Friday, August 19, 2022

தென்றலே என்னைத்தொடு 1985 - சினிமா விமர்சனம் ( மியூசிக்கல் மெகா ஹிட் மூவி )


கதை  சரி  இல்லைங்க  சார்  அதான்  படம்  ஓடலைனு  யாராவது  சொன்னா  அதை  நம்பாதீங்க . கதையே  இல்லாம  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆன  படங்கள் பல  உண்டு . உதா= பருவ ராகம்  ,  தென்றலே  என்னைத்தொடு  . இந்த  ரெண்டு  படத்துலயும்  கதை இலாகா  அப்டினு  ஒண்ணு  தேவையே படலை . பாடல்கள்  இசை  செம  ஹிட்டு   அந்தப்பாடல்களை  ஷூட்  பண்ணிட்டு  போனாப்போகுதுனு  ஹீரோ  ஹீரோயின்  பேசிட்டு  இருக்கறது   டூ  விட்டுட்டுப்போறது  மறுபடி  பழம் விடறது  இதை எல்லாம்  எடுத்து  அட்டாச்  பண்ணினா  படம்  ரெடி . ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காது. மொக்கை  காமெடி  டிராக்  இருக்காது . சீரியலில்  வருவது  போல  அழுகாச்சி  சீன் அம்மா , அக்கா  அப்பா  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  எதுவும்  இருக்காது  ஜாலி  எண்ட்ட்ர்டெயின்மெண்ட்  ஒன்லி

 

 வ்ழக்கமா  எல்லாப்படங்களிலும்  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  கண்டுபிடிக்க  ரொம்ப  மெனக்கெடுவேன். இதுல  அதெல்லாம்  கிடையாது அதனால  பதிவு  சின்னதாப்போய்டுமே  என்ன  பண்ண?னு  யோசிச்சேன்  அதனால  படத்துல  ஹீரோவோட  அனுபவம்  அதே  சிச்சுவெஷன்ல  என்  அனுபவம்  எப்படி  இருக்குனு  ஒரு  கம்ப்பேரிசன்  மட்டும்  இருக்கும்

 

ஸ்பாய்லர்  அலெர்ட் ( ரொம்ப  முக்கியம் )

 

ஹீரோயின் ஒரு பெரிய  கம்பெனி எம் டி யோட  பொண்ணு . ஹீரோ  தமிழ்  சினிமா  இலக்கணப்படி  வேலை  எதுவும்  இல்லாத  வெட்டாஃபீஸ் . ஒரு  இண்ட்டர்வீயூவுக்குப்போறாரு அங்கே ஆல்ரெடி  வேலைக்கு  ஆள்  எடுத்துட்டாங்க  சும்மா  கண்  துடைப்புக்காகத்தான்  இண்ட்டர்வ்யூ  நடக்குதுனு  தகவல்  கிடைக்குது அதனால  இண்ட்டர்வ்யூல  கண்டபடி  பதில்    சொல்லி   அவங்களை  திட்டிட்டு வெளில  வர்றாரு  ஹீரோ

 

 ஆனா   என்ன  ஒரு  அதிசயம்? உங்க  துணிச்சல்  போல்டுநெஸ்  எல்லாம்  பிடிச்சிருக்குனு  வேலை  குடுத்துடறாங்க

 

நிஜ  வாழ்க்கைல டெபாசிட்  கட்டு  விஐபி யாராவது  தெரியுமா? மினிமம்  5   வருசம்  வேலைல  இருக்கனும் ம் 25  வயசான  ஆளுக்கு 52  வருச அனுபவம் இருக்கனும்,  அக்ரீமெண்ட்ல  சைன் பண்ணுனு  உயிரை  எடுப்பாங்க

 

ஹீரோயின்  கார்  வழில  ரிப்பேர்  ஆகிடுது . ஹீரோக்கு ஒரு  வேலையும்  தெரியாது  ஆனா  மெக்கானிக்கால  கூட  பார்க்க  முடியாத  ரிப்பேரை  எல்லாம்  இவர்  பார்த்துடறாரு. 10 நிமிசத்துல  கார்  ரெடி.

 

 இப்போ  ஹீரோயின்  நினைக்குது , சாதா  காரையே  இவ்ளோ பிரமாதமா  ரிப்பேர்  பார்க்கறானே  இந்த  ஆளைக்கட்டிக்கிட்டா  நம்ம  உடம்பு ல எதுனா  ரிப்பேர்  ஆனாக்கூட   டாக்டர்  கிட்டே  போகத்தேவையே  இல்லாம  நம்மை ரெடி  பண்ணிடுவான்னு  நினைக்குது  லவ்வும்  பண்ணுது  ஆனா  வெளில  சொல்லலை

 

நிஜத்துல  இந்த  மாதிரி  பணக்காரப்பொண்ணுங்க  எல்லாம்  நம்மை  கண்டுக்கவே  மாட்டாங்க .  அற்ப  மானிடப்பதரே  அப்டிங்கற  எள்ளல்  அவங்க  பார்வைல  இருக்கும்

 

 நம்ம  வாழ்க்கைல  பொதுவா  பொண்ணுங்க  காதலை  சொல்ல  தேர்ந்தெடுக்கும்  இடம்  கோவில்தான்  எல்லாம்  ஒரு  செண்ட்டிமெண்ட் தான்  தெய்வ  சாட்சியா  சொல்லிட்டம்னா  நாளைக்கு  ஏதாவ்து  வில்லங்கம்னா  சாமி  பார்த்துக்கும்னு  ஒரு  நினைப்பு

 

ஆனா  இங்கே தான்  டைரக்டர்  தன்  புத்திசாலித்தனத்தைக்காட்றார். ஹீரோயின்  ஒரு அழகிய குணச்சித்திர  நடிகை, புதுமுகம்  வேற  சொன்ன  பேச்சைக்கேட்டாகனும். அவரை  கிளாமர்  காட்ட  வைக்கனும்  என்ன  வழி ? மேடம்  கதைக்கு  ரொம்ப  முக்கியமான  சீன்  இது  ஸ்விம்மிங்க்  பூல்ல தான்  நீங்க   லவ்வையே  சொல்றீங்கனு  அடிச்சு  விடறார்

 

 ஹீரோயின்  அதை  நம்பி  எல்லாப்படங்களிலுமே  சேலை  மட்டும்  கட்டி  கண்ணியமான  தோற்றத்தில்  உலா  வரும் ஒளிக்கதிரா பிற்காலத்தில்  இருந்தவங்க  கிளாமரா   ஸ்விம்  சூட்  போட்டுட்டு   நீச்சல்  அடிச்சுட்டு  இருக்கு

 

 ஹீரோ ஒரே  ஒரு  ஜட்டி  மட்டும்  போட்டுக்கிட்டு  (  ஏன்னா  சென்சார்  பிராப்ளம்  வருமில்ல ?)  அந்த  நீச்சல்  குளத்துக்கு  வர்றாரு. இதுதான்  தக்க  தருணம்னு  ஹீரோயின்     லவ்  யூ  சொல்லுது

 

அங்கே  ஒரு  பாட்டு . படத்தை  பார்க்கும்போது  ந்ம்ம  பாட்டு என்ன  சிச்சுவேஷன்ல  எப்படி  ஷூட்   பண்ணி  இருக்காங்கனு  பார்த்தா  கவிஞர்  தற்கொலையே  பண்ணிக்கனும், ஏன்னா  பிர்மாதமான  மெலோடி  சாங்  ஆனா  படம்  பிடிச்சது  கிளாமர்  டிரஸ்ல

 

இப்போதான்  ஸ்டோரி  டிஸ்கஷன்  பண்ணிட்டு  இருந்த  க்ரூப்க்கு  ஒரு  டவுட்  படத்துலதான்  வில்லனே  இல்லையே  எப்படி  இதுக்குப்பின்  கதையை  ஓட்டறது ? இப்டியே  போனா  நம்மை  ஓட்டுவாங்களே?அதனால  ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  மாட்டிக்கற  மாதிரி  ஒரு  மொக்கை  சீன்


 ஹீரோ  ஆஃபிஸ்  ல    கூட  ஒர்க்  பண்ற  2  பேரு   நாம  பிரைவேட்  ட்யூசன்  செண்ட்டர்  போற  மாதிரி  பிரைவேட்  காபரே  டான்ஸ் பார்ட்டிக்கு  போறாங்க  ஹீரோ  சும்மா  துணைக்குப்போறாரு 


இதுக்கு  ஏன்  தண்டமா  காசை  செலவு  பண்றாங்கனு  தெரில   சென்னிமலை  தேர்  திருவிழாவில்  வருசா  வருசம்  கரகாட்டம்  ஒயிலாட்டம்  நடக்கற  மாதிரி  எல்லா  கிராமங்களீலும்  இப்டி  டான்ஸ்  ப்ரோக்ராம்  நடக்குமே?


 அந்த  டான்ஸ்  மேட்டர்ல  போலீஸ்  ரெய்டு  வருது  ஹீரோ  மாட்றாரு  ஹீரோயின்  கோவிச்சுக்குது . ஒரு  பாட்டுப்பாடி  சமாதானப்படுத்திடறாரு


 நிஜ  வாழ்க்கைல  லவ்வர்  கோவிச்சுக்கிட்டா  சமாதானம்  ஆக  2  வருசம்  ஆகும்  சம்சாரமா  இருந்தா 6  மாசம்  கெஞ்சிட்டு  இருக்கனும் 


அடுத்ததா  ஒரு  ட்விஸ்ட். ஹீரோ   வீட்டில்  பாத்ரூம்ல   வேற  ஒரு  பொண்ணு  குளிச்ட்டு  வெளில  வர்றதை  ஹீரோயின்  பார்த்துடுது.  அவங்க  வீட்டு  பாத்ரூம்ல்  த்ண்ணி  வர்ல  போல . உடனே  ஹீரோயின்  சந்தேகபப்டுது


 இந்த  இம்சையே  வேணாம்னு  ஹீரோ  வேலையை  ரிசைன்  பண்ணிட்டு  வேற  ஊர்  போறார்  அங்கே  ஒரு  அபார்ட்மெண்ட்    மேனேஜர்  வேலை  கிடைக்குது


அங்கே  ஒரு  பொண்ணுக்கு  சைக்கிள்  ஓட்டக்கத்துக்குடுக்கறார், இன்னொரு  பொண்ணுக்கு   வேற  என்னமோ  கத்துத்தர்றார்  ஹீரோயின்  அங்கே  வருது . ஹீரோயினை  வெறுப்பேத்த  ஒரு  பாட்டு 


நிஜ  வாழ்க்கைல  இந்த  மாதிரி  நாம  கத்துத்தரலாம்னா  பொண்ணோட  அண்னனோ  அப்பாவோ  முட்டுக்கட்டை  போட்டுடுவாங்க 


 க்ளைமாக்ஸ் . ஹீரோயினுக்கு   வேற  ஒருவர்  கூட  மேரேஜ்னு  பத்திரிக்கை  வருது  அடிச்சுப்பிடிச்சு  ஹீரோ  அங்கே  போறார்


 பார்த்தா  ஹீரோயின்  செட்டப் இதெல்லாம ,  நிஜ  வாழ்வில்  நாம  இருந்தா  அந்த  கல்யாண  மண்டபத்துக்கு  ஒரு   ஃபோன்  அடிச்சு  இன்ன  டேட் ல  இன்னாருக்கு  மேரேஜா?னு  கேட்டா  ஒரு  ரூபாய்  செலவுல  வேலை  முடிஞ்சுது 


  ஹீரோவா  மோகன் . திருப்பதி  லட்டு  மாதிரி  புதுமுக  ஹீரோயின்  , ஜிலேபி  மாதிரி  ரசகுல்லா  மாதிரி  எக்ச்ட்ரா  2  பொண்ணுங்க  இவங்க  கூட  ஜாலியா  கட்டிப்பிடிச்சு  டூயட்  பாட  சம்பளம்  வேற  நல்லா  இருங்க   சார்       ( வயித்தெரிச்சலோ  பொறாமையோ  இல்லை  , ஒரு  ஆற்றாமைதான் )  


 ஜெயஸ்ரீ  புதுமுகம்  அறிமுகம்  பிங்க்  கலர் தேகம்  உதடு  நிறைய  சிரிப்பு  கூந்தல்  நிறைய  மல்லிகைப்பூ   இவர்  ஒரு  புன்னகை  குடோன்  எல்லா  சீன்களிலும்  சிரிச்ச  முக்மா  வருவார்  புன்னகை  அரசி  கே  ஆர்  விஜயா  புன்னகை  இளவரசி  சினேகா  எல்லாம்  பின்னால  நிக்கனு,ம் 


  தேங்காய்  சினிவாசன்  வெ  ஆ  மூர்த்தி  காமெடிக்கு .  

 படத்துல  வில்லன்  இல்லை 

 ஒளிப்பதிவு  பாடலக்ள்  இசை  எல்லாம்  செமயா  இருக்கும் 



  ஹிட்  சாங்க்ஸ்  லிஸ்ட் 


1   புதிய  பூவிது  பூத்தது  இளைய  வண்டுதான்  பார்த்தது 


2  கவிதை  பாடு  குயிலே  குயிலே  இனி  வச்ந்தமே 


3  தென்றல்  வந்து  என்னைத்தொடும் ஆஹா  சத்தம்  இன்றி  முத்தம்  இடும் 


4  கண்மணி  நீ  வரக்காத்திருந்தேன்  ஜன்னலில்   பார்த்திருந்தேன் 


5  ஏம்மா  அந்தி  மயக்கமா? 


6  என்னாங்க  மாப்பிள்ளை  நலம்  தானா?


  சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்தப்படத்தைப்பார்க்காதவங்க  பெரும்பாலும் இருக்க  முடியாது   அப்படி  யாராவது  அப்படி ஒரு  பாவம்  பண்ணி  இருந்தா  காசி  ராமேஸ்வரம்  போறதுக்குப்பதிலா  இதைப்பாருங்க   ஜென்ம  சாபல்யம்  அடைவீர்கள்   ரேட்டிங்   2/. 75 ? 5   (   ஜெயஸ்ரீ  சிரிப்புக்கே 4 / 5  தரலாம்னு  யாரும்  சண்டை  போட  வேண்டாம்) 

0 comments: