Monday, September 02, 2024

SARIPODHAA SANIVAARAM (தெலுங்கு) SURYA'S SATURDAY (2024) -தமிழ் -- சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

         


   90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆன முதல் 2 நாட்களிலேயே 50 கோடிரூபாய்  வசூல் செய்து  மெகா ஹிட் ஆன மசாலா படம் இது .ஹீரோவை விட வில்லனுக்கு  அதிக கை தட்டல்கள் கிடைத்த  படம் . நான் ஈ  புகழ் நானியின் திரை  உலக வாழ்க்கையில்  அதிக செலவில் தயாரான படம் இது 


2022 ம் ஆண்டு  வெளியான  ANTE SUNDARANIKI  ( அடடே சுந்தரேஷா ) படம் பெரிய  வெற்றி அடையாத போது அதே இயக்குனருடன் இணைந்து ஒரு வெற்றிப்படம் கொடுப்பேன்  என சவால் விட்ட நானி அதில்  வெற்றி பெற்றிருக்கிறார் . இயக்குனர்  விவேக் ஆத்ரேயா + நானி  + எஸ் ஜெ   சூர்யா   கூட்டணியில் உருவாகியிருக்கும் மாஸ் மசாலா  ஆக்சன் படம் இது       


SARIPODHAA SANIVAARAM   என்ற டைட்டிலுக்கு   சனிக்கிழமை  மட்டும்  போதுமா?  என்று அர்த்தம் 



ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சிறுவனாக இருக்கும்போதே முரடன் ஆக இருக்கிறான் , இதனால் அவனது அம்மா அவனிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள்கிறார் . எப்போதும் கோபமாகவே இருக்காதே . வாரம் ஆறு நாட்கள்   அமைதியாக இரு . யாருடனாவது பிரச்சனை ஏற்பட்டால்   அதை   எழுதி வைத்துக்கொள் , வாரம் ஒரு நாள்  அடிதடியில் இறங்கு   என்கிறாள் , சுருக்கமா சொல்லனும்னா  நாயகன் ஞாயிறு முதல் வெள்ளி வரை மாணிக்கம் ஆகவும்,   சனிக்கிழமை  மட்டும்  மாணிக் பாட்சா ஆகவும் இருப்பான் 


வில்லன் ஒரு சைக்கோ .போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . அவனுக்கு  பர்சனல் ஆக ஏதாவது பிரச்சனை என்றால் லாக்கப்பில் இருப்பவனை போட்டு அடி  நொறுக்குவது , அவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது அவன் வழக்கம் 


நாயகி  வில்லன் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர்  ஆக   இருக்கும் அதே போலீஸ் ஸ்டேஷனில்  சாதா கான்ஸடபிள் 


ஒரு கட்டத்தில் நாயகன்  முகமூடி போட்டு வில்லனை அடித்து விடுகிறான் . வில்லன் தன்னை அடித்தவன் யார் என தேடுதல் வேட்டையில் இறங்குகிறான் . நாயகனுக்கு , வில்லனுக்கும்  நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான்  மீதி திரைக்கதை  


எந்த மொழியில்   எடுத்தாலும்  ஹிட் ஆக வாய்ப்புள்ள  மசாலா ஃபார்முலா  கதை   இது 


 நாயகன் ஆக  நானி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரது  ஹேர் ஸ்டைல் , பாடி லேங்க்வேஜ்  கச்சிதம் 


 நாயகி ஆக  பிரியங்கா மோகன் பாந்தமான தோற்றம் . பால் அல்வா மாதிரி   மாசு மரு இல்லாத  மொசைக்  முகம் . ஆனால்  நடிப்பில் ஓக்கே  ரகம்  தான் . பிரமாதம் என சொல்ல முடியாது 


  வில்லன் ஆக அதகளப்படுத்தி இருப்பவர் நடிப்பு  அரக்கன் எஸ்  ஜே சூர்யா . நாயகனை  விட   வில்லன் கேரக்டர்  வலிமையாக எழுதப்பட்டிருப்பது பெரிய பிளஸ் . ஆக்சுவலாக  இவர் செய்வது ஓவர் ஆக்டிங் தான் , ஆனால்  ஆடியன்ஸ்  ரசிக்கிறார்கள் . இவர் நடிக்கும் காட்சிகளில் மற்ற அனைவருமே   டம்மி  ஆகத்தெரிவது  இவருக்குப்பெரிய பிளஸ் 


1985 ஆம் ஆண்டு வெளியான  காக்கிச்சட்டை படத்தில் வில்லன் ஆன சத்யராஜ்  தகடு தகடு   என்ற  டயலாக்கை  பேசும்போது  அரங்கம்  அதிரும் . அதே  பாணியில்   க்ளைமாக்சில்  கமல்  போலீஸ்  போலீஸ்  என சத்யராஜ்  பாணியில்  சதயராஜைக்கலாய்க்கும்போது  கமல்  ரசிகர்கள்   கூட   கை தட்டவில்லை . அதே  போல  இந்தப்படத்திலும்  ஹிஸ்டரி  ரிப்பீட்  ஆகி இருக்கிறது 


  வில்லன்  ஆன எஸ்  ஜே  சூர்யா  ஒரு பாணியில்  வசனம்  பேசி    கை  தட்டல்  வாங்குவார் . க்ளைமாக்சில்  நானி  அதே  பாணியில்  நான்கு  வரி  டயலாக்  பேசுவார் , ஆனால்  அது  எடுபடவில்லை 

  இவர்கள் போக   முரளி சர்மா , அதிதி பாலன் ,   அபிராமி ஆகியோர்  நடிப்பும் குட் 


 ஜேக்ஸ்  ஜோ இசையில்  12 பாடல்கள் . அவற்றில் 3  பாட்டு ஹிட்டு . பின்னணி  இசை தெறிக்கிறது 


முரளி  யின் ஒளீப்பதிவு பிரமாதம் . சனிக்கிழமை மட்டும் ரெட் ஷேடோ  மற்ற  நாட்களில்   சாதா  கலர்   என  எடுத்த ஐடியா  அட்டகாசம்


 கார்த்திகா  ஸ்ரீனிவாஸ்  எடிட்டிங்கில்  படம் 175  நிமிடங்கள்  ஓடுகின்றன 


 நாயகன் , வில்லன் , நாயகி இவர்களைப்பற்றி  அறிமுகப்படுத்துவதற்கே  முதல் ஒரு  மணி நேரம் எடுத்துக்கொண்டார்கள் , கொஞ்சம்  நீளம் தான் 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  விவேக்  ஆத்ரேயா 




சபாஷ்  டைரக்டர்


1   வாரா வாரம்  ஒரு  நாள்  ஆக்சன்  அவதாரம்  மற்ற    நாட்களில்  அமைதி  என்ற  கான்செப்ட்    நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


2  நாயகன் , நாயகி  இருவரும்  பால்ய கால  தோழர்கள் , ஆனால்  இப்பொது  பரஸ்பரம்  ஒருவரை ஒருவர்  அடையாளம்  தெரியாது  என்ற  கான்செப்ட்  ரசிக்கும்படி  இருந்தது 


3  வில்லனின்  எண்ட்ரி   சீன்  ரொம்ப  லேட்  என்றாலும்   டோட்டலி ஸ்டீல் த ஷோ   அல்லது  டேக்கன்  த    மூவி  அண்டர்  கண்ட்ரோல்  என்று   சொல்லும்  அளவுக்கு  ஆர்ப்பாட்டமான எஸ்  ஜே  சூர்யா  நடிப்பு 


4   நாயகனின்  சனிக்கிழமை  அவதாரம்  நாயகிக்குத்தெரியாது . அப்போ  நாயகன்  நாயகி  உடன்   இருக்கும் போது  சனிக்கிழமை   அன்னைக்கு  அடிக்கனும்  என  இன்னொரு  வில்லனின்  அடியாட்களுக்கு கட்டளை  பிறப்பதும்   அந்த   ஆக்சன்  சீனும்  அதகளம் 


5   வில்லனை  நாயகன்  முதன்  முதலாக  அடிக்க  வரும்போது  சனிக்கிழமை  மிட்  நைட்  12  மணி  ஆவதும் , நாயகன்  வில்லனை  அடிக்காமல்  பின்  வாங்குவதும்  , அந்த   கடிகாரம்  10  நிமிசம்  ஃபாஸ்ட்  என்பதை  அறிந்து  திரும்பி   வந்து  அடிப்பதும்  செம  சீன் 


6   வில்லன்  நாயகன்  ஒரு  சனிக்கிழமை  சனியன்  என்பதை  கண்டு பிடிக்க  முற்படும்  காட்சிகள்  கலக்கல்  காமெடி 


7  வில்லனின்  அண்ணனை  வில்லனே  போட்டுத்தள்ள  முயல்வதும் . ஆனால்  அண்ணன்  வில்லனை  தன்  உயிரைக்காப்பாற்றியவன்  என தவறாக நினைத்து  பாசத்தில் உருகுவதும் செம காமெடி  காட்சிகள்


8  வில்லனின்  சந்தேக  வளையத்தில்   இருந்து   தப்பிக்க   நாயகன்  வில்லனிடமே  போய்   என்னை  ஒருத்தன்  சனிகிழமை அடிச்சுட்டான்  என கேஸ்  கொடுப்பதும் , அதைத்தொடர்ந்து   வில்லன்  நாயகனை  சாட்சியாக  வைத்துக்கொள்வதும்  காமெடிக்கலக்கல்கள் 


  ரசித்த  வசனங்கள் 


1 நமக்குப்பிடிச்சவங்களை ,பிடிச்சவங்களோட தான் சந்திப்போம் .


2 நீ  அம்பி  இல்லை .,அந்நியன் என்பது அவளுக்குத்தெரிஞ்சா நீ ரோமியோ ஆக முடியாது 


3 அவனை  அடிச்சதும் ,உன்னை  அடிச்சதும் , என்னை  அடிச்சதும்  ஒரே ஆள் 


 சார் , உங்களை எப்படி ... ?


 நீ எவ்ளோ ஷாக் ஆனாலும் அதான் நிஜம் 



4  இந்தப்பாவிப்பையன் கூட இருந்துக்கிட்டே  என்னை அப்பாவி ஆக்கி இருக்கான் 


5  கூப்பிட்டியா? சமந்தா? 

 இல்லையே? 


 கூப்பிடாமயே கூப்பிட்ட மாதிரி  இருந்தா ரொமான்ஸ் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னு அர்த்தம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  ஒரு  சாதா இன்ஸ்பெக்டர் . அவர்  பண்ணும்  அட்டூழியங்கள்  ஓவர்  ரகங்கள் . இதெல்லாம் 1980  கால  கட்டத்துக்கு  ஓக்கே , ஆனால்  சமூக  வலைத்தளங்கள்  இருக்கும்  இப்போதைய  கால  கட்டத்தில்  வீடியோ  எடுத்து  வெளியிட்டு  அவரை  நாஸ்தி  பண்ணி  விட  மாட்டாரகளா? 


2  நாயகன்  தான்  தன்  அம்மாவுக்கு  வாரத்தில் ஆறு  நாட்கள்  அமைதியாக  இருப்பேன்  என  சத்தியம்  செய்து கொடுத்திருக்கிறான். வில்லனின்  அடியாட்களுக்கு  என்ன  கேடு?   ஞாயிறு  டூ  வெள்ளி  வரை  நாயகனைப்போட்டு  பொளந்து  கட்டி  இருக்கலாமே?  அவர்களும்  சனிக்கிழமை   ஏன் சண்டைக்குப்போக  வேண்டும் ? 


3  நாயகன் - நாயகி  இருவரும்  தாங்கள்  இன்னார்தான்  என்பதை  உணர்ந்து   அதற்குப்பின்  காதலை வெளிப்படுத்தி இருந்தால்  இன்னும்   கவித்துவமாய்  இருந்திருக்கும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  கமர்ஷியல்  ஆக்சன் மசாலாப்படம்  பார்க்க விருப்பம் உள்ளவர்கள்  , எஸ் ஜெ  சூர்யாவின்  ஓவர் ஆக்ட்டிங்கை ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . ஆனந்த  விகடன்  மார்க் 44  , குமுதம் - நன்று. அட்ரா சக்க ரேட்டிங்  3 / 5 


Saripodhaa Sanivaaram
Theatrical release poster
Directed byVivek Athreya
Written byVivek Athreya
Produced byD. V. V. Danayya
Starring
CinematographyMurali G.
Edited byKarthika Srinivas
Music byJakes Bejoy
Production
company
Distributed bySri Venkateswara Creations
Release date
  • 29 August 2024
Running time
175 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹90 crore[2][3]
Box office41 crore[4]

Sunday, September 01, 2024

அதர்மக்கதைகள் (2024)- தமிழ் -சினிமா விமர்சனம் (( ஆந்தாலஜி ரிவெஞ்ச் த்ரில்லர் ))


ஆந்தாலஜி  என்பது தமிழ் ஆடியன்ஸுக்கு ஒத்து வராது . கலவை சாதம் சாப்பிடுவதை விட முழு சாப்பாடு சாப்பிட்டால் தான் தமிழனுக்கு திருப்தி . இதில் இயக்குனர்  நான்கு குறும்படங்களை  2 மணி  நேரத்தில் கொடுத்திருக்கிறார் . 


                       ஸ்பாய்லர்  அலெர்ட்


 1   பழி  வாங்குவது ஒரு கலை 


வில்லன் ஒரு மோசமான ரவுடி . ஓப்பனிங்க் ஷாட்லயே அவனை ஒரு கும்பல் கொலை பண்ண துரத்துது . படு காயங்களுடன் ஒரு  ஹாஸ்பிடலில்  அட்மிட் ஆகிறான் . அவனோட கெட்ட குணங்கள் அறிந்து மற்ற நர்ஸ்கள் எல்லாம்     சிகிச்சை  செய்ய தயங்கும்போது நாயகி   அதை ஒரு கடமையாக நினைத்து சாதாரணமாக அவனுக்குப்பணி விடை செய்கிறாள் ..


வில்லனைத்துரத்திய   கேங்க்  நாயகியின்  வீட்டுக்கு வந்து ஒரு  கோரிக்கை வைக்கிறார்கள் . வில்லன்  ஹாஸ்பிடலில் இருக்கும்போதே   நைசாக அவனை போட்டுத்தள்ள நாயகி உதவ வேண்டும் . அதற்கு பணம் தர தயார் . ஆனால் நாயகி அவர்களை துரத்தி விடுகிறாள் 


இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள்  மீதி  திரைக்கதை 


நாயகி ஆக அம்மு அபிராமி கச்சிதமாக நடித்திருக்கிறார் . 23 நிமிடக்குறும்படம் இது 


2  தன்னைத்தானே பழி வாங்குதல் தவறானது 


நாயகன், நாயகி  இருவரும் காதலித்துக்கல்யாணம்  செய்து கொண்டவர்கள் . ஒரு குழந்தை உண்டு . நாயகனுக்கு ஆன் லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம்  , ஏராளமான பணத்தை இழக்கிறான். பலரிடம் கடன் வாங்கி சிக்கலில் மாட்டுகிறான் . கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க  ஒரு பணக்கார வீட்டுக்குழந்தையை கடத்தி பிளாக்மெயில் செய்கிறான். ரூ 50 லட்சம்  பணம் வர இருக்கிறது . இந்த சந்தர்ப்பத்தில் நாயகிக்கு விஷயம் தெரிகிறது  


 நாயகி  நாயகனைக்கண்டிக்கிறாள் . இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட  நாயகி தலையில் அடிபட்டு  இறக்கிறாள் , ஆக்சிடெண்டல் டெத் . இதற்குப்பின்  நாயகன் எடுக்கும் முடிவு தான்  க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக  வெற்றி நடித்திருக்கிறார் . வித்தியாசமான கதைகளில் நடித்து வரும்  வெற்றிக்கு  இது  அதிக ஸ்கோப்  இல்லாத  கதை தான் . வந்தவரை ஓகே  ரகம் . நாயகி ஆக சாக்ஷி அகர்வால் இளமைத்துடிப்புடன் , கிளாமருடன் வந்து போகிறார் . காதல் கொண்டாட்டத்தில்  கலக்குபவர் கோபமாக வசனம்  பேசும் காட்சியில் தடுமாறுகிறார் 

34 நிமிடக்கதை இது 


3  பழி  வாங்குவதை  மற்றவர்களுக்காகச்செய்வதும் ஒரு வகையான தர்மமே 


நாயகன் சுனாமியில் தன குடும்பத்தை இழந்த பெரியவர் . பீச்சில் பலூன்களை துப்பாக்கியால் சுடும் விளையாட்டுக்கடை நடத்தி வருகிறார் . அங்கே  3  ரவுடிகள்   பொது மக்களுக்குத்தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். போலீசில்  புகார் கொடுத்தால் பெரிய இடத்துப்பொல்லாப்பு நமக்கு எதுக்கு என போலீஸ் ஒதுங்கி விடுகிறது . அவர்கள் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லாமல் போனாலும் சமூக நலன் கருதி அவர்களை  போட்டுத்தள்ளுகிறார் நாயகன் . 


 நாயகனாக  பூ ராமு அமைதியாக நடித்திருக்கிறார் . ராஜ்கிரண் சாயல் நடிப்பில்  தெரிகிறது 



4   மன்னித்தலே மிகப்பெரிய பழி வாங்கல் 


நாயகி  ஒரு துணிக்கடையில் பணி புரியும்  ஏழை . அப்பாவுக்கு ஹாஸ்பிடல் செலவு இருக்கு . இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் அவளுக்கு ஒரு காதலும் இருக்கு . ஒரு நாள் அவள் வீடு தேடி ஒரு பணக்காரக்குடும்பத்தைச்சேர்ந்த  தம்பதி வருகிறார்கள் . 


அந்த தம்பதியில் கணவன் நகைக்கடை அதிபர் . மனைவி  கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர் . இதனால் நாயகியை வாடகைத்தாயாக இருந்து அவர்கள் குழந்தையை பெற்றுத்தர சொல்கிறார்கள் . கணவனின் உயிர் அணு + மனைவியின்   கரு முட்டை  இரண்டும்  நாயகியின்  வயிற்றில்  கர்ப்பப்பையில்  பொருத்தப்படும் . குழந்தை பெற்றுத்தர  ரூ 10 லட்சம்  சன்மானம் .


 ஆரம்பத்தில் மறுக்கும்  நாயகி  தன வறுமை நிலையை எண்ணி பின் சம்மதிக்கிறாள் .  அட்வான்ஸாக  ரூ 2 லட்சமும் மாதா மாதம்  ரூ 25,000  தந்து பேலன்ஸ் குழந்தை பிறந்த பின் செட்டில்மென்ட் என பேச்சு 



நிறை மாத கர்ப்பிணி ஆக நாயகி இருக்கும்போது  நாயகிக்கு ஒரு பிரச்சனை , அந்த தம்பதி பிரிந்து விடுகிறார்கள் . பேசிய பணத்தை  தர மறுக்கிறார்கள் 


 நாயகி போலீசில் புகார்  தருகிறார் , மீடியாவில் பரபரப்பாக  இந்த செய்தி பரவுகிறது  வில்லனின் பெயர் கெடுகிறது . இதனால் வில்லன் நாயகியைத்தீர்த்துக்கட்ட முடிவு எடுக்கிறான் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகி ஆக திவ்யா துரைசாமி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரது அம்மா கேரக்டர்  கூட சிறப்பு 


ஏ ஆர்   ரெஹானா எஸ் என் அருணகிரி ,ஹரிஷ்   அர்ஜூன் ,சரண்குமார்  ஆகிய   நால்வரும்  இசை . பாடல்கள்  ஓகே ரகம் . பின்னணி இசை சுமார் ரகமே   பரணி ,  ராஜீவ  ராஜேந்தர் , ஜெபின் ரெஜினால்டுக்கு  ஒளிப்பதிவாளர்கள் . கச்சிதம் . கதை ,  திரைக்கதை   எழுதி இயக்கி இருப்பவர் காமராஜ் வேல் 


 எடிட்டிங்க் கச்சிதம் . 2 மணி நேரம்  5 நிமிடம் படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1    மூன்று சுமாரான  கதைகள் , ஒரு நல்ல கதை என்ற பார்முலாவில் களம்  இறங்கி இருக்கிறார் இயக்குனர் .


2   லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக நடிகையரிடம் நடிப்பை வாங்கிய விதம் குட் 



  ரசித்த  வசனங்கள் 


 பொண்டாட்டியைக்கட்டிப்பிடிக்கணும்னா அடிக்கடி அவளுக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்துட்டே இருக்கணும் போலயே? 


2   பணக்காரங்க புத்தி அப்படித்தான் , காரியம் ஆகும் வரை காலைப்பிடிப்பாங்க  , காரியம் முடிஞ்சதும்  கழுத்தைப்பிடிப்பாங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லனின் அடியாட்கள்  தண்டமாய்  ஹாஸ்பிடல்  வெளியே நிற்கிறார்கள் . பாதுகாப்புக்கு உள்ளே  இருவராவது வேண்டாமா? மீண்டும் கொலை முயற்சி நடக்கும் என்பது தெரியாதா? 


2 ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லாத பொது காம எண்ணங்கள்  எழாது என்பது மருத்துவ உண்மை . வில்லன்  சீரியஸ் கண்டிஷனில் உயிருக்கு  போராடுகிறான் . அப்போது அவனுக்கு எப்படி காமம் வரும் ? 


3  வில்லனை  கொலை செய்ய முடிவு எடுத்த நாயகி அந்த கோஷ்டி  கொடுத்த  ஆபரை  ஏற்றிருக்கலாமே? ஒரே கல்லில் 2 மாங்கா 

--------------------------------

4  சாலையில் அனைவரும் ஹெல்மெட்டுடன் பயணிக்கும்போது நாயகன், நாயகி மட்டும் ஹெல்மெட் போடாம டூ வீலரில் சுற்றுவது எதனால் ? 


===============

5 பொது வெளியில் , பீ ச்சில் ரவுடிகள்  அட்டகாசம் செய்யும்போது போலீசும் , பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருப்பார்கள் , மீடியாக்கள் என்ன செய்யு து ?


============

6  வாடகைத்தாய் அமர்த்த  சட்டப்படியே அணுகி இருக்கலாம் . திருமணம் ஆன ஆல்ரெடி  ஒரு குழந்தை பெற்ற எத்தனையோ ஏழைப்பெண்கள் தயாராக இருக்கிறார்கள் 


7  வாடகைத்தாய் ஆக தான்  ஆகப்போவதை நாயகி தன காதலனிடம் எதனால் சொல்லவில்லை ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தியேட்டரில் போய் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை , டி வி யில் போட்டால் நான்காம் கதையை மட்டும் பார்க்கலாம், ரேட்டிங்க்  2 / 5 

Wednesday, August 28, 2024

போகுமிடம் வெகுதூரமில்லை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

     




    திருமண மண்டபங்களில்  மணப்பெண் ,  பெண்ணின் தோழி  என இருவரின்  அலங்காரங்களை  ஆர்ப்பாட்டமாக  நாம் காணும் அதே சமயம்  ஒப்பனையே  இல்லாத ஒரு எளிமையான அழகு ஒவ்வொரு மண்டபத்திலும் உலா வருவதைப்பார்க்க  முடியும் .அந்த மாதிரி தான்  இந்த வாரம் வெளியான மூன்று படங்களில்  கவித்துவம்  மிக்க   வாழை  படத்துக்கும் , காலிப்பெருங்காய டப்பா ஆன  கொட்டுக்காளி படத்துக்கும் மீடியாக்கள் ,விமர்சகர்கள் அளித்த முக்கியத்துவத்தில்  பாதியைக்கூட அளிக்காவிட்டாலும்  தரத்தால் தனித்து நிற்கிறது இந்தப்படம் 



 கல்கி , இந்தியன் 2 , தங்கலான் போன்ற பிரமாண்டமான , டப்பாப்படங்களை , குப்பைப்படங்களை , மக்கள் மனதில் கனெக்ட்டே ஆகாத    ஆகாவளிப்படங்களைப்பார்த்து  சலித்த  நமக்கு  ஸ்டார்  வேல்யூ இல்லாத ,விளம்பரம்  அதிகம் இல்லாத எளிமையான   சாதா  பட,மாக  இருந்தாலும்  ரசிக்க  முடிகிற நல்ல படமாக இருப்பதில் திருப்தி             


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு டிரைவர் . மனைவி நிறை மாத கர்ப்பிணி ஆக ஹாஸ்ப்பிடலில் இருக்கிறார் . ஆபரேஷன்   செலவுக்குப்பணம் தேவை .ஒரு பிணத்தை ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு  டெலிவரி செய்ய வேண்டும் 



இறந்த ஆள் அக்னி நட்சத்திரம் விஜயகுமார் மாதிரி  இரு தாரம்  கொண்டவர் .ஆள் பெரிய இடம் . இரு தாரங்களுக்கும்  வாரிசு உண்டு . இரு தாரங்களின்  குடும்பமும்  இறந்தவரின்  சவ  அடக்கத்துக்கு உரிமை கோர , சண்டை போட ரெடியாக இருக்கிறார்கள் 


 நாயகன் பிணத்தை ஏற்றி வரும்போது  வழியில் லிப்ட் கேட்டு  ஒரு ஆள்   ஏறுகிறான் . பின் ஒரு காதல் ஜோடியும்  ஏறுகிறது . . காதல் ஜோடியைத்துரத்திக்கொண்டு  ஒரு கும்பல் . இந்த களேபரத்தில்  பிணம் காணாமல் போகிறது 


 நாயகன்  இந்தப்பிரச்சினையை எப்படி  டீல் செய்கிறான் என்பது மீதிக்கதை 

நாயகன் ஆக விமல் .களவாணி  , விலங்கு  மூலம் பலர் மனதைக்கவர்ந்தவர்  இதில் மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார் . க்ளைமாக்சில்  இவரது நடிப்பு பட்டாசு 


லிப்ட் கேட்கும் ஆளாக  தெருக் கூத்துக்  கலைஞனாக  கருணாஸ் கலக்கி இருக்கிறார் . நாயகனை விட கனமான ரோல் . லொடுக்குப்பாண்டி  கேரக்ட்டருக்குப்பிறகு கிடைத்த நல்ல ரோல் . 

நாயகனின் மனைவி ஆக  மே ரி ரிக்கெட்ஸ்  குறைவான நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பு 


 மற்ற  நடிகர் நடிகைகள் அனைவருக்கும் சின்னசின்ன  ரோல்தான் . குட் 


டெமில் சேவியர் எட்வார்ட்ஸ்   தான் ஒளிப்பதிவு . இது மாதிரி படம் முழுக்க   பயணம் இருக்கும் கதையில்  கேமரா ஒர்க் சவாலானது . கச்சிதமாகப்பணியாற்றி இருக்கிறார் . ரகுநந்தன் இசையில் இரண்டு பாடல்கள்  சுமார் ரகம், பின்னணி இசை அருமை 


 திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  மைக்கேல் கே ராஜா . எடிட்டிங் குட் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது 



சபாஷ்  டைரக்டர்


1   ஒருவருக்கு முடிந்தவரை நாம் உதவவேண்டும் என்பதுதான் கதையின் மையக்கரு .அதை பிரச்சார தொனி 

 இல்லாமல் இயல்பாக சொல்லி இருக்கிறார்  


2  காதல் ஜோடிக்கு உதவி செய்து உயிரைக்காப்பாற்றியதால்  அந்தக்காதலன் நாயகன் காலில் விழுந்து நன்றி சொல்லும் இடம்  நெகிழ்ச்சி  என்றால்  அப்போது  நாயகன் கற்பனை செய்து  பார்க்கும் காட்சி ரசனை 


3 கருணாஸின் கேரக்ட்டா  டிசைன் அருமை .ஆரம்பத்தில்  பிளேடு போடுபவர் பின் மெல்ல மெல்ல   நம் மனதில் குடி ஏறுகிறார்


4  படம் முழுக்க ஒரு பதட்டம் நம்மைத்தொற்றிக்கொள்கிறது . அந்த டெம்ப்போவை  கடைசி வரை காப்பாற்றிய விதம் அருமை  


  ரசித்த  வசனங்கள் 


1  அம்மா இருந்தவரை கல்யாணம் பண்ணிக்க- ன்னு சொல்லி நச்சரிப்பாங்க, அப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணலை அம்மா இறந்தபின்  கல்யாணம் பண்ணிக்கற  வயசு தாண்டிடுச்சு 


2  அப்டி திட்டி இருக்கக்கூடாது , ஒரு வார்த்தை உயிரையே கொல்லும் 


3 எனக்கு மட்டும்   எல்லாமே  தப்புத்தப்பா நடக்குது 


4 சனியன் நம்மைப்பிடிச்சுடக்கூடாது , சனியன்பிடிச்ச  ஆளைக்கூடவெச்சிருக்கக்கூடாது , அவங்க கூட சகவாசம் வெச்சிக்கக்கூடாது


5  என்னை சொல்லிட்டு நீங்க தம் அடிக்கறீங்களே?இது மட்டும் சாமிக்கு ஊதுபத்தியா? 


6   ஒத்தைக்கொள்ளி க்கு பத்துக் கொள்ளி  பரிகாரமா? 


7 பேருக்காகவும் கொள்ளி   வைக்கலை , ஊருக்காகவும் கொள்ளி   வைக்கலை , உரிமைக்காக கொள்ளி   வைக்கறோம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காதல் ஜோடிக்கு உதவி செய்து உயிரைக்காப்பாற்றியதால்  அந்தக்காதலன் நாயகன் காலில் விழுந்து நன்றி சொல்லுகிறான் , ஆனால் காதலி ஒரு நன்றி கூட சொல்லவில்லையே? 


2  க்ளைமாக்சில்  வரும் டிவிஸ்ட்  சொல்லாமலே பட க்ளைமாக்ஸை நினைவுபடுத்துகிறது .இப்படி எல்லாம் ஒரு தியாகி இருப்பார்களா? நம்பகத்தன்மை இல்லை 


3  அழாதீங்க  என்று டயலாக் வர வேண்டிய இடத்தில் அழுகாதீங்க என வருகிறது . பழம்தான் அழுகும் 


4 காதல் ஜோடியைக்காப்பாற்றிய  நாயகன் அவனிடம் அடி வாங்கிய கும்பல்  போன் பண்ணி வரச்சொல்லும்போது ந,ம்பி எப்டிப்போகிறார்கள்? போனால் அடி விழும் என தெரியாதா?  


5  விபத்தில் இறந்தவர்  தலையில் அடிபட்டு அடையாளம் தெரியாமல் இருக்கார் என சமாளித்தாலும்   ஆள் மாறாட்டம்  நடந்த பின் டெட் பாட்டியின் உயரம் , , உடல் வாகு  மாறி இருப்பது தெரியாதா? அவருக்கு நரை முடி இவருக்குக்கருப்பு முடி 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எம் சசிக்குமார் நடித்த அயோத்தி  பட பாதிப்பு கொஞ்சம்  இருந்தாலும்  இது ஒரு மாறுபட்ட த்ரில்லர் ..பார்க்கலாம் . எதிர்பார்க்கும் ஆனந்தவிகடன் மார்க் 43  குமுதம் - நன்று . அட்ரா  சக்க ரேட்டிங்க் 3 / 5 

Tuesday, August 27, 2024

கொட்டுக்காளி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( டிராமா)

       

         


  கேட்கறவன்  கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கேபிள் கனெக்சன்  இல்லாமலேயே  கே  டி வி  தெரியும்னு சொன்ன கதையா  திரை உலக பிரபலங்கள் இந்தப்படத்துக்குக்கொடுத்த பிரமோஷன்கள் ஓவர் ஆக்டிங் ஓமனா  வகையறா . பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு இணையான  திரை உலக அனுபவம் மிக்க சாய் வித் சித்ரா  எம் டி சித்ரா லட்சுமணன் சாரே இப்படத்தை சிலாகித்ததும் , கதையே கேட்காம படத்தை தயாரிக்க  முன் வந்த சிவகார்த்திகேயன் பிராண்ட்  ஆகியவை தான் இப்படத்தைக்காண வைத்த காரணிகள்    

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் ஓரூ கிராமத்தான் .பட்டிக்"காட்டான்" . வில்லனின்  முறைப்பெண்ணான நாயகி கல்லூரி மாணவி . வேறு ஒரு சாதிக்காரனை லவ்  பண்ணுவதால்  அவள் மனசை மயக்கி  இருப்பதாக சொந்தக்காரர்கள் எண்ணுகிறார்கள் .அந்த ஊர் வழக்கப்படி  ஊர் எல்லையில் இருக்கும் பூசாரியிடம் அழைத்து சென்று  பேய் ஓட்டி விட்டால் அவள் மனசு மாறும் என மடத்தனமாக எண்ணுகிறார்கள் .வில்லன் , நாயகி , நாயகியின்  பெற்றோர் , சொந்தபந்தங்கள் சிலர்  இவர்கள் அனைவரும்  மேற்கொள்ளும் பயணம்  தான்  மொத்தக்கதை யுமே 


வில்லன் ஆக  புரோட்டா சூரி , கச்சிதம் .மொக்கைக்காமெடி நடிகராக இருந்தவர்  சமீபகால  விடுதலை , கருடன் படங்கள் 


மூலமாக கதையின் நாயகன் ஆக மாறுபட்ட  நடிப்பைத்தந்தவர்  இந்தப் படத்தில்  வில்லன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் 


நாயகி ஆக   அன்னா  பென் . முழுப்படத்திலும்  ஒரே ஒரு வரி டயலாக் தான் . பார்வை மட்டுமே பேசுகிறது .

மற்ற அனைவரும் புது முகங்கள் . அனைவரின் நடிப்பும் கச்சிதம் 


படத்தில்  இசை , பின்னணி இசை இல்லை . வாகனங்களின் ஒலி  மட்டுமே ஓசை . புதுமைதான் 


டைட்டிலுக்கான அர்த்தம் அடங்காப்பிடாரி + அடமண்ட் கேர்ள் 


சபாஷ்  டைரக்டர்

1   பல விருதுகளை வென்ற  தன  முதல் படமான கூழாங்கல் என்ற விஸிட்டிங்க் கார்டை வைத்து   சிவகார்த்திகேயன்  மனதை கலைத்து தயாரிப்பாளர் ஆக்கிய சாமர்த்திய,ம் 



2   படம் வெளியாகும் முன்பே  அனைத்து மீடியாக்கள் , விஐபிக்கள்  பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுக்க வைத்தது 



3  இசை அமைப்பாளர் , திரைக்கதை ஆசிரியர் இருவர் சம்பளத்தை மிச்சம் செய்ய படத்தில்  இரண்டையும் ஆப்சென்ட் ஆக்கியது 



4    முக்கியமான இடத்தில் படத்தை நிறுத்தி க்ளைமாக்ஸை  உங்கள் யூகத்துக்கே  விடுகிறோம் என எஸ்கேப் ஆன விதம் 


5  விடுதலை , கருடன் இரண்டு படங்களின் ஹிட்டால் சூரி மார்க்கெட்  உயர்ந்திருப்பதை  உணர்ந்து சாமார்த்தியமாக  அவரை  வில்லனாக புக் செய்தது 

  ரசித்த  வசனங்கள் 

1   எருக்கம்பாலை வெச்சா  எந்த விஷமா இருந்தாலும்  முறிந்துவிடும் 


2 நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் நாம் பேசவே கூடாது 


3  கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது 


4  லவ் பண்ணுனவனையே  நீ யாரு? என அவளையே கேட்க வெச்சிடும் சாமி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   மனசாட்சியே இல்லாம 15  நிமிட குறும்படத்துக்கான கண்டடெண்டடை   ஒன்றே  முக்கால் மணி நேர படமாக எடுத்தது  எதனால் ? 


2  திரைக்கதை சுவராஸ்யமாக எழுத  வரவில்லை   என்பதற்காக    பயணத்தின் போது  சிறுவன்  பாத்ரூம்   போவதை ,  பெண்ணுக்கு  மென்சஸ் ஆனதால்  ஒதுங்கி காட்டின் மறைவில்   கேர்ப்ரீ  வைப்பதை . குடிகாரர்கள்  சரக்கு அடிக்க முயல்வதை  என நம் பொறுமையை சோதித்தது எதனால் ? 


3  அனைவரும் சேலை அணிந்திருக்கும்போது  நாயகியை மட்டும் சுடிதார்  அணிய விட்டது எப்படி?  வில்லன் தான் கட்டுப்பட்டி ஆச்சே? ? 


4    வில்லன் கண்ணில் காற்றில்  தூசியுடன்  முடி வந்து ஒட்டிக்கொள்ளும்போது  சொந்தக்காரப்பெண்   தன்  நாக்கால்  எடுப்பது  ஓகே . எதுக்கு அவ்ளோ கஷ்டம் ? ஒரு பாக்கெட்டில்  தண்ணீரில்  கண்ணை திறந்தபடி முகத்தை முங்கினால் வந்துடும் 


5  மிக மிக ஸ்லோ  மூவியான இதில்  ஓப்பனிங்  டயலாக்  - சீக்கிரம் வாப்பா.    என்ன கொடுமை சார் இது ? 



6  வில்லன்  நாயகி ஒரு பாட்டு முணுமுணுத்தாள் என்பதற்காக அவளை , குடும்பத்தை அடித்து நொறுக்குவது ஓவர் . இப்படிப்பட்ட முரடனுக்கு  எந்தப்பெற்றோர்   தன்  மகளை  கல்யாணம் பண்ணி வைப்பார்கள் ?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாறுபட்ட   முயற்சிதான் , ஆனால் விருதுக்கான  படம் . இந்தப்படத்துக்கு   பொய்யான ;பாசிட்டிவ்   ரிவ்யூஸ் கொடுத்து மக்கள்  பணத்தை தண்டம் ஆக செலவு செய்ய வைப்பது  குற்றம், பாவம் , இப்படி எல்லாம்  ஏமாற்றி சம்பாதித்தால் அந்தப்பணம் ஒட்டாது .  நாசமாபோகும் .


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் 41 

 குமுதம் ரேங்கிங்க் - ஓகே 

  ரேட்டிங்  2 / 5 

Monday, August 26, 2024

வாழை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( உலக சினிமா ) @டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் + விஜய் டி வி

                   

 

 
திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் மாதிரி  ஜனரஞ்சகப்படங்களை இயக்கி மக்கள் மனதில் நின்றவர்கள் பலர் ,பாலுமகேந்திரா ,மகேந்திரன்  மாதிரி  கலை  அம்சம் பொருந்திய விருதுக்குரிய படங்களை இயக்கி கவித்துவமான படங்களை தருகின்ற இயக்குனர்கள் சிலர் . வெகுஜன ரசனை + கலை அம்சம்  என இரு வெற்றிக்குதிரைகளில் ஒரே சமயத்தில் பவனி வருபவர்கள் அரிதிலும் அரிதாக வெகு சிலரே! அப்படி ஒரு அபூர்வமான இயக்குனர்தான் மாரி  செல்வராஜ் 


 பரியேறும் பெருமாள் (2018) ஒரு மிகப்பெரும் அதிர்வை  தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது . கர்ணன் (2021) , மாமன்னன் (2023) ஆகிய அடுத்தடுத்த அவரது படங்கள் அவரை வெற்றிப்பட இயக்குனராக தக்கவைத்தன. இப்போது வெளியாகி இருக்கும் வாழை  அவரது முந்தைய  மூன்று படங்களை விட தரத்தில் , கவித்துவத்தில் ஒரு படி மேலே உயர்ந்து நிற்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  எட்டாம் வகுப்புப்படிக்கும் ஒரு பள்ளி மாணவன் .அம்மா,அக்கா என அவனது குடும்பம் மிக சிறியது . வாழை தோப்பில்  அறுவடை நடக்கும்போது அவற்றை சுமந்து லாரியில் ஏற்றும் கூலித்தொழிலாளிகள் அவர்கள் பள்ளி  விடுமுறை நாட்களான சனி , ஞாயிறு , மற்றும் பரீட்சை முடிந்த  விடுமுறை நாட்களில் நாயகனும் அதே கூலித்தொழிலை செய்து வருவதுண்டு . அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டா வெறுப்பாகத்தான் அந்த வேலையை செய்கிறான் . அவனுக்கு பள்ளி செல்வதில் தான் இஷ்டம் .காரணம் அவன் வகுப்பில் படிப்பில் முதல் ,மாணவன் . அதை விட முக்கியக்காரணம்  நாயகனுக்கு பள்ளி டீச்சர் ஒருவர் மேல் இனம் புரியாத கிரஷ் 


வாழைத்தார் சுமந்து வர ஒரு தாருக்கு  ரூ 1 தான் கூலி .அது மிகக்குறைவு எனவும் இரு மடங்காக அதாவது ஒருதாருக்கு  ரூ 2 சுமை கூலி  வேண்டும் என போராட்டம்   நடத்துகிறார்கள்  அதில்  வெற்றியும் பெறுகிறார்கள் . இந்தப்போராட்டத்துக்கு  தலைமை தாங்கிய  கம்யூனிச சித்தாந்த இளைஞனுக்கும் , நாயகனின் அக்காவுக்கும் ஒரு காதல் . நாயகனுக்கும் , டீச்சர் மேல் இனம் புரியாத அன்பு 

படத்தின் முதல் பாதி முழுக்க கமர்ஷியலாக , ஜனரஞ்சகமாக  பயணிக்கிறது . கடைசி 20 நிமிடங்கள் மட்டும்  உருக்கம் . உண்மையில் நடந்த சம்பவம் அது 

நாயகன் ஆக  13 வயது சிறுவனாக  பொன்வேல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் . அல்லது  அவரை  இயக்குனர் பிரமாதமாக வேலை வாங்கி இருக்கிறார் 

நாயகனின் அக்காவாக திவ்யா துரைசாமி  கச்சிதமாக நடித்திருக்கிறார் . காதலனுடன் ஒரு வார்த்தை கூட பேசாத , விழிகளால் மட்டுமே சந்தித்துக்கொள்ளும் கண்ணியக்காதல்  வெளிப்படுத்திய விதம் அழகு . அவரது காதலன் ஆக கலையரசன் கச்சிதம் . பாந்தமாந நடிப்பு 


 நாயகன் மையல் கொள்ளும் பூங்கொடி டீச்சர் ஆக நிகிலா விமல்  அட்டகாசமான நடிப்பு , அடக்கமான அழகு . நாயகனின்  அம்மாவாக ஜானகி உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார் . புரோக்கர் ஆக வரும் பத்மன் , வியாபாரியாக வரும்  சதிஷ் குமார் ஆகிய இருவரும் வில்லன் ரோலை சரியாகக்கையாண்டிருக்கிறார்கள் 


ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வர் . அழகான கிராமத்தை 2 மணி  நேரம் உலா வந்ததைப்போன்ற ஒரு  திருப்தி அவரது படப்பிடிபில் .சந்தோஷ் நாராயணன் இசையில்  நான்கு  பாடல்கள் .அனைத்தும் அருமை . பின்னணி இசையிலும்  முத்திரை பதித்திருக்கிறார் . சூர்யா பரந்தாமன் எடிட்டிங்கில்  2 மணி நேரம் படம் ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்

1   நாயகன் டீச்சரின் கர்ச்சீப்பை எடுத்து வைத்துக்கொண்டு அதை தன அக்காவின் கர்ச்சீப்  என சொல்வதும்  அதை நிருபிக்க  சாட்சியாய் நண்பனை துணைக்கு அழைப்பதும்  அந்த க்ளாஸ் ரூம் காட்சி கவிதை

2  நாயகன் தான் செய்த தப்புக்கு அம்மாவிடம் மன்னிப்புக்கேட்கும் உருக்கமான  காட்சியை  இண்டர்வல் பிளாக் சீன்  ஆக  வடிவமைத்த விதம்  

3  நாயகன் , நண்பன்  இருவரையும்  ரஜினி ரசிகன் , கமல் ரசிகன் என  காட்டி  தொடுக்கப்படும் வசனங்கள் 

4   டீச்சர் ஒரு டெய்லர் என்பது தெரிந்ததும் நாயகனின் நண்பன்  நாயகனின் சட்டையை பிளேடால் கிழித்து  டீச்சர் வீ ட்டுக்குப்போக ஐடியா கொடுக்கும் இடம் கலக்கல் ரகம் 

5  நாயகன்  டீச்சருக்கு மருதாணி இலைகள் தருவது , மயிலிறகு தருவது எல்லாம் கவிதை காட்சிகள் . நாஸ்டாலஜி மொமெண்ட் 

6 உண்மை சம்பவம் என சொல்லப்படும் கடைசி 20 நிமிட காட்சிகள்  உருக்கம் 


  ரசித்த  வசனங்கள் 

1    நம்ம உரிமையை  கேட்கும்போது அதை பிச்சைனு பேச எங்கே  கத்துக்கிட்டே?

2  ஏழைப்பட்டவங்ககிட்டே  மீசையை முறுக்கறதும் , கீழ்மைப்பட்டவங்க கிட்டே வரலாறு பேசுறதும்  வீரம் இல்லை .எவன் ஒருத்தன் நான் தான் ராஜா  நான் தான் மந்திரினு பேசறானோ அவனை அடிச்சு வீழ்த்துவதுதான் வீரம் 

3 ஒரு நல்ல முதலாளி நல்ல வேலைக்காரனை இழந்துடக்கூடாதில்லை? வரச்சொல்லு , பேசிக்கலாம் 

4  நான்     எல்லாம் கமல் ரசிகன் நடிப்பு சொல்லிக்கொடுக்கணுமா? எத்தனை     அவார்டு நடிப்பை அள்ளி வீசி இருக்கோம் ?

5   நம்ம ஊர்ல ரஜினி படம் தான் ஓடுது , எங்கே கமல் படம் ஓடுது ? 

6    யாரை நம்பினாலும் இந்த சாமியை மட்டும் நம்பக்கூடாது , எத்தனை முறை வேண்டி இருப்பேன் ? கண்டுக்கவே இல்லையே? 

7 நான் இல்லாத ஊருல என் மகன் வாழணும்னா அவனுக்கு உழைக்கத்தெரியனும், இல்லைன்னா  இந்த ஊரு அவனை அடிச்சு சாப்பிட்டுடும் 

8 டீச்சர் , இன்னைக்கு நீங்க ரொம்பா அழகா இருக்கீங்க 

அப்போ இதுக்கு முன்னால நான் அழகா இல்லையா? என்னடா சொல்றே? 

அதில்லை .அப்போ என் அம்மா மாதிரி இருந்தீங்க , இப்போ அக்கா மாதிரி இருக்கீங்க 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பூங்கொடி  என்ற முதல் வரியில் தொடங்கும் பாடல் கேட்கிறான் நாயகன் . அதற்கு நண்பன் கூறும் பாடலில் முதல் வார்த்தையாய் பூங்கொடி வரவில்லை . இயக்குனர் மிஸ் செய்த பாடல்   பூ மழை பொழியுது  படத்தில் வரும்  ஏய் பூங்கொடி ..பாட்டை  உபயோகித்திருக்கலாம், . ஆனால் கதை நடக்கும் கால கட்டம் பழையது என்பதால் விட்டிருக்கலாம் 

2   நம்ம   ஸ்கூலில் ரொம்ப நாட்களுக்குப்பின் ஆண்டு விழா வருதுன்னு ஒரு டயலாக் வருது , ஆண்டு விழா என்பது வருடம் ஒரு முறை தானே வரும் ?  அல்லது நீண்ட இடைவெளிக்குப்பின்  அல்லது பல ஆண்டுகளுக்குப்பின்   என்பதுதானே சரி ? 

3  நாயகனின் அம்மா  கடனை அடைக்க மாட்டை விற்கும்போது நாயகன் கதறுவதாக ஒரு சீன் . அந்த சீன்  ஆடியன்ஸின் மனதைத்தைக்க  இதற்கு முன்பே  ஒரு காட்சியில் நாயகனுக்கும், மாட்டுக்கும் ஆன பாண்டிங்  பற்றிக்காட்டி இருக்க வேண்டும் 

4  புரோக்கரிடம் வாங்கிய கடனுக்காக நாயகனின் அம்மா மாட்டை விற்பது போல் ஒரு காட்சி., அடுத்த காட்சியிலேயே  உடல் நிலை சரி இல்லாத அம்மா  தனக்குப்பதிலாக  வேலைக்குப்போக  மகனை அனுப்புகிறாள் . போக மறுக்கும் மகனிடம் அக்கா சொல்கிறாள் . அம்மா புரோக்கரிடம் வாங்கிய  கடனுக்கு ஒண்ணா  கடனை அடைக்கணும் . அல்லது அவளுக்கு மாற்றாக மகன் வேலைக்குப் போகணும் . அப்போ மாட்டை விற்ற  காசு என்ன ஆச்சு ? 


5  ஒவ்வொரு முறை வேலைக்குப்போகும்போதும்  பழைய சோறு  டிபன்  பாக்சில போடுவது போல  பல காட்சிகள்  வருது . சுடு சோறு  ஒரு டைம் கூட இல்லை , அது எதனால் . ? அவ்ளோ சோறு மிச்சம் ஆகும் அளவு முன் தினமே  வடிக்கணுமா? அடுத்த  நாள் சுடு சோறாக  வடிக்கலாமே? 

6   நாயகன் காலையில் சாப்பிடவில்லை .அம்மா காலை , மதியம்  இருவேளைகளுக்கும்  இரண்டு  தூக்கு போசி களில் அவனுக்கு சோறு கொடுத்து விடுகிறாள்  லாரியில்  ஏறிய  அவன் பிறகு போகாமல் ஸ்கூலுக்குப்போகிறான் . அப்போது அக்கா அவனிடம் அவனது இரு தூக்குப்போசிகளையும் கொடுக்க வேண்டாமா? வெறும் கையுடன் போகிறான் 

7  நாயகன்  படிப்பது மாணவர்களுக்கான பள்ளி . அதன் ஆண்டு விழாவில் ஆட சோலோ ஹீரோ சாங்க் தானே செலக்ட் பண்ணனும் ? பஞசு மி ட்டாய்  சேலை கட்டி  பாட்டு டூயட் சாங் .மேட்ச் ஆகாதே?  டீச்சர் ஆடிக்காட்டும்   டான்ஸ் ஸ்டெப்ஸ்  கூட பெண் ஆடுவது  போல தான் இருக்கு 


8 மிக வறுமையில்  வாடும்  நாயகனின் வீட்டில்  மண் பானைகள் தானே இருக்கணும் ? ஆர்ட் டைரக்டர் அல்லது புரொடக்சன் டிசைன்  கவனக்குறைவால்   புத்தம் புதிய எவர் சில்வர்  அண்டாக்கள் 3 , ஒரு எவர்சில்வர் குடம் ,  அடுக்கி வைக்கப்பட்டிருக்கு .ஒரு சீனில் நாயகனை அடிக்க அம்மா புத்தம்புதிய பிளாஸ்டிக்  குடத்தை எடுக்கிறாள் 


9 ஒரு பணக்காரன் அல்லது மிடில் கிளாஸ் ஆள் சாப்பாட்டை கோபத்தில் / துக்கத்தில் வீசலாம் , ஆனால் ஏழைக்குடும்பத்தில்   உணவு அன்ன லட்சுமி . எறிய மாட்டார்கள் .க்ளைமாக்சில் அம்மா சாப்பாட்டு தட்டத்தை  எறிவது,சோற்றை இறைப்பது  செயற்கை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -கிளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அழகி , ஆட்டோ கிராப் மாதிரி மனதில் நீண்ட நாட்களுக்கு தங்கி இருக்கும் கவிதையான படம் . க்ளைமாக்ஸ் மட்டும் பருத்தி வீரன் போல தாக்கத்தை உண்டு பண்ணும் . கனத்த மனதுடன் வெளி வர வேண்டி இருக்கும் . எதிர்பார்க்கப்படும்   ஆனந்த விகடன் மார்க் = 50 . குமுதம் = நன்று . அட்ரா சக்க ரேட்டிங்க்  4 / 5 


வாழை
Vaazhai
சுவரொட்டி
இயக்கம்மாரி செல்வராஜ்
தயாரிப்புசாஜித் சிவானந்தன்
திவ்யாமாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்
திலீப் சுப்பராயன்
கதைமாரி செல்வராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புபொன்வேல் எம்
இராகுல். ஆர்
கலையரசன்
நிகிலா விமல்
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புசூரியா பிராத்தமன்
கலையகம்ஹாட் ஸ்டார்
நவ்வி புகைப்பட நிறுவனம்
திலீப் சுப்பராயன்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடு23 ஆகத்து 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, August 22, 2024

NUNAKKUZHI (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி டிராமா)

   


  டிடெக்டிவ் (2007)  என்ற முதல் படத்திலேயே தன்  முத்திரையைப்பதித்தாலும்  மம்மி அண்ட் மீ (2010)  மை  பாஸ் ( 2012) , மெமரிஸ் ( 2013)  ஆகிய மூன்று படங்களையும் ஹிட் ஆக்கி இருந்தாலும்  எ  ஜீத்து ஜோசப் பிலிம் என டைட்டில் ல  பேர் வரும்போது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவு மார்க்கெட்  வந்தது த்ரிஷ்யம் (2013)  படத்தின் பிரம்மாண்டவெற்றிக்குப்பின் தான் . இந்தியாவிலேயே அதிக மொழிகளில்  ரீ  மேக் ஆன முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது 


முதல் பாகத்தைப்போல அதிரி புதிரி  ஹிட் இல்லை என்றாலும் த்ரிஷ்யம் 2 வும் ஒரு ஹிட் படம் தான் . சமீபத்தில்  ரிலீஸ் ஆன நேரு , லெவல் கிராஸ் இரண்டும்  ஹிட் தான் . 

மின்னல் முரளி என செம ஹிட் படம் இயக்கிய இயக்குனர்  என்ற அடையாளம் இருந்தாலும்  ஜெயஜெய ஜெய ஹே  , பால்தூ  ஜான்வர் , குருவாவூர்  அம்பல   நடையில்   ஆகிய காமெடிபபடங்களின் நாயகன் என்ற அடையாளம் தான்  ரசிகர்கள்      மனதில் அதிகம் தங்கி இருக்கும் .பசீல்  ஜோசப் .அப்பாவித்தனமான முகம் , இடக்கு மடக்குக்காமெடி என கே பாக்யராஜை நினைவுபடுத்தும்  கதாநாயகன் 

க்ரைம் டிராமா ஸ்பெஷலிஸ்ட்  ஜீத்து ஜோசப்   + காமெடி நாயகன் பசீல்  ஜோசப்  இந்த காம்போ படம்    எப்படி இருக்கும்?  காமெடி டிராமா  க்ரைம் கலந்து கலக்கல் காமெடி  ஆக வந்துள்ளது .  மோகன் லாலின் சொந்தப் படம் இது .மினிமம் பட்ஜெட்டில் உருவான இப்படம்  ரிலீஸ் ஆன  முதல்  வாரத்திலேயே 15 கோடி வசூல் செய்துள்ளது                 


ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1 - நாயகன் மிகப்பெரும் தொழில் அதிபர் . தன அப்பாவுக்குப்பின் தான் தான் அந்தக்கம்பெனி  எம் டி என்றாலும் அவருக்கு தொழில் ஆர்வம் இல்லை .சமீபத்தில் தான் திருமணம் ஆகி உள்ளது . தன  மனைவி உடன்  தான்  நெருக்கமாக இருப்பதை  தன பர்சனல் லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருக்கிறார் . அந்தக்காட்சியை  கம்பெனியில் இருக்கும்போது கண்டு மகிழ்ந்து கொண்டு இருக்கும்போது   இன்கம்டாக்ஸ்  ரெய்டு வருகிறது .எவ்வளவோ  விளக்கம் சொல்லியும்  கேட்காமல் வந்தவர்கள்  அந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து கொண்டு போகிறார்கள். . நாயகனின் மனைவி  அந்த லேப்டாப்பை யாரும் பார்க்கும்  முன்   கைப்பற்றிக்கொண்டு வர வேண்டும்  இல்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன்  என மிரட்டவே  நாயகன் அந்த லேப்டாப்பை அபகரிக்கும் முயற்சியில் இறங்குகிறான் 

 சம்பவம் 2 - நாயகிக்குத்திருமணம்  ஆகிவிட்டது . டைவர்ஸும்  ஆகப்போகிறது . கோர்ட்டில் கேஸ் நடக்கிறது .கேஸ் விசாரணையில் நாயகியின் கணவர் தரப்பு வக்கீல் நாயகியை அவமானப்படுத்துகிறார் . ஒரு பல் டாக்டர்  நாயகிக்கு எதிராக பொய் சாட்சி சொல்கிறார் .இதனால் செம கடுப்பான நாயகி அந்த பல் டாக்டருடன்  வாக்குவாதம் செய்ய அவர்  இடத்துக்குப்போகிறார் .போன இடத்தில் தள்ளு முள்ளு   ஏற்பட்டு அந்த பல் டாக்டரைக்கொலை செய்து   விடுகிறார் .ஆக்சிடெண்டல் டெத் 


சம்பவம் 3 -  பிரபல நடிகரின் மனைவி  அந்த பல் டாக்டரின் கள்ளக்காதலி . அவரைக்காண  அவர் இடத்துக்கு வருகிறார் . அதே சமயம்  நாயகி அங்கே வந்ததால் தன கள்ளக்காதலியை அருகில் இருக்கும் அறையில் ஒளிந்துக்கொள்ள சொல்கிறார் . 


சம்பவம் 4 - பிரபல நடிகருக்குக்கதை சொல்ல  ஒருவர் வருகிறார் .அவர் தான் இன்கம் டாக்ஸ் ஆபீசரின் உறவினர் .நாயகனின் லேப்டாப் அவரிடம் சிக்கி விடுகிறது 


மேலே சொன்ன நான்கு சம்பவங்களை முதல் 30 நிமிடங்களில்  சொன்ன இயக்குனர்  அதற்குப்பின்  நிகழும் காமெடி கலாட்டாக்களை  சிரிக்க சிரிக்க  சொல்லி இருக்கிறார் 



சுந்தர் சி படங்களைப்போல  சிச்சுவேஷன்  காமெடி  உண்டு , கிரேசி மோகன் படங்களைப்போல  வசனக்காமெடியும் உண்டு .எனவே மலையாளம் நன்கு அறிந்தவர்கள் தான் பூரணமாக ரசிக்க முடியும் 


நாயகன் ஆக .பசீல்  ஜோசப் அதகளம் பண்ணி இருக்கிறார் . நாயகி கலந்து வைத்த விஷத்தைக்குடித்து விட்டு இவர் படும் பாடு செம காமெடி . லேப்டாப்  விஷயத்தை அம்மாவிடம் சொல்லமுடியாமல்   சிரமப்படுவது  சிரிக்க வைக்கிறது . போலீஸ் ஆ பிசரிடம்  வாக்குவாதம் செய்வது அதகளம் 


 நாயகி  ஆக  கிரேசி  ஆண்ட்டனி  காமெடிக்கலக்கல் நடிப்பு . என்னைக் குடிகாரினு சொல்லிட்டியே  என புலம்புவதும்  விஷம்  குடிதத நாயகனை ஹாஸ்பிடலில்  சேர்க்கும்போது நடக்கும் களேபரங்களிலும்   சிரிக்க வைக்கிறார் 


இன்ஸ்பெக்ட்டர் ஆக வரும் பைஜு சாந்தோஸ் + கான்ஸடபிள் ஆக வரும்  அஜீஸ் மாங்காடு கூட்டணி கலக்கள் காமெடி .பேசும்  வசனங்கள் செம சிரிப்பு 


இவர்கள் போக மனோஜ் கே ஜெயன் , சித்திக் , அஜு வர்கிஸ் ,நிகிலா விமல் என அனைவரும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை  செய்திருக்கிறார்கள் 


விஷ்ணு ஷியாமின் பின்னணி இசை அருமை . ஜெ உண்ணிதின்  இசையில்  இரண்டு பாடல்கள் ஓகே ரகம் விநாயக்கின் எடிட்டிங்க் அட்டகாசம் . ஒரு  காட்சி கூட குழப்பம் இல்லை கே ஆர் கிருஸ்ணகுமாரின்  திரைக்கதை அபாரம் . சீரியஸ் ஆன க்ரைம் கதையை காமெடியாக சொன்ன விதத்தில்  இயக்குனர்  ஜெயித்து இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்

1  நான்கு  வெவ்வேறு  டிராக்குகளை குழப்பம் இல்லாமல்   ஒரே  நேர்கோட்டில் இணைத்துக்கதை சொன்ன விதம் 


2   எல்லாப்பாத்திரங்களும் சீரியசாகப்பேசிக்கொண்டு இருப்பார்கள் , ஆனால் பார்க்கும் நமக்கு சிரிப்பு வரும் . இது போல காட்சி அமைப்பது சிரமம் 


3   சீரியஸ் ஆக க்ரைம் கதை சொல்லிக்கொண்டே அதில் காமெடியைக்கலக்கும்போது மெயின் கதையின் சாராம்சம் , அதன் சீரியஸ்னஸ்  பாதிக்கும் . ஆனால் என்ன ஒரு மேஜிக் ? அப்படி எதுவும் நிகழவில்லை 


  ரசித்த  வசனங்கள் 


1  இந்தகேசில் இருந்து உன்னைக்காப்பாத்திடறேன் , எனக்கு ஒரு 10 லட்சம்  தந்துடு 


 தந்துட்டாப்போச்சு 


 அடடா .இப்படின்னு தெரிஞ்சிருந்தா  ஒரு 15 லட்சம் கேட்டு இருக்கலாம் போலயே 



2   டியர் , ஒரு கேஸ் மாட்டி இருக்கு .10 லட்சம் வருமானம் வரப்போகுது 


 20 லட்சம் ஆக்க முடியுமா பாருங்க 



3  மேடம் ,வசதி  ஆன குடும்பமா  இருக்கீங்க .நல்ல சரக்கா அடிக்கலாமில்ல ? 


4   டாக் டர்  சார் , என் புருஷன்  தெரியாம விஷம் குடிச்சுட்டார் 


 புருஷனுக்குத்தெரியாம விஷம் கொடுத்துட்டீ ங்க்ளோ  என்னவோ ? 


5   அய்யய்யோ , போலீஸ்  வருது .எதுவுமே தெரியாதது போல நடிக்கணும் 


 ஓகே  ஆனா நீங்க நடிக்க வேணாம்  .சொதப்பிடுவீங்க . சும்மா இருங்க .போதும் 


6   எங்கே இந்தப்பக்கம் ? 


 இப்பப்பாரு என் ஆக்டிங்கை .. இன்ஸ்பெக்டர் , நாங்க யாரையும்  கொல்லலை ,சும்மா  இங்கே வந்தோம் 


 ஓஹோ , நான்  அதைக்கேட்கலை யே?  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  மனைவியை விட்டுப்பிரிந்து இருக்கவில்லை  ஒன்றாகத்தான் இருக்கிறார் . பின் எதற்கு  லேப்டாப்பில் அதைப்பார்க்க ஆசைப்படுகிறார் ? கனி இருக்கக்காய் கவர்ந்தற்று , நிஜம் இருக்க நிழல் எதற்கு ? 

2  நாயகனின் மனைவிக்கு நாயகன் லேப்டாப்பில் பதிவு செய்வது பிடிக்கவில்லை .அது தெரிந்தும் நாயகன் எதனால் தன மனைவியிடம் அந்த சம்பவத்தை  சொல்ல வேண்டும் ? ஆண்களின் குணமே  , மனைவிக்குப்பிடிக்காத காரியத்தை தான் செய்தால்   அதை  மறைப்பதுதானே? 

3   தொழில் அதிபர் ஆன நாயகனிடம் 10 லட்சம் ரூபாய்க்கு டீல் பேசும் இன்ஸ் பெகடர்  பிரபல ஹீரோவிடம்  டீல் பேசாதது என்? 

4   ஒரு ஹையர் ஆபிசரிடம் சாதா போலீஸ் கான்ஸடபிள்  தோளில் கை  போட்டு பேசுவாரா?  

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் , காமெடி பிரியர்கள் இரு தரப்பினரையும் கவரும் படம் , ரேட்டிங் க் - 3. 25 / 5 .மலையாளத்தில் நுண என்றால் பொய் என்று அர்த்தம் . டைட்டிலான நுணக்குழி  என்பதற்கு பொய்க்குழி  என்று அர்த்தம் 


Nunakkuzhi
Theatrical release poster
Directed by
Written byK. R. Krishna Kumar
Produced bySaregama
Starring
Edited byVinayak V.S
Music by
  • Songs:
  • Jay Unnithan
  • Vishnu Shyam
  • Background Score:
  • Vishnu Shyam
Production
company
Distributed byAashirvad Cinemas
Release date
  • 15 August 2024 (India)
CountryIndia
LanguageMalayalam
Box office 12.55 crore[1]

Wednesday, August 21, 2024

LITTLE HEARTS (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

   


     7/6/2024 முதல் திரை அரங்குகளில்  வெளியாகி மீடியம் ஹிட் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம்  ஓடிடி யில் காணக்கிடைக்கிறது மூன்று வேவ்வேறு ஜோடிகளின் காதல் கதை தான் இப்படம் . சில நாடுகளில் இப்படத்துக்கு   தடை விதிக்கப்பட்டது .கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிரான படம் என்று சொல்லப்பட்டது படம் வெளியான போது படத்தின் நாயகன் ஆன ஷேன் நிகாம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பாகப்பேசப்பட்டு பின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்               


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும் அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்கள் .குடும்ப நண்பர்கள் நாயகனுக்கு அம்மா இல்லை . அப்பா மட்டும் தான் .அப்பா ஒரு இன்ஸடாகிராம் பைத்தியம் . எப்போப்பாரு அதில் போஸ்ட் போட்டுக்கொண்டு எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ் வருது என கணக்குப் போடுபவர் . அவருக்கு திருமணம் ஆன ஒரு  பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது .அந்தப்பெண்ணுக்கு ஒரு மகள் உண்டு . அந்த மகளுக்கு இவர்கள் பழக்கம் பிடிக்கவில்லை .அந்த பெண்ணின்  கணவன்  எங்கேயோ ஓடிப்போய்விட்டான் . நாயகனின் அப்பா - அந்தப்பெண் இருவருக்குமான காதல் ,சந்திப்புகள் என ஆரம்பத்தில் காமெடி , கலாட்டாக்களோடு படம் களை  கட்டுகிறது 



நாயகி நாயகனை  விரும்புகிறாள் . அதை நாயகனிடம் வெளிப்படுத்தும்போது நாயகன் பயப்படுகிறான் . உன் அப்பாவும் , என் அப்பாவும் பேமிலி  பிரண்ட்ஸ் . நம் காதல் விஷயம் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என மறுக்கிறான் . ஆனால் நாயகி தன்  முடிவில்  உறுதியாக இருக்கவே நாயகன்  வேறு வழி இல்லாமல் காதலுக்கு ஓகே சொல்கிறான் .நாயகி , நாயகனைத்துரத்தி துரத்தி  காதலிப்பது முதல் பாதி திரைக்கதையில் காமெடியாக சொல்லப்பட்டு இருக்கிறது 


நாயகியின் அண்ணன்  ஒரு நபரைக்காதலிக்கிறான் . அந்த விஷயத்தை  தன பெற்றோரிடம் சொல்லி சம்மதம்  பெற்றுத்தரவேண்டும் என நாயகனிடம் கேட்டுக்கொள்கிறான் . சரி என்று சொன்ன நாயகன் 

நாயகியின் அண்ணன்   காதலிப்பதாகக் காட்டிய  நபரைக்கண்டு  அதிர்ச்சி அடைகிறான் 



 இந்த மூன்று காதல்களும் நிறைவேறியதா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  ஷேன் நிகாம்  கலகலப்பாக நடித்திருக்கிறார் . கேரளாவில் இவருக்கு ரசிகைகள் அதிகம் , நம்ம ஊரு சித்தார்த் போல  முகச்சாயல் 


 நாயகி ஆக மஹிமா நம்பியார் கண்ணியமான  அழகுடன் வந்து போகிறார் . 


நாயகனின் அப்பாவாக  பாபுராஜ் .காமெடி நடிப்பு  இயல்பாக வருகிறது . இவர் ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டரும் கூட 


இவருக்கு ஜோடியாக ரம்யா  சுவி  அமர்க்கள மாக நடித்திருக்கிறார் ., ஆனால் டூயட் எல்லாம்  இல்லை . மொத்தப்படத்திலும்  இந்த ஜோடி தான் நம் கவனத்தை ஈர்க்கிறது 


நாயகியின் அண்ணன் ஆக  ஷைன் டாம் சாக்கோ .பல படங்களில்  வில்லனாக கலக்கியவர் இதில் அடக்கி வாசித்து இருக்கிறார் . இவர் காதலிக்கும்  நபர்  ஆக வருபவர் பரவயில்லை ரகம் 


 ஜாபர்  இடுக்கி ஒரு  சிறிய ரோலில் வந்தாலும் பிரமாதாதப்படுத்தி இருக்கிறார் 


ரோஸி செபாஸ்டின்  நடிப்பு குட் இவர் பேசிக்கலி ஒரு டான்சர் 



கைலாஷ் மேனன் இசையில் 6 பாடல்கள் , அவற்றில் 4  குட் . லுக் ஜோஸ் தான் ஒளிப்பதிவு .குளுமையான படப்பிடிப்பு , நாயகிகளுக்கான க்ளோசப் ஷாட்களில் முத்திரை பதிக்கிறது கேமரா . 


 நோட்டல் அப்துல்லாவின்  எடிட்டிங் கச்சிதம் 134 நிமிடங்கள் படம் ஓடுகிறது 


கதை + இயக்கம் = ஆண்ட்டோ  ஜோஸ் ப்ரேரியா + அபி   ட்ரிசா பால் 


திரைக்கதை வசனம் ராஜேஷ் பின்நாடன் 



சபாஷ்  டைரக்டர்

1  லவ் ஸ்டோரியாக  இருந்தாலும் குடும்பத்துடன் கலகலப்பாக ரசிக்கும்படி காட்சிகளை அமைத்த விதம் 


2  நாயகன் - நாயகி காதல் கதையை விட நாயகனின் அப்பா - அந்தப்பெண் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன விதம் 


3  நாயகியின் அப்பாவாக வரும் ரஞ்சி பணிக்கரின் இயல்பான நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு மொத்தம் 3 பிரச்சனைகள் இருக்கு 


 முதல் பிரச்சனை என்ன?என எனக்குத்தெரியும் .இரண்டாவது பிரச்சனை என்ன? 


இரண்டாவது பிரச்சனை என்ன?   என்பதை   வெளில சொல்ல முடியாது என்பதுதான் மூன்றாவது பிரச்சனை 


2   உலகில் பெரிய கொடூரம் எது தெரியுமா?தனிமையில் இருக்கும் ஒருவனுக்கு ஜோடி செட் ஆன பின்பு மீண்டும் அவன் தனியன் ஆவது 


3  உங்களுக்கு வயசு எவ்ளோ? 


56 


இன்சூரன்ஸ்  எடுத்தாச்சா? 


இன்னும் இல்லை 


 எடுத்துடுங்க , யூஸ் ஆகும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1  நாயகனின் அப்பாவின் காதலி யின் மகள் டீன் ஏஜ் பெண் .அவளுக்கு இவர்களது  பழக்கம் பிடிக்கவில்லை .ஆரம்பத்தில் இருந்து வெறுக்கிறாள் . அவளது  வெறுப்பு ஓவர் டோஸ் அம்மாவின் நிழலில் வாழ்பவர்  அம்மா வை அவ்ளோ எதிர்ப்பது எதனால் ? திடீர் என அவர் மனம் மாறி அம்மாவின் காதலை ஏற்பதும்  நம்ப முடியவில்லை 

2 நாயகனின் அப்பாவின் காதலி யின்  கணவன் திடீர் என  என்ட்ரி கொடுக்கும்போது   பெரிதாக எதோ நடக்கப்போவதாக நினைத்தால்  ஏமாற்றம் .அவர்   கேரக்டர்  நம்பகத்தன்மை இல்லை  

3   காமெடியாகப்போகும் முதல் பாதி திரைக்கதைக்கு சம்பந்தம் இல்லாமல் திடீர் என பின் பாதி திரைக்கதை  சீரியஸ் மோடுக்குப்போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரி ஆன ரொமாண்டிக் காமெடி டிராமா . டைம் பாஸ் கேட்டகிரி . ரேட்டிங்  2. 5 / 5 


Little Hearts
Directed byAnto Jose Pereira
Aby Treesa Paul
Written byRajesh Pinnadan
Story byAnto Jose Pereira
Aby Treesa Paul
Produced bySandra Thomas
Wilson Thomas
StarringShane Nigam
Mahima Nambiar
Baburaj
Aima Rosmy Sebastian
Shine Tom Chacko
Shammi Thilakan
CinematographyLuke Jose
Edited byNoufal Abdullah
Music byKailas Menon
Production
company
Distributed byMillion Dreams
Release date
  • 7 June 2024
Running time
134 minutes
CountryIndia
LanguageMalayalam