Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Saturday, February 25, 2012

சென்னை - பெண் ட்வீட்டர்கள் சந்திப்பு - இன்னா பேசுனாங்கோ? ஜாலி கலாட்டா கற்பனை

pic.twitter.com/WfS1xPRa 
வர வர பொண்ணுங்களோட ஆதிக்கம் அதிகம் ஆகிடுச்சு.. ஆண்கள் எல்லாம் சமையலை முடிச்சுட்டு ஆஃபீஸ் போன பின்பு இவங்க சும்மா  இருக்காம காலண்டர்ல, பஞ்சாங்க புக்ல இருக்கற தத்துவங்களை எல்லாம் ட்வீட்ங்கற பேர்ல தத்துவமா போட்டு கொலையா கொல்லறாங்க.. அப்புறம் ஆண்கள் ட்வீட் அப் , பதிவர் சந்திப்பு நடத்தறதை பார்த்து இவங்களுக்கும் ஆசை வந்துடுச்சு.. இப்போ சென்னைல பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ட்வீட் அப்.. அங்கே என்னத்தை பேசிக்கிழிச்சிருப்பாங்கன்னு இப்போ பார்க்கலாம்.. சும்மா ஜாலிக்கு ./. யாராவது சண்டைக்கு வந்தா உடனே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுவோம்.. நாங்க எல்லாம் வீரபிரதாபன் பரம்பரை ஹி ஹி

மொதல்ல மாதர் குல மாணிக்கம்  பாட்டிகள் சங்கத்தலைவி மெடிக்கல் ஷாப் மேனகா  மெரீனா பீச் வந்து சேர்ந்தாங்க..

அடுத்ததா ஆண்ட்டியோ அம்பிருந்தா வம்பிருந்தா  சொம்பிருந்தா வர்றாங்க 

- ஹாய் , ஆண்ட்டி.. இந்த சேலை சூப்பரா இருக்குக்கா.. எங்கே எடுத்தீங்க?

 ஜவுளிக்கடைல கடைக்காரன் பார்க்காதப்ப எடுத்தேன் ஹி ஹி 

அக்கா, உங்க கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல இருக்காராமே? ரொம்ப கஷ்டமான வேலையா?

 இல்ல, அங்கே ஈசியாத்தான் வேலை செய்வாரு.. இங்கே வீட்டுக்கு வந்ததும் தான் அவருக்கு ஏகப்பட வேலை, சமையல் வேலை, பசங்களூக்கு படிப்பு சொல்லித்தர்றது.. இப்படி

 அப்புறம் நீங்க என்ன தான் செய்வீங்க? 

 விளையாடறியா? காலைல 7 மணிக்கு சிஸ்டம் ஆன் பண்ணி உக்காந்தா நைட் 1 மணி வரை நான் ட்விட்டர்ல தானே இருக்கேன்? உனக்கு தெரியாதா?  டைம் லைனை நல்லா பாரு.. அப்பப்ப சாப்பிட, டீ குடிக்க மட்டும்  10 நிமிஷம் பிரேக்  எடுத்துக்குவேன்  ...

அடுத்து சாவி தராதே பூட்டை விடாதே  வர்றாங்க  - உஷ். அப்பா.. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டேன் ,.. ஐ ஜாலி 

நீங்க எப்போ ஆஃபீஸ் போய் இருக்கீங்க? இப்போ புதுசா கட் அடிச்சதா சொல்றீங்க?

 அப்படி எல்லாம் சொல்லாதே, மாசாமாசம் ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்க போய்த்தானே ஆகனும்?

இளிச்சவாய் டேமேஜர் உங்க ளை மாதிரி எல்லாருக்கும் சிக்கறதே இல்லையே?

 அப்போ கன் ஃபைட் காஞ்சனா  வாட்டர் கேன்ல சிறுவாணித்தண்ணியோட வர்றாங்க..

  ( ஓப்பனிங்க் சாங்க்... சிறுவாணித்தண்ணி குடிச்சு நான் ஃபைட் மாஸ்டரா பொறந்து வளர்ந்தவ... )

 டேமேஜர் பற்றி தப்பா பேசாதீங்க.. ஏன்னா மீ ஆல்சோ எ டேமேஜர்..

ஓகே , காந்தி சிலைக்கு போலாமா ? அப்போ தான் “அமைதி”யா பேச முடியும்./. 

 சாரி.. எனக்கு ஆம்பளைங்கன்னாலே அலர்ஜி.. கண்ணகி சிலைக்கு போயிடலாம்.. 

ஓக்கே.. அக்கா, ஆம்பளைங்களை திட்டறதுக்கு என்ன பண்னலாம்?

இப்போ நான் அதைத்தானே டெயிலி பண்ணிட்டு இருக்கேன்?

இன்னும் கேவலமா திட்ட ?

ஃபேக் ஐ டி ஓப்பன் பண்ணிக்க வேண்டியதுதான்.. பசங்கள்ல சிலர் எப்படி பொண்ணுங்க ஐ டில வர்றாங்களோ அந்த மாதிரி.. 

 அப்போ வள் வள் பொண்ணு ,சைதை பண்ணு எல்லாம் யாரு?

 யாருக்குத்தெரியும்? இப்போ அதுவா முக்கியம்.. நாட்டுக்கு உபயோகமான சில விஷயங்களை இப்போ டிஸ்கஸ்  பண்ண்ப்போறோம்././

 அது இருக்கட்டும்.. உங்க கூந்தல் இவ்லவ் கரு கருன்னு இருக்கே..  மீரா ஷாம்பூ போட்டு குளிப்பீங்களா? சிகைக்காய் அல்லது அரப்பு போட்டு குளிப்பீங்களா? 

 2ம் இல்லை பிளாக் மேஹந்தி போடுவேன். டை அடிச்சா அலர்ஜி ஆகிடுது.. அதனால.. நீங்க?

 நான் சவுரி வெச்சுக்குவேன்.. 

ஏய் கீரைக்காரம்மா... எவ்ளவ் கீரை?

 ஏய்.. என்னை அடையாளம் தெரியலை?

 சொன்னாத்தானே தெரியும்?

 நான் தான் யூ மலையாளச்சி

 அட விடிகாலைல 3.30 மணிக்கே ட்வீட்ஸ் போடுவீங்கள்ளே? அது நீங்க தானா?

 யா யா .. 

 நீங்க ஏன் நெற்றில  பொட்டில்லாம இருக்கீங்க?

 நல்லா பாரம்மா, சந்தனக்கலர்ல பொட்டு வெச்சிருக்கேன்.. உற்றுப்பார்த்தாத்தான் தெரியும்.. ஏன்னா மீ ஆல்சோ சந்தனக்கலர் ஹி ஹி 

அக்கா சுண்டல் வேணுமா?  

 வேணாம், போம்மா.. 

 அய்யோ அக்கா என்னைத்தெரியல ? நான் தான்க்கா திருச்சி மலைக்கோட்டைல அன்னதானம் ஸ்பான்சர்..... 

 ஸ்பான்சர் பண்ணுவீங்களா?

 ச்சே ச்சே டெயிலி லஞ்ச்க்கு அன்னதானம் அங்கே தான் ஸ்பான்சர் ஹி ஹி  என் பேரு டூப்ளிகேட் மானு.. 

எங்கே ஸ்கூட்டி காணோம்?

 கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதிங்கக்கா.. அந்த டப்பா ஸ்கூட்டி எங்க வீட்ல இருந்து ஆஃபீஸ் போகவே 6 டைம் நின்னுடும்,, எவனாவது இளிச்சவாயன் சிக்குனான்னா அவனை தள்ளிட சொல்லி ஸ்டார்ட் பண்ணுவேன், அதுல எப்படி சென்னை வரை வர முடியும்?

http://p.twimg.com/AmgCh91CIAELodm.jpg
a

இடமிருந்து வலமாக மங்கை எனும் சந்தியா சாரு அவர்களின் தவப்புதல்வர்கள் 2 பேர்.. 3 வதாக இருப்பவர் ராஜ குமாரி சோனியா பெற்றெடுத்த ராஜகுமாரன்

இந்தியா சாரு  வர்லையா?

 அட உனக்கு மேட்டரே தெரியாதா? மேனகா, சாரு 2ம் ஒரே ஆள் தான்.. 

 ஓஹோ , எப்படி அடையாளம் கண்டு பிடிக்க? 

 அடிக்கடி கர்ர்ர் புர்ர்ர்-னு ரிப்ளை குடுத்தா, இளைய தலைவலியை பாராட்டி போடற ட்வீட்சை ஆர் டி செஞ்சா அது மேனகா ...  ஒன்றரை லைன்ல சோக தத்துவமா போட்டா  அது  இந்தியா சாரு..

 ஓஹோ, காதல் கவிதை எல்லாம் பின்றீங்களே, அது எப்படி?

 1980 ல நான் +2 படிச்சப்ப ரிலீஸ் ஆன இளையாராஜா இசை அமைச்ச பட பாடல்களை எல்லாம் டைரில எழுதி வெச்சிருக்கேன். இந்த கடன் கார  பசங்களுக்கு முதல் நாலு லைன்ஸ் தான் தெரியும்.. நான் நடுவால இருந்து 2 லைன் எடுத்து விடுவேன் ஹய்யோ அய்யோ 

ஓஹோ,, அக்கா ஏன் சுத்தி முத்தியும் பார்க்கறீங்க?

சுத்தி பாருங்கடி நம்மளை படம் புடிச்சு டிவிட்டரில போட்டிட போறாங்க.இன்னைக்குனு  பார்த்து நான் சவுரி முடி வைச்சிட்டு வரல

எனக்கு ஒரு டவுட்

 கேளு

அப்பளம் எப்பிடி பொரிக்கிறது ..?

 ரைஸ் குக்கர் எதுக்குடி இருக்கு அதுல போடுடி

என்ன ஒரு அநியாயம்,போயும் போயும் இந்த செல்வம் இப்படி மாறுவான்னு நான் கனால கூட நினைச்சு பாக்கல 

 அது யாரு? உன் பாய் ஃபிரண்டா?

 ச்சே, ச்சே, சீரியல்ல வர்ற கேரக்டர்டி. 

ஓ.. சரி நாம என்ன மாதிரி ட்வீட் போடலாம்?

நம்மள என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் நம்ம தத்துவம் போடுறத நிறுத்தவே கூடாதுடி 

 அதெல்லாம் காலண்டர்ல வந்ததுன்னு கண்டு பிடிக்க மாட்டாங்களா? 

 அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.. நான் ரெகுலரா தத்துவம் தான் போடறேன், அதுக்கே ஆர் டி பறக்குது 


ஓ.. ஹேய் உனக்கு பத்மினி புடிக்குமா இல்ல சரோஜாதேவியா?

 அஞ்சலி தேவி, வைஜய்ந்தி மாலா வை எல்லாம் விட்டுடே.. சரி நாம இப்போ பேசுன மேட்டர் வேளில தெரிய வேணாம்

 ஏன்>

 இதை வெச்சு நம்ம வயசை கண்டு பிடிச்சுடுவானுங்க.. நாம எப்பவும் போல 20 + அப்டினு மெயிண்ட்டெயின் பண்ணுவோம்.. 

ஒரிஜினல் போட்டோவ DPயா யாரும் வச்சுறாதீங்க, அப்புறம் ஒரு பய பாலோவ் பண்ணமாட்டான் 

 அக்கா , ந நி கீ அப்டின்னா என்ன? 

 நடு நிசிக்கீச்சு

 அப்டின்னா?

 ஏ ஜோக்ஸை பசங்க நைட் 12 மணில இருந்து 2 மணி வரை போடுவாங்க.. நாம அப்போ அவங்களுக்குத்தெரியாம வேடிக்கை மட்டும் பார்க்கனும்.. 

ஓஹோ ,இப்போ எல்லாம் விகடன் வலை பாயுதே, குங்குமம் வலைப்பேச்சு, குமுதம் ரிப்போர்ட்டட் ஆன் லைன் ஆப்பு, மல்லிகை மகள் வலைப்பேச்சு இதுல எல்லாம் பெண்களாகிய நாம் தான் வர்றோம்? இதுல இருந்து என்ன தெரியுது?

 பசங்களுக்கு ஆஃபீஸ் வேலை, வீட்டு வேலைன்னு ஏகப்பட்ட டென்ஷன்.. நமக்கு ஒரு கவலையும் இல்லை.. பொழப்பே இங்கே தான் ஓடுது.. அதான் காரணம்.. 

சரி லஞ்ச் சாப்பிடப்போலாமா?

 வேணாம்க்கா..  வீட்ல புருஷன் ஆசையா ஆக்கி வெச்சிருக்கார் , வேஸ்ட்டா போயிடும்.. 

 சரி, நாலைக்கு டைம் லைன்ல பசங்க என்ன பேசுனீங்கன்னு கேட்டா சமையல், கோலம்,  சவுரி, மேக்கப் மேட்டர் பேசுனோம்னு சொல்லிட வேணாம்.. 

 ஏன்?

 நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்கில்ல?அது டேமேஜ் ஆகிடும்.. ஹி ஹி 

http://upload.wikimedia.org/wikipedia/commons/d/df/Young_girls_in_bunad.jpg

டிஸ்கி -1 முதலில் உள்ள பெண் ட்வீட்டர்கள் படத்தை எடுத்து உதவி செய்தது  மை மாப்ஸ் கோவை ஷேக் .. மேலும் பல ஐடியாக்களை டைம் லைனில்  தந்து உதவிய அனைத்து ஆண் சிங்கங்கள்க்கும் நன்னீஸ்  ஹி ஹி

 டிஸ்கி 2 - பெண் ட்வீட்டார்ஸ் சந்திப்பு முதல் முறை நடந்த போதே ரெடி செய்யப்பட்ட பதிவு இது.. இப்போ கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டிருக்கேன்

 டிஸ்கி 3 - முன்நாள் உலக அழகியும் இந்திய சினிமாவில் பிரபல்யமானவருமான ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பேரு அபிலாஷா..



பொண்டாட்டிகளிடம் புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்

http://lh5.ggpht.com/_lkcXFetrPfk/S2_rQvFPY9I/AAAAAAAABwI/wGactMu7sKA/kanaka4%5B4%5D.jpg

சாத்தான் சொல்லை தட்டாதேன்ற  படத்துல செந்தில் பூதமாவும், ஜனகராஜ், சந்திரசேகர்,பாண்டியன் ஹீரோக்களாகவும், கனகா ஹீரோயினாகவும் நடிச்சிருப்பாங்க. அந்த படத்துல ஒரு சீன், ஹி ஹி அந்த சீன் இல்லை. இது வேற சீன். எங்க மூணு பேருல யாரை கனகா லவ் பண்றாங்கன்னு கண்டுபிடிச்சு சொல்லுன்னு அந்த பூதத்துக்கிட்ட சொல்வாங்க. பூதமும் கொஞ்ச நேரம் டிரை பண்ணி பார்த்துட்டு..., ஓன்னு அழும், அப்போ மூணும் பேரும் என்ன விஷயம், ஏன் அழுகுறேன்னு கேட்பாங்க.



 மாளிகை கட்டி குடுங்கன்னு கேட்டீங்க, கட்டி குடுத்தேன், கடல் ஆழத்தை கண்டுபிடிக்க சொன்னீங்க அதையும் ஈசியா செஞ்சு முடிச்சேன். ஆனால் ஒரு பொண்ணு மனசுல இருக்குறதை என்னன்னு கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லி அழுவும்.

ஜெகஜ்ஜால வித்தை படைச்ச அந்த பூதத்தாலயே முடியாத விஷயம் சாமான்ய மனுஷங்களான நம்மால மட்டும் முடியுமா என்ன? அதனால, அவங்களா   மனசு விட்டு சொன்னாதான் உண்டு. எனக்கு தோணுன சந்தேகத்தை நான் உங்ககிட்ட கேட்குறேன். அதுக்கு யாராவது விளக்கம் சொல்லி வெளங்க வைங்க...

1. கல்யாணம் நிச்சயம் பண்ண பிறகு, மிஸ்டு கால் குடுத்து நாங்க போடுற  போன்ல உங்க அம்மாவை கொசு கடிச்சது, உங்க வீட்டு ஜிம்மி குட்டி போட்டதுன்னு மணிக்கணக்கா கடலை போடுற நீங்க ஒரு நிமிசம் செலவு பண்ணி அத்தை நல்லா இருக்காங்காளா? மாமா உடம்பு நல்லா இருக்கா? மச்சினன் பரிட்சையில பாசான்னு ஏன் கேட்க மாட்டேங்குறீங்க.

2. கல்யாணம் முடிஞ்சு மறுவீட்டுக்கு கிளம்பும்போது என்னமோ ஆப்பிரிக்காவுக்கும், அண்டார்டிக்காவுக்கும் போற மாதிரி அழுது தீர்க்குற நீங்க, தனிக்குடித்தனம் போகும்போது அம்மா அப்பாவை நினைச்சு ஒரு வார்த்தை பேசினால் கூட ”அம்மா கோண்டு”, என்னை ஏன் கட்டிக்கிட்டீங்கன்னு ஒப்பாரி வைக்குறது ஏன்?

3. உங்க அம்மா, அக்கா, ஒண்ணுவிட்ட தம்பி, ரெண்டு விட்ட அத்தைகள்கிட்டலாம் மணிக்கணக்கா போன்ல பேசும்போது பொங்காத பாலும், போகாத டவரும் எங்க அம்மா, அக்காகிட்ட பேசி இரண்டாவது நிமிசத்துல பால் பொங்கிடுது, சிலிண்டர்காரன் வந்துடுறானே எப்படி?

4. உங்க த்த்தூதூதூரத்து சொந்தங்காரங்க வீட்டு விசேசம்னா மட்டும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே புடவை, பிளவுஸ் இஸ்திரி பண்ணி, மேட்சிங் நகைலாம் எடுத்து வச்சுட்டு  பண்ணி சாய்ந்தரம் ஏழு மணி பங்க்‌ஷனுக்கு காலை அஞ்சு மணில இருந்து ரெடியாவுற நீங்க, எங்க வீட்டு பக்கம் விசேஷம் காலை பத்து மணிக்குன்னா புடவை இஸ்திரி பண்ணலை, பிளவுஸ் மேட்சில்லைன்னு சொல்லி திட்டிக்கிட்டே   வேண்டாவெறுப்பா 9.50க்கு  கிளம்புறிங்களே எப்படி?

5. உங்க அண்ணனோட மச்சினிச்சியோட சகலை பையன் வீட்டுக்கு வந்தால் நெய் மணக்க கேசரி,  முந்திரி, திராட்சை மிதக்க பாயாசம், மெதுவடை, மசால்வடைன்னு வகைக்கொணா, சாம்பார், காரக்குழம்புன்னு சமைக்குற நீங்க,எங்க அப்பா வரும்போது தலை வலிக்குதுங்க ஒரு சாம்பார், ரசம் வச்சுடுறேன், கடையில் பக்கோடா வாங்கி வந்துடுங்கன்னு சொல்றீங்களே. உங்க வீட்டு மனுசாளுங்க வரும்போது வராத ஒத்தை தலைவலி எங்க வீட்டு மனுசாள்ங்க  வரும்போது மட்டும் எப்படி கரெக்டா வருதே அதெப்படிங்க?

6.  நாள் முழுக்க கடையே தலைக்கீழாய் புரட்டி உங்க அக்கா, தங்கச்சி, அண்ணிக்கெல்லாம் சேலை எடுக்கும் நீங்க, எங்க அக்கா, தங்கச்சி, அம்மாக்கு எடுக்கும்போது பத்தே நிமிசத்துல புடவை செலக்ட் பண்றீங்களே எப்படி?

7.  கடைவீதியில் இண்டெர்வியூக்கு வந்த உங்க ஊர் பையனை பார்த்து, ஏங்க ஒரு வாரம்தானே  நம்ம வீட்டுலயே தங்கட்டும்ங்க அவன்  ஊருக்கு புதுசுங்கன்னு சொல்லும் உங்களுக்கு..., அக்கா மகன் ஏதோ ட்ரெய்ன் மிஸ் பண்ணிட்டு நைட் தங்கிட்டு காலையில போய்டுறேன் மாமான்னு பெட்டியும் கையுமா வந்து நிக்கும்போது  பொண்ணு வயசுக்கு வந்து வீட்டில் இருக்கு. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல பக்கத்துல வைக்கனுமான்னு தோணுதே எப்படிங்க?

8.  கூட பிறந்த தோசத்துக்காக அக்கா சமையலை புகழ்ந்து பேசிவிட்டு வந்த நைட்டே அதேபோல் சமைக்குறேன்னு வாய்லயே வைக்க முடியாத சமையலை சகிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, முன்ன பின்ன சாப்பாடையே பார்க்காத ஆளு மாதிரி ரசம் சூப்பர்க்கா இன்னும் கொஞ்சம் ஊத்துன்னு 4 தரம் கேட்டு வாங்கி குடிக்க தெரியுது. இங்க மட்டும் வாயில் எதோ ஒட்டிக்கிட்ட மாதிரி எதுவுமே சொல்லாம சாப்புடறதை பாருன்னு ஏழரையை கூட்டுறீங்களே எப்படி?

9.  உங்க வீட்டு விசேஷத்துக்கு நமக்குன்னு ப்ரு ஸ்டேட்டஸ்  இருக்குங்கன்னு சொல்லி இருக்குற லோன்ல போட்டு சீர் செய்ய தெரிஞ்ச உங்களுக்கு நாமளும் வீடு கட்டனும், பையனை படிக்க வைக்கனும், பொண்ணை கட்டி குடுக்கனும் அதனால் பணத்தை தண்ணியா செலவு பண்ணாஆதீங்க உங்க அக்கா பொண்ணு சடங்குக்கு சிம்பிளா சீர் பண்ணா போதும்ன்னு சொல்றீங்களே. அப்போலாம் “நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குங்குறதை மறந்துடுறீங்களே எப்படீங்க?


10.பிளாக், பேஸ்புக், ட்விட்டர், பத்திரிகைன்னு மத்த ஆம்பிள்ளைங்க படுற இம்சையை படிச்சு  எம்புட்டுதான் ஜாக்குறதையா நடந்துகிட்டாலும் எதாவது குத்தம் கண்டுபிடிச்சு நைட் எட்டு மணிக்கு மேல கரெக்டா கண்ணை கசக்குறிங்களே எப்பட்?

டிஸ்கி: இந்த பதிவை படிச்சு மகளிர் அணிலாம் சிபி மன்னிப்பு கேட்கனும் மான நஷ்ட வழக்கு போடுவோம்  இல்லாட்டி டீ குடிப்போம்  சாரி தீக்குளிப்போம்ன்னு போராட்டம்லாம் பண்ணாதீங்க. அதுக்குலாம் எனக்கு டைம் இல்ல. ஒரு நாளைக்கு 3 போஸ்ட் ரெடி பண்ணவே எனக்கு சரியா இருக்கு.இதுல கரண்ட் வேற அடிக்கடி கட் ஆகுது. நண்பர்கள் பிளாக் போக டைம் இருக்கறதில்லை. இங்கனயே, இப்பவே மன்னிப்பு கேட்டுக்குறதோட பிராயசித்தமா புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு போஸ்ட் போட்டுடுறேன்.

டிஸ்கி 2 - முதலில் இருக்கும் ஃபோட்டோ கனகா வந்த புதுசுல எடுத்தது, கீழே இருப்பது லேட்டஸ்ட் ஃபோட்டோ :((



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimV4xQCaQyA6mfpfHrnmbe4qTgHd9Qw7vmoUf2dSgF_ev-6_hVDxFDzNgwpIPR4zpGFoy8ivX3kDkcn2GEZwE9LFdcZqDpP7fvqauiJ_N3XPSDLgJIcF9mvhyphenhyphenvX_SzfFAnrTcI4D8xEw4c/s1600/kanaka2.gif

Tuesday, February 21, 2012

சிவ ராத்திரி,நவ ராத்திரி,ரதி ராத்திரி,பார்வதி ராத்திரி -ஜோக்ஸ்

http://www.telugupedia.com/wiki/images/2/29/Nayanatara.jpg

1.நண்பரின் நண்பர், சிநேகிதியின் சிநேகிதி என்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அவர்களிடம் நாம் அனுசரித்துப்போகவேண்டி இருக்கிறது


---------------------------------------

2. கல்யாணம்  ஆகாத பெண் தன் மோகத்தை வெளில் கொட்டிடக்கூடாது, கல்யாணம்  ஆன ஆண் தன் கோபத்தை வீட்ல காட்டிடக்கூடாது # வீட்ல செம மாத்து எனக்கு 

---------------------------------

3. நான் கல்யாணம் செய்து வைத்த நடராஜன் கைதானது வருத்தம் -கலைஞர்.# நான் பிரித்து வைத்த சிம்பு-நயன் ஜோடி மீண்டும் சேருதே-பி தேவா வருத்தம்


--------------------------------

4. வாடகை வீட்டை காலி செய்து போகும்போது உடன் அழைத்துச்செல்ல முடிவதில்லை தோட்டத்து செடிகளை

--------------------------------

5. உச்சி வெயில் போல கோபத்தில் நீ என் மீது தகிக்கையில் ஆல மர நிழல் போல உன் மடியில் நான் சரணம் அடைகிறேன்

------------------------------------

6. நம் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து விடுகிறது, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்வதில்

---------------------------

7. வீட்டை காலி பண்ணிட்டு போறப்ப பக்கத்து வீட்டு ஃபிகரை ஏன் அம்போன்னு விட்டுட்டு போறே?

 காலி பண்ணச்சொன்னதே அவங்கப்பா தான்

----------------------------------

8. டாக்டர், என் புருஷன் 4 நாளா லொக் லொக்னு இருமிட்டே இருக்கார்..

 உங்க புருஷன் மட்டும் இல்ல, தம் அடிக்கற எல்லா புருஷன்களும் அப்படித்தான்

-------------------------------

9. டியர், இன்னைக்கு சிவராத்திரி.. என்ன பண்ணலாம்?

 வழக்கமா அவசர அவசரமா நாம போடற சண்டையை நிதானமா விடிய விடிய போடலாம்

-----------------------------

10. பெண்ணியவாதிகள் யாராவது கிளம்புவாங்க பாருங்க.. அது ஏன் பார்வதி ராத்திரின்னு வைக்காம சிவன் ராத்திரின்னு வெச்சாங்க?ன்னு கேட்டு

--------------------------


http://www.nayanthara.net/uploaded_files/photo_gallery/Nayanatara-2.JPG

11. ஏம்மா டோரா.. காலேஜ்ல கல்ச்சுரல் புரோகிராம்னே,இங்கே யார் கூடவோ கடலை போட்டுட்டு இருக்கே? 

டாடி, இது அக்ரிகல்ச்சுரல் புரோகிராம் ஹி ஹி

-----------------------------

12. உடன் பிறப்பே! பொறுத்திரு.. சங்க இலக்கியத்தில் தோசைக்கதை ஏதும் சொல்லப்பட்டிருக்கறதா? என தேடிக்கொண்டு உள்ளேன்,இட்லிக்கு மாற்று,உலகை ஏமாற்று

-----------------------------------

13. டியர், நீ என்னை மறந்துடுவியா?

 ச்சே! ச்சே! நீங்க தான் என்னோட 25 வது வெள்ளி விழா லவ்வர், எப்படி மறக்க? # 9 தாரா எஃபக்ட்

--------------------------------------

14. இவ்ளவ் மோசமா எக்ஸாம் எழுதி இருக்கியே, ஃபெயில் ஆகிட்டா என்ன செய்வே? 

நோ பிராப்ளம் டீச்சர், எக்சாமில் சொதப்புவது எப்படி?னு படம் எடுப்பேன்

--------------------------------------

15. மேடம், நீங்க யாரை லவ் பண்றதா இருந்தாலும் அவங்க இனிஷியலை பச்சை குத்திக்கறீங்களே, ஏன்? 

பேர் குத்துனா அப்புறம் அழிக்க சிரமம்,

-------------------------------------

16. மேடைல 70 கன்னிப்பெண்கள் இருக்காங்களே, எதுக்கு? 

தலைவரோட 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரே எல்லாரையும் மேரேஜ் பண்ணிக்கப்போறாராம்

--------------------------------

17. நான் போடற மொக்கை ட்வீட்ஸை RT  செஞ்சா நானும் பதில் மொய் வைப்பேன். டீலா? நோ டீலா? பை குறுக்கு வழி குஷ்பூ சுந்தர்

--------------------------------

18. பிரபல ட்வீட்டர்  நவீன்- மிஸ்!உங்க ட்வீட்ஸ் எல்லாம் பிரமாதம் !

லேடி ட்வீட்டர் வீல் பொண்ணு - தம்பி! நான் இன்னும் ட்வீட்ஸே போட ஆரம்பிக்கலை

--------------------------------

19. சங்கரன்கோவிலில் திமுக வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது-அழகிரி# அண்ணன் டெபாசிட் வாங்கறதையே வெற்றின்னு நினைக்கறார் போல 

-------------------------------

20.உன் புருஷன் சாப்பாட்டு ராமனாமே?


 நல்லா சாப்பிடுவாரு, ஆனா ராமரா? கிருஷ்ணரா?ன்னு இனிமேத்தான் கண்டு பிடிக்கனும்


-------------------------------------

http://happyhyderabad.files.wordpress.com/2009/05/nayanatara-in-orange-saree.jpg

Monday, November 07, 2011

ஈரோட்டில் அம்மன் சிலை கண் திறந்ததா? - ஸ்பாட் விசிட் ரிப்போர்ட்

3.11.2011 வியாழன் அன்று ஈரோட்டில் ஒரே பரபரப்பு , ஈரோட்ல ஒரு கோயில்ல அம்மன் கண் திறந்து பார்த்ததா... இது நம்ம தமிழ் நாட்ல ஒண்ணும் புதுசில்ல.. பிள்ளையார் பாலை குடிச்சார்.. அம்மன் சிலை கண்ல இருந்து ரத்தம் வழிஞ்சதுன்னு ஏதாவது  ஒரு பர பரப்பு நியூஸ் ஓடிட்டே இருக்கும்..அப்புறம் பார்த்தா அது ஏதாவது காரணத்துக்காக சொல்லப்பட்ட புரளியா இருக்கும், ஆனா ஜனங்க ஒவ்வொருதடவையும் கும்பலா போய் விழுவாங்க..

ஆனா இந்த டைம் இந்த நியூஸ் பரவுன அடுத்த நாள் கோயில் கலெக்‌ஷன் மட்டும் ரூ ஒரு லட்சத்து நாற்பதாயிரமாம்.. வழக்கமா அந்த கோயில்ல டெயிலி கலெக்‌ஷன் அதிக பட்சம் ரூ 400 தான் இருக்கும்.. அவ்வளவு ரஷ் வரக்காரணம் என்ன? ஒரு ஸ்பாட் விசிட் அடிச்சேன்..


ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் கில் இருந்து 2 கி மீ தொலைவில் ஈரோடு கோட்டை செங்குந்தர் கல்யாணம் மண்டபம் அருகே செங்குந்தர் சமூக திருமண  மண்டபம் இருக்கு.. அதுக்கு பக்கத்துல பத்ர காளியம்மன் கோவில் இருக்கு.. அதுதான் ஸ்பாட்.. 

அடேங்கப்பா.. என்னா கூட்டம்? அங்கே போய் அம்மனை பார்த்தேன்.. எப்பவும் போல் தான் இருந்தது.. அக்கம் பக்கம் விசாரித்தேன்.. 

அந்த கோயிலுக்கு ஐம்பொன் சிலை செய்யப்போறாங்களாம்.. அதுக்கு பொருள் உதவி கேட்டு கோயில்லயே விளம்பரம் பண்ணியும் ஒரு ஆளும் கண்டுக்கலையாம்.. அதனால ஒரு விளம்பரத்துக்காக பூசாரி தான் இந்த ட்ரிக்கை செஞ்சாராம்..

பெரிய பெரிய தலைவருங்க கூட என் கனவுல அண்ணா வந்தார் , எம் ஜி ஆர் வந்தார் அப்படி சொன்னார்.. இப்படி செய்ய சொன்னார்னு சொல்லி மக்களை ஏமாத்தறப்ப சாதாரண பூசாரி அப்படி செஞ்சதுல என்ன தப்பு? என நினைக்கத்தோணினாலும் இது ஒரு சமுதாயத்தை ஏமாற்றும் குற்றமே..



இதுதான் கோயில் 



அந்த விளம்பர போஸ்டர்







 

சப்போஸ் கடவுள் கண்ணை திறந்தால் நான் கேட்க விரும்பும் கேள்விகள்


1. கூடங்குளம் பிரச்சனைக்கு என்ன தீர்வு? மக்கள் உண்ணா விரதம் இருக்கறதும்  அதை அரசியல் ஆக்கும் சிலர் ஆதாயம் கண்பதும் ஏன்?

2. பிரதமர் மன்மோஹன் சிங்க் உண்மையிலேயே ஒண்ணும் தெரியாதவரா? இல்லை அப்படி நடிக்கிறாரா?

3. இலங்கைத்தமிழ் அகதிகள்க்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? எல்லாரும் உங்கள் குழந்தைகள் என்றால் ஏன் அவங்க சாவதை வேடிக்கை பார்க்கறீங்க?

4.  தமிழ் நாட்ல கலைஞர், ஜெ ஆகிய 2 தீய சக்திகளுக்கு மாற்று யாரும் இல்லையா? ஒருத்தர் மாற்றா வருவார்னு நினைச்சோம், அவர் வர்றேன் வந்துடுவேன், வரப்போறேன்னு சொல்லிட்டு வரவே இல்லை.. இன்னொருத்தர் எப்பவும் மப்புலயே இருக்கார்..

5. மாற்று அரசு அமையும்னு பார்த்தா தமிழ் நாட்ல எதையாவது டெயிலி மாத்திட்டே இருக்கற அரசாங்கம் அமைஞ்சிருக்கே.. அதுக்கு என்ன தீர்வு?

6. மாயாவதி மாதிரி சிலைப்பைத்தியங்களை நிஜமாவே சிலை ஆக்கிட்டா என்ன?

7. இந்த உலகத்துல  பாரதியார், பக்த்சிங்க் போன்ற நல்லவங்க அல்ப ஆயுசுல போயிடறாங்க.. கெட்டவங்க, அட்டூழியம் பண்றவங்க நீண்ட நாள் நலமா வாழறாங்க.. அது ஏன்?

Saturday, September 03, 2011

அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை பை அவள் விகடன்

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?

அவசர... அவசிய அலசல் !
தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்... இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், 'அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்...’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.

இதுவோ.... ''மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்... மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!'' என்று குஷியாகும் பெண்களின் காலம்!


இவர்களில் பலரும், 'இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது' என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ... தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க... கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.


'மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?' என்றபடி மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.


''மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்... மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது. 

அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்'' என்ற டாக்டர்,


''விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல... எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்'' என்று அழுத்தமாகச் சொன்னவர், மாத்திரைகளைப் பயன்படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.

''கடைகளில், 'புரஜெஸ்ட்டரோன்' (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.


இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். 

அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்... அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது... மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது... ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!'' என விளக்கமாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,

''இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.

ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை'' என்று கவலையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-

''மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.
முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!'
thanx- aval vikatan

Saturday, August 06, 2011

என்னை விரட்டும் சங்கீதம் நீ, எண்ணெய் மிரட்டும் சங்கடம் நான் -30 வகை எண்ணெய் இல்லாத சமையல் டிப்ஸ்

30 வகை எண்ணெய் இல்லாத சமையல் !

'ஹெல்த் கான்ஷியஸ்னஸ்' அதிகமாகி வரும் இக்கால கட்டத்தில், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது... எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுதான். இதற்கு உங்களுக்கு கைகொடுக்க வருகிறார் 'சமையல்கலை நிபுணர்’ நங்கநல்லூர் பத்மா.


 புரோட்டீன் ரிச் உசிலி, வடிகஞ்சி சூப், குழல் புட்டு என்று சத்தும், சுவையும் மிக்க ரெசிபிகளை அள்ளித் தந்து அசத்தியிருக்கும் அவர், ''சிலவற்றைத் தாளிப்பதற்கு மட்டும் சில துளி எண்ணெயைப் பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி எண்ணெய் பயன்பாடு ஜீரோதான்.

அதேசமயம், சுவையில் துளியும் குறை வைக்காமல் விதம்விதமான அயிட்டங்களை தந்திருக்கிறேன். குறிப்பாக, மல்டி கடலை உருண்டை, வெஜிடபிள் ஸ்பெகட்டி, மல்டி பழ டெஸட் போன்றவற்றைச் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், தட்டு காலியாகும் வேகத்தைக் கண்டு மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படுவீர்கள்'' என்று உத்தரவாதம் தருகிறார். அவருடைய ரெசிபிகள், செஃப் ரஜினியின் அலங்கரிப்போடு இங்கே இடம்பெறுகின்றன.

களத்தில் இறங்குங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!

1.  மல்டி கடலை உருண்டை 


தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 100 கிராம், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, உருட்டும் பதம் வந்ததும் (தண்ணீரில் போட்டால் உருட்டும் பதம்) இறக்கவும். பாதாம், பிஸ்தாவை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து... உடைத்த பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து, பாகுடன் கலக்கவும். ஏலக்காய்த்தூள் தூவி, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.


குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை வேளைக்கேற்ற சத்தான உருண்டை இது.


2.  வெஜிடபிள் கலவைக் கூட்டு 


தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட், சிறிய புடலங்காய், பச்சை மிளகாய் - தலா 1, பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். புடலங்காய், பீன்ஸையும் தனித்தனியே சிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸ், புடலங்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துச்  சேர்க்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம் சைட் டிஷ் தேவை இல்லை.

3.  மேத்தி ரொட்டி 

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெந்தயக்கீரை - ஒரு கட்டு,  பால் - 100 மில்லி, உப்பு -   தேவையான அளவு,

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: பால் சேர்ப்பதால் எண்ணெய், நெய் எதுவும் வேண்டாம். இதற்கு ஆனியன் ரெய்தா சிறந்த காம்பினேஷன்.

4.  தேன் நெல்லிக்காய்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - 100 மில்லி, சர்க்கரை - 200 கிராம்.

செய்முறை: நெல்லிக்காயை வில்லை வடிவமாக சீவவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி பாகு காய்ச்சி நெல்லிக்காயும் சுருங்கும் சமயம் அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆறியவுடன் தேன் விடவும்.

குறிப்பு: தினமும் இரு துண்டு சாப்பிட்டால்... ரத்த சோகையைத் தடுக்கும்.

5.  நீர்க் கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கிளறி, கொதிக்கும் நீரில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய் சேர்த்து அரைத்து இருப்பதால், சுவையாக இருக்கும். ஊறுகாய், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவை இதற்கு சிறந்த காம்பினேஷன். சட்னியும் நன்றாக இருக்கும்.

6.  வெஜிடபிள் குருமா

தேவையானவை: தக்காளி - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி  - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி.... பச்சைப் பட்டாணி,  நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும், தனியாத்தூள், கரம் மசாலாதூள் சேர்த்துக் கலந்து, மிளகாய், தேங்காய் துருவலை அரைத்துச் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய்க்கு பதில்   தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

குறிப்பு: கரம் மசாலா பிடிக்காதவர்கள்... புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்கவிடலாம்.

7.  எள் உருண்டை

தேவையானவை: கறுப்பு எள் - 100 கிராம், வெள்ளை எள் - 100 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும்.  வெல்லத்தை கரைத்து கடாயில் விட்டு கெட்டியாக வரும் பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த எள்ளை   தனித்தனியாக பாகுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை  பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை  துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.

8.  வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - அரை கிலோ, பொடியாக துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கப், கோஸ் (துருவியது) - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: அரிசியை நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, உருண்டைகள் வெந்து மேலே மிதந்துவரும் சமயத்தில் எடுத்து சேவை அச்சில் போட்டுப் பிழியவும். நன்றாக சுத்தம் செய்து துருவிய மற்றும் நறுக்கிய காய்கள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை அப்படியே  சேவையின் மேல் தூவி சாப்பிடலாம். தேங்காய்ப்பாலை மேலே ஊற்றி சாப்பிடால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.

குறிப்பு: பச்சைக் காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான்!  பச்சையாக சாப்பிடக்கூடிய பயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.

9.  வடிகஞ்சி சூப்

தேவையானவை: அரிசி - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய தக்காளி - அரை கப், துருவிய கேரட் - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு சிட்டிகை, பொடியாக துருவிய கோஸ் - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,  ரஸ்க் - 4, உப்பு -    தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் களைந்து, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து வரும்போது கஞ்சி  வடிக்கவும். அதில் தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், உப்பு சேர்க்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, சிறிது சோள மாவை கரைத்து சேர்த்துக் கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும். சாப்பிடும்போது ரஸ்க்கை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துச் சாப்பிடவும்.

குறிப்பு: சூப்பை சூடாக சாப்பிட வேண்டும். கஞ்சி உடலுக்கு குளுமை தரும். சூப்பில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் சுவை கூடும். சூப் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

10.  மல்டி பழ டெஸட்

தேவையானவை: கிர்ணிப்பழத் துண்டுகள் - 6, சப்போட்டா - இரண்டு, ஆரஞ்சு - ஒன்று, ஆப்பிள் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று, தேன் - 4 டீஸ்பூன், பைனாப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எல்லா பழங்களையும் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பிளேட்டில் பரவலாக போட்டு, தேன் ஊற்றி அப்படியே சாப்பிடவும்.

குறிப்பு: குழந்தைகள் பிறந்தநாள், விருந்தினர்களை உபசரிக்க இந்த மல்டி பழ டெஸட் ஒரு சூப்பர் டிஷ். தயாரிப்பது எளிது... கிடைக்கும் பாராட்டு பெரிது!



11.  புரோட்டீன் ரிச் உசிலி

தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைவிட்ட சோளம் - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், பூண்டு - 2 பல்,காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம், கறிவேப்பிலை, பூண்டுப் பல், காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து...  உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக அல்லது இட்லி வடிவத்தில் தட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் நன்கு உதிர்க்க வரும்.

குறிப்பு: சூடான சாதத்தில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.

12.  ராகி இனிப்பு உருண்டை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவை வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக கரைக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி... வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.

13.  வெஜிடபிள் சொதி

தேவையானவை: கேரட் - 1, பீன்ஸ் - 10, குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு,  தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்.


செய்முறை: கேரட்டை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸ், குடமிளகாயையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை கடாயில் போட்டு, மூடி  வேக வைக்கவும். பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த ரெசிபி, இலங்கையில் வசிப்பவர்களின் ஸ்பெஷல் ரெசிபி.

14.  குழல் புட்டு

தேவையானவை: சிவப்பு அரிசி புட்டு மாவு - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நேந்திரம்பழம் - ஒன்று.

செய்முறை: புட்டு மாவில் இளம் சூடாக தண்ணீரைத் தெளித்து, நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு புட்டு வேக வைக்கும் குழாயில் சிறிது மாவை நிரப்பி. அதன் மேலே தேங்காய் துருவல், பிறகு மாவு, பிறகு நேந்திரம்பழத் துண்டுகள்... இப்படி மாற்றி மாற்றி அடைத்து, வேக வைத்து எடுக்கவும். குழல் வடிவத்தில் இருக்கும் இந்தப் புட்டை கைகளால் பிசைந்து சாப்பிடலாம்.

குறிப்பு:  மாவை மட்டும் தனியே வேக வைத்து எடுத்து... பழத்துண்டுகள், தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம்.

15.  பயறு கறி

தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து... குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வறுத்து அரைத்து, வேக வைத்த காராமணியில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: இது, குழல் புட்டுக்கு ஒரு சிறந்த காம்பினேஷன். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

16.  வெஜிடபிள் இட்லி

தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக துருவிய கோஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்.

செய்முறை: இட்லி மாவுடன் துருவிய கேரட், கோஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். சிறிய இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இந்த மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன். ஒரு பவுலில் சாம்பார் ஊற்றி, இட்லிகளை சற்று ஊறவைத்தும் சாப்பிடலாம்.

17.  அகத்திக்கீரை பொரியல்

தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய்- ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - முக்கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அகத்திக்கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது வெந்தவுடன் உப்பு சேர்த்து மேலும் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து,  தேங்காய் துருவல், வேகவைத்த கீரை சேர்த்து வதக்கவும்.

குறிப்பு: அகத்திக்கீரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது... குடல் புண்னை ஆற்றும்.   கீரையை அளவாக தண்ணீர் வைத்து வேகவிடவும். அதிகம் தண்ணீர் வைத்து வடித்தால் சத்துக்கள் குறையும்.

 18. பைனாப்பிள் ரசம்

தேவையானவை: புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் துண்டுகள் - 6, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புளியைக் கரைத்து கடாயில் விட்டு, சாம்பார் பொடி உப்பு சேர்த்து, பச்சை மிளகாயை நறுக்கிப்    போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதித்ததும் பைனாப்பிள் துண்டுகள் போட்டு, வேக வைத்த பருப்பை கரைத்து விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

குறிப்பு: பைனாப்பிள் ஃப்ளேவருடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த ரசம்.

19.  நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும்.  எண்ணெயில் கடுகு தாளித்து இதில் கொட்டவும்..

குறிப்பு: நெல்லிக்காயில் விட்டமின் 'சி’ உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.

 20. முருங்கைக் கீரை கூட்டு

தேவையானவை: முருங்கைக்கீரை (ஆய்ந்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காய்த்தூள்- சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து இதில் கொட்டவும். நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

குறிப்பு: முருங்கைக் கீரை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கியது.



 21. கத்திரிக்காய் கொத்ஸு

தேவையானவை: கத்திரிக்காய் (பெரியது) - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, தனியா. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம் - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய்,  கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை சுட்டு, தோல் உரித்து, நன்கு பிசையவும். புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து, பிசைந்த கத்திரிக்காய், உப்பு சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, வெல்லத்தை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: அரிசி உப்புமாவுக்கும்,  பொங்கலுக்கும் சிறந்த காம்பினேஷன் இது.

22  காராமணி சுண்டல்

தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்.

செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து, ஊற வைத்து, வேகவிடவும். வெல்லத்தை பாகுகாய்ச்சி, வடிகட்டி, உருட்டும் பதம் வந்ததும் வேக வைத்த காராமணி சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.

குறிப்பு: வெல்லம் சேர்த்திருப்பதால், இந்த சுண்டல் இரும்புச் சத்து மிக்கது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இதற்கு தனி இடம் உண்டு.

23. மல்டி பருப்பு பொடி

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வெறும் காடயில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: குழம்பு வைக்காத சமயங்களில் இந்தப் பொடி கைகொடுக்கும்.

24. மல்டி மாவு கேக்

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், உப்பு தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். கூழ் நன்கு ஆறியவுடன் விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம். இதை கூழாகவும் சாப்பிடலாம்.

குறிப்பு: விரத நாட்களில் இந்தக் கூழ் பசி தாங்கும். மோர் மிளகாய் தாளித்து சேர்க்கலாம்.

 25. பாசிப்பயறு சுண்டல்

தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: பாசிப்பயறை பொன்னிறமாக வறுத்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பயறு குழையாமல் வேக வேண்டும். காடயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, பயறு, தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே சுண்டலில் மாங்காய் துருவல், கேரட் துருவல் போட்டும் தயாரிக்கலாம்.

26.  மூலிகைப் பொடி

தேவையானவை: சீரகம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, வேப்பம்பூ - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 6, கடுகு - 4 டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு, மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலை, வேப்பம்பூ, சீரகம், உளுத்தம்பருப்பு, சுண்டைக்காய் வற்றல், கடுகு, சுக்கு, மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்தப் பொடியை  சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். சளித் தொல்லை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

27.  பால் அவல்

தேவையானவை: அவல் - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், பால் - 250 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிஸ்பூன்.

செய்முறை: அவலை நன்கு களைந்து தண்ணீரை வடிகட்டவும். வெல்லத்தை தூள் செய்து சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து, அவலுடன்   சேர்க்கவும்.
குறிப்பு: விரதம் இருப்பவர்களுக்கு இந்த அவல் பசியை அடக்கிவிடும். இந்த அவலும் ஒரு பழமும் போதும்... ஒரு நாள் பசி தாங்கலாம்.

28.  புதினா - சீரக ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம்  - ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - 6 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன்


செய்முறை: அரிசியை ஒரு மடங்குக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும்   இறக்கவும். புதினாவையும் வெங்காயத்தையும் வதக்கவும். வதக்கிய வெங்காயம், புதினா,பொட்டுக்கடலை, வேர்க்கடலை, நெய் ஆகியவற்றுடன் சாதத்தைச் சேர்க்கவும். கடுகு, சீரகத்தை எண் ணெயில் தாளித்து சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: கலந்த சாத வகைகளில் இது வித்தியாசமானது. புதினா - சீரகம் தனி ருசி தரும். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 29. காரப்பொரி

தேவையானவை: அரிசிப்பொரி -  மீடியம் சைஸ் பாக்கெட், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காய்த்தூள் - சிறிதளவு. தாளிக்க கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: பூண்டை தோல் உரித்து, நசுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காய்த்துள் போட்டு... பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: மாலை வேளையிலும் மழைக் காலத்திலும் சாப்பிட இந்தக் காரப்பொரி மிகவும் உகந்தது.

 30. வெஜிடபிள் ஸ்பெகட்டி

தேவையானவை: ஸ்பெகட்டி (சேமியாவில் ஒருவகை) - 100 கிராம் , குடமிளகாய் - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - சிறிதளவு தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, பச்சைப்  பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஸ்பெகடியை உடைத்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். தக்காளி, குடமிளகாய், கேரட்,       வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து எண்ணெயில் வதக்கவும். பிறகு உப்பு போட்டு, வேக வைத்த ஸ்பெகட்டியுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவவும்.

குறிப்பு: ஸ்பெகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க புதுமையானது. கலர் குடமிளகாய் சேர்த்தால் பார்க்கவும் அழகு!

 நன்றி - விகடன்