Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Monday, July 02, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 13

1 . உங்கள் முதல் பதிவு எப்போ போட்டிங்கனு ஞாபகம் இருக்கா ? அந்த பதிவுக்கு எத்தனை பேர் கமெண்ட்ஸ் போட்டாங்க ? அதுல மறக்கமுடியாத கமெண்ட்ஸ் எது ?(உங்க ப்ளாக் ஓபன் பண்ணி பார்காமசொல்லணும் )


ஜூலை 17, 2010 .. ஏன்னா அதுதான் என் முத போஸ்ட்.. என்ன தர்ம சங்கடமான சூழ்நிலைன்னா முத போஸ்டே என் நண்பர் பாடல் எழுதிய படம்.. ஆனா படம் டப்பா.. டைட்டில்ல விருந்தாளி - அபாயம் போகாதே -ன்னு வெச்சாச்சு.. ராங்க் செண்ட்டிமெண்ட்.. நிறைய பேரு அவ்ளவ் தான் அட்ரா சக்க ஊத்திக்கும்னாங்க.. எனக்கும் ஒரு ஒரத்துல பயம் இருந்தது.. ஆனாலும் அப்படி ஏதும் நடக்கலை.. பாடல் ஆசிரியர் திரு முருகன் மந்திரம்.. அவருக்கு மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருந்திருக்கும். கமென்ட்ஸ் போட்டது நல்ல நேரம் சதீஷ்னு நினைக்கறேன்.. யாருமே கமெண்ட் போடாததால நான் தான் அவருக்கு ஃபோன் பண்ணி கமெண்ட் போடச்சொன்னேன் ஹி ஹி 


2 .உங்கள் தந்தையை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்கள் அந்த பதிவை படித்து உங்களை யாராவது பாராட்டிய அனுபவம் இருந்தால் சொல்லுங்க ?


எல்லாருக்கும்  அப்பா இருக்கு, அப்பா பற்றிய நினைவுகள் இருக்கு.. ஆனா நான் என் அப்பா பற்றி எழுதுனதும் ஏகப்பட்ட பாராட்டு,.,. காரணம் நான் சீரியஸா எதுவும் எழுதுனதே இல்லை.. பெரும்பாலும் காமெடி தான் மொக்கை தான்.. அதனால அவங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சிருக்கலாம்.. மும்பை பிரகாஷ், லண்டன், இலங்கை போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் அதற்கு பாராட்டு தெரிவிச்சாங்க.. மனசுக்கு மகிழ்ச்சி.. அப்பாவுக்கு மரியாதை.. எழுத்துக்கு ஒரு நிறைவு..


3 . உங்களிடம் கணினியும் ,இணய இணைப்பும் இல்லை என்று சொல்லி இருந்தீர்கள் உங்கள் அலுவலக கணினியில்தான் பதிவுகள் ,டவிட்கள், போடுகிறீர்கள், இது உங்கள் மேலதிகாரிக்கு தெரியுமா ? உங்கள் சக ஊழியர்கள் உங்கள்பதிவை படிப்பார்களா? உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்கள் முதலாளிக்கு நன்றி சொல்லி இருகிறீர்களா ?



பழைய ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு தெரியும்.. புது ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு  தெரியாது.. அடிக்கடி நான் மொபைல்ல பிஸியா இருக்கறதை பார்த்து அவங்க ஏதோ லவ் மேட்டர்னு அவங்களுக்குள்ளேயே  சிரிச்சுக்குவாங்க .. நன்றி- மனசுக்குள்ளேயே சொல்லிக்குவேன்..


4 .இந்த பதிவை போட்டு இருக்க கூடாதுன்னு நினைச்ச பதிவு எது ?


நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும்.. ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 4 ரெண்டில் சொன்ன கருத்துக்களில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. என் மனசுல பட்டதை பகிர்ந்தேன்.. அது தேவை அற்ற மனக்கசப்புகளை கொண்டு வந்தது.. இனி ஜாக்கிரதையா இருப்பேன்./. சொல்வதெல்லாம் உண்மையா இருக்கனும் அதே சமயம் எதை சொல்லனுமோ அதை மட்டும் தான் சொல்லனும்



5 .மறைக்காமல் சொல்லுங்க உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம்தானே ??


என் தளம் பெண்களுக்கானதல்ல... பெரும்பாலான விஷயங்கள் ஆண்களை குறி வைத்தே எழுதப்படுகின்றது .. ஆனா  பெண்களும் படிக்கும் தரத்தில் தான் இருக்கும்.. பதிவு போட்டதும் ஏதாவது கண்டனம் வந்தா சர்ச்சைக்குரிய லைனை திருத்திடுவேன்


6 . சகபதிவர்கள் பதிவை படிப்பதுண்டா , அவைகளில் பிடித்த பதிவர் &பதிவு ஒன்றை சொல்லவும் 


தினமும் 5 பதிவாவது படிப்பேன்.. கும்மாச்சி, தமிழச்சி,டாக்டர் ராஜ் மோகன், மங்கை,மெட்ராஸ் பவன் சிவக்குமார்



7 . உங்களை கலாய்ப்பவ்ர்களை திட்டிதீர்ப்பிர்களா? இல்லை ரசிப்பீர்களா ?


ரசிப்பேன்.. வரம்பு மீறாதவரை 


8 .தயவு செய்து ஜிகிடி ,பிகிடிக்கு அர்த்தம் சொல்லவும் ?


ஜிகிடி பிகிடிக்கெல்லாம் அர்த்தம்   கிடையாதுன்னு ஆயிரம் தடவை சொல்லீட்டேனே?


9 .முகநூல் , ட்விட்டர்,ப்ளாக்  எது ரொம்ப பிடிக்கும் ?


பிளாக் தான் முதல்ல  எண்ட்டர் ஆனேன்.. மார்க்கெட்டிங்க்காக ட்விட்டர், ஃபேஸ் புக் வந்தேன்.. ஆனா ட்விட்டர் தான் செம ஜாலி



10 . உங்கள் முகநூல் ,ட்விட்டர் கமெண்ட்ஸ் களுக்கு நீங்கள் பதில் சொல்வது அரிது இது ஏன் ? வேலைபளுவா ? இல்லை நிராகரித்தலா ?


 எனக்கு கிடைக்கற டைம் ரொம்ப கம்மி.. பதிவு டைப் பண்ணனும், சினிமா பார்க்கனும், வசனத்தை மறக்காம நினைவு வெச்சுக்கனும். இந்த பிசில ரிப்ளை தர டைம் இல்லை சாரி


11 . இன்னும் நிறைய  கேள்விகள் இருக்கிறது கேட்க அனுமதி உண்டா ?


கேளுங்க , கேளூங்க  கேட்டுக்கிட்டே இருங்க.  அப்புறம் நான் எப்படித்தான் பதிவை தேத்துவது?--

மேலே கண்ட கேள்விகள் அனைத்தும் Sasimohan Kumar உடையது



12. சினி பிரியன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்கீங்களே.  நமிதா வந்து ரிப்பன் வெட்டுனதுக்கு அப்புறம்தான் அதுல எழுத ஆரம்பிப்பீங்களாமே? நெசமா? - மெட்ராஸ் பவன் சிவக்குமார்


சினிமா சம்பந்தப்பட்ட மேட்டர்களை மட்டும் ஒரு தளத்துல தனியா தொடங்கலாம்னு ஆசைப்பட்டு அதை ரெஜிஸ்டர் பண்ணி வெச்சேன்.. அட்ரா சக்க விரைவில் இலக்கிய தளமாக மாறும்..  



13. காதலை  உங்களோட கண்ணோட்டத்துல நீங்க அதை எப்படி பார்க்குறீங்க?? (காதல் பற்றி உங்க கருத்து என்ன???)  - திரு எனும் சேலம் மேங்கோ சிட்டி பாய்


உண்மையான காதல் இன்னைக்கும் இருக்கு , ஆனா அளவில் குறைவா இருக்கு.. இன்னைக்கு கள்ளகாதல் தான் அதிகம் தென்படுது./.  உண்மைக்காதலுக்காக உயிரையே கொடுப்போம்னு எல்லாம் யாரும் வசனம் பேசரது இல்லை. பிராக்டிகல் லைஃப் வாழறாங்க.. கல்யாணம் ஆன பின்பு காதல் குறையக்கூடாது  .. உண்மைக்காதல்  என்பது உடலாலும், மனதாலும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருத்தல்




டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html

Saturday, June 30, 2012

அமெரிக்கத்தமிழ்த்திருவிழாவும்,சித்தோட்டு சிங்கம் சதீஷின் திருமண விழாவும்

a
சித்தோடு சதீஷ் தன் மனைவியுடன், மற்றும் உறவினருடன்








a



மேடையில் 5 பேர், அதுல 4 பேர் பார்வையும் ஒருவர் மேல். யார் அந்த வி ஐ பி?






a


சதீஷ் - சாப்பிட்டுட்டுத்தான் போகனும்.

. மீ - ஆல்ரெடி பந்தில அட்டெண்டென்ஸ் போட்டுட்டூட்டுத்தான் வர்றோம்..


நல்ல நேரம் சதீஷ் - நல்ல நேரம் முடியறதுக்குள்ள ஊருக்குப்போய் போஸ்ட் போடனும்


மிஸஸ் சதீஷ் - இந்த 3 பேரும் உருப்பட வாய்ப்பு கம்மி.. நம்ம வீட்டுக்காரரையாவது திருத்துவோம் ;-)




 a

முஹூர்த்தப்புடவையே 36,000 ரூபாயாம்

 யார் சொன்னது?

 பொண்ணே தான்



a

பந்திக்கு முந்து படைக்கு பிந்து.. யார் அந்த பிந்து?




அமெரிக்க தமிழ்த் திருவிழா 2012! வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறப்பெய்துவோம்!


Inline image 1
Inline image 2




ரு பிரமுகரை ஊரிலிருந்து அழைத்து விழா எடுப்பதே எத்தனைப் பெரிய காரியம்; எனும்பட்சத்தில் இவ்வளவுப் பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் பிரம்மிப்பையும் கூடுதல் எதிர்பார்ப்பையும் தருகிறது. திறனாக எல்லோரும் செயல்பட்டு' எண்ணற்றோர் முன்னிலையில் சாதனைக் குவியலாய்' இனிதே அமைந்து உழைப்பிற்குத் தக்க பெருவெற்றியாய் வரலாற்றில் நிலைத்திருக்கட்டும்.. இவ்விழா!

மிக வாழ்த்தும், தொடர் அறிவிப்பிற்குரிய நன்றிகளும்..

வித்யாசாகர்


நன்றி - தமிழ் உலகம்

Tuesday, June 26, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 12


Photo: I love my Indian Tradition ♥

share it if u like it :)
1. அட்ரா சக்க என பேர் வைக்கறதுக்குப்பதிலா  கொங்கா மக்கா என ஏன் வைக்கலை? - குட்டி சாகசன் 




முதல்ல கொங்கா மக்கா-ன்னுதான் வெச்சிருந்தேன்,நிறைய பேரு ஏன் அட்ரா சக்க அப்டினு வைக்கலாமே?ன்னு கேட்டாங்க.. அதனால மாத்திட்டேன்.. கோக்கு மாக்கா கேள்வி கேட்டே குழப்புங்கய்யா.. 




2. தினமும் 3 பதிவுகள் போடறீங்களே, உங்களுக்கு சலிக்கவே இல்லையா? -குட்டி சாகசன் 




இந்த கேள்வில ஏதோ உள்குத்து இருக்கு.. படிக்கறவங்களுக்கு சலிப்புன்னு அர்த்தம் வருது.. நல்லா கவனிங்க.. நான் தினமும் காலைல 5 டூ 6  ஜோக்ஸ் & ட்வீட்ஸ் போஸ்ட் போடறேன். மாலையில் ஒரு சினிமா விமர்சனம் போஸ்ட். நடுவே ஏதாவது அரசியல் போஸ்ட்,.. அதனால 3 வெவ்வேற பிரிவில் போடுவதால் படிக்கறவங்களுக்கு போர் அடிக்காதுனு நினைக்கறேன். எனக்கு பதிவு போடுவதில் இதுவரை சலிப்பு வந்ததில்லை. வந்தால் ஏன் போடறேன்?




 3. நீங்ககேட்க வேண்டிய மன்னிப்பு, தெரிவிக்க வேண்டிய வருத்தங்கள் ஏதாவது இன்னும் மிச்சம் மீதி பாக்கி இருக்கா? - சே செந்தில்குமார்




வாரா வாரம் சண்டே அன்னைக்கு சர்ச் போய் பாவ மன்னிப்பு கேட்கறாங்க, கோயில்க்கு வெள்ளிக்கிழமை போய் செஞ்ச தப்பெல்லாம் மன்னிச்சுடு சாமின்னு சொல்றாங்க.. சாமி இருக்கா? இல்லையா?ன்னு முழுசா தெரியாமயே அவங்க கிட்டே மன்னிப்பு கேட்கறப்போ தினமும் நாம பார்த்து பழகின மனிதர்களிடம் மன்னிப்பு கேட்பதால் என்ன தவறு?


 ஜாலியா கலாய்க்கறப்போ சில சமயம் சிலர்  மனம் புண் படும்படி ஆகிடுது.. அவங்க மனசு ஆறுதலுக்கு நம்ம மன்னிப்பு பயன் பட்டால் எத்தனை முறை வேணாலும் கேட்கலாம்.




 4. உங்கள் திரைப்பட விமர்சனக்களில் உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வாசிப்பவர்களை ஏன் நெளிய வைக்க வேண்டும்- J.P Josephine Baba,


நிறைய பேர் கேட்டாச்சு.. சாண்டில்யன் நாவல்களில் பக்கம் பக்கமா நாயகியின் வர்ணனை இருக்கும். அதை ரசிக்கறீங்க.. ஒவ்வொரு படத்திலும் ஹீரோயினை 4 லைன்ஸ் வர்ணிச்சா தப்பா?நெளிய வைக்காதே. பெண்களும் ரசிக்கும் வண்ணமே என் வர்ணிப்புகளும் ,கலாய்ப்புகளும் இருக்கும். லிமிட் தாண்ட மாட்டேனே? அப்படி இருந்தா சுட்டிக்காட்டுங்கள்.. வரிகள் அகற்றப்படும் 







5. பதிவு எழுத்து பற்றி உங்கள் திட்டங்கள் என்ன? - J.P Josephine Baba,

 1. சினிமா விமர்சனங்களில் பல முறை ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் கணிப்பு தவறி விடுகிறது. இதுவரை 6 படங்களுக்கு மட்டுமே துல்லியமாக மார்க்கை முன் கூட்டியே கணிக்க முடிந்தது,... அதை மாற்ற வேண்டும்.. சமீபத்தைய என் சறுக்கல் சகுனி விமர்சனம்.. பல குறைகள் இருந்தாலும் படம் கம்ர்சியலாக சக்சஸ் தான் என எழுதி இருந்தேன், ஆனால் 90 % விமர்சகர்கள், பொதுமக்கள் பார்வையில் அது கடி ஆகி விட்டது.. இதை , இந்த ராங்க் ஜட்ஜ்மெண்ட்டை தவிர்க்க ஆசை


2.நகரங்களில் உள்ள டாப் டென் ஹோட்டல்கள் பற்றி ஒரு பதிவு போட்டேன். நல்ல வரவேற்பு பெற்றது, அது போல் மக்களுக்கு பயன் உள்ள வகையில் பதிவு போடனும்.. உதாரணமா ஒரு சினிமா விமர்சனம் அந்த கால கட்டத்தில் மட்டுமே படிக்கப்படும், ரசிக்கப்படும்.. ஆனா  எந்த காலத்தில் படிச்சாலும் யூஸ் ஆகற மாதிரி போஸ்ட்ஸ் போடனும்.. உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன








6 . பதிவு எழுதுவதின் நோக்கம் என்ன என்று தெரியலாமா? பதிவு எழுதுவதால் தாங்ககள் அனுபவிக்கும் மன மகிழ்ச்சி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,


பத்திரிக்கைகளில் ரிஜக்‌ஷன் பண்றது இப்போ அதிகம் ஆகிடுச்சு.. அதனால நம்ம படைப்பை வெளிக்கொணர பிளாக் அதிகம் பயன் படுது.  ஒரு மேகஜின்க்கு படைப்பை அனுப்பிட்டு வருமா? வராதா?  பிரசுரம் ஆகுமா? ஆகாதா? என காத்திட்டு இருக்கறதுக்கு ஆன் த ஸ்பாட் நாமளே எடிட்டரா இருந்து போஸ்ட் போடறது  ஒரு கிக்... மன மகிழ்ச்சி என்னன்னு பார்த்தா வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல வாசகர்கள் ஃபோன் பண்ணி பாராட்டுவதுதான்.. பத்திரிக்கைகளில் வரும் படைப்புகளுக்கு சன்மானம் கிடைக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட வாசகர்கள் பாராட்டு அதிக சந்தோஷம் தருது










7. பதிவு எழுதுவதால் தாங்கள் அனுபவிக்கும் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,



1.பத்திரிக்கைகள் இல்லாத அல்லது போய்ச்சேராத இலங்கை போன்ற தேசங்களில் கூட வாசகர்கள்  நமக்கு கிடைக்கறாங்க


2. அலெக்சா ரேங்க் நல்ல நிலைல இருந்தா பிற்காலத்தில் விளம்பரம் மூலம் வருமானம் வர வாய்ப்பு உண்டு


3. சினிமா விமர்சனம் போட்டதும் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஃபோன் பண்ணி தங்கள் கருத்துகளை தெரிவிக்கறாங்க.. நாம நேரில் பார்க்க முடியாத வி ஐ பி கள் அவங்களே தேடி வந்து பேசறது சந்தோஷம்,., சமீபத்தில் இயக்குநர்  மு களஞ்சியம், வெங்காயம் சங்ககிரி ராஜ்குமார் பேசினார்கள், மகிழ்ச்சி!







8. 80 வயது தாத்தா சி.பி செந்தில் எழுத போகும் ஒரு பதிவை இப்போது எழுதி பதிவிட இயலுமா?-
J.P Josephine Baba,



அது எப்படி முடியும்?இனிமே கிடைக்கப்போகும் அனுபவங்கள் என்ன? என எப்படி இப்போவே தெரியும்? வேணா ஒண்ணு செய்யலாம்.. 80 வயதில் எப்படி இருப்பேன் என கற்பனையா ஒரு பதிவு வேணா எழுதலாம்.. 


9.பயண தொடர்கள் எழுத வாய்ப்பு உண்டா?-J.P Josephine Baba,


எழுத  எனக்கும் ஆசை தான்.. ஆனால் அதற்குத்தடையாக இருப்பது என் உடல் நிலை தான்.. எனக்கு பஸ் பயணம் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை.. வாமிட் வந்துடும்.. எங்கே போனாலும் ரயில் பயணமே.. முன்னே மாதிரி இல்லை.. 40 நாட்கள் முன்னாலயே  ரிசர்வ் செஞ்சாதான் சீட் கிடைக்குது.. தட்கால் -ல கிடைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. ஆனாலும் இதை எல்லாம் மீறி பயணம் செஞ்சு கட்டுரை எழுத ஆசை தான்.. 








10. அடுத்தவர்கள் உங்களை விமர்சிப்பதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? -J.P Josephine Baba,

 விமர்சனங்கள் என்னைப்பற்றி , என் எழுத்தைப்பற்றி இருந்தால் கவலையே படமாட்டேன்.. ஏன்னா நானே பலரை கலாய்ச்சு இருக்கேன்,.. நண்பர்கள் ஆனாலும் சரி எதிரிகள் ஆனாலும் சரி.. என்னை யார் கலாய்ச்சலும்  அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு அந்தப்பதிவில் கமெண்ட்டும் போடுவேன்..

 ஆனா என்னை விட்டுட்டு சம்பந்தம் இல்லாம என் குடும்பத்தை பற்றி யாராவது எழுதுனா அது என் மனதை புண் படுத்துவதாக இருக்கும்.. அந்த பதிவில் கமெண்ட் போடுவதில்லை./.. பதிலுக்கு பதில் லாவணி பாடுவதில் தேவையற்ற மனக்குழப்பங்கள், கோபம் வந்து நிம்மதியை குலைக்கும் என்பதால் எதிர் பதிவுகளை தவிர்த்து விடுவேன்  





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 




டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

Tuesday, June 19, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 11

  1. பெண்களை பிகர் என்று அழைப்பது இழிவான வார்த்தைகள் என்று சில புலவர்களால்  குற்றம் சாட்டப்படுவது பற்றி...

வாங்க டாக்டர் ரியாஸ்..  அதுக்கு பதில் சொல்லி எனக்கு சலிச்சுடுச்சு. அதாவது பெண் என்றால் ஒரு மதிப்பும், மரியாதையும் மனசுல எழுவது  எல்லாருக்கும் பொதுவானது. அதனால ஒரு கிளுகிளுப்பை ஏத்திக்க , சும்மா ஜாலிக்கு ஃபிகர், ஜிகிடி, சில்ஃபான்சி  அப்டி கூப்பிடறது வழக்கம் தான். இது ஆல்ரெடி சின்னி ஜெயந்த், சந்தானம்  எல்லாரும் காமெடி டிராக்ல யூஸ் செஞ்ச வார்த்தைகள் தான்.. அப்புறம் டாக்டர். ரியாஸ். கடைசி வரை உங்க ஹாஸ்பிடல் ஃபிகர்ங்களை கண்ல காட்டவே இல்லையே? . 







2. உங்கள் பதிவுகளில் கிரந்தம் தவிர்க்கலாமே? உதாரணமாக இடீசல் இரீமா சென் ரசினி அசித் ஆலிவுட் ஆசுகார் இது போன்ற தூய தமிழ் சொற்களை நீங்கள் எழுதாதது ஏன் ?


தூய தமிழ் எனக்கு செட் ஆகாது.. நான் பேச்சு வழக்குத்தமிழுக்கு ரசிகன். தமிழ்ப்பிரியன் என காட்டிக்கொள்ள தமிழை கொலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நான் பேசறது , எழுதறது எல்லாம் சாதாரண மக்களுக்கு போய்ச்சேர்ந்தா போதும்.  ட்விட்டர் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை கீச்சு. இது என்னமோ மாதிரி இருக்கு. அதே போல் சிலர் துவிட்டர் என அழைக்கனும்கறாங்க. ரவுடி என்பதை சிலர் இரவுடி என்கிறார்கள். என்னது இரவு டி யா? என கிண்டல் பண்ணிடுவாங்க. .. அதனால் கிரந்தம். ம்ஹூம்.

அதெல்லாம் சரி.. இந்த கேள்வியை நீங்களா கேட்டீங்களா? இல்லை டி பி கேடி அண்ணனுக்கு ஆப்போசிட்டா ஒரு கேள்வி வேணும்னு வேணும்னே கேட்டீங்களா?



‎"சிகரெட்டை பற்ற வைத்தவரை தேசியவாதியாக கொண்டாடும் இந்த நாட்டில்,சுதந்திர தீயை பற்றவைப்பவர் என்றும் தீவிரவாதி தான்"

 3. இரண்டு வார்த்தையில் இரு நச் நடு நிசி கீச்சு சொல்லுங்களேன் 



1. மந்தரா -96 = 69...



2.  ஆர்யா ( 6 யா) + 9 தாரா = 69





4. இடுப்பை கிள்ளுவதால் இன்பம் என்ற சித்தாந்தம் பண்டை இலக்கியங்களில் உள்ளதா? 


உங்களுக்கு லொள்ஸ் ஜாஸ்தி.. இலக்கியம்னாலே எனக்கு அதிகம் தெரியாது.. இதுல பண்டைய இலக்கியம் வேறயா? அவங்கவங்க நிகழ்கால லவ்வர் அல்லது மனைவியை கிள்ளுனா இன்பம் தான். 



5. உண்மையா சொல்லுங்க இதுவரை எத்தனை லவ் லெட்டர்ஸ் எழுதி இருப்பீங்க..அதுல எத்தனை போஸ்ட் பண்ணீங்க எத்தனை அந்நியன் படத்தின் அம்பியை போல பொட்டிக்குள்ள பூட்டி வச்சு இருக்கீங்க ? ஒருவேளை அப்படி இருந்தால் அதை எப்போ உங்க ப்ளாகில் வெளியிடபோறீங்க  



நான் பிளஸ்டூ படிச்சப்போ  நிறைய பேருக்கு அவங்க காதலிக்காக லவ் லெட்டர்ஸ் எழுதி ஹெல்ப் பண்ணி இருக்கேன்.. அது ஆல்ரெடி கண்மணிக்கு ஒரு கடிதம்கற டைட்டில்ல இதயம் பேசுகிறது இதழில் தொடராக 7 வாரங்கள் வந்தது. விரைவில் பிளாக்கில் போடறேன் 






 6. சினிமா பற்றிய ஒரு கேள்வி..மம்முட்டி உதயநிதி  ஸ்டாலின் இருவரும் போட்டி நடனம் ஆடினால் யாருக்கு அதிகம் மார்க்ஸ் தருவீங்க 


மம்முட்டியை விட  உதய நிதி ஓரளவு சமாளிக்கிறார் . அதனால என் ஓட்டு உதய நிதிக்கே. . இதுல 2 சுய நலம் இருக்கு.. அவர் படத்துல காமெடி டிராக் எழுத வாய்ப்பு கேட்டிருக்கேன். இன்னொன்னு கலைஞர் அய்யா குடும்பத்தை எதிர்த்துக்கிட்டு சினி ஃபீல்டுல குப்பை கொட்ட முடியாது ரொம்ப சிரமம்.. 





 7. சிராக்கோ படத்துக்கு விமர்சனம் எழுதுவீங்களா? ஆவலுடன் ரசிகர்கள் 



இப்படி யாராவது உசுப்பேத்தி விட்டுடுங்க. நானும் மெனக்கெட்டு விமர்சனம் போடறேன். ஜாலியா படிச்சுட்டு நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வர்றப்போ  சி பி மோசமான ஆளு. கில்மா படத்துக்கு விமர்சனம் எல்லாம்  எழுதறான். அவன் கூட ஆரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது.. எந்த பெண்ணும் டி எம் ல கடலை போடக்கூடாதுன்னு மறைமுக மிரட்டல் உத்தரவு போடுங்க.. போங்கய்யா யோவ்.. நானும் உங்களை மாதிரி கமுக்கமா இருக்க முடிவு பண்ணிட்டேன்.. நோ கில்மா பட விமர்சனம் .


மேலே உள்ள 7 கேள்விகளையும் கேட்டு எனக்கு ஏழரையை கூட்டியவர் மதுரை பல் டாக்டர் ரியாஸ்.. 






8. உங்களது  வேலை நாளும், விடுமுறை நாளும் எப்படி கழியும்? விவரிக்கவும்.-

 திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 டூ 7.30 ஆஃபீஸ் டைம்.. சனிக்கிழமை ஆஃப் டே.  இதுல வாரா வாரம் வெள்ளி, சனி மட்டும் 4 படம் பார்த்து டைப் பண்ணி வெச்சுக்குவேன்.. சனி ஞாயிறு புது போஸ்ட் எதுவும் பெரும்பாலும் போட மாட்டேன். திங்கள் டூ வியாழன் 4 விமர்சனங்களையும் டெயிலி ஒண்ணா போடுவேன்.

ஞாயிறு ஃபுல் ரெஸ்ட்.. பாப்பாவைக்கூட்டிட்டு பார்க் , ஸ்விம்மிங்க் பூல், ஆறு அப்டி ரவுண்டிங்க்.. டி வி பார்ப்பேன்... அப்புறம் ஜனநாயகக்கடமை ஆற்றுவேன்.. ஐ மீன் சாப்பாடு, தூக்கம்.


9.உங்களுக்கு பிடிச்ச ஹீரோ மற்றும்ஹீரோயின் யார்? ஓப்பன் பதில் தேவை

- -திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம்


வழக்கமா எல்லா சட்டை பட்டனையும் போட்டிருப்பேன். இந்தக்கேள்விக்காக ஒரு பட்டனை கழட்டி விட்டுட்டேன். பிடிச்ச ஹீரோ - ரஜினி , கமல். பிடிச்ச ஹீரோயின்ஸ் அந்த டைம்க்கு யார்க்கு மார்க்கட்டு  நல்லாருக்கோ அதாவது  அந்தந்த காலகட்டத்துல யார் ஃபேமசோ அவங்க ரசிகன். லேட்டஸ்ட்டா அஞ்சலி..




10.விளையாட்டுக்காக இல்லை, நிஜமாவே நீங்க சி எம் ஆனா என்ன செய்வீங்க.. சீரியஸ் பதில் தேவை.. --திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


அரசியலுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்.. மக்கள் செல்வாக்கு உள்ள ரஜினி உட்பட பர் அதுல இறங்க யோசிக்கறாங்க.. அதனால அப்படி ஒரு கற்பனையே வேணாம்.. ஆனாலும் உங்க கேள்வியை நானே கொஞ்சம் மாத்தி போட்டு கேட்டு பதில் சொல்றேன்..



அதாவது அதி முக , திமுக போன்ற தீய சக்திகள் எதிர்காலத்தில் செல்வாக்கு இழந்து ஒரு புது ஆள் சி எம் ஆனா அவர் ஆக்கபூர்வமா என்ன செய்யனும்?


1. குஜராத் சி எம்மை நேர்ல சந்திச்சு மது விலக்கு கொண்டு வந்தும் எப்படி நிர்வாகம் பண்ண முடியுது?ன்னு கேட்டு அதன்படி தமிழ் நாட்டிலும் மதுவிலக்கு கொண்டு வந்து ஆக்க பூர்வமான பணிகள் செய்யனும்..

2. இலவச திட்டங்களை முற்றிலும் ஒழிக்கனும்....ஓ சி அப்டின்னாலே ஒரு இளக்காரம் வந்துடும்..

3. விவசாயிகளுக்கான திட்டங்கள் நிறைய கொண்டு வரனும்.. நாட்டிலேயே அதிக சம்பாத்தியம் விவசாயிக்கு என்ற நிலை வந்தால் விளை நிலங்கள் விலை போவது தடுக்கப்படும்.. விவசாயத்துக்கு ஆள் இல்லாம தடுமாறும் அவல நிலை வராது..

4. தனியார்  பள்ளி ஆசிரியை ரூ 1800 சம்பளம் வாங்கி செய்யும் அதே வேலையை அரசு பள்ளி ஆசிரியர் ரூ 30000 சம்பளம் வாங்கி செய்யறார்,... அஎஅசு பணீ, தனியார் பணி இவற்றுக்கான சம்பள விகிதம் பல மடங்கு வித்தியாசம் இருப்பதை மாற்றனும்..


5. தமிழில் டைட்டில் இருந்தால் வரி விலக்கு என்ற கேனத்தனமான திட்டத்தை ரத்து செய்யனும்.. ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கறதை கட்டுப்படுத்தி அதில கடும் வரி விதிக்கப்படனும்


6. தீவிரவாதம் தலை தூக்காம பார்த்துக்கனும்.. எம் எல் ஏ , க்களுக்கான பவரை குறைக்கனும்.. அவங்களை கண்காணிக்கனும்


7. சி எம்மாக வருபவர் குடும்பஸ்தராக இருக்கக்கூடாது... வாஜ்பாய் போல் பிரம்மச்சாரியாக ,காமராஜர் போல் எளிமையானவராக ,நடு நிலைமை வகிப்பவராக இருக்கனும்..

தயவு செய்து .... டாலர் மட்டும் பிச்சை போடவும்.....
மன்னிக்கவும் ......இந்திய பணம் வாங்க இயலாது......

நமசிவாயம் தில்லை அருள்...


11. சில பதிவுகளில் ஓடி போவது, கள்ளகாதல் பதிவுகள் எழுதி வருகின்றீர்கள். இதன் தாக்கம் என்ன ? உலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் உள்ள போது தங்கள் ஆக்கபூர்வமான சிந்தனையை ஏன் இந்த மாதிரி செய்திகளில் செலுத்துகின்றீர்கள்?

அ) கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்வீர்கள்? -
J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)


உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு.. கேள்வியின் முதல் வார்த்தை என்ன? சில பதிவுகளில்..... அவ்ளவ் தான் மேட்டர் ஓவர்... பல பதிவுகளில் நல்ல விஷயங்கள் சொல்லி வர்றேனே?பொதுவா மக்கள் மத்தியில் 1000 நல்ல விஷயம் சொன்னா அது அவங்க கண்ணுக்குத்தெரியாது.. ஒரு கெட்ட விஷயம் சொன்னா உடனே பளிச்னு தெரியும்.. நான் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டித்தரும் காக்டெயில் பிளாக்கரா ஆக ஆசை ..அவ்ளவ் தான்

கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் ஃபோனை கட் பண்ணிடுவேன் ஹி ஹி 


12. கில்மா என்ற சொல் வரலாறு தெரிந்த கொள்ள இயலுமா? கில்மா சொல்லும் உங்களுக்கும் ஏன் இந்த நட்பு? -J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)
செக்ஸ், பால் உறவு, உடல் உறவு போன்ற வார்த்தைகள் சில சமயம் யூஸ் பண்ண வேண்டி வருது.. அப்போ கூச்சமா இருக்கும்.. ஏன்னா  என் அக்கா பசங்க என் பிளாக்கை படிக்கறாங்க.. அதனால பூடகமா இருக்கட்டும்னு கில்மாவை யூஸ் பண்றேன். கூல் மா ..... டோண்ட் திங்க் தட் கில்மா .


13. உங்கள் பதிவுகளில் அச்சம் நாணம் மடம் அற்ற பெண்கள் படங்களாக போடுவதின் பின்னனி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?-J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)

 போச்சுடா.. ஒரு முடிவோட தான் இருக்கீங்கனு நினைக்கிறேன்.. நான் போடும் சினிமா விமர்சனங்களில் , சில சினிமா பேட்டிகளில் அபூர்வமான கிளாமர் ஃபோட்டோக்களை போடுவது ஒரு ரிலாக்ஸேஷனுக்கு... எழுத்தில் ஏதாவது குறை இருந்தாலோ, அல்லது போர் அடிக்கற மாதிரி இருந்தாலோ அந்த ஸ்டில்ஸ் சரி பண்ணிடும்னு ஒரு நப்பாசை.. இப்போ கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வர்றேன்.. 


சென்னையில் 1006 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா.
நேத்து நைட் மட்டும் 2012 பேர் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருப்பாங்க @ 2012 வது வருசம்



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


http://www.bestactress.info/wp-content/uploads/2011/07/kajal-agarwal-hot-saree-singam-movie.jpg


Monday, June 11, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 10

1. கடவுள் உங்க முன் தோன்றி, உன்னை டைரக்டர் ஆக்குறேன். ஆனால், நீ பிளாக், ட்விட்டர் எழுதுறதை விட்டுடனும்ன்னு சொன்னால் என்ன செய்வீங்க?

என்னோட லட்சியமே டைரக்டர் ஆவதுதான்.. ஆனா அதுக்கான முறையான முயற்சிகளையோ, பயிற்சிகளையோ நான் எடுக்கலை.குடும்ப சூழலின் காரணமா என்னால ஈரோட்டை விட்டு சென்னை போக முடியாத சூழல்.. அப்படி இருக்கும்போது  நீங்க சொன்ன மாதிரி ஒரு சம்பவம் நடந்தா பிளாக்கை விட்டுடத்தயார்..


இந்தகேள்வில ஏதாவது உள்குத்து இருக்கா? என்னை துரத்தும் பிளானா? எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொன்னேன்..





2. இவ்வளவு பதிவுகள், ஜோக்ஸ் போடுறதால எப்படியும் அதை பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டியிருக்கும். அதனால், நீங்க உங்க சுற்றுப்புறத்தை கவனிக்க தவறும். அப்படி தவறியதால் இழந்தவைகள் எதாவது உண்டா?

சுற்றுப்புறத்தை, நாட்டு நடப்பை கவனிப்பதால் தான், அவற்றை உள் வாங்குவதால் தான் ஜோக்ஸ், கமென்ட்ஸ், ட்வீட்ஸ், பதிவுகள்  போட முடியுது.. திண்னைல உக்காந்து வெட்டி அரட்டை அடிக்கலை, டாஸ்மாக் போய் சரக்கு அடிச்சு ரோட்டோரம் கிடக்கலை.. இழந்தைவைகள் என ஏதும் இல்லை.. குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்கிட்டு தான் இருக்கேன்.. இல்லைன்னா குடும்பம் நம்மை ஒதுக்கிடுமே?



3. வெள்ளிக்கிழமை 11 மணிக்கு நீங்க தியேட்டர்ல இருப்பீங்கன்னு உலகம் அறிந்த ரகசியம். உங்க நெருங்கிய உறவுகள், முக்கியமான வேலை இருக்கு கண்டிப்பா வரனும்ன்னு கூப்பிட்டால் சினிமா அல்லது உறவு இதுல எதுக்கு முன்னுரிமை கொடுப்பீங்க.?


சினிமாங்கறது ஜஸ்ட் எண்ட்டர்டெயிண்ட்மெண்ட்.. உறவுகள் என்றென்றும் எண்ட்டயர்லி அட்டாச்மெண்ட்.. உறவுக்குத்தான் முக்கியத்துவம். ஆனாலும் என்னை நன்கு புரிந்த உறவுகள் என் சுபாவம் உணர்ந்து வெள்ளிக்கிழமைகளில் நெருக்கடி கொடுப்பதில்லை


4. என்னதான் நாம விரும்பி ஒரு செயலை செய்தாலும் சில சமயங்களில் அலுப்பு தட்டும். இல்லைன்னா அடுத்தவங்க விமர்சனத்தால மனசு பாதிச்சு அந்த செயலை ஒத்தி போடுவோம். அதுப்போல பிளாக்கரா ஏன் ஆனோம்ன்னு நீங்க மனசு தளர்ந்து இனி பதிவெழுதக் கூடாதுன்னு நினைச்ச தருணம் இருக்கா?

ஆனானப்பட்ட காந்தியே எதிர்மறை விமர்சனங்களை சந்திச்சவர் தான்.. அதனால என்னைப்பற்றிய தாக்குதல்களை நான் பெரிதா எடுப்பதில்லை.. பதிவுலகில் ஜாக்கி சேகருக்கு அடுத்த படியா தாக்கப்பட்ட தனி மனிதன் நான் தான்.. அவரைத்தாக்கி எழுதப்பட்ட பதிவுகள் இதுவரை 34.. என்னை தாக்கி எழுதப்பட்டவைகள் 28.. என்னை அதிகம் புரிந்து கொள்ளாத, என்னுடன் பழகாத நண்பர்கள் தாக்கும்போது எனக்கு பாதிப்பு இருக்காது


ஆனா  என் கூடவே பழகி, என்னைப்பற்றி நன்கு புரிந்த நண்பர்கள் தாக்கும்போது வருத்தம் இருக்கும்.. ஆனாலும் நண்பர்களை எதிர் தாக்குதல் செய்வதில்லை.. இது என் அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்


5. நம்ம செய்யுற தொழிலை வச்சுதான் நமக்கு மதிப்பு. டீச்சர், போலீஸ்ன்னா பயம், டாக்டர் இன்ஜினியர்ன்னா மரியாதை. அதுப்போல 18+ பட விமர்சனம் போடுறதால உங்களுக்குன்னு ஒரு மாதிரியான இமேஜ் இருக்கு(நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். சாரி சிபி சார்). நம்மளை ஏன் இப்படி எல்லோரும் வில்லனா பார்க்குறாங்கன்னு நீங்க நினைச்சு வருத்தப்பட்டதுண்டா? - ராஜி, வேலூர் ( மேலே உள்ள 5 கேள்விகளும்)

நல்ல கேள்வி. கில்மாப்படம் பார்க்காத ஆண்கள் யாருமே கிடையாது.. பெண்களும் சிலர் பார்க்கறாங்க.. ஆனாலும் அந்தப்பட விமர்சனங்கள் போட்டா எல்லாரும் கிண்டலாவும், கேலியாவும் தான் பார்க்கறாங்க. கில்மாப்பட விமர்சகர்னு நக்கல் பண்றாங்க.. நான் இதுவரை செய்த சினிமா விமர்சனங்கள்  147, அதுல கில்மாப்பட விமர்சனங்கள் 13 தான். ஆனா என்னமோ என் தொழிலே கில்மாப்பட விமர்சனம் தான் அப்டிங்கற மாதிரி பேசிக்கறாங்க.


 நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில் உணவு உலகம் ஆஃபீசர்  வேண்டுகோளின் படி 2012 ஜனவரி 1 இல் இருந்து நான் கில்மாப்படம் விமர்சனம் பண்றது இல்லை, ஆனால் படம் பார்த்துடுவேன்.. சில பெண் வாசகிகளும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தாங்க. உங்க தளத்தில் கமெண்ட் போட தயக்கமா, சங்கடமா இருக்கு. அதனால அந்த மாதிரி படங்களுக்கு விமர்சனம் பண்ண வேணாம் .. உங்க இமேஜை உடங்க  அப்டின்னாங்க..


-----------------------------




மயிலன்
அண்ணே பதிவுலகுல நாலாவது எடமா? அப்புடி ஒரு நெனப்பா? டூ மச்... சொல்லிபுட்டேன்... ஹி ஹி :) என்ன மாதிரி பெரிய ஆளுங்க இருக்கும்போதே இவ்வளவு தெனாவட்டா?.. ஹ்ம்ம்ம்...

சரி என்னோட கேள்விகள்...

1.தமிழ்மண ரேங்குக்கு மாசாமாசம் எவ்வளவு இலஞ்சம் தர்றீங்க...ஹி ஹி...:) ?

தம்பி, இப்போ  நான் தமிழ் மணத்துலயே இல்லை.. காப்பி பேஸ்ட் போஸ்ட் போடவேணாம்னு அவங்க எச்சரிக்கைகள் கொடுத்தும் என்னால சில சமயங்கள்ல போட வேண்டிய சூழல் வந்தது.. அதனால அவங்க என் தளத்தை நீக்கிட்டாங்க.. தமிழ் மண ரேங்க்ல முதல் இடம் வந்தப்போ நான் லஞ்சம் ஏதும் தர்லை.. லஞ்சம் கொடுத்தா முதல் இடம் வரலாம்னா பலர் அதைத்தர தயாராவே இருந்தாங்க. ஆனா தமிழ் மணம் ஹிட்ஸை அடிப்படையா வெச்சுத்தான் எடுக்கறாங்க, துட்ஸை அல்ல



2.வேற யாரோட பதிவையாவது படிக்கும்போது.. "ச்ச...இது நமக்கு தோணாம போயிருச்சே..?" அப்புடின்னு தோனிருக்கா?

யா யா.. ஏராளம்.. சேட்டைக்காரன், கும்மாச்சி, குசும்பன் என நகைச்சுவை கலந்து எழுதுபவர்கள் பல பதிவுகள் அப்படி நினைக்க வெச்சிருக்கு. ராவடி ராம்சாமி எழுதுன பூமியை நோக்கி என்ற வித்தியாசமான தொடர் வந்தப்போ அப்படி நினைச்சேன். அதே போல் ட்விட்டர்ல வேதாளம் எழுதுன ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படிச்சும் அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஐ ஆம் கார்க்கியின் லேட்டஸ்ட் யூ டியூப் மிக்சிங்க் காமெடி ரிலீட்டட் சென்னை மெகா ட்வீட்டப் நையாண்டி பார்த்தப்பவும் நினைச்சேன்



3.பதிவுலக அரசியல்ல உங்களோட நிலைப்பாடு என்ன? சும்மா எல்லாரும் நண்பர்கள்ன்னு கதை விடாதீங்க...

பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் அப்டினு ஒரு பதிவு போட்டேன்.. சும்மா குமுறு குமுறுன்னு குமுறிட்டாங்க. நான் சொன்ன அதே கருத்தை அண்னன் உண்மைத்தமிழன்  அடுத்த நாள் ஆமோதிச்சு பதிவுல சொன்னப்போ எல்லாரும் கமுக்கமா இருந்தாங்க. இதில் இருந்து கிடைக்கும் நீதி பின்புலம் இல்லாம பலம் இல்லாம நாம எந்த காண்ட்ரவர்சியான கருத்தையும் சொல்லக்கூடாது.


4.நீங்க உங்களோட தளத்துல கவர்ச்சி புகைப்படங்கள் போடறத பார்த்து வீட்டுல அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?

எனக்கு பிளாக் இருக்கறதே  வீட்டுக்குத்தெரியாது..  எங்க வீட்டுல நெட் கனெக்‌ஷனே இல்லை. ஆல் ஒர்க் இன் ஆஃபீஸ் ஒன்லி.. ஹி ஹி இந்த கேல்வில பொத்தாம்பொதுவா அண்ணி  அடிக்கறது இல்லையா?ன்னு கேட்டிருக்கலாம். அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?இந்த அளவு வன்முறை தேவையா? :)



5.முக்கியமான அஞ்சாவது கேள்வி...


எனக்கு என் இன்னும் ஹன்சிகா போஸ்டர் அனுப்பல? ஹி ஹி...

நாட்டுல எல்லாருக்கும் 1000 பிரச்சனை.. உங்க பிரச்சனை இதுதானா? அனுப்பித்தொலைக்கிறேன் ; -)



 ராஜபேட்டை ராஜா


பதிவுகள் முலம் நீங்கள் மாதம் மாதம் சம்பாதிப்பது எவ்வளவு ? ( என்னை போல நல்ல , பாசமான , உண்மையான நண்பர்களே .. என டயலாக் விடக்கூடாது )

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. எல்லாம் ஜஸ்ட் பொழுது போக்குத்தான்.


நமக்கு பிடித்தது என நினைத்து பகிர்ந்த ஒரு செய்தியால் உங்களுக்கு பிரச்னை வந்த நிகழ்வு நடந்துள்ளதா ?


 ஜாலியா கலாய்ச்சுப்போட்ட சில பதிவுகள் பலர் மனதை காயப்படுத்தி இருக்கு. அவற்றை எல்லாம் ஒரு பாடமா எடுத்துக்கறேன். இனி வரும் காலங்களில் கவனமா இருந்துக்க வேண்டியதுதான்



கேள்வி : சொந்தமாக பல பதிவு எழுதினாலும் Copy & Paste பண்ணும சில பதிவுகளை வைத்து உங்களை குறை சொல்பவர்களை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?

ட்விட்டர்ல ஒரு நல்ல ட்வீட் யாராவது போட்டா அதை மற்றவங்க  RETWEET பண்றாங்க . சுருக்கமா அதை RT னு சொல்வோம். அந்த மாதிரி எனக்குப்பிடிச்ச சில படைப்புகளை என் பிளாக்ல  RT பண்றேன்.. ஆனா பலர் நான் ஆனந்த விகடன்ல இருந்து மட்டும் தான் காப்பி பேஸ்ட் பண்றதா தப்பா நினைச்சு எதிர் பதிவு போடறாங்க. அவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது நான் சண்டே இந்தியன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ர்ட்டர், நக்கீரன்,கல்கி என எல்லா இதழ்களில் இருந்தும் பதிவுகள் போடறேன்.


 துக்ளக் இதழ் மட்டும் தான் இன்னும் என் கைக்கு சிக்கலை.. ஆன் லைன் சந்தாதாரர்கள் யாராவது உதவி செஞ்சா குருமூர்த்தியின் பொருளாதாரக்கட்டுரைகள், துக்ளக் சத்யாவின்  காமெடி கட்டுரைகள் போட ஆசை.



கேள்வி :எப்போவாது ஏன்டா இந்த பதிவுலகிற்கு வந்தோம் என நினைத்ததுண்டா ?


சந்தடி சாக்குல டேய் டா போட்டு பார்க்கறீங்களா? நான் அப்படி நினைச்சதே இல்லை. ஆனா பலர் “ ஏண்டா இவன் பதிவுலகிற்கு வந்தான் என எரிச்சலோட மெயில் சேட்டிங்க்ல நண்பர்களுடன் அளவளாவுவதை கவனிச்சிருக்கேன்


கேள்வி : பதிவுலகில் உங்கள் வாரிசு யார் ? 

 என் பொண்ணு அபிராமி ஸ்ரீதான்





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




Monday, June 04, 2012

அப்பாடேக்கர் ட்வீட்டரின் பேட்டி -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 7





சென்னையில் நடந்த மெகா ட்வீட்டப்ல வாழை அமைப்பு பற்றி திவ்யா மேடம் பேசிய உரை தான் இந்த பதிவுல முதல்ல வந்திருக்கனும்.. ஆனா தமிழனான நான் தமிழ் சினிமா பார்த்து பார்த்து கெட்டுப்போனதால கருத்து சொல்றதை ஓப்பனிங்க்ல வெச்சுக்கறது இல்லை.. இடைவேளைக்குப்பிறகுதான் .. அவர் பேசியதின் சாராம்சம்


வாழை

சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த இயந்திர வாழ்வில், பள்ளிப்பருவத்தின் முக்கியம் அறியாத கிராம குழந்தைகளுக்கு வழிகாட்டியாக சிலர் செயல்படுகிறார்கள் என கேள்விப்பட்டேன். வார இறுதி ஓய்வுநாளை எப்படி செலவு செய்வதென்று அறியாமல் பல இளைஞர்கள் உள்ளனர். வாழையை பற்றி அறியாதவரை நானும் அப்படிதான் இருந்தேன்.


நம் சமுதாயத்தை எப்படியாவது மாற்றவேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் உண்டு. ஆனால் எந்த விதத்தில் செயல்படவேண்டுமென தெரியாமல் இருப்போம். நமக்கும் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது நம் வாழை. நம் சமுதாயத்தில் அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைத்தால் போதும், இந்த சமுதாயமே மேன்படும். இதனை அடைவதற்கு வாழை சிறந்த செயல்முறையை வரையறுத்துள்ளது, நம்முடைய பங்கு இதனை செயல்படுத்துவதில்தான் உண்டு.

மாதம் ஒரு முறை கல்வி பட்டறைக்கு செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் பட்டறை செயல்படுத்த தேவைப்படும் மூலபொருளை தயார்படுத்தி இருப்பர் (வரப்போகிற பட்டறைகளுக்கு நாமும் உதவலாம்), நாம் அதனை செயல்படுத்த உதவினால் போதும். அந்த பட்டறையில் கல்வி மற்றும் soft skills பற்றிய sessions இருக்கும்.

கல்விக்கு மேல் குழந்தைகளுக்கும் நமக்கும் ஒரு அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை உறவை வாழை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த உறவு பட்டறை முடித்து நாம் வீடு திரும்பிய பிறகும் தொடரும். அவர்களுடன் கடிதத்தின் மூலமாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாகவோ தொடர்புகொண்டு அவர்களின் முன்னேற்றத்தை நாம் அறிந்து கொள்ளலாம், மேலும் அவர்களை ஊக்குவிக்கவும் செய்யலாம்.




வாழை நம்மிடம் எதிர்பார்ப்பது:

1. நம்முடைய நேரம் (மாதம் ஒருமுறை கிராமத்திற்கு சென்று கல்வி புகட்ட)

2 குழந்தைகளிடம் செலவிட சில நேரம் (வாரம் ஒருமுறை அவர்களிடம் தொலைபேசியில் பேச)

3  வருடத்தில் 12 முறை பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும்

4 வாழை யாரிடமும் கட்டாயமாக பணம் எதிர்பார்பதில்லை, விருப்பப்பட்டவர்கள் வருட சந்தாவோ அல்லது நன்கொடையோ அளிக்கலாம்

5 . கல்வி பட்டறைக்கு சென்று வர பேருந்து சந்தா.

வாழைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்


இவங்க பேசி முடிச்ச பின்னால நான் கொஞ்சம் ஹால்க்கு வெளீல வந்தேன்.. அப்போ பல்லவ மன்னன் அங்கே நின்னுட்டு இருந்தாரு..அவர் கிட்டே பேசுனது..






 “ யோவ்.. என்னய்யா நயன் தாராவை பறி கொடுத்த சிம்பு மாதிரி பம்மிக்கிட்டு நிக்கறீங்க? உள்ளே தானே ட்வீட்டப் மீட்டிங்க் நடக்கு.. இங்கே என்ன பண்றீங்க? “


 இல்லை மாப்ஸ்.. என்னை பிளாக் பண்ணிட்டாரு ஒரு பிரபல ட்விட்டர்... அவர் இப்போ இங்கே வந்திருக்காரு. அவர் கிட்டே  ஏன் என்னை பிளாக் பண்ணிட்டீங்க?ன்னு கேட்கலாம்னு வந்தேன்..


இதெல்லாம் சப்ப மேட்டர்.. அவர் என்ன இண்ட்டர் நேஷனல் ஃபிகரா? அவர் பிளாக் பண்ணுனா என்ன லாஸ் உங்களுக்கு? ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்த மடம்.. “இவர் போனா வேற ஒருத்தர் வந்துட்டு போறாருன்னேன்..


அவர் உடனே சொன்ன ஃபிளாஸ்பேக் ( இதில் அவன் இவன் என அவரைப்பற்றி இவர் குறிப்பிடுவது ஒரு உரிமையிலும், பழக்கத்திலும்)


ஆரம்பத்தில் நானும் அவனும் நல்ல முறையில் தான் நட்போடு இருந்தோம்.. அவனோட ஸ்பெஷாலிட்டி டைமிங்காக காமடி பண்ணுவது தான்.. அவன் மூலமாக தான் எனக்கு பிரீயாவுடு டேவிட் அறிமுகம் ஆனார். ஒருநாள் திடீர் என்று அவன் டுவீட்ஸ் வராததை கண்டு அவன் ப்ரோபைல் பேஜை கிளிக் செய்தேன்.

அப்போது தான் அவன் ப்ளாக் செய்தது தெரிய வந்தது.. நாம எதுவும் அவன திட்டவோ கிண்டலோ செய்யலையே எதுக்கு ப்ளாக் செஞ்சான் என்ற ஆதங்கம் இருந்தது..

அப்போது தான் ரியல்பீனு புதிதாக டுவீட்டார் வந்த நேரம். அந்த பெண் அவரிடம் மேன்ஷன் போட்ட போது ஸ்டுபிட் என்று பதில் அளித்தார் DKCBE.

பிரீயாவுடு டேவிட் ,வாலிபன் ஷேக் போன்றவர்களுக்கு போன் செய்து கேட்டதில் அவர்களும் சொன்னார்கள் தீபக் எப்போ ப்ளாக் பண்ணுவான் எதுக்கு ப்ளாக் பண்ணுவான் என்றே தெரியாது அவன் ரொம்ப சென்சிடிவ் என்றார்கள்.

எனக்கு முன் புரட்சிகனல்SGR என்பவரை ப்ளாக் செய்தார் தீபக். அப்போது SGRக்காக நான் தீபக்கிடம் கேட்டபோது his tweets are stereotypic என்று பதில் அளித்தார்..

ஒருநாள் திடீர் என்று எனக்கு தீபக் மேன்ஷன் போட்டு "yes I have unfollowed and going to block riyazdentist " grow up kids .. U are not replying my mentions 

என்ற டுவீட் போட்டார். அதுக்கு நான் பதில் சொன்னேன் நான் எந்த ஒரு mentionக்கும் பதில் அளிக்காமல் இருந்ததில்லை.. ஒருவேளை groupப்பாக ரயில் வண்டி சாட் நடக்கும் போது தவறி இருக்கலாம் என்றேன். போனில் தொடர்புகொன்டாலும் பிக்கப் பண்ண மாட்டான்.

கோவை டுவீடப் நடந்த போதும் அதை தொடர்ந்து திருச்சி டுவீட்டப் போதும் நான் கால் பண்ணி அவன் எடுக்கவே இல்ல .

இப்போ அபோ நேரில் சந்தித்து கேட்டேன்., அதுக்கு அவன் பதில் " I don't like your tweets so blocked" that is my wish 



 ஃபிளாஸ்பேக் ஓவர்

இதானா மேட்டர்... விடுங்க கேட்டுடலாம்.. அப்டின்னேன். இங்கே ஒரு விஷயம் நல்லா கவனிங்க.. டாக்டர் ரியாஸ் அந்த பிரபல ட்வீட்டரை நண்பர் என்ற முறையில் பழகிய பழக்கத்தை வைத்துத்தான் அவன் இவன் என்ற நடையில் பேசி இருக்கார்..



இப்போ அந்த பிரபல பிளாக் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ஒரு பேட்டி 


அண்ணே, வணக்கம்னே... கின்னஸ் ரெக்கார்டுல இடம் பிடிக்கற அளவு  ஏகப்பட்ட பேரை பிளாக் பண்ணி இருக்கீங்க.. என்ன ரீசன்னு சொன்னீங்கன்னா உங்களுக்குப்பின்னால வர்ற  இளம் சந்ததியினர் திருந்துவாங்க, பல விஷயம் தெரிஞ்சுக்குவாங்க.




எனக்கு இங்க்லீஷ்ல ட்வீட் போட்டா பிடிக்காது.. நான் கலைஞர் மாதிரி பயங்கரமான தமிழ்ப்பற்றாளன். அதனால இங்க்லீஷ்ல யார் ட்வீட் போட்டாலும் உடனே பிளாக் தான்..ஒருத்தன் எனக்கு குட்மார்னிங்க்னு ட்வீட் போட்டான், உடனே அவனை பிளாக் பண்ணிட்டேன்

 அண்ணே, நீங்க பண்றது அநியாயம்... GM  னு இங்க்லீஷ்ல போடறது ஈசியா? காலை வணக்கம்னு போடறது ஈசியா? அதுவும் இல்லாம அவர் மொபைல் ட்வீட்.. தமிழ் விசை ஒர்க் ஆகலையாம்.. பார்த்து மன்னிச்சு விட்டுடுங்கண்ணே

அதெல்லாம் முடியாது.. நான் கலைஞர் மாதிரி, கொண்ட கொள்கைல இருந்து என்னைக்கும் மாறவே மாட்டேன்


ஓஹோ.. உங்க ஆட்டோகிராஃப் இந்த டைரில போட்டுக்கொடுங்கண்ணே...


இந்தா. பொழச்சுப்போ..


அண்ணே.. இப்போதான் தமிழன்.. தமிழ் என் மூச்சு... பேச்சுன்னு சொன்னீங்க.. உங்க பேரைக்கூட இங்க்லீஷ்ல தான் போடறீங்க, அது ஏண்ணே?


 அது வந்து.....  வந்து.. ம் எனக்கு கேள்வி கேட்டா பிடிக்காது. மென்ஷன்க்கு பதில் சொல்லலைன்னா பிடிக்காது. உனக்குக்கூட மென்ஷன் போட்டு ஒரு கேள்வி கேட்டேன், நீ பதில் சொல்லலை, உடனே பிளாக் தான்..


 அப்டி என்னண்ணே கேள்வி கேட்டீங்க. நான் கவனிக்கலை. மன்னிச்சுடுங்கண்ணே.. இப்போ அதே கேள்வியை திருப்பிக்கேளுங்க.. பிரமாதமா பதில் சொல்றேன்....

 உனக்கு மூளை இருக்கா?




 ம்க்கும்.. இதான் அந்த கேள்வியா?இந்த மாதிரி கேள்விஎல்லாம் டைம் லைன்ல கேட்டா எபப்டி பதில் சொல்ல? டி எம் ல கேட்டிருந்தா “ இல்லை”ன்னு டக்னு சொல்லி இருப்பேன்..


 நான் தான் உன்னைக்கண்டுக்கவே இல்லையே. எதுக்கு வலியனா வந்து என் கிட்டே பேசறே.. ?



 அண்ணே.. எல்லாம் ஒரு பொதுசேவை தான்.. மக்களுக்கு பல விபரங்கள் போய்ச்சேர வேணாமா? அது இருக்கட்டும்.. இந்த மெகா ட்வீட்டப்க்கு தோராயமா  120 பேரு வந்திருக்காங்கன்னு அட்டெண்டென்ஸ் ரிஜெஸ்டர் சொல்லுது.. ஆனா நீங்க மட்டும் தான் நடமாடும்  சாராயமா வந்திருக்கற மாதிரி தெரியுது. அது ஏன்?


சரக்கடிக்காமல் ஒரு நாளும் இருக்க வேணாம் - இதுதான் என் பாலிஸி.. அது என் பர்சனல் மேட்டர். அதைக்கேட்க நீ யார்டா வெண்ணே..

அண்ணே. சரக்கடிச்சு நீங்க குப்புறக்கா, அப்புறக்கா உங்க வீட்லயோ, ரோட்லயோ கிடந்தா எவன் கேட்குறான்.. பொது இடத்துல மப்போட வந்திருக்கீங்களே.. அது சரியா?ன்னு கேட்கறேன்...


 நான் வந்து யார் கிட்டேயாவது தகராறு பண்ணேனா? யாருக்காவது டிஸ்டர்பா இருந்தேனா? நான் பாட்டுக்கு ஓரமா விழுந்து கிடந்தேன், என் மப்பு என் சரக்கு என் உரிமை.....


சாரிண்ணே.. ஓக்கே .. இனி ஏதும் கேட்கலை.. பை..


கடைசில சாப்பாடு.. பிரமாதமா இருந்துச்சு.. அருமையான சமையல்.. ஏற்பாடுகள். சுடச்சுட பரிமாறுனாங்க.  குலோப்ஜாமூன் 2 , ஒரு வெஜிடபிள் சூப்.. வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி.. தயிர் சாதம் என ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு நிகரான கலக்கலான  டிஃபன் ஐட்டம்ஸ்.  ரூ 160 மதிப்புள்ள உணவு என அறியத்தகவல்...

 பல உற்சாகமான அனுபவங்களை மறக்க முடியாத ஞாபகங்களை இந்த சந்திப்பு தன்னகத்தே கொண்டது.. கருத்து வேற்றுமைகள், சில மனஸ்தாபங்கள் எழுந்தாலும் இந்த சந்திப்பு வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பாக இருந்தது..

 மீண்டும் ஒரு முறை விழா ஏற்பாட்டாளர்கள்  எக்ஸ்பர்ட் சத்யா, கரையான், பரிசல்காரன், கேசவன், பாலு அனைவருக்கும் நன்றிகள்.. விழாவை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துகள்.. 






டிஸ்கி-





இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html


Monday, May 28, 2012

பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 6

ஒவ்வொரு மனுஷனுக்கும் மறுபக்கம்னு ஒண்ணு உண்டு.. இதை படிச்சுட்டு இருக்கற நீங்களும் சரி, இதை டைப் அடிச்சுட்டு இருக்கற நானும் சரி, இதுக்கு விதி விலக்கல்ல.. விமர்சனம் எப்போ வரும்னா ஒரு மனிதனின் இருண்ட பக்கம், அல்லது அவனது கறுப்பு முகம் மத்தவங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறப்ப.. 

விவாஜி என்ற நண்பர் கம் ட்வீட்டர் 4 நாட்களுக்கு முன்னால டைம் லைன்ல ஒரு ட்வீட் போட்டார்.. “ கவர்ச்சிகரமான , கிளாமர் நடிகைகளின் ஸ்டில்களை வெளியிடும் அட்ரா சக்க வில் இந்த ------------ பெண் ட்வீட்டரின் ஃபோட்டோவும் வந்திருக்கு, நடிகைகளின் தர வரிசையில் வந்த அவருக்கு என் வாழ்த்துகள்” அப்டின்னார்.. 

அந்த பெண் ட்வீட்டரின் பெயரையும் அதில் மென்ஷன் பண்ணி இருந்தார்.. நான் உடனே கேட்டேன்.. சார், நீங்க அந்த பெண் ட்வீட்டரின் குடும்ப நண்பர் கம் வெல்விஷர். நீங்க டைம் லைன்ல இப்படி சொல்லலாமா?

 அதுக்கு அண்ணன் ரிப்ளை பண்ணுனாரு “ அதை ஆல்ரெடி நாங்க பேசிட்டோம்.. இப்போ பொது வெளில கேட்கறேன் பதில் சொல்லுங்கன்னாரு. ‘

வாக்குவாதத்தை தவிர்க்கவும், தேவை இல்லாமல் அந்த பெண் ட்வீட்டருக்கு மன உளைச்சல் வரக்கூடாது என்பதற்காகவும் நான் பதில் ஏதும் தர்லை, விட்டுட்டேன்.. அன்று இரவு 9 மணியில் இருந்து 12 மணி வரை அந்த பெண் ட்வீட்டரும் , அண்ணன் விவாஜி அவர்களும் வாக்குவாதம் செஞ்சாங்க .. இப்போ நான் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.. 


அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான முதல் கேள்வி - அட்ராசக்க பிளாக் டபுள் எக்ஸ் படம் எல்லாம் போடும் கேவலமான பிளாக்.. அதுல கவுரமான ஸ்டில் உள்ள ஒரு போஸ்ட்டை காட்டு பார்க்கலாம். நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்.அந்த பிளாக்கில் போடப்படும் ஃபோட்டோக்கள் எல்லாமே மோசமானவை. கவர்ச்சிகரமானவை.. ஒரு நல்ல போஸ்ட் நான் பார்த்ததில்லை..  (
additionally, with XX pics for marketing.)



 எனது பதில்  - அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு, தருமரின் கண்களுக்கு பார்க்கறவங்க எல்லாருமே நல்லவங்களா தெரிஞ்சாங்களாம், துரியோதனன் கண்களுக்கு பார்க்கறவங்க எல்லாரும் கெட்டவங்களா தெரிஞ்சாங்களாம்.. அந்த மாதிரி நீங்க கில்மா ஸ்டில் உள்ள படங்களா தேடித்தேடி போய் பார்த்திருக்கீங்க. அதான் அப்படி நினைக்க வெச்சிருக்கு. நான் இதுவரை 1357 போஸ்ட் போட்டிருக்கேன்.. அதுல சினிமா விமர்சனங்கள் போஸ்ட் 287... சினிமா நடிக நடிகைகளின் பேட்டி 146 , ஆக மொத்தம் 433 போஸ்ட்டில் மட்டும் தான் கிளாமர்  ஸ்டில்ஸ் வந்திருக்கு,,



 நான் போஸ்ட் போடற பேட்டர்னல டெயிலி காலைல ட்வீட்ஸ்களின் தொகுப்பா ஒரு போஸ்ட் போட்டுட்டு வர்றேன்.. அதுல நல்ல விதமான இயற்கை காட்சிகள், பறவை இனங்கள் ஃபோட்டோ எல்லாம் இருக்கு.. தயவு செஞ்சு அதை பார்க்கவும். 


எனது 1000 வது பதிவில் எங்கம்மா ஃபோட்டோ போட்டிருக்கேன். எனது 789 வது பதிவில் எனது குடும்ப பெண்களின் ஃபோட்டோ போட்டிருக்கேன். அதை எல்லாம் நீங்க பார்க்கலையா? கிளாமர் ஸ்டில் ஆல்ரெடி ஏதாவது போஸ்ட்டில் போட்டிருந்தால் மற்ற லேடீஸ் ஃபோட்டோ போட்டா கேவலமா?


அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான 2வது கேள்வி - கிளாமரான நடிகை ஃபோட்டொக்கள் போடும் ஒரு பிளாக்கில் கவுரமான, குடும்ப பெண் ஃபோட்டோ போட்டாலும் பார்ப்பவர்கள் தவறா தான் நினைப்பாங்க . 




எனது பதில் - ஆனந்த விகடன் இதழில் கிளாமரான நடிகை ஃபோட்டோகள் வரவில்லையா? கலகலப்பு பட ஸ்டில்லான அஞ்சலி , ஓவியா ஃபோட்டோகள் வந்த போது நீங்க அதை பார்த்து ரசிக்கலையா?ஆனந்த விகடனில் இதுவரை 887 கிளாமர் ஸ்டில்ஸ் 1998 இலிருந்து 2012 வரை வந்திருக்கு.. அப்படி கிளாமர் ஸ்டில் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் நல்ல குடும்ப பெண்ணின் ஃபோட்டோ வந்தால் அவரும் தவறாகத்தான் பார்க்கப்படுவாரா?


இதே ஆனந்த விகடனில் வலையோசை பகுதியில் அண்ணன் விவாஜியின் வலைப்பக்கம் பற்றி அறிமுகம் வந்தது.. மகிழ்ச்சி.. அப்போ அண்ணனும் அதை கொண்டாடுனார்.. தன் சந்தோஷத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.. எனக்கும் மகிழ்ச்சியே. ஆனா கிளாமர் ஸ்டில்ஸ் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் தன் பிளாக்  அறிமுகம் வந்துடுச்சேன்னு அவர் ஏன் வருத்தப்படலை?மாறாக பெருமை தான் பட்டார்.. 



 காரணம் ரொம்ப சிம்ப்பிள்..  அந்த கிளாம்ர் ஸ்டில் வந்தது அந்த கட்டுரை அல்லது செய்திக்கு மேட்சாக.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.. 


6 லட்சம் பேர் படிக்கும் ஒரு பத்திரிக்கைக்கு ஒரு நியாயம். 2000 பேர் தினசரி படிக்கும் வெப்சைட்டுக்கு ஒரு நியாயமா?


3. அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான  3 வது கேள்வி -பிளாகில் சி பி மார்க்கெட்டிங்க்காக கவர்ச்சிகரமான டைட்டில்களை வைக்கிறார். என்பது..


 அவர் கேள்வியிலேயே பதில் இருக்கு.. ஒருசினிமாப்படம் ரிலீஸ் ஆகுதுன்னா அதுக்கு ஒட்டப்படும் போஸ்டர் ரொம்ப முக்கியம்.. அந்த மாதிரி ஒரு பதிவு போட்டா அதுக்கு மக்களை கவரக்கூடிய தலைப்பு முக்கியம்.. அதனால தான் அப்படி போடறேன், அதுல என்ன தப்பு இருக்கு?



அண்ணன் மற்றும் குடும்ப நண்பர் விவாஜி அவர்களின் அறிவுபூர்வமான ட்வீட்ஸ்

1.  I say it is wrong. தொடையும் தொப்புளும் இருக்கிற பதிவுல இந்தப் பெண்ணோட படத்துக்கு என்ன வேலை


2.  Didnt I try to explain this yesterday? I am saying you are not wrong, you pictures are place in wrong place


3. Respect are all not to mention in Public, thats different. I say you should whom you are dealing with



4.  Oh coming to Character Assassination, let it be.நான் இப்படித்தான்

5,சொல்லனுமா? மகா மட்டமான/ cheap title பதிவுகளா போட்டா எவன் மதிப்பான்? 


6. உங்க மத்த பதிவுகள்ல நல்ல படங்கள் போட்டிருக்கீங்களா? #பனைமரம் #கள். 


அண்ணன் விவாஜியிடம் எனது கேள்விகள்



1. மேலே சொன்ன 2 பாயிண்ட்சை விடுங்க.. உங்க குடும்ப நண்பர் ஃபோட்டோ என் பிளாக்ல வந்தது உங்களுக்கு பிடிக்கலை.. ஓக்கே ஒத்துக்கறேன்.. நேர்மையான, அவர் மேல் அக்கறை உள்ளவரா இருந்தா நீங்க என்ன செஞ்சுருக்கனும்? எனக்கு ஒரு ஃபோனை போட்டு அந்த ஃபோட்டோவை எடுத்துடுப்பா என்றால் மேட்டர் ஓவர். ஏன் எனக்கு ஃபோன் பண்ணலை?அல்லது உங்க குடும்ப நண்பரிடம் ஃபோனிலோ, டி எம்மிலோ அதை சொல்லி இருந்தாலும் மேட்டர் ஓவர். அதை ஏன் நீங்க செய்யலை?


2. ஒரு முறை குறும்படம் பற்றி டைம்லைன்ல ஒரு ட்வீட் போட்டீங்க. அதுக்கு நான் பதில் போட்டேன். நீங்க கதையோட  ஒன்லைன் சொல்லி அதுக்கு திரைக்கதை அமைக்க முடியுமா?ன்னீங்க..  செய்யறேன்னேன்.. அது சம்பந்தமான உரையாடலில் நீங்க ஐ எஸ் டி  கால் போட்டு எனக்கு 19 நிமிசம் பேசுனீங்க.. உங்க வேலை ஆகனும்கறதுக்காக செலவு பண்ணி ஃபோன் பண்ற நீங்க உங்க குடும்ப நண்பருக்காக 2 நிமிஷம் செலவு பண்ண முடியலையா? ஏன்?


3. உங்களுக்கு ஒரு தங்கை அல்லது அக்கா இருந்து இப்படி ஒரு ஃபோட்டோ நான் போட்டிருந்தா  அவங்க பேர் வெளீல வராம ஃபோன் பண்ணி சொல்லி இருப்பீங்களா? அல்லது இப்படி டைம் லைன்ல பேசி அவங்க பேர் வெளில வரட்டும்னு செஞ்சு இருப்பீங்களா?



நம்மால பிரச்சனை எதுக்கு? என நான் அந்த ஃபோட்டோக்களை எடுத்துட்டேன். உடனே ஒரு பிரபல புத்திசாலி ட்வீட்டர் “ என்ன அந்த போஸ்ட்ல இருந்த ஃபோட்டோக்களை காணோம்? காக்கா தூக்கிட்டு போயிடுச்சா? என கேட்டார் .. காமெடியாம்.. ஹா ஹா சிரிச்சாச்சு. 



பெண் குயின் என்ற போஸ்ட் போட்டப்ப அந்த போஸ்ட்டில் பெண் ட்வீட்டர்களை  ஜாலியா கலாய்ச்சு அவர்கள் மனம் நோகா வண்ணம், அவர்களும் ரசிக்கும்படியாகத்தான் பட்டப்பெயர் வெச்சு எழுதி இருந்தேன். அப்போது ஏதும் சொல்லாத ஒரு பிரபல ஆண் ட்வீட்டர் 3 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டருக்கு ஃபோன் போட்டு டார்ச்சர் செய்து இருக்கிறார்.. “ உன்னை பற்றி வர்ற லைன்ஸை எடுக்க சொல்லு.. எதுக்காக உன் பேரு வருது? “ என 


அவர் டி எம்மில் கேட்டார், நான் உடனே எடுத்துட்டேன். அப்படி மிரட்டிய பிரபல ட்வீட்டரிடம் நான் கேட்பது “ உங்க தோழியிடம் உண்மையிலேயே அக்கறை உள்ள நல்லவர் எனில் ஏன் போஸ்ட் போட்ட அன்னைக்கே அதை சொல்லலை? அதை நீங்க படிக்கலைன்னு சொல்லி எஸ் ஆக முடியாது.. அந்த போஸ்ட் போட்ட அன்னைக்கே மாலை 6 மணிக்கு நீங்க அந்த போஸ்ட் பற்றி உங்க நண்பர்களிடம் டிஸ்கஸ் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தது என்றதும் உங்க ஈகோ தலை தூக்கி.. “ ஓஹோ. நீ என்னை இப்படி மடக்கிறியா?நான் எப்படி உன்னை மடக்கறேன் பாரு? என்ற ஈகோ தான் அதுல தெரியுதே தவிர தோழி மீது நீங்க வெச்ச நட்புக்காக செஞ்ச மாதிரி எனக்கு தெரியல .. 


ட்வீட் உலகின் நாட்டாமை என்று அழைக்கப்படும் ஒரு பெரியவர் கேட்கும் புத்திசாலித்தனமான கேள்வி

பிரச்சனை இவ்வளவு பெருசானப்பறமும் , அவர் இல்லை இவர் இல்லைன்னு வழவழகொழகொழன்னு இல்லாமா யாருன்னு சொல்லணும்

இல்லனா அவர் சொன்னது அனைத்தும் கட்டுக்கதை....விளம்பரத்துக்காக செய்தது..அவ்வளவே 


 அவருக்கு நான் கூறும் பதில் 


ட்வீட்டப்பில் நடந்த மேட்டர் பற்றிய போஸ்ட்டில் ஒரு பெண் ட்வீட்டரின் படம் போட்டதுக்கே இவ்வளவு எதிர்ப்பும், தாக்குதலையும் அந்த பெண்கள் சந்திக்க வேண்டி வரும் அவலமான இந்த சூழலில் நான் அந்த பெண் ட்வீட்டர் பெயரை சொன்னா என்ன ஆகும்னு உங்களுக்குத்தெரியாதா? சம்பந்தப்பட்ட பிரபல ட்வீட்டர் அந்த பெண்ணை போட்டு தாளிச்சிட மாட்டாரா?


தனி மனித  தாக்குதலில் எனக்கு விருப்பம் இல்லை.. எல்லோரிடமும் நட்புடன் பழகவே  ஆசை.. எனவே தான் பெயர் சொல்லவில்லை.. சொல்ல வந்த கருத்து என்ன என்பதை சொல்லியாச்சு.. 


நான் இதுவரை யாரையும் அன்ஃபாலோ செய்யவில்லை, யாரையும் பிளாக் செய்யவில்லை.. அதை எப்படி பண்றதுங்கறதே நிஜமா எனக்குத்தெரியாது.ஆனா சிலர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்க. அது பற்றி எனக்கு கவலை இல்லை.சும்மா ஒரு தகவலுக்காகத்தான் இதை சொல்றேன்.. 

 இன்னும் சில பிரபலங்கள் காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு இவர் ட்வீட்டை தேடிப்பிடிச்சாவது ஆர் டி பண்ணிடனும், ஆர் டி க்காக பிச்சை எடுக்கக்கூடாது, டைப் அடிப்பதெல்லாம் படைப்பு அல்ல , என்ற தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.. அவர்களுக்கு என் நன்றிகள்


நான் தனி ஆள்.. எனக்குன்னு எந்த குரூப்பும் கிடையாது.. ஆனால் சிலர் செட் சேர்த்துக்கிட்டு வேணும்னே டைம் லைன்ல என்னை நக்கல் அடிச்சு ட்வீட் போடறாங்க. அவர்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. நல்ல தெளிவு பெற அவர்கள் என் சென்னை ட்வீட் பதிவுகளை பொறுமையாக முழுவதுமாக படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்



டாக்டர் ரியாஸ் உட்பட 187 பேரை பிளாக் செய்து புகழ்பெற்ற ஒரு ட்வீட்டரின் பேட்டி  பாகம் 7 லும், வாழை பற்றியும், மெகா ட்வீட்டப்பில் நடந்த பிரமாதமான சாப்பாடு, உபசரிப்பு,நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சத்யா, கரையான், பரிசல்காரன்,கேசவன் அவர்களுக்கு நன்றி சொல்லி பாகம் 8ம்  அடுத்தடுத்த நாட்களில் வரும்.






டிஸ்கி-





இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html