Showing posts with label அங்கதம்.அனுபவம். Show all posts
Showing posts with label அங்கதம்.அனுபவம். Show all posts

Saturday, April 02, 2011

ஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப்பா?

http://www.aishwaryarai-videos.com/wp-content/uploads/2010/07/Aishwarya-Rai-Shies-Away-From-Camera-With-Her-Dupatta.jpg

1. டியர்...  எனக்கு  வேற  ஒரு  பையனோட  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகிடுச்சு...

“எனக்கு  தெரியும்”

“எப்படி?”

“இனிமே  நம்ம  லவ்வுக்கு  அக்கா  இடைஞ்சலா  இருக்கமாட்டா-னு  உன்  தங்கச்சி  சொன்னா...”

------------------

2. என்  பின்னால  சுத்தாதே...  போய்  பிழைக்கற  வழியைப்  பாரு...

மிஸ்...  லவ்வுக்கு  OK-னு  சொல்லிட்டா  நாம  2  பேரும்  சேர்ந்தே பொழைப்பை  பார்க்கலாம்.

------------------------

3. பாகற்காய்  கூட்டு  சாப்பிட்ட  தலைவர்  இப்போ  கோதுமை  அல்வா  சாப்பிடராரே?

கசப்பான  அனுபவங்கள்  முடிஞ்சு  கூட்டணி  சிக்கல்  சரி  ஆனதை சிம்பாலிக்கா  காட்றாராம்.

---------------------------
http://www.poster.net/rai-aishwarya/rai-aishwarya-photo-aishwarya-rai-6206892.jpg
4. எதுக்காக  ஐஸ்  ஃபேக்டரி  ஓனரை  பார்க்க  வந்திருக்கீங்க?

“கண்ல  அடிபட்டுடுச்சு...  eye's (ஐஸ்) ஸ்பெஷலிஸ்ட்டை  பார்க்க  சொன்னாங்க...”

--------------------

5. டீச்சர்:
“கடல்  நடுவே  ஒரு  மாமரம்  இருக்கு...  அந்த  மாக்கய்களை  எப்படி  பறிப்பே?

மாணவன்: பறவையாய்  மாறி  பறிப்பேன்.

டீச்சர்: பறவை  போல  உன்னை  உன்  தாத்தாவா  மாத்துவார்?

மாணவன்:
கடல்  நடுவுல  மரம்  உங்க  அப்பாவா  வெச்சாரு?

-------------------------

6. ஏய்...  மிஸ்டர்.  யார்  நீ...?  டெய்லி  மிஸ்டுகாலா  குடுக்கறே?

மிஸ்.  உங்ககூட  பேச  ஆசை...  ஆனா  என்  செல்லுல  பேலன்ஸ்  இல்லை...  ஹி.. ஹி..

---------------------------
http://www.aishwaryaraifanclub.net/pictures/data/media/1/aishwarya_rai_41.jpg
7. வாத்தியார்  டி.வி.  பிரியர்  போல...

எப்படி  சொல்றே?

பாடம்  நடத்தறப்பக்  கூட  பாடவரிசை  பத்து-னு  போர்டுல  எழுதிப்  போடறாரே?

--------------------------

8. மன்னா!  ஏன்  குழப்பமாக  இருக்கீர்?

சன்மானமும்  தர்லை.  பாராட்டவும்  இல்லை...  நீர்  என்ன  அம்புட்டு  அப்பா  டேக்கரா?  என  புலவர்  கேட்டார்.  ஒன்றும்  புரியவில்லை  எனக்கு.

------------------------

9. மன்னா!  போருக்குப்  போகனும்.  ஒரு  காயம்  கூட  படாம  திரும்பி  வரனும்.

அப்போ...  மன்னனே  இல்லாத  நாட்டுக்குத்தான்  போருக்கு  போகனும்.

----------------------
http://www.bollylive.com/gallery/actress/aishwarya-rai/aishwarya-rai-hot.jpg
10. என்  இதயத்துல  எப்பவும்  உங்களுக்கு  இடம்  உண்டு...

இந்த  டகால்டி  வேலையெல்லாம்  வேண்டாம்...  எங்க  கட்சிக்கு எத்தனை  சீட்?  ஓப்பனா  சொல்லுங்க....


--------------------------------------------------------

டிஸ்கி 1 - நம்ம ஐஸோட (அபிஷேக் மன்னிப்பாராக) முதல் ஸ்டில்லுல போட்டிருக்கற ஸ்டெட்டோட (கம்மல்)  பேரு சிக்னல் போஸ்ட் ஸ்டெட்.. அதுல மஞ்சள் லைட் எரியுது இப்போ.. கலைஞர் தமிழகத்துக்கு நிரந்தர முதல்வர்னு கட்டியம் கூறுது....

டிஸ்கி 2 - நம்ம ஊர் பொண்ணுங்க தலை வகிடு எடுக்கறப்ப நேர் வகிடு எடுக்காம கொஞ்சம் கோணையா போய்ட்டாளே அட கிறுக்குப்புள்ள மவளேன்னு பெருசுங்க திட்டும்.. இங்கே பாருங்க.. ஐஸ் வகிடு கிராஸ் ( CROSS)ஆக இருந்தாலும் பார்க்கறவங்க மனசு கிரேஸ் (CRAZE) ஆகுதே.....

டிஸ்கி 3 - மொக்கை ஃபிகருங்க எல்லாம் கழுத்து நிறைய நகை போட்டாலும் அது அட்ராக்டிவ்வா இருக்காது.. ஐஸ் மாதிரி இண்டெர்நேஷனல் ஃபிகருங்க கழுத்துல துக்ளியூண்டு செயினும், விரல்ல சின்னதா ஒரு மோதிரமும் மட்டும் போட்டாலும் அழகு தூக்கிக்குது..

டிஸ்கி 4 - கடைசி ஸ்டில் ஐஸ் நடிச்ச தாமினி டீச்சர் படத்துல வர்ற சீன்.. அவங்க கைல பாருங்க... மேட்சே இல்லாத கலர்ல பிரேஸ்லெட் போட்டிருக்கறதை.. ஆனா மனசை கேட்ச் பண்ற மாதிரி இருந்தா போதும் மேட்சுக்கு மேட்ச் தேவை இல்லைங்கற வரலாற்றுத்தத்துவத்தை உணர வைக்கத்தான் இந்த ஸ்டில்லு...ஹி ஹி 

Friday, April 01, 2011

காதலி ஓப்பன் டைப்பா? மூடி டைப்பா? என எப்படி கண்டு பிடிக்கறது?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Anjali-New-Photos/anjali-actress-stills-157.jpg

1. தலைவருக்கு  842  சீட்  கிடைசிருக்கா?  என்ன  உளர்றே? மொத்தமே  234  சீட்  தானே?

தலைவர்  புதுசா  கட்டி  இருக்கற சினிமா  தியேட்டர்ல்  842  சீட்டாம்.

----------------------

2. ஆஹா...  சமையல்  பிரமாதம்...  உங்க  மனைவியோட  கை பக்குவம்  அருமை...

பாவம்  ஒரு  பக்கம்,  பழி  ஒரு  பக்கமா?  சமைச்சது  மாமியார்.

---------------------------

3. தலைவரோட  அலம்பல்  தாங்கல...

ஏன்?

தினத்தந்தில  கன்னித்தீவு  படக்கதை  சீக்கிரம்  முற்றும்  போடப்பட்டு  கச்சத்தீவு  கதை  ஆரம்பிக்க வேண்டும்கறாரே?

-----------------------------
http://www.stillsindia.com/gallery2/cache/south-actress/anjali/actress-anjali-saree-stills-08_900.jpg
4. வாழ்க்கைல  பல  திருப்பு  முனைகளை  சந்திச்சுத்தான்  இந்த  தியேட்டரை  கட்டினேன்...  ஆனா  ஃபயர்  ஆக்சிடெண்ட்ல  எல்லாம்  எரிஞ்சு  போச்சு...

அடடா...  டர்னிங்  பாய்ண்ட்டா  அமைஞ்சு  தியேட்டர்ல  பர்னிங்  பாய்ண்ட்டா?

---------------------------------

5. ஒரே  ஒரு  சீட்  குடுத்தா  போதும்னு  சொல்லியும்  நம்ம  தலைவரை  எந்த  கட்சியும்  கூட்டணில  சேர்த்துக்கலையே, ஏன்?

அது  சரி...  நம்ம  தலைவர்  கேட்டது  சி.எம்.  சீட்...

---------------------------------

6. தேர்தலுக்கு  முன்னால  தலைவர்  பாரி  வள்ளலா  மாறி  பணத்தை  அள்ளி  இறைக்கறாரே?

தேர்தல்  முடிஞ்ச  பிறகு  பாருங்க.  ஒப்பாரி  வள்ளலா  மாறிடுவார்.

-------------------------------
http://cinegalleries.com/wp-content/uploads/2011/03/Maharaja-Movie-20110326-anjali1.jpg
7. காதலி  ஓப்பன்  டைப்பா?  மூடி  டைப்பா? என  எப்படி  கண்டு  பிடிக்கறது?

சுடிதார்  மட்டும்  போட்டிருந்தா  ஓப்பன்  டைப்; துப்பட்டவும்  போட்டிருந்தா  மூடி  டைப்.

----------------------------------

8. டாக்டர்...  எனக்கு  தூக்கத்துல  நடக்கற  வியாதி  இருக்கு...  என்ன  பண்றது?

ஒண்ணா  தூங்கு...  இல்லைனா  நட...  இரண்டும்  உடம்புக்கு  நல்லதுதான்.

----------------------------------

9. முத்துக்கு  முத்தாக  படத்தை DMK கட்சி  ஆட்கள்  யாரும்  பார்க்கக்  கூடாது-னு  தலைவர்  சொல்லீட்டாரா?  ஏன்?

அம்மா  பாசம்  அதிகமாகி  ஓட்டை  மாற்றி  குத்திட்டா?

-------------------------------
http://mimg.sulekha.com/tapsi/stills/tapsi-stills0309.jpg
10. நடிகை  தப்ஸி (TAPSI)க்கு  இடுப்பு  பிடிச்சிருக்கறாதால  ஹாஸ்பிடல்  போயிருக்காராம்.

அடடா...  எனக்கு  கூட  தப்ஸியோட  இடுப்பு  பிடிச்சிருக்கு... நான் ஹாஸ்பிடல்  போனேனா?

Thursday, March 31, 2011

ஆனந்த விகடன் VS திரிஷா பேட்டி - காமெடி கும்மி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglXA_OfOWZDKNdGy8BlHRr7Msaf212BwQ_SAXIURLouez2wK1Ug_St8itoC9xxCYF35KTYVAjk6QhYDI32hvB-74WPJ0uhSTk1aNcetOKcXAr5EBAFeVXG3US4kE_Zx047OsCxH7ScEPWI/s1600/trisha-in-marmayogi.jpg
ரு ஃபேஷன் ஷோவில் ஜெயித்தபோது, பார்த்த த்ரிஷா இல்லை இந்தப் பெண். 'வாழ்க்கை வாழ்வதற்கே’ பக்குவம் நிரம்பி வழிகிறது உடல் மொழியிலும் இதழ் மொழியிலும்!
1. '' 'த்ரிஷாவுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. கன்ஃபர்ம். ஆந்திரா பையன்’னு கோடம்பாக்கத்தில் வதந்தி பலமா இருக்கே?'' 

''காதல் கிசுகிசுக்கள் தாண்டி, இப்போ கல்யாண கலாட்டாவா? சினிமாவில் புரமோஷன் கிடைக்குதோ இல்லையோ, வதந்திகளில் அது மிஸ் ஆகிறதே இல்லை.

 ஆமாங்க.. சிம்பு கூட இதையே தான் சொல்வாரு...

என் கேரியரை ஸ்பாயில் பண்ண ணும்னு யாருக்கு இவ்வளவு ஆசைன்னு எனக்குப் புரியலை.

 வேற யாருக்கு.. உங்க ரசிகர்களுக்குத்தான்

எனக்கு வெளிப்படையா யாரும் எதிரி கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படிப் புதுசு புதுசா ஏதாச்சும் வதந்தி கிளம்பிடுது.

 ஆமாங்க.. ஆனா 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு வதந்தி வந்ததே அது டாப் டக்கருங்க.. அந்த மாதிரி மறுபடி புதுசா எதுவும் வர்லைங்களே.. ? ஏன்?



கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன். நான் வெளிப்படையான பெண்.

 ஆமாங்க.. நீங்க பச்சை குத்தி இருக்கற ஸ்டைல்லயும், டாட்டூ போட்ட மேட்டர்லயும் அது நல்லா தெரியுது...


என்னோட எந்த முடிவுக்கும் என் குடும்ப ஆதரவும் இருக்கும். அடுத்தடுத்து தமிழ், தெலுங்குனு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டே இருக்கேன். இப்போ கல்யாணம் பத்தி யோசிக்க நேரம் இல்லை!''


பொதுவா மார்க்கெட் போன பிறகுதானே கல்யாணத்தை பத்தி யோசிக்கனும்?



2. ''சாகச விரும்பி த்ரிஷா, சமீபத்தில் என்ன சாகசம் பண்ணினாங்க?'' 


''ஜெய்ப்பூர் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்துக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தேன். எப்பவும் ஃபாரின் ட்ரிப்தான் போவோம். இந்தத் தடவை இந்தியாவிலேயே எங்காவது சுத்திப் பார்க்கலாம்னு தோணுச்சு. செல்போன், லேப்டாப், பேப்பர், டி.வி, சினிமான்னு எல்லாத்துக்கும் லீவ் விட்டுட்டு, ஒரு வாரம் காட்டுக்குள்ளேயே இருந்தோம்.

 இருந்தோம்னு ப்ளூரல்ல சொல்றீங்களே? #டவுட்டு


உள்ளே போயிட்டு ரெண்டு, மூணு நாள் கழிச்சுத்தான் புலிகளைப் பார்க்க முடிந்தது. ரெண்டு அடி எடுத்துவெச்சா... தொட்டுடலாம்கிற தூரத்துல புலிகள். வாவ்... சான்ஸே இல்லை. அந்த ராத்திரியில் நெருப்புத் துளி மாதிரி புலிகளோட கண்ணு மினுமினுங்குது. கம்பீரமான அழகு!


நாங்க தங்கியிருந்த ரூம் ஜன்னலில் வந்து மயில்கள் உள்ளே எட்டிப் பார்க்கும். ஏதேதோ பறவைகள் தலையை நீட்டி நீட்டி ஆட்டிட்டு எங்களை முறைச்சுப் பார்க்கும். என்னோட என் ஃப்ரெண்ட்ஸ் சபீனா, ஹேமா வந்திருந்தாங்க. சேட்டையும் அரட்டையுமா கிட்டத்தட்ட த்ரீ இடியட்ஸ் மாதிரி காட்டுக்குள்ளே திரிஞ்சுட்டு இருந்தோம். இனிமே, சம்மர் ஹாலிடேஸ்களை இந்தியாவில்தான் கொண்டாடணும்னு முடிவு பண்ணி இருக்கேன். நான் இதுவரை போன வெளிநாடுகளைவிட ரந்தம்பூர்தான் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்!''

 சபீனா, ஹேமா ரெண்டு பேரும் வந்தாங்க.. ஓக்கே? சேட்டை அண்ணனுமா வந்தாரு? அண்ணன் சொல்லவே இல்லை?


3. ''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’வில் நீங்க நடிப்பதாகச் செய்தி வந்தது. ஆனா, இப்ப வேற யாரோ நடிக்கிறாங்க. இந்தியில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கிற மாதிரி தெரியலையே?''  


''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு நான் 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனா, கௌதம் அந்த டேட்ஸை யூஸ் பண்ணிக்கலை. அதனால், என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியலை. ஆனா, பிரச்னை எதுவும் இல்லை. இப்பவும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் அப்படியேதான் இருக்கு.

 ஓஹோ.. அப்படியே தான் இருக்கா.. ஜாக்கிரதை.. அவரோட லேட்டஸ்ட் படம் பார்த்தீங்க இல்ல..?


இந்தியில் இதுவரை வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகலை. ஒரு பெரிய பேனரோடு பேசிட்டு இருக்கேன். சீக்கிரமே நியூஸ் சொல்றேன்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpuw6USWI7xaJkE7Y9uTrYZlA7-8QehTw7pZdQZFe0eTPFYBxVuXgz1Bs_RbdpRkdASu3uo5rg2WI0WHZuqre3eqvMK4Sn4OJzRmNRZr6wW3zzzSvCOIB6uNdVcD-1lFnQiVkltFnYpQpZ/s1600/Trisha065.jpg
4. ''தேர்தல் சமயம்... எந்தக் கட்சிக்கு உங்க ஓட்டு?'' 

''ஆங்... அது சீக்ரெட்! ஆனா, நிச்சயம் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவேன். எப்பவும் ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவற மாட்டாள் இந்த த்ரிஷா... த்ரிஷா... த்ரிஷா. எக்கோ எஃபெக்ட் கிடைக்குதா?''


டி ஆர் நிக்கலை.. அதனால டி ஆருக்கு ஓட்டு போட வழி இல்லை... 

63 நாயன்மார்களும் (காங்க் ) ஒரே ஒரு நயன் தாராவும் (ஆங்க்)

http://www.skynyxonline.com/myimages/actress/nayanthara/nayanthara-hot-sexy-gallery-4%5B1%5D.jpg 

1. தலைவர்  ஏன்  கோபமா  இருக்கார்?

ஓய்வுக்கே  ஓய்வு  கொடுத்தவருக்கு  நாம  ஓய்வு  கொடுத்து  வீட்டுக்கு  அனுப்புவோம்னு  அவரோட எதிரிகள்  பிரச்சாரம்  செஞ்சாங்களாம்.

------------------------

2. தலைவருக்கு  தேர்தல்  ஜுரம்  பிடிச்சிருக்கு...

இப்பவே  இப்படின்னா  தேர்தல்  ரிசல்ட்  ஜுரம்  வந்தா... அவ்வளவுதான்  போல...

-----------------------

3. அரசியலில்  என்னை  தோற்கடித்தால்  நான்  சினிமாவில்  நடிப்பேன்னு  தலைவர்  அறிவிச்சிருக்காரே?

ஆமா... அவரோட  நடிப்பை  பார்க்கற  கொடுமைக்கு  ஆட்சிப்  பொறுப்பையே  குடுத்துத்  தொலைச்சிடுவோம்-னு  மக்கள்  நினைக்கட்டும்னுதான்.

------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/nayanthara27.jpg
4. தலைவருக்கு  அரசியல்  அறிவு  சுத்தமா இல்லைனு  எப்படி  சொல்றே?

தமிழகத்தில்  500  தொகுதிகளிலும்  தனித்துப்  போட்டி  இடுவோம்னு  முழங்குனாரே?

--------------------------------

5. தலைவரோட  நாக்கு  குழறுனதால  கட்சில  ஏகப்பட்ட  குழப்பமாமே?

ஆமா...  என்  கூட  பிரச்சாரம்  செய்ய  வர்றீங்களா?-னு  கேட்கறப்ப  வாய்  குழறி  மகளிர்  அணித்தலைவி  கிட்டே, “என்  கூட  விபச்சாரம்  செய்ய  வர்றீங்களா?-னு  கேட்டுட்டாராம்.

---------------------------------

6. தலைவருக்கு  சின்னம்  இன்னும்  ஒதுக்கலையாமே?

ஆமா...  போற  போக்கைப்  பார்த்தா  அவரையே  ஒதுக்கிடுவாங்க  போல.

--------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqV0VCL9C1k3J54sR_kSPDwjFvi80i5h3o_IEfzDiHlTg-95JQ7bIQ7315IUZbcQ8MTGJFZq-9lmSR2HQ-QebY76XtIxZZq0_OZiKz2vKILjqDO23N10kAssr7_f5D4RTrj7Q5JCEwY8A/s400/Nayantara-Photos-074.jpg
7. கூட்டணித்  தலைவரோட  பேச்சு  வார்த்தை  நடக்கறப்ப  சொடக்கு  எடுத்துவிடறாரே  தலைவரு...?

“எப்படியாவது  அவரை  மடக்கிடுங்கனு  கட்சி  மேலிடம்  சொன்னது  அவர்  காதுக்கு  எப்படியாவது  சொடக்கிடுங்க-னு  கேட்டுதாம்.

--------------------------------

8. தலைவர்  பேச்சைக்  கேட்டு  ஊரே  சிரிச்சுதாமே?

மக்கள்  ஆட்சிவர  ஆதரவளிப்பீர்-னு  சொல்றதுக்குப்  பதிலா  மாக்கான்  ஆட்சி  அமைக்க  ஆதரவு  தாரீர்-னு  உளறிட்டாராம்.

----------------------------

9. தலைவர்  எதுலயும்  பர்ஃபக்‌ஷன்  எதிர்  பார்ப்பார்...

அதுக்காக  மகளிர்  அணித்தலைவி  மேட்சுக்கு  மேட்சா  ஜாக்கெட்  போடலைங்கறதை மேடைலயே  சொல்றது  ஓவர்...

----------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy53lnYNvfAcw27J7C1f84isOoJzcS8uvGIdGvqP4qZ7rwo1FysiRzDtJmrhmVtl7fyAN6RDmcwpyaC9o2XVRnCwl4IuITesOqRykpHmcc7vSmyBezMVMkIjwv9vmEvxTfxmjhE3w7hBc5/s400/nayantara_image_06.jpg
10. இதுவரை  எனக்கு  63  பேர்  லவ்  லெட்டர்ஸ்  குடுத்திருக்காங்க...

அடேங்கப்பா..மேடம்.... பயங்கரமான  நாயன்மார்கள்  கதை  உங்களுதுதான்  போலிருக்கே!  மரித்திடாத  சரித்திரம்  படைத்த  மகளிர்  அணித்தலைவி-னு  போஸ்டர்  ஒட்டிடவேண்டியதுதான்.


டிஸ்கி - இதை எழுதுனா யாரும் ஜோக்கைப்பற்றி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகிடறாங்க.. சோ டிஸ்கிக்கு தடா...ஹி ஹி 

விளக்க டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம் 63 நாயன்மார்கள் என்று கலைஞரால் வர்ணிக்கப்பட்ட காங்கிரஸ் தனது தகுதிக்கு மீறி அதிக சீட்டுக்கு ஆசைப்படுது.. நயன் தாரா தன் தகுதியை விட்டு இறங்கி.......... சோ 2 பேரும் அடையப்போவது தோல்விதான்...

Wednesday, March 30, 2011

நாளைய இயக்குநர் - சஸ்பென்ஸ் + த்ரில்லர் கதைகள்

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Spicy-Keerth-Chawla-Gallery/keerthi-chawla-stills-019.jpg 


இன்னைக்கு (27.3.2011) ஒரு இனிய ஆச்சரியம் என்னன்னா முதல் போட்டியாளர் ஒரு பெண் இயக்குநர்.. பேரு வெண்ணிலா ( கவிதாயினி அ. வெண்ணிலா அல்ல).அவரைப்பார்த்ததும் ஏதோ ஃபேமிலி செண்ட்டிமெண்ட் எடுத்துக்கொல்லப்போறார்னு நினைச்சேன்.. ஆனா சஸ்பென்ஸ் ஸ்டோரி...

1. நான் சொல்வதெல்லாம் உண்மை - வெண்ணிலா

பாட்டோட பல்லவியை படத்துக்கு டைட்டிலா வைக்கிறது,பழைய படங்களோட டைட்டிலை புதுப்படத்துக்கு வைக்கரது இதெல்லாம் இப்போதைய டிரெண்ட் போல.. ஆனா என்னை கேட்டா கிரியேட்டிவ் மைண்ட் இல்லாதவங்க தான் அப்படி வைப்பாங்கன்னு சொல்வேன்.. ஆனா சிலர் மக்களை ஈஸியா போய் ரீச் ஆக ஏற்கனவே ஹிட் ஆன டைட்டில் பெட்டர்னு சொல்றாங்க..

நூறாவது நாள் படத்தோட ஒன்லைன் தான் இந்த குறும்படத்தோட கதை..அதாவது ஹீரோவுக்கு நைட் கண்ட கனவு மறு நாள் மதியம் 12 மணிக்கு பலிக்குது..அந்த பலிக்கற சூழல் அந்த டைம்ல ஹீரோ எங்கே இருக்காரோ அந்த இடத்துல யார் இருக்காங்களோ அவங்களை பாதிக்குது..இந்த மாதிரி 3 கனவு பலிக்குது..

4 வது கனவுல யாரோ ஆக்சிடெண்ட்ல இறக்கற மாதிரி பார்க்கறார் ஹீரோ..அப்போ கூட இருக்கற ஃபிரண்டை எச்சரிக்கறப்பத்தான் அவருக்கு பலி ஆகப்போவது தான் தான் என்ற எண்ணம் வருது.. ஆனா.. அட சட்.. டூ லேட்.. ஆக்சிடெண்ட் ஆகுது...ஆள் அவுட்.. 

இந்த க்ளைமாக்ஸ் KNOT  மட்டும் மாதவன் நடிச்ச யாவரும் நலம் படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ல இருந்து உருவி ஆல்டர் பண்ணி டிங்கரிங்க் ஒர்க் பண்ணி இருக்காங்க..

இதுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் கலக்கலா போட்டிருந்தாங்க..பொதுவா இந்த மாதிரி சஸ்பென்ஸ் த்ரில்லர்க்கு இசை தான் முக்கியம்.. 

ஆனா சராசரிக்கும் மேலே உள்ள இந்தப்படத்தை மதன்+ பிரதாப் போத்தன் பெரிசா சிலாகிக்கலை.. ஓக்கே அப்படின்னாங்க...
...
http://www.topnews.in/files/Keerthi-Chawla.jpg



2. ஸ்கூல் பெல் - பிரின்ஸ்

குமுதத்துல வர்ற ஒரு பக்க கதை மாதிரி ரொம்ப சின்ன கதையா இருந்தது. குறும்படம் ஓடறதுக்கான டைம் அவங்க குடுக்கறது 7 நிமிஷம்னா குறைஞ்ச பட்சம் 5 நிமிஷமாவது யூஸ் பண்ணனும்.. ஆனா இந்தப்படம் 4 நிமிஷம் தான் ஓடுச்சு..

ஒரு ஏழைக்குடும்பத்துல 2 குழந்தைங்க காலைல அவசர அவசரமா ரெடி ஆகறாங்க.. அம்மா.. சீக்கிரம் டிஃபன் ரெடி பண்ணு.. ஸ்கூல் பெல் அடிக்கப்போறாங்க... லேட்டாப்போனா அடி விழும் என 2 பேரும் சொல்றாங்க.. இந்த பில்டப்புல 3 சீன் ஓடுது.. அப்புறம் பார்த்தா 2 குழந்தைங்கள்ல ஒரு பையன் ஸ்கூல்க்கு போறான்.. இன்னொரு குழந்தை ( பொண்ணு ) வேலைக்கு போகுது.. ஸ்கூல் பெல்லை ஒரு டைமிங்க்க்கான அடையாளமா வெச்சிருக்காங்க.. அவ்வளவுதான்.

குழந்தைதொழிலாளர் எதிர்ப்புக்கான ஒரு டாக்குமெண்ட்ரியா இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கே ஒழிய ஒரு குறும்படத்துக்கான ட்விஸ்ட்டோ, அழகிய ரசனை சார்ந்த  மேக்கிங்க் ஸ்டைலோ இல்லை..இதை 2 ஜட்ஜூங்களுமே சொன்னாங்க.. ( குறையை கரெக்ட்டா சொல்லிடறாங்கப்பா..)

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1.   கதைக்களன் ரொம்ப ஏழை.. கிட்டத்தட்ட சேரின்னு முடிவான பின்னே அந்த கேரக்டர்கள் அதே போல் செலக்ட் பண்ண வேண்டாமா?சிட்டி லைஃப் குழந்தைகளை செலக்ட் பண்ணாம சேரிக்குழந்தைகளையே செலக்ட் பண்ணி இருக்கலாம்...

2. ஓப்பனிங்க் ஷாட்ல ஹைக்ளாஸ் பெட்ஷீட்டை போர்த்தி படுத்திருக்கு குழந்தை.. அது எப்படி?


http://s4.hubimg.com/u/3606995_f520.jpg
3. இலக்கணப்பிழை - சரத்

இதே டைட்டில்ல இப்பத்தான் ஒரு  கில்மாப்படம் ரிலீஸ் ஆச்சு..( கில்மா = KILL மா -அதாவது எதுவுமே இல்லாம கொலையா கொன்னெடுக்கற படம் ஹி ஹி ))ஆனா அந்தப்படத்தை விட இந்த படத்துக்குத்தான் டைட்டில் ரொம்ப பொருத்தம்..

நடைபாதைல தள்ளுவண்டி வியாபாரம் பண்ற ஒரு தம்பதி..அதுல கணவனை போட்டுத்தள்ள ஒருத்தன் வர்றான்.அவன் கூட கை கலப்பு நடக்கறப்ப எதிர்பாராத விதமா வந்தவனை கணவன் கொலை பண்ணிடறான்.

அந்த டெட்பாடியை மறைக்க முயலும்போது கணவனோட நண்பன் வர்றான்.. அவனையும் ஒரு கை பிடிக்க சொல்லி பாடியை அப்புறப்படுத்தும்போது செல் ஃபோன் இருக்கு.. அந்த ஃபோன்ல நண்பனோட நெம்பரை பார்த்ததும் தான் உண்மை தெரியுது.. 

கணவனோட  நண்பன் தான் அந்த கூலிப்படை ஆளை அனுப்பினதே..உடனே 2 பேருக்கும் கை கலப்பு நடக்குது..அப்போ


பிரபு தேவா - நயன் தாரா மாதிரி.. கள்ளக்காதலர்கள்... இவங்க காதலுக்கு கணவன் இடஞ்சலா இருந்துடக்கூடாதுன்னு ப்ளேன் போட்டு நடத்தறப்ப ஜஸ்ட் மிஸ் ஆகி காதலன் செத்துடறான்...

ஆனா கணவனுக்கு கடைசி வரை தன் மனைவி டாக்டர் ராம்தாஸ் மாதிரி ஒரு நயவஞ்சகக்காரி என்பது தெரியாமலே போகுது..

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1,  பொதுவா ஒரு மனைவி கணவனை கொல்ல நினைச்சுட்டா 1008 வழி இருக்கு.. சாப்பாட்ல விஷம் வைக்கலாம்..,மலைல இருந்து தள்ளி விடலாம்,மப்புல இருக்கறப்ப எதாவது பண்ணலாம், தூங்கிட்டு இருக்கறப்ப தலைல கல்லை தூக்கி போடலாம்... ( இதுக்கு மேல விவரிச்சா நானே லீடு குடுத்த மாதிரி ஆகிடும்..)ஆனா இந்த மனைவி ஏன் இப்படி ஒரு ரிஸ்க்கான வழியை தேர்ந்தெடுத்தா?


2. அப்புறம் முக்கியமான விஷயம் ஒருத்தரை தாக்கறப்ப அவர் மட்டும் தனியா இருந்தா நாம் ஒரே அடில ஆளை முடிக்கற மாதிரி பவர் ஷாட் குடுத்து கொலை செய்யலாம்.. (இதெப்பிடி உனக்கு தெரியும்?)ஆனா 2 பேரு சண்டை  போட்டுட்டு இருக்கறப்ப ஒரே ஷாட்ல ஆளை முடிக்க முடியாது.. முதல் அடி லைட்டா எதிராளி நிலை குலையற அளவு மட்டும் அடிச்சுட்டு, அடுத்த அடில தான் ஆளை முடிச்சுக்கட்டுவாங்க.. 

மதன் இந்த படத்துக்கு ஒரு ஐடியா சொன்னாரு.. அதாவது மனைவி தாக்கும்ப்[ஓது ஸ்லோமோஷன் ஷாட் வெச்சிருக்கலாம்.. அப்பத்தான் அவ கணவனை கொலை செய்ய போய் மிஸ் ஆகி காதலனை கொலை செய்தது தெளிவா பார்வையாளனுக்கு தெரியும்னார்...


இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு ரொம்ப இயல்பா இருந்தது.. கேமரா கோணங்களும் அழகு.. இந்தப்படம் தான் இந்த வார சிறந்த படமா தேர்ந்தெடுப்பாங்கன்னு நினைச்சேன்..ஆனா...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW-69AV7Tn-itTuuwqGt_5QMqC2R6Eax2ds3FqQo7HQoAFyXSPpi67Yludufhzn5O_ymDKQVoKJFxhpMzQBB031VuQThJYddJpxYZM1ksr_ujGMKPlabnVtEfyRahCynkyxBxZBUYNC0bg/s1600/rahi-bd-hot-tv-anchor-10.jpg

4. கானல் நீர் - அருண்

ராஜேஷ் குமாரோட பாதிப்பு இந்த கதைல நிறையவே தெரிஞ்சுது..ஒரு அம்மா, பொண்ணு  மட்டும் இருக்கற வீடு.. அப்பா சில நாட்கள் முன்புதான் இறந்திருக்காரு.. அது கொலை.. கொலை செஞ்சது அம்மாவோன்னு சந்தேகப்படறா பொண்ணு... 

அப்புறம் பார்த்தா அப்பாவோட ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு கூட தொடர்பு.. அந்த பொண்ணோட புருஷன் அப்பாவையும், அவனோட மனைவியையும் போட்டுத்தள்ளி இருக்கான்..

இந்தப்படத்துக்கான கேமரா ஷாட்ஸ் ரொம்ப புத்திசாலித்தனமா இருந்தது.. படத்தோட மைனஸ் என பார்த்தா பொலீஸ் ஆஃபீசரா வர்ற கேரக்டர் எப்போ பாரு தம் அடிச்சுக்கிட்டே இருப்பது...எதுக்காக அப்படி ஒரு ஷாட் வைக்கனும்?அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு புகை பிடிப்பது உடல் நலனுக்கு கேடு என வாசகம் ஓட விடனும்?

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1. டெட்பாடியில் ரத்தம் வர்ற மாதிரி காட்சில ரத்தத்தை அப்படி தெளிக்கக்கூடாது..

2. வயலட் கலர்ல ரத்தம் எந்த கிரகத்துல இருக்கு?டாக்டர் ராஜசேகரோட மன்னிக்க வேண்டுகிறேன் படத்துலதான் முதன் முதலாக உண்மையான ரத்தத்தையே யூஸ் பணி கொலைக்காட்சிகள் எடுத்தாங்களாம். அந்த அளவு இல்லைன்னாலும் ஓரளவாவது மெனக்கெடலாமே..?

போட்டில ஸ்கூல் பெல் படத்தை தவிர மற்ற  3 பட டைரக்டர்களுமே குவாட்டர் ஃபிஅனலுக்கு போறாங்க..


டிஸ்கி 1 - ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பகுதில நில நடுக்கம் வந்ததா தகவல் வந்திருக்கு.. எனக்கு சொன்னவர் நம்ம காங்கேயம் நந்த குமார்.. சன் டி வி குரூப்ல நிறைய பேர் அங்கே இருக்காங்களாம்.. இன்னைக்கு மாலை நான் அங்கே போறேன்... ஏதாவது மேட்டர் சிக்குச்சுன்னா அதை ஒரு பதிவா போடறேன்... 

டிஸ்கி 2  - இங்கே போடப்பட்டுள்ள ஸ்டில்ஸ்களுக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இது திராவிடக்கட்சிகள் அறிவித்த இலவச திட்டங்கள் மாதிரி.. சும்மா ஒரு அட்ராக்‌ஷனுக்காக...

Tuesday, March 29, 2011

2 ஜி ஊழலை வைத்து பாமர மக்களை ஏமாற்ற முடியாது - கலைஞர் பரபரப்பு பேட்டி

http://aakayam.files.wordpress.com/2010/05/p42.jpg 

மு.க.ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவினர் ஒருமனதாக ஏற்பார்களா.. தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமையுமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

 
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி, சிஎன்என் ஐபிஎன் செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

 கூட்டணி தொடருமா?

1. 'தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?'

"அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் காங்கிரஸும், தமிழக அளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.


கருத்து மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம். அதாவது திட்டங்கள் தமிழகத்துக்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல
 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/DMK/kk.jpg

2. இந்தத் தேர்தலில் திமுக முன்பை விட குறைந்த இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதனால், தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியும் அமையும் என எடுத்துக்கொள்ளலாமா?

"அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
 

மேற்கு வங்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து, இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் மற்றும் வலதுசாரி கட்சிகள் எல்லாம் இடம்பெற்று அவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு உகந்தவாறு அரசு அமைக்கிறார்கள். 


அதைப் போல நாம் நம்புகிறேன், எண்ணுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருவேளை வோட்டிங் பேட்டன் என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEFWi8FjQK7IBzwutFtXcbwu0jzyfQvjGZzCOGtclejXmE6Ckabz4vTsiu1IS-8oQSl_fOkmE5GJRVUPGPes_BcpsjEPblZr7gFbZJKmlGJ7tIXuxrHAEQQ-8yjvMwiVSI68i9PZCjOEM/s400/thamalachi5.jpg
அரசியல் வாரிசு... 

3. "நீங்கள் 12-வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறீர்கள். உங்கள் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்கிறதா?"  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuVlJl-9r_GrzZtNHAq_zQ5kaCsjQuknb4M1bOUVHlugEeOQVP-CO-WS3K62zSaV9EnKyhQqsff_gUPKH9QTQlNS7qGZEhddq2xSUhpoCBYAnTelyuz2bUMufewXlTM0YFeNOIgBIeHFb/s1600/Niira-Radia_2.jpg
"எந்தக் கேள்விக்குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அண்ணா தலைமையில் ஓர் அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணாவால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அது கேள்விக்குறியாக ஆவதற்கு எந்தவித நியாயமும் இல்லை,"


4. "கட்சியில் உள்ள அனைவரும் ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வார்களா?"

"திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது, மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது.

மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத நிறுவனம் அல்ல. இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழக செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitf1lIIvaUKl-mWbHf1H3J4FY1l-jH92OjOUdf-tY0XrY3wHrYD3nSQnnsIEuUyPsfprOdBd5wgMY1f7vhx6XRmBS_t7U2UIYVWbfu2vj-Y9QGbCp-FWBFDu-ax0Y7aVLUYz67jkmDyJKH/s1600/2.jpg
குடும்ப அரசியல்...

5. குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "எனக்கு குடும்பம் இருப்பதால் பெரிய தொல்லை, என்னைப் புரிந்த வர்கள் குடும்ப அரசியல் நடத்துகிறேனா இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார் - யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNwmT9eeXLTQr9A7es5yrhwXzHw6nPvrB60VCWy7cs-ULUa__geGN8cwv5EltixuQWNn-jYEw2jdAniAiVgzeWUVQREFc-HsrjfIyNILsXSCB1OPoeTI1L7Bgvful1isw3VoI12xegOc8/s1600/kanimozhi2.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம்... 

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாகத்திடமும் விசாரிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்கட்சிகள் கூறுவது குறித்து?

"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.


இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு அதற்கு வருமான வரித்துறைக்கும் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை," 
 http://www.alaikal.com/news/wp-content/stalin-ma.jpg
7. 2ஜி விவகாரத்தால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதா?

 சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது பல்லுக்கு பல் இருகாதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்,

என்னது? பவுன் போட்டு பொண்ணு கட்டிட்டு போகனுமா?

Hilarious political cartoon images
1. ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்: 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வைகோவை முதல்வராக்க, இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென கனவு கண்டோம். அந்தக் கனவை கல்லெறிந்து கலைத்துவிட்டனர்.

அண்ணன் 10 சீட்டுக்கே தகிந்தினந்தோம் போட்டுட்டு இருந்தாரு.. அதுக்குள்ள 234 தொகுதிக்கு ஆசப்பட்டா எப்படி? கணக்கு போட்டுக்குங்க.. இன்னும் 50 வருஷம் கழிச்சு வேணா ம தி மு கவுக்கு 25 சீட் கிடைக்கும். ஆனா அது வரை கட்சி இருக்கனும்..

----------------------------

2. தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்: இந்தத் தேர்தலிலும் ஓட்டுக்காக பணமும், பொருளும் வழங்க, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியினர் திட்டமிட்டுள்ளனர். பணம் எடுத்துச் செல்ல, "108' ஆம்புலன்சை பயன்படுத்தப் போவதாக, தகவல்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் உதவி வாகனத்தை மக்களுக்கு முதல் போட உதவியா கொண்டு போறாங்க.. அதுல என்ன தப்பு இருக்கு?கோடிக்கனக்குல பணத்தை அடிப்பாங்க .. அதை விட்டுடுங்க.. ஏதோ எங்களுக்கு 2000 குடுக்கறது உங்களுக்கு பிடிக்காதே..


--------------------------------------------

http://www.movieinf.com/wp-content/images/2009/07/Hansika-Motwani1.jpg
3. சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி: சாதாரண சாப்பாடு 35 ரூபாய், அசைவம் 80 ரூபாய், சைவ பிரியாணி 20 ரூபாய், வெரைட்டி ரைஸ் 15, உப்புமா 18, இட்லி இரண்டு 12 ரூபாய், சப்பாத்தி இரண்டு 18 ரூபாய், பூரி செட் 18, பொங்கல் 18, ரோஸ்ட் 20, புரோட்டா 20, வடை 15, மினரல் வாட்டர் 14, மட்டன் பிரியாணி 100, சிக்கன் பிரியாணி 80, வாட்டர் பாக்கெட் 2, டீ 5, காபி 8, கூல் டிரிங்ஸ் 10, ஆம்லெட் 10 ரூபாய் என, உணவு வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நைனா.....சரக்கு..?


---------------------------------------------

4. அ.தி.மு.க., எம்.பி., சிவசாமி பேச்சு: ஒரு நாட்டின் வளர்ச்சி, அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு வைத்துக் கொள்வதில் தான். ஆனால், அண்டை நாடுகளுடன் நம் உறவு திருப்திகரமாக இல்லை. இந்திய அரசு தன் வெளிநாட்டுக் கொள்கையை கூர்ந்து கவனித்து மாற்றிக் கொள்ள வேண்டியது.

எனக்கென்னமோ ஒரு நாட்டோட வளர்ச்சி ஓட்டோட ரேட்டை வெச்சுத்தான்னு தோணுது.. போன எலக்‌ஷன்ல ரூ 2000. இப்போ ரூ 10,000 என பேசிக்கிறாங்க.. அப்போ 5 மடங்கு வளர்ந்திருக்கு...அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..?
--------------------------------------------------
http://rianai.com/wp-content/uploads/2009/10/Hansika_Motwani_11-500x750.jpg
-5. ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக வெளிப்படையாக ஓட்டளித்தோம். எனவே, அரசுக்கு ஆதரவளிக்க எங்கள் கட்சி எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்றதாக வெளியான தகவல் அடிப்படையற்றது.

ஓஹோ உங்க எம் பிக்கள் யாருக்கும் கொடுக்காம  எல்லாத்தையும் நீங்களே சுட்டுட்டீங்களா? இது ரொம்ப தப்பு.. எல்லாரும் சரி சமமா பிரிச்சுக்கனும்.. அது தானே நல்ல இந்தியனுக்கு அடையாளம்..?

----------------------------------
6. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி: தமிழகத்தில் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொள்ளாமல், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பா.ஜ., தனித்துப் போட்டியிடுகிறது. தென் மாநிலங்களில், கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த தனிக்கவனம் மேற்கொள்ளப்படும்.

 உங்க கட்சி ஆளுங்க தினமும் பேரீட்சை சாப்பிட்டாலும் கட்சி வளர்ச்சி அடையாது...ஏன் இந்த  வேண்டாத வேலை..?

------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOYasLEDrghHumtsCvnbBIxJzp_reCPVrV09ykzRsoJDNpWbSsPEm0vMALrexfhWOTBzVU42E0YHAsPeqLN2x-n8e-vqmb_co0TIR0FsSkkMnJoU13BOO3bh3l7PsoZ14xYZi57dbrqg/s1600/HansikaMotwani01.jpg

7. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேச்சு :இந்தியாவில், ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் சமூகத்தில், வேண்டாத விளைவுகள் ஏற்படும்.

ஆமாமா.. ஏற்கனவே சில  பொண்ணுங்க பண்ற அல்டாப்பு தாங்கல... இதுல அவங்களோட பிறப்பு விகிதம் இன்னும் குறைஞ்சிட்டா  அப்புறம் அவங்க ஓவரா ஆடுவாங்க.. பவுன் போட்டு கட்டிட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுடும்..

------------------------------------------------------

8. சமூக சேவகி மேதா பட்கர் பேச்சு: அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் நிறுத்தி கேள்வி கேட்கும் முறையைக் கொண்டு வரவுள்ளோம். எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் சரியாக செயல்படாத போது, அவர்களை திரும்பப் பெறுவதற்கான உரிமையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

எங்க ஆளுங்களுக்கு லஞ்சம் கேட்கத்தான் தெரியும்.. கேள்வி கேட்டா பதில் சொல்லத்தெரியாதே...அப்புறம் ரிட்டர்ன் பெறும் உரிமையை மக்களுக்கு குடுத்துட்டா வாரா வாரம் எலக்‌ஷன் வைக்க வேண்டி வந்துடுமே..எவன் இங்கே யோக்கியனா இருக்கான்?

--------------------------------------------------
டிஸ்கி 1 - நடிகைகள் போஸ் குடுக்கறப்ப நேரா நிமிர்ந்து நிக்காம ஏன் கூன் விழுந்த மாதிரி இருக்காங்க?ன்னு ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.. ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு.. அப்புறம் அவங்க லிப்ஸ்டிக்,இமைகளின் மேல் போட்ட வண்ணப்பூச்சு,சுடி எல்லாமே ஒரே கலர்ல இருக்கறதைப்பாருங்க..இது தான் மேட்சுக்கு மேட்ச்..ஹி ஹி

டிஸ்கி 2 - திருப்பூர் ஜோதிஜி அண்ணன் எலக்‌ஷன்ல நிக்கறதை முன்னிட்டு கிஃப்டா குடுத்த திருப்பூர் பனியன் தான் மேடம் போட்டிருக்காங்க 2 வது ஸ்டில்லுல...தொடர்ந்து அவர் எல்லா நடிகைகளுக்கும் இதே டைப்ல (ஹி ஹி மாடல் நல்லாருக்குல்லா?)பனியன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 3 - மேடத்தோட 3 வது ஸ்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ.. இள நரை வந்தாlலோ, கிழ நரை வந்தாலோ கறுப்பு மருதாணி தான் தலைக்கு போடனும்.. விவரம் தெரியாம சிவப்பு மருதாணி போட்டா இப்படித்தான் தலை செம்பட்டை ஆகிடும்..இந்த அரிய தகவல் தெரிவிச்சதுக்காக எனக்கு யாராவது அழகு டிப்ஸ் அழகேசன் விருது கொடுத்தா கூச்சமே இல்லாம வாங்கிக்குவேன்.. ( விருது வாங்க எதுக்கு கூச்சம்?)

Monday, March 28, 2011

எவண்டி உன்னைப்பெத்தான்.. ? அவன் மட்டும் என் கைல சிக்குனான்.. செத்தான்!!!!

http://narumugai.com/wp-content/uploads/2010/10/33876_471562211317_108887661317_6484073_6826200_n.jpg

1. “தலைவர் சென்னைல போட்டி போடாம ஏன் வெளி ஊர்ல போட்டி இடறாரு?”

      “சென்னை ஃபிகர்ஸை பார்த்து போரடிச்சுடுச்சாம். வெரைட்டியா ஸைட் அடிக்க ஐடியா பண்ணீட்டாரு”


------------------------------------------------

2.   “தலைவர் ஜெய்க்கபோறது உறுதி-னு எப்படி சொல்ற?”

       “செய்யும் ஊழலில் 50% மக்களுக்கு ஷேர் தர்றேனு சொல்லீட்டாரே?”


--------------------------------------------------------

3.    “தலைவர் ஏன் தனிக்குடித்தனம் வந்திருக்காரு?”

       “அவரு இந்த எலக்‌சனை புறக்கணித்ததா அறிவிச்சதும் அவரோட சம்சாரம் அவரை புறக்கணிச்சுடுச்சாம்”


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD3rMCCt_qH2GSwook6WXZ9gSfP4p_Sx3EqNRXjB1IDf144FjGbi5FaHt6f7nPw-RL7bU2xC-oFmCdvSkPTf10dN3Ky0FCegV50KordYwffGQDEHvVMSgDC1PRx7GySIfAZ-BGcjT49xxS/s1600/anushka_1.jpg
4.   “தலைவர்க்கு சொந்தமா வலைப்பூ(BLOGSPOT) ஆரம்பிக்கலாமா-னு கேட்டது தப்பாப் போச்சு?”

       ‘’ஏன்?”

பூ லேடீஸ் வச்சுக்கறது, வலை மீனவர்கள் வச்சுக்கறது எனக்கு எதுக்கு இதெல்லாம்? அப்படீனுட்டாராம்”

--------------------------------------------------



5.  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நமது கிரிக்கெட் அணி தவற விட்ட உலகக் கோப்பையை வெற்றி பெற்ற அணியிடமிருந்து நைசா அபேஸ் பண்ண ஆவண செய்யப்படும்”

---------------------------------------------------------



6.   “தலைவர் ஏன் மிரண்டுபோய் நிக்கறாரு?”

      “எவண்டா உன்னை எலக்‌ஷன்ல நிக்க சீட் குடுத்தான்... அவன் மட்டும் என் கைல கிடைச்சா அவன் செத்தான் அப்படினு மக்கள் திட்டுனாங்களாம்”

--------------------------------------------
http://narumugai.com/wp-content/uploads/2010/10/Anushka-1.jpg

7.    “தலைவர் பிரச்சாரத்துக்காக நெட்ல பிளாக்ஸ்பாட் ஆரம்பிச்சது தப்பா போச்சு”

        “ஏன்?”

      “அவர் மேல பிளாக் மார்க் விழுந்துடுச்சு”

-----------------------------------------------------


8.   “எல்லா தொகுதிலயும் தனியா போட்டி இடுவேன் -னு அறிவிச்ச தலைவர் ஏன் வாபஸ் வாங்கிட்டார்?”

        “234 வேட்பாளர்கள் கிடைக்கலையாம். மொத்தமே 63 பேர் தான் கட்சில இருந்தாங்களாம்”.

-----------------------------------------



http://narumugai.com/wp-content/uploads/2010/11/Sneha-ullal12.jpg

9.    “நம்ம தலைவர்க்கு தேர்தல் ஜுரம் பிடிச்சிருக்கு .....”

       “இப்பவே இப்படீன்னா.. தேர்தல் ரிசல்ட் வந்தா அவ்ளோதான் போல...”





----------------------------------------------------------

10.    “தலைவர்க்கு இன்னும் சின்னம் ஒதுக்கல போல...?”

         “ஆமா...போற போக்க பார்த்தா அவரையே ஒதுக்கீருவாங்க போல”









-----------------------------------------------------------------


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இருந்து நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா மஞ்சள் கலர் டிரஸ் போடறவங்க எல்லாம் டி எம் கே கிடையாது...அதே மாதிரி மேட்சுக்கு மேட்ச்  வளையல் போடற பொண்ணுங்க வலது கைல கரெக்ட்டா மேட்சிங்கா போட்டாலும், இடது கைல சொதப்பிடுவாங்க..ஜெ  கேப்டனுக்கு கரெக்ட்டா சீட் குடுத்துட்டு, வை கோ  மேட்டர்ல சொதப்புன மாதிரி......


டிஸ்கி 2 - அனுஷ்காவோட ரெண்டாவது ஸ்டில்லைப்பார்த்துட்டு நான் இரட்டை இலை ஆதரவாளன்னு யாரும் முத்திரை குத்தாதீங்க.. வேணும்னா அனுஷ்கா ஆதரவாளன்னு சொல்லிக்குங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ( எனக்கு என்ன பிரச்சனை..? அனுஷ்காவுக்குத்தான் பிரச்ச்னை..) தி மு க காரங்க வெற்றிலை = வெற்று + இலை எனவும், அதிமுக காரங்க வெற்றி + இலை எனவும் அர்த்தம் கற்பிப்பாங்க...நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.. அனுஷ்கா மேல் படர்ந்த வெற்றிலைக்கொடி  அடையாளத்துக்கு 2 இலையை விட்டுட்டு போயிடுச்சு போல,.....#கவிஞண்டா...


டிஸ்கி 3 - அனுஷ்காவோட 3 வது ஸ்டில்லைப்பார்த்துட்டு கம்யூனிஸ்ட்னு நினைச்சுடாதீங்க.. எனக்கு அந்த ஸ்டில்லைப்பார்த்தா பாப்பாவுக்கு வளையல் டேஸ்ட்டே இல்லைன்னு தோணுது.. (வளையல் எப்படி டேஸ்ட்டா இருக்கும்? #டவுட்டு)  அழகா ரெண்டே ரெண்டு வளையல் போட்டாத்தான் நல்லாருக்கும்.. இப்படியா கரகாட்டக்காரி மாதிரி போடறது..?


டிஸ்கி 4  - கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி )

வானம் படத்துல வர்ற இன்னொரு ஹீரோயின்.. படத்துல அவங்க போட்டிருக்கற  டி சர்ட் வாசகம் என்ன? னு தயவு செஞ்சு யாரும் உத்து பார்க்காதீங்க.. ஏன்னா 2 மணி நேரமா பார்த்த ராம்சாமிக்கே அது என்ன?னு தெரியலையாம்...

டிஸ்கி 5  - டைட்டிலுக்கான விளக்கம் .. வானம் படத்துல சிம்பு இயற்றி பாடி உள்ள அந்த பாடல் வரிகளின் பல்லவிக்கு பெண்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கறாங்களாம்.. அப்போ நியாயமா நாம என்ன பண்னனும்? ஹி ஹி அதே..... ஆதரிக்கனும்.. ஹி ஹி

கேபிள் சங்கரை வம்புக்கு இழுத்த செந்தில்


http://www.kollywoodtoday.com/gallery/actress/anjali/images/anjali_027.jpg 

1. பத்திரிகைச் செய்தி: தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 13க்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் உள்ள, "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது. அதனால், கமிஷனின் உத்தரவுப்படி, கடைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டப்படி கடையை மூடுனா கடைல ஒர்க் பண்றவங்க செட்டப்படி சைடுல கடையை திறந்து வெச்சு டபுள் மடங்கு லாபம் பார்த்துடுவாங்க..நட்டம் கவர்மெண்ட்டுக்கும், குடிமகனுக்கும் தான்.. 


--------------------------------------------------

2. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: கடந்த பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது. அதன் அடிப்படையில், மக்கள் எங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், தேர்தல் அறிக்கை, மக்களின் நம்பிக்கைக்குரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்ணே.. அப்புறம் ஏன் நீங்களும், கலைஞரும் சென்னைல போட்டி போடாம இடத்தை மாத்தறீங்க..?போடா வெண்ணை அப்படின்னு சொல்லக்கூடாது,,


-----------------------------------------------------
http://www.cinespot.net/gallery/d/370379-1/Tapsi+photos+_19_.jpg
3. பா.ம.க., தேர்தல் அறிக்கை: பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். புகையில்லா தமிழகம், பூரண மதுவிலக்கு ஆகியவற்றை அமல்படுத்த பாடுபடுவோம்.

தமிழகத்தை குஜராத் ஆக்க பாடுபடுவோம்னு சொல்றீங்க.. சந்தோஷம்.. ஆனா நீங்க கூட்டணி வெச்சிருக்கறது தி மு க கூட.. தமிழகத்தை பீகார் மாதிரி ஆக்காம கலைஞர் ஓய மாட்டார் போல... 


----------------------------------------

4. மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: ஊழல், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்ற பலவற்றால், தி.மு.க., அரசு தோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கூறப்பட்ட இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம், இந்த முறை கூறப்படவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்தல், வன்முறை போன்ற தி.மு.க.,வினரின் தில்லுமுல்லு செயல்களை வாக்காளர்கள் நிராகரித்து, முறியடிப்பர்.

எல்லா இடங்களையும் இலவசமா மக்களுக்கு கொடுத்துட்டா மந்திரிங்க என்ன பண்ணுவாங்க..இருக்றதை அள்ளிக்குடுத்துட்டு தொண்டு செய்ய அவங்க என்ன இளிச்ச வாயர்களா? 

----------------------------------
http://www.teluguflavours.com/gallery/allgallerys/Models/876/Tapsi%20Panu%20(3).jpg
5. பார்லிமென்ட் பா.ஜ., தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி கூட்டாக அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில், எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனக் கூறி, பார்லிமென்ட்டை தவறாக வழி நடத்துகிறார் பிரதமர். இந்த விஷயத்தில், பார்லிமென்ட் கமிட்டி கண்டறிந்த உண்மைக்கு மாறான கருத்தை பிரதமர் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற லஞ்சம் கொடுக்கப்பட்டது, தற்போது நிரூபணமாகியுள்ளது. லஞ்சம் கொடுத்து, கட்சி மாறி ஓட்டளிக்க வைத்ததன் மூலம் ஆதாயமடைந்த முதன்மை பயனாளிகள் பிரதமரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தான்.

ஆமா.. இது வரை நடந்த எல்லா நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் இது மாதிரி நடந்திருக்கே.. என்னமோ புதுசா சொல்றீங்க.. காலம் காலமா நடந்துட்டு வர்ற சம்பிரதாயத்தை மாத்த முடியுமா? நம்ம இந்தியா பழம்பெரும் பாரம்பரியம் மிக்கதாச்சே.. ?

---------------------------------------

6. லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு: காங்கிரஸ், பா.ஜ., கூட்டணியில் இடம் பெறாமல், சில கட்சிகள் உள்ளன. மூன்றாவது அணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை, இந்த கட்சிகள் உணர்ந்துள்ளன. இதை செயல்படுத்த, அனைத்து கட்சித் தலைவர்களும், வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் திரள வேண்டும்.

மூன்றாவது அணியும்,ராமராஜன் படமும் ஒண்ணு தான்.. வேலைக்காகாது...

----------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP1U86zMIPEkcZkcj4mbxYH9Sjmu35JmSNunYDCnnIs1-jAqCuzpdBcQi_vuaNH13Rh0TcKyiK-9aeYNAhZ5FCeOGGYmAf6ltsigDHQIyCmm6d5jQcGcfIV9Kvq9WQx2WL711VkYraTvRe/s640/Tamanna+47852+(17).jpg
7. நகைச்சுவை நடிகர் செந்தில் பேட்டி : தமிழகத்தில் திருக்குவளை மன்னராட்சியை ஒழிக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இலவச, "டிவி'களை கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியவர் ஏன், "கேபிள்' இணைப்பை இலவசமாக வழங்கவில்லை?

கேபிள் சங்கர் பிளாக்ல போய் சப்ஸ்கிரைப் பண்ணிக்கிட்டா இலவசமா அவரோட படைப்புகள்  ரீடர்ல வருமே... இதுக்கு எதுக்கு கலைஞர் லெவலுக்கு போறீங்க? 

---------------------------------------

8. தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பேச்சு: உண்டு கொழுத்த முதலைகளாக, மக்களை ஏமாற்றி பிழைக்கும் கட்சிகளாக திராவிடக் கட்சிகள் உள்ளன. "இலவசம்' என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, முட்டாளாக்கி, பிச்சைக்காரர்களாக்கி வருகின்றன. அவர்களுக்கு நமது கூட்டணி சிம்மசொப்பனமாக உள்ளது.

முதல்ல சொன்ன மேட்டர் சீரியஸா யோசிக்க வேண்டியதுங்கண்ணா.. கடைசியா சொன்னீங்களே.. சிம்ம சொப்பனம், ( SIM  ம சொப்பனம்) பேட்டரி சொப்பனம், செல்ஃபோன் சொப்பனம்னு .. நீங்க ஒரு தமாஷ்காரர்ங்கண்ணா.. 

------------------------------------

9. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேச்சு: கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்க தமிழக அரசு மறுத்து விட்டது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமில்லை என முதல்வரும், அவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களும் நிரூபித்து விட்டால், எங்களது கோரிக்கையைக் கைவிட்டுவிடுவோம்.

கள் இறக்க அனுமதி கொடுத்துட்டா அரசுக்கு வரக்கூடிய வருமானங்கள் குறைஞ்சிடும்.எல்லா பயனையும் விவசாயிங்களே அடைவாங்க.. அந்த அளவு அரசியல்வாதிகளை இளிச்ச வாயர்கள்னு நினைச்சீங்களா?


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல அஞ்சலி சேலை கட்றக்குள்ள ஃபோட்டோகிராஃபருக்கு அவசரம் போல.. ஆனா அவர் ஃபோட்டோ எடுக்கறப்ப நியாயமா அஞ்சலி கையை குறுக்க தானே கட்டி பதட்டப்படனும்? சிரிச்சுக்கிட்டே போஸ் குடுக்குதே ? #டவுட்டு


டிஸ்கி 2  - ரெண்டாவது ஸ்டில்லுல தப்ஸி போட்டிருக்கற சேலை ஹீரோக்களுக்கு ரொம்ப சிரமத்தை குடுக்கும்.. டூயட் சீன்ல குத்தும்...அதனாலதான் ஒரு பாதுகாப்புக்காக அப்படி டிரஸ் போட்டிருக்காங்க போல.. பொது நலன் கருதி  வெளியிடுவோர்  அட்ரா சக்க அல்டாப் பேர்வழி.. ஹி ஹி

டிஸ்கி 3  - மூணாவது ஸ்டில்லுல தப்ஸியைப்பார்த்ததும் எனக்கு 2 மேட்டர் நினைவு வருது. 1. ஊட்டி, கொடைக்கானல் ரோட்ல வைக்கப்ட்ட போர்டுகளான அபாய வளைவுகள் ஜாக்கிரதை, குறுகிய சாலை கவனமாக செல்லவும்.. ஹி ஹி . 2. அவர் அவுட் ஆஃப் ஃபேஷனான ரப்பர் வளையல் போட்டிருந்தாக்கூட அதுலயும் மேட்சுக்க்கு மேட்ச் போட்டிருக்கார் பாருங்க..

டிஸ்கி 4.   - கடைசி ஸ்டில்லுல பாருங்க தமனா கை கழுத்து வெறுமையா இருப்பதை.. பாப்பாவுக்கு எக்ஸ்ட்ரா அணிகலன்கள் பிடிக்காது போல..அந்த இமேஜ் எல்லையை மீறி ஓவர்லேப் ஆகற மாதிரி இருக்கு கரெக்ட் பண்ணுங்க (தமனாவை அல்ல அவரோட இமேஜை)  அப்படின்னு கமெண்ட் போட நினைப்பவங்க.. கவனிக்க நான் வேணும்னு தான் அப்படி போட்டேன்.. அவங்க நம்மை ஆக்ரமித்த விதத்தை விளக்கும் சிம்பாலிக் ஷாட் அது.. ஹி ஹி  ( இவனுக்கு மனசுல கே பாலச்சந்தர்னு நினைப்பு)

டிஸ்கி 5  - பதிவின் டைட்டிலுக்கும், பதிவுக்கும் சமபந்தம் இல்லையே என யோசிப்பவர்கள் கமெண்ட் 7 ஐ பார்க்கவும்.. ஹி ஹி இப்படிக்கு சமாளிஃபிகேஷன் சண்முகராஜன்.

டிஸ்கி 6 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்கு

டிஸ்கி A - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி B - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி C SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

Saturday, March 26, 2011

திருச்சியில் கலைஞரின் அத்து மீறிய பேச்சும், தேர்தல் கமிஷனை வம்புக்கு இழுத்த ஏச்சும் - காமெடி கும்மி


திருச்சியில்  25. 3.2011 நேற்று ( வெள்ளிக்கிழமை )இரவு நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதும்  அதற்கான என் கேள்விகளும்...


 தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் .  "எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது,


ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவது மட்டும் சரியா தலைவரே..?


"நான் 80 வருடத்துக்கு முன்பு திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய குடும்பத்தில் பிறந்தேன். அங்கு சாதி, மத, பண ஆதிக்கம் இருந்தது. அப்போது தந்தை பெரியாரின் கருத்துக்களை காதால் கேட்டும், அண்ணாவின் அரிச்சுவடிகளை கண்ணால் பார்த்தும், இரண்டு பேரின் அறிவுரைகளை கேட்டும் இந்த இயக்கத்தை நடத்தும் வலிமையை பெற்றேன்.


தலைவரே ... அம்மா மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணாம கமுக்கமாவும், விஞ்ஞானப்பூர்வமாவும் ஊழல் பண்ணும் வித்தையை யார் கிட்டே கத்துக்கிட்டீங்க..? ஒரு வேளை சுயம்புவா..?
 

இப்படி திரட்டப்பட்ட வலிமையை மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எண்ணி உழைக்கின்றேன். அந்த காலத்தில் நான், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் ஒரு கருத்தை அன்பிலாரிடம் கேட்டால் அவர் அண்ணாவிடம் கேட்போம் என்று சொல்வார்.


அன்று முதல் இன்று வரை உங்க கூடவே இருக்கும் விசுவாசி ஆன அன்பழகனை ஏன் துணை முதல்வர் ஆக்காம ஸ்டாலினை துணை முதல்வர்ஆக்கினீங்க தலைவரே..? 

உடனே நாங்கள் அண்ணாவிடம் கேட்டால் நமது காதர் மொய்தீனிடம் அந்த கருத்தை கேட்டு என்னிடம் சொல்லுங்கள், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வார். அப்படிப்பட்ட காதர் மொய்தீன் இங்கு பேசும்போது அவற்றை சற்று எண்ணிப் பார்த்தேன்.


எல்லாத்தையும் எண்ணிப்பாருங்க.. ஆனா இலங்கைத்தமிழர் நிலையையும்,இங்கே இருக்கற தமிழர் நிலையையும், மீனவர் வாழ்வையும் நினைச்சுப்பார்த்துடாதீங்க.... 

எனது அரசியல் ஏற்றத்துக்கு, சமுதாய பணிக்கு வித்திட்டது திருச்சி மாவட்டம் தான். இந்த கருணாநிதியை அரசியலில் முதலில் வளர்த்தது திருச்சி மாவட்டம் தான். ஆரம்பத்தில் கல்லக்குடி போராட்டம் ஒரு மிகப் பெரிய எழுச்சியைத் தந்து வெற்றி பெற்றது. அதற்கு திருச்சி மாவட்டத்தின் தீரர்கள், உடன் பிறப்புகள் முக்கிய காரணம்.


அடடா... திருச்சி செண்ட்டரான ஊருன்னு நினைச்சேன்.. இப்படி டெண்ட்டர்ரான ஊரா?பாவம்.. அந்த ஊரு பண்ணுன பாவத்துக்கு பரிகாரத்தை எப்படி செய்யப்போகுதோ.. பார்ப்போம் ஸ்ரீரங்கத்துல நிக்கற அம்மாவை ஜெயிக்க வைக்குதான்னு... 

 

நான் இங்கு பார்த்து பழகிய நண்பர்களை எண்ணிப்பார்க்கிறேன். அன்பில் தர்மலிங்கம் எப்போதும் எனக்கு முழு ஆதரவு தருபவராக இருந்து வந்துள்ளார். அழகுமுத்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் துணிச்சலாக பேசக் கூடியவர். ஒரு சமயம் அவர் என்னிடம் பேசும்போது யாதவ சமுதாயத்திற்கு மந்திரி பதவி இல்லையா என்று கேட்டார். அதற்கு நான் யாதவர் என்றாலே மந்திரிதான் என்று சொன்னேன்.


நல்லா வெறும் வாயிலயே முழம் போடறதுல தமிழ் இனத்தலைவரை அடிச்சுக்க ஆள் இல்ல..  

எம்.எஸ்.மணி எங்களுக்கு மாவட்ட கணக்கு பிள்ளையாக இருந்தார். காலையிலும், மாலையிலும் அவர் அயராது உழைத்தார். நாகசுந்தரம், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.வெங்கடாசலம், இளமுருகு பொற்செல்வி, குளித்தலை முத்துகிருஷ்ணன், வெற்றிகொண்டான், காமாட்சி இப்படி எத்தனையோ பேரை மறக்க முடியாது. வெற்றிகொண்டானின் இடி முழக்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.


அவங்களுக்கெல்லாம் ஊழல்ல பங்கு குடுக்க மாட்டீங்க.. கேட்டா என் இதயத்துல இடம் உண்டுன்னு சொல்வீங்க.. எல்லாத்துக்கும் பிரிச்சுக்குடுங்க தலைவரே....
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 6-வது முறையாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவிப்போட்டிக்காக இறங்கி இருக்கிறேன். எனக்கு போட்டி யார்? எதிரி யார்? எதிர்ப்பாளர் யார்? யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று தம்பி திருமாவளவன் பேசினார். எனக்கு எதிரி, எதிர்ப்பாளர் என்று யாரையும் நான் கருதவில்லை.

அதான் பிரம்மாஸ்திரமான மிக்ஸி,கிரண்டர் இலவசம்கற  துருப்புச்சீட்டு இருக்கே.. உங்களுக்கு சி எம் சீட் கன்ஃபர்ம் தலைவரே...


என்னை பிடிக்காதவர் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் எழுதிய கதைகளை படித்து பார்த்த அண்ணா தம்பி இன்னும் நீ நன்றாக படித்து விட்டு வா என்றார். அண்ணா சொல்லி நான் செய்யாத ஒரு காரியம் அது ஒன்று தான். அப்படி படித்து விட்டு வந்து இருந்தால் இன்று கருணாநிதி எம்ஏ, பி.ஏ என்று பெயருக்கு பின்னால் போட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட தந்தை பெரியாரின், அண்ணாவின் தம்பி என்ற ஒரே பெருமை போதும் என்று நினைப்பவன் நான். அந்த பெருமையின் காரணமாக தான் 6-வது முறையாக என்னை முதல்மைச்சராக ஆக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.


அண்ணா சொல்லி நீங்க செய்யாத காரியம் வேணா ஒண்ணா இருக்கலாம் தலைவரே.. ஆனா அண்ணா சொல்லாமல் நீங்க செஞ்ச காரியம்தான் எத்தனை எத்தனை....அதன் மூலம் கிடைச்ச வருமானம் தான் எத்தனை..? 

நான் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது அந்த தொகுதி மக்கள் முசிறிக்கும், குளித்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்த நான் முதலமைச்சர் ஆனதும் பாலம் கட்டி கொடுத்ததோடு அதனை திறந்தும் வைத்தேன்.

 அந்த பாலம் கட்டுன மேட்டர்ல எத்தனை தலைவரே தேறுச்சு..? மன்னிச்சுக்குங்க.. அது உங்க குடும்ப மேட்டரு... 


இப்படி மக்கள் பிரச்சினைகளை தெரிந்து அறிந்து அதற்கு பரிகாரம் காணவும், சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் தான் எனது பொது வாழ்வில் பெரும்பகுதியை செலவழித்து இருக்கிறேன்.

ஆமாம் தலைவரே.. அடிக்கடி உங்களை சினிமா ஃபங்க்‌ஷன்லயும், பாராட்டு விழாக்கள்லயும் பார்க்க முடியுது.. உலக அளவில இந்த அளவு ஒரு சி எம்  கேளிக்கை விழாக்களில் பங்கெடுத்ததே இல்லையாம் தலைவரே..
நான் செய்த சமுதாய பணிகளை எல்லாம் பட்டியல் இட்டு பேச நேரம் இல்லை. தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிற நேரம் தாண்டிவிடும். அதுவும் இப்போது இருக்கிற தேர்தல் ஆணையம் ரொம்ப கண்டிப்பான தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனில் இருக்கிற சில அதிகாரிகளின் போக்கு அப்படிப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்த பின்னரும் உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது.


 விடுங்க தலைவரே.. 1000 கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. ஓட்டுப்போட பணம் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை நமக்கு தோல்வி பயம் இல்லை..

தேர்தல் கமிஷன் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்காமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகாவது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 நடுநிலைமைன்னா தி மு க கட்சிக்காரங்க கள்ள ஓட்டுப்போடறப்ப கண்டுக்கக்கூடாது ...அதானே தலைவரே..?



நடுநிலையோடு பெறும் வெற்றி தான் நிலையானது.
இதற்கு நான் அடிக்கடி சொல்லக்கூடிய கேரளத்து புராணக்கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அங்கு நல்லாட்சி நடத்தி வந்த மாவலி மன்னனை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஷ்ணு பெருமான் அழித்தது போல் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. ஆட்சியையும் அழிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். கேரளத்து மக்களை போல் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் பெரியாரால் தயார் படுத்தப்பட்டவர்கள். தமிழ் இனம், தமிழ் மொழி வாழவேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டு விடைபெறுகிறேன்," 


தலைவரே.. கேரளாவுல படிச்சவங்க அதிகம்.. சிந்திச்சு ஓட்டுப்போடுவாங்க.. இங்கே இருக்கற பசங்க எல்லாம் படிக்காத பசங்க... எவனும் சிந்திக்க மாட்டான்..ஓட்டுக்கு பணம் வருதா ஓக்கேம்பான்.. மிக்சி கிடைக்குது, கிரைண்டர் கிடைக்குதுன்னு அவனவன் குதிக்கறான்...  கண்டிப்பா நம்ம ஆட்சி தான் தலைவரே,, ஒண்ணும் கவலைப்படாதீங்க. தமிழனுக்கு விடிவு காலமே வராது... நீங்க தான் தமிழினத்தை காக்கும் தலைவர்...

Friday, March 25, 2011

நடமாடும் வாக்குச்சாவடி... இந்த கைல துட்டு.. அந்த கைல ஓட்டு......

Hilarious political cartoon images

1. நடிகர் வடிவேலு: தி.மு.க.,வில் உறுப்பினராக நான் இல்லை. ஆனால், மக்களில் ஒருவராக, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை பிரசாரத்தின்போது எடுத்துச் சொல்வேன். திருவாரூரில், கருணாநிதி தலைமையில் நடைபெறும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் என் பிரசாரத்தை துவக்க உள்ளேன்.


அதெல்லாம் சரிதான்.. இங்கே ஒரு மானஸ்தன் அடுத்த தேர்தல்ல கேப்டன் எங்கே போட்டி இடுவாரோ அங்கே  சுயேச்சையா நின்னே அவரை மண்ணை கவ்வ வைப்பேன்னு பேசுனாரே... அவரைப்பார்த்தா சொல்லுங்க.... 


--------------------------------------------------



2. தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள்: இந்தியாவில், 38 நகரங்கள், நிலநடுக்கம் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. ஜப்பானுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பூகம்பம் வந்தாவது திராவிடக்கட்சித்தலைவர்களை காவு வாங்கிட்டா நாளை வரும் புதிய சந்ததியினராவது ஆரோக்ய அரசியலை எதிர் கொள்றாங்களா? பார்ப்போம்..

-----------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5Hyc_n1ggzMnWfYeuQW_5nsDrporis1TJcV2EpF0-677UOtqLUHHfyQPHsydKs_Q1BeGeb7pbaz9MFd7yNogC5zOibFhS2b6tzKCkScCrKUMAYE8ZQQNiaMb1xSn4WISURgnz5G1LOyI/s400/DN_12-02-09_E1_04-03%2520CNI2.jpg

3. பத்திரிகைச் செய்தி: நாகை அடுத்த வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் கிலி என்ற தம்பியப்பன் (40). பா.ம.க., நாகை ஒன்றிய (கிழக்கு) செயலர். இவரது வீட்டில், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனையில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பார்த்தீங்களா? பா  ம க கட்சிக்காரங்களுக்கு நாட்டுப்பற்றே இல்லைன்னு யாரும் இனி சொல்லிட முடியாது..நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு... அப்படின்னு சுதேசி அயிட்டங்களா போட்டுத்தாக்கறாங்களே....

------------------------------------------

4. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி: மைசூரில் இருந்து வந்த ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்தில் நிற்கிறார்; அவருக்கு எதிராக மண்ணின் மைந்தனை நிறுத்தி உள்ளேன். சசிகலாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., வந்துவிட்டது. ஜெயலலிதாவை, சசிகலா ஆட்டிப்படைக்கிறார்.

வீட்டுலதான் பொம்பள ராஜ்யம்னா நாட்டுலயும் ..........
-----------------------------------
http://i51.tinypic.com/nmk9r4.jpg
5. ம.தி.மு.க., பொதுச் செயலர்வைகோ பேட்டி:தமிழகத்தில் இனி தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக ம.தி.மு.க., அமையும். இந்த முறை, ம.தி.மு.க., தேர்தலில் போட்டியிடாமல், வெளியில் இருந்து கவனிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்தபடி, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

முடிவில் மாற்றம் இல்லை.. ஆனால் மனதில் ஏமாற்றம் உண்டு.. சரி விடுங்க.. அடுத்த எலக்‌ஷன்ல 15 சீட் யாராவது தந்துடுவாங்க... 

-----------------------------------------

6. தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: டாஸ்மாக் மூலம், பனை, தென்னையில் இருந்து இறக்கப்படும் கள் விற்க நடவடிக்கை எடுப்பது குறித்து, அ.தி.மு.க., தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவை எதிர்த்தும் பொது வேட்பாளரை களமிறக்குவோம்.

ஆமா.. அப்படியே இறக்கீட்டாலும்... அவருக்கு ஒரு குவாட்டர் வாங்கிக்குடுத்து பொது வேட்பாளரை மது வேட்பாளர் ஆக்கிட மாட்டாங்களா? எங்க கொட நாடு கோமளவல்லி..?
------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvwq9texoyipfA0xlJeYiHAPn8-9mzwOg8I2BrXaM0J8o-vEtRYkZbHLo-z1lsZB21JtYkqdfWfuAcogv2SF0UVWyx4ixkdxyCFX63Mm_AfbpZ1KmPitKsybrrnCnEk2b5k5k9-RyKqcU/s400/4.bmp
7. சிவசேன தலைவர் பால் தாக்கரே பேட்டி: இந்தியாவை சீரழிக்கும் இரண்டு விஷயங்கள், ஒன்று தேர்தல், மற்றொன்று ஜனநாயகம். ஊழலுக்கு அடித்தளமே தேர்தல் நடைமுறைகள் தான். எனவே, இவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிக அவசியம்.

ஆமாங்க... நடமாடும் வாக்குச்சாவடி வரனும்.. இந்த கைல காசு வாங்கிட்டு அந்த கைல ஓட்டு போடனும்.. ஒரு பய ஏமாத்த முடியாது 100 % ஓட்டு பதிவாகும்..

--------------------------------

8. இந்திய தேசிய லீக் மாநில தலைமை நிலைய செயலர் நாகூர் ராஜா பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில், 10 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இரண்டு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். ஒரு சீட்டாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், எங்களை அழைத்து பேசவில்லை. ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். அ.தி.மு.க.,வுக்கு எதிராக, 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம்.

அட போங்கப்பா.. ஆனானப்பட்ட வைகோவே அவமானப்பட்டு நிக்கறாரு.. வந்துட்டாங்க பெருசா.. இது டபுள் மீனிங்க் வேற.....

---------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYeJdbyCaihqNYxbf9O2Almbf4f-dljtyjKfqVjr1moTvzYpb3X52S8Btahsypfy4wHSkzectnzO4Gh_1ievPPztUPiN3X1vIq1_2uwNkjjRgEayc1ZePM3It3Ojg1n-UwcTFsQKrAiULO/s1600/tamilmakkakural_blogspot_man.jpg
9. சமத்துவ மக்கள் கட்சிநிறுவனர் சரத்குமார் பேட்டி: நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் அ.தி.மு.க.,வில் இணைந்திருக்கிறோம். ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து, தமிழகத்தை ஜெயலலிதா மீட்டெடுப்பார் என நம்புகிறோம்.

அது சரி.. உங்க கட்சிக்கு 3 சீட் குடுப்பவருடன் மட்டுமே கூட்டணி என்பது தானே உங்க கொள்கை? இதே எலக்‌ஷன்ல கலைஞர் 4 சீட் கொடுத்திருந்தா அவர் கால்ல விழுந்திருப்பீங்க.. பெரிய யோக்கியவான் மாதிரி நடிக்கறாங்கப்பா...


டிஸ்கி - இன்று 4 படங்கள் ரிலீஸ் ஆகுது. குள்ளநரிக்கூட்டம், சட்டப்படி குற்றம்,சாந்தி அப்புறம் நித்யா,அல்லி ராஜ்யம்... பார்ப்போம் எது முதல்ல மாட்டுதுன்னு.....