரு ஃபிரண்ட் கில்மா மெசேஜ் அனுப்புறதும் அந்தப்பழி ஹீரோ மேல வர்றதும்.. அதுல அந்த தங்கச்சி அத்தனை கில்மா மெசேஜையும் எரேஸ் பண்ணாமயா வெச்சிருப்பா? அப்படி அசால்ட்டா வெச்சவ செல்ஃபோனை மறந்துட்டு போவாளா?

7. ஹீரோவோட மாமா இன்ஸ்பெக்டர் பேங்க் அக்கவுண்ட்ல வில்லன் அவருக்கே தெரியாம பல தவணைகள்ல பல தடவை பணம் கட்டறான்.. அது எப்படி இன்ஸ்பெக்டருக்கு தெரியாம இருக்கும்? அந்த பேங்க்லதான் எஸ் எம் எஸ் வசதி அலர்ட் பண்றாங்களே. முதல் தடவை பணம் கட்டுனதும் SMS வந்திருக்குமே.. அதுவும் இல்லாம ஒரு இன்ஸ்பெக்டர் தன் பேங்க் பேலன்ஸை பல மாதங்கள் செக் பண்ணாம இருப்பாரா?

8. ஹீரோவுக்கு பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லையாம் அய்யோ ஹய்யோ.. இந்தக்காலத்துல ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே பல சந்தர்ப்பங்கள் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண சான்ஸ் இருக்கே?

9. அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு ஏமாத்தி ஆபரேஷனுக்காக ஹீரோவோட  மாமா பேங்க் அக்கவுண்ட்ல பணம் கட்டறதா சீன் வருது.. ஓக்கே , ஆனா 13 டைம் அவ்ளவ் பெரிய  தொகை செலுத்தப்படு,ம்போது டவுட் வராதா?

10. ஹீரோயின் அவ்ளவ் லூசா? நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை டகார்னு கழ்ட்டிவிடுது.. ஹீரோவை ஏத்துக்குது.. டகார்னு ஹீரோவை வெறுக்குது.. ஒய் திஸ் கொலை வெறி?.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAzyuNqN34sTAk7SOAMb2TuZ0pqWLEU_h4IIlXtWVF6yUKaGZ5vxQFAi-Mbb1xhWruNGpn1XAd3h9v-zJHd4NwstvGHaRotAmFqUHWi1nMjBxchsXxQDsvQzOEQKQn4ypINlE7mrixa6Pn/s1600/pathirama-pathukkunga-movie-stills-26.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  தினம் காசு கேட்கறாரு... அடிக்கறார்.. காசு குடுத்தாலும் குடிச்சுட்டு வந்து மறுபடி அடிக்கறார்


தண்ணி அடிக்கறதுக்கு முன்னே அவ அடிப்பா, அதுக்குப்பிறகு நான் அடிப்பேன்


2. போலீஸ்காரனா உத்தியோகம் பார்த்தாலும் சரி, மளிகைக்க்டைல பொட்டலம் கட்டறவனா இருந்தாலும் சரி மதியம் டி வி சீரியல் பார்க்கற டைம் வீட்டுக்கு வந்தா பொண்ணுங்க மரியாதையே தர்றதில்லை..

3. சரி சரி வாங்க சாப்பாடு போடறேன்..

விளம்பரம் போடற டைம்லயாவது புருஷன் நினைவு வருதே..


4. இவருக்கு இங்க்லீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை சிக்ஸ் பேக்


5. மோதிர விரல்ல தான் அன்பு, காதல், சந்தோஷம் எல்லாம் இருக்குற நரம்பு ஓடுது..  அதனால மோதிரத்தை அங்கே தான் போடனும் ( நல்ல வேளை,.. ஹி ஹி )

நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை.. எங்காவது ரோட்ல கிளி ஜோசியம் பார்க்க வேண்டிய ஆள் ..


6. அவ வீட்டு வாசல்ல நாய் ஜாக்கிரதை போர்டு இருக்குடா..

 அவளுக்காக எத்தனை நாய் கடிச்சாலும் தாங்குவேன்..

நீ தாங்குவே.. அது உன் தலை விதி.. எங்களுக்கென்னடா?

7.  இவன் என் ஃபிரண்ட்.. டைரக்டர் ஆகனும்கற வெறியோட இருக்கான்..

பார்த்து கிட்டே வந்து கடிச்சு வெச்சுடப்போறான்?

8. ஏய் என்ன இது? எல்லாமே வெள்ளையா இருக்கு? உஜாலாவுக்கு மாறிட்டியா?


 படம் டி வில போட்டா முதல் 4 ரீல் மட்டும் பார்க்கலாம்.. அதுல ஹீரோ ஹீரோயின் அறிமுக காட்சிகள் வரும் , அப்புறம் நீங்க உங்க வேலையை பார்க்கலாம்  ஹி ஹி நான் கூட அப்படித்தான் செஞ்சேன்.. உலக வரலாற்றில் முதன் முதலாக தியேட்டர்லயே ஆஃபீஸ் வேலை பார்த்தேன் ஹி ஹி

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - கிரேட் எஸ்கேப் ஆகவும் ஹி ஹி




ஈரோடு ஸ்ரீகிருஷ்னாவில் படம் பார்த்தேன் ( கூட டோட்டலா 14 பேர்தான் இருந்தாங்க, பாவம் கரண்ட் சார்ஜுக்கே கட்டுபடி ஆகி இருக்காது)




Wednesday, March 07, 2012

2011 தேசிய விருது பெற்ற படங்கள் - இந்திய அரசாங்கம் வெளியிட்ட பட்டியல்

தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. விருது பெற்ற படங்கள் பற்றிய பார்வை பின்னே.. முதல்ல லிஸ்ட்டை பார்ப்போம்

59th National Film Awards for the Year 2011 Announced

The Prestigious 59th National Film Awards were announced in New Delhi in a joint Press Conference addressed by the Chairpersons of the three juries, Ms Rohini Hattangady  for feature films, Shri Ramesh Sharma for non- feature films and Ms. Vijaya Mulay for Best Writing on Cinema  category here today. Earlier, the Jury  Chairpersons submitted their report to Smt. Ambika Soni, Minister for Information & Broadcasting. Speaking on the occasion, the Minister lauded the efforts made by the jury members in selecting the different category of awardees. Such efforts, the Minister said had enabled the awards to achieve new heights in terms of enhanced participation in different categories and the prestige associated with such awards.

The top honour in the Feature Film category,  the Best Film  is shared by  films Deool (Marathi)  produced by Abhijeet Gholap & directed by Umesh Vinayak Kulkarni  and Byari ( Byari language) produced  by T.H. Althaf Hussain & directed by Suveeram.  The award carries Swarna  Kamal and cash prize of Rs. 2,50,000/-.  In Non-feature film category  the top honour , Best Film goes to And We Play On (Hindi & English)directed and produced by Pramod Purswane .  The awards carries Swarna Kamal and Cash prize of Rs. 1,50,000/-.  In Best Writing on Cinema category the Swarna Kamal goes to the book titled R.D. Burman – The Man, The Music written by Anirudha Bhattacharjee & Balaji Vittal, published by Harper Collins India. Whereas Manoj Barpujari from Assam has been awarded Best Film Critic.

            In Feature Film category, five films have won three awards each. These Films are  The  Dirty Picture (Hindi), Balgandharva (Marathi), Anhe Ghorey Da Daan (Punjabi), Deool (Marathi)  & Ranjana Ami Ar Ashbo Na (Bengali).  Six films have won two awards each.  These are Chillar Party (Hindi),  Azhagarsamiyin Kuthirai (Tamil), Aaranyakandam (Tamil), Phijigee Mani (Manipuri) , Zindagi Na Milegi Dobara (Hindi) & Game (Hindi). 

            The  Best Actor award goes to Girish Kulkarni for film Deool (Marathi) and Best Actress to Vidya Balan for the film The Dirty Picture (Hindi). Azhagarsamiyin Kuthirai (Tamil) won the award for Wholesome Entertainment, Chillar Party (Hindi) won Best Children Film, Best Director to  Gurvinder Singh for Punjabi  film Anhe Ghorey Da Daan , Best Singer to Anand Bhate (Male)  for Marathi film Balgandharva and Roopa Ganguly (Female) for the Bengali film Abosheyshey .  Kumararaja Thiagarajan has won the Indira Gandhi Award for Best Debut film of a Director.

In the Non-Feature film category, three films have won two awards each.  The Film Tiger Dynasty has won the Best Environmental Film & Best Cinematography awards.  Awards for Best Direction and Best Editing have been taken away by the film There is Something in the Air.  Film Panchakki has been awarded Best Short Fiction and Best Music Direction.

The awards in different categories are as under:

BEST WRITING ON CINEMA
S. No.
Name of Award
Name of Book
Awardee
Medal
1.
BEST BOOK ON CINEMA 
R.D. Burman The Man, The Music

(English)
Publisher :
 Harper Collins India

Author:
 Anirudha Bhattacharjee and Balaji Vittal


Swarna Kamal

Rs.  75,000

Best Film Critic
1.
BEST FILM CRITIC 
Manoj Barpujari

(Assamese and English)


Swarna Kamal

Rs. 75,00


Non-Feature Films

S. NO
Name of Award
Name of FILM
AWARDEE
Medal & Cash Prize
1.
BEST NON FEATURE FILM
And We Play On

(Hindi & English)
Producer :
Pramod PuRs.wane

Director :
Pramod  PuRs.wane

SWARNA KAMAL

Rs. 1,50,000/-
EACH
2.
BEST DEBUT FILM OF A DIRECTOR

The Silent Poet

(Manipuri)

Producer :
 Borun Thokchom

Director :
Borun Thokchom

RAJAT  KAMAL

Rs. 75,000/-
EACH
3.
BEST ANTHROPOLOGICAL/ ETHNOGRAPHIC FILM
Bom

(Hindi & English)
Producer :
Anirban Datta

Director :
Amlan Datta

RAJAT  KAMAL

Rs. 50,000/-
EACH
4.
BEST BIOGRAPHICAL/ HISTORICAL RECONSTRUCTION

Vishnupant Damle:
Bolpatancha Mook Nayak

(Marathi)
Producer :
 Anil Anant Damle

Director : VirendraValsangkar

RAJAT  KAMAL

Rs. 50,000/-
EACH

5.
BEST ARTS /CULTURAL FILM

(Jointly Being given to two Films)

 Fried Fish, Chicken Soup and a Premiere Show

(Manipuri & English)

&


 Lasya Kavvya – the World of Alarmel Valli

(English)

 Producer : Madhusree Dutta

Director :
Mamta Murthy




Producer :
Sankalp Meshram

 Director :
Sankalp Meshram

RAJAT  KAMAL

Rs. 25,000/-
EACH
6.
BEST PROMOTIONAL FILM

The Dream Fulfilled - Memories of the Engineering Challenges

(English)
Producer :
Delhi Metro Rail Corporation

Director :
Satish Pande

RAJAT  KAMAL

Rs. 50,000/-
EACH
7.
BEST ENVIRONMENT FILM

Tiger Dynasty

(English)

Producer:
 S. Nallamuthu

Director :
S. Nallamuthu
RAJAT  KAMAL

Rs. 50,000/-
EACH
8.
BEST FILM ON SOCIAL ISSUES


(Jointly Being given to two Films)

Mindscapes… of Love and Longing

(Hindi & English)




 Inshallah, Football

(Kashmiri, Urdu & English)

Producer :
Public Service Broadcasting Trust

Director: ArunChadha


Producer :
Ashvin Kumar

Director:
Ashvin Kumar
RAJAT  KAMAL

Rs. 25,000/-
EACH
9.
BEST EDUCATIONAL FILM

A Drop of Sunshine

(English)
Producer :
Public Service Broadcasting Trust

Director :
Aparna Sanyal
RAJAT  KAMAL

Rs. 50,000/-
EACH
10.
BEST EXPLORATION/ ADVENTURE FILM

(Including sports)

The Finish Line

(English)
Producer :
 Syed Sultan Ahmed  &  Tabassum Modi

Director :
Akshay Roy

RAJAT  KAMAL

Rs. 50,000/-
EACH
11.
BEST INVESTIGATIVE FILM

Cotton for My Shroud

(English)
Producer:
Kavita Bahl

Director :
Nandan Saxena

and

Kavita Bahl
RAJAT  KAMAL

Rs. 50,000/-
EACH
12.
SPECIAL JURY AWARD


Jai Bhim Comrade

(Marathi)
Anand Patwardhan
RAJAT  KAMAL

Rs. 1,00,000/-

13.
BEST SHORT FICTION
Panchakki

(Hindi)
Producer: 
Sanjeev Rattan

Director:
Sanjeev Rattan
RAJAT  KAMAL

Rs. 50,000/- EACH

14.
BEST FILM ON FAMILY VALUES
Red Building where the Sun Sets

(English)
Producer :
Syed Sultan Ahmed   &  Tabassum Modi

Director :
Revathy
RAJAT  KAMAL

Rs. 50,000/-
EACH
15.
BEST DIRECTION

There is Something in the Air

(Hindi, Urdu & English)
Iram Ghufran

SWARNA KAMAL

Rs. 1,50,000/-
16.
BEST CINEMATOGRAPHY
Tiger Dynasty

(English)

S. Nallamuthu
RAJAT  KAMAL

Rs. 50,000/-

17.
BEST AUDIOGRAPHY

1, 2

(Hindi)
Gautam Nair
RAJAT  KAMAL

Rs. 50,000/-
18.
BEST EDITING

There is Something in the Air

(Hindi, Urdu & English)
Iram Ghufran

RAJAT  KAMAL

Rs. 50,000/-

19.
BEST MUSIC DIRECTION

Panchakki

(Hindi)

DhrubaJyoti  Phukan
RAJAT  KAMAL

Rs. 50,000/-

20.
BEST NARRATION/ VOICE OVER

Just that Sort of a Day

(English)
Ann Abraham
RAJAT  KAMAL

Rs. 50,000/-

21.
SPECIAL MENTION

(Two Films)

a. You Don’t Belong

(Bengali & English)


b.  Airawat

(Marathi & Hindi)
a.    Director  :
Spandan Banerjee



b. Director:
 Renu Savant


CERTIFICATE




CERTIFICATE

FEATURE FILMS
S. No.
Name of Award
Name of Film
Awardee
Medal
& Cash Prize
1
BEST FEATURE FILM 

(shared)
a) Deool  (Marathi)







b) Byari (Byari)
a) Producer:

Abhijeet Gholap

Director :  Umesh Vinayak Kulkarni

b) Producer:
T.H. Althaf Hussain

Director : Suveeran
Swarna Kamal

Rs. 2,50,000/-

2
INDIRA GANDHI AWARD FOR BEST DEBUT FILM OF A DIRECTOR 
Aaranyakandam
(Tamil)
Producer: S.P.Charan
Director : Kumararaja Thiagarajan
Swarna Kamal

Rs. 1,25,000/-

3
AWARD FOR BEST POPULAR FILM PROVIDING WHOLESOME ENTERTAINMENT
Azhagarsamiyin Kuthirai (Tamil)
Producer:
P. Madan

Director : Suseentharan
Swarna Kamal

Rs. 2,00,000/-

4
BEST CHILDREN’S FILM
Chillar Party (Hindi)
Producer: UTV Software
Communications Ltd
Director : Vikas Bahl & Nitesh Tiwari
 Swarna Kamal

Rs. 1,50,000/-
5
BEST DIRECTION
Anhe Ghorey Da Daan (Punjabi)
Gurvinder Singh
Swarna Kamal
Rs. 2,50,000/-
6
BEST ACTOR
Deool (Marathi)
Girish Kulkarni
Rajat  Kamal
Rs. 50,000/-
7
BEST ACTRESS
The Dirty Picture (Hindi)
Vidya Balan
Rajat  Kamal

Rs.  50,000/-
8
BEST SUPPORTING ACTOR
Azhagarsamiyin Kuthirai (Tamil)
Appu Kutty
Rajat  Kamal

Rs.  50,000/-
9
BEST SUPPORTING ACTRESS
Phijigee Mani (Manipuri)
Leishangthem
Tonthoingambi Devi
Rajat  Kamal
Rs. 50,000/-








10
BEST CHILD ARTIST
(Shared)
a)    Stanley ka Dabba (Hindi)





b)    Chillar Party (Hindi)
Partho Gupte







Irrfan Khan
Sanath Menon
Rohan Grover
Naman Jain
Aarav Khanna
Vishesh Tiwari
Chinmai Chandranshuh
Vedant Desai
Divij Handa
Shriya Sharma

Rajat  Kamal

Rs. 50,000/-

11
BEST MALE PLAYBACK SINGER
Balgandharva (Marathi)
Anand Bhate
Rajat  Kamal

Rs. 50,000/-
12
BEST FEMALE PLAYBACK SINGER
Abosheyshey (Bengali)
Roopa Ganguly
Rajat  Kamal
Rs.  50,000/-
13
BEST CINEMATOGRAPHY
Anhe Ghorey Da Daan (Punjabi)
Cameraman : Satya Rai Nagpaul
Laboratory :
Reliance Media Works
Rajat  Kamal
Rs. 50,000/-



14
BEST SCREENPLAY

Screenplay Writer (Original) :

Screenplay Writer (Adapted) :


Dialogues :


Chillar Party (Hindi)



Shala (Marathi)



Deool (Marathi)


Vikas Behl & Manish Tiwari


Avinash Deshpande Nigdi

Girish Kulkarni

Rajat  Kamal
Rs. 50,000/-



Rajat  Kamal
Rs. 50,000/-


Rajat  Kamal
Rs. 50,000/-

15
BEST AUDIOGRAPHY

Location Sound Recordist


Sound Designer :


Re-recordist of the final mixed track 




Zindagi Na Milegi Dobara (Hindi)


Game (Hindi)


Game (Hindi)



Baylon Fonseca



Baylon Fonseca


Hitendra Ghosh



Rajat  Kamal
Rs. 50,000/-

Rajat  Kamal
Rs. 50,000/-

Rajat  Kamal
Rs. 50,000/-
16
BEST EDITING 
Aaranyakandam (Tamil)
Pravin K. L.
Rajat  Kamal

Rs.  50,000/-
17
BEST PRODUCTION DESIGN
Naukadubi (Bengali)
Indraneel Ghosh
Rajat  Kamal

Rs. 50,000/-


18
BEST COSTUME DESIGNER
(Shared)
a) Balgandharva
(Marathi)


b)The Dirty Picture (Hindi)
a)Neeta Lulla



b) Niharika Khan
Rajat  Kamal

Rs. 50,000/-
19
BEST MAKE-UP ARTIST
Balgandharva
(Marathi)

&
The Dirty Picture
(Hindi)
Vikram Gayakwad
Rajat  Kamal
Rs. 50,000/-
20
BEST  MUSIC DIRECTION


Songs





Background Score




Ranjana Ami Ar Ashbo Na (Bengali)



Laptop (Bengali)




Neel Dutt





Mayookh Bhaumik




Rajat  Kamal

Rs. 50,000/-


Rajat  Kamal

Rs. 50,000/-
21
BEST LYRICS
I Am (Hindi)

Agar Zindagi ……….
Amitabh Bhattacharya

Rajat  Kamal

Rs. 50,000/-

22
SPECIAL JURY AWARD
Ranjana Ami Ar Ashbo Na (Bengali)

Anjan Dutt

Rajat  Kamal

Rs. 2,00,000/-
23
BEST SPECIAL EFFECTS
Ra. One (Hindi)
Harry Hingorani

and

Keitan Yadav
Rajat  Kamal

Rs.  50,000/-
24
BEST CHOREOGRAPHY
Zindagi Na Milegi Dobara (Hindi)
(Senorita)
Bosco Caeser

Rajat  Kamal
Rs.  50,000/-
25
BEST FEATURE FILM IN EACH OF THE LANGUAGE SPECIFIED IN THE SCHEDULE VIII OF THE CONSTITUTION



a)
 BEST BENGALI FILM
Ranjana Ami Ar Ashbo Na
Producer: Rana Sarkar

Director : Anjan Dutt

Rajat  Kamal

Rs. 1,00,000/-


b)
BEST DOGRI FILM
Dille Ch Vasya Koi
Producer: Sanjeev Rattan

Director : Sanjeev Rattan

Rajat  Kamal

Rs. 1,00,000/-


c)
BEST HINDI FILM
I Am
Producer: Anirban Dhar (Onir) &
Sanjay Suri

Director : Onir

Rajat  Kamal

Rs.  1,00,000/-

d)
BEST KANNADA
Kurmavatara
Producer:
Basant Kumar Patil

Director :
Girish Kasaravalli


Rajat  Kamal

Rs. 1,00,000/-


e)
BEST MALAYALAM FILM
Indian Rupee
Producer: August Cinema India Pvt. Ltd.

Director : Ranjith Balakrishnan

Rajat  Kamal

Rs.  1,00,000/-

f)
BEST MANIPURI FILM
Phijigee Mani
Producer: Takhelchangbam Ongbi
and Medha Sharmi

Director : Oinam Gautam Singh

Rajat  Kamal

Rs.  1,00,000/-


g)
BEST MARATHI FILM
Shala
Producer:
Vivek D. Wagh
& Nilesh Navalkha

Director :
Sujay Sunil Dahake
Rajat  Kamal

Rs. 1,00,000/-

h)
BEST PUNJABI FILM
Anhe Ghorey Da Daan
Producer:
National Film Development Corporation

Director :
Gurvinder Singh
Rajat  Kamal
Rs. 1,00,000/-








i)
BEST TAMIL FILM 
Vaagai Sooda Va
Producer:
S. Muruganandham

Director :
A.  Sargunam
Rajat  Kamal

Rs. 1,00,000/-

26) a)
SPECIAL MENTION
Byari (Byari)
Mallika

Certificate only



b)
SPECIAL MENTION
Adimadhyantham (Malayalam)
Director : Sherry



Certificate only



















CP/ST