Wednesday, April 01, 2015

தீபிகா படுகோன் -ன் தீப்பொறி பறக்கும் கில்மா சிந்தனைகள் @ ட்விட்டர், பரபரப்பு சர்வே

  • தீபிகா படுகோன் | கோப்புப் படம்
    தீபிகா படுகோன் | கோப்புப் படம்
    பிரபல பாலிவுட் நடிகை தீபிகோ படுகோனை முன்வைத்து முற்போக்கான பெண்ணிய சிந்தனை எனக் கருதப்படும் வாசகங்களைத் தாங்கிய வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது 'எனது விருப்பம்' (My choice) குறும்படம்.
    2 நிமிடங்களே கொண்ட அந்தக் குறும்படத்தில் பல்வேறு துறைகளில் சாதித்து புதுமை படைத்த பெண்கள் தங்களது விருப்பம் என்ன, எதில் இருக்கிறது... எதில் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றனர்.
    பெண் என்பவள், அவள் அணியும் உடை - அவளது உடல்வாகை பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டியவள் இல்லை. அவளது திருமண பந்தத்தை முடிவு செய்யும் உரிமை, அவளது ஒட்டுமொத்த விருப்பம், உடல் சார்ந்த உறவை முடிவு செய்வது, அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறும் உரிமை, உறவு சார்ந்த விருப்பத்தை தீர்மானிப்பது, யாரையும் சாராமல் சொந்தக் காலில் நிற்பது உள்ளிட்ட பல கண்ணோட்டங்களில் சமகால பெண்ணியத்தின் தேவையைச் சொல்வதாக அமைந்திருக்கிறது அந்த குறும்படம்.
    ஒரு நடிகைக்கு என்பதற்கு அப்பாற்பட்டு, தீபிகா இதற்கு முன்பும்கூட தனது உரிமை குறித்து தைரியமாகவும் பகிரங்கமாகவும் தீபிகா பேசியிருக்கிறார்.
    இப்போது, மீண்டும் ஒருமுறை அனல் தெறிக்கும் கருத்துக்களுடன் தீபிகாவை முன்னிறுத்தி வெளியாகி இருக்கும் 'மை சாய்ஸ்' குறும்படம், அதே பெயருடனான ஹேஷ்டேக் உடன் #MyChoice என, ட்விட்டரில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.
    ஹொமி அதாஜானியா இயக்கத்தில் பெண்கள் ஃபேஷன் இதழ்களில் ஒன்றான 'தி வோக்' வெளியிட்டுள்ள இந்தக் குறும்படத்தில் உள்ள முக்கிய அம்சங்களை மேற்கோள்காட்டி, ட்விட்டரில் மணிக்கு நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் கொட்டடுப்பட்டு வருகின்றன.
    'ட்வீட்டாம்லேட்' எனும் இந்தப் புதிய தொடரின் முதல் ட்விட்டர் பேசுபொருளாகவும் அமைந்திருக்கிறது இந்த விவகாரம்.
    தீபிகோ படுகோனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், அவரைத் தாண்டி பல தரப்ப்பட்ட துறைகளில் சாதித்த பெண்கள் தங்களது விருப்பம் என்ன என்பதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த முயற்சியில் கொண்டிருக்கும் முற்போக்கான பெண்ணிய வாசகங்களை சிலர் ஏற்றுக் கொண்டாலும், சமூக வலைதளங்களில் பலர் இதனை எதிர்க்கவே செய்கின்றனர். முக்கியமாக இளைஞர்கள்.
    பெண்ணியம் அல்லது பெண் உரிமை என்ற கோட்பாட்டில் கல்வி உரிமை, சம வாய்ப்புகள் போல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், உதாரணமாக திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி தீபிகா அண்ட் கோ பெண்ணியம் பேசியிருப்பதை கடுமையாக எதிர்க்கின்றனர்.
    ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் மாற்றுக் கருத்துக்களை இந்த விவகாரத்தில் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
    பிர்மி போடோ (@Phirmi_Bodo): திருமணம் ஆகாமலே நான் குழந்தை பெறப் போகிறேன். ஏனென்றால் அது 'எனது விருப்பம்' என்று நான் கூறினால், என்னை வீட்டை விட்டு துரத்தி அடிப்பார் என் அம்மா. ஏனென்றால் அது அவரது 'உரிமை'.
    சைத்தான் கோப்தி (‏@shaitaankhopdi): தீபிகா பெண்ணியவாதியாக இருக்க நினைக்கவில்லை. பிரபலமாக இருக்கவே அவ்வப்போது இப்படி பேசுகிறார்.
    அய்மா (‏@_AimA): ஆண் ஏமாற்றினால், அவரை மனிதத் தன்மை அற்ற மிருகம் என்பீர்கள். அதையே பெண் செய்தால், பெண் உரிமை என்று புகழ்வீர்களா? எவ்வளவு வேண்டுமானாலும் தவறு செய்யுங்கள். ஆனால் அதனை நியாயப்படுத்த நினைக்காதீர்கள்.
    ப்ரியங்கா (‏@Priyalives): பெண்களே! மை சாய்ஸ் வீடியோவை பொறுத்தவரை நாம் ஆண்களின் பக்கம் தான் பேச வேண்டும். இந்த வீடியோ முற்றிலும் நியாயமற்ற அளவிலும் ஒருதலைபட்சமாகவும் உள்ளது.
    சுவாமி (Swami ‏@mohitraj): மன்னியுங்கள் தீபிகா!
    காதல் மற்றும் காமம்
    நம்பிக்கை மற்றும் சுயநலம்
    பாசாங்கு மற்றும் உண்மை
    முட்டாள்தனம் மற்றும் சுதந்திரம். இவை அனைத்துக்கும் வித்தியாசம் தெரியாத கருத்து மட்டுமே இந்த வீடியோவில் உள்ளது.
    எக்தா ஷேத் (‏@EktaCutie): ஒரு விஷயத்தில் கருத்து, சிந்தனை, முடிவு அல்லது யதார்த்தம் அனைத்தையும் வெளியிட உரிமை உள்ளது. அவர் விருப்பத்தை தெரிவித்திருப்பது அவரது உரிமை.
    கவுரவ் (@DeepikaP_Lover): தீபிகா மீதான வெறுப்புணர்வு இங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவுக்கு வரும் பின்னூட்டங்களிலுருந்து பெண்களுக்கு இவர்கள் தரும் மரியாதை விளங்கிவிட்டது.
    மதுமிதா: 'விருப்பம்' இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்... 'விருப்பம்' என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள அனைத்துமே புதிய சட்டம் ஒன்றும் இல்லை. அந்த சட்டத்தை 'தி வோக்', தீபிகா அல்லது அதாஜானியா விதிக்கவில்லை, செய்யக் கூறி திணிக்கவில்லை. இது வெறும் விருப்பமே தவிர இதனை கண்மூடித்தனமாக பின்பற்றத் தேவையில்லை. யாரையும் நீங்கள் யூகிக்க வேண்டாம் என்பதே வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது.
    தெளிவான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும். இதையும் நீங்கள் புரிந்துகொள்ள மறுத்தாலோ அல்லது யூகித்து கொண்டே இருந்தாலும் அது உங்களது 'விருப்பம்'.
    சபிஸ்தா கான்: பெண்களின் உரிமை குறித்த இந்த வீடியோ பாராட்டப்பட வேண்டியது. திருமணத்துக்கு பின்னர், ஆண் வேறு பெண்ணை தேடிச் சென்றால் தவறாக குறிப்பிடாதச் சமூகம் பெண்ணை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான வாதம் இல்லை. ஆனாலும் இந்த வீடியோவில் கூறப்படும் 'என் விருப்பம்' சார்ந்த தன்மை சற்று மேலோட்டமாகவும் பாசாங்காகவுமே கூறப்பட்டுள்ளது.
    அக்‌ஷர் எச்.பி. : அது அவரது உரிமை. அவரது விருப்பம். இதில் தவறு எதுவும் இல்லைaமேலே: ப்ரியா ஆனந்த், குஷ்பு, லீனா மணி மேகலை, மாலினி ஜீவரத்னம் | கீழே: பாரதி பாஸ்கர், கிர்த்திகா தரன், ஹன்ஸா, 'லிவிங் ஸ்மைல்' வித்யா
    மேலே: ப்ரியா ஆனந்த், குஷ்பு, லீனா மணி மேகலை, மாலினி ஜீவரத்னம் | கீழே: பாரதி பாஸ்கர், கிர்த்திகா தரன், ஹன்ஸா, 'லிவிங் ஸ்மைல்' வித்யா
  • தீபிகா படுகோன் | கோப்புப் படம்
    தீபிகா படுகோன் | கோப்புப் படம்

'தீப்பொறி' தீபிகா வீடியோ பதிவு: தமிழகத்தில் இருந்து சில பெண்ணிய குரல்கள்


பிரபல பாலிவுட் நடிகை தீபிகோ படுகோனை முன்வைத்து முற்போக்கான பெண்ணிய சிந்தனை எனக் கருதப்படும் வாசகங்களைத் தாங்கிய வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது 'எனது விருப்பம் / தெரிவு' (My choice) குறும்படம்.
ஹொமி அதாஜானியா இயக்கத்தில், பெண்கள் ஃபேஷன் இதழான 'தி வோக்' வெளியிட்டுள்ள இந்தக் குறும்படத்தில் உள்ள முக்கிய அம்சங்களை மேற்கோள்காட்டி, ட்விட்டரில் மணிக்கு நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. | படிக்க - ட்வீட்டாம்லேட்: தீபிகாவின் விருப்பங்களும் எதிர்வினை தெறிப்புகளும்!
இந்தக் குறும்படம் பேசும் எண்ணிய வாசகங்களில் உடல் சார்ந்த விருப்பங்களை மட்டுமே சுட்டிக்காட்டி, இணையத்தில் எதிர்க் கருத்துகள் பரவலாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதேவேளையில், "என் விருப்பம்... என் கைரேகையைப் போன்றது. அதை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் தீபிகா படுகோன்.
அந்த வீடியோ பதிவு குறித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பெண்களின் பார்வை இது:
குஷ்பு - காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்:
தீபிகா நடிக்காமல் இருந்தாலே எல்லாரும் அமைதியாய்ப் பார்த்திருப்பார்கள். காணொளியில் தீபிகா படுகோன் நடித்திருப்பதால்தான், இது சர்ச்சைக்குரியதாக ஆகியிருக்கிறது. பெண்ணுரிமையைப் பற்றி ஆயிரம் பேர் பேசினாலும், அதை ஒரு பிரபலம் கூறும்போது சர்ச்சைக்குள்ளாகிறது. ஆயிரக்கணக்கில் நேர்மறையான விமர்சனங்கள் வரும்போது சில நூறு எதிர்ப்புகள் வருவது சகஜம்தான்.
என்னைப் பொறுத்தவரையில் அந்தக் காணொளியில் வரும் கருத்துக்கள் எவையும் அநாகரிகமாகவோ, மறுக்கத்தக்கதாகவோ இல்லை.
மாலினி ஜீவரத்னம் - திரைப்பட உதவி இயக்குநர்:
இதுவரைக்கும் பெண் மேல் ஒட்டியிருந்த அத்தனை லேபிளையும் தூக்கியெறிஞ்சுட்டு சுதந்திரமா என் உடல் என் தெரிவுன்னு வாழுறத மட்டுமே அந்த காணொளி உணர்த்துறதா தோணுது.
ஒரு பெண் அடிமையாக வாழ்ந்துட்டு அடிமையாகவே சாகுறதுலதான் கலாச்சாரம், பண்பாடு காப்பாத்தப்படுது. என் தலைல இருக்கிற முடிகூட இப்படித்தான் இருக்கணும்ங்கறத முடிவு பண்ணுறது நான் இல்ல... இந்த சமூகம் தான். உடை, உடல் சுதந்திரம் ஏன் உணர்வு சுதந்திரம் எல்லாமே பாலின அடிப்படைல பெண்களுக்கு கேள்விக் குறிதான்.
கற்பு எல்லாருக்கும் பொதுவானது. அது பாலின அடிப்படையில பெண்ணுக்கு மட்டுமே வச்சா, அப்படிப்பட்ட கற்புங்குற லேபிள் தேவையே இல்லை. பெண்ணுக்கு பர்தா; பெண்ணுக்கு தாலி; பெண்ணுக்கு மட்டுமே ஒழுக்கம்; பெண்ணுக்கு மட்டுமே கற்பு; பெண்ணுக்கு மட்டுமே கலாச்சாரம் கட்டுப்பாடு... பொண்ணோட விருப்பு வெறுப்புகளைத் தெரிவு செய்ய இங்க பெண்ணுக்கே உரிமை இல்லை.
தீபிகாவின் வீடியோவில் மேல்தட்டு பெண்கள் வாழ்வில் ஏற்படவேண்டிய மாற்றங்களுக்காக மட்டுமே பேசப்படுகிறது என நிறைய பேர் பேசுறாங்க. மாற்றம் முதல்ல படிச்ச பெண்கள்கிட்ட இருந்து ஏற்படணும். அவங்களால்தான் அடிதட்டு மக்களுக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியும்.
'லிவிங் ஸ்மைல்' வித்யா நாடக கலைஞர்:
இந்தக் காணொளி, பெண்களைப் பற்றிய பார்வையைச் சொல்கிற விதத்தில் திருப்திகரமாக இருந்தாலும், கொஞ்சம் ஃபேன்ஸியா இருக்கு. மேல்தட்டு பெண்களைப் பற்றி மட்டுமே சொல்லுகிற விதம் மாற்றப்பட்டிருக்கலாம். செக்ஸ் என்பது தனிநபர் சார்ந்த விருப்பம் என்பதை தெளிவா சொல்லி இருக்கு. ஆனால் அதைத் தாண்டிப் பெண்களைப் பற்றிப் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கு.
பெண்களின் தனிப்பட்ட உறவையும், வாழ்க்கையையுமே பேசும் இந்தக் காணொளியில் தலித் பெண்களின் மீதான அடக்குமுறை, வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் கூறியிருக்கலாம்.
ஹன்ஸா - வழக்கறிஞர்:
"எத்திசையிலும் முடிவற்றவள்" – இந்த வரி மிகவும் என்னைக் கவர்ந்தது. ஆண் சொன்னதைக் கேட்பதும், அதன் படி நடப்பதுமான போக்குக்காட்டல் எல்லாமே பெண் செய்யும் நாடகமே. இது சர்வைவலுக்காக மட்டும் இல்லை. மேற்சொன்ன வரிக்காகவும்தான்.
இந்த உண்மையை உணர்ந்தவர்கள்தான் பெண்கள். ஆனால் திடம் உள்ள பெண்கள் மட்டுமே அதை வெளிக்காட்டுகிறார்கள். மற்றவர்கள் சொல்வதில்லை. 'இது நடிப்பு என சொல்வதால் நாடகம் தடைபடும்' என்பதாலேயே சொல்வதில்லை இவர்களில் சிலர்.
பெண்ணை புரிந்துகொண்டாலே சட்டங்கள் அவளுக்கு சில இடங்களில் அதாவது ஆணின் பார்வையில் அதிக இடம் / வரம் அளிப்பது போலத் தோன்றுகிறது. ஓர் ஆண் நினைப்பது போன்றே அச்சு பிசகாமல் அவளைக் சட்டம் கட்டுக்குள் வைத்தால், விட்டுத்திமிறி வெளியேறிவிடுவாள். அந்த கட்டத்தை பெண் நெருங்கிவிட்டாள் என்றே தோன்றுகிறது. இனி நாடகம் இல்லை.
"என் உடல் என்னுடையது. என் உடல் குறித்து என்னுடைய முடிவே இறுதி" என்பதை அவள் சொல்லும் நிலையில் வைத்ததே ஒரு தலைகுனிவுதான். ஏனெனில் இது மாற்றே இல்லாத உண்மை அல்லவா? ஆண் சொல்லக்கூடும்… "அவளின் உடல் என்னை திசை திருப்புகிறது" - இது கட்டுக்குள் இல்லாத அவனின் மனதா அவள்? பெண் பெரும் சக்திதான். அதைச் சீண்டல்கள் மூலம் உணர முயலவேண்டாம். ஏனெனில் வெடிப்பிற்கான மிகச் சரியான 'பதத்தில்' இப்போது அவள். ஓண்டர்ஃபுல் தீபிகா!
ப்ரியா ஆனந்த் - நடிகை:
நடிகைகள் என்றாலே பொதுவான சில அபிப்ராயங்கள் இருக்கின்றன. நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் கவலைகள், பிரச்சனைகள் இருக்கின்றன. பெண்ணுடல் சார்ந்து பேசுவதே களங்கம் என்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்தக் காணொளி பதில் அளித்திருக்கிறது. மொத்தத்தில் இது ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவு.
கிர்த்திகா தரன் வலைப்பதிவர்:
எப்போதும் இதுபோன்ற காணொளிகள் பெரிதாய்ப் பேசப்படாமல் இருக்கிறதோ, அப்போதுதான் பெண்ணுரிமை முழுமை அடையும். இந்தக் காணொளி மூலம் விருப்பங்களைச் சுயமாகப் பூர்த்தி செய்ய முடியாத பல பெண்களின் மெளனக் கதறலையும், வலியையும் உணர முடிகிறது. இதைப் பற்றித் தைரியமாகப் பேச தீபிகாவால் முடிந்தது. பலரால் முடியவில்லை.
கலாச்சாரம் காலத்திற்கேற்றாற்போல மாறிக்கொண்டே வருகிறது. அது உடைபடுவதை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. என்னைப் பொருத்தவரையில் உடல் சார்ந்த விஷயங்கள் பெண்ணின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றிப் பொதுவெளியில் கருத்து சொல்வதே தவறுதான். பல்லாண்டுகளாய் வாழ்ந்த ஊரைவிட்டு வர முடியாததுதான். ஆனால் வேறு வழியில்லாதபோது வந்துதான் ஆக வேண்டும். அதேபோல கலாச்சாரக் கோட்பாட்டுக்குள் இருந்து வெளியே வருகிற வாழ்க்கை முறையும் மெல்லப் பழகும்.
பாரதி பாஸ்கர் - பட்டிமன்றப் பேச்சாளர்:
என்னைப் பொறுத்தவரையில் இக்காணொளி பெண்ணுரிமையைப் பேசுகிற காட்சியமைப்பாகத் தெரியவில்லை. பெண்ணுரிமையைப் பற்றி ஒரு வாழ்வியல் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட காணொளியில் நடித்திருக்கும் தீபிகாவே அழகு மற்றும் உடல் சார்ந்த விஷயங்களை மூலதனமாகக் கொண்ட சினிமாவைத்தான் தன் தொழிலாகக் கொண்டிருக்கிறார். உயர்தட்டு பெண்களின் உடல் சார்ந்த விஷயங்களைத் தாண்டி அறிவு, மனம் சார்ந்த விஷயங்கள் முதலியவை இக்காணொளியில் கூறப்படாதது போலித்தனமாய் இருக்கிறது.
என் உடல், என் மனம், என் விருப்பம் என்னும் இதே வார்த்தைகளை ஆண் சொல்லி இருந்தால் இச்சமூகத்தில் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். பெண்ணுரிமை பற்றி 1920-களில் பாரதியே பேசிவிட்டான். இது குறித்து ஒலிக்கும் குரல்கள் நமக்குப் புதிதில்லை. ஆனால் இந்த எதிர்ப்பு எங்கிருந்து வருகிறது, எதை யார் சொல்கிறார்கள் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. இதே கருத்துகளை மலாலா பேசி இருந்தால் அதன் வீச்சும், வீரியமும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் மேல்தட்டுப் பெண்களின் உடல் சார்ந்த விஷயங்களைத் தாண்டி படிப்பு, வேலை, திருமணம், மறுமணம், வாழ்க்கை முறை போன்ற பிற பெண்களின் சொந்த விருப்பத் தெரிவுகள் பற்றி இக்காணொளி எதையும் கூற முற்படவில்லை.
லீனா மணிமேகலை, கவிஞர் - இயக்குநர்:
அதிகாரத்திற்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் படம், அதன் உத்திகளால், அந்த அதிகாரத்திற்கே பலியாகியிருக்கின்றது. தலைமுடி எண்ணெய், ஷாம்பூ, ஃபேர்னஸ் க்ரீம் போல பெண் விடுதலை என்பது ஒரு நுகர்பொருள் இல்லை. பாலின சமத்துவம் என்ற கருத்தை எதோ பண்டம் போல விற்க முயற்சி செய்வதுதான், இந்தப் படத்தின் தோல்வி என நான் கருதுகிறேன். விற்பனைக்கான முகமாக தீபிகா படுகோன் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் அவரையும் பண்டமாகவே பரிதாபகரமாக மாற்றிவிடுகின்றது.
அடிப்படையில் "சுயதேர்வு" என்பது பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமை. அதை குறித்து பேச எத்தனித்திருப்பது பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் வர்க்கம், சாதி, மதம், இனம் என பலவாறாக பிளவுப்பட்டிருக்கும் நம் சமுகத்தில், அதை ஒற்றைப் பரிமாணத்தில் பேசிவிட முடியாது அல்லவா?

  • Sridharan  
    பெண்ணை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான வாதம் இல்லை-இதை இங்கு இந்தியா பெண்ணாக சொல்லவில்லைஎன்றல் யாரும் கவலை படமாட்டார்கள் என்ன உங்களுக்கும் யாரோடும் /எப்போது வேண்டுமனாலும் போகும் உரிமை உண்டு என்கிறீர்களா? இந்தியா பாவம்
    Points
    785
    about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Saravanan  
      குடும்பம் என்ற ஒரு அமைப்பில் எழுதப்படாத சட்டங்கள் நிறைய உள்ளன. இந்த சட்டங்கள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அல்லது இருவருக்கும் பொதுவானது.சட்டங்கள் எல்லாமே உரிமையை எதிர்ப்பது என்றாகி விடாது.எல்லாமே என் விருப்பம் என்பது குடும்பத்தை இல்லாமல் செய்துவிடும். உரிமை என்ற பெயரில் நீங்கள் நியூயார்க் அல்லது அல்லது லண்டனில் பார்ப்பதை இங்கே கொண்டுவரவேண்டாம். அமெரிக்கா என்பது நியூயார்க் அல்ல. அங்கேயும் குடும்ப அமைப்பு குடும்ப கட்டுப்பாடு உண்டு. உரிமை என்ற பெயரில் குடும்ப அமைப்பை கெடுக்காதீர்கள். அது ஏற்க்கனவே தனிக்குடும்பம் ஆகி இப்போது அதுவும் தள்ளாடும் நிலைக்கு வந்துவிட்டது.
      Points
      9530
      about 7 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
      • Karthik  
        அது அவரோட கருத்து, அதில் எதுவும் தவறு இல்லை. ஆனால் இதை women empowerment என சொல்வது தவறு. Women empowerment மற்றும் தன் விருப்பம் போல் இருப்பது வேறு வேறு.
        about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Kmsdgl  
          திரையுலக படைப்பாளிகள் -நடிப்புத்தரை தாரகைகள் - இவர்களுக் கெல்லாம் சமூக நன்னடத்தை/நன்னெறி/நல்லொழுக்க பண்பாடு இவற்றின் மேம்பாட்டிற்காக-பல கோணங்களிலும் ஆய்ந்து -படுகோனே மூலமாய் -ஆகா என்ன அருமையான குறும்பட தயாரிப்பு ஆக்கம் ஓவரோ ஓவர் / சுருக்கச்சொல் - சபலம் - எனும் மாய ஈர்ப்பு - பல கோணம்/பல அடிப்படை /பல ரூபம் /பல எழுச்சி/இவற்றில் பலானா எழுச்சிகளும் / நேரிய நியம வழிதவறிய தடப்பதிப்பெல்லாம்/ஒடிவில் /ஓய்ந்து /இழிவையே அடைந்துகொள்ளும் > குறும் படம் >கூறும் அறிவுரை-விழிப்புணர்வு ? கதை களம்/கரு களம் /தேடும் காலம்/ நோக்கி நுண்ணுனர்ந்து-பார்த்து பரவசமாகி/பல்கிப்பெருக துடித்தியங் கும் எல்லா இயக்கங்களுமே காசுக்கே -நாம் ஆடுவதும் பாடுவதும் காசுக்கு-சிலர் ஆளை குல்லாப்போடுவதும் காசுக்கு/கூடுவதும்/குழைவதும் காசுக்கு ஊ ஊ . . . . . ?
          Points
          2155
          about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • விமலா  
            ஆணுககு இருக்கும் பலமும் பலகீனங்களும் பெண்ணுக்கும் இயல்பே என்பதை புரிந்து கொள்ளாதவரை இருவரும் நிம்மதி அடைவது கடினம்- சிறைகள் திறக்கப்படவும் வேண்டும்- இல்லை என்றால் உடைக்கபடுவது தவிர்க்க/தடுக்க முடியாதது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்- விமலா வித்யா
            Points
            26510
            about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Vijai  from Scarborough
              இதுதான் விவாகரத்துக்கு அடிப்படை, பின்னர் குழந்தைகள் , தறிகெட்டு , சமூக, சீர்கீடு , ஏற்பட , முதல் காரணம்

            நன்றி  - த   இந்து

            நான் ட்விட்டர் வந்த புதுசுல........

            1  ஒரு சினிமா ரசிகனின் பஞ்ச்

            நான் கணக்குல புலி
            சிஸ்டத்துல சிங்கம்
            ஸ்போர்ட்ஸ் ல சிறுத்தை
            சேமிப்பில் குருவி


            =============

            2 ஃபிகருக்கு பின்னாலயே போய் ஃபாலோபண்ணிட்டு முன்னால திடீர்னு போய் நின்னு “ உங்களை இது வரை முன்னே பின்னே பார்த்ததே இல்லையே?”ங்கறான்


            ==============

            3 அப்பாய்ண்ட்டட் =,பணியில் நியமித்தல்
            டிஸப்பாய்ண்ட்டட் = பணியை விட்டு நீக்குதல் #,நாங்க எல்லாம் அப்பவே அப்படி


            ============


            4 பொண்ணுங்க கோபமா ஏதாவது யாரையாவது திட்டும்போது வாண்ட்டடா போய் நாம ஜீப் ல ஏறி நாமும் ரவுடிதான்னு பார்ம் ஆகிக்கனும்
            ================

            5 பக்கா பிகரை நீ லவ்வினாலும் செல்லமா கூப்டறேன் கற போர்வைல அது உன்னை பக்கி னு தான் கூப்பிடும் - ஜக்கி யம்மா பேரவை


            ===============

            6 சயின்ஸ் மிஸ் சர்மிளா = யாக் எருமையின் பால் ஊதா நிறத்தில் இருக்கும்..





            ஊதா கலரில் பாலு




            நீ தான் எனது ஆளு

            ===============

            7 இந்தியாவைத்தவிர உலக நாடுகள் பூரா சுத்திப்பார்த்தது உலகத்துலயே 2 பேரு தான்

            1 மோடி
            2,மோடியின் பாதுகாப்பு அதிகாரி


            ===============

            8 பேங்க் ல பேனா வாடகைக்கு விட்டா டெய்லி 500 ரூபா சம்பாதிக்கலாம் போல.5 நிமிசத்துக்கு 1 ரூபா

            ==============

            9 ஒரு சினிமா ரசிகனின் பஞ்ச்

            நான் கணக்குல புலி
            சிஸ்டத்துல சிங்கம்
            ஸ்போர்ட்ஸ் ல சிறுத்தை
            சேமிப்பில் குருவி



            ===========

            10 10 வருசமா பேங்க்லஒர்க் பண்ணும் சக ஸ்டாபை இன்னும் மேடம்னு கூப்பிடறேன்.நேத்து FB.வந்த பசங்க முந்தாநேத்து வந்த பெண்ணை செல்லக்குட்டிங்கறாங்க


            ==============

            11 பொண்ணுங்க FB ல "நான் சாப்டுட்டு இருக்கேன் " நான் எந்திரிச்ட்டேன்" னு வரிசையா ஸ்டேட்டஸ் போடறாங்க.ஆனா நான் கை கழுவிட்டேன் னு போடறதில்ல.y?


            =============

            12 வாட்சப் புலி களே! அந்த போலீஸ் ஆபீஸர் கில்மா போன் பேச்சை அனுப்புங்க..என் நண்பர்களுக்கு.# பந்தியில் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்போர்


            =================

            13 போலீஸ் ஆஃபீசரோட வாட்சப் ஆடியோ ஆர்வமா கேட்டேன். மரண மொக்கை.இதுக்கு என் ஜோக்ஸே தேவலாம். ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வராம அறுக்கறான்

            =============

            14 ஒரு பொண்ணு ட்விட்டர்ல தனுஷ் கிட்டே விஷ் யூ டைட் நைட்னு வாழ்த்துது.ஐஸ்வர்யா தனுஷ் பார்த்தா என்ன நினைப்பார்?இந்த ஊர் உலகம் என்ன நினைக்கும்?


            ============


            15 3 மாசத்துக்கு முன்னே மாத்துன டிபி னு தெரிஞ்சும் பொண்ணு கிட்டே மேடம் உங்க புது டிபி டாப்புங்கனு டூப் விடுவான் நெட் தமிழன்


            =============


            16 தன் முகத்தை கண்ணாடிலயே பாக்காம பொண்ணுங்க முன்னாடி நின்னு மொக்க பிகர்களுக்கு சூப்பர் பையன் கிடைப்பான் னு உதார் விடுவான் நெட் தமிழன்


            ================


            17 ஒரு பொண்ணு டிஎம் ல வந்து வணக்கம் வெச்சும் நான் ரிப்ளையே பண்ணலை
            நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. (பி கு = அண்ணா னு கூப்ட்டுச்சு)


            ================


            18 ட்விட்டர் அடிக்ட் ஆசாமி பூக்கடைக்குப்போனா கருணை மல்ர் 100 கிராம் குடுங்கனு கேட்பாரோ?



            =============


            19 பொண்ணுங்க் சிரிச்சாமேனிக்கே இருந்தாக்கூட புருசனை மிரட்டநான் இப்போ அழுதுட்டு இருக்கேன்னு SMSஅனுப்பறாங்க.என்னம்மா இப்டிப்பண்றீங்களேமா

            ================


            20 நான் ட்விட்டர் வந்த புதுசுல ட்வீட் மட்டும் தான் போட்டுட்டு இருந்தேன்.இப்ப வர்ற பசங்க/பொண்ணுங்க 90%பேர் கடலை தான் போடறாங்க.பொறாமையேதான்


            ==============

            கொம்பன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு: ஓய்வு பெற்ற நீதிபதிகள் பரபரப்பு அறிக்கை தாக்கல்

            கொம்பன் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
            நடிகர் கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு தடை கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
            அந்த மனுவில், கொம்பன் படம் வெளியானால் தென் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் என்றும், எனவே, ஏப். 2-ல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
            இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கொம்பன் திரைப்படத்தை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்கறிஞர்கள் பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
            இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
            டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜரானார். அவரது தரப்பு வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடும்போது, எங்களை 3 நிமிடங்கள் மட்டுமே படத்தை பார்க்கவிட்டனர்.
            அந்த 3 நிமிடத்திலும் ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருந்தன. படத்துக்கு தணிக்கை வாரியம் விடுமுறை நாளில் சான்றிதழ் வழங்கியது தவறு. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றனர்.
            தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, ஓய்வு பெற்ற நீதிபதிகளை படத்தை பார்க்கவிடாமல் மனுதாரர் தரப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதனால் நீதிபதிகள் படத்தை முழுமையாக பார்க்காமல் வெளியேறி விட்டனர் என்றார்.
            இயக்குநர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி, தணிக்கை வாரியம் படத்தை முழுமையாக பார்த்த பிறகே சான்றிதழ் வழங்கியுள்ளது. மனுதாரர் தரப்பினரோ, நீதிபதிகளோ படத்தை முழுமையாக பார்க்கவில்லை. கதை, கதாபாத்திரங்கள் கற்பனையானது என திரையிட்ட பிறகே படம் தொடங்குகிறது என்றார்.
            தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் லட்சுமணன் வாதிடும்போது, சட்டத்துக்கு உட்பட்டுதான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து, கொம்பன் வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
            முன்னதாக, சென்னையில் கொம்பன் படம் பார்க்கச் சென்றபோது நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் ஆகியோர் பேக்ஸ் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.
            மோசமான சூழல்
            மதுரையில் நேற்று கே.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ் திரையுலகில் ஜாதிய வன்முறையுடன் படம் எடுப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் மோசமான சூழல் நிலவி வருகிறது. கொம்பன் படத்தை 3 நிமிடங்கள்தான் பார்க்க அனுமதித்தனர்.
            அந்த 3 நிமிடத்திலும் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன. இதனால்தான் அப்படத்தை சீராய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியம் அனுப்பியது.
            தணிக்கை வாரிய உறுப்பினர்கள் 11 பேரில் 2 பேர் படம் வெளியிடத் தகுதியற்றது என்றும், 3 பேர் பெரியவர்கள் மட்டும் பார்க்கக் கூடியது என்றும், 3 பேர் யாரும் பார்க்க முடியாத படம் என்றும் கூறியுள்ளனர்.
            இதிலிருந்து அப்படத்தில் எந்த அளவு ஆட்சேபகரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால்தான், படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.


            நன்றி  -த  இந்து

            ‘உப்புக்கருவாடு’ ஹீரோ ஆன நகைச்சுவை நடிகர் கருணாகரன் எமி ஜாக்சனை கரெக்ட் செஞ்சுட்டாரா?திரை உலகம் அதிர்ச்சி

            நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் அவ்வப்போது நாயகனாகவும் நடித்து வருபவர் கருணாகரன். தற்போது இயக்குநர் ராதா மோகன் இயக்கிவரும் ‘உப்புக்கருவாடு’ படத்தில் நாயகனாக நடித்துவரும் அவரைச் சந்தித்தோம்.
            நீங்கள் திரையுலகுக்கு வந்தது எப்படி?
            என் சொந்த ஊர் திருச்சி. ஈ.ஆர்.சி பள்ளியில் படித்தேன். அப்பா ‘ரா’வில் பணியாற்றியதால் டெல்லியில் கொஞ்ச காலம் படித்தேன். பிறகு தஞ்சாவூர் சண்முகா கல்லூரியில் பொறியியல் படித்தேன். சென்னையில் மென்பொருள் பொறி யாளராக பணியாற்றினேன். நான் படிக்கும் போதே எனக்கு இயக்குநர் நலன் குமார சாமியை தெரியும். அவர் இயக்கிய சில குறும் படங்களில் நடித்திருக்கிறேன். சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் அலுவலகம் விடுமுறை என்பதால் பத்துக்கும் அதிகமான குறும்படங்களில் நடித்தேன். இரவில் டப்பிங் பேசுவேன்.
            ஒரு குறும்படத்தில் என்னுடைய நடிப்பைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் சார் பரிசு கொடுத்தார். அப்போதே அவர் என்னை ‘நண்பன்’ படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது என்னால் நடிக்க முடியவில்லை.
            உங்களை சினிமா நடிகனாக்கியது இயக்குநர் சுந்தர்.சி என்கிறார்களே. உண்மையா?
            உண்மைதான். ‘கலகலப்பு’ படத்தில் அவர் என்னை நடிக்க அழைத்தார். வேலையில் இருப்ப தால் நடிக்க முடியாதே என்றேன். அதற்கு அவர் கால்ஷீட்டில் அதைச் சரி செய்து கொள்ளலாம் என்று கூறி நடிக்க வைத்தார்.
            அந்தப் படத்துக்கு பிறகு ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘யாமிருக்க பயமே’, ‘கப்பல்’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் நடித்தேன். இதில் ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றியும் “காசு பணம் துட்டு” பாடலும் என்னை திரையுலகில் பிரபலமாக்கியது. இதைத் தொடர்ந்து மென்பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, முழுசாக சினிமாவில் இறங்கி விட்டேன். இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
            ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும்போது அவர் ஏதாவது ஆலோசனைகள் கூறினாரா?
            ரஜினி சாருடன் ‘லிங்கா’வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பின்போது அவர் எல்லோரையும் கலாய்ப்பார். ‘நீங்க எப்போதும் இப்படித்தான் திருட்டு முழியுடன் இருப்பீங்களா’னு என்னையும் கலாய்த்தார். என்னுடன் இயல்பாக பழகு, பயப்பட வேண்டாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்.
            அவருடன் நடித்த 20 நாட்களும் போனதே தெரியவில்லை. நாம் பேசுவதை அப்படியே பேசிக் காட்டுவார். “படப்பிடிப்பின்போது ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே சொல்லுங்க. அதைப் படத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று உற்சாகப்படுத்துவார். அந்த மனது எந்த நாயகனுக்கு வரும்?
            எமி ஜாக்சனுக்கு பிடித்த நாயகன் நீங்கள்தானாமே?
            அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் பெயரிடப்படாத படப்பிடிப்பு கொச்சி அருகில் நடந்தது. மலைப்பகுதி ஒன்றில் எமி ஜாக்சன் லூனா வண்டி ஓட்டும் காட்சி அது. மலையின் இரண்டு பக்கமும் பள்ளம். நானும், உதயநிதியும் காரில் அமர்ந்திருந்தோம். எமி ஜாக்சன் வண்டியை ஓட்டிக்கொண்டு பள்ளத்துக்கு மிக அருகில் சென்றுவிட்டார். நான் காரில் இருந்து ஓடிச்சென்று வண்டியைப் பிடித்து நிறுத்தினேன். தனக்கே உரிய ஸ்டைலில் நன்றி சொன்னார். இந்தக் காட்சியைப் பார்த்து உதயநிதி விழுந்து விழுந்து சிரித்தார். மற்றபடி தனக்கு பிடித்த நாயகன் என்றெல்லாம் என்னைப்பற்றி எமி ஜாக்சன் சொல்லவில்லை.
            நீங்கள் சினிமாவில் நடிக்க உங்கள் வீட்டில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்?
            நான் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தபோது வீட்டில் ரொம்பவே பயந்தார்கள். இப்போது, அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். நான் வேலை பார்த்த சாப்ட்வேர் கம்பெனியில் என் மனைவி எச்.ஆர். துறையில் வேலை பார்த்துவந்தார். அப்போது காதலைச் சொன்னால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் அதைச் சொல்லவில்லை. சினிமாவுக்காக வேலையை விடும் போது தைரிய மாக போய் காதலை சொல்லிவிட்டேன். காதலைச் சொல்லும் தைரியத்தை சினிமாதான் எனக்கு தந்தது.

            நன்றி  -த  இந்து