Saturday, December 08, 2012

மத்திய அரசின் ஆதார் அடையாள அட்டைக்குழப்படிகள் - ஓ பக்கங்கள் ஞாநி சாட்டை அடி


பக்கங்கள்

கை மேல காசு!

ஞாநி

மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறிய வேண்டியது தான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கிக் குளிர் காயலாம்.
அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்றும், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது.
இதை உடனடியாக இந்தியாவில் 51 மாவட்டங்களில் செயல்படுத்தப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதியகை மேல காசுதிட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போவது ஆதார் அடையாள அட்டைதான்.
ஏன் இந்தத் திட்டம்? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதைத் தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான்.

யார் தகுதியானவர், யார் தகுதியில்லாதவர் என்பதை இனி ஆதார் அட்டைதான் தீர்மானிக்கும். ஆதார் அட்டை தரும்போது ஒருவரிடம் பெற்ற விவரங்களின் அடிப்படையில் அவர் மான்யத்துக்கு உரியவரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். இதற்கு ஏன் தனியே ஆதார் அட்டை? இதைத் தரும்போது ஒருவரின் சமூகப் பொருளாதார நிலையைக் கணக்கிடுவது போல, ரேஷன் அட்டை வைத்திருப்பவரின் தகுதியையே விசாரித்து தகுதியற்றவரை நீக்கியிருக்கலாமே? கூடாது என்கிறது அரசு. ஆதார் அட்டை என்பது ஒரு பிரஜையின் அடையாளத்தைக் கொண்டு, ஏழைமைக்கான சாட்சியம், வெவ்வேறு திட்டங்களின் கீழ் பெறும் கூலியின் பதிவுகள், மான்யங்களின் அளவுகள், அரசிடமோ, வங்கியிடமோ கேட்கும் கடன், பெற்ற கடன், கட்டிய கடன் விவரங்கள் என்று எல்லாவற்றையும் கணினி வழியே பதிந்து வைக்க வசதியான ஒற்றைப் பதிவு முறை என்கிறது அரசு.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆதார் அட்டை என்பதற்கு இன்னமும் சட்டப்படியான சம்மதமே வரவில்லை. ஒவ்வொரு பிரஜையும் இந்த அட்டை வைத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. விரும்பினால் இந்த அட்டையைப் பெறலாம் என்றே இப்போதைய நிலை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் இதுவரை வெறும் 22 கோடி பேர் மட்டுமே ஆதார் அட்டைக்காகப் பதிவு செய்துள்ளனர் (தமிழ்நாட்டில் 69 லட்சம் பேர்தான்.) ஆதார் அட்டையை பிரஜா உரிமை அட்டை போல அரசு ஆக்கப்பார்ப்பதில், ஒரு தனி நபரின் அந்தரங்க உரிமைகளில் அரசு கண்காணிப்புக்கு இடம் இருப்பதாக ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்பியது. எனவே ஆதார் அட்டையை அனைவருக்குமானதாக ஆக்கும் சட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமல் இருக்கிறது.
ஆனால் இப்போது அவசர அவசரமாக மன்மோகன் அரசு ஆதார் அட்டை அடிப்படையில் இனி மான்யம் எல்லாம் ரொக்கமாக மட்டுமே தரப்படும் என்று அறிவிப்பதன் ரகசியம் என்ன? பல வருடங்களாகவே உலக வங்கியும் அமெரிக்க அரசின் தனியார் சார்பு பிரசாரகர்களும் இந்தியாவில் உணவு உட்பட எதற்கும் அரசு மான்யம் கொடுக்கப்படக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறார்கள். எல்லாவற்றையும் மார்க்கெட்டே தீர்மானிக்க விடவேண்டும் என்பதே அவர்கள் நிலை. ஆனால் இதைச் செயல்படுத்த விரும்பியும் முடியாமல் மன்மோகன் இதுவரை திணறி வந்தார். இப்போது தம் பதவிக்காலம் முடியும் வேளையில் உலக முதலாளிகள் சார்பான எல்லா முடிவுகளையும் செயல்படுத்திவிட்டே போவது என்ற பிடிவாதத்துக்கு வந்துவிட்டார்.

மான்யங்களை ஒழிப்பதுதான் அவரது இறுதி நோக்கம். முதல் கட்டத்தில் மான்யமாகப் பொருட்களைத் தருவதை நிறுத்தி காசாகக் கொடுக்க ஆரம்பித்தால், அந்தக் காசைக் கொண்டு தனியாரிடம்தான் மக்கள் எதையும் வாங்கும் நிலை உருவாகும். அடுத்த கட்டமாக, காசாகத் தரும் மான்ய அளவைப் படிப்படியாகக் குறைத்து நீக்கிவிடலாம் என்பதே தொலைநோக்குத் திட்டம்.
இதன் உடனடி விளைவு என்ன என்று பார்க்கலாம். அரசு நடத்தி வரும் ரேஷன் கடைகளை எல்லாம் மூடவேண்டி வரும். லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள், இதர தனியார் கடைகள் போல இயங்கமுடியாமல் மூடப்படும். ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றை அரசு விற்கப்போவதில்லை என்றால், அடுத்த கட்டமாக அவை எதையும் அரசு விவசாயிகளிடம் இருந்து வாங்கத் தேவையில்லை. குறைந்தபட்ச கொள்முதல் விலையின் மூலம் அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் தருவது அடியோடு கைவிடப்படும். எல்லா விவசாயிகளும் தங்கள் பொருட்களை, தனியாருக்கு மட்டுமே விற்கும் நிலை ஏற்படும். தனியார் கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு பதுக்கலாம். செயற்கையான பொருள் பஞ்சத்தை ஏற்படுத்தி விலையை உயரச் செயலாம். ஆனால் அரசு தன்வசம் இருக்கும் ஸ்டாக்கை பயன்படுத்தி விலையைச் சரி செய்ய வைக்க முடியாது. ஏனென்றால் அதனிடம் ஸ்டாக்கோ ரேஷன் கடையோ இருக்காது. அரசு காசாகக் கொடுத்த மான்யத்தைக் கொண்டு தனியார் கடையில் மட்டும்தான் மக்கள் பொருள் வாங்கும் நிலை என்றால் விலைகளை மார்க்கெட்தான் தீர்மானிக்கும்.
அரசு பொருளுக்குப் பதில் கொடுக்கும் மான்யக் காசை ஆதார் அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தும் என்று அறிவித்திருக்கிறது. இந்தியாவில் வறுமையிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயும் இருப்போர் இதற்காக வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். கிராமப் புற மக்கள் தொகையில் வெறும் 54 சதவிகிதம் பேருக்குத்தான் வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆதார் அட்டை இருப்போருக்கெல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த பட்சம் ஒரு வங்கிக் கிளை திறக்க வேண்டும். அல்லது .டி.எம். திறக்க வேண்டும். அது வங்கிக்கே கட்டுப்படியாகாது. இதற்குப் பதிலாக நடமாடும் ஏஜென்ட்டுகளை ஒவ்வொரு கிராமத்திலும் நியமித்து அவர் கைமெஷின் மூலம் ஒவ்வொருவர் கணக்கிலும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துச் சொல்லும் வசதியை உருவாக்க ஒரு யோசனை இருக்கிறது. இதுவும் நடைமுறையில் சிக்கல்தான். பொருள் வாங்க மான்யப் பணத்தை எடுக்க வங்கிக்குத்தான் போயாகவேண்டும்.

வங்கிக் கணக்கு யார் பெயரில் இருக்கும்? ரேஷன் அட்டையில் அப்பா பெயர் இருக்கலாம். ஆதார் அட்டை வைத்திருக்கும் மகனோ, மகளோ கூலியோ மான்யமோ பெறுவதானால் அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தேவை. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கும் தேவை. ஆதார் அட்டையும் தேவை என்று ஆகிவிடும். ரேஷன் அட்டைக்கும் ஆதார் அட்டைக்கும் இடையே முரண்பாடு இருந்தால் தீர்ப்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த ஓட்டையான திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியே தீரப் போவதாக மன்மோகன் அரசு பிடிவாதமாக அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்பதற்கு முன்னோடியாக ஓர் இடத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் கோட் காசிம் கிராமத்தில் இது எப்படி செயல்பட்டது என்பதை அவுட்லுக் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை இங்குள்ள ரேஷன் கடையில், மண்ணெண்ணெய் மான்ய விலைக்கு பதில் மார்க்கெட் விலையில் விற்கப்பட்டது. மான்ய விலை லிட்டருக்கு 15 ரூ. மார்க்கெட் விலை 50 ரூபாய். மக்களிடம் 35 ரூபாய் உங்கள் கணக்கில் அரசு போடும் என்று சொல்லப்பட்டது. மக்கள் கடையில் போய் 50 ரூபாய்க்கு வாங்கியாக வேண்டிய நிலை. வாங்கினார்கள். ஆனால் மூன்று நான்கு மாதங்களாகியும் வங்கிக்கணக்கில் மான்யம் வந்து சேரவில்லை. எப்போது வங்கிக் கணக்கில் வரும்? மாநில அரசுக்கு வந்து விட்டது. சிக்கிரமே அனுப்புவோம் என்கிறார் கலெக்டர். அதுவரை முன்பணம் போட்டு கிரசின் வாங்க, வறுமைக் கோட்டில் இருப்பவர்களால் எப்படி முடியும்? திட்டத்தின் கீழ் பதிவு செய்த 350 பேரில் இப்போது 30 பேர்தான் கடைக்கு வந்து வாங்குகிறார்கள். கிரசின் உபயோகிக்கவே முடியாமல் போய் சுள்ளி, விறகு என்று தேடப் போய்விட்டார்கள். இதுதான் சோதனை முயற்சியின் நிலை.
பணத்தை முன்கூட்டியே கொடுக்கும் ஏற்பாடு வந்துவிடுவதாகவே வைத்துக் கொள்வோம். தமிழ் நாட்டில் இப்போது விலையில்லாத அரிசி 20 கிலோ தரப்படுகிறது. இது திரும்ப கடைக்குப் போய் மார்க்கெட்டில் இட்லி மாவுக்காக விற்கப்படும்போது கிலோ நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அரிசியின் மார்க்கெட் மதிப்பு நான்கு ரூபாய்தான். என்னைப் போன்ற வசதியானவர்கள் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரையிலான அரிசியை உபயோகிக்கிறோம். இப்போது 20 கிலோ இலவச, மன்னிக்கவும் விலையில்லாத அரிசி பெறுவோர் இனி மார்க்கெட்டில்தான் அரிசி வாங்கிச் சோறு சமைக்க வேண்டுமென்றால், நிச்சயம் நான்கு ரூபாய் அரிசியை வாங்கமாட்டார்கள். குறைந்தபட்சம் கிலோ 15 ரூபாய் அரிசியாவது தேவை. அரசு மான்யமாக எதைக் கொடுக்கும்? இப்போது தரும் நான்கு ரூபாய் மதிப்புள்ள அரிசியானால் எவ்வளவு மான்யம்? 15 ரூபாய் அரிசியென்றால் எவ்வளவு மான்யம்? இந்தக் குழப்பங்கள் தவிர வேறு ஓர் அடிப்படை பிரச்னை ரொக்க மான்யத்தில் இருக்கிறது.

காசாக ஏழை மக்கள் கையில் தரும் பணம், எந்த நோக்கத்துக்காகத் தரப்படுகிறதோ அதே நோக்கத்துக்காகச் செலவழிக்கப்படும் வாய்ப்பு நம் சமூகச் சூழலில் மிக மிகக் குறைவு. உணவுப் பொருளாகத் தரும் போது நிச்சயம் அது வீட்டுக் குழந்தைகள் வரையில் உணவாகவே போய்ச் சேரும் வாய்ப்பு இருக்கிறது. காசாகக் கொடுத்தால், நமது டாஸ்மாக் கல்ச்சரில், நிச்சயம் வீணாகிப் போகும். வீட்டுப் பெண்கள் பெயருக்கே வங்கிக் கணக்கு வைத்து பணத்தைக் கொடுத்தால் கூட, இன்று ஏராளமான ஏழைமக்கள் வீடுகளில், பெண்ணை மிரட்டி, அடித்து உதைத்து, கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி பணத்தைப் பறிக்கும் கணவன்கள், பிள்ளைகள் எனக்குத் தெரிந்தே பலர் உள்ளனர்.
இன்னொரு பக்கம், ஏழைமை அதிகமாக அதிகமாக, மத, சாதிச் சடங்குகளில் சாங்கியங்களில் பணத்தை வீணடிக்கும் விகிதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டுப் பணியாளரான விதவைத் தாய் தம் மகன் திருமணத்துக்காக ஐந்து வட்டியில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலங்களில் நகரங்களையொட்டிய பகுதிகளில் பல விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்குத் தங்கள் நிலத்தை விற்று விட்டு, சில மாதங்களிலேயே ஓட்டாண்டி களான நிகழ்ச்சிகள் கணிசமாக உள்ளன.
ஆனால் மன்மோகன் அரசுக்கு இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. இந்தியாவில் தனியார் பெரு முதலாளிகளின் வணிக வாய்ப்பைப் பெருக்குவது, அந்நிய வங்கிகளுக்கு புது வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இந்தியாவில் ஈட்டிய பணத்தை தம் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல அந்நிய கம்பெனிகளுக்கு உதவுவது, அவர்களுக்கெல்லாம் மின்சாரம் முதல் நிலம் வரை மான்யங்களை அள்ளித் தருவது என்ற அவரது கொள்கையை எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்து முடிக்கத் துடிப்பவராக அவர் இருக்கிறார்.
இதுவரையில் அவரைத் தடுக்க எந்தச் சக்தியாலும் முடியவில்லை. ஆனால் ஆதார் முதல் முட்டுக்கட்டையாக அமையலாம். ஏனென்றால் அதைச் செய்து முடிக்க இன்னும் ஓரிரு வருடம் தேவை. அதற்குள் வரும் தேர்தலில் அவர் ஆட்சியை முடித்து வைக்கும், ஒட்டகத்தின் முதுகை முறித்த கடைசிப் பொட்டலமாக ஆதார் அமையலாம்.

நன்றி - கல்கி

சென்னையில் ஃபார்முலா 1 கார் ரேஸ்

சென்னையில் ஃபார்முலா-1?



ஐபிஎல், ஃபார்முலா-1 என இந்தியாவில் கிளாமர் கலந்த விளையாட்டுகள் அரங்கேறும் சீஸன் இது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது ஃபார்முலா-1 கார் ரேஸ். உலகின் உச்சபட்ச பணக்கார விளையாட்டுப் போட்டி இந்த கார் ரேஸ்தான். பல லட்சம் கோடிகள் புரளும் இது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல, மிகப் பெரிய பிசினஸ்! 



டெல்லி அருகே நொய்டாவில் 2,000 கோடி ரூபாய் செலவில் 875 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது, இந்தியாவின் ஃபார்முலா-1 ரேஸ் டிராக். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாகி இருக்கும் இந்த ரேஸ் டிராக்கில், இந்த ஆண்டு ரேஸைக் காணக் குவிந்தவர்களின் எண்ணிக்கை 62,000. 1,000 ரூபாயில் இருந்து துவங்கி முக்கிய விருந்தினர்கள் பகுதியில் அமர, லட்சம் ரூபாய் வரை டிக்கெட் விலை போனது.



பெரும்பாலும் ஆண்களின் விளையாட்டு என்று சொல்லப்படும் ஃபார்முலா-1 ரேஸை இயக்குவதில், முக்கியப் பங்கு பெண்களுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு அணியிலும் குறைந்தது முப்பது பெண்கள் இருக்கிறார்கள். 


சாபர் எனும் ஃபார்முலா-1 அணியின் தலைவர் மோனிஷா கேட்டல்பார்ன் பெண்தான். செய்தித் தொடர்பாளர், மெக்கானிக்கல் இன்ஜினீயர், சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என ஒவ்வொரு அணிக்குள்ளும் பல பெண்கள் முக்கிய வேலைகளைச் செய்கிறார்கள். ஒரு ரேஸ் முடிந்ததும், அடுத்த வாரம் இன்னொரு நாட்டில் ரேஸ் நடக்கும். இதனால், ரேஸ் நடந்துகொண்டு இருக்கும்போதே, வீரர்களின் உடைகள் ஆரம்பித்து பலவற்றையும் பேக் செய்து விமானத்துக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பித்துவிடும். இதை எந்தத் தவறும், பிரச்னையும் இல்லாமல் ஃபார்முலா-1 கார்களின் வேகத்துக்கு இணையாகச் செய்து முடிப்பது முழுக்க முழுக்க பெண்களின் பொறுப்பு. 
 
 
 
சியர் லீடர்ஸ் போல, ஃபார்முலா-1 ரேஸ் டிராக்கில் 'பிட் பேப்ஸ்’ என்று அழைக்கப்படும் பிகினி தேவதைகள் உலா வருவார்கள். விஜய் மல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா அணியில் இந்த பிட் அழகிகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இந்த முறை மல்லையாவே பஞ்சத்தில் இருந்தாலும், பிட் அழகிகளுக்கு குறைவைக்கவில்லை. பிகினியில் நான்கு பேர், புடவையில் நான்கு பேர் என ரேஸ் டிராக்கை சூடேற்றியது மல்லையாவின் அணி. ரெட்புல் அணியில் சியர் லீடர்ஸ் இல்லை. அதற்குப் பதில் வீரர்களின் பாதுகாப்புக்கு இரண்டு சிக்ஸ் பேக் பெண்களை நிறுத்தி வைத்திருந்தது.


மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கும் கார்களையும், ரேஸ் வீரர்களையும்விட ஃபார்முலா-1 ரேஸில் வெற்றிக்கு மிக முக்கியமானவர்கள் 'பிட் க்ரூ’ என்று சொல்லப்படும் மெக்கானிக்குகளும், ட்யூனர்களும்தான். ரேஸ் நடந்துகொண்டு இருக்கும்போது ஒவ்வொரு ரேஸ் வீரரும் டயர் மாற்ற, ஸ்டீயரிங் மாற்ற, உடைந்த பாகங்களை மாற்ற என பல்வேறு காரணங்களுக்காக தங்களது பிட் ஸ்டாப் (மெக்கானிக் அறை)க்குத் திரும்புவார்கள். இந்த இடத்தில் எவ்வளவு வேகமாக வேலை முடிந்து, மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கும் வீரரே வெற்றி பெற முடியும். வெறும் மூன்றே விநாடிகளில் நான்கு டயர்களையும் மாற்றுவது, ஸ்டீயரிங்கை மாற்றுவது என எல்லா வேலைகளும் இங்கே கண் சிமிட்டும் நேரத்தில் பிட் க்ரூ செய்து முடிக்கும். இந்திய ரேஸில், முன்னாள் சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டனின் கார் ஸ்டீயரிங் இரண்டே விநாடிகளில் மாற்றப்பட்டு, அவர் தொடர்ந்து ரேஸை ஓட்டியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்திய ரேஸைக் காண ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது இரண்டு மகன்களுடன் வந்திருந்தார். முதலமைச்சர் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல், அதுவும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் மகன்களோடு ஜாலியாக ரேஸ் டிராக்கைச் சுற்றி வந்துகொண்டு இருந்தார். உமர் அப்துல்லாவின் கார்/பைக் ரேஸ் நண்பரான ராகுல்காந்தி, டெல்லியில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றதால், ஃபார்முலா-1 பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.



ஃபார்முலா-1 ரேஸில் பங்கேற்றுவரும் ஒரே இந்தியர் நரேன் கார்த்திகேயன் மட்டுமே. நரேனைத் தவிர ரேஸ் வீரர்கள் யாரும் இல்லை என்றாலும், தொழில்நுட்ப ஏரியாக்களில் இந்தியர்களின் பங்கு அதிகம். தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், இந்திய ரேஸில் வென்றவருமான செபாஸ்ட்டியன் வெட்டலின் முதன்மை மெக்கானிக்குகளில் ஒருவரான பால் சிரா இந்தியர்தான். கேட்டர்ஹாம் அணியின் தலைமை இன்ஜினியர் யாஷ் பத்தாரே, மைக்கேல் ஷூமேக்கரின் பிஸியோதெரப்பிஸ்ட் பல்பீர் சிங் என இந்தியர்களின் பங்கு ஃபார்முலா-1 ரேஸில் அதிகம்.



மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என்கிற பரபரப்புக்கு இடையே, ஃபார்முலா-1 ரேஸைக் காண காதலி கீத்தா பஸ்ராவுடன் வந்திருந்தார் ஹர்பஜன் சிங். கணவர் ஷோயிப் மாலிக்குடன் வந்திருந்த சானியா மிர்சா, மீடியாக்களிடம் பேச்சுக் கொடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். சோனாக்ஷி சின்ஹா, அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் ரேஸ் டிராக்கில் அட்டென்டன்ஸ் போட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.



இந்தியாவில் கைது செய்யப்பட்டு இருக்கும் இத்தாலியின் கப்பல் காவலர்களுக்கு ஆதரவாக, இத்தாலியின் கப்பல் படை கொடியுடன் ஃபெராரி களம் இறங்கியது. இந்திய வெளியுறவுத் துறை இதற்கு வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தாலும், கப்பல் கொடிக்கும் இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது ஃபெராரி.



2,000 கோடிக்கும் மேல் கார் ரேஸ் மூலம் சம்பாதித்த, ஏழு முறை உலக சாம்பியன் ஆன மைக்கேல் ஷூமேக்கர், இந்த ஆண்டுடன் கார் ரேஸில் இருந்து ஓய்வு பெறுவதால், டெல்லியில் ஷூமேக்கரைக் காண கூட்டம் மொய்த்தது. ரேஸ் ஆரம்பித்த சில விநாடிகளிலேயே மைக்கேல் ஷூமேக்கரின் கார் மற்றொரு காரோடு உரச... ஷூமேக்கரின் டயர் கிழிந்தது. கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டார் ஷூமேக்கர். இருப்பினும், ரேஸ் முடிந்ததும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க, போட்டோகிராஃப் எடுக்க கூட்டம் அள்ளியது. சிரித்த முகத்துடன் ரசிகர்களுக்குக் கை குலுக்கினார் ஷூமேக்கர்.



கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து ரேஸை முடித்துவைக்க... இந்த ஆண்டு கொடி அசைக்கும் பெருமையைப் பெற்றவர், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ககன் நரங்.



ஃபார்முலா-1 ரேஸை நடத்தும் பெர்னி எக்கோலஸ்ட்டன், ''இந்தியாவில் இன்னொரு நகரத்திலும் ரேஸை நடத்தலாம். அந்த இடம் மும்பையாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.



சென்னையில்தான் பல ஆண்டுகளாக ரேஸ் டிராக் இருக்கிறது என்றாலும், ஐபிஎல் போட்டிகளுக்கே விழி பிதுங்கும் சென்னை... பார்முலா-1 ரேஸைத் தாங்குமா?


நன்றி - விகடன்

கமல் ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? காமெடி கற்பனை

காமெடி எக்ஸ்பிரஸ் - 4

விஸ்வரூப குணலிங்கர் ஒர்க் அவுட் ஆகுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

அதிகாலையிலேயே ஸ்டீவன் ஸ்பீல் பர்கிடமிருந்து போன் கால் வருமென்று எதிர்பார்க்கவில்லை.
அமெரிக்கன் ஃபில்ம் மார்க்கெட்டில் பார்த்தபோதே மனுஷன் கொஞ்சம் பேஸ்தடித்த மாதிரி சுவரோரமாகபைப்புடன் திருட்டு தம் அடித்து கவலையுடன் நின்று கொண்டிருந்தார்.
பாவம், அவருக்கு என்ன கஷ்டமோ? ‘பாண்ட்படத்தோடு நம்பலிங்கன்படத்தை மோதவிடப் போகிறோமே, லிங்கனுக்கு கை கால் முறிந்து விடுமோ?’ என்ற கவலையாக இருக்கலாம். எதற்கும் ஒருஹலோசொல்லி வைப்போம், அடுத்த படத்துக்கு நம்மை கூப்பிட்டாலும் கூப்பிடலாம் என்று பிசினஸ் கார்டை அவரிடம் கொடுத்திருந்தேன்.
இப்போது அதிகாலையில் போன் அடிக்கிறது.
துள்ளி எழுந்தேன்.
சொல்லுங்ணா, எப்ப ஷூட்டிங் போறோம்? எனக்கு ஸ்க்ரிப்ட் தெரிய வேணாம், ரோல் தெரியவேணாம், சம்பளமே வேணாம், சாப்பாடு கூட வேணாம்" என்று ஆரம்பித்தவனை ஸ்டீவன் தடுத்து நிறுத்தினார்.
ராம், இந்தியாவுல என்லிங்கன்படத்தை ரிலீஸ் பண்றீங்களா? அந்த ஏரியா மட்டும் இன்னும் போணி ஆகலை."
என்னது, ஸ்பீல்பர்க்குடன் பார்ட்னராக பிசினசா? அவர் படத்தில் நடித்து நாறடிப்பதைவிட இது பெட்டர் இல்லையோ?
ஆஹா, பேஷ், பேஷ்" என்று உடனே ஒப்புக்கொண்டேன்.
லிங்கன்படப்பெட்டியுடன் சென்னையில் இறங்கினேன்.
முதல் போன் கால் இந்து பின்னணியோடு ஏதோ ஒரு கட்சியிடமிருந்து வந்தது,
லிங்கன் என்பது சிவனை அவமதிப்பது போல இருக்கிறது. உடனே தலைப்பை மரியாதையாகலிங்கர்என்று மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்."
இந்தியாவில் சினிமா பிசினஸ் பண்ண நினைத்த உடனேயே தகராறு வேண்டாம் என்று நினைத்துசரி, லிங்கர் என்று மாற்றி விடுவோம். இதையெல்லாம் ஸ்பீல்பர்கிடம் சொல்லி விளக்கம் கொடுத்து மாளாதுஎன்று நானே சொந்தமாக முடிவெடுத்தேன். ப்ரீவியூவுக்கு ஏகப்பட்ட சிவனடியார் கூட்டம். பிரசாத விநியோகம் செய்து மாளவில்லை.
அநேகமாக இந்தலிங்கர்வைணவத்தை அவமதிக்கும் சைவப் படமாக இருக்கலாம். முழுப் படத்தையும் நாங்கள் பார்த்து அனுமதி அளித்த பிறகுதான் படம் ரிலீசாக முடியும்" என்றுஹரே கிருஷ்ணாஎன்மேல் பாய்ந்தது.
அவர்களுக்காக மட்டுமே தனி ப்ரிவியூ ஷோ ஏற்பாடு செய்தேன். எக்கச்சக்கமான கூட்டம் படத்துக்கு, ஏகப்பட்ட நாமம் எனக்கு.
அதென்னயா பேரு லிங்கர்? எங்களைக் கிண்டல் செய்கிறீரா?" வீர சைவர்களான லிங்காயத்துகள் கர்நாடகாவிலிருந்து சண்டைக்கு வந்தார்கள்.
என்னடா இது, எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருக்கிறதேஎன்று படத்தின் பேரைஆபிரஹாம் லிங்கன்என்று மாற்றிவிடுகிறேன் என்று சொன்னாலும்எதற்கும் நாவு ஒம்மே நோடளு ஹொண்டிவேஎன்று பசவண்ண கூட்டம் பஸ் பஸ்ஸாக அம்மியது. என் பாடுதான் திண்டாட்டம்.
புனித குரானில்ஆபிரஹாம்முஸ்லிம் மதத்தவர் மட்டுமல்ல, ஆண்டவனின் அன்பைப் பெற்ற பெரும் குணசீலர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை இழிவு பண்ணி இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் எந்தப் படத்தையும் ஒருமுறையாவது பார்க்காமல் அனுமதிக்கவே முடியாதுஎன்று அவர்களாலும் பெரும் பேஜாராகி விட்டது.
அவசர பிரஸ்மீட்டில் என் அடுத்த ஹாலிவுட் படத்தில் ஒரிஜினல் யூதரான ஸ்பீல்பர்க் திருப்பதியில் மொட்டையும் போட்டு முஸ்லீமாகவும் நடிப்பார்" என்று நான் அவரைக் கேட்காமலே ஒரு அறிக்கை விட்டேன். வருகிற எல்லோரையும் கவர் செய்தே ஆகவேண்டும் என்று பி.ஆர். என் காதில் ஓத, அது வேறு எக்கச்சக்க செலவு ஆகிவிட்டது.
கிறிஸ்தவர்கள் சும்மா இருப்பார்களா? ஆபிரஹாம் என்பவர் ஏசுவின் தூதர். அவர் பெயரில் படம் என்றால் அதிலே கிறிஸ்துவத்தை என்னென்ன இழிவு பண்ணி இருப்பீர்களோ? கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டும். ஏற்கனவே மெல் கிப்சன் செய்த அழிச்சாட்டியங்களை நாங்கள் மறக்கவில்லை. எதற்கும் ஒரு முறை..." போட்றா ப்ரிவியூவ!

இடைவேளையில் போண்டா, சமோசா, டீ சகிதம் கூட்டம் அமர்க்களப்பட்டது. என் மணிபர்ஸ் டர்ர்ர்!
எதிர்ப்படும் தடைகளையெல்லாம் நான் மிகவும் புத்திசாலித்தனமாக உடைப்பது பற்றி கேள்விப்பட்ட உலக நாயகன் என்னை ஆழ்வார்பேட்டைக்கு உடனே வரச்சொன்னார்.
விஸ்வரூபம் படத்தை ஆஃப்கானிஸ்தான்ல ஷூட் பண்ணலாம்னுதான் ஆரம்பிச்சேன். ப்ரொட்யூசர் அழுதுட்டாரு. கடைசியில அங்கங்க டென்ட் போட்டு ஷூட்டிங் முடிச்சோம். இஸ்லாமுக்கு எதிரான படம்னு வேற இப்ப கௌப்பி விட்டுட்டாங்க. அதுக்காகவே நம்ம அமீருக்கு ஒரு ரோல் கொடுத்து அவர் அஞ்சு வேளையும் தொழுகை பண்ற சீன் வெச்சேன்."
இதெல்லாம் நானும் கேள்விப்பட்டேன் கமல்ஜி, இப்ப என்னை எதுக்கு இங்க கூப்பிட்டீங்க?"
லிங்கன் படத்துக்கு எதிரான பிரசாரத்தை நீங்க சூப்பரா சமாளிக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். இப்ப இந்த விஸ்வரூப துஷ்பிரசாரத்தை எப்படி சமாளிக்கறது?
நம்மளோட ரெண்டு படத்தையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணி படத்துக்கு பேரையும்விஸ்வ ரூபலிங் கர்னு மாத்தி ஒரு குன்ஸா பண்ணிட்டம்னா ஒரு பயலுக்கும் ஒண்ணும் புரியாது."
இது வொர்க் அவுட் ஆகுமா?" கமல் அவுட் அஃப் போகசில் இருந்தார்...
படத்துக்கு நடுவால அங்கங்கபுகைப்பழக்கம் உடம்புக்குக் கெடுதல், மதுப் பழக்கம் வீட்டுக்குக் கெடுதல்னு போடறா மாதிரி, ‘ஜாதிச்சண்டை மாநிலத்துக்குக் கெடுதல், சமயச்சண்டை தேசத்துக்குக் கெடுதல், சண்டை போடுதல் மண்டைக்குக் கெடுதல்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை வேற வேற லாங்குவேஜ்ல சப்டைட்டில் போட்ருவோம்."
இன்னமும் கமல் கன்வின்ஸ் ஆகவில்லை.
எப்படியும்லிங்கன்படம் ஆஸ்கருக்குப் போகும். உங்களுக்கும் ஏற்கெனவே ஆஸ்கர் நாயகன்னு பட்டம் வேற கொடுத்திருக்காங்க. ஆங் லீ சகவாசம்லாம் வேலைக்கு ஆவாது. நீங்களும் ஸ்பீல் பர்க் படத்துல நடிச்சா மாதிரியும் ஆச்சு. 30,000 ப்ரிண்ட்டும் கையாலேயே போட்டோம்னு சுத்திடுவம். எப்படி என் ஐடியா?" இப்போது கமல் கொஞ்சம் ப்ரைட் ஆனார்.
ஆனா, எல்லாத்தையும் மீறி அந்த டேனியல் டே லூ(யி)சுக்குத்தான் ஆஸ்கார்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா என்ன பண்றது?"
அதுக்குத்தான் நாம ஏற்கெனவே ஒரு பாயின்ட் வெச்சிருக்கமே கமல்? ஆஸ்கார் என்பது அமெரிக்கர்களால் அமெரிக்க படங்களுக்கு வழங்கப்படும் அவார்ட். அதற்கும் ஆஃப்கானிஸ்தானில் எடுக்க நினைத்து ஜோர்டானில் செட் போட்டு எடுத்த, அமீரை நடிக்க வைத்த, நானே எழுதி இயக்கிய, நானே ம்யூசிக்கும் போட்ட இதற்கும் என்ன சம்பந்தம்னு ஒரு கேள்வி கேட்போம். ‘சீச்சீ, இந்த ஆர்குமெண்ட் புளிக்கும்னு அவனவனும் முடியைப் பிச்சிக்கிட்டு ஓடுவான். இல்லாட்டிகுணாவை தூசி தட்டி எடுத்து, ‘விஸ்வரூப குணலிங்கர்னு டோட்டலா மிக்ஸ் பண்ணிடுவமா?"
கமல் மயங்கி விழுந்தார். கமலுக்கு உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுவது வதந்தியே.

நாசா வெளியிட்ட பூமி யின் இரவுப்படங்கள்

Black Marble: NASA Releases Incredibly Detailed Photos of Earth at
 Night blackmarble1
You’ve probably heard of The Blue Marble, an iconic photo of Earth captured in 1972 from 28,000 miles away by astronauts on the Apollo 17 spacecraft. Well, NASA has just released a number of photographs titled “Black Marble.” They offer the same perspective as the iconic photo, except these new images show what our planet looks like at night!

The photograph above shows North and South America (original resolution here). It’s a composite photograph created using images snapped by a satellite over the period of around three weeks in April and October of this year.
It took the satellite 312 orbits around our planet to capture 2.5 terabytes of imagery. The data was then mapped onto existing Blue Marble photographs to create Black Marble.
The satellite used a special new imaging system that can detect extremely dim signals. Scientists removed certain non-human-generated lights (e.g. gas flares, auroras, reflected moonlight) from the frame in order to have the photos only show artificial city lights (some wildfires remain, though).
Here are a couple more Black Marble photographs showing different sections of our planet (click the photos for highest-res versions):
Black Marble: NASA Releases Incredibly Detailed Photos of Earth at
 Night blackmarble2
Black Marble: NASA Releases Incredibly Detailed Photos of Earth at
 Night blackmarble3
Here’s a zoomed-in view of the United States and Europe using the same imagery:
Black Marble: NASA Releases Incredibly Detailed Photos of Earth at
 Night blackmarble4
Black Marble: NASA Releases Incredibly Detailed Photos of Earth at 
Night europe
Here’s an animation created using the photos, showing the dark side of the Earth as it rotates:

These aren’t your average nighttime shots of Earth: Rebecca Roth of the NASA Goddard Space Flight Center tells us that these are among the most detailed nighttime Earth photos we’ve ever seen.

Black Marble: NASA Releases Incredibly Detailed Photos of Earth at Night