Thursday, December 08, 2011

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

http://vannimedia.com/wp-content/uploads/2011/12/Osthi-Movie-Wallpapers-51.jpg

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி

யாரும் பயந்துடாதீங்க.. படம் போட்டதுல இருந்து முடியறவரை ஹீரோ வர்றப்ப எல்லாம் இதுதான் பின்னணி இசை..சும்மாவே சிம்பு ஓவர் அலட்டல் பேர்வழி.. இதுல இன்ஸ்பெக்டர் ரோல் வேற.. பின்னே கேட்கவா வேணும்?விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து சிம்புவோட நடிப்பை வியந்தவங்க எல்லாம் இந்தப்படம் பார்த்து வாழ்க்கையை வெறுப்பது உறுதி..

குருவி எனும் குப்பை படத்தை கொடுத்த தரணியைப்பார்த்து உலகம் வியந்தது.. தில் , தூள்,கில்லி என மெகா ஹிட் படங்கள் கொடுத்தவரா இப்படி ஒரு அட்டர்ஃபிளாப்பை கொடுத்தார்?என சந்தேகம், ஆனால் இந்தப்படத்தின் தோல்வி குருவியின் தோல்வியையும் தூக்கி சாப்பிட்டு விடும் போல இருக்கு.. 

படத்தோட கதை என்ன? ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவர் நேரடி தம்பி இல்லை.. அம்மாவோட 2வது கணவரோட மகன்.. 2 பேருக்கும் ஆகாது...எல்லாரும் அண்ணனை கரிச்சு கொட்டறாங்க.. தம்பியை புகழ்றாங்க.. ஆனா அண்ணன் இன்ஸ்பெக்டர் ஆகறார், தம்பி வெத்து வேட்டு..

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/richa-14.jpg


ஹீரோ இருக்கற ஊர்ல எலக்‌ஷன்ல நிக்க வில்லன் வேட்பாளர்கள்க்கு பணம் பட்டுவாடா பண்ண ட்ரை பண்றாரு.. அதை எல்லாம் ஹீரோ தடுத்து தன் வீட்டு பீரோல வெச்சுக்கறாரு..ஏன்னா அந்த மாவட்டத்துல பேங்க்கே இல்லையா?னு கேக்கக்கூடாது.. வீட்லயே வெச்சிருந்தாத்தான் கதை நகரும்.. வில்லன் ஹீரோவோட அம்மாவை கொலை செஞ்சுடறாரு.. ஆனா பாருங்க இந்த சஸ்பென்ஸ் சீன் க்ளைமாக்ஸ்ல தான் இயக்குநருக்கே தெரியுது. ஆனா படம் பார்த்த சின்ன பசங்க கூட சொல்லிட்டாங்க அந்த  மேட்டரை..

அம்மாவை கொன்ன வில்லனை ஹீரோ எப்படி பழி வாங்கறாருங்கறதுதான் மிச்ச கதை.. தம்பி வில்லன் கூட சேர்றதும், க்ளைமாக்ஸ்ல திடீர்னு திருந்தி அவர் அண்ணாங்கறதும் இவரு தம்பிங்கறதும்.. எம் ஜி ஆர், சிவாஜி காலத்துலயே எங்கப்பா பார்த்துட்டாருங்கோவ்..

போலீஸ் யூனிஃபார்ம்க்கே புது கம்பீரம் கொடுத்த படங்கள் என இது தாண்டா போலீஸ், வைஜயந்தி ஐ பி எஸ் ..னு ஒரு லிஸ்ட் சொல்ற மாதிரி போலீஸ் பேரையே கெடுக்கற படமா ஒஸ்தியை சொல்லலாம்..

சாமி படத்துல விக்ரம் செஞ்சதை எல்லாம் தூக்கி சாப்பிடனும்கற உத்வேகத்தோட சிம்பு பண்ற அலம்பல்கள் தாங்கலை.. அவர் பல்லை கடிச்ச படி நெல்லைத்தமிழ் பேசும்போது பாவமா இருக்கு.. 


இதுல பிரமாதமா ஒரு ஸ்டைல் பண்றாரு.. அதாவது கூலிங்க் கிளாசை தூக்கி மேலே போடறாரு.. அது கரெக்டா அவரோட சட்டை காலர் பின்னால நச்னு சொருகிக்குது.. படத்துல ஒரு வில்லன் அமைச்சரா வர்றார்.. அவர் ஹீரோ கிட்டே இதுக்கு விளக்கம் கேக்கறார்.. அதுக்கு நம்ம அண்ணன் சிம்பு - எதிரிங்க பின்னால இருந்து குத்த வரும்போது தெரிஞ்சிக்க.. அடேய் அடேய் அண்ணே.. அது என்ன ரிவர்யூ மிரரா? அவ்வ்வ் 


 ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்பாய், மயக்கம் என்ன ஹீரோயின்.. தனுஷ் ஜோடியா நடிச்சவர்ங்கற ஒரே காரணத்துக்காக இதுல சிம்புவுக்கு ஜோடி.. பாப்பா பானை விக்கற பரம ஏழை, ஆனா பாருங்க 24 மணி  நேரமும் அவரோட இடுப்புல 15 பவுன்க்கு ஒரு ஒட்டியாணம் இருக்கு.. உலகத்துலயே பானை பிடித்தவள் பாக்ய சாலிங்கற பழ மொழிக்கு அர்த்தம் சொன்ன ஒரே கேரக்டர் இவர் தான் அடங்கொன்னியா..

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் காதல் வர்ற சீன் செம காமெடி.. பானை விலை என்ன?னு கேக்கறார்.. ரூ 250னு ஹீரோயின் சொல்ல ரூ 500 குடுத்து ஒரு பானை வாங்கிட்டு மீதி சில்லறை அப்புறமா வாங்கிக்கறேன்னு ஹீரோ சொன்னதும் ஹீரோயின் இன்னொரு பானை கொடுத்து சில்லரையை கழிச்சுட்டு எனக்கு நேர்மை தான் முக்கியம்கறார். உடனே சிம்புவுக்கு காதல் வந்துடுது ஹய்யோ அய்யோ..

சந்தானம் இருக்கறதால ஏதோ கொஞ்சமாவது ஜாலியா படம் பார்க்க முடியுது.. இன்னொரு முக்கியமான விஷயம், இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படத்திலும்  ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு குத்தாட்டம் போட்டு காக்கிச்சட்டையை இப்படி கேவலப்படுத்துனதே இல்லை..

ஆனா ஒரே ஒரு விஷயம் பாராட்டலாம். சிம்பு ஸ்டில்களில் பார்க்க அழகாக ஹிந்தி பட ஹீரோ மாதிரி ஜம்முனு இருக்கார்.. ஆனா படத்துல அவர் டயலாக் பேசறது மகா கொடுமை..

http://www.thedipaar.com/pictures/resize_20111126060151.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. மல்லிகா ஷெராவத்தை புக் பண்ணி அவரை ஹீரோ கூட ஆட விடாமல் வில்லன் கூட ஆட வைத்து சிம்புவை கடுப்பேற்றியது.. ( அப்புறம் போனாப்போகுதுன்னு 4 லைன்க்கு சான்ஸ்.. )

2. ஹீரோயினை கொடுத்த சம்பளத்துக்கு சரிக்கட்ட படம் பூரா முதுகு முழுக்க, இடை முக்கால் வாசி தெரியும் படி உடை வடிவமைத்தது..


3. சந்தானத்தை புக் செஞ்சு காமெடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை ஓரளவு காப்பாற்றியது..

4. பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட் என்றாலும் படத்தில் பார்க்கும்போது நடன அசைவுகள் பல இடங்களில் வெல்டன் சொல்ல வைத்தது..

5. ஜித்தன் ரமேஷை முடிஞ்சவரை கேவலப்படுத்தியது ( பாவம் சிம்புவுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனையோ?)

http://suriyantv.com/wp-content/uploads/2011/11/osthi-simbu-5.jpg

ஹீரோயின் போட்டிருக்கும் 15 பவுன் ஒட்டியாணம் ஹி ஹி
இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.  ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் எப்படி எல்லா கேசுக்கும் மீடியாக்களிடம் பேட்டி தர்றார்? அட்லீஸ்ட் அவரை ஏ சி யாகவாவது காட்டி இருக்கலாம்.

2.  சிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி அவ்வளவு தத்தியா? சிம்பு கொண்டு வரும் கட்டுக்கட்டான பணத்தை எல்லாம் ஏது? எப்படி இவ்ளவ் பணம் என்றெல்லாம் கேட்காமல் பீரோவில் வைப்பது எப்படி?

3. ஒரு இன்ஸ்பெக்டரின் அம்மா இறந்ததும் அவர் அப்போதே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பண்ணீ இருக்க மாட்டரா? தலையணையால் தலையை அமுக்கி கொல்லப்பட்ட ரேவதி பிணத்தில் மூக்கில் ரத்தம் வந்திருக்குமே?

4. நாசர், ஜித்தன் ரமேஷ் இருவரும் அவர்கலது சம்பாத்யத்தை அனைத்தையும் பீரோவிலேயே தான் வைப்பாங்களா? அதென்ன போயஸ் தோட்டமா? வில்லன் அந்த பங்களாவை எரிச்சதும் நடுத்தெருவுக்கு வந்துடுவாங்களா?

5. எல்லா பணமும் போனதும் ஜித்தன் ரமேஷ் ஏன் வில்லனிடம் வேலைஆளாக சேர்கிறார்? சிம்புவிடம் போய் சொன்னால் தீர்ந்தது மேட்டர்..

6. க்ளைமாக்ஸில் எந்த வித டர்னிங்க் பாயிண்ட்டும் நடக்காமல் ஜித்தன் ரமேஷ் திடீர் என திருந்துவது எப்படி? படத்தை முடிக்கவா? அதே போல் சிம்பு 15 ரீல் வரை தன் அப்பாவை கரித்துக்கொட்டிட்டு இருந்தவர் திடீர்னு பாசம் பொங்க பேசுவது எப்படி?

7. ஜித்தன் ரமேஷ்  கல்யாணம் நடக்கும் சமயத்தில் சிம்பு தன் ஜோடியுடன் வந்து நான் தான் அண்ணன், எனக்குத்தான் முதல்ல மேரேஜ் நடக்கனும்னு தன் ஜோடியோட வர்றார், ஓக்கே, அவர் மணடபத்தை விட்டு போனதும் ரமேஷ் மேரேஜை நடத்தலாமே? ஏன் எழவு வீடு போல் எல்லாரும் எந்திரிச்சு போறாங்க?

http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/10/richa_gangopadhyay_hot_navel_stills_01.jpg

படம் சிம்பு ரசிகர்கள் கூட பார்க்க முடியாது..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்

இந்தப்படம் 15 நாள் ஓடும் எல்லா செண்ட்டர்லயும்..

http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-black1.jpga


டிஸ்கி - வசனத்துக்கு தனி காமெடி கும்மி பதிவு இருக்கு ஹி ஹி

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 

நையாண்டி நாரதரும், நாட்டு நடப்பும் ( ட்வீட்ஸ் & ஜோக்ஸ்)


1.வெளியில் சொல்ல முடியாத அளவு ரகசியம் என் வாழ்க்கையில் இருக்கிறது : சோனியா அகர்வால்! # தயக்கம் என்ன? சொல்லுங்க, பொழுதைபோக்கலாம்

-------------------------------



2. கொலைவெறி பாடலை கேட்டு புல்லரித்துப் போன அமிதாப்!  # தமிழ் தெரியாத அண்ணனே புல்லரிச்சுட்டாருன்னா.....

-----------------------------



3. ஒய் திஸ்கொலை வெறி பாட்டை  6 நிமிஷத்துலயே ரெடி பண்ணிட்டேன் # அண்ணே, ஒரே லைனை 37 டைம் திருப்பி திருப்பி  சொல்ல எதுக்குன்னே அம்புட்டு நேரம்?

-----------------------------------------



4. சோனியா அகர்வால் -ன் ஒரு நடிகையின் வாக்குமூலம் பட ரிலீஸை முன்னிட்டு செல்வராகவன் ஒரு இயக்குநரின் வாக்குமூலம் என ஒரு குறும்படம் எடுக்கறாராம்

-------------------------------------


5. டியர்.என்னை வர்ணீங்க..

இதோ ஆரம்பிச்சடறேன்..

ஆனா ஒரு கண்டிஷன்.என் மனசை மட்டும் தான் வர்ணிக்கனும்.

. அய்யோ நான் லவ்வர் போஸ்ட்டை ரிசைனிங்க்

--------------------------------------





6. கடவுளே! அழகில்லாத பெண்களை ஏன் படைச்சே?

தம்பி.. பெண் என்றாலே அழகுதான், இதுல அழகுள்ள, அழகில்லாத என ஏன் பிரிச்சு பார்க்கறே?

-------------------------------------

7. பெண்களை வர்ணிக்கறப்ப இனிமே உடம்பை வர்ணிக்கக்கூடாதாம்.

.அய்யய்யோ, இனி எப்படி என்ன பொய் சொல்லி லவ்வரை கரெக்ட் பண்றது?அவ்வ்வ்

---------------------------------------

8. தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் செய்து காட்ட எங்களால் முடியும் - அன்புமணி #  குடிச்சே அழிக்க நீங்க என்ன கேப்டனா?


----------------------------------------------

9.  திராவிடக்கட்சிகள் 45வருடங்களாக வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றிவருகின்றன-அன்புமணி# பின்னே ,டூயட், குத்தாட்டம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?


-----------------------------------------

10. . இனி வரும் காலங்களில் பாமக ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும்- அன்புமணி#பகல் கனவுகள் பலிப்பதில்லை டாக்டர் அய்யா

=---------------------------------------




11.  ஜெ. மீது நடவடிக்கை எடுக்க சொன்னால் என்னை மிரட்டுகிறார்கள்-ஸ்டாலின்# லூசாப்பா நீங்க? போலீஸ் ஸ்டேஷன்ல போய் எஸ் ஐ மேல புகார் குடுத்தா? அம்மா ஆட்சி நடக்கறப்ப அம்மா மேலேயே புகார் குடுத்தா?

--------------------------------


12. ப்ரியங்கா சோப்ரா மும்பையில் செய்வதை த்ரிஷா  இங்கே தமிழில் செய்யலாமே? -சாரு நிவேதிதா # செய்யலாம், ஆனா சென்சார் அனுமதிக்கனுமே?

-----------------------------------------

13. . வீட்டை அபகரித்ததாக ஸ்டாலின் மீது புகார் . # பெரிய வீடு தானே? அப்போ சிவில் கேஸ் தான் பிரச்சனை இல்ல.. 

------------------------------------------

14.  மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்#  தமிழக கஜானா காலி ஆகப்போகுது

------------------------------------------

15.  எனக்கு சம்பளம் முக்கியமில்லை; நல்ல படங்கள்தான் முக்கியம்-  ஜெனிலியா # அக்கா, நான் ஒரு குறும்படம் எடுக்கறேன், ஓ சி ல வந்து நடிச்சு குடுங்க

--------------------------------------



16.  கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம்னு கேரளாவை சொல்றாங்க, ஆனா சாத்தானால் சபிக்கப்பட்ட தேசம் ஆகிடுமோன்னு பயமா இருக்கு #FakeCryOfKerala

------------------------------------

17. . சார், ஒரு நல்ல கேரக்டர் இருக்கு , பண்றீங்களா? 

சாரி சார் அட்லீஸ்ட் 140 கேரக்டர் வேணும் # ட்விட்டர் ஆக்டர்

--------------------------------------

18.  கேரளா அரசே! மனசுக்குள்ள ஜெ என நினைப்பா? ஏன் கோர்ட் ஆர்டரை மதிக்கலை?#FakeCryOfKerala

----------------------------------

19. . அத்தான், எதுக்காக என்னை சேலை கட்ட சொல்றீங்க?ஐ ஆல்வேஸ் இன் மாடர்ன் டிரஸ்.. 

அதுவா? சேலை கட்னாலாவது அழகா இருக்கியா?ன்னு பார்க்கத்தான்

------------------------------------------

20.  ஜட்ஜ் - உங்களுக்கு ஆங்கில அறிவு கிடையாதா?

கைதி - எதுக்கு சுத்தி வளைக்கனும்? , எனக்கு அறிவே கிடையாது. இப்போ என்ன செய்வீங்க?

---------------------------------------

21 அழகு நிலையம் செல்வதில், அதற்கு செலவு செய்வதில் உலக அளவில் பெண்களே அதிக நேர விரயம் , பண விரயம் செய்யுறாங்க

---------------------

22 .பசங்க ஒரு நாளுக்கு ஒரு தடவை பவுடர் அடிச்சாலேஅதிகம், இந்த பொண்ணுங்க டெயிலி 13 தடவை பவுடர் அடிக்கறாங்க

-----------------------------------

23 .194 நாள் சிறைவாசத்திற்குப் பின் கனிமொழி ஜாமீன்# அடடா, இன்னும் 6 நாள் இருந்தா வெற்றிகரமான 200வது நாள் போஸ்டர் ஒட்டி இருக்கலாம், வட போச்சே

-----------------------------------------

24. துரோகம் செய்து விட்டது மத்திய அரசு:ஹசாரே மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு# தாத்தா! போர் அடிக்குது, வேற வெள்ளாட்டு வெள்ளாடலாம்

--------------------------------------

25.  சில்லரை வர்த்தக அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பயனடைவர்- பிரதமர் # அன்புள்ள சிங்க், நீங்க விவசாயக்குடும்பமா?

----------------------------------------

Wednesday, December 07, 2011

ரஜினி-ன் கோச்சடையான் - பஞ்ச் டயலாக்ஸ் - காமெடி கும்மி

http://www.teluguwave.com/wp-content/uploads/2010/07/Soundarya-Rajinikanth-getting-engaged-to-Ashwin.jpg

ரஜினியின் ராணா படம் எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதால் ரஜினி அதுவரை என்ன செய்யலாம்னு யோசிச்சிருக்கார்..என்ன தான் ரஜினி குணம் ஆகி விட்டாலும் அவரது பழைய உடல் பொலிவு இல்லை.. ரொம்ப இளைச்சுட்டார்.. இந்த கெட்டப்பில் வீரமான கேரக்டரும், குதிரை சவாரி செய்யும் மன்னர் கேரக்டருமான  ராணா கேரக்டரில் நடிக்க அவருக்கு தயக்கம் ஏற்பட்டதில் வியப்பு இல்லை.. 


 இந்த சமயத்துல தான் ரஜினிக்கு ஒரு ஐடியா , அவரோட பொண்ணு எடுத்த படமான சுல்தான் தி வாரியர் பிஸ்னெஸ் ஆகாம பொட்டில தூங்குது.. காரணம் அது ஒரு அனிமேஷன் படம்.. ஆனானப்பட்ட டின் டின் கூட தமிழ் நாட்டில்  பிரமாதமாக ஓடலை.. ஜூராசிக் பார்க் எடுத்து ஹிட் ஆக்குன ஸ்பீல்பெர்க்காலயே முடியாதது சவுந்தர்யா ரஜினியால முடியுமா?னு ஒரு கேள்விக்குறி.. 

அதனால எப்படி எம் ஜி ஆர் நடிச்ச கடைசி படத்தோட சில காட்சிகளை வெச்சு கே பாக்யராஜ் அவசர போலீஸ் 100-னு ஒரு படம் குடுத்தாரோ அந்த மாதிரி சுல்தான் த வாரியர் படத்தோட கொஞ்சம் காட்சிகள் ரஜினி நடிச்சா ஒரு படம் ரெடி ஆகிடும்.. ஒரே கல்லுல 2 மாங்கா.. ராணா ரெடி ஆவதற்குள் ரெஸ்ட் எடுத்த மாதிரியும் ஆச்சு.. மகளோட படத்தை முடிச்சுக்கொடுத்த மாதிரியும் ஆச்சு..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRyUNNktUz1KzJn0VU9QyXADtIJCxXVKAkJPq7iX0X6Z2Ya623-1zqUAr6xWlJP1cWc3tZOFhArrCeXu0rMVK-ZBH3HpROb2zijVHQ2UnyZGAqBrJsewCm97VAb8G7bzGyYylSKCM-V2ZR/s1600/Rana-Rajinikanth.jpg

இது நம்ம ஆளு படம் பாலகுமாரன் டைரக்‌ஷன் என இருந்தாலும் டைரக்‌ஷன் மேற்பார்வை கே பாக்யராஜ் என போட்டால் தான் வாங்குவோம்னு விநியோகஸ்தர்கள் அடம் பிடிச்ச மாதிரி மகள் படத்துக்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது என்று ரஜினி கே எஸ் ரவிக்குமார் பெயரை கதை வசனம் டைரக்‌ஷன் மேற்பார்வை என போட ஐடியா செஞ்சிருக்காங்க..

 ஹீரோயின் அனுஷ்கா, தங்கை கேரக்டர்ல சிநேகா என பேச்சு வார்த்தை நடந்துட்டிருக்கு.. 

அந்த கோச்சடையான் படத்துல ரஜினி என்ன பஞ்ச் டயலாக் பேசுவார்? கற்பனை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOQEash-KNLksCGwe1tJSRVKjPdfJ-sIc5eNRYLpZkcUOZhwdpWmZ-US2RPAYJjS1bbrLoonDSbi-h14Uv1a1D_eDbRbVYeD_b0mrKaqCPnYf2JsdKq6E-KIW63fP4_luIJPf5YK0AhDA/s400/soundarya+wedding+photos+2.jpg



1. கோச் (COACH) ச்சை பகைச்ச ப்ளேயர் கூட டீம் ல இருந்துடலாம், இந்த கோச்சடையானை பகைச்சுக்கிட்டா பூமிலயே இருக்க முடியாதுடா கண்ணா!


-----------------------------------
2. டானா (DON) இருந்தவன் தான் இந்த ராணா! அந்த ராணாவுக்கே நைனாடா இந்த கோச்சடையான்

-------------------------------------

3. கால தேவனுக்கே  டைம் குடுத்தவன் நீ.. மரண தேவனுக்கே டேக்கா கொடுத்தவன் நான் 

-----------------------------------------

4. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது ஸ்டைலு.. இரண்டெழுத்தில் என் பேச்சிருக்கும்  - ராணா

------------------------------------------------

5. என் பேரு ராணா…. என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா? என்னை பகைச்சுக்காதே வீணா…என் பேரை கேட்டாலே பேதி ஆகிடும் தானா

-------------------------------------

http://www.hdwallpapers.in/walls/beautiful_anushka-normal.jpg

6.  அரசாங்கமே எனக்கு எதி”ரானா.”லும் … அரசியல் வாழ்வு ஒரு புதி”ரானா”லும் …கலங்க மாட்டான் இந்த ராணா.


-----------------------------------------

7. சபரி மலை போனா தமிழர்களை தாக்கறாங்க.. இந்த அண்ணாமலை மறு அவதாரம் எடுத்து வரனும்னு ஆளாளுக்கு கேக்கறாங்க

---------------------------------

8. அரசியலுக்கு வந்தவங்க சாதிக்காததை அரசியலுக்கு வராம  சாதிக்கறவன் தான் நாட்டுக்கு தேவை

--------------------------------------

9. இகழ்ச்சி அடையான் ஒரு முயற்சி உடையான்.. வீண் புகழ்ச்சி விரும்பான் இந்த கோச்சடையான்

------------------------------------------

10. என் இமேஜ் டேமேஜ் ஆனாலும் எனக்கு கவலை இல்லை, முல்லை பெரியாறு டேம் ஏஜ்டு-னு சாக்கு சொல்லி இடிக்க விட மாட்டேன்

---------------------------------------

http://files.whiteapple4u.webnode.com/200000402-3aaad3ba45/Sneha_blue.jpg

11. இரட்டை இலைக்குத்தான் ஜனங்க ஓட்டு போட்டாங்க.. இரட்டை விலைக்கு இல்ல

------------------------------------

12. கோர்ட்டுக்குப்போறதுக்கே நேரம் இல்லாதவங்க கோட்டைக்கு வந்து என்ன செய்யப்போறாங்க?

----------------------------------------------


டீன் ஏஜ் ஜோக்ஸ் - TEEN AGE JOKS

 
1.காலைல இருந்து கஷ்டப்பட்டு உங்களுக்கு பாடம் நடத்தி இருக்கேன்.. என்ன புரிஞ்சுது?

டீச்சர்.இஷ்டப்பட்டு பாடம் நடத்தலையா? அது ஏன்?

---------------------------------------

2. டியர். நம்ம காதல் ஒரு வெங்காயம் மதிரி..

என்ன உளர்றீங்க?

கட் பண்ணி பாரு.. கண்ல கண்ணீர் வரும் ..

-------------------------------------

3. சாமி!இப்படி ஒரு மொக்கை ஃபிகரை எனக்கு லவ்வரா தந்திருக்கியே.. ஏன்?

டேய்,நாயே, உண்டியல்ல நீ போட்ட எட்டணாக்கு இதுவே அதிகம்டா!

--------------------------------------

4. கண்ணாடியை நாம் கவனமாக கையாள்வது போல மற்றவர்கள் உணர்வுகளை கையாள வேண்டும், சிறு சொல் கூட கீறலை ஏற்படுத்தி விடும்

----------------------------------

5. ஆஃபீஸ்ல எவ்ளவ் பிரஷரை மேனேஜர் என்மேல இறக்கினாலும் நான் கண்டுக்க மாட்டேன்.. ஏன்னா அதிக அழுத்தம் குடுத்துத்தானே கரி வைரம் ஆக்கப்படுது.. ?

---------------------------------

6. கடவுளிடம் நான் கேட்டுப்பெற்ற வரங்கள் நிறைய! ஆனால் கேட்காமலேயே கிடைத்த வரம் நீ!! # SMS

-------------------------------

7. நமக்குக்கிடைக்கும் சந்தோஷங்களுக்கும், நமக்கு வரும் வலிகளுக்கும் நாமே பொறுப்பு

----------------------------

funny and beautiful species pictures1

8. காதல் என்பது ஒருவரை சந்திக்கும்போது வருவதை விட அவரைப்பற்றி நினைக்கும்போதே அதிகம் வருகிறது

---------------------------------

9. அன்பில் தன் அம்மாவுடன் போட்டி போடக்கூடிய தகுதி படைத்த பெண்ணையே ஆண் தன் துணையாக அடைய நினைக்கிறான்

--------------------------------

10. உனக்கு உரிமை இல்லாததை அடைய நினைக்காதே.. முயற்சிக்காதே! உனக்கு உரியதை விட்டுத்தராதே!

---------------------------------

11. ஒரு ஃபிகரை புரிஞ்சுக்கறதுங்கறது 2 KBPS ஸ்பீடுல 1 GB  ஃபைலை லோடு பண்றப்ப 95 % கம்ப்ளீட் ஆகறப்ப கரண்ட் போகுமே அது போல!

---------------------

12.உன்னை நம்பும் இதயத்தை விட அழகானது வேறு எதுவும் இல்லை

-----------------------------------

13. ஆணின் பலவீனம் பெண்ணின் தற்காலிக அழகை நிரந்தரம் என நம்புவது, பெண்ணின் பலவீனம் ஆணின் நிரந்தர அறிவை எதேச்சையானது என நினைப்பது

---------------------------------

14. நீ ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் மரணம் உன்னை விட்டு விலகுகிறது, என் சரணம் உன்னை நோக்கி வருகிறது

-------------------------------

15. நண்பனும், எதிரியும் நமக்குள்ளே. உன் மனதை நீ அடக்கினால் அது உன் நண்பன், அடக்காவிட்டால் அதுவே எதிரி

-----------------------------------





16. அத்தை பையனை மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னேன், அதிர்ச்சில மயக்கம் ஆகிட்டான்.


ஓஹோ மாமா ஸ்டேஜ்ல இருந்து கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டானா?


-------------------

17. பேங்க்ல ஒர்க் பண்ற பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன் .

ஓக்கே, குடும்ப”பாங்க்”கான பொண்ணா பார்த்துடலாம்

----------------




18. நம் இருவரில் பரஸ்பரம்  யார்  யார் மீது அதீத அன்பு வைத்திருக்கிறோம் என்று பொறாமை அற்ற போட்டி நிலவுகிறது

--------------



19. பிளாக்கில் விசிட்டர்ஸ் டுடே ஜீரோ என காண்பித்தால் பிளாக் ஓனரே  அந்த பிளாக் பக்கம் போக வில்லை என்று அர்த்தம்


------------------------


20.  என் உள்ளக்காதலை அவ கிட்டே சொன்னேன், சாரி ஐ ஆம் ஆல்ரெடி மேரீடுன்னா..

அப்புறம்?


என் கள்ளக்காதலை சொன்னேன், ஓக்கேன்னுட்டா..

--------------------------

 



21.  உன் வாசம் வீசும் கர்ச்சிப் வேணும் - கல்யாணத்துக்கு முன்

ஏண்டி, ஒழுங்கா ஒரு கர்ச்சீப்பைக்கூட  துவைக்க மாட்டே? -

(கல்யாணத்துக்குப்பின்)


---------------------------

22. பிளாக்கில் உருப்படியாக பதிவை ரெடி பண்ணாமல் வாசகரை மட்டும் ரெடி பண்ணினால் அவர் எதை படிப்பார்?


----------------------------

23. லொள்ளானவனிடம் ஐ லவ் யூ சொன்னாள். ஜொள்ளானவன் ஆனான். கல்யாணம் எப்போ? என்றாள்.தில்லானவன் அல்ல என்றான் # சே! இவனும் எஸ்கேப்பா?


-------------------------

24. சுவரில் ஆணி அடிக்க எதுக்கு உன் மனைவி கையை யூஸ் செஞ்சே?

அவ தான் நக ”சுத்தி”ன்னா


-------------------------------

25.  லாடம் கட்டுனா குதிரை வேகமா ஓடும், படப்பெட்டிக்கு லாடம் கட்டுனா டப்பா படம் பிரமாதமா ஓடிடுமா? டவுட்டு


-------------------



 

26 அந்த லேடீஸ் காலேஜ்ல வாலிபால் டீம் 2 இருக்காமே?


ஆமா, வாலிப பால் டீம், வயசான பால் டீம் # ஜூனியர்  VS  சீனியர்

-----------------

27. XQS மீ சார், என் பிளாக் பக்கம் வந்துட்டுப்போக முடியுமா?

படிக்கற அளவு பிரமாதமா மேட்டர் இல்லையே ?

உங்களை யார் படிக்க சொன்னது? ஜஸ்ட் விசிட்

-------------------------


28. கலைஞர் அய்யா, எல்லாரும் கிண்டல் பண்றாங்க,இனியாவது ஊழல் பண்றதை நிறுத்துங்க.


எத்தனை பேர் கிண்டல் பண்ணினாலும் யாராலும் தடுக்க முடியாது.

-------------------------



29 பெண்ணின் கஷ்டங்களை ஓரளவுக்காவது உணர ஆண் பெண்ணாக பிறப்பெடுக்க தேவை இல்லை, பெண் உடை அணிந்து ஒரு நாள் வீட்டில் உலாவந்தால் போதும்


------------------

30. வெய்யிலிலும், மழையிலும் எனக்கு உன் நினப்பு,ப்ளீஸ் திருடிட்டுப்போன குடையை மட்டும் திருப்பிக்குடுத்துடு #  SMS


---------------------





31. எதுவுமே சுலபம் இல்லைதான், ஆனால் எல்லாம் பாஸிபிள்தான் # தேவை முயற்சி

-----------------------

32  விக்ரமை காதலிக்கிறேன்! விஷாலை ரொம்ப பிடிக்கும்!! - ஸ்ரேயா # விக்ரம் தொழில் அதிபர் அல்ல,விஷால் எழில் அதிபர் அல்ல,அப்புறம் ஏன்?


---------------------------

33  ஐஸ்வர்யா தனுஷ்இயக்கும் முதல் படமான "3"-ல் இருந்து நடிகை அமலாபால் திடீரென நீக்கம் # முதல்ல பட டைட்டிலை மாத்துங்க. நாமம்தான் நினைவு வருது

--------------------------

34 அரவக்குறிச்சி திமுக., எம்.எல்.ஏ.,கைது:காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய விவகாரம் # அனுமதி கேட்டப்ப கொடுக்காம விட்டுட்டு!!

-------------------------------

35 . தனித்திருந்தேன்,பசித்திருந்தேன்,விழித்திருந்தேன். நீ வரவே இல்லை. # மீறி வந்தா செக்யூரிட்டிக்கு உங்கம்மாவையும் கூடவே கூட்டிட்டு வந்துடறே?

Tuesday, December 06, 2011

பிரபல பத்திரிக்கைகளின் கவனத்திற்கு.. இது நியாயமா?

வலைத்தளங்களில் ட்விட்டரின் சேவை, பங்களிப்பு மகத்தானது,,அப்பப்ப நடக்கும் உலக நடப்புகளை ட்விட்டரில் உடனுக்குடன் அறிய முடிகிறது .17.7. 2010 -ல் நான் வலைத்தளம் தொடங்கி விட்டாலும்  ஆனந்த விகடனில் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்ஸ் அப்டேட் பார்த்து 1.2.2011 -ல் தான் ட்விட்டர் உலகத்திற்கே வந்தேன். 

ஆனால் வாசகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்ற வலை பாயுதே ட்வீட்ஸ்க்கு சன்மானம் இல்லை.. இது ஏன்? வாரா வாரம் 8 லட்சம் புத்தகம் விற்கும் ஆனந்த விகடன் ட்வீட்ஸ் போட 2 பக்கங்கள் ஒதுக்குகிறது. அதில் மினிமம் 20 ட்வீட்ஸ் வருகிறது.. அதில் ஒரு ட்வீட்டுக்கு ரூ 100 பரிசு கொடுத்தால் என்ன? எழுதுபவர்களுக்கு உற்சாகமாக இருக்குமே?

அதே போல் படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்புவதில்லை.. ட்வீட் போடுபவர்களின் பயோ செக் பண்ணி பார்த்தால் அவர்கள் வலை தள முகவரி அல்லது ஃபோன் நெம்பர், அல்லது மெயில் ஐ டி இருக்கும்.. அதன் மூலம் முகவரி விசாரித்து  சன்மானமும் , காம்ப்ளிமெண்ட்ரியும் அனுப்பலாமே?

அதே போல் குமுதம் ரிப்போர்ட்டரில் ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் 2 வாரங்களாக ட்வீட்ஸ் போடுகிறார்கள்.. அதை தொகுப்பவர் குமுதத்தில் பணியாற்றும்  வந்தியத்தேவன் என்பவர்..  இவர்களும் சன்மானம், புத்தகப்பரிசு அனுப்ப பரிசீலனை செய்ய வேண்டும்.. 

தின மலர் பேப்பரில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முழுப்பக்கமும்  ஃபேஸ் புக், ட்விடர் கமெண்ட்ஸ்க்கு ஒதுக்குகின்றனர்... அவர்கள் பேப்பரை அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை.. சன்மானமாவது அனுப்ப வேண்டும்..தினமலரில் ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு தருவதால் ட்வீட்க்கு ரூ 250 தாராளமாக தரலாம்.

மல்லிகை மகள்  எனும் பெண்கள் மாத இதழை நண்பர்  திரு ம கா சிவஞானம் நடத்துகிறார்.. அவர் வலைப்பூவும் வைத்துள்ளார்...  அவர் தன் பத்திரிக்கையில் வரும் ஜோக்கிற்கு ரூ 50 பரிசு தருகிறார்.. அவர் அந்த இதழில் ட்விட்ஸ் க்கு ஒரு பக்கம் ஒதுக்குகிறார்.. அந்த புக் சேல்ஸ் குறைவு என்பதால் அவர்கள்  புக் மட்டுமாவது அனுப்பலாம்.. 

புதிய தலை முறை புக் ஆசிரியர் மாலனின் மேற்பார்வையில் நடை பெறுகிறது..ஆரம்பத்தில் 3 வாரங்கள் ட்வீட்ஸ் போட்டாங்க.. இப்போ போடறதில்லை .. ஏன்னு தெரியலை. 


இந்தியா டு டே புக்கில் ஒரே ஒரு இதழில் ட்வீட்ஸ் போட்டாங்க.. அப்புறம் போடறதில்லை.. 


பாக்யா வார இதழில் நெட்டில் இருந்து சுட்டவை என்ற டைட்டிலில் இரு வாரங்களாக ஜோக் போடறாங்க..

நிற்க.. மாறி வரும் உலகில் ட்விட்டரின் பங்களிப்பை இணைய  இணைப்பு இல்லாத மக்களிடம் கூட அதை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளின் பணி மகத்தானது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.. ஆனால் அதே சமயத்தில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானமும், பத்திரிக்கைகளை அதாவது படைப்பு வந்த புக்கை படைப்பாளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. 

அப்புறம்.. ட்விட்டர்களில் ரெகுலராக சிலரது ட்வீட்ஸ்களே மீண்டும் மீண்டும் வருகிறது.. புது முகங்களுக்கு வாய்ப்பு அதிகம் வருவதில்லை.. இதை தவிர்க்க பத்திரிக்கைகள் பிரசுரம் ஆகும் ட்வீட்ஸ்களில் பாதி பிரபல ட்வீட்டர்ஸ்.. மீதி பாதி புது முகங்களுக்கு என ஒதுக்கலாம்.. ட்விட்டரில் இருக்கும் பிரபல ட்வீட்டர்களும் அதாவது தங்களிடம் அதிக ஃபாலோயர்ஸ் உள்ள ட்வீட்டர்களும் புதுமுக ட்வீட்டர்ஸ்க்கு RT செய்து அவர்களுக்கு உதவலாம்.. 

ஆல்ரெடி பலர் பலரது ட்வீட்களை ரீ ட்வீட் செய்து கொண்டு தான் இருக்காங்க.. அதை எல்லோரும் செய்ய முற்பட வேண்டும்.. 

இப்போது நான் சொன்னது எல்லாம் சுட்டிக்காட்டலே, சொல்லிக்காட்டல் அல்ல.. எனவே பத்திரிக்கைகள் இக்கட்டுரையின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பதிவில் கமெண்ட் போடும் ட்வீட்டர் நண்பர்கள் , பதிவர்கள் தங்கள் ஆதங்கத்தை, கருத்தை த்தெரிவிக்கலாம்..