Friday, May 08, 2026

செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் (2026)-கன்னடம்/தமிழ் -சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்)@அமேசான் பிரைம்

 


20/2/2026 முதல் திரை அரங்கு களில் வெளியாகி ஹிட் ஆன இந்தப்படம் இப்போது தமிழ் டப்பிங் கில்  அமேசான் பிரைம் தளத்தில் 17/4/2026 முதல் காணக்கிடைக்கிறது.


இந்தப்படம் 2021 ல் வெளியாகி மெகா ஹிட் ஆன சீதாராம் பெனாய் கேஸ் நெம்பர் 18  படத்தின் இரண்டாம் பாகம்.முதல் பாகம் பார்க்காதவர்களும் இரண்டாம் பாகத்தைப்பார்க்கலாம்.இரண்டும் வேறு வேறு கதைகள்.நாயகன் ஒருவர் தான்.இரு படத்திலும் வெவ்வேறு கதைக்களம்.வேறு வேறு கேஸ்.

ஸ்பாய்லர் அலெர்ட் 



நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.அவர் பணி ஆற்றும் போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் ஏரியாவில் தொடர்ந்து அடுத்தடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன.

போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் சொல்லும் விஷயம் கொலைகாரன் மனநிலை தவறியவனாக இருக்கலாம்.கம்பி வேலி அமைக்கும் கம்பியால் கை,கால்களைக்கட்டி  கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்து இருக்கிறான்


கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள்.அவர்கள் அனைவருக்கும்  ஒரு வயதுக்கு வந்த மகள் இருக்கிறாள்.பாட்டு கிளாஸ்க்கு ட்யூஷன் போகிறாள்.இவை தான் கிடைத்த க்ளூ.

கிடைத்த க்ளூக்களை வைத்து நாயகன் எப்படி கொலைகாரனைக்கண்டு பிடிக்கிறான் என்பது தான் மீதிக்கதை.

பொதுவாக இந்த மாதிரி கதைக்களன்களை  இரு விதமாகப்பிரித்து விடலாம்.
1 கொலைகாரன் யார் என்பது கடைசி வரை ஆடியன்சுக்குத்தெரியாது.க்ளைமாக்சில் தான் ட்விஸ்ட் வைத்து கொலைகாரன் யார் என்பதைக்காட்டுவார்கள்.பார்ப்பவர்கள் திகைத்துப்போவார்கள்.இவனா கொலைகாரன்?நம்பவே முடியவில்லையே?என பிரமிப்பார்கள்.இந்த வகை திரைக்கதைக்கு உதாரணம். நூறாவது நாள்  படம்

2 கொலைகாரன் யார் என்பதை ஓப்பனிங்க் சீனிலேயே ஆடியன்சுக்கு சொல்லி விடுவார்கள்.ஆனால் படத்தின் நாயகனுக்குக் க்ளைமாக்ஸ் வரை அது தெரியாது.நாயகன் எப்படிக்கொலைகாரனைக்கண்டுபிடிக்கிறான்?என்பதை சுவராஸ்யமாக சொல்லி இருப்பார்கள்.இந்த வகைத்திரைக்கதைக்கு உதாரணம் ராட்சசன்.

இந்தப்படத்தில் வித்தியாசமாக ஆடியன்சை திசை திருப்பும்படி முதலில் ஒருவனைக்கொலை காரன் எனக்காட்டி அவன் இல்லை, என வேறு ஒருவனைக்காட்டி க்ளைமாக்சில் மூன்றாவதாக நிஜக்கொலைகாரனைக்காட்டுகிறார்கள்.

நாயகன் ஆக  விஜய் ராகவேந்திரா போலீஸ் ஆபீசர் ஆக நடித்திருக்கிறார்.இது தாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் முக சாயல் இருக்கிறது.ஓவர் ஆக்டிங்க் இல்லாமல் அளவாக ,அழகாக நடித்திருக்கிறார்.

அவர் போக கோபாலகிருஷ்ண தாஸ்,உஷா பண்டாரி மற்றும் பலர் அவரவர்க்குக்கொடுத்த ரோலை சரியாக செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும் ,பின்னணி இசையும் படத்துக்கு முக்கிய பலம்.பல இடங்களில் பி ஜி எம் மிரட்டி இருக்கிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் தேவி பிரசாத் ஷெட்டி
ரன்னிங்க் டைம் 128 நிமிடங்கள்.


சபாஷ் டைரக்டர்

1. நாயகன் தேடிக்கொண்டிருக்கும் வில்லன் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து ஒரு புகார் கொடுப்பது ,நாயகனை உளவு பார்ப்பது,நாயகனின் துப்பாக்கியைத்திருடி செல்வது என ஓப்பனிங்கில் இருந்தே பரபரப்பான காட்சிகள் அமர்க்களம்.

2. இரண்டாவதாக வரும் வில்லன் தன் காதலியுடன் இருந்ததைப்பார்த்து விட்ட ஒரு ஆளிடம் ஊரில் இந்த விஷயத்தைப்பரப்ப வேண்டாம் எனக்கெஞ்சுவதும் ,அவன்  ஒரு மார்க்கமாகபார்ப்பதும் அடுத்து என்ன நடக்குமோ? என திகிலூட்டும் அம்சங்கள் அருமை.

3 க்ளைமாக்சில் நிஜமான வில்லனுக்கான  பின்னணிக்கதை ,அவனை நாயகன் சுற்றி வளைப்பது. என விறுவிறுப்பான காட்சி அமைப்புகள்

ரசித்த வசனங்கள்

1 ஒவ்வொரு வெளிச்சத்துக்கு முன்னாடி இருட்டு காத்துக்கிட்டு இருக்கும்,அது வெளிச்சத்தைத்துரத்திக்கிட்டே இருக்கும்

2. ஆண்ட்டி சோசியல் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் -இதனால் பாதிக்கப்பட்டவன்  தான் நாம் தேடிட்டிக்கிட்டு இருக்கும் நபர்.

3 சைக்கோ கில்லருக்குக்கொலை பண்றது ஒரு அடிக்சன்

4 ஒரு அப்பா தன் பொண்ணுக்குக்கொடுக்கும் பாசம் போல் வேறு யாரால் தர முடியும் ?

5. சில கேஸ் போலீசைத்தேடி வரும்.சில கேஸ் போலீசை விடாம துரத்தும்.

6 அம்மாவே என்னை சந்தேகப்பட்டது ,அப்படிப்பேசுனது எனக்குக்காயத்தில் மீண்டும் சூடு வெச்சது மாதிரி இருந்தது.

7 வீட்டில் நிம்மதி இருக்கனும்னா சம்சாரம்  சரியா இருக்கனும்



லாஜிக் மிஸ்டேக்ஸ்
1.  வில்லனால் சுடப்பட்டு குண்டடிபட்டு சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் போக இருக்கும் நாயகன் ஆட்டோ வில் போவதும் ,கொலைகாரன் போலீஸ் ஜீப்பில் போவதும் நம்ப முடியவில்லை.முறைப்படி போலீஸ் ஆபீசர் தானே ஜீப்பில் போகனும்?கொலைகாரனை ஒரு ஆட்டோவில் இரு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி இருக்கலாமே?

2.  வில்லன் ஒரு கட்டத்தில் என்னை என் அம்மாவே சந்தேகப்பட்டுட்டா.தங்கச்சிட்ட பேசினேன்.சரிப்பட்டு வர்லை என வசனமாக சொல்கிறான்.ஆனால் விஷூவலாகக்காட்டும்போது அவன் தங்கையுடன் பேசவே இல்லை.

3  முதல் பாதியில் வரும் வில்லன் அவனாகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு  வந்து அவனுடைய வீட்டு அட்ரஸ் கொடுப்பது எதற்கு?பின் வீட்டுக்கு வந்த நாயகனை துப்பாக்கியால் சுட்டு நீ இங்கே வந்திருக்கவே கூடாது என்பது எதுக்கு? அட்ரஸ் கொடுத்ததால் தானே வந்தான் ?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+

சி பி எஸ் பைனல் கமெண்ட் - முதல் பாகம் அளவு சூப்பர் படம் இல்லை.அதே போல் சுமாரான படமும் இல்லை.பார்க்கலாம்.ரேட்டிங்க். 2.5/5