Showing posts with label JEYALALITHA. Show all posts
Showing posts with label JEYALALITHA. Show all posts

Sunday, October 28, 2012

கேப்டனை டம்மி ஆக்க மம்மி செய்யும் தகிடுதித்தங்கள்

கோப்புப் படம்:
சட்டசபையில், தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வேண்டும், அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், ஒரு சீட்டை பிடிக்கும்தே.மு.தி.க.,வின் திட்டத்திற்கும்வேட்டு வைக்க வேண்டும்' என்ற, இரண்டு திட்டங்களின் அடிப்படையில் தே.மு.தி.க.,வில் பிளவை ஏற்படுத்தும் வேலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க., மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.




கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, தே.மு.தி.க., 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. கடந்த உள்ளாட்சி தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. எதிர்பார்த்த வெற்றி, அக்கூட்டணிக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து நடந்த, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க., தோல்வி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, மாவட்டவாரியாக நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாக்களில், விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தனர்.



தங்களதுதோழமையால், அதிக எம்.எல்.ஏ.,க்களை பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றதே.மு.தி.க.,வை, தங்களது து@ராகியாக கருதிய அ.தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க., விடம் இருந்து பறிக்கவேண்டும் என, திட்டமிட்டுள்ளது.அதன் விளைவாக, தே.மு.தி.க., வில் அதிருப்தியாக இருக்கும் எம்.எல்.ஏ., க்களை, கூண்டோடு இழுக்கும், "ஆப்ரேஷன் 10' என்ற, உடைப்பு திட்டத்தை ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது.



முதல் கட்டமாக, விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், தே.மு.தி.க., பொருளாளருமான சுந்தர்ராஜன், திட்டக்குடி தமிழரசனையும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட இழுக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக, நேற்று பேராவூரணி எம்.எல்.ஏ.,வும், நடிகருமான அருண் பாண்டியன், ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன் ஆகியோர், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து, அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


"ஆப்ரேஷன் 10' திட்டப்படி, 10 எம்.எல்.ஏ.,க்களை இழுத்தால், தே.மு.தி.க., உடைந்து விடும். தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்து இழக்க நேரிடும். எதிர்க்கட்சி அந்தஸ்து தி.மு.க.,வுக்கு கிடைத்து விடும்.



அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ள, ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன், தே.மு.தி.க., ஒரு எம்.பி., சீட்டை கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஒரு எம்.பி., சீட் பெற, 35 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அந்த எம்.பி., சீட், தன் மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷ் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கவும், விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார்.


ஆனால், அத்திட்டத்தை தவிடுபொடியாக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தாலும், தே.மு.தி.க., வுக்கு எம்.பி., சீட் கிடைக்காத அளவுக்கு, அக்கட்சி எம்,எல்.ஏ., க்களின் எண்ணிக்கையை குறைக்கவும் ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது.


இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுவதாவது:அடுத்த ஆண்டு, ஜூலை மாதத்தில், தி.மு.க., வில் கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க., வில் மைத்ரேயன், இளவரசன், காங்கிரசில் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் டி.ராஜா ஆகிய ஆறு பேரின் பதவி காலம் முடிவடைகிறது. 


சட்டசபையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்களின் பலத்தின் அடிப்படையில், நான்கு ராஜ்யசபா எம்.பி., க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள இரு எம்.பி.,க்களுக்கு, மற்ற கட்சிகள் மத்தியில் போட்டி உருவாகும் நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., வை ஆதரித்தால், அக்கட்சிக்கு ஒரு எம்.பி., கிடைக்கும். இதனால், தே.மு.தி.க., வின் எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை குறைக்க முயற்சிகள் துவங்கியுள்ளது.


அதேசமயம், தே.மு.தி.க., வை, தி.மு.க., ஆதரிக்குமானால், தே.மு.தி.க., வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தே.மு.தி.க., வை பொறுத்தவரையில், தி.மு.க., வையும் எதிரி கட்சியாக கருதுவதால், தி.மு.க., வின் ஆதரவை நாடுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.தி.மு.க., வை பொறுத்தவரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன், ஒரு எம்.பி., சீட்டை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளது. ஆக, மொத்தத்தில், இரு எம்.பி., சீட்டுகளை கைப்பற்றுவதில், ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஆளுங்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

http://www.writermugil.com/wp-content/uploads/2009/03/election-cartoon-11.jpg

திருநெல்வேலி:முதல்வர் ஜெயலலிதாவை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரிசையாக சென்று சந்தித்து வருவதால், தே.மு.தி.க., கட்சியினர் ஆவேசம் அடைந்துள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரித்தனர். திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வீட்டில், தே.மு.தி.க.,வினர் கற்களை வீசி தாக்கினர். இதில், வீட்டின் மாடி கண்ணாடிகள் உடைந்தன.


தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண்பாண்டியன் (பேராவூரணி) ஆகியோர், நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இதற்கு, தே.மு.தி.க.,வில் எதிர்ப்பு கிளம்பயுள்ளது.விஜயகாந்தின் ரசிகர் மன்றம், தே.மு.தி.க., கட்சியாகச் செயல்படத் துவங்கிய காலம் முதல், பல ஆண்டுகளாக உறுப்பனர்களாக இருந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., “சீட்’ தராமல், திடீரென வந்த சினிமா தயாரிப்பாளரான, மைக்கேல் ராயப்பனுக்கு, “சீட்’ கொடுத்தனர். அவரும் எம்.எல்.ஏ., ஆன பன், சட்டசபையில் பெரிய அளவில் பேசவில்லை.


அவர் தொகுதிக்காக எதுவும் செய்யாமல், கட்சிக்கு துரோகம் இழைத்ததாகக் கூறி, நேற்று அவரது உருவ பொம்மையை, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில், மாவட்ட மாணவர் அணி செயலர் சுடர் தலைமையில், தே.மு.தி.க.,வினர் எரித்தனர்.திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் உள்ள மைக்கேல் ராயப்பன் அலுவலகம் மற்றும் வீட்டில், தே.மு.தி.க.,வினர் கற்களை வீசி தாக்கினர். இதில், வீட்டின் மாடி கண்ணாடிகள் உடைந்தன.


திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட இடங்களிலும் மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரிக்க, அக்கட்சியினர் திரண்டனர்.


இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை கடற்கரை பகுதியில், கார்னெட் மணல் அள்ளி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினர் கோடிக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தின் மண்ணையும் சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். இதுகுறித்து, கட்சித் தலைவர் விஜயகாந்த், நாகர்கோவில் கூட்டத்தில் பேசினார். ஆனால், அந்த நிறுவனத்தினருடன் மைக்கேல் ராயப்பனுக்கு இருந்த தொடர்பு காரணமாகவே, தற்போது அவர் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்துள்ளார்’ என, தெரிவித்தனர்.இன்று, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தே.மு.தி.க.,வினர், மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரிக்க திட்டமிட்டுள்ளனர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMn7qmXgCQeALmg7hbKjZ-MOvHXgLktrUPnsvFvZbu5ArjMjtGkSJGjKQ3Yn-U68iwTtFROwZETjOenn_cZKangZJ-c7muDXDLapQWBNwr2Lzemk5A29DZP7fZNcNaYGbCDX3DxIFmiOo/s1600/0.jpg


செய்தியாளர்களுடன் விஜயகாந்த் மோதல்:


தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டபோது, விஜயகாந்த் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நிருபர் ஒருவர் கொடுத்த புகார் மீது, விமான நிலைய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


பக்ரீத் பண்டிகைக்கு, குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இருந்து

நேற்று காலை 10:40 மணிக்கு, விமானத்தில் மதுரை சென்றார். காலை 10:20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வந்தனர்.விமான நிலையத்தின், உள்நாட்டு முனையத்தில் காரில் இருந்து இறங்கிய விஜயகாந்த், விமான நிலையத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரிடம் பேட்டி காண, செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். செய்தியாளர் பாலு, காரில் இருந்து இறங்கிய விஜயகாந்திடம் சென்று, "செய்தியாளர்கள் உங்களுக்காக காத்திருக்கின்றனர். பேட்டி கொடுங்கள்' என்றுகேட்டார்.


இதற்கு, "நீ யார்? செய்தியாளர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ ஓரமாக போ' என்று, கோபமாக கூறினார். விஜயகாந்த் அருகே வந்த செய்தியாளர்கள், "உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்தித்தது குறித்து கருத்து சொல்லுங்கள்' என்று கேட்டனர்.


இதற்கு, "நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. மின்வெட்டால் தமிழகமே இருளில் உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று ஜெயலலிதாவிடம் சென்று கேளுங்கள்' என்று, கூறினார். தொடர்ந்து விஜயகாந்திடம், செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க, ஆத்திரமடைந்த விஜயகாந்த், "போங்கய்யா, அங்கே போய் கேளுங்கள்' என்று, கூறிவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்றார்.
 
 

அப்போது செய்தியாளர் பாலுவை பார்த்து, தகாத வார்த்தைகளால் விஜயகாந்த் பேசினார். தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அனகை முருகேசன், செய்தியாளர் பாலுவை கீழே பிடித்து தள்ளினார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள், விஜயகாந்தை விமான நிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர். தன்னை தகாத வார்த்தைகளால் பேசிய விஜயகாந்த், கீழே பிடித்து தள்ளிய எம்.எல்.ஏ., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலு, விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuRHui4kYSRXLEeC9Bzy-iXbSQohHhfngCGvJ93CngNRSMJQyD9MfAl_V42-FplVMptT0OOqhJGNkg_L3XiStO3j9-hcrqQrdq4bzCPWdjBNDa1-AstD0_xU2eSE6b9FjeHdjQYrXYK18/s1600/19ramana.jpg

இந்த நாடகத்தை எப்படி முடிக்கிறேன் பாருங்கள் விஜயகாந்த் ஆவேசம் :



ஒரு நாடகம் நடக்கிறது. அதை எப்படி நான் முடிக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மதுரையில் ஆவேசமாக பேசினார்.பக்ரீத் பண்டிகையையொட்டி, தே.மு.தி.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மதுரையில் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது: நான் அனைத்து மதத்தினருக்கும், சேவை செய்துவருகிறேன். தெய்வம், மக்களை நம்பியுள்ளேன். யார் பத்திரிகையாளர்கள் என எனக்குத் தெரியும். வீட்டிற்கு வரச்சொன்னால் தெரிந்துவிடும் என, கோட்டைக்கு வரச்சொல்லி நாடகம் நடத்துகின்றனர். அந்நாடகத்தை, நான் எப்படி முடித்து வைக்கப் போகிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.



தே.மு.தி.க., மீது எவ்வளவு பயம் வந்துள்ளது என்பதைகாணும் போது, மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல் ஊர் ஊராக முதல்வர் ஜெயலலிதாவால் சுற்ற முடியுமா? ஒன்றரை ஆண்டுகளாக செய்யாததை, இனிமேலா செய்யப் போகின்றனர்.மின் தட்டுப்பாட்டை ஓராண்டில் சீர் செய்வேன் என்றார்; அது நிறைவேறவில்லை. பல மணி நேரம் மின்தடை நீடிக்கிறது. 1991 லிருந்து தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் மாறி மாறி ஆட்சி புரிகின்றனர். ஆனால், காவிரி நீரை கொண்டு வர நடவடிக்கை இல்லை. இலவசங்களை வழங்கி, மக்களை ஏமாற்றுகின்றனர்.எனக்கு கோபம் வரும். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். தி.மு.க.,- அ.தி.மு.க.,விற்கு ஓட்டுப் போடாதீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.



பிரேமலதா பேசியதாவது:முகவரி அளித்தவர்களுக்கு, துரோகம் செய்வோர் எந்த நாட்டிற்கும், ஊருக்கும் செல்ல இடமில்லை. 29 எம்.எல்.ஏ.,க்கள் அல்ல; இன்னும் 200 எம்.எல்.ஏ.,க்கள் உருவாகப் போகிறார்கள். உண்மையை பற்றி, ஒரு மணி நேரம் பேசலாம். துரோகம் பற்றி ஒரு நிமிடம் கூட பேசி, நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.நான் பேசினால், குடும்ப கட்சி என்பர்.


கடந்த லோக்சபா தேர்தலில், குடும்ப உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் சீட் வழங்கவில்லை. குற்றவாளிகள், போலிகளுக்கு கட்சியில் இடமில்லை. தொகுதி வளர்ச்சிக்காக செல்கிறோம் என்பவர்கள், சுயநல வாதிகள். தங்களை பாதுகாக்க, வருவாயை பெருக்கச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiojZkLhJd0WzO_-aZBnLZwvD5mFWJf-AdudNxalF9G-4ORvBghDjPWt83ffvdpnCCawJ8oeYGM-wi0bt0B_bLyZ5QGCX7X5TEKgCrtZhpsrSp12gXF__lPzGAwDKbBeU50VqZBtjr3-lw2/s1600/tamilmakkalkural_blogspot_viji.jpg


மக்கள் கருத்து
M Sekar - Puthukottai,இந்தியா

  ஜெயலலிதா மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த நாடகத்தை நிறைவேற்றி உள்ளார். மின் வெட்டு, டெங்க்கு காய்ச்சல் என்று மக்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியுடன் உள்ளனர். இதை சரிக்கட்டவே இந்த நாடகம். ஜெயா புத்திசாலி என்றால் தேதிமுக எம்.எல்.ஏக்களை சந்திப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். கட்சியை உடைக்க ஆரம்பித்தால் விஜயகாந்துக்கு அனுதாபம் உண்டாகும். பார்க்கப்போனால் திமுக ஆட்சியே தேவலை என்று உள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் இருந்தது உண்மை. கட்சி பிரமுகர்கள் அராஜகம் இருந்ததும் உண்மை. ஆனால் மின் வெட்டு 2 மணி நேரம்தான் இருந்தது. பொருளாதாரம் நன்றாக இருந்தது. அதிமுக ஆட்சியில் எல்லாம் சர்வ நாசம். மந்திரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிர்வாகத்திறன் பூஜ்யம். அம்மாவை பிரதமர் ஆக்குவேன் என்று சொல்லித்திரியும் அதிமுக கட்சிக்காரர்கள் ஒன்றரை ஆண்டுகள் என்ன சாதனை செய்தார்கள்? பின் தங்கிய மானிலமாக இருந்த பீகாரில் கூட முன்னேற்றங்கள் இருக்கிறது என்று செய்தி வருகிறது. முன்னேறிய மானிலமாக இருந்த தமிழகம் அதிமுக கையில் சிக்கி சீரழிகிறது. மீண்டும் காங்கிரஸ் + திமுக கூட்டணி தமிழகத்தில் பாராளு மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றால் ஆச்சர்யப்பட முடியாது. ஜெயலலிதா கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார்.

Govind - Delhi,இந்தியா

  ஜெயா செய்யும் மிக பெரிய தவறாக இருக்கும் தி மு தி க வில் விஜயகாந்த்தை தவிர யாரையுமே மகளுக்கு தெரியாது. அப்படி இருக்கையில் அந்த கட்ச்சியை உடைத்து தேவை இல்லாமல் ஒரு பகையை மோசமாக்கி அதனால் மேலும் தனக்கு கெட்ட பெயர் உண்டாக்கி கொண்டால் என்ன செய்வது. அந்த ஒரு MP சீட்டை அவர்கள் ஜெயிபாதால் இவர்களுக்கு எந்த வித நஷ்டமும் இல்லை, தேவை இல்லாமல் பகைவர்களை உண்டாக்குவது மிக பெரிய தீங்கினை உண்டாக்கும். 
 
 thanx - dinamalar

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijtRTfqhT7DycsFP82hXBHcVDp6-7YpjgNMjERb8ggoaMFlhrwqv6fL7kKTuc8WBOk6xoc-B5Jq-xj4N1JOQFfEqyeGcz_s9arXMv1GpPY2VSAs6_lOPFaO4SCCDbJ5p_f7Cg99AgW3-zh/s1600/tamilmakkalkural_blogspot_viji1.jpg

Saturday, October 27, 2012

சிதறிய தேமுதிக , பதறிய கேப்டன், கதறிய பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்

தின மணி செய்தி 1 - மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


நேற்று இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர். இன்றும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் தேமுதிக.வில் இருந்து விலகுவார்கள் என்று கூறப்படும் தகவல்கள் குறித்து, அவர் கட்சியினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.


முன்னதாக, இன்று காலை மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கட்சியினர் யாரும் வரவேற்க வரவேண்டாம் என்று தடை விதித்துவிட்டார் விஜயகாந்த்.



 தின மணி செய்தி 2

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்து, அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


மதுரை மத்திய தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி  தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்தனர். முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர்கள், தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறி பாராட்டினர். மேலும், தங்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசின் உதவியையும் ஆதரவையும் கோரினர்.


இந்நிலையில், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் முதல்வரைச் சந்திக்கச் சென்றதால், அவர்கள் இருவரும் அதிமுகவில் இணையவுள்ளதாகவும், அதற்காகவே அவர்கள் முதல்வரைச் சந்திக்கச் சென்றதாகவும் மதுரையில் இன்று காலை முதல் பரபரப்பாகப் பேசப்பட்டது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அரசையும் ஆட்சியையும் விமர்சித்து பல இடங்களில் பேசி வருகிறார். இந்நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் இருவர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கட்சிக்குள்  ஏற்படுத்தியுள்ளது. எனவே விஜயகாந்த் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முற்படுவார் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


 தின மணி செய்தி 3
தேமுதிக எம்எல்ஏக்களான அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று தமிழக முதல்வரை சந்தித்துள்ளனர்.
பேராவூரணி தொகுதி தேமுதிக எம்எல்ஏ அருண்பாண்டியனும், ராதாபுரம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனும் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து, அவரது தலைமையிலான அரசின் நடவடிக்கை குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நேற்று  தேமுதிக எம்எல்ஏக்கள் தமிழ்அழகன் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்துள்ள நிலையில், இன்று அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் முதல்வரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஒன் இண்டியா தட்ஸ் தமிழ் செய்தி 

நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. பத்திரிகையாளர்களை கேவலமாக திட்டிய விஜயகாந்த்




 Vijayakanth Slam Media

சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த்.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.


இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் செய்தியாளர்கள், ஜெயலலிதாவுடனான எம்.எல்.ஏக்கள் சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர். இதில் கடுப்பாகிப் போன கேப்டன் விஜயகாந்த், பத்திரிகையாளர்களை கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டார்.


ஒருகட்டத்தில். நாய்..நாய்களா.. எங்க போனாலும் மைக்கை தூக்கிட்டு வந்துடுவீங்களா..உங்களுக்கு சம்பளம் கொடுக்கலையா? என்று ஏகத்துக்கும் ஒருமையில் பேசினார்.


பத்திரிகையாளர்களைத் திட்டுவதில் மட்டுமே குறியாக இருந்த விஜயகாந்த் கடைசிவரை கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமலேயே எஸ்கேப் ஆகிவிட்டார்.



கூட்டணியில் இருந்து விலகிய விஜயகாந்த், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சியைசேர்ந்த இரு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., வலையில் விழுந்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, நேற்று காலை, 8:50 மணிக்கு, தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் மற்றும் திட்டக்குடி எம்.எல்.ஏ., தமிழழகன் ஆகிய இருவரும், திடீரென சந்தித்தனர். பின், இரு எம்.எல்.ஏ.,க்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நற்சான்றிதழ்:

பத்து நிமிட சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு கொடுத்‌‌தோம்; இந்த அரசு, நல்ல அரசாக செயல்பட்டு வருகிறது' என, நற்சான்றிதழ் அளித்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும், அக்கட்சியின் கரைவேட்டியுடன், கட்சி கொடி கட்டிய காரில் வந்திருந்தனர். இவர்களது சந்திப்பு,தே.மு.தி.க., வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் ஆலோசனை :

சென்னை, விருகம்பாக்கம் வீட்டில் இருந்த விஜயகாந்திற்கு, எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு குறித்த செய்தி, உடனுக்குடன், மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்தஅவர்,கட்சி நிர்வாகிகள் இருவரையும், உதவியாளரையும்,மைத்துனர் சுதீஷையும்,போனில் தொடர்பு கொண்டு, ஆலோசனை நடத்தினார். பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள், கட்சி அலுவலகத்தில், காத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விஜயகாந்த் அலுவலகம் வருவதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது
. அதேநேரத்தில், மதுரை கோரிப்பாளையம் தர்காவில், தே.மு.தி.க., சார்பில், தனது தலைமையில் இன்று, மாலை 4:00 மணிக்கு, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும், என்ற அறிக்கையை, விஜயகாந்த் வெளியிட்டார்.கட்சி அலுவலகத்திற்கு வந்த, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன் எம்.எல்.ஏ., உள்ளிட்@டாரும், எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கவலையில்லை :

தன்னை தொடர்பு கொண்ட கட்சி நிர்வாகிகள் சிலரிடம்பேசிய விஜயகாந்த், "யார் கட்சியை விட்டுப் போனாலும், எனக்கு கவலையில்லை. வேறு கட்சிக்கு போக திட்டமிட்டவர்கள், போய்த்தான் தீருவார்கள்; அவர்களை என்ன செய்தாலும், தடுக்க முடியாது' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும், "கடந்த ஆட்சியில், அ.தி.மு.க., முக்கியப் புள்ளிகள் பலர், தி.மு.க.,வுக்கு தாவினர். எனவே, அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் அரசியல் நடத்த முடியாது; எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்ள, எம்.எல்.ஏ.,க்களை அழைத்து கெஞ்சப் போவதில்லை' என்று, கூறியதாக தெரிகிறது.
Advertisement
இன்று தெரியும்:முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல், தே.மு.தி.க., வட்டாரத்தில் பரவியுள்ளது. இது தொடர்பாக, சட்ட நுணுக்கங்கள் குறித்து, அக்கட்சி வழக்கறிஞர்களுடன், விஜயகாந்த், நேற்று மாலை நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.இன்று மதுரையில் நடக்கும் பக்ரீத் விழாவில், முதல்வர் - எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு குறித்து, தனது கருத்தை விஜயகாந்த், வெளிப்படையாக வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-




நன்றி - தினமணி , ஒன் இண்டியா,தினமலர்

diSki - விஜயகாந்த் நிருபரை கேவலமாகத் திட்டிய வீடியோ காட்சி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_4792.html

Tuesday, October 16, 2012

எம் ஜி ஆர் என்னிடம் வாங்கிய சத்தியம் - ஜெ பர பரப்பு கடிதம்

http://www.alaikal.com/news/wp-content/mgr101.jpg 

சென்னை: அதிமுக தொண்டர்களைக் காப்பாற்ற தம்முடைய வாழ்வை அர்ப்பணிக்க  வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தன்னிடம் சத்திய வாக்கினை பெற்றார் என்று அதிமுக  பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  




அ.தி.மு.க. 41-வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாக கொண்டாட  வேண்டுகோள் விடுத்து,அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறியிருப்பதாவது:





இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும்  மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!



நம் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40  ஆண்டுகள் நிறைவடைந்து, 41-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியான  தருணத்தில் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி  அடைகிறேன்.



அறநெறி சார்ந்த வாழ்வினை கைக்கொள்ளவேண்டும்; அடுத்தவர்களுக்கு பயன் தரும்  வாழ்வை மேற்கொள்ளவேண்டும்; இயன்ற பொழுதில் எல்லாம், இயன்ற வகைகளில்  எல்லாம் எளியோர்க்கு உதவ வேண்டும்; ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்  என்று தன் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே கொள்கை உறுதி கொண்டு வாழ்ந்த  ஒப்பற்ற மனிதராம் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புச்  செல்வம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/01/1967_MGR.jpg

இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏன் தோற்றுவித்தார் என்பதை ஒரு  நிமிடம் எண்ணிப் பார்ப்போம். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, மிகுந்த  எதிர்பார்ப்போடு தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியாக, அவரை நம்பி  திமுக-விற்கு தந்த தேர்தல் வெற்றியை, ஆட்சிப் பொறுப்பை, ஒரு சுயநலக் கும்பலின்  தலைவனாகிய ஒரு தீய சக்தி தன் மனம் போனபடி ஆயுதமாக்கிக் கொண்டு தமிழகத்தை  தனது வேட்டைக் காடாக மாற்றியது.



அண்ணா அவர்கள் தோற்றுவித்த இயக்கத்தை குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டது.  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. ஆனால், தமிழக  மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தங்கள் இதயத்தில் ஏந்திக் கொண்டார்கள்.



புதிய இயக்கம் கண்டு தங்களை வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள்  வைத்தார்கள். அனைத்துத் தரப்பினரும் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று 1972 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ஆம் நாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார்.



ஐந்து ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப்  பொறுப்பை வென்றெடுத்தது. தன்னுடைய இயக்கமும், ஆட்சியும், மக்கள் இட்ட  கட்டளையால் உருவான வரலாற்று நிகழ்வுகள் என்பதையும், இவற்றைக் கொண்டு  தமிழக மக்களுக்கு எந்நாளும் பணியாற்ற வேண்டும் என்பதையும் புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டிருந்தார்.



திராவிட இயக்கக் கொள்கைகளை காக்கவும், அண்ணாவின் அரசியல் பணிகளை  தொடர்ந்திடவும், தமிழக மக்கள் மீது தான் கொண்ட பேரன்பை செயல் வடிவில் காட்டி  அவர்களுக்கான பணிகளை ஆற்றிடவும், தனக்கு பின் இயக்கத்தைக் கட்டிக் காக்கவும்  ஒருவர் வேண்டும் என்பதற்காக என்னிடம், இந்த இயக்கத்திற்கு தலைமையேற்கும்  தியாக உணர்வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்த்தார்.



தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க  வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த  கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார்.



புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி இருந்த காலத்தை தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவருடைய உதவியாலும், கருணையாலும் வாழ்வும்,  வளமும் பெற்றவர்கள், தீயசக்திக்கு ஆதரவாகவும், இந்த இயக்கத்திற்கு எதிரான  நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். என்னை அழித்திடத் துடித்தனர்.



கழக உடன்பிறப்புகளாகிய உங்களை புரட்சித் தலைவரின் காலத்திற்கு பிறகு கட்டிக்  காக்கவேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய வாழ்வை கழகத்திற்காக,  உங்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு  நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. இது நெருப்பாறு. இது வஞ்சகமும்,  சூழ்ச்சியும் கொண்டு நன்றி மறந்த பலரும் எழுதும் திரைக்கதை வசனங்கள் நிறைந்தது.  இருப்பினும் இவைகளுக்கு அஞ்சி இந்தக் கடமையை கைவிட்டுவிடக்கூடாது என்பதை  நான் பொது வாழ்வின் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன்.



புரட்சித் தலைவருக்கு நான் அளித்த வாக்குறுதியை என் மனசாட்சிக்கு சரியென்று  தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றி வந்திருக்கிறேன் என்ற மன நிறைவும், நிம்மதியும்  இந்த நாளில் எனக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது,  தமிழகம் இந்திய அளவில் தலை நிமிர்ந்து முதலிடம் பெறும் நோக்கில் எண்ணற்ற  திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன்.



தமிழ்நாட்டில் புரட்சித் தலைவரும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும்  அமல்படுத்திய பல திட்டங்கள் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில்  பின்பற்றப்பட்டு வருகின்றன. ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்ற அண்ணாவின்  அறிவுரையின்படி ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு  நலத் திட்டங்களை நான் செயல்படுத்தி வருகிறேன். எனக்கு எந்த சுயநல நோக்கமும்  கிடையாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்  அறியேன்.



எனவேதான் ‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்பதை என் வாழ்வின் தாரக  மந்திரமாகக் கொண்டிருக்கிறேன். இந்த நாட்டையே சூறையாடும் வண்ணம் பல்வேறு  துறைகளில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்தவர்களையும், தேச அரங்கில்  தமிழகம் தலைகுனியும் வகையில் வரலாறு கண்டிராத ஊழல்களில் ஈடுபட்டவர்களையும்,  முன்னேற்றப் பாதையில் தமிழகம் செல்ல முடியாத வகையில் முட்டுக்கட்டை  போட்டவர்களையும் மக்கள் தேர்தல் களத்தில் புறக்கணித்தார்கள்.



மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் மறந்திருப்பார்கள் என்ற  நினைப்பிலும், பேராசையிலும் தீய சக்திகள் மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன.  தமிழக மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்த  உண்மை.



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் உங்கள்  அன்புச் சகோதரியாகிய நான் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகளையும், மக்கள்  நலப் பணிகளையும் மனதில் கொண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை  தமிழக மக்கள் என்னிடம் வழங்கி இருக்கின்றார்கள். இன்னும் பல வெற்றிப் பரிசுகளை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க தமிழக மக்கள்  காத்திருக்கிறார்கள் என்பதை நன்றியோடு உணர்கிறேன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGeuh8lTBuLomyGdHYrCZ1VyK5-7r-LTwfM751YGMvCQwAu-IshGp13XnPQ7k4ykfMXa89J3KicVpPiy51sEBRAL7kmSe3AA2IDWKDdzN_8ytQgTkfgtBdTtUKE5re2imItH2UWtXrQ7g/s1600/jayalalitha_mgr_20110321.jpg


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் சத்துணவுத்  திட்டம், அனைவருக்கும் கல்வி உதவி, பல லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம், ஏழை  எளிய பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற நலத் திட்டங்கள், பசுமை வீடுகள்  திட்டம், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புரட்சிகர திட்டங்கள்,  வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை எல்லோரும் பெற்றிட உலக அதிசயமாய்  விலையில்லா மடிக்கணினி என்று பல முன்னோடித் திட்டங்கள் தொடர்ந்து  நடைமுறைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இது தொடரும்;



இவற்றின் வழியாக தமிழக மக்களின் வாழ்வு மலரும்; அதற்கு என்னுடைய ஆட்சி  எந்நாளும் துணை நிற்கும் என்ற உறுதிமொழியை இந்த நல்ல நாளில் உங்கள் வாயிலாக  தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். இந்த நன்னாளில் ஈட்டிய வெற்றிகளின்  எண்ணிக்கையையும், நாம் எதிர் கொண்டு சாய்த்திட்ட எதிரிகளின் கணக்கையும்  கூட்டிப்பார்த்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இந்த ஒப்பற்ற இயக்கத்தின்  வளர்ச்சிக்காக தங்கள் வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட  செயல்வீரர்களையும், வீராங்கனைகளையும், கழகத் தொண்டாற்றிய காலத்திலேயே  தங்கள் விலை மதிப்பற்ற உயிரையும் நீத்திட்ட உத்தமத் தொண்டர்களின் உயரிய  தியாகங்களையும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறேன்.



எத்தகைய உயர்ந்த நோக் கங்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் தோற்றுவிக்கப்பட்டதோ; எத்தகைய எதிர்பார்ப்புகளோடு அனைத்திந்திய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரித்து வளர்த்து  வருகின்றார்களோ; அவற்றிற்கு உண்மையாக விளங்கும் வகையில் தொடர்ந்து கழக  உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்  கொள்கிறேன்.



என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளே!



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 41-ஆவது ஆண்டு தொடக்க  விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர,  பேரூராட்சி, பகுதி அளவிலும்; இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும்  ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி  கழகக் கொடியினை ஏற்றி வைத்து, விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி  சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierAglw_HdzYojo0c7_fOvXqcepltLpZ89F-ZR5HA1swVxkAJFC4THQrzbz7Mnaq45mpsi5VkPPOUOFChRs32XP9CT5yhdnQTCO1lrW_ukghUFaAUDyqMZDA_VPDq5q0KatvwLzQ96eTPN/s1600/42b.jpg
 மக்கள் கருத்து 

1. சாதனை!சாதனை!! சாதனை!!! மக்களின் வேதனை!வேதனை!! வேதனை!!!


கடந்த ஆட்சிக் காலத்தில் 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று இட நெருக்கடிக்கிடையே பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து இருக்கின்ற இமாலயச் சாதனை!



பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகத்தை ஆட்சிக்கு வந்த நாளிலேயே வெளியே தூக்கி எறிந்த வியத்தகு சாதனை!


திமுக ஆட்சியில் கட்டப்பட்டு பாதியில் நின்றிருந்த தலைமைச் செயலகத்தின் இரண்டாம் கட்டமாக நிறைவேற்ற வேண்டிய கட்டிடங்கள், “கலைவாணர் அரங்கப்” பணிகள் ஆகியவற்றைத் தொடராமலும்; அதுபற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமலும், கிடப்பிலே போட்ட கித்தாப்புச் சாதனை!



ஆசியாவிலேயே மிகப் பெரியதும், அண்ணா நூற்றாண்டு நிறைவை யொட்டி அதன் நினைவாக சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டதுமான நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதாக அறிவித்த மாபெரும் சாதனை!



ஏழை மாணவர்கள் - வசதி படைத்த மாணவர்கள், நகர்ப்புறத்து மாணவர்கள்- கிராமப்புறத்து மாணவர்கள் என்று வழிவழி வந்த வேறுபாடுகளை அகற்றும் சமச்சீர் கல்வி முறைக்கு 23.5.2011 இல் தடை விதித்த தனிப் பெரும் சாதனை.



சமச்சீர் கல்விக்காக 200 கோடி ரூபாய் செலவழித்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையெல்லாம் விநியோகிக்காத விண்ணுயர் சாதனை!


ஆசிரியர்கள் நியமனத்திலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதிலும் குளறுபடிகளை ஏற்படுத்தி, அதில் ஆளுங்கட்சியினர் குளிர் காய்ந்த குதூகலச் சாதனை!


சத்துணவுப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள் நியமனங்களில் ஆளுங்கட்சியினர் புகுந்து விளையாடிய அற்புத சாதனை!



இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்த மின்னல் வேகச் சாதனை.




திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்ட மேட்டூர் புதிய அனல் மின்நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் - யூனிட் (1), வடசென்னை அனல்மின்நிலையம் யூனிட் (2), வல்லூர் யூனிட் (1), வல்லூர் யூனிட் (2), வல்லூர் யூனிட்(3), தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதிய யூனிட் ஆகியவற்றை; திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக, உரிய காலத்தில் மினுற்பத்தி செய்வதில் அக்கறை காட்டாத அபார சாதனை!


வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழில்முனைவோர், விசைத்தறியாளர், தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு; தெருவுக்கு வந்து போராடும் திகைப்பூட்டும் சாதனை!


பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்” என்ற வகையில் கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்ட இணையிலாச் சாதனை!



தமிழகத்தில் பொறியியல் உயர்கல்வி பரவலாக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ளோர் பயனடையும் பொருட்டு; திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகங்களை ரத்துசெய்து உருக்குலைத்த ஒப்பற்ற சாதனை!
ஏழை எளியோருக்குப் பயன் தரும் எந்த இலவசத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தாத முக்கியச் சாதனை!



எடுத்துக்காட்டாக, 2011 பொங்கல் திருநாளையொட்டி வழங்க வேண்டிய இலவச வேட்டி - சேலைகளை எட்டு மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் வழங்கி முடிக்காத வரலாற்றுப் புகழ் சாதனை


- கல்வியாண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த பிறகும் இலவச மடிக் கணினிவழங்கும் பணியும் - இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியும் முடிந்த பாடில்லாத முக்கியமான சாதனை!.




இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அமைச்சர்களை அடிக்கடி மாற்றி, அமைச்சர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், நிரந்தர நடுக்கமும் நிலவுவதற்கு வழிவகுத்த நிகரற்ற சாதனை!



எந்த இடத்திலும் காலூன்ற முடியாத அளவுக்கு அதிகாரிகளை அடிக்கடிப்பந்தாடும் அநியாய சாதனை!
குறுவைச் சாகுபடியைக் கனவாக்கி, சம்பாச் சாகுபடியையும் ஏக்கத்திற்கு உள்ளாக்கிய இணையில்லாச் சரித்திரச் சாதனை!



கட்சி மாச்சரியத்தோடு, நில அபகரிப்பு என்ற பெயரால் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், திமுக முன்னணியினர் மீது சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பொய்யான வழக்குகளைத் திரும்பத் திரும்பத் தொடுத்து கைது செய்து சிறையிலே அடைத்த சிறப்பான சாதனை!
மதுபான உற்பத்தியாளர்கள் மேலும் லாபம் சம்பாதிக்க ஏதுவாக, மது பானங்களின் விலையை உயர்த்திய மாபெரும் சாதனை!



கொலை இல்லாத நாட்களே இல்லை; கொள்ளை நடக்காத ஊர்களே இல்லை; வழிப்பறி நடக்காத சாலைகளே இல்லை; பெண்கள் வெளியே புறப்பட்டால் கழுத்திலே உள்ள தாலிச் சங்கிலிகள் நிலைத்திருக்குமா என்பதே கேள்விக்குறி; போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு என்று சட்டம் - ஒழுங்கு நிலையைப் படாதபாடு பட வைத்த பரவச சாதனை!



பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளுக்குக் கூட போலீஸ் படையை அனுப்பி அடக்குமுறை மூலம் தீர்வு காண முயற்சிக்கும் அரிய சாதனை!


பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று ஏழை எளிய நடுத்தரமக்களை வாட்டி வதைத்திடும் வளமான(?) சாதனை!



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்திடும் வகையில்; ஆட்சியினரையும் அவர்தம் செயல்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்திடும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும், பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுத்து அச்சுறுத்த நினைக்கும் அபார சாதனை!



தமது இயலாமையை மறைத்து மக்களைத் திசை திருப்புவதற்காக; எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீதும், இந்தியப் பிரதமர் மீதும், முன்னாள் ஆளுங்கட்சியான தி.மு.க மீதும் பழி சொல்லிப் புழுதி வாரித் தூற்றும் புரட்சிகர சாதனை!



ஜனநாயக நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மனசாட்சிக்குப்பயந்து, வாக்களித்த மக்களுக்குப் பயந்து, எதிர்க்கட்சியினருக்குப் பயந்து, பத்திரிகைகளுக்குப் பயந்து நடைபெற்ற தி.மு.க ஆட்சிக்கு மாறாக; அனைத்துத் தரப்பினரையும் பயமுறுத்தியே ஆட்சி நடத்தும் பண்பட்ட(?) சாதனை!





2. முருகேஷன் - இதயதெய்வம் வேறு என்னெதற்கெல்லாம் சத்தியம் வான்கினார் என்று இப்பவே மொத்தமாக சொல்லி விடுங்கள். சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை
ஒரு பெண்ணாக தனித்து நின்று தமிழக அரசியலில் சாதித்திருப்பது முன் உதாரணங்கள் இல்லாததுதான்.நிறைகள் பல இருந்தாலும் குறைகளும் உங்கள்
காதுகளில் விழும்படி சுற்றியிருக்கும் அரண்கள் வழி செய்திடல் வேண்டும்.


இடிந்தகரையிலும் மணப்பாட்டிலும் அனியாய சாவுகளை தடுத்திருக்கலாம்.
உங்களுக்கு கூழை குப்பிடு போடுபவரை விட உங்களது குறைகளை சுட்டிக்காட்டுபவரை நம்பலாம்.
ஆதாயத்திற்காக சொல்லப்படுபவை அல்ல அது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCdOVV4go41YIeZ7qC4ypUAsSAiNnYVj0aK_63SNvKUiF2nDR9E-n4MHbbw8DczqIkJmSTvflG5dp4_QsYwRxbzQ38JfYWc7RDAcspjQq4bLgaJniItRQwlBK-1wjn6ZHUI6OxFkoRpnw/s1600/mgr-mk.jpg




3. Dr.Mrs.MeenakshiPrabhakar




அ.தி.மு.க தொண்டர்களை காப்பாற்ற தம் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆருக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கும் நிலையில், ஜெயலலிதா கட்சித் தலைவர் பொறுப்பை மட்டுமே வகிக்க வேண்டும்.முதல்வர் பதவி முழுதும் நாட்டும் மக்கள் பிரதினிதித்துவம்.



அரசு கொள்கைகளான நல்லிணக்கம், சார்பின்மை , தனி நபர் வாழும் உரிமை நிறுவ வேண்டிய தளம்.எம்.ஜி.ஆர் என்றும் அ.தி.மு.க மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதில்லை.உலக அளவிலான விரிந்த சமூக சிந்தனை அவர் பாடல்களில், திட்டங்களில் உண்டு.அவர் நிலைத்த புகழ் பெறவும் அதுவே காரணம்.




கட்சி வித்தியாசமின்றி அரசுத் தளத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி அரசியல் தலைவர்கள் செயல்படும் நிலை உண்மையான ஜனனாயகம்.கட்சி தலைவர் பொறுப்பு, மக்கள் நல செயல்களில், மக்களை உயர்த்த திறன் தருவதிலான பகிரும் பொறுப்பே தவிர போட்டியில்லை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA8Nh8Nnx8hAg3kdTxxbpfFNBFf0lNVrVh3x6UUhI1Mlqmf9gmar3AC7Ulzk_S-myh_fJKW1jUd0OtWV9QuGVa-UXBLCdVbndJYcKh6QyXZK4mNQD9sImQTMmtr3UFwgsX9lJRnprMoN0/s1600/mgramachandran17.jpg
 a

நன்றி - விகடன்

Saturday, August 18, 2012

என்னை டார்ச்சர் பண்ணாங்க -ஜெ வழக்கு புகழ் வக்கீல் ஆச்சார்யா பேட்டி


a

நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி



ஆச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.



14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர்.


அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!

http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/Sasikala-DC.jpg.crop_display.jpg


1.''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''




''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).



2. ''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''




''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா?


எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''





3. ''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'



''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர்.


ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட்.


 இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s640/jj-cartoon.jpg

4. ''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''



(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!'' 



'5. 'அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''



''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''



6. ''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''




''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/j-sasi.jpg




7. ''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''



8. ''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''




''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''




9. ''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''



''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''



10. ''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''






''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''





http://www.envazhi.com/wp-content/uploads/2012/03/JAYA-WORTHLESS-RULE.jpg
11. ''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''



''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''



12. ''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''

''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''



13. ''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''




''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.



'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!

நன்றி - ஜூ வி



http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/jaya-marriage.jpg

Sunday, May 20, 2012

நல்ல தங்காள் ஆட்சி - நல்லவை 10 , அல்லவை 10 - விகடன் கட்டுரை

ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!


 நல்லவை  10


தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.


சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.



இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.



மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.



ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.


தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.


தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.



வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.



கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.





தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.


அல்லவை  10


சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.



மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.



தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.



கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.



ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.



அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.



சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.


சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.



முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.


Thursday, May 10, 2012

ஜெ , கலைஞர்- இருவரையும் திணற வைக்கும் வை கோவின் கலக்கல் பேட்டி இன் விகடன்

18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...

http://rachelchitra.files.wordpress.com/2008/10/vaiko_tn_chiefminister.jpg


 1.''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''


''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார் என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.


பால் விலையை ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத் திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப் பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில் இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது.


 ஏழை, நடுத்தர மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை. 'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம்.


 திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான்    அவரை பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''


'' 2. 2.'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''


''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?


தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''




3.''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''


''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது, அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம்.

 தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது கவனிக்கத் தக்கது.''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-ymYvJGv58xC5KYG-BbiE-SPfVCG21CrpEQ2-9y8-2UQGOLGAFs_sYkLc-uIh-2GrYP0CKD9ZP7y2rGC31QNLwePeCbDx_MswPnwccSctTtSIQpACIkbsCyuSkLDSC_yTjt1txBdnFZw/s1600/vaiko_2.jpg


4. ''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''


''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.


ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால், மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத மனிதராக அவர் இருக்கிறார்.

 இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின் எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின் எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை. 

அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது, அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால், அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர் குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.


இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும் கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல் திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள், காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின் வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத் தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.


மூன்றாவது... சாராயக் கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய், பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.


 ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது. தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம் இவர்கள் இருவரையும் சபிக்கும்!''

http://www.vaiko-mdmk.com/vaiko_img/nadaipayanamhtml/img/vaiko_big61.JPG


5. ''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''


''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத் தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். 80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் 'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே!

 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ!



யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.



நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம். இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.


 தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார். ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார். இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் - சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.


தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAXA2BaLH5NRLgz1z51PXObXERn1U6BSLlQU1VNBsN1j3fYYVomcZVKIKskaVzuJ8CFEz6hANjzSr3nh8kTNzDQeZDhzhXEGgrglf5PAifBbDndDpu2PYWQ2GDw372O1FCD6vVgTdFf5I/s1600/jayalalitha_vaiko_alliance-cartoon.jpg

6.''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''


''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?


கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள் நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை - இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு.

 திறமையான அவருக்கு காலம் தங்கத் தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது. திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும் கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக் குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை. பரிதாபப்படுகிறேன்.


எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும் பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''




7.''அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''


''இரண்டு கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.


இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால், பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''


8.''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''


''எங்களை எதிர்த்து நின்ற மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''

http://seithy.com/siteadmin/upload/vaiko13-072011x411.jpg


9.''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''


''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத் தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப் பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''
- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
 
நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.