Tuesday, December 24, 2024

GIRLS WIL BE GIRLS (2024) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )@ அமேசான் பிரைம்

                         பெண் இயக்குனர் ஆன சாச்சி தலாத்தி  இந்தப் படத்துக்கான  ஆடியன்ஸ்  அவார்டை டிராமாடிக் வோர்ல்டு சினிமா பிரிவில் சன்டான்ஸ்  திரைப்பட  விழாவில்  பெற்றார் .இவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது 2024 ஜனவரியில் திரைப்பட  விழாவில் கலந்து கொண்டாலும் அமேசான்  பிரைம்  ல வெளி யானது  16/12/2024  முதல்  தான் . 


படத்தில்  நடித்த ப்ரீத்தி  பணிகிரஹி  ஸ்பெஷல் ஜுரி  விருதை சன்டான்ஸ்  திரைப்பட  விழாவில் பெற்றார். மும்பை  பட விழாவில்  கலந்து கொண்டு  பல விருதுகளை இப்படம்  குவி த்துள்ளது . டீன் ஏஜ் மாணவிகளின் மனப்பாங்கை சித்தரித்த விதத்துக்காக உலகம் முழுக்க  பாராட்டுக்களைக்குவித்த வண்ணம் உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  12 வதுபடிக்கும்   மாணவி .வகுப்பிலேயே  அவர்தான் முதல்  மதிப்பெண் எடுப்பவர் .க்ளாஸ் லீடரும் கூட .இவருக்கு எப்போதும்  ரூல்ஸ்  ராமானுஜம் ஆக  இருப்பதுதான்  பிடிக்கும் .பள்ளியில்  உள்ள  அனைத்து  டீச்சர்களுக்கும்  இவர்  செல்லம் .நல்ல  பெயர்  எடுத்திருப்பவர் . ஆனால் சக  மாணவர்களுக்கு  இவரைப்பிடிக்காது . காரணம்   அவர்கள் ஏதாவது  தப்பு செய்தாலோ , ஓழுங்கீனமாக  நடந்து கொண்டாலோ  டீச்சர்களிடம்  மாட்டி வைத்து  விடுவார் 



நாயகியின்  அம்மா  நாயகியின் மீது  அன்பு , பாசம் , கண்டிப்பு  அதிகம் வைத்தருப்பவர் . மகளை நன்றாகக்கண்காணிப்பவர் .அப்பா  அதிகம் கண்டு கொள்வதில்லை .  ஆல்  இன் ஆல்  அம்மாதான் 


பள்ளியில்  லவ் லெட்டர்  கொடுக்க  முயற்சிக்கும்  மாணவர்களை  லெப்ட்  ஹேண்டில்  டீல் செய்பவர் 


இப்படிப்பட் ட  நாயகி க்கு  தன்  வகுப்புத்தோழன்  ஆன நாயகனுடன்  நெருக்கம்  உருவாகிறது . நாயகனை  வீட்டுக்கே  அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறாள் . நாயகியின்  அம்மாவிடமும்  நாயகன்  நல்ல பெயர்  எடுக்கிறான் . கம்பைன் ஸ்டடி  என்ற  பெயரில்  நாயகன் அடிக்கடி  நாயகி  வீட்டுக்கு வருகிறான் 


நாயகன்  பாரினில் படித்தபோது  ஆல்ரெடி  ஒரு கேர்ள்பிரண்ட்  உண்டு   அவளுடன்  நாயகன்  நெருக்கமான உறவில் இருந்தவன் , ஆனால் நாயகிக்கு நாயகன் தான் முதல் பாய் பிரண்ட் 


நாயகனுக்கு 19 வது பிறந்தநாள்  பார்ட்டி  நாயகி வீட்டில்  நடக்கிறது .அன்று  இரவு நாயகன்  அங்கேயே  தங்குகிறான் .வீட்டில்  நாயகி , நாயகியின் அம்மா,  நாயகன்  மூவர் மட்டுமே . இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள்  தான் மீதி  திரைக்கதை 


ப்ரீத்தி  பணிகிரஹி  நாயகி  ஆக  பிரமாதமாக  நடித்திருக்கிறார் .மொத்தப்படத்தையும்  தாங்குபவர்  அவர் தான் . ரவுடித்தனம் செய்யும்  மாணவர்களை  டீல் செய்வது , அம்மாவுடன்  சில சமயம் அன்பாகவும் , பல சமயம் வேண்டா வெறுப்பாகவும் நடப்பது , நாயகனுடன் காட்டும் நெருக்கம்  என அந்த கேரக்ட்டராகவே  வாழ்ந்து இருக்கிறார் 


 நாயகியின் அம்மாவாக கனி குஸ்ருதி பாந்தமாக  நடித்திருக்கிறார் .2009 ஆம் ஆண்டு  வெளிவந்த  கேரளா கபே என்ற படத்தில் அறிமுகம் ஆனவர்  இவர் 


நாயகன் ஆக கேசவ் பினாய் கிரண்   கச்சிதமாக  நடித்திருக்கிறார் .ஆனால் இவருக்கு அதிக காட் சிகள் இல்லை . நாயகி தான் மெயின் 

இது போன்ற  லவ் சப்ஜெக்ட்டுக்கு  ஒளிப்பதிவு , இசை   ரொம்ப முக்கியம் .  இரண்டும்  தரம் . டூயட் எல்லாம்  இல்லை . ஆனால் பின்னணி இசை   கவிதை .ஒளிப்பதிவு  நாயகி , நாயகியின் அம்மா  இருவரையும்  பல   கோணங்களில் அழகாகக் காட் டி இருக்கிறது . அம்ரிதா  டேவிட்டின் எடிட்டிங்கில்  படம் 118 நிமிடங்கள்  ஓடுகின்றது 


சபாஷ்  டைரக்டர்


1   ஒரு வீடு , ஒரு ஸ்கூல் , மூன்று  முக்கியக்கேரக்ட்டர்கள்  என  திட் டமிடப்பட்ட    லோ பட்ஜெட்  படம் 



2  மலையாளப்படமான ஜூன் (2019)  படத்தை  சில இடங்களில்  நினைவுப டுத்தினாலும்  காட்சிகள்  கவிதை 


3   த்ரிஷா - விஜய் சேதுபதி  நடித்த  96 படத்தில்  நாயகன் - நாயகி  இருவருக்கும்   க்ளைமாக்சில்   உறவு  நேருமா? என்ற எதிர்பார்ப்பில்  படத்தைக்கொண்டு போன மாதிரி  இதில்  நாயகனுக்கும்,  நாயகியின் அம்மாவுக்கும்  உறவு   இருந்திருக்குமோ?  என்ற  சந்தேகத்தைக்கடைசி   வரை எழுப்பிய விதம்


  ரசித்த  வசனங்கள் 

1  ஒரே  லட்சியம் , ஒரே கொள்கை  கொண்டவருடன் தான்  நம் நட்பு , சிநேகிதம் இருக்க வேண்டும்,அப்போதுதான் நம்ம கோல் ரீச் ஆகும் 


2  எல்லாருக்கும் ஒரு பிரேக்கிங்க் ஹோல் உண்டு  ( இது  கமல் நடித்த  குருதிப்புனலில்  வந்த  டயலாக்கின் உல் டா வெர்சன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ரூல்ஸ்  ராமானுஜம் ஆக  இருப்பதுதான்  பிடிக்கும்   என்பதுதான்  நாயகியின் கேரக்ட்டர்  டிசைன் . ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கிறார் . அதற்குப்பின்  சராசரி ஆகி  விடுகிறார் 


2  நாயகன்  தனக்கு  ஒரு கேர்ள்  பிரெண்ட்  உண்டு என சொன்னபோது  நாயகி  அவனிடம்  முக்கியமான கேள்வி ஆன அவளு டன்  உனக்கு  உறவு  இருந்ததா?  என்பதைக்கேட்கவே  இல்லை 


3  நாயகியின் அப்பா   என்ன வேலை ? என்பதை சரியாக விளக்கவில்லை . பெரும்பாலும் அவர் வீட்டில் இருப்பதில்லை 


4  நாயகி  ஸ்கூலின்  டாப்பர் .முதல் மார்க் எடுப்பவர் .ஆனால்   நாயகன் சராசரி மார்க் தான் . இருவரும் கம்பைன் ஸ் டடி   செய்வதை  நாயகியின்  அம்மா அனுமதிப்பது   எப்படி ? பொதுவாக  

பெற்றோர்  முதல்  ரேங்க்  வாங்குபவர்  இரண்டாம்  ரேங்க் வாங்குபவர்   உடன்  தான்  பழக   வேண்டும்   என நினைப்பார்கள் 


5   மாணவிகள்  சிலரை   தவறான  கோணத்தில்  செல் போனில்  படம்  எடுக்கும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய  நாயகி வற்புறுத்தும்போது டீச்சர் அது முடியாது என்பது அதிர்ச்சி அளிக்கிறது 

6  ஸ்கூலில்  செல்போன்  அலோ  செய்கிறார்களா? 


7  இண்ட்டர்நெட் சென்ட்டர்  போய் மாணவர்கள்  நீலப்படம்  பார்ப்பது  இப்போது  வழக்கொழிந்து  விட்ட்து . அதான்   செல் போன்  இருக்கே ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - துள்ளுவதோ இளமை (2002)  ஸ்டைலில்  ஒரு படம் . மாணவர்களைத்தவறாக  வழி நடத்தும் அபாயம்  உள்ளதால்  மாணவர்கள் தவிரக்கவும் . ரேட்டிங்  2.5 / 5 

Monday, December 23, 2024

BONEYARD (2024) -அமெரிக்கன் மூவி - ஆங்கிலம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

       


      5/6/2024 அன்று  அமெரிக்காவில்  ரிலீஸ் ஆன இப்படம்  இப்போது அமேசான் பிரைம் ஓ  டி டி  யில்  தமிழ் டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது .இது 2009 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம் . வெஸ்ட்   மெஸாஜ்  பாலைவனப் பகுதியில் 11 பெண்களின்  பிணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டன . ஆனால் குற்றவாளிகளைக்கடைசி வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை . அந்த சம்பவத்தில்  கொஞ்ச்ம கற்பனை கலந்து திரைக்கதை  அமைத்து இருக்கிறார்கள் 


நான்  சோழமண்டலம்   டி பி எஸ்  வஙகியில்  லோன் செக்சனில்  ரிசீவபிள்  டீமில்  டீம் லீ டராக இருந்த போது  லோன்  டியூ 3  தவணைகள்  தொடர்ச்சியாக கட்டாதவர்கள்  வண்டிகளை சீசர் ஏஜென்ட்  மூலம் சீஸ்  செய்து வண்டியை  பார்க்கிங்க் யார்டில்  வைப்போம் .எங்கள்  கம்பெனிக்கும் , யார்டுக்கும் இருக்கும் தூரம் 8 கிமீ .க்ஸ்ட்மர்ஸுக்கு  அந்த  யார்டு  இருக்குமிடம்  தெரியாது . மீண்டும் பணத்தைக்கட்டினால்  வண்டி ஒப்படைக்கப்படும் , இல்லை எனில் ஏலம்  விடப்படும் . இந்தக்கதையில்   கொலைகாரன்  அதே  போல  தான் கொலை செய்தவர்களின்  பிணங்களை  குறிப்பிடட  இடத்தில்  ரெகுலராக  புதைத்து  வருகிறான்          


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு ஏரியாவில்  இருக்கும்  போலீஸ் ஸ்டேஷனில்   த  போன் கலெக்ட்டர்   என்ற குற்றவாளி யைத்தீட்டி வருகிறார்கள் .அவன் ரூ சீரியல்  கில்லர் . அந்த் சுடேஷனில்  பணியாற்றும்  வில்லன்  ஒரு போலீஸ் ஆபீசர்தான் .அவன் மேல் ஆல்ரெடி  பல குற்றச்சாட்டுகள்  உண்டு . சில கேஸ்களும்  பைல் ஆகி  இருக்கிறது .இப்போது அவன் சஸ்பென்ஷனில் இருக்கிறான் . இந்தக்கேஸை  விசாரிக்க  ஸ்பெஷல் ஆபீசர்  அந்த ஊருக்கு வருகிறார் 



ஆல்ரெடி ஸ்டேஷனில்  ஒரு  ஆபீசர்  அவருக்கு அஸிஸ்டெண்ட் ஆக ஒரு லேடி ஆபீசர்  அந்த கேஸை  விசாரிக்கிறார்கள் . அந்த அ ஸிஸ் டெண்ட்  லேடி  தன்னிடம்  பல விபரங்களை  தன ஹையர் ஆபீசர் மறைப்பதாக  புகார்  தருகிறார் . . இப்போது  அந்த சீரியல் கில்லர்  

1 வில்லன் ஆன போலீஸ் ஆபீஸரா? 

2  விசாரிக்கும்  ஆபீஸரா? 

3 ஹையர் ஆபீஸரா? 

4  விசாரிக்க வரும்  ஸ்பெஷல் ஆபீசரா?  என்பதுதான் க்ளைமாக்ஸ் 


படம் மிக மெதுவாக  நகர்ந்தாலும்  கதை  தெளிவாக நமக்குப்புரிகிறது 


கேஸை  விசாரிக்க   வரும்  ஸ்பெஷல் ஆபீசர் ஆக மேல் ஜிப்சன் நடித்திருக்கிறார் . வில்லன் ஆக  வரும் போலீஸ் ஆபீசர்  தெனாவெட்டாக  நடித்த்திருக்கிறார் 

ஆன்றோ  மோர்கன் ஸ்மித்தின் பின்னணி இசை  அங்கங்கே  திகில் ஊட்டுகிறது ஜாவா ரெய்ஸ் தான் ஒளிப்பதிவு , மிகத்தெளிவான  ஒளிப்பதிவு  ஆர் ஜெ  கூப்பரின்  எடிட்டிங்கில்  படம்  90 நிமிடங்களில்  முடிகிறது . ஒரு குயிக் வாட்ச் ஆகவே  பார்த்து விடலாம் 


  ரசித்த  வசனங்கள் 


1 கஷ்டத்துல இருக்கும்போது கூட  சந்தோஷமா  இருக்கணும்னு பைபிள்ல சொல்லி இருக்கு 


2  அவனோட சஸ்பென்ஷனை  அவன் ஒரு வெக்கேஷனா எடுத்துக்கிடடான் 


3  அவனை அவனாலேயே தடுக்க முடியாது 


4 கொலை பண்றது மட்டும்தான் அவனுக்கு திருப்தி தரக்கூடிய ஒரே  விஷயமா இருந்தது 


5  நான்  உருவாக்கியதை நீ அழிக்க விட மாடடேன் 


6 கொலை  பண்றவன்  யாரும் நான் தான்   கொலைகாரன்னு சொல்லிட்டு இருக்க மாடடான் 


7  எனக்கு வயசானதால உடம்பு டயர்டு  ஆகிடுச்சு , கண்  பார்வை  மங்கிடுச்சு , எல்லாம்  சரி , ஆனா என்  மூளை  இன்னும்  ஷார்ப்பாதான் இருக்கு 


8 நமக்குப்பிடிச்சவங்க  கிட் ட பொய்   சொல்றது  ரொம்பக்கஷ்டமான  விஷயம் 


9   வலி  இல்லாம ஒருவரால்  வாழவே முடியாது 


10   சிலர்  மனசுல அக்கிரமங்கள்  தான் அதிகமா  படிஞ்சிருக்கும் , அவன்  மனசுல அரக்கத்தனம்  புதைஞ்சிருக்கும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரமாதமான  படம் எல்லாம்  இல்லை . ஆனால் பார்க்கலாம் . ரேட்டிங்  2.5 / 5 


Boneyard
Theatrical release poster
Directed byAsif Akbar
Screenplay by
  • Vincent E. McDaniel
  • Asif Akbar
  • Hank Byrd
  • Koji Steven Sakai
Story byVincent E. McDaniel
Produced by
  • Colin Bates
  • Tamas Nadas
  • Asif Akbar
  • Vincent E. McDaniel
Starring
CinematographyJoshua Reis
Edited byR.J. Cooper
Music byAndrew Morgan Smith
Production
companies
  • Flix Financial
  • Avail Entertainment
  • Busy Day Productions
  • Dream Team Productions
  • FilmLens
Distributed byLionsgate
Release date
  • June 5, 2024
Running time
96 minutes
CountryUnited States
LanguageEnglish

Sunday, December 22, 2024

விடுதலை பாகம் 2 (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா )

           


     அமரர்  மேஜிக் ரைட்டர் சுஜாதா , எழுத்துச்சித்தர் பாலகுமாரன்  அளவு  சக்ஸஸ் ரேட்  சினிமாத்துறையில்  இல்லாமல் போனாலும் , ரைட்டர்  ஜெயமோகன்  தீவிரமாக கோடம்பாக்கத்தில்  இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார் .ரைட்டர்  ஜெயமோகன் எழுதிய  துணைவன் என்ற சிறுகதையை மையமாகக்கொண்டு  இயக்குனர்  வெற்றி மாறன்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதிய படம் தான்  விடுதலை . இதன் முதல் பாகம்  பிரமாதமான  வரவேற்பைப்பெற்றது .இதன் இரண்டாம்  பாகம் இப்போது  வெளியாகி இருக்கிறது .முதல்பாகம் அளவுக்கு கமர்ஷியலாக  இல்லை என்றாலும் இது தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமே .        


ஸ்பாய்லர்  அலெர்ட்

விடுதலை  பாகம் 1 ல்  தீவிரவாதி  என்று அழைக்கப்படும்  பெருமாள் வாத்தியாரை  நாயகன் ஆன போலீஸ்  கான்ஸடபிள்  எப்படிக்கைது செய்ய உதவி ஆக இருக்கிறார் என்பதைக்கமர்ஷியலாகச்சொன்னது .பாகம் 2 ல் பெருமாள் வாத்தியாரின் பிளாஸ் பேக் கதை 


கதை நடக்கும் காலகட்டம் 1990. பண்ணை  அடிமைகளா  வேலை செய்யும்   பெண்களை  பண்ணையார் தான் விரும்பியபடி  பலாத்காரம்  செய்கிறார் . ஒரு பெண்ணின் கணவன்  வெகுண்டு எழுந்து பண்ணையாரைக்கொலை செய்து விடுகிறான் . பண்ணையாரின்  மகன்  தன அப்பாவைக்கொலை செய்தவனுக்கு ஆதரவு அளித்து அடைக்கலம் கொடுத்த பெருமாள் வாத்தியாரை அடித்துப்போட்டு  விட்டு பாதிக்கபட் ட  பெண்ணின்  கணவனை   பழி வாங்குகிறான் 


இதற்குப்பின்  பெருமாள்  வாத்தியார்    கருப்பன்   என்ற  பெயரில்  வேறு  ஊரில் வேறு  ஐடியில்  கூலி ஆளாக  தன வாழ்க்கையைத்தொடங்குகிறார் . கம்யூனிஸ்ட்  கட்சியில்  சேர்கிறார் .மக்களுக்கான  போராட்ட்ங்களை நடத்துகிறார் .அவரது  வாழ்க்கை  வரலாறு தான்  மீதிப்படம் . முதல்  பாதி  முழுக்க  நாயகன் எப்படிப்போராளி   ஆகிறார்  என்பதை  போர்  அடிக்கும் விதத்தில்  நீட்டி முழக்கி  சொல்லி இருந்தாலும் , நாயகனை போலீஸ்  டீம் எப்படி  ரவுண்ட்  கட்டுகிறது ? அவரை  வைத்து  செய்யும் அரசியல்   என்ன?  என்பதை  சுவராஸ்யமாக  பின் பாதியில் சொல்லி இருக்கிறார்கள் 

நாயகன் ஆக  விஜய் சேதுபதி  பல  தோற்றங்களில்  வருகிறார் . பிரமாதமான  நடிப்பு .பெருமாள்  வாத்தியராகவே  வாழ்ந்திருக்கிறார் . நாயகி ஆக  மஞ்சு   வாரியார்  அதிக  வாய்ப்பில்லை என்றாலும்  வந்தவரை  சிறப்பு .      

நாயகனின் குருவாக  கிஷோர்  கச்சிதம் . போலீஸ் ஆபீசர் ஆக வரும் கவுதம் மேனன்  அதிக  வாய்ப்பில்லை . தமிழக  அரசின்  தலைமை செயலாளர் ஆக வரும் இயக்குனர் ராஜீவ்  மேனன் ஆளுமையான  நடிப்பு + உடல் மொழி கறுப்பன்  ஆக  வரம் கென்  கருணாஸின்  நடிப்பும்  அடடகாசம்  

முதல் பாகத்தில்  நாயகன் ஆக வந்த  சூரி  இதில்  டம்மி ஆகி விடடார் .க்ளைமாக்சில் மட்டும் கலக்கி இருக்கிறார் 

ஜமா படத்துக்குப்பின் அட் டகசமான ரோல்  "சித்தி" புகழ்சேத்தனுக்கு .நெகட்டிவ்  ஷேடில்  கலக்கி இருக்கிறார் 

இளையராஜாவின்  மென்மையான  இசையில்  4 பாடல்கள் .அவற்றில்  இரண்டு செம ஹிட் . பின்னணி  இசையில்  முதல் பாகத்தை விட  இதில் அதிக ஸ்கோர்  செய்திருக்கிறார் . ஆர்  வேல் ராஜின்  ஒளிப்பதிவு  அருமை . ராமரின்  எடிட்டிங்கில்  படம் 171 நிமிடங்கள்  ஓடுகிறது .முதல்  பாதியில்  கொஞ்சம்   ட்ரிம்  பண்ணி இருக்கலாம் 



சபாஷ்  டைரக்டர்


1  வீரப்பன்   உட்பட  தேடுதல்   வேட்டையில்  இருக்கும்  தீவிரவாதிகள்  போலீசில்  பிடிபட் டால்  அந்த நியூஸ்  உடனேயே  எதனால்  வெளியே  தெரிவதில்லை ? அதில் இருக்கும் அரசியல் என்ன?என்பதை துணிச்சலாகப்பேசிய விதம் 

2  நாயகன் நாயகியிடம்  தனது   காதலை  சொல்ல  முடியாமல்  தடுமாறும் காட்சி 

3   ஒரே ஒரு சீனில்   வந்தாலும் இளவரசுவின் நடிப்பு கலக்கல் ரகம் 

4  கை  தட் ட  வைக்கும்  க்ளைமாக்ஸ்  காட்சி 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1  மனசுல மனசுல   ஒரு மாதிரி  இருக்குது 

2  தினம்  தினமும் 


  ரசித்த  வசனங்கள் 


1   இந்த  மாதிரி  நெருக்கடியான  நிலைமைகளை டீல் பண்ணத்தான் நாங்க  படிச்சுட்டு  வந்திருக்கோம் 


 அப்போ  என்னைப்படிக்காத தற்குறி னு சொல்ல வர்றீங்களா? 


================


2 உங்களைப்பொறுத்தவரை  அது வெறும் ஸ்ட்ரேடஜி , எங்களுக்கு அது வலி 

=============

3  நம்ம ஜனங்களுக்கு  அரசியல்  தெரியாது , ஆனா நம்ம உரிமைகள்  பறிக்கப்படுதுன்னா அவங்களே  எதிர்த்துப்போராட ஆரம்பிச்சுடுவாங்க 


================

4  நல்லவனா  இருக்கறதால  மட்டும்  இந்த சமூகத்துல  எந்த மாற்றத்தையும் கொண்டு  வர முடியாது . அதுக்குன்னு சில கோட்பாடுகளும், அமைப்புகளும் தேவை 


5   காலம்  நமக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கி  இருக்கு  1 நடப்பதுதான் நடக்கும், எல்லாம் நம்ம தலை விதி என  அடங்கி  இருப்பது 2 சங்கம் அமைத்து நம்ம உரிமைகளுக்காகப்போராடுவது 


6 போராடடத்தில்  ஈடுபடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில்  ஈடுபடனு ம் . அப்போதான் மக்கள் போராடுபவனைப்பார்த்து உங்களுக்கு என்னப்பா?பொண்டாட்டியா? குட்டியா? என கேட்க மாடடாங்க 


7   எப்பவுமே  ஜனங்க  ஒரு பொதுப்பிரச்சனைக்குப்போராட  வாங்கன்னா வர மாட்டாங்க . அதுக்கான சூழல் உருவாகனும் 


8     அவனவன்   தேர்ந்தெடுக்கும்  பாதை அவனவன் வாழ்வைத்தீர்மானிக்கிறது 

9 என்னோட பாதை என்ன?னு எனக்கே தெரியாதப்ப எனக்கான பாதையை அவர் தான் தேர்ந்தெடுத்தார் 

10   செத்துடுவோம்னு  பயப் படறதை விட செத்துப்போவதே மேல் 

11  வழி நடத்துவதற்கு  தலைவனாக இருக்கணும்கற தேவை கிடையாது தத்துவம் இருந்தா போதும் 


12  வன்முறை என்பது  ஒரு மொழி , பொதுவா நாங்க அந்த மொழியில்   பேசுவது  இல்லை , ஆனா அந்த மொழியும் எங்களுக்குப் பேசத் தெரியும் 


13  தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள் அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது 

14  நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு

15  மக்களுக்காகப்போராடுபவர்களை மக்கள் பார்த்துக்குவாங்க 


16  ஒருவருடைய  வாழ்விடத்தை பெருவாரியான மக்களின் நன்மைக்காக என்றாலும்  அதை  அழிப்பது , அழிக்க நினைப்பது ரியா? 


17நீ கூப்டுறது இல்லடா என் பேரு

நான் சொல்றதுதான் என் பேரு

18 போனா உயிர் , வந்தா வரலாறு

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஒரு சண்டையின் போது  தனது கணவன்  தன தலைமுடியைப்பிடித்து  இழுத்து அடித்ததால்தான்  கூந்தலை கட்  பண்ணி விட்டு  பாய்ஸ் கட்டிங்க்  வைத்ததாக நாயகி சொல்கிறாள் .அவனை டைவர்ஸ்  பண்ணிய பிறகும்  அதே பாய்ஸ் கட்டிங்க்   எதனால் ? நாயகனைத்திருமணம்  செய்த பின்பாவது  கூந்தலுக்கு மாறி இருக்கலாம்.10  வருடங்கள் ஆகிறது அவர் கூந்தலை  வளர்க்க 


2     மைதிலி என்னைக்காதலி  படம் ரிலீஸ்  ஆன  கால கட்டம் 1986 . கதைப்படி  அந்தப்படத்தைப்பார்க்கற  சீன்ல டி டி எஸ் ல  ஒளிபரப்பாகுது . ஆனா   டி டி எஸ்  நடைமுறைக்கு வந்தது 2000ம் ஆண்டுக்குப்பின் தான் . பீரியட் பிலிம்  எடுக்கும்போது  இதை எல்லாம் கவனமாப்பார்க்கணும் 


3   முதல் பாதி கதையில்  வரும் பண்ணையார் கொடுமைகள் ,பழி  வாங்கல்கள் எல்லாம்  ஏற்கனவே  மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன் வாட்டாக்குடி இரணியன் , சீவலப்பேரி  பாண்டி , அசுரன்  உட்பட பல படங்களில்  பார்த்தவை தான் . கதை சொல்லும் விதத்திலும் கம்யூனிசம் , பா ரஞ்சித்தின் ஜாதியிஸம் ஓவர் டோஸ் .

4    இளையராஜா தனது படத்தில்  ( ரஜினி யின் தளபதி )  இருந்தே  பிஜிஎம் களை  உருவி இருக்கிறார் 

5  வாத்தியாரின்  வாத்தியார் ஆக  வரும் கிஷோரின்  கேரக்ட்டர்  டிசைன்  அழுத்தமாக எழுதப்படவில்லை .அவருக்கு  ஒன்று நேரும்போது ஆடியன்ஸின்  மனதில் எந்த பாதிப்பும் நிகழ வில்லை 

6  முதல்  பாதி முழுக்க ஆளாளுக்கு  தோழர் தோழர்  என் பேசிக் கொண்டே போவது  செம போர் .இயக்குனர் தன கருத்துக்களை வலிந்து திணிக்கிறார் 

7  இடது சாரி , வலது சாரி  என்றால் என்ன?  என விளக்கும்  காட் சியில்  எடிட்டிங்க் குழப்பமோ ,சென்சார்  தலையீடோ  பாதியிலேயே ஜம்ப் ஆனதால்  மக்களுக்குப்போய்ச்சேரவேண்டிய ஒரு நல்ல கருத்து மிஸ் ஆகிடுச்சு 


விடுதலை  முதல் பாகத்தில்  போலீஸ் ஆபீசர்  கவுதம்  மேனன்  கூட இன்னொரு போலீஸ் ஆபீசர் ஆக  வரும் ஒரு கேரக்டர்  இந்த இரண்டாம்  பாகத்தில் பண்ணையாராக வருகிறார் . இது எப்படி ? 


வாய்ஸ் ஓவரில்  கதை சொல்வது  எரிச்சல் . அது பல சமயங்களில்  ஓவர்லேப்  ஆகி பல வசனங்கள்  புரியவில்லை 


10   லிப் சிங்க்  சரியாக செட் ஆகவில்லை . பல  கா ட்சிகள்  இருட்டில்  படமாக்கப்பட்டதால் கேமரா  முதுகுக்குப்பின்  வைத்து காட்சிகளை க்காட்டுவதால்   லிப் சிங்க்கிங்க்  குறைபாடு  தெரியாது என இயக்குனர் நினைத்திருக்கிறார் 

11  நாயகன் - நாயகி  ரொமாண்டிக் போர்ஷன்  மனதில் பதியவில்லை  அதற்கு  முக்கியமான காரணம்  நாயகியின்  பாய்ஸ்  ஹேர் கட்டிங் . மஞ்சு வாரியார்  சேலையில் , கூந்தலில் இன்னமும் அழகாக இருப்பார் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+ . வன்முறைக்காட் சிகளுக்காக  சென்சாரில் ஏ சர்ட்டிபிகேட் தரப்பட்டுள்ளதால்  மாணவர்கள் ,மென்மையான மனம் கொண்டவர்கள்  இப்படத்தைத்தவிர்க்கவும் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் கம்யூனிச சித்தாந்தங்களை  அதிகம் பேசுவதால்  கம்யூனிஸ்ட் , திமுக ,விசிக  போன்ற கட்சிக்காரர்கள்  விரும்பிப்பார்ப்பார்கள் . பொது மக்கள்  விரும்பிப்பார்க்கும் அளவு முதல் பாதி  கமர்ஷியலாக இல்லை . பின் பாதி நல்ல விறு விறுப்பு . எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -46 , குமுதம் ரேங்க்கிங்க் ஓகே .மை  ரேட்டிங்க் 3 / 5 




Friday, December 20, 2024

CARRY ON (2024 ) -அமெரிக்கன் மூவி - ஆங்கிலம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்

         

        இயக்குனர் ஜாம் கலேட்  சாரா  வின் படங்கள்  எப்போதும்  ஸீட் எட்ஜ்  த்ரில்லராகத்தான்  இருக்கும்  ORPHAN (2009) ,UNKNOWN (2011) ,NONSTOP (2014), RUN ALL NIGHT (2015)  உட்பட  அவர் இயக்கிய 13  படங்களுமே  செம  விறுவிறுப்பானவை     CARRY ON படம் நெட் பிளிக்ஸ் க்காக  தயாரிக்கப்பட்டு  13/12/2024  முதல் நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது .தமிழ்  டப்பிங்கில்  இருக்கு   


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  விமான நிலையத்தில் செக்கிங்க் செக்சனில்  வேலை பார்ப்பவர் .பயணிகளின்  லக்கேஜ்களை  மானிட் ட ர்  செய்து கிளியர் பண்ணி விடும் வேலை . இவருக்கு  ஒரு போலீஸ் ஆபீசர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம் . பல  வருடங்களாக  நன்றாக  வேலை பார்த்தும்  பிரமோஷன்  கிடைக்கவில்லையே என்ற  ஆதங்கம்  இவருக்கு உண்டு . இவருக்கு  ஒரு காதலி உண்டு . லிவ்விங்க்  டுகெதர்  வாழ்வில்  இப்போது அவர் கர்ப்பமாகஇருக்கிறார் . காதலியும்  அதே  விமான நிலையத்தில்  வேறு செக்சனில்  வேலை பார்ப்பவர் .


ஒரு நாள்  வில்லன்  நாயகனுக்கு   கால்  பண்ணி  இப்போ  ஒரு லக்கேஜ்  வரும், அதைக்கண்டுக்காம விட்டுடு . என் ஆள்   சிவப்புக்கலரில்  தொப்பி போட்டிருப்பான் . என் பேச்சை  மீறி  நீ ஏதாவது  செய்ய நினைத்தால்  உன் காதலி காலி  என  மிரட்டுகிறான் . நாயகன்  வில்லன் கண்ணில்  மண்ணைத்தூவி  விட்டு ஹையர் ஆபீசர்சை  எச்சரிக்க முயற்சிக்கிறான் , ஆனால்  அது  நடக்கவில்லை . வில்லன் நாயகனை கேமரா  மூலம் கண்காணிக்கிறான் .எதுவும்  செய்ய முடியாத சூழல் . இப்படி  இருக்கும்போது  நாயகன்   அந்த சூட்கேசில்  டைம் பாம் இருப்பதைக்கண்டு பிடிக்கிறான் . இதற்குப்பின்  அவன்  மேற்கொள்ளும்  சாகசங்கள்  தான் மொத்தத்திரைக்கதையுமே 

டாரூன் எஜ்ர்டடன்   தான்  நாயகன் .படம் முழுக்க  அவரது ஆதிக்கம் தான் .கலக்கி இருக்கிறார்  நடிப்பில் . ஆக்சன்  சீக்வன்சில் .நாயகி ஆக சோபியா கர்சன்  அழகாக  வந்து போகிறார் 


டேனியல் டெட்லியர்  ஏர் போர்ட் ஸ்பேஷல்  ஆபீசர்   ஆக  வருகிறார் .  ஜேசன் பேட்மான் தான் வில்லன் .கடுப்பேற்றும்  வில்லத்தனம் 


லைல்  வின்செண்ட்டி ன்  ஒளிப்பதிவு  கலக்கல்  ரகம் . லாரன்  பெல்லீவின் பின்னணி இசை விறுவிறுப்பு . எடிட்டிங்க்  காண கச்சிதம் 119 நிமிடங்கள்  ஓடுகின்றன . ஒரு சீன கூட போர் அடிக்கவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  ஓடும் காருக்குள்  ஒரு தள்ளு முள்ளு பைட்  சீன்  செமையாக படமாக்கப்பட்டவிதம் . இதற்கு முன் எந்தப் படத்திலும் வராத சீன் 


2  கமலின்  குருதிப்புனலி ல்   வில்லனால் மிரட் டப்பட்டு  நாயகன்  வேறு  வழி இல்லாமல் வில்லன் சொன்னபடி  கைப்பாவையாக மாறுவதும் , பின்   சாகசம்  செய்வதுமான ஒன்  லைன் தான் இதுவும் என்றாலும் மாறுபட திரைக்கதை 


3  டைம் பாம்  இருக்கும்  விமானத்தை நிறுத்தினால்  வில்லன்  பாமை வெடிக்க வைத்தது விடுவான் . அப்போ ஏர்போர்ட்டில் சேதம் அதிகமாகும், .இந்த சூழலை நாயகன் கையாளும்  விதம் கை  தட்ட வைக்கும் 


  ரசித்த  வசனங்கள் 


1   கர்ப்பிணிப்பெண்கள்  காபி குடித்தால் கருவுக்கு /பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆபத்து .அவங்க  ஐ க்யூ பாதிக்கபப்டும் 


2  பொறுமைன்னா  என்ன?ன்னே  தெரியாத  2 லட் சம்  கஸ்டமர்ஸை சமாளிக்கணும் 


3 மீட்டிங்க்கு கேடடா  வந்துட்டு பிரமோஷன் வேற வேணுமாக்கும் ? 


4  ஒரு விஷயத்தை முயற்சி  பண்ணாமயே  ஒதுக்குவது தப்பு 


5  நீ  என்ன செய்யணும்? தெரியுமா?  நீ பண்ண வேண்டிய எதையுமே பண்ணாமல் இருக்கனும் 


 6   உலகம்  உன்னைத்தோற்கடிக்க நினைச்சா நீ தோத்துடுவியா ?


7  இந்த உலகம்  எப்படி இயங்குது தெரியுமா?   கட்டுப்படுத்தறவங்க  இருப்பாங்க .அவங்களுக்குகட்டுப்படுபவர்கள் இருப்பாங்க . இந்த  இரு தரப்புகள் தான் மொத்த உலகத்தையும் இயக்குது 


8   காரியம்  பெருசா  இருந்தா  அதை செயல்படுத்துபவர்கள்  இந்த  உலகத்துல கம்மியாத்தான் இருப்பாங்க 


9 இந்த  உலகத்துல  யார் கிட் டயாவது  மனம்  விட்டுப்பேசலாம்னா அது இந்த  உலகத்துக்குப்பிடிக்காது போல 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனுக்கு  ஏகப்பட்ட  வேலைகள்  இருக்கு .தப்பிக்கணும் .டைம் பாமை வெடிக்க வைக்கநும் .இதை எல்லாம் விட்டுட்டு  நாயகியைத்துரத்தி கொலை செய்ய முயற்சிப்பது லாஜிக்கே இல்லை


2  நாயகன்  யூனிபார்ம் போட்டிருக்கிறான் .ஏர்போர்ட்டில்  அனைவர் முன்னும்  செக்கிங்க் லைனைத்தாண்டி  ஓடுகிறான் .ஹையர் ஆபீஸரஸ் க்கு எதோ  விபரீதம் என்பது தெரியாதா?  




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - விறுவிறுப்பான  ஆக்சன் படம் பார்க்க  விரும்பும் அனைவரும்  பார்க்கலாம் . ரேட்டிங்  3 / 5 


Carry-On
Release poster
Directed byJaume Collet-Serra
Written byT.J. Fixman
Produced byDylan Clark
Starring
CinematographyLyle Vincent
Edited by
Music byLorne Balfe
Production
companies
Distributed byNetflix
Release date
  • December 13, 2024
Running time
119 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$47 millio

Thursday, December 19, 2024

SAPTHA KANDAM (2024) -மலையாளம் /சப்த காண்டம் - தமிழ் - சினிமா விமர்சனம் ( கில்மா டிராமா ) 18+

     

                   

கே பாக்யராஜ்  நடிப்பில் /இயக்கத்தில்  வெளிவந்த  சுந்தர காண்டம் (1992) ஏ, பி சி  3 சென்ட்டர் களில்   செம ஹிட் , தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்  வெளிவந்த  ஆரண்ய   காண்டம் (2011)  ஏ சென்ட்டர் ஹிட் ஆசீப் அலி   நடிப்பில்  வெளிவந்த     கிஷ்கிந்தா  காண்டம்  (2024)  கேரளாவில்  செம ஹிட் . இங்கே ஒ  டி டி யில்  ரிலீஸ் ஆனதும்  கொண்டாடினார்கள் .இந்த  சப்த காண்டம் சி சென்ட்டர்  தர லோக்கல்  டிக்கெட்களுக்கான படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  புதிதாகத்திருமணம்  ஆன தம்பதி . ஒரு பங்களாவில்  குடி வருகிறார்கள் . நாயகன்  காலை ல  ஆபீசுக்குப் போகும்  முன்  வீடு கூட்டுவது , வாசலில்  கோலம் போடுவது , சமையல் செய்வது , தோட்டக்கார  வேலை எல்லா வேலைகளையும்  முடித்து  விட்டுக் கிளம்புகிறான் . . மாலை 6 மணிக்கு  வீட்டுக்கு வந்ததும்   டயர்டாகப்படுத்துத்தூங்கி விடுகிறான் . நைட்  டின்னரும்  நாயகன் தான் ரெடி  பன்றான் .


உலக நடப்புத்தெரியாமல் யாரும்  நாயகி  எந்த வேலையும்  செய்யாதா? எனக்கேட்க வேண்டாம் . மாடர்ன் கேர்ள்ஸ் அப்படித்தான் இருப்பாங்க . 3  நாட்கள்  மேலே  சொன்னவை  ரிப்பீட் ஆகுது . 


 இப்போ  வில்லன் எண்ட்ரி . நாயகனின்  மாமா  வர்றான்.நான்  கொடுத்த  80 லட் ச  ரூபாய் கடன் என்ன ஆச்சு ?எனக்கேட்கிறான் . ஒரு வாரத்தில்  தந்து  விடுகிறேன்   என்கிறான்  நாயகன் உடனே  வில்லன் அங்கேயே தங்கி விடுகிறான் .நாயகன்   கடனைக்கட்டினானா?  இல்லையா?       என்பதுதான்  மீதிக்கதை . சொன்ன  நம்ப மாட் டீ ங்க .இவ்ளோ  தான் கதை   

நாயகனும்  தாடி  வெச்ச  பிச்சைக்காரன் மாதிரி  இருக்கான் . வில்லனும்  தாடி , பெரிய  மீசை  வெச்ச  வசதியான    பிச்சைக்காரன் மாதிரி  இருக்கான். நாயகி  ஓரளவு  பரவாயில்லை      


சபாஷ்  டைரக்டர்

1   ஒரு பங்களா , 2  பிச்சைக்காரனுங்க , ஒரு பொண்ணு  அவ்ளோ தான்  ஆர்ட்டிஸ்ட் .அனேகமா  வில்லன் தான்  தயாரிப்பாளரா  இருக்கனும் 


2  இந்த  மெயின்  கதை  கேவலமா  இருக்குனு  யாராவது  சொல்லிட் டா   என்ன  பண்றது?ன்னு  ஒரு புராண  காலக்கதையை  இட்டுக்கட்டி  விட்ட விதம் 



  ரசித்த  வசனங்கள் 



 வசனமாடா முக்கியம் படத்தைப்பார்றா மொமெண்ட் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  நாயகி யிடம் " உன் புருசனுக்கு போன் பண்ணி  " உங்க மாமா மாதவன்  வந்திருக்காரு"  என சொல்லு என்கிறான் . நாயகன்  வில்லனை  அண்ணன்   என்று தான் படம் முழுக்க அழைக்கிறான் 

2  நாயகனுக்கு  அதிகபட்சம்  மாத சம்பளமே  ரூ  4000  தான் வரும் போல .அவனை நம்பி  இவன்  80 லட்ச  ரூபாய்  கடன் தந்தது எப்படி ? 


3  நாயகி  வில்லனிடம் என் கிட் டே  50 பவுன்  நகை  இருக்கு , அதை வேணா  தரவா? என கே ட்கிறாள் . வில்லன்  அது 10 அல்லது  15 லட்ச ம் தான் போகும் என்கிறான் . ஒரு பவுன்  விலை 57,000  ரூபாய் .செய் கூலி , சேதாரம் போக  பழைய  நகை என்றாலும் 48000ரூபாய்க்கு  போனாலும் 24  லட்ச  ரூபாய்  வருதே? 


4  நாயகன்  வேலைக்குப்போன  பின்  நாயகி  கேட் டை  சாத்தி விட்டு  பாத்ரூ,மில்  தாழ  போட்டு விட்டுத்தான் குளிக்கிறாள் . ஆனா டர்க்கி டவல்  கட்டிட்டுதான் குளிக்கிறா.  இது எதனால்? அஞ்சரைக்குள்ள வண்டி  பட  காலத்துல இருந்தே  இப்படித்தான் .சென்சாருக்கு பயந்துன்னா காமரா கோணத்தை சோல்டர் வரை வெச்சாப்போதுமே? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது பெண்களுக்கான படம் அல்ல .காலைக்காட்சி  ரசிகர்களுக்கான  படம் , ஆனா  அவர்களுக்கும் ஏமாற்றம் தான் .ரேட்டிங்  1 / 5 


டிஸ்கி -  சப்த காண்டம் என்றால்  ஏழு  காண்டம்  என்று பொருள் .சப்தம்  போடும் { சவுண்ட் கொடுக்கும் ) காண்டமா? என மொக்கை ஜோக் அடிக்க வேண்டாம் 

Wednesday, December 18, 2024

8 A.M .METRO (2023)- ஹிந்தி - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ ஜீ 5 , யு ட்யூப்

           


            தெலுங்கு  எழுத்தாளர் மல்லாடி  வேங்கட கிருஷ்ணமூர்த்தி  எழுதிய தெலுங்கு நாவல் ஆன அந்தமைன   ஜீவிதம் (அழகான வாழ்க்கை )  என்ற  நாவலைத்தழுவி  திரைக்கதை அமைக்கப்பட்ட   ஹிந்திப் படம் இது .4 கோடி  ரூபாய் பட்ஜெட்டில்    எடுக்கப்பட்ட  லோ பட்ஜெட்  படம் இது . மென்மையான   இதயங்களுக்கான  மெலோ டிராமா 

19/5/2023   அன்று  திரை  அரங்குகளில்  வெளியாகி வெற்றி பெற்ற  இப்படம்  இப்போது  ஜீ  5 , யூ டுயூப்   ஓ டி டி களில் காணக்கிடைக்கிறது 60% படக்காட்சிகள்  ஹைதராபாத் மெட்ரொ ரயில் ல படமாக்கப்பட்டது . ரிலீஸ்  ஆன டைமில்  மன ரீதியாக  பாதிக்கப்பட்டவர்களுக்கான தெரபி செஷன் இது  என விமர்சகர்களால்  பாராட்டுப்பெற்ற படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  29 வயதான  திருமணம்  ஆன ஒரு பெண்  கணவன் , இரு குழந்தைகள்  என சந்தோஷமான  வாழ்வு வாழ்ந்து வருகிறாள் . நாயகியின்  தங்கை நிறைமாத கர்ப்பிணி .ஹைதராபாத்தில் இருக்கிறாள் .கணவன்  வெளி நாட்டில் இருப்பதால்  தனியாகத்த்தான்  ஹாஸ்ப்பிடலில்  இருக்கிறாள் . அவளைக்கவனிக்க , அருகில் இருந்து  பார்த்துக்கொள்ள  நாயகி  தனியாகக்கிளம்பிப்போகிறாள் 



 நாயகியின்  தஃகை  வீட்டில்  தங்கி சமையல் செய்து  ஹாஸ்பிடலுக்குப்போய் தினமும் கவனித்து விட்டு பின் மீண்டும்  வீடு திரும்புவது  ரெகுலர் ஆகி விட்டது . பஸ்ஸில் போனால்  3 மணி நேரம் ஆகும், டாக்சியில் போனால் சார்ஜ் அதிகம் ஆகும் என்பதால் மெட்ரொ ரயிலில் தினமும் போய் வருகிறாள் 


ரயிலில்  நாயகிக்கு  நாயகனின் அறிமுகம்  கிடைக்கிறது , நாயகனும் நாயகியைப்போலவே திருமணம் ஆனவன்  தான் . இரு குழந்தைகள் உண்டு 


 நாயகன் , நாயகி  இருவருக்குமான  பொதுவான அம்சங்கள் இருவரும் புத்தக வாசிப்பாளர்கள் . மன பதட் ட நோய்க்கு ஆளானவர்கள் . இவர்கள்  இருவருக்கும் நெருக்கமான நட்பு   உண்டாகிறது .இதற்குப்பின் நனடந்தது என்ன?என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக குல்சான்  தேவய்யா  பிரமாதமாக நடித்திருக்கிறார் , நம்ம ஊர் மோகன் , சரத்பாபு  போல  மென்மையான முக சாயலில் உள்ளவர .நாயகி ஆக ஷயாமி கேர்  அற்புதமாக நடித்திருக்கிறார் . நாயகனின் மனைவி ஆக கல்பிகா  கணேஷ்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார் .அழகான தோற்றம், நல்ல நடிப்பு . இவர்கள் போக  நாயகியின் தங்கை , தங்கையின்  கணவன்   என எல்லோரும்  நல்ல நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


உருதுக்கவிஞர்   குல்சாரின்  எழுத்தில்  7 பாட்டுக்கள் , இசை மார்க் கே  ராபின் . பின்னணி  இசை தென்றலாய் தாலாட்டுகிறது ஒளிப்பதிவு சன்னி குறபடி  பிரமாதமாக  ஒளிப்பதிவு  செய்திருக்கிறார் .எடிட்டிங்க் அணில் ஆலயம் .2   மணி  நேரம் டைம் டியூரேஷன் . கடைசி  20 நிமிடங்கள்  கண் கலங்க  வைக்கும்  காட் சிகள் 

திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ராஜ் ராஜகோண்டா 


சபாஷ்  டைரக்டர்


1   மெட்ரொ  ரயிலில்  வரும் அனைத்துக்காட்சிகளும் கவிதை . நாயகன் - நாயகி  இருவருக்குமான கண்ணியமான நட்பு  அழகு 


2  க்ளைமாக்சில்  நாயகனின்  மனைவி பற்றிய  டிவிஸ்ட்  எதிர்பாராதது 


3  சைக்காலஜி  படித்த  டாகடர்  எழுதியது போல  பிரமாதமான  வசனங்கள்  படத்தின் பிளஸ் 


  ரசித்த  வசனங்கள் 


1   பேஸ்புக் , ட்வீட்டர்  வந்த பின்  புத்தக  வாசிப்பு   குறைந்து விட்ட்து 



2   என்  பெயரை முதன் முதலாக சரியாக உச்சரித்தது நீங்க தான் 


3   ஸ்ட்ரெஸ்  இருக்கும்போது  எதையாவது வரையனும் 


4  தனிமையில்  இருந்தாலும்  நீ  தனி இல்லை 


5  பில்டர்  காபி தயாரிப்பது ஒரு கலை 


நீங்க  அதை விவரிக்கும் விதமே  ஒரு கவிதை + கலை நயம் 



6   அந்த தம்பதியைப்பாருங்க , எப்போப்பாரு சண்டை போட்டுக்கறாங்க , ஆனா சோசியல் மீடியாக்களில் அவங்க ரெண்டு பெரும் அந்நியோன்யமாயிருப்பது போலக்காட்டிக்கறாங்க 



7   அடுத்தவங்க   பிரச்சனைகளை உங்க தலைல ஏத்திக்காதீங்க 


8  மத்தவங்களை  ஜட்ஜ்  பண்ண  நாம யாரு ?


 சரி , உங்களை நீங்களே ஜட்ஜ் பண்ணி சொல்லுங்க 


9   சில  வரிகளைப்படிக்கும்போது அந்த  ரைடடர்  நமக்காகவே  அதை  எழுதியது போலத்தோன்றும் 


10  இதயத்தில் இருந்து எழுந்து வரும் வார்த்தைகளைப்புரித்து கொள்ள  மூளை கொஞ்சம டைம் எடுத்துக்கும் 


11   உலகத்தைப்பற்றி நீ இன்னும் புரிஞ்ச்சுக்கலை  , ஆள் இருக்கும்போது ஒரு மாதிரியும், ஆள் இல்லாதப்ப வேற மாதிரியும் பேசுவாங்க 


12   சாப்பாடு ஊட்டிய  கையாள எப்படி  சிதையூயூட்டுவது ? ( பிணத்துக்கு நெருப்பு வைப்பது ? ) 


13   பேனிக்  அட் டாக்  , ஹார்ட் அட் டாக்   இரண்டுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு .மனப்பதட் டம் ,   மன அழுத்தம் இரண்டும் முக்கியக்காரணங்கள் 


14   மனதில்  இருக்கும் எல்லாவற்றையும் எல்லார் கிட் டேயும் சொல்லிடமுடியாது 


15   மனப்பதடட நோய்க்கு ஆளானவங்க  பதட் டமான  சூழலில்  மூச்சை நல்லா உள்ளே  இழுத்து  1,2,3,4   என எண்ணி  ஒரு  நொடி  மூச்சை நிறுத்தி  மீ ண்டும் 1,2,3,4    என  வெளியே  விட வேண்டும் .பதடடம்  குறையும் 



16 புதுசா  எதையாவது  சாப்பிடும்போதுதான் இத்தனை நாட்களாக இதை மிஸ் பண்ணிடடமேனு தோணும் 


17  தற்கொலை  செயுது கொள்பவர்கள் சாகும் முன்  கடைசியா  என்ன நினைப்பாங்க ? 


18 தவறு செய்யாத மனிதர்கள் உலகில் யாராவது இருக்காங்களா? 


19   ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்கள் பிடிக்கவில்லை என்றால் நமக்குப்பிடித்த ஒரு புத்தகத்தை நாம் தூக்கிப்போட்டுடறோமா? இல்லை . அப்படி  இருக்கும்போது  நமக்குப்பிடித்த  நபரை  பிடிக்காத ஒரு சில விஷயத்துக்காக எதனால வெறுக்கணும் ?


20  உறவுகளை நாம் மதிப்பது  கடைசியா  அவங்க கூட இருந்த மொமெண்ட்ஸ் நினைவில் வைத்தே 


21  இனிமையான  அனுபவங்களோடு  சில கசப்பான அனுபவங்களும் கலந்திருக்கும் .உடனே  நாம உறவை முறித்துக்கொள்கிறோம் 


22  நீ என்னுடன் இருக்கும் வரை உன் அருமை எனக்குத்தெரியலை , நீ இல்லாதப் போ உன்னை மிஸ் பண்ணினதை உணர்கிறேன் 


23  மனிதர்களும் , புத்தகங்களும் நட் பு பாராடடத்தக்கவை 


24   நம்ம  உறவு இதுவரை அழகான உறவா  இருந்தது , இனிமேலும் அது அப்படியே தொடரணும்னு நினைக்கிறேன் 


25   மகிழ்ச்சி  என்பது வேறுபட் ட மனிதர்களின் வாழ்வில்  வேறு வேறானவை . .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் மகிழ்ச்சி 


26    மிக எளிதாகக்கிடைக்கும் பொருள்  என்பதால் பலருக்கும் அதன் மதிப்பு தெரிவதில்லை 


27  சில  உறவுகளுக்குப் பெயர்  இல்லை . ஆனால் அந்த உறவுகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் 


28  எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதை நிச்சயம் ஒரு நாள் இழப்பாய் 


29  உண்மையான அன்பு நீ எங்கே இருந்தாலும் உன்னைத்தேடி வரும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நிறைமாத கர்ப்பிணியைக்கவனிக்கத்தான்  நாயகி  அங்கே  வருகிறாள் .வந்தவள்  அருகில் இருந்து கவனிக்கவில்லை . ஹாஸ்ப்பிடலில் கேண்ட்டீனில்   சாப்பிட்டுட்டு  அங்கேயே  இருக்க வேண்டியதுதானே?  காலை  8 டு   மாலை 5  வீட்டில் என்ன  வேலை ?  ( அப்போதானே  ரயில்  பிரயாணம்  நடக்கும்?) 


2 நாயகி  கணவனுடன்  இருக்கும்போதே  அவன் ஏக  பிசி . தனிமையில்  இரண்டு குழந்தைகளை  கவனித்துக்கொண்டு எப்படி ஆபீஸ்  போகிறான் ? 


3  நாயகியின்  கணவன்  தகவல் சொல்லாமல்  திடீர்  என ஹைதராபாத்  வருவது  நம்பும்படி இல்லை .குழந்தைகளை யார் பார்த்துக்குவாங்க ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - IS LOVE ENOUGH SIR  (2020)  படம் பிடித்தவர்களுக்கு  , பெண்களுக்கு  இது மிகவும் பிடிக்கும் .கமர்ஷியல் ஆக்சன் மசாலா  படங்களை விரும்பிப்பார்ப்பவர்கள்   ஒன  ஸ்டெப்  பேக் . ரேட்டிங்  3 / 5 


8 A.M. Metro
Theatrical release poster
Directed byRaj Rachakonda
Written byRaj Rachakonda
Based onAndamina Jeevitam by Malladi Venkata Krishna Murthy
Produced by
  • Raj Rachakonda
  • Kishore Ganji
Starring
CinematographySunny Kurapati
Edited byAnil Aalayam
Music byMark K. Robin
Production
company
Studio 99
Distributed byPlatoon Distribution
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageHindi
Budgetest.₹4 crore[1]

Tuesday, December 17, 2024

ONCE UPON A TIME IN MADRAS (2024) -ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹைப்பர் லிங்க் த்ரில்லர் )

   


   ஹைப்பர்  லிங்க் ஸ்டோரி நாவல்  படிக்க  புத்திசாலித்தனம் , பொறுமை , ஞாபக சக்தி  இவை மூன்றும் 

 வேண்டும் ,இவை மூன்றுமே  எனக்கு  இல்லாததால்  அந்த மாதிரி  நாவல்  படிக்கும்போது ஒரு குறுக்கு வழியைக் கையாண்டேன் .1,2,3,4  ஆகிய  முதல்  நான்கு அத்தியாயங்களை  நெம்பர்  போட்டுக்கொள்வேன் 5,6,7,8  பின் 9,10,11,12  பிறகு 1,5,9      , 2,6,10  ,  3,7,11  , 4,8,12 இப்படி  ஜோடி சேர்த்துப்படிக்கும்போது சுலபமாகக்கதை புரியும் .நினைவாற்றல்  தேவை இல்லை . ஆனால்  சினிமாவில்  அப்படி வந்தால்  புரிந்து கொள்ள மிக சிரமம் . நான்கு  வெவ்வேறு சிறுகதைகள் நான்கு  தனித்தனி கதைகளாக சொல்லாமல்  முதல்  காட் சி  முதல்  சிறுகதை , அடுத்த  காட்சி  இரண்டாம் சிறுகதை , மூன்றாம்   காட் சி  மூன்றாம் சிறுகதை, நான்காம் காட்சி  நான்காவது சிறுகதை  என  அடுக்கிக்கொண்டே  சென்றால்  எப்படி  சாமான்யன் அதைப்புரிந்துகொள்வான் ? ஆனாலும்  இது ஒரு நல்ல படம்    

25 மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  135 மில்லியன்  டாலர்  வசூல் சாதனை செய்த படமான  BABEL பாபேல் (2006) சைக்கலாஜிக்கல்  டிராமாவாக  வந்த படத்தில்  இருந்து இன்ஸ்பயர் ஆகி இதை எடுத்திருக்கிறார்கள்               


ஸ்பாய்லர்  அலெர்ட்


கதை 1 -  நாயகன்  ஒரு முன்னாள்  ரவுடி . அவரது  மனைவிக்கு  கிட்னி  பிராப்ளம் .15 லட்சம்  ரூபாய்  பணம்  தேவை .அந்தப்பணத்துக்காக என்ன  வேண்டுமானாலும் செய்யத்தயாராய் இருக்கிறார் . ஒரு கொலை  செய்ய  அசைன்மெண்ட்  தரப்படுகிறது .செய்கிறார் .  கடைசியில்  பார்த்தால்  அவரது மனைவிக்கு கிட்னி தானம் செய்யத்தயாராய் இருந்தவர் அவர் . இதற்குப்பின்  நாயகன் என்ன செய்தற்? என்பது மீதிக்கதை 


 கதை 2  -  நாயகி  ஒரு துப்புரவுத்தொழிலாளர் . அவருக்கு ஒரு மகன் உண்டு .அவன் இப்போது  திருநங்கை ஆகி விடுகிறான் . அவனை  டாக்டருக்குப்படிக்க வைக்க வேண்டும் என்பது நாயகியின் லடசியம் . ஆனால் 50,00 ரூபாய் கடன் இருக்கிறது ,கடன் கொடுத்தவன்  மிரட்டுகிறான் . நாயகி வீட்டில்  இல்லாதபோது  மகளை /மகனை  பாலியல்  வன்கொடுமை  செய்து  விடுகிறான்  வில்லன் . நாயகி என்ன செய்தாள்  என்பது மீதிக்கதை 


 கதை 3    நாயகி  புதிதாகத்திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு வருகிறாள் .கணவன்  ஒரு ஹோமோ   என்பதும் . நாயகிக்கு  மயக்க மருந்து கொடுத்து  மாமனார்  பாலியல்  வன்கொடுமை செய்து விடுகிறார்  என்பதும் . நாயகிக்குததெரியாது .கர்ப்பம் ஆகிறார் .உண்மை   தெரிந்த  பின் அவர்  என்ன முடிவு எடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ் 


 கதை 4  - வில்லன் ஒரு ஜாதி வெறியர் . அவரது  மகள் காதல்  திருமணம்  செய்ய  இருக்கிறாள் என்ற தகவல் கிடைத்து  காரில் போகிறார் .  வழியில்  மகளின்    காதலன் என  தவறாக நினைத்து வேறு ஒரு ஆளைக்கொலை செய்து விடுகிறார் . உண்மை  தெரிந்த  பின் என்ன செய்தார் என்பது க்ளைமாக்ஸ் 

நான்கு  கதைகளிலும் தலா  ஒரு கொலை நடக்கிறது . அனைத்துக்கொலைகளும் ஒரே  துப்பாக்கியால்  தான் நடக்கிறது .அது எப்படி ? என்பதுதான் சுவாரஸ்யமான முடிச்சு 


முதல்  கதையில் ரவுடியாக  பரத்  , இரண்டாவது  கதையில் நாயகி ஆக அபிராமி ,மூன்றாவது  கதையில் நாயகி ஆக  அஞ்சலிநாயர் ,நான்காவது  கதையில் வில்லனாக தலை வாசல் விஜய் , அவரது மகளாக பவித்ரா  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்,அனைவர் நடிப்பும் சிறப்பு 

இயக்கம்      பிரசாத்    முருகன் 

சபாஷ்  டைரக்டர்


1  நான்கு  கதைகளிலும்  வரும்  ஒவ்வொரு  டிவிஸ்ட்டும்   அருமை . நான்கையும்  இணைக்கும்  விதமும்  அழகு 


2   இது  ஒரு லோ பட்ஜெட்  படம் என்றாலும்  அது திரையில்  தெரியாமல் பார்த்துக்கொண்ட விதம் 


3   பரத் , அபிராமி  உட்பட  அனைவரின் நடிப்பும் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  எல்லா  வயசுலயும் பெண்ணுக்குப் பால் சுரந்தா  இந்த உலகத்துல நோயே இருக்காது  ( தாய்ப்பாலுக்கு நிகரான   மருந்து இல்லை ) 


2  என் பொண்ணுன்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும், ஆனா என் பொண்ணு செய்யும்  எல்லா செயல்களும் எனக்குப்பிடிக்கணும்னு அவசியம் இல்லை 


3   அன்பா  இருக்கீங்க ன்னு சொல்லுங்க, ஆனா நேர்மையா இருக்கறதா சொல்லாதீங்க , ஜாதி தான் உங்க நேர்மையா? 


4  கொஞ்ச்ம  டைம்  கொடு , கடனைத்தீர்த்துடறேன்


ஒரு மணி நேரம் டைம் போதுமா? 


5   சிறுநீரக  நோய்  வந்துட் டா  தண்ணீர்  கூட அளந்து  அளந்து  தான் குடிக்கணும் . இந்த நோய்  யாருக்கும் வந்துடக்கூடாது 


6  போலீஸ்  என்னைக்கு  இல்லாதவனுக்கு உதவி பண்ணி  இருக்கு ? 


7    அது  வீடில்லை , சிங்கிள்  பெட் ரூம் ஜெயில் 


8  தேவைகள் தான்  அறத்தைத்தீர்மானிக்கும் 


9   இந்த உலகத்துலயே  கடவுளா  இருப்பதுதான் ரொம்பக்கொடுமையானது , சிலர் திட்டுவாங்க, சிலர் துதி பாடுவாங்க 


10  அதிகாரத்துக்கு எதிரான ஆயுதமே நமது அழுத்தமான  பேச்சும் எழுத்தும் தான் 



11   நம்மைப்புனிதப்படுத்தும் எதுவும் நமக்குத்தேவை இல்லை 



12   வாழ்க்கை  என்பது நிலையானது அல்ல, கடந்து போயிடனும் , கர்வம் இல்லாம வழனும் 


13  படித்து விட்டோம் என்பது கர்வம் இல்ல.கவ்ரவம் 


14  தம்  அடிச்சு எனக்குப்பழக்கம் இல்லை 


ஓஹோ , ஆளுங்களை  அடிச்சுத்தான் பழக்கமோ? 


15  செய்யற  வேலையை விட செய்ய வைக்கும் மூளை தான் தேவை 


16   வாழ்க்கை  என்னும்  ரேஸ் ல ஜெயிச்சுட் டா  பாடமா  இருக்கும் . கஷ்டப்பட்டு ஜெயிச்சுட் டா  பாலமா  இருக்கும் 



17   தமிழில்  ஜாதி என்ற  வார்த்தையே கிடையாது . ஜாதி பார்ப்பவன்  தமிழனே கிடையாது 


18 சனிதோஷம் ,   சுயம்  இந்த  ரெண்டையும்  உன் கிட் டே  இருந்து  யார்   பறிக்கவும்  விடாதே 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ஒரு ரவுடி  , வேலை  வெட்டி  இல்லாதவன்  15 லடசம்  ரூபாய்  கடன் கேட்பது  எப்படி ?அதுவும்  போனில் ? நேரில்  போய்க்  கேட் டா லே மதிக்க மாடடாங்க 


2   அபிராமி  கதையில்  மகள்   என்றே  காட்டி  இருக்கலாம் /. திருநங்கை  என்பது  திணிப்பு . ரயில்களில்  அவர்கள் செய்யும்  அட்டூழியங்களைப்பார்த்து கோபம் தான் வரும் , பரிதாபம் வராது 


3   அஞ்சலிநாயர் கதையில்  நாயகிக்கு  தாம்பத்யமே  நடக்கலை  என்ற போதே   சந்தேகம் வராதது எதனால்? தன அப்பாவுக்கு     தகவல்  சொல்லாதது   எதனால்?

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சிறுகதைகள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்  பார்க்கலாம் . ஒரு முழுக்கதை  தான்  புல்  மீல்ஸ்  சாப்பி ட் டது போல்  எனநினைப்பவர்கள் தவிர்க்கவும் . விகடன்  மார்க் - 41 குமுதம்  ரேங்க்கிங்க்  - ஓகே , ரேட்டிங்  2.5 /5 


Once Upon A Time in Madras
Theatrical release poster
Directed byPrasadh Murugan
Written byPrasadh Murugan
Produced by
  • Captain MP Anand
Starring
Cinematography
  • K S Kalidoss
  • R Kannan
Edited bySan Lokesh
Music byJose Franklin
Production
company
  • Friday Film Factory
Release date
  • 13 December 2024
Running time
120 minutes[1]
CountryIndia
LanguageTamil