Thursday, November 27, 2025

யெல்லோ(2025)-தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)

               

             

கமர்சியல் ஹிட் ஆகாத இந்தப்படம் அனைவருக்குமான ஜனரஞசகமான படம் அல்ல.பாலகுமாரன் நாவல் ரசிகர்கள் , தேசாந்திரி எஸ் ராமகிருஷணன் எழுத்து ரசிகர்கள் , பயணங்களை விரும்புபவர்கள் மட்டும் பார்த்து ரசிக்க முடிகிற படம்.சிரஞ்சீவி,ரஜினி,விஜய் படங்கள் மாதிரி ஆக்சன் மசாலாவை மட்டும் ரசிப்பவர்கள் தவிர்க்கலாம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு தனியார் வங்கியில் பணி செய்பவர்.அவருக்கு ஒரு காதலன் உண்டு.நாயகியின் அப்பா திடீர் என உடல் நலக்குறைவால் படுத்த படுக்கை ஆகி விட நாயகிக்கு முழு கான்சன்ட்ரேசனும் அப்பா,வேலை என்றாகி விடுகிறது.இதில் காதலன் காண்டு ஆகி பிரேக்கப் செய்து விடுகிறான்.அவனுக்கு வேறு ஒருப்பெண்ணுடன் திருமணம் என நாயகிக்குத்தகவல் வருகிறது


இதனால் மனம் உடைந்த நாயகி மன மாற்றத்துக்காக 3 நாட்கள் ஒரு லாங்க் ட்ரிப் போக முடிவு செய்கிறார்.

நாயகி மேற்கொண்ட பயணம்,அவர் சந்தித்த மனிதர்கள்,அதில் அவருக்குக்கிடைத்த அனுபவம் இவை தான் மீதி  திரைக்கதை


நாயகி ஆக பூர்ணிமா ரவி பிரமாதமாக நடித்திருக்கிறார்.சோனியா அகர்வாலின் மென் சோகம் கொண்ட கண்கள் ,கீதாஞ்சலி ( இதயத்தைத்திருடாதே) கிரிஜாவின் ரோஜா இதழ்கள் ,பூ வேலி கவுசல்யாவின் கண்கள் என  கதம்ப மலர் போல் அவர் முகம் வசீகரம்.

நாயகன் ஆக வைபவ் முருகேசன் சிவகார்த்திகேயன் சாயலில் இருக்கிறார்.நல்ல நடிப்பு 


நாயகியின் தோழியாக வரும் நமீதா கிருஷ்ணமூர்த்தி  வாலி ஜோதிகா சாயல்.துறு துறு நடிப்பு.அவர் வரும் காட்சிகளில் நாயகி டம்மி ஆகி விடுகிறார்.

நாயகியின் அப்பாவாக டெல்லி கணேஷ அனுபவம் மிக்க நடிப்பு.


நாயகியின் முன்னாள் காதலன் ஆக சாய் பிரசன்னா  ஓக்கே ரகம்.

வினோதினியின் நடிப்பும் இதம்.


கிளிபி கிருஷ்,ஆனந்த் காசிநாத் இருவரும் இணைந்து இசைப்பணியை  செய்திருக்கிறார்கள்.பிரமாதம்.7 பாடல்கள்


அபி ஆத்விக்கின் ஒளிப்பதிவு அற்புதம்

ஸ்ரீ வாட்சன் தான் எடிட்டிங 124 நிமிசஙகள்.


திரைக்கதை ,இயக்கம் ஹரி மகாதேவன்



சபாஷ்  டைரக்டர்

1 அமைதியான நதி மாதிரி நாயகி எனில் ஆர்ப்பாட்டமான அருவி மாதிரி நாயகியின் தோழி   இருவரின் நடிப்பும் அருமை

2 நாயகி தன் முன்னாள் காதலனை அவனது மனைவியுடன் சந்திக்கும் காட்சி

3 நாயகன் ,நாயகி இருவரும் ஒரு இரவில் காட்டுப்பகுதியில் இரு ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் சீன்

4 ரயிலில் நாயகன் தன் முன்னாள் காதலியுடனான பிரேக்கப் பற்றி நாயகியிடம் சொல்லும் சீன்

5  எனக்கு மிகவும் பிடித்த லீலா சாம்சன் நடிப்பு இதிலும் அருமை.ஆனால் அவருக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு



  ரசித்த  வசனங்கள் 

1 உன் கூட இருக்கும்போதுதான் நான் நானாக இருக்கிறேன்

2 இதுதான் நடக்கும்னு வாழ்க்கைல நமக்கு முன் கூட்டியே தெரிஞ்சா ரொம்ப நல்லாருக்குமில்ல?

போர் அடிச்சிடும்

3 போன் பண்ணினா?


சண்ட போடறதுக்காகக்கால் பண்றானா? கால் பண்றதால சண்டை வருதா? எனத்தெரியாத அளவுக்கு

4 அடுத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணாத இந்த சின்னச்சின்ன தப்புக்கள் தான் நம்மை நாமா இருக்க விடுது

5  அடுத்த வினாடி இந்த உலகம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்

6 சில நேரஙகளில் தள்ளிப்போவது நல்லது.சில நேரஙகளில் தள்ளிப்போடாம எதிர்கொள்வதே நல்லது

7 உன்னை பலவீனமாக்கும் சக்தியை நீ இன்னொருத்தருக்குத்தராதே!

8  பிடிச்சுக்கஷடப்படறதை விட நிம்மதி ஆன விஷயம் வேற கிடையாது

9 இந்த உலகத்தில் 2 விதமான மனிதர்கள்

1 தனக்கு வர்ற கஷ்டத்தால மனசு முடங்கி மூலையில் அமர்பவர்கள்

2 அதே கஷ்டத்தை வைத்து ஒரு புது வழியைக்கண்டறிபவர்கள்


10 முடியப்போறதை நினைத்து எதுக்கு பீல் பண்ணிட்டு ?முடிஞ்சதும் மொத்தமா பீல் பண்ணிக்கலாம்

11 எல்லாத்தையும் விடக்கொடுமையான வியாதி தனிமையில் இருப்பது

12 எனக்கு எதுவுமே கிடைக்காதுன்னா முதலில் எதுக்கு அதெல்லாம் கிடைக்கனும்?

13 கேரளாவில் தமிழ் நாடு உணவு கிடைக்குமா?

அதைத்தமிழ் நாடு போயே சாப்பிட்டுக்கலாமே? எதுக்கு இவ்ளோ தூரம் வரனும்?


14 அவளைப்பற்றி அவளுக்குத்தெரிஞ்சதை விட எனக்குத்தான் அதிகம் தெரியும்னு சொல்லிட்டே இருப்பா

15 எப்போ எல்லாம் எனக்கு சோகம் வருதோ அப்போ எல்லாம் வானவில்லைப்பார்ப்பேன்


16 உன் மெசேஜ் பார்த்தேன்,அதான் கால் பண்ணினேன்

உனக்குக்கால் பண்ணப்பிடிக்காம தானே மெசேஜே பண்ணேன்


17 நம்ம வாழ்க்கைல நடக்கும் பாதி விஷயங்கள் நாம யோசிக்காம செஞ்சதாத்தான் இருக்கும்

18 பழைய ஆல்பத்தைத்தேடி வந்தேன்,புதுசா ஒரு ஆல்பம் கிடைச்சிருக்கு

19 நாம சம்பாதித்து செலவு பண்ணலை,இருக்கற செலவுக்குத்தான் சம்பாதிக்கிறோம்

20 நமக்கான பொறுப்பு,வேலை எல்லாமே கூடிக்கிட்டுதான் போகும் ,ஆனா உனக்கான சந்தோஷத்தை நீ தான் தேடிக்கனும்


21 ஒரு நாள் திரும்பிப்பார்த்தால் நம் வாழ்க்கையில் நாமே இருந்திருக்க மாட்டோம்,நமக்குன்னு எதுவுமே இருந்திருதிரைக்கதை


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நீண்ட பயணத்திற்கு செலவு குறைவான ( கிமீ க்கு 25 பைசா) ,உடல் அசதி இல்லாத பயணம் ரயில் பயணம் தான். ( டாய்லெட் வசதி).ஆனால் ஸ்கூட்டியில் போக நாயகி முடிவு எடுப்பது சினிமாவுக்கு சரி,நடை முறை வாழ்க்கைக்கு சரி அல்ல.

2 நாயகியின் பெயர் ஆதிரை.ஆனால் படத்தில் வரும் வெவ்வேறு கேரக்டர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல ஆதி என்று அழைப்பது எப்படி?

3 நாயகன் ,நாயகி இருவரும் ஒரே திசையில் ஒரே ஊருக்குத்தான் போகிறார்கள்.இரு வேறு பைக்குகளில்.எதுக்கு பெட்ரோல் செலவு? ஒரே பைக்கில் போகலாமே?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரேக்கப்  ஆன காதலர்கள் மட்டுமல்லாமல்  ஏ  சென்ட்டர் ஆடியன்ஸ்  அனைவரும் பார்க்கலாம் . விகடன்  மார்க் யூகம் -45 , குமுதம் ரேங்க்கிங்க்  குட் , ரேட்டிங்க்  3 . 5 


DISKI  -டைட்டிலிலேயே எந்த ஓடி டி என்பதை சொல்லி விடுவேன்.சொல்லாவிட்டால் தியேட்டர் ரிலீஸ் என அர்த்தம்25 நாட்கள் கழித்து ஓடி டி யில் வரும்


Yellow
Theatrical release poster
Directed byHari Mahadevan
Written byHari Mahadevan
Produced byPrasanth Rangasamy
Starring
CinematographyAbi Advik
Edited bySri Watson
Music by
  • Cliffy Chris
  • Anand Kashinath
Production
company
Covai Film Factory
Distributed byUthraa Productions
Release date
  • 21 November 2025
CountryIndia
LanguageTamil

Wednesday, November 26, 2025

தீயவர் குலை நடுங்க (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் திரில்லர்)

                 

           

டாப்லெஸ் நாயகர்கள் என தமிழ் சினிமாவில் பெயர் எடுத்தவர்கள் மூவர். 1 கமல் 2 சரத் குமார் 3 அர்ஜூன்.இவர்கள் மூவருமே ஜிம் பாடி என்பதால் கதைக்குத்தேவை இருக்கோ இல்லையோ சட்டையைக்கழட்டி டாப்லெஸ் ஆக வரும் ஒரு சீன் நிச்சயமாக இருக்கும்.(ரசிகைகளைக்கவரவாம்).அந்த செண்ட்டிமெண்ட்டை ,வைராக்யத்தை ஆக்சன் கிங் அர்ஜூன் உடைத்து ஒரு சீனில்  கூட டாப்லெஸ் ஆக வராத படம்  இது. அந்த வகையில் அர்ஜூனின் திரை வாழ்க்கையில் இது ஒரு மைல் கல் படம்.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு ஸ்கூல் டீச்சர்.உடல் நலம்,மன நலன் குன்றிய சிறப்புக்குழந்தைகள் பயிலும் ஸ்கூல் அது.

நாயகன் தூக்கம் வராதவர்களைத்தூஙக வைக்கும் வித்தியாசமான வேலை செய்பவர்.


ஆன் லைன் வெப் சைட்டில் நாயகனின் மேட்ரிமோனியல் விளம்பரம் பார்த்து நாயகி அப்ளை செய்கிறார்.இருவரும் பழகுகிறார்கள்.இது ஒரு டிராக்.


ஒரு ரைட்டர் படுகொலை செய்யப்படுகிறார்.அந்தக்கேசை விசாரிக்க ஒரு போலீஸ் ஆபீசர் வருகிறார்.இது ஒரு டிராக்.


வில்லன் ஒரு அபார்ட்மெண்டின் ஓனர்.ரைட்டரின் நண்பன்.அந்த அபார்ட்மெண்டின் வாட்ச்மேன்,அயர்ன் செய்யும் நபர் ,அபார்ட்மெண்ட் ஓனர் என வரிசையாகக்கொலை நடக்கிறது.

இந்தக்கேசை. எப்படி டீல் செய்கிறார்கள் என்பது மீதிக்கதை


நாயகி ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமாக நடித்திருக்கிறார்.காதல் காட்சிகளில் சுணக்கம் காட்டுகிறார்.நாயகன் புதுமுகம் என்பதாலோ?

நாயகன் ஆக  பிர"வீன் " ராஜா  தனக்குக்கிடைத்த நல்ல வாய்ப்பை வீண் செய்திருக்கிறார்.நடிப்பு சரியாக வரவில்லை.அவரது நண்பர் ஆக வருபவர் செய்யும் மொக்கைக்காமெடி சகிக்கவில்லை.அவர் பெயர் ராகுல்.

போலீஸ் ஆபீசர் ஆக ஆக்சன் கிங் அர்ஜூன் வந்து போகிறார்.லிப்ட் பைட் ,க்ளைமாக்ஸ் பைட் இரண்டிலும் முத்திரை பதிக்கிறார்.இந்த வயதிலும் தொப்பை இல்லாமல் உடம்பை  பிட் ஆக வைத்திருக்கிறார்.

வில்லன் ஆக ராம் குமார் சிவாஜி நடித்திருக்கிறார்.கோமாளி மாதிரி இருக்கிறார்.

ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட சிறுமி,அவளது அம்மா இருவர் நடிப்பும் அருமை.அந்த சிறுமியின் அம்மா நாயகியை விட அழகு.பைவ் ஸ்டார் புகழ் கனிகா வின் முகச்சாயல்.அபிராமி என்று பெயர் போல.

வேல ராமமூர்த்தி , நல்ல குணச்சித்திர நடிப்பு.

ஒளிப்பதிவு சரவணன் அபிமன் யு.சுமார் ரகம்.இசை பாரத் ஆசீவகன்.பரவாயில்லை ரகம்.கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விடாமல் டொம் டொம் எனக்காதுகளைப்பதம் பார்க்கிறார்.பாடல்கள் ரொம்பவே சுமார் ரகம் தான் எடிட்டிஙக் லாரன்ஸ் கிஷோர்.127 நிமிடஙகள் ஓடுகிறது


இயக்கி இருப்பவர் தினேஷ் லட்சுமணன்


சபாஷ்  டைரக்டர்

1 லைப்ரரில புக்ஸ் எடுத்துப்படிக்கும் வாசகர்களை உயர்த்தியும் ,புத்தகத்திருவிழாவில் வெட்டி ஜம்பத்துக்காகப்பணம் கொடுத்து புக் வாங்கி அதைப்படிக்காமலேயே வைத்திருக்கும் வாசகர்களை நக்கல் அடித்தும் ஒரு ரைட்டரே பேசுவது போல் வைத்த அருமையான சீன்.

2. போலீஸ் ஆபீசர் ஆக வரும் அர்ஜூனுக்கு ஒரு சீனில் கூட போலீஸ் யூனிபார்ம் இல்லாமல் சமாளித்த சிக்கனம்.

3 காமெடி டிராக் எழுத  நல்ல ரைட்டரை புக் பண்ணாமல் ஈரோடு மகேஷ ,மதுரை முத்து மாதிரி சொந்த சரக்கு இல்லாத  மொக்கை ஆட்களை வைத்து வசனம் எழுதிய விதம்


  ரசித்த  வசனங்கள் 


1 சார் ,ஸ்வீட் எடுத்துக்குஙக,நான் அப்பா ஆகப்போகிறேன்


இந்த ஒரு வேலை தான் யா நீ உருப்படியா செஞ்சிருக்கே

2  மேடம் ,வீட்டில் லேடீஸ் யாரும் இல்லைஙகளா?


வாட்?


3 இந்த நைட்ல மோர் சாப்பிட வெளில கூப்பிடறீங்களே?


ஏன்?டின்னருக்கு பீர் தான் குடிப்பீங்களோ?


4. ஊருக்குள்ளே நாலு பேர் ஏதாவது சொல்வாங்களோ?ந்னு ப்யந்து நம்ம வாழ்க்கையை நாம் தொலைச்சுடக்கூடாது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 போலீஸ் ஆபீசரான நாயகன் தாடியோடு இருப்பது எப்படி? ஓப்பனிங சீனிலேயே தன் பர்சனல் வேலைக்காக ஆபீஸ் ஜீப்பை எடுத்துப்போகிறாரே?ஸ்டேசனில்  எல்லோரும் யூனிபார்மில் இருக்க இவர் மட்டும் மப்டியில் இருக்கிறார்

2 க்ரைம் ஸ்பாட்டில்  ஒரு போலீஸ் ஆபீசராக விசிட் செய்யும் நாயகன் ரவுடி மாதிரி சட்டை பட்டன்களைக்கழட்டி விட்டிருக்காரே?

3 கொலை செய்யப்பட்ட ரைட்டர் சர்ச்க்குப்போகும் பழக்கம் இல்லாதவர்.ஆனால் கொலையாக ஒரு மாதம் முன் ரெகுலராக சர்ச்சுக்குப்போய் வரும் பழக்கத்தை உண்டாக்கிக்கொழ்ண்டார் என்ற தகவல் கிடைத்ததும் போலீஸ் அந்த சர்ச் பாதரிடம் பாவமன்னிப்புக்கேட்க வந்தாரா? என்ன பாவம் என விசாரிக்கவில்லையே? ஏன்?(ஓப்பனிஙகிலேயே விசாரிக்க வேண்டியது,இடைவேளைக்குப்பின் ரொம்ப லேட்டாதான் விசாரிக்கிறார்)

4 நாயகி மேஜர் சுந்தர்ராஜனின் ரசிகையா? அடிக்கடி ஏதாவது தமிழில் சொல்லிட்டு அதையே இங்க்லீஷல்யும் சொல்றாரே?

உதா - இது உனக்குப்பிடிச்சிருக்கா? டூ யூ லைக் இட்!?

5 முதல் 2 கொலைகளை மாஸ்க் போட்டு உடல் முழுக்க ஓவர் கோட் போட்டு  கொன்ற கொலையாளி அடுத்த இரண்டு கொலைகளை ஏன் பட்டவர்த்தனமாய் செய்யனும்?

6 இரவு நேரத்துல ஒரு ஸ்பெஷல் சைல்டை தனிமையில்  விட்டு விட்டு யாராவது போவார்களா?

7 அவ்வளவு உயரமான கட்டிடத்தில் இருந்து விழும் நபர் உடல் பாகஙகளுக்கு எதுவும் ஆகாமல்  வாயில் இருந்து ரத்தம் மட்டும் வருமா?

8 அவ்வளவு பெரிய அபார்ட்மெண்ட்டில் சிசிடிவி கேமரா இருக்காதா?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - புளித்துப்போன கதை,பழகிப்போன திரைக்கதை ,யூகிக்க வைக்கும் ட்விஸ்ட் உடன் ஒரு சராசரி படம்.விகடன் மார்க் யூகம் 39.குமுதம் ரேங்க்கிங்க் சுமார்.ரேட்டிங்க். 2 /5

Tuesday, November 25, 2025

மிடில் கிளாஸ் (2025)-தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி ட்ராமா)

             

        பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர்,கார்ப்பரேட் புரொடக்சன் இந்த காம்பினேசனில் வரும் டப்பாப்படங்களுக்கு நடுவே இது மாதிரி தரமான திரைக்கதை உள்ள லோ பட்ஜெட் படங்கள் அவ்வப்போது       நம்மை அசத்தி விடுவது உண்டு.இது போன்ற திரைக்கதை பலமாக இருக்கும் படங்களின் வெற்றியும் ,வருகையும் தான்  மாஸ் ஹீரோக்களின் அட்ராசிட்டியை அடக்க வல்லவை.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்து வருபவன்.15,000 ரூபாய் தான் சம்பளம்.மனைவி ஹவுஸ் ஒய்ப்.ஒரு மகன் ,ஒரு மகள் .சாதாரண மிடில் கிளாஸ் பேமிலி

பல வருடங்களுக்கு முன் நாயகனின் அப்பா தன்னிடம் வேலை பார்த்த ஒரு சேட்டுப்பையனுக்குத்தன் கடையையே தானமாகத்தந்து விடுகிறார்.


அந்த சேட்டு அந்தக்கடையை வைத்துப்பெரிய ஆள் ஆகி விடுகிறார்.ஒரு கட்டத்தில் அந்த சேட்டு நாயகனுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு   செக் போட்டுத்தந்து விடுகிறார்.நாயகனின் அப்பா செய்த உதவிக்குக்கைம்மாறு


அந்த ஒரு கோடியை வைத்து என்ன என்ன அலப்பறை பண்ணலாம் ?என நாயகனும் ,நாயகியும் திட்டம் போடுகிறார்கள்.ஆனால் அந்த செக் தொலைந்து விடுகிறது.


தொலைந்த செக்கை நாயகன் கண்டு பிடிக்க எடுத்த முயற்சிகளும் ,சில சர்ப்பரைஸ் சம்பவங்களும் தான் மீதி திரைக்கதை

நாயகன் ஆக முனீஷ் காந்த் கதையின் நாயகன் ஆக அருமையாக நடித்து இருக்குறார்.மொக்கைக்காமெடி பல படஙகளில் கை கொடுக்காமல் போனாலும் அவரது குணச்சித்திர நடிப்பு இதில் கை கொடுத்து இருக்கிறது.


நாயகி ஆக விஜயலட்சுமி சில இடஙகளில் ஓவர் ஆக்டிங ,பல இடஙகளில் மிதமான நடிப்பு என மிக்ஸ்டு ஆக்டிங தந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் நாயகியை இது போல கண்ணியமான உடையில் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது


செக்கைக்கண்டு பிடிக்க உதவும் கேரக்டரில் ராதாரவி ,டாக்டர் ஆக வரும் மாளவிகா அவினாஷ இருவர் நடிப்பும் இதம்


நாயகனின் நண்பர்களாக வரும் கோடாங்கி வடிவேலு,குரேசி ,மகன்,மகள் ஆக வருபவர்கள் நடிப்பும் ஓக்கே ரகம்.


நாயகனின் அப்பாவாக வரும் வேலை ராம மூர்த்தி  சேட்டு இருவர் நடிப்பும் கம்பீரம்.


இசை பிரணவ் முனி ராஜ்.2 பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை குட்.

ஒளிப்பதிவு சுதர்சன் சீனிவாசன்.கிராமத்தில் வரும் ஒரே ஒரு டாப் ஆங்கிள் ஷாட் அருமை.


திரைக்கதை ,இயக்கம் கிஷோர் முத்து ராமலிஙகம்.


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் ,நாயகி இருவரும் கச்சிதமான நடிப்பை வழஙகியது.

2  சாதா ஒரு வரிக்கதையை வேறு விறுப்பான திரைக்கதையால் பலம் சேர்த்த விதம்

3 செக்கைத்தேடும் படலம் தான் பின் பாதித்திரைக்கதை  என்றாலும் அதை திரில்லர் படத்திற்கு இணையாக சொன்ன விதம்

4 நாயகி நாயகனைத்திட்டி வைரல் ஆன வீடியோவை வைத்து க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை  அமைத்த ஐடியா

5 அயோத்தி ,டூரிஸ்ட் பேமிலி மாதிரி ஒரு Feel Good மூவிக்கான தகுதியைக்கடைசி 20 நிமிடஙகளில் சொன்ன விதம்

6 க்ளைமாக்ஸ் சீனில் நாயகியின் ஒப்பனை குறைந்த அழகு பேரழகு.அது வரை மற்ற காட்சிகளில் ஓவர் மேக்கப் போட்டதே இந்த எபெக்ட்க்கு தானோ? 


  ரசித்த  வசனங்கள் 

1   வக்கில்லாத ஆம்பளைக்குப்பொண்டாட்டி எதுக்கு?

2 எப்படியாவது பிழைப்பு நடத்தறவன் தான் ஆம்பளை


3 நம்மை மாதிரி மிடில் கிளாஸ்க்கு ஆண்டவன் கொடுக்கனும்னு நினைச்சாதான் கொடுப்பான்

4 என் துக்கத்தை நிறையப்பேர் கொண்டாடிட்டு  இருக்காஙக

5 எல்லாருக்கும் தெரியற மாதிரி கவுரவமா வாழ்தது தான் வாழ்க்கைனு நினைச்சேன்,ஆனா மனசுக்குப்பிடிச்ச மாதிரி வாழ்வது தான் வாழ்க்கை

6 உலகத்துலயே பெரிய சேமிப்பு எது தெரியுமா? மனுசனோட கஷ்டத்துல கூட நிற்பது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

1 தன் மகனுக்குத்தெரியக்கூடாது என்று நினைக்கும் சேட்டு ஒரு கோடி ரூபாயைக்கேஷ் ஆக நாயகனுக்குத்தருவதுதானே சரி?  செக் ஆகக்கொடுத்தால் பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் ட்ரான்செக்சன் தெரிந்து விடாதா!?


2 பிளாங்க் செக் வாங்கும் நாயகன் தன் பெயரை சேட்டு கையாலயே எழுதி வாங்குவது தானே சேப்டி.ஒரு கோடி ரூபாய் செக் ஆச்சே? பெயரே வாய்க்குள் நுழையலை என்று சொல்லும் சேட்டிடம் ஒரு பேப்பரில் தன் பெயரை எழுதிக்காட்டி

அதே போல் எழுதித்தரச்சொல்லி இருக்கலாமே?

3 அவ்வளவு பிரச்சனைகளுக்குப்பின் செக் கிடைத்ததும் நாயகன் தன் மனைவிக்கு ஏன்  போன் போட்டு சொல்லவில்லை?

4 நாயகனின் அப்பாவுக்கு சேட்டு எழுதிக்கொடுத்த கடன் பாண்டு பத்திரம் நாயகன் கால தானே இருக்கு? அதை சேட்டு மகனிடம் ஆதாரமாகக்காட்டி இருக்கலாமே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் + க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த ஒரு ஆல் செண்ட்டர் ஹிட் படம்.விகடன்  மார்க் யூகம் 44 .குமுதம் ரேங்க்கிங்.அருமை.ரேட்டிங்க் 3/5

Monday, November 24, 2025

மாஸ்க்(2025)-தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் திரில்லர்)

             


               ஆண் ட்ரியாவின் சொந்தப்படம் இது.அதுவும் தனது சொத்துக்களை அடமானம் வைத்து எடுத்த படம் என்பதாலோ என்னவோ இயக்குனர் உயிரைக்கொடுத்து உழைத்து இருக்கிறார்.திரைக்கதையை நம்பும் படஙகள் தோற்காது என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக உணர்த்திய படம் இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு அரசியல்வாதி.தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு 440 கோடி  ரூபாய் பணத்தைப்பட்டுவாடா செய்ய வில்லியை அணுகுகிறான்.எந்த சந்தேகமும் இல்லாமல்  வாக்காளர்களுக்கு பணம் போய் சேர வேண்டும் என்பது வில்லிக்குகொடுக்கப்பட்ட டாஸ்க்


வில்லி ஒரு சமூக சேவகி என்ற போர்வையில்  உலா வரும்  ரெட் லைட் ஏரியா ஓனர்.ஏகப்பட்ட அடியாட்களை வைத்து தொழில் நடத்தி வருபவர்.வில்லனுக்கும் ,வில்லிக்கும் எந்த பந்தமும் கிடையாது.


நாயகன் ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் ஏஜென்சி நடத்துபவர்.திருட்டு பயலே படத்தின் ஹீரோ போல மற்றவர்களின் கில்மா வேலையைப்படம் பிடித்து அதன் மூலம் வருமானம் பார்ப்பவர்.அவரே அவரைப்பற்றிக்கூறும் பஞ்ச் இது .நான் கெட்டவன் தான் ஆனா எச்சை இல்லை. 


நாயகி என்னவாக வருகிறார்? நாயகனுடன் எப்படிப்பழக்கம் என்பது சஸ்பென்ஸ்.


வில்லி ஓனரா இருக்கும் ஒரு ஷாப்பிங்க் மாலில் சில கொள்ளையர்கள் புகுந்து அந்த 440 கோடி ரூபாயை கொள்ளை அடித்து விடுகிறார்கள்.வில்லி நாயகனிடம் அந்தக்கொள்ளை கும்பலைக்கண்டு பிடிக்க டாஸ்க் கொடுக்கிறாள்


இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை


நாயகன் ஆகக்கவின் கச்சிதம்.ஓவர் ஆக்டிஙக் இல்லாமல் அளவாக நடித்திருக்கிறார்.


நாயகி ஆக வரும் ருஹானி  சர்மா கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத நடிப்பு.1980 கால கட்டப்படங்களைப்பார்த்து வெட்கப்படுவது எப்படி? நளினமாக நடந்து கொள்வது எப்படி?என்பதைக்கற்றுக்கொண்டால் நலம்.


வில்லி ஆக ஆண்ட் ரியா .சில இடஙகளில் ஓக்கே ரக நடிப்பு ,பல இடஙகளில் ஓவர் ஆக்டிங. வில்லியாக சிம்ரன் நடித்ததை டெக்கில் பார்த்து பயிறசி செய்திருப்பார் போல.


வில்லன் ஆக  வரும் பவன் சுமார் ரக நடிப்பு.வீரம் அஜித் கெட்டப் எதுக்கு இவருக்கு ?


நாயகனின் மாமனாராக வரும் சார்லி க்ளைமாக்சில் அப்ளாஸ் அள்ளுகிறார்.


ஜார்ஜ் மரியம் குணச்சித்திர நடிப்பு கச்சிதம்.

நாயகியின் கணவனாக வரும்  அச்யுத்குமார் அசத்தி விட்டார்.

நாயகனின் மனைவியைக்கடைசி வரை காட்டாமலேயே கதையை முடித்தது நல்ல ஐடியா.


பேட்டரி என்னும் கேரக்டரில் நடித்தவர் அருமை.கெஸ்ட் ரோலில் வரும் ரெடின் கிங்க்ஸ்லீ ஓக்கே ரகம்


இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவர் தந்திருக்கிறார்.


ஜி வி பிரகாஷ குமார் தான் இசை.நான்கு பாடல்களில் 2 தேறுகின்றன.பின்னணி இசை கச்சிதம்.


ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை.ஆனால் நாயகி ,வில்லி இருவரையுமே அழகாகக்காட்ட முடியவில்லை.

ஆர் ராமரின் எடிட்டிஙகில் முதல் பாதி நல்ல வேகம்.முதல் 10 நிமிடஙகளில் அந்த பாஸ்ட் கட்டிஙகை தவிர்த்திருக்கலாம்.


127 நிமிடஙகள் படம் ஓடுகிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  விகர்ணன் அசோக்.


இயக்குநர் வெற்றி மாறனும் ஒரு தயாரிப்பாளர்



சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் நாயகியிடம் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது ஒரு மகளும் உண்டு என்ற அதிர்ச்சிச்செய்தியை சொன்னதும் ஓ எனக்கதறி அழும் நாயகி அதற்குப்பின் தரும் பூமாரஙக் அட்டாக் காமெடிக்கலக்கல்.

2 ஹெல்மெட் இருக்கா? என நாயகி பூடகமாகக்கேட்க நாயகன் ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் போகும் போது ஷட்டரை மூடும் வாட்ச்மேனிடம் ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி எனக்கெஞ்சும் சீன் செம.

3 ஹை ஜாக்கர்சிடம் நாயகன் ஒரு மணி நேரம் பர்மிசன் கேட்கும் சீன்


4 நாயகன் ,நாயகி ,ஆடியன்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஜெர்க் கொடுக்கும் இண்ட்டர்வெல் ட்விஸ்ட்,அதைத்தூக்கி சாப்பிடும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்



  ரசித்த  வசனங்கள் 


1 ஏண்டா காசு காசுன்னு அலையறே?


காசு எனக்குத்தேவை இல்லை.இந்த உலகத்துக்குத்தேவை


2 ஒரு வேலை செய்யறோம்னா காசு வேணும்,குறைந்த பட்சம் மரியாதை வேணும்,அதுக்குப்பேர் தான் வேலை


3 உன்னை அழ வைப்பதற்கோ ,காயப்படுத்துவதற்கோ உண்டான உரிமையை நீ யாருக்கும் கொடுத்துடாத,அதை நீயே பத்திரமா வெச்சுக்கோ

4 காசு காசுன்னு வாழ்க்கை பூரா  ஓடிட்டு இருக்கோம்,ஆனா இவ்ளோ காசை மொத்தமாப்பார்த்தா திக்னு இருக்கு

5 அவளே ஒரு தோல் வியாபாரி.அவளை வெச்சு எண்ட்டர்டெய்ன் வேணா பண்ணலாம்,எலக்சன் எப்படி?

6 என்ன மச்சி? FEEL பண்றியா?

இல்லையே?

உன் முகத்துக்கு அது செட் ஆகாது

7 அவஙக எல்லாரையும் வெச்சு செய்யறோம்


நோ.நம்மை செஞ்சாதான் திருப்பி செய்யனும்


8  ஒருத்தருடைய பலவீனம் என்னைக்கு இருந்தாலும் இன்னொருத்தருக்கு பலம்.

9 எது எப்போ யாரைக்காப்பாத்தும்னு நமக்குத்தெரியாது.

10 மேடம்.அவனால உங்களை எதுவும் பண்ணமுடியாதுன்னு அவனுக்கே தெரியாது

11 கோபமா இருக்கறவங்களைக்கூட  நம்பலாநம்பலாம்,ஆனா இந்த மாதிரி பாவமா இருக்கறவங்களை நம்பக்கூடாது

12 என்னபண்றே நீ?

சும்மாதான் இருக்கேன்


சும்மா இருக்கறதுக்கு முன் என்ன பண்ணினே?

அப்பவும் சும்மாதான் இருந்தேன்

13 அக்கா,அடிக்கடி உங்களை நல்லவங்ககளாப்பார்த்து போர் அடிக்குது.

14  நாம யாருக்கு உண்மையா ,விசுவாசமா இருக்கோமோ அவஙக அதுக்குத்தகுதியானவங்க தானா? யோசி

15 அடுத்த நிமிசம் என்ன நடக்கும்னு தெரியாத வேலை.வேற எங்கே கிடைக்கும்? இந்த திரில்?

16 மிடில் கிளாஸ் மைண்ட் செட்.எப்போ என்ன செய்வான்னு யூகிக்க முடியாது

17 காமன் மேன்  இல்லாம அரசாங்கமும் இல்லை,அதிகாரமும் இல்லை

18 நீங்க புத்திசாலின்னு எனக்குத்தெரியும்,அதனாலதான் நான் முட்டாளாவே  நடிச்சுட்டு இருந்தேன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வில்லி ஆக நடித்த ஆண்ட் ரியாவுக்கு ஓவர் மேக்கப்.சில இடஙகளில் ஓவர் ஆக்டிஙக்.தயாரிப்பாளர் தான் வில்லி என்பதால் இயக்குநர் கரெக்ட் பண்ணவில்லை போல.

2  க்ளைமாக்ஸ்க்கு முன் ஜார்ஜ் அழுது கொண்டே பேசும் டயலாக் புரியவில்லை

3 கொள்ளை அடிக்க மாஸ்க் வேண்டும் என்பவர்கள் ரெடிமேடாகக்கிடைப்பதை வாங்கிக்கொள்வதுதான் சேப்டி.ஆர்டர் கொடுத்து செய்தால்  ட்ராக் பண்ணி விடுவார்கள் என்பது தெரியாதா?

4 பொதுவா பெண்களிடம் ரகசியம் தங்காது.பணத்தைக்கொள்ளை அடித்தவன் தன் மனைவியிடம் எல்லா ரகசியஙகளையும் எதற்காக உளறுகிறான்.

5 வில்லனின் ஆள் நாயகனுக்கு போன் பண்ணும்போது நாயகன் கட் பண்ணுகிறான்.அடுத்த நொடியே  10 நிமிடம் பேசும் வாய்ஸ் மெசேஜ் வருது.எப்படி?

6 க்ளைமாக்சில் பேட்டரி கையில் உள்ள துப்பாக்கியை தட்டி விட்டு நாயகன் ஓட  அப்போது பேட்டரி மீண்டும் துப்பாக்கியை எடுத்து சுட முயற்சிக்கலை?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - விறுவிறுப்பாகச்செல்லும் நல்ல க்ரைம் திரில்லர்.ட்விஸ்ட்களும் அருமை.விகடன் மார்க் யூகம் 44 .குமுதம் ரேங்க்கிங்க் குட்.ரேட்டிங்க் 3 /5


Mask
Theatrical release poster
Directed byVikarnan Ashok
Written byVikarnan Ashok
Produced byVetrimaaran (presenter)
Andrea Jeremiah
SP Chokkalingam
Vipin Agnihotri
Starring
CinematographyR. D. Rajasekhar
Edited byR. Ramar
Music byG. V. Prakash Kumar
Production
companies
Grass Root Film Company (presents)
Black Madras Films
The Show Must Go On
Release date
  • 21 November 2025
Running time
127 minutes[1]
CountryIndia
LanguageTamil

Wednesday, November 19, 2025

மருதம் (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் (மெலோ ட்ராமா)@அமேசான் ப்ரைம் ,சன் நெக்ஸ்ட்

               

             

10/10/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் கமர்ஷியலாகப்பிரமாத வெற்றி பெறா விட்டாலும் பாசிட்டிவ் மீடியா விமர்சனஙகளைப்பெற்றது.இப்போது  10/11/2025 முதல் அமேசான் ப்ரைம் ஓடி டியில் காணக்கிடைக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு விவசாயி.தனது நிலத்தில் விவசாயம்  செய்து வாழ்ந்து வருகிறான்.மனைவி ,ஒரு மகன் உண்டு.


நாயகனின் அப்பா பேங்க்கில் லோன் வாங்கிததாகவும்,அதை அடைக்காததால் நிலத்தை ஏலம் விட்டு விட்டதாகவும் பேங்க் ஒரு குண்டைத்தூக்கிப்போடுகிறது.


ஆனால் நாயகனின் அப்பா லோன் எதுவும் வாங்கவில்லை.பேங்க் மேனேஜர் தான் மோசடி செய்து இருக்கிறார்.


நாயகன் சட்டப்படி கோர்ட்டில் வாதாடி எப்படி ஜெயிக்கிறார் என்பது மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக விதார்த் இயல்பான நடிப்பு.ஹீரொயிசம் காட்டாத ஹீரோவைத்தமிழ் சினிமாவில் பார்ப்பதே அரிதாகி விட்டது



நாயகி ஆக ரக்சனா பாந்தமான குடும்பப்பெண்ணாக வந்து போகிறார்.தமிழ் சினிமாவில் குடும்பப்பெண்களைப்பார்ப்பதே குதிரைக்கொம்பு ஆகி விட்டது.அரை குறை டிரசுடன் தான் அலைகிறார்கள்.


நாயகனின் நண்பன் ஆக லொள்ளு சபா மாறன் தன் ஒன் லைனர்களால் சில இடஙகளில் கலகலப்பு ஊட்டுகிறார்.

நாயகனுக்கு வாதாட ஐடியாக்கொடுக்கும் வக்கீல் ஆக தினந்தோறும் நாகராஜ் கை தட்டல்களைப்பெறுகிறார்.இவர் ஒரு நல்ல திறமைசாலி.

பைனான்ஸ் பார்ட்டியாக வரும் அருள் தாஸ் ,பேங்க் மேனேஜர் ஆக வரும் சரவணன் சுப்பையா ,வக்கீல் ஆக வரும் மேத்யூ வர்கீஸ் அனைவரும் கச்சிதமான நடிப்பை வழஙகி இருக்கிறார்கள்.


இசை ரகுநந்தன்.4 பாடல்களில் 2 தேறுகிறது.பின்னணி இசை கச்சிதம்.ஒளிப்பதிவு அருள் கே சோமசுந்தரம்.கிராமத்து அழகைக்கண் முன் காட்டுகிறார்.

பி சந்துரு வின் எடிட்டிஙகில் படம் 96 நிமிடங்கள் ஓடுகிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  வி கஜேந்திரன்

சபாஷ்  டைரக்டர்


1 படிப்பறிவில்லாத விவசாயிகளை ஏமாற்றும் வங்கி அதிகாரியின் கதையை சொல்ல இயக்குனர் எடுத்த முயற்சிகள்


2 இது ஒரு உண்மை சம்பவம் என்பதால் கவனத்தைக்கவரும் வகையில் திரைக்கதை இருக்கிறது


3 அனைவரது நடிப்பும் கச்சிதம்

  ரசித்த  வசனங்கள் 


1 உழவன் உங்க கிட்டே லோன் வாங்குவதற்குள் கிழவன் ஆகிடுவான்


2 வடநாட்டில் இருந்து வந்த சேட்டு கூட ஒரு கையெழுத்துதான் வாங்கறான்.உள்ளூர்க்காரனை நம்பாம இத்தனை கையெழுத்து வாங்கறீங்க.


3 அந்தப்பொண்ணு உங்களைத்திட்டிட்டுப்போகுது,சிரிக்கறீங்க?

திட்டினாலும் இங்க்கீஷல தானே திட்டுது?

4 உங்க தாத்தா செத்துட்டார்,நான் இன்னும் சாகலை,அவ்ளவ் தான்மா வித்யாசம்


5 நாங்க தான் ஜெயிக்கலை.நீங்களாவது ஜெயிக்கனும்.நீங்க ஜெயிச்சா நாங்க ஜெயிச்ச மாதிரி.

6 தெரியாதவன் ஏமாத்தறாந்னுதான் தெரிஞ்சவஙககிட்டே போறோம்,அவஙகளும் ஏமாத்தினா என்ன செய்ய?

7 திருட்டுப்பசஙகதான் கோர்ட்டுக்கு வருவானுஙக,இவன் கோர்ட்லயே திருட வந்திருக்கான் போல

8 இவனாக்கத்திட்டு நம்மளை சைலண்ட்னுசொல்லிட்டுமாட்டாங்க 

9 மனுசனோட மனசு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா மாறும்.நான் கத்துக்கிட்ட பாடம் இது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 விவசாயத்தை உயர்த்திப்பிடிக்கும் படத்தில் அரசுப்பள்ளியில் படிப்பதற்கு எதிரான காட்சி.தனியார் பள்ளியில் படித்தால் தான் கவுரவமா?.

2 நாயகனிடம் கவுன்சிலர் அந்த பிரைவேட் ஸ்கூலில் பையனை சேர்க்கனும்னா லட்சக்கணக்கில் செலவாகும்னு சொல்றார்.அடுத்த சீனில் நாயகன் தன் மனைவியிடம் 3 லட்சம் செலவாகும்னு கவுன்சிலர் சொல்றார்  என்கிறாரே? எப்படி?

3 நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கும் நாயகன் கூட்டுறவு வங்கியில் வாங்காமல் அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடம் வாங்குவது ஏன்?

4 மகனை எல் கே ஜி யில் சேர்க்கவே இருக்கும் ஒரே சொத்தான நிலத்தை அடமானம் வைக்கும் நாயகன் அதைத்தொடர்ந்து ஒவ்வொரு  டொனேசனுக்கும்,பீஸ்க்கும் பணத்துக்கு என்ன செய்யப்போகிறோம்? என நினைக்க மாட்டாரா?

5. பேங்க் மேனேஜர் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறுகிறார்.அது நாயகனுக்கு எப்படித்தெரியாமல் போனது? சைன் பண்ணித்தானே வாங்க முடியும்?


6 பிரைவேட் ஸ்கூலில் டொனேசன் ,பீஸ் எல்லாம் பிரித்து இவ்வளவு என்பதைத்தெளிவாக சொல்லி விடுவார்கள்,ஆனால் நாயகன் 3 லட்சம் டொனேசன் கட்டி விட்டு டோட்டலாவே அவ்ளவ் தான் என்று நினைப்பது எப்படி?


7 நிலத்தின் ஒரிஜினல் பத்திரம் நாயகனிடம் இருக்கும்போது பேங்க் எதை வைத்து அந்த நிலத்தை ஏலம் விட முடியும்?

8 நாயகனின் மகனை பிரைவேட் ஸ்கூலில் சேர்த்து விடுகிறான்.ஆனால் எப்போ நாயகன் வீட்டுக்கு வந்தாலும் மகன் வீட்டில் தான் இருக்கிறான்.எப்படி?


9 கேஸ்க்கு வாதிட வக்கீல்10 லட்சம் ரூபா செலவு ஆகும் என்கிறார்.3 லட்சம் அட்வான்ஸ் கேட்கிறார்.இலவச சட்ட உதவி மையம் மூலம் அரசாங்கம்திட்டுதுஇலவச வக்கீல் வைத்துக்கொள்ளலாமே? 

10 கோர்ட்டில் நாயகன் வணக்கம் வைக்கும்போது ஜட்ஜூம் வணக்கம் வைக்கிறார்.அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க. தலையை சின்னதா அசைக்கக்கூட மாட்டாங்க

11  பேங்க்கில் லோன் கட்டலைன்னா நோட்டீஸ் அனுப்பி பின் நேரில் ஆபீசர் ஒரு முறை ,பேங்க் மேனேஜர் ஒரு முறை கட்டாத நபர் வீட்டுக்கு வந்து வார்னிங் கொடுத்த பின் தான் நிலத்தை ஏலம் விட முடியும்


12 டைவர்ஸ் நோட்டீசில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி விட்டதாகத்தன் மாமனாதைக்குறை கூறுகிறார் மாறன்.ஆனால் நடந்ததை சொல்லி கோர்ட்டில் எதிர்ப்புத்தெரிவிக்கலாம்.


13 பேங்க் மேனேஜர் தனக்கு எதிரான சில விஷயஙகள் தன் லேப் டாப்பில் இருப்பது தெரிந்தும் அதை ஏன் கோர்டுக்குக்கொண்டு வருகிறார்?

14 படிப்பறிவே இல்லாத நாயகன் கோர்ட்டில் திறமையாக வாதிடுவது எப்படி? ஓப்பனிங சீனில் இங்க்லீஷ தெரியாது என சொன்னவர் கோர்ட்டில் லேப்டாப்,பென் டிரைவர் உட்பட பல ஆங்கில வார்த்தைகளை சொல்வது எப்படி?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நல்ல கதைக்கரு தான்.இயல்பான திரைக்கதை தான்,ஆனால் பல விஷயஙகளில் லாஜிக் அடி வாங்குகிறது.விகடன் மார்க் யூகம் 41 ,குமுதம் ரேங்க்கிங்க். ஓக்கே.ரேட்டிங்க் 2.5 /5


Marutham
Theatrical release poster
Directed byV. Gajendran
Written byV. Gajendran
Produced byC. Venkatesan
Starring
CinematographyArul K. Somasundharam
Edited byChandru B
Music byN. R. Raghunanthan
Production
company
Aruvar Private Limited
Release date
  • 10 October 2025
CountryIndia
LanguageTamil

Tuesday, November 18, 2025

மதராஸ் மாபியா கம்பெனி (2025)--தமிழ்- சினிமா விமர்சனம் (காமெடி ட்ராமா)

             

            டைட்டிலையும்,போஸ்டர் டிசைனையும் பார்த்து இது அடி தடிப்படமோ என யாரும் பயப்பட வேண்டாம்.இது ஒரு மொக்கைக்காமெடி மெலோ ட்ராமா.14/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் விரைவில் டி வி யில் வரும்  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு லோக்கல் தாதா.அவனுக்கு சட்டப்படி ரெண்டு சம்சாரம்,செட்டப் படி ஒரு சமாச்சாரம்.பெரிய அரசியல்வாதியா வரத்தகுதியான ஆளு.இவருக்கு 4 எதிரிகள்

1 இவரை என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ளத்துடிக்கும் நாயகி ஆன போலீஸ் கமிஷனர்

2  இவருக்கு லெப்ட் ஹேண்ட் ஆக இருக்கும் ஆள் .இவரைப்போட்டுத்தள்ளி விட்டால் நாம் தான் லீடர் என நினைப்பவன்,கூடவே இருப்பவன் ( இவனுக்கு வை கோ மாதிரி கெட்டப் வேற)

3 நீ இந்தத்தொழிலுக்கு சரிப்பட்டு வர மாட்டே என நாயகனால் அவனது கேங்கை துரத்தி அடிக்கப்பட்ட காமெடியன்

4 நாயகனின் தொழில் போட்டி எதிரி

5 தனது காதலுக்கு எதிரியாக இருக்காரே? காதலனைக்கொன்று விட்டாரே?என அவர் மேல் கோபமாக இருக்கும் நாயகனின் மகள்


இவர்கள் ஐந்து பேர்களில் யாரால் நாயகனுக்கு ஆபத்து? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக ஆனந்தராஜ்.மாநகரக்காவல்,படத்தில் வில்லனாக வந்தாலும் கெட்டப்பில் அசத்தி இருப்பார்.ஆனால் நாயகனாக வந்தும் இதில் அந்த அளவுக்கு தோரணையான நடிப்பு இல்லை.காமெடிக்கேரக்டர் என்பதால் சமாளிக்கிறார் 


காமெடியன் ஆக வரும் முனீஷ் காந்த் நாயகனைக்கொல்ல முயலும் காட்சிகள் எல்லாம் நல்ல காமெடி.

முதல் சம்சாரம் ஆக தீபாவும் ,2வது சம்சாரம் ஆக லயாவும் அவர்கள் பங்குக்கு வந்து போகிறார்கள்.


போலீஸ் ஆபீசர் ஆக வரும் சம்யுக்தா ஆள் ஜம் என்றிருந்தாலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிஙகோ என எண்ண வைக்கிறார்.

நாயகனின் மகளாக வருபவர் குட்.ஆனால் மகளின் காதலன் ஆக வருபவர் கஞ்சாக்கேஸ் மாதிரி இருக்கிறார்.

இசை ஸ்ரீகாந்த் தேவா.ஒரு குத்துப்பாட்டு சுமாரா இருக்கு.பின்னணி இசை பரவாயில்லை ரகம்

எடிட்டிங பரவாயில்லை.126 நிமிடங்கள். அசோக் ராஜின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.


இயக்கம் ஏ எஸ் முகுந்தன்



சபாஷ்  டைரக்டர்


1 காமெடியன் நாயகனைக்கொல்ல முயற்சிக்கும் அந்த நான்கு வெவ்வேறு முயற்சிகள் சிரிப்பு

2 டபுள் மீனிங்கில் கண்ணியமான காமெடி வசனஙகள் பரவாயில்லை ரகம்

3  போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்த விதம்


  ரசித்த  வசனங்கள் 

1 விசுவாசம் என்னும் வட்டத்துக்குள் ஒரு தடவை நீங்க விழுந்துட்டா பின் நீங்களே நினைச்சாலும் அதுல இருந்து வெளில வர முடியாது


2 நாட்டு மக்களுக்கு நான் எவ்வளவோ கெடுதல் பண்ணி இருக்கலாம்,ஆனா நாட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன்


3  இனிமே அவ வீட்டுப்பக்கம் போவீங்க?


ச்சே ச்சே..வீட்டுக்குள்ளே வேணா போவேன்


4. பாழாப்போனது பசுவின் பால் அப்டினு சொல்வாங்க,இப்போ ஒரு பசுவே பாழாப்போகப்போகுது


5  என்னடா உனக்கு பொண்டாட்டி பாசம்.அவ உனக்கு நாலாவது சம்சாரம்.நீ அவளுக்கு மூணாவது புருசன்


6 Fun பண்றதுக்கு எல்லாம் பஞ்சாஙகம் பார்க்கலாமா?

7 பகலில் பக்கம் பார்த்துப்பேசு,டாஸ்மாக் பாரில் அதுவும் பேசாதே


8  சண்டை செய்யற எல்லாராலும் சம்பவம் (கொலை) செய்ய முடியாது

9 கண்ணி வெடின்னு தெரியாம காலை வெச்சுட்டே,எரிமலைனு தெரியாம எச்சில் துப்பிட்டே

10 கோமதி,நீ தொழிலில் ரொம்ப சுத்தம் தான்,ஆனா நீ சுத்தம் இல்லை


11 என்னை விட்டுடுங்க,நான் உங்க கிட்டே தொழில் கத்துக்கிட்டவன்

அதனாலதான் உன்னை விடக்கூடாது

12 எனக்கும் ,பூங்காவனத்துக்கும் நடப்பது  சாதா சண்டை இல்லை.கழுதைப்புலிக்கும் ,காட்டு யானைக்கும் நடக்கும் சண்டை

அப்போ நீங்க தான் அந்த கழுதைப்புலியா?

13.  கசாயம் வித்த காசு கசக்காது

கள் வித்த காசு ஆடாது


14 ஏம்மா கோமதி.அந்த ஏரியா தாதா ஆனதுல இருந்து எத்தனை பேரைப்போட்டிருப்பே?(கொலை)

போங்க.பப்ளிக்கா கேட்டா கூச்சமா இருக்காதா?

அடச்சே!அவரை கொலையைப்பத்திப்பேசிட்டு இருக்காரு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகனின் மகளை தன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் அக்கா பையனை மியூசிக் கிளாசில் சேர்த்து விடுகிறார்.பல நாட்கள் பாலோ பண்றார்.ஆனால் ஒரு காட்சியில் மியூசிக் கிளாஸ் லேண்ட் லைன் போன் நெம்பரே அவருக்குத்தெரியாமல் தடுமாறுகிறார்

2  நாயகன் தனது மகளின் காதலனை கோபத்தில் அடிக்கிறார்.அவன் தலையில் காயம் பட்டு பின் ட்ரீட்மெண்ட் நடந்து சில நாட்களில் இறக்கிறான்.அது ஆக்சிடெண்ட்டல் டெத் தான்.அது கொலை என மகளே சொல்லல.ஆனா போலீஸ் சொல்லியது எப்படி?

3  நாயகன் தாடி வைத்து கெட்டப் சேஞ்ச் செய்து வரும்போது 3 சம்சாரங்களுக்கும் அடையாளம் தெரியாதா? எம் ஜி ஆர் படத்தில் தான் அப்படி வரும்

4 நாயகனுக்கு எதிராக யாருமே சாட்சி சொல்ல முன் வராத போது மகள் தயார் என்கிறாள். லட்டு மாதிரி வாய்ப்பு.உடனே சாட்சியைப்பதிவு பண்ணாமல் நீ நாளை வா என சொல்வது காமெடி.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போடும்போது பார்க்கக்கூடிய அளவில் ஒரு சுமாரான மொக்கைக்காமெடிப்படம்.விகடன் மார்க் யூகம் 39.குமுதம் ரேங்க்கிங்க் சுமார்.ரேட்டிங்க் 2/5

Monday, November 17, 2025

AVIHITHAM (2025 )- AN ILLICIT AFFAIR - மலையாளம் - சினிமா விமர்சனம் ( பிளாக் ஹியூமர் காமெடி டிராமா )@ ஜியோ ஹாட் ஸ்டார்

             


        டைட்டிலைப்படித்தோ,போஸ்டர் டிசைனைப்பார்த்தோ இது ஒரு மார்க்கமான படம்  என்று யாராவது எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போவீர்கள்.இது அக்மார்க் யூ படம்.   


10/10/2025 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 14/11/2025 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங்கிலும் உள்ளது.


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு கிராமம்.அங்கே ஒரு ஆள் நைட் டைம் சரக்கு அடிச்ட்டு  வீட்டுக்குக்கிளம்பும்போது  ஒரு கள்ளக்காதல் ஜோடி தோப்புக்குள்ளே  இருப்பதைப்பார்த்துடறான்.


அடுத்த நாள் அவன் அவனோட நண்பன் கிட்டே விஷயத்தை சொல்றான்.இப்போ ரெண்டு பேரும் அதே டைம்க்கு அதே ஸ்பாட்க்குப்போறாங்க

ரிப்பீட்டு.அதே க.கா ஜோடி (க.கா = கள்ளக்காதல்) வர்றாஙக.இருட்டுல ஆண் யார்? என தெளிவாகத்தெரிந்து விடுகிறது,ஆனால் பெண் யார்?என முகம் சரியாகத்தெரியவில்லை.


அந்த ஊர்லயே ஒரே ஒரு டெய்லர்தான்.அவனுக்கு பெண்களோட அளவுகள் எல்லாம் தெரியும்.அதை வெச்சு இருட்டில் ,நிழல் உருவத்தை வெச்சே இந்தப்பொண்ணாத்தான் இருக்கும்னு யூகம் பண்ணிக்கறான்.


அந்தப்பொண்ணோட புருசன் கிட்டே சொல்றான்.ஊரில் இருக்கும் வேலை வெட்டி இல்லாத பசஙக எல்லாம் ஒன்று கூடி அந்த ஜோடியைக்கையும் களவுமாப்பிடிக்க பிளான் போடறாஙக.


இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.


இந்தப்படத்தில் நாயகன், நாயகி,வில்லன் என யாரும் இல்லை

ஒரே கிராமத்தில் நடக்கும் கதை என்பதால்,பெரிய நட்சத்திரங்கள் என யாரும் இல்லாததால் சம்பள செலவும் ,லொக்கேஷன் செலவும் இல்லை


ஒளிப்பதிவு ஸ்ரீ ராஜ் அண்ட் ரமேஷ். கச்சிதம்.

இசை ஸ்ரீ ராக் சஜி.2 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.. எடிட்டிங் சிவராஜ்.106 நிமிடஙகள்.


கதை ,திரைக்கதை  அம்பரீஷ.இயக்கம் சென்னா ஹெக்டே

சபாஷ்  டைரக்டர்


1 இந்த துக்ளியூண்டு கதையை 2 மணி நேரப்படமாக எடுத்த சாமார்த்தியம்

2  கோக்கு மாக்கான படம் என்பது மாதிரி மார்க்கெட்டிங் செய்த உத்தி

3 போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்த விதம்


  ரசித்த  வசனங்கள் 

1  லைட்டா ,லைட்டான்னு சொல்லி சொல்லி வெய்ட்டாக்குடிக்கிறான்

2 எந்த சரக்கா இருந்தாலும் உள்ளே தள்ளிடுவேன்,அது தான் தொழிலாளர் சரக்கு


உனக்கு தான் வேலை வெட்டியே இல்லையே? அப்புறம் என்ன தொழில்?


3 டி வி சீரியலில் காட்டாத சீன் எல்லாம் இப்போ நான் காட்றேன்

4  ஏம்ப்பா,அந்த க.கா ஜோ டி கிட்டே இருந்து சத்தம் எதுவும் வர்லியே?


டால்பி சவுண்ட் சிஸ்டம்  ரெடி பண்ணிடலாமா?


5. வருசா வருசம் ஓணம் பண்டிகை முடிஞ்சதும் பொண்ணுங்க 2 இஞ்ச் பெருத்துடுவாங்க

6 இது என்ன ஊர்த்திருவிழாவா? எல்லாரும் போய்ப்பார்க்க?


7 என்னடா? காலஙகாத்தாலயே வந்துட்டீஙக?


சரி.போய்ட்டு நைட் வரவா?


8. செக் அவுட் பண்றியா?


வாட்?


பின்னே? வீட்டுக்கு நைட் வர்றே? காலைல கிளம்பிடறே! லாட்ஜ் மாதிரி


9 பொண்ணுங்க மேல எப்பவும் ஒரு கண் வெச்சிருக்கனும்.அது அம்மாவோ,தங்கையோ,மனைவியோ...இல்லைன்னா தலை மேல ஏறிக்குவாஙக.


10 தளறாம முன்னேறிப்போவதுதான் நம்மை பலசாலி ஆக்கும்


11.  அம்மா,ஒரு முக்கியமான வேலையாப்போறேன்,ஆசீர்வாதம் பண்ணுஙக

என்ன?ந்னு பண்ண?


என்னத்தையாவது சொல்லுங்க


பஸ்ல நடு சீட் கிடைக்கட்டும்


நக்கலு?


12  இவன் முகத்தைப்பாரு,சீரியல் கில்லராவே தெரியறான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. மாவு மில்லில் மாவு அரைப்பவன் தான் அந்தக்கள்ளக்காதலன்.அவன் தான் ஓனர்.அதுவே பாதுகாப்பான இடம் தான்.அவன் அங்கே வரச்சொல்லாம  வேற ஒருவர் வீட்டு தோட்டத்துக்கு வரச்சொல்வது ரிஸ்க்

2.  நிர்மலா என்ற பெண் தான் அந்தக்காதலியோ என்ற சந்தேகம் அனைவருக்கும்.ஆனால் அவள் கணவன் நைட் ஷிப்ட் வேலையில் இல்லை.வீட்டில் மாமியார் ,10 வயது மகள் இருக்கும்போது கணவனுக்குத்தெரியாமல் மிட் நைட்டில் வெளியே போக முடியாது.

3 க்ளைமாக்சில் அகப்பட்ட அந்த பெண் பேசும் வசனஙகள் அபத்தம்.புருசன் பிடிக்கலைன்னா டைவர்ஸ் பண்ணிட்டு அவன் கூடப்போக வேண்டியது தானே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்தப்படம்  30 நிமிடஙகளில் முடிக்க வேண்டிய  குறும்படம்,ஜவ்வாய் இழுத்து விட்டார்கள். ரேட்டிங்க் 2 /5


Avihitham
Directed bySenna Hegde
Written by
  • Ambareesh Kalathera
  • Senna Hegde
Story byAmbareesh Kalathera
Produced by
  • Mukesh R. Mehta
  • Harris Desom
  • P. B. Anish
  • C. V. Sarathi
  • Senna Hegde
Starring
  • Unni Raj
  • Renji Knakol
  • Vrinda Menon
Cinematography
  • Sreeraj Raveendran
  • Ramesh Mathews
Edited bySanath Sivaraj
Music bySreerag Saji
Production
companies
  • E4 Experiments
  • Imagin Cinemas
  • Marley State of Mind
Distributed by
  • E4 Experiments (Kerala)
  • AP International (Rest of India)
  • Home Screen Entertainment (GCC)
Release dates
  • October 9, 2025 (GCC)
  • October 10, 2025 (India)
Running time
106 minutes
CountryIndia
LanguageMalayalam

Sunday, November 16, 2025

காந்தா (2025)- தமிழ் -சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி டிராமா திரில்லர் )

             


          லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜபாகவதர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதால் தான் "காந்தா" டைட்டில் என சிலரும்,ரத்தக்கண்ணீர்      படத்தில் எம் ஆர் ராதா "அடியே காந்தா" என்ற புகழ் பெற்ற டயலாக்கைப்பேசியதால் எம் ஆர் ராதா கதை என்பதால் காந்தா என்ற டைட்டில் என சிலரும் சொன்னாலும் இரண்டும் உண்மை அல்ல.இது ஒரு கற்பனைக்கதை.


ஆனால் பாகவதர் பேரன் இப்படத்தைத்தடை செய்யக்கோரி வழக்குப்போட்டிருக்கிறார்.ஒருவேளை சில சம்பவங்கள் உண்மையாய் இருக்கலாம்



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு டைரக்டர்.கே பாலச்சந்தர் மாதிரி பல பெரிய ஹீரோக்களை உருவாக்கியவர்.ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய சில படஙகள் தொடர் தோல்வியை சந்திக்கின்றன.


இவர் உருவாக்கிய ஒரு நடிகர் இப்போது பெரிய சூப்பர் ஸ்டார்.தொடர்ந்து 10 மெகா ஹிட் கொடுத்தவர்.நாயகன் ஒரு டைரக்டர் ஆகத்தொடர்ந்து பரிமளிக்க அந்த நடிகர் உதவி தேவைப்படுகிறது.


அந்த நடிகர் தான் படத்தின் வில்லன்.தாலி கட்டிய மனைவி இருக்கும்போதே இன்னொரு நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இவர் வில்லன்.

நாயகன் ஆன  டைரக்டர் ,வில்லன் ஆன சூப்பர் ஸ்டார் நடிகர் இவர்கள் காம்பிநேசனில்  ஒரு படம் ஷூட் செய்யப்படுகிறது.


அந்தப்படத்தில் ஒரு புது முகம் தான் நாயகி.படத்தில் ஜோடி ஆக நடித்ததால் வாழ்க்கையிலும் ஜோடி ஆக நடிகரும்,புதுமுக நாயகியும் முடிவு செய்கிறார்கள்.


இது நாயகன் ஆன டைரக்டருக்குப்பிடிக்கவில்லை.


ஒரு கட்டத்தில் திடீர் என புதுமுக நாயகி கொலை செய்யப்படுகிறார்.

கொலை செய்தது யார்?


1 தான் கர்ப்பம் ஆக இருப்பதால் உடனே திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சூப்பர் ஸ்டார் கொலை செய்தாரா?

2 சூப்பர் ஸ்டாரை மாட்ட வைக்க இயக்குநர் கொலை செய்தாரா?

3 சூப்பர் ஸ்டாரின் மனைவி தனக்கு ஒரு சக்களத்தி உருவாகக்கூடாது என கொன்றாரா?

4  சூப்பர் ஸ்டாரின் மாமனார் கொலை செய்தாரா?

5 புதுமுக நாயகியை அடைய நினைத்து அது முடியாமல் போகவே விரக்தியில் புரொடியூசர் கொன்றாரா?


இது தான் படத்தின் மீதிக்கதை


நாயகன் ஆக  படத்தில் டைரக்டர் ஆக வரும்   சமுத்திரக்கனி நடிப்பு அபாரம்.ஈகோ வை முகத்தில் பிரமாதமாகக்காட்டுகிறார்.


வில்லன் ஆக படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக வரும் துல்கர் கலக்கல் நடிப்பு.பல இடஙகளில் ஸ்கோர் செய்கிறார்.


நாயகி ஆக புதுமுகம் பாக்யா ஸ்ரீ அட்டகாசமான நடிப்பு.இருவர் படத்தில் வரும் ஐஸ்வர்யாராய் கேரக்டர் டிசைனை நினைவுபடுத்துகிறார்.முக சாயல் 50% ஐஸ்வர்யாராய் 50% பூவே உனக்காக சங்கீதா.ஒரு புது முக நடிகை முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக நடித்தது அருமை


  வில்லனின் மனைவியாக வரும்  காயத் ரி கச்சிதமான நடிப்பு.

இன்வெஸ்டிகேஷன்  ஆபீசர் ஆக வரும் ராணா ஓவர் ஆக்டிங.காமெடி என்ற பெயரில் அவர் சீரியசான ரோலைக்கெடுத்து விட்டார்.

வில்லனின் பி ஏ ஆக வரும் வையாபுரிக்கு அதிக வேலை இல்லை.உதவி இயக்குனர் ஆக வரும் கஜேஷ நாகேஷ் செம நடிப்பு.


வில்லனின் மாமனாராக வரும் நிழல்கள் ரவி அடையாளமே தெரியாத அளவு கெட்டப் அருமை.இன்னொரு போலீஸ் ஆபீசர் ஆக வரும் ஆடுகளம் நரேன் அதிக வாய்ப்பில்லை.போலீஸ் கான்ஸ்டபிள் ஆக  வரும் பகவதி பெருமாள் கவனிக்க வைக்கிறார்.


ஆர்ட் டைரக்டர் ராமலிஙகம் 1950 கால கட்டத்தைக்கண் முன் நிறுத்துகிறார்.

டேனி சஞ்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு அருமை.ஒயிட் அண்ட் பிளாக்கில் வரும் சீன்கள் கலக்கல் ரகம்.இசை ஜானு சந்தர்.பாடல்கள் பரவாயில்லை ரகம்.பின்னணி இசை ஓக்கே ரகம்.


தமிழ் பிரபா,செல்வணி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  திரைக்கதை எழுதி செல்வமணி செல்வராஜ் மட்டும் தனித்து இயக்கி இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1 முதல் பாதி முழுக்க நாயகன் ,வில்லன் ஈகோ கிளாஸ் தான்.செம இன்ட்ரஸ்ட்டிஙக்

2 சமுத்திரக்கனி பேசும் வசனஙகள் பல இடஙகளில் கை தட்டலை அள்ளுகிறது

3 வில்லன் ஆக வரும் துல்கரின் கெட்டப் சில இடஙகளில் எம் ஜி ஆர் ,சில இடஙகளில் சிவாஜி என கலந்து கட்டி இருப்பது நல்ல யுக்தி

4  கண்ணாடியைப்பார்த்தபடி வில்லன் துல்கர் பேசி நடிக்கும் சீன் செம

5 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் யார் கொலையாளி என்று தெரிந்த பின் நடக்கும் இரு சம்பவங்கள் தான் எதிர்பாராத ட்விஸ்ட்ஸ்


  ரசித்த  வசனங்கள் 

1 பணத்தை இழக்கலாம், ஆனா  நல்ல கலைஞர்களை இழக்கைக்கூடாது 


2 ஒரு கதையை  எப்போ  சொல்லணும்னு  அந்தக்கதை  தான்  முடிவு பண்ணனும் 


3  நீ  பறக்க  ஆசைப்பட் டா  உன் சிறகுகளை  வெட்டுவார் 


4    கட்   சொன்ன பிறகு நடிக்காதே 


5   அவரை  ரசிகர்கள்  கடவுளாப்பார்க்கிறாங்க , சாகற  மாதிரி  எப்படி   நடிப்பார்?


 நீ  கடவுள்  வேஷம்  மட்டும் தான்  போட்டிருக்கே 


6 அய்யா,தெரியாம சொல்லிட்டேன்,மன்னிச்சுடுஙக அய்யா


வார்த்தை உதட்டில் இருந்து வர்றதல்ல,இதயத்தில் இருந்து வருவது.புகழ் உன் கண்ணை மறைக்க ஆரம்பிச்சிடுச்சு


6 அய்யா,ஆடியன்சுக்கு இது பிடிக்கும்


நீ சொல்ற ஆடியன்ஸ் 50 வருசங்களுக்குப்பின் இருக்க மாட்டான்,ஆனா நான் எடுக்கும் படம் காலத்துக்கும் இருக்கும்


7 நாம எங்கே இருந்து வந்தோம் என்பதை எப்பவும் மறக்கக்கூடாது

8  நடிப்பு சக்ரவர்த்தினு எனக்கு பட்டம் கிடைச்சுதே?


அது நான் உனக்குப்போட்ட பிச்சை


 நீங்க எனக்கு வாய்ப்பு மட்டும் தான் கொடுத்தீங்க,வாழ்க்கையை இல்லை


9.  சாமி வரம் தர்கைன்னு பூசாரிக்குப்பூ போட்டுப்பார்த்திருக்கான்


அப்டின்னா?


ஹீரோயினைக்கரெக்ட் பண்ண முடியல.சரி தோழியை ரூட் விடலாம் ?


10. ஒரு படத்துல அவர் ஒருவரே 16 வேடஙகளில் நடித்திருக்கார்


ஏன்?ஊரில் வேற நடிகர்களே இல்லையா?


அவரை மாதிரி நடிக்க நடிகர்கள். இல்லை


11. உன்னை அழிக்க 5 நிமிசம் போதும்


ஊதித்தள்ள நான் மண் இல்லை,மலை


12 உண்மையான காதல்னா என்ன?என்பதை அவளை சந்தித்த பின் தான் தெரிந்து கொண்டேன்


13  வாங்க மேடம்,கல்யாணத்துக்குப்போற மாதிரி அலஙகாரத்தோட வந்திருக்கீஙக,ஆனா இது கருமாதி


14. என்னது?2 பேருக்கும் 12 வருசப்பழக்கமா? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கவே இல்லையா?


புரிஞ்சுக்க இவன் என்ன தொல்காப்பியமா? பிராடு


15 எல்லாத்தையும் சிரிச்சுட்டே சொல்லனும்னு சொல்வியே?இப்ப நீ இல்லை என்பதை எப்படி சிரிச்சுட்டே சொல்வேன்?


16. சாவு கிட்டே போராடி ஜெயிச்சு வந்தவ அவ


17 சாவைக்கிட்டே பார்த்த யாரும் கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்த்துடனும்னு வைராக்யமா இருப்பாங்க


18 எல்லாமே பொய் ,அவ மட்டும் தான் உண்மைன்னு நம்பினேன்


19 எனக்கான இடத்தை நான் தான் முடிவு பண்ணுவேன்.அந்த இடத்தை யாராலும் அசைக்க முடியாது.


20 என் கிட்டே இருந்து எதை வேணும்னாலும் பறிக்கலாம்,ஆனா நானே கட்டிக்காத்த என் இமேஜை ,என் பிம்பத்தை யாராலும் உடைக்க முடியாது.


21 இதுதான் வாழ்க்கை.இருக்கற வரைக்கும் உண்மையாய் இரு,பணிவாய் இரு.


22 ஆயிரம் சாவுகளைப்பார்த்திருக்கேன்,பல பேரைக்கொன்றிருக்கேன் ஒரு போலீஸ் ஆபீசரா..ஆனா சாகும்போது சிரிச்ச முகமா செத்த ஒருத்தரைப்பார்த்ததில்லை.

23. நீ இனி வாழும் ஒவ்வொரு நொடியும் உனக்கு தண்டனை தான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகி ஒரு அப்பாவிப்பெண்,நல்லவள் என சித்தரிக்கப்படுகிறார்.ஆனால் ஏற்கனவே திருமணமானவன் என்று தெரிந்தும் வில்லனுடன் நெருக்கம் ஆவது ஏன்? இன்னொரு பெண்ணின் வாழ்வைக்கெடுப்பது சரியா?

2. பின் பாதி இன்வெஸ்டிகேஷன் போர்சன் செம கடுப்பு.காரணம் முதல் பாதி திரைக்கதை செமயாக இருந்ததால் பின் பாதி கதையே வேறு என மாறி விடுவதால் வரும் ஏமாற்றம்

3. சினிமாவுக்குள் சினிமா என்பது தமிழ் சினிமாவில் ராசி இல்லாத சப்ஜெக்ட்.ஆல்ரெடி கே பாக்யராஜின் தாவணிக்கனவுகள், பிரகாஷ் ராஜ் நடித்த வெள்ளித்திரை உட்பட பல படஙகள் ஓடவில்லை

4 கொலைகாரன் ஒரு பிரபலம்.ஆள் வைத்துக்கொல்லாமல் நேரடியாகவா கொல்வான்?

5. சாந்தா என்று இயக்குனர் வைத்த டைட்டிலை வில்லன் காந்தா என்று மாற்றுகிறான்.பெரிய வித்யாசம் எதுவும் இல்லை.ஒரு எழுத்துத்தான் மாற்றம்.அதுக்கு ஏன் இவ்ளோ அடிதடி?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - வித்தியாசமான படஙகளை விரும்புவோர்க்கு முதல் பாதி மட்டும் பிடிக்கும்.விகடன் மார்க் யூகம் 42.குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே.ரேட்டிங்க்  3/5



Friday, November 14, 2025

குற்றம் புதிது (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் )

          



         29/8/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இன்னமும் ஓ டி டி யில் வரவில்லை         


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு அசிஸ்டெண்ட் கமிசனரின் மகள்.ஒரு நாள் நள்ளிரவில் ஆள் மிஸ்சிங்.


நாயகன் ஒரு புட் டெலிவரி பாய்.நாயகி மிஸ்சிங் கேசில் போலீஸ் நாயகனை விசாரிக்கிறது.பின் விட்டு விடுகிறது.


பின் திடீர் என நாயகன் போலீசிடம் ஆஜர் ஆகி தான் தான் கொலை செய்தது என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.அது மட்டுமல்ல.தான் ஸ்கூலில் படிக்கும்போது கணக்கு டீச்சரைக்கொலை செய்தேன்,காலேஜ் படிக்கும்போது நண்பனைக்கொலை செய்தேன் என்கிறார்


விசாரித்ததில் அந்த கணக்கு டீச்சர்,நண்பன் என இருவரும் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது.


நாயகன் ஒரு சைக்கோவா? மன நிலை பாதிக்கப்பட்டவரா? என குழம்புகையில் கொலை செய்யப்பட்டதாகக்கருதப்பட்ட நாயகி உயிருடன் வருகிறார்.

நாயகி கோர்ட்டில் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்..தன்னை ஆட்டோ டிரைவரிடம் இருந்து காப்பாற்றியதே நாயகன் தான் என்கிறார்.


குழம்பிய ஜட்ஜ் ஒரு வாரம் லாங்க் லீவில் போகிறார்.

உண்மையில் நடந்தது என்ன? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக தருண் விஜய் கச்சிதமாக நடித்திருக்கிறார்.மனநிலை பாதிக்கப்பட்டவர் போலப்பேசுவது,கொலைகாரன் போலப்பேசுவது , நார்மல் ஆக நடப்பது  என ரகுவரன் ஏற்று நடிக்க வேண்டிய கேரக்டர் டிசைன்.சமாளித்திருக்கிறார்.


நாயகி ஆக சேஷ்விதா கனிமொழி போல்டான பெண்ணாக ,பாதிக்கப்பட்ட பேஷண்ட் ஆக இரு பரிமாண நடிப்பில் கன கச்சிதம்.


நாயகியின் அப்பாவாக மதுசூதனன் ராவ் குணச்சித்திர  நடிப்பு அருமை.


நாயகனின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி ,அம்மாவாக வரும் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் இருவரும் உருக்கமான நடிப்பு.


வில்லன் ஆக வரும் ராம்ஸ் மிரட்டலான நடிப்பு ( நான் மகான் அல்ல புகழ் ராம்ஸ்)


இசை கரண் பி கிருபா.பாடல் சுமார் ரகம்.பின்னணி இசை சராசரி.

ஒளிப்பதிவு ஜேசன் வில்லியம்ஸ்.கொலை நடக்கும் ஒரு சின்ன அறையில் சாமார்த்தியமாகப்படம் பிடித்தமைக்கு ஒரு சபாஷ்.


திரைக்கதை இயக்கம் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்




சபாஷ்  டைரக்டர்


1 இருபது நிமிடஙகளில் முடிக்க வேண்டிய ஒரு குறும்படத்தை 2 மணி நேரப்படமாக நீட்டி முழக்கியது.

2 தயாரிப்பாளர் தான்  நாயகன் என்பதால் அவரிடம் உங்களைக் கமல் ரேஞ்சுக்கு நடிக்க வெச்சுடறேன் என அவரது கேரக்டர் டிசைனை வடிவமைத்தது 

3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்



  ரசித்த  வசனங்கள் 


1. வா...உன்னை வெச்சுக்கறேன்


சந்தோஷமா வெச்சுக்கோ!



2  எங்க ஹவுஸ் ஓனருக்கு ஒரு பொண்ணு இருக்கு.அவஙக நிஜமாவே பொண்ணு மாதிரியே இருப்பாஙக


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. டெட் பாடி கிடைக்காமலேயே நியூஸ் சேனலில் அசிஸ்டெண்ட் கமிஷனர் மகள் கொலை என எப்படி நியூஸ் போட முடியும்?

2. ஸ்விக்கி மாதிரி புட் டெலிவரி பாய் ஆக வேலை செய்பவருக்கு ஹெல்மட் கட்டாயம்.ஆனால் நாயகன் ஹெல்மெட் போடல

3  ஐந்து நாட்களாக எதுவுமே சாப்பிடலைனு டாக்டர் சொல்றாங்க.ஆனா மகள் தெம்பாகப்பேசுகிறார்.அப்பா  போலீஸ்.டவுட் வர்லையா?


4  ஐந்து நாட்களாக எதுவும் சாப்பிடாத நிலையில் இருக்கும் பேஷண்ட்க்கு க்ளுக்கோஸ் ஏத்தலையே?


5.  நகரம் முழுக்க சிசிடிவி கேமரா இருக்கையில் இப்படி ஒரு குற்றவாளி உலவ முடியுமா? அதுவும் மாட்டிக்கொள்ளாமல்?

6 நாயகனின் போன் நெம்பரை ட்ராக் செய்யும் சைபர் க்ரைம் போலீஸ் நாயகி உடன் ஆல்ரெடி பல முறை தொடர்பில் இருந்திருக்கிறார் என்பதை ஏன் கண்டுபிடிக்கவில்லை?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மகாப்பொறுமைசாலிகள் மட்டும் பார்க்கலாம்.அந்த ட்விஸ்ட் என்ன என்பதை மட்டும் கேட்டு விட்டால் 2 மணி நேரம் மிச்சம்.விகடன் மார்க் யூகம் 39.குமுதம் ரேங்க்கிங் யூகம் ஓக்கே.ரேட்டிங்க் 2.25 /5


குற்றம் புதிது
இயக்கம்நோஆ ஆர்ம்ஸ்ட்ராங்
தயாரிப்புசெல்வா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
கதைநோஆ ஆர்ம்ஸ்ட்ராங்
இசைஅரவிந்த் கிருஷ்ணா
நடிப்புதருண் விஜய், சேஷ்விதா கனிமொழி
ஒளிப்பதிவுஆர். பாலாஜி
படத்தொகுப்புசுரேஷ் ராஜ்
கலையகம்செல்வா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்