Monday, December 16, 2024

RUDHIRAM (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் )

                         




கன்னட நடிகர் ஆன ராஜ் பி ஷெட்டி   நம்ம ஊரு  கே பாக்யராஜ் , டி ஆர்   போல  திரைக்கதை  ஆசிரியர் கம்  டயலாக் ரைட் டர்  கம்  டைரக்டர் . சுவாதி முத்தின மலே  ஹனியே   என்ற  மாறுபட்ட  மெலோ  டிராமாவிலும்  ஷைன் செய்தார் .டோபி என்ற அதகள ஆக்சன்  டிராமாவிலும்  பின்னிப்  பெடல் எடுத்தார் .கன்னட ப்பட உலகின்  சிறந்த படங்களுள் ஒன்றான கருட காமனா  விருஷப வாகனா  செம  கமர்ஷியல் ஹிட்  மூவி . இவர் நடிப்பில் லேட் டஸ்ட் ஆக  வந்திருக்கும் மலையாளப் படம் தான் இது 


ஒரு ரெண்டாம் வகுப்பு யாத்ரா (2015)  என்னும்  மலையாளப் படம்  மூலம்  அறிமுகம் ஆன  அபர்ணா  பாலா முரளி மகேஷிண்டே பிரதிகாரம் (2016) மூலம் செம ஹிட் ஆனார் . தமிழில்  எட்டு தோட் டாக்கள் ( 2017) சர்வம்  தாள மயம் (2019) ,      சூரரைப்போற்று (2020) ,  நித்தம்  ஒரு வானம்  (2022) , ராயன் ( 2023)  உட்பட  பல 

 படங்களில்நடித்தவர் . இவரது லேடடஸ்ட்  ஹிட் கிஷ்கிந்தா காண்டம் .சூரரைப்போற்று ப படத்தில்  நடித்ததற்கு தேசிய விருது பெற்றார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு வீட்டின்  அறையில்  அடைத்து  வைக்கப்பட்டிருக்கிறார் .ஓல்டு  பாய் (2003) கொரியன்  மூவி  யில் வருவது போல  வில்லன்  நாயகியை வேண்டுமென்றே  அடைத்து   வைத்து  சித்ரவதை செய்கிறான் . நாயகியைத்தொடக்கூட இல்லை . ஆனால் மனோ ரீதியாக    சித்ரவதை செய்கிறான்  வில்லன் . நாயகி இதற்கு முன் வில்லனைப்  பார்த்தது கூட இல்லை .. நாயகிக்கு  இப்போது  வில்லனிடம்  இருந்து  தப்பிக்க வேண்டும் , என்ன காரணத்துக்காக தன்னை அடைத்து வைத்திருக்கிறான் என்பதைக்கண்டு பிடிக்க வேண்டும் .


 நாயகன்  ஒரு டாக் டர் . இனிமையான  சுபாவம்  கொண்டவர் . தன்னிடம்  வரும் பேஷண்ட்களைக்கனிவாகக்கவனித்துக்கொள்கிறார் .


நாயகியை அடைத்து வைத்திருக்கும் அதே  வீட்டில் வேறு ஒரு அறையில்   வில்லன்  இன்னொரு ஆணை  அடைத்து  வைத்திருக்கிறான் .அவனையும் சித்திரவதை செய்கிறான் 



நாயகன் , நாயகி , வில்லன் , இன்னொரு ஆள்  இந்த  நால்வருக்கும்   என்ன  தொடர்பு ? க்ளைமாக்சில்  என்ன ஆனது ? என்பது  மீதி திரைக்கதை 


நாயகன் ஆக ராஜ் பி ஷெட்டி   தனது நடிப்பால் பார்ப்பவர் மனதைக்கவர்கிறார் . நாயகி ஆக அபர்ணா பாலமுரளி  விஜய  சாந்தி மாதிரி ஆக்சன் அவதாரம் எடுத்து இருக்கிறார்  , செமயான நடிப்பு .இவரது துணிவும், தைரியமும்  பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் 


ஜோசப்  கிரன் ஜார்ஜ் என்பவருடன் இணைந்து  திரைக்கதை எழுதி இருக்கிறார் ஜிஷோ  லான் ஆண்டனி ஜோமன் கே ஜோசப் , கிருஷ் தாமஸ் மேவலி ,ஜிஷோ  லான் ஆண்டனி   ஆகிய  மூவரும்  இணைந்து  இயக்கி இருக்கிறார்கள் 


ஒலிப்பகிவு ,ஒளிப்பகிவு , ஆர்ட்  டைரக்ஷன்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்   ஓக்கே ரகம் .பின்னணி இசை  அருமை . எடிட்டிங்க்  கச்சிதம் . 122 நிமிடங்கள்  டைம் ட்யுயூரேஷன் 

சபாஷ்  டைரக்டர்

1  குமுதம்  இதழில்  ஒரு பக்கக்கதையாக  வெளியிட் டால்  கூட  பாதி பக்கம் தான் வரும் . அத்துளியூண்டு கதையை  2  மணி நேரபபடமாகக்கொடுத்த சாமார்த்தியம் 


2  வில்லன்  நாயகியை  கடத்தியதற்கான காரணத்தை  படத்தின்  கடைசி  5 நிமிடத்தில்  ஓப்பன் செய்த விதம் 


3  வில்லனுக்கும்  , போலீஸ் ஆபீஸருக்கும்  நிகழும்  தத்ரூபமான சண்டைக்காட் சி யைப்படமாக்கிய விதம் 


4  நாயகி அந்த அறையில்  இருந்து  தப்பிக்க  எலியை  யூஸ்  பண்ணும் ஐடியா


  ரசித்த  வசனங்கள் 

1    நம்ம  உணர்ச்சிகளை  நம்ம கட்டுப்பாட்டில்  வைக்கணும் . இல்லைன்னா காலம் முழுக்க தனிமையில் கழிக்க நேரிடும் 


2  உன்னை எதற்காகககடத்தினேன்  என்பது  இவனுக்குத்தெரியும், ஆனா  நீ கேடடாலும் அவன் சொல்ல மாடடான் .சொல்லமுடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 மிஸ்ஸிங்க்  கேஸ் பற்றி  விசாரிக்க  வில்லன் வீட்டுக்கு வரும் போலீஸ் ஆபிசர்  துப்பாக்கி இல்லாமல் , கூட ஆட்கள் இல்லாமல் தனியாக வந்து  மாட்டுவது நம்பும்படி இல்லை  


2  ஒருவரை   ரூமில்  அ டைத்து   வைத்தால்  கதவைத்திறக்கும்போது  அவர் கதவுக்குப்பின்னால்  மறைந்திருந்து  தாக்குவார் என்பது வில்லனுக்குத்தெரியாதா?2 முறை இரூவரிடமும் ஏமாறுகிறார் 


3   வில்லன்  தனுஷுக்குத்தம்பி மாதிரி இருக்கிறார் . நாயகி  ஆஜானுபாவகமாக  நமீதாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார் . இதனால்  இருவருக்கும் இடையில்   நிகழும்  ஆக்சன்  ஸீக்வன்ஸ்   சுவராஸ் யமாய் இல்லை . வில்லனின்  உடல்  எடை  அதிகபட்சம்  45 கிலோ  இருக்கும் . நாயகியின் உ டல் எடை 85 கிலோ  இருக்கும் . நாயகி தான் ஜெயிப்பார் என்பது ஈஸியா தெரிந்து விடுது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் .மிக சாதாரண  கதை , நல்ல  திரைக்கதை . ரேட்டிங்  2.75 / 5 

டிஸ்கி 

இந்தப்படம்  பார்க்க மொழி அவசியம் இல்லை .எனவே  சப் டைட்டில்  இருக்கா?   தமிழ்  டப்பிங்கில் இருக்கா? என யாரும் கேட்க வேண்டாம் .மணிரத்னம் இயக்கிய படங்களில்  மிகக்குறைவான  வசனங்கள்  கொண்ட படம் அஞ்சலி . அதன் வசனத்தில்  பாதி கூட இல்லை  ஓ டி டி  யில் இருக்கா?  எனக்கேட்க வேண்டாம் , படமே இப்போதான் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கு. ஓ டி டி  யில்  வர  25 நாட்கள்  ஆகும் 

Sunday, December 15, 2024

மிஸ் யூ (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

         


   ஷங்கரின் பாய்ஸ் (2003) படம்  மூலம்  அறிமுகம் ஆன சித்தார்த்  சமீபத்தில்  தந்த  ஹிட் படம்  சித்தா (2023) .விமல்  நடிப்பில்  வெளிவந்த  மாப்ள சிங்கம் (2016) , அருள் நிதி , ஜீவா நடிப்பில்  வெளிவந்த  களத்தில் சந்திப்போம் (2021)  ஆகிய  இப்படங்களை  இயக்கிய  இயக்குனர் என்  ராஜசேகர்  தனது ஆஸ்தான வசனகர்த்தா  ஆர் அசோக் உடன் இணைந்து  இயக்கி  இருக்கும் படம் தான் இது 


நிஜத்தில்  46 வயதான  சித்தார்த்  படத்தில் பார்க்கும்போது   30 வயது இளைஞராக  தெரிவதும் , நிஜத்தில்  28 வயதான   நாயகி ஆஷிகா    படத்தில் பார்க்கும்போது 36  வயது  போல தெரிவதும் ஆச்சர்யமான  உண்மைகள் . கன்னட  நடிகையான ஆஷிகா கிரேசி பாய் (2016) படத்துக்காக  சிறந்த  நடிகை  விருது வாங்கியவர்            


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  முதன் முதலாக  ஒரு பஸ்ஸில்  நாயகியை சந்திக்கிறான் . முதல் சந்திப்பிலேயே  மோ தல் . அடுத்த சந்திப்பில்  நாயகன்  நாயகியின் அப்பா மீது காரில் மோதி விடுகிறான் .அப்பவும்  இருவருக்கும் சண்டை .நாயகனின் அப்பா , நாயகியின் அப்பா இருவரும் நண்பர்கள்  என்பதால்  இரு குடும்பத்தாரின் முடிவுப்படி வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  நாயகியைத் திருமணம்  செய்து கொள்கிறான் .ஆனால் இருவருக்கும் ஒத்துப்போவதில்லை . சின்ன  சின்ன  விஷயத்துக்கு எல்லாம் சண்டை . நாயகன்  நாயகியைப்பிரிய  முடியுவ் எடுக்கிறான் 


 இப்போ  மேலே  சொன்னவை எல்லாம்  பிளாஸ் பேக் 


 நாயகன்   ஒரு நாள் திடீர்  நண்பனுடன்  பெங்களூர் வர  அங்கே  ஒரு பெண்ணை சந்திக்கிறான் .பார்த்ததும் அவனுக்கு அவளைப்பிடித்து  விடுகிறது . ஆனால் அவள் நாயகனைக்கண்டுகொள்ளவே இல்லை . அவளை போட்டோ  எடுத்து  தன்  அம்மாணவிடம் காட்டி  இவளை எனக்குப்பிடிச்சிருக்கு என்கிறான்  . அந்த போட்டோ  வைப்பார்த்த அம்மாவுக்கு அதிர்ச்சி . அவள்  தான்  நாயகனின்  மனைவி 


  ஒரு கார் விபத்தில்  நாயகனுக்கு தலையில்  அடிபட் ட தில்   பழைய  நினைவுகள்  மறந்து விடுகின்றன .


 அதவாது  தன முன்னாள் மனைவி என்பது தெரியாமல்  அவளைக்காதலிக்கும்  கணவன் , இதற்குப்பின் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  சித்தார்த்  அருமையான நடிப்பு . ஆக்சன் , வெட்டு , குத்து , ரத்தம் என  குப்பைப் படங்களை , ஆக்சன் மசாலாக்களைத்தொடந்து  பார்த்து  இது போல  காதல் சப்ஜெக்ட் கதை பார்க்க ஆறுதல் ஆக இருக்கிறது 


 நாயகி ஆக ஆஷிகா .கண்ணியமான  தோற்ற,ம் .இவரது முகச்சாயல்  கோகுலத்தில் சீதை  சுவ லடசுமி  போலவும்  மனிதன்  ரூபிணி  போலவும்  கலந்து கட்டி  இருக்கிறது . கண்ணியமான  உடையில்  வளம்  வருவது ஆறுதல் அளிக்கிறது 



நாயகனின்  நண்பர்களாக  கருணாகரன் , லொள்ளு சபா  மாறன் , பால சரவணன்  மூவரும்  காமெடி  நடிப்பில்   சைன்  செய்கிறார்கள் .லொள்ளு சபா  மாறன் திறமைக்கு  சந்தானம்  மாதிரி  பெரிய  இடம் அடைந்திருக்கணும் ஏனோ மிஸ்டு 


பொன்வண்ணன் , ஜெயப்பிரகாஷ் , ஆடுகளம்  நரேன்  போன்ற அனுபவம் மிக்க  நடிகர்கள்  கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் 


ஜிப்ரானின்  இசையில்  நான்கு பாடல்கள்   சுமார் ரகம்  தான் . பின்னணி  இசையம் சராசரி தரம் . கே ஜி  வேங்கடேஷின் ஒளிப்பதிவு  அழகு . நாயகிக்கு  வைத்த க்ளோசப்  ஷாட்களில்  இன்னும்  கவனம் செலுத்தி  இருக்கலாம் , தினேஷ் பொ ன்ராஜின்  எடிட்டிங்கில்  படம்  125 நிமிடங்கள்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்

1   சமீபத்தில்  நாளிதழில்  ஒரு செய்தி   வந்தது . அம்னீஷியா   பேஷண்ட்டான  ஒரு ஆள்  தனது முன்னாள்  மனைவி  என்பது  தெரியாமல்    பிரப்போஸ் செய்கிறான் . இந்தக்கதைக்கருவை  வைத்து  திரைக்கதை  அமைத்த  சாமர்த்தியம் 


2    நேரடியாக கதை    சொல்லி  இருந்தால் அந்த அளவு  சுவாரசியம்  இருக்காது என்பதை உணர்ந்து  நான் லீனியர்  கட்டில்  நிகழ்காலம் ,  கடந்த  காலம் என மாறி மாறி  காட் சிகளை   அடுக்கிய விதம் 


3   நீண்ட  இடைவெளிக்குப்பின்  தமிழ்  சினிமா உலகில்  ஒரு காதல்  சப்ஜெக்ட்  தர முன் வந்தது 

 4  படத்தின்  பெரிய பிளஸ்  அருமையான  வசனங்கள் , ரொமாண்டிக் போர்சன் ,காமெடி போர்சன்  இரண்டிலுமே ஷைன்செய்து இருக்கிறார் அசோக் 


  ரசித்த  வசனங்கள்  (ஆர் அசோக்) 


1   மறதியால்  கஷ்டப்படறவங்களை  விட  நினைவுகளால் கஷ்டப்படறவங்கதான்  அதிகம் 


2  ஒரு கெட்ட விஷயம்  நமக்கு  நடக்கக்கூடாதுன்னா  அது அடுத்தவங்களுக்கு நடக்கும்போது நடக்க விடாம நாம அதைத்தடுக்கணும் 


3   வெறுப்போட  உச்சக்கட்டம்  சத்தம் போடறதோ , கத்தறதோ  இல்லை .     கண்டுக்காம  போவது 


4  வாழ்க்கைல  நம்மை ஒருவர்  ரிஜெக்ட்  பண்றது எவ்ளோ பெரிய வலி தெரியுமா? 


5 ஒரு பூ  மலர்வதைப்பார்க்க  ரொம்ப   நேரம் காத்திருக்கணும் . அது மாதிரி  தான்  காதல் மலர்வதம் 


6   தெரிந்துகொள்வதற்கும்  , உணர்வதற்கும் வித்தியாசம் இருக்கு 


7  வாழ்க்கைல  அடஜஸ்ட்  பண்ணலாம் , ஆனா வாழ்க்கை  பூரா   அடஜஸ்ட்  பண்ண  முடியாது 


8  வாழ்க்கைல   பிடிக்காத  விஷயத்தை  மறக்கணும்னு  எல்லாரும் நினைப்பாங்க, ஆனால் யாராலும் அது முடியாது 



9 நமக்குப்பிடிச்ச  விஷயத்துக்காக   நம்மால  முடிஞ்ச்ச  வரை போராடுவோம் .அதுக்கும் மேல கிடைக்கலைன்னா அது நம்ம தப்பில்லை , 


10   அவனவன்  பொண்டாட்டியை மறக்க வேற யார் கிட் டயாவது போவான் , இவன் என்னடான்னா இவனோட பொண்டாட்டியை மறக்க இவனோட பொண்டாட்டி கிட் டேயே  போய் இருக்கான் 


11   சார் , பார் க்ளோஸ்   பண்ணணும் 


 நல்லா இருக்கற பாறை ஏன் க்ளோஸ்   பண்ணணும் ?


 சார் , க்ளோசிங்க்  டைம்  ஆகிடுச்சு 


 சரி ,    நான்  வேணா  உங்க   ஓனர் கிட் ட  பேசறேன் 


நான் தான் சார் ஓனர்


12    இது  ஹாரர்  த்ரில்லர்  நான் தேடச்சொன்னது  லவ் ஸ் டோரி 


 நம்ம  வாழ்க்கைல ரெண்டும் ஒன்னு தானே? 


13  பொண்டாட்டியை மறக்கறது  எவ்ளோ  பெரிய  வரம் தெரியமா? 


14  உன்    மனசுக்குப்பிடிச்ச  மாதிரி  பெண்ணை ஆர்டர் பண்ணி  செஞ்சு  கொண்டு  வர முடியாது 


15  வடக்கே   தலை வெச்சுப்படுத்தா  மூளை மழுங்கிடும்ன்னு சொல்வாங்க 


16  நீ  போடடோ ல காட்டுன ப்ப  இந்தப்பொண்ணு தான்  வேணாம்னேன் . இந்த மாதிரி தான் எல்லாப்பொண்ணும் இருக்கும்னா எனக்கு கல்யாணமே வேணாம் 


17   நான்  எந்த மாதிரி  பொண்ணு  வேணும் என யார் கிட் டேயோ  கேட்டு , அவங்க எனக்குன்னு செஞ்சு  அனுப்புனா மாதிரி இருக்கு 


18  பெங்களூ ர்ல  அமைதியான இயற்கையான  இடமா? அப்படி ஒண்ணே  கிடையாதே? 


19   நாம  எல்லாப்பக்கமும் தேடுனோமே? வீட்ல  தேடுனோமா? நான் கூட சின்னப்பையனா  இருக்கும்போது கட்டிலுக்கு அடில ஒளிந்து விளையாடுனேன்  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அமைச்சரின்  மகன்  ஒரு கொலை செய்வது , அதை பார்க்கும்  நாயகி சாட் சியாக  ஆவது  , நாயகன்  பைட்  போடுவது  இவை எல்லாம்  ரொமாண்டிக்  டிராமாவில் ஒட்டவில்லை 



2  அப்போது தான் அறிமுகம் ஆன நாயகனை  திடீர்  நண்பன்  தனது  காபி  ஷாப்பில்  கல்லாவில்  உட்கார  வைப்பது 


3  காபி ஷாப்  வைத்திருக்கும்  நண்பனுக்கே  தெரியாத   தொழில்  நுணுக்கங்கள்   வெட்டாபீஸ்  ஆன நாயகனுக்குத்தெரிவது 


4  நாயகியின்  அப்பா  கொஞ்சம்  கூட   பொறுப்பில்லாமல்  தன மகளை வாழா வெட்டி ஆக்க முனைவது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள் , தம்பதிகள்  பார்க்கலாம் . புஷ்பா 2 மாதிரி  டப்பாப்படங்களை  ரசிக்கும்  மசாலா  ரசிகர்கள்  தவிர்க்கவும் . இது கண்ணியமான  ரசனை கொண்ட  ரசிகர்கள் , பெண்களுக்கான படம் . ரேட்டிங்  2.5 / 5 . விகடன் மார்க்  42 . குமுதம்  ரேட்டிங்  - ஓகே 



Friday, December 13, 2024

BAGHEERA (2024) - கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )@ நெட் பிளிக்ஸ்

                 


       31/10 /2024 தீபாவளிக்கு  ரிலீஸ்  ஆகி  29 கோடி ரூபாய் வசூலித்து  இந்த ஆண்டின்   அதிக வசூல் படைத்த கன்னடப்  படம்    என்ற  பெருமையைப்பெற்றது .இது ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்  படம் . பிரபுதேவாவின்  கேரியர் ஓர்ஸ்ட் படமான  பகீரா (2023)என்ற  டப்பாப்  படத்தின்  கதைக்கும் , இதற்கும்  சம்பந்தம் இல்லை 



ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  சிறுவனாக  இருந்தபோதே  ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன்  டைப்  படங்களின்  ரசிகனாக இருக்கிறான் . தானும் அதே போல் ஆக வேண்டும் என நினைக்கிறான் . அவனது அம்மா அவனுக்கு  புது ஐடியா  தருகிறாள் .. அவனது அப்பா போல போலீஸ் ஆபீசர் ஆகி விடடால்  நிஜவாழ்வில் சூப்பர் மேன்  ஆகி விடலாம் என்பதே அது . 


 நாயகனும்  பெரியவன் ஆகி ஐ பி எஸ் ஆபீசர் ஆகிறான் .சிங்கம் , சாமி , மூன்று முகம்  படங்களின்  ஹீரோக்கள் போல  ரவுடிகளை பந்தாடுகிறார் . முதல்  50 நிமிடப்படம்  மாமூல் மசாலா  டெம்ப்ளேட்டில்  போகிறது . ஒரு கட்டத்தில்  ஹையர் ஆபீசர்  நாயகனுக்கு ஸ்பீடு  பிரேக்கர்  போடுகிறார் . இனிமேல் பெரிய  இடத்து விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிறார் . நாயகனின்  அப்பாவும்  நாயகனை க்கண்டிக்கிறார் . இது நாயகனுக்கு பெரிய  அதிர்ச்சியாக இருக்கிறது . அதை விடப்பெரிய  அதிர்ச்சி  அப்பா  நேர்மையானவர் இல்லை , லஞ்ச்ம  வாங்குபவர் என்ற  கசப்பான  உண்மை தெரிய  வருகிறது 

நாயகனால்  இனி நேர்மையான  போலீஸ் ஆபீசர் ஆக  இருக்க முடியாது .அதே சமயம்  கொடுமைகளுக்குத்துணை போகவும் முடியாது . ஒரே  வழி  பகலில்  சாதா போலீஸ் , இரவில்  சூப்பர்  மேன்   பகீரா அவதாரம் . இதனால்  அவரது   ஏரியாவில்  ரவுடிகளின்  அட்டகாசம்  குறைகிறது . .

சிபிஐ  பகீரா  யார் ? என்பதை கண்டுபிடிக்க  ஒரு டீமை அனுப்புகிறது . இதற்குப்பின்  என்ன ஆனது ? என்பது  மீதிக்கதை 


நாயகன் ஆக ஸ்ரீ முரளி  நடித்திருக்கிறார் . ஆக்சன்  ஹீரோவுக்கான எல்லா வேலைகளும் செய்கிறார் . பின் 

பாதியில்   தாடி  கெட்டப்  எடுபடவில்லை . நாயகி  ஆக ருக்மணி  வசந்த்  கண்ணியமான உடைகளில் வருகிறார் , நடிப்பும் நல்லாருக்கு . சிபி ஐ  ஆபீசர் ஆக  பிரகாஷ்  ராஜ்  கடைசியில்  பின் பாதியில் வருகிறார் . மற்ற  அனைவர் நடிப்பும் ஓகே ரகம் 

பி அஜனீஷ்  லோக்நாத்  இசையில்  5 பாடல்கள் . 3 சுமார் ரகம் . பின்னணி  இசை பரவாயில்லை அர்ஜூன்  ஷெட்டியின் ஒளிப்பதிவில்  காட் சிகள்  பிரமாண்டம் . பிரசாந்த்  நீல்  என்பவரின்  கதைக்கு திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார்  டாக்டர்   சூரி 

சபாஷ்  டைரக்டர்


1  முதல்  பாதி  மாமூலான போலீஸ்  கதை டெம்ப்லேட்டில்  இருந்தாலும்  கமர்ஷியலாக  விறுவிறுப்பாகக்காட் சிகள் அமைத்தது 


2  பின்  பாதி  சூப்பர்  ஹீரோ  கான்செப்ட்டில்   யூகிக்கும்படியான காட் சிகள்  என்றாலும்   சுவராஸ்யமானதாக இருந்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  இந்த  உலகத்துல எல்லாரும் எதோ ஒரு காரணத்துக்காகத்தான் பிறக்கறாங்க , ஆனா  பலர்   அந்தக்காரணம்  தெரியாமயே  செத்துடறாங்க 


2  தனக்காக  வாழாமல்  மற்றவர்களுக்காக  வாழும் எல்லாருமே சூப்பர் மேன் தான் 



3  போலீஸ்  யூனிபார்ம்ல  இருக்கும்போது  சரக்குக்குடிச்சா  அது தப்பா ?


  ஆமா, அது க்ரைம் 



4 கடவுள்  ரொம்ப  மோசம் . எல்லா  வலிகளையும்  பெண்களுக்கே தந்திருக்கார் 


5    முகமூடி  போட்டு  வாழக்கத்துக்கோ 


6  உலகம்  பூரா  என்ன சிஸ்ட்டம்  பாலோ பண்ணுதோ  அதையே   நீயும்  பாலோ பண்ணு , எதிர்த்து  நின்னா   எதுவும் பண்ணமுடியாது 


7 நியாயத்தைக்காப்பாத்த காக்கிச்சடடை தான் போடணும்னு அவசியம் இல்லை , காப்பாத்தற  மனசு இருந்தாப் போதும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  நாயகன்  சிறுவனாக  இருக்கும்போது  அவன் அம்மா அவனுக்கு பிறந்த நாள் பரிசா  போலீஸ்  யூனிபார்ம் கிப்ட் பேக்கிங்க்ல  தர்றாங்க . புது  டிரஸ் .  அதை எடுக்கும்போது  அயர்ன் பண்ணிதான்  போடணும்கறாங்க . புது டிரஸ்  நீதிடாதான் இருக்கு .அதை  எதுக்கு அயர்ன் பண்ணனும் ? 


2  நாயகன்  பகீராவா  இருக்கும்போது  ஒரு கர்ச்சீப்பை முகத்துல  கட்டிக்கறான் .ஒரு பொண்ணு  செல்பி எடுத்துடுது . மீடியாக்களில் போட்டோ  வருது . கண்கள் , தலை , ஹேர் ஸ் டைல்   எல்லாம்  நல்லாத்தெரியுது . ஆனா யாருக்கும் டவுட்  வரலை .குறிப்பா சி பி ஐ .. ஐயோ பாவம்   


3   நாயகன்  பகலில்  போலீஸ் .இரவில்  பகீரா . எப்போ  தூங்குவாரு ?  டெய்லி  நைட்  வெளில  போகும்போது  அப்பாவுக்கு டவுட்  வராதா? 


4     நாயகனின்  உயிருக்கு ஆபத்து எனில்  நாயகியை  வெறுப்பது போல  நடிப்பார் . இது வாழ்வே  மாயம் , பயணங்கள் முடிவதில்லை கால கட்டங்களிலேயே வந்துடுச்சு  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பல  படங்களில்  பார்த்த  மாமூல் டெம்ப்லேட்  தான் . போர்  அடிக்காமல் போகுது . பார்க்கலாம் . ரேட்டிங் 2.25 / 5 


பகீரா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்டாக்டர் சூரி
மூலம் திரைக்கதைடாக்டர் சூரி
மூலம் உரையாடல்கள்டாக்டர் சூரி
மூலம் கதைபிரசாந்த் நீல்
தயாரித்ததுவிஜய் கிரகந்தூர்
நடிக்கிறார்கள்ஸ்ரீமுரளி
ருக்மணி வசந்த்
பிரகாஷ் ராஜ்
அச்யுத் குமார்
ரங்கயான ரகு
கருடா ராம்
பிரமோத் ஷெட்டி
சுதா ராணி
ஷரத் லோஹிதாஷ்வா
ஒளிப்பதிவுஅர்ஜுன் ஷெட்டி
திருத்தியதுபிரணவ் ஸ்ரீ பிரசாத்
இசைபி. அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு
நிறுவனம்
வெளியீட்டு தேதி
  • 31 அக்டோபர் 2024
இயங்கும் நேரம்
158 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
பாக்ஸ் ஆபிஸ் 29 கோடி [ 2 ]

Thursday, December 12, 2024

MATKA (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( கேங்க்ஸ்ட்டர் டிராமா ) @ அமேசான் பிரைம்

           

       14/11/2024     அன்று  திரை அரங்குகளில்   வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீசில்  பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை .  விமர்சன  ரீதியாகவும்  எதிர்மறை கமெண்ட்ஸ்  தான் கிடைத்தது . அவற்றை எல்லாம்   மீறி  இது ஒரு பார்க்கத்தகுந்த     படமே . 5/1/2/2024 முதல் அமேசான் பிரைம்  ஓ டி டி   யில் யில்  காணக்கிடைக்கிறது 


மட் கா  சூதாட் ட வியாபாரி ரத்தன்   கேட்ரி  யின்  வாழ்க்கை வரலாறை  அடிப்படையாகக்கொண்டு   இப்படம் உருவாக்கப்பட்டது 1958 - 1982    24  வருடங்களில்  விசாகப்பட்டினத்தில்  நடந்த நிகழ்வுகளை  அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை  எழுதப்பட்ட்து 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சிறுவனாக இருக்கும்போது பர்மாவில் இருந்து அகதியா  விசாகப்பட்டினம்  வர்றான் .வந்த இடத்துல சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா  ஒரு கொலை பண்ணிட்டு சிறுவர் சீர் திருத்தப்பள்ளில  இருந்துட்டு  வெளில வர்றான் . வந்தவன்  அங்கே  இருக்கும் மார்க்கெட் ல  கூலி வேலைக்கு  சேர்கிறான் .அந்த ஏரியாவில் இரண்டு  கேங்க்ஸ்ட்டர்  க்ரூப் இருக்கு . ஒரு குரூப் கூட நாயகன் மோதுகிறான் . இதனால்  எதிரிக்கு எதிரி நண்பன்  பார்முலாப்படி இன்னொரு கேங்க்ஸ்டர் குரூப் கூட  சிநேககம் ஆகிறான் . பார்ட்னர்  ஆகிறான் . நல்லாப்பணம் சம்பாதிக்கிறான் . மும்பை போய்    டெக்ஸ் டைல்ஸ்   பிஸ்னஸ்  பண்ணலாம் என கிளம்புபவன்  மனம்     மாறி   கேம்ப்ளிங்க்   கேம்  தொடங்குகிறான் . அதில் யாரும் எதிர்பார்க்காத    அளவு  சம்பாதிக்கிறான் . சி பி ஐ  நெருங்குகிறது . இதற்குப்பின்  நடக்கும் திருப்பங்கள்  தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக வருண  தேஜ்  நாயகன்  கமல் போல  பல கெடடப்களில்  வருகிறார் . மாமூல்  ஆக்சன்  ஹீரோ ரோல் தான் . . நாயகி ஆக மீனாட் சி  சவுத்ரி   அழகிய பதுமை ..வில்லி ஆக  நோரா . வில்லித்தனம் முகத்தில்  இல்லை . மற்ற  அனைவர் நடிப்பும்  கசசி தம் 


ஜி வி பிரகாஷ் குமார் இசையில் 5 பாடல்கள் , 3 சுமார் ரகம் .பின்னணி  இசை அருமை . கே ஜி எப் சாயல் , கார்த்திகா சீனிவாஸ் எடிட்டிங்கில்  படம் 160 நிமிடங்கள்  ஓடுகின்றன . இன்னமும் ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கலாம் , கிஷோர்  குமாரின்  ஒளிப்பதிவு   அழகு . திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் கருணா குமார் 


 சபாஷ்  டைரக்டர்\


1  கேஜிஎப் பட ஸ்டைலில்  அபாரமான  வசனங்கள் .சதுரங்க வேடடை  ஸ்டைலில்   பின் பாதி திரைக்கதை 

2   ஓப்பனிங்கில் வரும் மார்க்கெட்  சண்டைக்காடசி  மாஸ் சீன் 


3   கள்ளநோட்டு கும்பலின் போர்ஜரியை நாயகன் கண்டு பிடித்து அவர்களுக்கு ஆப்பு வைக்கும் காட் சி அப்லாஸ்  அள்ளும் காடசி 


4    நாயகியின்  ஹேர் ஸ்டைல் , உடல் மொழி , பார்வை அனைத்தும்  அழகு 


5  ரயிலில் முதன் முதலாக நாயகன் தன்  சூதாட்டத்தை ஆரம்பிக்கும்  காட் சி 


6  லக்கி நெம்பர்ஸை  ரயிலில் எழுதும் ஐடியா செம 


  ரசித்த  வசனங்கள் 


1  டியூட்டில  சேரும்போதே    பயத்தை  விட்டுட்டேன் 


2  வேட்டைக்குப்போகும் முன்  மீன்களைப்பற்றி தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன் 


 அது மீன் இல்லை , திமிங்கலம் 


3  தோத்துப்போய்  கிடைக்கும்  பணத்தை விட ஜெயித்துக்கிடைக்கும் கவுரவம் தான் பெருசு 


4   இந்த  உலகத்துல நூத்துக்கு 90  பைசாவை ஒருத்தன் தான் சம்பாதிக்கிறான் .மீதி இருக்கும் 10 பைசாவுக்காகத்தான்  மீதி இருக்கும் எல்லாரும் அடிச்சுக்கறாங்க 


5  இங்கே     இருப்பதெல்லாம்  தரை டிக்கெட் , சோபியா ஒருத்தி மட்டும் தான்  பால்கனி . ஆனா சினிமா ஒண்ணு  தான் . புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் 


6   அவன்  சர்க்கஸ்  கோமாளி இல்லை , சிங்கத்தை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் 


7  இருக்கறது போதும்னு நினைச்சிருந்தா நான் மேலே வந்திருக்கவே  முடியாது 


8 வியாபாரம்னா வாங்கனும் , விக்கணும் .நாம  ஆசையை வாங்கறோம்  , நம்பிக்கையை விக்கறோம் 


9 சூதாட்டத்துக்கு அரசாங்கம் ஒத்துக்குமா? 


 ஒரு தடவை  பணம்  பேச ஆரம்பிச்சுட்டா  வேற  யாரும்  வாயைத்திறக்க முடியாது 


10 ஆசைக்கு  எல்லை இல்லை , கெட் ட்துக்கு வேகம் குறையாது 


11  ஜனங்களுக்கு உழைக்காம பணம் வேணும் 


12  நூறு   எலிகளைத்தின்ன  பூனை தீர்த்த யாத்திரைக்குப்போய்  இருக்குன்னா யாராவது நம்புவாங்களா? 


13  அசலை  விட போலி தான்  நல்லா மின்னும், ஆனா  அதுக்கு ஆயுள் கம்மி 


14   ஆட்டத்துல  தோக்கறவனோட   உயிரை விட ஆட்டத்துல  ஜெயி க்கறவனோட ஆதரவு தான்   எனக்கு  வேணும் 


15  பாவம் , புண்ணியம்  பார்த்திருந்தா  அன்னைக்கு நாம எங்கே  இருந்தோமோ அங்கே  தான் இப்பவும் இருந்திருப்போம் 


16 ஆட்டத்துல  ஜெயிச்சவன் வந்து எனக்கு ஸலாமும் போடலை , தோத்தவன்  பற்றி  எனக்கு அக்கறையும்  இல்லை 


17    சோபியா =  என் பின்னால சுத்தும் ஆம்பளைங்களை விட  என்னை ஒதுக்கும் ஆளுங்களைத்தான் எனக்கு ரொம்பப்பிடிக்கும் 


18   முதலீடு  மட்டும்  பிஸ்னெஸ்க்குப்போதாது , உன் டைமும் வேணும் 


19   நிலத்துல   காசு போடுவது  என்னைக்கும்வீண் போகாது 

20 நான் கெடடவனா ? நல்லவனா? 

 நீ  ஒரு பைட்டர் 

21  இந்த  பிஸ்னஸ்  இந்த அளவு வளரக்காரணம்  மனிதனின்  ஆசையும் , பயமும் 


22   உண்மையை சொல்லிடடா  எனக்கு டைம் மிச்சம் ஆகும், உனக்கு உன் உயிர் மிச்சம் ஆகும்


23   பாலிடிக்ஸ்  ஒரு எவர் கிரின்  பிஸ்னஸ் 


24  யுத்தம்  நிற்கணும்னா  எதிரி சாகனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அழகான நாயகியை    பாதியில்  கொலை செய்ய வேண்டிய  அவசியம் இல்லை . இது பழி வாங்கும் கதை இல்லை . அவரு பாட்டுக்கு குறுக்கே நெடுக்க வந்துட்டுப்போ யிட்டு இருந்திருப்பார் 

2   க்ளைமாக்சில்  நாயகன் தன மகளிடம் சொல்லும் நரிக்கதை இழுவை 


3   படம் முடியப்போகும்  கடைசி  20 நிமிடங்களில் தேவை இல்லாத 2 பாட்டுக்கள் 


4  படத்தின்  முதல் பாதி  கேங்க்ஸ்ட்டர்  டிராமா  பிளாஷ்பேக்  பல படங்களில் பார்த்தது தான். பின் பாதி  சூதாட் டம் , சி பி ஐ  துப்பறியும் காட்சிகளை  வைத்து    முழுப்படமும்  எடுத்திருக்கலாம் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி பார்க்க  பொறுமை தேவை , இரண்டாம் பாதி  குட் . ரேட்டிங்  2.5 / 5 


Matka
Theatrical release poster
Directed byKaruna Kumar[1]
Written byKaruna Kumar
Based onThe life of Ratan Khetri
Produced by
  • Vijender Reddy Teegala
  • Rajani Talluri
Starring
CinematographyA. Kishor Kumar
Edited byKarthika Srinivas
Music byG. V. Prakash Kumar
Bhavani Rakesh (1 song)
Production
companies
  • Vyra Entertainments
  • SRT Entertainments
Release date
  • 14 November 2024[4]
Running time
159 minutes
CountryIndia
LanguageTelugu

Wednesday, December 11, 2024

FAMILY படம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி காமெடி டிராமா )

         

               சமீபத்தில்  சாய் வித் சித்ரா   நிகழ்ச்சியில்  இயக்குனர்  விக்ரமன்  "இனி குடும்பப்பாங்கான படங்கள் வெளிவருவதோ  ,ஹிட் ஆவதோ சிரமம் , ஏன் எனில்  இப்போது  படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் டீன் ஏஜ்  காரர்கள் தான் . அவர்கள்  பேமிலி சப்ஜெக்ட் டை  கிரிஞ்ச்  என ஒதுக்கி விடுவார்கள்"   என்றார் .அவரது  கூற்றைப் பொய்யாக்க  வந்திருக்கும்  கண்ணியமான  குடும்பக்கதை இது 

.இந்தியன் 2 , கங்குவா  போன்ற  பிரம்மாண்டமான  குப்பைப்படங்களுக்கு  மத்தியில் , புஷ்பா 2 மாதிரி  கேவலமான ரசனை கொண்ட  படத்துக்கு நடுவில்  இது  போல அழகான  , குடும்பப்பாங்கான  படங்கள்  வருவது  வரவேற்க வைக்கிறது .6/12/2024   அன்று  திரை அரங்குகளில்  வெளியாகி    இருக்கிறது இப்படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

அம்மா , அப்பா , தாத்தா , இரண்டு அண்ணன்களுடன்  கூட்டுக்குடித்தனம் நடத்தி வருபவர் நாயகன் ,இவரது  லடசியமே சினிமாவில் ஒரு டைரக்டர் ஆவதுதான் . அதற்காக  கடுமையான முயற்சிகளில் இருக்கும்போது  ஒரு தயாரிப்பாளர்  இவரது  கதையை  ஓகே  சொல்லி விடுகிறார் .அக்ரிமெண்ட்  சைன் ஆகிறது .


ஆனால்  தயாரிப்பாளரின் தம்பி தான் படத்தின் ஹீரோ . அவர் மசாலாக்குப்பைப்படங்களில் நடிப்பவர் . கதையில் சில  மாற்றங்கள்  சொல்கிறார் . இது இயக்குனர் ஆன நாயகனுக்குப்பிடிக்கவில்லை . . இருவருக்கும் ஒர்க் அவுட் ஆகவில்லை .நாயகனின்  நிலை கண்டு  நாயகனின் குடும்பத்தினரே   படம்  எடுக்க தயாரிப்பாளர்கள் ஆவது என முடிவு செய்கிறார்கள் . அவர்கள்  முடிவு  வெற்றி  பெற்றதா?? என்பதை  சிரிக்க , சிரிக்க, உணர்வுப்பூர்வமாக , சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன் ஆக உதய்  கார்த்திக்  கச்சிதமாக நடித்திருக்கிறார் .கோபம்,  சோகம்,  ,  காதல்  என  அனைத்து உணர்வுகளும் அவரது முகத்துக்கு அழகு சேர்க்கின்றன .அவரது  முதல் அண்ணனாக  விவேக்  பிரசன்னா  வக்கீல் ஆக காமெடி , குணச்சித்திரம்  கலந்து கட்டி நடித்திருக்கிறார் .இரண்டாவது  அண்ணனாக  பார்த்திபன் குமார்  அருமையாக நடித்திருக்கிறார் . நாயகனின்  அம்மாவாக ஸ்ரீ ஜா ரவி  சரண்யா பொன்வண்ணனுக்கு சரியான  போட்டி ஆக இருப்பார் , அருமையான நடிப்பு . நாயகனின்  காதலி ஆக  வரும் சுபிக்சா  குடும்பப்பாங்கான  முகம் , கண்ணியமான  உடையுடன்  வருகிறார் , இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களில்  நாயகிகள் கண்ணியமான உடையில்  வருவதே அரிது 


 நாயகனின் அப்பாவாக அர்விந்த் ஜானகிராமன்  , தாத்தாவாக மோகனசுந்தரம்  ஆகியோர்  நடித்திருக்கிறார்கள் 


ஒளிப்பதிவு  மெய்யேந்திரன் . கண்களைக்கவரும்  காடசிகள் . சுதர்சனின்  எடிட்டிங்கில்  படம் 130 நிமிடங்கள் ஓடுகிறது . அணிவி  யின்  இசையில்  2 பாடல்கள்   ஓகே  ரகம், பின்னணி இசை  படத்துக்கு பலம்  

 திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  செல்வகுமார்  திருமாறன் . இவரது  சினிமா  வாழ்வில்  நிஜமாகவே இவரது கதையை  திருடி  விட்டார்களாம் . அவரது சொந்த அனுபவத்தையே  படமாக்கி உள்ளார் . அதனால் தான் உயிரோட் டமாக இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர்

1   இந்த மாதிரி  அண்ண்ன்கள்  நமக்கு  இல்லையே? என ஏங்க  வைக்கும் கதாப்பாத்திர வடிவமைப்பு பெரிய பலம் .மூவரின் நடிப்பும் அட்டகாசம் 


2  லூஸ்  தனமான,  சினிமாத்தனமான  கதாநாயகிகளுக்கு நடுவில்  யதார்த்தமான  , ஒப்பனை இல்லாமல் அழகாக இருக்கும் நாயகி .கண்ணியமான  உடைகள் 


3    கருத்தான , முத்தான   வசனங்கள்  ( மூன்று பேர்  டயலாக்ஸ்  எழுதிய இந்தியன் 2  வில்  5 வசனங்கள் கூட உருப்படி இல்லை . இதில் 20 +வசனங்கள்  அருமை ) 


4   நாயகன்  கதை சொல்லும்போது  அதில்  திருத்தங்கள்  சொல்லும்  லூஸ்  ஹீரோ  பண்ணும்  அலப்பறைகள் செம காமெடி 


5  நாயகனின்  இரண்டாவது அண்ணனுக்கு  நிச்சயிக்கப்பட் ட   பெண் பர்சனலாகப்பேசும்போது  ஸ்பீக்கரில் போட்டு குடும்பமே கேட்கும் காட்சி கல கல 


  ரசித்த  வசனங்கள் 


1  உலகத்தில்  உள்ள எல்லாருக்குமான ஆசை எது தெரியுமா?அவமானப்பட்ட இடத்தில  ஜெயிச்சுக்காட்டனும் 


2  பசங்க  தேவைளுக்கு  உதவாத நம் சொத்து நாம செத்த பின் அவன்களுக்குக்கிடைச்சு என்ன பிரயோஜனம் ?


3  நீங்க  ஜெயிக்கறீங்களோ , தோற்கறீங்களோ , உங்களுக்குப்பிடிச்சதை செய்யுங்க  


4  சினிமா , ஐ டி  துறைல மட்டுமில்லை , எல்லா இடங்களிலும்  நமக்கு மேலே  இருக்கறவங்க நம்மை  அடிச்சுக்கீழே தள்ளத்தான் பார்ப்பாங்க 


5  பசி வேற , பிரச்சனை வேற 


6  சில வாய்ப்புக்களை நம்ம கை  விட்டுப்போகும் முன் அதை யூஸ் பண்ணிக்கணும் 


7   எல்லாமே  கை  வசம் இருந்து சவால் விடறது  பெரிய விஷயம் இல்லை , எதுவுமே இல்லாம சவாலில் ஜெயிப்பதுதான் கெத்து 


8 பிரச்சனை பண்றவன்னு முத்திரை  குததி  மூலைல உக்கார வெச்சிருவான் 


9   சினிமாவில் பிரச்சனைகளை சந்திக்காத டைரக்டர்களே இல்லை , எல்லாத்தையும் தாண்டி தான்  அவங்க ஜெயிக்கறாங்க 


10   வாய்க்கு  வந்ததை எல்லாம் பேசறான் . டயலாக்காம்.. அடேய் 


11  வக்கீல் சார், என் புருசன்  அம்மாகூட இருக்காரு 


 அதுல என்னம்மா பிரச்சனை ? மகன் கூட அம்மா இருந்தா தப்பா? 


 ஐயோ, சார் , என் புருஷன் என் அம்மா கூட இருக்காரு 


12   ஜிம்  பத்தி எனக்கு சொல்றியா? மேனுவல் பிட்னஸ்,  மாடர்ன் பிட்னெஸ் இரண்டும்   வேற வேற 


13   எங்க  வீட்டில் யார் முதல்ல  காலைல  எந்திரிக்கறாங்களோ அவங்க தான் டீ  போடணும், இதுதான் எங்க வீட்டு ரூல் 

14    டேய் , நீ  எல்லாம் என் பிரண்டா? கல்யாணத்துக்குக்கூட வரலை 


 நான்  உன் கல்யாணத்துக்கு  வராததால் நீ  தாலி கடடலை யா? முதல் இரவு தான் நடத்தலையா?


15 டேய் .கவுண்ட்ட்ரா பேசறேன்னு கம்பி எண்ண விட்டுடாத 


16   இங்கே பாதிப்பேருக்கு  வாழ்க்கைல செட்டில் ஆகறதுன்னா என்ன?என்பது தெரியாமாயே  இருக்காங்க . எனக்கும் தெரியாது 


17  ஒரு மனுஷன்  ஆறடி ல  கீழே செட்டில் ஆகும் வரை  எதுவும் செட்டில் இல்லை 


18   நாம  என்னவா  ஆகப்போறோம்னு நமக்கே  தெரியாம இருந்தாதான் பிராப்ளம் 


19    குறிப்பிட் ட   வயசுக்குப்பின்  வீட்டில் கை நீட்டி காசு வாங்கக்கூடாது 


20   நானும்  எல்லாருக்கும்  சோறு  போடணும் . அதுக்கு  என்ன செய்ய ?


 அதுக்கு நீ  கேப்டன்  விஜயகாந்த் ஆகணும் 

21  நாம நினைச்சதை அடைய பணம்     முக்கியம் 


22   எல்லாப்பசங்களும்  ஐ டி  வேலை தான் வேணும்னு போயிட்டா  மத்த வேலைகளை யார் பார்ப்பாங்க ? 


23   அவ்கிட் டே   என்னடா  பேச்சு ? 

சும்மா தான் 

சும்மா சும்மா பேச அவ என்ன கஸ்டமர் கேரா? 


24  நல்ல  டைரக்ட்டர்ஸ் எல்லாம் அய்டடம் சாங்க்  எடுக்க மாட்டாங்க 

 அப்போ  மணிரத்னம் சார்    நல்ல  டைரக்ட்டர் இல்லையா? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

`1  க்ளைமாக்சில்  போலீஸ் ஸ் டேஷனில்  வரும் காடசியில்  நாடகத்தனம் . குறிப்பாக  பெண்  எஸ் ஐ  ஆக வருபவரின் நடிப்பு 

2  நாயகன்  பைக் டாக்சி  ஓட்டும்போது    130ரூபாய்   தராததற்காக  ரவுடி கூட்டத்துடன்  நடத்தும் தகராறு  வலியத்திணிக்கப்பட்ட காட் சி 

3  இயக்குனருக்குக்காமெடி  சீக்வன்ஸ் , டயலாக்ஸ்     நல்லா வருது . ஆனா   மோகனசுந்தரம்   மாதிரி  காமெடி  பேச்சாளரை  புக் செய்து  அவரை சரியாக  யூஸ்   செய்யாதது ஏனோ? 

4   குடும்பப்படம்  என தமிழிலேயே டைட்டில் வைத்தருக்கலாம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கிளீன்  யு 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கலகலப்பான , குடும்பப் படம்  பார்க்க  விரும்பும்  அனைவரும்  குடும்பத்துடன் பார்க்கலாம் . இந்தமாதிரி  கண்ணியமான  காட் சி  அமைப்புகள்  வருவது  அரிதிலும் அரிது . விகடன் மார்க்  44 , குமுதம்  ரேட்டிங்  நன்று .மை  ரேட்டிங்  3/ 5 

Tuesday, December 10, 2024

LA VIRGEN ROJA (2024) -THE RED VIRGIN - ஸ்பானிஷ் /ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

           

           சிறந்த  நடிகை , சிறந்த துணை  நடிகை  , சிறந்த  திரைக்கதை , சிறந்த இயக்குனர் ,சிறந்த  ட்ரெய்லர்  என  திரைப்பட விழாக்களில் 5 விருதுகளை வென்ற படம் .22/9/2024  அன்று  திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட இப்படம்  27/9/2024  அன்று  திரை அரங்குகளில்  வெளியானது . இப்போது அமேசான்  பிரைம்   ஓ  டி டி  யில்  காணக்கிடைக்கிறது  


16  வயதில்  எழுத்தாளர் ஆகி  2 வருடங்களில்  15 கட்டுரைப்புத்தகங்கள்   எழுதி  18 வயதில்  அகால  மரணம் அடைந்த  பெண் எழுத்தாளர் -ன்     சுய சரிதை  தான்  இந்தப்படம் . . கதை  நடக்கும் கால கட்டம் 1931 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகியின்  அம்மா  டீன் ஏஜ்  வயதில் கர்ப்பம் ஆகி ஒரு பெண் குழந்தை பெறுகிறார் . அவருக்கு ஆண்கள் மீது  வெறுப்பு உண்டு . காரணம்  அவர்  வாழ்வில்  நடந்த சில  சோகமான  சம்பவங்கள் . அதனால்  தன்  மகளை  ஆண்  வாசமே  படாமல்  வளர்க்க வேண்டும் என நினைக்கிறார் 


 மகளுக்கு   இப்போது  16 வயது .அவரை  ஒரு ரைட்டர்  ஆக்க பயிற்சி  தருகிறார் .எல்லா நுணுக்கங்களையும்  கற்றுத்தருகிறார் . கூடவே  ஆண்கள் பற்றிய  எச்சரிக்கைகளையும் ..


நாயகி எழுதிய  முதல் புத்தகம்  வெளியாகி  நல்ல  வரவேற்பைப்பெறுகிறது . ஒரு அரசியல்  மீட்டிங்கில்  நாயகி பேச  அழைக்கப்படுகிறார் . கார்டியன் ஆக எப்போதும்  நாயகியின் அம்மா  நாயகியின் கூடவே வருவார்  

நாயகிக்கு  ஒருவர் மீது  காதல் பிறக்கிறது . இது  நாயகியின் அம்மாவுக்குத்தெரிய வர  144 போடுகிறாள் .கிட்டததட்ட  அம்மாவின்   மேற்பார்வையில்  ஹவுஸ்  அரெஸ்ட்டில்  இருக்கும்  நாயகி  எப்படி  டிமிக்கி கொடுத்து  தன காதலனை சந்திக்கிறாள் , அதன் விளைவாக  நாயகியின் அம்மா எடுக்கும் முடிவு என்ன என்பது மீதி திரைக்கதை 

நாயகியின் அம்மாவாக  நஜ்வா  நிம்ரி  கிட்டததட்ட  வில்லி  ரோலில்  கலக்கி இருக்கிறார் .இவரது  பார்வை , உடல் மொழி  எல்லாம் பிரமாதம் . நாயகி  ஆக டி வி  நடிகையான  அல்பா பிளானஸ்  அப்பாவித்தனமான  முகத்துடன்  சிக்ஸர்  அடிக்கிறார் . நாயகியின்  காதலன் ஆக பேட்ரிக்  கச்சிதமான தோற்றம் . நடிப்பு . 

ஜான்மா  , கூலி என இருவர் இசை அமைத்திருக்கிறார்கள் . பின்னணி  இசை  குட் . எடிட்டிங்  பாபிலோ . 124  நிமிடங்கள்  ஓடுகிறது . ஒளிப்பதிவு மார்க்கஸ் . துல்லியமான  படமாக்கம் .

எட்வார்டு , கிளாரா , ஆகிய  இருவரும் திரைக்கதை  எழுத  இயக்கி இருப்பவர் பாலா  ஆர்ட்டிஸ் 

சபாஷ்  டைரக்டர்


 1   ஒரே  ஒரு பங்களா , நாயகி , நாயகியின் அம்மா, பணிப்பெண் , காதலன்  என  நான்கே  முக்கியக் கேரக்ட்டர்களை வைத்து சுவராஸ்யமான திரைக்கதை அமைத்த விதம் 


2   1980 களில்  அம்பிகா , ராதா  போன்ற நடிகைகளை , அம்மா எப்படி எல்லாம் ஆட்டிப்படைத்திருப்பார்  என்ற  ரெப்ரண்ஸ்  படம் முழுக்க  உண்டு 


3 மனதை கலங்கடிக்கும்  க்ளைமாக்ஸ் 


4  அம்மா, மகள்   இருவரது அட்டகாசமான  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  அம்மா , என் அப்பா எங்கே? 


 உனக்கு அப்பாவே  கிடையாது , அதனாலதான் நாம சுதந்திரமா இருக்கோம் 


2  நல்ல  படிப்புள்ள   பெண்  ஒரு பேயை விட பலமானவள் 


3  எல்லாரும்  போட்டிருக்கற மாதிரி டிரஸ் நாம என் போடலை ? 


ஒரு பொண்ணு  தனக்குப்பிடிச்ச மாதிரி  தான் நடந்துக்கணும்,  அடுத்தவங்க  கமெண்ட்டைக்கண்டுக்கக்கூடாது 


4  ஆபர்  என்பது    இரு தரப்புக்கும்  நன்மை பயக்கனும் .ஆனா  அவன் நம்மை யூஸ் பண்ணிக்கப்பார்க்கிறான் 


5  காதல் , புரட்சி  இரண்டுமே  முழுப்பூர்த்தி அடையாதவை 


6  அதிகமான மக்களைப்போய் அடையனும், அதுதான் புத்தகத்தின் இலக்கு 


7  ஒருவரின் பலவீனம் ஒரு பிராஜெக்ட்டை பாதிக்க நான் விட மாட்டேன் 


8  ஆண்கள்  எல்லாருமே  ஏமாற்றுப்பேர்வழிகள் தான் 


9   ஒரு வாய்ப்பு  கரைல இருக்கு , இன்னொரு வாய்ப்பு கடலில் இருக்கு , நாம எதை தேர்ந்தெடுக்கணும் ? 


10  பணம்  இல்லாம நீ சுதந்திரமா இருக்க முடியாது 


11  தியாகம்  இல்லாம எந்த பிராஜெக்ட்டும் வெற்றி பெறாது 


12  நீ அம்மாவாக இருந்தாலும் என்னை சொந்தம் கொண்டாட முடியாது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காதலில்  மகள் விழுந்து விட்டாள் , தனிமையில்  விட்டால்  ஆபத்து  என்பது தெரிந்தும்  நாயகியின் அம்மா  மாலை நேரத்தில் மகளையும் , பணிப்பெண்ணையும்  விட்டு விட்டு  வெளியே போகும்போது  வெளிப்பக்கம் பூட்டாமல் செல்வது எதனால் ? 


2  அம்மா  கண்காணிக்கிறாள்  என்பது  தெரிந்தும்  காதல் கடிதங்களை  அவ்வளவு  சுலபமாகக்கண்டு பிடிப்பது மாதிரியா வைப்பார்கள் ?  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 

எச்சரிக்கை  - க்ளைமாக்சில்  ஒரு அதிர்ச்சி சம்பவம்  உண்டு .மனோபலம்  மிக்கவர்கள் மட்டும்  அந்தக்காட்சியைப்பார்க்கலாம் .மென்மையான மனம் கொண்டவர்கள்  கடைசி  6 நிமிடங்களை ஸ்கிப் செய்யலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான  திரைக்கதை  இல்லை ,   வேகமான காட்சிகள்  இல்லை ., ஆனாலும் இது நல்ல படம் .ஏ செண்டர்  ஆடியன்ஸுக்கானது . ரேட்டிங்க்  3 / 5 



The Red Virgin
Theatrical release poster
SpanishLa virgen roja
Directed byPaula Ortiz
Screenplay by
Produced by
Starring
CinematographyPedro J. Márquez
Edited byPablo Gómez-Pan
Music byJuanma Latorre
Guille Galván
Production
companies
Distributed byElastica (es)
Release dates
  • 22 September 2024 (Zinemaldia)
  • 27 September 2024 (Spain)
Countries
  • United States
  • Spain
LanguageSpanish

Monday, December 09, 2024

APPUDO IPPUDO EPPUDO (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ஆக்சன் டிராமா ) @ அமேசான் பிரைம்

       

                 8/11/2024 அன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம் இப்போது  அமேசான் பிரைம்   ஓ  டி டி இல்   தமிழ்  டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது . ஜாலியான  டைம் பாஸ்  படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன் நாயகியைப்பார்த்தவுடனேயே  காதலிக்கிறான் . ஆனால்  இதயம் முரளி மாதிரி  வெளில சொல்லலை . நண்பனிடம்  சொல்றான் . நாயகி தன்  தோழியுடன்  வரும்போது  நாயகன்  தனது  நண்பனிடம்  இவள் தான் என் ஆள் என்கிறான் . நாயகனின் நண்பன்  நாயகியின் தோழியைத்தான்  நாயகனின் ஆள் என  தவறாகப் புரிந்து கொண்டு  தோழியின்  போன்  நெம்பரைத்தருகிறான் . நாயகன்  நாயகிக்கு ஐ லவ் யூ அனுப்பவதாக நினைத்து நாயகியின்தோழிக்கு  மெசேஜ் அனுப்பி விடுகிறான் . இதனால் உருவாகும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம்  ரசிக்கும்படி  இருக்கிறது 


ஒரு இடைவெளிக்குப்பின்  நாயகன்  நாயகியை  வெளிநாட்டில்  பார்க்கிறான் . அப்போது  நாயகி  வேறு ஒரு நபரின்  குழந்தையுடன் இருக்கிறாள் . வழி அனுப்ப வந்தவள் . ஆனால் நாயகிக்கு திருமணம் ஆகி விட்டது  என தவறாக  நாயகன் நினைக்கிறான் . இந்தக்குழப்பங்களும்  ரசிக்கும்படி  இருக்கின்றன 


வில்லி  ஒரு டுபாக்கூர்  பார்ட்டி . வசதியான ஆள் சிக்கினால்  அவனை  மொட்டை  அடிப்பவள் . நாயகனை  வசதியானவர் என  தவறாக நினைத்து  காதலிப்பதாக நடிக்கிறாள் . நாயகன்  வில்லியைக்காதலிக்கிறான் . இருவரும்  திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது  வில்லி க்கு  நாயகன்  பணக்காரன் இல்லை என்ற உண்மை தெரிந்து  கழட்டி விடுகிறாள் 

வில்லனிடம்  500 கோடி  ரூபாய்  பெறுமானம் உள்ள  ஒரு டிவைஸ்  இருக்கிறது . அதை ஆட்டையைப்போட   வில்லி  வில்லனிடம் பழகி அதை சுடுகிறாள் . அந்த  டிவைஸை த்தேடி  வில்லன்  கிளம்புகிறான் .


 பல ஆள்மாறாட்டக்குழப்பங்களுக்கு இடையே அந்த  500 கோடி  டிவைஸ்   யாருக்குக் கிடைத்தது ? என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக நிகில்  சாக்லேட்  பாய் ரோலுக்கு ஓகே , ஆனால் அவர் கேப்டன்   மாதிரி பைட் போடுவது எல்லாம் ஓவர் . நாயகி  ஆக  ருக்குமணி   வசந்த் குடும்பப்பாங்கான கண்ணிய கிளாமர்  நாயகி , சிரிப்பும் , காதலும் நன்கு  வருகிறது .வில்லி ஆக திவ்யான்ஸா கவுசிக் . பரவாயில்லை  ரகம் .நாயகனின் நண்பன் ஆக சத்யா  காமெடி நடிப்பு குட் . வில்லன் ஆக   ஜான் விஜய் கலகலப்பு ஊட்டுகிறார் . வில்லனின்  நண்பனாக அஜய் நல்ல நடிப்பு 


ரிச்சர்ட்  பிரசாத்தின்  ஒளிப்பதிவு  குட் . நாயகி , வில்லி  இருவரையும் அழகாய்க்காட்டி  உள்ளார் . பாரீன் லொக்கேஷன்களில்  கேமரா  களை  கட்டுகிறது .கார்த்திக்கின்  இசையில் ஒரே  ஒரு பாட்டு . பின்னணி  இசை  எம் ஆர் சன்னி , பரவாயில்லை ரகம் . நவீன் நூலின் எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது .கதை , திரைக்கதை , இயக்கம்  சுதீர் வர்மா 

சபாஷ்  டைரக்டர்


1   2002 ல்  ரிலீஸ் ஆன கமலின் பஞ்ச தந்திரம்  படமே 1998 ல் ரிலீஸ் ஆன  " வெரி பேடு திங்க்ஸ் " படத்தின்  அபிசியல்  ரீமேக்  தான் .ஆனால் அன் அபிஷியலாக  அந்தக்கதைக்கருவை  சுட்டு   புதிய  திரைக்கதையில்  தந்த சாமர்த்தியம் 


  2   காமெடியன்   வில்லனைக்கலாய்க்கும் காட்சி  கலக்கல்  ரகம் . சொந்தமா  யோசித்து  அந்த காமெடி டிராக்கை  அமைத்திருக்கிறார்கள் 


3 தயாரிப்பாளர்  செலவில் லண்டன் சுத்திப்பார்த்தது 




  ரசித்த  வசனங்கள் 

1   ஒரு திருடனை  இன்னொரு திருடன் நம்பலைன்னா வேற யாரு நம்புவாங்க? 


2  இந்தாடா  அவ போன்  நெம்பர் 


 அதை ஏண்டா  கஞ்சா பொட்டலம் தர்ற மாதிரி ஒளிச்சுத்தர்றே ? 


3  காதலிக்கப்பொண்ணு பின்னாடி போனாப்போதும் , ஆனா புரப்போஸ் பண்ண  பொண்ணு முன்னாடி போய் நிக்கணும் 


4  அவளுக்கு பெரிய மெஸேஜா அனுப்பு 


ஏண்டா? 


 படிக்க  டைம் இல்லாம ஓகே  என ரிப்ளை அனுப்பிடுவா 


5  ஹவ் ஈஸ்  லைப் ?


 'குட் 


எனி கேர்ள்  பிரண்ட் ?


நோ , கேர்ள்  பிரண்ட் இல்லாததால்தான் லைப் ஈஸ்   'குட் 

6  நான் போய் பாடிட்டு  வர்றேன்  


 அப்படின்னா ?


 நெம்பர்  ஒன்  பாத்ரூம் 


அப்போ  நானும்  வர்றேன் 


 கோரசாப்பாட இது என்ன டூயட்டா? 


7 ஏண்டா ?இவளை விட  வேற  யாரும்  கிடைக்கலையா? 


 என் ரேஞ்ச்சுக்கு  இவளே அதிகம் 


8  பொண்ணுங்களை  பெட்ரூமோட  விட்டுட்டு  வந்துடனும் பிஸினெஸ்ல  சேர்த்த வேணாம் 


நான்  பெட் ரூம்லயே பிஸ்னஸ்  செய்வேன் 


9  உலகில் 90% ஆண்கள் குடிக்கக்காரணம்  பெண்கள்  தான் 


10  பெண்கள்  தங்கள் மனசில் இருப்பதை நம்ம கிட் டே  சொல்லிடுவாங்க  , ஆனா நம்மைப்பேச விட மாட் டாங்க 

11  லண்டன்  ல லுங்கி கட்டி  இருக்கான் . மேஸ்த்திரியா இருப்பானோ? 


12 ஒரே  பையன்  கிட் டே ரெண்டு  தடவை  லவ் பெயிலியர்  ஆகிடுச்சு , எனக்கு மட்டும் எதனால இப்படி ஆகுது ? 


13  ஏண்டா , ஐசியூ  வுக்கும்  , மார்ச்சுவரிக்கும்  இடையே  உன் வாழ்க்கை ஓடிட்டு இருக்கு , உனக்கு எதுக்கு இவ்ளோ பணம் ? 


14  ஏண்டி , நீ  சும்மாவே  இருக்க மாட்டியா?  சைக்கிள் கேப் ல   இன்னொருத்தனைப்பிடிச்சுட்டியா? 


15  வாட்ச்  இட்  பேஷண்ட்லி  (  அமைதியாக அதைக்கவனி ) 


ஆல்ரெடி  ஐ ஆம் பேஷண்ட் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1    500 கோடி மதிப்பில்  இருக்கும்  டிவைஸ்  பற்றி  வில்லனுக்கும் , அவனது நண்பனுக்கும் மட்டும்  தான்  தெரியும் . வில்லி க்கு எப்படித்தெரிந்தது ? பாஸ்வோர்டு  எப்படிக்கண்டுபிடித்தார்? 


2  வில்லி  நாயகனின்  வீட்டுக்குள் நுழைந்து  கதவைத்தாழ்  போட்டு விடுகிறாள் . வில்லனின் ஆட்கள்  வரும்போது  எப்படிக்கதவை திறக்கிறார்கள்  ? 


3  வாரமலர்  மாதிரி சின்ன புக்கை சுருட்டி  நாயகன்  வில்லனின் ஆட்களை  அடிப்பது, அவர்கள்  சுருண்டு  விழுவது    எல்லாம் காமெடி 


4 வில்லனின்  நண்பன்  வில்லியைப்பார்க்க  வரும்போது  10 பேருடன்  வருகிறான் . நாயகன்  தனி ஆள் .வில்லனின்  நண்பன் எதற்குப்பயந்து  ஒளிகிறான்  ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பஞ்ச  தந்திரம் பார்த்தவர்கள் , பார்க்காதவர்கள்  எல்லோரும் பார்க்கலாம் .  ஜாலியா  இருக்கு . ரேட்டிங்  2.5 / 5