Showing posts with label education system. Show all posts
Showing posts with label education system. Show all posts

Saturday, November 03, 2012

இந்தியாவின் கல்வியை மாற்றக்கூடிய 11 விஷயங்கள்


இந்தியாவின் கல்வியை மாற்றக்கூடிய பதினோரு விஷயங்கள்


அரிந்தம் சவுத்ரி, பிரதம ஆசிரியர் |
இந்தியாவின்  எதிர்காலம் இந்நாட்டின் கல்வியின் எதிர் காலத்தைப் பொருத்து அமையும்  என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன். நமது இந்திய இளைஞர்களின் தொகை குறித்துப் பெருமைப்படுகிறோம். ஆனால் நமது கல்வி அமைப்பால் இந்தப் பெருமை கானல்நீராகவே தொடரும். நீதித்துறையில் தாமதங்களைக் களைவது, சுகாதாரத்தில் அதிகபட்ச முதலீடு ஆகியவற்றோடு கல்வியிலும் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியம். அதுதான் நமது இளைஞர்கள் தொகையிலிருந்து நல்ல பலன்களை அடைவதற்கு வழிவகுக்கும். நம்மிடம் போதுமான அவகாசம்கூட இல்லை.



60 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி அடிப்படை உரிமை என இந்தியா உணர்ந்து அறிவித்திருக்கிறது. இது ஒன்று மட்டுமே நமது கல்வி அமைப்பை மாற்றிவிடும் என்று நம்பவில்லை. ஆனால் கல்விச் சீர்திருத்தங்களில் இது முக்கிய படிக்கல்லாக இருக்கும். 2001&ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திலிருந்து 14  வயதுக்குக் கீழ் உள்ள எல்லா இந்திய குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வியைப் பெறவேண்டும் என்ற நிலை படிப்படியாக உருவாகியுள்ளது.



 சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளிலும் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கவேண்டும் என்றும் சட்டம் உருவாகியுள்ளது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பள்ளிகள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர் களையும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இன்றுகூட நடுநிலைப் பள்ளி அளவில் மூன்று லட்சம் வகுப்பறை களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. உயர்நிலைப் பள்ளி அளவில் 1.7 லட்சம் வகுப்பறைகள் தேவை. இந்தியாவில் உள்ள பாதி பள்ளிகளில் அடிப்படைக் குடிநீர், சுகாதார வசதிகள் கிடையாது. ஒரு குழந்தை அடிப்படைக் கல்வி முடித்து மேல்நிலைக் கல்விக்குச் செல் வதற்கு இந்த வசதிகள் மிகவும் அவசியம்.



நான் மேற்சொன்ன நடவடிக்கைகள் அனைத்தும் பகுதி அளவு பலன்களையே தரும். சமூகத்தின் ஒரு வகுப்பினருக்கே பயன்படும். இதை சரிசெய்ய கல்வியில் நிலவும் பாலின பாகுபாட்டை சரிசெய்ய வேண்டும். பெண் குழந்தைகள் கல்வியில் பிரம்மாண்டமான முதலீட்டைச் செய்ய வேண்டியது  இரண்டாவது முக்கிய படிக்கல்லாகும்.  உலகளாவிய அளவில் பெண்கள் கல்வி பெறும்போது சமூகப் பொருளாதார வசதிகளை அடையும்போது சமூகத்தில் தீமைகள் குறைகின்றன. நாடுகள் வளம்பெறுகின்றன. மனித வளர்ச்சிக் குறியீட்டில் கேரள மாநிலம் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அங்குள்ள பெண்கள் அதிக கல்வி அறிவைப் பெற்றிருப்பதே.



ஆசிரியர்கள் பற்றாக்குறை முழுமையாக கல்வி அமைப்பை சீர்குலைப்பதாக உள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற தொழில்முறை பயிலகங்கள் மட்டுமின்றி, உயர்கல்வி அமைப்பில்கூட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களுக்கு போதுமான கல்வியைக் கொடுப்பதுதான் மூன்றாவது பெரிய சீர்திருத்த படிக்கல்லாக இருக்கும். இந்தியாவில் ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளது. நமது கல்வி அமைப்பில் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதையே கிளிப்பிள்ளை களைப்போல சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பாடத் திட்டங்கள் முழுவதும் காலத்துக்கு ஒவ்வாதவை. நவீன மாற்றங்கள் மற்றும் போக்குகளைக் கற்பிக்கும் முறைகளில் தொடர்ந்து அனுசரிக்க வேண்டும். இதன் மூலம்தான் வேலைத்திறன் உள்ள பட்டதாரிகளை நம்மால் உருவாக்க முடியும்.



ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் பணித்திறனை மதிப்பிட அரசு வெளிப்படையான நேர்மையான முறை ஒன்றை அமல்செய்யவேண்டும். தற்போது தரம் இல்லாத சோம்பேறி ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவதற்குமான வேலை உத்தரவாதத்தைப் பெற்று ஆண்டுதோறும் சம்பள உயர்வையும் பெற்று நிம்மதியாக இருக்கின்றனர். இந்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பேராசிரியருக்கு எந்த நிலையிலும் தனது வேலை பறிபோகாது என்று தெரியும். இச்சூழ்நிலையில் நேர்மையாக, கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள்தான் பலியாகின்றனர். அவர்கள் சோம்பேறி ஆசிரியர்களின் உழைப்பையும் சேர்த்து கொடுக்க வேண்டியுள்ளது. ஆசிரியரின் பணித்திறனை மாணவர்களும் பெற்றோர்களும் மதிப்பிட ஒரு முறைகூட இல்லையே ஏன்?



அடுத்த ஐந்தாவது படிநிலை முக்கியமானது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டங்கள் போன்ற திட்டங்களில் நாம் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் செலவழிக் கிறோம். இந்தத் திட்டங்களை உறுதியான பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள் கட்ட செலவழிக்கவேண்டும். தற்போது இத்திட்டங்களின் கீழ் நடக்கும் வேலைகள் எதுவும் சமூகத்திற்கு நீண்டகால பலன் தருவதாக இல்லை. இந்தத் திட்டங் களின்கீழ் பணிபுரிபவர்கள் தாங்கள் கட்டும் கட்டடங் களில் தங்கள் குழந்தைகள் படிக்கப்போவதை எண்ணிப் பார்த்தால் கூடுதல் பயனாக உணர்வார்கள்.



அடுத்த படிநிலை பிரம்மாண்டமான சீர்திருத்த மாகும். ஆரம்பக்கல்வி நிலையை ஒரு குழந்தை தாண்டி, அடுத்ததாக கல்லூரிக் கல்வியில் நுழைவதற்கான அடிப்படைப் பயிற்சிக்குச் செல்கிறது. இது ஆறாவது படிநிலை. ஆரம்ப உயர்நிலைப்பள்ளி கல்வியோடு மேல்நிலைக்கல்வியிலும் தரத்தை உருவாக்க வேண்டியது அவசியம். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள நகரங்களிலும் சிற்றூர்களிலும் 14 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் மதிப்பெண்கள் தொடர்பான அழுத்தத்தால் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதிப்பெண் மற்றும் சதவிகித முறையை மாற்றும் திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. கிரேடு முறை மூலம்  தேவையற்ற அழுத்தத்தையும் போட்டிகளால் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் சங்கடங்களும் குறைந்துள்ளன.



இன்று பட்டப்படிப்போ, முதுகலைப் படிப்போ படிக்காவிட்டால் கல்வி முழுமையற்றது என உணரப்படுகிறது. அதனால் உயர்கல்வி அளவில் அதிகபட்ச சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும். சுதந்தரம் பெற்றபோது ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் தரமாக தொடங்கப்பட்டன. தற்போதைய நிலையில் மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கே அந்த நிலையங்கள் சேவை செய்கின்றன. அதனால் உயர் கல்விக்காக நிறைய கல்வி நிலையங்களை உருவாக்கவேண்டும். தேசிய அறிவு ஆணையத்தின் கணக்குப்படி நமக்கு இன்னும் ஆயிரம் பல்கலைக் கழகங்கள் தேவை. 500 பல்கலைக் கழகங்களே உள்ளன.



முந்தைய வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிவிட்டு கல்வியின் முழுமையான தரத்தை அதிகரிக்க தனியார்களை கல்வித்துறைக்குள் அனுமதிப்பது அவசியம். தனியார் துறையினரின் தேசக்கட்டுமான பங்கேற்பை ஊக்குவிப்பது அவசியம். இந்திய தொழில் முனைவோரை உயர்கல்வியில் அதிகம் முதலீடு செய்ய வைப்பது எட்டாவது படிநிலையாகும்.



ஏஐசிடிஇ போன்ற காலாவதியான அமைப்புகள் ஊழலின் பிறப்பிடங்களாக உள்ளன. அவற்றிற்கு எல்லையற்ற அதிகாரமும் தரப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களைக் களைந்து அனைத்தை யும் வெளிப்படையாக மாற்றவேண்டும். இது அடுத்த படிநிலை.  இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் லட்சக் கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதை தற்போதைய அரசு பரிசீலித்துவருகிறது.



கல்விக்கான மானியங்களில் அதிக கவனம் செலுத்துவது 10வது படிநிலையாகும். ஏழைப் பின்னணியுள்ள எத்தனையோ மாணவர்கள் தரமான படிப்புகளில் சேரமுடியாமல் உள்ளனர். அரசுக்கு நல்ல எண்ணங்கள் இருப்பினும் வங்கிகள் அவர்களுக்குக் கடன் தர மறுக்கின்றன. இவர்களுக்கு ஒரு பெரிய தொகை கொண்ட நிதியை அரசு உருவாக்கவேண்டும். மதம், சாதி வித்தியாசம் இல்லாமல் இது உதவுவதாக இருக்கவேண்டும்.



பதினொன்றாவதும் முக்கிய மானதுமான படிநிலை என்னவெனில், நாட்டின் ஜிடிபியில் 1.5 சதவிகிதத்தி லிருந்து கல்விக்கான முதலீட்டை 5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். ஆரம்பக் கல்வியில் அரசு மிகச்சிறந்த பங்கேற்பைச் செய்யமுடியும். ஆரம்பக் கல்வி மற்றும் அடிப்படை ஆரோக்கியத் தில் தனியார் துறையினர் காப்பாற்று வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். 



இந்த பதினோரு வழி முறைகளும் இந்தியா வின் கல்வி நிலையை மாற்று வதற்கு உதவும் என நான் நினைக்கிறேன். ஆனால் இன்னொன்றையும் நான் அறிவேன். எல்லாம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் உலகில் திறந்த மனதுடன் இருக்கவேண்டி யதும் அவசியம். அதுதான் இந்த பதினோரு வழிமுறைகளைவிட முக்கிய மான வழிமுறையாகும்

thanx - The Sunday Indian