சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிங்க எல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க.முதல் பாவம் புகழ் அபிலாஷா நடித்த கானகசுந்தரிக்குப்பிறகு ரிலீஸ் ஆகி இருக்கும் அஜால் குஜால் படம் தான் இந்த தேவலீலை,கதை இல்லாத படம்தான்,ஆனா சீனுக்காக! பார்த்துத்தொலைக்க வேண்டி இருக்கு.
. கதையோட ஒன்லைனை கேட்டா அசந்துடுவீங்க,குருவிடம் போர்க்கலைகளை கற்கும் வில்லங்க சீடன் குருவையே கொல்கிறான்.இறக்கும்போது ஒரு தேவ ரகசியத்தை சொல்லிவிட்டு இறக்கிறார் குரு.அதாகப்பட்டது கிழக்கு,மேற்கு,வடக்கு என 3 திசைகளிலும் 3 ஃபிகர்கள் உண்டு.குறிப்பிட்ட 3 பேரையும் வெர்ஜினிட்டி மைனஸ் செய்தால்(அதாங்க கன்னி கழித்தல்)உலகையே வெல்லும் சக்தி கிடைக்குமாம்.அதற்குத்துணையாக ஒரு சீடனையும் கூட்டிகொள் என்கிறார் குரு.சிஷ்ய வில்லன் 3 பேரை அடைந்தானா ,மேட்டரை முடித்தானா என்பதை வெண் திரையில்(நீலத்திரை)காண்க.

இந்த மாதிரி டப்பா படத்துக்கு எதெல்லாம் தேவை இல்லை?
1.காஸ்ட்டியூம் டிசைனர்(உடையே இல்லாத படத்திற்கு எதற்கு உடை அலங்கார நிபுணர்)
2.பாடல்கள்,அவுட்டோர் செலவு
3.திரைக்கதை (திரைல சதை தெரிஞ்சா போதாதா?)
நல்ல கலரான பொண்ணுங்க 4 பேரை ரூ 10000 சம்பளத்துக்கு பேசி(கட்டிட வேலைக்கு சித்தாளு மாதிரி)கூட்டிட்டு வந்து அவங்களை அருவிலயோ பாத்ரூம்லயோ அரை மணி நேரம் குளிக்க விடுவது,
ஏய்,ம்ம்,ஆஆ என பேக்கிரவுண்ட் ம்யூசிக் சேர்த்த வேண்டியது ,அட்டகாசமான போஸ்டர் ரெடி பண்ண வேண்டியது, சீன் படம் ரெடி.
படத்தோட டோட்டல் பட்ஜெட்டே 2 லட்சம்தான் இருக்கும்.வசூல் அள்ளிக்குதே.
இதுல என்ன காமெடின்னா இந்தப்படம் ஒரு பீரியட் ஃபிலிம்.400 வருடங்களூக்கு முன்பு நடக்கும் கதை.பாத்திரங்கள் அனைத்தும் செந்தமிழில் பேசி கொல்கிறார்கள்.
A

படத்தின் ஆண்ட்டி ஹீரோ சுத்த விவரம் கெட்டவனாக இருக்கிறான்.(ர்).நினைத்த நேரத்தில் நினைத்த வடிவம் எடுக்கும் மந்திர சக்தி உள்ள அவன் பெண்களை அடைய அவ்ர்கள் காதலனாகவோ,கணவனாகவோ உரு மாறி 5 நிமிஷம் கட்டிப்பிடிக்கிறான்,ஆஹா சீன் கன்ஃபர்ம் என்று துள்ளும்போது ஒரிஜினல் உருவத்துக்கு மாறி தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறான்.இன்னு ம் 10 நிமிஷம் அப்படியே அதே தோற்றத்தில் இருந்தால் மேட்டர் ஓவர்.
அடுத்த காமெடி ஒரு முனிவர் காட்டில் தவம் செய்கிறார்,அவருக்கு 75 வயசு இருக்கும்,அவர் மனைவிக்கு 17 வயசாம்.என்ன கொடுமை சார் இது?காமெடிக்குள் காமெடி 17 வயசு என் முனிவர் சொல்லும் பார்ட்டிக்கு 36 வயசு இருக்கும்.
4 ஃபிகர்களில் ஒன்றே ஒன்று தான் தேறுகிறது.இளவரசியாக வருபவர்.அஞ்சரைக்குள்ள வண்டி அஞ்சலா மாதிரி பார்ட்டி செம கலரு.மத்ததெல்லாம் 10 பைசாவுக்கு தேறாது.படு திராபை.
4 லேடீஸுக்கும் அருவிக்குளியல் உண்டு.400 வருடங்களுக்கு முன்பே சோப் கண்டுபிடித்து விட்டார்களா என்ன?

குரு கூறிய கண்டிசனை சொல்ல மறந்துட்டனே.வில்ல சிஷ்யன் 3 ஃபிகரயும் அவர்கள் சம்மதம் இல்லாமல் தொடக்கூடாது(,சம்மதம் சொன்னாலே காத தூரம் ஓடிக்கொள்ளும்படிதான் அதுங்களும் இருக்கு)
அநேகமாக ஹீரோதான் ப்ரொடியூசராக இருக்கும்.அவர் சவுர்யத்துக்கு வர்றாரு ,போறாரு,பொண்ணுங்களோட குஜாலா இருக்காரு.
இவ்வளவு கேனத்தனமான டைரக்ஷனை என் 100 வருஷ(?!) சர்வீஸ்லயே பார்த்ததே இல்லை.ஒளிப்பதிவு மகாமட்டம்.(இந்த மாதிரி படத்துக்கு அதானே முக்கியம்)பிரபாகரன் எனில் நிறைய பேர் காதல் அரங்கம் எனும் வேலுபிரபாகரனின் காதல் கதை கொடுத்த நாத்திகவாதி பிரபாகரன் என்று நினைத்து விட்டனர்.யாரும் ஏமாறி விட வேணாம்.அவர் வேறு ,இவர் வேறு(அப்பாடி,என்னே ஒருசமூக அக்கறை)
படம் பார்த்து வெளியே வ்ந்தவர்கள் திட்டிக்கொண்டே போனார்கள்.ரொம்ப எதிர்பார்த்து வந்திருப்பார்களோ?
சரி விடுங்க அடுத்த படத்துல பார்த்துக்கலாம்(சீட்டாட்டத்துல பணம் இழந்தவன் அடுத்த ஆட்டத்துல விட்டதை பிடிச்சுடுவேன்னு சொல்றதில்லையா?அது மாதிரி,நம்பிக்கைதாங்க வாழ்க்கை.(மெஸேஜ்)
A--